Tit bits in Tamil
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Tit bits in Tamil
அதிர்ச்சி தகவல்"! தங்கம் வாங்க போறீங்களா..?!
நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான்.
வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில்
நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம்
பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!
வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில்
நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர்
யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி" அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங் கொள்ளையடிக் கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும்.
ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்?
பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை.
அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை 'கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். ......
அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது. சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு. உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்?
செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?
பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க
வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன்
நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க
வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட
மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில்
திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?
மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான்.
வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில்
நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம்
பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!
வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில்
நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர்
யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி" அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங் கொள்ளையடிக் கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும்.
ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்?
பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை.
அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை 'கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். ......
அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது. சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு. உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்?
செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?
பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க
வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன்
நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க
வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட
மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில்
திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?
மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Tit bits in Tamil
சில சர்தார்ஜி ஜோக்ஸ் இன்னிக்கு உங்களுக்காக..
(1)
ஒரு ரயில் பயணத்தில் ஒரு சர்தார்ஜியும் விஸ்வநாதன் ஆனந்தும் ஒன்றாக செல்ல நேரிடுகிறது. பயண்த்தில் சலிப்பு ஏற்படாமல் இருக்க சதுரங்கம் (செஸ்) ஆட வருமாறு ஆனந்த் அழைக்கிறார்.
சர்தார்ஜி : "வேண்டாம். நீங்கள் தேர்ந்த ஆட்டக்காரர். என்னை தோற்கடித்து விடுவீர்கள்."
ஆனந்த் : "சரி. நான் இடது கையால் ஆடுகிறேன் வாருங்கள்."
சர்தார்ஜி : "அப்படியானால் சரி."
என்ன நடந்தது என்று சொல்லவும்
வேண்டுமா?
சர்தார்ஜி சோகமாக நடந்து சென்று பக்கத்துப் பெட்டியில் இருக்கும் இன்னொரு சர்தார்ஜியிடம்
சொல்கிறார்..
சர்தார்ஜி 1 : "டேய், ஆனந்த் இடது கையில் விளையாண்டு கூட நான் தோற்றுவிட்டேன் !
சர்தார்ஜி 2: அவர் உன்னை நல்லா ஏமாத்திட்டாருடா. அவரு இடதுகை பழக்கமுள்ளவர்தான் !!
2.சர்தார்ஜி விற்காத கார்
டெல்லியில் இருந்த சர்தார்ஜி தனது பழைய காரை விற்க நினைத்தார். அந்தக் கார் ஏற்கனவே ஒரு லட்சம் மைலுக்கு மேல் ஓடிவிட்ட்து.அதிக தூரம் ஓடியிருந்தால் யாரும் நல்ல விலைக்கு கேட்கவில்லை.
சென்னை நண்பரிடம் யோசனை கேட்க ,அந்த நண்பர் ஒரு மெக்கானிக்கை அனுப்பி வைத்தார்.
சர்தார்ஜியின் கார் மீட்டரை அட்ஜஸ்ட் செய்து வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் மட்டும் ஓடியிருப்பது போல மெகானிக் மாற்றி விட்டார்.
சில நாட்கள் கழித்து சென்னை நண்பர் சர்தார்ஜியைத் தொடர்பு கொண்டு பேசியபோது ’’ஏன் இன்னும் அந்தக் காரை விற்கவில்லை?’’ என்றார்.
அதற்கு சர்தார்ஜி ,’’அது வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர்தானே ஓடியிருக்கிறது.ஏன் விற்கணும்?’ என்று பதில் சொன்னார்!.
3. சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...
காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...
இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...
சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?
சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்.....!
(1)
ஒரு ரயில் பயணத்தில் ஒரு சர்தார்ஜியும் விஸ்வநாதன் ஆனந்தும் ஒன்றாக செல்ல நேரிடுகிறது. பயண்த்தில் சலிப்பு ஏற்படாமல் இருக்க சதுரங்கம் (செஸ்) ஆட வருமாறு ஆனந்த் அழைக்கிறார்.
சர்தார்ஜி : "வேண்டாம். நீங்கள் தேர்ந்த ஆட்டக்காரர். என்னை தோற்கடித்து விடுவீர்கள்."
ஆனந்த் : "சரி. நான் இடது கையால் ஆடுகிறேன் வாருங்கள்."
சர்தார்ஜி : "அப்படியானால் சரி."
என்ன நடந்தது என்று சொல்லவும்
வேண்டுமா?
சர்தார்ஜி சோகமாக நடந்து சென்று பக்கத்துப் பெட்டியில் இருக்கும் இன்னொரு சர்தார்ஜியிடம்
சொல்கிறார்..
சர்தார்ஜி 1 : "டேய், ஆனந்த் இடது கையில் விளையாண்டு கூட நான் தோற்றுவிட்டேன் !
சர்தார்ஜி 2: அவர் உன்னை நல்லா ஏமாத்திட்டாருடா. அவரு இடதுகை பழக்கமுள்ளவர்தான் !!
2.சர்தார்ஜி விற்காத கார்
டெல்லியில் இருந்த சர்தார்ஜி தனது பழைய காரை விற்க நினைத்தார். அந்தக் கார் ஏற்கனவே ஒரு லட்சம் மைலுக்கு மேல் ஓடிவிட்ட்து.அதிக தூரம் ஓடியிருந்தால் யாரும் நல்ல விலைக்கு கேட்கவில்லை.
சென்னை நண்பரிடம் யோசனை கேட்க ,அந்த நண்பர் ஒரு மெக்கானிக்கை அனுப்பி வைத்தார்.
சர்தார்ஜியின் கார் மீட்டரை அட்ஜஸ்ட் செய்து வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் மட்டும் ஓடியிருப்பது போல மெகானிக் மாற்றி விட்டார்.
சில நாட்கள் கழித்து சென்னை நண்பர் சர்தார்ஜியைத் தொடர்பு கொண்டு பேசியபோது ’’ஏன் இன்னும் அந்தக் காரை விற்கவில்லை?’’ என்றார்.
அதற்கு சர்தார்ஜி ,’’அது வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர்தானே ஓடியிருக்கிறது.ஏன் விற்கணும்?’ என்று பதில் சொன்னார்!.
3. சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...
காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...
இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...
சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?
சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்.....!
-
- Posts: 2980
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Tit bits in Tamil
A share from my friend
நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது.
உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு
வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”
“ஆம் மன்னா!”
“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக்
கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது
போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்??
என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.
ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு
வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ
??”
“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.
“தொடரும்” என்றார் மன்னர்.
“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல்
அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து
கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து
செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம்
நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.
“சரி அடுத்து”
“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல்
இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய
முட்டாள்”
“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”
“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது,
அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய்
அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”
மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “
அடுத்தது” என்றார்.
””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல்
முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.
ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.
“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக்
கொண்டார் மன்னர்.
“சரி எங்கே முதலாவது முட்டாள்?”
அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள்
இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த
மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக்
படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”
கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!
நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது.
உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு
வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”
“ஆம் மன்னா!”
“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக்
கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது
போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்??
என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.
ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு
வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ
??”
“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.
“தொடரும்” என்றார் மன்னர்.
“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல்
அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து
கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து
செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம்
நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.
“சரி அடுத்து”
“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல்
இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய
முட்டாள்”
“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”
“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது,
அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய்
அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”
மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “
அடுத்தது” என்றார்.
””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல்
முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.
ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.
“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக்
கொண்டார் மன்னர்.
“சரி எங்கே முதலாவது முட்டாள்?”
அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள்
இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த
மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக்
படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”
கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!
-
- Posts: 16787
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Tit bits in Tamil
தஞ்சாவூரான்,
'முகப் புத்தகம்' கணக்கு எனக்கு இல்லாவிடினும், அதிலிருப்பவர்கள் சொல்வதை நீங்கள் எடுத்துச் சொல்வதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேனில்லையா? நானும் ஒரு முட்டாள்தான்.
அப்படியிருந்தாலும், அமைச்சருக்கும் அரசருக்கும் கூட இருக்கும் நகைச் சுவையை ரசித்தேன்
'முகப் புத்தகம்' கணக்கு எனக்கு இல்லாவிடினும், அதிலிருப்பவர்கள் சொல்வதை நீங்கள் எடுத்துச் சொல்வதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேனில்லையா? நானும் ஒரு முட்டாள்தான்.
