Aanmeekam...

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

" அதிதி என்பது முதலிலேயே information கொடுத்துவிட்டு வரும் நண்பர்களோ, சொந்தக்காரர்களோ இல்லை. எதிர்பாராமல் வரும் எவருமே அதிதிகள்தான்! "திதி" என்றால், நாள். குறிப்பிட்ட நாளில், நேரத்தில் சாப்பிட வருகிறேன் என்று சொல்லியோ, அல்லது "சாப்பிட வந்துவிடுங்கள்" என்று நாமே ஒரு நாள், நேரம் குறித்து அழைப்பவரோ அதிதி இல்லை. அ-திதி "நேரம் காலம் இல்லாமல் திடீரென்று வருபவர்கள்" தான் அதிதிகள்"


பெரியவா சொன்ன ஒரு உண்மை நிகழ்ச்சி...............

நம்ம ஆச்சார்யாள் மடம் கும்பகோணத்தில் இருந்தப்போ, நடந்த ஒரு சம்பவம். எல்லாரும் ஸ்ரத்தையா கேட்டுட்டாலே, இதோட மஹிமை நன்னா புரிஞ்சுடும்! கும்பகோணத்தில் கும்பகோணம் மாமாங்க குளத்தோட மேலண்டக் கரைல ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்னு பலசரக்கு வியாபாரி ஒர்த்தர் குடியிருந்தார். எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு....... அவரோட தர்மபத்னி பேரு சிவகாமி ஆச்சி! அவா காரக்குடி பக்கத்ல பள்ளத்தூர சேந்தவா. அவாளுக்கு கொழந்தை குட்டி கெடையாது. அவா ஊர்லேர்ந்து நம்பகமா ஒரு செட்டியார் பையன அழைச்சுண்டு வந்து ஆத்தோட வெச்சுண்டு, மளிகைக் கடைய அவன் பொறுப்புல விட்டிருந்தா. செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயஸ் இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் ரெண்டுபேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம்தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார்! நித்யம் காலங்கார்த்தால வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்யமா இருந்தா. இதெல்லாம் தூக்கியடிக்கற மாதிரி, ஒரு விஷயம் என்னன்னா.............அந்த தம்பதிகள் பல வர்ஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டிருந்தா! பிரதி தெனமும் மத்யான்னம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு முகம் கோணாம, அவாளோட கால்களை வாசத்திண்ணையில் ஒக்காரவெச்சு அலம்பி, வஸ்த்ரத்தால தொடச்சு, சந்தனம் குங்குமம் இட்டு, கூடத்ல ஒக்காரவெச்சு, ஏதோ இருக்கறதப் போடாம, ஒவ்வொரு அடியாருக்கும் என்னென்ன பிடிக்கும்னு கேட்டு அதை வாங்கிண்டு வந்து சமைச்சுப் போடுவா. ஆத்ல சமையலுக்கு ஆளெல்லாம் இல்லே! அந்த அம்மாவே தன் கையால சமைச்சுப் போடுவா! அப்டி ஒரு ஒசந்த மனஸ்! எனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியுங்கறேளா? நம்ம மடத்துக்கு வந்துண்டு இருந்த சுந்தரமையர்தான் செட்டியாரோட கணக்கு வழக்கெல்லாம் பாத்துண்டு இருந்தார். அவர்தான் இதெல்லாம் சொன்னார்..... ஒருநாள் நல்ல மழை! ஒரு அதிதியை கூட காணோம். செட்டியார் ஒரு கொடையை எடுத்துண்டு, மஹாமஹக்கொளத்தண்டை வந்து பார்த்தார். கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் ஒர்த்தர் இருந்தார். ஏன்னா.....வழியெல்லாம் தேவாரம் சொல்லிண்டே வந்தார். வீட்டுக்கு போனதும், "என்ன காய் பிடிக்கும்? போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போடறோம்"...ன்னு சொன்னார். வந்தவருக்கோ நல்ல பசி போல இருக்கு! "வெறும் மொளக்கீரை கூட்டும், கீரைத்தண்டு சாம்பாரும் பண்ணா போறும்"ன்னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார். செட்டியாரும் இன்னொரு பக்கம் கீரை பறிக்க ஆரம்பிச்சார்...........ஆச்சியோ இவா ரெண்டு பெறும் பறிக்கறதை கொல்லைப் பக்கமா நின்னுண்டு பாத்துண்டே இருந்தா..... தட்டுக்கள் வந்ததும், அந்த அம்மா என்ன பண்ணா தெரியுமா? ரெண்டு கீரையையும் தனித் தனியா அலம்பி தனித்தனியா வேக வெச்சு பக்வம் பண்ணா. இதை சிவனடியார் கவனிச்சுண்டே இருந்தார். எல்லாம் பண்ணினதும், சிவனடியார் பறிச்ச கீரையை மட்டும் ஸ்வாமிக்கு நைவேத்யம் பண்ணிட்டு, இவருக்கு பரிமாறினா. அடியாருக்கோ பெருமை பிடிபடலை

போஜனம் முடிஞ்சதும், தான் பறிச்ச கீரையை மட்டும் நைவேத்யம் பண்ணினதப் பத்தி கேட்டார். அந்த அம்மா சொன்னா " ஐயா. கொல்லைல கீரை பறிக்கரச்சே நான் பாத்துண்டே இருந்தேன்.....என் பர்த்தா "சிவ சிவ" ன்னு நாமம் சொல்லிட்டே பறிச்சார். அது அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து. மறுபடி நிவேதிக்க அவஸ்யமே இல்லே. அதான் நீங்க கொண்டு வந்த கீரையை மட்டும் நைவேத்யம் பண்ணினேன்". அடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து! ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணின்ட்டு போய்ட்டார்.

இப்படி அதிதி போஜனத்த விடாம பண்ணிண்டு இருந்ததுக்கு "பல ப்ராப்தி" என்னன்னா.........ஒரு சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வரர் கோவில்ல நாலு கால பூஜைக்கும் ஒக்காந்து தரிசனம் பண்ணா...வீட்டுக்கு வந்த ஆச்சி, தனக்கு "ஒச்சலாயிருக்கு"ன்னு சொல்லிட்டு பூஜை ரூம்ல ஒக்காந்தவ, அப்பிடியே சாஞ்சுட்டா.....! பதறிப் போய் "சிவகாமி" ன்னு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும் அந்தம்மா பக்கத்துலயே சாஞ்சுட்டார்...!அவ்வளவுதான்! அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா "சிவ சாயுஜ்யத்த" அடஞ்சுட்டா. அதிதி போஜனத்த விடாம பண்ணின அந்த தம்பதிகளுக்கு கெடச்ச "பதவி" யப் பாத்தேளா? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்திரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன்....."

அதிதி என்பது முதலிலேயே information கொடுத்துவிட்டு வரும் நண்பர்களோ, சொந்தக்காரர்களோ இல்லை. எதிர்பாராமல் வரும் எவருமே அதிதிகள்தான்! "திதி" என்றால், நாள். குறிப்பிட்ட நாளில், நேரத்தில் சாப்பிட வருகிறேன் என்று சொல்லியோ, அல்லது "சாப்பிட வந்துவிடுங்கள்" என்று நாமே ஒரு நாள், நேரம் குறித்து அழைப்பவரோ அதிதி இல்லை. அ-திதி "நேரம் காலம் இல்லாமல் திடீரென்று வருபவர்கள்" தான் அதிதிகள்


shared

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

அட்சதை

அட்சதை க்ஷதம் என்றால் குத்துவது என்று பொருள். (சதக் சதக் என்று குத்தினான் என்று தமிழ் பேப்பரில் எழுதுவதும் இதனால் தான்) அக்ஷதம் என்றால் குத்துப்படாதது என்று பொருள். உலக்கையால் குத்துப்படாத அரிசியை அட்சதை என்கிறார்கள்.

அட்சதை என்றால் குற்றப்படாததும், பழுதுபடாததுமான (நுனி முறியாத) அரிசி, மஞ்சள் பொடி, பசு நெய், மலர்கள் என்பவற்றைச் சேர்த்த கலவை என்பர். அட்சதை என்ற வடமொழிச் சொல்லை ‘அறுகரிசி’ எனவும் அழைக்கின்றனர்.
முழுமைத்துவத்தின் குறியீடாக அட்சதை அமைகின்றது. அரிசியில் உள்ள முனை சந்ததி விருத்தியைக் குறிக்கின்றது. முழுப் பச்சை அரிசி செழிப்பிற்கான குறியீடு ஆகும். மஞ்சள் மங்கலத்தின் வெளிப்பாடு. அறுகு வம்ச விருத்தியின் குறியீடு.

நன் மங்களங்களை நல்குவது மஞ்சள் . அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய்; இது கோமாதாவின் திரவியம் .
பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு கிழ் விளை பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை.
சற்றே யோசித்தால் இயற்கையில் , மணமக்களை வாழ்த்தும் பொழுது மணமக்கள் இரு மாண்பினர்; வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள்;ஒருமித்து வாழத்தக்கவர்கள்; அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் இதுவே தத்துவம்.
ஆகவே உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறையாகும்.
மேலும் தமது வாரிசுகள் புதிதாக தொழில் துவங்கும் பொழுதும் சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும் குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும் , மஹா லக்ஷ்மி பரிபூரண சக்தி கொண்ட நெய்யினைக் கலந்து, உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை ஆசி வழங்கும் பொழுது அந்தப் புதியதாக துவங்கப்பட்ட தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்பது சாஸ்திர உண்மை.

Govindaswamy
Posts: 120
Joined: 21 Feb 2010, 06:55

Re: Aanmeekam...

Post by Govindaswamy »

thanjavooran wrote: அரிசியில் உள்ள முனை சந்ததி விருத்தியைக் குறிக்கின்றது.
அரிசியை விதைத்தால் முளைக்காதே.
கோவிந்தஸ்வாமி

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

அறுகரிசி aṟukarici
, n. அறுகு (அறுகம்புல்) + அரிசி. Mixture of Cynodon grass and rice, used in benediction or worship; அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

கடன் தொல்லை தீர அகத்தியர் பாடல்
செல்வம் பெருகவும், கடன் தொல்லை தீரவும் உதவும் வகையில் பாடல் ஒன்றை அகத்திய முனிவர் எழுதி இருக்கிறார். இந்த பாடலை தினமும் பக்தியுடன் பாடி வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். இதை தனது பாடலிலேயே அகத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1564 முதல் 1604-ம் ஆண்டு வரை தென்பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்த பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிறப்புமிக்க அந்தப்பாடல் வருமாறு:-

மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவை உறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும் விளங்கும் புகழ்க்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவை இருதாள் தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சுகின்றான்.

கொழுதியிசை அளிமுரலும் தாமரையென் பொகுட்டிலுறை கொள்கைபோல
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே!
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே! கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்
கழிபெருங்காதலில் தொழுவோர் வினைதீர அருள் கொழிக்குங் கமலக்கண்ணாய்!

கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான் தனையீன்ற விந்தை தூய
அழுதகும்ப மலர்க் கரத்தாய் பாற்கடலுள் அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரகன்றிட வொளிருஞ் செஞ்சுடரே என வணக்கம் செய்வான் மன்னோ

மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான்
யடைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன் நின் பெருங்கீர்த்தி எம்மனோரால எடுத்துச் சொல்லற் பாற்றோ

மல்லல் நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சியோடும்
வெல் படையில் பகை துரந்து வெஞ்சமரில் வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே!

செங்கமலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில் மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய் வெண் மதியாய் அமரர்க்கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங் கானில் யொருப்பில் மண்ணில்
எங்குளை நீ அவணன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்பதம்மா!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

அதிவீரராம பாண்டியன் இயற்றிய காசி கண்டம் என்னும் நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில் அகத்தியர் திருமகளை வணங்குவதாக இலக்குமி தோத்திரம் என்று அறியப்படும் ஆறு பாடல்கள் உள்ளன. (மேலே கொடுக்கப்பட்டுள்ளது.) இதன் கடைசியாக ஏழாவது பாடலாக அமைந்துள்ளது இதோ:-

என்றுதமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும் இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய் இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர் ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு தவ்வையவண் மருவல் செய்யாள்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

திரு வேங்கடகைலாசம் , திரு பிரக்தயக்ஷம் பாலா,
தொகிப்பினை அளித்தமைக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
03 12 2014

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?

கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம்.

நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. இதற்கு ஸ்தான பலம், ஸம்யோக பலம், த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயற்கையிலேயே அசுபகிரஹமான சனி கிரஹத்தின் 3, 7, 10ஆம் பார்வை பொதுவாக அசுப பலனையே ஏற்படுத்தும். ஆகவே, சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் (சனியின் பார்வை நம் மீது விழக்கூடாது என்பதால்) நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

நவக்கிரகங்களை, தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்த இலங்கை வேந்தன் இராவணன், சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக் கட்டுகளில் படுக்க வைத்து, தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருக்கும். ஆனால், நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் (தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால்), மேல் நோக்கிப் படுக்காமல் கீழ் (தரையை) நோக்கி குப்புறப்படுத்திருந்தது.

இதை கவனித்த நாரதர், இராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, இராவணன் சபைக்கு வந்து, ராவணன் நவக்கிரஹங்களை காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், ராவணா! உனது கட்டளையை அனைவரும் மதித்து, மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள். ஆனால், இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில் கீழ் (தரை) நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா! என்று கூற, ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான்.

தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் ராவணன் பிடிவாதமாக இருக்கனே, சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனியை மாõர்பில் மிதிக்கும்போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை, இராவணனின் மீது விழுந்தது. அது முதல் ராவணனுக்கு அனர்த்தம் ஆரம்பமாயிற்று. நாரதரும் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். புராணத்தில் காணப்படும் இந்த நிகழ்வின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பது சிறப்பானது என்பது தெரிகிறது.

Dinamalar

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

"நாள் என் செயும் எனை நாடிவந்த கோள் என் செயும்
குமரேசர் இரு தாளும் சதங்கையும் தண்டையும் என் கண்முன்னே தோன்றிடினே"

என்று பாடிய அருணகிரி நாதரும்,

கோளறு பதிகம் பாடிய சம்பந்தரும்

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"

என்று சிவனையே நேருக்கு நேர் நோக்கிப் பேசிய நக்கீரரும்
( http://www.shaivam.org/tamil/sta_tiruvi ... l_08_u.htm )

न मृत्युर्न शंका न मे जातिभेदः पिता नैव मे नैव माता न जन्म |
न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यश्चिदानन्दरूपः शिवोहं शिवोहम् ||

என்று பாடிய சங்கரரும்

तत्त्वमसि என்று பறைசாற்றிய வேதாந்தமும் நிறைந்த இந்நாட்டில்,
இந்த மூட நம்பிக்கைகள் என்று ஒழியுமோ? ஆயிரம் பாரதிகள் வந்தாலும் கூடுமோ?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Shri. Govindan..I like your views but, I find you also too much obsessed..over it..

Even tough I have much to contradict about the above views on Saturn,
I just read it as another point of view and leave it as such..

Neither Kalyana varma , nor Parsaran or not even Bangalore venkat raman or J Krishna murthy of present day

subscribed to such a negative view on saturn..

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

Powerful Ghana Patham method of Chanting........

.Thousands of years ago, our ancestors had similarly devised many brilliant ways of preserving our Vedas and making sure that no error is possible in the oral transmission of Vedas. The "data" was stored then in the human brain (weighing merely 200 grams). The human mouths were used for transmission while ears for reception and sound was the medium. And this was done from generation to generation.

Some excerpts from the article of Dharmatma Dr. Yegnasubramanian (President of Sringeri Vidya Bharati Foundation, USA) article, Rescuing Our Vedic Priesthood,

"Vedic Chanting – a perfectly formulated oral tradition

The Vedas are called ‘Sruti”- which means, what is heard.

It is never read from a text, since the recitation of any Veda mantra should conform to the following six parameters, namely,

varNa (letters);
svara (intonation);
mAtrA (duration of articulation);
balam (force of articulation);
sAma (uniformity), and
santAna (continuity).

If any of these parameters is not maintained, it would change the meaning of the mantra itself, leading to even diametrically opposite effects!

In the absence of a written text, our rishis had devised many ways to prevent even a small error to creep in to the recitation of the veda-mantras. These fool-proof methods used to chant each veda-mantra in various patterns and combinations are known as : vaakya,pada, krama, jaTA, mAlA, SikhA, rekhA, dvaja, danDa, ratha, and Ghana.

Among these, vAkya, pada, krama, jaTa and Ghana methods of chanting are more popular and let us analyze them only here.

Vaakya or samhitA pATha is to recite a mantra in a sentence straight with appropriate intonations. In sentences, some of the words have to be conjoined in chanting.

In padapAtha, a sentence is broken down to ‘words’ or pada’s, which gives the student the knowledge of each word.

The Ghana method is more difficult than the above where the combinations of words will be
1-2-
2-1-
1-2-3-
3-2-1-
1-2-3;

2-3-
3-2-
2-3-4-
4-3-2-
2-3-4 and so on. A priest who can recite in the Ghana method is given the title ghanapAThi.

These methods of complicated recitations in a oral tradition were devised in order to preserve the purity of the word, the sound, intonation, pronunciation, accent and sound combinations of the Veda mantras. By repeating the words in manifold ways, the correct tally of words was also kept which has naturally ensured its purity.

Just to illustrate what it takes for a priest to earn the title of a ghanapAThi, let us briefly analyze what is involved in the training. For illustration, let us consider only one portion of the krishNa yajur veda, called the taittiriya samhitA. In this portion there over 2,000 pancASat’s (1 pancASat = 50 pada’s), amounting to 109,308 pada’s. We can roughly assume each pada to have 3 syllables, thus totaling ~330,000 syllables. In the Ghana method of chanting, each syllable gets repeated 13 times, thus amounting to 4,290,000 utterances. And each of these utterances have to conform to all the six parameters discussed earlier.

Only when a person becomes capable of reciting this in any order asked, gets the title of a ghanapAThi. This is for only one samhitA portion in krishna yajur veda alone. Then there is Sukla yajur veda, rig veda, sAma veda, and atharva veda. There were scholars proficient in more than one veda as evident from the names dvivedi, trivedi and caturvedi. In addition, there are other samhitA portions, brAhmaNa portions, AraNyaka poritons, and the Upanishads, in the vedic scriptures alone.

After proficiency in ghanapATha, some learn lakshaNa-ghanapATha, which deals with the characteristics of each letter, its origin, how it has to be emphasized in a mantra, its varNa, the presiding deity, etc etc. Then there are purANa’s, dharma-Sastras etc. All these were learnt without any book, tape or any such instruments in the oral tradition, and were stored just in ~200 grams of the human brain! And the most interesting thing is, it was not that one or two individuals who were proficient in this dharma, but an entire society was well versed in this! Such a scholarship takes well over 25 years of intense education in a gurukulam, in addition to observing all the religious disciplines!"

Just listening to this powerful Ghana patham alone can have an amazing effect on us.

Video: https://www.youtube.com/watch?v=YUdggOY ... A&index=30

Src: http://www.brahmanworld.org/conv_fls2k6 ... sthood.pdf

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend
கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா?

2030-ஆம் ஆண்டில் காந்த துருவங்கள் இடம் மாறும் என்று ஜே.எம்.ஹார்வுட் என்பவர் 1970 ஆம் ஆண்டிலேயே கூறிவிட்டார். இப்படி மாறுவதால் உலகில் பேரழிவுகள் ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். இதிலலென்ன உண்மை உளது என்று காண்போம்.

இந்துக்கள் உலகத்தின் வயதை நான்காகப் பிரித்துள்ளனர்: கிருத யுகம்(4), த்ரேதா யுக (3), த்வாபர யுகம் (2), கலியுகம் (1). ஏன் இப்படி தலைகீழ் வரிசையில் 4,3,2,1 என்று யுகத்திற்குப் பெயரிட்டார்கள்?
ஏன் என்றால் சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்டை இழந்துவீட்டது. அப்போது ராம பிரான் தோன்றினார். த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்களை – அதவது 50 விழுக்காட்டை இழந்து விட்டது. அப்போதுதான் கிருஷ்ணன் தோன்றினார். யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் க்ண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் போய் உலகமே அழியும். பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இப்படி மாறிமாறி வரும் யுகங்களுக்கு காலம் எவ்வளவு என்றும் இந்துக்கள் கணக்கிட்டனர். உலகில் மற்ற நாகரீகங்கள் எல்லாம் 20-ன் மடங்குகளிலும் (மாயா நாகரீகம்), 40-ன் மடங்குகளிலும் (செமிட்டிக் மதங்கள்) சிறிய எண்களுடன் நின்றுவிட்டன. இந்துக்களோவெனில் பல லட்சம் வருடங்களைச் சொன்னதோடு இதற்கு முடிவு என்பதே இல்லை. இந்த வட்டச் சுழல்—மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும் என்றும் மனித ஆண்டு, தேவ ஆண்டு, பிரம்மாவின் ஆண்டுகள் என்பன வெவ்வேறு என்றும் சொன்னார்கள். இது ஏதோ கற்பனையில் பிறந்த வருடங்கள் என்று 200 ஆண்டுகளுக்கு முன் வரை நினைத்தார்கள். இப்பொழுது பல்வேறு உலகங்கள் பல்வேறு வேகத்தில் சுற்றும்போது இவை எல்லாம் சாத்யம் என்று தெரிகிறது.

இதற்கு என்ன விஞ்ஞான விளக்கம் என்று எண்ணிப் பார்த்தால் விடை கிடைக்கவில்லை. இப்பொழுது விஞ்ஞானம் முன்னேற, முன்னேற புதுப்புது விளக்கங்கள் கிடைக்கின்றன. இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:–
கிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள்
த்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள்
த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்
கலியுகம் – 432, 000 ஆண்டுகள்
இந்த நாலு யுகங்களையும் சேர்த்து சதுர்யுகம் என்பார்கள். 8,640,000,000 ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். அதுதான் பிரம்மாவின் ஒரு நாள். அதுபோல அவர் நூறு ஆண்டுகள் வாழ்வார். அவருக்குப் பின்னால் வேறு ஒரு பிரம்மா வருவார். இந்தக் காலச் சுழற்சிக்கு முடிவே இல்லை.
கலியுகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் ஓரளவு விஞ்ஞான விளக்கம் சொல்லலாம். நம்முடைய பூமி ஒரு காந்த உருண்டை. எப்பொழுதும் காந்த மண்டலத்தை உருவாக்கிய வண்ணம் இருக்கும். ஏன் இப்படி நடக்கிறது. நாம் வாழும் பூமியின் மேல் ஓடு வெறும் எட்டு மைல்கள்தான். அதன்மீதுதான் நாம் வசிக்கிறோம். அதற்குக் கீழே அதள பாதாளத்துக்குப் போனால் பூமியின் வயிற்றில் அது நெருப்பைக் கட்டிக்கொண்டு தன்னைத் தானே சுற்றுகிறது. அது மட்டுமா? தான் தட்டாமாலை சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியானது சந்திரனையும் தன்னோடு இழுத்துக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனோவெனில் நமது பூமி உள்பட எல்லா கிரஹங்களுடனும் பால்வெளி மண்டலத்தைச் சுற்றிவருகிறது. இப்படி பூமி சுற்றுவதால், கடலைக் கடைந்தது போல பூமியின் வயிற்றைக் கடையும் போது பூமியே காந்த சக்தி உருவாக்கும் ‘டைனமோ’ ஆகிவிடும்.
இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல காந்தத்திலும் – அதாவது பூமி என்னும் கிரஹத்தைச் சுற்றி இருக்கும் – காந்த இரு துருவங்கள் உண்டு. வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரிகிறது. பூமியின் காந்த மண்டலம்தான் நம்மை சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களிl இருந்து காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும். உயிரினங்களே இரா.

மாக்னெட்டொகெட்டொன்
காந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும். அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம்.
இது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் கவலை அடந்துள்ளனர். 2030-ல் இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது. இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர். கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது.
துருவங்கள் மாறும் நாலு லட்சம் அண்டுகள் என்பது கிட்டத்தட்ட கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது. நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பர். தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பர். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர். கடந்த காலத்தில் இப்படி மாறிய போது உலகம் அழியவில்லை என்று கல் படிம அச்சுகள் காட்டுகின்றன.ஆனால் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பது அவர்கள் தரப்பு வாதம். மற்றவர்களோவெனில் டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் அழிந்தது இதனால்தான் என்பர்.

ஒரு சுனாமி வந்த பின்னர்தான் அதன் பேரழிவுச் சக்தியை நாம் உணர்ந்தோம். அது போல ஒரு காந்த துருவ மாற்றம் ஏற்பட்ட பின்னர்தான் நமக்கு அது பற்றி விளங்கும் என்றும் அவர்கள் கூறுவர்.
காந்த துருவ மாற்றம் மெதுவாகத்தான் நடைபெறும்; அது நடக்க 1000 ஆண்டு ஆகும் என்பது போல நாமும் யுகங்களுக்கு இடையே துருவ சந்தி என்று இடைக்கால, இன்டர்வல் – வைத்திருக்கிறோம். இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் கலியுகம் என்பது காந்தப் புலன் மாற்றம் அடையும் காலம் என்று எண்ணத் தோன்றுகிறது. பெரிய இடைவெளி, சின்ன இடைவெளி என்று இருக்கும் என்றும் அதற்குப் பின்னரே யுகங்கள் முழுதும் மாறுபட்டிருக்கும் என்றும் புராணங்கள் பகரும். இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கையில் விஞ்ஞானம் வளர, வளர நமக்குப் புராணங்கள் சொன்னது உண்மையே என்ற உணர்வு பலப்படுகிறது.

