KavithaigaL by Rasikas
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
நடுக்கடலில் நள்ளிரவில் ….(தொடர்ச்சி )
ஒவ்வொரு நிழலின் மீதும் அதனினும் கரியதோர்
நிழலைக் கொட்டி மெழுகி மூடிவிடும் காலனவன்
இருள் படர்ந்த கடலின் மெல் நினைவகற்றும்
மறதி எனும் போர்வையினைப் போர்த்திட்டான்
அனைவர் கண்களிலிரிந்தும் விரைவில்
உங்கள் நிழலும் மறைந்து விடும்.
அவர் அவர்க்கு அவர் அவர் பிழைப்பு இருக்கிறதே !
சிலருக்கு ஏர் கலப்பை சிலருக்கு கட்டு மரம்
ஆனாலும் புயல் காற்று பயங்கரமாய் கொக்கரிக்கும்
, இரவுகளில் நெற்றி வெளிறிய உங்கள் விதவைகள்
மாத்திரம் தனிமையின் வெறுமையில்
உங்களுக்காகவே காத்திருந்து காத்திருந்து
சலித்துப் போன பின்னும் கூட
உங்களைப் பற்றித்தான் பேசுகின்றனர் ,
கணப்பு தணல் மீது படிந்த சாம்பலையும்
தம் நினைவுகள் மீது படிந்த சாம்பலையும் கிளறியபடி.
காலப்போக்கில் கல்லறை அவர்கள் கண்களையும்
மூடியபின் உங்கள் பெயர் சொல்ல எதுவுமே இராது.
எங்கள் குரல் எதிரொலிக்கும் சிறு இடுகாட்டில்
எந்த வொரு மூலை முடு க்கிலும் சாதாரண
ஒரு நடுகல் கூட இல்லையே உங்கள் நினைவு கூர
குளிர் காலத்தில் உங்களுக்காக இலை உதிர்க்க
அழுமூஞ்சி செடி கூட இங்கில்லை !
தெருக்கோடி திருப்பத்தில் பழைய தோர் பாலத்தில்
அமர்ந்து ஒரு பிச்சைக்காரன் சம தொனியில் சோகமாய்
இழுத்து முனகும் தெம்மாங்கு பாடலில் கூட
உங்கள் நினைவு கூரும் வரி ஒன்று கூட இல்லையே !
இருள் சூழ் நள்ளிரவில் நடுக்கடலில் மூழ்கி
மறைந்து போன அக் கடலோடிகள் தாம் எங்கே ?
ஆர்ப்பரிக்கும் அலை களே ! எத்தனை சோகக்
கதைகளைத்தான் நீங்கள் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள்.!
ஆழ் கடலே ! தாய் மார்கள் உள்ளங்களை உலுக்கி
மண்டியிட செய்யும் பாழ் கடலே ! நீர் ஏற்ற நாள்களில்
திரண்டெழுந்து வந்து எமக்கு அச் சோக க்
கதைகளைத்தான் சொல்லி செல்கின்றீர்கள் .
ஆம் மாலை பொழுதினிலே கரை ஏறி எமை நோக்கி
வரும் போது உங்கள் குரல் தழு தழுத்து
ஓலமிட அச்சோகம் தான் காரணம் .
VICTOR HUGO(1840)
பிரபல பிரெஞ்சு கவிதைகள்
ஒவ்வொரு நிழலின் மீதும் அதனினும் கரியதோர்
நிழலைக் கொட்டி மெழுகி மூடிவிடும் காலனவன்
இருள் படர்ந்த கடலின் மெல் நினைவகற்றும்
மறதி எனும் போர்வையினைப் போர்த்திட்டான்
அனைவர் கண்களிலிரிந்தும் விரைவில்
உங்கள் நிழலும் மறைந்து விடும்.
அவர் அவர்க்கு அவர் அவர் பிழைப்பு இருக்கிறதே !
சிலருக்கு ஏர் கலப்பை சிலருக்கு கட்டு மரம்
ஆனாலும் புயல் காற்று பயங்கரமாய் கொக்கரிக்கும்
, இரவுகளில் நெற்றி வெளிறிய உங்கள் விதவைகள்
மாத்திரம் தனிமையின் வெறுமையில்
உங்களுக்காகவே காத்திருந்து காத்திருந்து
சலித்துப் போன பின்னும் கூட
உங்களைப் பற்றித்தான் பேசுகின்றனர் ,
கணப்பு தணல் மீது படிந்த சாம்பலையும்
தம் நினைவுகள் மீது படிந்த சாம்பலையும் கிளறியபடி.
