Aanmeekam...

Post Reply
vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

சிரிக்க - சிந்திக்க -
https://www.facebook.com/photo.php?v=10201633492983471

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Sorry..It is neither thought provoking nor has any humor in it..

It shows how low is our film making..always targeting Hindu deities..

Will any one even suggest of such a film either on Jesus or Nabigal?

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

vk,
I am sorry if you did not like it - it was not meant to hurt anyone's feelings. But since you have brought in other religions, I am constrained to respond.

We seem to think of God as some 'commission agent' who obliges us for the 'devotion' we show to Him. If He does not respond to our prayers, we blame him. We think that God is partial to some and the reasons for inequality in the Earth is God's making. Such sentiments are true of followers of every other religion also. However, it is very sad that, in spite of wonderful thoughts found in Gita, Upanishads and Vedanta, we - Hindus - still happen to understand the God in the routine human manner. The God-head I believe in does not exclude Allah and Father (of Christians); therefore, Nabigal and Jesus are as dear to me as kRshNa.

The statements made in the short video are not irrelevant to me. I subscribe to those statements. However, if the moderators feel the video is offensive, I will delete the post.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image


தசவதாரமும் நவக்கிரஹமும்

அம்பாளின் பத்துவிரல்களும், விஷ்ணுவின் பத்து அவதாரம் என்றும் ,தசமகாவித்ய என்று சொல்லக்கூடிய,பத்து ஸ்வரூபமும் பத்து அவதாரம் என்றும்கூறப்படும்
அவதாரம் - அதிபதி
1) ஸ்ரீமத்ஸ்ய அவதாரம் - கேது
2) ஸ்ரீகூர்ம அவதாரம் - சனி
3) ஸ்ரீவராஹ அவதாரம் - ராகு
4) ஸ்ரீநாரசிம்ம அவதாரம் - செவ்வாய்
5) ஸ்ரீவாமன அவதாரம் - குரு
6) ஸ்ரீபரசுராம அவதாரம் - சுக்கிரன்
7) ஸ்ரீராம அவதாரம் - சூரியன்
8) ஸ்ரீபலராம அவதாரம் - குளிகன்
9) ஸ்ரீகிருஷ்ண அவதாரம் - சந்திரன்
10 ஸ்ரீகல்கி அவதாரம் - புதன்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend
Subject: Fwd: ARJITHA SEVA AT TIRUMALA

ARJITHA SEVA AT TIRUMALA

Surprise Donation From A Muslim Devotee That Led To The Birth Of A Popular Arjitha Seva In The Holy Tirumala Temple
Some time during 1982..
As though instructed by the Holy Lord Sri Venkateswara Himself, a Muslim devote by name Sheikh Mastan - a resident of the Guntur district of the undivided state of Andhra Pradesh - walked up the seven hills of Tirumala hill shrine and reached the Maha Dwaram (main entrance) of the holy Tirumala Temple..
He then placed a request before the priests on duty there at the Temple premises.. The noble Temple priests, who were shocked with his unusual request, hurriedly guided him to the top officials of the Tirumala Tirupati Devasthanams board.
The drama then shifted to the Executive Officer (E O) of the TTD board..
Around the same time and period, the Tirumala Tirupati Devasthanams (TTD) board, an independent trust that manages all the operations related to the holy TirumalaTemple, was planning to commemorate the Golden Jubilee year of it's formation in a befitting manner..Despite several rounds of discussions earlier, the TTD board was still unable to decide about what is that they need to do to make their Golden Jubilee year a memorable one..And it was exactly during one such crucial meeting, that was taking place inside the board room, an office attender walked into the room and informed the then Executive Officer about the Muslim devotee’s request seeking his urgent appointment..
The E O asked the attender to send the Muslim devotee straight inside the board room so that he can quickly talk to him and send him off in a couple of minutes without wasting much of the TTD board’s valuable meeting time. But unfortunately neither the E O nor his subordinates, at that moment, knew that the Muslim devotee whom they are all going to meet in a few minutes, was actually sent by the holy Lord Sri Venkateswara Himself and because of his request the TTD board is later going to take a crucial decision that would not only please the holy Lord Sri Venkateswara with a new Seva but will also make their golden jubilee year a most memorable one .. PERIOD.
The attender came out and asked the Muslim devotee, Sheikh Mastan to go inside the board room and meet the E O... Sheikh Mastan got up from the chair he was thus far sitting in the waiting hall,and slowly walked into the board room..With folded hands he greeted everyone there in the room... Acknowledging his regards, the Executive Officer told Sheikh Mastan,
“..We are all in an emergency meeting now.. Where are you from and why did you insist on meeting me in person.. Is it so important..??.. If so please let me know what it is, without wasting much of our time..”
“..Sir my name is Sheikh Mastan.. Am a small merchant from Guntur district.. For over many generations now my family members are great devotees of Lord Sri Venkateswara Swamy.."
"..As a rule,every morning, my entire family stands in front of the holy Sri Varu, and recites Sri Venkateswara Suprabhatam.. Without any mistakes we also recite Venkateswara Sthotram, Srinivasa Prapatti and Mangala Sasanam.. I can even recite Srinivasa Gadyam fully..”
..Sir for many generations it has also been a sacred tradition in our family to perform ashtottara sata nama puja (a prayer during which time 108 holy names of Lord Venkateswara are recited) to Sri Varu in our house every Tuesday.. We perform this pooja with different varieties of flowers we personally grow in our back yard.. We place one flower each at the holy feet of Sri Varu every time we recite one of His 108 names during this sacred pooja..”
“.. But sir, several decades ago my paternal grand father had made a vow to himself that he would place 108 Golden Lotus Flowers at the holy Lotus feet of our Sri Varu for using them during a similar seva at the Tirumala Temple.. Since our financial resources were not substantial enough, my grand father could only procure a few Golden Lotuses.. Later my father procured a few more and finally I could finish the count and procure all the 108 Golden Lotus flowers.. Sir,it was with a great difficulty that we could procure all these Golden flowers.. Each one of these flowers weighs about 23 grams..”
I now request you all, with folded hands, to please accept these Golden Lotuses as a gift from our poor family to Sri Varu and make good use of them during the ashtottara sata nama pooja or during any other seva in the Temple.. Sir,our entire family will be very thankful to you if you can please consider our request without rejection.. Even my grand father’s soul shall now rest in peace at His holy feet.. That’s all I had to convey you sir.. I now leave the decision entirely to you all..”
Sheikh Mastan concluded..
SILENCE.. Holistic Silence. Silence and Silence and Silence..
For a few moments in the board room there was no other sound except the oscillating sound of the pedestal fans that were placed in all the corners of the room..The Chairman, the Executive Officer, the Joint Executive Officer, the deputy Executive Officer and all the members of the board who were there in that room at that time were stunned into deep silence..
They didn't know what to say and how to react to the claims of the great Muslim devotee who was standing in front of them, with folded arms, at that moment..
Suspecting something mysterious and smelling the divine presence of the holy Lord Sri Venkateswara right in the midst of them it was the Executive Officer who moved first..With unstoppable tears rushing out of his eyes he quickly got up from his chair and rushed to the place where Sheikh Mastan was standing..Offering his sincere apologies to him for making him stand for such a longer period of time, the E O then made Sheikh Mastan sit comfortably in a chair beside him and assured him in a humble voice..
“.Mastan garu.. we are extremely delighted to have such a great devotee like you in the midst of us today.. We have seen many great devotees in our career for sure but we haven’t, seen one like you before.. We shall unconditionally accept these invaluable Golden flowers from you..I, however,cannot at this moment assure you that we shall certainly use them during a seva.. It’s a policy related matter Mastan garu and we are also just His servants.. Any decision of using them during a seva doesn't entirely lie in our hands.. I can promise you on behalf of the board that we shall all strive to do our best in fulfilling your family’s desire in making good use of these Golden Lotus flowers at the Temple... But Please give us some time and I shall get back to you at the earliest..”
Later things followed in quick succession and after a couple of more meetings the TTD board had decided to introduce a new Arjita Seva during which time the 108 sacred names of the Holy Lord shall be recited and during that recitation one Golden Lotus Flower each, gifted by the Sheikh Mastan family, shall be placed at the holy Lotus feet of Lord Sri Venkateswara.
TTD introduced this new Seva called Ashtadala Pada Padmaradhana in 1984 and ever since this popular seva is being performed at the holy Tirumala Temple every Tuesday..This new arjita Seva not only made the Golden Jubilee year of TTD board a memorable one but also helped the great devotional family of Sheikh Mastan fulfill their generations old desire..But what was that invisible hand behind all this drama that played the entire game to perfection.. None has an answer, but Can only guess..??

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

Here is a link about 17th century Sufi Saint of Tamil Nadu (Tirunelveli Dist) by name Pir Mohammad Aulia. His composition 'Jnana Ratna Kuravanji' (Tamil) is a Saiva Siddhanta literature in a very simple dialogue form between a gypsy husband and wife.
http://sivasiva.files.wordpress.com/201 ... i_e-bk.pdf

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான்.
அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.
அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச் சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப் போக, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ஏன்...அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான். கண்ணா! மாயம் செய்கிறாயா? என அனைவரும் ஒரே நேரத்தில் கேட்டனர். இல்லை.. இல்லை... என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி. என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கண நேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்றான் கருணையுள்ள கண்ணன். தன்னை இல்லை என்று சொல்பவர்க்கும் இறைவன் அருள் செய்கிறான் என்பது தான் இந்தக்கதை சொல்லும் நீதி.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

This is Nice... Just a forward came to me, I liked the way the two stories are related....

A Construction Supervisor from 16th Floor of a Building was calling a Worker on Ground Floor.

Because of noise
the Worker
did not hear his Call.

To draw Attention,
the Supervisor threw a 10 Rupee Note
in Front of Worker.

He picked up the Note, put it in His Pocket &
Continued to Work.

Again to Draw Attention the Supervisor threw 500 Rupee Note & the Worker did the same,

Now the Supervisor picked a small Stone & threw on the Worker.

The Stone hit the Worker.

This time the Worker looked Up &
the Supervisor Communicated with Him.
.
.
This Story is same as to our 'LIFE'...

God wants to Communicate with Us,
but We are Busy doing our Worldly Jobs.

Then, he give Us Small Gifts & Big Gifts......
We just keep them without looking from Where We Got it.
We are the Same.
Just keeping the gifts
without Thanking him,
We just say
We are LUCKY.

And when we are Hit with a Small Stone, which We call PROBLEMS,
then only We look Up & Communicate with him.
Thats why it is said. .....
He gives, gives and forgives
And
We get, get and forget.....

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

தாயின் ஐந்து பெயர்கள்.

ஜனனீ .... தகப்பனால் தன் சரீரத்தில் சேர்க்கப்பட்டதை கருவாக உயிர் கொடுப்பவள்.

மாதா .... கருவைத் தன்னுள் அடக்கி வைத்து அடைகாப்பவள்.

ஸவித்ரி ... கருவாகத் தாங்கியதை வெளியில் வளர்க்க தருணம் வந்ததும் வெளியிடுபவள்.

தாத்ரீ ... சிசுவைப் போஷித்து வளர்ப்பவள்.

அம்மா .. ஆபத்து வேளையில் தானே வந்து காப்பவள்..

Shared...

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

The first one is jarring.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

pb,
Yes, I did not want to comment. How can 'mind' and 'intellect' be brought into the same category as other 16?

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

Ref: Post #259

It seems, the 18 Steps at Sabarimala Temple represent 18 different deities, to whom Padi Pooja is offered. This site lists the 18 deities !
http://shanmatha.blogspot.in/2010/09/de ... -padi.html

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

Ref: Post #260

This line is jarring :-
"ஜனனீ .... தகப்பனால் தன் சரீரத்தில் சேர்க்கப்பட்டதை கருவாக உயிர் கொடுப்பவள்."


To provide the proper meaning, 'தகப்பனால்' should be corrected as 'துணைவனால்' .

