Tit bits in Tamil

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Tit bits in Tamil

Post by cmlover »

மீன் ஆமை பன்றியுடன் தினம் ஒம்புவர் வைணர்குழாம்.
(மத்ஸ்யாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம்)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

நீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ணான்...

"டேய் மச்சி ... எப்படிடா இருக்க??"

"நல்லா இருக்கேன்டா ... நீ எப்படி இருக்க?"

"ரொம்ப நல்லா இருக்கேன்டா ... மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா .."

"அப்படியா?"

"ஆமாடா ... நான் சொல்லியிருந்தேன்ல ஒரு பொண்ணை ரூட் விடுறேன்னு ... அது செட்டாயிரும் போலிருக்குடா ... நல்ல வசதியான இடம் ... ஒரே பொண்ணு .... சும்மா உட்கார்ந்தே ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம்டா"

"ம்ம்ம்......."

"இப்போ எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும்டா"

"சொல்லுடா பண்றேன்"

"நாளைக்கு அவளுக்கு பிறந்த நாள் ... என்ன கொடுக்கலாம் ... நீ கொஞ்சம் சொல்லேன்"

ஹும்ம்.. என்னோட போன் நம்பரை கொடுடா"

"டமார்"னு ஒரு சத்தம் ... போனை உடைச்சிட்டானோ!

எங்க இருக்கானோ? என்ன பண்றானோ??

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

கணவன், மனைவி நகைசுவை சிரிக்க மட்டும்:-

மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன்: உன்னோட இந்த காமெடி தான் "
மனைவி: ???

கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி: கட்டிக்க போறது நான்தானே
கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்
மனைவி:???

மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை
எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"
கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும்
பார்த்துக்கலாம்.."
மனைவி:????

கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும்
புகார் சொல்றாங்க?
மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.
கணவன்:????

ஒருவன்: "என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா
பைத்தியமே பிடிச்சிடும்..."
மேனேஜர் :"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
ஒருவன் : "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..
கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?
ஜோதிடர்: ????

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

Need to correct ourselves

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...

தப்புங்க தப்பு,,,

ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு...

இதாங்க சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,

எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....

இதுவும் தப்பு

சரியானது என்னன்னா ...........

படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,

எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்

அரை வைத்தியன்...

இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )

ஆயிரம் வேரை கொன்றவன்

அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....

சூடு அல்ல சுவடு...

சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும்

தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்

மாடே அதிக பலம் வாய்ந்தது...

ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்

புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த

ராத்திரியில் கொடை புடிப்பான்....

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த

ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....

(வள்ளல் ஆனவரை கஞ்சனாக

மாற்றி விட்டோம் ...)



காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம்

நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை

குறை கூற உபயோகிக்கிறோம்..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Image

சோத்துக்கில்லாம அலையும் போது....பணத்தைத்தான் திங்கனும்...திங்க முடியுமா????...முடியாது என்பது அவனுக்கும் தொியும்..இவன் சோறு தின்னுடுவான்..இவன் சந்ததிகள் எல்லாம் எதை திங்கப் போறாங்களோ....கனவு இல்லங்கள் சுனாமியால் அழியும் காலம் வரும்...இது காலத்தின் கட்டாயாம்..

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share from my friend

தமிழ், சம்ஸ்கிருத மொழிகளின்அழகே அழகு!

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு: ‘நெய்யப்பம் தின்றால் ரெண்டுண்டு காரியம்’; அதாவது நெய்யப்பம் சாப்பிட்டால் சுவையான அப்பத்தை சாப்பிட்ட பலன் ஒன்று. இரண்டாவது பலன் என்ன? மீசையுள்ள ஆண்பிள்ளைகள் அந்த நெய்யை மீசையில் உரசும்போது மீசை அழகாக கண்ணங்கரேல் என்று வளரும்! அதே போல தமிழனாகப் பிறந்தவனுக்கும் இரண்டு பலன்கள் கிடைக்கின்றன. சம்ஸ்கிருத மொழியின் அழகை ரசிக்கும் போது அதை தமிழுடன் ஒப்பிட்டுப் பார்த்து இரு மடங்கு இன்பம் எய்தலாம்.
வடமொழியும் தென் மொழியும் நம் இரு கண்கள். இந்த இரண்டையும் அறிந்த ஒருவனால் மட்டுமே பாரதீய கலாசாரத்தை நூறு விழுக்காடு அறிய முடியும். தமிழில் இருண்ட மேகம் மழை பொழிவதைப் போல கவி மழை பொழிந்தவர் காளமேகப் புலவர். அவர் வாயைத் திறந்தாலே, சிலேடை மழை பொழிவார். எல்லாம் இரட்டுற மொழிவார். சில நேரங்களில் புகழ்வது போல இருக்கும் ஆனால் அது இகழ்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் இகழ்வது போல இருக்கும் ஆனால் அது புகழ்ச்சியாக இருக்கும்.

இதோ ஒன்று:-
சிவ பெருமானும் பூசுணிக்காயும் ஒன்றே !!
அடி நந்தி சேர்தலால் ஆகம் வெளுத்துக்
கொடியும் ஒரு பக்கத்தில் கொண்டு — வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்
பூசுணிக்காய் ஈசனைப் போன்று.
பொருள்:- பூசணிக்காய்க்கு அடியில் காம்பு உடையது. மேல் பாகம் வெள்ளை நிற சாம்பல் பூசப்பட்டது போல இருக்கும். கொடியில் படர்வது. வளைந்த தழும்புகளுடன் அதன் உடல் இருக்கும்.(மாசுணம்=சாம்பல்).
சிவன் தன் கால்களை நந்தியின் மீது (காளைவாகனம்) வைத்திருப்பார். திரு நீறு பூசி உடல் வெளுப்பாகக் காணப்படுவார். பூங்கொடி போன்ற உமை அம்மையை ஒருபுறம் வைத்திருப்பவர். வளைந்த பாம்பை (மாசுணம்=பாம்பு) அணிந்தவர். காஞ்சி காமாட்சியின் வளைத் தழும்பை உடலில் தாங்கியவர். ஆகையால் பூசணிக்காயும் சிவனும் ஒன்றே!!
rada krisna
இதோ ஒரு சம்ஸ்கிருத சிலேடைக் கதை:

