Aanmeekam...

Post Reply
thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
கிருஷ்ணனின் பசி.
பிருந்தாவனத்திலிருந்து அன்று கிருஷ்ணன் பலராமன் மற்றும் ஆயர்பாடி கோபர்கள் பசுக்கள் கன்றுகளோடு
கிளம்பும்போது கிருஷ்ணன் ''யாரும் இன்று சாப்பாடு பொட்டலம் கொண்டு வரவேண்டாம். நாம் இன்று வெகு தூரம் செல்ல போவதில்லை. எனவே சீக்கிரமே திரும்பிவிடலாம்" என்றதால் யாரும் மதிய உணவு எதுவும் கொண்டு வரவில்லை.
ஆனால் வழக்கம் போல மதியம் அவர்களுக்கு பசி எடுத்தது "கிருஷ்ணா நீ தான் எங்கள் பசிக்கு ஏதாவது வழி
செய்ய வேண்டும் உன் பேச்சைக் கேட்டுத்தானே நாங்கள் ஒன்றும் கொண்டு வரவில்லை..ஏதாவது வழி செய்".என்றனர். கிருஷ்ணன் யோசித்தான். அடுத்த கிராமத்தில் பிராமணர்கள் வசித்தனர். அவர்கள் அன்று ஒரு யாகம் வளர்த்தி இந்திரனுக்கு ப்ரீதி பண்ணிக்கொண்டிருந்ததால் நிறைய உணவு இருக்குமே!!.
கண்ணன் பிருந்தாவன சிறுவர்களை அழைத்து நீங்கள் அடுத்த ஊரில் யாகம் வளர்த்து கொண்டிருப்பவர்களிடம் “கிருஷ்ணன், பலராமன் இருவரும் பசியாக உள்ளார்கள். நாங்கள் அவர்களோடு வந்திருக்கிறோம். எங்கள் எல்லோருக்கும் உணவு தர வேண்டும்” என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். அவர்கள் அவ்வாறே அங்கு சென்று கேட்ட போது அந்த பிராமணர்கள் இன்னும் யாகம் முடியவில்லை முடிந்தபிறகு எல்லோரும் இங்கு உணவு அருந்தியபிறகு தான் தர முடியும் என்று சொல்லி அனுப்பி விட்டனர். “ஓம் கோவிந்தாய ஸ்வாஹா” “ஓம் சங்கர்ஷனாய ஸ்வாஹா” என்று மந்திரம் மட்டும் ஒலித்து யாகத்தீயில் நெய் கொட்டிக்கொண்டிருந்ததே தவிர, ''பசி என்று கிருஷ்ணன் கேட்டான்''
என்ற போதும் பொருள் விளங்க வில்லை அவர்களுக்கு!!
கிருஷ்ணனிடம் வந்து சிறுவர்கள் நடந்ததை சொன்னார்கள்.
“ ஏன் உணவு அங்கு இல்லையா?”
“”நிறைய இருக்கிறதே ஆனால் தேவர்களுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டு பிறகு தான் தருவார்கள். நடுவிலே தரமாட்டார்களாம்”
“அப்படியா, சரி, நீங்கள் அந்த பிராமணர்கள் வீடுகள் அங்கேதானே உள்ளது அந்த பிராமணர்கள் வீட்டில் அவர்கள் மனைவிகள் இருப்பார்களே? அவர்களிடம் சென்று கிருஷ்ணனும் பலராமனும் ரொம்ப பசியாக இருக்கிறார்கள். உங்களை கேட்டு சாப்பிட உணவு வாங்கிவர சொன்னார்கள்” என்று சொல்லுங்கள். அவர்கள் தரலாம்”
சிறுவர்கள் மீண்டும் சென்றார்கள். வீடுகளில் பிராமணர்களின் மனைவிகளிடம் சொன்னவுடனே அந்த ஸ்திரீகள் உடனே ஒன்று கூடி யோசித்தார்கள். இந்த யாகத்திற்கு சமைத்த உணவு ரெடியாக உள்ளது. ஆனால் புதிதாக சமைத்து எடுத்து செல்வதற்குள் கிருஷ்ணன் பலராமன் சென்று விட்டால் என்னசெய்வது? இதையே எடுத்து செல்வோம் என்று நிறைய உணவை எடுத்துக் கொண்டு அவர்களே கிருஷ்ணன் இருக்கும் இடத்துக்கு கிளம்பினார்கள்.
சில பிராமணர்கள் இதைப் பார்த்து விட்டு அவர்களை தடுத்தார்கள். அந்த காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாது. கணவனின் கட்டளையை மீறவும் முடியாது. இந்த ஸ்திரீகளோ கவலையே இன்றி கிருஷ்ணன் பலராமன் இருக்கும் இடம் சென்று அவர்களே அனைவருக்கும் பரிமாறினார்கள்.
பிராமணர்கள் யாகம் நடத்திய இடத்தில் யாக குண்டத்தின் அக்னியில் ஒரு தேவதை தோன்றி அனைத்து தேவர்களும் இந்திரன் உட்பட திருப்தியாக உண்டு மகிழ்ந்ததாக கூறவே பிராமணர்கள் திடுக்கிட்டார்கள் '' இன்னும் மந்திரங்களே முடியவில்லையே, இது எப்படி '' என்று ஆச்சர்யப்பட்டார்கள்.
இதற்கிடையே கிருஷ்ணன் அந்த ஸ்திரீகளை நோக்கி “நேரமாகி விட்டதே நீங்கள் வீடு செல்லுங்கள்”
என்று கூறவே அவர்கள் இனி நாங்கள் வீடு திரும்ப முடியாதே உங்களுடனே தான் வரவேண்டும் . எங்கள் வீட்டில் கணவன்மார்கள் " எங்கள் வார்த்தை மீறி உணவோடு வீட்டை விட்டு செல்லும் நீங்கள் இனி வீடு திரும்ப முடியாது. ஞாபகமிருக்கட்டும்” என்று சொல்லிவிட்டார்களே'. நாங்கள் எங்கே செல்வோம்?''' என்று வருந்தினார்கள்
கிருஷ்ணன் சிரித்தான் “அதெல்லாம் ஒன்றும் நடக்காது. கவலையின்றி நீங்கள் உங்கள் வீடுகளுக்கே செல்லுங்கள் உங்களை அவர்கள் சந்தோஷமாக வரவேற்று ஏற்றுக்கொள்வார்கள்” என்றான்
யாகம் முடிந்தவுடனே இரு யோகிகள் அங்கு தோன்றி விஷ்ணுவுக்கு யாக பலன் எப்படி போய் சேர்கிறது அதனால் பிரபஞ்சம் எப்படி சம்ரக்ஷிக்கபடுகிறது என்று விளக்கிய போது தான் பிராமணர்களின் அகக்கண் திறந்தது. அவர்கள் மனைவியர் எப்படி கொடுத்து வைத்தவர்கள், இறைவனின் அம்சமாகிய கிருஷ்ணன் பலராமன் பசியாக இருக்கிறேன் என்று உணவு கேட்டு வாங்கி திருப்தியாக உண்டதன் விளைவே யாகத்தின் முழு பயன் என்று உணர்ந்தனர் தங்கள் அறியாமைக்கு வருந்தினர் வழிமேல் விழி வைத்து அந்த பெண்கள் வரும் வரை காத்திருந்தார்கள் அவர்கள் காலில் விழுந்து வணங்காத குறையாக தவறுக்கு வருந்தி அவர்களை போற்றி மரியாதையோடு அன்போடு அவர்களை வரவேற்றார்கள் என்று இந்த கதை முடிகிறது.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

பகுத்தறிவு

Post by vgovindan »

என்னுடைய FB post -

"நான் ஒரு FB post படித்தேன். அதில் ஒருவர் வாலியை ராமன் வதைத்தது pre-planned murder - என்று எழுதியிருந்தார். அதேபோல் மகாபாரதப் போரில் நடந்தது எல்லாமே pre-planned murder என்று எழுதியிருந்தார்.

ராமாயணத்தை இயற்றிய வால்மீகிக்கும், தமிழில் இயற்றிய கம்பருக்கும், மகாபாரதத்தை இயற்றிய வியாசருக்கும், இந்த முரண்பாடுகள் தெரியவில்லை என்பது அவருடைய எண்ணமா? - அறியேன். இத்தகைய பெருந்தகைகளுக்குத் தெரியாத பகுத்தறிவு வாதங்கள் நமக்குத் தெரிந்தன என்று பெருமைப்படுமுன், சற்று யோசியுங்கள்.

இந்தக் காவியங்களை இயற்றியவர்கள், கதா நாயகனை அப்பழுக்கற்றவனாக ஆக்கவேண்டுமென நினைத்திருந்தால், அவர்கள் செய்திருக்க முடியும். ஆனால் ஏன் செய்யவில்லை? ஆங்கிலத்தில் ஒரு வழக்கு - tearing out of context என்று. எந்த ஒரு சம்பவத்தையும் அதனுடை பின்னணியினை முழுதும் உணராது அந்த சம்பவத்தை மட்டும் விமரிசிப்பது முறையல்ல.

வாலி பெற்ற வரம் - தன்னுடை எதிரி தன்னுடன் போர்புரிய வரும்போது, அவன் பாதி பலம் தன்னை அடையவேண்டுமென. அப்படியென்றால் வாலி தான் நினைத்தது தான் சட்டமென இருக்கலாம், அவனை யாரும் வெல்ல இயலாது என்பது தானே?

அதேபோல், இரணியன் தன்னை யாரும் ஆயுதங்களால் கொல்லலாகாது, பகல் இரவில் கொல்லலாகாது, வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கொல்லலாகாது என்று வரம் பெற்றான். ஆக, அவன் தவறு செய்தாலும் யாரும் அவனை தண்டிக்க இயலாது, அப்படித்தானே?

பாண்டவர்கள் 14 வருடங்கள் வனவாசம் சென்றனர் - சூதில் தோற்றபின். திரும்பி வந்து பாதி ராஜ்ஜியம் கேட்டால் இல்லையென்றான் துரியோதனன், ஐந்து கிராமங்கள் கேட்டால் இல்லையென்றால் - ஒரு ஊசியளவு நிலம் கூட கிடைக்காது என்றான். எந்த மண்ணில் நாம் பிறந்தோமோ அந்த மண் நமக்கு சொந்தமில்லை? எப்படி யாரும் இதை மறுக்க இயலும்?

இம்மாதிரி அதருமங்களையே செய்து வாழ்ந்தவர்களை எப்படி வீழ்த்துவது? - பொய்ம்மையும் வாய்மையிடத்தப் புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் - திருவள்ளுவர். இதுதான் ஒரே வழி.

இந்த முரண்பாடுகளினின்று விடுபட்டு எந்த நோக்கத்திற்காக இந்தக் காவியங்கள் இயற்றப்பெற்றனவோ, அதனை அறியவேண்டும். அந்த முயற்சி செய்யாது வெறும் பகுத்தறிவு வாதம் செய்வதனால் நம்மை நாமே குழப்பிக்கொள்கின்றோம்.

வாழ்க்கை என்பது முன்னேற்றம் - பொருளிலும், செல்வாக்கிலும் அல்ல. இவற்றிற்கு மீறிய ஒரு நோக்கம் உள்ளது - தன்னையறிதல் - அதற்கு முதலடியாவது எடுத்து வைப்போம். பாட்டி கதைகள் பேசுவதனால் பகுத்தறிவு வாதம், மெய்யுணர்வாகாது."

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

Prayer of Rantideva -

na kAmayE(a)haM gatim-ISvarAt parAm-ashTarddhi-yuktAm-apunarbhavaM vA |
ArtiM prapadyE(a)khila-dEha-bhAjAmnataH-sthitO yEna bhavanty-aduHkhAH || 12||

I do not seek from the Lord the highest position attended with eight-fold yogic power (aNima etc) or even the final beatitude (cessation of rebirth).
Dwelling in their heart (as the sufferer) I would (rather) undergo the suffering of all embodied souls, so that (through such vicarious suffering of mine) they may be relieved of misery." (Srimad Bhagavatam - Book 9, Chapter 21, verse 12)

That was physical suffering caused by natural calamities. But now, humanity is not suffering from natural calamities - excepting in certain cases. Almost all suffering now, is caused by moral degradation - aggrandisement and greed.

And this aggrandisement and greed goes in the name of 'development' - a pure hedonism model of Western Society.

How can even a thousand Rantideva and a thousand Jesus would be able to vicariously suffer and relieve the misery of humans at large?

How can any prayer be powerful enough to destroy this aggrandisement and greed?

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

கொடுப்பதும் சனி - கெடுப்பதும் சனி - யாரை விட்டது சனி ?

நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான் என்று சொல்வார்கள். அதனால் அவரை 'சனீஸ்வரன்' என்று போற்றுவர். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், அவரவர் ராசிக்கேற்ப ஏழரை ஆண்டுகள் சனியின் பிடிக்குள் அடங்கி, உயர்வு- தாழ்வுகளைச் சந்தித்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதைத்தான் 'ஏழரைச்சனி' என்கிறார்கள். 'கொடுப்பதும் சனி; கெடுப்பதும் சனி', 'யாரை விட்டது சனி' என்றெல்லாம் பழமொழிகள் பல உண்டு.
ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து, ''உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?'' என்று கேட்டான். அதற்கு சனீஸ்வரன், 'இதுவரை இல்லை. ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை. ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!' என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார்.
'எங்கே செல்கிறீர்கள்?'' என்று இந்திரன் கேட்க, 'சிவனைத் தரிசிக்க!'' என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்.
நேராக கயிலாயம் சென்றவர், சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்.
''சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?'' என்று கேட்டார்.சிவபெருமான்.
''பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே வந்தேன்'' என்றார் சனீஸ்வரன்.
''எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா... விளையாடுகிறாயா? கிரகங் களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?' என்று கேட்டார்.
''ஆம் ஸ்வாமி! நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார் சனீஸ்வரன்.
''ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது' என்று கூறிய சிவபெருமான், பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராக்ஷத்தில் மறைந்துகொண்டார். ருத்ராக்ஷத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது. அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?
ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன். ஏழரை நாழிகை கடந்தது. சிவபெரு மான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார். சனீஸ்வரனை நோக்கி, ''பார்த்தாயா சனீஸ்வரா... உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே?'' என்றார்.
''இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள்'' என்றார்.
'சனீஸ்வரனின் விதி'யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான். ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.
சிவனைப் பீடித்த சனி அதோடு விட்டு விடவில்லை. திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.
ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன். இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன. ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.
அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ''பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று வேண்டினார்.
'எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்' என்றார் ஸ்ரீராமன்.
உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ''ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு'' என்றார்.
''சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ள லாம்'' என்றான் அனுமன்.
''ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?''என்று கேட்டார் சனீஸ்வரன்.
''என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். 'எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கூறினார் அனுமன்.
அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன். அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று. அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. 'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?' என்றுகூடச் சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.
''சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?'' என்று கேட்டார் அனுமன்.
அதற்கு சனீஸ்வரன், ''ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன். சாக்ஷத் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்' என்றார் சனீஸ்வரன்.
''இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?' என்றார் அனுமான். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், ''அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றார். ''ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்' என வரம் கேட்டார் அனுமன். சனியும் வரம் தந்து அருளினார்.
பொதுவாக ஒருவரை ஏழரைச் சனி பீடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து மங்குசனி, தங்குசனி, பொங்குசனி என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியின் மங்குசனி, தங்குசனி காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைகளைச் சமாளித்து, முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற, ''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம'' என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

ஒரு பங்களிப்பு

அக்னி நட்சத்திரம்

சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14-ஆம் தேதி வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை "அக்னி நட்சத்திரம்' என்று சொல்வர்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறும்.

இந்த வருடம் 4-5-2013 முதல் 28-5-2013 வரை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.

இந்த காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும். அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும்.

அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள். இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது.

பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கும் பாதையில், முதல் நான்கு மாதங்கள் பூமிக்கு அருகில் இருந்தவாறு பயணப்படும். இந்த வழியை முதல் பரியாயம் என்பார்கள். இதற்கு ஐராவத வீதி என்ற பெயரும் உண்டு.

அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது கார்த்திகை நட்சத்திரம். கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதை அக்னி தேவன். நெருப்பைத் தாங்கும் சக்தி படைத்தது கார்த்திகை நட்சத்திரம் என்று வானியல் நூல்கள் கூறுகின்றன.

இந்த அக்னி நட்சத்திரம் குறித்து புராணம் கூறும் தகவலைப் பார்ப்போமா? யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்துவளர, அவ்வப்போது மழைபெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். (இந்திரனுக்கு காண்டவவனன்' என்ற பெயரும் உண்டு.)

இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் கரையேறும்போது ஓர் அந்தணர் வந்தார். அவர், கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து, ""உங்களைப் பார்த்தால் கருணைமிக்கவர்களாகத் தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்'' என்று வேண்டினார்.

அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அந்த அந்தணரை உற்றுப் பார்த்தார்.

""அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே'' என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன்.

""உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் கபளீகரம் செய்தால் என் பிணி தீரும்'' என்றான்.

""அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?'' என்றான் அர்ச்சுனன்.

""நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்துவிடுகிறான்'' என்றான்.

கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார். (காண்டவ வனத்தை அழித்தே அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தனர் பாண்டவர்கள். ஆனால் காண்டவ வனத்தை அழிப்பது எவ்வாறு என்று திகைத்த வேளையில் இது நடந்தது)

கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன், ""அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பாறாத்தூணியும் அம்புகளும் வேண்டும். ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை'' என்றான். உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில்,

அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான்.

அப்பொழுது கண்ணன், ""அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம்'' என்றார்.

அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க "சரக்கூடு' ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான்.

(இதை பலமுறை நானே கண்டதுண்டு அக்னி நக்ஷத்ர ஆரம்பத்தில் மழை வந்து தடுத்ததை)

அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்று வெளியேறினான்.

இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.

இந்த அக்னி நட்சத்திர நாட்களில் என்ன செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.

இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது; நார் உரிக்கக்கூடாது; விதை விதைக்கக்கூடாது; கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது; வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும். தான- தர்மங்கள் செய்யலாம்; தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம்; நோயாளிகளுக்கு இளநீர் தரலாம்; உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம்; ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்; அந்தணர்களுக்கு விசிறி தானம் அளிக்கலாம்.

அக்னி நட்சத்திரக் கால கட்டத்தில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி, அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் பானகம் வழங்குவதும் நல்ல பலன்களைத் தரும். பரணிக்குரிய துர்க்கையையும் ரோகிணிக்குரிய பிரம்மாவையும் சந்தனாபிஷேகம் செய்து வழிபட வாழ்வில் வசந்தம் வீசும்.

அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க, காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப் பலகையில் போட்டு, சூரிய காயத்திரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
Salagramam
:
ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள்.

அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள்.

மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார்.

"என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!" என்று சாபமிட்டாள். அந்த கல்தான் சாளக்கிராம கல்.

உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி.
புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு.

"அஞ்சாதே துளசி! எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது.

க்ருஷ்ணஅவதாரத்தின் போது கோபிகையாக இருந்தவள் நீ.

என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே.

பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன.

என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான்.

என்னை தரிசனம் செய்தால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது.

இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய்.

என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால், நான் சாளக்கிராமக் கற்களாக மாறப் போகிறேன்.

நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா?

அதனால் நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன்.

அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாகும்.

சாளக்கிராமமாக நானே இருப்பதால், பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள்.

நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள்.

சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போன்றபடுவாய்.

உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன்.

இங்கே வர முடியாதவர்கள், துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள் பாலிப்பேன்" என்றார்.

"யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப்பட்டுஇருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன்.

அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன்.
அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது.

சாளகிரமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம்,சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன்" என்றும் மஹாவிஷ்ணு கூறினார்

சாளகிராமங்கள் எப்படி உருவாகின்றன..?

மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் "வஜ்ர கிரீடம்" என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகிராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து, அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும், தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார்.
இவைதான் சாளகிராம மூர்த்திகள்.

எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும்.

அவற்றுக்கு "ஹிரண்ய கர்ப கற்கள்" என்று பெயர்.
இவையும் பூஜைக்கு உகந்தவை.

இந்த சாளகிராமங்கள், சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கிறன.

நாராயணா ஹரி நாராயணா...!!!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
''கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்

விஷ்ணு பாதம்

பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம்.

''கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.

ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

'' அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .

“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம்.
ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு, நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு (திருவாலங்காடு - வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக -- ஒரு பரிசு -- என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ'' .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''

6. ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்'' என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான் குவா குவா என்று பேசி பிறந்து ச�� நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த 7வது பிண்டம்..

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த 8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே.

9. ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது.நீ தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த 9வது பிண்டம்.
.
10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ''கடிக்காதேடா..'' . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக ப்ளீஸ் இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.'' காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், 11வதாக எடுத்துக்கொள்.'

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் நோய்வாய்ப்பட்டாயே . அதற்காகத்தான் இந்த 12வது பிண்டம் தருகிறேன்.

13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு . ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான் அம்மா.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த 14வது பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ''தன்னலமற்ற'' தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த 15வது பிண்டம் ஒன்றே.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே. என்னை மன்னித்து ஆசிர்வதி.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Aanmeekam...

Post by Ponbhairavi »

நன்றி தஞ்சாவூரான்
படிக்கும்போதே கண்கள் பனிக்கின்றன!!
சந்யாசிகள் தாயாருக்கு மாத்திரம் நமஸ்காரம் பண்ணுவதன் அர்த்தம் புரிகிறது

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

வில்வம், துளசி!
வில்வம் -ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்
அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் பற்றிப் பார்ப்போம்


ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளலாம்

சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு) அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.

வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன

குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம்

ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு
( சூரியன் உதிப்பதற்கு முன்னதாக) முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்

வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு

மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்

வில்வ வழிபாடும் பயன்களும்

சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்

வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.
வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது

மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்

எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்

வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன

வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்

அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது

சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் ( வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்

அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டான்

ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்

வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்

ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்

வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது.



நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.

மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை) கடாட்சத்தைப் பெறமுடியும்

வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது

ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்

வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.

வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்

மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே

பொருள் விளக்கம்

போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்

ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.

வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்

இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.


வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.

நஞ்சை முறிக்கும் துளசி!

துளசியை ஒரு தெய்வீகச் சின்னமாக எண்ணி வழிபடுகிறோம். துளசியில் அடங்கியிருக்கும் மருத்துவக் குணங்களை கருத்தில் கொண்டுதான் தெய்வீகச் சின்னமாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள்.

அரி, ராம துளசி, கிருஷ்ண துளசி என்றும் துளசி அழைக்கப்படுகிறது. துளசியில் நற்றுளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத்துளசி, கல்துளசி, நாய்த்துளசி, முள் துளசி எனப் பலவகை உண்டு. இதன் சுவை கார்ப்பு.

நற்துளசி: கபத்தைப் போக்கும். வயிற்றுவலி குணமாகும். தாகத்தைப் போக்கும். மந்தத்தை நீக்கும். சுவையின்மையைப் போக்கும்.

நாய்த்துளசி: கபத்தை நீக்கும். இருமல், சளி, ஜன்னி போன்றவற்றைப் போக்கவல்லது.

நிலத்துளசி: தாய்ப் பாலால் குழந்தைகளுக்கு வரும் மந்தத்தைப் போக்கும். கனச்சூடு நீக்கும். கபசுரம், பித்த சுரம், குளிர் சுரத்தைப் போக்கவல்லது.

கல்துளசி: இது கட்டி, வண்டுக்கடி, பூச்சிக்கடி போக்கும்.

முள்துளசி: வெட்டுப்புண், கபம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.

செந்துளசி: விஷத்தை முறிக்கும். கபத்தைப் போக்கும். சைனஸைப் போக்கவல்லது.

கருந்துளசி: இருமல், இழைப்பு குணமாகும். செருமல் நீங்கும். வயிற்றுப் புழு நீங்கும். மார்புச் சளி குணமாகும்.

துளசியின் மருத்துவப் பலன்கள்:

* அலர்ஜியினால் வரும் ஒவ்வாமையை நீக்குகிறது.

* நுரையீரலைப் பலப்படுத்துகிறது.

* இதன் இலை சுவாசப் பாதையில் உள்ள தொற்றுநோய்க் கிருமிகளை செயலிழக்கச் செய்கிறது.

* ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

* வயிற்று வலியைப் போக்குகிறது.

* உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

* ஆஸ்த்துமாவிற்கு தீர்வாக உள்ளது.

* சுரத்தைப் போக்கும் சஞ்சீவி.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோயைப் போக்கும்.

* கொசுக்களை ஒழிக்க துளசி புகைச் சிறந்தது.

எப்படிப் பயன்படுத்துவது?

* துளசி இலையை நீர் சேர்த்துக் காய்ச்சி ஆவி பிடிக்கச் சுரம் நீங்கும்.

* மனச்சோர்வு நீங்க, தினமும் காலையில் 15 துளசி இலைகளை பருப்புடன் சேர்த்து மூன்று மாதம் அருந்த மனச்சோர்வு நீங்கி உடல், உள்ளம் பலம் அடையும்.

* துளசி, சுக்கு, பனை வெல்லம், பால் சேர்த்துத் தயாரிக்கப்படும் டீயை அருந்த சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாகும்.

* துளசி வேரைப் பொடித்து நெய்யோடு கலந்து அருந்த ஆண்மை அதிகரிக்கும்.

* தேள் கடிக்கு துளசிச் சாறுடன் வேப்ப இலைச்சாறு, மிளகு சேர்த்து அருந்தி, கடிவாயில் பூச நஞ்சு முறிவு ஏற்படும்.

* துளசிச் சாறு, இஞ்சிச் சாறு சம அளவு எடுத்து அதனுடன் மிளகுத்தூள் ஒரு சிட்டிகை சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், நெஞ்சு சளி பிரச்னைகள் அகலும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
விபூதி*

எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.

*கட்டை விரல்*

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

*ஆள் காட்டி விரல்*

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.

*நடுவிரல்*

நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.

*மோதிர விரல்*

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

*சுண்டு விரல்*

சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.

*மோதிர விரல் – கட்டை விரல்*

மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்......*நகத்தை பற்களால் கடிக்க கூடாது.

*மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.

*தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.

*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.

*நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.

*செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை.

*அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.

*ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது
*தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.
*இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்.

*உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.

*ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.

*நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.

*உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.

*கன்றுக்குட்டி,மாடு ஆகியவை கட்டியிருக்கும்கயிற்றை தாண்டக்கூடாது.

*பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.



*தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.

*மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

சனி கிரஹ சாந்தி!
=================

யாரும் சனியோட கடுமையால் கடுமையாக
பாதிக்க படக் கூடாது என்பதற்காக மிக எளிய
பரிகாரம்...

சனிக்கிழமை அன்று பச்சரிசியை ஒரு
கையில் அள்ளி அரிசியாக அல்லது
அதை நன்கு பொடி செய்து
சூரியநமஸ்காரம் செய்து விட்டு, விநாயகப் பெருமானை மூன்று சுற்று சுற்றி விட்டு அந்த
அரிசியை விநாயகரை சுற்றிப் போட்டால்,அதை
எறும்பு தூக்கிச் செல்லும்.

அப்படித் தூக்கி சென்றாலே
நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய் விடும்.
வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் ,
அது இன்னும் விசேஷம்.
சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை
எறும்புகள் தமது மழை காலத்திற்காக
சேமித்து வைத்துக் கொள்ளும்.

எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.இந்த
பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு
இரண்டரை வருடங்கள்
எடுத்துக் கொள்ளும்.

இப்படி இரண்டே கால் வருடங்கள் வரை
எறும்புக் கூட்டில் இருப்பதை
முப்பத்து முக்கோடி தேவர்கள்
கவனித்துக் கொண்டிருப்பார்கள்.இரண்டரை
ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை
மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு
இழந்து போய் விடும்.இதனால், நாம்
அடிக்கடி பச்சரிசி மாவினை
எறும்புக்கு உணவாக போட வேண்டும்.
ஓர் எறும்பு சாப்பிட்டால் 108
பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.

எனவே இது எத்தனை புண்ணியம்
வாய்ந்த செயல் என்று தெரிந்து
கொள்ளுங்கள்.

இதனால்,சனிபகவானின் தொல்லைகள்
நம்மைத் தாக்காது.

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி,சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம்
ஆகும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

பாண்டவர்கள் ஐவர் என்பது தெரியும் பாண்டவர்களின் அன்னையான குந்திதேவிக்கு சூரியன் அருளால்
பிறந்தவர் கர்ணன் ஆக மொத்தம் ஆறு பேர்

கர்ணன் செஞ்சோற்று கடன் தீரவேண்டி கௌரவர்களுடன் இருந்து போரில் உயிர் விட்டான் அதன் பின்பு தான்
பாண்டவர்களுக்கே கர்ணன் தங்களது மூத்த சகோதரன் என்று தெரிந்தது

அவருக்கு மட்டுமல்ல ஆசாரியர் துரோணருக்கு சீடனாக கிருபர் சிஷ்யனாக போரில் தங்களால்
கொல்லபட்ட துரியோதணன் உட்பட நூறு கௌரவர்களுக்கும் அந்த வம்சத்தின் மூத்த அண்ணனாக இருந்து
தர்மர் அந்திமகாரியங்களை செய்தார்.

ஆனால் கௌரவர்கள் நூறுபேரும் குருச்சேத்திர யுத்தத்தில் மடித்த சில ஆண்டுகளில் இறந்து போன
அவர்களின் தந்தையான திருதராஷ்டிரனுக்கு அந்திம க்ரியை செய்தது கௌரவர்களில் ஒருவன் என்பது
தெரியுமா?

கௌரவர்கள் நூறுபேர் இறந்த பின் கௌரவரா என கேட்காதீர்கள் கௌரவர்கள் நூற்றொருவர் பின் அவர் ஏன்
மற்ற கௌரவர்களுக்கு அந்திம காரியம் செய்யவில்லை என்றால் அதுவும் காரணமாகவே

திருதுராஷ்ட்ரனின் பட்ட மகிஷி காந்தாரியின் மகன்களுக்கு அவர்களது சந்திகளுடன் போரில்
மரணமேற்பட்டதால் பாண்டுவின் மகன்களில் மூத்தவரான தர்மர் அந்திம காரியம் செயதார். தன் தாயின்
கர்பத்தில் உதித்தவர் ஆகையாலே்கர்ணனுக்கும் செய்தார்

ஆனால் திருத்ராஷ்ரனுக்கு அந்திம காரியம் செய்தது யுயுத்சு என்னும் கௌரவன்

யார் இந்த யுயுத்சு? இவன் எப்படி கௌரவர்களில் ஒருவன் ஏன் இவன் த்ருத்ராஷ்டனுக்கு மட்டும்
அந்திம க்ரியை செய்தான் என்கிறோம் என பார்ப்போம்

அதற்க்கு ஒரு சம்பவத்தை விளக்குகிறேன் உங்களுக்காக

குருசேத்ர யுத்தத்திற்காக
தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை எனப் பாண்டவர்களின் நால்வகைப் படைகள்
ஒருபுறம் நிற்க்க

எதிர்புறம் கௌரவர்களின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து ஒன்றுக்கொன்று எதிரெதிராக
நின்றிருந்தன.

இருபுறமும் மாபெரும் வீரர்கள் கூட்டம், கையில் வாளோடும் வேலோடும் வில், அம்பு கதை முதலிய
ஆயுதங்களோடும் போரிடத் தயாராய்த் துடிதுடிப்புடன் காத்திருந்தனர்

அதிவிரைவில் யுத்தம் தொடங்கப் போகிறது.