காலப்போக்கில் கல்லறை அவர்கள் கண்களையும்
மூடியபின் உங்கள் பெயர் சொல்ல எதுவுமே இராது.
எங்கள் குரல் எதிரொலிக்கும் சிறு இடுகாட்டில்
எந்த வொரு மூலை முடு க்கிலும் சாதாரண
ஒரு நடுகல் கூட இல்லையே உங்கள் நினைவு கூர
குளிர் காலத்தில் உங்களுக்காக இலை உதிர்க்க
அழுமூஞ்சி செடி கூட இங்கில்லை !
தெருக்கோடி திருப்பத்தில் பழைய தோர் பாலத்தில்
அமர்ந்து ஒரு பிச்சைக்காரன் சம தொனியில் சோகமாய்
இழுத்து முனகும் தெம்மாங்கு பாடலில் கூட
உங்கள் நினைவு கூரும் வரி ஒன்று கூட இல்லையே !
இருள் சூழ் நள்ளிரவில் நடுக்கடலில் மூழ்கி
மறைந்து போன அக் கடலோடிகள் தாம் எங்கே ?
ஆர்ப்பரிக்கும் அலை களே ! எத்தனை சோகக்
கதைகளைத்தான் நீங்கள் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள்.!
ஆழ் கடலே ! தாய் மார்கள் உள்ளங்களை உலுக்கி
மண்டியிட செய்யும் பாழ் கடலே ! நீர் ஏற்ற நாள்களில்
திரண்டெழுந்து வந்து எமக்கு அச் சோக க்
கதைகளைத்தான் சொல்லி செல்கின்றீர்கள் .
ஆம் மாலை பொழுதினிலே கரை ஏறி எமை நோக்கி
வரும் போது உங்கள் குரல் தழு தழுத்து
ஓலமிட அச்சோகம் தான் காரணம் .
VICTOR HUGO(1840)
பிரபல பிரெஞ்சு கவிதைகள்
-
- Posts: 1865
- Joined: 07 Nov 2010, 20:01
திருப்பள்ளி வாயில்
இதயமே எம்பெருமானின் திருப்பள்ளி வாயில்.
இதயக் கதவினை இழுத்துச் சாத்திவிட்டு,
இரும்புக் கதவதனைத் திறந்து நோக்கினால்,
இருப்பானோ உள்ளேயவன் இயம்புவீர்.
இதயக் கதவினை இழுத்துச் சாத்திவிட்டு,
இரும்புக் கதவதனைத் திறந்து நோக்கினால்,
இருப்பானோ உள்ளேயவன் இயம்புவீர்.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
ஒன்றுக்குள் இரண்டு :-மூன்று
காதலிக்கு தான் அமைத்த கோலமிகு சமாதியில்
பேதலித்து உட் புகுந்தான் பாதுஷா , அது
பதினால்வரை மணந்தும் தலாக் இலா தனி உறவு .
கடல் கடந்து வந்த தோர் சிஷ்யை யின் பூத உடல்
கடல்கரை யோரம் புதுவையில் குருவின் சமாதிக்குள் .!
உடல் கடந்த ஆன்மிகத்தின் தொடர் பயணம் .
திரை கண்ட நாயகனைத் தன் தலைவனாய்
வரித்து ,முதல்வராகி ,உலகறியா துயிர் நீத்து ,
மெரினாவில் உடன் துஞ்சும் அரசியல் உறவிது காண்!
உயிர் பிரிந்தும் உடல் பிரியா உறவுகள்!,
Sent from http://bit.ly/otv8Ik
காதலிக்கு தான் அமைத்த கோலமிகு சமாதியில்
பேதலித்து உட் புகுந்தான் பாதுஷா , அது
பதினால்வரை மணந்தும் தலாக் இலா தனி உறவு .
கடல் கடந்து வந்த தோர் சிஷ்யை யின் பூத உடல்
கடல்கரை யோரம் புதுவையில் குருவின் சமாதிக்குள் .!