சந்திரனில், விண்கலம் இறங்கிவிட்டது, செவ்வாய்க்கு விண்கலம் போய்ச் சேர்ந்துவிட்டது, வாயேஜர் என்னும் விண்கலம் சூரிய மண்டலத்தையே தாண்டிப் போய்விட்டது என்றெல்லாம் பத்திரிக்கையில் வரும் செய்திகளைக் கேள்வியே கேட்காமல் நம்பும் நம்மவர், நமது முன்னோர்கள் —– நம்மிடம் தேர்தலில் வோட்டோ, கையில் பணமோ கேட்காமல்—— நமது நன்மைக்காக எழுதிவைத்ததை நாம் நம்ப வேண்டாமா? அதுதான் அறிவுடைமை அன்றோ!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

எங்கே புத்தன்?.........புத்தரை விடவும் கருணையானவர் தாயாக மட்டும் தானே இருக்க முடியும்!

பகவான் புத்தரைத் தரிசித்து விட வேண்டும் என்ற வெறியுடன் வீட்டை விட்டுப் புறப்பட்டான் ஒரு இளைஞன். அவன் எங்குப் போனாலும் புத்தர் அங்கிருந்து கொஞ்சம் முன்பாகத்தான் புறப்பட்டுப் போனார் என்று ஒரே பதில் கிடைத்தது. அவன் முகம் துவண்டு போனது. வழியில் தாம் சந்தித்த மற்றொரு மூத்த புத்த சந்யாசியிடம் பகவான் புத்தரைத் தரிசிக்காமலேயே தம் வாழ்வு முடிந்து விடுமோ என்று கதறினான்.

முதிர்ந்த அந்த சந்யாசி அன்புடன் அவனது கரங்களைப் பற்றி ஆறுதல் கூறினார், "வருத்தப்படாதே மகனே.. உன் வீடு திரும்பு.. நீ புத்தரைத் தரிசிக்கும் பாக்யம் உள்ளவன் என்றால் எப்படியும் தரிசிப்பாய். புத்தர் கருணையானவர்" என்றார்.

அவனோ, "ஐயா.. நான் முன்பின்னாகப் புத்தரைப் பார்த்ததே இல்லை. வழியில் எங்காவது திடீர் என்று புத்தரைக் காண நேர்ந்தால் நான் எப்படி அடையாளம் கண்டுக்கொள்வேன். தவறவிட்டு விடக் கூடாதே" என்று அழுதான்.

"மகனே! வழி முழுவதும் சந்திப்பவர்களின் கால்களை உற்றுநோக்கியபடி போ... யார் தமது வலது கால் செருப்பை இடது காலிலும் இடதுகால் செருப்பை வலது காலிலும் அணிந்திருக்கிறாரோ அவரே புத்தர்.. அந்தத் திருவடிகளைச் சரணம் என்று இறுகப் பற்றிக்கொள்" என்று கூறினார்.

வழி முழுவதும் அவ்வாறு பார்த்தபடியே ஊர் திரும்பினான். ஒருவர் கூட அவ்வாறு காட்சியளிக்கவில்லை. தனக்கு நல்லருள் கிடைக்கவில்லையே என்று வருந்தியபடி தன் வீடு வந்து கதவைத் தட்டினான். அவனது அழைப்பொலியைக் கேட்டதும்,, அடிவயிற்றில் பிள்ளை உதைத்த போது உணர்ந்த ஆனந்த உணர்வுடன் தன்னை தனியே தவிக்க விட்டுச் சென்ற பிள்ளையை காண அவன் வயது முதிர்ந்த தாய் ஓடோடி வந்து கதவை திறந்தாள்.

இனி புத்தரை காண முடியாது என்று தன் சகல நம்பிக்கையையும் இழந்திருந்த மகன், கதவைத் திறந்த தன் தாயின் கால்களைப் பழக்கதோஷத்தால் கவனித்தான். என்ன ஆச்சரியம்? அவள் வலதுகால் செருப்பு இடது காலிலும், இடது கால் செருப்பு வலது காலிலும் இருந்தது. மகனை பார்த்த மகிழ்ச்சியில் செருப்பை மாற்றி அணிந்து வந்திருந்தார் அந்த தாய்.

மகனுக்கு மூத்த சந்யாசியின் சொல் நினைவில் மின்னியது. மெலிந்து மூத்து பாசத்தால் நடுங்கும் தாயின் மெல்லிய பாதங்களைக் கட்டிக்கொண்டு, 'பகவானே' என அழத் தொடங்கினான். புத்தரை விடவும் கருணையானவர் தாயாக மட்டும் தானே இருக்க முடியும்!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

Ari alaal Devi illai aiyan aiyaaranaarke- Appar........... The place

where St. Thayagaraja Lived & Composed his Kritis.




அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்
------------------------------------------------------------------------------------
'மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.'
- அப்பர்

தஞ்சை மாநகரிலிருந்து சுமார் பத்து கிமீ தொலைவில் உள்ள திருவையாற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் பல சிறப்புகள் கொண்டது. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இது 51ஆவது தலமாகும்.

வட பாரதத்திலுள்ள காசிக்கு இணையாக தென்னாட்டில் காவிரிக்கரையில் ஆறு திருத்தலங்கள் கருதப்படும். அவையாவன:

1. திருவெண்காடு
2. சாயாவனம்
3. மயிலாடுதுறை
4. திருவிடைமருதூர்
5. திருவாஞ்சியம் ; மற்றும்
6. திருவையாறு - ஆகியவையாம்.

திருவையாற்று சப்தஸ்தானத் தலங்களில் இது முதன்மையான தலம். சிலாத முனிவரின் மகனாகப் பிறந்து, ஈசன் அருளால் சிரஞ்சீவித்துவம் பெற்று, கணங்களுக்குத் தலைவருமான நந்தி பகவான் தன் திருமணத்திற்குப் பிறகு திருவையாறு ஐயாறப்பர் கோயிலைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கும் தன் இல்லாளுடன் சென்று ஈசனைத் தொழுதாராம். அச்சிறப்பின் சம்பிரதாயமாக, இன்றும் சித்திரைத் திருவிழாவின் கடைசி நாளன்று திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் உற்சவர் திருவையாறைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கு பவன் வருவது வழக்கம் அவை திருவையாறு சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படும். அவையாவன:

1.திருவையாறு,
2.திருப்ப ழனம்
3. திருச் சோற்றுத்துறை.
4. திருவேதிக்குடி
5.திருப் பந்துருத்தி,
6. திருக்கண்டியூர்; மற்றும்
7. திருநெய்த்தானம் - ஆகியவையாகும்.

தலபுராணம்

சிலாத முனிவருக்கு மகனாகப் பிறக்கையில் நந்திபகவானுக்கு நான்கு கரங்கள் இருந்தன. முனிவர் தம் குழந்தையை இக்கோயிலின் ஈசன் முன் இட்டபோது குழந்தையின் இரு கரங்கள் மறைந்து அது மிக அழகுடைத்து விளங்கலாயிற்று. எம்பெருமான் அக்குழந்தைக்கு அம்மையின் பால், நந்தியின் வாயுறை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் என்ற ஐந்து விதமான புனித நீர்களால் அபிஷேகம் செய்யவே, இத்தலத்து இறைவன் ஐயாறப்பர் என்று பெயர் பெற்றார்.

நந்திதேவர் இங்கு ஏழுகோடி முறை ருத்ரஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாடப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் பெயராகவே இத்தலம் திருவையாறு என அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

இத்தலத்து அர்ச்சகர் ஒரு முறை காசிக்குச் சென்று உரித்த காலத்தில் திரும்ப வரமுடியாமல் போக, அவர் உருவில் தான் வந்து தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டான், தன்னடியார்கள் மீது மாறாத அன்பு கொண்ட ஐயாறப்பன்.

இத்தலத்தில் கைலாயக் காட்சியைக் கண்டார் அப்பர். மானசரோவரில் மூழ்கிய அவர் இத்தலத்துத் திருக்குளத்தில் எழுந்தார் என்பர்.

ஆண்களை விடவும் பெண்கள் செய்யும் தர்மகாரியங்களுக்குப் பலன் அதிகம் என்று உணர்த்தும் பொருட்டு உலகத்தில் அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் தாயார் தர்ம்சம்வர்த்தினி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளாள். அவளை எண்ணிச் செய்யும் காரியங்கள் எந்நேரமும் நன்மையே விளைக்குமென்பதை உணர்த்தும் முகமாக இங்கு அம்மனுக்கு அஷ்டமி இரவன்று திருமண வைபவம் செய்வது வழக்கம்.

இங்குள்ள அம்பிகை இடக்கரம் இடுப்பில் ஊன்றியும் மேற்கரங்களில் சங்கு சக்கரத்துடனும் காட்சி அளிப்பதால், ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாகக் கருதப்படுகிறாள். இதன் காரணமாக, திருவையாறு எல்லைக்குள்ளாகப் பெருமாளுக்குத் தனிக் கோயில்கள் கிடையாது என்பர்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி முயலகனுக்குப் பதிலாக ஆமையை மிதித்த உருவுடன் காட்சி தருகிறார்.இவருக்கு ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்றே பெயராகும். இவரை ஹரி வணங்கித் தொழுததாக ஐதீகம்.

இங்கு செஞ்சடையான் விரிந்த சடையுடன் இருப்பதாக நம்புவதால், அதை மிதிக்கக் கூடாதென சந்நதியைச் சுற்றுவது தடையாகும். இங்கு ஓரிடத்தில் நின்று ஐயாறப்பா என்று குரல் கொடுத்தால், ஏழுமுறை எதிரொலிக்கும் என்பர்.

நாயன்மார்களான சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாம். அப்போது, சுந்தரர் பதிகம் பாட வெள்ளம் ஒதுங்கி நின்று வழி விட்டதாகவும், அவ்விருவரும் இத்தலத்தை தரிசித்ததாகவும் கூறுவர்.

ஆலயத்தின் தென்புற வாயிலில், சுசரிதன் என்னும் சிறுவனை யமனிடமிருந்து காத்த ஆட்கொண்டார் சந்நதி உள்ளது. இங்கு முதலில் வணங்கி விட்டுப் பிறகு கோயிலில் நுழைய வேண்டும்.

மூலவர் ஐயாறப்பன். பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன் என்ற பெயர்களாலும் வழங்குவர்.

தாயார் தர்மசம்வர்த்தினி. தமிழில் அறம் வளர்த்த நாயகி.

தலச்சிறப்பு

முக்தியளிக்கும் மூலத்தானங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தலமேகுவோர்க்கு ஈசன் திருவடி நிழல் கிட்டும் என்பது திண்ணம்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்து ஈசனைப் பிரார்த்திக்கின்றனர்.
யமபயம் போக்கும் தலமுமாகும் இது.

தலப்பண்

ஐயம் விடுத்தெம்மை ஆட்கொண்ட நேயனாய்
ஐயாற்றில் வாழ்கின்ற ஆதிமுதல் நாயகனை
கையிரண்டு கொண்டே வணங்காத வாழ்வென்றும்
உய்யா தறிவாய் உலகு
ஓம் நமச்சிவாய!
அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம் ------------------------------------------------------------------------------------ 'மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.' - அப்பர் தஞ்சை மாநகரிலிருந்து சுமார் பத்து கிமீ தொலைவில் உள்ள திருவையாற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் பல சிறப்புகள் கொண்டது. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இது 51ஆவது தலமாகும். வட பாரதத்திலுள்ள காசிக்கு இணையாக தென்னாட்டில் காவிரிக்கரையில் ஆறு திருத்தலங்கள் கருதப்படும். அவையாவன: 1. திருவெண்காடு 2. சாயாவனம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர் 5. திருவாஞ்சியம் ; மற்றும் 6. திருவையாறு - ஆகியவையாம். திருவையாற்று சப்தஸ்தானத் தலங்களில் இது முதன்மையான தலம். சிலாத முனிவரின் மகனாகப் பிறந்து, ஈசன் அருளால் சிரஞ்சீவித்துவம் பெற்று, கணங்களுக்குத் தலைவருமான நந்தி பகவான் தன் திருமணத்திற்குப் பிறகு திருவையாறு ஐயாறப்பர் கோயிலைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கும் தன் இல்லாளுடன் சென்று ஈசனைத் தொழுதாராம். அச்சிறப்பின் சம்பிரதாயமாக, இன்றும் சித்திரைத் திருவிழாவின் கடைசி நாளன்று திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் உற்சவர் திருவையாறைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கு பவன் வருவது வழக்கம் அவை திருவையாறு சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படும். அவையாவன: 1.திருவையாறு, 2.திருப்ப ழனம் 3. திருச் சோற்றுத்துறை. 4. திருவேதிக்குடி 5.திருப் பந்துருத்தி, 6. திருக்கண்டியூர்; மற்றும் 7. திருநெய்த்தானம் - ஆகியவையாகும். தலபுராணம் சிலாத முனிவருக்கு மகனாகப் பிறக்கையில் நந்திபகவானுக்கு நான்கு கரங்கள் இருந்தன. முனிவர் தம் குழந்தையை இக்கோயிலின் ஈசன் முன் இட்டபோது குழந்தையின் இரு கரங்கள் மறைந்து அது மிக அழகுடைத்து விளங்கலாயிற்று. எம்பெருமான் அக்குழந்தைக்கு அம்மையின் பால், நந்தியின் வாயுறை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் என்ற ஐந்து விதமான புனித நீர்களால் அபிஷேகம் செய்யவே, இத்தலத்து இறைவன் ஐயாறப்பர் என்று பெயர் பெற்றார். நந்திதேவர் இங்கு ஏழுகோடி முறை ருத்ரஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாடப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் பெயராகவே இத்தலம் திருவையாறு என அழைக்கப்படுவதாகவும் சொல்வர். இத்தலத்து அர்ச்சகர் ஒரு முறை காசிக்குச் சென்று உரித்த காலத்தில் திரும்ப வரமுடியாமல் போக, அவர் உருவில் தான் வந்து தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டான், தன்னடியார்கள் மீது மாறாத அன்பு கொண்ட ஐயாறப்பன். இத்தலத்தில் கைலாயக் காட்சியைக் கண்டார் அப்பர். மானசரோவரில் மூழ்கிய அவர் இத்தலத்துத் திருக்குளத்தில் எழுந்தார் என்பர். ஆண்களை விடவும் பெண்கள் செய்யும் தர்மகாரியங்களுக்குப் பலன் அதிகம் என்று உணர்த்தும் பொருட்டு உலகத்தில் அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் தாயார் தர்ம்சம்வர்த்தினி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளாள். அவளை எண்ணிச் செய்யும் காரியங்கள் எந்நேரமும் நன்மையே விளைக்குமென்பதை உணர்த்தும் முகமாக இங்கு அம்மனுக்கு அஷ்டமி இரவன்று திருமண வைபவம் செய்வது வழக்கம். இங்குள்ள அம்பிகை இடக்கரம் இடுப்பில் ஊன்றியும் மேற்கரங்களில் சங்கு சக்கரத்துடனும் காட்சி அளிப்பதால், ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாகக் கருதப்படுகிறாள். இதன் காரணமாக, திருவையாறு எல்லைக்குள்ளாகப் பெருமாளுக்குத் தனிக் கோயில்கள் கிடையாது என்பர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி முயலகனுக்குப் பதிலாக ஆமையை மிதித்த உருவுடன் காட்சி தருகிறார்.இவருக்கு ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்றே பெயராகும். இவரை ஹரி வணங்கித் தொழுததாக ஐதீகம். இங்கு செஞ்சடையான் விரிந்த சடையுடன் இருப்பதாக நம்புவதால், அதை மிதிக்கக் கூடாதென சந்நதியைச் சுற்றுவது தடையாகும். இங்கு ஓரிடத்தில் நின்று ஐயாறப்பா என்று குரல் கொடுத்தால், ஏழுமுறை எதிரொலிக்கும் என்பர். நாயன்மார்களான சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாம். அப்போது, சுந்தரர் பதிகம் பாட வெள்ளம் ஒதுங்கி நின்று வழி விட்டதாகவும், அவ்விருவரும் இத்தலத்தை தரிசித்ததாகவும் கூறுவர். ஆலயத்தின் தென்புற வாயிலில், சுசரிதன் என்னும் சிறுவனை யமனிடமிருந்து காத்த ஆட்கொண்டார் சந்நதி உள்ளது. இங்கு முதலில் வணங்கி விட்டுப் பிறகு கோயிலில் நுழைய வேண்டும். மூலவர் ஐயாறப்பன். பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன் என்ற பெயர்களாலும் வழங்குவர். தாயார் தர்மசம்வர்த்தினி. தமிழில் அறம் வளர்த்த நாயகி. தலச்சிறப்பு முக்தியளிக்கும் மூலத்தானங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தலமேகுவோர்க்கு ஈசன் திருவடி நிழல் கிட்டும் என்பது திண்ணம். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்து ஈசனைப் பிரார்த்திக்கின்றனர். யமபயம் போக்கும் தலமுமாகும் இது. தலப்பண் ஐயம் விடுத்தெம்மை ஆட்கொண்ட நேயனாய் ஐயாற்றில் வாழ்கின்ற ஆதிமுதல் நாயகனை கையிரண்டு கொண்டே வணங்காத வாழ்வென்றும் உய்யா தறிவாய் உலகு ஓம் நமச்சிவாய!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

ஞானானந்தகிரி ஸ்வாமிகள்

(நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல்)

பல வருஷங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை. திருவண்ணாமலையில் அருணா
சலேஸ்வரரை தரிசித்த பின், பூண்டி வந்தேன். அங்கு பூண்டி மகானின்
அனுக்கிரகம் பெற்றுக் கொண்டு, திருக் கோவிலூர் ஸ்ரீஞானானந்த தபோவனம்
வந்தேன். மாலை ஐந்து மணி இருக்கும்.

ஸத்குரு ஸ்ரீஞானானந்தகிரி ஸ்வாமிகள் பக்தர் களுக்கு அருளாசி வழங்கிக்
கொண்டிருந்தார். ஒவ் வொருவராக நமஸ்கரித்து எழுந்து, பிரசாதம் பெற்றுச்
சென்றனர். அடியேனும் நமஸ்கரித்து விட்டு ஓரமாக அமர்ந்தேன். குழந்தை
மாதிரி சிரித்துப் பேசும் குரு நாதனின் முகத்தைப் பார்ப்பதே ஆனந்தம்!

அப்போது, ஆஸ்ரமத்தில் பணியாற்றும் வயதான வேலைக்காரர் ஒருவர் அங்கு
வந்தார். அடியேனுக்கு அவரை நன்றாகத் தெரியும். அவரது இயற்பெயர்
நினைவில்லை. ஒல்லியானவர் என்பதால், அவரை ஸத்குருநாதனை உட்பட அனைவரும்
சோனி என்று அழைப்பர். அவர் கோபிக்க மாட்டார். உடம்பு முழுவதும் திருநீறு
பூசி, முழங்கால்களுக்குக் கீழ் வரை உடுத்திய நான்கு முழ வேட்டியுடன் ஸத்
குருநாதனை நமஸ்கரித்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தார்.

அவரைப் பார்த்ததும் குருநாதனுக்கே சிரிப்பு வந்தது. ''என்ன சோனி... என்ன
விசேஷம்? ஸ்ரீராமனுக்கு முன்னால நிக்கற ஹனுமன் மாதிரி அப்படியே
நிக்கறமே... ஏதாவது சமாசாரம் உண்டோ?'' என்று கேட் டார் ஸத்குருநாதன்.
சோனி உடல் நெளிந்து, தலையைச் சொறிந்தார். குருநாதன் விடவில்லை.

சிரித்தவாறே, ''நாம ஒடம்ப நெளிச்சு தலய சொறியறது லேர்ந்தே, ஏதோ முக்கிய
மான விஷயத்துக்காக 'அடி' போட வந்துருக்கோம்னு புரியறது. சரி... அது
என்னனுதான் சொல்வோமே'' என எதுவுமே தெரியாத மாதிரி அனைத்தும் அறிந்த அந்த
சித்த புருஷர் கேட்டார்!

அதற்கு சோனி தயங்கியபடி, ''அத குருநாதன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட
சொல்லப் போறேன். எங்கள மாதிரியானவங்களுக்கு எல்லாமே நீங்கதானே சாமி''
என்று முடிப்பதற்குள், ''சரி... சரி... நாம வந்த விஷயத்தச் சொல்வோம்''
என்றார் ஸ்வாமிகள்.

சோனி மென்று விழுங்கியபடி, ''அது... அது... வேற ஒண்ணுமில்லீங்க குருநாதா!
எம் மவன் வயித்துப் பேத்திக்கு கண்ணாலத்துக்கு (திருமணம்) ஏற்பாடு
செஞ்சுருக்கேன். இன்னும் நாலு... அஞ்சு நாளுக் குள்ளாற முகூர்த்த ஓல
எழுதியாவணும். பிறகு அடுத்த மாசம் திருக்கோவிலூர்ல கண்ணாலம் நடத் தோணும்.
குருநாதன்தான் அருளு செஞ்சு கூட்டிவைக்கோணும்!'' என்று பவ்வியமாகப்
பேசிவிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து எழுந்தார்.

உடனே ஸ்வாமிகள், ''ஓஹோ... ஒம் பேத்திக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணப்
போறயாக்கும். பேஷ்... பேஷ்! பண்ணுவோம். நாம ரொம்பவும் சந்தோஷப் படறோம்.
பாண்டுரங்கன் கிருபைல எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலையே வேண்டாம்'' என
பூரணமாக ஆசீர்வதித்தார்.

மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார் சோனி. அதை
உணர்ந்த குருநாதன், ''அதிருக்கட்டும்... நமக்கு எத்தனை பசங்கள்?'' என்று
வினவினார். உடனே சோனி, ''நமக்கு ஒரே ஒரு மவந்தான். அவனுக்கு மூணும்
பொட்டப் புள்ளைங்க. இப்ப கண்ணாலம் ஆவப்போறவ தான் மூத்தது. மீதி, ரெண்டும்
சின்னப் புள்ளைங்க. நீங்கதான் கிருபை பண்ணணும்...'' என்று குழைந்தார்.
ஸ்வாமிகள் முகத்தில் 'எல்லாம் புரிந்தது' போன்ற ஒரு புன்முறுவல்.

இருந்தும், புரியாத மாதிரி, ''நம்ம பேத்தி கல்யாணத்துக்கு
சாமிகிட்டேருந்து நாம என்ன எதிர்பாக்கறோம்?'' என்று கேட்டார்.
சோனிக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. அவர், ''மூர்த்த ஓல எழுதறதுலேருந்து,
திருக்கோவிலூருல ஒரு சின்ன சத்திரத்த வாடகைக்கு புடிச்சு, சீரு
செனத்தியல் லாம் செஞ்சு, கண்ணாலத்த நடத்துறதுக்கு ஐயாயிரம் ரூவா
புடிக்குது குருநாதா. இந்த ஏழ மேல கருண வெச்சு அந்த ரூவாய நீங்கதான்
அனுக் கிரகம் பண்ணணும்!''_என்று பிரார்த்தித்தார்.

குருநாதன் அதைக் காதில் வாங்காதது போல், ''அது சரி... ஒம் பையன் என்ன பண்
றான்?'' என்று கேட்டார்.
சோனி, ''அவுனுக்கு, திருக்கோவிலூர்ல அரிசி மண்டியில எடுபிடி வேலை. அறுவது
ரூவா சம்பளம். சாப்டது போக, ஒண்ணும் மிச்சம் புடிக்க முடியலே.
எப்டியாச்சும் நீங்க தான் ஐயாயிரத்த அனுக்கிரகம் பண்ணணும்'' என்று
உருகினார்.
உடனே ஸ்வாமிகள் சற்றுக் கோபம் தொனிக்க, ''நா ஒரு சந்நியாஸி. எங்கிட்ட
வந்து பணங்காசெல்லாம் கேக்கறயே... இது என்ன ஞாயம்? நம்மால அதெல்லாம் பண்ண
முடியாது'' என்று கூறிவிட்டு எழுந்தவர், அருகில் இருந்த மடத்தைச் சேர்ந்த
ஒருவரை அழைத்து, ''உள்ளே போய் ஒரு உரிச்ச தேங்காயும், ஒரு ரூபா பணமும்
கொண்டு வா!'' என்று பணித்தார். கொண்டு வந்தார் அவர்.

இரண்டையும் பெற்றுக் கொண்ட ஸ்வாமிகள், சோனியை அருகே அழைத்தார். உரித்த
தேங்காயை யும், ஒரு ரூபாய் நாணயத்தையும் அவர் கையில்
அனுக்கிரகித்துவிட்டு, ''சோனி! இந்த ரெண்டையும் குருநாதனுடைய ஆசீர்வாதமா
வாங்கிக்கோ... ஒம் பேத்தி கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும்!'' என்ற படி
எழுந்து போய் விட்டார்.