ராதா ராணி வீட்டுக்கு கிருஷ்ணன் வந்தார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்புக்கு எல்லையே இல்லை என்பதை உலகமே அறியும். இருந்தபோதிலும் உடனே கதவைத் திறந்துவிட்டால் காதலின் சுவையே போய்விடும் அல்லவா! ஆகையால் ராதா ஒரு நாடகம் ஆடினாள்:–
ராதா: யாரது? கதவைத் தட்டுவது?
கண்ணன்: நான் தான் ஹரி (வந்திருக்கிறேன்).
ராதா: இங்கு நீ சாப்பிடக் கூடிய மிருகங்கள் எதுவும் இல்லை. இங்கு ஏன் வந்தாய்? (வடமொழியில் ஹரி என்றால் சிங்கம் என்ற பொருளும் உண்டு)
க: — அட என்னைத் தெரியவில்லையா? நான் மாதவன்.
ரா:– வசந்த காலம் வர இது உரிய தருணம் இல்லையே? (மாதவ என்றால் வசந்த காலம் என்ற பொருளும் வடமொழியில் உண்டு)
க:- ராதா! நான் ஜனார்தனன். உனக்கு என்னை நன்றாகத் தெரியுமே!
ரா:– உன்னைப் போன்ற ஆசாமிகளுக்கு எல்லாம் காடுதான் லாயக்கு. போய் யாரை வேண்டுமானாலும் தொல்லைப் படுத்து.
(ஜனார்தனன் என்றால் அஞ்ஞானத்தையும் அநீதி செய்வோரையும் அழிப்பவன் என்று ஒரு பொருளும் அநாவசியமாகத் தொல்லை கொடுப்பவன் என்று ஒரு பொருளும் உண்டு. விக்ன விநாயகனைக் கூட கஷ்டங்களைப் போக்குபவன், தீயோருக்கும் தன்னை வணங்காதோருக்கும் கஷ்டம் கொடுப்பவன் என்று நாம் சொல்லுவோம். முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரன் என்று அருணகிரி பாடியதையும் அறிவீர்கள்))
க: இளம் கன்னியே! தயவு செய்து கதவைத் திற. நான் மதுசூதனன் வந்திருக்கிறேன்.
ரா:- ஓஹோ! நீதான் த்விரேபனா? ( மதுசூதனன் என்ற பெயர் மது என்ற அரக்கனைக் கொன்றதால் கண்ணனுக்கு வந்தது. இன்னும் ஒரு பொருள் மதுவை உண்ணும் தேனீ. கிருஷ்ணன் ராதாவிடம் மட்டுமின்றி மற்ற கோபியருடனும் போவது ராதாவுக்குப் பிடிக்காது. ஆகையால் தருணம் பார்த்து இப்படி வடமொழியில் தாக்கினார். ‘த்விரேப’ என்ற வடமொழிச் சொல்லுக்கு தேனீ என்றும் ஜாதியைவிட்டு விலக்கப்பட்டவன் என்றும் பொருள். அதாவது உன்னை வீட்டை விட்டு விலக்கிவிட்டோம். வீட்டின் கதவு திறக்காது, போ, போ!!
(அம்மா, அப்பாவுக்குப் பிள்ளைகள் மீது கோபம் வந்தால் சீ, வெளியே போ! என்று சொல்லிவிட்டு, பின்னர் கொல்லைப்புறம் வழியாக வந்தாலும் ‘உள்ளே வந்து சாப்பிடு, சனியனே!’ என்று அன்பு காட்டுவது போல ராதாவும் கொஞ்சம் ‘பிகு’ செய்துகொண்டாள்).
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ள பழைய நூல்கள் அனைத்தையும் ஒருவர் படித்து முடிக்க நூறு பிறவிகள் எடுத்தாலும் போதாது. சரஸ்வதி தேவி சொன்னாள், “கற்றது கை மண் அளவு; கல்லாதது உலக அளவு” என்று. நாம் எல்லோரும் சொல்லலாம், ”கற்றது கடுகு அளவு; கல்லாதது இமய மலை அளவு” என்று!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

nice..Sir..

Sundara Rajan
Posts: 1081
Joined: 08 Apr 2007, 08:19

Re: Tit bits in Tamil

Post by Sundara Rajan »

In post 144 Sri. VGovindan mentions discontinuation of usage of LEAD utensils in households due to its toxicity. Lead is referred to as "cAr eeyam" colloquially in Tamil. In reality the so called Lead vessels in use are made of TIN,(referred to as "veLLi eeyam") that is not affected by weak acids (as citric, tartaric, malic acids found in fruits and vegetables). That is why brass and copper vessels used in cooking are coated inside with a thin layer of Tin ( called veLLi eeyam in Tamil). Some brahmin households still prefer to make Rasam in "EEya sombu" rather than in stainless steel vessels and vouch that it tastes better that way.
Incidentally, Lead ( Plumbum in Latin, hence Pb symbol) was/is used in copper pipe Joints/connections and hence those who worked on such jointed tubes were/are called Plumbers !

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share from my friend
An article in Dinamani
மனிதன் செய்த குற்றமடி!

By பிரபா ஸ்ரீதேவன்

First Published : 30 July 2014 01:33 AM IST

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோபிநாத் முண்டே இறந்தபோது அவரது இறுதிச் சடங்குகளை அவருடைய மகள் செய்தார். ஒருவருக்கு மகள் கொள்ளி வைத்தாள் என்பது கண்களை விரிய வைக்கும் செய்திதான். பெண்களுக்கு அந்த உரிமை உள்ளது என்று எந்த சாத்திரமாவது கூறுகிறதா?

இந்து பாரம்பரிய வழிமுறைகள் பெண்களுக்கு உரிய மதிப்பு கொடுப்பதில்லை என்று ஒரு சாரார் மனுதர்ம சாத்திரங்களை சுட்டிக் காட்டுகிறார்கள். அதற்கு மறுப்புக் கூறும் வகையில், "நம் நாட்டில்தான் யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா: (எங்கு பெண்கள் பூசிக்கப்படுகிறார்களோ அங்கு தெய்வங்கள் மகிழ்கிறார்கள்) என்று சொன்னோம்' என்று விடை தருகிறார்கள் இன்னொரு சாரார்.

இருவரும் வடமொழி ஆதாரங்களையே தங்கள் கட்சிக்கு சான்றாக காட்டுகிறார்கள். இப்பொழுது பிரச்னை பெண்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டார்களா என்பதே. அது குறித்து சம்ஸ்க்ருத சான்றுகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். என் தங்கை சீதா பொருத்தமான சுலோகங்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்து எனக்கு உதவினார்.

அபுத்ரஸ்ய ம்ருதஸ்ய குமாரி ரிக்தம் க்ருஹ்ணீயாத்.

(பொருள்:- இறந்தவருக்கு ஆண்பிள்ளை இல்லை என்றால் அவர் பெண் அந்த உரிமையை எடுத்துக்கொள்ளட்டும்.)

ஆக பெண் கொள்ளி வைப்பது இன்று நடந்த புரட்சி இல்லை அது அன்றே எழுதி வைக்கப்பட்ட ஒன்று. ஏன் இருபாலருக்கும் சம உரிமை என்று கூறவில்லை என்பது நியாயமான கேள்வி. அப்படித் தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், கண்டிப்பாக தூரத்து ஆண் உறவினரைத் தேடி அலையவேண்டும் என்றில்லை என்று தெரிகிறது, ஏன் பெண்ணுக்கு உரிமை உண்டு என்று சொல்லும் சாத்திரங்களையும் மேற்கோள்களையும் நாம் புறக்கணித்தோம்?

பெண் பிறந்தவுடன் இரு விதமான கவலைகள். ஒன்று அவளுடைய திருமணச் செலவு, இன்னொன்று அவள் இன்னொருவர் வீட்டிற்கு சென்று அனுபவிக்கப் போகும் கஷ்டங்கள். "பிருகதாரண்யக உபநிஷத்' ஒரு தந்தையின் வேண்டுதலைப் பற்றிகூறுகிறது.

அத ச இச்சேத் துகிதா மே பண்டிதா ஜாயேத.

(பொருள்:- எனக்கு படித்த அறிவார்ந்த ஒரு புதல்வி பிறக்க வேண்டும் இறைவா.) பையனுக்கு மட்டுமே படிப்பும் முதலிடமும் தருவது சரியல்ல என்றும் பெண்ணை வீட்டில் வைத்து வேலை செய்ய சொல்வதை பாராட்டுக்குரிய விஷயமாக நினைக்கவில்லை என்றும் தெரிகிறது.

