Kanchi Maha Periyava

Post Reply
thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

"கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம்
..பண்ணு...அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்..."
சொன்னவர்; ஸ்ரீமட பக்தர் ஜோஷி.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
மந்திராலயம் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவன தரிசனத்துக்காக
சென்னையிலிருந்து பம்பாய் மெயிலில் புறப்பட்டுச் சென்று
கொண்டிருந்தார், ஒரு பக்தர். தூக்கக் கலக்கம்.புகைவண்டி
ஒரு ஸ்டேஷனில் நின்றதும், தான் இறங்க வேண்டிய ரயில்
நிலையம் அதுதான் என்று எண்ணி பரபரவென்று
இறங்கிவிட்டார்.
மெயில் புறப்பட்டுச் சென்ற பின்னர் பெயர்ப் பலகையைப்
பார்த்தார். 'குண்டக்கல்!'
"அட தேவுடா! இங்கே இறங்கிட்டேனே?..."
அதே மெயிலில் வந்த ஸ்ரீமடத்தின் பக்தர் ஜோஷி என்பவரும்
அவர் நண்பர்களும், குழம்பிப் போய் நின்று கொண்டிருந்த
மந்திராலய பக்தரைப் பார்த்தார்கள்.
அந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீபெரியவா ஹகரியில்
தங்கியிருந்தார்கள். அவர்களைத் தரிசிப்பதற்காகத்தான்
ஜோஷி முதலியவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
"தூக்கக் கலக்கத்தில் இங்கே இறங்கி விட்டேன்"
என்றார் மந்திராலயம்.
"கலக்கம் இல்லே, ரொம்பத் தெளிவாகத்தான்
இறங்கியிருக்கிறீர்கள்...வாருங்கள். ஹகரிக்குப் போய்,
பெரியவாளைத் தரிசனம் பண்ணலாம்" என்றார் ஜோஷி.
பெரியவா திருவடிகளில் நமஸ்காரம் செய்துவிட்டு
ஜோஷி கோஷ்டியினர் ஒதுங்கி நின்றார்கள்.
வழக்கம் போல் ஒவ்வொருவராக விசாரணை.
மந்திராலயம் அன்பர் முறை வந்ததும்,
"இவர் இங்கே வருவதாக இல்லையே! நீங்கள் அழைத்து
வந்தீர்களா?" என்று ஜோஷியைப் பார்த்துக் கேட்டார்கள்.
மந்திராலய பக்தருக்குப் பயம் வந்துவிட்டது.
"நான், இங்கே பெரியவாளைப் பார்க்காமல், நேரே
மந்திராலயம் போக நினைத்ததால்தான் அங்கே போக
முடியாமல் போயிடுத்து...."
பெரியவாள் அவரை அருகில் அழைத்தார்கள்.
மெல்லிய குரலில் நீளமாகப் பேசினார்கள். அவ்வப்போது
மந்திராலய பக்தர், "ஆமாம்...ஆமாம்..." என்று
பெரியவாள் சொன்னதை ஏற்றுக் கொண்டதற்கு
அடையாளமாகத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
மந்திராலய அன்பரின் தாயார் கிணற்றில் விழுந்து
தற்கொலை செய்து கொண்டு விட்டாராம்.
"அப்படித் தானே?" என்று பெரியவாள் கேட்டார்கள்.
"ஆமாம்.." என்று குற்ற உணர்வுடன் பதில்.
"கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம்
..பண்ணு...அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்..."
பின்னால் மந்திராலய அன்பர் வந்து பெரியவாள் பேசிய
பேச்சுக்களையும்,உத்தரவையும் எங்களிடம் தெரிவித்தார்.
"கிணற்றில் விழுந்து உயிரை விட்டவரின் ஆவி
நிர்க்கதியாகத் தான் தவித்துக் கொண்டிருப்பதைக் கூறி,
தனக்கு விடுதலை கேட்டுப் பெரியவாளைப்
பிரார்த்தித்திருக்கும்.அதனால்தான்,அவளுடைய
பிள்ளையாண்டானை குண்டக்கல்லில் இறங்கச் செய்து
தன்னிடம் வரவழைத்து விட்டார்கள் பெரியவா"
என்றார் ஜோஷி.
உண்மையாகவே இருக்கலாம். இல்லாவிட்டால்
மந்திராலய அன்பருடைய தாயாரின் துர்மரணம்
குறித்து பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?
இந்தக் காவியரசருக்கு ஆவிகளின் மொழியும் தெரியுமோ?
பாவிகளான நமக்கு என்ன தெரியும்!

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
"I was witness to it!"
================

The train reached Pandhapur. As we alighted, we were on the lookout of how to find our way to meet Swamigal who was staying in a small matam on the other side of the Chandrabagga river. No taxis or anything those days. Only horse carriages. My eyes fell on a Tongawallah.

"Do you know where Shankaracharya Swami is staying?", we asked him.

He replied, "Kanchi Periyava? Of course I know! I will take you there. He is our Allah!"

We reached the place where He was staying. The tongawallah refused to charge us for the ride! He took us to where He was seated and excitedly went and sat near Him, like a child will go to its Mother. Like it was his birthright! Swamigal also did not say anything!

And introduced us to Swamigal! :)))

"From the time He came here, our families are blessed. We have given up bad habits like drinking etc!", said the Muslim Tongawallah.

The Tongawallah recounted an incident which he had seen with his own eyes.

The river Chandrabagga was in spate and in fast floods and was running dangerously near the brink.

Swamigal got up and went to the banks of the river for His Snanam despite the entreaties of others not to given the floods.

He placed His Dhandam at a spot in the river. And miraculously, the water did not come near the Dhandam at all and started to recede from that point on! And I also took bath!

"I was witness to it!", exclaimed the simple, devout Muslim!

*****

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா

குண்டலிநீ யோகம் -அதி ஜாக்கிரதை தேவை.((ஸ்ரீ மஹா பெரியவா ))
அம்பலப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டிய விஷயம். அதன் பேரைச் சொன்னால்கூட அதுவும் அம்பலப்படுத்துவதுதான் என்பதால் அடியோடேயே பிரஸ்தாபிக்காமல் விட்டு விடணும் என்று இத்தனை நாழி நினைத்துக் கொண்டிருந்ததையும் இப்போது கொஞ்சம் ‘டச்’ பண்ணுகிறேன். [சிரித்து] அதை யாரும் ‘டச்’பண்ணவேண்டாமென்று ‘வார்ன்’பண்ணுவதற்கே ‘டச்’ பண்ணுகிறேன்.
ஏனென்றால் நான் சொல்லாவிட்டாலும் அந்தப் பெயர் இப்போது ரொம்ப அடிபடுகிறது. குண்டலிநீதான். குண்டலிநீ, அது ஸம்பந்தமான சக்ரங்கள் பேரெல்லாம் இப்போது நன்றாகவே இறைபட்டுக் கொண்டிருக்கின்றன.
‘ஸெளந்தர்ய லஹரி’யிலும் அந்த விஷயங்கள் வருகின்றன. ஆகையினால் அதை நீங்கள் பாராயணம் பண்ணும்போது அந்தப் பேர்களைப் பார்த்துவிட்டு, நான் ‘டச்’ பண்ணா விட்டாலும், வேறே புஸ்தகங்களைப் பார்க்கத்தான் பார்ப்பீர்கள்.
அதற்கு நாமேதான் சொல்லிவிடலாமே, [சிரித்து] இந்த விஷயத்தை நான் ஏன் சொல்லப் போவதில்லை என்று சொல்லிவிடலாமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
ஒரு சின்ன அணுவுக்குள்ளே எப்படி ஒரு பெரிய சக்தியை அடைத்து வைத்திருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரப்ரஹ்ம சக்தி குண்டலிநீ என்ற சக்தியாக இருக்கிறது; அது நம்மைப் போன்றவர்களிடம் தூங்குகிற மாதிரி ஸ்திதியில் இருக்கிறது; அதற்கான யோக ஸாதனை பண்ணினால், – பண்ணினால் என்பதை ‘அன்டர்லைன்’ பண்ணணும் – அப்படி [ஸாதனை] பண்ணினால் அது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புப் பெற்றுச் சில சக்ரங்கள் வழியாக ஊர்த்வ முகமாக [மேல் நோக்கி ] ஸஞ்சாரம் பண்ணி முடிவில் பராசக்தியாகப் பூர்ண விழிப்புப் பெற்று, அப்புறம் அந்த பராசக்தியும் பரமசிவத்தோடு ஐக்யமாகி ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் ஏற்படும் – என்பதுதான் ஸாரமான விஷயம். இதைத் தெரிந்து கொண்டால் போதும்; இவ்வளவு தெரிந்து கொண்டால் போதும்.
நம் தேசத்தில் எப்பேர்ப்பட்ட சாஸ்திரங்கள், உபாஸனா மார்க்கங்கள் இருக்கின்றன என்று ஒரு அரிச்சுவடியாவது தெரிந்தால்தானே இதிலே பிறந்திருக்கிற நமக்குக் குறைவு இல்லாமல் இருக்கும்?

அதற்காகத்தான் குண்டலிநீ யோகம் என்று இப்படியரு சாஸ்திரம் இருக்கிறது என்று நான் இப்போது சொன்னேனே, அந்த அளவுக்குத் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மேல் வேண்டாம். அது அவசியமில்லை.
ஏனென்றால் நம்மிலே ஆயிரத்தில் ஒருவர் – இல்லை, லக்ஷம் பத்து லக்ஷத்தில் ஒருவர் கூட முறைப்படி அந்த ஸாதனை பண்ணுவதற்கு முடியாது. அப்படியே பண்ணினாலும் முறைப்படி முன்னேறி ஸித்தி அடைகிறது ஸாதகர்களிலும் அபூர்வமாக இரண்டொருத்தரால்தான் முடியும் – “யததாமபி கச்சிந்” என்று பகவான் சொன்னாற் போல.
அதனால்தான் ‘அதற்கான யோக ஸாதனை பண்ணினால்’ என்று அழுத்திச் சொன்னது. ‘பண்ணினால்’ என்பது ஸரி. ஆனால் பண்ணுவதுதான் முடியாத கார்யம்!
இந்த ஜீவாத்மாவின் சின்ன சக்தி பரமாத்மாவின் மஹாசக்தியிலே கலப்பது – அல்லது அந்த மஹாசக்தியாகத் தானே விகஸிப்பது [மலர்வது ] – லேசில் நடக்கிற விஷயமில்லை.
சாந்தத்திலே ஒன்றாகக் கலந்து ப்ரஹ்மமாவதை விடவும் சக்தியிலே கலப்பதைக் கஷ்டமானதாகவே அந்தப் பராசக்தி வைத்துக் கொண்டிருக்கிறாள் பக்தி பண்ணுகிறவனையும், ஞான வழியில் போகிறவனையுங்கூடத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தன்னுடைய சக்திக் கூத்தைப் பார்க்கும்படியும், அதை அவர்கள் வழியாகவும் கொஞ்சம் செலுத்தி அவர்களால் லோகத்துக்கு அநுக்ரஹம் கிடைக்கும்படியும் அவள் பண்ணுவதுண்டுதான்.
ஆனாலும் இவர்கள் [பக்தரும், ஞானியும்] தாங்களாகச் சக்திக்கு ஆசைப்படவில்லை.
பக்தன் ப்ரேமைக்கு, ப்ரேமானந்தத்திற்குத்தான் ஆசைப்படுகிறான். அப்படிப்பட்டவர்களிடம், அவளே, ”பார்த்தாயா என் சக்தி ப்ரபாவம்!” என்று ‘போனஸ்’ மாதிரி அதைக் காட்டிக் கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கும் அதை, லோக கல்யாணத்தை உத்தேசித்து, தருகிறாள்.
ஆனால், யோகி என்கிறவன் சக்தியில் ஸித்தியாவதற்கே குண்டலிநீ யோகம் என்று பண்ணும்போது, [சிரித்து] அவள் இல்லாத கிராக்கியெல்லாம் பண்ணிக்கொண்டு அப்புறந்தான் கொஞ்சங் கொஞ்சமாக ஏதோ இண்டு இடுக்கு வழியாகத் தன் சக்தியை அவிழ்த்து விடுகிறாள்.
இன்றைக்கு குண்டலிநீ தீக்ஷை பல பேர் கொடுத்து, பெற்றுக் கொண்டவர்களிடம் தூங்குகிற குண்டலிநீ முழித்துக் கொண்டுவிட்டதாகச் சொல்வதெல்லாம் இந்த இண்டு இடுக்குக் கீற்று வெளிப்படுவதுதானே யொழிய பூர்ணமான சக்தி ஜ்யோதிஸ் ஸூர்யோதயத்தைப் போல வெளிப்படுவது இல்லை.
அரைத் தூக்கம், கால் தூக்கம் என்று சொல்கிறோமே, அப்படி ஸாதாரணமாக நமக்குள் எல்லாம் முக்காலே மூணு வீசம் தூக்கத்துக்கும் மேலே ப்ராண சக்தி ரூபத்தில் பராசக்தி தூங்கிக்கொண்டிருக்கிறாளென்றால், குண்டலிநீ தீக்ஷையாகி, அது ‘ரைஸ்’ ஆகிவிட்டது என்று சொல்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் முக்கால் தூக்கம் என்கிற அளவுக்கு நம்மைவிடக் கொஞ்சம் முழித்துக் கொண்டிருப்பாள்! அவ்வளவுதான்.
அதிலேயே [இந்தக் குறைந்த அளவு மலர்ச்சியிலேயே] உச்சந்தலை வரை ஒரு வைப்ரேஷன், ப்ரூமத்தியில் [புருவ மத்தியில்] ஒரு கான்ஸன்ட்ரேஷன் அப்போதப்போது உண்டாவதை வைத்துக்கொண்டு, குண்டலிநீ பூர்ணமாக முழித்துக்கொண்டு லக்ஷ்யமான உச்சிக் சக்ரத்திற்குப் போய்விட்ட மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வாஸ்தவத்தில் ஏதோ கொஞ்சம் சக்தி, கொஞ்சம் ஏறுவது, மறுபடி விழுவது என்றுதான் நடக்கிறது. ஏறும்போதும் அங்கங்கே உண்டாகிற அத்புத சக்திகளில் (ஸித்திகளில், சித்து என்று சொல்வது இந்த சக்திகளைத்தான். அப்படிப்பட்ட சக்திகளில்) சித்தத்தை அலைபாய விடாமல், லக்ஷ்யத்திலேயே ஈடுபடுத்துவது ஸாமான்யமான ஸாதனை இல்லை.
அவளேதான் இப்படிப்பட்ட சின்ன ஸித்திகளைக் கொடுத்து பெரிய, முடிவான ஸித்தியிலிருந்து டிஸ்ட்ராக்ட் பண்ணி மயக்குவது.
இதெல்லாம் போதாதென்று குண்டலிநீ ஸஞ்சாரம் அதற்கான வழியில் போகாமல் இசகு பிசகாகப் போனால் பலவிதமான வியாதிகள், புத்திக் கலக்கம் ஏற்படுவது வேறே.
லோகத்தில் பலவிதமான மாயைகள், மாயையிலிருந்து மீளுவதற்குப் பலவிதமான ஸாதனைகள் என்று அவள் பரப்பி வைத்திருப்பதில் நேரே அவளுடைய சக்தியைப் பிடிப்பது என்பதற்காக் குண்டலிநீ யோகம் என்று ஒரு ஸாதனையை வைத்திருக்கும்போது அதிலேயே நிறைய மாயையையும் பிசைந்து வைத்திருக்கிறாள்.
ஏன் அப்படி என்றால் என்ன சொல்வது? ஒரு பயிர் ஸுலபத்தில் பயிர் பண்ணி மகசூல் காணும்படி இருக்கிறது. இன்னொரு பயிருக்கு ஏற்ற நிலம், சீதோஷ்ணம், எரு ஆகிய எல்லாமே கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஏனென்று கேட்டால் என்ன பதில் சொல்வது?
பல தினுஸாக அவள் லீலா நாடகம் ஆடுவதில் இதெல்லாம் அங்கம். அப்படி குண்டலிநீ யோக ஸாதனை என்பதை ரொம்பவும் சிரம ஸாத்யமாகவே வைத்திருக்கிறாள்.
‘பக்தி, ஞான மார்க்கங்களில் போகிறவர்கள் மட்டும் ஸுலபமாக ஸித்தி அடைந்து பிரத்யக்ஷ தரிசனமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ பெற்றுவிடுகிறார்களோ என்ன? ‘என்று கேட்கலாம். நியாயமான கேள்வி.
ஆனாலும் எந்த அளவுக்கு அவர்கள் ஸாதனை பண்ணியிருந்தாலும், பண்ணுகிற மட்டும் அது [குண்டலிநீ யோகம் போல] இத்தனை ச்ரமமாகவோ, சிக்கலாகவோ இருப்பதில்லை.
அதோடுகூட ஸாதனையில் தப்பு ஏற்படுவதால் இத்தனை விபரீதமாகவும் அவற்றில் நடந்துவிடுவதில்லை.
கர்ம யோகத்தைப் பற்றி – அதாவது பலனில் பற்று வைக்காமல் ஸ்வதர்மமான கடமைகளை ஈச்வரார்ப்பணமாகப் பண்ணுவதைப் பற்றி – பகவான் சொல்லியிருப்பதெல்லாம் பக்தி, ஞான யோகங்களுக்கும் பெரும்பாலும் பொருந்துவதுதான்.
‘யோகம்’ என்றாலே நினைக்கப்படும் குண்டலிநீ முதலான மார்க்கங்களுக்குத்தான் அது அவ்வளவாகப் பொருந்தாமலிருக்கிறது. என்ன சொல்கிறாரென்றால் .........
நேஹாபிக்ரம நாசோஸ்தி ப்ரத்ய்வாயோ ந வித்யதே *
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் **
என்கிறார். என்ன அர்த்தமென்றால் ‘இந்த வழியில் நாம் பண்ணும் முயற்சி பலன் தராமல் வீணாகப் போவது என்பது இல்லை. ஏறுமாறாக, விபரீதமாகப் பலன் ஏற்படுவது என்பதும் இல்லை. ஏதோ ஸ்வல்பம்தான் ஸாதனை பண்ணினாலுங்கூட ஸரி, ‘நமக்கு ஸம்ஸாரத்திலிருந்து விடிவே இல்லையோ?’ என்கிற பெரிய பயத்திலிருந்து அது நம்மை ரக்ஷித்து விடும்’ என்கிறார்.
ஆனால் குண்டலிநீ மாதிரி ரொம்பவும் சிரமமாக, சிக்கலாக உள்ள ஒரு ஸாதனையில் போக ஆரம்பிக்கிறவர்களில் பலபேர் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு அப்புறம், ‘நம்மால் இதில் ஜயிக்க முடியாது’ என்று விட்டு விடுவதைப் பார்க்கிறோம்.
என் கிட்டேயே வந்து எத்தனையோ பேர் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது ‘அபிக்ரம நாசம்’- ‘முயற்சி வீணாவது’- என்று பகவான் சொன்னது நடந்துவிடுகிறது.
‘ப்ரத்யவாயம்’- ‘விபரீத பலன்’- உண்டாவது என்கிறாரே, அதற்கும் இந்த வழி நிறையவே இடம் கொடுக்கிறது. நடுவாந்தரத்தில் “விட்டுவிடுகிறேன்”என்று இவர்கள் வருவதற்கே முக்யமாக அதுதான் காரணமாயிருக்கிறது. கடைசி வரையில் பயமும் போக இடமில்லை.
‘ஸரியாகப் பண்ணி பலன் பெறுவோமா, அல்லது இசகு பிசகாக ஆகிவிடுமா?’என்ற பயம். அது மட்டுமில்லாமல் நடுவாந்தரப் பலன்களாகச் சில அத்புத சக்திகள் கிடைப்பதே பெரிய பலனைக் கோட்டைவிடும்படி திசை திருப்பிவிடுமோ என்ற பயம்!
ஸ்வல்பம் அநுஷ்டித்தாலும் பயத்தைப் போக்கும் என்று பகவான் சொன்னது இந்த வழிக்கு ஏற்கவில்லை.
அதோடு பகவான் சொல்லாத இன்னொன்றும் இதில் சேருகிறது. என்னவென்றால், ஸாதனை பலிக்குமா என்று கடைசி மட்டும் பயம் ஒரு பக்கம் இருக்கிறதென்றால் இன்னொரு பக்கம் ஏதோ ஸ்வல்ப பலன் கிடைத்ததிலேயே தாங்கள் முடிவான ஸித்தி அடைந்து விட்டதாக ஏமாந்து போவதும் இதில் இருக்கிறது.
பக்தி பண்ணுகிறவர்களும், ஞான விசாரம் பண்ணுகிறவர்களும் தங்களுக்கு நிஜமாகவே தெய்வ ஸாக்ஷாத்காரமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ ஏற்படுகிற வகையில் அவை ஏற்பட்டு விட்டதாக நினைப்பதற்கில்லை.
ஆனால் குண்டலிநீ பண்ணுபவர்கள் ஏதோ கொஞ்சம் சக்ரங்களில் சலனம் ஏற்பட்டு விட்டால்கூட ஸித்தியாகி விட்டதாக நினைத்து விடுகிறார்கள் – தூரக்க [தூரத்தில்] அவுட்லைனாக கோபுரம் தெரிவதைப் பார்த்தே கர்பக்ருஹத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிற மாதிரி!
நான் குண்டலிநீ யோகம் தப்பு வழி என்று சொல்லவேயில்லை. நிச்சயமாக அத்வைத ஸமாதிவரை கொண்டு சேர்க்கக் கூடிய உசந்த வழிதான். இல்லாவிட்டால் யோகீச்வரர்கள், ரிஷிகள் இப்படியொரு சாஸ்திரத்தைக் கொடுத்திருப்பார்களா?
அதெல்லாவற்றையும்விட, நம்முடைய ஆசார்யாள் அந்த விவரங்கள் சொல்லியிருப்பாரா? வழி ஸரிதான். ஆனால் அந்த வழியிலே போகிற அளவுக்கு நாம் ஸரியாயில்லை என்பதாலேயே, தீரர்களாக இருக்கப்பட்ட யாரோ சில பேரைத் தவிர, நமக்கு அது வேண்டாம் என்கிறேன்.
ஸித்தி பெற்ற குருவின் இடைவிடாத கண்காணிப்பிலேயே விடாமுயற்சியுடன் பரிச்ரமப்பட்டு அப்யஸிக்க வேண்டிய ஒரு வழியைப் பற்றிச் சும்மாவுக்காக எதற்காகப் பேசவேண்டும் என்பதால் சொல்கிறேன்.
நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்? நம்மால் முடிந்த முயற்சிகளைப் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்ள என்ன வழி என்று ஆலோசனை பண்ணத்தான். அப்படியிருக்கும் போது நம்மால் முடியாத முயற்சிகளைப் பற்றிப் பேசி எதற்காகப் பொழுதை வீணாக்க வேண்டும்? முடியாத முயற்சி என்பதோடு அவசியமும் இல்லாத ஸமாசாரம்.
பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலிநீயால் அடைந்தவிட முடியாது. ஆகையால் முடியாத, அவசியமில்லாத அந்த வழியைப் பற்றி விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம்.
காஞ்சீபுரத்திற்கு வழி கேட்டால், நாம் ஸுலபமாகப் போய்ச் சேரும்படி, ‘இப்படியிப்படி ப்ராட்வேயிலிருந்து பஸ் இருக்கு. பீச்சிலிருந்து ரயில் இருக்கு’ என்று சொன்னால் அர்த்தமுண்டு.
‘திருவொற்றியூரிலிந்து காஞ்சீபுரம் வரை பல்லவராஜா காலத்தில் போட்ட அன்டர்-க்ரவுன்ட் டன்னல் இருக்கு. அங்கங்கே தூர்ந்து போயிருக்கும். அந்த வழியாகப் போகலாம்’ என்றால் அர்த்தமுண்டா? வாஸ்தவமாகவே அப்படியும் வழி இருக்கலாம் – வாஸ்தவத்தில் இல்லைதான்; ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் – டன்னல் இருக்கலாம். அதிலே துணிச்சலோடு போகிற ஸாஹஸக்காரர்களும் இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி வழி கேட்கிற ஸாதாரண ஜனங்களுக்குச் சொல்லி என்ன ப்ரயோஜனம்?
ஸர் ஜான் உட்ராஃப் [குண்டலிநீ யோகம் குறித்து] ‘ஸர்பென்ட் பவர்’முதலான புஸ்தகங்கள் போட்டாலும் போட்டார், வகை தொகையில்லாமல் அதில் ஸித்தியான யோகிகள் என்று பல பேர் தோன்றி ‘க்ளாஸ்’ நடத்துவதும், இன்னும் பல பேர் ஒரு அப்யாஸமும் பண்ணாமலே, பண்ணும் உத்தேசமும் இல்லாமலே, ‘மூலாதாரா, ஸஹஸ்ராரா’ என்றெல்லாம் எழுதி, பொது ஜனங்களிலும் பல பேர் தாங்களும் விஷயம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும் ஆகியிருக்கிறது.
எல்லாரும் பேசுகிறதாக ஆகியிருந்தாலும், பண்ணமுடியுமா-ஸரியாக, அதற்கான கட்டுப்பாடுகளோடு, விடாமுயற்சியோடு ஒரு பெரிய பவர் ரிலீஸாகிறதைப் பக்குவமாகத் தாங்கிக் கொள்கிற தைர்யத்தோடு பண்ண முடியுமா – கடைசிப் படிவரை டிஸ்ட்ராக்ஷன் இல்லாமல் பண்ணிக் கொண்டு போய் ஜயிக்க முடியுமா என்கிறது பெரிய கேள்வியாக இருக்கிறது.
சும்மாவுக்காக அதைப் பற்றி பேசுவது புரளிதான். அதைவிட விபரீதம், சும்மாவுக்காகப் பேசுவதாக இல்லாமல் தப்பும் தாறுமாகப் பண்ணிப் பார்த்துப் பல தினுஸான கஷ்டங்களுக்கு, ப்ரமைகளுக்கு ஆளாகிறது.
அதனால்தான் இந்த ஸப்ஜெக்டில் இறங்க நான் ப்ரியப்படுவதில்லை. ஆனாலும் “ஸெளந்தர்ய லஹரிக்கு அர்த்தம் சொல்றேண்டா!” என்று ஆரம்பித்து விட்டு, இதை அப்படியே மூடி மறைப்பதென்று பண்ணப் பார்த்தால் நீங்கள் வேறே வழியில் தூக்கிப் பார்க்கத்தான் செய்வீர்களென்பதால் என் அபிப்ராயத்தை இளக்கிக் கொண்டு ப்ரஸ்தாபம் பண்ணுகிறேன்;’ வார்னிங்’கோடு சேர்த்தே ப்ரஸ்தாபிக்கிறேன்….
உட்ராஃபை நான் குற்றம் சொல்லவேயில்லை. ‘தாங்க்’ தான் பண்ணுகிறேன். ‘யோக சக்தி, யோக ஸித்தி என்பதெல்லாமே பொய். எங்கள் ஸயன்ஸுக்குப் பிடிபடாததாக அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது’ என்று மேல் நாட்டார்களும், அவர்கள் சொல்வதையே வேத வாக்காக எடுத்துக்கொண்ட நம்மவர்களும் சொல்லி வந்தபோது உட்ராஃப்தான் அது ஸத்யமானது, ஸயன்ஸுக்கு மேலான ஸூபர்ஸயன்ஸாக இப்படியிப்படி ஆகப்பட்ட ஒழுங்கில் அதன் கார்யக்ரமம் இருக்கிறது என்று விளக்கமாக எழுதி எல்லார் கண்ணையும் திறந்து வைத்தார்.
அவர் அப்படிப் பிரசாரம் பண்ணியில்லா விட்டால், நிஜமாகவே அந்த மார்க்கத்துக்கு அதிகாரிகளாக இருக்கப்பட்டவர்கள்கூட அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மார்க்கம் மங்கிப் போயிருந்தது.
அவர் எழுதினதில் நம்பிக்கை உண்டாக்கித்தான் பல பேர் அப்போது நிஜமாகவே யோக ஸித்தி பெற்றிருந்த யோகிகளிடம் போய் அந்த வழியைக் கற்றுக்கொண்டு, அதற்கப்புறம் மங்கிப் போன வழிக்குப் பிரகாசமான காலம் பிறந்தது.
இன்றைக்கு வரை நல்ல யோக ஸித்தர்களும் உண்டாகாமலில்லை. அவர்களிடம் முறைப்படி கற்றுக் கொண்டு, முன்னேறும் ஸாதகர்களும் இல்லாமலில்லை.
ஆனாலும் போலிகளும் சேர்வது, பிரகாசம் என்றேனே, அது கண்ணைக் குத்தும் அளவுக்கு வெறும் பேச்சில் மட்டும் பளபளப்பது என்றெல்லாமும் நிறைய ஆகியிருக்கிறது. இதைப் பார்க்கும்போதுதான் ஆத்மாவுக்கு நல்லதைத் தேடிக்கொண்டு போக்க வேண்டிய பொழுதை நாம் அப்யாஸம் பண்ணுவதாக இல்லாத ஒரு வழியைப் பற்றிய பேசி விருதாவாக்குவானேன் என்று தோன்றி [இதுவரை தெரிவித்த அபிப்ராயத்தைச்] சொன்னேன்.
இவ்வளவு சொன்னதாலேயே, அதில் சிலருக்கு இன்ட்ரெஸ்ட் உண்டாக்கியிருப்பேனோ என்னவோ? அதனால் ஒரு தடவைக்குப் பல தடவையாகப் எச்சரிக்கிறேன்.
‘நிச்சயமாக ஸித்தியானவர் எந்தவிதமான ஸொந்த ஆதாயத்தையும் கருதாதவர், சிஷ்யர்களைக் கைவிடாமல் கண்காணித்து மேலே மேலே அழைத்துப் போகக் கூடியவர் என்று உறுதியாக நம்பக்கூடிய ஸத்குரு கிடைத்தாலொழிய யாரும் ஸ்வயமாகவோ, அல்லது இப்போது எங்கே பார்த்தாலும் புறப்பட்டிருக்கிற அநேகம் யோகிகள் என்கிறவர்களிடம் போயோ இந்த யோகத்தை அப்யாஸம் பண்ணப்படாது.
இது அதிஜாக்ரதை தேவைப்படுகிற ஸமாசாரம்’ என்று எச்சரிக்கை பண்ணுகிறேன்.
இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் மந்த்ர யோகத்திலும் ஜாக்ரதையாகவே இருக்கவேண்டும். குண்டலிநீ யோக ரிஸல்ட்களையே மந்த்ர யோகமும் சப்தங்களினால் உண்டாகிற நாடி சலனங்களின் மூலம் உண்டு பண்ணுவதுண்டு.
குருமுக உபதேசம் இங்கேயும் அத்யாவசியமானது. இந்தக் காரணங்களால் மந்த்ர சாஸ்திர ஸமாசாரங்களையும் உபாஸகர்கள், அல்லது ச்ரத்தையாக உபாஸிக்க வேண்டுமென்று இருப்பவர்கள் தவிரப் பொத்தம் பொதுவில் விஸ்தாரம் செய்வது உசிதமில்லை.
க்ரமமாக உபதேசமில்லாமல் மந்திரங்களைத் தெரிந்து கொள்வதால் ஒரு ப்ரயோஜனமுமில்லை.
வீட்டுக்குள்ளே உசந்த ஒயர், ஸ்விட்ச், ‘இம்போர்ட் பண்ணின பல்பு எல்லாம் போட்டாலும் பவர் ஹவுஸிலிருந்து கனெக்ஷன் இல்லாமல் விளக்கு எரியுமா? அப்படித்தான் குருவின் பவர் – உயிர் பவர் – இல்லாமல் மந்த்ர சப்தங்களை ஸ்வயமாக எடுத்துக் கொள்வதும்.
ஒரு ப்ரயோஜனமும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. சப்த வீர்யம் முறையாக க்ரஹிக்கப்படாவிட்டால் விபரீத பலனும் உண்டாகலாம். அதனால் உதாரணத்தை மாற்றிச் சொல்கிறேன்:

மந்த்ர சப்தங்களே எலெக்ட்ரிஸிடி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நாமே போய்த் தொட்டு வெளிச்சத்தைக் கொண்டுவர முடியுமா? ‘ஷாக்’தான் அடித்துக் கஷ்டப்படுவோம்.
குரு என்ற ஒயர் வழியாக உபதேசம் என்ற பல்பில் வந்தால்தான் மின்சார வீர்யம் கட்டுப்பாட்டில் வந்து வெளிச்சம் கிடைக்கும். எலெக்ட்ரிஸிடி எங்கேயிருக்கிறதென்றே தெரியாமல் ஒயருக்குள் வருகிறது போல ரஹஸ்யமாகவே மந்த்ரமும் வரவேண்டும்.
(Courtesy: Mahesh Krishnamoorthy)

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

பசுக்களைக் காப்பாற்றிய பெரியவாள்."
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
கும்பகோணத்தை மையமாக வைத்து ஸ்ரீமடம்
செயல்பட்டுக் கொண்டிருந்த சமயம்.
மடத்தின் பின்புறம் பெரிய மாட்டுக் கொட்டில்,
மடத்துப் பசுமாடுகளுடன் கூட ஒரு புதிய பசுமாடு வந்து
வைக்கோல் தின்று கொண்டிருந்தது.தண்ணிர்
குடித்துக் கொண்டிருந்தது.
யாருடைய மாடு என்று தெரியவில்லை.
ஒருவரும் மாட்டைத் தேடிக்கொண்டும் வரவில்லை.
அக்கம் பக்கத்தில் தகவல் கொடுத்தும் பயனில்லை.
நாலைந்து நாட்கள் கடந்தன.
"அந்த மாட்டை வெளியே ஓட்டி விடலாமா?"
என்று பெரியவாளிடம் வந்து கேட்டார் கார்வார்.
"வெளிமாடு என்பதால் அந்தப் பசு மாட்டை வெளியே
துரத்தி விடுவதானால், நம்ம மடத்திலுள்ள பல வெளி
மனிதர்களையும் வெளியே அனுப்பி விட வேண்டும்!.."
(மடத்தில் எந்தக் காரியமும் செய்யாமல்,தான்
முக்கியமான பணி செய்வது போல் காட்டிக் கொண்டு
பலர் உண்டு, உறங்கி வந்தார்கள்)
"மாடு வாயில்லாப் பிராணி.அதனுடைய எஜமானன்
யார் என்று தெரியல்லே.நம்ம மாட்டுக் கொட்டகையிலேயே
இருக்கட்டும்.அதை ரட்சிக்க வேண்டியது நமது கடமை."
சில நாட்கள் கழிந்த பின் அந்தப் பசுமாடு சினைப்பட்டு
கன்றும் ஈன்றது.
கார்வார் மறுபடியும் வந்து நின்றார் பெரியவாள் முன்.
"சீயம்பால் காலம் முடிஞ்சு போச்சு...நல்ல ஜாதி மாடு...
புஷ்டியான தீனி....வேளைக்கு நாலு சேர் கறக்கிறது..."
"அந்த மாட்டுப் பாலை அப்படியே காளஹஸ்தீஸ்வரர்
கோயில் அபிஷேகத்துக்குக் கொடுத்து விடு.மாடு மடத்துக்குச்
சொந்தமானது இல்லை. பால் மடத்துக்கு வேண்டாம்."
இரண்டு நாட்கள் ஆயின.
"என்ன செய்கிறே அந்த மாட்டுப் பாலை?"
என்று கார்வாரிடம் கேள்வி.
அவர் அவசரம்,அவசரமாக, "தினந்தோறும் நாலு சேர்
பால் காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு கொடுக்க
ஏற்பாடு செய்துட்டேன்..." என்றார்.
"என்றாலும் தவறுதலாக மடத்து உபயோகத்துக்கு
வந்துடலாம் இல்லையா?...மாட்டையும்,கன்றையும்
ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குக் கொடுத்து விடு."
அப்படியே செய்தார் கார்வார்.
ஆனால், அந்தக் கோயிலில் ஏற்கனவே நாலைந்து
பசுமாடுகள் இருந்தன.நிர்வகிப்பது கஷ்டமாக இருந்தது.
பசு மாடுகளை கோயில் அதிகாரி ஏலத்துக்குக்
கொண்டு வந்து விட்டார்.
ஏலத்தில் விட்டால், அவையெல்லாம் நேரே கசாப்புக்
கடைக்குத் தான் போகும் என்ற அச்சம் பெரியவாளுக்கு.
செல்வந்தரான ஒரு பக்தரிடம் சொல்லி எல்லா
மாடுகளையும் ஏலத்தில் எடுக்கச் சொன்னார்கள்.
பின்னர், அக்கறையுடன் பராமரிக்கக் கூடியவர்களைப்
பார்த்து ஒவ்வொரு பசுமாடாகக் கொடுத்து விட்டார்கள்.
பசுக்களிடம் அவ்வளவு வாத்ஸல்யம் பெரியவாளுக்கு.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

பசுபதியின் அவதார புருஷருக்கு பசுவிடம் கருணை இருப்பது
என்ன ஆச்சர்யம்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

உண்மையான குழந்தை உள்ளத்தோடு தேடினால், பெரியவா நிச்சயம் கிடைப்பா!
மிருதங்க வித்வான் ஒருவர் சிறு பையனாக இருந்தபோது பெரியவாளுடைய சந்நிதியில் நடந்த சங்கீத கச்சேரிக்கு தன் அப்பாவோடு போனார். அவருடைய அப்பாவும் மிருதங்க வித்வானானதால், அன்று மகனை மிருதங்கம் வாசிக்க அமர்த்திவிட்டார். இரவு எல்லாருக்கும் ப்ரஸாதம் வழங்கினார்கள். அப்போது பெரியவா அந்தப் பையனை மட்டும் அழைத்து ஒரு சிவப்புப் பட்டு வழங்கி ஆசிர்வதித்தார்.

பல வர்ஷங்கள் கழித்து அந்தப் பையன் வானொலி நிலையத்தில் பணி புரிந்துவந்தார். அப்போது வானொலி நிலைய இயக்குனரோடு பெரியவாளை தர்சனம் பண்ணப் போனார். போகும்போது ஞாபகமாக அந்த சிவப்புப்பட்டையும் எடுத்துக் கொண்டு போனார்.

பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு "இந்த பட்டு வஸ்த்ரம் பெரியவாதான் அனுக்ரகம் பண்ணிக் குடுத்தேள் ..." என்றதும், "ஆமா....அப்போ ஒனக்கு ஒம்பது வயஸ்.." என்று சொன்னதும், ஆடிப்போய்
விட்டார்!
45 வர்ஷங்களுக்கு முந்தி நடந்ததை, ஏதோ நேற்று நடந்த மாதிரி பெரியவா சொன்னார். ஞானிகள் காலம், இடம் இரண்டையும் கடந்தவர்கள் இல்லையா?

அதே பக்தர் வீட்டில் பெரியவாளுடைய படங்கள் விதவிதமான போஸ்களில் மாட்டியிருந்தார். சொந்த ஊரை விட்டு தஞ்சாவூரில் சிலகாலம் வசிக்க வேண்டிய சூழ்நிலை! அந்த வீட்டில் பெரியவாளுடையது ஒரு படம் கூட இல்லை! மனசுக்குள் ஏதோ தவிப்பு! சஞ்சலம் ! அரிசி வாங்குவதற்காக கடைக்குப் போனார். புது ஊர்!

மாதிரிக்காக ஒரு கிலோ அரிசி வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். அவர் குடுத்த பேப்பர் பை ரெண்டு நாட்களாக வீட்டில் கிடந்தது. மூன்றாவது நாள் அதை குப்பையில் போடுவதற்காக எடுத்தால்........அந்தப்பையின் மேல் பக்கத்தில் "இதோ! வந்துட்டேன் பாத்தியா!.." என்று அழகாக சிரித்துக்கொண்டு பெரியவா! பக்தருக்கு நன்றியில் அழுவதைத்தவிர என்ன பண்ண முடியும்?
------------------------------

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

VERDICT 2014....

Image

தாமரை மலர் ஒன்று கண்டேன்
என் தாய் அதில் வீற்றிருக்கக்கண்டேன்
மோதி முழங்கக்கண்டேன்
நீர் நிலைகள் நிரம்பக்கண்டேன்
கழனி சூழ் வயல்கள்
சிறந்து விளைந்திருக்கக்கண்டேன்!
இல்லங்களில் ஒளி சூழ்ந்திருக்கக்கண்டேன்!
ஆலைகள் பெருகுவதைக்கண்டேன்!
வறுமை ஒழியக்கண்டேன்
எங்கும் அமைதி நிலவக்கண்டேன்
மக்கள் முகம் ஒளிறக்கண்டேன்
அவனி வியக்கக்கண்டேன்!
காஞ்சி ஐயனின் அருளை
வேங்கடவன் நான் அதனிலும் கண்டேன்!!
venkat k
Last edited by venkatakailasam on 18 May 2014, 16:26, edited 1 time in total.

Govindaswamy
Posts: 120
Joined: 21 Feb 2010, 06:55

Re: Kanchi Maha Periyava

Post by Govindaswamy »

ஐயா
தங்கள் பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளன. ஆயினும் கீழே குறிப்பிட்டவை போன்ற பிழைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
விளைந்திருக்க கண்டேன் , நிரம்ப கண்டேன்.
இவற்றில் இரு சொற்களுக்கு இடையில் ‘க்’ என்னும் வல்லின மெய் மிகும்..
(எ.கா) விளைந்திருக்கக் கண்டேன்.
நன்றி
கோவிந்தஸ்வாமி

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Thank you..Shri Govinda swamy..
I know சந்தி பிழை..
When I write, I write them as two separate words..
வீற்றிருக்க and கண்டேன்..
If I write as a single word..
வீற்றிருக்கக்கண்டேன்...க்..will automatically come..
I will try to correct them..