அவற்றை மாறி மாறிப் பார்த்தபடி விக்கித்து
நின்றார் சோனி. அவர் கண்கள் பனித்தன. அப்போது இரவு சரியாக 7.30 மணி.
தபோவனத்துக்குள் டூரிஸ்ட் பஸ் ஒன்று வந்து நின்றது. அது குஜராத் மாநில
ரிஜிஸ்டிரேஷனுடன் கூடிய பஸ். அதிலிருந்து ஆண்களும் பெண்களுமாக ஐம்பது
பேர் இறங்கினர். அவர்கள் மண்டபத்துக்குள் நுழைவதற்கும், ஸத்குருநாதன்
தனது ஆசனத்தில் வந்து அமர்வதற்கும் சரியாக இருந்தது.

அங்கேயே நின்றிருந்த
சோனியை புருவங்களை உயர்த்தி ஒரு தடவை பார்த்தார் ஸ்வாமிகள். பரம
பக்தியோடு தேங்காயுடன் நின்றிருந்த அவரைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு
சிரிப்பு வந்து விட்டது. வந்தவர்கள் அனைவரும் ஸத்குருநாதனை
நமஸ்கரித்தனர். அவர்களை ஆசீர்வதித்த ஸ்வாமிகள், இந்தியில் கேட்டார்:
''நாமெல்லாம் குஜராத்திகளா?''
''ஆமாம் ஸ்வாமிஜி'' என்றனர் அனைவரும் கோரஸாக இந்தியில். சம்பாஷணை தொடர்ந்தது.
ஸத்குருநாதன், ''நீங்களெல்லாம் யாத்திரையாக எங்கே போகிறீர்கள்?'' என்று கேட்டார்.
அவர்களில் ஒருவர், ''ராமேஸ்வரம் ஸ்வாமிஜி! வழியிலுள்ள முக்கிய ஸ்தலங்களை
தரிசிக்க உத் தேசம்!'' என்றார்.

ஸ்வாமிகள், ''ரொம்ப சந்தோஷம்... யாத்திரை «க்ஷமமா பூர்த்தியடைய
ஆசீர்வதிக்கிறோம்!'' என்றார்.மீண்டும் ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு
அமர்ந்தனர். அப் போது மடத்தைச் சேர்ந்த ஒருவர், பெரிய ரஸ்தாளி வாழைப்பழத்
தார் ஒன்றையும், பெரிய வாளியில் பசும் பாலும் கொண்டு வந்தார்.
வழங்கும்படி ஜாடை காட்டினார் ஸ்வாமிகள். அவர்கள் சாப்பிட்டு முடித்தனர்.
அவர்களை பஜனைப் பாடல்கள் சில வற்றைப் பாடுமாறு சொல்லிக் கேட்டு
மகிழ்ந்தார். இப்போது மணி 8.30.

பிறகு சோனியை சைகை காட்டி அழைத்தார் ஸ்வாமிகள். குஜராத்தி பக்தர்களை
நோக்கி, ''இவர் கையில் ஒரு தேங்காய் வைத்திருக்கிறார். உங்களில் யாராவது
ஒருத்தர் அதை உடைக்கணும்... முடியுமா?'' என்று சிரித்தபடி கேட்டார்.
அனைவரும் எழுந்து நின்றனர்.
அவர்களில் ஒருவரிடம் தேங்காயைக் கொடுக்கச் சொன்னார் ஸ்வாமிகள். ''இதை
உடைக்க முடியலேன்னா நூறு ரூபாய கிருஷ்ணார்ப்பணமாக கொடுக் கணும்...
சம்மதமா?'' எனக் கேட்டார். குஜராத்திகள் சம்மதித்தனர்.
தேங்காயை வாங்கியவர், அருகில் இருந்த கருங்கல் பாறையில் அதை உடைக்க
முற்பட்டார்.

ம்... ஹ§ம்! அது உடையவே இல்லை! ஆச்சரியத்தோடு ஸ்வாமிகளைப்
பார்த்தார். சலனம் இன்றி அமர்ந்திருந்தார் குருநாதன். சோனிக்கு ஜாடை
காட்டி, அவரது மேல் வஸ்திரத்தைத் தரையில் விரிக்கச் சொன்னார். அவரும்
விரித்தார். பிறகு தேங்காய் உடைக்க முற்பட்டவரிடம், 'ஸ்ரீ
க்ருஷ்ணார்ப்பணம்' என்றபடி நூறு ரூபாயை சமர்ப்பிக்கச் சொன்னார்
ஸத்குருநாதன்.

தொடர்ந்து ஆண்& பெண் என ஒவ்வொருவராக தேங் காயை உடைக்க முயன்றனர்.
'ஸ்ரீக்ருஷ்ணார்ப்பண' சத்தமே கேட்டது! சோனியின் வஸ்திரம் ரூபாய்
நோட்டும், சில்லறையுமாக நிரம்பியது. அந்தத் தேங்காய் அப்படியே இருந்தது!
இப்போது இரவு மணி 10.
ஸ்வாமிகள் சிரித்தவாறு சோனியை அழைத்து, ''இத்தனை பேராலயும் உடைக்க
முடியலே! நாம உடைச்சுப் பாப்பமே... என்ன!'' என்றார்.
உடனே சோனி, ''இத்தனை பலசாலிங்களாலயே முடியலீங்களே குருநாதா! பலமே இல்லாம
சோனியா இருக்கற நான் மட்டும் எப்டி ஒடைக்கப் போறேன்!'' என நெளிந்தார்.
ஸ்வாமிகள், விடவில்லை. ''நாம அப்டி சொல்லப்டாது! முயற்சி பண்ணுவோமே!''
என்று உற்சாகப் படுத்தினார்.


சோனிக்கு தைரியம் வந்தது. அவர் தேங்காயைக் கையில் எடுத்து, ''குரு நாதன்
அருள் இருந்தா எல்லாமே நல்லபடியா நடக்கும்!'' என்று கூறி விட்டு,
'குருநாதனே துணை... குரு நாதனே துணை... குருநாதனே துணை!' என மூன்று தடவை
உச்சரித்து விட்டு மும்முறை ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தார்.
ஸ்வாமிகள் அர்த்தபுஷ்டியுடன் புன்னகைத்தார். தேங்காயுடன் பாறையை
நெருங்கிய சோனி, பலம் கொண்ட மட்டும் தேங்காயை பாறையில் அடித்தார். என்ன
ஆச்சரியம்! அந்தத் தேங்காய் சரி பாதியாக உடைந்தது!

அனைவரும் கரகோஷம் செய்தனர். ஸ்வாமிகள் எந்த விதச் சலனமுமின்றி
அமர்ந்திருந்தார். படபடப்போடு ஓடிப்போய் குருநாதனின் பாதங்களில் விழுந்து
வணங்கினார் சோனி.
அவரை ஏறிட்டுப் பார்த்த ஸ்வாமிகள், ''இவ்வளவு பேராலயும் ஒடைக்க முடியாத
தேங்காய, நாம சர்வ சாதாரணமா ஒடச்சுட்டோம். அதனால, வஸ்திரத்துல சேர்ந்
திருக்கற பணம் நம்மைத்தான் சேரணும். கொஞ்சம் பொறுப்போம்!'' என்று
கூறிவிட்டு மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து பணத்தை எண்ணச் சொன்னார்.
அவர் எண்ணி முடித்துக் கூறிய தொகை ரூபாய் 5,501.

ஸ்வாமிகள் சிரித்தவாறு சோனியிடம், ''பேத்தி கல்யாணத்துக்கு நாம
எதிர்பார்த்தது ஐயாயிரம் ரூபாய். ஆனா, பாண்டுரங்கன் இந்த பக்தாள் மூலமா
அனுக்கிரகம் பண்ணினது 5,501 ரூபாய். பேத்தி கல்யாணத்த சந்தோஷமா
நடத்துவோம். 'ஸ்ரீகிருஷ்ண அனுக்கிரகம்'னு சொல்லிண்டே வஸ்திரத்தோடு ரூபாய
எடுத்துப்போம்!'' என்றார்.

உடனே நெடுஞ்சாண்கிடையாக குருநாதனின் பாதங்களில் விழுந்த சோனி குலுங்கிக்
குலுங்கி அழுதார். இதைப் பார்த்த இந்த அடியவனின் கண்களும் குளமாயின!
''எல்லாருக்கும் ராத்திரி போஜனம் தயாரா இருக்கு. சாப்பிட்ட பின் இரவு
இங்கேயே தங்கிட்டு, காலையில் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்படலாம்!''
என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் ஸ்வாமிகள்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

அசாதாரண நிகழ்வுகள் 11 !

நொச்சியம் மாமியுடன் பேசி விட்டு மணச்சநல்லூர் வழி திருவெள்ளறை,திருப்பைஞ்சிலி நோக்கி போய்க்கொண்டிருந்த போது கண்ணில் தென்பட்டது 'ஆதி நாயக பெருமாள் கோவில்' என்ற பதாகை. உடனே காரை நிறுத்தி விசாரித்தேன். பழமையான கோவில் 'இப்பிடியே போனா லெப்ட்ல ஒரு ரோடு வரும். அதுல கொஞ்ச தூரம் உள்ள போனா கோயில் வந்துடும். இந்த ஊர்ல கூட ஒரு கோயில் இருக்கு, பாத்துட்டு போங்க சார்'. அதிர்ஷ்டம். சிறு ஆலயம். செம்பியன் மாதேவி எடுப்பித்தது. பெருமாளின் நாமம் 'அழகிய மணவாளன்'. பதினாறு அடி உயரம். ஸ்ரீதேவி, பூதேவி உடன் உறை. தரையிலிருந்து பன்னிரெண்டு அடி. பிரமித்துப் பார்த்துவிட்டு, சுற்றி வந்தால் ராமாயண காட்சிகள் அடிப்பாகத்தில். பட்டர் தந்த புளியோதரை, தயிர் சாத பிரசாதத்தை உண்டு விட்டு வெளியே வந்தோம்.

அடுத்து ஆதி நாயக பெருமாள். உள்ளே நுழைந்ததும் அறிவிப்புப் பலகை 'உலுக் கானின் படையெடுப்பின் போது ரங்கனை காக்கும் பணியில் உயிர் நீத்த பன்னிரெண்டு ஆயிரம் தொண்டர்களுக்கு ஒரு சேர ஆடி அமாவாசை அன்று அருகிலிருக்கும் கால்வாயின் கரையில் திதி கொடுக்கப்படுகிறது'. இது ஆர்வத்தை தூண்ட, வலை தளத்தில் தேடிப்பிடித்து, ஸ்தல புராணங்கள், கோவிலொழுகு (கொஞ்சம்) போன்று பல ஆதாரங்களை படித்து எழுதப்பட்டது தான் 'அழகிய மனவாளம்' தொடர்.

1323 C.E.. துக்ளக் (உலுக்கான்) திருவரங்கத்தை தாக்கி நாசம் செய்கிறான். பிள்ளை லோகாச்சாரியர் ரங்கனின் உற்சவ விக்ரஹத்துடன் திருச்சி, அழகர் கோவில் வழி ஆனமலை அடையும் போது உயிர் துறக்கிறார் (ஜோதிஷ்குடி - காளையார் கோவிலில் தான் உயிர் நீத்தார் என்றும் கூறப்படுகிறது). பெருமாளின் அடியவர்கள் மதுரை - நாகர்கோவில் - திருஅனந்தன்புரம் - கள்ளிக்கோடு தடத்தில் சென்று மேல்கோட்டை சேருகின்றனர்.

இங்கு, சுவாமி வேதாந்த தேசிகன் தலைமையில் குலசேகரன் படியை ஒட்டி மூலவரை மறைத்து சுவர் எழுப்பப்படுகிறது. பின், சுதர்சன பட்டரின் (ஸ்ருத பிரகாசிகா) இரு புதல்வர்களோடு பிரேதங்களுக்கு இடையே மூச்சு விடாமல் படுத்துக் கொண்டு சுல்தான் படையினரிடம் இருந்து தப்பி சத்தியமங்கலம் வழியே திரு நாராயண புரம் (மேல்கோட்டை) அடைந்து சுந்தர ராஜ பெருமாளை தரிசிக்கிறார்.

அதற்குப்பின் திருப்பதி காடுகளில் மறைத்து வைக்கப்படும் உற்சவரைப் பற்றி 1371 C.E வரை எதுவும் அறியப்படவில்லை. 1336 C.Eல் விஜயநகர பேரரசை ஹரிஹரனும், புக்கனும் ஸ்தாபிக்கின்றனர். புக்கனின் மகன் கம்பன்னா பெரும் படை எடுத்து வந்து சுல்தான் ஆட்சியை ஒழித்துக் கட்டுகிறார். அவரின் தளபதி கோபன்னாவினால் செஞ்சியில் வைக்கப்பட்டிருக்கும் பெருமாள் திருமேனி அரங்கம் வந்தடைகிறது. அங்கு ஏற்கனவே வேறொரு உற்சவர் இருக்க யார் நாற்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன் திருவரங்கத்தை அலங்கரித்தவர் என்ற கேள்வி எழுகிறது. கண்களை கட்டிக் கொண்டு இருவரின் உடைகளையும் துவைத்து அலசும் வண்ணான் 'அட, இது நம் பெருமாளின் ஆடை' என்கிறான். அந்த விக்ரஹம் 'நம்பெருமாள்' என்கிற நாமத்துடன் உற்சவ மூர்த்தி யாகிறது.

இதன் முத்தாய்ப்பாக, கம்பன்னனின் மனைவி கங்கா தேவி எழுதிய 'மதுரா காவியம்' (அ) வீர கம்பண்ண சரித்திரம் 1912ல் திருஅனந்தன்புர நூலகத்தில் வேறு ஓலை சுவடிகளுக்கு இடையே தற்செயலாக கண்டுபிடிக்கப்படுகிறது. அதில், மதுரை மீனாக்ஷி அவனுக்கு கனவுக்காட்சியாக வீர வாளை கொடுத்து 'நானும் என் சகோதரனும் எப்படி துன்புறுகிறோம் பார். உடனே போர் செய். வெற்றி உனக்கே' என்று ஆசி அளித்த செய்தியும் காணப்படுகிறது.

சரி, தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வருவோம். பிள்ளை லோகாச்சார்யர் ஒரு பக்கம் போக, இன்னொரு பக்கம் ஒரு பெருங்கூட்டம் அழகிய மணவாளம் அடைகிறது. இவர்களில் பலர் 1371ல் நடக்கும் போரின் போது ஒற்றர்களாக சேவை செய்கின்றனர். இதில், சித்த மருத்துவர்களுக்கும், தேவரடியார்களுக்கும் பெரும் பங்கு உண்டு (வெள்ளை கோபுரம் - 1323 C.E. ஆசை காட்டி கோபுரத்தின் மீது அழைத்துச் சென்று சுல்தானின் தளபதியை கீழே தள்ளிக் கொன்று தானும் குதித்து உயிர் விட்ட வெள்ளையம்மாளின் நினைவாக வழங்கப்படுகிறது).

இவர்களைத் தவிர சுமார் பன்னிரெண்டாயிரம் பேர் அரங்கன் கோவில் பிரகாரங்களில் தங்கி விடுகின்றனர். போர் பயிற்சி ஏதும் இன்றி உலுக்கானின் படையோடு மோதி 'ரங்கா, ரங்கா' என்று அவன் பெயர் அழைத்தபடியே உயிர் விடுகின்றனர். இவர்களுக்குத்தான் ஆதி நாயக பெருமாள் கோவில் அருகில் இருக்கும் ஓடைக்கரையில் ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கப்படுகிறது.


இந்த அற்புத சரித்திர நிகழ்வை பதினெட்டு எபிசோடுகளில் இங்கு எழுதியது மிக மிக அசாதாரண நிகழ்வே. அரங்கன் அருளே.



Author: Krishnamurthy Krishnaiyer

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

---தெரிந்த உண்மை தெரியாத விபரம்


கோவில் அதிசயங்கள்

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.
ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!
அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சி தருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை. குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர் சிலையின் கண்களும். சில நூறு மைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் elதூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண் வடிவில் உள்ளது.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend
Kunjitha paadam

திருச் சிற்றம்பலம்...

ஸ்ரீவித்யா உபாஸகர்களின் முக்கண் க்ஷேத்ரங்களாக
விளங்குவது காஞ்சிபுரம், திருவாரூர், சிதம்பரம் இம்
மூன்று ஸ்தலங்களுமாகும்.சிதம்பரம் ஆகாயத்தலமாகும்.
இம்மூன்று ஸ்தலங்களிலும் உறையும் அம்பிகைகள் பெயர்களில்
காம என்ற சொல் சம்பதப்பட்டிருக்கும். காஞ்சியில் காமாக்ஷி
திருவாரூரில் காம கலா என்ற கமலாம்பிகை, சிதம்பரத்தில்
சிவகாம சுந்தரி.
காமனை எரித்த சிவபெருமானை, தன்னை மோகிக்க்கச்செய்து,
அவரை காமேஸ்வரனாக்கித், தந்னை சிவகாமசுந்தரியாக
ஆக்கிக் கொண்டவள் அம்பிகை.
ஒன்றாக இருப்பதும், பிரிவதும், பிரிந்த இரண்டும் ஒன்றாகச்
சேரத்துடிப்பதும் உலக இயற்கை. ஒன்றாக இருந்த ப்ரம்மம்
சிவனாகவும், சக்தியாகவும் பிரிந்து , இரண்டாக இருந்த சிவமும்
சக்தியும் ஒருங்கிணைந்து அர்த்த நாரீஸ்வரராகவும் ஆகியது.
காமக்கலையாகிற அம்பிகை காஞ்சியில் இறைவனைப்
பூஜித்து உலகிற்கு அவரைப் பூஜிக்கும் முறையை அறிவித்து,
பின் அவருடன் ஐக்யமானாள்.
இவளே கமலாம்பிகையாக திருவாரூரில் விளங்கி சிவனைக்
குறித்துத் தவம் இருந்து, யோகம் மூலம் அவரை அடையும்
முறையினை உலகிற்கு எடுத்துக் காட்டி இறைவனுடன் ஒன்று
சேர்ந்தாள்.
இவளே சிவகாமசுந்தரியாய் இறைவனை ஆடவைத்து, அதர்கு
ஏற்ப ஆடலும், பாடலும் ஒன்றாக லயமாகும் போக முறையில்
இறைவனுடன் ஒன்று பட்டாள்.
தாய்ப்பாலையே உணவாகக் கொண்டுள்ள குழந்தைகளுக்கு
நொய் வந்தால் அது நீங்க உண்ணும் மருந்தினை குழந்தையின்
குடல் தாங்காது எனக் கருதி,தாய் அம்மருந்தினை உண்டு அதன்
பயன் குழந்தைகள் பெற உதவுமாபோல் அன்னை சிவகாமி நம்
பிறவி நை நீங்க இறைவன் திருக்கூத்தினை இடைவிடாது கண்டு
அதன் பலனை நமக்களிக்கிறாள் என்பது அருளாளர்கள் கண்ட
உண்மையாகும்.

சிவகாமசுந்தரிக்கு தில்லப் பெருங்கோவிலின் வடக்குப்
பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தத்திற்கு அருகே மேற்கரையில்
தனிக்கோவில் அமைந்துள்ளது.அம்பிகை நான்கு கரங்களுடன்
நிந்ற கோலத்தில், கிளி மலர் இவற்றைஏந்தி ஒரு கையைத் துடை
மேல் வைத்து மிக அழகான கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.

சிதம்பரம் சிவ சக்தி ஐக்ய க்ஷேத்ரம். நடராஜர் உடுக்கையை
அடிக்கும்போது முதலில் 9 தடவையும், பின் 5தடவையும் அடித்தார்.
அதாவது, நவாக்ஷரியு, பஞ்சாக்ஷரமும் இணைந்த நிலை.
இங்குள்ள சிதம்பர ரஹஸ்யத்தில் ஸ்ரீசக்ரமும், சிவசக்ரமும் இணைந்துள்ளது.
இங்குள்ள தீக்ஷிதர்கள் நவாக்ஷரியும் பஞ்சக்ஷரி உபதேசமும்
பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு.

நடராஜாவின் அந்த தூக்கிய பாதமே அம்பிகையினுடையது.
அதற்கு குஞ்சிதாங்க்ரி என்ற பெயரிட்டுத் தனி வழிபாடு
அக்காலுக்கு மட்டும் உண்டு. அதுவே குஞ்சித நடராஜன்
எனக் கூறுகிறோம். இக்காலுக்கு அணியும் அலங்காரத்தினையே
நமது மஹாபெரியவா கடைசி காலத்தில் தன் சிரசில் அணிய விரும்பி
அங்கு போக விருப்பம் தெரிவித்தபோது, தில்லை தீக்ஷிதர்கள்
தாமாகவே அவரது விருப்பத்தினை இறை வழியாக உணர்ந்து
அவரிடம் கொணர்ந்து சேர்த்ததும் அதனை அவர் உவந்து தம் சிரஸில்
அணிந்ததும் நாம் யாவரும் அறிந்த ஒர் விஷயம். அதனையே
குஞ்சிதபாத சங்கரன் என்று நாம் அறிவோம். குஞ்சித பாத சங்கரன்
இருக்கும் இடத்தில் நோய்கள் அண்டாது.
.

ஸ்ரீஉமாபதி சிவாசாரியார் அவர்கள் குஞ்சிதபாதஸ்தவம் என
300ஸ்லோகங்கள் கொண்ட அருமையான நூலை இயற்றியிருக்கிறார்.
இவர் வழிபட்ட ஸ்ரீசக்ரம் அம்பிகையின் ஆலயத்தில் ஒரு புறத்தில்,
தனி அறையில் இன்றும் வழிபடப்பெறுகிறது.

இந்த சிவகாமி இறைவன் நடனத்திற்குத் தாளம் போடுவது போன்ற
அழகான விக்ரஹத்தை இன்றும் கும்பகோணம் நாகேஸ்வர ஸ்வாமி
ஆலயத்தில் காணலாம்.
திருச் சிற்றம்பலம்..

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

திருவண்ணாமலையில் அம்மைக்கு உண்ணாமுலையம்மன் என்று பெயர். இப்பெயரிட்டதற்குக் காரணம், சிவனுக்கும் உமைக்கும் திருமணமாகாத நிலை என்றோர் விளக்கம் கண்டேன். அது சரியாக எனக்குப்படவில்லை. வலைத்தளத்தில் தேடினேன் - கிடைக்கவில்லை.

யாரேனும் விளக்கமளிக்க இயலுமா? நன்றி.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

The left part of Lord Ardhanariswara (i.e. Devi) is called Apitakuchamba (अपीतकुचाम्बा = உண்ணாமுலையம்மன்). The right portion (i.e. Shiva) is called Aruna.
In this avatar, as part of Ardhanariswara, Devi is called the "Mother with unsuckled breast".

Reference may be made to Arunachala Mahatmyam. This may be of help: http://arunachalamahatmyam.blogspot.in/ ... chala.html

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

pb,
Thanks. I referred to the link. A similar Tamil version also is found. But, somehow, the explanation is not very satisfactory.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

அம்புப்படுக்கையில்இருந்தார்பீஷ்மர். அந்தக்காட்சியைப்பார்த்து, தர்மபுத்திரரைஅழைத்துச்சென்றார்பகவான் கிருஷ்ணர். “அணையும்நெருப்பைப்போலேஇருக்கிறார்பீஷ்மர். அவர்போனால், தர்மத்தைச்சொல்லயார்இருக்கிறார்கள்…? போ! அவர்சொல்வதைப்போய்க்கேள்” என்றுதர்மபுத்திரரைஅனுப்பினார்.

‘ஏன்பீஷ்மர்போய்விட்டால்பகவானேஇருக்கிறாரே– தர்மத்தைச்சொல்ல…?’ என்றுநமக்குக்கேட்கத்தோன்றும்.

பகவான்இருந்துபிரயோஜனமில்லை; அவரைவிளங்கச்செய்யக்கூடியமகான்கள்இருக்கணும்! இந்தஉண்மைக்குசாட்சியமாகத்தான்பகவானே பீஷ்மர்அம்புப்படுக்கையிலேஇருந்தபட
ிசொன்னஅந்தவிஷ்ணுசஹஸ்ரநாமத்தைக்கேட்டார். பலபேர்கேட்டார்கள். அவர்களுடன்அந்தவாசுதேவனேகேட்டான். அவன்சொன்னதுகீதை; கேட்பதுசஹஸ்ரநாமம். இப்படிஅவன்ஆனந்தமாய்க்கேட்டதேஅவன்பெருமை, உயர்வு.

Shared

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

stavyaH stava-priyaH stOtraM stutiH stOtA - vishNu Sahasra nAma 679-683
http://www.shivkumar.org/music/vishnu-s ... anings.htm

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

திருமூலர் திருமந்திரம்.......(2893)
=============================

கூறையுஞ் சோறும் குழாயகத் தெண்ணையும்
காறையும் நாணும் வளையலுங் கண்டவர்
பாறையி லுற்ற பறக்கின்ற சீலை போல்
ஆறைக் குழியில் அழுந்துகின்றாரே.----

பொருள்:
=======
கூறை எனபது,உடலைப் போர்த்திய தோல்;

சோறு என்பது சதை.(கத்தாழைக்குள் சோறு இருப்பது போல்);

குழாயகத்தெண்ணை என்பது எலும்பு நரம்புகள்,குருதி;

காறை,நாண் வளையல்-கழுத்து,இடை,கை போன்ற உடல் உறுப்புகள்.

மொத்தமாகக் குறிக்கப்படுவது "அழியும் இந்த உடல்".