----

அம்மா - மற்ற நான்கும் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதால், இதையும் சம்ஸ்க்ருதத்தில் 'அம்பா' என்று குறிக்கலாமே!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Four vedas in Tamil:
Read/ Download from here..

http://www.vedicgranth.org/home/the-gre ... athan/veda

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

Predictions for Kali Yugham from Srimadh Bhaaghavatham

In the last canto of Srimadh Bhaaghavatham there is a list of predictions and prophecies about the dark times for the present age of Kali Yuga. The following 15 predictions, written 5,000 years ago by sage Vedavyasa, are amazing because they appear so accurate. Despite the negative tone of these prophecies, there is still one bright spot for all of us, which is mentioned at the end.
Prediction 1:
Religion, truthfulness, cleanliness, tolerance, mercy, duration of life, physical strength and memory will all diminish day by day because of the powerful influence of the age of Kali.
Source: Srimad Bhagavatam 12.2.1
sri-suka uvaca
tatas canu-dinam dharmah
satyam saucam ksama daya
kalena balina rajan
nanksyaty ayur balam smrtih
Prediction 2:
In Kali Yuga, wealth alone will be considered the sign of a man's good birth, proper behaviour and fine qualities. And law and justice will be applied only on the basis of one's power.
Source: Srimad Bhagavatam 12.2.2
vittam eva kalau nṝṇāḿ
janmācāra-guṇodayaḥ
dharma-nyāya-vyavasthāyāḿ
kāraṇaḿ balam eva hi
Prediction 3:
Men and women will live together merely because of superficial attraction, and success in business will depend on deceit. Womanliness and manliness will be judged according to one's expertise in sex, and a man will be known as a brahmana just by his wearing a thread.
Source: Srimad Bhagavatam 12.2.3
dāmpatye 'bhirucir hetur
māyaiva vyāvahārike
strītve puḿstve ca hi ratir
vipratve sūtram eva hi
Prediction 4:
A person's spiritual position will be ascertained merely according to external symbols, and on that same basis people will change from one spiritual order to the next. A person's propriety will be seriously questioned if he dos not earn a good living. And one who is very clever at juggling words will be considered a learned scholar.
Source: Srimad Bhagavatam 12.2.4
lińgaḿ evāśrama-khyātāv
anyonyāpatti-kāraṇam
avṛttyā nyāya-daurbalyaḿ
pāṇḍitye cāpalaḿ vacaḥ
Prediction 5:
A person will be judged unholy if he does not have money, and hypocrisy will be accepted as virtue. Marriage will be arranged simply by verbal agreement, and a person will think he is fit to appear in public if he has merely taken a bath.
Source: Srimad Bhagavatam 12.2.5
anāḍhyataivāsādhutve
sādhutve dambha eva tu
svīkāra eva codvāhe
snānam eva prasādhanam
Prediction 6:
A sacred place will be taken to consist of no more than a reservoir of water located at a distance, and beauty will be thought to depend on one's hairstyle. Filling the belly will become the goal of life, and one who is audacious will be accepted as truthful. He who can maintain a family will be regarded as an expert man, and the principles of religion will be observed only for the sake of reputation.
Source: Srimad Bhagavatam 12.2.6
dūre vāry-ayanaḿ tīrthaḿ
lāvaṇyaḿ keśa-dhāraṇam
udaraḿ-bharatā svārthaḥ
satyatve dhārṣṭyam eva hi
dākṣyaḿ kuṭumba-bharaṇaḿ
yaśo 'rthe dharma-sevanam
Prediction 7:
As the earth thus becomes crowded with a corrupt population, whoever among any of ther social classes shows himself to be the strongest will gain political power.
Source: Srimad Bhagavatam 12.2.7
evaḿ prajābhir duṣṭābhir
ākīrṇe kṣiti-maṇḍale
brahma-viṭ-kṣatra-śūdrāṇāḿ
yo balī bhavitā nṛpaḥ
Prediction 8:
Harassed by famine and excessive taxes, people will resort to eating leaves, roots, flesh, wild honey, fruits, flowers and seeds. Struck by drought, they will become completely ruined.
Source: Srimad Bhagavatam 12.2.9
śāka-mūlāmiṣa-kṣaudra-
phala-puṣpāṣṭi-bhojanāḥ
anāvṛṣṭyā vinańkṣyanti
durbhikṣa-kara-pīḍitāḥ
Prediction 9:
The citizens will suffer greatly from cold, wind, heat, rain and snow. They will be further tormented by quarrels, hunger, thirst, disease and severe anxiety.
Source: Srimad Bhagavatam 12.2.10
śīta-vātātapa-prāvṛḍ-
himair anyonyataḥ prajāḥ
kṣut-tṛḍbhyāḿ vyādhibhiś caiva
santapsyante ca cintayā
Prediction 10
Men will no longer protect their elderly parents.
Source: Srimad Bhagavatam 12.3.42
na rakshishyanti manujah
sthavirau pitarav api
Prediction 11:
In Kali-yuga men will develop hatred for each other even over a few coins. Giving up all friendly relations, they will be ready to lose their own lives and kill even their own relatives.
Source: Srimad Bhagavatam 12.3.41
kalau kakinike 'py arthe
vigrihya tyakta-sauhridah
tyakshyanti ca priyan pranan
hanishyanti svakan api
Prediction 12:
Uncultured men will accept charity on behalf of the Lord and will earn their livelihood by making a show of austerity and wearing a mendicant's dress. Those who know nothing about religion will mount a high seat and presume to speak on religious principles.
Source: Srimad Bhagavatam 12.3.38
sudrah pratigrahishyanti
tapo-veshopajivinah
dharmam vakshyanty adharma-jna
adhiruhyottamasanam
Prediction 13:
Servants will abandon a master who has lost his wealth, even if that master is a saintly person of exemplary character. Masters will abandon an incapacitated servant, even if that servant has been in the family for generations. Cows will be abandoned or killed when they stop giving milk.
Source: Srimad Bhagavatam 12.3.36
patim tyakshyanti nirdravyam
bhritya apy akhilottamam
bhrityam vipannam patayah
kaulam gas capayasvinih
Prediction 14:
Cities will be dominated by thieves, the Vedas will be contaminated by speculative interpretations of atheists, political leaders will virtually consume the citizens, and the so-called priests and intellectuals will be devotees of their bellies and genitals.
Source: Srimad Bhagavatam 12.3.32
dasyutkrishta janapada
vedah pashanda-dushitah
rajanas ca praja-bhakshah
sisnodara-para dvijah
Despite all of these dark prophecies, there is one good quality in this age of Kali yuga:
kaler dosha-nidhe rajann
asti hy eko maha gunah
kirtanad eva krishnasya
mukta-sangah param vrajet
"Although Kali-yuga is an ocean of faults, there is still one good quality about this age: simply by chanting the names of Krishna, one can become free from material bondage and be promoted to the transcendental kingdom." (Source: Srimad Bhagavatam 12.3.51)
So let us take advantage of this special spiritual gift given during the dark times of Kali yuga to quickly raise ourselves spiritually through chanting of God's holy names.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Aanmeekam...

Post by arasi »

An apt one, the last one (such a relief:) ) on the eve of dIpAvaLi.

PapanAsam Sivan's dIpAvali song kaNNA, kAtharuL in madhyamAvathi comes to mind. Mangala dIpAvali to all!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image


Sanjai-048-kaNNA_kAttaruL-madhyamAvati-Sanjay Subramanyam-P Sivan

http://mfi.re/listen/c2ev0c82p0f3caf/Sa ... Sanjay.mp3

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

குடில குண்டலம் குவலய தள நீலம்
மதுர முரளீர் அவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்

வளைந்த காதணி, குவளையின் நீலம்
இனிய குழலோ மயக்கும் நாதம்
கோடி மன்மத அழகு மோகம்
கோபியர் வரமே, பஜனை செய்வோம் கோபாலம்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

கையோடு நீடு கனி உண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து

தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்

வாய் ஓது வேதம் மலிகின்ற தோல் சீர் மரியாளர் நாளும் முறையால் வளர்த்த

தீயோங்க ஓங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே

மகாலட்சுமியை நெஞ்சில் வைத்து கொண்டிருக்கும் பெருமாளை நெஞ்சில் வைத்து கொள்ள விரும்பும் பக்தர்களே! காய்களையும், உலர்ந்த பழங்களையும்,காற்றையும் உண்டு நெடுங்காலம் தீயின் நடுவில் நின்று தவம் செய்ய வேண்டாம்

தொன்மையான நல்ல குணங்களை கொண்டு வேதியர்கள் நாள்தோறும் வேதங்கள் ஓதி கொண்டிருக்கும் ஓங்கிய புகழையுடைய கோவிந்தராஜ பெருமாளை சென்று சேருங்கள்

--திருமங்கை ஆழ்வார்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

ஒரு சில பழங்களின் ஸ்ம்ஸ்க்ருத பெயர்கள்

முழுத் தேங்காய் ...... நாரிகேலம்

உடைத்த தேங்காய் ....நாரிகேல கண்டத்வயம்

வாழைப்பழம் ...... கதலீ பலம்

மாம்பழம் ....... ஆம்ர பலம்

விளாம்பழம் ....... கபித்த பலம்

நாகப்பழம் .......ஜம்பு பலம்

பலாப்பழம் .....பனஸ பலம்

சாத்துக்குடி ( ஆரஞ் ) ..... நாரங்க பலம்

ஆப்பிள் ...... காஷ்மீர பலம்

பேரிக்காய் ......பேரி பலம்

கொய்யாப்பழம் .........பீஜா பலம்

திராட்சைப்பழம் .....திராக்‌ஷினா பலம்

பேரிச்சம்பழம் .....கர்ஜுர பலம்

பிரப்பம்பழம் ......வேத்ர பலம்

மாதுளம்பழம் ...... தாடிமீ பலம்

வெற்றிலை பாக்கு .... தாம்பூலம்

corrections welcome..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

எட்டின் மகிமை
மனிதப் பிறப்பில் எட்டாவது மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்சியைப் பெறுகிறதாம். கருப்பையில் இடம்போதாமல் நெருக்கத்தில் சிக்கி, இருக்கும் இடத்துக்கு ஏற்ப தன்னுடைய கை-கால்களை மடக்கிக்கொண்டு, உடல் உறுப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முதல் அறிவை அப்போதுதான் அந்தக் குழந்தை பெறுகிறது. முற்பிறவியில் செய்த தீவினையால்தானே, ஒரு தாயின் கருப்பைக்கு வந்தோம். இந்தப் பிறவியில் தவறு ஏதும் செய்யக் கூடாது எனும் சிந்தனை ஞானம் ஏற்பவதும் 8-வது மாதத்தில்தான் என்கிறது கீதை. ஆனால் பிறந்ததும் அந்த ஞானத்தை மனிதன் மறந்து போகிறான். மீண்டும் அந்த ஞானம் அவனுக்கு 80 வயதில் நிச்சயம் தோன்றுமாம். இதனாலேயே 8 எனும் எண்ணை ஞான எண்ணாகக் கூறுவார்கள். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்... என்று கருப்பையில் உள்ள 8 மாத சிசுவின் வடிவை, மிக அற்புதமாக விவரிக்கிறது. அதுசரி.. மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, அந்த நடராஜ பெருமானே தன் கைப்பட எழுதிய பெருமை மிக்க நூலான திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் எந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? 8 - வது திருமுறையாகத்தான் !

அஷ்ட கணபதிகள்: முழுமுதற் கடவுளாம் கணபதியை அஷ்டகணபதிகளாகவும் கொண்டாடுவர். ஆதி கணபதி, மகாகணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, வாலை கணபதி, உச்சிஷ்ட கணபதி, உக்ர கணபதி, மூல கணபதி ஆகிய அஷ்ட பிள்ளையார்களை வழிபட வினைகள் யாவும் நீங்கும் !

அஷ்ட புஷ்பங்கள்: புன்னை, செண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம், தாமரை ஆகிய மலர்களை தெய்வ பூஜைக்கு சிறந்த அஷ்ட புஷ்பங்களாகப் போற்றுகின்றன ஞானநூல்கள் !

திசை யானைகள் எட்டு: ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் ஆகியவையே திசை யானைகள் 8 எனப் போற்றுகின்றன புராணங்கள் !

அஷ்ட ஐஸ்வரியங்கள்: தனம், தானியம், நிதி, பசு, புத்திரர், வாகனம், சத்தம், தைரியம் ஆகியன அஷ்ட ஐஸ்வரியங்களாகும். இறைசிந்தையும், அறவாழ்வும் இந்தச் செல்வங்களைப் பெற்றுத் தரும்.

அருள் தரும் அஷ்ட பிரபந்தங்கள்: மாலவனின் பெருமைகளை விவரிக்கும் நூல்களில் எட்டு குறிப்பிடத்தக்கவை. அவை: திருவரங்கக் கலம்பகம். திருவரங்கத்துமாலை. திருவாங்கத்து அந்தாதி, ஸ்ரீரங்கநாயகர்ஊசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத்து அந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி !

அஷ்ட பந்தனம்: சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன் மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி.... ஆகிய எட்டு பொருட்களுமே, ஆலயங்களில் விக்கிரக பிரதிஷ்டையில் பயன்படும் அஷ்ட பந்தனமாகும்.

அட்டமா ஸித்திகள்: தவமுனிகள் செய்யும் யோக முறையால் எட்டுவிதமான ஸித்திகளை அடையலாம். அற்புதமான அந்த ஸித்திகள்: அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் !

அஷ்ட வசுக்கள்: அனலன், அணிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியூஷன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ! இவர்களில் பிரபாசன் என்பவனே, வசிஷ்ட முனிவரின் சாபத்தால் பூமியில் பிறந்து, பீஷ்மராகத் திகழ்ந்தான் !

அஷ்ட வித்யேச்வரர்: அநந்தர், சூக்ஷ்மர், சிவோத்தமர், ஏகநேத்ரர், ஏகருத்ரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி ஆகியோரை அஷ்ட வித்யேச்வரர் எனப் போற்றுவர். இவர்கள் மாயைக்கு மேல் சுத்த வித்யைக்குக் கீழிருக்கும் புவனவாசிகள் என்கின்றன ஞானநூல்கள்.

எட்டெட்டந்தாதி: காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மனின் மீதான ஒரு பாடல் இது. எட்டெட்டு பாடலாக 64 செய்யுள்கள் அடங்கிய அந்தாதியாக திகழ்கிறது என்பார்கள். ஆனாலும், விநாயகர் வழிபாடாக முதலில் ஒரு பாடலும், செய்யுள் பலனாக கடைசியில் ஒரு பாடலும் அதிகம் உண்டு.


Shared from a friend..

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend
Here is a brief explanation of the use and importance of this number: 108
The diameter of the Sun is
108 times the diameter of the Earth.
The distance from the Sun to the Earth is
108 times the diameter of the Sun. The average distance of the Moon from the Earth is
108 times the diameter of the Moon. In Ayurveda,
there are 108 “Marma” points that are vital for giving life to living beings. The powerful Sri Chakra Yantra intersects in 54 points each
with a masculine and feminine quality, totalling to 108. In Indian astrology,
we have 12 houses and 9 planets. 12 times 9 equals to 108. In Tantra, it is estimated that every day we breathe 21,600 times
out of which 10,800 are solar energy and 10,800 are lunar energy.
Multiplying 108 X 100 is 10,800. The famous saint Bharata wrote “The Natya Shastra”
which has 108 Karanas (Movement of hand and feet) There are 54 letters in Sanskrit each can be mentioned
as masculine (Shiva) and feminine (Shakti) aspect, totalling to 108. There are 108 Puranas and 108 Upanishads. Powers of 1, 2, and 3 in math:
1 to 1st power=1;
2 to 2nd power=4 (2×2);
3 to 3rd power=27 (3x3x3).
1x4x27=108
Harshad number:
108 is a Harshad number, which is an integer divisible by the sum of its digits
(Harshad is from Sanskrit, and means “great joy”). Desires:
There are said to be 108 earthly desires in mortals. Lies:
There are said to be 108 lies that humans tell.