இடைபட்ட நேரத்தில்

அர்ச்சுனன் தன் தேர்த்தட்டில் சாரதியாக வீற்றிருந்த ஸ்ரீகிருஷ்ணனைப் பணிவோடு வணங்கி நேராக
பார்த்து மெல்லிய குரலில் உரிமையுடன் கேட்டான்:

‘‘கண்ணா! இதோ யுத்தம் தொடங்கப் போகிறது. எனக்கு உன்னிடமிருந்து தெளிவான பதில் தேவை.

கண்ணன் கேட்டான் என்ன கேள்விக்கு பதில் வேண்டும்
மீண்டும் கீதையில் ஏதேனும் சந்தேகமா? என்றான்

அர்சுனன் :- அது இல்லை கண்ணா இந்த போரில் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் தானே உன் கொள்கை?


அதாவது தீயவர்களை அழித்து அடியவர்களைக் காப்பாற்றுவது! சரிதானே அப்படியானால் கௌரவர்கள்
மொத்தபேரும் அழிவார்கள் அல்லவா?’’ என்றான்

கண்ணன்:- அர்ச்சுனா! நீ சொன்னதில் ஒரு பாதி சரி. ஒரு பாதி தவறு. தீயவர்களை அழிப்பேன்.
ஆனால், கௌரவர்கள் அத்தனை பேரும் அழிவார்கள் என்று சொல்ல முடியாது. கௌரவர்களில் நல்லவர்
யாரேனும் இருக்கலாம் அல்லவா?’’ என்றான்

அர்சுனன் துனுக்குற்று்

‘‘கௌரவர்களில் நல்லவரா? பீஷ்மர், துரோணர் கிருபர் சல்லியன் போன்ற நல்லவர்களெல்லாம் கூட,
கௌரவர்களோடு கூட்டு சேர்ந்ததால் அழியப் போகிறார்கள் என்கிறபோது கௌரவர்களில் யாரேனும் ஒரு
நல்லவன் இருந்தாலும் அவன் கௌரவர்களுடன் இருப்பதால் அழிய வேண்டியவன் தானே?
நூறு கௌரவர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள்தானே கண்ணா?’’ என்றான்

கண்ணன் கலகலவென நகைத்தான். ‘‘நூறு கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது சரியல்ல, அர்ச்சுனா!
கௌரவர்களில் நூறுபேர் அழிக்கப்படுவார்கள் என்பதே சரி,’’ என்று புதிராக பதில் சொன்னான்.

‘‘நீ சொல்வது புரியவில்லை கண்ணா!’’ என்றான் அர்சுனன்

கண்ணன் சொன்னார் பொறுத்திரு. புரியும்!’’

இவர்கள் இப்படிப் உரையாடிக் கொண்டிருந்த போது

தர்மபுத்ரன் யுத்த களத்தின் மையப் பகுதிக்கு வந்து நின்றார்.

ஏதோ முக்கியமாக ஒன்றை அறிவிக்கும் நோக்கில் வந்திருக்கிறார் என்பதை அவர் நின்ற தோரணையே
இருதரப்புக்கும் தெரிவித்தது.

இரு தரப்பு வீரர்களும் அமைதி காத்தனர்.

துரியோதனன் தர்மரையே் வெறித்துப் பார்த்தவாறு அவரது அறிவிப்பைக் கேட்கக் காத்திருந்தான்.

தர்மர் ஒரு அறிவிப்பை உரத்துச் சொல்லலானார்:
"வீரர்களே விரைவில் தர்மயுத்தம் தொடங்கவிருக்கிறது இப்போது நம் இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு
சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.

எங்கள் அணியிலிருந்து யாரேனும் கௌரவர்களான துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம்.

துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர்களான எங்கள் அணிக்கு வருவதானாலும் வரலாம்"

வீர்ர்களே எந்த அணியில் தர்ம நெறி மிகுந்து இருக்கிறது என்று கண்டுணர்ந்து அதன் பொருட்டுத்
தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விரும்பினால் இது கடைசி சந்தர்ப்பம். என்றான்

மேலும்

அப்படி அணி மாறுகிறவர்கள் மேல் இரு தரப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கலாகாது.

அப்படி்அணி மாறியவர்கள் அவரவர்கள் சார்ந்த புதிய அணியின் தரப்பிலேயே்போரிடுவார்கள்.’’ என
கம்பீரமாக அறிவித்து விட்டு

தர்மர் சற்று நேரம் அமைதியாய் காத்திருந்தார்.

அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் தர்மனின் அறிவிப்பைக் கேட்டு வியந்தார்கள்.

தர்மபுத்திரரின் அறிவிப்பு அவரது உயர்ந்த பண்பாட்டைப் இரு அணியினருக்கும் புலப்படுத்தியது

இந்தக் கடைசி சந்தர்ப்பத்தில் யாரேனும் கட்சி மாறுவார்களா என்ன? ( இன்றய அரசியல் சூழலை
நிணையாதீர்கள்)

தர்மர் தமது மாபெரும் படையைப் பார்த்தார். யாரும் இருந்த இடத்தை விட்டு ஒரு துளி அசைவையும்
காட்டவில்லை.

துரியோதனன் தரப்புப் படைவீரர்களைக் கேள்விக் குறியுடன் பார்த்தார் தர்மர்

என்ன ஆச்சரியம்! ஒரே ஒரு தேர் மட்டும் அதில் அமர்ந்திருந்த வீரனைத் தாங்கி கௌரவர் பக்கமிருந்து
பாண்டவர் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியது!

‘‘யார் அது, நம் தரப்பிலிருந்து பாண்டவர் தரப்பிற்கு கட்சி மாறுவது?’’ துரியோதனன் உரத்த
குரலில் கூச்சலிட்டான்.

அந்தத் தேரில் அமர்ந்திருந்த வீரனை நோக்கி அம்பெய்யவும் முற்பட்டான்.

பாண்டவர் அணிக்குச் செல்லும் வீரனை தொலைவிலிருந்தே உற்றுப் பார்த்தார் பிதாமகர் பீஷ்மர்.

கவசங்களால் உடல் மறைக்கப்பட்டு ஒரே மாதிரி உடை அணிந்த நிலையில் எல்லா வீரர்களும் ஏறக்குறைய
ஒன்றுபோல்தான் அவர் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.

என்றாலும் அவன் யார் என்பதை பீஷ்மரின் கூரிய விழிகள் கண்டுகொண்டு விட்டன.

அந்த வீரனை நோக்கி துரியோதனன் வில்லை வளைத்தபோது

"துரியோதனா, சற்றுப் பொறு!’’ என்று குறுக்கிட்டார் பீஷ்மர்.

‘‘அவனைப் போகவிடு. தர்மபுத்ரன் கட்சி மாறுபவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கலாகாது
என்றானே? அந்த வீரன் அவன் மனச்சாட்சிப்படி நடக்கிறான். நீ அவனை போகவிடு

நம் படை, அவன் ஒருவனை இழப்பதால் எந்த வகையிலும் வலிமை குறையப் போவதில்லை.

மேலும் நீ அவனை இப்போது கொல்வானேன்?

நம்மிலிருந்து வேறுபட்டுப் பாண்டவர் அணியில் சேர்ந்த வீரனை போர் தொடங்கியதும் நம் வீரர்களில்
ஒருவனாலேயே கொல்லப்படுவான்!

அதுவே அவனுக்கான நமது தண்டனை!’’ என்றார்,

பீஷ்மர் சொன்னதைக் கேட்டு துரியோதனன், அம்பைத் தன் அம்பறாத் தூணியில் செருகிக் கொண்டான்.

எதிரணியைச் சார்ந்த பீஷ்மரின் பேச்சைக் கேட்டு கண்ணன் முகத்தில் சிறு புன்முறுவல் படர்ந்தது.

கண்ணன் அர்ச்சுனனிடம் சொன்னான்: ‘‘பீஷ்மர் பெரும் வீரராக இருக்கலாம். ஆனால், முக்காலமும்
உணர்ந்தவரல்லர்அல்ல." என்றான்

"ஏன் அப்படிச் சொல்கிறாய் கண்ணா?’’ என்றான் அர்சுனன்

பின்னே?

இதோ நம் அணியில் சேர வருகிறானே அவன் ஒருவன்தான் போர் முடிந்த பின்னும் உயிர்
பிழைத்திருக்கப் போகும் ஒரே கௌரவ வீரன். அப்படியிருக்க அவன் கொல்லப்படுவான் என்கிறாரே பீஷ்மர்?
அவன் சாதாரணப் படைவீரன் அல்ல. கௌரவர்களில் ஒருவன்!’’ என்றான் கண்ணன்

கண்ணா என்ன சொல்லுகிறாய் அந்த வீரன் "கௌரவர்கள் நூறுபேரில் ஒருவனா?’’ என்றான்

கண்ணன் கூறினான் அர்ச்சுனா! கௌரவர்கள் மொத்தம் நூற்றியோரு பேர்.

நம் அணியில் சேர வருபவன் நூற்றியோரு பேரில் ஒருவன்.’’

கண்ணா எனக்கு ‘‘வியப்பாக இருக்கிறதே! இதுவரை கௌரவர் நூறுபேர் என்றுதான் நான்
அறிந்திருக்கிறேன்.’’ என்றான்

கண்ணனோ அர்சுனா

‘‘இந்த நூற்றியோராவது கௌரவனுக்கு கௌரவர்கள் உரிய கௌரவம் கொடுக்கவில்லை. அதற்கு ஒரு
காரணம் இருக்கிறது. அதைப் பிறகு சொல்கிறேன்.

நம் அணிக்கு வரும் இவனை நீயும் அறிவாய். நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஒருமுறை பீமனை
கொல்ல துரியோதனன் நீரில் நஞ்சு கலந்து கொடுக்க முற்பட்டானே, அப்போது அதை முன்கூட்டியே
பீமனுக்குத் தெரிவித்து பீமன் உயிரைக் காத்தவன் இவன்தான்.

இவன் தர்மநெறியிலிருந்து ஒரு சிறிதும் மாறாமல் இருப்பவன்.

அவனைப்போல் தர்மத்தை விடாமல் அனுசரிப்பவர்களுக்கு என்றும் என் துணை உண்டு.

இவனது உயிரை இறுதிவரை நான் காப்பேன்.

இவன் உயிரை நான் காப்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதையும் இன்றைய
போர் முடிந்த பிறகு சாவகாசமாகச் சொல்கிறேன்.

யுத்தம் தொடங்கவிருக்கிறது அர்ச்சுனா! நான் தேரைச் செலுத்தப் போகிறேன். நீ காண்டீபத்தை
எடுத்துக்கொண்டு தயாராகு.’’

என்றபடியே

கண்ணன் தேர்க் குதிரைகளின் லகானைப் பற்றி அதைச் சொடுக்கத் தயாரானான்.

தங்கள் அணிக்கு வந்துசேர்ந்த கௌரவனைப் பற்றிய நினைப்பு அர்ச்சுனன் மனத்திலிருந்து முற்றிலும்
விலகியது.

அவன் போரிடத் தயாரானான்... சூரியன் அஸ்தமனம் ஆனதும் முதல்நாள் போர் அவ்வளவில் முடிவடைந்தது.


மறுநாள் காலை போரில் மீண்டும் சந்திப்போம் என்று முழக்கமிட்டு, கௌரவர்களும், பாண்டவர்களும்
அவரவர் பாசறைக்குத் திரும்பினார்கள்.

பாண்டவர் அணியில் புதிதாய்ச் சேர்ந்த கௌரவ வீரனைத் தன்னுடன் அணைத்து அழைத்துக் கொண்டு
பாண்டவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான் ஸ்ரீகிருஷ்ணன்.

பஞ்ச பாண்டவர்கள் மட்டுமல்ல, அங்கே அவர்களது்மனைவி பாஞ்சாலியும் தாயார் குந்திதேவியும் கூட
அமர்ந்திருந்தார்கள்.

யுத்தம் எத்தனை நாள் நீடிக்குமோ என்ற கவலை குந்தியின் மனத்தில் கவலைரேகை படர்ந்திருந்ததை அவள்
முகம் கண்ணனுக்கு தெரிவித்தது.

தலைவிரி கோலமாக அமர்ந்திருந்த பாஞ்சாலியின் கண்கள் தன்னை அவமானபடுத்திய துச்சாதனன் மேலும்
துரியோதனன் மேலும் கொண்ட தாளாத கோபத்தால் சிவப்பேறியிருந்தன.

‘‘கண்ணா! வா வா!’’ என்று கண்ணனைப் பரவசத்தோடு வரவேற்றாள் குந்திதேவி. பாஞ்சாலியும் கண்ணனை
இன்முகம் பொங்க அழைத்தாள்.

கண்ணனையே சரணடைந்து வாழ்ந்த பாண்டவர்கள் கண்ணனுக்கு ஆசனம் அளித்து அமர வைத்தார்கள்.

தன்னுடன் வந்த கௌரவ வீரனைப் பிரியமாகத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான் கண்ணன்

குந்தி, கண்ணன் அழைத்து வந்த இளைஞனை தீவிரமாக ஆராய்ந்தாள்.

வசீகரமான தோற்றம் நற்குணங்களையே கடைப்பிடிப்பதால் வந்த பொலிவு அவன் முகத்தை மேலும்
அழகாக்கியிருந்தது.

கண்ணனே அழைத்து வந்திருப்பதால் மிக முக்கியமானவனாகத்தான் இருக்க வேண்டும். யார் இவன் தாயார்
கண்களாலே கேள்வி கேட்டாள்.

"இவன் கௌரவர்களில் ஒருவன்!’’ இதைக் கண்ணன் சொல்லி முடிப்பதற்குள்

பாஞ்சாலியின் சிவந்த கண்கள் மேலும் கூடுதலாகச் சிவந்தன

கண்ணன் சொன்னதைக் கேட்டு அவள் அமைதியானாள்.

‘‘இவன் கௌரவர்களை விட்டு விலகி நம் அணிக்கு வந்துவிட்டான்.

உண்மைஈன தர்மம் எங்கிருக்கிறதோ அதை உணர்ந்து கட்சி மாற விரும்புகிறவர்கள் மாறலாம் என்ற
தர்மனின் அறிவிப்பைக் கேட்டு இன்று காலை நம் கட்சிக்கு மாறிவிட்டான் இவன்!’’ என்றான் கண்ணன்
அப்படியே புதியவனின் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தான்.

புதியவன் குந்திதேவியின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான்.

குந்தி அவனைப் பிரியமாய்ப் பார்த்து மனமார ஆசீர்வதித்தாள்.

பாஞ்சாலியின் விழிகளில் மகிழ்ச்சி தோன்றியது.

‘‘உன் பெயர் என்ன மகனே?’’ குந்தி ஆதரவுடன் கேட்டாள்.

அவன் கம்பீரமாக பதிலளித்தான். ‘‘தர்மநெறி பிறழாமல் வாழும் ஐந்து புதல்வர்களைப் பெற்ற
பாக்கியசாலியான அன்னையே! என்னை யுயுத்சு என்று அழைப்பார்கள்!’’

யுயுத்சு! குந்தியின் மனம் அந்தப் பெயரைக் கேட்டதும் யோசனையில் ஆழ்ந்தது.

ஆம். காந்தாரி இவன் பெயரை ஒருமுறை குறிப்பிட்டு இவனைப் பற்றித் தன்னிடம்
அங்கலாய்த்திருக்கிறாள்.

பல காலம் முன்னால் நடந்த சம்பவம்
காந்தாரி அன்று இவனைக் குறித்து அங்கலாய்த்தது ஏன் என நினைவில்லை.

காந்தாரிக்கு இவனைப் பிடிக்கவில்லை என்ற உண்மை மட்டும் இன்றும் மனத்தில் தேங்கியிருக்கிறது.

அதுசரி. உண்மையில் யார் இவன்? அனைவர் கண்களும் அவனையே பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது


அர்ச்சுனன் குரல். ‘‘கண்ணா! இவன் கௌரவர்களில் ஒருவன் என்றாய். மற்ற கௌரவர்களால் இவன் உரிய
மதிப்புடன் நடத்தப்படவில்லை என்றும் சொன்னாய். இப்போது சொல்.

இவன் சரிதம் என்ன?