அப்படியிருந்தாலும், அமைச்சருக்கும் அரசருக்கும் கூட இருக்கும் நகைச் சுவையை ரசித்தேன்
-
- Posts: 2980
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Tit bits in Tamil
அரசி அவர்களே
எவ்வளவு தந்திரமாக நாசுக்காக தஞ்சாவூரானும் அந்த வரிசையில் சேர்ந்து விட்டதை வெளிப்படுதியதனை வெகுவாக ரசித்தேன். வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
26 10 2014
எவ்வளவு தந்திரமாக நாசுக்காக தஞ்சாவூரானும் அந்த வரிசையில் சேர்ந்து விட்டதை வெளிப்படுதியதனை வெகுவாக ரசித்தேன். வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
26 10 2014
-
- Posts: 2980
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Tit bits in Tamil
பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் !
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,
ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,
ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.
-
- Posts: 2980
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Tit bits in Tamil
சினிமாகாரன் தொல்ல தாங்க முடியலப்பா..!!
TOILET போன.. "அப்பாஸ்" ஹார்பிக் வச்சுக்கிட்டு நிக்கிறார்..!!
டீ கடைக்கு போனா.. கார்த்தியும்,, சூர்யா'வும் நிக்கிறாங்க.. sunrise வேணுமா.. Brue வேணுமானு கேட்குறாங்க..!!
குளிக்கலாம்னு பாத்ரூம் போனா.. உள்ளே கரீனா கபூரும்,, தீபிகா படுகோனும் நிக்கிறாங்க.. LUX soap வேணுமா.. Dove soap வேணுமானு கேட்குறாங்க..!!
சாப்பிடலாம்னு உட்காந்திருந்தா.. சினேகா அக்கா ஆசீர்வாத் சப்பாத்திய எடுத்துக்கிட்டு வாராங்க..!!
ஆபீஸ்'க்கு போகலாம்னு.. பைக்க ஸ்டாட் பன்னுனா.. உடனே ஷாருக்கான் வந்து.. Honda பைக் வாங்குங்க.. மைலேஜ் கொடுக்கும்'னு சொல்றாரு..!!
பிஸ்கட் வாங்கலாம்னு கடைக்கு போனா.. அங்கே அமிதாப் பச்சன் நிக்கிறாரு.. Kukies பிஸ்கட் வாங்குங்கனு சொல்றாரு..!!
மனைக்கு Dress எடுக்கலாம்னு போனா.. அங்கே அனுஷ்கா,, திரிஷா,, ராதிகா தொல்லை தாங்க முடியல..!!
வேட்டி சட்டை வாங்கலாம்னா..
சரத்குமார்,, ஜெயராம்,, மம்முட்டி நம்ம முன்னாடி வந்து நிக்கிறாங்க..!!
கோல்டு வாங்கலாம்னு கடைக்கு போனா.. மொத்த சினிமாகாரங்களும் நம்ம பின்னாலயே வர்ராங்க..!!
இதை வாங்குங்க.. அதை வாங்குங்கனு சொல்றதுக்கு முன்னாடி.. இப்படி சம்பாதிங்க.. அப்படி சம்பாதிங்க'னு.. நல்ல ஐடியா குடுங்கையா.. மொதல்ல..!!
உங்க தொல்ல தாங்க முடியல சாமி ...
TOILET போன.. "அப்பாஸ்" ஹார்பிக் வச்சுக்கிட்டு நிக்கிறார்..!!
டீ கடைக்கு போனா.. கார்த்தியும்,, சூர்யா'வும் நிக்கிறாங்க.. sunrise வேணுமா.. Brue வேணுமானு கேட்குறாங்க..!!
குளிக்கலாம்னு பாத்ரூம் போனா.. உள்ளே கரீனா கபூரும்,, தீபிகா படுகோனும் நிக்கிறாங்க.. LUX soap வேணுமா.. Dove soap வேணுமானு கேட்குறாங்க..!!
சாப்பிடலாம்னு உட்காந்திருந்தா.. சினேகா அக்கா ஆசீர்வாத் சப்பாத்திய எடுத்துக்கிட்டு வாராங்க..!!
ஆபீஸ்'க்கு போகலாம்னு.. பைக்க ஸ்டாட் பன்னுனா.. உடனே ஷாருக்கான் வந்து.. Honda பைக் வாங்குங்க.. மைலேஜ் கொடுக்கும்'னு சொல்றாரு..!!
பிஸ்கட் வாங்கலாம்னு கடைக்கு போனா.. அங்கே அமிதாப் பச்சன் நிக்கிறாரு.. Kukies பிஸ்கட் வாங்குங்கனு சொல்றாரு..!!
மனைக்கு Dress எடுக்கலாம்னு போனா.. அங்கே அனுஷ்கா,, திரிஷா,, ராதிகா தொல்லை தாங்க முடியல..!!
வேட்டி சட்டை வாங்கலாம்னா..
சரத்குமார்,, ஜெயராம்,, மம்முட்டி நம்ம முன்னாடி வந்து நிக்கிறாங்க..!!
கோல்டு வாங்கலாம்னு கடைக்கு போனா.. மொத்த சினிமாகாரங்களும் நம்ம பின்னாலயே வர்ராங்க..!!
இதை வாங்குங்க.. அதை வாங்குங்கனு சொல்றதுக்கு முன்னாடி.. இப்படி சம்பாதிங்க.. அப்படி சம்பாதிங்க'னு.. நல்ல ஐடியா குடுங்கையா.. மொதல்ல..!!
உங்க தொல்ல தாங்க முடியல சாமி ...
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Tit bits in Tamil
எது உயர்ந்தது ?
புத்தக கண் காட்சிக்கு போயிருந்தேன் . என் நண்பர் அங்கு ஒரு ஸ்டால் போட்டிருந்தார் . புத்தக ரசிகர்கள் புத்தகங்களை புரட்டி பார்த்து
கொண்டிருந்தனர் இசை அன்பர்கள் ஒலி தகடுகளை பார்ப்பதை போல் .
ஏன் நண்பரை கேட்டேன் : எந்த விதமான புத்தகங்கள் நன்றாக விற்கின்றன என்று
கவிதைகள நன்றாக போய் கொண்டிருக்கின்றன என்றார்.
எந்த மாதிரியான கவிதைகள் ,சிலப்பதிகாரம் போன்ற கவிதைகளா ?
இல்லை சார் ,சிலப்பதிகாரத்தை விட பாரதியார் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகளுக்கு தான் மக்களிடம் நல்ல வரவேற்பு
அருகே இருந்த ஒருவர் சண்டைக்கு வந்துவிட்டார் .சிலப்பதிகாரத்தை விட பாரதியார் ,கண்ணதாசன் கவிதைகள் தான் உயர்ந்தவை என்று எப்படி நீங் கள் சொல்லலாம் ?
உயர்ந்தவை என்று நான் சொல்லவில்லையே மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று தானே சொன்னேன்.
சிலப்பதிகாரம் உலகம் புகழ் காப்பியம் தெரியுமா?
யார் இல்லை என்று சொன்னார்கள்
இரண்டாயிரம் வருடங்களாக அழியாமல் இருப்பது தெரியுமா?
தெரியுமே
தமிழ் யாப்பிலக்கணத்தின் மேன்மையை உணர்த்தும் படைப்பு .அந்த யாப்பு நயம் பாரதியிடமும் கண்ணதாசனிடமும் உண்டா?
அது வேறு கவிதை இது வேறு கவிதை , இரண்டுமே கவிதைகள் தான்.
இளங்கோவடிகளை சொன்ன அதே வாயால் நீர் பாரதியையும் கண்ண தாசனையும் சொன்னதே தவறு.
மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது வியாபாரம் ஆகிறது என்று தானே சொன்னேன்.
சிலப்பதிகாரம் புத்தகத்திற்கு பக்கத்தில் இந்த புத்தகங்களை நீர் அடுக்கி வைத்திருப்பதே தமிழ் துரோகம்.இங்கு எல்லோரும் இதை பார்த்துவிட்டு எப்படித்தான் சும்மா போய்கொண்டிருக்கிறார் களோ தெரியவில்லை. அறிஞர்களா இவர்கள்.?சீத்தலை ச்சாத்தனார் இருந்தால் உம் தலையில் எழுத்தாணியால் குத்தியிருப்பார்.
ஏன் நண்பர் ஒன்றும் சொல்லவில்லை. எதற்கு வீண் வம்பு ? சிலருக்கு அதே தொழில். என்னிடம் சொன்னார் வாரும் ஒரு காபி சாப்பிட்டு விட்டு வருவோம் என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு உணவு விடுதிக்கு வந்தார்.
அங்கு செர்வரிடம் கேட்டேன்.
என்னப்பா - இன்றைய ஸ்பெஷல் ?
பேல் புரி , பானி புரி என்றான்
கோதுமை ரவா இட்லி இல்லையா என்றேன்
இருக்கு சார்,
அதை விட இ ன்றைக்கு பேல் புரி, பானி புரிக்கு தான் நல்ல டிமாண்ட் என்று சொன்னேன்
பேல் புரி ரவா இட்லியை விட அப்படி என்ன ஒசத்தி ? என்றேன் நான் செர்வரிடம்
ஒசத்தி ,மட்டம்,என்று நான் சொல்லவில்லை சார், இன்று நல்ல ஓட்டம் என்று தான் சொன்னேன்.