இந்த உடலின் மேல் விசேஷ கவனம் செலுத்திப் போற்றிப்
பாதுகாத்து, உடலில் உள்ள "புலன்களின்" மயக்கத்தால்,
இந்த உடலுக்குள் உறைகின்ற மறை பொருளாக உள்ள
பரம்பொருளை, ஆத்ம விசாரத்தால் அறிந்து கொள்ளாது
மறப்பவர்கள், மீண்டும் பிறவிக் குழியில் வீழ்வர்;

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

Ashare
Ambal sannidhi
சிவன் கோயில்களில் மூன்று விதமாக அம்மன் சன்னிதியை அமைக்கலாம் என்று ஆகம் சாத்திரங்கள் கூறுகின்றன.

ஒன்று,

சிவன் சன்னிதி எந்த திசை ( கிழக்கு அல்லது மேற்கு ) நோக்கி அமைந்துள்ளதோ அந்தத் திசை நோக்கி அம்மனையும் பிரதிஷ்டை செய்வது.
அதாவது, சுவாமியும் அம்பாளும் ஒரே திசை நோக்கி காட்சி தருவர். இதை ஸமான வீஷணம் என்பர்.
கல்யாணக் கோலம் என்றும் வழக்கத்தில் இருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இந்த அமைப்பிலேயே உள்ளது.

இரண்டாவது,

சிவன் சன்னிதி கிழக்கு அல்லது மேற்கு முகமாக இருந்தாலும் அம்மன் சன்னிதி தெற்கு முகமாகவே அமைந்திருக்கும்.
இதை அனுக்கிரஹவீஷணம் என்பர்.
சுவாமியை தரிசிக்கும் முறையில் அம்மன் பிரதிஷ்டை அமைந்திருக்கும்.
சுவாமியின் அனுக்கிரகத்தைப் பெற்று நமக்கு அருள்வதாகப் பொருள். இந்தநிலை அனேகமாக எல்லா கோயில்களிலுமே உள்ளது.

முன்றாவது,

சுவாமி சன்னிதி மேற்கு நோக்கி இருந்தால் அம்மன் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கும்.
நேர் எதிராகப் பார்த்துக்கொள்ளும் நிலை.
அபிமுகவீஷணம் என்பர்.
எதிர்க்காட்சி என்றும் வழக்கத்தில் உள்ளது.
இந்த நிலை, மிக அபூர்வமானது.

திருக்கடவூர்,
காளஹஸ்தி போன்ற தலங்களில் தரிசித்து மகிழலாம். அருள்பாலிப்பதில் எந்த வேறுபாடும் கிடையாது.
மூன்றுமே ஒன்றுதான்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

காரிய ஜெயம் உண்டாகும் அனுமான் அஷ்டகம்

நாம் செய்யும் காரியங்கள் ஜெயமாக வேண்டுமானாலும் ஆஞ்சனேயரை வழிபட்டால் போதும். காரிய ஜெயம் உண்டாகும். அன்பர்களின் ÷க்ஷமத்தைக் கருதி இந்த ஸ்தோத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம்.

வைஸாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே
பூர்வ பாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய ச
தாநா மாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே

ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராயச
உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீஹநூமதே
திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தாரய ச
தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீஹநூமதே

பக்தரக்ஷண ஸீலாய ஜாநகீ சோக ஹாரிணே
ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே
பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே
ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே

ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே
ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச
கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே

வேத வியாசர் அருளிச் செய்த மஹா மந்திரங்கள்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

நந்தி காதுகளில் ரகசியம்

நந்திஸ்வரர் காதுகளில் நாம் சொல்லலாமா ? அப்படி சொல்லுவது என்றால் என்ன சொல்ல வேண்டும்........

நம் நாட்டில் சிலை வழிபாடு மிக மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. என்பதனை நாம் அறிவோம். எந்தனை அற்புதங்களை கண்ட சித்தர்கள் இதில் எந்த வித குழப்பமும் இல்லாமல் நமக்கு கற்களை தேர்ந்து எடுத்து கொடுக்க காரணம் நாம் அறிந்து கொள்ளவேண்டும் . கற்கள் , பாறை என்று மட்டும் அவர்கள் நினைக்க வில்லை, இவைகள் ஒளியும் ஒலியும் சேர்ந்தது என்று அவர்கள் புரிந்து கொண்டனர். ஆம் கற்களை தேர்வு செய்வதில் மிக மிக வல்லமை படைத்தவர் கருவுரார் சித்தர்.. போகர் இவரிடம் தாம் சிலைகளை செய்ய சொல்வார். ஒரு கல்லை (பாறை )
பார்த்து அதில் 32 லக்ஷணம் அமைந்து இருந்தால் அவை வழிபாட்டிற்கு உகந்தது என்று முடிவு செய்வார் இவர் . பாறையின் உள்ளே தேரை இருந்தால் அவைகள் ஒச்சம் என்று விட்டுவிடுவார்.

மிக சிறந்த சிற்பி ஆசான்களை கொண்டது இலங்கை பட்டிணம். இங்கிருந்து நிறைய நபர்கள் அரவு நாடான நம் நாட்டிக்கு பாறைகளை தேடி வந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது . பல்லவர்கள் சிற்பங்கள் செய்வதில் சிறந்து விளங்கினார்கள் . பரஞ்சோதி அடிகள் காஞ்சிபுரம் வந்த பிறகு தான் வாதாபியில் இருந்து விநாயகர் சிலை காஞ்சிபுரம் வந்தது . பிறகு கணபதி உருவம் செய்வது பால பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கப் பட்டது , இந்த சிலைகள் நாட்டில் எல்லா இடத்திற்கும் எடுத்து செல்லப்பட்டது. சித்தர்கள் மலைகளில், பூமியில் உள்ள வித்தியாசமான பாறைகளை தேர்வு செய்து அவைகளை லிங்கமாக ,நந்தியாக உண்டாக்கி வழிபாடு செய்தனர் என்பது நாம் அறிந்தது .

பாறைகள்வெயில்காலத்தில் குளிர்ச்சி தன்மைகளை உண்டாக்கும் , மழை காலத்தில் உஷ்ண தன்மைகளை உண்டாக்கும். இதை சமணர்கள் அறிவார்கள். ,ஆகவே தான் அவர்கள் குன்றுகளை தேர்வு செய்தனர் . மன்னன் சித்தர்கள் சொல்படி கோவிலை கட்டிய பின் அவைகளை பற்றியும் ,முறைகளை பற்றியும் தெரிந்து கொள்ள சாதுக்களை, சித்த நெறியில் உள்ளவர்களை அழைத்து வந்து கோவிலை ஆராய்ந்து தவறுகள் இருந்தால் சொல்லும் படி கேட்பார் . இப்படி ஒரு காஞ்சிபுர அரசன் சித்தர் நெறிகளை உடையவரை தம் கோவிலுக்கு அழைத்து வந்தான். 32 லக்ஷனமும் அருமையாக ஒன்று சேர்ந்த ஒரு நந்தி சிலைக்கு உயிர் கொடுத்தால் உயிர் உண்டாகும் என்று அவர் அறிந்து இருந்தார். கருவுரர் சித்தரை நினைத்து நந்தியின் காதுகளில் அவர் மந்திரம் சொல்ல நந்தி அசைந்து எழுந்தது , மன்னன் வியந்தான்,மக்கள் அதிசியப் பட்டனர். இதன் பிறகு உயிர் பெற்ற நந்தி கோவிலை விட்டு வெளியை சென்றது . வேடிக்கை பார்த்த மக்கள் பரவசம் அடைந்து பின்னே சென்றனர் . பசி எடுத்த நந்தி வயலில் பயிர்களை உண்ணத் தொடங்கியது. அது வரை விபரிதம் உணராத மக்கள் பயம் அடைந்தனர் . நந்தி பிறகு தோப்புகளில் நுழைந்து விட்டது .

நந்தியினால் பிரச்சனைகள் அதிகம் ஏற்பட மக்கள் அரசனிடம் முறையிட்டார்கள். பிரச்னை உணர்த்த அரசன் சித்தரிடம் கல் நந்தியை மீண்டும் கல்லாக்கி விட வேண்டும் என்றார் . சித்தர் கல் நந்தியை பிடித்து வர சொல்லி அதன் காதுகளில் மந்திரம் சொல்ல அது மீண்டும் கல்லானது . பிறகு அதன் கால்களின் குழம்பில் ஒரு நகத்தை பேர்த்து எடுத்தார் . 32 லக்ஷணத்தில் 1 குறைந்தபடியால் அது கல்லாகி போனது . நந்தி மீண்டும் உயிர் பெறாது என்று உறுதி கொடுத்து வனம் சென்றார்.
.
அவர் நந்தியின் காதுகளில் ஏதோ சொன்னார் , நாமமும் அப்படி சொல்ல வேண்டும் என்று மக்கள் நினைத்து இன்றும் நந்தியின்காதுகளில் அவர்கள் குறைகள் ,தேவைகளை சொல்கிறார்கள் . இது தவறு . நந்தியிடம் நாம் சொல்ல வேண்டியது (காதுகளை தொடாமல் )

சிவாய நம ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ சிவ ஓம் ..........

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

இரவு மூன்றாம் யாமம் முடிந்ததும் மூன்று மணிக்கு நாகஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு ‘நிர்மால்ய தரிசனம்’ என்று பெயர். நிர்மால்ய தரிசனத்தின்போது பகவானுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்கள், மாலைகள் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைவர்.

விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் கோவிலுக்குச் சொந்தமான செக்கில் ஆட்டப்பட்டதாகும். தைலாபிஷேகத்துக்குப் பின் அந்த தெய்வத் திருமேனியை வாகைத் தூளால் தேய்ப்பர். இதற்கு ‘வாகை சார்த்து’ என்று பெயர். அடுத்து சங்காபிஷேகம் நடைபெறும். அப்போது புருஷ ஸூக்தம் சொல்வர்.

இதன் இறுதியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் பூர்ணத் திருமஞ்சனம் செய்வர். கிட்டத்தட்ட இது கும்பாபிஷேகம் செய்து வைப்பது போல் ஆகும்.

இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியமாகப் படைப்பர். அப்போது உன்னி கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார் குருவாயூரப்பன்.

காலை பூஜை இதன் பின் ஆரம்பமாகும். இதற்கு உஷத் பூஜை என்று பெயர். இந்த பூஜையின்போது நெய் பாயசமும் அன்னமும் பிரதான நைவேத்தியம். இது முடிந்து நடை திறக்கும்போது பகவான் திருமுடியில் மயிற்பீலி, நெற்றியில் திலகம், இடையில் பொன் அரைஞாண், திருக்கரங்களில் ஓடக்குழல், மஞ்சள்பட்டு ஆகிய ஆபரண அலங்காரங்களுடன் தரிசனம் தருவார்.

இத்தனை பூஜைகளும் காலை ஆறு மணிக்குள்ளாக பூர்த்தி ஆகி விடும்.

பகவானுக்கு சாயங்காலம் (சந்தியாகாலம்) மட்டும்தான் தீபாராதனை செய்கிறார்கள். ஏழடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரி விளக்கு என்று பல தீபங்கள் ஏற்றி ஆராதனை செய்து, கடைசியில் கற்பூர ஆரத்தி நடக்கும். மங்கள ஆரத்தியின்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்து குருவாயூரப்பனை வணங்குவதாக ஐதீகம். பந்தரடி (பந்தீரடி) என்று சொல்லப்படும் இந்த பூஜையை வேதம் ஓதும் நம்பூதிரிகள் செய்கின்றனர். இதற்கு அன்னமும், சர்க்கரை, பாயசமும் முக்கியமான நைவேத்தியம்.

ஸ்ரீகுருவாயூரப்பனுக்குப் பிடித்த நைவேத்தியம், பால் பாயசம், நெய் பாயசம், சர்க்கரை பாயசம், அப்பம், திரிமதுரம், மற்றும் பழ வகைகள்.

குருவாயூர் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை மேல்சாந்தி, கீழ்சாந்தி மற்றும் தந்திரிகள் என்று அழைப்பர்.

மேல்சாந்தி என்றால் தலைமை குருக்கள் என்று பொருள். முக்கியமான பூஜைகள், அலங்காரங்கள், அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களை செய்பவர் மேல்சாந்தி. இவரைத் தவிர மற்றவர்களுக்கு மூல விக்கிரகத்தைத் தொடும் உரிமை கிடையாது. கோயிலின் மேல்சாந்தி விடியற்காலை இரண்டரை மணிக்கே ஸ்ரீகோயிலின் கருவறைக்குள் நுழைந்து விடுவார். மேலும் உச்சி பூஜை முடியும் 12.30 மணி வரை பொட்டுத் தண்ணீர்கூட அருந்த மாட்டார். அப்படி ஒரு ஆசார முறை இங்கே கடைப் பிடிக்கப்படுகிறது.

ஒரு மேல்சாந்தி தொடர்ந்து ஆறு மாத காலமே பணி புரிய வேண்டும். இந்த ஆறு மாத காலமும் குருவாயூர் கோயிலை விட்டு அவர் வெளியே எங்கும் செல்லக்கூடாது. கோவிலின் உள்ளே தங்குவதற்குத் தனி இடம் வழங்கப்படும். இந்த ஆறு மாத காலமும் பிரம்மச்சர்ய விரதம் அவசியம்.

கீழ்சாந்தி எனப்படுபவர் உதவி அர்ச்சகர் என்று வைத்துக் கொள்ளலாம். விளக்கு ஏற்றுவது, அபிஷேகத்துக்குப் புனித நீர் எடுத்துத் தருவது, மலர் மாலைகளை எடுத்துத் தருவது, நைவேத்தியம் தயாரிப்பது இவை கீழ்சாந்தியின் வேலை. பரம்பரையாக வாரிசு உரிமை பெற்றவர்களே கீழ்சாந்தியாக நியமிக்கப்படுவார்கள்.

தந்திரி எனப்படுபவர்கள் வேத மந்திரம் கற்றவர்கள். பூஜைகளைத் தந்திர முறையில் செய்வதால் இவர்கள் தந்திரிகள் ஆனார்கள். பல முக்கியமான நிகழ்வுகளுக்கு ப்ரஸ்னம் பார்த்துத் தீர்மானிப்பது தந்திரிதான். சென்னமனா என்னும் பரம்பரை குடும்பத்தினரைச் சார்ந்தவர்களே தந்திரி ஆக முடியும்.

கார்த்திகை 1ஆம் தேதியில் இருந்து மார்கழி மாதம் 11ஆம் தேதி வரையிலான 41 நாட்கள் மண்டல காலம் எனப்படும். இந்த நாட்களில் திரளான பக்தர்கள் வந்து குருவாயூரப்பனை தரிசிப்பார்கள். மண்டல கால பூஜையின்போது 40 நாட்களுக்குப் பஞ்சகவ்ய அபிஷேகமும் 41ஆவது நாளன்று சந்தன அபிஷேகமும் செய்து வைக்கப்படும். குருவாயூரப்பன் விக்கிரகத்தின் மார்பில் தினமும் சந்தனம் சார்த்தப்படுவது வழக்கம் என்றாலும், ஆண்டுக்கு ஒரு முறை இந்த நாளில் செய்யப்படும் சந்தன அபிஷேகத்தைத் தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூடுவார்கள்.

கோவில் தந்திரி சிறப்பு பூஜைகளைச் செய்த பிறகு இந்த சந்தன அபிஷேகம் மூலவர் குருவாயூரப்பனுக்குச் செய்யப்படும். இதற்கான சந்தனக் கலவை தயாரிப்பதற்கு மைசூரில் இருந்து சந்தனக் கட்டைகளும், காஷ்மீரில் இருந்து குங்குமப்பூவும் வரவழைக்கப்படும். தவிர பச்சைக் கற்பூரம், பன்னீர், கஸ்தூரி போன்ற வாசனைப் பொருள்களும் கலந்து சந்தனக் கலவையைத் தயாரிப்பார்கள். இதைத் தயாரிப்பதற்கு உண்டான செலவில் ஒரு பகுதியை கோழிக்கோடு சாமுதிரி மன்னர் குடும்பமும், எஞ்சிய தொகையை குருவாயூர் தேவஸ்வம் போர்டும் ஏற்றுக் கொள்ளும்.

சந்தன அபிஷேகத்தில் நீராடிய குருவாயூரப்பனை அன்றைய தினம் முழுதும் பக்தர்கள் தரிசிக்கலாம். சந்தன அபிஷேகம் நடந்த தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. குருவாயூரப்பனின் திருமேனியைத் தீண்டிய இந்த சந்தனத்தைப் பெறுவதற்குப் பக்தர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குவார்கள்.

வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நாராயண பட்டத்ரி, குருவாயூரப்பன் சந்நிதிக்கு முன் நின்று தினம் பத்து ஸ்லோகங்கள் வீதம் நூறு நாட்கள் பாடினார். ஆயிரம் ஸ்லோகங்கள் பாடியதும் வாத நோய் நீங்கி விட்டது.

பட்டத்ரி ஸ்ரீநாராயணீயம் சொல்லச் சொல்ல... அந்த குருவாயூரப்பன் ‘ஆமாம் ஆமாம்’ என்று தலை அசைத்து அவற்றை ஏற்று ஆனந்தமாகக் கேட்டு ரசித்ததாகத் தன் உபன்யாசத்தில் சொல்வார் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர். கர்நாடக இசை வித்துவான் செம்பை வைத்தியநாத பாகவதர், சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீட்சிதர் ஆகியோர் குருவாயூரப்பனின் பரம பக்தர்கள்.

ஆலயத்தில் உள்ள நமஸ்கார மண்டபத்தில் அமர்ந்து நாராயணீயம் எழுதினார் நாராயண பட்டத்ரி. அவர் அமர்ந்து எழுதிய இடத்தைப் புனிதமாகக் கருதி, அங்கு எவரும் அமர்வதில்லை. நாராயணீயத்தை 'பாகவத ஸாரம்' என்று கூறுவர். இதில் நூறு தசகங்கள். மொத்தம் 1,034 செய்யுள்கள். குருவாயூர் கிருஷ்ணனை முன்னிலைப்படுத்தி பாகவதத்தின் சாரத்தை சம்ஸ்கிருதத்தில் பக்தி சொட்டச் சொட்ட நாராயண பட்டத்ரி எழுதி இருக்கிறார்.

நாராயண பட்டத்ரியுடன் குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் சுவையானது.

பட்டத்ரி: ‘நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனப் பொருள் எது?’

குருவாயூரப்பன்: ‘நெய்ப் பாயசம்.’

ப: ‘ஒருவேளை நெய்ப்பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால்..?’

கு: ‘அவலும் வெல்லமும் போதுமே...’

ப: ‘அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால் என்ன செய்வது?’

கு: ‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு.’

ப: 'மன்னிக்க வேண்டும் பகவானே... இப்போது நீ சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?'

கு: 'துளசி இலைகள் அல்லது உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்.'

ப: 'அதுவும் என்னிடம் இல்லை என்றால்..?'

கு: 'எனக்கு நைவேத்தியம் செய்விக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா... அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும். வேறு ஒன்றும் வேண்டாம்.'

குருவாயூரப்பனிடம் இருந்து இப்படி ஒரு பதிலைக் கேட்டதும் பக்திப் பரவசம் மேலிட நாராயண பட்டத்ரி கதறி அழுதார்.

பட்டத்ரியின் நாராயணீயத்துக்கு மூலமாக அமைந்தது ஞானப்பானை என்னும் நூல். இதுவும் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் படைப்பு ஆகும். மலையாள மொழியில் இதை எழுதியவர் பூந்தானம் என்பவர். இப்படி எண்ணற்ற பக்தர்களை ஆட்கொண்டு, தன்வயம் ஆக்கி இருக்கிறார் குருவாயூரப்பன்.

எந்த நேரமும் ஏதாவது பிரார்த்தனைகள், வழிபாடுகள் என்று எப்போதும் ஆலயம் பிஸியாகவே இருக்கும்.

துலாபார நேர்ச்சைக்கடன் இங்கே பிரசித்தம். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப தங்கம், வெள்ளி, சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை எடைக்கு எடை செலுத்துகிறார்கள்.

அதுபோல் குழந்தைகளுக்கு முதல் அன்னமிடுதலும் இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அந்தக் குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்றும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை. எனவே, தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இங்கே அன்னம் ஊட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள புன்னத்தூர் கோட்டாவில் தேவஸம் போர்டுக்குச் சொந்தமான யானைகள் கொட்டாரம் அமைந்துள்ளது. குருவாயூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்த யானைகள் கொட்டாரத்துக்கும் வந்து பார்த்து மகிழ்கிறார்கள். சுமார் 100க்கும் மேற்பட்ட யானைகள் இருக்கின்றன. 200க்கும் மேற்பட்ட பாகன்கள் பணி புரிகிறார்கள். இதைத்தான் உலகிலேயே தனியார் கண்காணிப்பில் உள்ள மிகப் பெரிய யானைகள் பூங்கா என்கிறார்கள்.

பத்மநாபன் மற்றும் கேசவன் என்கின்ற இரண்டு யானைகளின் படங்களை ஆலயத்தில் மாட்டி வைத்திருக்கிறார்கள். தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும், இந்த யானைகளுக்குத் தனி மரியாதை பக்தர்களிடம் இருந்து வருகிறது.

.

அதிகாலை மூன்று மணி முதல் இரவு ஒன்பதேகால் மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

குடும்பத்தோடு சென்று குருவாயூரை தரிசியுங்கள். குருவாயூரப்பனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.

Shared from Shri. Mannargudi Sitaraman Srinivasan

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

ப்ரேமையின் உச்சம் ராதையா, சூர்தாஸா

நந்தவனத்தில் ஒருநாள்
" ஏன் உங்கள் தலை எதையோ ரசித்தவாறு அசைந்து கொண்டிருக்கிறது ?"
".........."
" நான் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா ?"
"........."
" என்ன அப்படி ரொம்ப ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ?" என்று கிருஷ்ணன் தலை அசைத்து ராதை கேட்டாள்.
" ஆஹா! என்னமா பாடறார் அவர் . என்னை எப்போதும் கட்டிப்போட்டே வைத்து விடுகிறார் . விடுபட முடியவில்லையே ?" என்றான் கண்ணன்.
" எப்பவும் சூர்தாஸ், சூர்தாஸ் என்று அவரைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே அப்படி என்ன சூர்தாஸ் உங்களை மயக்கி வைத்திருக்கிறார் ? நானே சென்று பார்க்கிறேன்” என்று ராதை சொல்ல “ நீ அவர் கிட்டே போகாதே, போகாதே” என்று கிருஷ்ணன் தடுத்தான்
“ஏன் அவர் கிட்டே போகக் கூடாது, கண்டிப்பாகப் போகப்போகிறேன்” என்று சூர்தாஸ் பாடிக்கொண்டிருந்த கோவிலுக்குச் சென்றாள் . பிறவிக் குருடரான சூர்தாஸ் அருகில் அவள் போய் நின்றதும் அவளது கொலுசு சப்தம் தெய்வீக சப்தம் எழுப்பியதும், உணர்ந்த சூர்தாஸ் கையை நீட்டி அவள் கொலுசைப் பிடித்துகொண்டார் .
" விடுங்கள் என் காலை " என்ற போதும் கொலுசை விடவில்லை அவர் .
“ நான் ராதை, கிருஷ்ணனைச் சேர்ந்தவள்” என்றாள் .
“ எனக்கு நீ யார் என்று தெரியாது . பார்க்கவும் முடியாது . போய் கிருஷ்ணனை வரச்சொல்” என்று கொலுசை காலிலிருந்து உருவி எடுத்து வைத்துகொண்டார் .
ராதை கூப்பிட, கிருஷ்ணன் வந்தான் . சூர்தாஸ் பக்தியை மெச்சி பார்வை அளித்தான் . “ சூர்தாஸ், உங்களுக்கு வேண்டிய வரம் கேளுங்கள்” என்றான் .
" கிருஷ்ணா, உன்னைப் பார்த்ததே இல்லை . காது நிறைய உன்னைப் பற்றி கேட்டிருக்கிறேன். வாய் நிறைய உன்னைப் பாடிக்கொண்டே இருக்கிறேன். கண் கொடுத்த உன்னைக் கண் நிறையப் பார்த்து விட்டேன். எனக்கு வேண்டியது கிடைத்து விட்டது கண்ணின்றியே வாழப் பழகிவிட்டேன் . தயவு செய்து என்னை மீண்டும் குருடனாக்கிவிடு . உன்னைப் பார்த்த கண்ணால் வேறு எதையும் நான் பார்க்க விரும்பவில்லை "
" இந்தா தாயே ராதை உன் கொலுசு "
கண்ணனும் ராதையும் திரும்பும்போது, ராதை சூர்தாஸ் பற்றியே அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள் வாய் ஓயாமல் .
“ இதற்குத் தான் சொன்னேன், சூர்தாசைப் போய்ப் பார்க்காதே என்று, புரிகிறதா !” என்றான் கண்ணன்.
ப்ரேமையின் உச்சம் ராதையா, சூர்தாஸா ?

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Aanmeekam...

Post by arasi »

கண்ணன் குழலூதுகின்றான், ராதையின் கழலொலிக்கே--
விண்ணவருக்கிணையாம் தாஸனும‌தைக் கேட்கின்றான்

கண்ணன் கண்ணுக்கு ராதையழகு, அவளுக்கோ கண்ணன்!
கண் காணாததில் கண்ணீருகுத்து மகிழ்கிறான் ஸூர்!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

பெற்றும் இழந்த பேறு
----------------------------------
யாதவப் பிரகாசர் என்றால் பலருக்குச் சட்டென்று தெரியாமல் இருக்கலாம். ஸ்ரீபெரும்புதூர் மாமுனி ராமானுஜருக்கு ஆரம்ப கட்டத்தில் குருவாக இருந்தவர். அவரைப் பற்றிய ஒரு சிறிய கதை.