Delusions:
There are said to be 108 human delusions or forms of ignorance. Heart Chakra:
The chakras are the intersections of energy lines,
and there are said to be a total of 108 energy lines
converging to form the heart chakra.
One of them, sushumna leads to the crown chakra,
and is said to be the path to Self-realization. Pranayama:If one is able to be so calm in meditation as to have only 108 breaths in a day,
enlightenment will come. Sri Yantra:On the Sri Yantra there are marmas
where three lines intersect, and there are 54 such intersections.
Each intersection has masculine and feminine, shiva and shakti qualities.
54 times 2 equal 108.
Thus, there are 108 points that define the Sri Yantra as well as the human body. Pentagon:
The angle formed by two adjacent lines in a pentagon equals 108 degrees. Time:
Some say there are 108 feelings,
with 36 related to the past, 36 related to the present,
and 36 related to the future. River Ganga:
The sacred River Ganga spans a longitude of 12 degrees (79 to 91),
and latitude of 9 degrees (22 to 31). 12 times 9 equal 108. Gopis of Krishna:
There were said to be 108 gopis of Krishna. 1, 0, and 8:
Some say that 1 stands for God or higher Truth,
0 stands for emptiness or completeness in spiritual practice,
and 8 stands for infinity or eternity. Silver and the moon:
In astrology, the metal silver is said to represent the moon.
The atomic weight of silver is 108. Numerical scale:
The 1 of 108, and the 8 of 108, when added together equals 9,
which is the number of the numerical scale, i.e. 1, 2, 3 … 10, etc.,
where 0 is not a number. Meditations: Some say there are 108 styles of meditation.

Paths to God: Some suggest that there are 108 paths to God. Jain:
In the Jain religion, 108 are the combined virtues of five categories of holy ones,
including 12, 8, 36, 25, and 27 virtues respectively. Sikh:
The Sikh tradition has a mala of 108 knots tied in a string of wool, rather than beads. Buddhism:
Some Buddhists carve 108 small Buddhas on a walnut for good luck.
Some ring a bell 108 times to celebrate a new year.
There are said to be 108 virtues to cultivate and 108 defilements to avoid. Chinese:
The Chinese Buddhists and Taoists use a 108 bead mala,
which is called su-chu, and has three dividing beads,
so the mala is divided into three parts of 36 each.
Chinese astrology says that there are 108 sacred stars. Stages of the soul:
Said that Atman, the human soul or center goes through 108 stages on the journey. Praiseworthy souls:
There are 108 qualities of praiseworthy souls. Japan:
In Japan, at the end of the year,
a bell is chimed 108 times to finish the old year and welcome the new one.
Each ring represents one of 108 earthly temptations
that a person must overcome to achieve nirvana. 108 signifies the wholeness of the divinity, perfect totality.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

ஓர் அற்புதமான சிற்பி,

ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.

ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.
'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.
அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.
முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.

அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன்.

என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்.

கடைக்காரர் வியந்தார்.

ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது.

வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார்.

தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவொருவரும் நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்!!!

Shared..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

நந்தி-
50 தகவல்கள்
1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.
5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.
6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.
7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.
8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.
9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.
11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.
13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.
14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.
15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.
18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.
20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.
21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.
22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.
23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.
24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.
26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.
27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்
28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.
29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.
30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.
31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.
32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.
33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.
34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.
35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.
36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.
37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.
38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.
39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.
40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.
41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.
42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.
43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.
44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.
47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.
48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.
50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.*
- ஆன்மீக செயல்-
from Muthu Suresh

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

" அதிதி என்பது முதலிலேயே information கொடுத்துவிட்டு வரும் நண்பர்களோ, சொந்தக்காரர்களோ இல்லை. எதிர்பாராமல் வரும் எவருமே அதிதிகள்தான்! "திதி" என்றால், நாள். குறிப்பிட்ட நாளில், நேரத்தில் சாப்பிட வருகிறேன் என்று சொல்லியோ, அல்லது "சாப்பிட வந்துவிடுங்கள்" என்று நாமே ஒரு நாள், நேரம் குறித்து அழைப்பவரோ அதிதி இல்லை. அ-திதி "நேரம் காலம் இல்லாமல் திடீரென்று வருபவர்கள்" தான் அதிதிகள்"


பெரியவா சொன்ன ஒரு உண்மை நிகழ்ச்சி...............

நம்ம ஆச்சார்யாள் மடம் கும்பகோணத்தில் இருந்தப்போ, நடந்த ஒரு சம்பவம். எல்லாரும் ஸ்ரத்தையா கேட்டுட்டாலே, இதோட மஹிமை நன்னா புரிஞ்சுடும்! கும்பகோணத்தில் கும்பகோணம் மாமாங்க குளத்தோட மேலண்டக் கரைல ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்னு பலசரக்கு வியாபாரி ஒர்த்தர் குடியிருந்தார். எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு....... அவரோட தர்மபத்னி பேரு சிவகாமி ஆச்சி! அவா காரக்குடி பக்கத்ல பள்ளத்தூர சேந்தவா. அவாளுக்கு கொழந்தை குட்டி கெடையாது. அவா ஊர்லேர்ந்து நம்பகமா ஒரு செட்டியார் பையன அழைச்சுண்டு வந்து ஆத்தோட வெச்சுண்டு, மளிகைக் கடைய அவன் பொறுப்புல விட்டிருந்தா. செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயஸ் இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் ரெண்டுபேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம்தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார்! நித்யம் காலங்கார்த்தால வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்யமா இருந்தா. இதெல்லாம் தூக்கியடிக்கற மாதிரி, ஒரு விஷயம் என்னன்னா.............அந்த தம்பதிகள் பல வர்ஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டிருந்தா! பிரதி தெனமும் மத்யான்னம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு முகம் கோணாம, அவாளோட கால்களை வாசத்திண்ணையில் ஒக்காரவெச்சு அலம்பி, வஸ்த்ரத்தால தொடச்சு, சந்தனம் குங்குமம் இட்டு, கூடத்ல ஒக்காரவெச்சு, ஏதோ இருக்கறதப் போடாம, ஒவ்வொரு அடியாருக்கும் என்னென்ன பிடிக்கும்னு கேட்டு அதை வாங்கிண்டு வந்து சமைச்சுப் போடுவா. ஆத்ல சமையலுக்கு ஆளெல்லாம் இல்லே! அந்த அம்மாவே தன் கையால சமைச்சுப் போடுவா! அப்டி ஒரு ஒசந்த மனஸ்! எனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியுங்கறேளா? நம்ம மடத்துக்கு வந்துண்டு இருந்த சுந்தரமையர்தான் செட்டியாரோட கணக்கு வழக்கெல்லாம் பாத்துண்டு இருந்தார். அவர்தான் இதெல்லாம் சொன்னார்..... ஒருநாள் நல்ல மழை! ஒரு அதிதியை கூட காணோம். செட்டியார் ஒரு கொடையை எடுத்துண்டு, மஹாமஹக்கொளத்தண்டை வந்து பார்த்தார். கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் ஒர்த்தர் இருந்தார். ஏன்னா.....வழியெல்லாம் தேவாரம் சொல்லிண்டே வந்தார். வீட்டுக்கு போனதும், "என்ன காய் பிடிக்கும்? போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போடறோம்"...ன்னு சொன்னார். வந்தவருக்கோ நல்ல பசி போல இருக்கு! "வெறும் மொளக்கீரை கூட்டும், கீரைத்தண்டு சாம்பாரும் பண்ணா போறும்"ன்னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார். செட்டியாரும் இன்னொரு பக்கம் கீரை பறிக்க ஆரம்பிச்சார்...........ஆச்சியோ இவா ரெண்டு பெறும் பறிக்கறதை கொல்லைப் பக்கமா நின்னுண்டு பாத்துண்டே இருந்தா..... தட்டுக்கள் வந்ததும், அந்த அம்மா என்ன பண்ணா தெரியுமா? ரெண்டு கீரையையும் தனித் தனியா அலம்பி தனித்தனியா வேக வெச்சு பக்வம் பண்ணா. இதை சிவனடியார் கவனிச்சுண்டே இருந்தார். எல்லாம் பண்ணினதும், சிவனடியார் பறிச்ச கீரையை மட்டும் ஸ்வாமிக்கு நைவேத்யம் பண்ணிட்டு, இவருக்கு பரிமாறினா. அடியாருக்கோ பெருமை பிடிபடலை

போஜனம் முடிஞ்சதும், தான் பறிச்ச கீரையை மட்டும் நைவேத்யம் பண்ணினதப் பத்தி கேட்டார். அந்த அம்மா சொன்னா " ஐயா. கொல்லைல கீரை பறிக்கரச்சே நான் பாத்துண்டே இருந்தேன்.....என் பர்த்தா "சிவ சிவ" ன்னு நாமம் சொல்லிட்டே பறிச்சார். அது அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து. மறுபடி நிவேதிக்க அவஸ்யமே இல்லே. அதான் நீங்க கொண்டு வந்த கீரையை மட்டும் நைவேத்யம் பண்ணினேன்". அடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து! ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணின்ட்டு போய்ட்டார்.

இப்படி அதிதி போஜனத்த விடாம பண்ணிண்டு இருந்ததுக்கு "பல ப்ராப்தி" என்னன்னா.........ஒரு சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வரர் கோவில்ல நாலு கால பூஜைக்கும் ஒக்காந்து தரிசனம் பண்ணா...வீட்டுக்கு வந்த ஆச்சி, தனக்கு "ஒச்சலாயிருக்கு"ன்னு சொல்லிட்டு பூஜை ரூம்ல ஒக்காந்தவ, அப்பிடியே சாஞ்சுட்டா.....! பதறிப் போய் "சிவகாமி" ன்னு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும் அந்தம்மா பக்கத்துலயே சாஞ்சுட்டார்...!அவ்வளவுதான்! அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா "சிவ சாயுஜ்யத்த" அடஞ்சுட்டா. அதிதி போஜனத்த விடாம பண்ணின அந்த தம்பதிகளுக்கு கெடச்ச "பதவி" யப் பாத்தேளா? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்திரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன்....."

அதிதி என்பது முதலிலேயே information கொடுத்துவிட்டு வரும் நண்பர்களோ, சொந்தக்காரர்களோ இல்லை. எதிர்பாராமல் வரும் எவருமே அதிதிகள்தான்! "திதி" என்றால், நாள். குறிப்பிட்ட நாளில், நேரத்தில் சாப்பிட வருகிறேன் என்று சொல்லியோ, அல்லது "சாப்பிட வந்துவிடுங்கள்" என்று நாமே ஒரு நாள், நேரம் குறித்து அழைப்பவரோ அதிதி இல்லை. அ-திதி "நேரம் காலம் இல்லாமல் திடீரென்று வருபவர்கள்" தான் அதிதிகள்


shared

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

அட்சதை

அட்சதை க்ஷதம் என்றால் குத்துவது என்று பொருள். (சதக் சதக் என்று குத்தினான் என்று தமிழ் பேப்பரில் எழுதுவதும் இதனால் தான்) அக்ஷதம் என்றால் குத்துப்படாதது என்று பொருள். உலக்கையால் குத்துப்படாத அரிசியை அட்சதை என்கிறார்கள்.

அட்சதை என்றால் குற்றப்படாததும், பழுதுபடாததுமான (நுனி முறியாத) அரிசி, மஞ்சள் பொடி, பசு நெய், மலர்கள் என்பவற்றைச் சேர்த்த கலவை என்பர். அட்சதை என்ற வடமொழிச் சொல்லை ‘அறுகரிசி’ எனவும் அழைக்கின்றனர்.
முழுமைத்துவத்தின் குறியீடாக அட்சதை அமைகின்றது. அரிசியில் உள்ள முனை சந்ததி விருத்தியைக் குறிக்கின்றது. முழுப் பச்சை அரிசி செழிப்பிற்கான குறியீடு ஆகும். மஞ்சள் மங்கலத்தின் வெளிப்பாடு. அறுகு வம்ச விருத்தியின் குறியீடு.

நன் மங்களங்களை நல்குவது மஞ்சள் . அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய்; இது கோமாதாவின் திரவியம் .
பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு கிழ் விளை பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை.
சற்றே யோசித்தால் இயற்கையில் , மணமக்களை வாழ்த்தும் பொழுது மணமக்கள் இரு மாண்பினர்; வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள்;ஒருமித்து வாழத்தக்கவர்கள்; அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் இதுவே தத்துவம்.
ஆகவே உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறையாகும்.
மேலும் தமது வாரிசுகள் புதிதாக தொழில் துவங்கும் பொழுதும் சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும் குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும் , மஹா லக்ஷ்மி பரிபூரண சக்தி கொண்ட நெய்யினைக் கலந்து, உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை ஆசி வழங்கும் பொழுது அந்தப் புதியதாக துவங்கப்பட்ட தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்பது சாஸ்திர உண்மை.

Govindaswamy
Posts: 120
Joined: 21 Feb 2010, 06:55

Re: Aanmeekam...

Post by Govindaswamy »

thanjavooran wrote: அரிசியில் உள்ள முனை சந்ததி விருத்தியைக் குறிக்கின்றது.
அரிசியை விதைத்தால் முளைக்காதே.
கோவிந்தஸ்வாமி

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

அறுகரிசி aṟukarici
, n. அறுகு (அறுகம்புல்) + அரிசி. Mixture of Cynodon grass and rice, used in benediction or worship; அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

கடன் தொல்லை தீர அகத்தியர் பாடல்
செல்வம் பெருகவும், கடன் தொல்லை தீரவும் உதவும் வகையில் பாடல் ஒன்றை அகத்திய முனிவர் எழுதி இருக்கிறார். இந்த பாடலை தினமும் பக்தியுடன் பாடி வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். இதை தனது பாடலிலேயே அகத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1564 முதல் 1604-ம் ஆண்டு வரை தென்பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்த பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிறப்புமிக்க அந்தப்பாடல் வருமாறு:-

மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவை உறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும் விளங்கும் புகழ்க்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவை இருதாள் தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சுகின்றான்.