காந்தாரி பெற்ற கௌரவர்களில் ஒருவன் தானா இவனும்?’’ என்றான்

கண்ணனோ இவன் கௌரவர்களில் ஒருவன், அதாவது, திருதராஷ்டிரரின் மகன்.

ஆனால், காந்தாரியின் பிள்ளை அல்ல!’’ என்றான்

குந்தி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

அவளுக்குக் காந்தாரி இவனை ஏன் வெறுத்தாள் என்பது புரியத் தொடங்கியது.

கண்ணன் மேலும் விளக்கலானான்: ‘‘காந்தாரி கர்ப்பவதியாய் இருந்தபோது அவள் ஓய்வெடுக்க
வேண்டியிருந்தது. அதனால், கண்ணில்லாத திருதராஷ்டிரருக்குப் பணிவிடை செய்ய அமர்த்தப்பட்டாள்
சுகதா என்ற ஒரு பெண்.

அவளது பணிவிடையில் மகிழ்ந்த திருதராஷ்டிரரின் வற்புறுத்தலால் சற்று எல்லை மீறியதன்
விளைவுதான் யுயுத்சு.

யுயுத்சு தங்கள் தந்தைக்குப் பிறந்தவன் என்றாலும் பணிப்பெண்ணின் மகன் என்பதால் இவன் பிற
கௌரவர்களால் அலட்சியமாக நடத்தப்பட்டான்.

அதோடு விதுரனைப்போல் தர்ம நெறியிலேயே இவன் சிந்தனை சென்றதும்கூட, மற்ற கௌரவர்கள் இவனை
வெறுக்கக் காரணமாயிற்று.

தர்மநெறியைப் போற்றும் இவன் அதர்ம அணியில் தொடர்ந்து இருக்க விரும்பாததால் நம் அணிக்கு
வந்துவிட்டான்.’’ என்றார்

அதுசரி கண்ணா! எங்களைக் காப்பதுபோல இவன் உயிரையும் இறுதிவரை காப்பேன் என்றாயே? நீ அப்படிச்
சொன்னதன் பின்னணி என்ன?’’ அர்ச்சுனன் கேட்டான்.

‘‘அர்ச்சுனா! போரில் யுயுத்சுவைத் தவிர எஞ்சியுள்ள அத்தனை கௌரவ சகோதரர்களும்
அழிக்கப்படுவார்கள். போர் முடிந்து சிறிது காலத்திற்குப் பிறகு திருதராஷ்டிரனும்
காலமாவான்.

மாமன்னன் திருதராஷ்டிரன் காலமாகும்போது, அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரே ஒரு பிள்ளையாவது
மிஞ்ச வேண்டாமா? இதோ இந்த யுயுத்சு தான் திருதராஷ்டிரனுக்கு இறுதிக் கடன் செய்யப் போகிற
அந்த ஒரே பிள்ளை!’’

இந்தச் செய்திகளைக் கேட்டு குந்தி ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள். ‘‘கௌரவ சகோதரர்கள் நூறுபேர் அல்ல,
நூற்றியோரு பேர் என்று திடீரென்று வெளிப்பட்ட இந்த உண்மை எனக்கு வியப்பாக இருக்கிறது!’’
என்றாள் அவள்.

அவளை பாண்டவர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.

யுதிஷ்டிரர் யுயுத்சுவை இழுத்து அணைத்துக் கொள்ள, பிற பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன்
அவனைத் தட்டிக்கொடுத்தார்கள்.

கண்ணனின் தயவால் தர்மம் வென்றது.

பின்னொருநாள் த்ருத்ராஷ்ட்ரன் மறைந்த பின் யுயுத்சு தன் தகப்பனாருக்கான அந்திம கடனை கண்ணன்
விருப்பப் படியே செய்தான்

நாமும் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூயோமாய் தொழுது நம் துயரம் தீர்போமாக!!

சர்வம்
கிருஷ்ணார்பனமஸ்து!!

ஜெய் ஶ்ரீராம்!!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share
courtesy Shri Mohan Ramaiah Avl

Hanumath prabhaavam

சுந்தரகாண்டத்தோட முதல் ஸர்கத்துல ஹனுமான் ஆகாசத்துல பறக்க போறார். அப்போஒரு ஸ்லோகம் சொல்றார்.
यथा राघवनिर्मुक्तः शरः श्वसनविक्रमः। गच्छेत्तद्वद्गमिष्यामि लङ्कां रावणपालिताम्।।5.1.40।।
யதா ராகவ நிர்முக்தஹ ஷரஹ ச்வஷன விக்ரமஹ |
கச்சேத் தத்வத் கமிஷ்யாமி லங்காம் ராவணன் பாலிதாம் || அப்படினு சொல்றார்.
இந்த ஸ்லோகம் ரொமப ஒரு விசேஷமான ஸ்லோகம். கடற்கரையில வானரா எல்லாம் இருக்கா. அந்த ஸ்வயம்பிரபா என்கிற ஒரு தபஸ்வி, யோகினி அவாளை குஹைக்குள்ளேருந்து வெளியில கொண்டு வந்து விடறா. பார்த்தா வசந்தகாலமே வந்துடுத்து. ‘இனிமே திரும்பிப்போனா, சுக்ரீவன் தண்டிப்பான். ஒரு மாசத்துக்குள்ள திரும்ப வரணும்’னு சொல்லி இருக்கான், அப்படின்னு விசன பட்டுண்டு, அங்கதன் தான், அந்த தெற்கு திக்குல வந்த வானராலுக்கெல்லாம் லீடர். அவன் ‘நான் உயிரை விடப்போறேன். நான் ஒண்ணும் திரும்பி போக போறதில்லை’ அப்படின்னு சொல்லி, ப்ரயாயோபவேசம் பண்றா. படுத்துண்டு உயிரை விடலாம் அப்படின்னு முடிவே பண்ணிடறா.
அப்போ அங்க மலைமேலேருந்து சம்பாதிங்கற கழுகு இவாளை பாக்கறது. அது நெனச்சிக்கறது ‘ஆஹா பகவான் எப்படியெல்லாம் சாப்பாடுக்கு வழி பண்றார் பாரு! நம்மால பறக்க முடியாம இறக்கையில்லாம இருக்கோம். இங்க கொஞ்சம் பேரை கூட்டிண்டு வந்து, அவா ‘நாங்க உயிரைவிடபோறோம்’ ன்னு சொல்றா. ஒண்ணு மூணு மாசம் தாங்கும். ஒண்ணு ஆறு மாசம் தாங்கும். நமக்கு சாப்பாட்டுக்கு வழியாச்சு’ அப்படின்னு நினைக்கறது ஸம்பாதி கழுகு.
அப்போ இந்த கழுகு வந்து நிக்கறதை பார்த்த உடனே அங்கதனுக்கு இன்னுமே ரொம்ப ஆயாசமாறது. ‘என்னடா இது. நாம உயிரை விடப்போறோம்னு சொன்ன உடனே, அதுக்குள்ள சாப்பிடறத்துக்கு கழுகு வரது’ அப்படின்னு சொல்லி அவன் பொலம்பலோட சேர்ந்து பொலம்பறான். “அன்னிக்கு ராமனுக்காக ஜடாயுங்கிற கழுகு உயிரவிட்டுது! இன்னிக்கு நாம வானரா எல்லாம் உயிரை விடப் போறோம். அப்படி ராம கார்யத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம். உயிரையும் விடலாம். ராமர் அவ்வளோ பெரியவர்!” அப்படி எல்லாம் சொல்லிண்டு வரான். இதை கேட்ட உடனே அந்த சம்பாதி “ஆஹா, என்னது ராமருக்காக ஜடாயு உயிரை விட்டானா ! யாரு? எப்படி? ஜடாயு என் தம்பியாச்சே! விஸ்தாரமா சொல்லுங்கோ” என்று கேட்கிறது.
அங்கதன் பதில் சொல்றான். ஆனால் அவனுக்கு நம்பிக்கை இல்லை. இந்த கழுகு நம்மை சாப்படறதுக்காக ஏதோ பேச்சு கொடுத்து பாக்கறது ன்னு நினைக்கிறான். இருந்தாலும் சொல்லி வைப்போமே உயிர விடப்போறோம். கழுகு நம்மை சாப்ட்டா சாப்பிட்டு போட்டுமே” னு சொல்லி பாதி நம்பிக்கையோட இவனும் சொல்றான். அப்படி இவா ரெண்டுபேர் ஒண்ணும் close friends கிடையாது. அப்படி இருந்தாலுமே ராமகதையை சொன்னா ரெண்டு பேருக்கும் க்ஷேமம் ஏற்படும் அப்படினு ஸ்வாமிகள் சொல்வார். அந்த ராமகதைய சொல்றான்.
“தசரத மஹாராஜாவோட பிள்ளை ராமர் காட்டுக்கு வந்தார். அவருடைய மனைவி சீதாதேவியை ராவணன் ஜடாயுவை வதம் பண்ணிவிட்டு அபஹரித்து கொண்டு போய்ட்டான். நாங்கள்லாம் சீதையை தேடி வந்துருக்கோம்னு” சொன்னனோடனே “ஆஹா! அந்த ஜடாயு என் தம்பி” அப்படினு அது தன்னுடைய வ்ருத்தாந்தத்தை சொல்றது. அப்பறம் சம்பாதி “இங்கிருந்தே நான் உங்களுக்கு பாத்து சொல்றேன். எங்களுக்கு தீர்கமான பார்வையுண்டு” என்று சொல்லி “கடலுக்குள் நூறு யோஜனை தள்ளி இலங்கைனு ஒரு தீவு இருக்கு. அதுல சீதையிருக்கா” அப்படின்னு சொன்ன உடனே அதுக்கு இறக்கை மொளைக்கறது, அப்படி இவாளுக்கும் வழிகிடைக்கிறது சீதை எங்கேயிருக்காங்கற குறிப்பு கிடைக்கறது. அந்த சம்பாதிக்கும் இறக்கை மொளைக்கறது. அப்படி ராம கதைய நம்பிக்கையிருந்தோ, நம்பிக்கையில்லாதவாளுக்கோ, நல்லவாளுக்கோ, கெட்டவாளுக்கோ, ராமகதைய சொன்னா க்ஷேமம்தான் ஏற்படும் ஸ்வாமிகள் சொல்வார்.
அப்படி ராமாயணத்தை சொல்லி இவா ரெண்டு பேருக்கும் வழி கிடைக்கிறது. அந்த சம்பாதி இறக்கை முளைச்சு பறந்து போயிடறது. இப்போ வானரா எல்லாரும் உட்கார்ந்து “யாரால நூறு யோஜனை கடலைத் தாண்டமுடியும்?” அப்படினு கவலைப்படும்போது, ஒவ்வொருத்தரும் என்னால பத்து யோஜனை முடியும். இருவது யோஜனை முடியும்ங்கறா. ஜாம்பவான் “முன்ன என்னால நூறு யோஜனை தாண்ட முடியும். ஆனா இப்போ வயசாயிடுத்து தொண்ணூறு தான் முடியும்” அப்படின்னு சொன்னபோது, அங்கதன் “என்னால நூறு யோஜனை தாண்ட முடியும். ஆனா திரும்பியும் நூறு யோஜனை தாண்டி இங்க வருவேனா தெரியலை” என்கிறான். அப்போ ஜாம்பவான் சொல்றார் “நீ வாலிபுத்ரன் ஆயிரம் யோஜனைக்கூட தாண்டுவாய். இருந்தாலும் நீதான் இந்த சேனைக்கு தலைமையில் இருக்க. அதனால உன்ன அனுப்பபடாது. ஒரு leaderஐ முன்ன அனுப்பிச்சிட்டு followers எல்லாம் பின்னாடி உட்கார்றதுங்கிறது சரியில்லை” என்கிறார்.
திரும்பவும் “என்ன பண்றது இப்போ” அப்படின்னு அங்கதன் கவலைப்படறான்.
அப்போ ஜாம்பவான் “இந்த காரியத்தை யார் பண்ணுவா எனக்கு தெரியும். அதோ அங்கே அமைதியாக உட்கார்ந்து இருக்காரே அந்த ஹனுமாரை போய் நாமெல்லாம் உத்சாகப் படுத்துவோம். அவருடைய பலம் அவருக்கு தெரியாது. நாம் சொன்னால் அவருக்கு ஞாபகம் வரும்” னு சொல்லி, எல்லாருமா போய் ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்றா. இந்த இடத்துல ஹனுமாரை வானரா எல்லாருமா ஸ்தோத்ரம் பண்றா, அவர் வானளவுக்கு வளர்ந்தார். அப்படிங்கிறத சொல்லும்போது ஸ்வாமிகள் ஹநுமத் பஞ்சரத்னத்தை ஒருவாட்டி சொல்லுவார்.
ஹனுமத் பஞ்சரத்னம் (Audio link to Hanumath Pancharathnam)

சொல்லிட்டு, “யாராவது ஏதாவது ஹனுமாரை பிராத்தனை பண்ணினோம் என்றால் நிறைய நிறைய ஸ்தோத்ரம் பண்ண பண்ண அவர் நிறைய அனுக்ரகம் பண்ணுவார். அதிகஸ்ய அதிகம் பலம். அதனால நூத்தியெட்டு ஆவர்த்தி ஹநுமத்பஞ்சரத்னம் ஜபம் பண்ணுங்கோ. அப்போ ஹனுமார் பெரிசா வளர்ந்து நிறைய அனுக்கிரஹம் பண்ணுவார்” அப்டின்னு சொல்லுவார் அந்தமாதிரி ஹநுமத் பஞ்சரத்னம் சொல்லி ஹனுமார ஸ்தோத்ரம் பண்ண பண்ண அவர் வளருகிறார்.
அவர் பெருமையை ஜாம்பவான் சொல்றார் “நீ வாயுகுமாரன்! உன்னுடைய கைகள்ல கருடனுடைய பக்ஷங்கள்ல எவ்வளவு பலம் இருக்கோ, இறக்கைகள்ள எவ்வளவு பலம் இருக்கோ அவ்வளவு பலம் உன் கைகளில் இருக்கு. உன்னால வாயு மாதிரி ஆகாசத்தில் போக முடியும். நீ தான் இந்த கார்யத்தை எங்களுக்காக பண்ணனும். எங்க எல்லரோட உயிரும் இப்போ உன் கிட்ட தான் இருக்கு. ஹே ஹனுமான் நீ இதை பண்ணு. நாங்க எல்லாரும் ஒத்தக்கால்ல நிண்ணுண்டு உனக்காக பிரார்த்தனை பண்றோம்” அப்படினு ஜாம்பவான் உத்சாக படுத்தறார். ஹனுமாரும் “ஆமாம்! என்னால முடியும். இப்போ எனக்கு தெரியறது!” அப்படினு சொல்றார். “இந்த மஹேந்திர மலைல ஏறி நான் ஆகாசத்தில் பாய்கிறேன். இந்த பூமில நிண்ணுண்டு நான் வானத்துல பாய்ந்தால் பூகம்பமே வந்துவிடும். அதனால நான் மலைமேல ஏறிண்டு தாவுகிறேன்” அப்படினு அந்த மலைமேல ஏறிண்டு ஆகாசத்துல தாவ போகும்போது இந்த “யதா ராகவ நிர்முக்த:” ஸ்லோகத்தை சொல்றார்.
அந்த சுந்தரகாண்டத்தோட முதல் ஸ்லோகம் ततो रावणनीतायाः सीतायाः शत्रुकर्शनः। इयेष पदमन्वेष्टुं चारणाचरिते पथि।।
“ததோ ராவணநீதாயா: ஸீதாயா: ஷத்ருகர்ஷந: | இயேஷ பத்மந்வேஷ்டும் சாரணா சரிதே பதி || அப்படினு தயராகி விடுகிறார் ஹனுமார் அப்படினு அந்த first-ஸ்லோகத்தோட ஆரம்பிக்கறது.
இந்த நாப்பதாவது ஸ்லோகம் “யதா ராகவ நிர்முக்த: ஷர: எப்படி ராமர் கையினால் விடப்பட்ட பாணம் நிக்காமல் போகுமோ, பராக்ரமத்தோட, வாயு வேகத்தோடபோகுமோ, எப்படி இலக்கை அடையுமோ, அந்த மாதரி நான் இப்போ ஆகாஷத்துல போய் லங்கைல குதிப்பேன். அங்க சீதை எங்கயிருக்கான்னு கண்டுபிடிச்சிண்டு வருவேன். அங்க இல்லேன்னா மூவுலகத்திலயும் தேடி கண்டுபிடிச்சிண்டு வருவேன். ராவணனனை கட்டி இழுத்துண்டு வருவேன். அப்படினு ஒரு ப்ரதிஞை பன்னிட்டு ஆகாஷத்துல போறார்.
அப்படி அவர் சொன்ன அந்த ஸ்லோகம்

यथा राघवनिर्मुक्तः शरः श्वसनविक्रमः। गच्छेत्तद्वद्गमिष्यामि लङ्कां रावणपालिताम्।। அப்படினு சொல்றார்.