உடல் கடந்த ஆன்மிகத்தின் தொடர் பயணம் .
திரை கண்ட நாயகனைத் தன் தலைவனாய்
வரித்து ,முதல்வராகி ,உலகறியா துயிர் நீத்து ,
மெரினாவில் உடன் துஞ்சும் அரசியல் உறவிது காண்!
உயிர் பிரிந்தும் உடல் பிரியா உறவுகள்!,
Sent from http://bit.ly/otv8Ik
-
- Posts: 2984
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
Ponbhairavi avl,
An excellent presentation after a long time.
Vaazhga valamudan !
Thanjavooran
16 05 2017
An excellent presentation after a long time.
Vaazhga valamudan !
Thanjavooran
16 05 2017
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
thanjavooran,
thank you very much in double
your vazhthu comes in time as I have just entered 81.-
thank you very much in double
your vazhthu comes in time as I have just entered 81.-
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
Ponbhairavi-ji,
Pranams & Best Wishes !
Ponbhairavi-ji,
Pranams & Best Wishes !
-
- Posts: 16789
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
இராசகோபாலரே!
எண்பது பிராயம் தொட்டும்-- உம்மில்
எண்ணிலடங்கா எண்ண அலைகள்!
வண்ணமாய்க் கதை, கவிதைகளும்
நுண்ணறிவில் பிறந்தவண்ணம், பாரும்!
உமக்கு ஆயுளாரோக்கியமொடு, அன்பு வாழ்வுமே!
எண்பது பிராயம் தொட்டும்-- உம்மில்
எண்ணிலடங்கா எண்ண அலைகள்!
வண்ணமாய்க் கதை, கவிதைகளும்
நுண்ணறிவில் பிறந்தவண்ணம், பாரும்!
உமக்கு ஆயுளாரோக்கியமொடு, அன்பு வாழ்வுமே!
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
P B
மிக்க நன்றி
எண்பதில் ஜி கிடைத்தது எனக்கு ஜிலேபியை போல
நீரும் பாலா - ஜி. ஆக ஏழுமலையான் அருளட்டும்.
Sent from http://bit.ly/otv8Ik
மிக்க நன்றி
எண்பதில் ஜி கிடைத்தது எனக்கு ஜிலேபியை போல
நீரும் பாலா - ஜி. ஆக ஏழுமலையான் அருளட்டும்.
Sent from http://bit.ly/otv8Ik
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
அரசி ,
கிண்ணத்துக்குள் கிடந்த என் எண்ணங்களை
பண்ணின் "rasikas " தான் பரிமளிக்க செய்தது
கண் இரண்டினைப் போல இரு மொழியில் கவி பொழியும்
தண் சொல் அரசியார் எனைப் பற்றி இவண்
விண்டுரைத்த பாராட்டு க்கு என் நன்றி யாண்டும் .
ராஜகோபாலன்
Sent from http://bit.ly/otv8Ik
கிண்ணத்துக்குள் கிடந்த என் எண்ணங்களை
பண்ணின் "rasikas " தான் பரிமளிக்க செய்தது
கண் இரண்டினைப் போல இரு மொழியில் கவி பொழியும்
தண் சொல் அரசியார் எனைப் பற்றி இவண்
விண்டுரைத்த பாராட்டு க்கு என் நன்றி யாண்டும் .
ராஜகோபாலன்
Sent from http://bit.ly/otv8Ik
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ "கொலைக்கருவி "
நாட்டின் ராணியின் தலையையும் கொய்த வரலாற்றை
அற்புதமாய் விவரிக்கும் அலெக்ஸாண்டர் துய்மாவின்
நாவலை நான் முற்றிலுமாய் தமிழாக்கம் செய்த நூல்
சிவப்பு மாளிகை வீரன் ( 500 பக்கத்தில் )
மணிவாசகர் பதிப்பகத்தால் (044 -25361039 )
இது தருணத்தில் வெளி வந்திருப்பது இனிய செய்தி
Sent from http://bit.ly/otv8Ik
நாட்டின் ராணியின் தலையையும் கொய்த வரலாற்றை
அற்புதமாய் விவரிக்கும் அலெக்ஸாண்டர் துய்மாவின்
நாவலை நான் முற்றிலுமாய் தமிழாக்கம் செய்த நூல்
சிவப்பு மாளிகை வீரன் ( 500 பக்கத்தில் )
மணிவாசகர் பதிப்பகத்தால் (044 -25361039 )
இது தருணத்தில் வெளி வந்திருப்பது இனிய செய்தி
Sent from http://bit.ly/otv8Ik
-
- Posts: 16789
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
I was waiting to hear this. Congratulations!