கொழுதியிசை அளிமுரலும் தாமரையென் பொகுட்டிலுறை கொள்கைபோல
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே!
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே! கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்
கழிபெருங்காதலில் தொழுவோர் வினைதீர அருள் கொழிக்குங் கமலக்கண்ணாய்!

கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான் தனையீன்ற விந்தை தூய
அழுதகும்ப மலர்க் கரத்தாய் பாற்கடலுள் அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரகன்றிட வொளிருஞ் செஞ்சுடரே என வணக்கம் செய்வான் மன்னோ

மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான்
யடைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன் நின் பெருங்கீர்த்தி எம்மனோரால எடுத்துச் சொல்லற் பாற்றோ

மல்லல் நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சியோடும்
வெல் படையில் பகை துரந்து வெஞ்சமரில் வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே!

செங்கமலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில் மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய் வெண் மதியாய் அமரர்க்கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங் கானில் யொருப்பில் மண்ணில்
எங்குளை நீ அவணன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்பதம்மா!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

அதிவீரராம பாண்டியன் இயற்றிய காசி கண்டம் என்னும் நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில் அகத்தியர் திருமகளை வணங்குவதாக இலக்குமி தோத்திரம் என்று அறியப்படும் ஆறு பாடல்கள் உள்ளன. (மேலே கொடுக்கப்பட்டுள்ளது.) இதன் கடைசியாக ஏழாவது பாடலாக அமைந்துள்ளது இதோ:-

என்றுதமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும் இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய் இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர் ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு தவ்வையவண் மருவல் செய்யாள்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

திரு வேங்கடகைலாசம் , திரு பிரக்தயக்ஷம் பாலா,
தொகிப்பினை அளித்தமைக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
03 12 2014

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?

கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம்.

நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. இதற்கு ஸ்தான பலம், ஸம்யோக பலம், த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயற்கையிலேயே அசுபகிரஹமான சனி கிரஹத்தின் 3, 7, 10ஆம் பார்வை பொதுவாக அசுப பலனையே ஏற்படுத்தும். ஆகவே, சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் (சனியின் பார்வை நம் மீது விழக்கூடாது என்பதால்) நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

நவக்கிரகங்களை, தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்த இலங்கை வேந்தன் இராவணன், சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக் கட்டுகளில் படுக்க வைத்து, தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருக்கும். ஆனால், நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் (தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால்), மேல் நோக்கிப் படுக்காமல் கீழ் (தரையை) நோக்கி குப்புறப்படுத்திருந்தது.

இதை கவனித்த நாரதர், இராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, இராவணன் சபைக்கு வந்து, ராவணன் நவக்கிரஹங்களை காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், ராவணா! உனது கட்டளையை அனைவரும் மதித்து, மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள். ஆனால், இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில் கீழ் (தரை) நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா! என்று கூற, ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான்.

தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் ராவணன் பிடிவாதமாக இருக்கனே, சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனியை மாõர்பில் மிதிக்கும்போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை, இராவணனின் மீது விழுந்தது. அது முதல் ராவணனுக்கு அனர்த்தம் ஆரம்பமாயிற்று. நாரதரும் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். புராணத்தில் காணப்படும் இந்த நிகழ்வின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பது சிறப்பானது என்பது தெரிகிறது.

Dinamalar

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

"நாள் என் செயும் எனை நாடிவந்த கோள் என் செயும்
குமரேசர் இரு தாளும் சதங்கையும் தண்டையும் என் கண்முன்னே தோன்றிடினே"

என்று பாடிய அருணகிரி நாதரும்,

கோளறு பதிகம் பாடிய சம்பந்தரும்

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"

என்று சிவனையே நேருக்கு நேர் நோக்கிப் பேசிய நக்கீரரும்
( http://www.shaivam.org/tamil/sta_tiruvi ... l_08_u.htm )

न मृत्युर्न शंका न मे जातिभेदः पिता नैव मे नैव माता न जन्म |
न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यश्चिदानन्दरूपः शिवोहं शिवोहम् ||

என்று பாடிய சங்கரரும்

तत्त्वमसि என்று பறைசாற்றிய வேதாந்தமும் நிறைந்த இந்நாட்டில்,
இந்த மூட நம்பிக்கைகள் என்று ஒழியுமோ? ஆயிரம் பாரதிகள் வந்தாலும் கூடுமோ?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Shri. Govindan..I like your views but, I find you also too much obsessed..over it..

Even tough I have much to contradict about the above views on Saturn,
I just read it as another point of view and leave it as such..

Neither Kalyana varma , nor Parsaran or not even Bangalore venkat raman or J Krishna murthy of present day

subscribed to such a negative view on saturn..

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

Powerful Ghana Patham method of Chanting........

.Thousands of years ago, our ancestors had similarly devised many brilliant ways of preserving our Vedas and making sure that no error is possible in the oral transmission of Vedas. The "data" was stored then in the human brain (weighing merely 200 grams). The human mouths were used for transmission while ears for reception and sound was the medium. And this was done from generation to generation.

Some excerpts from the article of Dharmatma Dr. Yegnasubramanian (President of Sringeri Vidya Bharati Foundation, USA) article, Rescuing Our Vedic Priesthood,

"Vedic Chanting – a perfectly formulated oral tradition

The Vedas are called ‘Sruti”- which means, what is heard.

It is never read from a text, since the recitation of any Veda mantra should conform to the following six parameters, namely,

varNa (letters);
svara (intonation);
mAtrA (duration of articulation);
balam (force of articulation);
sAma (uniformity), and
santAna (continuity).

If any of these parameters is not maintained, it would change the meaning of the mantra itself, leading to even diametrically opposite effects!

In the absence of a written text, our rishis had devised many ways to prevent even a small error to creep in to the recitation of the veda-mantras. These fool-proof methods used to chant each veda-mantra in various patterns and combinations are known as : vaakya,pada, krama, jaTA, mAlA, SikhA, rekhA, dvaja, danDa, ratha, and Ghana.

Among these, vAkya, pada, krama, jaTa and Ghana methods of chanting are more popular and let us analyze them only here.

Vaakya or samhitA pATha is to recite a mantra in a sentence straight with appropriate intonations. In sentences, some of the words have to be conjoined in chanting.

In padapAtha, a sentence is broken down to ‘words’ or pada’s, which gives the student the knowledge of each word.

The Ghana method is more difficult than the above where the combinations of words will be
1-2-
2-1-
1-2-3-
3-2-1-
1-2-3;

2-3-
3-2-
2-3-4-
4-3-2-
2-3-4 and so on. A priest who can recite in the Ghana method is given the title ghanapAThi.

These methods of complicated recitations in a oral tradition were devised in order to preserve the purity of the word, the sound, intonation, pronunciation, accent and sound combinations of the Veda mantras. By repeating the words in manifold ways, the correct tally of words was also kept which has naturally ensured its purity.

Just to illustrate what it takes for a priest to earn the title of a ghanapAThi, let us briefly analyze what is involved in the training. For illustration, let us consider only one portion of the krishNa yajur veda, called the taittiriya samhitA. In this portion there over 2,000 pancASat’s (1 pancASat = 50 pada’s), amounting to 109,308 pada’s. We can roughly assume each pada to have 3 syllables, thus totaling ~330,000 syllables. In the Ghana method of chanting, each syllable gets repeated 13 times, thus amounting to 4,290,000 utterances. And each of these utterances have to conform to all the six parameters discussed earlier.

Only when a person becomes capable of reciting this in any order asked, gets the title of a ghanapAThi. This is for only one samhitA portion in krishna yajur veda alone. Then there is Sukla yajur veda, rig veda, sAma veda, and atharva veda. There were scholars proficient in more than one veda as evident from the names dvivedi, trivedi and caturvedi. In addition, there are other samhitA portions, brAhmaNa portions, AraNyaka poritons, and the Upanishads, in the vedic scriptures alone.

After proficiency in ghanapATha, some learn lakshaNa-ghanapATha, which deals with the characteristics of each letter, its origin, how it has to be emphasized in a mantra, its varNa, the presiding deity, etc etc. Then there are purANa’s, dharma-Sastras etc. All these were learnt without any book, tape or any such instruments in the oral tradition, and were stored just in ~200 grams of the human brain! And the most interesting thing is, it was not that one or two individuals who were proficient in this dharma, but an entire society was well versed in this! Such a scholarship takes well over 25 years of intense education in a gurukulam, in addition to observing all the religious disciplines!"

Just listening to this powerful Ghana patham alone can have an amazing effect on us.

Video: https://www.youtube.com/watch?v=YUdggOY ... A&index=30

Src: http://www.brahmanworld.org/conv_fls2k6 ... sthood.pdf

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend
கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா?

2030-ஆம் ஆண்டில் காந்த துருவங்கள் இடம் மாறும் என்று ஜே.எம்.ஹார்வுட் என்பவர் 1970 ஆம் ஆண்டிலேயே கூறிவிட்டார். இப்படி மாறுவதால் உலகில் பேரழிவுகள் ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். இதிலலென்ன உண்மை உளது என்று காண்போம்.

இந்துக்கள் உலகத்தின் வயதை நான்காகப் பிரித்துள்ளனர்: கிருத யுகம்(4), த்ரேதா யுக (3), த்வாபர யுகம் (2), கலியுகம் (1). ஏன் இப்படி தலைகீழ் வரிசையில் 4,3,2,1 என்று யுகத்திற்குப் பெயரிட்டார்கள்?
ஏன் என்றால் சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்டை இழந்துவீட்டது. அப்போது ராம பிரான் தோன்றினார். த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்களை – அதவது 50 விழுக்காட்டை இழந்து விட்டது. அப்போதுதான் கிருஷ்ணன் தோன்றினார். யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் க்ண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் போய் உலகமே அழியும். பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இப்படி மாறிமாறி வரும் யுகங்களுக்கு காலம் எவ்வளவு என்றும் இந்துக்கள் கணக்கிட்டனர். உலகில் மற்ற நாகரீகங்கள் எல்லாம் 20-ன் மடங்குகளிலும் (மாயா நாகரீகம்), 40-ன் மடங்குகளிலும் (செமிட்டிக் மதங்கள்) சிறிய எண்களுடன் நின்றுவிட்டன. இந்துக்களோவெனில் பல லட்சம் வருடங்களைச் சொன்னதோடு இதற்கு முடிவு என்பதே இல்லை. இந்த வட்டச் சுழல்—மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும் என்றும் மனித ஆண்டு, தேவ ஆண்டு, பிரம்மாவின் ஆண்டுகள் என்பன வெவ்வேறு என்றும் சொன்னார்கள். இது ஏதோ கற்பனையில் பிறந்த வருடங்கள் என்று 200 ஆண்டுகளுக்கு முன் வரை நினைத்தார்கள். இப்பொழுது பல்வேறு உலகங்கள் பல்வேறு வேகத்தில் சுற்றும்போது இவை எல்லாம் சாத்யம் என்று தெரிகிறது.

இதற்கு என்ன விஞ்ஞான விளக்கம் என்று எண்ணிப் பார்த்தால் விடை கிடைக்கவில்லை. இப்பொழுது விஞ்ஞானம் முன்னேற, முன்னேற புதுப்புது விளக்கங்கள் கிடைக்கின்றன. இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:–
கிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள்
த்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள்
த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்
கலியுகம் – 432, 000 ஆண்டுகள்
இந்த நாலு யுகங்களையும் சேர்த்து சதுர்யுகம் என்பார்கள். 8,640,000,000 ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். அதுதான் பிரம்மாவின் ஒரு நாள். அதுபோல அவர் நூறு ஆண்டுகள் வாழ்வார். அவருக்குப் பின்னால் வேறு ஒரு பிரம்மா வருவார். இந்தக் காலச் சுழற்சிக்கு முடிவே இல்லை.
கலியுகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் ஓரளவு விஞ்ஞான விளக்கம் சொல்லலாம். நம்முடைய பூமி ஒரு காந்த உருண்டை. எப்பொழுதும் காந்த மண்டலத்தை உருவாக்கிய வண்ணம் இருக்கும். ஏன் இப்படி நடக்கிறது. நாம் வாழும் பூமியின் மேல் ஓடு வெறும் எட்டு மைல்கள்தான். அதன்மீதுதான் நாம் வசிக்கிறோம். அதற்குக் கீழே அதள பாதாளத்துக்குப் போனால் பூமியின் வயிற்றில் அது நெருப்பைக் கட்டிக்கொண்டு தன்னைத் தானே சுற்றுகிறது. அது மட்டுமா? தான் தட்டாமாலை சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியானது சந்திரனையும் தன்னோடு இழுத்துக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனோவெனில் நமது பூமி உள்பட எல்லா கிரஹங்களுடனும் பால்வெளி மண்டலத்தைச் சுற்றிவருகிறது. இப்படி பூமி சுற்றுவதால், கடலைக் கடைந்தது போல பூமியின் வயிற்றைக் கடையும் போது பூமியே காந்த சக்தி உருவாக்கும் ‘டைனமோ’ ஆகிவிடும்.
இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல காந்தத்திலும் – அதாவது பூமி என்னும் கிரஹத்தைச் சுற்றி இருக்கும் – காந்த இரு துருவங்கள் உண்டு. வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரிகிறது. பூமியின் காந்த மண்டலம்தான் நம்மை சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களிl இருந்து காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும். உயிரினங்களே இரா.