கன்யாப்யேயம் பாலனீயா சிக்ஷணீயாதியத்னத:

(பொருள்:- பெண்ணை நன்றாகப் பேணிக் கல்வி புகட்ட முயற்சி செய்யவேண்டும்) முதலிடம் அவள் கல்விதான். பிறகு திருமணம் செய்யலாம். ருக் வேதத்தில் பெற்றோர் வீட்டில் இருக்கும் வயதான் பெண்கள் அமாஜூ: என்று குறிப்பிடப்படுகிறார்கள். அதனால் பாழுங் கிணற்றில் தள்ளித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாகத் தோன்றவில்லை.

ஒரு திருமணத்திற்கு பத்து பேர் இருந்தால் போதுமாம்.

வரஸ்ய பிதரெள வத்வா: பிதரெள சஹபாடினெள

வதூவரஞாதியுக்மம் ஆசர்யாச்ச புரோகித:

மணமகனின் பெற்றோர், மணமகளின் பெற்றோர் இருவரின் சொந்தக்காரர்கள் இருவர், ஆசிரியர், திருமணம் செய்து வைப்பவர் 2+2+4+1+1=10. இந்த பத்து பேருக்குக் குறைவாக இருக்ககூடாது என்கிறது இந்த சாத்திரம். இவர்களுடன் மணமக்களைச் சேர்த்தால் பன்னிரெண்டு.

இவர்களை மட்டும் வைத்து ஒரு திருமணம் நடத்தினோமென்றால் வீட்டிலேயே முடித்துவிடலாம். மண்டபம், சமையல் செய்பவர், விருந்து, லைட் மியூசிக் கச்சேரி என்று அலையவேண்டாம். பெண்ணைப் பெற்றவர்களுடைய பெரிய கவலை இந்த செலவுதானே? நமக்கும் மொய் யாரும் எழுதவேண்டாம், நாமும் யாருக்கும் தரவேண்டாம். இதற்கு பயந்து யாரும் பெண் சிசு வதை செய்யவேண்டாம், கருவிலேயே திருகவேண்டாம்.

இந்த ஆடம்பரத் திருமணங்கள் பெண்குலத்திற்கு எதிரி என்றே தோன்றுகிறது. ஒருமுறை மதுரையில் பெண்கள் கல்லூரி மாணவியர் முன்பு பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் என் எதிரே அமர்ந்திருந்தார்கள். "எங்கள் திருமணம் எளிமையான முறையில் நடைபெறும் என்று நீங்கள் உறுதி மொழி அளிக்கவேண்டும்' என்று நான் சொன்னேன். "செய்வோம்' என்று ஒரே குரலில் என்னைக் குளிர்வித்தார்கள். பிறகு அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியாது. என் விலாசத்தை நான் கொடுக்க

வில்லையே!

தைத்ரீய ஸம்ஹிதையில், "ப்த்னீ ஹி ஸர்வஸ்ய மித்ரம்'. இதற்கு பொருள் எளிதில் விளங்கும், ஆனாலும் சொல்கிறேன்: மனைவிதான் எல்லோரைக்காட்டிலும் உயர்ந்த நட்பு. இதை ஒவ்வொரு ஆணும் கடைபிடித்தால், வரதட்சணை கொடுமை சட்டம், குடும்ப வன்முறை சட்டம் போன்ற சட்டங்களுக்கு அவசியம் இருக்காது.

இது திருமணத்தைப்பற்றி சாதியைப்பற்றி என்ன கூறுகிறது என்றால்,

தன்மனுஷ்யே மனுஷ்யத்வம் கவி கோத்வம் ச வானரே

வானரத்வம் பிகே தத்வத் பிகத்வம் ஜாதிருச்யதே.

இதன் பொருள் என்னவென்றால் - மனிதனின் மனிதத் தன்மையும், ஆவினங்களின் ஆவினத் தன்மையும், குரங்குகளின் குரங்குத் தன்மையும், குயில்களின் குயில் தன்மையுமே சாதி என்பார்கள் என்பதுதான். இவ்வாறென்றால் ஒன்றே குலம் என்றே ஆகிறது. பிறகு கிளைகிளையாக சாதி எங்கிருந்து வந்தது?

இன்று கட்டப் பஞ்சாயத்து, கௌரவக்கொலை என்று பல வேடங்கள் தரித்து பெண்களை அடக்குவது நிறைவேற்றப்படுகிறது. கோத்திரம், சாதி இதெல்லாம் இந்த கொடுமைக்கு ஒத்துழைக்கும்.

ஸ்த்ரீபும்ஸயொர்மிதோ ராகாத் க்ராம்யதர்மே யதி ப்ரஜா:

ஜாயதே ஜாதிரனயோரேகான்யா மோஹகல்பிதா - என்று ஒரு சுலோகம்.

இதன் பொருள், ஒரு பெண்ணும் ஒரு ஆணும் ஒன்று பட்டு மக்களைப் பெற்றால், அங்கு சாதி என்பது ஒன்றுதான். கலங்கிய சித்தம்தான் வேற்றுமை பேசும். தொன்மையின் காவலர்கள் நாங்கள் என்று கூறுபவர்கள் இது போல் சமத்துவம் பேசும் சான்றுகளையும், பெண்மையை மதிக்கும் அறிவுரைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி மனிதன் செய்த குற்றமடி' என்று பாடலாமா? ஆதிக்கத்தை கையில் வைத்துக் கொள்ள சாதகமாக இருக்கும் சான்றுகளை மேற்கோள் காட்டிவிட்டு, சமத்துவம் பேசும் வரிகள் மறைக்கப்

பட்டனவா?

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 15-இன்படி ஒரு இந்துப் பெண் உயில் எழுதாமல் இறந்துவிட்டால் பின்வரும் வரிசையில் வாரிசுகள் அவள் சொத்தை அடைவார்கள். மக்கள், முன்பே இறந்த மகன் மகளின் மக்கள், கணவன், இவர்கள் யாரும் இல்லையென்றால் கணவனின் வாரிசுகள், அதன் பின் பெற்றோர்களின் வாரிசுகள். இதில் ஒரு விதிவிலக்கு.

அந்தப் பெண்ணுக்கு மக்கள் இல்லையென்றால் பெற்றோரிடம் இருந்து அவள் வாரிசுரிமையில் அடைந்த சொத்து பெற்றோரின் வாரிசுகளுக்கு செல்லும். ஒரு வழக்கு நடந்தது. நாராயணி தேவி என்ற ஒரு பெண். அவள் திருமணமாகி சில மாதங்களிலேயே கணவனை இழக்கிறாள். தாய் வீட்டிற்கு அனுப்பப்படுகிறாள். அங்கே அவள் படித்து, பணி புரிந்து, பொருளீட்டி பின் இறக்கிறாள்.

அவள் வங்கி சேமிப்புத் தொகையைக் கேட்டு அவள் தாய் நீதிமன்றத்தில் மனு கொடுக்கிறார். அவளுடைய கணவனின் சகோதரி மகனும் விண்ணப்பம் செய்கிறார். வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. தோற்றது தாய். காரணம், பெற்றோரிடமிருந்து வாரிசாகப் பெற்ற சொத்து மட்டும்தான் பெற்றோர் வகைக்கு செல்லும். அவளுடைய மற்ற சொத்தெல்லாம் கணவன் வாரிசுக்குத்தான் செல்லும் என்று சட்டம் சொல்கிறது.