-
- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re: KavithaigaL by Rasikas
Namaskaram, Mama! With best wishes for many, many more years to come.Ponbhairavi wrote: ↑16 May 2017, 16:10 thanjavooran,
thank you very much in double
your vazhthu comes in time as I have just entered 81.-
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
Arasi
You are right. The time taken to find the publisher wasmore than the time taken to translate the whole book!
You are right. The time taken to find the publisher wasmore than the time taken to translate the whole book!
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
Dear Dr .Shanker,
Thanks for your wishes.
Thanks for your wishes.
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
-
- Posts: 16789
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Merci, Bala!
Bravo, ponbhairavi, je suis ravi
Ravi aussi!
Bravo, ponbhairavi, je suis ravi
Ravi aussi!
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
Vraiment enchante.ma reconnaissane, et pour Ravi aussi.
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
520
ஓர் தத்துவம்
இத்தரை மீதிலே அத்தனையும் பெண்மையா ?! - எனில்
செத்தபின் தேடலாம் ! இத்தரையில் விரகமே !
ப்ரத்யக்ஷம் பாலா
05.10.2015
ஓர் தத்துவம்
இத்தரை மீதிலே அத்தனையும் பெண்மையா ?! - எனில்
செத்தபின் தேடலாம் ! இத்தரையில் விரகமே !
ப்ரத்யக்ஷம் பாலா
05.10.2015
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
521
அதீத ரசிகர்
பித்தனாகப் பிச்சைகேட்டுப் பாடுவாரைப் போற்றுவார்;
செத்தபின்னர் படங்களுக்கு மாலைகளைச் சாற்றுவார்
இல்லாத சக்தியெல்லாம் இருந்ததாகக் கூட்டுவார்;
எல்லாவிதக் கதைபுனைந்து சாமிபட்டம் சூட்டுவார்.
ப்ரத்யக்ஷம் பாலா
16.04.2012
அதீத ரசிகர்
பித்தனாகப் பிச்சைகேட்டுப் பாடுவாரைப் போற்றுவார்;
செத்தபின்னர் படங்களுக்கு மாலைகளைச் சாற்றுவார்
இல்லாத சக்தியெல்லாம் இருந்ததாகக் கூட்டுவார்;
எல்லாவிதக் கதைபுனைந்து சாமிபட்டம் சூட்டுவார்.
ப்ரத்யக்ஷம் பாலா
16.04.2012
-
- Posts: 16789
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
இருந்த போதோ? விருந்தாய்ப் பாடினாலும்
பொருந்தியிருந்து கேட்டாரோ பலரும்?
நில்லாத, பொல்லாத வாழ்விலே மறந்து
இல்லாது போன பின் ஏற்றிப் புகழ்ந்தாரோ?
இல்லை...
இருக்கும்போது வRuத்தெடுத்து--ஸிவியர்
க்ரிடிசிஸமாய், ரசித்ததும் ஜீரணித்துப் பின்
கிரிக்கெட் பந்தாய் எRiந்து மகிழ்வதுதான்
ப்ரிய ரசிகர்களுக்கழகெனக் கொள்வாரோ?
பொருந்தியிருந்து கேட்டாரோ பலரும்?
நில்லாத, பொல்லாத வாழ்விலே மறந்து
இல்லாது போன பின் ஏற்றிப் புகழ்ந்தாரோ?
இல்லை...
இருக்கும்போது வRuத்தெடுத்து--ஸிவியர்
க்ரிடிசிஸமாய், ரசித்ததும் ஜீரணித்துப் பின்
கிரிக்கெட் பந்தாய் எRiந்து மகிழ்வதுதான்
ப்ரிய ரசிகர்களுக்கழகெனக் கொள்வாரோ?
-
- Posts: 2984
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
ப்ரத்யக்ஷம் பாலா அவர்களே
அருமையான கருத்தை பாடலாக வடித்துள்ளீர்கள். நன்றி
[கவி] அரசி அவர்களே.