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
"I too had the desire to learn from that Sannyasi!"
======================================
It was in the year when Periyava was camping at Karad (Maharashtra) on the banks of the confluence of Krishna and Koyna. There was a temple for Krishna Amba .
Periyava did His snanam in the confluence, completed His anushtanam and was giving darsanam to devotees in the temple, at the sannidhi of Krishan amba.
A sannyasi visited the temple.He read the 'aparokshAnUbhUthi' of Bhagavat PAdA in full (144 shlokAs) along with the commentary on it by Sri VidyAraNya. After he finished it Periyava asked two vidvAns to state the substance of what was read briefly. They did it in Sanskriṭ. After which the Sannyasi left taking leave of Periyava.
Periyava later revealed who that sannyasi waṣ.
"He was the teacher of VedAntic shastrAs to the AcharyAs of Sri Sringeri Mutṭ. At present he does nothing but read the works of Bhagavad PAdA all the time!"
As Periyava expressed His desire to 'learn' from him, the Sannyasi had earlier come to Ugar and spent the entire day in fulfilling His desire. The Sannyasi had moved closely with Sri Chandrasekara Bharathi Swamigal of Sri Sringeri Mutt and taught Shastra pAtam to Hiṃ. He later taught the present AchAryA who adorns the Sri Sharadha Peetam of Sringeri and has earned that AchAryAś' respect too.
"I too had the desire to learn from that Sannyasi", He concludeḍ!
*****
Translation by Shri Mohan Ramiah of incident from Tamil, published by The Association of Hindu Dharma in 1982-83.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

அதிசய அந்தாதி

ஷட்பதீ ஸ்தோத்ரத்தில் ஒவ்வொரு ச்லோகத்திலும் ஒரு தினுஸான அழகு ரொம்பிக் கிடக்கிறது. நாலாவது ச்லோகத்தில் ஆசார்யாள் வார்த்தைகளைப் பின்னியிருக்கிற அழகு ஈடிணையில்லாமல் இருக்கிறது.

ஸாதாரணமாக, 'அந்தாதி' என்று ஒரு கவிதை வகையைக் கொண்டாடிச் சொல்கிறோம். 'ஸரஸ்வதி அந்தாதி', 'சடகோபர் அந்தாதி' என்றெல்லாம் கம்பர் பண்ணியிருக்கிறார். 'திருவாய் மொழி' எனப்படும் நம்மாழ்வாரின் ப்ரபந்தங்களில் பாசுரங்கள் முழுக்க முழுக்க அந்தாதி க்ரமத்தில்தான் இருக்கும். 'நாலாயிர திவ்ய ப்ரபந்த'த்தில் மூதல் மூன்று ஆழ்வார்களும் சேர்ந்து பகவத் தர்சனம் பெற்றவுடன் ஒருத்தருக்குப் பின் ஒருத்தராக அந்தாதிதான் பாடியிருக்கிறார்கள். தற்காலத்தில் 'அபிராமி அந்தாதி' ப்ரஸித்தமாகிக் கொண்டு வருகிறது.

'அந்த', ஆதி' என்ற இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து 'அந்தாதி என்றாகிறது. 'அந்தம்' என்றால் முடிவு, 'ஆதி' என்றால் ஆரம்பம். ஆரம்பமும் முடிவும் இல்லாத பரமாத்மாவை' அத்யந்த ரஹிதன்' என்று சொல்வது வழக்கம்.

'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை' என்று மாணிக்கவாசக்ர் 'திருவெம்பாவை'யை ஆரம்பிக்கிறார்.

'அந்தாதி' என்று ஒரு கவிதை வகைக்கு ஏன் பெயர் வந்தது என்றால் இதில் ஒரு செய்யுளின் அந்தமான (முடிகிற) வார்தையே அடுத்த செய்யுளின் ஆதி (ஆரம்ப) வார்த்தையாக வரும்.

உதாரணமாக, பெருமாளைப் பாட வந்த பொய்கையாழ்வார் 'முதல் திருவந்தாதி'யில் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபத்தை ஸ்தோத்ரம் செய்யும்போது,

ஆலமரநீழல் அறும் நால்வர்க் (கு) அன் (று) உரைத்த
ஆலம் அமர் கண்டத் (து) அரன்

என்று ஒரு செய்யுளில் 'அரன்' என்பதை 'அந்த'மான வார்த்தையாக முடிக்கிறார். இதற்கடுத்த செய்யுளில் ஹரி - ஹர அபேதத்தைச் சொல்கிறபோது, 'அரன்' என்ற இதே வார்த்தையை 'ஆதி' வார்த்தையாக வைத்து ஆரம்பிக்கிறார்.

அரன் - நாரணன் நாமம் ஆன்விடை - புள் ஊர்தி

என்றிப்படிச் சொல்லிக்கொண்டே போகிறார்.

இப்படி அந்தாதியாக ஒரு ஸ்தோத்ரததில் செய்யுள்களை மாலை மாதிரி கோத்துக்கொண்டே போவதில் ஒரு பெரிய ஸெளகர்யம், நாம் மேலே மேலே ஒவ்வொரு செய்யுளை நினைவு வைத்துக்கொண்டு மனப்பாடம் பண்ண ஸுலபமாகிறது. "இந்தச் செய்யுள் 'அரன்' என்று முடிகிறதா? ஸரி, அப்படியானால் அடுத்த செய்யுள் 'அரன்' என்றுதான் ஆரம்பிக்கும்" என்று நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது.

ஒரு செய்யுளின் அல்லது ச்லோகத்தின் முடிவு, அடுத்ததன் ஆரம்பமாக வைத்து அந்தாதி பாடுவதற்கு நிரம்பப் பாண்டித்யம் இருக்கவேண்டும். நம் ஆசார்யாளே இதைவிடப் பல மடங்கு கஷ்டமான ஒரு ஸாதனையை 'ஷட்பதீ'யின் நாலாவது ச்லோகத்தில் அநாயாஸமாகப் பண்ணியிருக்கிறார். ஒரு ச்லோகத்துக்கும் இன்னொரு ச்லோகத்துக்கும் அந்த - ஆதித் தொடர்பு இருப்பதைவிட எத்தனையோ மடங்கு கடினமானதாக, ஒரே ச்லோகத்துக்குள்ளேயே ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் அந்த - ஆதித் தொடர்பு இருக்கிற விதத்தில் இங்கே பதங்களைக் கோத்துக்கொண்டு போயிருக்கிறார். அந்த ஸ்லோகத்தைச் சொல்கிறேன்.

உத் - த்ருத நக - நகபிதநுஜ - தநுஜகுலாமித்ர - மித்ர சசி த்ருஷ்டே

த்ருஷ்டே பவதி

இதுவரை பதத்துக்குப் பதம் அந்தாதி க்ரமத்தில் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் 'உத் - த்ருத நக'. இதில் முடிகிற 'நக'வையே அடுத்த பதத்துக்கு ஆரம்பமாக வைத்து 'நகபிதநுஜ இதன் அந்த்யமான 'தநுஜ'வை ஆரம்பமாக வைத்து, இதற்கடுத்த பதமான 'தநுஜ குலாமித்ர'. இந்த ரீதியல் ரொம்பவும் ஆச்சர்யமாக ச்லோகம் போகிறது. ஒரு சொற்றொடர் முடிவில் வரும் வார்த்தை அடுத்த சொற்றொடரின் ஆரம்பமாகிறது. ஒரு சொற்றொடர் முடித்துவிடும் வார்த்தையைப் பிடித்துக்கொண்டு அடுத்த சொற்றொடர் ஆரம்பிக்கிறது. இதை "முக்த பத க்ரஸ்தம்" என்பார்கள். "முக்த" - விட்ட, "க்ரஸ்த" பிடித்துக்கொண்ட.

முதல் வரி முடித்துவிட்ட "த்ருஷ்டே"வைப் பிடித்துக்கொண்டு இரண்டாவது வரியை 'த்ருஷ்டே பவதி' என்று ஆரம்பித்து, அப்புறம் இந்த 'பவதி' என்ற அக்ஷரங்களையே பல தினுஸில் திரும்பி,

த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்கார :||

என்று முடிக்கிறார். முழு ச்லோகத்தையும் சேர்த்துச் சொன்னால் - ஒரு தைலதாரை பிசிர் இல்லாமல், முறிவு படாமல் விழுகிற மாதிரி வார்த்தைக்குப் பின் வார்த்தை யாகத் தானாகச் சேர்ந்துகொண்டேபோகும்.

உத் - த்ருத நக - நகபிதநுஜ தநுஜ குலாமித்ர மித்ர சசி த்ருஷ்டே |

த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்கார ||

ச்லோகத்தின் உச்சாரண அழகு கெட்டுப்போகக் கூடாதென்று இங்கே சீர் பிரிக்காமல், ஸந்தி பிரிக்காமல் சொன்னேன். பிரித்துச் சொன்னால் 'நகபிதநுஜ' என்பது 'நகபித் அநுஜ' என்றாகும், 'பவதிரஸ்கார' என்பது 'பவ திரஸ்கார:" என்று இரண்டு வார்த்தைகளாகப் பிரியும்.

வார்த்தைகளை அழகாகக் கோத்துவிட்டால் போதுமா? இந்த நாளில் கூட ரொம்பவும் அடுக்குச் சொல் அலங்காரம் வந்தவிட்டது என்கிறார்கள். சொல் அடுக்கு அழகாக இருந்தால் மட்டும் ப்ரயோஜனம் இல்லை. அதன் அர்த்தமும் அழகாக, ஆழமானதாக இருக்கவேண்டும். இந்த ச்லோகத்தில் சொல்லழகோடு பொருளழகும் சேர்ந்திருக்கிறது.

குறிப்பு: யார் சொன்னது, இத்தனை தமிழ் மொழி பற்றிய செய்திகளை? ஏதுனும் தமிழ் ஆர்வலர்களா? புரவலர்களா?

இல்லேவே இல்லை...

அத்வைதம் வளர்க்கும் காஞ்சி காம கோடி சங்கர பீடத்தின் சக்கரவர்த்தி, காவி வேந்தர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தான்!!!

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

Of the shaTpadI, the third SlOka is the most profound -

सत्यपि भेदापगमे नाथ तवाहं न मामकीनस्त्वम् ।
सामुद्रो हि तरंगः क्वचन समुद्रो न तारंगः ॥ ३ ॥

Oh! Protector! Even with the difference (between You and me) passing off, I become Yours but You do not become mine. Indeed (though there is no difference between the waves and the ocean) the wave belongs to the ocean but nowhere (never) does the ocean belong to the wave. (3)
(Meaning - Source - http://www.kamakoti.org/shlokas/kshlok15.htm)

This, I consider the pinnacle of advaita. Till there is even a iota of notion of I and me, there is no escape from surrender. This is the meaning of SaraNAgati - not a verbal expression, but surrender 'per-se'.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

VGV
Can you find for me a simple explanation of Advaita and VishiShtAdvaita.
I am getting no where reading Sankara and Ramanuja.
Incidentally has Kanchi PeriyavAL discussed it anywhere?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »


cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Thanks for the prompt response.
Let me study it carefully...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

Very illuminating analogy!
Acharya has the way of making the most complicated topic simple through lucid short explanations!
Thanks again..

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

புரியாத தத்துவத்தை எளிதில் விளங்க வைக்கும் படியான சுட்டியை அளித்தமைக்கு நன்றி.
தஞ்சாவூரான்
01 06 2014

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

ஊஞ்சல் ஆடுகிறான் என் ஐயன்
பொன் ஊஞ்சல் ஆடுகிறான்!
அன்பையும் அருளையும் கயிராக்கி
வேங்கடவன் என் உள்ளத்தில் ஊஞ்சல் ஆடுகிறான்!
இச்சையுடன் என் உள்ளம் புகுந்து
அருள் பிச்சை தந்து
ஊஞ்சல் ஆடுகிறான்!!
சந்த்ரசேகரன் ஊஞ்சல் ஆடுகிறான்!
நர்தனமாடி களைத்த என் ஐயன்
ஊஞ்சல் ஆடுகிறான்!
பல்லாண்டு பாடி துயில் எழுந்த
என் ஐயன் ஊஞ்சல் ஆடுகிறான்!
மலர் மேடையிலமர்ந்து
என் குருநாதன் ஊஞ்சல் ஆடுகிறான்!
மோகன ராக நாதம் தென்றலில் மிதந்து வர
மனம் நிறைந்தாடுகிறான்!
பள்ளி கொண்டவன் மன மகிழ ஆடுகிறான்!
மந்தகாச மதிமுகம் ஒளிவீசவே
லாலி... லாலி... என
தாளம் தப்பாது ஆடுகிறான்!
என் உள்ளத்தில் ஊஞ்சல் ஆடுகிறான்!
venkat k

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

: பெரியவா தர்சனம்

ஒருசமயம் குத்தாலத்திலிருந்து பந்தநல்லூர் வழியாக பெரியவாளுடைய மேனா வந்து கொண்டிருந்தது . இரவு பதினோரு மணி . ஆனாலும் பக்தர்கள் வழிநெடுக பெரியவாளை தர்சனம் பண்ண நின்றுகொண்டிருந்தார் . மேனாவின் கதவு மூடியிருந்தது . அதிக அளவில் பக்தர்கள் பெரியவாளை தரிசிக்க வேண்டியதால் மேனாவை நிறுத்தினார்கள் . பெரியவாளே கதவைத் திறப்பார் என்று காத்திருந்தனர் . ம்ஹூம் ! திறப்பதாக இல்லை ! சற்றுநேரம் பொறுத்து பாரிஷதர் ஒருவர் மெல்ல மேனாவின் கதவைத் திறந்தார் ........ உள்ளே , பெரியவாளைக் காணோம் ! பகீரென்றது ! டார்ச் லைட்டை அடித்து உள்ளே பார்த்தார் ...... மேனா காலி ! அவ்வளவுதான் ! பாரிஷதருக்கு கிலி பிடித்துக்கொண்டது ! மெல்ல மெல்ல பக்கத்திலிருந்தவரிடம் " பெரியவா உள்ளே இல்லே ! நன்னா பாத்துட்டேன் ..." என்றார் . " பெரியவா ஒனக்குத் தெரியாம வழில எங்கியாவது எறங்கி இருப்பா .. முன்னாடி கூட ஒருவாட்டி இப்டி பண்ணியிருக்கா " என்று சமாதானம் கூறினார் . என்ன பண்ணுவதென்றே புரியாத நிலையில் , வெளியே சொன்னால் வீண் கலவரமாகி விடுமே ! என்ற கவலை வேறு ! பயத்தோடு மேனாவின் கதவை மூடினார் . கொஞ்ச நேரத்தில் உள்ளேயிருந்து முனகல் சத்தம் கேட்டது ! பதைபதைக்க படாரென்று கதவை திறந்தார் பாரிஷதர் . உள்ளே பெரியவா படுத்துக் கொண்டிருப்பது கண்டு திகைத்துப் போனார் ! உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது ! பெரியவாளை கண்குளிர பக்தர்கள் தரிசித்ததும் , மேனா கிளம்பியது . மறுநாள் அந்த பாரிஷதர் மெல்ல பெரியவாளிடம் இரவு நடந்த சம்பவத்தைக் கூறினார் . பெரியவா சிரித்துக் கொண்டே , " ஓஹோ ! நீ உள்ள பாக்கறச்சே பெரியவா உள்ள இல்லியா ?..." என்று குழந்தை மாதிரி குதூகலித்துக் கேட்டார் . " ஆமா ..... பெரியவா . உயிரே போய்டுத்து !.." " சரி , சரி , இனிமே ...... இப்டி சட்டு .. ன்னு மேனாவோட கதவை தெறக்காதே ! இனிமே ..." நம : பார்வதி பதயே !... ன்னோ , இல்லாட்டா , " கோவிந்த நாம சங்கீர்த்தனம் "... ன்ன 19; சொல்லிட்டு அப்புறமா கதவைத் தெற !...." என்று கூறினார் . பகவான் நமக்குள்ளேதான் இருக்கிறான் என்றாலும் , பகவன்நாமா சொன்னால்தான் உள்ளே பகவான் இருப்பது தெரியும் !

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

"ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"

இன்று பெரியவா ஜெயந்தி 12-06-2014

(கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி}

சேலத்தில் இருக்கிறது மகா பெரியவா கிரஹம் (இல்லம்). இந்த கிரஹத்தின் மாடியில் வசித்து வருகிறார் ராஜகோபால் என்பவர்.
கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தையும் மகாபெரியவாளையும் சம்பந்தப்படுத்தி சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றைச் சொன்னார்.

ஒரு முறை தம்பதிசமேதராக காஞ்சி மகானின் தரிசனத்துக்கு சென்றிருந்தார் ராஜகோபால். அப்போது யதேச்சையாக பெரியவா ராஜகோபாலிடம் கேட்டாராம்: "ஏண்டா, நீ கோவிந்தபுரம் (காஞ்சி மடத்தின் 59-வது பீடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இங்குதான் ஸித்தியடைந்தார்!) போயிருக்கியோ?"

'இன்னும் போகலை' என்றார் ராஜகோபால்.

புன்சிரிப்பு தவழ மகான் சொன்னார் : "ஒரு தடவை அந்த ஊருக்குப் போயிட்டு வா… புரியும்!' 'அந்த ஊர் எங்கே இருக்கிறது?' என்றெல்லாம் கேட்காமல் நிறுத்திக் கொண்டார் அந்த பக்தர்.

இது நடந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் சேலத்தில் 'பெரியவா கிரஹம்' ஸ்தாபிதமானது. காஞ்சி சங்கரமடத்தில் வருடாவருடம் மகா பெரியவா ஜெயந்தி (வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம்) விமரிசையாக நடக்கும். அதேபோல் சேலம் பெரியவா கிரஹத்திலும் அதே தினம் பெரியவா ஜெயந்தி விழா நடக்கும். அன்றைய தினத்தில் சுமங்கலிகளுக்குப் புடவை தானம் அளிப்பது வழக்கம். இந்த புடவைகள் தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தாரால் தயார் செய்யப்படுபவை. அந்த வருடம் , ராஜகோபாலின் மனைவி வழி உறவினரான ஒரு டாக்டர் (அமெரிக்காவில் இருக்கிறார்). சேலைகளை வாங்கிக் கொடுக்கும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லி இருந்தார். எனவே ராஜகோபால் தன் மனைவியுடன் குத்தாலம் சென்று புடவைகளை ஆர்டர் கொடுத்த பின், மெயின் ரோடு வந்தார்.

சேலம் திரும்புவதற்கு எந்த பக்கம் பயணம் செய்வது என்கிற குழப்பத்துடன் கணவனும் மனைவியும் பிற்பகல் நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் விழித்தனர். வயிற்றுப் பசி வேறு ஒரு பக்கம் அவர்களை அழுத்தியது. அப்போது ஒரு கார் வேகமாக வந்து அவர்கள் முன் பிரேக் போட்டு நின்றது.

டிரைவர் அவர்களிடம் கேட்கிறார்: "ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"

'சட்' டென்று உறைத்தது ராஜகோபாலுக்கு. என்றோ ஒரு நாள் மகாபெரியவா இவரிடம் கேட்ட கேள்வியல்லவா இது? டிரைவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு "ஆமாம்" என்றார். ஒருவித பிரமிப்புடன்.

"வண்டியில் ஏறுங்கள். கொண்டுபோய் விடுகிறேன்" என்றார் டிரைவர்.

இருவரும் வண்டியில் ஏறினர். சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு கார் கோவிந்தபுரம் சாலையில் போய் நின்றது. "இங்கேருந்து கொஞ்ச தூரம் நடந்தா கோயில் வரும்! தரிசனம் பண்ணிட்டுக் கிளம்புங்க" என்று சொன்ன அந்த டிரைவர் ராஜகோபால் கொடுத்த வாடகைப் பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போய்விட்டார்.

கோவிந்தபுரத்தை அடைந்த தம்பதி கோயிலுக்குள் நுழையும் முன்னரே ஓர் அந்தணர் அவர்களைப் பார்த்து, "வாருங்கள் … வாருங்கள். உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். முதலில் சாப்பாடு. பிறகுதான் எல்லாம்!" என்று இருவரையும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவர் அழைத்துச் சென்ற இடம் போஜன சாலை! இரண்டே இலைகளைத் தவிர எஞ்சியிருந்த இலைகள் முன்னால் அடியவர்கள் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தனர்.

சாப்பிட்டு முடிந்த பின் கோயிலையும் அதிஷ்டானத்தையும் பார்த்துவிட்டுத்தான் தம்பதி சேலம் திரும்பினர்.

கார் சவாரி, சாப்பாடு, உபசரிப்பு எல்லாமே பெரியவா ஏற்பாடுதானோ? தன் பக்தர்களுக்கு எந்த குறையையும் அந்த மகான் வைத்ததே இல்லை!!

கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்! அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது!

தமிழ் எழுத்தாளர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும், அபாரமான நல் அனுபவங்களைப் பெற்றவருமான ரா.வேங்கடசாமி, காஞ்சி மகா ஸ்வாமிகளுடன் தங்களுக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை பக்தர்களிடம் கேட்டுத் தொகுத்து அதை 'காஞ்சி மகானின் கருணை நிழலில்…' என்ற தலைப்பில் சக்தி விகடனில் தொடராக எழுதியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது.
Courtesy : Sage of Kanchi

Image

பக்தி ஒன்றே போதுமே...
ஐயனின் மனதை கவர....
பக்தி ஒன்றே போதுமே....
அவனியில் அவன் தாளை அடைய...
பக்தி ஒன்றே போதுமே....
'கை கட்டி வாய் பொத்தி'
நித்தம் ஒருதரமேனும் சித்ததில் நிருத்தி
பக்தி செய்தால்....
தானே வந்து புகுவான்...மனதினில்...சுவாமிநாதன்
கட்டவிழ்பான் கந்தன்...
ஊழ்வினை கட்டை நீக்குவான்...தரணியில்...

துயரமதை துடைப்பான்...மகிழ்விப்பான்...அவன்
இன்னலை நீக்குவான்..
பின் நின்று காப்பான்…
தாயினும் சால சிறந்த தந்தையவன்!
சரணம் சரணம் என கூவினால்
முருவல் கூட்டி கை நீட்டி அணைப்பான்
அண்டியவரை ஆதரிக்கும் அண்ணல்!
அவனை அடைய பக்தி ஒன்றே போதுமே..