மாக்னெட்டொகெட்டொன்
காந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும். அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம்.
இது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் கவலை அடந்துள்ளனர். 2030-ல் இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது. இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர். கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது.
துருவங்கள் மாறும் நாலு லட்சம் அண்டுகள் என்பது கிட்டத்தட்ட கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது. நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பர். தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பர். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர். கடந்த காலத்தில் இப்படி மாறிய போது உலகம் அழியவில்லை என்று கல் படிம அச்சுகள் காட்டுகின்றன.ஆனால் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பது அவர்கள் தரப்பு வாதம். மற்றவர்களோவெனில் டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் அழிந்தது இதனால்தான் என்பர்.

ஒரு சுனாமி வந்த பின்னர்தான் அதன் பேரழிவுச் சக்தியை நாம் உணர்ந்தோம். அது போல ஒரு காந்த துருவ மாற்றம் ஏற்பட்ட பின்னர்தான் நமக்கு அது பற்றி விளங்கும் என்றும் அவர்கள் கூறுவர்.
காந்த துருவ மாற்றம் மெதுவாகத்தான் நடைபெறும்; அது நடக்க 1000 ஆண்டு ஆகும் என்பது போல நாமும் யுகங்களுக்கு இடையே துருவ சந்தி என்று இடைக்கால, இன்டர்வல் – வைத்திருக்கிறோம். இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் கலியுகம் என்பது காந்தப் புலன் மாற்றம் அடையும் காலம் என்று எண்ணத் தோன்றுகிறது. பெரிய இடைவெளி, சின்ன இடைவெளி என்று இருக்கும் என்றும் அதற்குப் பின்னரே யுகங்கள் முழுதும் மாறுபட்டிருக்கும் என்றும் புராணங்கள் பகரும். இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கையில் விஞ்ஞானம் வளர, வளர நமக்குப் புராணங்கள் சொன்னது உண்மையே என்ற உணர்வு பலப்படுகிறது.

சந்திரனில், விண்கலம் இறங்கிவிட்டது, செவ்வாய்க்கு விண்கலம் போய்ச் சேர்ந்துவிட்டது, வாயேஜர் என்னும் விண்கலம் சூரிய மண்டலத்தையே தாண்டிப் போய்விட்டது என்றெல்லாம் பத்திரிக்கையில் வரும் செய்திகளைக் கேள்வியே கேட்காமல் நம்பும் நம்மவர், நமது முன்னோர்கள் —– நம்மிடம் தேர்தலில் வோட்டோ, கையில் பணமோ கேட்காமல்—— நமது நன்மைக்காக எழுதிவைத்ததை நாம் நம்ப வேண்டாமா? அதுதான் அறிவுடைமை அன்றோ!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

எங்கே புத்தன்?.........புத்தரை விடவும் கருணையானவர் தாயாக மட்டும் தானே இருக்க முடியும்!

பகவான் புத்தரைத் தரிசித்து விட வேண்டும் என்ற வெறியுடன் வீட்டை விட்டுப் புறப்பட்டான் ஒரு இளைஞன். அவன் எங்குப் போனாலும் புத்தர் அங்கிருந்து கொஞ்சம் முன்பாகத்தான் புறப்பட்டுப் போனார் என்று ஒரே பதில் கிடைத்தது. அவன் முகம் துவண்டு போனது. வழியில் தாம் சந்தித்த மற்றொரு மூத்த புத்த சந்யாசியிடம் பகவான் புத்தரைத் தரிசிக்காமலேயே தம் வாழ்வு முடிந்து விடுமோ என்று கதறினான்.

முதிர்ந்த அந்த சந்யாசி அன்புடன் அவனது கரங்களைப் பற்றி ஆறுதல் கூறினார், "வருத்தப்படாதே மகனே.. உன் வீடு திரும்பு.. நீ புத்தரைத் தரிசிக்கும் பாக்யம் உள்ளவன் என்றால் எப்படியும் தரிசிப்பாய். புத்தர் கருணையானவர்" என்றார்.

அவனோ, "ஐயா.. நான் முன்பின்னாகப் புத்தரைப் பார்த்ததே இல்லை. வழியில் எங்காவது திடீர் என்று புத்தரைக் காண நேர்ந்தால் நான் எப்படி அடையாளம் கண்டுக்கொள்வேன். தவறவிட்டு விடக் கூடாதே" என்று அழுதான்.

"மகனே! வழி முழுவதும் சந்திப்பவர்களின் கால்களை உற்றுநோக்கியபடி போ... யார் தமது வலது கால் செருப்பை இடது காலிலும் இடதுகால் செருப்பை வலது காலிலும் அணிந்திருக்கிறாரோ அவரே புத்தர்.. அந்தத் திருவடிகளைச் சரணம் என்று இறுகப் பற்றிக்கொள்" என்று கூறினார்.

வழி முழுவதும் அவ்வாறு பார்த்தபடியே ஊர் திரும்பினான். ஒருவர் கூட அவ்வாறு காட்சியளிக்கவில்லை. தனக்கு நல்லருள் கிடைக்கவில்லையே என்று வருந்தியபடி தன் வீடு வந்து கதவைத் தட்டினான். அவனது அழைப்பொலியைக் கேட்டதும்,, அடிவயிற்றில் பிள்ளை உதைத்த போது உணர்ந்த ஆனந்த உணர்வுடன் தன்னை தனியே தவிக்க விட்டுச் சென்ற பிள்ளையை காண அவன் வயது முதிர்ந்த தாய் ஓடோடி வந்து கதவை திறந்தாள்.

இனி புத்தரை காண முடியாது என்று தன் சகல நம்பிக்கையையும் இழந்திருந்த மகன், கதவைத் திறந்த தன் தாயின் கால்களைப் பழக்கதோஷத்தால் கவனித்தான். என்ன ஆச்சரியம்? அவள் வலதுகால் செருப்பு இடது காலிலும், இடது கால் செருப்பு வலது காலிலும் இருந்தது. மகனை பார்த்த மகிழ்ச்சியில் செருப்பை மாற்றி அணிந்து வந்திருந்தார் அந்த தாய்.

மகனுக்கு மூத்த சந்யாசியின் சொல் நினைவில் மின்னியது. மெலிந்து மூத்து பாசத்தால் நடுங்கும் தாயின் மெல்லிய பாதங்களைக் கட்டிக்கொண்டு, 'பகவானே' என அழத் தொடங்கினான். புத்தரை விடவும் கருணையானவர் தாயாக மட்டும் தானே இருக்க முடியும்!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

Ari alaal Devi illai aiyan aiyaaranaarke- Appar........... The place

where St. Thayagaraja Lived & Composed his Kritis.




அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்
------------------------------------------------------------------------------------
'மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.'
- அப்பர்

தஞ்சை மாநகரிலிருந்து சுமார் பத்து கிமீ தொலைவில் உள்ள திருவையாற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் பல சிறப்புகள் கொண்டது. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இது 51ஆவது தலமாகும்.

வட பாரதத்திலுள்ள காசிக்கு இணையாக தென்னாட்டில் காவிரிக்கரையில் ஆறு திருத்தலங்கள் கருதப்படும். அவையாவன:

1. திருவெண்காடு
2. சாயாவனம்
3. மயிலாடுதுறை
4. திருவிடைமருதூர்
5. திருவாஞ்சியம் ; மற்றும்
6. திருவையாறு - ஆகியவையாம்.

திருவையாற்று சப்தஸ்தானத் தலங்களில் இது முதன்மையான தலம். சிலாத முனிவரின் மகனாகப் பிறந்து, ஈசன் அருளால் சிரஞ்சீவித்துவம் பெற்று, கணங்களுக்குத் தலைவருமான நந்தி பகவான் தன் திருமணத்திற்குப் பிறகு திருவையாறு ஐயாறப்பர் கோயிலைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கும் தன் இல்லாளுடன் சென்று ஈசனைத் தொழுதாராம். அச்சிறப்பின் சம்பிரதாயமாக, இன்றும் சித்திரைத் திருவிழாவின் கடைசி நாளன்று திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் உற்சவர் திருவையாறைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கு பவன் வருவது வழக்கம் அவை திருவையாறு சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படும். அவையாவன:

1.திருவையாறு,
2.திருப்ப ழனம்
3. திருச் சோற்றுத்துறை.
4. திருவேதிக்குடி
5.திருப் பந்துருத்தி,
6. திருக்கண்டியூர்; மற்றும்
7. திருநெய்த்தானம் - ஆகியவையாகும்.

தலபுராணம்

சிலாத முனிவருக்கு மகனாகப் பிறக்கையில் நந்திபகவானுக்கு நான்கு கரங்கள் இருந்தன. முனிவர் தம் குழந்தையை இக்கோயிலின் ஈசன் முன் இட்டபோது குழந்தையின் இரு கரங்கள் மறைந்து அது மிக அழகுடைத்து விளங்கலாயிற்று. எம்பெருமான் அக்குழந்தைக்கு அம்மையின் பால், நந்தியின் வாயுறை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் என்ற ஐந்து விதமான புனித நீர்களால் அபிஷேகம் செய்யவே, இத்தலத்து இறைவன் ஐயாறப்பர் என்று பெயர் பெற்றார்.

நந்திதேவர் இங்கு ஏழுகோடி முறை ருத்ரஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாடப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் பெயராகவே இத்தலம் திருவையாறு என அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

இத்தலத்து அர்ச்சகர் ஒரு முறை காசிக்குச் சென்று உரித்த காலத்தில் திரும்ப வரமுடியாமல் போக, அவர் உருவில் தான் வந்து தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டான், தன்னடியார்கள் மீது மாறாத அன்பு கொண்ட ஐயாறப்பன்.

இத்தலத்தில் கைலாயக் காட்சியைக் கண்டார் அப்பர். மானசரோவரில் மூழ்கிய அவர் இத்தலத்துத் திருக்குளத்தில் எழுந்தார் என்பர்.

ஆண்களை விடவும் பெண்கள் செய்யும் தர்மகாரியங்களுக்குப் பலன் அதிகம் என்று உணர்த்தும் பொருட்டு உலகத்தில் அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் தாயார் தர்ம்சம்வர்த்தினி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளாள். அவளை எண்ணிச் செய்யும் காரியங்கள் எந்நேரமும் நன்மையே விளைக்குமென்பதை உணர்த்தும் முகமாக இங்கு அம்மனுக்கு அஷ்டமி இரவன்று திருமண வைபவம் செய்வது வழக்கம்.

இங்குள்ள அம்பிகை இடக்கரம் இடுப்பில் ஊன்றியும் மேற்கரங்களில் சங்கு சக்கரத்துடனும் காட்சி அளிப்பதால், ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாகக் கருதப்படுகிறாள். இதன் காரணமாக, திருவையாறு எல்லைக்குள்ளாகப் பெருமாளுக்குத் தனிக் கோயில்கள் கிடையாது என்பர்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி முயலகனுக்குப் பதிலாக ஆமையை மிதித்த உருவுடன் காட்சி தருகிறார்.இவருக்கு ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்றே பெயராகும். இவரை ஹரி வணங்கித் தொழுததாக ஐதீகம்.

இங்கு செஞ்சடையான் விரிந்த சடையுடன் இருப்பதாக நம்புவதால், அதை மிதிக்கக் கூடாதென சந்நதியைச் சுற்றுவது தடையாகும். இங்கு ஓரிடத்தில் நின்று ஐயாறப்பா என்று குரல் கொடுத்தால், ஏழுமுறை எதிரொலிக்கும் என்பர்.

நாயன்மார்களான சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாம். அப்போது, சுந்தரர் பதிகம் பாட வெள்ளம் ஒதுங்கி நின்று வழி விட்டதாகவும், அவ்விருவரும் இத்தலத்தை தரிசித்ததாகவும் கூறுவர்.

ஆலயத்தின் தென்புற வாயிலில், சுசரிதன் என்னும் சிறுவனை யமனிடமிருந்து காத்த ஆட்கொண்டார் சந்நதி உள்ளது. இங்கு முதலில் வணங்கி விட்டுப் பிறகு கோயிலில் நுழைய வேண்டும்.

மூலவர் ஐயாறப்பன். பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன் என்ற பெயர்களாலும் வழங்குவர்.

தாயார் தர்மசம்வர்த்தினி. தமிழில் அறம் வளர்த்த நாயகி.

தலச்சிறப்பு

முக்தியளிக்கும் மூலத்தானங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தலமேகுவோர்க்கு ஈசன் திருவடி நிழல் கிட்டும் என்பது திண்ணம்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்து ஈசனைப் பிரார்த்திக்கின்றனர்.
யமபயம் போக்கும் தலமுமாகும் இது.