வடமொழி நாரத ஸ்ம்ருதியில் ஒரு வரி. அப்ரஜாயா ஹரேத்பர்த்தா மாதா ப்ராதா பிதாபிவா. மக்கள் பெறாமல் இறந்த பெண்ணின் வாரிசுகள் இந்த வரிசையில். கணவன், தாயார், சகோதரன், தந்தை.

இந்த வரியை பின்பற்றி இந்து வாரிசுரிமை சட்டத்தை 1956-இல் இயற்றி இருந்தால் நாராயணி தேவியின் சொத்து அவர் தாயாருக்குத் தான் என்று தீர்ப்பாகியிருக்கும், துரத்திவிட்ட புக்ககத்தினருக்கு ஜாக்பாட் அடித்திருக்காது. 1956-இல் சட்டம் வந்த போது இது போல செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை? மறுபடியும் டி.எம்.எஸ்.சின் உன்னைச் சொல்லி-தான்.

இப்பொழுது விதவைகளைப் பற்றி பார்போம். சுவாஸினி என்ற சொல்லுக்கு ருக்வேத காலம் தொட்டு நல்ல உடை அணிந்தவள் என்றுதான் பொருள். கணவன் உயிருடன் இருக்க வேண்டும் என்று அப்பொழுது குறிப்பிடப்படவில்லை.

ஆனால், பிற்காலத்தில் கணவன் உயிருடன் இருக்கும் பெண்தான் சுவாஸினி என்று எவ்வாறு வந்ததோ தெரியவில்லை. கணவனை இழந்த பெண்ணிற்கு பல கட்டுப்பாடுகள் விதித்து அவளை நல்ல உடை உடுக்க அருகதை இல்லாமல் செய்து, அவள் சுவாஸினி இல்லை, அறுத்தவள், வீணாகப் போனவள் என்பது ஸ்தாபிக்கப்பட்டது.

இன்று அந்தப் பெண்கள் நல்ல உடை அணிந்து கொண்டாலும் அவர்களை சுவாஸினியாக சேர்த்துக் கொள்வதில்லை. ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் "சுவாஸின்யர்சனப்ரீதா' என்று வரும்.

அப்படியென்றால், நல்ல உடை அணிந்து போற்றுபவர்களை அவளுக்கு பிடிக்கும் என்றுதான் பொருள். நிச்சயமாக தெய்வம் "கணவன் உயிரோடு இருப்பவர்களைத்தான் நான் அணைப்பேன்' என்று சொல்லாது.

பத்யெள ப்ரவ்ரஜிதே நஷ்டே க்ரீவே பதிதே ம்ருதே

பன்சஸ்யாபத்ஸூ நாரீணாம் பதிரன்யோ விதீயதே.

கணவன் தொலைந்து போனால், இறந்து போனால், துறவறம் பூண்டால், ஆண்மை இழந்தவனாக இருந்தால், அவனுக்கு தீரா நோய் இருந்தால், அவன் சித்த சுவாதீனம் இழந்தால், பெண்பித்தனாக இருந்தால் }ஒரு பெண் மறுமணம் செய்யலாம் என்பது தான் மேற்கண்ட சுலோகத்தின் பொருள்.

தமிழும் வடமொழியும் ஒரே குரலில் ஒற்றுமையாக பேசுவது தெளிவு. இடையே விரோதம் இருப்பதாகத் தெரியவில்லை. பின் ஏன் கைபெண்ணுக்கு ஒரு கோலம் கொடுக்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணனின் "பாதையில் பதிந்த அடிக'ளில் (மணலூர் மணியம்மாளின் வாழ்க்கை) இந்த வரிகளைக் காணலாம். ஆனால், மொட்டையாகிப் போனவள் சொட்டூண்டு டிகாக்ஷன்கூட விடாமல் பாலைக் குடிக்கலாகாது. இந்தச் சாஸ்திரங்களை எந்த ரிஷி முனிவர்கள் எழுதி வைத்தார்கள்? இன்று இல்லை இந்த நிலை. உண்மை.

ஆனால் பெண் என்பவளின் மதிப்பும் உரிமையும் ஆண் சார்ந்தது என்ற நிலைதான் நிலவி வந்துள்ளது. இந்தக் கசண்டின் அடிக்கசப்பு தான் அந்த நாராயணி அம்மாள் வழக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தின் எதிரொலி தான் குடும்ப கெளரவம் என்ற பெயரிலும், சாதிக் கட்டுப்பாடு என்ற பெயரிலும் நடக்கும் கொடூரங்களும் பாரம்பரியம் என்றும் சொல்லி பெண்களை அடிமைபடித்துவதும். நாம் தேர்ந்தெடுப்பதுதானே மேற்கோள்கள்?

maduraimini
Posts: 477
Joined: 22 Sep 2009, 02:55

Re: Tit bits in Tamil

Post by maduraimini »

Venkatakailasam,

Thanks for posting the occupations and related names. It made me laugh . It was very good. We all need some laughs in between the everyday chores. Thanks again for some happy time.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

VK,
Thank you for bringing Prabha Sridevan's article from Dinamani. How thought-provoking it is! It touches the heart of all women folk, no doubt. As you did, hope many men paid attention to it too.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

That was by Thanjavooran...


Enjoy this one...from Thukluk..

Image

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

VK,
Love the cartoonist's work too, there!

Thanjavooran,
Thanks for bringing the article to us. I assumed it was VK's post...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

Shri VK
Excellent cartoon. Nowadays thondar adipodigal are very intelligent. Thanx for sharing.
Thanjavooran
07 08 2014

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

நேத்தி நைட் 12 மணிக்கு வந்த அக்கப்போர் .....

ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?

நல்லா இருக்கண்டா .....

அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?

அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும், மந்தாரமுமா இருக்கேன்

ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?

இரு ஒரு தம்ம பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவர்மென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா

அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?

இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக

சரி அதுக்கு என்ன ?

என்னத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வைக்கணும்?

(அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது ....இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )

டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு

அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக

சரி ......

அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்?

டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு கோவத்ல இருக்கேன் என்னை தேவை இல்லாம வெறுபேத்தாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு

ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட்,

கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... அதே நாய் தான் ......டென்சனா போன ஆன் பண்ணி

என்னடா மாப்ள ?

சாரி மாமா கோவிச்சுக்காத ....தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?

டேய் ............நீ திருநெல்வேலியில‌ இருக்க, நான் இங்க சென்னையில இருக்கண்டா "

இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் ... அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டான்

டேய்ய்ய்ய்

Share from a friend.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A divorce case!!!!!!!!!!!!.................. Ha ha ha
A share from my friend

இங்கே யார் ஏடாகூடம் . வழக்கறிஞரா அல்லது வாதி பிரதிவாதியா?
உங்களுக்கு விளங்கினால் சொல்லுங்கள்.
ஒட்டுமொத்தமாக நாமா அல்லது நீதியரசரா?

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல்அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாகவாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட்விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க.இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும்இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதிவாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”



இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம்.நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக்கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Image


பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின் ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது.
இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது.
இறுதியில் நீண்ட நேர முயற்ச்சி பலனளிக்காது குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது. சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

This is amazing!