.
விநயமும் கவிநயமும் இழைந்து வரும்…
கவிதை புனையும் ஆற்றலை அளிப்பான்..
அளித்து மகிழ்வான்... இன்னிசை நாயகன்!
ஆண்டியாய் நின்றாலும்... குகன்..
வேண்டியதை தர தயங்கான்..

மர்மமாய் என் எண்ணத்தில்
புகுந்து அருமை பெருமை
தெரிந்திட செய்தான்!
எண்ணமும் காலமும் கடந்தவன்

காஞ்சி நாயகன்!ரூப மனோகரன்!
காஞ்சி விட்டலன்! புண்ய சுவரூபன்!
மயிலேரி விளையாடும் சுவாமிநாதன்!
தத்வமிதை அறியா அகதிகளாய் நிற்க இன்னமும் தகுமோ...!!
ஜய ஜய ஜெயந்தி...சங்கர ஜெயந்தி
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய்த்தான், அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும். காஞ்சி மகான் இந்த இடம் தான் என்று இல்லை, எங்கும் போகக் கூடியவராயிற்றே…

ஒரு சமயம் அங்குதான் பரமாச்சார்யார் தனது பரிவாரத்தோடு முகாமிட்டிருந்தார். படகில் போய் அவரைப் பார்த்துவிட்டு வர பக்தர்கள் தவறவே இல்லை. தெய்வத்தின் தரிசனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் போகலாமே — மனதில் மட்டும் பக்தி என்று ஒன்று இருந்தால்.

அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும் சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள். எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார்.

சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார் திருநாவுக்கரசு. எல்லாவற்றையும் கேட்ட பின், மகான், தங்கை மீனாளைப் பார்த்தார். பிறகு அவரது பார்வை அவரது குடும்பத்தார் பக்கமும் திரும்பியது. மகானின் கண்களின் ஒளி விசேஷமே எல்லா நோய்களையும் போக்க வல்லது அல்லவா ?

மகான் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு பேசினார் –

“அவளைத் தினமும் ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும். ” என்றார்.

“அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே” என்று மெதுவாக மகானிடம் திருநாவுக்கரசு சொன்னார். அதனாலென்ன ? தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு… இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே ! திருமுருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில் விழுந்தால் போதும்” என்று சொல்லி தன் கையை உயர்த்தி மீனாளுக்கு அருளாசி வழங்கினார்.

அவர்கள் எல்லாரும் வணங்கி, மகானிடம் விடை பெற்றுக் கொண்டு, திரும்ப முயன்றார்கள். சற்று தூரம் வந்தவுடன், மடத்தின் ஆட்கள் அவர்களை அழைத்தார்கள்.

“உங்கள் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பணும்னு பெரியவா உத்தரவு’ என்று சொன்னபோது திருநாவுக்கரசு வியந்துதான் போனார்.

அந்த மாதிரி ஒரு தீவில் எதுவுமே சாப்பிடக் கிடைக்காது. இவர்களும் ஊருக்குத் திரும்பி தான் சாப்பிட வேண்டும். இது அந்த மனித தெய்வத்துக்குத் தெரியாதா ? தன் பக்தர்களை எப்போது அவர் பட்டினியோடு அனுப்பியிருக்கிறார்? மகானின் கருணையை வியந்து வியந்து போற்றி விட்டு, திருநாவுக்கரசு தன் குடும்பத்துடன், வடை பாயசத்துடன் விருந்து சாப்பிட்டு விட்டு ஊர் திரும்பினார்.

மகான் சொன்னவாறே மீனாளிடம், ‘திருமுருகாற்றுப்படை‘ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். ஒரே மாதம்தான்… மீனாள் பூரண குணமடைந்தாள். மனக் கோளாறு முழுமையாக விலகி, இயல்பு நிலைக்கு அவள் வந்தது காஞ்சி மகானின் பேரருள்தான் என்கிறார், பதிப்பக ஜாம்பவான் திருநாவுக்கரசு. மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய்த்தான், அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும். காஞ்சி மகான் இந்த இடம் தான் என்று இல்லை, எங்கும் போகக் கூடியவராயிற்றே…

ஒரு சமயம் அங்குதான் பரமாச்சார்யார் தனது பரிவாரத்தோடு முகாமிட்டிருந்தார். படகில் போய் அவரைப் பார்த்துவிட்டு வர பக்தர்கள் தவறவே இல்லை. தெய்வத்தின் தரிசனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் போகலாமே — மனதில் மட்டும் பக்தி என்று ஒன்று இருந்தால்.

அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும் சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள். எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார்.

சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார் திருநாவுக்கரசு. எல்லாவற்றையும் கேட்ட பின், மகான், தங்கை மீனாளைப் பார்த்தார். பிறகு அவரது பார்வை அவரது குடும்பத்தார் பக்கமும் திரும்பியது. மகானின் கண்களின் ஒளி விசேஷமே எல்லா நோய்களையும் போக்க வல்லது அல்லவா ?

மகான் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு பேசினார் –

“அவளைத் தினமும் ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும். ” என்றார்.

“அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே” என்று மெதுவாக மகானிடம் திருநாவுக்கரசு சொன்னார். அதனாலென்ன ? தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு… இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே ! திருமுருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில் விழுந்தால் போதும்” என்று சொல்லி தன் கையை உயர்த்தி மீனாளுக்கு அருளாசி வழங்கினார்.

அவர்கள் எல்லாரும் வணங்கி, மகானிடம் விடை பெற்றுக் கொண்டு, திரும்ப முயன்றார்கள். சற்று தூரம் வந்தவுடன், மடத்தின் ஆட்கள் அவர்களை அழைத்தார்கள்.

“உங்கள் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பணும்னு பெரியவா உத்தரவு’ என்று சொன்னபோது திருநாவுக்கரசு வியந்துதான் போனார்.

அந்த மாதிரி ஒரு தீவில் எதுவுமே சாப்பிடக் கிடைக்காது. இவர்களும் ஊருக்குத் திரும்பி தான் சாப்பிட வேண்டும். இது அந்த மனித தெய்வத்துக்குத் தெரியாதா ? தன் பக்தர்களை எப்போது அவர் பட்டினியோடு அனுப்பியிருக்கிறார்? மகானின் கருணையை வியந்து வியந்து போற்றி விட்டு, திருநாவுக்கரசு தன் குடும்பத்துடன், வடை பாயசத்துடன் விருந்து சாப்பிட்டு விட்டு ஊர் திரும்பினார்.

மகான் சொன்னவாறே மீனாளிடம், ‘திருமுருகாற்றுப்படை‘ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். ஒரே மாதம்தான்… மீனாள் பூரண குணமடைந்தாள். மனக் கோளாறு முழுமையாக விலகி, இயல்பு நிலைக்கு அவள் வந்தது காஞ்சி மகானின் பேரருள்தான் என்கிறார், பதிப்பக ஜாம்பவான் திருநாவுக்கரசு. மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.

Courtesy BalaHanuman

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Sri Maha Periva Divya Darshan -Mahesh vinayakaram.

Listen here:

http://mfi.re/listen/m4m5z128ydi42zm/Sr ... akaram.mp3

பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது !

தென்னாடுடைய பெரியவா போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சர்வக்ஞா சர்வ வ்யாபி பெரியவா சரணம்

மாயப்பிறப்பறுக்கும் மஹாபெரியவா அடி போற்றி

மாயப்பிறப்பறுக்கும் மஹாபெரியவா அடி போற்றி

மாயப்பிறப்பறுக்கும் மஹாபெரியவா அடி போற்றி



பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது

பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது

பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது

பெரியவாளை பிரிந்து வர மனமும் மறுக்குது

பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



விஸ்வரூப தரிசனம் காண

பக்தர் விடியகாலை காத்திடும் போது

வாழ்த்தொலிகள் ஒலித்திடும் போது

மேனா விளக்கினிலே துயில் எழும் போது

பெரியவாளை பார்த்துக்கிட்டடே இருக்கத்தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



பஞ்சாங்கம் படித்திடும் போது

செவியில் பாங்காக கேட்டிடும் போது

பணிவோர்கள் யார் எனும் போது

யாதும் புரியார் போல் நடித்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத்தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



மங்கள நீராடிடும் போது

மெதுவாய் மூழ்கியே எழுந்திடும் போது

மேலாடை போர்த்திடும் போது

திருநீறு மேனியெல்லாம் பூசிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



அனுஷ்டானம் துவக்கிடும் போது

அழகாய் ஆசமனம் புரிந்திடும் போது

அதிகாலை ஒரு மணி நேர ஜபத்தில்

ஆழ்ந்தழகாய் அமர்ந்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



ஓர் மணி தான் நிறைவுறும் போது

மணியும் ஓசையுடன் ஒலித்திடும் போது

ஓர் இரு கண் திறந்திடும் போது

விந்தை யீதனையாம் வியந்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



ஜபம் முடிந்து நோக்கிடும் போது

கண்ணால் ஜயம் உனக்கு என்றிடும் போது

ஜகம் எல்லாம் மறந்திடும் போது

அந்த க்ஷண நேர பூரிப்பின் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



கை தட்டி அழைத்திடும் போது

பாலு ஸ்ரீகண்டன் உடன் வரும் போது

வேதபுரி விரைந்திடும் போது

மௌலி குமரேசன் குழைந்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



தண்டமதை ஏந்திடும் போது

அழகாய் தளிர்நடை தான் போட்டிடும் போது

தொண்டர் படை உடன் வரும் போது

நாமும் திருவீதி வலம் வரும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



தரிசனம் தான் தர வரும் போது

ஒவ்வோர் இடமாக நகர்ந்திடும் போது

தனியாக நடந்திடும் போது

முன்னால் படி என்று ஒளி வரும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



மேனாவில் அமர்ந்திடும் போது

பின்னர் மரத்தடியில் இருந்திடும் போது

மேடை மேல் ஏறிடும் போது

வந்தோர் மனம் எல்லாம் களித்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



மலராகக் குவிந்திடும் போது

பக்தர் கரம் சேர குவித்திடும் போது

மனமார ஏற்றிடும் போது

மலரை சிரம் சேர போட்டிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



பூவினந்தான் சேர்ந்திடும் போது

கொன்றை சரமாகத் தான் வரும் போது

தாமரையும் உடன் வரும் போது

சிரம் மேல் சூட்டியுடன் சிரித்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



மல்லிகைப் பூ மலர் வரும் போது

அல்லி மூவகையும் மலர்ந்திடும் போது

மெய்யன்பர் கொணர்ந்திடும் போது

ஏற்று மணம் எங்கும் பரப்பிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



பழமாக குவித்திடும் போது

அன்பர் தொழுதேற்ற தினம் வரும்போது

பழுதில்லா மனம் எனும்போது

பார்த்து அழகாக கரம் தொழும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



வந்தோரை விளக்கிடும்போது

அவரின் தந்தை யார் என்றிடும் போது

சொந்தம் கூற் எனும் போது

அன்னார் முந்தை எல்லாம் தான் சொல்லும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



மானசீக பூஜையின் போது

கரத்தால் வந்தனைகள் புரிந்திடும் போது

உபசாரம் பல செய்யும் போது

மலர்கள் திருக்கரத்தால் கொட்டிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கரா



பத்திரிக்கை படித்திடும் போது

மூக்குக் கண்ணாடி அணிந்திடும் போது

நான்கைந்து மாற்றிடும் போது

கூடைக்குள் எடுத்து வைத்திடும்போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



லென்ஸ் எடுத்து படித்திடும் போது

கையால் டார்ச் அடித்து படித்திடும் போது

புத்தகங்கள் படித்திடும் போது

கீழேவைக்காமல் முடித்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



பிரசாதம் பல வரும் போது

திருநீற் குங்குமங்கள் இட்டிடும் போது

தேங்காயை தொட்டிடும் போது

கொண்டு வந்தோர்க்கே திருப்பிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



தீர்த்தங்கள் வந்திடும் போது

ஹோமம் செய்வோர்கள் கொணர்ந்திடும் போது

ரட்சைகள் உடன் வரும் போது

நெற்றித்திலகம் என தரித்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



தஞ்சமென வந்திடும் போது

ஏழை திருமணங்கள் என வரும் போது

அஞ்சேல் என அருளிடும் போது

வாரி தங்கம் என வழங்கிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



அருள் எனக்கு என்றிடும் போது

கோவில் குடமுழுக்கு என வரும்போது

அருள் மழையாய் பொழிந்திடும்போது

பூர்ணபலம் கொடுத்து மகிழ்ந்திடும்போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



புறங்கையை தட்டிடும் போது

அழகாய் ஒய்யார நடையிடும் போது

வேகமுடன் நடந்திடும் போது

சீடர் ஓடியுடன் வழி செய்யும்போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



பாலகுரு படித்திடும் போது

அங்கே பாஷ்ய பாடம் நடந்திடும் போது

பெருங்குருவாய் அமர்ந்திடும் போது

பரிவாய் தீஷண்யம் வீற்றிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



சர்ச்சைகள் நடந்திடும்போது

தானும் சந்தேகம் கேட்டிடும் போது

விற்பன்னர் விளக்கிடும் போது

தெளிவாய் விளக்கங்கள் தான் தரும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

வலக்கரத்தால் அருளிடும் போது

இதமாய் இடக்கரத்தால் அருளிடும் போது

இரு கரத்தால் அருளிடும் போது

மேலே உயர்க்கரத்தால் அருளிடும்போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



விழியிரண்டால் நோக்கிடும் போது

கனிவாய் மொழி சொல்லும் போல் நோக்கிடும் போது

கருவிழியால் நோக்கிடும் போது

கருணை மொழித் தாய்போல் நோக்கிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



அருள்நோக்காய் நோக்கிடும் போது

மனதில் இருள்நீக்க நோக்கிடும் போது

களி நோக்காய் நோக்கிடும் போது

ஞான ஒளிநோக்காய் நோகிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



மெதுவாக நடந்திடும் போது

கமல பதமலரை கண்டிடும் போது

பதமாக நடையிடும் போது

மனதும் இதமாக சுகம் பெரும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



அபிஷேகம் நிறைவுறும் போது

பூஜை ஹாரத்தி நடந்திடும் போது

அவசரமாய் விரைந்திடும் போது

சந்திர மௌலீஸ்வர் வலம் வரும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



குருவணக்கம் செய்ய சொல்லும் போது

ஆதி குருபீடம் பணி செய்யும் போது

என் முறை தான் வணங்கிடும் போது

தோடகாஷ்டகம் தான் முடித்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



காய்கறிகள் குவித்திடும் போது

பிக்ஷாவந்தனத்தார் கொணர்ந்திடும் போது

ஒவ்வொன்றாய் ஆய்ந்திடும் போது

அவற்றை தனித்தனியாய் வை எனும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



அரிசி எங்கே என்றிடும் போது

பருப்பு வகைகள் என்றிடும் போது

வெல்லம் எங்கே என்றிடும் போது

தரமாய் வகைபிரித்து நகைத்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



வாழைக்காய் வைத்திடும் போது

அவரை வெண்டைக்காய் உடன் வரும் போது

மென்விரலால் அள்ளிடும் போது

வந்தோர் எண்ணமெல்லாம் குளிர்ந்த்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



பழவகைகள் பார்த்திடும் போது

கீரை பசுக்களுக்கு என வரும் போது

வேறு வகை கொண்டிடும் போது

தானே பசுக்களுக்கு ஊட்டிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



வேழம் தான் முன்வரும் போது

கையால் வாழைக்கனி கொடுத்திடும் போது

உண்டாயா என்றிடும் போது

யானை கொண்டாட்டம் கொண்டிடும் போது

பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



மனை போட்டு அமர்ந்திடும் போது

முறையாய் மாத்யானியம் புரிந்திடும் போது

மென்கரத்தால் ஜபித்திடும் போது

இமைகள் மூடித் தவம் தான் செய்யும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



காட்சிக்கள் பல தரும் போது

வந்தோர் யாவர்க்கும் விடை தரும்போது

பிஷைக்கு இலை கொளும்போது

தானும் பிஷைக்கு திரும்பிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



பசி சேர்த்து வந்திடும் போது

கயிற்றுக் கட்டில் மேல் அமர்ந்திடும்போது

கற்கண்டை மென்றிடும் போது

ஏலம் லவங்கம் தான் சுவைத்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



காத்திருப்போர் நிறைந்திடும்போது

தானும் காத்திருந்தே அகன்றிடும் போது

குறை சொல்வோர் கேட்டிடும் போது

மேலும் கருணை கொண்டு அருளிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



மதியத்தில் காத்திடும் போது

அயலும் நேரத்தும் அருளிடும் போது

மனமார சிரித்திடும் போது

வந்தோர் மகிழ்வோடு விடை பெறும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



மாலைத்தான் வந்திடும் போது

மீண்டும் மெய்யன்பர் சேர்ந்திடும் போது

மெதுவாக வெளிவரும் போது

மாலை மதியம் போல் களி தரும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



திருநீறு அணிந்திடும் போது

மாலை அனுஷ்டானம் புரிந்திடும் போது

முக்காலம் முடிந்திடும் போது

இதையே எக்காலம் புரிந்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



பிரதோஷ பூஜையின் போது

சிரஸில் ருத்ராட்சம் தரித்திடும் போது

மார்பெங்கும் அணிந்திடும் போது

மாலை மலை போல மிளிர்ந்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



இரவென்னும் வேளையின் போது

பக்தர் நிறைகின்ற நேரத்தின் போது

இரக்கம் தான் மேலிடும் போது

இதையாய் எழுந்திட்டே அருள் செய்யும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



ஓய்வுக்கு அமர்ந்திடும் போது

கயிற்றுக் கட்டில் மேல் ஓய்ந்திடும் போது

ஓரிருபேர் வந்திடும் போது

அவரின் குசலம் தான் கேட்டிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



விஸ்ராந்தி பொழுதெனும் போது

தொண்டர் விநயத்தோடு இயம்பிடும் போது

குழந்தை போல் கேட்டிடும் போது

அவரின் வேண்டலுக்கு இணங்கிடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர சங்கர ஜய ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா



மேனாவுள் அமர்ந்திடும்போது

மீண்டும் ஓர் முறை தான் நோக்கிடும் போது



ஓர் கதவைமூடிடும் போது

திறந்த ஓர் கதவால் பார்த்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



யாரும் தான் இல்லை எனும் போது

மேனா கதவைத்தான் முடிடும் போது

துயில் கொண்டார் இவர் எனும் போது

நாமும் தாலாட்டு இசைத்திடும் போது

பெரியவாளை பார்த்துகிட்டே இருக்கத் தோணுது



ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா



ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா

ஹர ஹர ஹர சங்கரா ஜய ஜய ஜய சங்கரா

ஹர ஹர ஹர சங்கர ஜய ஜய ஜய சங்கர



ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

சம்போ சங்கர சாம்பசதாசிவ

பிரதோஷ சங்கர பிரத்யச்ய சங்கர

ஓரிக்கை சங்கர ஓங்கார சங்கர

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

திராவிட சிசு யார்?? செளந்தர்ய லஹரி
(நெட்டில் படித்த ஒரு ஸ்வாரஸ்ய கட்டுரை)http://sivamgss.blogspot.in/2011/09/1.html
திராவிடச் சிசு குறித்து எழுத வேண்டுமெனில் முதலில் ஆசாரியர் காலம் கி.மு. என்று நாம் புரிந்து கொண்டால் தான் சரியாக இருக்கும். மேலும் ஆசாரியர் தமிழ் பேசும் பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும் தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் எடுத்துக் காட்டியுள்ளார். அனைவரும் நினைக்கும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியவர் அபிநவ சங்கரர். இவருக்கும் ஆதிசங்கரருக்கும் இருந்த நிறைய ஒற்றுமைகளால் ஏற்பட்ட குழப்பம் என்பதையும் அறிய முடியும் அனைவரும் நினைப்பது போல் சங்கரர் காலம் கி.பி. இல்லை, கி.மு. தான் இதை நம் பரமாசாரியாள் அவர்கள் தெளிவாக்கி இருக்கிறார்.

தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதியில் சங்கர சரிதம் என்னும் தலைப்பின் கீழ் வரும் அத்தியாயங்களில் ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-ல் இருந்து கி.மு 477 வரையானது என்பதைத் தெள்ளத் தெளிவாய்க் கூறி உள்ளார். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 38-வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீஅபிநவ சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பெரும்பாலும் ஆதிசங்கரரை ஒத்திருந்ததால் அநேகமான ஆய்வாளர்கள் இவர் தான் ஆதிசங்கரர் எனத் தவறாகக் குறிப்பிடுகின்றனர். ஆகவே படிக்கும் நேயர்கள் ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-கி.மு 477 என்பதை நினைவில் கொண்டு படிக்குமாறு வேண்டுகிறேன்.

இது குறித்து இங்கே சொல்லப் போவதில்லை; திராவிட சிசு எனத் தன்னைத் தானே ஆசாரியாள் கூறிக்கொண்டதை மட்டும் பார்க்கப் போகிறோம். ஜகத்குருவான சங்கராசாரியாரின் காலம் எப்போது என வரையறுக்கப் படாத காலத்திலே தோன்றினார் என்றே சொல்லப் படுகின்றது. அப்போது நம் தென் தமிழ்நாடு பூராவும் தமிழே பேசப் பட்டிருக்கின்றது. அதனாலேயே இவர் “தமிழ் சங்கரன்” எனப் பாடப் பட்டிருக்கின்றார். ஆசாரியாள் பேசியதும் அவருடைய தாய்மொழியும் தமிழே. சங்கரர் பிறந்த கதை அனைவரும் அறியலாம்.சிவகுருநாதருக்கும் ஆர்யாம்பாளுக்கும் திருச்சூர் வடக்கு நாதர் அருளில் தோன்றிய சங்கரர் குழந்தையாக இருந்த போது ஒரு நாள் நடந்தது இது.