இதுல விசேஷம் என்னன்னா, ஹனுமார் தன்னால எதுவும் நடக்கறதுனே நினைக்கல. அதனால தான் அவர் அவளோ அபாரமான காரியங்களையெல்லாம் பண்ணிட்டு வந்தார். ஒரு அம்பு தானா போக முடியுமோ?ஒருத்தர் ஏவி விட்டதானே போகமுடியும்? அந்தமாதிரி ராமரோட அம்பு மாதிரி நான் போவேன் அப்படினா என்ன அர்த்தம் “நிமித்தமாத்ரம் பவ சவ்யசாசின்” னு அப்படினு கிருஷ்ணர் அர்ஜுனன் கிட்ட சொன்ன மாதிரி “நீ வெறும் என் கையில் ஒரு கருவி தான். நான் தான் எல்லாத்தையும் நடத்துறேன். நீ இவ்வளவு தூரம் கவலையே படவேண்டியதில்லை. உன் காரியத்தை, கடமையை நீ பண்ணு” அப்படின்னு சொல்லறார். அந்த மாதிரி ஹனுமார் ராமர்ட்ட அன்னிக்கு கிஷ்கிந்தா காண்டதோட ஆரம்பத்துல நமஸ்காரம் பண்ணி ராமரை பாத்தபோதே தன்னை ஒப்படைச்சுண்டார். ராமதூதனாயிருந்து அபாரமான கார்யங்கள்லாம் பண்றார். “ந ராவண சஹஸ்ரம் மே யூத்தே பிரதிபலம் பவேத்” அப்படிங்கறார். ஆயிரம் ராவணர்கள் வந்தாலும் யுத்தத்தில் என் முன்னாடி நிக்க முடியாது. நான் ராமதாசன்” அப்படினு கர்ஜிக்கறார். அப்பேற்பட்ட பலம் அவருக்கு எங்கேர்ந்து வந்ததுன்னா? “எனக்கொண்ணும் பலம் இல்லை. ராமரோட பலத்தினால இதல்லாம் நான் பண்ணுவேன்” அப்படிங்கற அந்த எண்ணத்துனால வந்தது. “ராமர் கையில ஒரு பாணம் மாதிரி நான்” அப்படின்னு நினைக்கிறார்.
அப்படி சொல்லிட்டு ஆகாசத்துல கிளம்புகிறார். சொன்ன வார்த்தை “நிக்கமால் போவேங்கிறது” சும்மா ஒரு ஸ்டாண்டுக்காக சொல்லலை. வழில ஒரு தங்க மலை கடலுக்கு உள்ளேர்ந்து வர்றது மைனகமலைனு. அந்த ஸமுத்ரராஜா மைனாக மலை கிட்ட சொல்றார். “இந்த ஹனுமார் ராம கார்யமா போறார். இவருக்கு நாம உதவி பண்ணனும். நீ வெளியில வா. உன்மேல உட்காந்துண்டு, ஆஹாரம் பண்ணிட்டு பழங்கள்லாம் கொடு. சாப்டுட்டு அவர் போட்டும்” அப்படின்னு அந்த சமுத்திரராஜா சொல்லறார்.
உடனே மைனகமலை மேல வந்து அது ஹநுமார்க்கிட்ட சொல்லறது “ஹே ஹநுமான்! எனக்கும் நீ ரொம்ப வேண்டியவன். ஏன்னா உங்கப்பா வாயுபகவான் இந்திரன் மலைகளோட இறக்கைகளை வெட்டும்போது, என்னைக் கொண்டுவந்து இந்தக்கடல்ல தள்ளி என் இறக்கைகளை காப்பாத்தினார். அதனால அப்பாவுக்கு பண்ற நன்றியை பிள்ளைக்கு பண்ணலாம். அதனால என்மேல உட்கார்ந்து விஷ்ராந்தி பண்ணிட்டுப்போ” உனக்கு சாப்பிடறதுக்கு பழங்களும் கிழங்குகளும் தரேன்” அப்படினு சொல்றது. ஸ்வாமிகள் சொல்லுவார் Water water everywhere not a drop to drink அப்படினு கடலைப்பத்தி சொல்லுவா அப்பேற்பட்ட கடலுக்கு நடுவுல போயிண்டிருக்கும் போது, ராம கார்யம் பண்றதுனால ஹனுமாருக்கு சாப்பாடு கிடைக்கிறது. அப்படினா சுந்தரகாண்டத்தை படிக்கிறவாளுக்கு சாப்பாடு கவலையே கிடையாது. எப்படியாவது சாப்பாடு கிடைக்கும். எங்கிருந்தாவது சாப்பாடு கிடைக்கும் அப்படினு சொல்லுவார்.
அப்படி அந்த offer பண்ணும்போது அங்க ஹனுமார் சொல்றார் “நான் வழியில் நிற்காமல் லங்கைல போய் குதிச்சு சீதைய தேடுவேன்” னு என் நண்பர்களுக்கு வாக்கு குடுத்துட்டு கிளம்பிருக்கேன். அதனால என்னால இப்போ நிக்கமுடியாது. என்னோட அப்பாவோட நண்பர்னு சொல்ரேள். அதனால உங்கள பாத்ததே என்னக்கு ரொம்ப சந்தோஷம்” னு அவரை கட்டிண்டு அவருக்கு வணக்கத்தை சொல்லிட்டு ஹனுமார் போயிண்டேயிருக்கார். அப்பறம் சுரசை எங்கிற நாகமாதாவை பாக்கறார். அப்பறம் ஸிம்ஹிகை எங்கிற நிழலைபிடிச்சு இழுக்கிறவளை வதம் பண்ணிட்டு, அப்பறம் போய் லங்கைல குதிக்கிறார்.
இந்த மைனாக மலை ராமகரியத்துக்கு எத்கிஞ்சித் பண்ண நினைச்சதுக்கே, அதுக்கு ஒரு பெரிய நன்மை ஏற்பட்டது. இந்திரன் அங்கே வரான். “ராமகார்யமா ஹனுமார் போயிண்டிருக்கார். அவருக்கு ஸஹாயம் பண்றேன்ன்னு வந்தியோ இல்லியோ, அதுனால என்கிட்டேர்ந்து இனிமே நீ பயப்பட வேண்டாம். நான் உன் இறக்கைய வெட்டமாட்டேன். ஆனா பூமில வந்து எங்கயாவது உட்காராதே ஜனங்களாம் கஷ்டப்படுவா. அதனால இந்தக் கடலுக்குள்ள எங்க வேணும்னாலும் போயிக்கோ. கடலுக்கடியில எப்பப்பாத்தாலும் பயந்து ஒளிஞ்சிண்டு இருக்கணும்னு இல்ல. நிம்மதியா கடல்ல சஞ்சாரம் பண்ணிண்டிரு” அப்படினு ஒரு வரம் கொடுக்கிறார். இதோட விஷேஷம் என்னன்னா ஸ்வாமிகள் சொல்வார் “நாம் சிற்றின்ப கடல்ல மூழ்கியிருந்தாலும் ராம கார்யமா எத்கிஞ்சித் உபகாரம் பண்ணாகூட பெரிய அபயம் கிடைக்கும்” அப்படினு சொல்லுவார்.

எப்படி ராம பாணம், வாயு வேகமா, எங்கும் நிற்காமல் போயி இலக்கை அடையுமோ, அப்படி நான் இங்கிருந்து கிளம்பி, ஆகாச மார்க்கமாய் போயி இலங்கையில் குதிப்பேன். அங்க சீதா தேவியை தேடிப் பார்த்து எங்க இருக்கான்னு தெரிஞ்சுண்டு வருவேன். அப்டீன்னு ஹனுமார். தன்னுடைய தோழர்களுக்கு வாக்கு கொடுத்துட்டு ஆகாசத்துல கிளம்பறார். ஸ்வாமிகள், ஏக ஸ்லோக சுந்தர காண்டம், ஒரு ஸ்லோகத்துல சுந்தர காண்டம் அப்படீன்னு, ராகவேந்திர ஸ்வாமிகள், திருவல்லி கேணியில கூட அவரோட பிருந்தாவனம் இருக்கே. அந்த, அந்த ராகவேந்திர ஸ்வாமிகள் பண்ணின ஒரு ஸ்லோகம் இருக்கு. ஏக ஸ்லோக சுந்தர காண்டம் அப்படீன்னு, அதோட தாத்பரியமும், இதே மாதிரி, ராமரோட அனுக்ருஹத்துனாலதான், ஹனுமார், இவ்வளவு பெரிய கார்யங்களை எல்லாம் பண்ணி முடிச்சார், அப்டீங்கிறதுதான் அந்த ஸ்லோகத்தோட தாத்பர்யம். அந்த ஸ்லோகத்தை நான் உங்களுக்கு சொல்றேன்.

यस्य श्री हनुमान् अनुग्रह बलात् तीर्णांबुधिर्लीलया लङ्कां प्राप्य निशाम्य रामदयितां भङ्क्त्वा वनं राक्षसान् |

अक्षादीन् विनिहत्य वीक्ष्य दशकम् दघ्द्वा पुरीं तां पुन: तीर्णाब्धि: कपिभिर्युतो यमनमत् तं रामचन्द्रं भजे ||

யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா

லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராம தயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் |

அக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்ய தசகம் தக்த்வா புரீம் தாம் புந:

தீர்ணாப்தி: கபிபிர்யுதோ யம் அனமத் தம் ராமச்சந்த்ரம் பஜே ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம். எவருடைய அனுக்ரஹ பலத்தினால், ஸ்ரீ ஹனுமார், கடலை விளையாட்டாக கடந்து, இலங்கையை அடைந்து, ராமருடைய பிரிய மனைவியான சீதா தேவியை பார்த்து, அறுதல் சொல்லி, ராவணனுடைய அசோக வனத்தை அழித்து, அக்ஷன் முதலான ராக்ஷதர்களை வதம் செய்து, தசக்ரீவனான ராவணனைப் பார்த்து, அவனுக்கு நல்ல புத்தி சொல்லி, அவன் கேட்காமல், ஹனுமாருடைய வாலில் தீ வெச்ச போது, அந்த தீயினாலையே, இலங்கையை எரித்து விட்டு, மீண்டும் கடலை கடந்து, வானரர்களோடு வந்து, எந்த ராமரை வணங்கினாரோ, எவருடைய அனுக்ரஹ பலத்தினால், இங்கே இருந்து கிளம்பி, இவ்வளவு கார்யங்களையும் பராக்ரமத்தோட பண்ணி முடித்து, மீண்டும் வந்து வானரர்களோடு கூட ராமரை வணங்கி, சீதா தேவியோட சூடாமணியை கொடுத்து, அவர் மனசை சந்தோஷப் படுத்தினாரோ, அந்த ராமரை பஜிக்கிறேன். தம் ராமச்சந்திரே பஜேஹம்னு முடியறது, ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம்.

यस्य श्री हनुमान् अनुग्रह बलात् तीर्णांबुधिर्लीलया लङ्कां प्राप्य निशाम्य रामदयितां भङ्क्त्वा वनं राक्षसान् |

अक्षादीन् विनिहत्य वीक्ष्य दशकम् दघ्द्वा पुरीं तां पुन: तीर्णाब्धि: कपिभिर्युतो यमनमत् तं रामचन्द्रं भजे ||

நேத்திக்கு தான் கேள்வி பட்டேன், இந்த ஸ்லோகத்தை ஸ்வாமிகள் ஒருத்தர்கிட்ட, இதை தினம் இருவத்தொரு ஆவர்த்தி சொல்லி, நாற்பதெட்டு நாட்களில் ஒரு ஆயிரத்தெட்டு ஆவர்த்தி பண்ணு, அப்படீன்னு சொல்லி இருக்கார். அந்த அளவுக்கு இந்த ஸ்லோகத்துக்கு ஸ்வாமிகள் முக்யத்வம் தந்துருக்கார்னு, இதை உங்க கிட்ட இன்னிக்கு பகிர்ந்துண்டேன்.


--

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

ஒரு பகிர்வு .

அனுமத் பிரபாவம்

Jai bolo Hanumanaki

அங்க மலை மேலேர்ந்து சுக்ரீவன் இவாளை பார்க்கறான். லக்ஷ்மணர் ராமரரை protect பண்ணி, அழைச்சிண்டு வந்துண்டுருக்கார். இவா ரெண்டு பேரையும் பாத்தாலே எட்டடிக்கு ஆஜானுபாஹுவாக கையில பெரிய வில்லும், முதுகுல அம்புறாத் தூணியில, ஸர்பங்களை போன்ற பாணங்களை வெச்சிண்டு, இவா வருவதை பார்த்தவுடன், சுக்ரீவன் நடுங்கி போயிடறான். மலையின் ஒரு சிகரத்துலேர்ந்து இன்னொரு சிகரத்துக்கு தாவி குதிச்சு ஓடறான். ஹனுமார் பின்னாடி ஓடறார் “என்ன? என்ன? பயப்படரே?” என்று கேட்கிறார். சுக்ரீவன் “அவாளை பாத்தாலே உனக்கு பயமாயில்லையா?” என்கிறான். “நீ யாரைப் பார்த்தாலும் பயப்படுவியா?”ன்னு கேட்கறார் ஹனுமார். “நீ ராஜா ஆகணும்னு ஆசைப் படற! வாலி வந்தா பயப்படணும், யாரைப் பார்த்தாலும் பயப்படறியே” அப்படின்னு கேட்கறார், அப்போ சுக்ரீவன் “இல்லை, இவா வாலி அனுப்பிச்ச ஆட்களா இருப்பாளோ, அப்படினு நெனைச்சு பயப்படறேன்” அப்படிங்கிறான். அப்பறம், சுக்ரீவன் சொல்றான், “உனக்கு அப்போ தைரியம் இருக்கு போலிருக்கு, நீ போய், இவா யாருன்னு பாத்து பேசி, நல்லவளாயிருந்தா, என்கிட்ட அழைச்சிண்டுவா” அப்படினு சொல்றான். “நீ பிக்ஷு ரூபத்துல போ” அப்படினு சொல்றான்.

ஹனுமார் சுக்ரீவனோட மந்த்ரி, சரின்னு அவன் சொன்னதை கேட்டுண்டு பிக்ஷு ரூபத்துல போய், ராம லக்ஷ்மணாள பாத்து, ரொம்ப விநயமா நமஸ்காரம் பண்ணி, “நீங்க ரெண்டு பேரும் யாரு? உங்கள பாத்தா, ராஜகுமாரர்கள் மாதிரி இருக்கேள், ஆனா, மரவுரி, மான்தோல், ஜடாமுடி போட்டுண்டு ரிஷிகளைப் போலவும் தெரிகிறீர்கள். நீங்க எங்க இங்க இந்த காட்டுக்கு வந்தேள்? உங்க ரெண்டு பேரையும் பார்த்தா சந்தரசூர்யர்களே, பூமிக்கு இறங்கி வந்தா மாதிரி அவ்வளவு தேஜஸா இருக்கேள், உங்களுடைய ஒளியினால் இந்த மலையே ஒளிவிடறது. உங்களுடைய அழகு இந்த பம்பா ஏரியில பிரதிபலிக்கறது”, அப்படினு ஹனுமார் ரொம்ப அழகான வார்த்தைகள் சொல்றார்.