தலப்பண்

ஐயம் விடுத்தெம்மை ஆட்கொண்ட நேயனாய்
ஐயாற்றில் வாழ்கின்ற ஆதிமுதல் நாயகனை
கையிரண்டு கொண்டே வணங்காத வாழ்வென்றும்
உய்யா தறிவாய் உலகு
ஓம் நமச்சிவாய!
அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம் ------------------------------------------------------------------------------------ 'மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.' - அப்பர் தஞ்சை மாநகரிலிருந்து சுமார் பத்து கிமீ தொலைவில் உள்ள திருவையாற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் பல சிறப்புகள் கொண்டது. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இது 51ஆவது தலமாகும். வட பாரதத்திலுள்ள காசிக்கு இணையாக தென்னாட்டில் காவிரிக்கரையில் ஆறு திருத்தலங்கள் கருதப்படும். அவையாவன: 1. திருவெண்காடு 2. சாயாவனம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர் 5. திருவாஞ்சியம் ; மற்றும் 6. திருவையாறு - ஆகியவையாம். திருவையாற்று சப்தஸ்தானத் தலங்களில் இது முதன்மையான தலம். சிலாத முனிவரின் மகனாகப் பிறந்து, ஈசன் அருளால் சிரஞ்சீவித்துவம் பெற்று, கணங்களுக்குத் தலைவருமான நந்தி பகவான் தன் திருமணத்திற்குப் பிறகு திருவையாறு ஐயாறப்பர் கோயிலைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கும் தன் இல்லாளுடன் சென்று ஈசனைத் தொழுதாராம். அச்சிறப்பின் சம்பிரதாயமாக, இன்றும் சித்திரைத் திருவிழாவின் கடைசி நாளன்று திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் உற்சவர் திருவையாறைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கு பவன் வருவது வழக்கம் அவை திருவையாறு சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படும். அவையாவன: 1.திருவையாறு, 2.திருப்ப ழனம் 3. திருச் சோற்றுத்துறை. 4. திருவேதிக்குடி 5.திருப் பந்துருத்தி, 6. திருக்கண்டியூர்; மற்றும் 7. திருநெய்த்தானம் - ஆகியவையாகும். தலபுராணம் சிலாத முனிவருக்கு மகனாகப் பிறக்கையில் நந்திபகவானுக்கு நான்கு கரங்கள் இருந்தன. முனிவர் தம் குழந்தையை இக்கோயிலின் ஈசன் முன் இட்டபோது குழந்தையின் இரு கரங்கள் மறைந்து அது மிக அழகுடைத்து விளங்கலாயிற்று. எம்பெருமான் அக்குழந்தைக்கு அம்மையின் பால், நந்தியின் வாயுறை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் என்ற ஐந்து விதமான புனித நீர்களால் அபிஷேகம் செய்யவே, இத்தலத்து இறைவன் ஐயாறப்பர் என்று பெயர் பெற்றார். நந்திதேவர் இங்கு ஏழுகோடி முறை ருத்ரஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாடப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் பெயராகவே இத்தலம் திருவையாறு என அழைக்கப்படுவதாகவும் சொல்வர். இத்தலத்து அர்ச்சகர் ஒரு முறை காசிக்குச் சென்று உரித்த காலத்தில் திரும்ப வரமுடியாமல் போக, அவர் உருவில் தான் வந்து தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டான், தன்னடியார்கள் மீது மாறாத அன்பு கொண்ட ஐயாறப்பன். இத்தலத்தில் கைலாயக் காட்சியைக் கண்டார் அப்பர். மானசரோவரில் மூழ்கிய அவர் இத்தலத்துத் திருக்குளத்தில் எழுந்தார் என்பர். ஆண்களை விடவும் பெண்கள் செய்யும் தர்மகாரியங்களுக்குப் பலன் அதிகம் என்று உணர்த்தும் பொருட்டு உலகத்தில் அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் தாயார் தர்ம்சம்வர்த்தினி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளாள். அவளை எண்ணிச் செய்யும் காரியங்கள் எந்நேரமும் நன்மையே விளைக்குமென்பதை உணர்த்தும் முகமாக இங்கு அம்மனுக்கு அஷ்டமி இரவன்று திருமண வைபவம் செய்வது வழக்கம். இங்குள்ள அம்பிகை இடக்கரம் இடுப்பில் ஊன்றியும் மேற்கரங்களில் சங்கு சக்கரத்துடனும் காட்சி அளிப்பதால், ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாகக் கருதப்படுகிறாள். இதன் காரணமாக, திருவையாறு எல்லைக்குள்ளாகப் பெருமாளுக்குத் தனிக் கோயில்கள் கிடையாது என்பர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி முயலகனுக்குப் பதிலாக ஆமையை மிதித்த உருவுடன் காட்சி தருகிறார்.இவருக்கு ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்றே பெயராகும். இவரை ஹரி வணங்கித் தொழுததாக ஐதீகம். இங்கு செஞ்சடையான் விரிந்த சடையுடன் இருப்பதாக நம்புவதால், அதை மிதிக்கக் கூடாதென சந்நதியைச் சுற்றுவது தடையாகும். இங்கு ஓரிடத்தில் நின்று ஐயாறப்பா என்று குரல் கொடுத்தால், ஏழுமுறை எதிரொலிக்கும் என்பர். நாயன்மார்களான சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாம். அப்போது, சுந்தரர் பதிகம் பாட வெள்ளம் ஒதுங்கி நின்று வழி விட்டதாகவும், அவ்விருவரும் இத்தலத்தை தரிசித்ததாகவும் கூறுவர். ஆலயத்தின் தென்புற வாயிலில், சுசரிதன் என்னும் சிறுவனை யமனிடமிருந்து காத்த ஆட்கொண்டார் சந்நதி உள்ளது. இங்கு முதலில் வணங்கி விட்டுப் பிறகு கோயிலில் நுழைய வேண்டும். மூலவர் ஐயாறப்பன். பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன் என்ற பெயர்களாலும் வழங்குவர். தாயார் தர்மசம்வர்த்தினி. தமிழில் அறம் வளர்த்த நாயகி. தலச்சிறப்பு முக்தியளிக்கும் மூலத்தானங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தலமேகுவோர்க்கு ஈசன் திருவடி நிழல் கிட்டும் என்பது திண்ணம். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்து ஈசனைப் பிரார்த்திக்கின்றனர். யமபயம் போக்கும் தலமுமாகும் இது. தலப்பண் ஐயம் விடுத்தெம்மை ஆட்கொண்ட நேயனாய் ஐயாற்றில் வாழ்கின்ற ஆதிமுதல் நாயகனை கையிரண்டு கொண்டே வணங்காத வாழ்வென்றும் உய்யா தறிவாய் உலகு ஓம் நமச்சிவாய!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

ஞானானந்தகிரி ஸ்வாமிகள்

(நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல்)

பல வருஷங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை. திருவண்ணாமலையில் அருணா
சலேஸ்வரரை தரிசித்த பின், பூண்டி வந்தேன். அங்கு பூண்டி மகானின்
அனுக்கிரகம் பெற்றுக் கொண்டு, திருக் கோவிலூர் ஸ்ரீஞானானந்த தபோவனம்
வந்தேன். மாலை ஐந்து மணி இருக்கும்.

ஸத்குரு ஸ்ரீஞானானந்தகிரி ஸ்வாமிகள் பக்தர் களுக்கு அருளாசி வழங்கிக்
கொண்டிருந்தார். ஒவ் வொருவராக நமஸ்கரித்து எழுந்து, பிரசாதம் பெற்றுச்
சென்றனர். அடியேனும் நமஸ்கரித்து விட்டு ஓரமாக அமர்ந்தேன். குழந்தை
மாதிரி சிரித்துப் பேசும் குரு நாதனின் முகத்தைப் பார்ப்பதே ஆனந்தம்!

அப்போது, ஆஸ்ரமத்தில் பணியாற்றும் வயதான வேலைக்காரர் ஒருவர் அங்கு
வந்தார். அடியேனுக்கு அவரை நன்றாகத் தெரியும். அவரது இயற்பெயர்
நினைவில்லை. ஒல்லியானவர் என்பதால், அவரை ஸத்குருநாதனை உட்பட அனைவரும்
சோனி என்று அழைப்பர். அவர் கோபிக்க மாட்டார். உடம்பு முழுவதும் திருநீறு
பூசி, முழங்கால்களுக்குக் கீழ் வரை உடுத்திய நான்கு முழ வேட்டியுடன் ஸத்
குருநாதனை நமஸ்கரித்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தார்.

அவரைப் பார்த்ததும் குருநாதனுக்கே சிரிப்பு வந்தது. ''என்ன சோனி... என்ன
விசேஷம்? ஸ்ரீராமனுக்கு முன்னால நிக்கற ஹனுமன் மாதிரி அப்படியே
நிக்கறமே... ஏதாவது சமாசாரம் உண்டோ?'' என்று கேட் டார் ஸத்குருநாதன்.
சோனி உடல் நெளிந்து, தலையைச் சொறிந்தார். குருநாதன் விடவில்லை.

சிரித்தவாறே, ''நாம ஒடம்ப நெளிச்சு தலய சொறியறது லேர்ந்தே, ஏதோ முக்கிய
மான விஷயத்துக்காக 'அடி' போட வந்துருக்கோம்னு புரியறது. சரி... அது
என்னனுதான் சொல்வோமே'' என எதுவுமே தெரியாத மாதிரி அனைத்தும் அறிந்த அந்த
சித்த புருஷர் கேட்டார்!

அதற்கு சோனி தயங்கியபடி, ''அத குருநாதன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட
சொல்லப் போறேன். எங்கள மாதிரியானவங்களுக்கு எல்லாமே நீங்கதானே சாமி''
என்று முடிப்பதற்குள், ''சரி... சரி... நாம வந்த விஷயத்தச் சொல்வோம்''
என்றார் ஸ்வாமிகள்.

சோனி மென்று விழுங்கியபடி, ''அது... அது... வேற ஒண்ணுமில்லீங்க குருநாதா!
எம் மவன் வயித்துப் பேத்திக்கு கண்ணாலத்துக்கு (திருமணம்) ஏற்பாடு
செஞ்சுருக்கேன். இன்னும் நாலு... அஞ்சு நாளுக் குள்ளாற முகூர்த்த ஓல
எழுதியாவணும். பிறகு அடுத்த மாசம் திருக்கோவிலூர்ல கண்ணாலம் நடத் தோணும்.
குருநாதன்தான் அருளு செஞ்சு கூட்டிவைக்கோணும்!'' என்று பவ்வியமாகப்
பேசிவிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து எழுந்தார்.

உடனே ஸ்வாமிகள், ''ஓஹோ... ஒம் பேத்திக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணப்
போறயாக்கும். பேஷ்... பேஷ்! பண்ணுவோம். நாம ரொம்பவும் சந்தோஷப் படறோம்.
பாண்டுரங்கன் கிருபைல எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலையே வேண்டாம்'' என
பூரணமாக ஆசீர்வதித்தார்.

மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார் சோனி. அதை
உணர்ந்த குருநாதன், ''அதிருக்கட்டும்... நமக்கு எத்தனை பசங்கள்?'' என்று
வினவினார். உடனே சோனி, ''நமக்கு ஒரே ஒரு மவந்தான். அவனுக்கு மூணும்
பொட்டப் புள்ளைங்க. இப்ப கண்ணாலம் ஆவப்போறவ தான் மூத்தது. மீதி, ரெண்டும்
சின்னப் புள்ளைங்க. நீங்கதான் கிருபை பண்ணணும்...'' என்று குழைந்தார்.
ஸ்வாமிகள் முகத்தில் 'எல்லாம் புரிந்தது' போன்ற ஒரு புன்முறுவல்.

இருந்தும், புரியாத மாதிரி, ''நம்ம பேத்தி கல்யாணத்துக்கு
சாமிகிட்டேருந்து நாம என்ன எதிர்பாக்கறோம்?'' என்று கேட்டார்.
சோனிக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. அவர், ''மூர்த்த ஓல எழுதறதுலேருந்து,
திருக்கோவிலூருல ஒரு சின்ன சத்திரத்த வாடகைக்கு புடிச்சு, சீரு
செனத்தியல் லாம் செஞ்சு, கண்ணாலத்த நடத்துறதுக்கு ஐயாயிரம் ரூவா
புடிக்குது குருநாதா. இந்த ஏழ மேல கருண வெச்சு அந்த ரூவாய நீங்கதான்
அனுக் கிரகம் பண்ணணும்!''_என்று பிரார்த்தித்தார்.

குருநாதன் அதைக் காதில் வாங்காதது போல், ''அது சரி... ஒம் பையன் என்ன பண்
றான்?'' என்று கேட்டார்.
சோனி, ''அவுனுக்கு, திருக்கோவிலூர்ல அரிசி மண்டியில எடுபிடி வேலை. அறுவது
ரூவா சம்பளம். சாப்டது போக, ஒண்ணும் மிச்சம் புடிக்க முடியலே.
எப்டியாச்சும் நீங்க தான் ஐயாயிரத்த அனுக்கிரகம் பண்ணணும்'' என்று
உருகினார்.
உடனே ஸ்வாமிகள் சற்றுக் கோபம் தொனிக்க, ''நா ஒரு சந்நியாஸி. எங்கிட்ட
வந்து பணங்காசெல்லாம் கேக்கறயே... இது என்ன ஞாயம்? நம்மால அதெல்லாம் பண்ண
முடியாது'' என்று கூறிவிட்டு எழுந்தவர், அருகில் இருந்த மடத்தைச் சேர்ந்த
ஒருவரை அழைத்து, ''உள்ளே போய் ஒரு உரிச்ச தேங்காயும், ஒரு ரூபா பணமும்
கொண்டு வா!'' என்று பணித்தார். கொண்டு வந்தார் அவர்.

இரண்டையும் பெற்றுக் கொண்ட ஸ்வாமிகள், சோனியை அருகே அழைத்தார். உரித்த
தேங்காயை யும், ஒரு ரூபாய் நாணயத்தையும் அவர் கையில்
அனுக்கிரகித்துவிட்டு, ''சோனி! இந்த ரெண்டையும் குருநாதனுடைய ஆசீர்வாதமா
வாங்கிக்கோ... ஒம் பேத்தி கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும்!'' என்ற படி
எழுந்து போய் விட்டார்.

அவற்றை மாறி மாறிப் பார்த்தபடி விக்கித்து
நின்றார் சோனி. அவர் கண்கள் பனித்தன. அப்போது இரவு சரியாக 7.30 மணி.
தபோவனத்துக்குள் டூரிஸ்ட் பஸ் ஒன்று வந்து நின்றது. அது குஜராத் மாநில
ரிஜிஸ்டிரேஷனுடன் கூடிய பஸ். அதிலிருந்து ஆண்களும் பெண்களுமாக ஐம்பது
பேர் இறங்கினர். அவர்கள் மண்டபத்துக்குள் நுழைவதற்கும், ஸத்குருநாதன்
தனது ஆசனத்தில் வந்து அமர்வதற்கும் சரியாக இருந்தது.