ஒருநாள் சிவகுருநாதன் அவர்களுக்கு அருகே இருக்கும் மாணிக்கமங்கலம் என்னும் ஊரில் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தவேண்டிய வேலை இருந்தது. ஆர்யாம்பாள் அக்கால வழக்கப்படி வீட்டுக்குள் வரமுடியாத மாதாந்திரத் தொல்லையில் இருந்தாள். ஆகையால் அவள் இல்லத்தின் கொல்லைப் புறத்திலே இருந்தாள். குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்ட படியால் சிவகுருநாதர் ஒரு கிண்ணம் நிறையப் பாலைக் குழந்தைக்கு எனக் குழந்தையின் அருகேயே வைத்திருந்தார். குழந்தை தன் மழலையிலே பாலைப் பின்னர் அருந்துவதாய்ச் சொல்ல அவரும் கோயிலுக்குச் சென்றுவிட்டார். குழந்தை விளையாட்டு மும்முரத்தில் பாலை மறக்க தாய் மறப்பாளா? ஆர்யாம்பாள் கொல்லைப் புறத்தில் இருந்து, “சங்கரா, பாலைக்குடித்தாயா அப்பா?” என ஆதூரம் மிகக் கேட்டாள். குழந்தைக்கும் அப்போதுதான் பாலின் நினைவே வந்தது.

கிண்ணத்தையே பார்த்தது குழந்தை. பால் தளும்பிற்று. கிண்ணத்தைக் கையில் எடுத்தது. சாப்பிடப் போன குழந்தைக்குத் தன் தந்தை எது சாப்பிட்டாலும் உம்மாச்சிக்குக் காட்டுவாரே என நினைப்பு வந்தது. உடனேயே தத்தக்கா பித்தக்கா எனத் தளிர் நடை நடந்து பூஜை அறைக்குச் சென்றது குழந்தை. பால் கிண்ணத்தைக் கீழே வைத்தது. அதன் எதிரே அன்னபூரணியின் உருவப் படம் மாட்டப் பட்டிருந்தது. அன்னபூரணியையே ஒரு கணம் உற்றுப் பார்த்தது. யார் கண்டார்கள்? அன்றொரு நாள் தான் பிரம்ம கபாலத்தை ஏந்தி பிக்ஷை எடுத்து வந்த நாட்கள் ஒன்றிலே சாட்சாத் அன்னபூரணியின் கை அன்னத்தால் தன் பிக்ஷைப் பாத்திரம் நிரம்பிய நினைவு மனதில் மோதிற்றோ?? குழந்தை தன்னிரு கண்களையும் மூடிக்கொண்டது. தகப்பன் அப்படித் தான் செய்வார், பார்த்திருக்கிறது. ஏதோ முணுமுணுப்பாரே? ம்ம்ம்?? சரி, நாம் இப்படிச் சொல்வோமே. “அம்மா, அன்னபூரணி, இந்தப் பாலை எடுத்துக்கோயேன்.” குழந்தை வேண்டியது. அப்பா செய்யறாப்போலே குஞ்சுக்கைகளால் நிவேதனமும் செய்தது. அடுத்த கணம் கிண்ணத்தில் இருந்த பாலைக் காணோம். குழந்தை திகைத்துப் போனது. இது என்ன? அப்பா நிவேதனம் செய்வார். அப்புறம் நாம் தானே சாப்பிடுவோம்? ஆனால் இப்போ?? பாலையே காணோமே? வெறும் கிண்ணமல்லவா இருக்கு??

கிண்ணத்தையும் பார்த்துவிட்டு அன்னபூரணியையும் பார்த்தது குழந்தை. பசி வேறு ஜாஸ்தியாகிவிட்டது. என்ன செய்யறதுனு புரியாமல் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, “அம்மாஆஆஆஆஆ, பால்” என்று அழ ஆரம்பித்தது. தன் பதியின் அவதாரமான இந்த ஞானக்குழந்தையோடு சற்று விளையாடுவோம் என எண்ணின அன்னபூரணி இப்போது பதறினாள். ஆஹா, குழந்தை அழுகிறானே? பசி பொறுக்க மாட்டானே? உடனே கிண்ணத்தில் பால் நிரம்பியது. குழந்தை சிரித்தது. (இதைப் பின்னர் செளந்தர்ய லஹரியில் குறிப்பிடப் போகிறார் சங்கரர். அதைப் பின்னால் பார்ப்போம்.) உமை அளித்த அந்த ஞானப்பாலைக் குழந்தை குடித்தது. பின்னால் வரப் போகும் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகளே இவை எல்லாமே.

அம்பாளைக் குறித்த கேசாதிபாத வர்ணனையில் சங்கரர் அம்பாளின் ஸ்தனங்களைக் குறித்தும் பாடி இருக்கிறார். அம்பாளின் மார்பகத்தில் ஊறும் ஞானப்பாலைக் குடித்தே தேவர்கள் நித்ய யெளவனமாய் இருக்கின்றனர் எனவும் அவர்கள் குமாரர்களையோ நித்ய இளைஞர்களாக என்றும் இளையோயாய் மாற்றிவிட்டது எனவும் கூறுகிறார். இதன் உள்ளார்ந்த கருத்து அம்பாளின் ஞானப்பாலை உண்டதால் காமமே என்னவெனத் தெரியாத ஞானமூர்த்திகளாக இருக்கின்றனர் என்று கூறுகிறார். இங்கே ஞானம் என்பதை பரப்ரும்மத்தை அறிவது என்ற கருத்தில் ஆசாரியார் கூறி இருக்கலாம். அம்பாளின் ஸ்தனங்களிலிருந்து ஞானம், கருணை, ஸெளந்தரியம், போன்ற அனைத்தும் அவள் இருதயத்திலிருந்து ஊறிப் பாலாகப் பெருகித் தன்னையும் அவளின் குழந்தையாக ஆக்கியது என்கிறார். இதை உண்டதாலேயே ஸாக்ஷாத் சரஸ்வதியின் சாரம் தமக்குள்ளே ஊறிக் கவிதை மழை பொழிய முடிந்தது எனவும் கூறுகிறார். இது சங்கரரே எழுதியதாய்ச் சொல்லப்படும் ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களில் ஒன்று.

முதல் நாற்பத்தி ஒன்று ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி எனப்படும். அடுத்த ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்கள் ஸெளந்தர்ய லஹரி எனப்படும். இவை அனைத்தும் சேர்ந்தே ஸெளந்தர்ய லஹரி என்று அழைக்கப்படுகிறது. அதன் எழுபத்தி ஐந்தாம் ஸ்லோகத்தில் இந்தக் குறிப்பிட த்ரவிட சிசு என்னும் வார்த்தை காணப்படும்.

தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ:
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானா-மஜனீ கமனீய: கவயிதா

இங்கே ஞானசம்பந்தரை ஆதிசங்கரர் குறிப்பிடக் காரணம் ஏதும் இருப்பதாய்த் தோன்றவில்லை. மேலும் மலையாள மொழியின் வரலாறு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதே. அதன் முன்னர் சேர, சோழ, பாண்டியர் காலங்களில் சேர நாட்டிலும் தமிழே மொழியாக இருந்தது என்பதையும் அறிவோம். ஆதிசங்கரரும் அப்படியான தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவரே என்பதால் தம்மைத் தானே இங்கே மூன்றாம் மனிதர் போல் பாவித்துக் குறிப்பிட்டிருக்கிறார். அம்பாளின் ஞானப்பாலைக் குடித்து சரஸ்வதியின் அருட்கடாக்ஷத்தைப் பெற்றதால் தம் வாக்வன்மை அதிகரித்துக் கவிஞர்களுக்கெல்லாம் கவியாகத் தம்மை ஆக்கிவிட்டது. இதுவும் அவள் அனுகிரஹமே என்கிறார் ஆசாரியார்.

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

Kanchi Paramacharya's discourse on the SlOka and explanation on the subject is given herein -
http://www.advaitin.net/Articles/Soundaryalahari2.pdf

"Now who was this ‘dramila-shishu’? The immediate feeling is that it should be the well-known Sambandar, also known as ‘JnAnasambandar ’ of the Tamil region, who flourished in the seventh century A.D. But the Acharya’s time was in the sixth-fifth century B.C., approximately.

The story about the child JnAna-sambandar is that the Mother Goddess fed her breast milk to the three-year old child and the child burst into ecstatic singing glorifying Lord Shiva and Parvati. Commentators on Soundaryalahari opine that a similar incident did happen in the case of the Acharya himself when he was a child and therefore conclude that the ‘dramila-shishu’ refers to the Acharya himself! Instead of saying ‘I have that experience’ he is saying it in third person, in all modesty. But even here one can ask: How come the Acharya talks about his own poetic talent in such superlative terms? Is this in keeping with his well-known modesty? Well, the point to note here is that the matter is not about poetic talent. The significant point is the glory of the milk of wisdom that flows from ambaal. Actually the Acharya has talked about himself as ‘the farthest of the lowly’ (daviyAmsaM dInaM) in shloka #66. And the significance now is that even such a ‘lowly’ person has reached poetic heights of excellence by the divine milk of wisdom.

On the correct interpretation of ‘dramila-shishu’ there have been controversies from very early times. Several commentators have debated this issue. No definite conclusion has been accepted by all. But let us not stay on that issue. What we need is not the correct meaning of dramila-shishu’ but the truth that we should seek that wisdom that flows incessantly like milk from ambaal’s grace! "

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

நீ கும்பிடும் தெய்வம் உன்னை ஒரு நாளும் கைவிடாது!"

ஒரு முறை எல்.சுப்ரமண்யம் [வயலின்] ஜாகிர் ஹுஸேன் [தபலா]
இவர்களுடன் கச்சேரிக்கு ஏதென்ஸ் செல்ல ஏற்பாடாகியிருந்தது.
விநாயாகராமைத் தவிர மற்ற இருவரும் முதலில் லண்டன் சென்று
ஒரு கச்சேரியை முடித்துக் கொண்டு ஏதென்ஸ் வருவதாகவும்,
விநாயகராம் நேரே இந்தியாவிலிருந்து ஏதென்ஸ் செல்வதென்றும்
ஏற்பாடு. அதன்படி விநாயகராம் முதலில் ஏதென்ஸ் சென்றார்.

அறையில் பொழுது போகாமல்,கடத்தையாவது வாசிக்கலாமென்று
பெட்டியைத் திறந்தால் பேரதிர்ச்சி! உள்ளே கடம் தூள் தூளாகிக்
கிடந்தது. வாய் விட்டு அலறிவிட்டார். "வேறு கடம் இங்இங்கே
கிடைக்காதே?" என்று நினைத்து கதிகலங்கிப் போனார்.கையும்
ஓடவில்லை...காலும் ஓடவில்லை ! சுதாகரித்துக்கொண்டு
இந்தியாவில் இருந்த மனைவிக்கு போன் செய்தார். "கடம்
உடைந்துவிட்டது: நான் இந்தியா புறப்பட்டு வந்துவிடுகிறேன்.
வேறு வழி தெரியவில்லை" என்றார் அவர் மனைவியோ",நீங்கள்
அதைரியப்படாதீர்கள்; பெரியவா நம்மைக் காப்பாற்றுவார்!"
என்று தைரியம் சொன்னாள். ஆனால் விநாயகராம்"அது
சாத்தியமே இல்லை" என்றார். "ஏதாவது அதிசயம் நடக்கும்
பாருங்களேன்! பெரியவா மேலே நம்பிக்கையுடன் விடாமல்
பிரார்த்தனை செய்யுங்கள்.." என்று மறுபடியும் சமாதானம்
செய்தாள் மனைவி. "நீ தெரியாமல் பேசுகிறாய். இந்த இடத்தில்
பானை கூடக் கிடைக்காது. கச்சேரி எப்படிப் பண்ண முடியும்?
நான் வந்து விடுகிறேன்..." என்று அவரும் பிடிவாதம் செய்கிறார்.
அதற்கு மேல், அந்த அம்மாள், "ஒரே நாள் பொறுத்திருங்கள்.
நான் இப்பவே காஞ்சிபுரம் சென்று பெரியவாளிடம் நின்று
அழுகிறேன். எல்லாம் சரியாகி விடுமென்று நம்புகிறேன்......
நாளைக்கு போன் பண்ணுங்கள்!" என்று சொல்லிவிட்டு,
அவ்வாறே பீரியவாளிடம் போய் முறையிடுகிறார்
வருத்தத்துடன்.

"உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்..கைவிட்டு விடாதீர்கள்!"
என்று சொல்லிவிட்டுத் திரும்ப எத்தனிக்கையில், பெரியவா
ஒரு மட்டைத் தேங்காயை அவரை நோக்கி உருட்டிவிட்டார்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை.வீடு திரும்பினாள்.

கணவரிடமிருந்து மறுபடியும் போன் வருமே!என்ன சொல்வது
என்று குழம்பினாள் வித்வானோ அதற்குள் லண்டனுக்கு போன்
செய்து, நிலைமையை எடுத்துச் சொல்லி, "நான் ஊர் திரும்பப்
போகிறேன்!" என்று சொன்னார். "அதை மட்டும் செய்துவிடாதீர்கள்.
கச்சேரி நடக்கவில்லையென்றால் மீண்டும் ஏதென்ஸ் பக்கம் வர
முடியாது. ஏதாவது வாத்தியத்தை வாசியுங்கள்,பயப்படாதீர்கள்!"
என்று எச்சரித்தார்கள். அதற்கு மேல் ஊருக்கும் திரும்ப முடியாமல்
பெரியவா படத்தை எடுத்து வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றிப்
பிரார்த்தனை பண்ணிக் கொண்டே இருந்தார் விநாயகராம்.
அடுத்த நாள் லண்டன் சென்றிருந்தவர்கள் ஏதென்ஸ் திரும்பினர்.

அவர்கள் கையில் ஒரு பெரிய மூட்டை இருந்தது. அது என்ன
என்று ஆச்சரியத்துடன் பார்த்திருந்த விநாயகராமுக்கு தன்
கண்களையே நம்ப முடியவில்லை. மூட்டையைப் பிரித்தால்
அதற்குள் ஒரு கடம் இருந்தது!. அமிர்தமே கிடைத்ததுபோல்
துள்ளிக் குதித்தார் வித்வான். எப்படி இது சாத்தியமாயிற்று.?

ஒரு ஆங்கிலேயர் விநாயகராமுக்கு எழுதிக் கொடுத்திருந்த
கடிதத்தை நீட்டி, "இதைப் படித்துப் பார்!" என்றார் சுப்ரமணியம்.

"நீ கும்பிடும் தெய்வம் உன்னை ஒரு நாளும் கை விடாது!" என்ற
வரிகள் கடிதத்தின் கடைசியில் எழுதப்பட்டிருப்பது அவரது
கண்களில் பட்டன. அதை மீண்டும் படித்தார். மறுபடியும்
அழுதார்.

"நாம் கும்பிடும் தெய்வம், பெரியவா மீது எனக்கே கொஞ்சம்
அவனம்பிக்கை இருந்தபோது, எவனோ ஒருவன் எவ்வளவு
நம்பிக்கையுடன் பேசுகிறான்!" என்று வியந்தார்.

நடந்தது இது தான்.
கடம் இல்லாமல் விநாயகராம் தவித்ததைப் பார்த்த மற்ற
வித்வான்கள் லண்டனில் பலரிடமும்,"கடம் கிடைக்குமா?"
என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது ஒருவர் குறிப்பிட்ட
ஓர் ஆங்கிலேயர் இருக்குமிடம் சொல்லி...அவரிடம்
சில இந்திய இசைக் கருவிகள் இருக்கின்றன.போய்ப்
பாருங்கள் என்று சொல்லவே,அங்கே போயிருக்கிறார்கள்.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவர்கள் கண்ணில் பட்ட கடம்
தெய்வமே தரிசனம் கொடுப்பது போல் இருந்தது.உடனே,அதை
வைத்திருந்தவரிடம் நிலைமையை விளக்கி,"தயவு செய்து
இதை கொடுத்து உதவ வேண்டும்!" என்று வேண்டினர்.
கேட்ட விலையைக் கொடுப்பதாகவும் சொன்னார்கள். அந்த
ஆங்கிலேயரோ, "நான் ஒருவருக்கும் கொடுக்க மாட்டேன்.
இதை ஒருவர் அவரது ஞாபகார்த்தமாக எனக்கு அன்பளீப்பாகக்
கொடுத்தார். அவரிடம் நான், "இதை எக்காரணம் கொண்டும்
ஒருவருக்கும் தரமாட்டேன்: பத்திரமாகப் பாதுகாப்பேன்!"
என்று வாக்குக் கொடுத்திருக்கிறேன், போய் வாருங்கள்!"
என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

"யாரப்பா அவர்?" என்று ஆவலுடன் கேட்க,"இந்தியாவிலிருந்து
விநாயகராம்.." என்று வாக்கியத்தை முடிக்கவில்லை.
"ஐயா! அதே விநாயகராம்தான் இப்போது ஏதென்ஸில்
எங்களுடன் கச்சேரி செய்ய ஒரு கடம் இல்லாமல்
தவித்துக் கொண்டிருக்கிறார்.அவருக்கு உங்கள் உதவி
இப்போது மிக மிக முக்கியம்!" என்று விளக்கினார்கள்.
உடனே கடத்தையும் கூடவே விநாயகராமுக்கு ஒரு
கடிதத்தையும் ஆங்கிலேயர் அவர்களிடம் கொடுத்துவிட்டார்.
"உங்களுக்கு வேண்டும் என்று தெரிந்ததால் நான் கடத்தை
கொடுக்காமல் இருக்க முடியவில்லை!" என்று அதில்
அடிக்கோடு இட்டிருந்தார்.

எம்.எஸ்.அம்மாவுடன் 18 வருடங்களுக்கு முன் விநாயகராம்
லண்டனில் கச்சேரி செய்யப் போனபோது அந்த ஆங்கிலேயருக்கு
அன்பளிப்பாகக் கொடுத்த கடம் இப்போது தக்க சமயத்தில்
பெரியவா அனுக்கிரகமாக அவர் கைக்கு வந்தது. எத்தனையோ
ஆண்டுகளுக்கு முன்பே தன் பக்தன், இப்படி ஒரு நாள் உடைந்த
கடத்தைப் பார்த்து மனமுடைந்து போய்விடுவாரென்று
அதற்குரிய ஏற்பாட்டை பெரியவா செய்து வைத்திருந்தாரா!

நமது ஆச்சரியம் அடங்குவதில்லை. இவை நமக்குப்
புரியாத அமானுஷ்யமான தேவரகசியங்கள்

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!!!!.

arasi
Posts: 16800
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kanchi Maha Periyava

Post by arasi »

ஆம், ஆச்சரியங்களுக்கோர் எல்லையில்லை, அவரைப் பொருத்த வரையில்...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Periava!!

I am scared about life and not death…..
I feel lonely…… alone with a faint heart…
In the midst of all!
There is stillness around me…..
Only a lone sleek bird
fluttering its wings…far above near the blue skies
There is none to smile…
Unwanted, unloved, uncared for, and forgotten!!
The cries of despair and the
Whispers of the heart..
Mowing through the misery……
With a pensive mood and spirits dead!
Feel wandering and lost my way out…

Periava Charanam……
venkat k

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

பெரியவாளை பார்ப்பதற்கு நிபந்தனை விதித்த வைஷ்ணவர்:


அபாரமான சாஸ்த்ர புலமை பெற்ற ஒரு வீர சூர வைஷ்ணவர் இருந்த ஊருக்கு
பெரியவா சென்றிருந்தார். ஊரே திரண்டு வந்து பெரியவாளை தர்சனம்
பண்ணியபோதும் அந்த வைஷ்ணவர் பெரியவா இருந்த திசைப்பக்கம் கூட வரவில்லை.

அவரைப் பொறுத்தவரை "சித்தாந்தத்தில் அத்வைதத்தையும், தோற்றத்தில் சைவக்
கோலத்தையும் கொண்ட ஏகதண்ட சன்யாசியை பார்ப்பதே தோஷம்". பெரியவாளின்
கருணை, சர்வஞ்யத்வம், பாண்டித்யம் பற்றி அத்தனை பேருமே ஏகோபித்த
சந்தோஷமும், பாராட்டுமே கொண்டதை அந்த வைஷ்ணவர் கண்டார்.

"கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்ற வசனப்படி, அந்த வைஷ்ணவரை அழைத்து
வரச்சொல்லி மடத்திலிருந்து ஒரு வித்வானை முறைப்படி அனுப்பினார் பெரியவா.
"வர மாட்டேன்" என்று சொல்ல முடியாமல் பெரியவாளுடைய அன்பான அழைப்பு
தடுத்தது.

"கூப்ட்டு அனுப்பிச்சிருக்கார்.....மாட்டேன்னு சொல்லப்டாதுதான்! ஆனா,
நேக்குன்னு செல ப்ரதிக்ஞை இருக்கு. அதை மீறரதுக்கில்லே; அது
ஒங்களுக்கும், ஒங்க பெரியவாளுக்கும் சம்மதப்படாம இருக்கலாம்....அதான்
யோஜனையா இருக்கு"....