எல்லாமே கோதுமையில் பண்ணினது தானே ?
ஆமாம் அனால் இன்றைய இளைஞர்களுக்கு இதில் தான் நாட்டம்.
இட்லி ஆவியில் வெந்தது , உடம்புக்கு நல்லது தெரியுமா ?
சரி , ரவா இட்லி யும் தான் இருக்கே . கொண்டு வரேன் உங்களுக்கு பிடித்தால் அதை சாப்பிடுங்கள் . லோகோ பின்ன ருசி என்றான் சர்வர். அவன் உலகியல் தெரிந்தவன்
சற்றுமுன் வம்புக்கு வந்த சிலப்பதிகார நண்பர் இப்போது உணவு விடுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தார் .
நண்பர் செர்வரிடம் ,சரி சரி இரண்டு பேல் புரி கொண்டுவா என்று சொல்லி விட்டு என்னைப் பார்த்து உனக்கும் இப்போது அவர் வாடை தொற்றிக் கொண்டு விட்டது என்று நினைக்கிறேன் என்றார் .
பில் பணத்தை நண்பர் கொடுத்தபோது திரும்பி பார்த்தேன். சிலப்பதிகாரம் பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்தது
புத்தக கண் காட்சிக்கு போயிருந்தேன் . என் நண்பர் அங்கு ஒரு ஸ்டால் போட்டிருந்தார் . புத்தக ரசிகர்கள் புத்தகங்களை புரட்டி பார்த்து
கொண்டிருந்தனர் இசை அன்பர்கள் ஒலி தகடுகளை பார்ப்பதை போல் .
ஏன் நண்பரை கேட்டேன் : எந்த விதமான புத்தகங்கள் நன்றாக விற்கின்றன என்று
கவிதைகள நன்றாக போய் கொண்டிருக்கின்றன என்றார்.
எந்த மாதிரியான கவிதைகள் ,சிலப்பதிகாரம் போன்ற கவிதைகளா ?
இல்லை சார் ,சிலப்பதிகாரத்தை விட பாரதியார் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகளுக்கு தான் மக்களிடம் நல்ல வரவேற்பு
அருகே இருந்த ஒருவர் சண்டைக்கு வந்துவிட்டார் .சிலப்பதிகாரத்தை விட பாரதியார் ,கண்ணதாசன் கவிதைகள் தான் உயர்ந்தவை என்று எப்படி நீங் கள் சொல்லலாம் ?
உயர்ந்தவை என்று நான் சொல்லவில்லையே மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று தானே சொன்னேன்.
சிலப்பதிகாரம் உலகம் புகழ் காப்பியம் தெரியுமா?
யார் இல்லை என்று சொன்னார்கள்
இரண்டாயிரம் வருடங்களாக அழியாமல் இருப்பது தெரியுமா?
தெரியுமே
தமிழ் யாப்பிலக்கணத்தின் மேன்மையை உணர்த்தும் படைப்பு .அந்த யாப்பு நயம் பாரதியிடமும் கண்ணதாசனிடமும் உண்டா?
அது வேறு கவிதை இது வேறு கவிதை , இரண்டுமே கவிதைகள் தான்.
இளங்கோவடிகளை சொன்ன அதே வாயால் நீர் பாரதியையும் கண்ண தாசனையும் சொன்னதே தவறு.
மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது வியாபாரம் ஆகிறது என்று தானே சொன்னேன்.
சிலப்பதிகாரம் புத்தகத்திற்கு பக்கத்தில் இந்த புத்தகங்களை நீர் அடுக்கி வைத்திருப்பதே தமிழ் துரோகம்.இங்கு எல்லோரும் இதை பார்த்துவிட்டு எப்படித்தான் சும்மா போய்கொண்டிருக்கிறார் களோ தெரியவில்லை. அறிஞர்களா இவர்கள்.?சீத்தலை ச்சாத்தனார் இருந்தால் உம் தலையில் எழுத்தாணியால் குத்தியிருப்பார்.
ஏன் நண்பர் ஒன்றும் சொல்லவில்லை. எதற்கு வீண் வம்பு ? சிலருக்கு அதே தொழில். என்னிடம் சொன்னார் வாரும் ஒரு காபி சாப்பிட்டு விட்டு வருவோம் என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு உணவு விடுதிக்கு வந்தார்.
அங்கு செர்வரிடம் கேட்டேன்.
என்னப்பா - இன்றைய ஸ்பெஷல் ?
பேல் புரி , பானி புரி என்றான்
கோதுமை ரவா இட்லி இல்லையா என்றேன்
இருக்கு சார்,
அதை விட இ ன்றைக்கு பேல் புரி, பானி புரிக்கு தான் நல்ல டிமாண்ட் என்று சொன்னேன்
பேல் புரி ரவா இட்லியை விட அப்படி என்ன ஒசத்தி ? என்றேன் நான் செர்வரிடம்
ஒசத்தி ,மட்டம்,என்று நான் சொல்லவில்லை சார், இன்று நல்ல ஓட்டம் என்று தான் சொன்னேன்.
எல்லாமே கோதுமையில் பண்ணினது தானே ?
ஆமாம் அனால் இன்றைய இளைஞர்களுக்கு இதில் தான் நாட்டம்.
இட்லி ஆவியில் வெந்தது , உடம்புக்கு நல்லது தெரியுமா ?
சரி , ரவா இட்லி யும் தான் இருக்கே . கொண்டு வரேன் உங்களுக்கு பிடித்தால் அதை சாப்பிடுங்கள் . லோகோ பின்ன ருசி என்றான் சர்வர். அவன் உலகியல் தெரிந்தவன்
சற்றுமுன் வம்புக்கு வந்த சிலப்பதிகார நண்பர் இப்போது உணவு விடுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தார் .
நண்பர் செர்வரிடம் ,சரி சரி இரண்டு பேல் புரி கொண்டுவா என்று சொல்லி விட்டு என்னைப் பார்த்து உனக்கும் இப்போது அவர் வாடை தொற்றிக் கொண்டு விட்டது என்று நினைக்கிறேன் என்றார் .
பில் பணத்தை நண்பர் கொடுத்தபோது திரும்பி பார்த்தேன். சிலப்பதிகாரம் பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்தது
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: Tit bits in Tamil
பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்த சிலப்பதிகாரத்தின் பெயர் என்னவோ ? !!
-
- Posts: 16787
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Tit bits in Tamil
பாலா,
உள்ளூர்க்காரர்களின் க்யூரியாஸிடி
பாணி பழம் இலக்கியமே என்றாலும், தண்ணீரிலூறிய வடக்கத்திய பண்டமவர் வாய்க்கு ருசி--துரைசாணி தின்னும் பெரெட்டும் பட்டருமோ? மோரு குடிப்பதை விடவோ வந்து சேர்ந்த பண்டம்?
'காணி நிலம்' பாடியவன் சொன்ன 'வஞ்சனை செய்யும் வாய்ச் சொல் வீரரில்' ஒருவர்தானோ இவர்?.. உமக்கும் தெரிந்தவரோ??!!
உள்ளூர்க்காரர்களின் க்யூரியாஸிடி
பாணி பழம் இலக்கியமே என்றாலும், தண்ணீரிலூறிய வடக்கத்திய பண்டமவர் வாய்க்கு ருசி--துரைசாணி தின்னும் பெரெட்டும் பட்டருமோ? மோரு குடிப்பதை விடவோ வந்து சேர்ந்த பண்டம்?
'காணி நிலம்' பாடியவன் சொன்ன 'வஞ்சனை செய்யும் வாய்ச் சொல் வீரரில்' ஒருவர்தானோ இவர்?.. உமக்கும் தெரிந்தவரோ??!!
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Tit bits in Tamil
யாரோ இவர் யாரோ என்ன பேரோ
என்றதும் எனக்கு அருணாச்சல கவிராயரின்
பைரவி கிர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது
ஏன் பெயருடன் அது ஒட்டிகொண்டிருப்பதலோ ?
இது வேறு ராகம் ,ரகம் .
ஒற்றை காலில் நின்றுகொண்டிருக்கும்
"ஒண்ணே மதியுள்ள கொக்கு
அது உலகத்தை ப் பார்க்க ஒரே கண்
அதுவும் காமாலை
மஞ்சள் தவிர வேறு நிறம் தெரியாது.
பாலா சிறந்த ஓவியர் என்பது பலருக்கு
தெரியாமல் இருக்கலாம்.
கீழே கிடந்த கை வளையல் துண்டை வைத்துகொண்டு
அழகியின் படத்தை வரைந்த தமிழ் கலைஞர் பரம்பரையில்
வந்தவர் . அவருக்கு இது போதும்
அரசியார் அறியாததா?