இந்த ஹனுமார் பேசின அழகு வந்து, அவர் பேசின வார்த்தைகள்ல மட்டும் இல்லை. ராமர் அதைக் கேட்ட பின்ன அந்த பேச்சைஅப்படி கொண்டாறார். “என்னமா பேசறான்! என்ன அழகா பேசறான்”, அப்படின்னு கொண்டாடுவதை வெச்சிண்டு பார்த்தால், இந்த ஹனுமார் பேசின வார்த்தைகள்ல மட்டும் அழகில்லை. அவர் பேசின விதத்துல தான் அந்த அழகேயிருக்கு, அப்படிங்கிறது தெரியறது. எனக்கு வந்து இது மஹாபெரியவா பேச்சு போலேயும், ஸ்வாமிகள் ராமாயணம் சொல்றது போலயும், ஸ்லோகங்களை படிக்கறது மாதிரி இருந்திருக்கும் னு தோணறது. அந்த மாதிரி, இனிமைனா எனக்கு அது தான் ஞாபகம் வறது.

அந்த சொன்ன விஷயங்கள்ல ரொம்ப அழகா இருக்கறது ஒண்ணு வந்து, “நீங்க ரெண்டுபேரும் சிம்மத்தைபோல தேஜஸோட இருக்கிறீர்கள், நீங்க ரிஷபத்தைப் போல நடந்து வருகிறீர்கள்”, அப்படின்னுல்லாம் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணிட்டு, அப்பறம், ஹனுமார், “ஏதோ தேடிண்டே வரேளே, ஏதாவது தொலைச்சிட்டு தேடரேளா?” அப்படின்னு கேக்கறார். அப்படி keen observation. இதுக்கு நடுவுல ஒண்ணு சொல்றார்,

आयताश्च सुवृत्ताश्च बाहवः परिघोपमाः ।

सर्वभूषणभूषार्हाः किमर्थं न विभूषिताः ।।

“ஆயாதாஸ்ச ஸுவ்ருத்தாஸ்ச பாஹவஹ பரிகோபமாஹா” உங்களுடைய கைகள், நீளமா இருக்கு, ரொம்ப பருமனாக இருக்கு, ரொம்ப weightஆ இருக்கு , நல்ல பலசாலிகளோட, மல்லர்களோட கைகள் மாதிரி இருக்கு, இரும்பு போல இருக்கு உங்களுடைய கைகள், உங்களுடைய தோள்கள் “ஸர்வ பூஷண பூஷார்ஹாஹா கிமர்த்தம் ந விபூஷிதஹா” உங்களுடைய தோள்கள் தங்க ஆபரணங்களும் மாலைகளும் போட்டும் அலங்காரம் பண்ணணும், அவ்வளோ அழகாயிருக்கு உங்க தோள்கள், “உபௌ யோக்யவ் அஹம் மன்யே, ரக்ஷிதும் ப்ரித்திவீம் இமாம்” இந்த பூமியையே உங்களோட கைகளும், தோள்களும், காப்பாத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த தோள்கள் ஏன் அலங்காரம் இல்லாம இருக்கு? ஏன் நீங்க, ரிஷிகள போல, யோகிகளைப் போல வந்துண்டுஇருக்கேள்? அப்படினு கேட்கறார், அப்பறம், அவர் வேஷம் போட்டுண்டு வந்தாலும், ராமனை பார்த்த உடனே, ராமனுக்கு பக்தன் ஆயிடறார், ராமதாஸன் ஆயிடறார். அதே மாதிரி, இலங்கையில் சீதாதேவியை பார்த்த உடனெ அவளை பணிஞ்சு அவளுக்கு பக்தன் ஆயிடறார், அந்த மாதிரி இங்க ராமர் கிட்டே, “சுக்ரீவன் எங்கிற வானர ராஜா, இந்த ரிஷ்யமூக மலைல இருக்கான், நான் அவனுடைய மந்த்ரி, அவன் என்னை வேஷம் போட்டுண்டு போன்னு சொன்னதுனால, நான் இப்படி ஒரு வேஷத்துல வந்துருக்கேன், நான் ஒரு வானரம்” அப்படினு சொல்லிட்றார்

இந்த “ஸர்வ பூஷண பூஷார்ஹாஹா கிமர்த்தம் நீ விபூஷிதஹா”

இந்த உலகத்தையே கட்டி ஆளக் கூடிய அளவுக்கு, பலம் பொருந்திய உங்களுடைய, கைகளும், தோள்களும், ஏன் எந்த ராஜ அலங்காரங்களும் இல்லாமல், ஒரு மாலைகளோ, தங்க ஆபரணங்களோ, இல்லாமல் இருக்கு? ஏன் நீங்க ரிஷிகளைப் போல, இருக்கேள்? அப்படீன்னு ஹனுமார் கேட்கறார். இதை, அந்த காலத்துல ரொம்ப ரசிப்பாளாம். இந்த உபன்யாசம் பண்றவாளுக்கு, ஒரு மாலை போடுவா. ஸ்வாமிக்கு ராமர் படத்துக்கு ஒரு மாலை போடுவா. அப்புறம் கொண்டு வந்த மாலை எல்லாம் உபன்யாசகருக்குப் போடப் பார்த்தா, அவர் சொல்வாராம். அங்க ராமர், இருக்கார், அவருக்கு தான், “ஸர்வ பூஷண பூஷார்ஹாஹா” எல்லா, பூஷணங்களையும், ராமருக்குதான், நாம போட்டுப் பார்க்கணும், அவர்தான், அதுக்கு தகுதியானவர், அதனால், சுவாமிக்குப் போடுங்கோ, அப்படீன்னு, சொல்லி, எல்லா மாலைகளையும், சுவாமிக்கு, போடச் சொல்வாளாம், ஸ்வாமிகள், இதை ரொம்ப ரசிச்சிருக்கார். இதை என்கிட்ட சொல்வார்.

ஹனுமார் பேசி முடிச்ச உடனே, ராமர், லக்ஷ்மணன் கிட்ட சொல்றார், “ஹே, லக்ஷ்மணா, நாம எந்த சுக்ரீவனை, தேடி வந்தோமோ, அந்த சுக்ரீவன் கிட்ட இருந்து, இந்த ஹனுமார் வந்திருக்கார். நீ இவர் பேசினதை, கவனிச்சியா,

नानृग्वेदविनीतस्य नायजुर्वेद्धारिणः | नासामवेदविदुषश्शक्यमेवं विभाषितुम् ||

ரிக்வேதம், யஜூர்வேதம், சாம வேதம், எல்லாத்தையும், அத்யயனம், பண்ணி இருந்தாலொழிய, இந்த மாதிரி, ஒருத்தரால, பேச முடியாது. அப்படீன்னு, ராமர் சொல்றார். அது என்ன வேதத்துக்கும், பேச்சுக்கும், என்ன சம்பந்தம்னா, இவர் பேசின வார்த்தைகள், அந்த அவருடைய, vocabulary யை, பார்த்த உடனே, ராமர், வந்து, இவர், வேதம் படிச்சவன்னு, சொல்றார்.

नूनं व्याकरणं कृत्स्नमनेन बहुधा श्रुतम्। बहु व्याहरताऽनेन न किञ्चिदपशब्दितम्।।

நூனம் வியாகரணம் க்ருத்ஸ்நம் அனேன பஹுதா ஸ்ருதம் |

பஹு வ்யாஹரதா அனேன ந கிஞ்சித் அபசப்திதம் ||

இவன், பல தடவை, வ்யாகரணத்தை கேட்டு இருக்கான், அப்படீங்கறார். அந்த காலத்துல, படிப்புன்னாலே, கேள்வி தானே, நிறைய தடவை, வியாகரணம் கேட்டிருக்கான். அதனாலதான், இவ்வளவு, நேரம், பேசினால் கூட, ஒரு, அபசப்தம், கூட இல்ல, ஒரு, gramatical mistake, கூட இவர் பண்ணல, அப்படீன்னு,சொல்றார், ராமர். அது, ரொம்ப முக்கியம். கற்க கசடற அப்படீன்னு சொல்லி இருக்கே. ஹனுமார் பத்தி கேட்கணுமா. ஹனுமார், சாக்ஷாத், சூரிய பகவான் கிட்டே, சதுர்தச வேத வித்யைகளையும், படிச்சவர். அதனால், அவர், பேசும் போது, தப்பு வருமா? அவர், அவ்வளோ அழகா பேசறார்

न मुखे नेत्रयोर्वापि ललाटे च भ्रुवोस्तथा । अन्येष्वपि च गात्रेषु दोषस्संविदितः क्वचित्।।

ந முகே நேத்ரயோர்வாபி லலாடே ச ப்ருவோஸ்ததா |

அன்யேஷ்வபி ச காத்ரேஷு தோஷ: சம்விதித க்வசித் ||

இவனுடைய, முகத்துலேயோ, புருவங்கள்லேயோ, கண்கள்லையோ வேற எந்த அவயங்கள்லேயோ வேற எந்த விதமான கொனஷ்டையும், பண்ணாம, சேஷ்டையும் பண்ணாம, அவ்ளோ, இவன் முகத்தை பேசும் போது பார்த்துண்டே இருக்கலாம், அவ்வளோ அழகா பேசறான். அப்படீன்னு சொல்றார்.

अविस्तरमसन्दिग्धमविलम्बितमद्रुतम् । उरस्थं कण्ठगं वाक्यं वर्तते मध्यमे स्वरे ।।

அவிஸ்தரம் அசம்திக்தம் அவிலம்பிதம் அத்ருதம் |

உரஸ்தம் கண்டகம் வாக்யம் வர்த்ததே மத்யமே ஸ்வரே ||

ரொம்ப உரக்க கத்தி பேசல, ரொம்ப யாருக்குமே, கேட்காத, மாதிரி மெதுவா முணுமுணுத்துண்டு பேசல, விறுவிறுன்னு பேசல, நாபியில இருந்து, வார்த்தைகள் வர்றது, தொண்டையில பேசறான். மத்திம ஸ்வரத்துல பேசறான். இவன் வந்து, கல்யாணீம், வாசம், மங்களகரமான, வார்த்தைகளை, பேசுகிறார். இந்த ஹனுமார். “ஹிருதய ஹாரணீம்,”மனதை கொள்ளை கொள்ளும், வார்த்தைகளை, பேசறார்., இந்த ஹனுமார், அப்படீன்னு சொல்றார்.

संस्कारक्रमसम्पन्नामद्रुतामविलम्बिताम् । उच्चारयति कल्याणीं वाचं हृदयहारिणीम् ।।

சம்ஸ்கார க்ரம ஸம்பன்னாம் அத்ருதாம் அவிலம்பிதாம் |

உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதயஹாரிணீம் ||

எனக்கு, இவன் பேசறதை கேட்டுண்டே இருக்கணும்போல இருக்கு. இந்த மாதிரி, ஒருத்தர், பேசினா கொல்ல வந்த எதிரி கூட, கத்தியை கீழ போட்டுட்டு, நமஸ்காரம் பண்ணிடுவான். அப்பேற்பட்ட, இனிமையான, வாக்கு இவருக்கு. இந்த மாதிரி, ஒருத்தர், தூதனா, கிடைச்சா, அந்த ராஜாவுக்கு, எல்லா காரயங்களும் சித்தியாகும். இந்த மாதிரி, ஒரு தூதன் இல்லேன்னா, எப்படித்தான், கார்யங்களை, நடத்திக்க முடியும், அப்படீன்னு, ராமர் வந்து பார்த்த உடனே, appraisal பண்ணி வேலையும் கொடுத்துடறார். ராமா தூதன் அப்டீங்கிற job ஐயும், assign பண்ணிடறார்., அவருக்கு. அப்பேற்பட்ட, ஹனுமாருடைய வாக்கு. அதைக் கேட்ட உடனே, ராமர், “சொல்லின் செல்வன்” அப்படீன்னு, கம்ப ராமாயணத்துல, சொல்வா. அப்படி title கொடுக்கறார்.

“புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயக்த்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்”


அப்படீன்னு, ஹனுமாரை, நினைச்சா, நமக்கும், நல்ல வாக்கை கொடுப்பார். அவர்கிட்டே, நமக்கும் இனிமையான, வாக்கு வரட்டும் னு, வேண்டிப்போம்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

ஆர்ஜவம் பலம்



--
சூராணாம் சுத்த பாவானாம் பவதாம் ஆர்ஜவம் பலம்


இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல யுத்த காண்டத்துல, அம்பதாவது சர்க்கத்துல ஒரு ஸ்லோகம்,

प्रकृत्या राक्षसा: सर्वे सम्ग्रामे कूटयोधिनः |

शूराणाम् शुद्धभावानाम् भवताम् आर्जवम् बलम् ||

ப்ரக்ருத்யா ராக்ஷஸா சர்வே ஸங்க்ராமே கூடயோதின: |

சூரானாம் சுத்த பாவானாம் பவதாம் ஆர்ஜவம் பலம் ||

அப்படின்னு கருட பகவான் ராம லக்ஷ்மணா கிட்ட சொல்றார். அது என்ன கதைன்னா, யுத்தம் ஆரம்பிக்க போறது, அதுக்கு முன்னாடி, அங்கதனை போய் ராவணன் கிட்ட ஒரு last warning என்கிற மாதிரி ஒரு தடவை போய் எச்சரிக்கை பண்ணிட்டு வா, அப்படின்னு விபீஷணன் கிட்ட அனுமதி கேட்டுண்டு, அங்கதனை ராமர் ராவணன் கிட்ட தூது அனுப்புறார். நீ போய் ராவணன்கிட்ட “உனக்கு கடைசியா, உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பு கொடுக்கறேன், சீதையை கொண்டுவந்து ஒப்படைச்சு மன்னிப்பு கேட்டுக்கோ, இல்லேன்னா, உனக்கு என்ன தைரியம் இருக்கோ, என்ன படை பலமோ, கோட்டை கொத்தளம, எதை நம்பி நீ இருக்கியோ அதை கொண்டு யுத்தம் பண்ணு, நீ வந்து சரணாகதி பண்ணிணேனா, உன்னை உயிரோடு விடுவேன். ஆனால், உன்னை மாதிரி ஒரு தூர்தனுக்கு இந்த ராஜ்யத்தை தரமாட்டேன், விபீஷணனை தான் நான் இலங்கைக்கு ராஜாவாக்குவேன்” அப்படின்னு போய் சொல்லிட்டு வாங்கிறார்.

இந்த வார்த்தைகளை போய் அப்படியே அங்கதன் ராவணன்கிட்ட சொல்றான், ராவணன் பொறுப்பானா! நான் வாலியோட பிள்ளை அங்கதன் வந்துருக்கேன்ன்னு ஆரம்பிக்கிறான், வாலி கிட்ட ஏற்கனவே ராவணன் அடி வாங்கியிருக்கான், வாலியோட ஒரு பிள்ளை வந்து இவ்ளோ தைரியமா பேசறதைப் பாத்த உடனே அவனுக்கு கடும்கோபம் வர்றது, “பிடிங்கோ அவனை! கொல்லுங்கோ”ங்கறான், இந்த வாட்டி தடுக்கறதுக்கு விபீஷணர் இல்ல, ஒரு நாலு பேர் ராக்ஷஸா வாரா அவனை பிடிக்கறத்துக்கு, அந்த நாலு பேரை, ரெண்டு ரெண்டு பேரை ரெண்டு கஷ்கத்துல தூக்கிக்றான் அங்கதன், ஆகாசத்துல பறந்து, காலால ராவணணனோட கோட்டையோட கோபுரத்தை ஒரு உதை உதைக்கறான். அந்த கோபுரமே சரிஞ்சு விழுந்துற்றது, இந்த நாலு பேர ஆகாசத்துலேர்ந்து ககீழே போடறான், நாலு பேரும் வதம் ஆயிடறா. நேரா ராமர் கிட்ட வந்துடுறான், ராமர் கிட்ட வந்து, “இது அசத்து இவனுக்கு, பேசியெல்லாம் ஒண்ணும் புரியாது, யுத்தம் தான்” அப்படின்னு சொல்லிடறான்.