பொருள் பொதிந்த கவிதை. மணிப்ரவாளமாக வழங்கியதற்கு
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
24 05 2017
அருமையான கருத்தை பாடலாக வடித்துள்ளீர்கள். நன்றி
[கவி] அரசி அவர்களே.
பொருள் பொதிந்த கவிதை. மணிப்ரவாளமாக வழங்கியதற்கு
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
24 05 2017
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
thanjavooran,
THANKS !
THANKS !
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
522
திகைப்பு
ஐயையோ ! இது சிவலோகமன்றோ ?
ஐயகோ ! வேறேதோ சாற்றினரே ?
ஆஹா !
ஆடும் அழகன் அடி அதி அழகாய் இருக்கிறது !
ப்ரத்யக்ஷம் பாலா
27.05.2017
திகைப்பு
ஐயையோ ! இது சிவலோகமன்றோ ?
ஐயகோ ! வேறேதோ சாற்றினரே ?
ஆஹா !
ஆடும் அழகன் அடி அதி அழகாய் இருக்கிறது !
ப்ரத்யக்ஷம் பாலா
27.05.2017
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
சூப்பர் ஸ்டார் காப்பு
காலா கபாலி கணினிமய எந்திரா
வேலாயு தாவீரா வேட்டையா - பாலாலுன்
கட்டவுட் தன்னைக் கழுவித் துதித்திட்டோம்
துட்டரை வென்றெமைக் கா!
(வெண்பா)
ஸ்ரீதர்_ரங்கா
25-May-2017
-
- Posts: 16789
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
சிரிதரரே...
அத்தி பூப்பது போல் உம் ஒரு பா...
ஆகா!
அத்தனை பேராலும் ஆகாது, போம்
ஆகாத்தியமும் அராசகமுமாய், மருள் கொண்டு
இவர் தமிழர் என்ற பேரில் நாட்டை வெறும்
ஈ மொய்க்கும் பண்டமாக்கியதை உண்டும் களிப்பரோ?
உத்தம நாட்டின் உயிர் நாடி கொல்வரோ?
ஊக்கம், ஆக்கம் விட்டு-- பதவி, பொருள் தானோ?
எத்தர்கள் இவர் எத்தனை பேர்! எத்தனை அணி!
ஏமாந்தவர் எளிய மக்களே! பவர் ஹீரோ ஏது செய்வார்?
ஐயம் இதில் உண்டோ? அத்தனை தில்லு முல்லுகள்!
ஒத்துழைப்பென்பதிவர் அறிந்ததில்ல--ஐயன் காந்தி
ஓதினான் ஒத்துழையாமையென--அநீதி நீக்கிட--
ஔடதமென--அறிவீலிகளோ? நாட்டையழிப்பார்!
அக்கக்கக்கக்கக் ஏதும் கற்றோமில்லையே
அத்தி பூப்பது போல் உம் ஒரு பா...
ஆகா!
அத்தனை பேராலும் ஆகாது, போம்
ஆகாத்தியமும் அராசகமுமாய், மருள் கொண்டு
இவர் தமிழர் என்ற பேரில் நாட்டை வெறும்
ஈ மொய்க்கும் பண்டமாக்கியதை உண்டும் களிப்பரோ?
உத்தம நாட்டின் உயிர் நாடி கொல்வரோ?
ஊக்கம், ஆக்கம் விட்டு-- பதவி, பொருள் தானோ?
எத்தர்கள் இவர் எத்தனை பேர்! எத்தனை அணி!
ஏமாந்தவர் எளிய மக்களே! பவர் ஹீரோ ஏது செய்வார்?
ஐயம் இதில் உண்டோ? அத்தனை தில்லு முல்லுகள்!
ஒத்துழைப்பென்பதிவர் அறிந்ததில்ல--ஐயன் காந்தி
ஓதினான் ஒத்துழையாமையென--அநீதி நீக்கிட--
ஔடதமென--அறிவீலிகளோ? நாட்டையழிப்பார்!
அக்கக்கக்கக்கக் ஏதும் கற்றோமில்லையே
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
மிக்க நன்றி அரசியாரே!
அ முதல் ஃ வரை தங்கள் எண்ணங்கள் மிக அருமை.