என்றதும் எனக்கு அருணாச்சல கவிராயரின்
பைரவி கிர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது
ஏன் பெயருடன் அது ஒட்டிகொண்டிருப்பதலோ ?
இது வேறு ராகம் ,ரகம் .
ஒற்றை காலில் நின்றுகொண்டிருக்கும்
"ஒண்ணே மதியுள்ள கொக்கு
அது உலகத்தை ப் பார்க்க ஒரே கண்
அதுவும் காமாலை
மஞ்சள் தவிர வேறு நிறம் தெரியாது.
பாலா சிறந்த ஓவியர் என்பது பலருக்கு
தெரியாமல் இருக்கலாம்.
கீழே கிடந்த கை வளையல் துண்டை வைத்துகொண்டு
அழகியின் படத்தை வரைந்த தமிழ் கலைஞர் பரம்பரையில்
வந்தவர் . அவருக்கு இது போதும்
அரசியார் அறியாததா?
-
- Posts: 16787
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Tit bits in Tamil
அடடா! பேல்பூரிக்காரர் உம்மிருவருக்கும் தெரிந்த எவரோ என எண்ணினேன். பெர்ஸொனாலிடி அடாஸாகத் தோன்றியது. அவ்வளவுதான். பி சியில் எனக்குத் தெரிந்தவர் இரு பி பிகள் தவிர வேறு யாருமில்லை.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Tit bits in Tamil
Actually when I was reading " யாரோ இவர் யாரோ என்ன பேரோ
என்றதும் எனக்கு அருணாச்சல கவிராயரின்
பைரவி கிர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது "..
I was listening to M Santhanam's version of.....
p-Santhanam 004-Yaaro enru ennamale-Sankarabaranam..
http://mfi.re/listen/tgtdu3ayw74w2x2/p- ... aranam.mp3
Is it a coincidence??
என்றதும் எனக்கு அருணாச்சல கவிராயரின்
பைரவி கிர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது "..
I was listening to M Santhanam's version of.....
p-Santhanam 004-Yaaro enru ennamale-Sankarabaranam..
http://mfi.re/listen/tgtdu3ayw74w2x2/p- ... aranam.mp3
Is it a coincidence??
-
- Posts: 477
- Joined: 22 Sep 2009, 02:55
Re: Tit bits in Tamil
Sri Venkatakailasam- Thanks. That was a funny one. Can you call an Electrician 'Paranjothi'?
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: Tit bits in Tamil
அரசியாரே ஜி_எம் அல்லது க_மூ என்ற பெயரில் இப்போதெல்லாம் நிறைய போஸ்ட் செய்பவரும் புதுவையில் இருப்பதாய் எழுதியதாக ஞாபகம் - உங்களுக்குத் தெரிந்தவர் தான் என்று நினைக்கிறேன்.arasi wrote:பி சியில் எனக்குத் தெரிந்தவர் இரு பி பிகள் தவிர வேறு யாருமில்லை.
-
- Posts: 16787
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Tit bits in Tamil
Sridhar,
No. I don't think I can connect.
No. I don't think I can connect.
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: Tit bits in Tamil
Arasi, I was referring to Ganesh_Mourthy who IIRC lives in Puduvai.
-
- Posts: 16787
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Tit bits in Tamil
Ah, so? Didn't know that!
There is a certain Puduvai stamp, don't you agree (though of different brands) about them? PuduvaikkaDal kATRu, that certain individuality about them--bhArathi's gift to the place ??
There is a certain Puduvai stamp, don't you agree (though of different brands) about them? PuduvaikkaDal kATRu, that certain individuality about them--bhArathi's gift to the place ??
-
- Posts: 2980
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Tit bits in Tamil
BUSINESS TACTICS
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
-
- Posts: 2980
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Tit bits in Tamil
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க...? கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் . சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி.? நவ தானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.
சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . .!!
கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ? கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.
அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க...? கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் . சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி.? நவ தானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.
சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . .!!
கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ? கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.
அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Tit bits in Tamil
ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம்.
அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரி, "குரங்களுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார்... ஆச்சர்யமாய் இருந்தது.. விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்...
"சுற்றிப்பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள்.
ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன...
இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்தப்பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்குரங்குகள் மாறி விடுகின்றன...
வரிசையில் உட்காந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சைஎடுக்கும் ஜீவங்களாக மாறிவிடுகின்றன...
எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே ஆரோக்கியமானது"- என்று பதில் சொன்னார்...
நிறைய யோசிக்க வைத்தது!!...
share from Dinakaran
-
- Posts: 2980
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Tit bits in Tamil
ஆம் . கண்டிப்பாக யோசிக்க வேண்டிய ஒன்று. நாமே ஒரு வழியை / பழக்கத்தை உண்டு பண்ண காரணராகிறோம் .
A share from my friend
பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.
எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.
இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த ❄ காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
உடனே, ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான்.
அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு ↪ திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?
இங்கே போடப்பட்டுள்ள கிளைகளை கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம்.
அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.
""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை ⤵ மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .
அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.
இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக முக்கியம்..
நீ நல்லவனா கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுதிதவள் உன் தாய்
எத்துனை ஜன்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாது என்றால் அது உன் தாயின் கருவரை என்பதை மறந்து விடாதே
எத்தனையோ கஷ்டங்கள்
நஷ்டங்கள்
துன்பங்கள்
துயரங்கள்
அசிங்கங்கள்
அவமானங்கள்
கடந்த பிறகும் ஒன்ருமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொன்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும்
புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை
நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்.
அவர்களை கண் போன்று பாதுகாப்போம்
A share from my friend
பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.
எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.
இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த ❄ காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
உடனே, ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான்.
அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு ↪ திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?
இங்கே போடப்பட்டுள்ள கிளைகளை கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம்.
அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.
""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை ⤵ மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .
அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.
இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக முக்கியம்..
நீ நல்லவனா கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுதிதவள் உன் தாய்
எத்துனை ஜன்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாது என்றால் அது உன் தாயின் கருவரை என்பதை மறந்து விடாதே
எத்தனையோ கஷ்டங்கள்
நஷ்டங்கள்
துன்பங்கள்
துயரங்கள்
அசிங்கங்கள்
அவமானங்கள்
கடந்த பிறகும் ஒன்ருமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொன்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும்
புத்தகம் இந்த உலகில் வேரேதுமில்லை
நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்.
அவர்களை கண் போன்று பாதுகாப்போம்
-
- Posts: 1865
- Joined: 07 Nov 2010, 20:01
Re: Tit bits in Tamil
இந்திய நாட்டில், முக்கியமாக தமிழ்நாட்டில், மக்கள் இம்மாதிரி - பிச்சையெடுப்பவர்கள் போன்று - மாறி வருகின்றார்களே - patronage அரசியல் செய்து, மக்களுக்கு இலவசமாக உணவுப்பொருட்களும், துணிமணிகளும், வேலையின்றி வருடத்தில் 120 நாள் சம்பளம் என்ற பெயரில் doles தந்து வருகின்றார்களே - நாம் யாரும் கண்டுகொள்ளவில்லையே! உழைப்புக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதே!venkatakailasam wrote: ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன...
இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்தப்பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்குரங்குகள் மாறி விடுகின்றன...
வரிசையில் உட்காந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சைஎடுக்கும் ஜீவங்களாக மாறிவிடுகின்றன...
எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே ஆரோக்கியமானது"- என்று பதில் சொன்னார்...
நிறைய யோசிக்க வைத்தது!!...
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Tit bits in Tamil
yes...That was very much in my mind...when I posted ...Shri Govindan
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Tit bits in Tamil
Read this beautiful story carefully. My boss drove a luxury car everyday and it was my duty to greet him and to open the gates for him, as I worked as a watchman in his villa. But he never responded back to my greetings.
One day he saw me opening the garbage bags outside the villa in search for any left over food. But, as usual he never even looked at me, it was like as if he never saw anything!
The very next day I saw a paper bag at the same place, but it was clean and the food inside was covered well. It was fresh and good food like someone had just brought it from the supermarket. I didn't bother as to where it came from, I just took the paper bag and I was so happy about it.
Every day I found this paper bag at the same place with fresh vegetables and all that we needed for home. This became my daily routine. I was eating and sharing this food with my wife and kids.
I was wondering who this fool could be?! To forget his paper bag full of fresh food everyday.
One day there was a big problem in the villa and I was told that my boss has died. There were too many guests coming to the villa that day and I didn't get any food that day, so I thought that one of the guests must have taken it. But the same thing happened the 2nd day, the 3rd day and the 4th day.
It went on like this for a few weeks and I found it difficult to provide food for my family, so I decided to ask the wife of my boss for a raise in my salary or else I would quit my job as a watchman.
