150-அலகிலா அருள் பொழியும் தூயவனே போற்றி!
ஆருதலளிக்கும் அமுதா போற்றி!
இகபரம் சுகமளிக்கும் இறைவா போற்றி!
ஈசா! மறை ஓதுவாய் போற்றி!
உறு துணையாய் வருவாய் போற்றி போற்றி!-5
ஊறுவை தவிர்தருள்வாய் போற்றி!
என்னெற்றும் காத்தருள்வாய் போற்றி!
ஏற்றமது தந்தருள்வாய் போற்றி!
ஐங்கரனின் துணைவா போற்றி!
ஒன்றாகி நின்றாய் போற்றி! போற்றி!- 10
ஓங்காரமாகினாய் போற்றி!
ஔவியம் நீக்கியருள்வாய் போற்றி!
கணமும் உன்னை மறவாதிரிக்க அருள்வாய் போற்றி!
சதுர் வேத நாயகனே! சங்கரனே போற்றி!
ஞான ஒளியே காஞ்சி நாதனே போற்றி ! போற்றி! 15
தரணி புகழ் சதாசிவனே போற்றி!
நடனமாடும் நடராஜ பெருந்தகையே போற்றி!
பற்றட்டவர் பற்றும் பத்ம பாதா போற்றி!
மறையோதும் மன்னவா போற்றி!
திருமகள் தநயா போற்றி போற்றி -20
யாதுமாகி நின்றாய் போற்றி!
ராஜாதி ராஜனே நின் தாள் பணிந்தேன் போற்றி!
லம்போதர சோதரா போற்றி!
வித்தகா போற்றி போற்றி!
பிரணவத்திற்கு மூலமே போற்றி! போற்றி! -25
நாத ஒலியே போற்றி!
நாத பொருளே போற்றி
ஸவரங்களின் மூலமே போற்றி!
வேத வித்தகா போற்றி!
வேத ரஷ்ஷகா போற்றி! போற்றி !-30
கருவுக்கு உயிரானாய் போற்றி
உயிருக்கு உணர்வானாய் போற்றி!
உணர்வுக்கு சொல்லானாய் போற்றி!
சொல்லுக்கு பொருளானாய் போற்றி !
நீயே பரம் பொருளானாய் போற்றி!போற்றி!-35
மெய் ஞான பொருளே போற்றி!
ஞான வித்தகா போற்றி!
ஞான பரம் பொருளே போற்றி!
ஞான பண்டிதா போற்றி!
பரம ஞானமருள்வாய் போற்றி! போற்றி!-40
இசையே போற்றி!
இசை வடிவே போற்றி!
இசை ஞானமே போற்றி!
இசையின் சுவையேபோற்றி!
நாதானந்த வித்தகா போற்றி!போற்றி!-45
அருமறை பொருளே போற்றி!
ஆனந்த ரூபனே போற்றி!
குருநகையரசே போற்றி!
சுந்தர வடிவே போற்றி!
தத்துவ கனலே போற்றி!போற்றி!-50
ஏகாம்பரேச்வரா போற்றி!
ஜம்பு லிங்கமே போற்றி!
ஜோதி லிங்கமே போற்றி!
காளஹஸ்தீஸ்வரா போற்றி!
தில்லை நாதா போற்றி!போற்றி-55
மழலைப் பேறு தரும் மார்க்கபந்து போற்றி!
மார்க்கம் காட்டுவாய் போற்றி!
தூரனுக்கு முருகனானாய் போற்றி!
அந்தகிககு ஜோதியை காட்டிய ஜோதிஸ்வரூபனே போற்றி!
கைலாசபதே போற்றி போற்றி !!- 60
ரோகமகற்றுவாய் போற்றி!
சுகம் தருவாய் போற்றி!
வறுமை நீக்குவாய் போற்றி!
செல்வமளிப்பாய் போற்றி!
தீயது நீக்கி நல்லதளிப்பாய் போற்றி!போற்றி!-65
கனகாம்பரி காமாட்சி தாசா போற்றி!
கமல மனோகரா! கலியுக வரதா போற்றி!
கமலாசனா போற்றி!
காருண்ய சாகரா போறறி!
ஏகாம்பரேசா! சங்கரா போற்றி!போற்றி!-70
தினகரா! பாஸ்கரா போற்றி!
மந்திர ரூபா மகேஸ்வரா கைலாச வாசா போற்றி!
விடையேரும் விமலா போற்றி!
கடலலை மேல் துயிலும் அமலா போற்றி!
செங்கமல மலர் பாதா போற்றி போற்றி!!-75
சிவஞான மெய் பொருளே போற்றி!
ஞான செழுஞ்சுடரே போற்றி!
ஞானியும் யோகியுமானவனே போற்றி!
வற்றாத கருணா சாகரா போற்றி!
தட்சிணாமூர்த்தி அவதாரா! போற்றி போற்றி!!-80
யாழின் நாதமே போற்றி!
குழலின் ஓசையே போற்றி!
புள்ளின் ஒலியே போற்றி!
குயிலின் கூவலே போற்றி!
குழவியின் மழலையே போற்றி!போற்றி!!-85
அந்தகன் பாடலுக்கு தாளமிட்டு ரசித்தவா போற்றி!
அறியவரின் காம்போஜி பாடலை ரசித்தவா போற்றி!
யாழில் கானம் இசைத்து மமதை நீக்கியவா போற்றி!
இசை ஞானிக்கு கண்ணொளி காட்டியவா போற்றி!
ரங்கன் பள்ளி கொண்ட காரணத்தை விளக்கியவா போற்றி! போற்றி!-90
பாடும் நாவிற்கு இனியனானாய் போற்றி!
கேட்கும் செவிகளுக்கு அமுதமானாய் போற்றி!
நோக்கும் கண்களுக்கு அழகனானாய் போற்றி!
எண்ணங்களுக்கு அரணானாய் போற்றி!
தொழும் அடியவர் வினை தீர்ப்பாய் போற்றி!போற்றி!!-95
மோகன கிரிதர கண்ணா போற்றி!
கஸ்தூரி கந்த மந்த காச வதனா போற்றி!
துளசீஹார ஷியாமளா போற்றி!
பாண்டு ரங்க விட்டலா போற்றி!
பங்கஜமுக ரங்கபுர வாசா போற்றி!போற்றி!!-100
ஷீரடி நகர நாயகா போற்றி!
அருணாசலா போற்றி!
துங்கா நதி தீர மாதவா போற்றி!
சுரத் குமாரா போற்றி!
வேங்கட ரமணா போற்றி!போற்றி!!-105
சதாவதானியே போற்றி!
அறிவின் வடிவமே போற்றி!
ஆனந்த கூத்தனே போற்றி!போற்றி!-108
இசைவடிவமே! ராகமும் பாவமும் ஆனவனே
நெஞ்சில் உரத்தையும் வாக்கில் உண்மையும் கூூட்டி
தஞ்சம் என்றுன்னை நாடினேன் தயாபரா!
ரட்சித்தருள்வாயென்னை!!!
ஸ்ரீஜயேந்திர சுவாமி சரணம்!
ஸ்ரீவிஜயேந்திர சுவாமி சரணம்!!
venkat k