அ முதல் ஃ வரை தங்கள் எண்ணங்கள் மிக அருமை.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
அகர முதல எழுத்தெல்லாம் சாற்றுவது
ஆள்பவர்தம் அயோக்கிய தனமே அந்தோ !
ஆள்பவர்தம் அயோக்கிய தனமே அந்தோ !
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
.
இது நீரோ வாசிக்கும் பிடில் அல்ல
அக்கினி குஞ்சு .
பஞ்சிலே பற்றி , பின் அஞ்சு மாடி கடந்து ,
அஞ்சிலே ஒன்றை நோக்கி விசும்பிய
அஞ்சிலே ஒன்றை அணைக்க வந்த வண்டிகளில்
அஞ்சிலே ஒன்று போதுமான அளவு இல்லை.!
பஞ்சவடி நின்று வழி செல்வோர்க்கருள்
அஞ்சனை மைந்தா வாலறிவன் நீ உன்
நெஞ்சில் கூடவா கொஞ்சம் ஈரமில்லை ? ஈர்
அஞ்சு தலையோன் தலைநகர் , எழில்
கொஞ்சும் மதுரையுடன் சென்னையையும் எண்ணி
அஞ்சி நடுங்கிட செய்தனையே , நங்கைநல்லூரா !!
இது நீரோ வாசிக்கும் பிடில் அல்ல
அக்கினி குஞ்சு .
பஞ்சிலே பற்றி , பின் அஞ்சு மாடி கடந்து ,
அஞ்சிலே ஒன்றை நோக்கி விசும்பிய
அஞ்சிலே ஒன்றை அணைக்க வந்த வண்டிகளில்
அஞ்சிலே ஒன்று போதுமான அளவு இல்லை.!
பஞ்சவடி நின்று வழி செல்வோர்க்கருள்
அஞ்சனை மைந்தா வாலறிவன் நீ உன்
நெஞ்சில் கூடவா கொஞ்சம் ஈரமில்லை ? ஈர்
அஞ்சு தலையோன் தலைநகர் , எழில்
கொஞ்சும் மதுரையுடன் சென்னையையும் எண்ணி
அஞ்சி நடுங்கிட செய்தனையே , நங்கைநல்லூரா !!
-
- Posts: 16789
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
PB,
No idea about the context, but powerful lines (anjilE onRu et al). Please let me know..
No idea about the context, but powerful lines (anjilE onRu et al). Please let me know..
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
Arasi thanks.The chennai silks at t nagar was completely destroyed in fire and all the five floors were destroyed. The fire engines which came to the spot did not have enough water. In panchavadi village near pondicherry there is ahuge statue of five faced Hanuman 36 feet tall like the one at nanganallor.
Now it appears that anjile onru petran has flown to London.unfortunate too bad.the ire of the fire is unabated.
Now it appears that anjile onru petran has flown to London.unfortunate too bad.the ire of the fire is unabated.
-
- Posts: 1865
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
புதுமையின் மோகம் கண்ணை மறைக்கலாச்சே;
பதுமையெனப் பெண்ணைக் கருதி பிழைப்பு நடத்தலாச்சே;
ஒழுக்கமும் நெறியும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாச்சே;
பழித்ததை ஒழித்திட வள்ளுவன் பகன்றது வெறும் பழஞ்சொல்லாச்சே!
பதுமையெனப் பெண்ணைக் கருதி பிழைப்பு நடத்தலாச்சே;
ஒழுக்கமும் நெறியும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாச்சே;
பழித்ததை ஒழித்திட வள்ளுவன் பகன்றது வெறும் பழஞ்சொல்லாச்சே!
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
ஐயே, மெத்தப் பொருத்தம் !!
(1)
383
சேட்டைச் சாமியார் !
ஆட்டம் ஆடுவார்; வேடம் போடுவார்.
கூட்டம் கூட்டுவார்; நோட்டை நாடுவார்.
ஊட்டம் தேடுவார்; வேட்டை ஆடுவார் - எதிர்த்தால்
நீட்டிச் சாடுவார்; பின் ஓட்டம் பிடிப்பார் !
ப்ரத்யக்ஷம் பாலா,
27.02.2015.
(2)
382
ஆலயம் செல்வது சாலவும் நன்று
ஆலயம் இருக்கையில் ஆசிரமம் எதற்கையா ?