After I told her, she was shocked, and asked me, how come u never complained about your salary for the last 2 years? And why is this salary not enough for you now?!
I gave her so many excuses but she was never convinced! Finally in the end, I decided to tell her the truth, I told her the entire story of the bag of groceries, and as to how it was my daily provision.. She then asked me as to when this stopped? I told her after the death of her husband. And then I realised that I stopped seeing the paper bag immediately after the death of my boss.
Why didn't I ever think of this before? That it was my boss who was providing this for me? I guess it was because I never thought that a person who never replied to my greetings could ever be this generous!
His wife started to cry and I told her to please stop crying and that I'm really sorry that I asked for a raise, I didn't know that it was your husband who was providing me with the meals, il remain as a watchman and be happy to provide my service.
His wife told me, I'm crying bcoz I've finally found the 7th person my husband was giving this bag full of food. I knew my husband was giving 7 people everyday, I had already found the 6 people, and all these days I was searching for the 7th person. And today I found out.
From that day onwards, I started to receive the bag full of food again, bt this time his son was bringing it to my house and giving it to my hand. But whenever I thanked him, he never replied! Just like his dad!
One day, I told him THANK YOU in a very loud voice! He replied back to me to please not be offended when he doesn't reply, because he has a hearing problem, just like his dad!
Oh May God forgive us all, for we have all, as humans, judged another person without knowing the real story behind their actions.. May God forgive us all and guide us towards the right path in life...
Shared fro Aruna Gopal..
One day he saw me opening the garbage bags outside the villa in search for any left over food. But, as usual he never even looked at me, it was like as if he never saw anything!
The very next day I saw a paper bag at the same place, but it was clean and the food inside was covered well. It was fresh and good food like someone had just brought it from the supermarket. I didn't bother as to where it came from, I just took the paper bag and I was so happy about it.
Every day I found this paper bag at the same place with fresh vegetables and all that we needed for home. This became my daily routine. I was eating and sharing this food with my wife and kids.
I was wondering who this fool could be?! To forget his paper bag full of fresh food everyday.
One day there was a big problem in the villa and I was told that my boss has died. There were too many guests coming to the villa that day and I didn't get any food that day, so I thought that one of the guests must have taken it. But the same thing happened the 2nd day, the 3rd day and the 4th day.
It went on like this for a few weeks and I found it difficult to provide food for my family, so I decided to ask the wife of my boss for a raise in my salary or else I would quit my job as a watchman.
After I told her, she was shocked, and asked me, how come u never complained about your salary for the last 2 years? And why is this salary not enough for you now?!
I gave her so many excuses but she was never convinced! Finally in the end, I decided to tell her the truth, I told her the entire story of the bag of groceries, and as to how it was my daily provision.. She then asked me as to when this stopped? I told her after the death of her husband. And then I realised that I stopped seeing the paper bag immediately after the death of my boss.
Why didn't I ever think of this before? That it was my boss who was providing this for me? I guess it was because I never thought that a person who never replied to my greetings could ever be this generous!
His wife started to cry and I told her to please stop crying and that I'm really sorry that I asked for a raise, I didn't know that it was your husband who was providing me with the meals, il remain as a watchman and be happy to provide my service.
His wife told me, I'm crying bcoz I've finally found the 7th person my husband was giving this bag full of food. I knew my husband was giving 7 people everyday, I had already found the 6 people, and all these days I was searching for the 7th person. And today I found out.
From that day onwards, I started to receive the bag full of food again, bt this time his son was bringing it to my house and giving it to my hand. But whenever I thanked him, he never replied! Just like his dad!
One day, I told him THANK YOU in a very loud voice! He replied back to me to please not be offended when he doesn't reply, because he has a hearing problem, just like his dad!
Oh May God forgive us all, for we have all, as humans, judged another person without knowing the real story behind their actions.. May God forgive us all and guide us towards the right path in life...
Shared fro Aruna Gopal..
-
- Posts: 16787
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Tit bits in Tamil
VKailasam,
A good tale. Reminds us also of the countless people on earth whose goodness goes unnoticed by those around them--that too when they are their benefactors...
A good tale. Reminds us also of the countless people on earth whose goodness goes unnoticed by those around them--that too when they are their benefactors...
-
- Posts: 2980
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Tit bits in Tamil
Wife saw a board.
Banaras saree Rs10/-
Nylon saree Rs 8/-
Cotton saree Rs 5/-
Wife: Give me Rs.500. I'll buy 50 sarees.
Hus: Adhu isthri kadai di
Banaras saree Rs10/-
Nylon saree Rs 8/-
Cotton saree Rs 5/-
Wife: Give me Rs.500. I'll buy 50 sarees.
Hus: Adhu isthri kadai di
-
- Posts: 2980
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Tit bits in Tamil
கவி காளமேகம் கவிதையினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். ஆறுதலை !இது கவி காளமேகம் புனைந்த பாடல் !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சங்கரற்கும் ஆறுதலை சண்முகற்கும் ஆறுதலை
ஐங்கரற்கும் ஆறுதலை ஆனதே -சங்கைப்
பிடித்தோர்க்கும் ஆறுதலை பித்தாநின் பாதம்
பிடித்தாற்கும் ஆறுதலைப் பார்!
சங்கரற்கும் ஆறுதலை -என்ன சிவனுக்கு ஆறுதலையா? புலவன் மதுமயக்கத்தில் எழுதியிருப்பான் என்கிறீர்களா? அதுதான் இல்லை. சங்கரன் என்பவன் சிவன் அல்லவா! கங்கை ஆறு சிவனின் தலைமேல் ஓடுகிறதல்லவா! அதைத்தான் புலவர் குறிப்பிடுகிறார்.
சண்முகற்கும் ஆறுதலை –ஆறுமுகக் கடவுளுக்கும் ஆறுதலைகள். சரி இது புரிகிறது. அதென்ன? ஐங்கரற்கும் ஆறுதலை! பிள்ளையார்க்கு இருப்பது ஒரேஒரு தலையல்லவா என்கிறர்களா! நீங்கள் சொல்வதும் சரியே. ஆயினும் மனித உடலில் விலங்கின் தலை இருப்பது மாறுபட்ட தலையல்லவா! அதைத்தான் புலவர் ஐங்கரற்கு மாறுதலை (மாறுபட்ட தலை) என்றுக் குறிப்பிடுகிறார்.
சங்கைப் பிடித்தோர்க்கும் ஆறுதலை -இதென்ன! பெருமாளுக்கும் ஆறுதலை என்கிறாரே! என்கிறீர்களா? ஸ்ரீரங்கத்தில் காவிரி நதிக்கரையில் தலைவைத்துப் படுத்திருக்கிறான் அல்லவா! அதைத்தான் பெருமாளின் தலைமாட்டில் ஆறு ஒடுகிறது என்கிற பொருளில் கையாண்டுள்ளார்.
அதெல்லாம் இருக்கட்டும். அதென்ன சிவனின் பக்தர்களுக்கும் ஆறுதலை என்கிறார்! என்கிறீர்களா? அதுதான் ஆறுதலைப் என்று ப்-ஐ உடன் சேர்த்திருக்கிறாரே! சிவனின் பாதம் பிடித்தோர்க்கு ஆறுதல் கிட்டும் பார் என்று பொருள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சங்கரற்கும் ஆறுதலை சண்முகற்கும் ஆறுதலை
ஐங்கரற்கும் ஆறுதலை ஆனதே -சங்கைப்
பிடித்தோர்க்கும் ஆறுதலை பித்தாநின் பாதம்
பிடித்தாற்கும் ஆறுதலைப் பார்!
சங்கரற்கும் ஆறுதலை -என்ன சிவனுக்கு ஆறுதலையா? புலவன் மதுமயக்கத்தில் எழுதியிருப்பான் என்கிறீர்களா? அதுதான் இல்லை. சங்கரன் என்பவன் சிவன் அல்லவா! கங்கை ஆறு சிவனின் தலைமேல் ஓடுகிறதல்லவா! அதைத்தான் புலவர் குறிப்பிடுகிறார்.
சண்முகற்கும் ஆறுதலை –ஆறுமுகக் கடவுளுக்கும் ஆறுதலைகள். சரி இது புரிகிறது. அதென்ன? ஐங்கரற்கும் ஆறுதலை! பிள்ளையார்க்கு இருப்பது ஒரேஒரு தலையல்லவா என்கிறர்களா! நீங்கள் சொல்வதும் சரியே. ஆயினும் மனித உடலில் விலங்கின் தலை இருப்பது மாறுபட்ட தலையல்லவா! அதைத்தான் புலவர் ஐங்கரற்கு மாறுதலை (மாறுபட்ட தலை) என்றுக் குறிப்பிடுகிறார்.