"என்ன ப்ரதிக்ஞை..ன்னு சொன்னேள்..னா பெரியவாட்ட சொல்றோம்"

"மொதல்ல, பெரியவாளை பாத்தா, நான் நமஸ்காரம் பண்ணமாட்டேன்;
ரெண்டாவது, அவா எதாவுது ப்ரஸாதம் குடுத்தா அதை ஏத்துக்க மாட்டேன்;
மூணாவுது வித்வத் சம்பாவனை ன்னு சொல்லிட்டு, எதாவுது சால்வை அது இதுன்னு
பண்ணினா, அதை அங்கீகரிச்சுக்க மாட்டேன்"

"சரிதான்! இவரை எதுக்கு மரியாதை பண்ணி அழைச்சிண்டு போகணும்?" என்று அந்த
நல்ல வித்வானுக்குக் கூட மனஸில் தோன்றியது. பெரியவாளிடம் சென்று,
"ஒண்ணும் ஸ்வாரஸ்யப்படலை; அவர் ரொம்ப நிர்தாக்ஷிண்யமா கண்டிஷன் போடறார்
பெரியவா" என்றார்.

"அப்டியா! ரொம்ப ஸ்வாரஸ்யமான்னா இருக்கு!


நல்ல சேதின்னா கொண்டு
வந்திருக்கே!" வித்வானுக்கு புரியவில்லை.
"கண்டிஷன் போடறார்..ன்னு சொன்னதுலேர்ந்தே அவர் முடிஞ்ச முடிவா "வர
மாட்டேன்"ன்னு சொல்லலியோன்னோ? கண்டிஷனுக்கு ஒத்துண்டா, வரேங்கறார். அந்த
மட்டுல நல்ல சேதிதானே?"

வித்வான் ரொம்ப நொந்த உள்ளத்தோடு அவர் போட்ட கண்டிஷன்களை சொன்னார்.
"அவ்ளோவ்தானே! அவர் இஷ்டப்ரஹாரம் இருந்துட்டுப் போகட்டுமே! அவருக்கு
முடியாதப்போ, கண்டிஷன் போட்டதுல என்ன தப்பு? அவர் பெரிய வித்வத்
ஸ்ரேஷ்டர்! புதுஸ்ஸா அவர்ட்ட ஏதோ கொஞ்சம் க்ரஹிச்சுக்க பாக்கலாம்னு
இருந்தா, அவரோட கண்டிஷனை நா ஏத்துக்கத்தானே வேணும்?"

அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் இருக்கும் பரம்பொருள் அந்த
வைஷ்ணவரிடம் ஏதாவது க்ரஹிச்சுக்க முடியுமா? என்று பார்க்கிறதாம்! அந்த
வைஷ்ணவர் மரியாதையோடு அழைத்து வரப்பட்டார். பெரியவா அழகான
சம்ஸ்க்ருதத்தில், ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே உரிய பரிபாஷையில் அவரை வரவேற்று
ஆசனம் குடுத்தார்.


அதுவே அந்த வைஷ்ணவரின் கடின சித்தத்தில் கொஞ்சம்
நெகிழ்ச்சியை உண்டுபண்ணியது.


ஆனாலும், பெரியவாளை நமஸ்கரிக்கவில்லை.

"ப்ரஹ்ம சூத்ரத்துக்கு" ஸ்ரீராமானுஜர் பண்ணிய பாஷ்யம் பற்றி பெரியவா
அவரிடம் கேட்டார்.......போகப் போக, அந்த வைஷ்ணவர் கேட்க பெரியவாளே [ஸ்ரீ
ராமானுஜாச்சார்யாரே] சொல்லுவதாக மாறியது! பெரியவா அவரை மிகவும்
ஊக்கப்படுத்தினார்.ஒரு அறிவுக்கடலிடம் பேசுகிறோம் என்று உணர்ந்த
வைஷ்ணவரும் தனக்குள் இருந்த பொக்கிஷத்தை கொட்டித் தீர்த்தார்!

சம்பாஷணை நெடுநேரம் நடந்து இனிமையாக நிறைவு பெற்றது. அவருடைய
ப்ரதிக்ஞைக்கு ஹானி வராமல் அவருக்கு நன்றி தெரிவித்து விடை குடுத்தார்
பெரியவா. வைஷ்ணவரோ பெரியவாளிடம் தம்மை
"தாஸன்" என்று சொல்லுமளவுக்கு மனஸில் பதமாகியிருந்தார்.

"பெரியவாளுக்கு தெரியாத சாஸ்த்ர ஞானம் தாஸனுக்கில்லே; ஆனா
தாஸனுக்கில்லாத, தெரியாத கருணை பெரியவாளுக்கு இருந்துதான் கூப்ட்டு
அனுப்பி அநுக்ரஹிச்சுருக்கா..." என்று சொல்லி விட்டு, எல்லாரும்
ஆச்சர்யப்படும்படி தண்டனிட்டு நமஸ்கரிக்க முற்பட்டார்!

"வேணாம்....ப்ரதிக்ஞா பங்கமாயிடும்" என்று தடுத்தார்.

"ப்ரதிக்ஞை..ல்லாம் மனுஷ்யாளை முன்னிட்டுதானே! சன்னிதானத்துல அதுக்கு
ப்ரஸக்தியில்லே [பொருட்படுத்தவில்லை]!" என்று பெரியவாளை பகவான் என்று
ஒத்துக்கொண்டு நமஸ்காரம் பண்ணி தீர்த்தார்!

"நாராயண!நாராயண!" பரமபதநாதன் அதை ஏற்றுக்கொண்டார்.
முதல் ப்ரதிக்ஞை விடப்பட்டது.

"மந்த்ராக்ஷதை அநுக்ரஹிக்கணும்"


தாமாகவே கேட்டு பெற்ற பொது, இரண்டாவது
ப்ரதிக்ஞை விடப்பட்டது.

"என்னோட ஆசைக்காக மூணாவது ப்ரதிக்ஞையை விடணும்னு தோணித்துன்னா, நேக்கும்
"ஒரு மஹா வித்வான் மடத்துக்கு வந்து அவருக்கு சம்பாவனை பண்ணலே"..ங்கற
கொறை இல்லாம இருக்கும்" என்று சௌலப்யமூர்த்தி சொன்னதும்,

"பெரியவா எது பண்ணினாலும் பாக்யமா ஏத்துக்கறேன்" என்று அஹம் குழைந்து
கூற, உயர்ந்த சால்வை ஒன்றை மடத்து வித்வானைக் கொண்டு அவருக்கு போர்த்தி
கௌரவித்தார்

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

Thanjavooran,
IMHO, Mahaperiyava would not have approved of publication of such material where he (Mahaperiava) is shown as superior. Persons of the stature of Mahaperiava do not have any such complexes. Let us not impose our complexes on Him. On the other hand, such publications might hurt feelings of others.

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

திரு கோவிந்தன் அவர்கள்
வணக்கம் பல. தங்களின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இது போன்று இன்னும் பல நிகழ்சிகளை தொகுத்து வெளியிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். காரணம் இதனை மறுப்பதற்கு அல்லது ஏற்றுகொள்ளுவதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை. அவரவர்களின் மன நிலை பொறுத்து செயல் பட்டால் தீர்வு கிடைக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். இந்த தொகுப்பு முகச்சுவடியிலிருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டது.
வாழ்த்துக்களுடன்,
தஞ்சாவூரான்
20 06 2014

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

''சொற்பதம் கடந்த தொல்லோன்'' ..... ''மனம் வாக்குக்கு எட்டாதவன்

Image



“உங்க மனஸுப்படியே ஆகட்டும்!”

1939 ஜூனில் காசி யாத்திரையின் முடிவாக ஸ்ரீசரணாள் வடபுலத்திலிருந்து திரும்பி தென்கோடியான ராமேஸ்வரம் சென்றுகொண்டிருக்கறார். ஏறக்குறைய இறுதிக்கட்டம். திருப்புனவாயிலைக் கடந்து தேவிபட்டணம் போகும் வழி..

சுக்ரவார பூஜை பொருத்தமாக தேவிபட்டணத்தில் ஏற்பாடாகியிருந்தத. அதற்குத்தான் விரைகிறார்..

ஆயின் தேவி அங்கே காளிரூபம் கொண்டிருப்பதாக அல்லவோ தோன்றுகிறது?

அங்கு ஊராட்சி முக்யஸ்தர் ஒரு முஸ்லீம் மரைக்காயர்.. வெளிப்படவே ஐக்கிய இந்தியக் கொள்கையிலும், ஹிந்து மதத்தாரிடமும் முஸ்லீம் லீக் பகமை பாராட்டி வந்த அந்நாளில் அவர் அங்கு ஒரு பெரிய கட்சிக்கூட்டத்திறகு ஏற்பாடு செய்திருந்தார். அதன் தொண்டர்கள் ஹிந்து சமுதாயத்தின் விஷயமாக குண்டர்களே ஆகித் தெருக்களில் ஆயுதமும் கையுமாக அன்று செய்த தர்பாரில் ஊரே கிடுகிடுத்துக் கொண்டிருந்தது. ஹிந்துக்கள் நடுநடுங்கிக்கொண்டருந்தனர்.

செல்லும் வழியில் ஸ்ரீசரணாளுக்குச் செய்தி வந்தது. பயணத்தைத் தொடராமல், இருந்த இடத்திலேயே அப்போதைக்கு ‘நிப்பாட்டி’ விடலாம்; தேவிபட்டணத்தில் கூட்டம் முடிந்து, ஊர் அமைதிக்குத் திரும்பியபின்னர் மீண்டும் பயணம் மேற்கொள்ளலாம்; வேறு வழியில்லை என்று அனைவரும் கருதினர்.

அந்த அனைவர் கருத்தும் எந்த ஒருவரின் அங்கீகாரத்தில்தான காரியமாகுமோ, அவர் ஏதும் சொல்லாமலே மோன சாந்த விக்ரஹமாக, ஆயினும் உத்ஸவ விக்ரஹமாக மேலே சென்று கொண்டேயிருந்தார்.

அதே வழியில் அந்த மரைக்காயரே எதிர்ப்படும்படி நேர்ந்தது! கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் சுற்றுப்பிரதேசங்கலும் செய்து விட்டு அவர் திரும்புகையில் ஸ்ரீசரணாரின் பரிவாரம் வருவதைக் கண்டார்!

பரிவாரத்திடை வந்த பரமரையும் கண்டார்.

எப்படிக் கண்டார்? மைத்ரீ தேவதையாகவேதான் கண்டிருக்கவேண்டும

பெரியவாளிடம் நெருங்கி வந்து பெரிதாகக் கும்பிட்டு நின்றார். அவர் நெஞ்சமெல்லாம் பக்தி பூரிக்க உருகியிருந்தது வெளிப்பார்வைக்கே தெரிந்தது.

முதல் தரிசன மாத்திரத்தில் முழு மனமாற்றம்! மாறு நினைத்த மனம் அன்பிலே கொண்ட அதிசய மாற்றம்!

தற்செயலாகக் கிடைத்த தரிசனம் தாம் எதிர்பார்க்காத அமைதியையும், இன்பத்தையும் ஊட்டியதை அவருக்குத் தெரிந்த மொழிநடையில் உணர்ச்சியுடன் பெரியவாளிடம் தெரிவித்தார்.

“நம்ம ஊர்ல சாமி வந்து பூசை பண்றது பாக்கியங்க! எங்களைச் சேர்ந்தவங்களுக்கு சொல்றேங்க! என்ன பணியானாலும் செஞ்சு குடுப்பாங்க. சாமி நல்லா நம்ம ஊர்ல இருந்து, எங்களுக்கெல்லாம் அருளு பண்ணிட்டுப் போகணுங்க” என்று வேண்டிக் கொண்டார்.

“உங்க மனஸுப்படியே ஆகட்டும்!” என்று ஸ்ரீசரணர் நெகிழ்ந்து கூறி ஆசி வழங்கினார்.

ஒருபுறம் லீக் கூட்டம் அமைதியாகவே நடக்க, மறுபுறம் தேவியின்---காளி ரூபத்தில் அல்ல; ஸௌம்ய லலிதா ரூபத்திலேயே உள்ள தேவியின்------பூஜையும் கோலாஹலமாக நடந்தேறியது.

அன்னையன்பின் வடிவான அவதார அன்னைக்குச் செய்யும் பூஜை மணிக்கணக்கில் நீள்வதுண்டுதானே? அப்படித்தான் அன்றும் நடந்தது.

கூட்டம் முடிந்த பின்னும், பூஜை நடப்பதறிந்த மரைக்காயர் தம் முஸ்லீம் பரிவாரத்துடன் முகாமுக்கு வந்து, அவர்களோடு வெளியே காத்திருந்து, தாங்கள் கொண்டு வந்திருந்த ஏராளமான பழக்கூடைகள், பூக்கூடைகள், கட்டுக்கட்டாக ஊதுபத்தி, புட்டி புட்டியாக அத்தர், பன்னீர் முதலானவற்றை உள்ளே அனுப்பி வைத்தார்.

பூஜை முடிந்ததும் நேரே பெரியவாள் அவர்களுக்குத் தரிசனம் வழங்கத்தான் வந்தார். எப்போதுமே அன்னையன்புக்கு மூர்த்தமான அவரது திருவுருவம் இதுபோன்ற அன்னை வழிபாட்டிற்குப் பின்னோ முன்னிலும் அன்பு மெருகேறி ஜ்வலிப்பது வழக்கம். இன்றோ அந்த வழக்கத்திற்கும் அதிகமான அன்பொளி வீச வந்து நின்று, திருநயனத்தால் அதனை அவர்களுக்கு அள்ளித் தெளித்தார்.

அப்போதும், அன்னிய மதத்தினர், அன்று சில மணிகள் முன்பு கூட, என்ன அநியாயம் செய்வரோ என்று அஞ்ச வைத்தவர்கள், கனிந்த மனத்தோடு, கனியும் மலரும், மணமிகு மற்ற கையுறைகளும் கொண்டுவந்து கொட்டிப் பணிந்தவாறிருந்தனர

‘அன்னியோன்னியம்’ என்று ஒரு அழகான சொல். அன்னியம் என்பது அன்னியமாகிவிடும் ஆரன்பைக் காட்டும் சொல். அதற்கு அற்புதச் சான்றாயிருந்தது அந்த நிகழ்ச்சி.

“இத்தனை அன்பா நீங்க செய்யறதை நான் ஸந்தோஷமா ஏத்துக்கத்தான் வேணும். ஆனாலும் இவ்வளவு தாங்குமா’ன்னு இருக்கு!” என்று உள்ளத்திலிருந்து கூறினார் ஸ்ரீசரணர்.

“ஏங்க தாங்காம?” என்றார் மரைக்காயர், பரம பவ்யமாக. “ சாமியை செகத்து குரு—வுன்னு சொன்னாங்க. அப்ப எங்களுக்கும் குருதானுங்களே! நாங்க என்னதான் செய்யக் கூடாது?” என்றார் அந்த முஸ்லீம் அன்பர் !!

A share fro Shri. Surya Narayan....

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Shri Govindan...your post 350 above..

The episode appears at:

வைஷ்ணவரின் மூன்று நிபந்தனைகள்
மூலம்------------‘சங்கரர் என்ற சங்கீதம்’
ஆசிரியர்---------------ரா.கணபதி
வெளியிட்டோர்---------திவ்ய வித்யா பதிப்பகம்

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

vk,
Notwithstanding the authority quoted, my observation stands.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

என்ன புண்ணியம் செய்தேனோ - சத்குருநாதா
எத்தனை தவம் செய்தேனோ - நின் அருள் பெறவே

பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும்
உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது (என்ன)

வாடிய பயிருக்கு பெய்யும் மழையைப் போலே
படர்முல்லை கொடிக்கொரு கொழு கிடைத்தாற் போல
தேடியும் காணாத த்ரவ்யமே சத்குரு
தேவா தேவா சத்குரு நின் அருள் பெறவே (என்ன)

இயற்றியவர்: ஊத்துக்காடு வெங்கட கவி
இராகம்: ரீதி கௌளா
தாளம்: ஆதி

அழும்தொறும் அணைக்கும் அன்னை - அறிவிலாது ஓடி.
விழும்தொறும் எடுக்கும் அப்பன்
விளையாடும் போது தோழன்
தொழும்தொறும் காக்கும் தெய்வம்
சொந்தமாய் எடுப்போர்க்கெல்லாம் குழந்தை
இப்படி உலவும் என் குருநாதன் வாழி வாழி

Venkatakavi 100- ENNA PUNNIAM=REETHI GOWLAI=MISRACHAPU= NISHA RAJAGOPAl

http://mfi.re/listen/183dalsy6w2uz18/Ve ... TAKAVI.mp3

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Voice of Paramacharya...

" In his last letter to G. Vaidyanathan, Secretary, Sankara Bhakta Jana Sabha, Ra. Ganapathi, prolific writer and compiler of “Deivathin Kural,” has narrated how difficult it was for him to gather the speeches of Paramacharya, add references to them and give them continuity. (‘Naan patta kashtam solli mudiyathu!’ he wrote.)

“Yes, but for Ra. Ganapathi, Kanchi Mahaswami’s speeches would not have reached the masses,” says Vaidyanathan. “He noted down Periyava’s talks and made cross-references, spoke to the people who knew the subject and got the required clarifications. Periyava would speak about one subject in one place and would leave it at that. Then again he would pick up the thread and speak in detail about it in some other venue. The challenge was to maintain the link. Ganapathi had a sharp memory and was alert in his observation. He would give final shape to the article and there would be no ambiguity in it!” he recalls.

“He used the same language that Periyava used so that the reader would feel as if he was listening to Periyava!” adds Vaidyanathan. ...

Read it at The Hindu...

http://www.thehindu.com/features/friday ... 923784.ece

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
பூனையாலே வந்தது! பூனையாலே போனது!
---------------------------------------------------------------------
Source: Dinamalar dated 17-June-2014
As narrated by Shri தங்கமணி சுவாமிநாதன்

எனது பாட்டி எனக்கு அறிவித்த ஒரு அதிசய சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு
கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத்
தொடங்கினர்.

""தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித
அசைவும் இல்லை. மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை'' என்பதை
அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர்.

உற்றுப் பார்த்த பெரியவர், "அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே''
என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார்.

பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின்
மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி
பணித்தார். பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு,
பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார்.

பெற்றோரிடம், ""கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை)
மாயூரநாதர்கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப்
போடுங்கோ.... இப்பவே கிளம்புங்கோ...'' என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர்.
அவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது.

உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது.

குழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து
விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன்,
குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர். ஒரு மணி நேரம் ஆன பின்பும்,
குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர்.

சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும்
ஈடுபட்டனர்.

அப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி
வந்தது.

குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல்
தாய் கவனித்துக் கொண்டிருந்தார்.

யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை
குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து
விட்டு ஓடி விட்டது.

பிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி
திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது.

"க்ளுக்' என்ற மழலை ஒலியும் எழுந்தது. இதைக் கண்ட பெற்றோர், "ஹரஹர சங்கர
ஜெயஜெய சங்கர' என்றபடி குழந்தையை தூக்கினர். அவர்களைப் பார்த்துச்
சிரித்தது.

இந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர்.
முற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால்
புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற
தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த
குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின்
மகிமையை என்னவென்பது?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

"மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து, அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதை குழப்பிக் கொள்ளக்கூடாது",

மகான் கர்நாடாகாவில் 1979 - ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். பயணித்தப்பிறகு, மாலை நேரத்தில் ஓர் இடத்தில தங்குவது வழக்கம்.

அன்றும் வழக்கம்போல் காலையில் ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து, பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து கொண்டு இருந்தார்.

அப்போது, மகானை பார்க்க இரு அந்தண இளைஞர்கள் அங்கே வந்தனர்.

தரக்குறைவான ஆடைகளுடன் , குளிக்காத தோற்றத்தோடும் , படிப்பு அறிவே கொஞ்சமும் இல்லாதவர்களை போல் காட்சியளித்த அவர்களை பார்த்த டாக்டர் ராமமூர்த்தி முகம் சுளித்தார்.

மகானை பார்க்க வரும்போது குளித்துவிட்டு, சுத்தமான அடைகளை அணிந்துகொண்டு வரவேண்டாமோ?

மகானை வழங்கி எழுந்த அவர்களை கணிவுடன் பார்த்து, மகான் கேட்டார்,

"அத்யயனம் முடிந்தாகி விட்டதா?

அவர்களும் தலையை ஆட்டினார்கள்.

"ரிக்வேதம்" சொல்லுங்கள்" என்று மகான் கட்டளை இட்டவுடன், அருவியிலிருந்து நீர் பெருக்கெடுத்து வந்தது போல், அவர்கள் வேதத்தை சொல்ல தொடங்கினார்கள்.

கண்களை மூடியவாறு மகான் அதை கேட்டு கொண்டிருந்தவர் - பிறகு அவராக கையமர்த்தியபின் தான் அவர்கள் வேதம் சொல்வதை நிறுத்தினார்கள்.

"எங்கிருந்து வருகிறீர்கள்?" - மகான் கேட்டார்.

இருபது மைல்களுக்கு அப்பால் இருந்த ஓர் இடத்தை சொன்னார்கள் இளைஞர்கள்.

"அங்கிருந்து எப்படி வந்தீர்கள்?

"நடந்துதான் வந்தோம்"

"திரும்பி போகும்போது?

"நடந்துதான் போகவேண்டும்"

மகானை பார்க்க இருபது மைல் தூரத்தை நடந்தே கடந்து வந்து இருகிறார்கள்.