காஞ்சி இளவரசியை பிரம்மராஷஸம் பீடித்து, யாராலும் அதை விரட்ட முடியவில்லை. யாதவப்பிரகாசர் தன் சீடனை அனுப்பி, 'நான் அனுப்பினேன் என்று சொல்லி அந்தப் பிரம்மராஷஸத்தை விரட்டி விட்டு வா!' என்றார். ஆனால், அவனோ, பேயால் விரட்டப்பட்டு தான் விழுந்தடித்துத் திரும்பி வந்தான்.

வெகுண்ட குருநாதர் தாமே சென்று தம் தண்டத்தை இளவரசியின் தலையில் வைத்து, 'என் பெயருக்கு அடங்காத நீ யார்? உடனடியாக ஓடிப்போ!' என்றார்.

பிரம்மராஷஸம் சிரித்தது. 'போன ஜென்மத்தில் நான் யாராக இருந்தேன், நீ யாராக இருந்தாய், ஏன் இப்படி நாம் பிறந்தோம் என்று அறியாத நீயா என்னை விரட்டப் பார்க்கிறாய்?' என்று மீண்டும் நகைத்தது.

தனது முன்ஜென்மம் அறிந்த பிரம்மராஷஸம் கண்டு வியந்த யாதவப் பிரகாசர் மேலும் விளக்குமாறு கேட்க அது கூறியது: 'முற்பிறவியில் நான்ஒரு அந்தணனாக இருந்தேன். ஆனால் ஒரு யாகம் செய்கையில் மந்திரம் மற்றும் சடங்குகள் குறைபாட்டினால் இப்பிறவி அடைந்தேன். நீயோ மதுராந்தகத்து ஏரியில் ஒரு உடும்பாக இருந்தாய். பெருமாளை தரிசித்துச் செல்வோர் பிரசாதத்தை உண்ட பின்னர் நீரில் கை கழுவும்போது அந்தப் பிரசாதத்தின் சில பருக்கைகளை உண்டதால், இப்பிறப்பில் ஞானமுள்ள ஒரு குருபீடத்தில் அமர்பவனாகப் பிறந்திருக்கிறாய்.'

யாதவப் பிரகாசருக்குச் சந்தேகம் தீரவில்லை. 'பெருமாள் பிரசாதத்தை உண்ட நான் பிறவிப்பிணியையே அறுத்திருக்க வேண்டுமல்லவா? மீண்டும் இப்பூவுலகில் ஏன் வந்து வீழ்ந்தேன்.'

பிரம்மராஷஸம் விடையறுத்தது: 'நீ உண்டது தேவப்ரசாதம். ஆனாலும், அதன் பெருமையை நீ அறிந்திருக்கவில்லை. நீ வெறுமே உன் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக மட்டுமே அதை உண்டாய். அதனால், அந்த அளவே உனக்குப் பயன் கிட்டியது. நீ அதன் பொருளை அறிந்து புசித்திருந்தால் உனக்குப் பிறவிச் சங்கிலியே அறுபட்டிருக்கும்!'

என் கருத்தில், இந்தக் கதையின் அடிநாதம் பெருமாளோ பக்தியோ என்பதை விடவும் வேறொன்றே என்று நினைக்கிறேன்.
அது: 'நம்மை ஒரு நல்ல விஷயம் வந்தடையும்போது, நல்லவர் சேர்க்கை உருவாகும்போது நாம் அந்த பாக்கியத்தை முழுதுமாக உணர்ந்து கொண்டு அதைச் செவ்வனே போற்றிப் பாதுகாத்துப் பற்றியொழுக வேண்டும். அவ்வாறு அல்லாமல், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியங்களால் பீடிக்கப்பட்டு அப்போதைய தேவைக்கு மட்டும் அதைப் பயன்படுத்திக் கொள்வோமானால், விரைவில் அது நம்மை விட்டு அகன்று விடும். நமது வினைப்பயனும் முடிவுறாது தொடர்ந்து செல்லும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

ராம நாம உபதேசம் சாதாரணமானதா???

“ராம” என்ற இரண்டெழுத்து சாதாரணமாய்த் தோன்றலாம். ஆனால் இந்த ராம நாமம் உபதேசம் பெறவேண்டிக் காத்திருந்தவர்களில் கபீர்தாஸரும் ஒருவர். பிறப்பால் முஸ்லீம் என்று சொல்லப் பட்டாலும், (சிலர் பழக்கவழக்கங்களும், சுற்றுச் சூழலுமே காரணம் என்றும் சொல்லுவார்கள்) எப்படியானாலும் கபீரின் மனம் பூராவும் ராம நாமத்திலேயே லயித்தது. அதில் தான் இம்மைக்கும், மறுமைக்கும் வேண்டிய ஆநந்தம் இருக்கிறது என்பதைப் பூரணமாய் உணர்ந்தார் கபீர். ஆனால் இந்த மந்திரத்தைத் தாமாகச் சொல்லுவதை விட குரு மூலம் உபதேசம் பெற்றுச் சொன்னால்?? ஆஹா! அத்தகைய குரு நமக்குக் கிடைப்பாரா?? ஏன் கிடைக்க மாட்டார்? இதோ ராமாநந்தர் இருக்கிறாரே? தினம் தினம் ராமாநந்தரின் வழிபாட்டு சமயத்தில் ராம, லக்ஷ்மணர்கள் நேரிலேயே தோன்றி வழிபாட்டை ஏற்பது வழக்கம். அத்தகையதொரு குரு மட்டும் கிடைத்துவிட்டால்??? தன் நெசவுத் தொழிலைக் கூட மறந்து ராம நாமத்தில் லயித்துப் போயிருந்த கபீருக்கு, ராமாநந்தர் உபதேசம் என்பது சும்மா வெளிப்பார்வைக்கு மட்டுமே. என்றாலும் அந்த ராமன் கபீரின் இந்தச் சின்னஞ்சிறு ஆசை மூலம் வேறே எதையோ யாருக்கோ உணர்த்த விரும்பினானோ?
கபீரும் ராமாநந்தர் உபதேசிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகத்துடனேயே வேறு நபர்களையும் நாடினார். யாருமே கபீருக்கு ராம நாமத்தை உபதேசிக்கவில்லை. ராமாநந்தரிடமே நேரிடையாகச் சென்று வேண்டுகோள் விடுத்தார் கபீர்தாஸர். ராமாநந்தர் மறுத்துவிட்டார். அந்நிய மதத்தைச் சேர்ந்தவனுக்கு ராமநாம உபதேசமா? இகழ்ச்சியுடனேயே ராமாநந்தர் கபீரை அங்கிருந்து போகச் சொன்னார். கிட்டத் தட்ட விரட்டப் பட்டார் கபீர். ராமாநந்தரின் அன்றைய வழிபாடு தொடர்ந்தது . வழிபாடு முடிவதற்குள்ளாக ராம, லக்ஷ்மணர்கள் வந்துவிடுவார்கள். ஆனால்,, ஆனால் இன்று வரவில்லையே?? ஏன்?? என்ன குறை?? பூஜைக்கான பொருட்களில் எதுவும் குறைவில்லை. ஆசார, அனுஷ்டானங்களிலும் குறைவில்லை. என்றாலும் நேரில் வந்து இத்தனை நாட்கள் பூஜையை ஏற்ற ராமன் இன்று வரவில்லையே? ஏன்? என்ன காரணம்? துன்பம் அடைந்தார் ராமானந்தர்.
மெல்ல எழுந்து வெளியே வந்தார். மடத்தின் வாயிலில் நின்று கொண்டு யோசித்தவண்ணம் அங்குமிங்கும் பார்த்தார். சுற்றுமுற்றும் தேடினார். அப்போது அசரீரி போன்ற ஒரு குரல்,” அண்ணா, அண்ணா, என்ன இது?” என்று கேட்டது. யார் பேசுவது?? குரல் மட்டுமே வருகிறதே? ராமாநந்தர் உற்றுக் கவனித்தார். “லக்ஷ்மணா, என்ன விஷயம்?” என்று மறு குரலும் கேட்டது. ஆஹா, ராம, லக்ஷ்மணர்கள் கடைசியில் நம் பூஜைக்கு வந்தே விட்டார்களா??? ராமாநந்தர் உற்சாகத்தில் ஆழப் போகும் சமயம். லக்ஷ்மணன் என்று அழைத்த குரல்” அண்ணா என்ன இது? இன்று ராமாநந்தரின் வழிபாடலில் கலந்து கொள்ளாமல் திரும்பலாம் என்று சொல்லிவிட்டாயே?” ராமாநந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன நம் வழிபாட்டில் ராமன் கலந்து கொள்ளப் போவதில்லையா? ராமன் குரல் கேட்டது அப்போது,” ஆம், தம்பி லக்ஷ்மணா, உத்தம பாகவதன் கபீர், என்னைத் தவிர வேறு யாரையுமே எப்போது நினையாதவன். அவன் என்னுடைய நாமாவைச் சொல்லுவதைக் கேட்கும்போதே எனக்குப் பரவசமாய் இருக்கும். அத்தகையவன் ராமாநந்தரிடம் உபதேசம் பெற வந்தான். அவனை விரட்டி விட்டார்களே! என் பக்தன் விரட்டப் பட்ட இடத்தில் எனக்கு என்ன வேலை? வா, நாம் போகலாம்.” எங்கும் அமைதி. ராமாநந்தர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவர் கண்களால் ராமனும், லக்ஷ்மணனும் அங்கிருந்து திரும்புவதையும் உணரமுடிந்தது.
ஆஹா, ராமனே வந்து கபீருக்கு மந்திர உபதேசம் செய்யாதது என் தவறு எனச் சுட்டிக் காட்டிவிட்டானே? அப்படி எனில் அந்தக் கபீர் எத்தனை பெரிய பாகவதோத்தமனாய் இருக்கவேண்டும்? அவனுடைய தேடுதல், ராமனைப் பற்றிய பக்தி எத்தனை விசாலமாய், ஆழமாய் இருந்திருக்கவேண்டும். நாம் தான் ராமனைப் பற்றிப் பாடுகிறோம், பேசுகிறோம், ராமன் நேரில் வருகின்றான் என நினைத்தது எவ்வளவு பெரிய தவறு? நம்மிலும் பெரிய பரமபாகவதன் கபீரை அவமதித்துவிட்டேனே? ராமாநந்தர் கபீர் எங்கு இருப்பார் என விசாரித்தார். கங்கை நதிக்கரையில் இருப்பார் எனத் தெரிய வந்தது. உடனேயே அங்கே விரைகிறார். தூரத்தில் இருந்தே ராமாநந்தர் வருவதைப் பார்த்துவிடுகிறார் கபீர். குருவானவர் வருகிறார். எதற்கு, என்ன என நமக்குத் தெரியாது. பெரும் பதட்டத்தோடு வேறு வருகிறார். அதை அதிகப்படுத்தும் வண்ணம் நாம் இன்னும் நேரில் அவருக்கு முன்னால் போய் தொந்திரவு செய்யக் கூடாது.
ஒரு க்ஷணம் தான். கபீர் தன் உடம்பைக் குறுக்கிக் கொண்டு கங்கைக் கரையின் படித்துறைப் படிகளில் ஒன்றில் படியோடு படியாகப் படுத்துக் கொண்டார். அந்த வழியாக ராமாநந்தர் வருவார் என்ற நிச்சயத்துடன் காத்திருந்தார். ராமாநந்தரும் வந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கபீரைத் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. படிகளில் இறங்கிப் பார்ப்போம் என இறங்கினால், படியென நினைத்து அவர் மிதித்தது, யாரோ மனிதனை அன்றோ? ஆஹா, என்ன இது? “ராம், ராம்” என்று அலறிக் கொண்டே நகர்ந்தார். கீழே இருந்து பதில் வந்தது. “வந்தனம் குருதேவரே! என்னைக் காலாலும் தீண்டி, மந்திர உபதேசமும் செய்து வைத்தமைக்குப் பலகோடி வந்தனங்கள்” கபீரின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

Interesting story ! Nicely written by Ms G.S.

But,
Kabir : 1440-1518
Ramanand : 1738-1802
Last edited by Pratyaksham Bala on 01 Jul 2015, 08:10, edited 1 time in total.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

pb,
I have also heard about Ramananda being guru of Kabir Das. According to this website the period of this Ramananda is from 1400 to 1476.
https://en.wikipedia.org/wiki/Ramananda

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

சேவை

Post by vgovindan »

Krishnamoorthi Balasubaramanian‎ Sage of Kanchi (FB Post)

உண்மையான அன்போடு மனசார நம்மை வாழ்த்த வைக்கும் நிம்மதி
- (ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா)
-
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாளை தர்ஸனம் பண்ண ஒரு பக்தர் வந்தார். கூட்டம் அதிகம் இல்லை.
"அப்பா எப்டியிருக்கார்?"...
"அப்பாக்கு ரொம்ப ஒடம்பு முடியலே பெரியவா......ப்ரக்ஞை இல்லே; அதனால ஆஸ்பத்ரில சேத்திருக்கேன்..."
மேலே சொல்லு என்பது போல் பெரியவா உன்னிப்பாக கேட்டார்.
"...பணம் பணம்ன்னு ஆஸ்பத்ரில பிடுங்கி எடுக்கறா.....ட்ரிப்ஸ் ஏத்தறதுக்கு பணம்; ஆக்ஸிஜன் வெக்கறதுக்கு பணம்; அதுக்கு இதுக்குன்னு நின்னா, ஒக்காந்தா பணம் ஒண்ணுதான் கேட்டுண்டே இருக்கா பெரியவா! ஏகப்பட்ட செலவாயிடுத்து..."
"அப்பாவுக்கு என்ன வயஸ்?"
"ஸதாபிஷேகம் ஆய்டுத்து"
"அவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிண்டு வந்துடு! ஆத்துல ஒரு கட்டில்ல அவருக்கு ஸ்ரமம் இல்லாதபடி ஸௌகர்யமா படுக்க வை; ஜாஸ்தி சூடு இல்லாம, வெதுவெதுன்னு கஞ்சி, பால் இதுமாதிரி நீர்க்க குடு; அவரோட காதுல விழறா மாதிரி தெனமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லு; ஆத்துல எல்லாருமா பகவன் நாமாவை சொல்லுங்கோ; ஆத்மார்த்தமா ஸுஸ்ருஷை பண்ணு; இப்டி பண்ணினியானா .......ஒனக்கும் பணச்செலவு இல்லே! அவரும் கடைசி காலத்தை நிம்மதியா கழிப்பார்....."
மகன் மன த்ருப்தியோடு ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு சென்றார்.

அவர் போனதும் பக்கத்தில் இருந்தவர்களிடம் மஹா பெரியவா சொன்னார்.....
"இப்போல்லாம் யாருக்கும் தர்மமே தெரியறதில்லே! ஒடம்புக்கு கொஞ்சம் அசௌகர்யம் வந்துடுத்துன்னா......ஒடனே ஆஸ்பத்ரில சேத்துடறா! வ்யாதிக்கு மருந்து வேணுந்தான்...வாஸ்தவம். ஆனா.....'அருமருந்து' ஒண்ணு இருக்குங்கறதே யாருக்கும் தெரியறதில்லே!....."
பகவானின் நாமம் கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ, மருந்தோ உதவி பண்ணாது. பகவானின் நாமம் பிழைக்கவும் வைக்கும், அதே சமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில், பகவானின் திருவடிப் பேற்றையும் சுலபமாக அளித்து விடும். எனவே, உடல் நிலை சரியில்லாதவர்களை குறிப்பாக வயசான நம் பெற்றோர், தாத்தா,பாட்டி போன்றோரை, வயசான காலத்தில் கஞ்சி குடுத்தாலும், அதை அன்போடு குடுத்து, பகவானின் நாமத்தை சதா கேட்கவோ, சொல்லவோ வைத்து, அவர்களை நிம்மதியாக வைத்துக் கொள்வதே கடவுளுக்கு மிகவும் பிடித்த கைங்கர்யம்.
அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் வேண்டாம், விதவிதமான உணவு வகைகள் வேண்டாம். உண்மையான அன்போடு ஒரு பத்து நிமிஷமாவது அவர்களுக்காக ஒதுக்கி, "சாப்பிட்டீர்களா? ஏதாவது வேண்டுமா?" என்று கேட்பதே அவர்களை மனசார நம்மை வாழ்த்த வைக்கும். அவர்கள் வாழ்ந்த வீட்டை விட, அது குச்சு வீடாக இருந்தாலும் சரிதான், தன் மக்களை விட்டுவிட்டு, வேறு எந்த பெரிய ஆஸ்பத்ரியிலும் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

திரு கோவிந்தன் அவர்களுக்கு தொகிப்பினை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
என்ன ஒரு தீர்க்க தரிசனம் . உற்றார் உறவினரின் ஏச்சுக்கும் தேவை இல்லாத பேச்சுக்காகவும் அஞ்சி முதியோர்களை சிகிச்சைக்காக தனி மருத்துவ மனையில் சேர்த்து அவர்களும் மற்றவர்களும் படும் அவதி சொல்லில் அடங்காது. சில மனிதாபிமான உள்ள மருத்துவர்கள் முதியோர்களை வீட்டிற்கு அழைத்து சென்று அங்கேயே சில மருந்துகளை கொடுக்க செய்து கடைசி காலத்தை நல்ல படியாக வீட்டில் உள்ளவர்களே கவனித்து கொள்ளும்படி கூறுவதும் உண்டு. மகாபெரியவரின் இந்த அறிவுரை மனதிற்கு மிகவும் சாந்தத்தை ஏற்படுத்துகின்றது. குற்ற உணர்வு அறவே போய்விடுகின்றது.
தஞ்சாவூரான்
17 07 2015

kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

Re: Aanmeekam...

Post by kvchellappa »

Indra Soundararajan talks about Kanchi Paramacharya:
https://www.youtube.com/watch?v=AuL59OVwSE4

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

chellappa,
Thanks for timely posting.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

Varagooran Narayanan

"மரத்தைத் தண்ணீரில் போடு!"

காஞ்சிப் பெரியவர்கள் ஒன்று கூறியிருக்கிறார்கள்:

வலையில் படித்த அருள்வாக்கு

“கிணற்று நீருக்குள் நீரை நிரப்பிக்கொண்ட குடத்தை இழுக்கும்போது கனம் தெரியவில்லை; ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது.

எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்தில் உருட்டித்தான் புரட்டி இழுப்பது வழக்கம்.

அதேமாதிரி நம் துன்பங்களையெல்லாம் `ஞானம்’ என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால், தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரித் துக்கம் பரமலேசாகி விடும்.”

லெளகீகத்தில் இருந்து சுத்தமாக விடுபட்டு விட்ட ஒரு சந்நியாசி, லெளகீக வாழ்வில் துக்கத்தைக் குறைப்பதற்குச் சொல்லும் அற்புத வழி அது.

இந்துமதம் லெளகீகத்தையே முதற்படியாகக் கொண்டது என்பதற்கு சாட்சி.

வாழ்வைப் பற்றிய சிக்கலில் மனதை ஈடுபடுத்திக் கொண்டு குழம்பித் தவிக்கும் கோடானுகோடி மக்களுக்கு இந்து மதம் ஒரு ஆறுதல் சொல்கிறது.

சித்தம் தெளிவற்றிருந்தால் பிரமை பிடித்து விடுகிறது. அது தெளியும்போது, ஞானஒளி பெற்று விடுகிறது.

இக வாழ்க்கையைச் சுகமாக்கித் தர, பிற மதங்கள் செய்யாத முயற்சியை இந்து மதம் செய்கிறது.

துக்கமே இல்லாத சந்நியாசிகள்கூடத் துக்கத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்.

மரணமே இல்லாத பரமாத்மாகூட மரணத்தைப் பற்றிப் பேசுகிறது.

எங்கே எது இல்லை? காட்டில் மட்டுந்தானா முள் இருக்கிறது? அது ரோட்டிலும் இருக்கிறது! பார்த்து நடப்பவன் காட்டில்கூட நடந்துவிட முடியும்; பாராமல் நடப்பவன் ரோட்டில்கூட நடக்க முடியாது.

கவலை என்பது ஒரு வலை.

தனக்குத்தானே அதை வீசிக் கொள்கிறவர்கள் உண்டு.

பல நேரங்களில் ஆண்டவனும் அதை வீசுவதுண்டு.

வலைக்குத் தப்பிய மீன்கள், நீர் வற்றிவிட்டால், மரணத்துக்குத் தப்புவதில்லை.

காலம்தான் வித்தியாசம். சில முந்திக் கொள்கின்றன. சில பிந்திக் கொள்கின்றன.

ஒவ்வொருவன் கண்ணுக்கும், அடுத்தவன் சந்தோஷமாக இருப்பது போலவே தோன்றுகிறது.

அவன் பார்க்கும் கண்ணாடி நல்ல கண்ணாடியாக இருந்தால்தானே, அவன் முகத்தைக் காட்டும்.

வண்டியின் மீது மற்றவர்கள் பாரத்தை ஏற்றுக்கிறார்கள். வண்டி தானே ஏற்றிக்கொள்வதில்லை.

மனித மனமோ தானே சுமைகளை ஏற்றிக் கொள்கிறது.

ஏற்றிய சுமையை எளிமைப்படுத்த என்ன வழி?

`ஞானம் எனும் தண்ணீரை நிறையக் குடி’ என்கிறார்கள் காஞ்சிப் பெரியவர்கள்.

`ஞானம் ஞானம்’ என்கிறோமே அது என்ன?

சட்டையைப் போடும்போது, கிழிந்த சட்டை என்று தெரிந்தே போட்டுக் கொள்வது; பிறகு `ஐயோ, இது கிழிந்திருக்கிறதே’ என்று அங்கலாய்க்காமல் இருப்பது; அதன் பெயரே ஞானம்.

`இது இவ்வளவுதான்; இப்படித்தான்’ என்று தேறுவதும் தெளிவதும் ஞானம்.

`எது எப்படியிருந்தால் என்ன; இறைவன் விட்ட வழி, என்றிருப்பது ஞானம்.

குடிசைகளே நிரம்பிய காட்டில்கூட ஏதாவது ஒரு ஓட்டு வீடு இருக்கிறல்லவா?

துயரங்களே நிரம்பியே மனதிற்கும் ஏதாவது ஒரு நிம்மதி வந்தே தீரும்.

எந்தச் சந்நிதியில் நிற்கிறோம் என்பது முக்கியம்.

குளிக்கும் அறைக்குள் போய் நின்று கொண்டு கோகுலக் கண்ணன் படத்தைத் தேடக்கூடாது. பூஜை அறைக்குள் `ஷவர்பாத்’ இல்லையே என்று வருந்தக் கூடாது.

தேர்வும் தெளிவும் சரியாக இருந்தால், ஞானம் சரியாகிவிடும்.

ஞானத்தண்ணீர் பெருகி ஓடினால், துன்ப மரங்கள் எளிமையாகி விடும்.

மாட்டி இருப்பது விலங்குதான் என்று தெரிந்து கொண்டு, நடக்க ஏன் முயல வேண்டும்?

“ஐயோ! நடக்கமுடியவில்லையே” என்று ஏன் அழ வேண்டும்?

ஒவ்வொரு மரமும் இடைவெளி விட்டு நிற்கும் தென்னந்தோப்பைப்போல இரண்டு சுகங்களுக்கிடையில் ஒரு துயரம் இருக்கிறது.

இரண்டு துயரங்களுக்கிடையே ஒரு சுகம் இருக்கிறது. இதுதான் லெளகீக வாழ்க்கை.

கல் குத்தினால் வலிக்கிறது. கண்ணாடி குத்தினால் ரத்தம் வருகிறது. கவனித்து மருந்து போட்டால் ஆறிவிடுகிறது. கவனிக்காமல் விட்டால் `ஸெப்டிக்’ ஆகிறது. கவனித்தும் `ஸெப்டிக்’ ஆனால் ஏதோ பூர்வ ஜென்ம பாபம் இருக்கிறது.

துன்பத்தின் கதை இத்தோடு முடிந்துவிடுகிறது.

ஜன்னலின் அளவைப் பொறுத்து காற்று வருகிறது.

ஜன்னல்கள் இல்லாத வீடு சுகாதாரத்தைக் கெடுக்கிறது.

அதுபோல், சூழ்நிலைகளைப் பொறுத்துத் துன்பம் வருகிறது; அந்தச் சூழ்நிலைகளை நீக்கிக்கொள்ளும் பொறுப்பு மனிதனுக்குத் தான் இருக்கிறது.

நம்மையறியாமல் வருவது நாம் அறியாமலே தீர்க்கப்படுகிறது.

நாம் அறிந்து வருவதை நாமே தீர்த்துவிட முடியும்.

இந்த இரண்டுவகைத் துன்பங்களில், முதல்வகை ஈஸ்வர பக்தியால் விலகுகிறது.

இரண்டாவது வகை, கூரிய புத்தியால் விலகுகிறது.

பக்தியும் இல்லாமல் புத்தியும் இல்லாமல், `ஐயோ அம்மா’ என்று அலறுவதில் என்ன பொருள்?

பசுவை வாங்கி வந்தால் பால் கறக்கலாம்; காளையை வாங்கிவிட்டுக் கடவுள்மீது குறை சொல்வதில் என்ன அர்த்தம்?

காரணத்தோடு வரும் துன்பங்களை, விவேகத்தோடு சமாளிக்க வேண்டும்.