சங்கைப் பிடித்தோர்க்கும் ஆறுதலை -இதென்ன! பெருமாளுக்கும் ஆறுதலை என்கிறாரே! என்கிறீர்களா? ஸ்ரீரங்கத்தில் காவிரி நதிக்கரையில் தலைவைத்துப் படுத்திருக்கிறான் அல்லவா! அதைத்தான் பெருமாளின் தலைமாட்டில் ஆறு ஒடுகிறது என்கிற பொருளில் கையாண்டுள்ளார்.
அதெல்லாம் இருக்கட்டும். அதென்ன சிவனின் பக்தர்களுக்கும் ஆறுதலை என்கிறார்! என்கிறீர்களா? அதுதான் ஆறுதலைப் என்று ப்-ஐ உடன் சேர்த்திருக்கிறாரே! சிவனின் பாதம் பிடித்தோர்க்கு ஆறுதல் கிட்டும் பார் என்று பொருள்
-
- Posts: 2980
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Tit bits in Tamil
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும்,
உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.
இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால்இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும்,
உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.
இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால்இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: Tit bits in Tamil
.
மேற்படி பதிவு "இமயகிரி சித்தர்" என்ற புனைப் பெயரைக் கொண்டுள்ள, திருவானைக்கோயிலைச் சார்ந்த Dr. எஸ். நாகராஜ் B.sc, R.M.P., D.s.M.s., H.P.T., D.H.M., C.D.T. என்பவர் (!!) தனது blogspot-ல் 2013-ல் எழுதியது !!!
blogspot -ன் தலைப்பிலேயே "இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்று பிரதி எடுக்கவோ மற்ற தளங்களில் மறுபதிவு செய்வதோ தடை செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ள போதும் இது அலை அலையாக சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது !!!
http://siddharprapanjam.blogspot.in/201 ... thods.html
வேண்டுகோள் :-
(1) "சித்தமயக்கஞ் செறியும் ... ..." என்ற பாடலை யார் புனைந்தது என்ற விபரம் தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து தெரியப் படுத்தவும்.
(2) D.s.M.s., H.P.T., D.H.M., C.D.T. ஆகியவற்றின் விளக்கம் என்ன ?
.
மேற்படி பதிவு "இமயகிரி சித்தர்" என்ற புனைப் பெயரைக் கொண்டுள்ள, திருவானைக்கோயிலைச் சார்ந்த Dr. எஸ். நாகராஜ் B.sc, R.M.P., D.s.M.s., H.P.T., D.H.M., C.D.T. என்பவர் (!!) தனது blogspot-ல் 2013-ல் எழுதியது !!!
blogspot -ன் தலைப்பிலேயே "இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்று பிரதி எடுக்கவோ மற்ற தளங்களில் மறுபதிவு செய்வதோ தடை செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ள போதும் இது அலை அலையாக சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது !!!
http://siddharprapanjam.blogspot.in/201 ... thods.html
வேண்டுகோள் :-
(1) "சித்தமயக்கஞ் செறியும் ... ..." என்ற பாடலை யார் புனைந்தது என்ற விபரம் தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து தெரியப் படுத்தவும்.
(2) D.s.M.s., H.P.T., D.H.M., C.D.T. ஆகியவற்றின் விளக்கம் என்ன ?
.
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: Tit bits in Tamil
ஐயகோ ! சுழற்சிக்கு அளவேயில்லை !
2010-ல் வெளியான ஒரு கட்டுரையின் பல பகுதிகள் இமயகிரி சித்தரின் 2013 கட்டுரையில் காணப்படுகிறது.
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6386
போதுமடா சாமி !
2010-ல் வெளியான ஒரு கட்டுரையின் பல பகுதிகள் இமயகிரி சித்தரின் 2013 கட்டுரையில் காணப்படுகிறது.
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6386
போதுமடா சாமி !
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: Tit bits in Tamil
இவை சரியாக இருக்கக் கூடும் :-D.s.M.s., H.P.T., D.H.M., C.D.T. ஆகியவற்றின் விளக்கம் என்ன ?
DSMS - Diploma in Siddha Medicine Science
H.P.T. - Health & Performance Training
D.H.M. - Doctor Homeopathic Medicine
C.D.T. - Council of Doctors in Training
-
- Posts: 2980
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Tit bits in Tamil
A share from my friend
ஒரு ஸ்லோகம், ஒரு சிலேடை, ஒரு எண், ஒரு நாள், ஒரு நூல்
பதினாறாம் நூற்றாண்டில் கேரளத்தில் வாழ்ந்த நீலகண்ட சோமசத்வன் என்ற ஜோதிடர், தந்த்ர ஸங்க்ரஹம் என்ற விண்ணியல் நூலை எழுதினார். சென்னை பல்கலைகழக பேராசிரியர் எம்.எஸ்.ஸ்ரீராமும் மும்பை ஐஐடி கணித பேராசிரியர் கி. ராமசுப்ரமணியமும் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிறப்பான உரையுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முதன் ஸ்லோகம் இது.
ஹே விஷ்ணோ நிஹிதம் க்ருத்ஸ்னம் ஜகத் த்வய்யேவ காரணே |
ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷே தஸ்மை நமோ நாராயணாய தே ||
हेविष्णो निहितं कृत्स्नं जगत् त्वय्येव कारणे ।
ज्योतिषां ज्योतिषे तस्मै नमो नारायणाय ते ॥
இது விஷ்ணுவிற்கும் நாராயணனுக்கும் வணக்கம் சொல்லும் செய்யுள்.
“யாவும் படைத்த விஷ்ணுவே, ஜோதிடர்கள் உன்னால் ஒளிப்பெருகிறார்கள், நமோ நாராயணா உனக்கு”, என்று பொருள். இந்த ஜோதிடர் வாழ்ந்த நாட்டின் மன்னனின் பெயர் நேத்திரநாராயணன். விஷ்ணுவையும் மன்னனையும் சிலேடையாக வணங்குகிறார்.
ஸ்லோகத்தின் முதல் சீரில் (எட்டு எழுத்துக்களில்) ஒரு புதிரை ஒளித்தார் நீலகண்டர். “ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்” என்ற எழுத்துக்களை கடபயாதி என்ற எண் குறிப்பு முறையில் படித்தால், அவை ஒரு எண்ணை குறிக்கும். இந்த எண் 84508610. அக்காலத்தில் ஸம்ஸ்கிருதத்தில் எண்களை வலமிருந்து இடமாக குறிப்பார்கள். இந்த முறைப்படி நம் ஸ்லோகம் முதலில் வரும் பூஜ்யத்தை நீக்கி படித்தால் 1680548 என்ற எண்ணை குறிக்கும்.
ஒற்றுடன் எழுத்து ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்
குறிக்கும் எழுத்து ஹ வ ண ந ஹ த க ந
குறிக்கும் எண் 8 4 5 0 8 6 1 0
க, ட,ப, ய ஆகிய எழுத்தில் தொடங்கும் உயிர்மெய் வரிசைகளை பத்து பத்தாக ஒன்று முதல் ஒன்பதும், கடைசி எழுத்தை பூஜ்யமாகவும் குறிக்கும் திட்டத்திற்கு கடபயாதி (க ட ப ய ஆதி!) என்று பெயர். ஸமஸ்கிருதத்தில் உயிர்மெய் எழுத்துக்களுக்கு வர்க எழுத்துக்கள் என்று பெயர். செய்யுள்களில் எண்களை எழுத இதுவும் ஒரு வகை திட்டம். கர்நாடக சங்கீத 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்களும் கடபயாதியில் உள்ளன; அம்முதல் இரண்டு எழுத்துக்கள்மேளகர்த்தா வரிசையில் அந்த ராகத்தின் எண்ணை குறிக்கும்! உதாரணமாக ஹரிகாம்போஜி 28 (ரி2, ஹ 8), லதாங்கி 63 (தா6, ல3).
கடபயாதி
क க ख ग घ ङ ங च ச छ ज झ _ ञ ஞ
ट ட ठ ड ढ ण ண त த थ द ध _ न ந
प ப फ ब भ म ம
य க र ர ल ல व வ श ஷ ष ஷ स ஸ ह ஹ
1 2 3 4 5 6 7 8 9 0
இந்த கடபயாதி கணக்கின் படி 1680548 என்ற எண் அஹர்கணா என்ற நாள்கணக்கு முறையை குறிக்கிறது. அது என்ன நாள்கணக்கு? வருடம், மாதம், திதி, நட்சத்திரம் இதை எல்லாம் எண்களை குறிப்பது போல், இந்திய விண்ணியல் மரபில், கலியுகம் தொடங்கிய நாள் முதல் வருடம் மாதம் திதி பார்க்காமல் ஒவ்வொரு சூர்யோதையத்தையும் ஒரு நாளாக எண்ணும் ஒரு நெடுங்கணக்கு (அஹர்கண) உண்டு.