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Tit bits in Tamil

Post by vgovindan »

மலரும் நினைவுகள் - எந்த்தநேர்ச்சினா?

பெங்களூருவில் வீணை சிட்டிபாபுவின் கச்சேரி. அவருடைய நண்பர்களும், இரசிகர்களுமாகிய ஒரு தம்பதி கச்சேரிக்கு வந்திருந்தனர். கணவர் முதல் வரிசையில் அமர்ந்து கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தார். கச்சேரி முடியும் வரை இருந்து கேட்க வேண்டும் என்பது அவருக்கு சிட்டிபாபு இட்டிருந்த அன்புக் கட்டளை.
அருகில் அமர்ந்திருந்த மனைவி பாதிக் கச்சேரியிலேயே வீட்டிற்குப் போக வேண்டும் என்று தனது கணவனை நச்சரிக்கத் தொடங்கிவிட்டார். ஒரு பாட்டு முடிந்ததும் அவர் எழுந்துபோய் கதவருகில் நின்றபடி தனது கணவனையும் வரும்படி சைகை செய்து கொண்டிருந்தார். தொந்தரவு பொறுக்க முடியாமல் கணவரும் அடுத்த பாட்டு முடிந்ததும் எழுந்து போகத் தலைப்பட்டார்.

இதையெல்லாம் ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்த சிட்டிபாபு, அடுத்தாற்போல வாசிப்பதற்குத் தேர்ந்தெடுத்த சாகித்யம், "உதய இரவிச்சந்திரிகா" இராகத்தில் அமைந்த "எந்த்தநேர்ச்சினா, எந்த்தஜுச்சினா" என்கிற சாகித்யம். அதாவது, "என்னதான் பெரிய சாதனையாளனாக இருந்தாலும், எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் மனைவிக்கு அடிமைதான்" என்று பொருள்பட அமைந்த சாகித்யம் இது.

நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முன்வரிசை இரசிகர்களும், பக்கவாத்தியக்காரர்களும் மட்டுமல்ல, அந்தத் தம்பதியரே சிரித்து விட்டனர். கணவனும் மனைவியும் மீண்டும் தத்தம் இடங்களில் வந்து அமர்ந்துவிட அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது!

கலாரசிகன்

நன்றி: தினமணி

I came across some interesting anecdote while searching for something else. These posts are of much older than the date of posting which is around 2008 and 2009.
Please refer to https://groups.google.com/forum/#!topic ... 0-false%5D
Please invoke "Sri Sritharan"

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala »

Ref: Post #167.

The lioness did not die ! It just went to sleep !!

The original story was posted on 12th September 2008 by Gerry van der Walt, a South African wildlife and nature photographer. And from then on several twisted versions started appearing with political and emotional overtones.

When Gerry van der Walt started receiving email after email asking whether it is true that the lioness died of sorrow, he wrote again in 2009 that "the lioness is still alive and well (all be it a little older) living in the Madikwe Game Reserve".

Read the Original Post and the Follow Post at: http://www.wild-eye.co.za/photochat/the-real-story/

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Tit bits in Tamil

Post by sridhar_ranga »

Excerpt from today's news item - it seems the Chief Minister of SriLanka's Northen Province, C.V. Vigneswaran, was very interested in learning Carnatic Music in his childhood.
என் வாழ்க்கையில் நடந்த சங்கீதம் பற்றிய ஒரு நிகழ்வை இங்கு கூறி வைக்கலாம் என்று நினைக்கின்றேன். சுமார் 65 வருடங்களுக்கு முன்னர் இது நடந்தது.

அந்தக் காலத்தில் பொதுவாக வானொலி தான் எம்மைத் தென்னிந்திய கர்நாடக இசைக் கலைஞர்களுடன் சேர்த்து வைத்தது. மதுரை மணி ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், வி.வி. சடகோபன் , உறையூர் இராஜ கோபாலசர்மா, அரியக்குடி இராமானுஜம் ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மாரியப்ப சுவாமிகள், மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் என்று பல இசை மேதைகளின் பெயர்கள் இப்பொழுதும் மனதில் பதிந்து இருக்கின்றன.

அவர்களின் பாடல்களைத் தான் காலையில் எழுந்தவுடன் ஆல் இந்தியா ரேடியோ, திருச்சி வானொலி நிலையத்தில் இருந்து கேட்போம். அவற்றைக் கேட்டுக் கேட்டு அடிப்படைச் சங்கீத அறிவு எதுவும் இல்லாமலே பல பாடல்களை அவர்களைப் போல் பாடும் ஆற்றலை அப்போது பெற்றிருந்தேன்.

அப்போது எனக்கு வயது 10 அல்லது 11 இருக்கும். ஒரு நாள் நான் என் தாயாரிடம் கர்நாடக இசை படிக்க வேண்டும் என்று கேட்டேன். அம்மாவுக்கு மயக்கம் வந்து விடும் போல் இருந்தது. “முதலில் பாடங்களைப் படி; அதற்குப் பிறகு கர்நாடக இசை பற்றிப் பார்க்கலாம் என்றார். நான் வற்புறுத்திக் கொண்டே வந்தேன்.

ஒரு நாள் என்னை எங்கள் கொழும்பு வீட்டு வாசலுக்கு அழைத்தார். “அந்தா போகின்றார் அவரைப் பார்த்தாயா?” தெருவில் சென்ற ஒருவரைச் சுட்டிக் காட்டிக் கேட்டார் என் தாயார். நான் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு முதியவர். சுதேச உடையில் காட்சி தந்தார். வெற்றிலையைச் சப்பி சப்பிக் கொண்டே சென்று கொண்டிருந்தார். ஒரு கையில் குடை, மறு கையில் சுருதிப் பெட்டி, மிக உக்கிரமாக வெய்யில் தகித்துக் கொண்டிருக்க தமது பருத்த உடலைத் தூக்க முடியாது ஆடி ஆடி நடந்து போய்க் கொண்டிருந்தார்.

“இந்தக் கர்நாடக இசை அது இது என்று உன் மனதைக் குழப்பிக் கொண்டாயானால் அந்த ஐயங்காரைப் போல நீயுந் தெருத் தெருவாய் அலைய வேண்டி வரும். இசைப் பாடகர்கள் எவ்வளவு வறிய வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்று உனக்குத் தெரியுமா? உன் தந்தை தாய் இரு பக்கத்துக் குடும்பங்களில் எல்லோருமே வழக்கறிஞர்கள்.

முதலில் அதற்கேற்றவாறு படி. அதன்பின் சங்கீதம் பற்றிப் பார்க்கலாம்” என்றார். தெருத் தெருவாய் அலைய வேண்டி வருமோ என்ற பயத்தில் கர்நாடக சங்கீதம் பற்றி என் தாயாருடன் அதன்பின் பேசவில்லை.
For the full article, please click here

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Depicting the olden days plight of Sangeetha Vidwans...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

ஓர் இளைஞன் B.E பட்டதாரி. எங்கெங்கோ வேலை தேடினான்.