உடம்பில் அழுக்கு ஏன் சேராது?

மடத்தின் மூலமாக அவர்களுக்கு புதிய ஆடைகளை கொடுத்து, உண்ண உணவு கொடுத்து அனுப்பினார், மகான்.

அவர்களை பற்றி தவறாக நினைத்துகொண்டிருந்த டாக்டரின் பக்கம் திரும்பினார் மகா பெரியவர்.

"மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து, அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதை குழப்பிக் கொள்ளக்கூடாது", என்றார்.

அவர் மனதில் என்ன நினைத்தார் என்று இவருக்கு எப்படி தெரியும்? டாக்டர் மெய்சிலிர்த்தார்...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

'Parmacharya Sri Chandrashekhar Saraswati – God in human form', by Dr. Subramanian Swamy (Part - 1/4)
January 8, 2013 at 8:42am

I have bowed before only one sanyasi in my life, and that is Sri Chandrasekhar Saraswathi, known to the world as the Parmacharya. It is not that I am arrogant or that I have no respect for sanyasis and sadhus. In fact I respect many sadhus in this country for their learning and social services. But my upbringing, first in an English convent school, and then ten years in USA had created a distance between me and traditional Hindu culture of bowing and prostrating before any elder, or anyone in saffron clothes. Therefore, I was the “modern” Indian, believer in science, and with little concern for spiritual diversions.



In fact till the age of 30, I had not even heard of a god like human being called Sri Chandrasekhar Saraswathi. It was a chance meeting with an Indian student at Harvard in his room in the university hostel, that I saw a picture of Parmacharya on top of this student’s TV set. I asked him: “Who is he? And why are you keeping his picture?” The student just avoided the question. I also forgot about it, except that Parmacharya shining smiling face in that photograph got etched in my memory. Six years later, as my Pan American Airways plane was about to land at Delhi airport during the Emergency, I saw that smiling Parmacharya’s face reappear before me for a brief second for no reason at that time. I was coming to Delhi surreptitiously to make my now famous appearance in Parliament and subsequent disappearance, while a MISA warrant was pending for my arrest in the Emergency. At that moment, as the plane landed, I resolved that whenever the Emergency gets over, I shall search for Parmacharya and meet him.



In 1977, after the Emergency was over, and the Janata Party in Power I went to Kanchipuram to see the Parmacharya. It was in sheer curiosity that I went. Some friends arranged for me to come before him. It was a hot June evening, and Parmacharya was sitting in a cottage, a few kilometers outside Kanchipuram. As soon as he saw me, he abruptly got up, and turned his back on me, and went inside the cottage. My friends who took me there were greatly embarrassed, and I was puzzled. Since no body including the other sadhus at that ashram had any idea what went wrong, I told my friends that we should leave, since Parmacharya was not interested in giving me “darshan”.



From the cottage, we walked a few hundred yards to where my car, by which I had come to the ashram, had been parked. Just as I was getting into the car, a priest came running to me. He said “Parmacharya wants to see you, so please come back”. Again puzzled, I walked back to the cottage.



Back at the cottage, a smiling Parmacharya was waiting for me. He first asked me in Tamil: “Do you understand Tamil?” I nodded. In those days, I hardly knew much Tamil, but I hoped the Parmacharya would speak in the simplest Tamil to make it easy to understand.



He then asked me another question: “Who gave you permission to leave my cottage?” The Tamil word he used for “permission” was of Sanskrit origin, which I immediately understood. So in my broken Tamil with a mixture of English words, I replied: “Since you turned your back on me and went inside the cottage, I thought you did not want to see me.” This reply greatly irritated the priest standing in attendance on the Parmacharya.



He said “You cannot talk like this to the Parmacharya”. But Parmacharya asked him to be silent, and then said that when he saw me, he was reminded of a press cutting he had been keeping in store inside the cottage and he had gone inside to fetch it.



“Here it is” he said. “Open it and read it. I opened the folded press cutting, and with some difficulty, I read the Tamil question answer piece printed in Dinamani Kadir, a magazine of Indian Express group. The press cutting had a photograph of me and below it the question asked by a reader: “Is the hero of the Emergency struggle, Dr.Subramanian Swamy a Tamilian?” And the answer given was, “Yes he is a native of Cholavandhan of Madurai District.”



Parmacharya asked me, “Is this your photograph, and is the answer given to the question correct?” I nodded. Then Parmacharya said: “Now you may go. But in the future when you come, you cannot leave till I give you permission to leave.” Everyone around me was naturally very impressed, that Parmacharya had given so much special attention especially since in those days, he often went on manuvvat (silence vow). As I left a sense of elation at the meeting with Parmacharya. I wanted to come back again. I could not understand why a “modern” person like me should want to see a sanyasi, but I felt the urge strongly.



A month later, the Tamilnadu Assembly elections were on, and I was passing Kanchipuram in the campaign rail. So I told the Janata Party workers to spare me some time to pay a visit to the Parmacharya.



When I again reached the same cottage, a priest was waiting for me. He said: “Parmacharya is expecting you.” I asked: “How is this possible, when I decided at that last minute to come, without appointment?” The priest replied. “That is a silly thing to ask. Parmacharya is divine. He knows every thing”.



Sure enough a radiant smiling Parmacharya received me. I thought that this time too, our meeting would last a few minutes, and after a few pleasantries, I can continue on my election campaign. But not so. Parmacharya spoke to me for 1-1 1/2 hours on all important subjects. He gave me guidelines on how to conduct myself in politics and what was necessary to protect the national interest of the country.



He told me that in politics, I should never bother about money or position, because both would follow me whenever an occasion demanded. But I should not be afraid to stand alone. He told me that all great persons of India were those who changed the thinking of the people from a particular set way of thought to a new way of thinking. “That is the permanent achievement for a politician, not merely becoming Minister or Prime Minister. Great persons, starting with Adi Shankara, to Mahatma Gandhi dared to stand alone and change the trend of people’s thought. But did either hold a government position?” he asked me. He said “If you dare to think out fresh solutions for current problems, without bothering about your popularity, and without caring for whether a government position comes to you or not, you will have my blessings.” When he said that I felt a strange sensation of happiness. I suddenly felt very strong.



During the period since my first meeting with the Parmacharya, I had thought a lot about him, heard his praise from so many people. From what I learnt and what I saw of him, I began to feel his divinity. There was no other human like him. If nothing else, he was one sadhu who did not bless Indira Gandhi during the Emergency when in the height of her power and at the height if the nation’s sycophancy, she came and prostrated before him. And yet when Indira Gandhi was down during the Janata rule, he received her and gave his blessings to her after she repented for the Emergency.



It is this thought, every time (that if I do something sincerely, and for what is for the good of the people) that Parmacharya’s blessings will be with me and see me through the interim period of public and media criticism and unpopularity, that has given me this courage that today even my enemies do not deny that I possess. In such endeavours, even though in the beginning when most thought that I was doomed, I came out it successful in the end because of his blessing.



In the next few instalments I shall, without drawing the Parmacharya’s name into the controversy, reveal many such initiatives that I took with his blessings. From 1977 to his day of Samadhi, I met the Parmacharya so many times and received his oral benediction and advice. But I never gave it publicity or got myself photographed. During his life time, I did not boast of my proximity to him either, although whenever I came to the Kanchi Mutt, always without appointment, he would see me. If he was asleep, he was awakened by his close helpers to whom he had obviously given instructions about me. There may not be another god in human form for another 100 years, but it was my honour to have known him and received his blessings. He may not be here today in human form, but because of what he had instructed me, I know and feel his is around.



- Subramanian Swamy
https://www.facebook.com/notes/dr-subra ... 1115373990

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Mahaperiva-001-nada_mAdum_dhaivamE-sAramathi-MV_santhAnam

Mahaperiva-001-nada_mAdum_dhaivamE-sAramathi-MV_santhAnam.mp3

arasi
Posts: 16800
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kanchi Maha Periyava

Post by arasi »

VKailasam,
Thank you for the song. The only other composition of 'maharAjan' I have heard is chandrasekhara sarasvatiyE SaraNam in HindOLam in a concert. Has Maharajapuram Santhanam composed any more songs?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

I just stumbled on this from one of his concerts..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

மெய்சிலிர்க்கும் பெரியவாளின் அனுக்கிரகம்.!
இரண்டு கண் தெரியாத ஒரு பெண்மணிக்கு...

எஸ்.கணேச சர்மா எழுதியது....

பெரியவா திருவிசநல்லூர் என்ற இடத்தில் இருந்தபோது
இரண்டு கண்ணும் தெரியாத ஸ்ரீவித்யா உபாசகி ஒருவர்
வந்தார். அது தெரிந்த பெரியவா தன்னிடம் கைங்கரியம்
செய்து வந்த கண்ணனை அழைத்து, அவருக்கு தங்க இடம்
முதலிய ஏற்பாடுகளைச் செய்யும்படிச் சொன்னார். மேலும்
அவர் மிகுந்த ஆசாரமுடையவர். ஆதலால்,"நீயே ஒரு
பலகாரம் செய்து கொடுத்துவிடு" என்றும் கூறினார்.

"நானாகவே அவர் இருக்குமிடம் சென்று தரிசனம்
தருகிறேன்.கண்தெரியாமல் அவர் என்னைத் தேடி
வர வேண்டாம்"என்றும் தெரிவிக்கச் சொன்னார்.
கண்ணன் அவ்வாறே செய்தார். சிறிது உப்புமாவைக் கிண்டி
அவளெதிரே வைத்து "சாப்பிடுங்கள்..." என்று உபசரித்த
கண்ணனுக்கு அதிசயம் ஒன்று காத்திருந்தது.

அதை நைவேத்தியம் செய்வது போல் சுற்றிவிட்டு
அந்த அம்மாள் தன் மார்பிலே கையை வைத்தார்.
உடனே அவள் கையில் ஒரு ஸ்ரீசக்கரம் வந்துசேர்ந்தது.
மறுபடியும் ஏதோ செய்தார். அது மறைந்துவிட்டது.
அதைப் பார்த்த கண்ணன், பெரியவாளை அவர்
தரிசனம் செய்யும்போது தானும் கூட இருப்பதென்று
முடிவு செய்தார்.

"இவர் என்ன மாய மந்திரங்கள் செய்யப் போகிறாரோ!
இவருக்கு சுவாமிகளிடமிருந்து என்ன கிடைக்கப்
போகிறதோ?" என்ற கேள்விக்குறிகளால் ஆவலுடன்
காத்திருந்தார். பெரியவாளிடம் போய் அவர் தரிசனத்துக்குக்
காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி, தான் எதிர்பார்க்கும்
சந்தர்ப்பம் சீக்கிரம் வராதா என்று ஏங்கினார்.

"ராத்திரி வரேன்னு சொல்லிவிடு" என்று அவரைப் பெரியவா
அனுப்பப் பார்த்தார். கண்ணனுக்கு ஒவ்வொரு விநாடியும்
யுகமாகக் கழிந்தது.எதிர்பார்த்திருந்த நேரமும் வந்தது.
இரவு. எலெக்ட்ரிக் விளக்குகள் இல்லாத காலம்.அங்கொன்றும்
இங்கொன்றும் முணுக்முணுக் என்று எரியும் கைவிளக்குகள்
ஒளியில் பெரியவா நடந்து வந்து அந்த அம்மாவின் எதிரில்
அமருகிறார்.

"நான் வந்துவிட்டேன்!" என்று குரல் கொடுக்கிறார்.அவளும்
நமஸ்கரித்து விட்டு உட்காருகிறாள். "எதற்கு வந்திருக்கிறாய்?"
என்று வினவுகிறார் எல்லாம் தெரிந்த சுவாமிகள்.
"உங்களுக்குத் தெரியாதா சுவாமி! எனக்கு இன்னும்
சஹஸ்ரகாரத்தில் ஜோதி தரிசனம் கிடைக்கவில்லையே!
எனக்கு அதுதான் வேணும்.அதற்காகத்தான் வந்தேன்!"என்கிறாள்.

"என்ன நடக்கப் போகிறதோ?" என்று கண்ணன் ஆவலுடன்
காத்திருக்க...பரமாச்சார்யாளோ, நிதானமாக,
"அப்படியா! நீ சிறுது நேரம் தியானம் பண்ணு!" என்றார்.

கண்ணனிடம், "நான் ஜாடை காட்டுவேன்.அப்போது எல்லா
விளக்குகளையும் அணைத்துவிடு" என்று கட்டளை இடுகிறார்.
காலை முதல் அந்த நொடிக்குக் காத்திருந்த கண்ணனுக்குப்
பெருத்த ஏமாற்றம்.கும்மிருட்டில் நடப்பது ஒன்றுமே தெரியாதே..
என்ன செய்வது? என்று ஏதுவுமே செய்ய முடியாதே!

பெரியவா சொன்னவுடன் விளக்குகள் அணைக்கப்பட்டன.
அடுத்த இரண்டாவது நிமிடம் அம்மையாரிடமிருந்து
பெரிய கூக்குரல் எழுந்தது.

"நான் ஜோதி தரிசனம் கண்டேன்;கன்டேன்!" என்று கூத்தாடினார்.
"போதும்!போதும்!காமாட்சி!நிறுத்திவிடு!நிறுத்திவிடு!"
என்று அலறினாள்.உடனே பெரியவா விளக்கையெல்லாம்
ஏத்தச் சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து மறைந்துவிட்டார்.
போவதற்கு முன் கண்ணனிடம், "அந்த அம்மாவை ஊருக்கு
அனுப்பி விடு!" என்று சொன்னார்.

அந்த அம்மாள் கிளம்புமுன், கண்ணன் அவரிடம், "என்ன நடந்தது?
ஏன் கத்தினீர்கள்? நீன்ங்களாவது சொல்லி விட்டுப்போவீர்களா!"
என்று கெஞ்சினார்.அவரும், "நான் கேட்ட ஜோதி தரிசனம்
சஹஸ்ராரத்தில் கிடைத்துவிட்டது. அதை இரண்டு நிமிடத்துக்கு
மேல் என்னால் பார்க்க முடியாததால் நிறுத்தச் சொல்லி
அலறினேன்!" என்றார்.

எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவராக இருந்தால் இத்தனை எளிதில்
ஒருவருக்கு ஜோதி தரிசனம் காணும்படிச் செய்ய முடியும்?
பெரியவா இறைவன்தான் என்று நினைத்தால் மட்டுமே புரியும்!
தவிர, மனிதர்களால் இப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியாது.
எத்தனை பாடுபட்டாலும் பெற முடியாத ஒரு தரிசனத்தை,
ஒரு ரயிலில் வந்து பார்த்துவிட்டு, அடுத்த ரயிலில் ஊருக்குப்
புறப்படுகிறார் ஒரு பெண். அந்த அதிசயத்துக்கு வேறு எப்படி
விளக்கம் தர முடியும்.?.

அவரது அனுக்கிரகத்தால் உயர்ந்த ஒன்றக் கேட்டுப் பெறுபவர்களே
பாக்கியசாலிகள்.அந்த அம்மா பேறு பெற்றவள்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

அநாயாச மரணம்

Source: Maha Periyavaal Darisana Anubhavangal
Part 6

அறுபது வயதை தாண்டிய பக்தர்.

'எனக்கு அநாயாச மரணம் கிடைக்கணும்' என்று பெரியவாளிடம் விண்ணபித்துகொண்டார்.

அநாயாச மரணம் என்றால், நோய்வாய்ப்பட்டு, பல நாள் படுக்கையில் கிடந்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் துன்பம் கொடுத்து, பின் ஒரு வழியாக போய் சேர்வது என்றில்லாமல், சட்டென்று உயிர் போய் விடுவது என்பதாகும்.

'நீங்க தினமும் பூஜை செய்து முடிக்கும் போது சொல்கிற பிராத்தனை சுலோகம் -

அநாயாசேன மரணம் விநா தைன்யேன ஜீவநம்!
தேஹி மே கிருபயா சம்போ த்வயி பக்திம் அசஞ்சலாம் !!

இதை சொல்லிவிட்டு த்ரயம்பக மந்திரம் சொல்லிண்டிருங்கோ..." என்றார்கள், பெரியவாள்.

பக்தர் பிரசாதம் பெற்று கொண்டு காஞ்சிபுரத்தில் அவர் தங்கியிருந்த அறைக்கு போய் கதவை திறந்து நாற்காலியில் உட்காரும் வரை பெரியவாளின் ஆக்ஞைப்படி நடந்துகொண்டார்.

அடுத்த விநாடி, அவர் நாற்காலியில் சாய்ந்து விட்டார்.

அவர் விரும்பியபடி 'அநாயாசமாக' போய் சேர்ந்துவிட்டார்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Shared from Shri SuryaNarayana:

தேனம்பாக்கம் - இதை மோட்சபுரின்னும் சொல்லுவா. இங்கே ஆதிசங்கரர் கடைசியாக வந்திருந்தார்

ஒரு நாள் பெரியவா, திண்ணையிலே படுத்திண்டிருந்தார். நாங்கள் பக்கத்துத் திண்ணையிலே படுத்திண்டிருந்தோம். பெரியவா திடீர்னு திண்ணையிலே இருந்து கீழே விழுந்த மாதிரி இருந்தது. கையிலே தண்டம் மட்டும் அப்படியே பிடிச்சபடியே நேரா இருந்தது! பெரியவா அப்படியே பிராகாரத்துக்கு வந்து அங்கப்பிரதட்சிணம் செய்ய ஆரம்பிச்சுட்டார். நாலு பிராகாரத்தையும் முழுசா சுத்தி அங்கப்பிரதட்சிணம் பண்ணினார். எதுக்காக அவர் அப்படி அங்கப்பிரதட்சிணம் பண்ணினார்னு எங்களால புரிஞ்சுக்கவே முடியலே.

தொண்ணூறு வயதில், காமாட்சி அம்பாளுக்குக் கும்பாபிஷேகம் பண்ற போது, அங்கே நாலு வீதியிலயும் பெரியவா அங்கப் பிரதட்சிணம் செய்தபோதுதான் தெரிந்தது, தன்னால முடியுமான்னு அன்னிக்கு தேனம்பாக்கத்தில் அதுக்கு முன்னோட்டம் பார்த்திருக்கார் பெரியவா!

அதேமாதிரிதான், தேவி காமாட்சி கிளம்பி கொட்டகைக்குப் போனப்புறம், ஜபம் பண்ணிண்டே வரதராஜப் பெருமாள் கோயிலின் நாலு மாட வீதியிலேயும் பிரதட்சிணம் பண்ணினார். அதுவும் ஒரு பரீட்சை மாதிரிதான். சதாராவுக்கு நடந்து போகத் தன்னால் முடியுமான்னு சோதனை பண்ணிப் பார்த்திருக்கார்.

சதாராவுக்குப் போறதுக்கு முன்னால, ரிஜிஸ்திரார் ஆபீசுக்குப் போய், தேனம்பாக்கம் நிலத்தை எங்க சங்கர பக்த ஜன சபா பெயரில் ரிஜிஸ்தர் பண்ணிக் கொடுத்துட்டுத் தான் போனார். நீலகண்ட குருக்கள் இங்கே இருந்தார். கடனை எல்லாம் முழுக்க அடைச்சு, அனுபவ பாத்யதையை எங்களோட சங்கர பக்த ஜன சபாவுக்கு எழுதி வைச்சுட்டார். ‘இந்த சிவா ஸ்தானத்தை நீங்கதான் நிர்வாகம் பண்ணணும்’னு சொல்லிட்டார். மடத்துக்குக்கூட எழுதி வைக்கலே! பெரியவா சொன்னதன்பேரில் திருக்குளத்திலே நீலோத்பல மலர் போட்டோம். இந்தத் திருக்குளத்தை ஹிந்துஜா குரூப் செப்பனிட்டுத் தர்றதா சொல்லியிருக்காங்க.

பெரியவா ஆசியோட வேத பாடசாலை இப்பவும் நடக்கிறது. இருபது மாணவர்கள் கிருஷ்ண யஜுர் வேதம் படிக்கிறார்கள். அதிகாலை 4 மணிக்குப் பாடங்கள் ஆரம்பித்தால், ராத்திரி 9:30 மணி வரை படிப்பார்கள். ஸ்போர்ட்ஸும் உண்டு. இங்கிலீஷ், கணிதம் சரித்திரம் எல்லாம் சொல்லித்தர ஏற்பாடு பண்ணிட்டு வரோம்.

மகா பெரியவா ஆராதனை நடத்த, சி.சி.எல் கம்பெனி இங்கே ஒரு பெரிய மண்டபம் கட்டித் தந்திருக்கு. உபநயனம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் மாதிரி வைதீகக் காரியங்கள் எல்லாம் இங்கே நடத்தலாம். இங்கே இருக்கிற பிரம்மபுரீஸ்வரர் லிங்கத்துக்குப் பின்னாலே, ஸ்ரீசோம கணபதியுடன் ஆதிசங்கரரும் இருப்பதைப் பார்க்கலாம். அப்படியே சுவரில் பிரதிஷ்டை ஆகியிருக்கிறது. ஆதிசங்கரர் இங்கேதான் கடைசியில் வந்து தங்கியிருந்தார் என்பார்கள். ‘பிரம்ம காஞ்சி’ என்று தேனம்பாக்கத்தைச் சொல்லுவார்கள். இங்கே ஏகாந்தமாக இருக்க விரும்பினா பெரியவா. சிவாஸ்தானம் புனிதமானது என்பது தவிர, சங்கரர் சம்பந்தப்பட்ட ஸ்தலம் என்பதாலேயே அதை உணர்ந்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் பெரியவா. தாம் தங்கியிருக்க ஒரு சிறு குடிசை போதும் என்று இருந்துவிட்டார். தன் கை நிறைய தர்ப்பைப் புல்லை எடுத்துக் கொண்டு, தம் இடத்தைத் தாமே சுத்தம் செய்து விடுவார். தினமும் அதிகாலைல விஷ்ணுவைத் தரிசிக்க, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டே விஷ்ணுகாஞ்சிக்கு நடந்து போவார்.