அஹ: என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்கு நாள் என்று அர்த்தம், கணஎன்றால் எண்ணிக்கை. அஹ: + கண புணர்ந்தால் அஹர்கண என்று சந்தியோடு புணரும். மகாபாரத போர் முடிந்த நாளே, கலியுகம் தொடங்கிய முதல் நாள் என்பது ஒரு மரபு. இதற்கு யுதிஷ்டிர ஷகம் என்றும் பெயருண்டு. நாம் பயன்படுத்தும் கிருஸ்த்துவ கேலண்டர் முறையில் மகாபாரதப் போர் கிமு 3102 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் பதினேழாம் நாள் அஸ்தமித்து பதினெட்டாம் விடியும் நாளே கலியுக முதல் நாளென கொண்டு, அன்றிலிருந்து கணக்கிட்டால் மேற்சொன்ன 1680548, கி.பி. 1500 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாளை அஹர்கண திட்டத்தில் குறிக்கும்.
தான் தந்த்ர ஸங்க்ரஹ (Tantra Sangraha) நூலை இயற்றிய நாளை, நீலகண்ட சோமசத்வன் இப்படி முதல் ஸ்லோகத்தின் எட்டு எழுத்தில் மறைத்துள்ளார் என்று, நூலின் மொழிப்பெயர்ப்பாளர்கள் விளக்குகின்றனர்.
--திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கத்திலும் ’தணிகைப் பஞ்சாங்கம்’ போலவே கலி தினம்18,68,661 என்றே தரப்பட்டுள்ளது; உஜ்ஜயினியை மையமாக வைத்துக் கணக்கிடுகிறார்கள் .
ஒரு ஸ்லோகம், ஒரு சிலேடை, ஒரு எண், ஒரு நாள், ஒரு நூல்
பதினாறாம் நூற்றாண்டில் கேரளத்தில் வாழ்ந்த நீலகண்ட சோமசத்வன் என்ற ஜோதிடர், தந்த்ர ஸங்க்ரஹம் என்ற விண்ணியல் நூலை எழுதினார். சென்னை பல்கலைகழக பேராசிரியர் எம்.எஸ்.ஸ்ரீராமும் மும்பை ஐஐடி கணித பேராசிரியர் கி. ராமசுப்ரமணியமும் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிறப்பான உரையுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முதன் ஸ்லோகம் இது.
ஹே விஷ்ணோ நிஹிதம் க்ருத்ஸ்னம் ஜகத் த்வய்யேவ காரணே |
ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷே தஸ்மை நமோ நாராயணாய தே ||
हेविष्णो निहितं कृत्स्नं जगत् त्वय्येव कारणे ।
ज्योतिषां ज्योतिषे तस्मै नमो नारायणाय ते ॥
இது விஷ்ணுவிற்கும் நாராயணனுக்கும் வணக்கம் சொல்லும் செய்யுள்.
“யாவும் படைத்த விஷ்ணுவே, ஜோதிடர்கள் உன்னால் ஒளிப்பெருகிறார்கள், நமோ நாராயணா உனக்கு”, என்று பொருள். இந்த ஜோதிடர் வாழ்ந்த நாட்டின் மன்னனின் பெயர் நேத்திரநாராயணன். விஷ்ணுவையும் மன்னனையும் சிலேடையாக வணங்குகிறார்.
ஸ்லோகத்தின் முதல் சீரில் (எட்டு எழுத்துக்களில்) ஒரு புதிரை ஒளித்தார் நீலகண்டர். “ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்” என்ற எழுத்துக்களை கடபயாதி என்ற எண் குறிப்பு முறையில் படித்தால், அவை ஒரு எண்ணை குறிக்கும். இந்த எண் 84508610. அக்காலத்தில் ஸம்ஸ்கிருதத்தில் எண்களை வலமிருந்து இடமாக குறிப்பார்கள். இந்த முறைப்படி நம் ஸ்லோகம் முதலில் வரும் பூஜ்யத்தை நீக்கி படித்தால் 1680548 என்ற எண்ணை குறிக்கும்.
ஒற்றுடன் எழுத்து ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்
குறிக்கும் எழுத்து ஹ வ ண ந ஹ த க ந
குறிக்கும் எண் 8 4 5 0 8 6 1 0
க, ட,ப, ய ஆகிய எழுத்தில் தொடங்கும் உயிர்மெய் வரிசைகளை பத்து பத்தாக ஒன்று முதல் ஒன்பதும், கடைசி எழுத்தை பூஜ்யமாகவும் குறிக்கும் திட்டத்திற்கு கடபயாதி (க ட ப ய ஆதி!) என்று பெயர். ஸமஸ்கிருதத்தில் உயிர்மெய் எழுத்துக்களுக்கு வர்க எழுத்துக்கள் என்று பெயர். செய்யுள்களில் எண்களை எழுத இதுவும் ஒரு வகை திட்டம். கர்நாடக சங்கீத 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்களும் கடபயாதியில் உள்ளன; அம்முதல் இரண்டு எழுத்துக்கள்மேளகர்த்தா வரிசையில் அந்த ராகத்தின் எண்ணை குறிக்கும்! உதாரணமாக ஹரிகாம்போஜி 28 (ரி2, ஹ 8), லதாங்கி 63 (தா6, ல3).
கடபயாதி
क க ख ग घ ङ ங च ச छ ज झ _ ञ ஞ
ट ட ठ ड ढ ण ண त த थ द ध _ न ந
प ப फ ब भ म ம
य க र ர ल ல व வ श ஷ ष ஷ स ஸ ह ஹ
1 2 3 4 5 6 7 8 9 0
இந்த கடபயாதி கணக்கின் படி 1680548 என்ற எண் அஹர்கணா என்ற நாள்கணக்கு முறையை குறிக்கிறது. அது என்ன நாள்கணக்கு? வருடம், மாதம், திதி, நட்சத்திரம் இதை எல்லாம் எண்களை குறிப்பது போல், இந்திய விண்ணியல் மரபில், கலியுகம் தொடங்கிய நாள் முதல் வருடம் மாதம் திதி பார்க்காமல் ஒவ்வொரு சூர்யோதையத்தையும் ஒரு நாளாக எண்ணும் ஒரு நெடுங்கணக்கு (அஹர்கண) உண்டு.
அஹ: என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்கு நாள் என்று அர்த்தம், கணஎன்றால் எண்ணிக்கை. அஹ: + கண புணர்ந்தால் அஹர்கண என்று சந்தியோடு புணரும். மகாபாரத போர் முடிந்த நாளே, கலியுகம் தொடங்கிய முதல் நாள் என்பது ஒரு மரபு. இதற்கு யுதிஷ்டிர ஷகம் என்றும் பெயருண்டு. நாம் பயன்படுத்தும் கிருஸ்த்துவ கேலண்டர் முறையில் மகாபாரதப் போர் கிமு 3102 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் பதினேழாம் நாள் அஸ்தமித்து பதினெட்டாம் விடியும் நாளே கலியுக முதல் நாளென கொண்டு, அன்றிலிருந்து கணக்கிட்டால் மேற்சொன்ன 1680548, கி.பி. 1500 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாளை அஹர்கண திட்டத்தில் குறிக்கும்.
தான் தந்த்ர ஸங்க்ரஹ (Tantra Sangraha) நூலை இயற்றிய நாளை, நீலகண்ட சோமசத்வன் இப்படி முதல் ஸ்லோகத்தின் எட்டு எழுத்தில் மறைத்துள்ளார் என்று, நூலின் மொழிப்பெயர்ப்பாளர்கள் விளக்குகின்றனர்.
--திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கத்திலும் ’தணிகைப் பஞ்சாங்கம்’ போலவே கலி தினம்18,68,661 என்றே தரப்பட்டுள்ளது; உஜ்ஜயினியை மையமாக வைத்துக் கணக்கிடுகிறார்கள் .
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: Tit bits in Tamil
தஞ்சாவூரான் அவர்களுக்கு நன்றி !
தங்கள் பதிவின் தூண்டுதலால் மேலும் சில விவரங்களை அறிய முடிந்தது.
ஒரு சில மாற்றங்கள் --
- ஜோதிடரின் பெயர் நீலகண்ட சோமயாஜி.
- அவரை ஆதரித்தவர் கேரளத்து அந்தணர்களின் தலைவராக விளங்கிய கௌசீதகி ஆத்ய நேத்ரநாராயணா என்பவர்.
- இந்த நூலை எழுதத் தொடங்கிய தேதியை கடபயாதி முறையில் முதல் பாடலில் குறிப்பிட்டுள்ளது போல, நூலை எழுதி முடித்த தேதியை கடைசி பாடலில் குறிப்பிட்டுள்ளார் !
முழுமையான நூலையும் அதன் மொழியாக்கத்தையும், இங்கே காணலாம் :-
http://www.insa.nic.in/writereaddata/Up ... lement.pdf
தங்கள் பதிவின் தூண்டுதலால் மேலும் சில விவரங்களை அறிய முடிந்தது.
ஒரு சில மாற்றங்கள் --
- ஜோதிடரின் பெயர் நீலகண்ட சோமயாஜி.