அவன் ஏறி இறங்காத நிறுவனங்களே இல்லை.
எங்கும் வேலை கிடைக்க வில்லை. ஒரு நாள்
அந்த ஊருக்கு ஒரு சர்கஸ்கம்பெனி வந்தது.
அதிலாவது ஏதேனும் வேலை கிடைக்குமா என்று அந்த
சர்க்கஸ் கம்பெனி முதலாளியைப் பார்த்துக் கேட்டான்.
அவனும் வேலை காலி இல்லை என்றான்.
பிறகு இவன் எப்படியாவது ஒரு வேலை கொடுங்கள்
என்று கெஞ்சினான். அந்த முதலாளி சொன்னான்.
தம்பி கம்பெனியில் இருந்த குரங்கு ஒன்று நேற்று இறந்துவிட்டது.

அந்த வேலையை நீ செய்வதாக இருந்தால்
உன்னை சேர்த்துக் கொள்கிறேன் என்றார்.
சரி என்று அவனும் ஒப்புக்கொடு வேலைக்குச்
சேர்ந்தான். குரங்கு செய்யும் வித்தைகளை எல்லாம்
கற்றுக்கொண்டு குரங்கு வேசம் போட்டு இவனும் செய்தான். ஒரு நாள் சர்கஸ் நடந்து கொண்டிருந்தது.
பெருந்திரளாக கூட்டம் கூடியிருந்தது. அரங்கில் உயரத்தில் தொங்கிய ஊஞ்சலில்
இருந்து குரங்கு வித்தைகளை செய்யும்போது கைநழுவி கீழே விழுந்து விட்டான்.

அடி அவ்வளவாகப்படவில்லை. ஆனால்
இவன் கீழே விழுவதற்கும் அங்கே கூண்டிலிருந்த
சிங்கத்தைத் திறந்து விடுவதற்கும் சரியாக
திறந்து விடுவதற்கும் சரியாக இருந்தது.
நடுங்கிப் போனான். வயிற்றுப் பசியை போக்கவே வேலை தேடி இங்கு வந்தோம். இன்று சிங்கத்தின் வயிற்றுக்கு இரையாகப் போகிறோம் என்று அஞ்சி நடுங்கினான்.
பேச நாகூட வரவில்லை. இவன் அஞ்சி நடுங்குவதை சிங்கம் பார்த்து. அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தது.

சரி நம் கதை முடிந்தது என்று நினைத்தான். குரங்கு வேடத்தில் இருந்த B.E பட்டதாரி. சிங்கம் மெல்ல வாயைத்
திறந்து பேசியது. “ஏ! B.E! பயப்படாதே நான் M.E, ”

என்றது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்
எப்படி இருக்கிறது என்பதை இக்கதை விளக்குகிறது..

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

அய்யா தெரியாதையா நீயும் என்னை போலத்தான் என்று. நல்ல காலம்
தப்பித்தேன்
தஞ்சாவூரான்
04 09 2014

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

நூறு கோழி குஞ்சு குடுப்பா

போன வாரம் தான நூறு கோழி குஞ்சு வாங்கிண்டு போய் கோழி பண்ண வைக்க போறேன்னு சொன்னீங்க என்ன ஆச்சு?

ஒன்னும் வளரலப்பா !

இந்த தடவையாவது எல்லா கோழி குஞ்சும் நல்லா வளர்ந்து நீங்க பெரிய ஆளா வாங்க சார்

கண்டிப்பா வருவோம்ல போன தடவ என்ன தப்பு செஞ்சேன்னு கண்டுபிடிச்சிட்டோம்ல

போன தடவ என்ன சார் தப்பு பண்ணுனீங்க‌?

ரொம்ப ஆழமா நட்டுட்டேன்பா !!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

அதிர்ச்சி தகவல்"! தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான்.

வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில்
நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம்
பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில்
நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர்
யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி" அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங் கொள்ளையடிக் கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும்.

ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்?
பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை.
அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை 'கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். ......

அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது. சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு. உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்?

செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க
வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன்
நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க
வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட
மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில்
திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

சில சர்தார்ஜி ஜோக்ஸ் இன்னிக்கு உங்களுக்காக..

(1)
ஒரு ரயில் பயணத்தில் ஒரு சர்தார்ஜியும் விஸ்வநாதன் ஆனந்தும் ஒன்றாக செல்ல நேரிடுகிறது. பயண்த்தில் சலிப்பு ஏற்படாமல் இருக்க சதுரங்கம் (செஸ்) ஆட வருமாறு ஆனந்த் அழைக்கிறார்.
சர்தார்ஜி : "வேண்டாம். நீங்கள் தேர்ந்த ஆட்டக்காரர். என்னை தோற்கடித்து விடுவீர்கள்."
ஆனந்த் : "சரி. நான் இடது கையால் ஆடுகிறேன் வாருங்கள்."
சர்தார்ஜி : "அப்படியானால் சரி."
என்ன நடந்தது என்று சொல்லவும்
வேண்டுமா?
சர்தார்ஜி சோகமாக நடந்து சென்று பக்கத்துப் பெட்டியில் இருக்கும் இன்னொரு சர்தார்ஜியிடம்
சொல்கிறார்..
சர்தார்ஜி 1 : "டேய், ஆனந்த் இடது கையில் விளையாண்டு கூட நான் தோற்றுவிட்டேன் !
சர்தார்ஜி 2: அவர் உன்னை நல்லா ஏமாத்திட்டாருடா. அவரு இடதுகை பழக்கமுள்ளவர்தான் !!

2.சர்தார்ஜி விற்காத கார்
டெல்லியில் இருந்த சர்தார்ஜி தனது பழைய காரை விற்க நினைத்தார். அந்தக் கார் ஏற்கனவே ஒரு லட்சம் மைலுக்கு மேல் ஓடிவிட்ட்து.அதிக தூரம் ஓடியிருந்தால் யாரும் நல்ல விலைக்கு கேட்கவில்லை.
சென்னை நண்பரிடம் யோசனை கேட்க ,அந்த நண்பர் ஒரு மெக்கானிக்கை அனுப்பி வைத்தார்.
சர்தார்ஜியின் கார் மீட்டரை அட்ஜஸ்ட் செய்து வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் மட்டும் ஓடியிருப்பது போல மெகானிக் மாற்றி விட்டார்.
சில நாட்கள் கழித்து சென்னை நண்பர் சர்தார்ஜியைத் தொடர்பு கொண்டு பேசியபோது ’’ஏன் இன்னும் அந்தக் காரை விற்கவில்லை?’’ என்றார்.
அதற்கு சர்தார்ஜி ,’’அது வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர்தானே ஓடியிருக்கிறது.ஏன் விற்கணும்?’ என்று பதில் சொன்னார்!.


3. சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...
காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...
இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...
சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?
சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்.....!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

A share from my friend

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது.
உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு
வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக்
கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது
போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்??
என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு
வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ
??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல்
அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து
கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து
செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம்
நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல்
இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய
முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது,
அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய்
அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “
அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல்
முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக்
கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள்
இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த
மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக்
படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

த‌ஞ்சாவூரான்,
'முகப் புத்தகம்' கணக்கு எனக்கு இல்லாவிடினும், அதிலிருப்பவர்கள் சொல்வதை நீங்கள் எடுத்துச் சொல்வதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேனில்லையா? நானும் ஒரு முட்டாள்தான்.