இந்தத் தேனம்பாக்கத்தை சிவாஸ்தானம் என்பார்கள். பல்லவர் காலத்துக் கோயில். இங்கே இருக்கிற துர்கையின் மேல் துர்கா பஞ்ச ரத்னம் எழுதியிருக்கார் பெரியவா. சதாரா போற வழியில் இருக்கிற அக்ரி கிராமத்தில் தங்கியிருந்தபோது. ‘தே தியான யோகானுதா’ என்று தொடங்கும் பஞ்ச ரத்னம் அது. ‘தன்னுடைய குணங்களாலேயே மறைத்திருக்கக்கூடிய பராசக்தியான உன்னை, யார் தியான யோகத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்களே காண்கின்றனர். ஏ தேவி, நீதான் பரமேஸ்வரனுடைய சக்தியாகின்றாய். ஏ தேவி, மோட்சத்தைக் கொடுப்பவளே, சர்வேஸ்வரி, என்னைக் காப்பாயாக!’ என்ற அர்த்தம் உள்ளது அந்த ஸ்லோகம்.

அன்னிக்கு அதி ருத்ரம் ஜபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பெரு மழை வந்து, கொட்டகையே சாமி மேல் சாய்ந்துவிடும் போல் இருந்தது. பெரியவா அப்படியே படுத்துண்டிருந்தா. அவருக்கு ஒண்ணுமே ஆகலே! தண்ணி எல்லாம் உள்ளே வந்துட்டுது. அப்புறம் மண் கொண்டு வந்து போட்டு சமன் பண்ணினோம்.

பக்கத்திலே இருக்கிற இறவாஸ்தானேஸ்வரரைத் தரிசனம் பண்ணி பூஜை பண்ணினால் இறப்பு கிடையாது என்றும், பிறவாஸ்தானேஸ்வரைப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டால் பிறப்பு கிடையாது என்றும் சொல்வார்கள். ‘தேவ தேவ மமாஸ்தானம் சிவாஸ்தானம் மிதம் க்ருதம்; சிவாஸ்தானேஸ்வரம் நாம ஸ்தானமேதத் பிரசித்தமத்’ என்று இந்த தேனம்பாக்கத்தை மிக உயர்வாகச் சொல்லுவார்கள்.

பிரம்மா யாகம் பண்ணின இடம் தேனம்பாக்கம். ஆனால் யாகத்துக்கு அவர் சரஸ்வதியைக் கூப்பிடவில்லை. அதனால் சரஸ்வதிக்குக் கோபம். நதியாக வேகமாக வந்தாள். ஊரையே அழிச்சுடற வேகம். அதனால், நதிக்கு வேகவதின்னு பேர்.

மகாவிஷ்ணு வஸ்திரத்தை அவிழ்த்துக் கீழே போட்டுப் படுத்துண்டுட்டார். யாகம் பூரணமாச்சு. அதனால்தான் யதோத்காரி அல்லது சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று அவருக்குப் பெயர். ஆனால், தானம் பண்ண ஒரு எஜமானர் வேணுமே! பரமேஸ்வரன் நின்றார். அவர்தான் பிரம்மபுரீஸ்வரர். இங்கே இருக்கிற சோம கணபதி, யாகத்தை ரட்சித்தார். நதியாக வந்து இருட்டாகப் போனதால், உலகமே இருண்டு போச்சு. யாகம் நடக்க பெருமாளே வந்தார். அவர்தான் விளக்கொளி பெருமாள் அல்லது தீபப் பிரகாசர். பக்கத்திலேயே அவர் கோயில் இருக்கிறது. பிரம்மா யாகம் பண்ணினதிலிருந்து வந்த பெருமாள் விக்கிரகம்தான் வரதராஜர் உற்ஸவ மூர்த்தி. அவர் முகத்தில் யாகத்தோட அக்னி பட்ட வடு கூடத் தெரியும்!

இதை மோட்சபுரின்னும் சொல்லுவா. இங்கே ஆதிசங்கரர் கடைசியாக வந்திருந்தார். அதனால, இந்த இடத்தோட விசேஷம் பெரியவாளுக்குத் தெரிஞ்சிருக்கு. இங்கே சுவாமிக்கு இரண்டு வேளை பூஜையும் ராஜப்பா குருக்கள்தான் செய்து வருகிறார்.

பெரியவா ஏப்ரல் 15, 1978 அன்னிக்கு சிவாஸ்தானத்தை விட்டுப் புறப்பட்டு கால்நடைப் பயணமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் யாத்திரை எல்லாம் முடித்துக்கொண்டு, ஏப்ரல் 13, 1984-ல் திரும்பி வந்து சேர்ந்தார். கிட்டத்தட்ட 4000 கி. மீ. தூரம் நடந்திருக்கார். இந்த மாதிரி எந்த மகானாவது மக்களைப் பார்க்கணும்னு அவர்கள் இருக்கிற இடத்துக்குப் போய் தரிசனம் கொடுத்து வந்திருக்கிறாரான்னு தெரியலை. இது ஓர் ஆச்சரியமான, பிரமிப்பான விஷயம்!

அதனால்தான் தேனம்பாக்கத்துக்கு அத்தனை விசேஷம். பெரியவாளின் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் அதிஷ்டானத்தை தரிசனம் பண்ணின கையோடு இங்கேயும் வந்து தரிசனம் பண்ணுகிறார்கள். இது அத்தனை புனிதமான ஸ்தலம்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

இசை வழியே ஈஸ்வரானுபவம் தெய்வத்தின் குரல் ...

கல்வித் தெய்வமான சரஸ்வதி கையிலே வீணை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். பரமேஸ்வரனின் பத்தினியான பராசக்தியும் கையிலே வீணை வைத்திருப்பதாக காளிதாசர் நவரத்தினமாலா தோத்திரத்தில் பாடுகிறார். அம்பாள் விரல் நுனியால் வீணையை மீட்டிக் கொண்டிருப்பதாகவும், ஸரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்களின் சாதுரியத்தில் திளைத்து ஆனந்தித்திருப்பதாகவும் பாடுகிறார்.

ஸரிகமமபதநி ரதாம் தாம்

வீணா ஸங்க்காந்த காந்த ஹஸ்தாந்தம் I

இப்படி சங்கீதத்தில் முழுகியுள்ள சிவாகாந்தா (சிவனின் பத்தினி) சாந்தமாகவும் (அமைதிமயமாகவும்) ம்ருதுள ஸ்வார்த்தாவாகவும் (மென்மையான திரு உள்ளம் படைத்தவளாகவும்) இருக்கிறாள் என்கிறார் காளிதாசர். அவளை நமஸ்கரிக்கிறேன் என்கிறார்.

சாந்தாம் ம்ருதுள ஸ்வார்த்தம்

குசபரதாந்தாம் நமாமி சிவகாந்ததம் II

அவர் ஸ்லோகத்தைச் செய்துகொண்டு போயிருக்கிற ரீதியைக் கவனித்தால், அம்பிகை ஸங்கீதத்தில் அமிழ்ந்திருப்பதாலேயே சாந்த ஸ்வரூபிணியாக ஆகியிருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதேபோல சங்கீத அநுபவத்தினால்தான் அவனுடைய உள்ளம் மிருதுளமாக, புஷ்பத்தைப்போல் மென்மையாக கருணாமயமாக ஆகியிருக்கிறது என்று தொனிக்கிறது.

பராசக்தியை இப்படி சங்கீத மூர்த்தியாகப் பாவிக்கும்போது அவளுக்கு சியாமளா என்று பெயர். சங்கீதத்தில் தோய்ந்து ஆனந்த மயமாகவும், சாந்த மயமாகவும், குழந்தை உள்ளத்தோடும் உள்ள சியாமளா தேவியைத் தியானித்தால், அவள் பக்தர்களுக்குக் கருணையைப் பொழிவாள். அவளது மிருதுவான இதயத்திலிருந்து கருணை பொங்கிக்கொண்டேயிருக்கும். தெய்வீகமான சங்கீதம் ததும்பும் சந்நிதியில், சாந்தமும் ஆனந்தமும் தாமாகவே பொங்கும். சிவகாந்தாவிடம் சரண் புகுந்தால் நமக்கு இந்தச் சாந்தமும் ஆனந்தமும் கைகூடும். இந்த சுலோகத்திலிருந்து சங்கீதமானது ஆனந்தம், சாந்தம், மிருதுவான உள்ளம், கருணை ஆகிய எல்லாவற்றையும் அளிக்கும் என்று தெரிகிறது.

வேத அத்யயனம், யோகம், தியானம், பூஜை இவற்றைக் கஷ்டப்பட்டு அப்பியசிப்பதால் கிடைக்கிற ஈஸ்வரானுபவத்தை தெய்வீகமான சங்கீதத்தின் மூலம், நல்ல ராக தாளத்தின் மூலம் சுலபமாகவும் சௌக்கியமாகவும் பெற்றுவிடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் எனப்படும் ஸ்மிருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்கிய மகரிஷியே சொல்லியிருக்கிறார். வீணா கானத்தை அவர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

அப்ரயத்னேன - கடுமையான பிரயாசை இல்லாமலே சங்கீதத்தால் மோக்ஷ மார்க்கத்தில் போய்விடலாம் என்கிறார்.

நம் மனசை தெய்வீகமான சங்கீதத்தில் ஊறவைத்து அதிலேயே கரைந்து போகச் செய்தால் கபடமில்லாமல் ஈசுவரனை அநுபவிக்கலாம். நாம் பாடி அநுபவிக்கும் போதே, இந்த சங்கீதத்தைக் கேட்கிறவர்களுக்கும் இதே அநுபவத்தைத் தந்துவிடலாம். வேறு எந்த சாதனையிலும் பிறந்து யாருக்கும் இப்படி சமமான அநுபவ ஆனந்தம் தர முடியாது. சங்கீதம் என்ற மார்க்கத்தின் மூலம் தங்கள் இருதயங்களைப் பரமேசு வரனிடம் சமர்ப்பணம் செய்த தியாகராஜர் போன்ற பக்தர்கள், சங்கீதமே சாக் ஷாத்காரகத்தைத் தரும் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறார்கள்.

அம்பாள்தான் பிரம்மத்தின் சக்தி. நாதம் ஈசுவரன் அல்லது பிரம்மம். அம்பாள் சங்கீதத்தில் சொக்கி ஆனந்தமாயிருக்கிறாள் என்றால், பிரம்மமும் சக்தியும் வேறு வேறாக இல்லாமல் ஒன்றிய அத்வைத ஆனந்தத்தையே குறிக்கும். அம்பாள் தன் இயற்கையான கருணையைப் பொழிந்து, சங்கீதத்தின் மூலம் அவளை உபாசிப்பவர்களது ஆத்மா பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருளுகிறாள்.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

thanjavooran
Posts: 2993
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
பெரியவாள் காசி யாத்திரை (1933) செல்லும் வழியில் ஒரு ஆந்திர குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டபோது ஸ்ரீ ஸி.எஸ்,விக்கு (விச்வநாதையர்) பொத்துக்கொண்டு வந்து விட்டதாம்.
“எடுத்துச் செலவழிப்பதற்கு நம் மடத்தில் என்ன கொட்டியா கிடக்கிறது? இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் இத்தனை யானையையும், ஜனங்களையும் கட்டித் தீனி போடுவதென்றால் எப்படி?” என்கிற ரீதியில் பெரியவாள் காதுபடப் பொரிந்து தள்ளி விட்டாராம்.
பெரியவாள் அவரைக் கூப்பிட்டார். சாந்தமாக ” நீ ஏன் பதட்டப்படறே? நாம நல்ல காரியத்தை உத்தேசிச்சுப் பொறப்பட்டிருக்கோம்.நம்ப லக்ஷ்யம் நன்னாயிருந்தா அம்பாள் கை கொடுக்காமப் போவாளா? அவதானே எல்லாருக்கும் படியளக்கிறா? நமக்கும் நிறைய அளப்பா”என்றாராம்.
மறுநாள், விச்வநாதய்யரால் நம்பவே முடியவில்லை! அந்தக் கிராமத்தில் ஏதாவது திருவிழா நடந்ததா, அல்லது சந்தை கூடிற்றா, அல்லது இப்படி எதுவுமே நடக்காமல் பெரியவாளின் சக்தி மட்டும்தான் வேலை செய்ததா என்று அவருக்குச் சொல்ல தெரியவில்லை.
ஆனால் சொல்லத் தெரிந்தது, மறுநாள் காலையிலிருந்து அந்த நிர்மாநுஷ்யக் குக்கிராமத்தில் புற்றீசலாகப் பக்தர்கள் பெரியவாளை வழிபட வந்து கொண்டேயிருந்ததுதான். வந்தது மட்டும் இல்லை.
அக்காலத்தில் வெள்ளி நாணயம் வழங்கி வந்ததல்லவா? வந்த பக்தர்கள் யாவரும் இப்படி நாணயங்களைக் கொண்டு வந்து கொட்டினார்கள். “நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா இதை (எஸ்,வி.என்னிடம் கூறியது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு-கட்டுரை-1960-பின் பாதியில்) அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி குவிஞ்சதேயில்லை! மடத்து ஜாகையிலே எல்லாத்தையும் சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து எடுத்துச் சாக்கிலே போட்டுக் கட்டினோம்.
பெரியவாள்,”அம்பாள்,’படி’ அளப்பாள்’னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?”ன்னா!
“பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. பெரியவா செய்ய முடியாதது எதுவும் இல்லை. இருந்தாலும் ‘எங்களைக் கூட வெச்சுண்டு ஆட்டம் போட்டிருக்கா” என்று முடித்தார் விச்வநாதையர்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

நம் மதத்தைப்பற்றிய சுவாரஸ்யம் என்னவென்றால், பெயரற்ற மதமே நம் மதம். மதமே அல்லாத மதமே நம் மதம். வெள்ளையன் அளித்த பெயரே "ஹிந்து" என்பதே தவிர அது நம் மதத்தின் பெயர் அன்று. உண்மையில் நாம் கடைபிடிப்பது மதம் அன்று. நம் முன்னோர்கள் நமக்கு அளித்தது சனாதன அல்லது மிக தொன்மையான தர்மம்(நெறி) ஆகும். ஒருவன் தன் வாழ்வினை எவ்வண்ணம் வாழ்ந்தால் அவனுக்கு இன்பம் என்று பல வழிகளைக் கூறுவதே நம் சனாதன தர்மம். நீ இவ்வாறுதான் வாழவேண்டும் என்று சொல்லும். ஆனால் வாழ்ந்தே தீரவேண்டும் என்று தன் என்னத்தை திணிக்காது. நல்லதை சொல்லிவிட்டேன் இனி கேட்பது கேளாததும் உன் விருப்பம் என்று பக்குவ மனப்பான்மையுடன் நம்மை வழிநடத்துவதே சனாதன தர்மமாகும். இந்த சனாதன தர்மத்தில் இன்னாருக்குத்தான் இடம் இன்னார்கு இடம் இல்லை என்ற பாகுபாடே கிடையாது. சனாதன தர்மத்தில் ஆத்திகனுக்கு அளிக்கப்படும் அதே அந்தஸ்து நாத்திகனுக்கும் அளிக்கப்படும். சனாதன தர்மத்தை போற்றுபவரை நோக்கும் அதே கண்ணோட்டத்தில் தான் சனாதன தர்மத்தை இழிவுபடுத்துபவரையும் நோக்கும். இதுவே நம் சனாதன தர்மத்தின் மேன்மை. சனாதன தர்மத்தை பின்பற்ற நாம் பெருமிதம் கொள்ளவேண்டும்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

மஹா பெரியவா "நிம்மதிக்கு வழி":

* மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்க வேண்டும்.

* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது. எளிமை தான் நிம்மதிக்கு வழிவகுக்கும் என்பதை உணருங்கள்.

* ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள் தேடி, அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.
* பாவம் நீங்க ஒரே வழி தியானம் செய்வது தான். தியானத்திற்காக தினமும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள். அதே நேரம் புதிதாகப் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியம்.
* "ஹரஹர' என்று ஜெபிப்பதால் துன்பம் நீங்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நிம்மதி தேடி எங்கெங்கோ அலைகிறோம். இருக்குமிடத்தில் இதை செய்ய மனம் மட்டும் ஒத்துழைத்தால் போதும்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

மனிதர்களாகப் பிறந்து, ஆன்மீக உலகில் மிக உயர்ந்த நிலை அடைந்த மூன்று பேர்களுக்கு தேர்த்திருவிழா இன்றும் நடக்கிறது.யார் அந்த மூன்று பேர்.?"
-ஸ்ரீகாஞ்சி பரமாசார்யஸ்வாமிகள்.

அப்போது நான் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்தேன்.

ஒரு நாள் நான் அலுவலகத்தில் வேலைசெய்து கொண்டிருந்த போது தாசில்தார் கூப்பிடுவதாக என் உதவியாளர் சொல்லவே, நான் உள்ளே போனேன்.

"சுப்ரமண்யன்.! இன்று அறநிலைத் துறை ஆணையர் காஞ்சி வருகிறார். அவர் நம்ம கலெக்டரின் நண்பரும் கூட. எனவே காஞ்சிப் பெரியவரை, அவர் தரிசிக்க நீங்கள் ஆவன செய்ய வேண்டும்."

காஞ்சி மடத்தின் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில், அறநிலைத்துறை ஆணையர் (ஐ.ஏ.எஸ்.அலுவலர்) பரமாசார்யார் அவர்களை வணங்கி அமர்ந்தார். ஆணையருடன், அறநிலைத்துறை சார்பு அதிகாரிகள் 15 பேரும் உடன் வணங்கி உட்கார்ந்தனர்.
நான் ஒரு மூலையில் நின்று கொண்டேன்.

முகமலர்ச்சியுடன் ஆணையருடன் பரமாசார்யார் பேசத் தொடங்கினார். அவர்கள் உரையாடல், சிறுசிறு கோவில்களுக்கு திருப்பணிகள் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும், கும்பாபிஷேகம் செய்யப்படவேண்டிய சில பெரிய கோவில்கள் குறித்தும் சென்று கொண்டிருந்தது.

ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு பொதுவாக ஒரு வழக்கம் உண்டு. கூட்டத்தில் சிலரை நோக்கி, சமய சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பி, தக்க பதில் கோருவார். அவர்கள் திணறும் சமயத்தில், அதற்கான பதிலையும் தானே கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவார். இப்படிக் கேள்வி கேட்டு பதில் சொல்வதின் மூலம் பல நல்ல விஷயங்கள் கேட்போரின் மனதில் என்றும் மறக்காது நிலைத்து நிற்கும் என்பதாகவும் பெரியவாளின் நோக்கம் இருக்கலாம்.

அன்றும் ஒரு கேள்வி எழுப்பினார்,காஞ்சி ஸ்வாமிகள். அதுவும் அந்த ஆணையரிடமே.!

"உங்களால் சொல்ல முடியுமா.?

"மனிதர்களாகப் பிறந்து, ஆன்மீக உலகில் மிக உயர்ந்த நிலை அடைந்த மூன்று பேர்களுக்கு தேர்த்திருவிழா இன்றும்
நடக்கிறது.யார் அந்த மூன்று பேர்.?"

இந்தக் கேள்வி ஆணையரிடம் கேட்கப்பட்டாலும், நான் உட்பட மற்றவர்களும் இந்தக் கேள்விக்கான விடையை கூற மூளையைக் கசக்கிக் கொண்டோம். பொதுவாக தெய்வங்களுக்குத் தான் தேர்த்திருவிழா நடைபெறும். ஆனால் பெரியவா, மனித குலத்தில் பிறந்தவர்களைப் பற்றியல்லவா, கேட்கிறார்கள்.?

எங்கள் நிலையைப் பார்த்து முறுவல் புரிந்த பெரியவாள் "இன்னும் அஞ்சு நிமிஷம் தரேன் யார் வேணுமானாலும் இதற்குப் பதில் சொல்லலாம்."

அஞ்சு நிமிஷம் சென்றது.யாருக்கும் பதில் கூறத் தெரியவில்லை.

"பரவாயில்லை.! யாரும் கஷ்டப்படுத்திக்க வேண்டாம். நானே சொல்றேன்.!"

"(1) ஸ்ரீவில்லிப்புத்தூரில் சூடிக் கொடுத்த நாச்சியார் எனப் பெயர் பெற்ற ஆண்டாளுக்குத் தேரும்,

(2) வைணவ சமயத் தலைவர் ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீபெரும்புதூரில் தேரும்,

(3) ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையில் தேரும் உள்ளன.

வருஷா வருஷம் தேர்த்திருவிழா இவர்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது போல சின்ன விஷயங்களும், உங்களுக்கு தெரிஞ்சா நல்லது.அதனால்தான் கேட்டேன்" என்று கூறி குழந்தை போல் சிரித்தார்.

அச்சிரிப்பு இன்னும் என் நினைவில் பசுமரத்தாணி போல் நின்றுள்ளது.
Courtesy: சுப்ரமண்யன்

Post Reply