- அவரை ஆதரித்தவர் கேரளத்து அந்தணர்களின் தலைவராக விளங்கிய கௌசீதகி ஆத்ய நேத்ரநாராயணா என்பவர்.
- இந்த நூலை எழுதத் தொடங்கிய தேதியை கடபயாதி முறையில் முதல் பாடலில் குறிப்பிட்டுள்ளது போல, நூலை எழுதி முடித்த தேதியை கடைசி பாடலில் குறிப்பிட்டுள்ளார் !
முழுமையான நூலையும் அதன் மொழியாக்கத்தையும், இங்கே காணலாம் :-
http://www.insa.nic.in/writereaddata/Up ... lement.pdf
-
- Posts: 9383
- Joined: 03 Feb 2010, 02:03
Re: Tit bits in Tamil
Actually, that is not accurate: plumbers are called plumbers because, in the days before copper piping, the pipes themselves were made of lead. I bet there still is a quite a bit of lead piping in older British homes. Making joins in the lead piping, or joining to other materials, is requires quite a lot of skill: plumber's skill!Sundara Rajan wrote:In post 144 Sri. VGovindan mentions discontinuation of usage of LEAD utensils in households due to its toxicity. Lead is referred to as "cAr eeyam" colloquially in Tamil. In reality the so called Lead vessels in use are made of TIN,(referred to as "veLLi eeyam") that is not affected by weak acids (as citric, tartaric, malic acids found in fruits and vegetables). That is why brass and copper vessels used in cooking are coated inside with a thin layer of Tin ( called veLLi eeyam in Tamil). Some brahmin households still prefer to make Rasam in "EEya sombu" rather than in stainless steel vessels and vouch that it tastes better that way.
Incidentally, Lead ( Plumbum in Latin, hence Pb symbol) was/is used in copper pipe Joints/connections and hence those who worked on such jointed tubes were/are called Plumbers !
What am I doing here? I'm looking for the thread about traditional rassam pots from a year or three ago!
-
- Posts: 16787
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Tit bits in Tamil
Nick,
Hope PBala the instant procurer of anything from the internet fetches the link(proof right here for those who don't know him that well--scroll and see, for an example)!
Hope PBala the instant procurer of anything from the internet fetches the link(proof right here for those who don't know him that well--scroll and see, for an example)!
-
- Posts: 9383
- Joined: 03 Feb 2010, 02:03
Re: Tit bits in Tamil
That would be nice. Did you get my mail with the pot pic?
-
- Posts: 16787
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Tit bits in Tamil
Yes, I did! I found it very amusing Please post the pic here with your comment!
-
- Posts: 9383
- Joined: 03 Feb 2010, 02:03
Re: Tit bits in Tamil
Here is the pot. I am proud to say that, although my wife knew nothing about it, thanks to my friends at rasikas.org, I was able to identify it, and the sales guy said that I was right. He said though, you cannot put this over a flame: it will melt.
(Click for a bigger picture)
I mailed arasi, asking if this was, indeed what her grandmother might have used, but pointed out the price! I could buy a good stainless-steel pan in London for that much. I am sure it must have been very much less way back then, or Arasi's grandmother would have had to mortgage the madisar
I should like to post it to that old thread, if anyone can remember what to search for and find it.
My wife has me beaten on one point, at least... the guy mentioned the name of the pot in Tamil. I'm sure she would remember that, but I can't.
(Click for a bigger picture)
I mailed arasi, asking if this was, indeed what her grandmother might have used, but pointed out the price! I could buy a good stainless-steel pan in London for that much. I am sure it must have been very much less way back then, or Arasi's grandmother would have had to mortgage the madisar
I should like to post it to that old thread, if anyone can remember what to search for and find it.
My wife has me beaten on one point, at least... the guy mentioned the name of the pot in Tamil. I'm sure she would remember that, but I can't.
-
- Posts: 16787
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Tit bits in Tamil
Nick,
The rasam was typically made in a sembu (pot) and so, Iya sombu, it was called. In your photo, it's a pAthiram (vessel).
The salesman was only half right. The container would melt only if there was no liquid left in it. Woe to the woman who stepped out to chat with the next door neighbor while the pot was boiling
I don't remember seeing it in all households. Well, silver cost nearly the same price, and was much in use in pre-Ever silver times (that was how stainless steel kitchenware was introduced to India!). Also, kal chaTTi (stoneware pot) was popular (scored high on enhancing the flavor of the dish). Keralites used them most.
The rasam was typically made in a sembu (pot) and so, Iya sombu, it was called. In your photo, it's a pAthiram (vessel).
The salesman was only half right. The container would melt only if there was no liquid left in it. Woe to the woman who stepped out to chat with the next door neighbor while the pot was boiling
I don't remember seeing it in all households. Well, silver cost nearly the same price, and was much in use in pre-Ever silver times (that was how stainless steel kitchenware was introduced to India!). Also, kal chaTTi (stoneware pot) was popular (scored high on enhancing the flavor of the dish). Keralites used them most.
-
- Posts: 3600
- Joined: 04 Aug 2011, 13:54
Re: Tit bits in Tamil
Is Iyam not lead and is it not inadvisable?
-
- Posts: 9383
- Joined: 03 Feb 2010, 02:03
Re: Tit bits in Tamil
If you can discover the thread, this was discussed in considerable depth. I seem to remember that tin is poisonous too, but copper pans have long been tinned, not to mention that TINS (cans) were tin-plated, so I guess it must be ok. Anyway, better than maggie noodles
Arasi, now you come to mention it, even aluminium pans will soon melt and burn if allowed to boil dry, or put on a flame when empty. Point noted --- but not for practical use, as I can't afford the pot!
Arasi, now you come to mention it, even aluminium pans will soon melt and burn if allowed to boil dry, or put on a flame when empty. Point noted --- but not for practical use, as I can't afford the pot!
-
- Posts: 2980
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Tit bits in Tamil
எவர் முகப்பொலிவை யாவது குறைத்து மதிப்பிடும் வகையில்
"நசுங்கிய ஈய சொம்பு" போல் எனும் சொல் கவனத்துக்கு வருகின்றது.
தஞ்சாவூரான்
12 06 2015
"நசுங்கிய ஈய சொம்பு" போல் எனும் சொல் கவனத்துக்கு வருகின்றது.
தஞ்சாவூரான்
12 06 2015
-
- Posts: 1865
- Joined: 07 Nov 2010, 20:01
Re: Tit bits in Tamil
For cooking, lead vessels were not used directly. Only brass vessels quoted with lead on the inner side were used. "ஈயம் பூசுதல்' was a regular activity in olden days. Even as late as 70's we had used such vessels. Only after arrival of SS vessels, the lead quoted brass vessels vanished. But they are still available in Vessel shops in Tamil Nadu.
-
- Posts: 9383
- Joined: 03 Feb 2010, 02:03
Re: Tit bits in Tamil
I know it seems presumptious of me. You have been here all your life, and the history of your family is here, and actually used these things, and I have not... but I still think tin and not lead, I have even read about craftsmen tinning vessels in this part of the world. I have read about it recently as a dying trade (Maybe in The Hindu, they do those articles about dying trades occasionally). Use of tin to protect brass, copper, etc from acids in cooking is not just Indian: I think it is, of old times, worldwide.
It wears out; it needs to be recoated on a regular basis, but lead, apart from being much more poisonous, is even softer. You can make an impression with your fingernail.
Sorry for Titbits in English
It wears out; it needs to be recoated on a regular basis, but lead, apart from being much more poisonous, is even softer. You can make an impression with your fingernail.
Sorry for Titbits in English
-
- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re: Tit bits in Tamil
Nick - you are absolutely correct.
The health issues come not from the 'lead' (as you point out, it is tin and not lead), but from copper, which has been implicated in the causation of a devastating childhood liver disease called Indian Childhood Cirrhosis.
The health issues come not from the 'lead' (as you point out, it is tin and not lead), but from copper, which has been implicated in the causation of a devastating childhood liver disease called Indian Childhood Cirrhosis.
-
- Posts: 9383
- Joined: 03 Feb 2010, 02:03
Re: Tit bits in Tamil
I didn't know that! My wife sometimes keeps water in a copper vessel, because she says that, according to some tradition, it is healthy to do so. Is she actually poisoning herself by doing that?
-
- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re: Tit bits in Tamil
As far as I am aware, it is not a disease of adults, and is caused by cooking in copper vessels, not merely storing water in copper vessels. In fact, indigenous health systems such as Ayurveda may actually recommend using copper vessels to store water, but not cook in.
-
- Posts: 1865
- Joined: 07 Nov 2010, 20:01
Re: Tit bits in Tamil
Nick,
Thanks for correcting me. But we are used to the Tamil word 'ஈயம்' which translates as 'lead'. So I was ignorant of this fact all the time.
Thanks for correcting me. But we are used to the Tamil word 'ஈயம்' which translates as 'lead'. So I was ignorant of this fact all the time.