அங்கேயே நின்றிருந்த
சோனியை புருவங்களை உயர்த்தி ஒரு தடவை பார்த்தார் ஸ்வாமிகள். பரம
பக்தியோடு தேங்காயுடன் நின்றிருந்த அவரைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு
சிரிப்பு வந்து விட்டது. வந்தவர்கள் அனைவரும் ஸத்குருநாதனை
நமஸ்கரித்தனர். அவர்களை ஆசீர்வதித்த ஸ்வாமிகள், இந்தியில் கேட்டார்:
''நாமெல்லாம் குஜராத்திகளா?''
''ஆமாம் ஸ்வாமிஜி'' என்றனர் அனைவரும் கோரஸாக இந்தியில். சம்பாஷணை தொடர்ந்தது.
ஸத்குருநாதன், ''நீங்களெல்லாம் யாத்திரையாக எங்கே போகிறீர்கள்?'' என்று கேட்டார்.
அவர்களில் ஒருவர், ''ராமேஸ்வரம் ஸ்வாமிஜி! வழியிலுள்ள முக்கிய ஸ்தலங்களை
தரிசிக்க உத் தேசம்!'' என்றார்.

ஸ்வாமிகள், ''ரொம்ப சந்தோஷம்... யாத்திரை «க்ஷமமா பூர்த்தியடைய
ஆசீர்வதிக்கிறோம்!'' என்றார்.மீண்டும் ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு
அமர்ந்தனர். அப் போது மடத்தைச் சேர்ந்த ஒருவர், பெரிய ரஸ்தாளி வாழைப்பழத்
தார் ஒன்றையும், பெரிய வாளியில் பசும் பாலும் கொண்டு வந்தார்.
வழங்கும்படி ஜாடை காட்டினார் ஸ்வாமிகள். அவர்கள் சாப்பிட்டு முடித்தனர்.
அவர்களை பஜனைப் பாடல்கள் சில வற்றைப் பாடுமாறு சொல்லிக் கேட்டு
மகிழ்ந்தார். இப்போது மணி 8.30.

பிறகு சோனியை சைகை காட்டி அழைத்தார் ஸ்வாமிகள். குஜராத்தி பக்தர்களை
நோக்கி, ''இவர் கையில் ஒரு தேங்காய் வைத்திருக்கிறார். உங்களில் யாராவது
ஒருத்தர் அதை உடைக்கணும்... முடியுமா?'' என்று சிரித்தபடி கேட்டார்.
அனைவரும் எழுந்து நின்றனர்.
அவர்களில் ஒருவரிடம் தேங்காயைக் கொடுக்கச் சொன்னார் ஸ்வாமிகள். ''இதை
உடைக்க முடியலேன்னா நூறு ரூபாய கிருஷ்ணார்ப்பணமாக கொடுக் கணும்...
சம்மதமா?'' எனக் கேட்டார். குஜராத்திகள் சம்மதித்தனர்.
தேங்காயை வாங்கியவர், அருகில் இருந்த கருங்கல் பாறையில் அதை உடைக்க
முற்பட்டார்.

ம்... ஹ§ம்! அது உடையவே இல்லை! ஆச்சரியத்தோடு ஸ்வாமிகளைப்
பார்த்தார். சலனம் இன்றி அமர்ந்திருந்தார் குருநாதன். சோனிக்கு ஜாடை
காட்டி, அவரது மேல் வஸ்திரத்தைத் தரையில் விரிக்கச் சொன்னார். அவரும்
விரித்தார். பிறகு தேங்காய் உடைக்க முற்பட்டவரிடம், 'ஸ்ரீ
க்ருஷ்ணார்ப்பணம்' என்றபடி நூறு ரூபாயை சமர்ப்பிக்கச் சொன்னார்
ஸத்குருநாதன்.

தொடர்ந்து ஆண்& பெண் என ஒவ்வொருவராக தேங் காயை உடைக்க முயன்றனர்.
'ஸ்ரீக்ருஷ்ணார்ப்பண' சத்தமே கேட்டது! சோனியின் வஸ்திரம் ரூபாய்
நோட்டும், சில்லறையுமாக நிரம்பியது. அந்தத் தேங்காய் அப்படியே இருந்தது!
இப்போது இரவு மணி 10.
ஸ்வாமிகள் சிரித்தவாறு சோனியை அழைத்து, ''இத்தனை பேராலயும் உடைக்க
முடியலே! நாம உடைச்சுப் பாப்பமே... என்ன!'' என்றார்.
உடனே சோனி, ''இத்தனை பலசாலிங்களாலயே முடியலீங்களே குருநாதா! பலமே இல்லாம
சோனியா இருக்கற நான் மட்டும் எப்டி ஒடைக்கப் போறேன்!'' என நெளிந்தார்.
ஸ்வாமிகள், விடவில்லை. ''நாம அப்டி சொல்லப்டாது! முயற்சி பண்ணுவோமே!''
என்று உற்சாகப் படுத்தினார்.


சோனிக்கு தைரியம் வந்தது. அவர் தேங்காயைக் கையில் எடுத்து, ''குரு நாதன்
அருள் இருந்தா எல்லாமே நல்லபடியா நடக்கும்!'' என்று கூறி விட்டு,
'குருநாதனே துணை... குரு நாதனே துணை... குருநாதனே துணை!' என மூன்று தடவை
உச்சரித்து விட்டு மும்முறை ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தார்.
ஸ்வாமிகள் அர்த்தபுஷ்டியுடன் புன்னகைத்தார். தேங்காயுடன் பாறையை
நெருங்கிய சோனி, பலம் கொண்ட மட்டும் தேங்காயை பாறையில் அடித்தார். என்ன
ஆச்சரியம்! அந்தத் தேங்காய் சரி பாதியாக உடைந்தது!

அனைவரும் கரகோஷம் செய்தனர். ஸ்வாமிகள் எந்த விதச் சலனமுமின்றி
அமர்ந்திருந்தார். படபடப்போடு ஓடிப்போய் குருநாதனின் பாதங்களில் விழுந்து
வணங்கினார் சோனி.
அவரை ஏறிட்டுப் பார்த்த ஸ்வாமிகள், ''இவ்வளவு பேராலயும் ஒடைக்க முடியாத
தேங்காய, நாம சர்வ சாதாரணமா ஒடச்சுட்டோம். அதனால, வஸ்திரத்துல சேர்ந்
திருக்கற பணம் நம்மைத்தான் சேரணும். கொஞ்சம் பொறுப்போம்!'' என்று
கூறிவிட்டு மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து பணத்தை எண்ணச் சொன்னார்.
அவர் எண்ணி முடித்துக் கூறிய தொகை ரூபாய் 5,501.

ஸ்வாமிகள் சிரித்தவாறு சோனியிடம், ''பேத்தி கல்யாணத்துக்கு நாம
எதிர்பார்த்தது ஐயாயிரம் ரூபாய். ஆனா, பாண்டுரங்கன் இந்த பக்தாள் மூலமா
அனுக்கிரகம் பண்ணினது 5,501 ரூபாய். பேத்தி கல்யாணத்த சந்தோஷமா
நடத்துவோம். 'ஸ்ரீகிருஷ்ண அனுக்கிரகம்'னு சொல்லிண்டே வஸ்திரத்தோடு ரூபாய
எடுத்துப்போம்!'' என்றார்.

உடனே நெடுஞ்சாண்கிடையாக குருநாதனின் பாதங்களில் விழுந்த சோனி குலுங்கிக்
குலுங்கி அழுதார். இதைப் பார்த்த இந்த அடியவனின் கண்களும் குளமாயின!
''எல்லாருக்கும் ராத்திரி போஜனம் தயாரா இருக்கு. சாப்பிட்ட பின் இரவு
இங்கேயே தங்கிட்டு, காலையில் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்படலாம்!''
என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் ஸ்வாமிகள்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

அசாதாரண நிகழ்வுகள் 11 !

நொச்சியம் மாமியுடன் பேசி விட்டு மணச்சநல்லூர் வழி திருவெள்ளறை,திருப்பைஞ்சிலி நோக்கி போய்க்கொண்டிருந்த போது கண்ணில் தென்பட்டது 'ஆதி நாயக பெருமாள் கோவில்' என்ற பதாகை. உடனே காரை நிறுத்தி விசாரித்தேன். பழமையான கோவில் 'இப்பிடியே போனா லெப்ட்ல ஒரு ரோடு வரும். அதுல கொஞ்ச தூரம் உள்ள போனா கோயில் வந்துடும். இந்த ஊர்ல கூட ஒரு கோயில் இருக்கு, பாத்துட்டு போங்க சார்'. அதிர்ஷ்டம். சிறு ஆலயம். செம்பியன் மாதேவி எடுப்பித்தது. பெருமாளின் நாமம் 'அழகிய மணவாளன்'. பதினாறு அடி உயரம். ஸ்ரீதேவி, பூதேவி உடன் உறை. தரையிலிருந்து பன்னிரெண்டு அடி. பிரமித்துப் பார்த்துவிட்டு, சுற்றி வந்தால் ராமாயண காட்சிகள் அடிப்பாகத்தில். பட்டர் தந்த புளியோதரை, தயிர் சாத பிரசாதத்தை உண்டு விட்டு வெளியே வந்தோம்.

அடுத்து ஆதி நாயக பெருமாள். உள்ளே நுழைந்ததும் அறிவிப்புப் பலகை 'உலுக் கானின் படையெடுப்பின் போது ரங்கனை காக்கும் பணியில் உயிர் நீத்த பன்னிரெண்டு ஆயிரம் தொண்டர்களுக்கு ஒரு சேர ஆடி அமாவாசை அன்று அருகிலிருக்கும் கால்வாயின் கரையில் திதி கொடுக்கப்படுகிறது'. இது ஆர்வத்தை தூண்ட, வலை தளத்தில் தேடிப்பிடித்து, ஸ்தல புராணங்கள், கோவிலொழுகு (கொஞ்சம்) போன்று பல ஆதாரங்களை படித்து எழுதப்பட்டது தான் 'அழகிய மனவாளம்' தொடர்.

1323 C.E.. துக்ளக் (உலுக்கான்) திருவரங்கத்தை தாக்கி நாசம் செய்கிறான். பிள்ளை லோகாச்சாரியர் ரங்கனின் உற்சவ விக்ரஹத்துடன் திருச்சி, அழகர் கோவில் வழி ஆனமலை அடையும் போது உயிர் துறக்கிறார் (ஜோதிஷ்குடி - காளையார் கோவிலில் தான் உயிர் நீத்தார் என்றும் கூறப்படுகிறது). பெருமாளின் அடியவர்கள் மதுரை - நாகர்கோவில் - திருஅனந்தன்புரம் - கள்ளிக்கோடு தடத்தில் சென்று மேல்கோட்டை சேருகின்றனர்.

இங்கு, சுவாமி வேதாந்த தேசிகன் தலைமையில் குலசேகரன் படியை ஒட்டி மூலவரை மறைத்து சுவர் எழுப்பப்படுகிறது. பின், சுதர்சன பட்டரின் (ஸ்ருத பிரகாசிகா) இரு புதல்வர்களோடு பிரேதங்களுக்கு இடையே மூச்சு விடாமல் படுத்துக் கொண்டு சுல்தான் படையினரிடம் இருந்து தப்பி சத்தியமங்கலம் வழியே திரு நாராயண புரம் (மேல்கோட்டை) அடைந்து சுந்தர ராஜ பெருமாளை தரிசிக்கிறார்.

அதற்குப்பின் திருப்பதி காடுகளில் மறைத்து வைக்கப்படும் உற்சவரைப் பற்றி 1371 C.E வரை எதுவும் அறியப்படவில்லை. 1336 C.Eல் விஜயநகர பேரரசை ஹரிஹரனும், புக்கனும் ஸ்தாபிக்கின்றனர். புக்கனின் மகன் கம்பன்னா பெரும் படை எடுத்து வந்து சுல்தான் ஆட்சியை ஒழித்துக் கட்டுகிறார். அவரின் தளபதி கோபன்னாவினால் செஞ்சியில் வைக்கப்பட்டிருக்கும் பெருமாள் திருமேனி அரங்கம் வந்தடைகிறது. அங்கு ஏற்கனவே வேறொரு உற்சவர் இருக்க யார் நாற்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன் திருவரங்கத்தை அலங்கரித்தவர் என்ற கேள்வி எழுகிறது. கண்களை கட்டிக் கொண்டு இருவரின் உடைகளையும் துவைத்து அலசும் வண்ணான் 'அட, இது நம் பெருமாளின் ஆடை' என்கிறான். அந்த விக்ரஹம் 'நம்பெருமாள்' என்கிற நாமத்துடன் உற்சவ மூர்த்தி யாகிறது.

இதன் முத்தாய்ப்பாக, கம்பன்னனின் மனைவி கங்கா தேவி எழுதிய 'மதுரா காவியம்' (அ) வீர கம்பண்ண சரித்திரம் 1912ல் திருஅனந்தன்புர நூலகத்தில் வேறு ஓலை சுவடிகளுக்கு இடையே தற்செயலாக கண்டுபிடிக்கப்படுகிறது. அதில், மதுரை மீனாக்ஷி அவனுக்கு கனவுக்காட்சியாக வீர வாளை கொடுத்து 'நானும் என் சகோதரனும் எப்படி துன்புறுகிறோம் பார். உடனே போர் செய். வெற்றி உனக்கே' என்று ஆசி அளித்த செய்தியும் காணப்படுகிறது.