குடித்துவிட்டுக் காரோட்டி விபத்திற்குள்ளானால் அது காரணத்தோடு வரும் துன்பம்.

ரயில் விபத்தில் நீ சிக்கிக்கொண்டால், அது காரணமில்லாமல் வரும் துன்பம்.

முன்னதை நீ தடுக்கலாம்; பின்னதைக் கடவுள் தான் தடுக்க வேண்டும்.

இரண்டுக்கும் `ஞானம்’ என்றுதான் பெயர்.

சம்பாதிப்பது போதவில்லை என்றால் அது ஒருவகைத் துன்பம். நிறையச் சம்பாதித்தும் போதவில்லை என்றால் அது ஒருவகைத் துன்பம். சம்பாத்தியமே இல்லை என்றால் அது ஒருவகைத் துன்பம்.

எது உன் வாழ்க்கையில் நேர்ந்தாலும், அதன் மறுபகுதி துன்பம்.

தலையில் கை வைத்துக்கொண்டு தடுமாறுகிறவனுக்குத் துன்பம் தீராது.

ஞானம் என்ற தண்ணீரில் துன்பத்தை அமுக்கி இழுத்தால் பாரம் குறையும்.

நம்மைப் பிறக்க வைத்தபோது, தாய் பட்டது துன்பம்;
தாய் இறந்துபோனால் உறவினர் படப்போவது துன்பம்; இரண்டுக்கும் இடையிலே நாம் அனுபவிப்பது துன்பம்.

எல்லாவற்றுக்கும் பரிகாரம் மனதை ஞானத்தண்ணீரில் முக்கி எடுப்பதே.

வாழ்க்கையில் எந்தப் படிக்கட்டில் துன்பம் இல்லை?

பணம் இல்லை என்றால் துன்பம்.

அதிகம் சேர்ந்துவிட்டால் வருமான வரித்துன்பம்.

வடதுருவத்திற்குப் போனாலும் பனிக்கட்டிதான்; தென் துருவத்திற்குப் போனாலும் பனிக் கட்டிதான்.

`துன்பம் ஒரு சோதனை’ என்று முன்பே நான் எழுதி இருக்கிறேன்.

துக்கச் சுமையைக் குறைக்கக் காஞ்சிப் பெரியவர்கள் சொன்ன உதாரணம் என்னை மெய்சிலிர்க்க வைத்ததால், இதனை மீண்டும் எழுதுகிறேன்.

`ராமன் கிடைப்பானா?’ என்று கலங்கிய சீதை;

அவன் கிடைத்த பின்னாலும் காடு சென்று கலங்கிய சீதை;

காட்டிலும் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டுக் கலங்கிய சீதை;

அவனைக் காணாமல் தினந்தினமும் கலங்கிய சீதை;

வந்து தன்னை மீட்டதும் அவனால் சந்தேகிக்கப் பட்ட சீதை!

சீதையின் வாழ்க்கையிலே ஒரு சுவடுக்கு மறுசுவடு துன்பம் என்றால், என் நிலையும் உன் நிலையும் என்ன?

காட்டில் முளைத்த மரமும் கவலையுறும் காலம் இலையுதிர் காலம்.

ஆற்று மணலும், கவலைப்படும் காலம், கோடைக் காலம்.

பகுத்தறிவற்ற விலங்குகளும் கவலைப்படும் காலம், அவை பயப்படும் காலம்.

இவற்றுக்கெல்லாம் யார் ஆறுதல் கூறப்போனார்கள்?

மானிட ஜாதி ஆறுதல் தேடுகிறது.

திடீரென்று கேரளாவில் இருந்தொருவர் `ட்ரங்கால்’ போட்டுத் தம் துன்பங்களைச் சொல்லி என்னிடம் ஆறுதல் கேட்கிறார்.

அதையே அவர் பக்கத்து வீட்டுக்காரனிடம் சொன்னால், அவன் தன் துன்பங்களைச் சொல்வான்; அதுவே ஆறுதலாகி விடும்.

மறுபடியும் தொடக்கத்தைச் சொல்லி முடிக்கிறேன்.

மரங்களைத் தண்ணீரில் போட்டு இழுப்பது போல், துக்கங்களை ஞானத்திலும் நிதானத்திலும் இழுத்துப் பாருங்கள்.

அப்போதும் அது குறையவில்லையென்றால், துக்கப்படுவதையே வாழ்க்கையாக்கிக் கொள்ளுங்கள்; வேறென்ன செய்வது?

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

உபகோஸல வித்யா

ஒரு ப்ரம்ம வித்யை அனுஷ்டிப்பது என்பதே சுலபமில்லை. உபகோஸல வித்யாவைப் பற்றி சாந்தோக்ய உபநிஷத் சொல்கிறது. உபகோஸலன் என்கிற வித்யாா்த்தி. காட்டில் சத்யகாமன் என்கிற ஆசாா்யா் இருந்தாா். இவன் அவரை அண்டி வேத, வேதாா்த்தங்களைச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அவனை அவா் அருகில் கூப்பிட்டு "நான் இத்தனை நாட்களாக யாத்திரை போக வேண்டும் என்று நினைத்தேன். போக முடியவில்லை. நல்ல சத்சிஷ்யன் கிடைத்திருக்கிறாய். நீ வந்து ஆசிரமத்தில் இருந்து என்னால் நித்யம் ஆராதிக்கப்படுகிற அக்னியை அணையாமல் பாா்த்துக் கொண்டு பூஜை பண்ணிக் கொண்டிரு. நான் ஒரு மாதத்தில் யாத்திரை முடிந்து திரும்பி வந்து அக்னிஹோத்ராதிகள் பண்ணிக் கொண்டு உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்கிறேன். இதை நீ ரக்ஷிப்பாயா? " என்று கேட்டாா்.

ஆசாா்ய ஆக்ஞை ஆனதும் உபகோஸலன் 'அப்படியே பண்ணுகிறேன். அக்னியை ரக்ஷிக்கிறேன்.நீங்கள் போய்விட்டு வாருங்கள்' என்று சொன்னான்.

ஆசாா்யரிடம் பணிவுடன் சொன்னவுடன் அவரும் ஏற்றுக் கொண்டாா். அக்னியை உபாஸிக்கும்படியான விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தாா். அக்னியை அவனிடம் ஒப்படைத்துவிட்ட புறப்பட்டுப் போனாா்.

ஒரு மாதம், இரண்டு மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் ஆயிற்று. ஆசாா்யா் திரும்பி வரவேயில்லை. இன்னொரு சிஷ்யன் என்ன பண்ணுவான்...?

ஒரு குடம் தீா்த்தத்தை அதில் சோ்த்து விட்டு நம்மால் ரக்ஷிக்க முடியாது என்று புறப்பட்டுப் போயிருப்பான். ஏனெனில், அவன் கல்வி கற்க வந்தான். வந்தவனுக்கு ஆசாா்யன் எதுவும் சொல்லிக் கொடுக்கவில்லை. வேறு எதையோ கொடுத்து இதைப் பண்ணிக் கொண்டிரு என்று சொல்லி சொன்ன காலமும் போய்விட்டது. போனவா் திரும்பி வரவேயில்லை. அவன் எத்தனை நாட்கள் பொறுமையாக இருப்பான்?

ஆனால், உபகோஸலன் ஆசாா்யா் வரவில்லை என்று கவலைப் படவேயில்லை .'அவா் என்றைக்கு வேண்டுமானாலும் வரட்டுமே.நமக்கு கல்வி வேண்டும்;பூரணமான கல்வி வேண்டும்'என்று சொல்லி அக்னியை இன்னும் விசேஷமாக உபசாரம் பண்ணுகிறான். இன்னும் பற்று ஜாஸ்தியாகிவிட்டது. இப்படி ஒரு வருஷம், இரண்டு வருஷம், பத்து வருஷம், பன்னிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன.

பன்னிரண்டு வருடங்கள் ஆராதனை பண்ணியவுடன் அக்னி பகவானே ப்ரத்யக்ஷம் ஆகிவிட்டான். ப்ரம்ம வித்யைக்கு மூலமான வைச்வாநர வித்யையை ஹ்ருதயத்தில் ஸ்புாிக்கப் பண்ணிவிட்டான். உபகோஸலனுக்கே தொியாமல் அவனுக்கு அக்னி பகவானின் அனுக்ரஹம் ஏற்பட்டுவிட்து. அக்னி பகவான் அந்தா்தானமானான்.

மஹாதேஜஸுடன் இருக்கிறான் உபகோஸலன். ப்ரம்ம ஞானம் ஏற்பட்டு விட்டது. ஹோமம் பண்ணிக் கொண்டிருக்கிறான்.மறுநாள் ஆசாா்யா் வருகிறாா். உள்ளே நுழைந்தாா். அவனைப் பாா்க்கிறாா்.

"ஏய்! என்னை ஆசாா்யனாக வாித்தும் நான் வந்து உனக்கு உபதேசம் பண்ணுவதற்குள், வேறொரு ஆசாா்யனை வாித்து ப்ரம்ம உபதேசம் பெற்றாயா..?ஆசாா்ய துரோகம் பண்ணிய நீ இங்கு இருப்பதற்கு தகுதியற்றவன். வெளியில் நட" என்றாா்.

'ஸ்வாமி!நான் ஒன்றுமே பண்ணவில்லை' என்றான் உபகோஸலன்.

உன்னுடைய முகத்தில் ப்ரும்ம தேஜஸ் எப்படியடா வந்தது? வெளியில் போ! என்றாா்.

போகமாட்டேன் என்றான் உபகோஸலன்.

ஆசாா்யா் உபகோஸலனின் கழுத்தைப் பிடித்து தள்ள வந்தாா். அப்போது அக்னி பகவானே ப்ரத்யக்ஷம் ஆனான்."நீா் வாிக்காத இந்த சிஷ்யனை நான் வாித்து விட்டேன். நான் உபதேசம் பண்ணிவிட்டேன்" என்றான்.

ஆசாா்யா் நடுங்கி விட்டாா். "இத்தனை நாட்களாக நான் அக்னியை உபாசனை பண்ணிக் கொண்டு வருகிறேன். ஒரு நாளாவது அக்னி பகவானின் சாக்ஷாத்காரம் ஏற்பட்டதில்லை. இவனோ இந்த 12 வருடத்துக்குள் அக்னி பகவானையே வரவழைத்து விட்டானே! " என்று வியந்தாா்.

அவ்வளவு நிஷ்டை உபகோஸலனிடத்தில் இருந்திருக்கிறது. அங்கே இங்கே போகாமல், இடத்தைவிட்டு அசையாமல் ஒரேடியாக 12 வருடகாலம் உபாஸிப்பது என்பது பொிய வித்யை.அதை அவன் நடத்தினான்.

அதனால் அக்னி பகவான், ஆசாா்யா் எல்லோருமாகச் சோ்ந்து அந்த வித்யை அவன் போினாலேயே அழைக்கப்படட்டும் என்று சொல்லி உபகோஸலை வித்யா என்று அழைத்தாா்கள்.

ஒரு அரை க்ஷணம் நம்மால் உட்கார முடியவில்லை. இங்கே போகலாமா,அங்கே போகலாமா என்று ஓட்டத்தில் இருக்கிறோம். ஒரேயிடத்தில் உட்காா்ந்து, லௌகீகப் பற்றே இல்லாமல், ஏகதாரையாக அக்னியை உபாஸிப்பது சுலபமான காாியமா? இந்தக் காலத்தில் நம்மால் அவ்வாறு செய்ய முடியுமா.

இப்படி ஒவ்வொரு வித்யையும் ஆராய்ந்தால் ஒன்றுக்கும் அருகில் நாம் போக முடியாது. பக்தி யோகத்தில் இந்த 32 ப்ரம்ம வித்யைகள் சொல்லப் பட்டிருக்கிறது.இதற்கு அதிகாாிகள் நியமிக்கப்பட்டுள்ளது. எல்லோரும் பக்தி யோகம் பண்ண முடியாது.இப்படி பல கஷ்டங்கள்.

அகிஞ்சனா்களான, வேறு கதியற்ற நமக்கு உயா்ந்த கதி எது? இது எல்லாம் விட்டுவிடு என்கிறான் பரமாத்மா. 'ஸா்வ தா்மான் பாித்யஜ்ய' என்கிறான். வேறு என்ன பண்ணுவது. ..? அவன் திருவடியை கெட்டியாக பிடித்துக கொள்வது. அ
துதான் சரணாகதி.

நீதான் உபாயம்.நீயே உபேயம். பலனும் நீயே என்று கெட்டியாக பிடித்துக் கொள்வது சரணாகதி.

( Mukkur Sri Lakshmi Narasimma Chariar Swamy)

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

சரணாகதி என்றால் என்ன?

Post by vgovindan »

சரணாகதி என்று சொல்கிறார்களே, அதன் பொருள் என்ன? அப்படி சரணாகதி செய்தவன் வாழ்வு எப்படி இருக்கவேண்டும்? சரணாகதி செய்தபின் அவனுடைய கோரிக்கைகள் என்ன? - எனக்கு இது புரியாத புதிர்.

சபரி போன்ற குழந்தையுள்ளம் கொண்டவர்களே, குரு சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றிக் கொண்டு, யாரோ ராமன் - அவன் யார், எப்படியிருப்பான், எப்போது வருவான் என்று ஏதும் தெரியாமல், ஏதோ கண்ணெதிரே இருப்பது போன்று கருதி, தன் வாழ் நாளை அர்ப்பணிக்க முடியும். தான்,தனது,தன் மனைவி மக்கள் என்று இப்படியெல்லாம் தன்னை எப்போதும் முன்னால் வைத்துவி்ட்டு, வெறும் நாம ஸ்மரணம் போன்று சரணாகதி, சரணாகதி என்று கூறினால் அது எப்படி சரணாகதியாகும்? உண்மையில் விபீஷணன் செய்தது கூட சரணாகதியா என்று கேட்கத் தோன்றுகிறது. துரோபதை தன் மானம் போகத் தொடங்கிய பின்னரே, கையிரண்டையும் தூக்கி, உண்மையில் கண்ணனை சரணடைந்தாள்.

இறைவன் யார், அவனுக்கும் நமக்குள்ள தொடர்பு என்ன, அவனை நாம் ஏன் போற்ற வேண்டும் என்று முழு ஞானம் பெற்றவர்களால் மட்டுமே முழு சரணாகதி அடைய முடியும். சரணாகதி என்பது வெறும் வார்த்தைகளால் செய்யக் கூடியதல்ல. ஞானம் அடைந்துவிடலாம், ஆனால் சரணாகதி செய்வது கடினம்.

தேவி பாகவதத்தில் ஒரு பாத்திரம் - பிறவியில் ஊமை - அன்ன ஆகாரங்களில் ஈடுபாடின்றி வெறும் பயித்தியக்காரன் போன்று திரிந்து கொண்டிருந்தான். ஆனால் முற்பிறவியில் உபாசனை செய்து ஞானம் பெற்றவன். அவனை ஒரு கபாலிகன் பலியிடப் பார்த்தான் - தேவி வந்து காப்பாற்றினாள் - அவனுக்கு பலியைப் பற்றியும் கவலையில்லை, தேவி காப்பாற்றியதைப் பற்றியும் கவலையில்லை. பிற்காலத்தில் தேவி அவனுக்கு அருள் புரிந்தாள். இது தான் சரணாகதியின் உண்மைத் தோற்றம்.

ப்ரம்ம ஞானம் பெற்றவன்தான் சரணாகதி செய்யமுடியும். எப்படி வெறும் அறிவினால் (intellect) மட்டுமே ப்ரம்ம ஞானம் பெறமுடியாதோ, அதேபோன்று வெறும் அறிவினால் மட்டுமே சரணாகதி செய்யமுடியாது. இதைத் தெரிந்துகொள்ளாமல், எல்லோரும் ஏதோ மந்திரம் போன்று சரணாகதி, சரணாகதி என்று சொல்வது வேதனை தருகிறது.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
– முருகனின் பூர்வ அவதாரம்
சனத் குமாரர்

Muruga

Story of Murugan’s Previous Birth as told by Kanchi Maha Periyava in Tamil. It is a bit long but a highly revealing story.

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.
விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.
“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.
ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.
வாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருத்தருக்கு சத்தியத்திலேயே பிரதிஷ்டையாகிவிட்டால், அப்படிப்பட்டவர் உத்தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி வந்துவிடும். அதாவது, அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியமாகிவிடும். தவறுதலாகவோ, தெரியாததாலோ அவர் உண்மைக்கு விரோதமாக ஒன்றைச் சொன்னால்கூடத் வாஸ்தவத்தில் அப்படியே நடந்துவிடும். பரம சத்தியத்திலேயே ஸ்திரமாக நின்ற ஸனத்குமாரர் எதை நினைத்தாலும் – ஸ்வப்னத்தில் நினைத்தால்கூட – அதுவே சத்தியமாகிவிடும்.
இந்த சமாசாரம் தெரிந்து கொண்ட பின் ஸனத்குமாரர் ஆத்மாராமராக, பரப்பிரம்மத்தைத் தன்னில் தானாக அநுபவித்துக்கொண்டு, பழையபடியே உட்கார்ந்து விட்டார். லோகமெல்லாமே அவருக்கு ஸ்வப்னமாகி விட்டதால் தம் ஸ்வப்பனத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.
ஆனால் இவர் ஸ்வப்பனத்தில் நினைத்த நினைப்பு அசத்தியமாக போய்விடக்கூடாதே என்று பரமேசுவரனுகக்கு விசாரம் வந்துவிட்டது. அதனால், இவர் தரிசனத்துக்காகத் தபஸ் பண்ணாதபோதே, அவராகப் பார்வதீ ஸமேதராக இவருடைய ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.
ஸனத்குமாரருக்கோ மரம், மட்டையிலிருந்து சகலமும் ஒரே பிரம்மமாகத்தான் தெரிந்தது. பிரம்மத்தில் உசந்த பிரம்மம் தாழ்ந்த பிரம்மம் என்று உண்டா என்ன? எல்லாம் பிரம்மம் என்ற மாதிரியே பரமேசுவரனும் பிரம்மமாகத் தெரிந்தார். அவரை உபசரிக்க வேண்டும், பூஜை பண்ண வேண்டும் என்ற எண்ணமே ஸனத்குமாரருக்குக் கொஞ்சம் கூட உண்டாகவில்லை. அவர் தம்பாட்டுக்கு உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தார்.
பார்வதீ – பரமேசுவராள் ரொம் நேரம் நின்று பார்த்தார்கள். ஒரு பலனும் இல்லை. இப்படி மகா ஞானியாக ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அவர்களுக்குப் பரமப் பிரீதிதான். இருந்தாலும் ஈசுவரன் பொய்க் கோபத்துடன் ‘ஞானி என்ற அகங்காரம்தானே உனக்கு? நாங்கள் லோகத்தின் மாதா பிதாக்கள் வந்திருக்கும்போது அவமதித்துவிட்டாயே. நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார்
ஸனத்குமாரர் பயந்துவிடவில்லை. அலட்சியமாக, “நீர் சாக்ஷாத் மகா கோபிஷ்டரான ருத்திரராக இருந்து சாபம்தான் கொடும். அது ஆத்மாவைப் பாதிக்காது” என்று சொல்லிவிட்டு நிச்சிந்தையாக இருந்தார்.
‘அடடா, எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்ம ஞானி!’ என்று ஈசுவரனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.
இன்னும் கொஞ்சம் பரீட்சை பார்த்து, பூராவும் ஞானி தானா என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்து, “அப்பா; உன்னுடைய ஞானத்தை நான் ரொம்பவும் மெச்சுகிறேன். என்ன வேண்டுமானாலும் வரம் கேள். தருகிறேன்” என்றார்.
ஸனத்குமாரர் சிரித்தார். ‘உம் வரத்தை நீரே வைத்துக் கொள்ளும். எதை அடைந்தபின் இன்னொன்று வேண்டும் என்ற ஆசை லவலேசமும் இருப்பதில்லையோ, அப்படிப்பட்ட நிறைந்த நிறைவாக இருக்கிற எனக்கு வரத்தினால் ஆக வேண்டியது கடுகத்தனைக்கூட இல்லை’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.
அதற்கும் ஒரு படி மேலே போனார். “பரமேசுவரா! நீ பேசுவதிலிருந்து பார்த்தால் நீதான் வரம், சாபம் இதுகளிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் சரி, உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள். தருகிறேன்” என்றார்.
ஸனத்குமாரர் சொன்னதைக் கேட்டு ஈசுவரனுக்குப் பெருமையாக இருந்தது. நம் குழந்தை நம்மிடம் ‘தாட்பூட்’ செய்தால், நமக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும்? சர்வ லோக மகேசுவரனான அவர் ரொம்பவும் தழைத்து தம்மைச் சிறியவராக்கிக் கொண்டு ஸனத்குமாரரிடம் வரம் கேட்டார். இவருடைய ஸ்வப்பனத்தை நிஜமாக்க இதுவே வழி என்று நினைத்துக் கேட்டார்.
“அப்பா! இப்பேர்ப்பட்ட மகா ஞானியான நீ பிரம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறாய். பிரம்மா செய்த பாக்கியம் எனக்கும் கிடைக்கும்படியாக வரம் கொடுப்பாய்! இன்னொரு ஜன்மாவில் நீ எனக்குப் புத்திரனாகப் பிறக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
“ஆஹா, உனக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார் ஸனத்குமாரர். ஞானம் வருகிறவரையில்தான் இனிப் பிறவி வேண்டாம் என்று அழுவோம்.
ஞானம் வந்துவிட்டால் எப்போதும் ஆனந்த ஸாகரம்தான். ஜன்மா கின்மா எல்லாம் அதில் ஒரு சின்னக் குமிழி மாதிரிதான். அது வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது.
ஸனத்ககுமாரர் சொல்வதெல்லாம் சத்தியமாகிவிடும் அல்லவா? இப்போது ஈசுவரனை மட்டும் பார்த்ததுதான் ‘உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்றார். அம்பாளையும் சேர்த்து, ‘உங்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்று சொல்லவில்லை.
இதையும் ஸனத்குமாரர் யோசித்துப் பார்த்தார். ஸனத்குமாரருக்கும் தாம் பார்வதியை நீக்கி பரமேசுவரனுக்கு மட்டும் பிள்ளையாகப் பிறப்பதாகச் சொன்னதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. அவருக்கு எவரிடமும் நிர்ப்பயம் தான். அதனால் அந்த நியாயத்தை வெளிப்படையாகவே சொன்னார்.
‘கேட்காதவருக்கு ஒன்றைத் தரக்கூடாது என்று சாஸ்திரம். அந்த நியாயப்படி நீதான் என்னிடம் வரம் கேட்டாயே தவிர, பார்வதி கேட்கவில்லை. ஆகவே, உனக்கு மட்டுமே பிள்ளையாகப் பிறப்பேன். நீ மட்டுமாக என்னை எப்படி உற்பவிக்கச் செய்வாயோ, அப்படிச் செய்துகொள்” என்று ஸ்வாமியிடம் சொன்னார்.
இதைக் கேட்டதும் அம்பாளுக்கு ரொம்ப ஏமாற்றமாக, பரம துக்கமாக ஆகிவிட்டது. லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் அவள் குழந்தைகள்தாம் என்றாலும், இது அந்த ஞானாம்பாளுக்கே தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட ஒரு பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிறபோது, அவன் நேராகத் தனக்குப் பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்று அவளுக்கும் ஆசையிருந்தது.
இவர் சாஸ்திரத்திலிருந்து நியாயம் காட்டினமாதிரி, அவளும் காட்டித் தர்க்கம் பண்ணினாள். “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லியிருக்கிறது. பதி பிரார்த்திப்பதெல்லாம் பத்தினியையும் உத்தேசித்துத்தான். ஆனதால் நான் தனியாக வரம் கேட்க வேண்டும் என்றில்லை. அவர் கேட்டதாலேயே நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்று ரைட் கேட்டாள்.
ஸனத்குமாரர் யோசித்தார். “அம்மா, நீ சொல்வது நியாயம்தான். இருந்தாலும் நான் ஈசுவரனிடமிருந்து மட்டும் உற்பவிப்பது இன்னொரு தினுசில் எனக்குத் திருப்தி தருவதாகத் இருக்கிறது. எல்லாம் பிரம்மம் என்று எனக்குத் தெரிந்தாலும், அதற்கே நீங்கள் இரண்டு பேரும் எனக்கு இத்தனை ‘டைட்டில்’ கொடுத்தாலும், ஒரு விஷயத்தில் எனக்குப் பக்குவம் வரவில்லை. அதாவது, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தில் நாம் பிறப்பதாவது, கர்ப்பவாசம் செய்து கீழ்முகமாக ஜனிப்பதாவது என்று இன்னமும் எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. பிரம்ம ஞானிக்கு இப்படி இருக்கக் கூடாததுதான். ஆனால் ஏனோ இருக்கிறதே. அதனால் இதைச் சொல்கிறேன். ஆகையால் நீ பெரிய மனசு பண்ணி, உன் பதி மட்டுமே என்னைச் ஜனிக்கச் செய்வதற்கு அநுமதி தர வேண்டும்” என்றார்.
ஆனால் அம்பாளுக்கு மனசு வரவில்லை.
யோசித்துப் பார்த்துக் கடைசியில் ஒரு ‘ராஜி’ க்கு – ‘காம்ப்ரமைஸு’க்கு – வந்தார்கள்.
ஆதியில் பரமேசுவரன் பஸ்மாசுரனுக்கு வரம் தந்திருந்தார். இந்த வர பலத்தால், அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகிவிடுவார்.
வரம் பலிக்கிறதா என்று பரமேசுவரனிடமே பரீட்சை பார்க்க வந்தான் அசுரன். உடனே அவர் அந்தர்த்தானமாகி விட்டார்.
அந்தச் சமயத்தில் அம்பாள் ஏதோ லீலா நிமித்தம் தன்னுடைய ஸர்வக்ஞத்வத்தை மறைத்துக்கொண்டு சாதாரண ஸ்திரீ மாதிரி இருந்தாள். எனவே, திடீரென்று பரமேசுவரனின் சரீரம் மறைந்ததைப் பார்த்ததும் அவளுக்குப் ‘பகீர்’ என்றது. பதிவிரதா ரத்தினமான அவளால் ஈசுவரனின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அப்போதே அப்படியே உருகிவிட்டாள். யதார்த்தத்திலேயே அவளுடைய சரீரம் உருகி ஒரு ஜலாசயமாக (நீர் நிலையாக) ஆகி விட்டது. அதுதான் சரவணப் பொய்கை.
பிறகு பஸ்மாசுரன் மறைந்து ஸ்வாமி சரீரத்துடன் வந்ததும், அம்பாளும் தன் திவ்விய தேகத்தை எடுத்துக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய பதிவிரதா தர்மத்துக்கும் பிரேமைக்கும் அடையாளமாக சரவணப் பொய்கையையும் அழியாமலிருக்கும்படியாக அநுக்கிரகத்தாள். சரவணம் சாட்க்ஷாத் இவள் சரீரம்தான். அது இப்போது நினைவுக்கு வந்தது.
அதனால், ஸனத்குமாரர் அடுத்த ஜெனமாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.
இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை.
அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார்.
“ஆனானப்பட்ட என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்?” என்று கங்கை அவரைக் கேட்டாள்.
அவர், “சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்” என்றார்.
இதன்படியே கங்கை செய்ய, சரவணபவனாக முருகன் அவதரித்தான். பிறகு ஸனத்குமாரர் கண்ட ஸ்வப்னப்படி தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகி, அசுரர்களை ஸமூலம் இருந்த இடம் தெரியாமல் சம்ஹாரம் செய்து சர்வ லோகங்களையும் ரக்ஷித்தான் இந்த சரவணபவன். அவருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் இதுவே ஷடக்ஷரி, ஆறெழுத்து என்று மகாமந்திரமாக இருக்கிறது. சரவணமாக இருக்கும் அம்பாளின் மகிமை!
ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ‘சகல வேதங்களையும், இதிஹாச புராணங்கள், சகல சாஸ்திரங்கள், தேவ வித்யை, பிரம்மவித்யை, பூத வித்யை, நக்ஷத்திர வித்யை என்று ஒன்று பாக்கியில்லாமல் எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன். ஆனால், இதனாலெல்லாம் வெளி சமாசாரங்கள், மந்திரங்களைத்தான் தெரிந்து கொண்டேனே யொழியத் தன்னைத்தெரிந்து கொள்ளவேயில்லை. ஆத்மாவை அறியாததால் துக்கத்தில்தான் இருக்கிறேன்.
நீங்கள்தான் என்னைத் தூக்கி அக்கரை சேர்க்க வேண்டும்’ என்றார் நாரதர்.
ஸனத்குமாரர், “ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்று தேடிப்போக வேண்டியதில்லை. கீழும் மேலும், முன்னும் பின்னும், வலது பக்கமும் இடது பக்கமும் எல்லாம் ஒரே ஆத்மாதான். அதைப் பற்றியே ஒருத்தன் தியானித்து தியானித்து, அதுவாகவே ஆகிவிட்டால், அப்புறம் அதிலேயே அவன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான். உண்மையான ஸ்வராஜ்யம் தன்னைத்தானே ஆண்டு கொள்கிற இந்த நிலைதான். இவன்தான் ‘ஸ்வராட்’ – உண்மையான சக்கரவர்த்தி. இந்த உத்தம நிலையை அடைய முதலில் ஆகார சுத்தியில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு படிப்படியாக சித்தசுத்தி உண்டாகி, மனசு நன்றாக தியானத்தில் நிலைத்து நின்று, எல்லாக் கட்டுக்குள் தெரித்து விழுந்து, ஆத்ம ஸ்வரூபமாகவே இருப்பான்” என்று வழிகாட்டினார்.
‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.
இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