அடுத்த நாள் யுத்தம். இதுக்கு நடுவுல விபீஷணன், அவனுடைய நாலு மந்த்ரிகள், பறவைகளா போய் ஆகாசத்துல நின்னுண்டு, ராவணன் என்ன வ்யூஹம் பண்ணியிருக்கான், அப்படிங்கிறத பாத்துண்டு வந்து சொல்றா. எந்தெந்த கோட்டைல யார் யாரை நிறுத்தியிருக்கான், தெற்கு கோட்டைல இந்திரஜித் படையோட நிக்கறான், வடக்கு கோட்டைல மஹோதரன் நிக்கறான் அப்படின்னு தகவல்லாம் சொல்றா, அதை சொல்லிட்டு விபீஷணன் ராமர் கிட்ட சொல்றான் “ரோஷயே தவாம் நீ பீஷயே” நான் உங்களை பயமுறுத்தறேன் நினச்சிக்காதீங்கோ, உங்களுக்கு ரோஷம் வர்றத்துக்காக சொல்றேன், இந்த ராக்ஷஸர்கள்லாம் ஒவ்வொருத்தரும் “ஆததாயின:” பெண்களையும், குழந்தைகளையும் கூட கொல்றதுக்கு தயங்காத, கொடும் மனசு படைச்சவர்களுக்கு ” ஆததாயின:” பேரு, அப்பேற்பட்ட கொடுமையான ராக்ஷஸர்கள், இவளோட யுத்தம் பண்றதுக்கு எப்படி, strategy பண்ணனும்னு யோசிங்கோ”, அப்படின்னு சொன்ன உடனே, ராமர் “எங்க இந்திரஜித் வருகிறானோ அங்க ஹனுமார் படையோட போகட்டும், எங்க மஹோதரன் வருகிறானோ அங்க சுக்ரீவன் படையோடு போகட்டும் அப்படியெல்லாம் ஒரு strategy சொல்றார்.

முன்ன நாலா திக்குலயும் வானரர்களை அனுப்பிச்சு சீதாதேவியை தேடறதுக்கு ஆரம்பிக்கும்போது, சுக்ரீவன் சொல்றான் ராமர் கிட்ட “இது உங்க படைதான், நீங்க என்ன சொன்னாலும் கேட்பா” அப்படின்ன போது, ராமர் சொல்றார் “இல்ல நீதான் அவாளுக்கு ராஜா, உனக்கு என்னோட தேவை தெரியும், சீதாதேவி எங்கேயிருக்கான்னு கண்டுபிடிச்சு தரணும். நீயே அவாளுக்கு உத்தரவு பண்ணு. நேரம் வரும்போது நான் அவளுக்கு உத்தரவு கொடுக்றேன்னு” சொல்றார், இப்போ அந்த நேரம் வந்துருக்கு எப்படி அவா, படைய நடத்தணும். இவாளோட வ்யூஹம் என்னங்கிறதை ராமரே சொல்றார்.

அந்த மாதிரி அந்தந்த படைகள் போய் அங்கங்க நிக்கறது. “ராவணன் எந்த கோட்டை வழிய வெளியில வருகிறானோ அங்கே நானே யுத்தம் பண்றேன்” னு, ராமர் சொல்றார், “இந்த யுத்தத்தில், நான், லக்ஷ்மணன், விபீஷணன் அவனுடைய நாலு மந்த்ரிகள், இந்த ஏழுபேர்மட்டும் மனுஷாளா இருக்கோம், பாக்கி வானரா, கரடிகள் எல்லாம், அவா அவா, அவா அந்த உருவத்திலேயே யுத்தம் பண்ணட்டும்”, அவா எல்லாம் நெனச்ச உருவத்தை எடுக்கக் கூடியவர்கள். ஆனால் அந்த மாதிரி உருவத்தை மாத்த வேண்டாம், “வானரா ஏவ நஸ்ச்சின்னம்” வானரர்களா இருக்கறதே, நமக்கு அடையாளமா இருக்கட்டும், அப்படின்னு ராமர் சொல்றார்.

இதை ஸ்வாமிகள் வேடிக்கையா சொல்வார் ” வானரா ஏவ நஸ்ச்சின்னம் ” நான் எனக்கு வெச்சிண்டுருக்கேன், என்னால வந்து எல்லாருக்கும், அதாவது ஸ்வாமிகளோட தேவைகளே ரொம்ப கம்மி, ஆனா மனுஷா இந்த காலத்துல ரொம்ப பந்தா விட்றதுனால, அந்தமாதிரி பந்தாவெல்லாம் என்னால விடமுடியாது, நான் வந்து உட்காந்து படிப்பேன், கதை கேட்க வரவாளுக்கு ஏத்த மாதிரியெல்லாம் என்னால என்ன மாத்திக்கமுடியாது, இல்ல ஒரு ஆத்துல போய் படிக்கறோம், அல்லது ப்ரவசனம் பண்றோம்னா, அவளோட tasteக்கெல்லாம் என்னால என்னை மாத்திக்கமுடியாது, நான் இருக்கற மாதிரி நான் இருக்கேன், “வானரா ஏவ நஸ்ச்சின்னம் ” அவாளுக்கு பிடிச்சுதுன்னா அடுத்த வாட்டி கூப்பிடப் போறா, இல்லன்னா ஏழு நாள் ஸப்தாஹம்னா, மூணு நாள், நாலு நாள்ன்னு எண்ணிண்டு இருக்கப்போறா, அப்படிம்பார். அந்த மாதிரி நிலைமை அவருக்கு வரல, யாரு அவர் கிட்ட கதை கேட்டாலும் திரும்ப திரும்ப அவரை கூப்டுண்டு இருந்தா, ஆனா அவர் அப்படி வேடிக்கையா சொல்லுவார். உலகத்தோட போக்குக்கெல்லாம் நம்மள மாத்திக்க வேண்டியது இல்லை, அப்ப்டிங்கிறதுக்குக்காக இதைச் சொல்லுவார்.

அந்த மாதிரி வ்யூஹமெல்லாம் அமைச்சு, யுத்தம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, இந்த ஒரு தடவை அங்கதனை தூது அனுப்பிச்சு, அதையும் தீர்மானம் பண்ணிண்டு, அப்பறம் அடுத்த நாள் காத்தால, எல்லா கோட்டைகளையும் தாக்கறா. அப்போ ஒவ்வொரு கோட்டைகளிலிருந்தும் ராக்ஷஸர்கள் வெளில வரா, துவந்தவ யுத்தம் அப்படின்னு சொல்லி, equal powersல இருக்கறவா எல்லாம் யுத்தம் பண்ணறா, அப்போ அங்கதன் இந்த இந்திரஜித்தை கடுமையா தாக்கி அவனை தடுமாற பண்ணிடறான், உடனே எல்லாரும் வியக்கறா. இந்திரஜித்து, இந்திரனையே, ஐராவதத்துலேர்ந்து கீழே தள்ளி, சிறை பிடிச்சிண்டு வந்தவன், அப்பேற்பட்ட இந்திரஜித்தையே நீ ஜெயிச்சிட்டயே அப்படின்னு அங்கதனை எல்லாரும் கொண்டாடறா.

அப்போ ராமர் சொல்றார் “இல்லை. இது கொண்டாட வேண்டிய நேரம் இல்லை, ஜாக்ரதையா இருக்க வேண்டிய நேரம், அந்த இந்திரஜித்துக்கு நிறைய மாயை தெரியும்” அப்படின்னு சொல்லிண்டு இருக்கறார். அந்த இந்திரஜித்துக்கு மறைஞ்சிருந்து அடிக்க தெரியும், அவன் ஏதோ ஒரு யாகம் பண்ணுவான், அந்த மாதிரி மறைஞ்சியிருந்து, எல்லார் மேலயும் அம்பு போடறான். எல்லாரும் தவிக்கறா, எல்லா பக்கமும் பாக்கறா,

ஏதோ சத்தம் தான் கேட்கறது, எங்க இருக்கான்னு தெரியல, அவன் ஆகாசத்துல, மேகங்களுக்கு நடுவுல மறைஞ்சிருந்து தேர்ல அங்க இங்க போயி, அம்புகளை மழையாட்டம் கொட்டறான். ராமலக்ஷ்மணா மேல, நாக பாஸத்தை போட்டுடறான். கடுமையான, விஷம் கொண்ட நாகங்கள், ராமரையும், லக்ஷ்மணனையும் சுத்திண்டுடறது. அவா ரெண்டு பேரும் கீழ விழுந்துடறா, பின்னாடி, லக்ஷ்மணன், இந்திரஜித் கூட யுத்தம் பண்ணும்போது, அவன் நாகபாஸத்தைப் போடறான், அவா நேர நேர யுத்தம் பண்ணும்போது, லக்ஷ்மணர், கருட அஸ்த்ரத்தை விட்டு அதை முறிச்சுடறார், இங்க, அவாளுக்கு கண்ணுக்குத் தெரியலை, அதனால அந்த நாகங்கள் எல்லாம் இவாளை கட்டிடறது. அதனால அவா கீழ விழுந்துடறா, மயக்கமா விழுந்துடறா, மூச்சுக்கூட இல்ல, அதனால எல்லாரும் பயப்படறா.

அந்த நேரத்துல, இந்திரஜித் போயி சொல்றான், ராம லக்ஷ்மணா கதை எல்லாம் முடிஞ்சிடுத்து, அப்பாவை நிம்மதியா இருக்க சொல்லுங்கோ, அப்படீன்னு, ராவணனுக்கு ஒரே குஷி. ஊரெல்லாம் பெரிய உத்சாகமா கொண்டாடறான்.

இதுக்கு நடுவுல, அவனோட குறுக்கு புத்தி, சீதா தேவியை புஷ்பக விமானத்துல அழைச்சுண்டு போயி, காண்பிங்கோ, இந்த ராமலக்ஷ்மணாளோட நிலைமையை, அதை பார்த்தாவது, புத்தி மாறி அவ என் கிட்ட வருவா அப்டீங்கறான். அந்த மாதிரி, திரிஜடை, சீதையை கூட்டிண்டு போயி காண்பிக்கும் போது, சீதை புலம்பி அழறா. பெரியவா எல்லாம் எவ்வளவு ஆஸிர்வாதம் பண்ணியிருக்காளே, நீ தீர்க்க ஸுமங்கலியா பிள்ளைகள் பெற்று, சக்ரவர்த்தினியா இருப்பேன்னு, சொன்னாளே, இப்படி ஆயிடுத்தே, அவா சொன்ன வார்த்தை எல்லாம் பொய்யாயிடுத்தே, அப்படீங்கறா. இந்த இடத்துல ஸ்வாமிகள் சொல்வார். “அந்த மாதிரி ரிஷிகள் சொன்ன வார்த்தை பொய்யாகலை. ஆகாது” அப்படீன்னு ஸ்வாமிகளுக்கு, தர்மம் தோத்துதுங்கிற பேச்சை கூட அவரால பொறுக்க முடியாது. அது மாதிரி, “ஞானின: அன்ருதவாதின:” “ஞானிகள் சொன்ன வார்த்தை பொய்யாயிடுத்துன்னு, சீதை புலம்பறா. ஆனா, நமக்குத் தெரியும், அது, பொய்யாகல”, அப்படீன்னு, ஸ்வாமிகள் சொல்வார். அப்ப த்ரிஜடை சமாதனப் படுத்தறா. “இல்லை, அவா இப்ப அவா மயக்கமாதான் இருக்கா.உயிர் போகல. அவா, உயிர் போயிடுத்துன்னா, உன்னை, இந்த புஷ்பக விமானம், ஏத்துக்காது. உனக்கு, தீட்டு, வந்துடும். அந்த மாதிரி, அர்த்ததுல சொல்றா. அப்புறம், சீதை அழுதுண்டே போறா.

ராமருக்கு, ஒரு நிமிஷம் தெளிவு ஏற்பட்டு கண்ணைத் திறந்து பார்க்கறார். இந்த லக்ஷ்மணன், இறந்து கிடக்கறான்னு, நினைச்சு, ரொம்ப புலம்பறார். “ஹே, லக்ஷ்மணா, நீ இல்லாம, எனக்கு என்ன இருக்கு? நீ ஒரு வார்த்தை கூட கடுமையான வார்த்தை பேசமாட்டியே”, அப்படீன்னு, சொல்றார். எல்லாரும், லக்ஷ்மனதான், கோபக்காரன். அப்படீன்னு, கதை சொல்றவா சொல்லுவா. ராமர், சொல்றார். “நீ ஒரு வார்த்தை கூட கடுமையான வார்த்தை பேச மாட்டியே”, அப்பட்டீன்னு, லக்ஷ்மணனுக்கு ராமர் கிட்ட யாராவது தப்பா நடந்துண்டா அவன் கோச்சுப்பான், மத்தபடி அவன் ரொம்பவே friendly. “ஸௌமித்ரி: மித்ர நந்தன” அப்படீன்னு அடிக்கடி வரும். அவனுடைய, friendsக்கெல்லாம் ரொம்ப பிடிச்சவன். அப்படி இனிமையா பேசினா தானே பிடிச்சவனா இருக்க முடியும். எப்பவுமே லக்ஷ்மணன் இனிமையா பேசுவான்னு தெரியறது. இப்படி அந்த லக்ஷ்மணன் இறந்து கிடப்பதை பார்த்து, ராமர், புலம்பி, சுக்ரீவன்கிட்ட, விபீஷ்ணன்கிட்ட எல்லாம், “யுத்தம் எல்லாம் முடிஞ்சு போயிடுத்தப்பா, நான் என்ன பண்றது, சுக்ரீவா நீ திரும்பி போய்க்கோ”, என்கிறார். ஹனுமாருடைய, பிரபாவத்தையும், ஜாம்பவானுடைய வீரத்தையும், எல்லாம் புகழ்ந்து, அவாளுக்கெல்லாம் நன்றி சொல்லி, விபீஷணன் கிட்ட “நான் உனக்கு promise பண்ணிணேன், என்னால, உன்னை இலங்கைக்கு, ராஜாவா ஆக்க முடியல”, அப்படீனெல்லாம் சொல்றார். அந்த மாதிரி நிலைமைகள் வரும்னு அப்டீங்கிறது, தெரியறது.

ஸ்வாமிகளே, அவருடைய, 1950க்கு சென்னை வந்தார். வந்ததுல இருந்து அவருக்கு கடன்தான். வட்டி, வட்டிக்கு வட்டி, 1986 வரைக்கும் பணத்துக்கு கஷ்டப் பட்டுருக்கார். அப்போ ரொம்ப தாங்க முடியாத கஷ்டம் இருந்த போது, அவரை சுத்தி இருந்த நாலு பேர்கிட்ட, “நீங்க எல்லாம் என்னோட சேர்ந்து கஷ்டப் படாதிங்கோ, நான் சொல்லி கொடுத்த பஜனத்தை அவாவா பண்ணிண்டு இருங்கோ. இங்கவரணும் என்கிறதில்லை”, அப்படீன்னு சொல்லியிருக்கார். அந்த அளவுக்கு, பகவான் அவரை சோதனை பண்ணி இருக்கார். அந்த மாதிரி இங்க ராமருக்கு கடுமையான சோதனை.

அப்படி எல்லாரும், தவிக்கும் போது கருட பகவான் வரார். கருட பகவான், வந்த உடனே, அந்த பாம்புகள் எல்லாம் ஓடிப் போயிடறது. கருட பகவான், இவா ரெண்டு பேரையும் தடவி கொடுத்த உடனே, இவா ரெண்டு பேரும் முன்ன விட, ரெண்டு மடங்கு வீரியமும், பலமும், தேஜஸும் இவாளுக்கு வந்துடறது, “நீங்க யாரு”ன்னு, ராமர் கேட்கறார். “நான் யாருங்கிறதை பத்தி நீங்க ஆவல் படவேண்டாம், நான் யாருங்கிறது, பின்னாடி தெரியும்”, அதாவது, இராவணன் வதம் ஆன பின்ன தெரியும், அதாவது தேவர்கள் எல்லாம், வந்த போது ராமர், “ஆத்மானாம் மானுஷம் மன்யே” அப்படீன்னு, ராமர் சொல்றார். “நான் மனுஷன், தசரத குமாரன், என்றுதான் நான் என்னை அறிந்து கொண்டிருக்கிறேன்” அப்படீன்னு ராமர் சொன்ன போது பிரம்மா, “நீங்க சாக்ஷாத் விஷ்ணு பகவான்” அப்படீன்னு சொல்றா, அப்போ கருடன் யாருன்னு தெரியும். அப்படீங்கிகிற meaning ல, “நான் யாருன்னு உங்களுக்குப் பின்னாடி தெரியும், நீங்க இந்த யுத்தத்தை பண்ணுங்கோ. நீங்கள், வெற்றி பெறுவீர்கள், அப்படீன்னு அந்த கருட பகவான் சொல்லிட்டு, அந்த இடத்துல இந்த ஒரு ஸ்லோகம் வர்றது.