சரி, தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வருவோம். பிள்ளை லோகாச்சார்யர் ஒரு பக்கம் போக, இன்னொரு பக்கம் ஒரு பெருங்கூட்டம் அழகிய மணவாளம் அடைகிறது. இவர்களில் பலர் 1371ல் நடக்கும் போரின் போது ஒற்றர்களாக சேவை செய்கின்றனர். இதில், சித்த மருத்துவர்களுக்கும், தேவரடியார்களுக்கும் பெரும் பங்கு உண்டு (வெள்ளை கோபுரம் - 1323 C.E. ஆசை காட்டி கோபுரத்தின் மீது அழைத்துச் சென்று சுல்தானின் தளபதியை கீழே தள்ளிக் கொன்று தானும் குதித்து உயிர் விட்ட வெள்ளையம்மாளின் நினைவாக வழங்கப்படுகிறது).

இவர்களைத் தவிர சுமார் பன்னிரெண்டாயிரம் பேர் அரங்கன் கோவில் பிரகாரங்களில் தங்கி விடுகின்றனர். போர் பயிற்சி ஏதும் இன்றி உலுக்கானின் படையோடு மோதி 'ரங்கா, ரங்கா' என்று அவன் பெயர் அழைத்தபடியே உயிர் விடுகின்றனர். இவர்களுக்குத்தான் ஆதி நாயக பெருமாள் கோவில் அருகில் இருக்கும் ஓடைக்கரையில் ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கப்படுகிறது.


இந்த அற்புத சரித்திர நிகழ்வை பதினெட்டு எபிசோடுகளில் இங்கு எழுதியது மிக மிக அசாதாரண நிகழ்வே. அரங்கன் அருளே.



Author: Krishnamurthy Krishnaiyer

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

---தெரிந்த உண்மை தெரியாத விபரம்


கோவில் அதிசயங்கள்

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.
ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!
அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சி தருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை. குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர் சிலையின் கண்களும். சில நூறு மைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் elதூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண் வடிவில் உள்ளது.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend
Kunjitha paadam

திருச் சிற்றம்பலம்...

ஸ்ரீவித்யா உபாஸகர்களின் முக்கண் க்ஷேத்ரங்களாக
விளங்குவது காஞ்சிபுரம், திருவாரூர், சிதம்பரம் இம்
மூன்று ஸ்தலங்களுமாகும்.சிதம்பரம் ஆகாயத்தலமாகும்.
இம்மூன்று ஸ்தலங்களிலும் உறையும் அம்பிகைகள் பெயர்களில்
காம என்ற சொல் சம்பதப்பட்டிருக்கும். காஞ்சியில் காமாக்ஷி
திருவாரூரில் காம கலா என்ற கமலாம்பிகை, சிதம்பரத்தில்
சிவகாம சுந்தரி.
காமனை எரித்த சிவபெருமானை, தன்னை மோகிக்க்கச்செய்து,
அவரை காமேஸ்வரனாக்கித், தந்னை சிவகாமசுந்தரியாக
ஆக்கிக் கொண்டவள் அம்பிகை.
ஒன்றாக இருப்பதும், பிரிவதும், பிரிந்த இரண்டும் ஒன்றாகச்
சேரத்துடிப்பதும் உலக இயற்கை. ஒன்றாக இருந்த ப்ரம்மம்
சிவனாகவும், சக்தியாகவும் பிரிந்து , இரண்டாக இருந்த சிவமும்
சக்தியும் ஒருங்கிணைந்து அர்த்த நாரீஸ்வரராகவும் ஆகியது.
காமக்கலையாகிற அம்பிகை காஞ்சியில் இறைவனைப்
பூஜித்து உலகிற்கு அவரைப் பூஜிக்கும் முறையை அறிவித்து,
பின் அவருடன் ஐக்யமானாள்.
இவளே கமலாம்பிகையாக திருவாரூரில் விளங்கி சிவனைக்
குறித்துத் தவம் இருந்து, யோகம் மூலம் அவரை அடையும்
முறையினை உலகிற்கு எடுத்துக் காட்டி இறைவனுடன் ஒன்று
சேர்ந்தாள்.
இவளே சிவகாமசுந்தரியாய் இறைவனை ஆடவைத்து, அதர்கு
ஏற்ப ஆடலும், பாடலும் ஒன்றாக லயமாகும் போக முறையில்
இறைவனுடன் ஒன்று பட்டாள்.
தாய்ப்பாலையே உணவாகக் கொண்டுள்ள குழந்தைகளுக்கு
நொய் வந்தால் அது நீங்க உண்ணும் மருந்தினை குழந்தையின்
குடல் தாங்காது எனக் கருதி,தாய் அம்மருந்தினை உண்டு அதன்
பயன் குழந்தைகள் பெற உதவுமாபோல் அன்னை சிவகாமி நம்
பிறவி நை நீங்க இறைவன் திருக்கூத்தினை இடைவிடாது கண்டு
அதன் பலனை நமக்களிக்கிறாள் என்பது அருளாளர்கள் கண்ட
உண்மையாகும்.

சிவகாமசுந்தரிக்கு தில்லப் பெருங்கோவிலின் வடக்குப்
பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தத்திற்கு அருகே மேற்கரையில்
தனிக்கோவில் அமைந்துள்ளது.அம்பிகை நான்கு கரங்களுடன்
நிந்ற கோலத்தில், கிளி மலர் இவற்றைஏந்தி ஒரு கையைத் துடை
மேல் வைத்து மிக அழகான கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.

சிதம்பரம் சிவ சக்தி ஐக்ய க்ஷேத்ரம். நடராஜர் உடுக்கையை
அடிக்கும்போது முதலில் 9 தடவையும், பின் 5தடவையும் அடித்தார்.
அதாவது, நவாக்ஷரியு, பஞ்சாக்ஷரமும் இணைந்த நிலை.
இங்குள்ள சிதம்பர ரஹஸ்யத்தில் ஸ்ரீசக்ரமும், சிவசக்ரமும் இணைந்துள்ளது.
இங்குள்ள தீக்ஷிதர்கள் நவாக்ஷரியும் பஞ்சக்ஷரி உபதேசமும்
பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு.

நடராஜாவின் அந்த தூக்கிய பாதமே அம்பிகையினுடையது.
அதற்கு குஞ்சிதாங்க்ரி என்ற பெயரிட்டுத் தனி வழிபாடு
அக்காலுக்கு மட்டும் உண்டு. அதுவே குஞ்சித நடராஜன்
எனக் கூறுகிறோம். இக்காலுக்கு அணியும் அலங்காரத்தினையே
நமது மஹாபெரியவா கடைசி காலத்தில் தன் சிரசில் அணிய விரும்பி
அங்கு போக விருப்பம் தெரிவித்தபோது, தில்லை தீக்ஷிதர்கள்
தாமாகவே அவரது விருப்பத்தினை இறை வழியாக உணர்ந்து
அவரிடம் கொணர்ந்து சேர்த்ததும் அதனை அவர் உவந்து தம் சிரஸில்
அணிந்ததும் நாம் யாவரும் அறிந்த ஒர் விஷயம். அதனையே
குஞ்சிதபாத சங்கரன் என்று நாம் அறிவோம். குஞ்சித பாத சங்கரன்
இருக்கும் இடத்தில் நோய்கள் அண்டாது.
.

ஸ்ரீஉமாபதி சிவாசாரியார் அவர்கள் குஞ்சிதபாதஸ்தவம் என
300ஸ்லோகங்கள் கொண்ட அருமையான நூலை இயற்றியிருக்கிறார்.
இவர் வழிபட்ட ஸ்ரீசக்ரம் அம்பிகையின் ஆலயத்தில் ஒரு புறத்தில்,
தனி அறையில் இன்றும் வழிபடப்பெறுகிறது.

இந்த சிவகாமி இறைவன் நடனத்திற்குத் தாளம் போடுவது போன்ற
அழகான விக்ரஹத்தை இன்றும் கும்பகோணம் நாகேஸ்வர ஸ்வாமி
ஆலயத்தில் காணலாம்.
திருச் சிற்றம்பலம்..

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

திருவண்ணாமலையில் அம்மைக்கு உண்ணாமுலையம்மன் என்று பெயர். இப்பெயரிட்டதற்குக் காரணம், சிவனுக்கும் உமைக்கும் திருமணமாகாத நிலை என்றோர் விளக்கம் கண்டேன். அது சரியாக எனக்குப்படவில்லை. வலைத்தளத்தில் தேடினேன் - கிடைக்கவில்லை.

யாரேனும் விளக்கமளிக்க இயலுமா? நன்றி.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

The left part of Lord Ardhanariswara (i.e. Devi) is called Apitakuchamba (अपीतकुचाम्बा = உண்ணாமுலையம்மன்). The right portion (i.e. Shiva) is called Aruna.
In this avatar, as part of Ardhanariswara, Devi is called the "Mother with unsuckled breast".

Reference may be made to Arunachala Mahatmyam. This may be of help: http://arunachalamahatmyam.blogspot.in/ ... chala.html

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

pb,
Thanks. I referred to the link. A similar Tamil version also is found. But, somehow, the explanation is not very satisfactory.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

அம்புப்படுக்கையில்இருந்தார்பீஷ்மர். அந்தக்காட்சியைப்பார்த்து, தர்மபுத்திரரைஅழைத்துச்சென்றார்பகவான் கிருஷ்ணர். “அணையும்நெருப்பைப்போலேஇருக்கிறார்பீஷ்மர். அவர்போனால், தர்மத்தைச்சொல்லயார்இருக்கிறார்கள்…? போ! அவர்சொல்வதைப்போய்க்கேள்” என்றுதர்மபுத்திரரைஅனுப்பினார்.

‘ஏன்பீஷ்மர்போய்விட்டால்பகவானேஇருக்கிறாரே– தர்மத்தைச்சொல்ல…?’ என்றுநமக்குக்கேட்கத்தோன்றும்.

பகவான்இருந்துபிரயோஜனமில்லை; அவரைவிளங்கச்செய்யக்கூடியமகான்கள்இருக்கணும்! இந்தஉண்மைக்குசாட்சியமாகத்தான்பகவானே பீஷ்மர்அம்புப்படுக்கையிலேஇருந்தபட
ிசொன்னஅந்தவிஷ்ணுசஹஸ்ரநாமத்தைக்கேட்டார். பலபேர்கேட்டார்கள். அவர்களுடன்அந்தவாசுதேவனேகேட்டான். அவன்சொன்னதுகீதை; கேட்பதுசஹஸ்ரநாமம். இப்படிஅவன்ஆனந்தமாய்க்கேட்டதேஅவன்பெருமை, உயர்வு.

Shared

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

stavyaH stava-priyaH stOtraM stutiH stOtA - vishNu Sahasra nAma 679-683
http://www.shivkumar.org/music/vishnu-s ... anings.htm

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

திருமூலர் திருமந்திரம்.......(2893)
=============================

கூறையுஞ் சோறும் குழாயகத் தெண்ணையும்
காறையும் நாணும் வளையலுங் கண்டவர்
பாறையி லுற்ற பறக்கின்ற சீலை போல்
ஆறைக் குழியில் அழுந்துகின்றாரே.----

பொருள்:
=======
கூறை எனபது,உடலைப் போர்த்திய தோல்;

சோறு என்பது சதை.(கத்தாழைக்குள் சோறு இருப்பது போல்);

குழாயகத்தெண்ணை என்பது எலும்பு நரம்புகள்,குருதி;

காறை,நாண் வளையல்-கழுத்து,இடை,கை போன்ற உடல் உறுப்புகள்.

மொத்தமாகக் குறிக்கப்படுவது "அழியும் இந்த உடல்".

இந்த உடலின் மேல் விசேஷ கவனம் செலுத்திப் போற்றிப்
பாதுகாத்து, உடலில் உள்ள "புலன்களின்" மயக்கத்தால்,
இந்த உடலுக்குள் உறைகின்ற மறை பொருளாக உள்ள
பரம்பொருளை, ஆத்ம விசாரத்தால் அறிந்து கொள்ளாது
மறப்பவர்கள், மீண்டும் பிறவிக் குழியில் வீழ்வர்;

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

Ashare
Ambal sannidhi
சிவன் கோயில்களில் மூன்று விதமாக அம்மன் சன்னிதியை அமைக்கலாம் என்று ஆகம் சாத்திரங்கள் கூறுகின்றன.

ஒன்று,

சிவன் சன்னிதி எந்த திசை ( கிழக்கு அல்லது மேற்கு ) நோக்கி அமைந்துள்ளதோ அந்தத் திசை நோக்கி அம்மனையும் பிரதிஷ்டை செய்வது.
அதாவது, சுவாமியும் அம்பாளும் ஒரே திசை நோக்கி காட்சி தருவர். இதை ஸமான வீஷணம் என்பர்.
கல்யாணக் கோலம் என்றும் வழக்கத்தில் இருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இந்த அமைப்பிலேயே உள்ளது.

இரண்டாவது,

சிவன் சன்னிதி கிழக்கு அல்லது மேற்கு முகமாக இருந்தாலும் அம்மன் சன்னிதி தெற்கு முகமாகவே அமைந்திருக்கும்.
இதை அனுக்கிரஹவீஷணம் என்பர்.
சுவாமியை தரிசிக்கும் முறையில் அம்மன் பிரதிஷ்டை அமைந்திருக்கும்.
சுவாமியின் அனுக்கிரகத்தைப் பெற்று நமக்கு அருள்வதாகப் பொருள். இந்தநிலை அனேகமாக எல்லா கோயில்களிலுமே உள்ளது.

முன்றாவது,

சுவாமி சன்னிதி மேற்கு நோக்கி இருந்தால் அம்மன் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கும்.
நேர் எதிராகப் பார்த்துக்கொள்ளும் நிலை.
அபிமுகவீஷணம் என்பர்.
எதிர்க்காட்சி என்றும் வழக்கத்தில் உள்ளது.
இந்த நிலை, மிக அபூர்வமானது.

திருக்கடவூர்,
காளஹஸ்தி போன்ற தலங்களில் தரிசித்து மகிழலாம். அருள்பாலிப்பதில் எந்த வேறுபாடும் கிடையாது.
மூன்றுமே ஒன்றுதான்.

Post Reply