ரமணரின் கருணைக்கு எல்லை ஏது!

ஒருமுறை… குளித்துவிட்டு வந்ததும் அந்தக் கொடியில் உலர்த்தியிருந்த துண்டை எடுத்தார் ஸ்ரீரமணர். அந்த மூங்கில் கொடியின் ஓரத்தில் குருவிஒன்று கூடு கட்டியிருந்தது. தவிர, குருவியானது நாலைந்து முட்டைகளையும் இட்டிருந்தது போலும்! இவை எதையும் கவனிக்காத ரமண மகரிஷி, துண்டை எடுக்க… அப்போது அவருடைய கை குருவியின் கூட்டில் பட்டது. இதனால், கூட்டில் இருந்து முட்டை ஒன்று கீழே விழுந்ததில் லேசாக விரிசல் உண்டாயிற்று!

இதைக் கண்டதும் ரமணர் பதறிப் போனார். செய்வதறியாது தவித்தார். இந்தக் கூட்டைக் கவனிக்காமல் இருந்து விட்டோமே… என்று கலங்கினார்; கண்ணீர் விட்டார்! அருகில் இருந்தவர்களை அவசரமாக அழைத்த மகரிஷி, ”மூங்கில் கொடியில் குருவியானது, கூடு கட்டியிருப்பதை எவருமே பார்க்கவில்லையா? அப்படி பார்த்திருந்தால், முன்னமே என்னிடம் சொல்லியிருக்கலாமே? கொடியில் இருந்த துண்டை எடுக்கும்போது கூட்டுக்கு ஒன்றும் நேராமல் தவிர்த்திருக்கலாமே…” என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.

‘எவ்வளவு பெரிய பாவம் செய்து விட்டோம்…’ என்று வருந்தியபடி இருந்த ரமணர், விரிசலுடன் இருந்த முட்டையை எடுத்து, தனது உள்ளங்கையில் வைத்துக் கொண்டார். அந்த முட்டையையே கருணையுடன் பார்த்தார். ‘பாவம் இதன் தாய்! இதனால் அது எவ்வளவு துக்கப்பட்டிருக்கும்? அந்தத் தாய்க் குருவி ஆசையுடனும் அன்புடனும் அடைகாத்த முட்டையை உடைத்துவிட்டதால் என் மீது அது எவ்வளவு கோபமாக இருக்கும்? இந்த விரிசல் சேருமா? சேர்ந்தால் நன்றாக இருக்குமே…’ – மனதுள் நினைத்துக் கொண்டார்.

கருணை மனமும் தாய்மை குணமும் கொண்டு முட்டையிடம் வாஞ்சை காட்டிய ரமணருக்கு, அப்போது உதித்தது யோசனை ஒன்று… விறுவிறுவென துணி ஒன்றை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வந்தார்; அந்த விரிசல் விழுந்த முட்டையைச் சுற்றிலும் ஈரத்துணியைக் கட்டினார்; அப்படியே பூப்போல மெள்ள எடுத்து வந்து கூட்டுக்குள்ளேயே வைத்தார். அவ்வளவுதான்! அன்று முழுவதும் வேறு எதிலும் ஈடுபடவே இல்லை ரமணர்! குருவிக் கூட்டுக்கு அருகிலேயே அமர்ந்த ரமண மகரிஷி, மனதுள் தோன்றும் போதெல்லாம் எழுந்து, கூட்டுக்கு அருகே போவதும் அந்த துணி கட்டிய முட்டையை எடுத்து கருணை வழிய பார்ப்பதுமாகவே இருந்தார். உள்ளங்கையில் முட்டையை ஏந்தியிருக்கும் வேளையில், அவருடைய மனம், ‘இந்த விரிசல் ஒட்டிக்கொள்ள வேண்டும்; முட்டையானது உயிராக மலர வேண்டும்’ என்றே சிந்தித்தது.

ஞான குருவின் எண்ண அலைகள், அந்த முட்டை விரிசலிலேயே இரண்டறக் கலந்திருந்தது. ஏதோ மிகப் பெரியதொரு குற்றத்தைச் செய்துவிட்டது போல் கூனிக் குறுகியவர், அந்தத் தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக குருவிக் கூட்டுக்கு அருகில் இருந்ததைக் கண்ட அன்பர்கள், ‘நம்முடைய மகான் செய்யும் இந்தக் காரியம் கிட்டத்தட்ட தவத்துக்கு இணையானதுதான்’ என உணர்ந்து சிலிர்த்தனர்.

அடுத்தடுத்த நாளும் இது தொடர்ந்தது. துணியை தண்ணீரில் நனைப்பதும், அந்த முட்டையில் கட்டி வைப்பதும், அருகில் இருந்தபடியே அடிக்கடி வாஞ்சையுடன் பார்த்து வருவதுமாக இருந்தார் ஸ்ரீரமணர்! ஏழாம் நாள்… துணியை நீரில் நனைத்து கட்டுவதற்காக, முட்டையை எடுத்தவர் அப்படியே வியந்து நின்றார். அவர் முகம் முழுவதும் நிம்மதி; ஆம்… அந்த விரிசலைக் காணோம்!

அன்பர்களை அழைத்த ரமணர் சந்தோஷத்துடன், ”இங்கே பார்த்தீர்களா? முட்டையில் விரிசல் இருந்த சுவடுகூட தெரியவில்லை. தாய்க் குருவிக்கு இது தெரிந்தால், எத்தனை சந்தோஷப்படும்? இனி ஒரு குறையுமில்லை. நல்லவேளை… மிகப் பெரிய பாவத்துக்கு ஆளாக இருந்த என்னை, இறைவன் காப்பாற்றி விட்டான்” என்று கூறி சின்னக் குழந்தை போல் பரவசமானார் ரமணர்.

சில நாட்கள் கழிந்த நிலையில், மூங்கில் கொடியின் ஓரத்தில் இருந்த குருவிக் கூட்டை எட்டிப் பார்த்த ரமண மகரிஷியின் மனமெல்லாம் நிறைந்தது. அந்த முட்டை குஞ்சாகப் பொரிந்து, உயிராகக் காட்சி தந்தது.
குருவிக் குஞ்சை அப்படியே எடுத்து உள்ளங்கையில் ஏந்திக் கொண்டார் ரமணர்; அதன் உடலை மெள்ள வருடிக் கொடுத்தார்.

ஆஸ்ரமத்து பணியாளர்கள் மற்றும் அன்பர் பெருமக்களை அழைத்தவர், ”பார்த்தீர்களா குழந்தையை! எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்று எல்லோரிடமும் குருவிக் குஞ்சைக் காட்டி குதூகலித்தார். தாய்க் குருவி, முட்டையை அடைகாத்ததோ இல்லையோ… அந்த தாய்க் குருவியின் ஸ்தானத்தில் இருந்தபடி முட்டையை அடைகாத்தார் ரமணர்.

‘நான்’ எனும் கர்வத்தையும் சிந்தனையையும் ஒழித்து, பார்க்கும் உயிரில் எல்லாம் இறைவனைக் கண்ட ரமணரின் கருணைக்கு எல்லை ஏது?!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

படித்ததில் பிடித்தது ......... !!

சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.
பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.
தண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்.
பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.
இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.
பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.
செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.
வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்.
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்
மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி, பெண்களுக்கு ஒன்பது நாள் நவராத்திரி

நமது இந்து மதத்தில் எத்தனை எத்தனையோ பண்டிகைகள். ஒவ்வொன்றும் கொண்டாடப்படுவதும் ஒரு தனி விதம். இந்த பண்டிகைகளை எல்லாம் குட்டி பண்டிகைகள் என்று சொல்வோமானால் இதற்கெல்லாம் ஒரு தாய் தான் நவராத்திரி விழா.

இந்த பரந்த பாரத தேசத்தில் எல்லா பக்கங்களிலும் கொண்டாடப் படுவது நவராத்திரி.

“இது புரட்டாசியில் வரும். சரத் ருது என்று மாரிக்காலத்துக்கு முன்பு ரிஷிகள், முனிவர்கள் விரதமிருக்கும் சாதுர்மாஸ்ய சமயத்தில்
(AUTUMN ) வரும் பண்டிகையாதலால் சாரத நவராத்திரி என்றும் பெயர். சாரதா என்பது சரஸ்வதிக்கும் ஒரு பெயர். நவராத்ரியில் மும் மூன்று நாள் துர்க்கா, லக்ஷ்மி சரஸ்வதியை கொண்டாடுவது.

மூக பஞ்சசதி என்கிற ஸ்தோத்ரத்தில் சரஸ்வதியை ''விமலபதி'' என்று வர்ணிப்பது அவளது வெண்ணிற ஆடையை குறிக்கும். ஆகாயம் நிர்மலமாக இருக்கும்போது தோன்றும் சந்திரன் ''சரத் சந்திரன்'' என்று அழைக்கப் படுகிறான். சரத் கால நிலா. வெண்மை அமைதியை குறிக்கும். பரிசுத்தத்தை வெளிப்படுத்தும். அரசியல் வாதிகள் பலபேர் வெள்ளை ஆடை உடுத்துகிறார்கள். 'மனதும் இதயமும் சுத்தம்' என்பதற்காக கூட இருக்கலாம். .

‘ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த நவராத்திரி சமயம் இந்தியா பூரா வானிலை ஒரே மாதிரி இருக்கும். தென் மேற்கு பருவக்காற்று முடிந்து கிழக்கே வட கிழக்கு பருவக்காற்று தலையெடுக்கும் சமயம். குளிர்ச்சி நிறைய காத்திருக்கும். நமது தேசத்தில் பல நகரங்களில் உஷ்ணமானி அதிக பக்ஷமாக 85°F க்கு ஒரு பத்து சதவிகிதம் மேலேயோ கீழேயோ தான் காட்டும். அனலும் இல்லை, எலும்பைத் துளைக்கும் குளிரும் இல்லை. மித உஷ்ணம். சட்டை இன்றி பூஜை செய்ய தோதான சமயம்..

மார்ச் ஏப்ரல் மாதத்தின் போது வசந்த ருதுவில் வசந்த நவராத்திரி கொண்டாடுவது கோவில்களில் மட்டும் தான். இந்த சாரத நவராத்திரி தான் எல்லா வீடுகளிலும் கோவில்களிலும் பொது இடங்களிலும். (இப்போதெல்லாம் பேங்க் களில் கூட கொலு), நவராத்ரி பற்றி நிறைய புராண கதைகளும் உண்டு. அம்பாளை அலைமகள், கலைமகள், மலைமகளாக வழிபடும் விழா.

நமது ஊரில் ஆயுத பூஜை விசேஷம். 10வது நாள் தசமி, விஜய தசமி. தொட்டதெல்லாம் பொன்னாகும், வெற்றி கிட்டும் நாள். இந்த பத்து நாள் தான் தசரா என்று பத்து இரவுகளாக எல்லா இடத்திலும் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். மைசூரில் கேட்கவே வேண்டாம். கூட்டம் அம்மும். ஸ்பெஷல் ரயில் விடுவார்கள். மைசூர் மகாராஜா அரண்மனை இந்திர லோகம். சாமுண்டி என்கிற சக்தி துர்கா தேவதை மைசூர் மகாராஜா வம்ச குல தெய்வம் என்பதால் அதி விசேஷம். யானை, குதிரை ஊர்வலங்கள் சாமுண்டி மலைவரை நீளும். வாண வேடிக்கை, பளிச் பளிச் அலங்கார தீபங்கள். துர்கா தானே மகிஷாசூரனை ஒன்பது நாள் தவமிருந்து சம்ஹாரம் செய்தவள். அவளைச் சிறப்பாக
கொண்டாட வேண்டாமா? .

கிழக்கே வங்காளத்தில் காளி பூஜை, துர்கா பூஜை மும்முரமாக நடக்கும். பழைய காலங்களில் ரத்தம் நிறைய ஆறாக ஓடும். உக்ர தேவதைக்கு பலி நிறைய எருமைகள். அதற்கும் முந்தி எப்போதோ மனிஷனையே பலியாக கொடுத்திருக்கிறார்கள். கடைசி ஐந்து நாள் உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். மேற்கே எப்படி 'கணபதி பப்பா மோரியா' மராத்தியர்களை சுண்டி இழுக்குமோ அதுபோல் கிழக்கே காளி மாதா வங்காளியர்கள் அனைவரையும் கட்டிப்போடுவாள்.

வடக்கே ராம் லீலா. பாகவதம் பிரகாரம் ராமர் சாரத நவராத்திரி பூஜைகள் செய்து பலம் பெற்று ராவணனை முடித்தார் என்று சொல்லும். வடக்கே ராம் லீலாவில் பெரிய ராவணன் கும்பகர்ணன் பொம்மைகள் விழா முடிவில் சிதைக்கப்படும். எரிக்கப்படும்.

குஜராத் பகுதியில் நவராத்திரி நாட்களில் நிறைய பேர் கர்பா, டாண்டியா நாட்டியங்கள் நடனங்கள் கலந்து ஆடுவார்கள். கோலாட்டம் கும்மி மாதிரி. சந்தோஷம் முகத்தில் கொப்புளிக்கும் அனைவருக்கும். இனிப்பு பக்ஷணங்களுக்கு பஞ்சமே இல்லை. வெளிநாடுகளில் வாழும் வடக்கத்தியர்கள் இந்த நாளை ஒன்று சேர்ந்து சந்தோஷமாக கொண்டாடுவது பற்றிய படங்கள் நிகழ்ச்சி தொகுப்புகள் பார்த்திருக்கிறேன். வயதே வித்தியாசம் கிடையாது இதில். பாட்டு புரியாது நமக்கு. காதுக்கு என்னமோ மாதிரி புரிபடாமல் இருக்கும். தலை, கை மட்டும் ஆடும். பின்பாட்டு ஒலி நாடாவில் எல்லோரும் கேட்கும்படியாக வைத்து ஆடுவார்கள்.ஆரம்பத்தில் மெதுவாக சாதுவாக தோன்றும் பாட்டு போகப் போக குதிரை வேகம், மான் வேகம், பெற்று அனைவரும் எம்பி எம்பி குதித்து காற்றில் பறப்பது போல் சுற்றி ஆடுவார்கள். பாட்டும் சூடு பிடிக்கும்.

நம் ஊர் பழக்கம் வேறே மாதிரியானது. கொலுப்படிகள் ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று, என்று ஒற்றைப் படையாக வீட்டில் இடத்துக்கு தகுந்த அளவில் நிறைய பொம்மைகளோடு. படிகள் கண்டான் முண்டான் சாமான்கள், அலுமினிய, இரும்பு, மர, அட்டைப் பேட்டிகள், பெஞ்சு, மேஜை, ஸ்டூல் இதெல்லாம் போட்டு அடுக்கி, மேலே புடவை, வேஷ்டி, அல்லது பெட்ஷீட் மூடப்பட்டு படியாக காட்சி அளிக்கும். சில வீடுகளில் கொலுப்படி வாங்கி அதை அலங்கரித்து விளக்கெல்லாம் போட்டு தரையில் மண்ணில் பார்க், அமைத்திருப்பார்கள். என் நண்பர் வீட்டில் ஒரு ரயில் சுற்றி சுற்றி வரும்.

துர்க்கா ,லக்ஷ்மி, சரஸ்வதி பூஜை மூன்று மூன்று நாள், அடுத்து ஆயுத பூஜை. அன்று பழைய சைக்கிள் கூட குளித்து சந்தனம் குங்குமம் பூ வைத்துக் கொள்ளும்.

மரப்பாச்சி தம்பதிகள், ஒரு கலசம், ஊசி கூட வைத்து பூஜை நடக்கும். சகல பொம்மைகளும் இந்த படிகளில் காணலாம். செட்டாக நாதஸ்வர ஊர்வலம், கல்யாண ஜானவாச ஊர்வலம், தசாவதாரம், நாரதர், வண்ணான், நாய்க்குட்டி, மளிகை கடை செட்டியார் செட்டியாரம்மா, ராஜா ராணி, பொம்மைகள் கண்ணைப் பறிக்கும். கண்டபடி பொம்மைகளை வைக்கக் கூடாது. அதற்கு ஒரு நியமம் உண்டு. அதன் படி தான் படிப்படியாக வைப்பார்கள். சிறந்த கொலுவுக்கு இப்போதெல்லாம் பரிசுகள் கொடுக்கிறார்கள். பையனாக நான் தினமும் சாயந்திரம் சுண்டல் சேகரிக்க பல வீடுகள் சென்றிருக்கிறேன்.

சில வீடுகளில் தேவி பாகவதம் வாசிப்பார்கள். விஜய தசமிகளில் அழுதுகொண்டே பள்ளி போக தொடங்கும் குழந்தைகள் ஜாஸ்தி. ஆயுத பூஜா அன்று தொழிற்சாலைகளில் இனிப்பு காரம் விநியோகம் நடக்கும். அலுவகங்களில் எல்லோரும் பை நிறைய பொறி கடலை, நாட்டு சர்க்கரை, பழங்கள், இனிப்பு வகைகளோடு வீட்டுக்கு வந்திருக்கிறோம்.

விஜய தசமி அன்று தான் அர்ஜுனன் ப்ருஹன்னளையாக இருந்தவன் தனது காண்டீவத்தை விராட தேசத்தில் அஞ்ஞாத வாசம் முடிந்து வன்னி மரக்கிளையிலிருந்து மீண்டும் எடுக்கிறான். சமீபத்தில் தெலுங்கில் நர்த்தனசாலா என்ற படம் யூ ட்யூப் பில் பார்த்தேன். என்.டி . ராமராவ் ப்ரஹன்னளையாக பெண் வேஷம் தரித்து அவருக்கு பாலமுரளி கிருஷ்ணா பாடிய ' கலளித ராக சுதாராஸ ஒரு அற்புத பாடல் இன்னும் காதில் ஒலிக்கிறது. ஒரு அருமையான அழகு நடிகர் ராமராவ். அவரை நன்றாக பயன் படுத்தியிருக்கிறார்கள் அந்த காலத்தில்.
áந்த பாடலின் லிங்க் கொடுத்திருக்கிறேன். கேட்டுப் பாருங்கள் என்பதை விட ராமராவின் அழகு முகத்தை காண்பது சுவாரசியமாக இருக்கும். https://www.youtube.com/watch?v=ehSC4t9_pgc இந்த லிங்கை இணைய தளத்தில் பார்க்க முடிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

மஹா பெரியவா சொல்வார் ''என்னதான் துர்கா, லக்ஷ்மி சரஸ்வதியாகவோ, முப்பது முக்கோடி தெய்வங்களாக வழிபட்டாலோ, கடைசியில் அது அத்தனையும் அந்த சக்தி, பராசக்தி ஒன்றே தான். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் தேவியை ''சிருஷ்டி கரதீ ப்ரஹ்ம ரூபா '' என்று சொல்லியிருக்கிறது. படைக்கும் தொழில் இது. காக்கும் தெய்வமாக ''கோபித்ரி, கோவிந்த ரூபிணி'' என்றும் அழிக்கும் தெய்வமாக ''சம்ஹாரிணி, ருத்ர ரூபிணி'' என்று சொல்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்ரம், சரஸ்வதி அஷ்டோத்ரங்கள் அவளை '' பிரம்மா விஷ்ணு சிவாத்மிகாய'' என்று முத்தொழில் புரியும் முத்தேவிகளாக எல்லாம் அந்த பராசக்தி ஒன்றே '' என உரைக்கிறது.

“ நவராத்திரியின் போது கன்யா பூஜைகள் நடத்துவார்கள். லக்ஷ்மி பிருகு முனிவர் மகளாக பிறக்கிறாள். அதனாலேயே அவளுக்கு பார்கவி என்று பெயர். காத்தியாயனர் மகளாக பார்வதி அவதரித்து காத்யாயனி என்று பெயர். துர்கா சுக்தம் இதை சொல்கிறது.