அப்படியிருந்தாலும், அமைச்சருக்கும் அரசருக்கும் கூட இருக்கும் நகைச் சுவையை ரசித்தேன் :)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

அரசி அவர்களே
எவ்வளவு தந்திரமாக நாசுக்காக தஞ்சாவூரானும் அந்த வரிசையில் சேர்ந்து விட்டதை வெளிப்படுதியதனை வெகுவாக ரசித்தேன். வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
26 10 2014

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் !

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

சினிமாகாரன் தொல்ல தாங்க முடியலப்பா..!!
TOILET போன.. "அப்பாஸ்" ஹார்பிக் வச்சுக்கிட்டு நிக்கிறார்..!!
டீ கடைக்கு போனா.. கார்த்தியும்,, சூர்யா'வும் நிக்கிறாங்க.. sunrise வேணுமா.. Brue வேணுமானு கேட்குறாங்க..!!
குளிக்கலாம்னு பாத்ரூம் போனா.. உள்ளே கரீனா கபூரும்,, தீபிகா படுகோனும் நிக்கிறாங்க.. LUX soap வேணுமா.. Dove soap வேணுமானு கேட்குறாங்க..!!
சாப்பிடலாம்னு உட்காந்திருந்தா.. சினேகா அக்கா ஆசீர்வாத் சப்பாத்திய எடுத்துக்கிட்டு வாராங்க..!!
ஆபீஸ்'க்கு போகலாம்னு.. பைக்க ஸ்டாட் பன்னுனா.. உடனே ஷாருக்கான் வந்து.. Honda பைக் வாங்குங்க.. மைலேஜ் கொடுக்கும்'னு சொல்றாரு..!!
பிஸ்கட் வாங்கலாம்னு கடைக்கு போனா.. அங்கே அமிதாப் பச்சன் நிக்கிறாரு.. Kukies பிஸ்கட் வாங்குங்கனு சொல்றாரு..!!
மனைக்கு Dress எடுக்கலாம்னு போனா.. அங்கே அனுஷ்கா,, திரிஷா,, ராதிகா தொல்லை தாங்க முடியல..!!
வேட்டி சட்டை வாங்கலாம்னா..
சரத்குமார்,, ஜெயராம்,, மம்முட்டி நம்ம முன்னாடி வந்து நிக்கிறாங்க..!!
கோல்டு வாங்கலாம்னு கடைக்கு போனா.. மொத்த சினிமாகாரங்களும் நம்ம பின்னாலயே வர்ராங்க..!!
இதை வாங்குங்க.. அதை வாங்குங்கனு சொல்றதுக்கு முன்னாடி.. இப்படி சம்பாதிங்க.. அப்படி சம்பாதிங்க'னு.. நல்ல ஐடியா குடுங்கையா.. மொதல்ல..!!
உங்க தொல்ல தாங்க முடியல சாமி ...

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Tit bits in Tamil

Post by Ponbhairavi »

எது உயர்ந்தது ?


புத்தக கண் காட்சிக்கு போயிருந்தேன் . என் நண்பர் அங்கு ஒரு ஸ்டால் போட்டிருந்தார் . புத்தக ரசிகர்கள் புத்தகங்களை புரட்டி பார்த்து
கொண்டிருந்தனர் இசை அன்பர்கள் ஒலி தகடுகளை பார்ப்பதை போல் .
ஏன் நண்பரை கேட்டேன் : எந்த விதமான புத்தகங்கள் நன்றாக விற்கின்றன என்று
கவிதைகள நன்றாக போய் கொண்டிருக்கின்றன என்றார்.
எந்த மாதிரியான கவிதைகள் ,சிலப்பதிகாரம் போன்ற கவிதைகளா ?
இல்லை சார் ,சிலப்பதிகாரத்தை விட பாரதியார் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகளுக்கு தான் மக்களிடம் நல்ல வரவேற்பு
அருகே இருந்த ஒருவர் சண்டைக்கு வந்துவிட்டார் .சிலப்பதிகாரத்தை விட பாரதியார் ,கண்ணதாசன் கவிதைகள் தான் உயர்ந்தவை என்று எப்படி நீங் கள் சொல்லலாம் ?
உயர்ந்தவை என்று நான் சொல்லவில்லையே மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று தானே சொன்னேன்.
சிலப்பதிகாரம் உலகம் புகழ் காப்பியம் தெரியுமா?
யார் இல்லை என்று சொன்னார்கள்
இரண்டாயிரம் வருடங்களாக அழியாமல் இருப்பது தெரியுமா?
தெரியுமே
தமிழ் யாப்பிலக்கணத்தின் மேன்மையை உணர்த்தும் படைப்பு .அந்த யாப்பு நயம் பாரதியிடமும் கண்ணதாசனிடமும் உண்டா?
அது வேறு கவிதை இது வேறு கவிதை , இரண்டுமே கவிதைகள் தான்.
இளங்கோவடிகளை சொன்ன அதே வாயால் நீர் பாரதியையும் கண்ண தாசனையும் சொன்னதே தவறு.
மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது வியாபாரம் ஆகிறது என்று தானே சொன்னேன்.
சிலப்பதிகாரம் புத்தகத்திற்கு பக்கத்தில் இந்த புத்தகங்களை நீர் அடுக்கி வைத்திருப்பதே தமிழ் துரோகம்.இங்கு எல்லோரும் இதை பார்த்துவிட்டு எப்படித்தான் சும்மா போய்கொண்டிருக்கிறார் களோ தெரியவில்லை. அறிஞர்களா இவர்கள்.?சீத்தலை ச்சாத்தனார் இருந்தால் உம் தலையில் எழுத்தாணியால் குத்தியிருப்பார்.
ஏன் நண்பர் ஒன்றும் சொல்லவில்லை. எதற்கு வீண் வம்பு ? சிலருக்கு அதே தொழில். என்னிடம் சொன்னார் வாரும் ஒரு காபி சாப்பிட்டு விட்டு வருவோம் என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு உணவு விடுதிக்கு வந்தார்.
அங்கு செர்வரிடம் கேட்டேன்.
என்னப்பா - இன்றைய ஸ்பெஷல் ?
பேல் புரி , பானி புரி என்றான்
கோதுமை ரவா இட்லி இல்லையா என்றேன்
இருக்கு சார்,
அதை விட இ ன்றைக்கு பேல் புரி, பானி புரிக்கு தான் நல்ல டிமாண்ட் என்று சொன்னேன்
பேல் புரி ரவா இட்லியை விட அப்படி என்ன ஒசத்தி ? என்றேன் நான் செர்வரிடம்
ஒசத்தி ,மட்டம்,என்று நான் சொல்லவில்லை சார், இன்று நல்ல ஓட்டம் என்று தான் சொன்னேன்.
எல்லாமே கோதுமையில் பண்ணினது தானே ?
ஆமாம் அனால் இன்றைய இளைஞர்களுக்கு இதில் தான் நாட்டம்.
இட்லி ஆவியில் வெந்தது , உடம்புக்கு நல்லது தெரியுமா ?
சரி , ரவா இட்லி யும் தான் இருக்கே . கொண்டு வரேன் உங்களுக்கு பிடித்தால் அதை சாப்பிடுங்கள் . லோகோ பின்ன ருசி என்றான் சர்வர். அவன் உலகியல் தெரிந்தவன்
சற்றுமுன் வம்புக்கு வந்த சிலப்பதிகார நண்பர் இப்போது உணவு விடுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தார் .
நண்பர் செர்வரிடம் ,சரி சரி இரண்டு பேல் புரி கொண்டுவா என்று சொல்லி விட்டு என்னைப் பார்த்து உனக்கும் இப்போது அவர் வாடை தொற்றிக் கொண்டு விட்டது என்று நினைக்கிறேன் என்றார் .
பில் பணத்தை நண்பர் கொடுத்தபோது திரும்பி பார்த்தேன். சிலப்பதிகாரம் பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்தது

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala »

பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்த சிலப்பதிகாரத்தின் பெயர் என்னவோ ? !!