ப்ரக்ருத்யா ராக்ஷஸா சர்வே ஸங்க்ராமே கூடயோதின: |

சூரானாம் சுத்த பாவானாம் பவதாம் ஆர்ஜவம் பலம் ||

இயல்பிலேயே, ராக்ஷதர்கள், சூழ்ச்சி எல்லாம் பண்ணுவா. நீங்கள், சுத்த மனசும், ஆர்ஜவம், அப்படீங்கிற வார்த்தைக்கு, ருஜூத் தன்மை, அதாவது, மனோ, வாக், காயத்துனால, நேர்மையா இருக்கறதுக்கு, ஆர்ஜவம்னு, பேரு. அந்த ஆர்ஜவம்தான் உங்க பலம், அப்படீன்னு சொல்றார்.

அந்த மாதிரி இந்த நேர்மையா இருக்கறதுக்கு, ஒரு power இருக்கு. மஹா பெரியவா, சொன்ன வார்த்தை எல்லாம் பலிச்சுதுன்னா, எப்பவும் ஸத்யமா இருக்கறது, அப்படீன்னு வெச்சுண்டா, அவா பேசறது எல்லாம் ஸத்யமாயிடறது. மஹான்களுக்கு, அவா சொல்ற வார்த்தைகள் பின்னாடி, ஸத்யம் வந்து ஒட்டிக்கறது. அவா சொல்றது ஸத்யமாயிடறது. அது எப்படீன்னா, அவா எப்பவுமே, ஸத்யம்தான் பேசணும், மனோ, வாக், காயத்துனால, ஆர்ஜவமா இருக்கணும், அப்படீன்னு, ரொம்ப ரொம்ப careful ஆ இருக்கா.

சிவன் சார், கூட நேர்மைதான் தெய்வீகம், அப்படீன்னு, அதை ரொம்ப முக்யமா சொல்றார். ஆசார அனுஷ்டானங்களோ, பிரம்மசர்யமோ, அதெல்லாம், தெய்வீகம் கிடையாது. நேர்மை,அடக்கமா, ஒரு தெய்வத்து கிட்ட பக்தி, இது போறும், அப்டீங்கிறதை அவர் வாழ்ந்தும் காண்பிச்சார், அவருடைய புஸ்தகத்துலயும் ரொம்ப அறுதியிட்டு எழுதியும் இருக்கார்.

இப்படி, இந்த ராம லக்ஷ்மணா, அந்த ஆர்ஜவத்தோட இருந்ததுனால, கருட பகவான் வந்து, அவாளை விடுவிக்கறார். கருட பகவான் சொல்றார், “இந்த நாக பாஸத்துல இருந்து, தேவர்களோ, ரிஷிகளோ கூட உங்களை விடுவிக்க முடியாது, நான் இதை கேள்வி பட்ட உடனே ஓடோடி வந்தேன்”, அப்படீங்கறார். ஆனா அதுக்குள்ளே இங்கே எல்லாரும் அழுதாச்சு. கஷ்ட காலத்துல இருக்கும் போது, நாம கடவுளுக்கு கண் இல்லயான்னு, நினைக்கறோம், அழுது புலம்பிடறோம், ஆனா பகவானோட அனுக்ரஹம் வெகு விரைவில் வரப்போறது. ஆனா நம்மால, அதுவரை, தாங்க முடியலை, ரொம்ப வருத்தப்படறோம், மஹான்கள் பொறுமையா இருக்கா. திதீக்ஷா அப்படீன்னு சொல்லி, இது ஏதோ ஒரு வினையினால வந்தது, சரியா போயிடும், அப்படீன்னு, அதை பத்தி, நினைக்காம அவா “நாம பண்ண வேண்டிய கடமை என்ன, அதுல நேர்மையா இருக்கோமா, அது பாபம் கலக்காமல், தர்மமா இருக்கா?”, அப்படீங்கிறதை மட்டும் அவா பாத்துண்டு போறா. அந்த மாதிரி இன்னிக்கு, அந்த நாகபாஸத்துல இருந்து, ராமலக்ஷ்மணா கருடனோட உதவியால விடுபட்டதை பார்த்தோம். ஆர்ஜவம்தான்,

याथार्त्यात् न हि भुवने किमपि असाध्यम् “யதார்த்தமா இருந்தா, மூவுலகத்துலயும், எதுவுமே அஸாத்யம் கிடையாது. எது வேணாலும் நடக்கும்” அப்படீன்னு ஸ்ரீமத் பாகவதத்துல ஒரு வரி, பாகவதம் எனக்கு தெரியாது, இந்த ஒரு வரி, ஸ்வாமிகள் எனக்கு எழுதிக் கொடுத்தார். அப்படி அந்த யதார்த்தமா இருக்கறதுங்கிறது ரொம்ப முக்யமான குணம் என்று இது இந்த காட்சியில இருந்து தெரியறது.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share

#கால_தர்மத்தின்_காலகணக்கு*

🌹 1 நாள் = 60 நாழிகை
(24 மணி)
🌹 1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்
🌹 1 நாழிகை = 24 நிமிடங்கள்

🌹 1 நாழிகை = 60 விநாழிகை
24 நிமிடங்கள்
🌹 1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்
🌹 1 விநாழிகை = 24 விநாடிகள்

🌹 1 விநாழிகை = 60 லிப்தம்

🔔 *24 விநாடிகள்*
🌹 1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்
🌹 1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்
🌹 1 லிப்தம் = 60 விலிப்தம்

🔔 *40 செண்டி விநாடிகள்*
🌹 1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்
🌹 1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்

🔔 *1 விலிப்தம் = 60 பரா 6.7 மில்லி விநாடிகள்*
🌹 1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
🌹 1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்
🌹 1 பரா = 60 தத்பர
111 மைக்ரோ விநாடிகள்
🌹 1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்
🌹 1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்

🌹 30 நாள் = 1 மாதம்
🌹 12 மாதங்கள் = 1வருடம்
🌹 60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
🌹 3000 சுழற்சிகள் = 1 யுகம்
🌹 4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
🌹 71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
🌹 14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

🔔 *ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மனுட வருடங்கள் (கணக்கதிகாரம்)*. இதில் பாதி முடிந்து விட்டது.
இப்பொழுது நடந்துகொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம்.

🔔 *ஸ்வேதவராஹ கல்பம்* - இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.

🔔 *வைவஸ்வத மன்வந்தரம்* - நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது.

*14 மன்வந்திரங் களாவன*

1.ஸ்வாயம்புவ மன்வந்திரம், 2.ஸ்வரோசிஷ மன்வந்திரம், 3.உத்தம மன்வந்திரம், 4.தாமச மன்வந்திரம், 5.ரைவத மன்வந்திரம், 6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம், 7.வைவஸ்வத மன்வந்திரம், 8.சாவர்ணிக மன்வந்திரம், 9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம், 10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம், 11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம், 12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம், 13.தேவ சாவர்ணிக மன்வந்திரம், 14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.
ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.

🔔 *அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே - 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம்*. வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.

🔔 இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள். இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.

🔔 *ஜம்பூத்வீபே* - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன.

(1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது - நீரால் சூழப்பட்டுள்ளது), 2. பிலக்ஷ த்வீபம், 3. சான்மலி த்வீபம், 4. குச த்வீபம், 5. க்ரௌஞ்ச த்வீபம், 6. சாக த்வீபம், 7. புஷ்கர த்வீபம்)

🔔 *பாரத வர்ஷே* - த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம்.

(1. பாரத வர்ஷம், 2.ஹேமகூட வர்ஷம், 3. நைஷத வர்ஷத்ம், 4.இளாவ்ருத வர்ஷம், 5. ரம்ய வர்ஷம், 6. ச்வேத வர்ஷம், 7. குரு வர்ஷம், 8. பத்ராச்வ வர்ஷம், 9.கந்தமாதன வர்ஷம்)

🔔 *பரத கண்டே* - பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.

1.பரதகண்டம், 2. கிம்புருகண்டம், 3. அரிவருடகண்டம், 4. இளாவிரதகண்டம், 5. இரமியகண்டம், 6. இரணியகண்டம், 7. குருகண்டம், 8. கேதுமாலகண்டம், 9.பத்திராசுவகண்டம இதில் நாம் பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.

🔔 *மேரோர் தக்ஷணே பார்ச்வே* - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.

🔔 எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

🔔 மேலே சொல்லப் பட்டுள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய காரி என்பவர் எழுதிய கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டுள்ளது.
கணக்கதிகாரம் மிக அற்புதமான நூல். கால கணிதம் மட்டுமன்றி, எடையறிதல், நீளமறிதல் போன்ற நுண்ணிய கணிதங்களைக் கொண்டது.

🔔 அதில் கிடைக்கும் ஒரு செய்யுளில் ஒரு பலாப் பழத்தைப் பார்த்தே, அதைப் பிளக்காமலே அதில் உள்ள பலாச் சுளைகளை அறிய ஒரு கணித சமன்பாடு இருக்கின்றது.
ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும். என்னே ஒரு கணிதம்!

🔔 ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுப்பட்ட பாகத்தில் உள்ள கோடுகளைக் கொண்டு மரத்தின் ஆயுளைக் கூறிவிட முடியும்.

🔔 இவ்விதம் காலமானம் பேசப்படுகிறது. இது தான் சனாதன சமய கால கணக்கீட்டில் மிகச்சிறிய பகுதி. இதுவே *வானசாஸ்திரத்தை (Astronomy)*!.

🔔 🌹🙏🙏🙏🌹🔔

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

வேதம் - Holy Book

Post by vgovindan »

படித்ததில் பிடித்தது

ஏதேனும் ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்லி இதுவே மேலான தெய்வம் என்று சொல்லும் நூல் வேதம்; இது தவிர மற்றவை எல்லாம் தெய்வமல்ல என்று சொல்லும் நூல் பொய் வேதம்.

இந்த வழிபாட்டுமுறை சிறந்தது என்று ஏதேனும் ஒரு முறையைச் சுட்டிக் காட்டும் நூல் வேதம்; மற்ற முறைகள் எல்லாம் உங்களை நரகத்துக்குக் கொண்டு சேர்க்கும் என்று சொல்லும் நூல் பொய் வேதம்.

மனிதனின் இறுதி லட்சியம் தர்மத்தை அனுசரித்து, கடுமையாக உழைத்து, ரிஷி, மகோனர், சூரி நிலைகளைக் கடந்து ஒளி நிலையை அடைவது என்று கூறுவது வேதம்; உண்டு உடுத்து உறங்கி, பிறர் துன்பம் பற்றிக் கவலைப்படாமல் தந்நலமே பெரிதாகக் கருதி உயிர் வாழ்வதுதான் மனித வாழ்வு எனப் போதிக்கும் நூல் பொய் வேதம்.

காஞ்சி பரமாச்சாரியர் - தெய்வத்தின் குரல்

That book is vEda - holy book - which, invoking name of any God, declares it to be the highest God;
That book is false vEda - holy book - which declares all others are false Gods.

That book is vEda - holy book - which points to any specific method of worship and declares it as the best method;
That book is false vEda - holy book - which declares that all other methods will lead you to hell.

That book is vEda - holy book - which declares that the ultimate goal of human being is, to reach the realm of enlightenment by transcending the stages of Rishi, Mahona and Suri, by toiling hard adhering to dharma;
That book is false vEda - holy book - which teaches that, to lead a selfish life, by eating, dressing and sleeping, without bothering about the misery of others, is the human life.

Daivathin Kural - Kanchi Paramacharya
(English translation mine)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

*சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._
*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
*10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
*11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
*12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
*13. நந்தீஸ்வரர்* – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
*14. இடைக்காடர்* – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
*15. மச்சமுனி* – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
*16. கருவூரார்* – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
*17. போகர்* – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
*18. பாம்பாட்டி சித்தர்* – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.
*(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி)* உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.
_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்._

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

ஆன்மீகம் என்பது எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதைப்பற்றியல்ல; எப்படி வாழ்ந்தோம், என்ன செய்தோம் என்பதைப்பற்றி. ஆதி சங்கரரும், விவேகானந்தரும் 32 ஆண்டுகளே வாழ்ந்து, சாதாரண மனிதன் நூறாண்டுகளிலும் சாதிக்கமுடியாதவற்றை சாதித்தனர். ஆன்மீகம் அழிவற்ற ஆன்மாவைப்பற்றியது; என்றோ ஓர்நாள் அழியும் உடலைப்பற்றியதல்ல.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த – ப்ரதிபத்தயே |
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ – பரமேஶ்வரௌ ||

‘சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பவர்களும், உலகங்களுக்கெல்லாம் தாய் தந்தையருமான பார்வதி-பரமேஶ்வரர்களைச் சொல் பொருள் ஆகியவை பற்றிய அறிவு உண்டாகும் பொருட்டு வணங்குகிறேன்’ என்பது அர்த்தம்.
🙏🏼🎊🙏🏼🌸🌸
பார்வதீப-ரமேச்வரௌ’ என்கிறபோது பார்வதி, ரமா இருவரும் வந்துவிடுகிறார்கள். ஆக ஆரம்பத்தில் நல்ல வாக்கு, நல்ல அர்த்தம் இவற்றைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும்போதே பார்வதி ஸமேதரான ஈஶ்வரன், லக்ஷ்மி ஸமேதரான விஷ்ணு என்று இரண்டு ஜோடி திவ்ய தம்பதிகளையும் ஸ்மரித்து, நமஸ்கரிப்பதான பெரிய மங்களம் உண்டாகிறது. ஒரு எழுத்துக்கூட மாறாமல், பதச் சேர்க்கையில் மட்டும் ஒரு எழுத்தை இடம் தள்ளியதால் அர்த்தத்தில் இவ்வளவு பெரிய மாறுதல்;அல்லது கூடுதல்; அதாவது லாபம்!
🙏🏼🌸🙏🏼

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Aanmeekam...

Post by rshankar »

thanjavooran wrote: 03 Sep 2020, 17:02 வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த – ப்ரதிபத்தயே |
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ – பரமேஶ்வரௌ ||

‘சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பவர்களும், உலகங்களுக்கெல்லாம் தாய் தந்தையருமான பார்வதி-பரமேஶ்வரர்களைச் சொல் பொருள் ஆகியவை பற்றிய அறிவு உண்டாகும் பொருட்டு வணங்குகிறேன்’ என்பது அர்த்தம்.
🙏🏼🎊🙏🏼🌸🌸
பார்வதீப-ரமேச்வரௌ’ என்கிறபோது பார்வதி, ரமா இருவரும் வந்துவிடுகிறார்கள். ஆக ஆரம்பத்தில் நல்ல வாக்கு, நல்ல அர்த்தம் இவற்றைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும்போதே பார்வதி ஸமேதரான ஈஶ்வரன், லக்ஷ்மி ஸமேதரான விஷ்ணு என்று இரண்டு ஜோடி திவ்ய தம்பதிகளையும் ஸ்மரித்து, நமஸ்கரிப்பதான பெரிய மங்களம் உண்டாகிறது. ஒரு எழுத்துக்கூட மாறாமல், பதச் சேர்க்கையில் மட்டும் ஒரு எழுத்தை இடம் தள்ளியதால் அர்த்தத்தில் இவ்வளவு பெரிய மாறுதல்;அல்லது கூடுதல்; அதாவது லாபம்!
🙏🏼🌸🙏🏼
I am curious to find out how alternate padachEda of pArvati-paramESvarau will lead to lakshmi and vishNu; as far as I am aware, the alternate split gives pArvatipa (pArvati pati = Siva) and ramESvarau (ramESvara = consort of ramA = vishNu). So, "pAravtiparamESvarau" can refer to pArvati and Siva, or Siva and vishNu.

PS: This alternate padachEda was nice demonstrated in one of the song-dance sequences in the movie, sAgara sanamam.

Post Reply