கடவுளை குழந்தையாக, சிறுமியாக வழிபடுவது நமது மனத்தில் குழந்தைகளிடம் காணும் கள்ளம் கபடமற்ற எளிமை, காம, குரோத துக்க மார்ச்சர்யங்கள் இல்லாமையை, உண்டாக்கவே தான். உபநிஷங்கள் குழந்தையாக இரு என்று இதைத்தான் சொல்கின்றன’.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

அரசியல் ரீதியாக இந்தியா உருவாகி நூறாண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் பண்பாட்டு ரீதியாக எப்படி இந்த நாடு ஒன்றானது - எத்தனை மொழிகள் - எத்தனை அரசுகள் - ஆனால் பண்பாடு ஒன்று - என எண்ணி எண்ணி வியக்கின்றேன்!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A Share
குளிகை பிறந்த கதை::::
ராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். காரணம் அவன் தந்தையாகப் போகிறான். குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான்.
"குருவே! எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாகவும் (வெற்றி வீரன்) எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாக திகழவும் எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லதென கணித்து சொல்லுங்கள்,'' என்றான்.
“ராவணா! நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே ராசி கட்டத்தில் வந்தால் நல்லது. ஆனால், அது எப்போது வருகிறது என யோசித்து யோசித்து தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது. சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன என்று கூட தோன்றுகிறது,'' என்றார் வேடிக்கையாக.
அப்படி சொன்னது அவருக்கே வினையாகி விட்டது.
“அவ்வளவு தானே! நவக்கிரகங்களையும் ஒன்றாக சிறையில் அடைத்து விடுகிறேன். அதேநேரம், கிரகங்களில் நீங்களும் ஒருவர் என்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன்,'' என்றான்.
சுக்கிரன் எனப்படும் சுக்கிராச்சாரியாரையும், மற்ற கிரகங்களையும் சிறையில் தள்ளினான். தங்கள் நிலைக்கு காரணம் சுக்கிராச்சாரியார் என்பதால் அவரை நவக்கிரகங்களும் திட்டித் தீர்த்தன.
"உங்களுக்கு திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா? அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே! தன்னை விட உயர்ந்தவன்
இருக்கக் கூடாது என்று நினைப்பவன். அவனிடமா நம்பெருமைகளைச் சொல்வது? அறிவு களஞ்சிய மய்யா நீர்,'' என்றார் சனீஸ்வரர்.
"நான் என்னவோ சொகுசாக இருப்பதை போலவும், நீங்கள் மட்டும் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசுகிறீர்கள்.? வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் என்பதை சற்று மறந்து ஆலோசனை சொன்னேன். இப்போது
அனுபவிக்கிறேன்,'' என்றார் சுக்கிரன்.
இதனிடையே, மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவது சிக்கல் என்று வைத்தியர்கள் சொன்னதாக சிறைக்காவலர்கள் பேசியது கிரகங்கள் காதில் விழுந்தது.
"சுக்கிரச்சாரியாரே! எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால், அதை "யுத்த கிரகம்' என்பார்கள். அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி ஒரு யோசனை சொன்னீர்கள்? இப்போது பாருங்கள்! மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப்படுகிறாள். அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் ராவணன் துளைத்து விடுவான் நம்
அனைவரையும்,'' என்றார் சனீஸ்வரர்.
"அசுரத் தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?'' என்றார் பிரகஸ்பதியான குரு.
"புதிதாக ஒரு உயிரை உண்டாக்கி, அதை ஒரு நேரத்திற்கு அதிபதியாக்கினால், ராவணனின் வாரிசு பிழைக்கும்,'' என்ற சனீஸ்வரர் தியானத்தில் அமர்ந்து, தன் உடலில் இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார்.
குழந்தைக்கு "குளிகன்' என்று பெயரிட்டார்.
இவன் பிறந்தவுடனேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது.
"இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?'' என சனீஸ்வரரிடம் மற்றவர்கள் கேட்டனர்.
"யுத்த கிரக வேளையில், குளிகனுக்குரிய குளிகை நேரமாக அது அமைந்தால் பிரச்னையில்லாமல் இருக்கும். வானில் இருக்கும் மேகத்தை காற்று கலைத்து விடுவது போல், குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது,'' என்றார் சனீஸ்வரர்.
குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். கடன் வாங்குவது, பழைய கட்டடங்களை இடிப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை இந்நேரத்தில் செய்யக்கூடாது. கடனை திருப்பி கொடுப்பது, வீடு, நகை வாங்குவது பற்றி பேச்சு நடத்துவது ஆகிய சுபநிகழ்ச்சிகளை செய்தால் நன்மை ஏற்படும்.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Aanmeekam...

Post by arasi »

Thanjavooran,
Your 'a share' brings many moments of wonderful reads. Thanks to you for bringing them and to the source, of course!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
அருமையான ஒரு கிருஷ்ண தந்திர யுக்தி. பொறுமையிருந்தால் படியுங்கள்...
ஸ்ரீ கிருஷ்ணன்
மஹாபாரதக் கதையின் கதாநாயகன் யார் என்று கேட்டால், விதவிதமான பதில்கள் கிடைக்கும் பீஷ்மர், அர்சுனன், பீமன், கர்ணன் என்று ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்வார்கள்.
ஆனால் காவியத்தை நன்றாகப் படித்து, ரசித்து, அதைப் பற்றிச் சிந்தித்தவர்களுக்கு ஒரே ஒரு கதாநாயகன் தான் மனதில் தோன்றுவார். யார் அவர்.?
சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான்.

மஹாபாரதக் கதையின் முடிவில் வருவது பாரதப் போர். 18 நாள் யுத்தம். வெற்றி பாண்டவர்களுக்கு என்பது தெரிந்த விஷயம்.
எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள், கெளரவர்கள் பக்கத்தில் —
பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல். இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்..? ஒவ்வொருவருடைய வீழ்ச்சிக்குப் பின்னாலும் ஸ்ரீ கிருஷ்ணனின் "வேலை" இருந்திருக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணன் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.

இதோ ஒரு கேள்வி:
கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய திட்டம், Master Plan என்ற பாராட்டைப் பெறும்.?

1) ஜயத்ரதன்,
2) பீஷ்மர,
3) துரோணர் கர்ணன்,
4) ஜயத்ரதன்,
5) துரியோதனன்
6) விதுரர்...

அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய யுக்தி தான் சரி என்று நினைப்பார்கள். இன்னும் சில பேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்று நினைக்கலாம். இதே மாதிரிதான், பீஷ்மர், துரோணர் - இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்.
ஆனால் சரியான விடை விதுரருக்காகத் தீட்டிய திட்டம்தான்.

இது என்ன புதுக் கதை? விதுரர் எங்கே சண்டை போட்டார்.? அவரை வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் ஏன்
திட்டம் போட வேண்டும்.?
கேள்விக்கு விடை சொல்லும் முன் ஒரு சிறு பயணம் .

யார் இந்த விதுரர்.?
விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி (Step Brother) என்றும், பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும்
சித்தப்பா என்றும் அவருடைய தாயார் ஒரு பணிப்பெண் என்றும் அநேகமாக எல்லோருக்கும் தெரியும். மகாநீதிமான், தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர் அவர், என்பது மஹாபாரதத்தில் நடந்த அநேக சம்பவங்களிலிருந்து தெரியவருகிறது.
கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் . பீஷ்மருக்குப் பெண்களுடன் போராட
முடியாத மனநிலை. துரோணருக்குப் புத்திர பாசம்.
கர்ணனுக்கு அவனுடைய தயாள குணம். மேலும் இவர்கள் எல்லாரும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்று நியதி.
சாஸ்திரம் சொல்கிறது. எல்லா சமயங்களிலும் அப்பாமார்களும், சகோதரர்களும், கணவன்மார்களும்,
மச்சினர்களும், பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி நடந்துகொண்டார்களா.?
திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்அதற்கான தண்டனை — யுத்தத்தில் மரணம்.
சரி, இப்போது கேள்வி. விதுரருக்காக ஏன் திட்டம் தீட்ட வேண்டும்.?
விதுரர் அப்பழுக்கில்லாதவர். மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து, துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி யுத்தத்தில் சாகடிக்க முடியும்.
மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் . வ் புத்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர் தந்தை - தர்மராஜர் (விதுரர்) சமநிலை சரியாக வராதே.?
எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் - போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக., துரியோதனனுக்காகத்தானே போராட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவார். முன்னமேயே சொல்லியிருக்கிறோம். அவர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது. இப்பொழுது புரிகிறதா.?
விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை.
மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகிஇருக்க வாய்ப்பு உண்டு. அதனால் எல்லோரையும்விட
மிக முக்கயமான நபர், விதுரர்தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போராடக் கூடாது.
எப்படி தடுப்பது.?
இதோ ஸ்ரீ கிருஷ்ணனின் யுக்தி ....
ஸ்ரீ கிருஷ்ணா், விதுரரை கெளரவர்களிடமிருந்து விலக்கிவைக்கப் போட்ட திட்டம், ரொம்ப ரொம்ப சிம்பிள். Human Psychologyஐ நன்கு பயன்படுத்தி
செயல்பட்டார். எல்லோருக்கும் தெரிந்த கதை ஸ்ரீ கிருஷ்ணன் தூது. பாரதப் போரைத் தடுக்க, ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான். அவன் வருகிறான் என்று தெரிந்த திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.
சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின
இரவு, ஸ்ரீ கிருஷ்ணன் யார் வீட்டில் தங்குவார் என்ற கேள்வி பிறந்தது. நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணரோ., “நான் தூதுவன். என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன். இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்” என்றார். விதுரருக்கு மகா சந்தோஷம். தனக்கு பிரியமான கிருஷ்ணன் தன் விருந்தினராக
வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். இரவு பொழுது நன்றாகவே இருந்தது — விதுரருக்கும் கிருஷ்ணருக்கும்.
மறுநாள், அரச சபையில் ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக வாதாடினான். துரியோதனன் ஒரு ஊசி முனை
நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி கிருஷ்ணனையும் அவமதித்துப் பேசினான்.
கிருஷ்ணனும் "யுத்தம் நிச்சயம்" என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார். திரும்பும்முன்,
கிருஷ்ணருடைய சாரதி கேட்டான். சுவாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்.?” என்றான்.
கிருஷ்ணா் சொன்னார், என் மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அது நடக்குமா.? என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று சிரித்தார்.
கிருஷ்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். அதில் விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது.
ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் ஒரு கடுப்பு.
அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு. போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான கிருஷ்ணனை தன் வீட்டில் உபசாரம் செய்தது. விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது. என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப் படுத்திப் பேசினான். குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான்.
(ஏற்க்னவே இருந்த மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்து விட்டது)
விதுரருக்கு கோபம், வருத்தம். சபையோர்கள் நடுங்க சபதமிட்டார். எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை. அழிவு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. என்னை அவமானப் படுத்திய இந்த துரியோதனனுக்காக நான் என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.
யுத்தம் முடியும்வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை என்பது வேறு கதை.
இப்பொழுது உங்களுக்கு
புரிந்து இருக்கும்
ஸ்ரீ கிருஷ்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால்,
விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா.? துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா.?
விதுரர் வைத்திருந்த வில் மஹாவிஷ்ணுவின் வில். கோதண்டம் எனப்படும் அந்த வில்லை எவராகவும் வெல்ல முடியாது. அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. காண்டீபம் என்பது அதன் பெயர். போர் என்று வந்து விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது.! இதனை அறிந்திருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தான் விதுரர் மாளிகையில் தங்கி, துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து., விதுரர் வில்லை முறிக்க வைத்து விட்டார். இதுவும் பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது..!!
இதுதான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய மஹா தந்திர யுக்தி.....

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
விஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்த நாள் இன்று!

பீஷ்ம ஏகாதசி - (20.1.16)

குருக்ஷேத்திரப் போரில் சிகண்டியால் வீழ்த்தப்படும் பீஷ்ம பிதாமகர், உத்தராயண புண்ணிய காலத்தில் உடலைத் துறக்க விருப்பம் கொண்டவராக, அர்ஜுனன் தன் கணைகளால் உருவாக்கிய அம்புப் படுக்கையில் படுத்துக்கொள்கிறார்.

போரின் இறுதியில் கௌரவர்கள் வீழ்த்தப்படுகின்றனர். வெற்றி பெற்ற பாண்டவர்கள், ஆசி பெறுவதற்காக பீஷ்ம பிதாமகரிடம் வருகின்றனர். பீஷ்மர் அவர்களை ஆசிர்வதிக்கிறார்.
யுதிஷ்டிரர் பீஷ்மரிடம், ‘’தங்கள் அன்பாலும் ஆசிகளாலும்தான் எங்களால் போரில் வெற்றி அடைய முடிந்தது. இனி ராஜ்ய பரிபாலனம் செய்யப்போகும் எங்களுக்கு தாங்கள்தான் தர்மநெறிகளை உபதேசிக்கவேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டார்.


யுதிஷ்டிரர் வேண்டிக் கொண்டபடியே பீஷ்மர் அவர்களுக்கு தர்ம நெறிகளை உபதேசிக்கத் தொடங்கியபோது, திரௌபதி சிரித்துவிட்டாள். அசந்தர்ப்பமான சூழலில் திரௌபதி அப்படி சிரித்ததைக் கேட்ட யுதிஷ்டிரர், ‘‘எதற்காக சிரித்தாய்?’’ என்று கோபத்துடன் கேட்டார். யுதிஷ்டிரரை சாந்தப்படுத்திய பீஷ்மர், அதே கேள்வியை திரௌபதியிடம் கேட்டார்.
‘‘அன்று துரியோதனன் சபையில் நான் அவமானத்துக்கு உள்ளானபோது, அந்த அநியாயத்தைத் தடுக்காமல் இருந்த தங்களிடம் தர்ம நியாயங்களை உபதேசிக்குமாறு கேட்டதும் என்னை அறியாமல் சிரித்துவிட்டேன். அன்பு கூர்ந்து மன்னியுங்கள்’’ என்றாள் திரௌபதி.

பீஷ்மர், ‘‘துருபதன் மகளே, நீ அப்படி நினைத்துச் சிரித்ததில் தவறு இல்லை. இங்கே உன்னிடம் ஓர் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். அன்று துரியோதனன் சபையில் உனக்கு அநீதி இழைக்கப்பட்டபோது நான் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்ததற்குக் காரணம், அப்போது என்னுடைய உடலில் ஓடிய ரத்தம் துரியோதனன் தந்த உணவால் உண்டானது. அதனால்தான் என்னால் அநியாயத்தைத் தட்டிக் கேட்க முடிய வில்லை. ஆனால், இப்போது போர்க்களத்தில் என்னுடைய உடலில் துளைத்த அம்புகள் அத்தனை ரத்தத்தையும் வெளியேற்றிவிட்டன. எனவே, இப்போது நான் தர்மநியாயங்களை உபதேசிப்பதில் தவறு இல்லைதானே?’’ என்று கேட்க, அவசரப்பட்டு சிரித்ததற்காக பீஷ்மரிடம் மன்னிப்பு கேட்ட திரௌபதி, தானும் அவருடைய உபதேசங்களைக் கேட்கக் காத்திருப்பதாக கூறினாள்.

பீஷ்மர், பாண்டவர்களுக்கு தர்மநியாயங்களை எல்லாம் விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் இறுதியாக, கலியின் துன்பங்களை எல்லாம் போக்கும் அதிஅற்புதமான ஸ்தோத்திரத்தை உபதேசிக்கிறார். அதுதான் விஷ்ணுசஹஸ்ரநாம ஸ்தோத்திரம். பகவானின் ஆயிரம் நாமங்களின் மகிமைகளை பாண்டவர்களுக்கு உபதேசித்த பீஷ்மர், "அந்த பகவான் வேறு யாரும் இல்லை. உங்களுக்கு சதாசர்வ காலமும் உற்ற துணையாக இருக்கும் கிருஷ்ணரே..!" என்றும் விளக்கினார்.

நண்பர்களே, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய... நமக்குத் தெரியாத மற்றுமொரு புண்ணிய கதையும் உண்டு. அது...
***
ஸ்படிக மாலை செய்த அற்புதம்!

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; பின் தர்மம் வெல்லும்’ என்ற உயரிய உண்மையை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்காக நிகழ்ந்த மாபெரும் யுத்தமே குருக்ஷேத்திரப் போர். தர்மத்தை நிலைநாட்ட பாண்டவர்கள் பக்கம் நின்று, தேரோட்டியாகப் பணி புரிந்து, தனது கடமையைச் செய்துகொண்டிருந்தான் அவதார புருஷனான ஸ்ரீகிருஷ்ணன்.

பீஷ்மர், துரோணர், கிருபர் முதலான பெரியோர்கள் செஞ்சோற்றுக் கடன் கழிப்பதற்காக, தீயோன் என்று தெரிந்தும் துரியோதனன் பக்கம் நின்று, பாண்டவர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர்.
கௌரவ சேனைக்குத் தலைமை தாங்கிய பீஷ்மர், 10-ம் நாள் போரில் அர்ஜுனனின் அஸ்திரங்களால் வீழ்த்தப்பட்டார். தான் விரும்பியபோது மரணம் அடையலாம் என்று வரம் பெற்றிருந்த அவர், அம்புகளையே படுக்கையாக்கிக்கொண்டு, உத்தராயனம் வரும்வரை அதன்மீது படுத்திருந்தார். தீயவர்களின் உப்பைத் தின்று வளர்ந்த தன் உடம்பிலிருந்து உதிரத் துளிகள் மொத்தமாக பூமியில் சிந்தி, உடல் முழுவதும் புனிதப்படுவதற்காக, அவர் இந்த அஸ்திரப் படுக்கை எனும் சாதனையை மேற்கொண்டார். கௌரவர்களும், பாண்டவர்களும், பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் பீஷ்மரின் அம்புப் படுக்கையைச் சுற்றி நின்றிருந்தனர்.

பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபடியே தர்ம சாஸ்திரங்களையும், ராஜ தந்திரங்களையும் தருமபுத்திரருக்கு உபதேசித்தார். தன்னைச் சுற்றி நின்றிருந்த கூட்டத்தில், பகவான் கிருஷ்ணனையும் அவர் கண்டார். ஸ்ரீமந் நாராயணனே பகவான் ஸ்ரீகிருஷ்ணனாக பூமியில் அவதரித்திருந்த உண்மையை பீஷ்மர் உணர்ந்திருந்தார்.

ஸ்ரீமந் நாராயணனின் விஸ்வரூப தோற்றமும், அதில் அடங்கிய பல்வேறு ரூபங்களும், அவற்றுக்குரிய நாமங்களும், பீஷ்மருடைய மனக்கண் முன் அப்போது தோன்றின. இதனால் பக்திப் பரவசம் அடைந்த பீஷ்மர், ஸ்ரீமந் நாராயணனின் பெருமையை அற்புதமான கவிதைகளால் பாட ஆரம்பித்தார். அதுவே 'ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம்’ எனும் மகிமை மிக்க மந்திரத் தொகுப்பு!

ஸ்ரீமகாவிஷ்ணுவின் தோற்றத்தையும், பல்வேறு அம்சங்களையும் ரூப, நாம, குண மாதுர்யங்களையும், அருட்திறனையும் வர்ணித்து, விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பீஷ்மர் போற்றிப் புகழ்ந்து பாடினார். சுற்றி நின்றிருந்த அனைவரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டுப் பரவச நிலையை அடைந்தனர். ஆனால், துரியோதனன் முதலான கௌரவர்கள், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பீஷ்மர் பாட ஆரம்பித்ததுமே, அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டனர். பாண்டவர்கள் மட்டுமே அவர் கூறிய மந்திர சப்தங்களைக் கேட்டு, மெய்ம்மறந்து நின்றனர்.

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் நிறைவுற்றதும், தனது விஸ்வரூப தரிசனத்தால் பீஷ்மருக்கு அருள்பாலித்தான் ஸ்ரீகிருஷ்ணன். அனைவரையுமே அந்த மந்திரங்கள் கவர்ந்தன என்றபோதிலும், பாண்டவர்களின் கடைசி சகோதரனான சகாதேவனை அவை தீவிரமான பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின. ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவனான அவன், எத்தனையோ சாஸ்திர நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். இருந்தாலும், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வரிகள் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தன.

ஆனாலும், பீஷ்மர் கூறிய அனைத்து வாசகங்களும் அவனது நினைவுக்கு வரவில்லை. இதையறிந்த ஸ்ரீகிருஷ்ணன், ''இத்தனை அருமையான மந்திர தத்துவங்களை பீஷ்மர் எடுத்துக் கூறியபோது, அவற்றை உனது ஏடுகளில் நீ குறித்துக் கொள்ளவில்லையா?'' என்று சகாதேவனிடம் கேட்டான்.

அவ்வாறு செய்யாமல் போனதற்குச் சகாதேவன் வருந்தினான். ஓர் உயர்ந்த பொக்கிஷத்தை- கடவுளைப் போற்றும் பாடல்களை எப்படி நினைவுகூர்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது, அதற்கான வழியை எடுத்துக் கூறினான் ஸ்ரீகிருஷ்ணன். ''சகாதேவா! பீஷ்மர் மோட்சம் அடைந்து, அவர் உடலுக்கு மரியாதை செய்து முடித்த பின்பு, அவர் கழுத்தில் அணிந்துள்ள ஸ்படிக மணிமாலையை எடுத்து நீ அணிந்துகொள். அந்த மணிகளின் சக்தியால் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முழுவதுமாக உன் நினைவுக்கு வரும்!''

சகாதேவன் ஆச்சரியம் அடைந்தான். ''சாதாரண ஸ்படிக மணிகளுக்கு மந்திர ஸப்தங்களை ஈர்த்து, மீண்டும் அவற்றை வெளிப்படுத்தும் சக்தி உண்டா?'' என்று கேட்டான். அப்போது, பீஷ்மருக்கு அந்த ஸ்படிக மணிகள் எவ்வாறு கிடைத்தன என்ற வரலாற்றைக் கூறி, அதன் பெருமையை விளக்கினான் ஸ்ரீகிருஷ்ணன்.

பீஷ்மரின் இயற்பெயர் கங்காபுத்திரன். கங்காதேவிக்கும் சந்தனு மகாராஜனுக்கும் பிறந்தவர் அவர். சந்தனு ராஜன் ஒரு மீனவப் பெண்ணை மணக்க விரும்பினார். அந்தப் பெண்ணின் தந்தை கேட்டுக்கொண்டபடி, தான் திருமணமே செய்துகொள்வது இல்லை என்று சபதமேற்றார் கங்காபுத்திரன். வாழ்நாள் முழுவதும் பிரம்மசரிய விரதத்தை முழுமையாக அனுசரித்து வைராக்கியமாக வாழ்ந்ததால், சத்தியவிரதன் என்றும் பீஷ்மர் என்றும் பெயர் பெற்றார்.

இவ்வாறு தன் தந்தைக்காகச் சபதம் ஏற்றபோது, பீஷ்மரின் மனம் சற்றுக் கவலையுற்றது. வாழ்நாள் முழுவதும் சபதத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அபார மனோபலமும், வைராக்கியமும் வேண்டும் என்பதற்காக, தன் தாய் கங்காதேவியைப் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய கங்காதேவி, கங்கை நீரை எடுத்தாள். அப்போது, வானில் பிரகாசித்துக்கொண்டிருந்த சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள், அவள் கையிலிருந்த நீர்த்துளிகளில் விழுந்து, வைரம் போல் ஜொலித்தன.



தன் கையிலுள்ள கங்கா தீர்த்தத்தை வாங்கிக்கொள்ளும்படி மகனிடம் கூறினாள் கங்காதேவி. பீஷ்மர் தன் இரு கைகளையும் குவித்து, தாயின் முன்பு நீட்டினார். கங்காதேவியின் கரங்களிலிருந்து கங்கை நீர்த் துளிகள் ஸ்படிக மணிகளாக பீஷ்மரின் கைகளில் விழுந்தன. ''மகனே! இவை ஸ்படிக மணிகள். நீருக்குள் நிறைந்துள்ள நெருப்புத் துளிகள் இவை. பிரார்த்தனை செய்வதற்கும், வைராக்கியத்துடன் வாழ்வதற்கும், மந்திர சாதகங்கள் புரிவதற்கும் இவை உனக்குப் பெரிதும் உதவும். இந்த மணிகளை மாலையாக எப்போதும் அணிந்திரு. அவை உனக்குச் சத்திய விரதத்திலிருந்து தவறாத மன வலிமையையும் வைராக்கியத்தையும் தரும்'' என்று கூறி மறைந்தாள் கங்காதேவி.

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறிய இந்த வரலாற்றைக் கேட்டதும், பீஷ்மரின் கழுத்தில் இருந்த ஸ்படிக மணி மாலையின் மகிமை, சகாதேவனுக்குப் புரிந்தது. பீஷ்மரின் மறைவுக்குப் பின்னர், ஸ்ரீகிருஷ்ணன் கூறியது போன்று, பீஷ்மரின் ஸ்படிக மணிமாலையை அணிந்து, பக்தியோடு ஸ்ரீமந் நாராயணனைத் தியானித்து, பீஷ்மர் இயற்றிய விஷ்ணு ஸஹஸ்ரநாம மந்திரங்கள் அனைத்தையும் மீண்டும் உருவாக்கி, ஏடுகளாக்கி உலகுக்கு அளித்தான்.

அதனால்தான் இன்றும் தெய்வீக மனிதர்களும் சித்தர்களும், மகான்களும், மந்திர பாராயணம் செய்பவர்களும் ஸ்படிக மணிகளை மாலையாக அணிகிறார்கள். உயர்ந்த ஸ்படிக மணிகளை ஒன்றோடொன்று உரசினால், அவற்றிலிருந்து பிரகாசமான தீப்பொறி போன்ற ஒளி தோன்றும். ஸ்படிக மணிகளை உருட்டி மந்திர ஜபம் செய்த பின்பு இந்தப் பிரகாசம் அதிகமாகத் தெரியும்.

விஷ்ணு ஸஹஸ்ர நாமம்:
ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம்,
ஸரஸீருஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ்தல சோபி கௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம்
கருத்து: ''சங்கு சக்கரம் தாங்கி, கிரீடமும் குண்டலமும் அணிந்து, பொன்னாடை தரித்த தாமரைக் கண்ணனாய், கௌஸ்துப மாலை பிரகாசிக்க, நான்கு புஜங்களுடன் விளங்கும் மஹா விஷ்ணுவை, தூய்மையான பக்தியுடன், தலை வணங்கி நமஸ்கரிக்கின்றேன்'' என்பது இதன் பொருள்.

கட்டுரை: எஸ்.கண்ணன் கோபாலன், டி.எஸ்.நாராயண ஸ்வாமி

Post Reply