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

பாலா,
உள்ளூர்க்காரர்களின் க்யூரியாஸிடி :)

பாணி பழம் இலக்கியமே என்றாலும், தண்ணீரிலூறிய வடக்கத்திய பண்டமவர் வாய்க்கு ருசி--துரைசாணி தின்னும் பெரெட்டும் பட்டருமோ? மோரு குடிப்பதை விடவோ வந்து சேர்ந்த பண்டம்?
'காணி நிலம்' பாடியவன் சொன்ன 'வஞ்ச‌னை செய்யும் வாய்ச் சொல் வீரரில்' ஒருவர்தானோ இவர்?.. உமக்கும் தெரிந்தவரோ??!!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Tit bits in Tamil

Post by Ponbhairavi »

யாரோ இவர் யாரோ என்ன பேரோ
என்றதும் எனக்கு அருணாச்சல கவிராயரின்
பைரவி கிர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது
ஏன் பெயருடன் அது ஒட்டிகொண்டிருப்பதலோ ?
இது வேறு ராகம் ,ரகம் .
ஒற்றை காலில் நின்றுகொண்டிருக்கும்
"ஒண்ணே மதியுள்ள கொக்கு
அது உலகத்தை ப் பார்க்க ஒரே கண்
அதுவும் காமாலை
மஞ்சள் தவிர வேறு நிறம் தெரியாது.
பாலா சிறந்த ஓவியர் என்பது பலருக்கு
தெரியாமல் இருக்கலாம்.
கீழே கிடந்த கை வளையல் துண்டை வைத்துகொண்டு
அழகியின் படத்தை வரைந்த தமிழ் கலைஞர் பரம்பரையில்
வந்தவர் . அவருக்கு இது போதும்

அரசியார் அறியாததா?

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

அடடா! பேல்பூரிக்காரர் உம்மிருவருக்கும் தெரிந்த எவரோ என எண்ணினேன். பெர்ஸொனாலிடி அடாஸாகத் தோன்றியது. அவ்வளவுதான். பி சியில் எனக்குத் தெரிந்தவர் இரு பி பிகள் தவிர வேறு யாருமில்லை.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Actually when I was reading " யாரோ இவர் யாரோ என்ன பேரோ
என்றதும் எனக்கு அருணாச்சல கவிராயரின்
பைரவி கிர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது "..

I was listening to M Santhanam's version of.....

p-Santhanam 004-Yaaro enru ennamale-Sankarabaranam..

http://mfi.re/listen/tgtdu3ayw74w2x2/p- ... aranam.mp3

Is it a coincidence??

maduraimini
Posts: 477
Joined: 22 Sep 2009, 02:55

Re: Tit bits in Tamil

Post by maduraimini »

Sri Venkatakailasam- Thanks. That was a funny one. Can you call an Electrician 'Paranjothi'?

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Tit bits in Tamil

Post by sridhar_ranga »

arasi wrote:பி சியில் எனக்குத் தெரிந்தவர் இரு பி பிகள் தவிர வேறு யாருமில்லை.
அரசியாரே ஜி_எம் அல்லது க_மூ என்ற பெயரில் இப்போதெல்லாம் நிறைய போஸ்ட் செய்பவரும் புதுவையில் இருப்பதாய் எழுதியதாக ஞாபகம் - உங்களுக்குத் தெரிந்தவர் தான் என்று நினைக்கிறேன்.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

Sridhar,
No. I don't think I can connect.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Tit bits in Tamil

Post by sridhar_ranga »

Arasi, I was referring to Ganesh_Mourthy who IIRC lives in Puduvai.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Tit bits in Tamil

Post by arasi »

Ah, so? Didn't know that!

There is a certain Puduvai stamp, don't you agree (though of different brands) about them? PuduvaikkaDal kATRu, that certain individuality about them--bhArathi's gift to the place ?? :)

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Tit bits in Tamil

Post by Pratyaksham Bala »

OMG!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

BUSINESS TACTICS

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.


நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க...? கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் . சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி.? நவ தானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . .!!
கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ? கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

Image

ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம்.

அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரி, "குரங்களுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார்... ஆச்சர்யமாய் இருந்தது.. விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்...

"சுற்றிப்பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள்.

ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன...

இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்தப்பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்குரங்குகள் மாறி விடுகின்றன...

வரிசையில் உட்காந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சைஎடுக்கும் ஜீவங்களாக மாறிவிடுகின்றன...

எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே ஆரோக்கியமானது"- என்று பதில் சொன்னார்...

நிறைய யோசிக்க வைத்தது!!...
share from Dinakaran

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Tit bits in Tamil

Post by thanjavooran »

ஆம் . கண்டிப்பாக யோசிக்க வேண்டிய ஒன்று. நாமே ஒரு வழியை / பழக்கத்தை உண்டு பண்ண காரணராகிறோம் .

A share from my friend

பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.

எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.

இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த ❄ காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!

ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.

உடனே, ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான்.

அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு ↪ திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?

இங்கே போடப்பட்டுள்ள கிளைகளை கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம்.

அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.

""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை ⤵ மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .

அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.

இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக முக்கியம்..

நீ நல்லவனா கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுதிதவள் உன் தாய்
எத்துனை ஜன்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாது என்றால் அது உன் தாயின் கருவரை என்பதை மறந்து விடாதே
எத்தனையோ கஷ்டங்கள்
நஷ்டங்கள்
துன்பங்கள்
துயரங்கள்
அசிங்கங்கள்
அவமானங்கள்
கடந்த பிறகும் ஒன்ருமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொன்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும்
புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை
நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்.

அவர்களை கண் போன்று பாதுகாப்போம்

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Tit bits in Tamil

Post by vgovindan »

venkatakailasam wrote: ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன...

இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்தப்பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்குரங்குகள் மாறி விடுகின்றன...

வரிசையில் உட்காந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சைஎடுக்கும் ஜீவங்களாக மாறிவிடுகின்றன...

எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே ஆரோக்கியமானது"- என்று பதில் சொன்னார்...

நிறைய யோசிக்க வைத்தது!!...
இந்திய நாட்டில், முக்கியமாக தமிழ்நாட்டில், மக்கள் இம்மாதிரி - பிச்சையெடுப்பவர்கள் போன்று - மாறி வருகின்றார்களே - patronage அரசியல் செய்து, மக்களுக்கு இலவசமாக உணவுப்பொருட்களும், துணிமணிகளும், வேலையின்றி வருடத்தில் 120 நாள் சம்பளம் என்ற பெயரில் doles தந்து வருகின்றார்களே - நாம் யாரும் கண்டுகொள்ளவில்லையே! உழைப்புக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதே!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Tit bits in Tamil

Post by venkatakailasam »

yes...That was very much in my mind...when I posted ...Shri Govindan

Post Reply