கோலத்தைக் கண்டு கைகட்டி நிற்கவா ?
சாமி இருக்கையில் சாமியார் எதற்கையா ?
சேமித்ததனைத்தும் தொலைத்து நிற்கவா ?
ஆலயம் செல்வது சாலவும் நன்று !
ப்ரத்யக்ஷம் பாலா,
27.02.2015.
ஐயே, மெத்தப் பொருத்தம் !!
(1)
383
சேட்டைச் சாமியார் !
ஆட்டம் ஆடுவார்; வேடம் போடுவார்.
கூட்டம் கூட்டுவார்; நோட்டை நாடுவார்.
ஊட்டம் தேடுவார்; வேட்டை ஆடுவார் - எதிர்த்தால்
நீட்டிச் சாடுவார்; பின் ஓட்டம் பிடிப்பார் !
ப்ரத்யக்ஷம் பாலா,
27.02.2015.
(2)
382
ஆலயம் செல்வது சாலவும் நன்று
ஆலயம் இருக்கையில் ஆசிரமம் எதற்கையா ?
கோலத்தைக் கண்டு கைகட்டி நிற்கவா ?
சாமி இருக்கையில் சாமியார் எதற்கையா ?
சேமித்ததனைத்தும் தொலைத்து நிற்கவா ?
ஆலயம் செல்வது சாலவும் நன்று !
ப்ரத்யக்ஷம் பாலா,
27.02.2015.
-
- Posts: 2984
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
Pratyaksham Bala,
Excellent !
Very meaningful words clearly portraying the current situation.
Vaazhga valamudan!
Thanjavooran
31 08 2017
Excellent !
Very meaningful words clearly portraying the current situation.
Vaazhga valamudan!
Thanjavooran
31 08 2017
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
P.B யின் முதல் கவிதையை தொடர்ந்து ஒரு அந்தாதி
……...பின் ஓட்டம் பிடிப்பார் .
ஓட்டம் பிடித்தவரை சட்டம் தேடி பிடித்தவுடன்
ஆட்டம் காட்டுவார் சமூக சேவகன் தான் என
ரோட்டில் பெரும் ரவுடிகள் கூட்டம் கூட்டுவார்
கொட்டம் அடித்து மூட்டுவார் பெரும் தீயை.
மூட்டிய தீ அடங்கும் முன்பே அவர் தோட்டத்து லீலைகள்
வீட்டுக்கு வீடு வண்ண T. V யில் காட்டப்பட
கிருட்டிணன் நான் பெண்ணை உய்வித்து விட்டேன் என்பார்.
கெட்ட கேட்டுக்கு கீதாச்சார்யன் பெயரா ? அப்
பெயரைச் சொல்லாதே அவர் பிறந்த சிறைக்கு
கயவன் நீ இருபது ஆண்டுகள் செல் எனும் நீதி கேட்டு
பயந்து பேடி அவன் விழுந்து புரண்டழுதாலும்
நயமிக்க வெறும் நடிப்பிது நாமறிவோம்
……...பின் ஓட்டம் பிடிப்பார் .
ஓட்டம் பிடித்தவரை சட்டம் தேடி பிடித்தவுடன்
ஆட்டம் காட்டுவார் சமூக சேவகன் தான் என
ரோட்டில் பெரும் ரவுடிகள் கூட்டம் கூட்டுவார்
கொட்டம் அடித்து மூட்டுவார் பெரும் தீயை.
மூட்டிய தீ அடங்கும் முன்பே அவர் தோட்டத்து லீலைகள்
வீட்டுக்கு வீடு வண்ண T. V யில் காட்டப்பட
கிருட்டிணன் நான் பெண்ணை உய்வித்து விட்டேன் என்பார்.
கெட்ட கேட்டுக்கு கீதாச்சார்யன் பெயரா ? அப்
பெயரைச் சொல்லாதே அவர் பிறந்த சிறைக்கு
கயவன் நீ இருபது ஆண்டுகள் செல் எனும் நீதி கேட்டு
பயந்து பேடி அவன் விழுந்து புரண்டழுதாலும்
நயமிக்க வெறும் நடிப்பிது நாமறிவோம்
Last edited by Ponbhairavi on 31 Aug 2017, 15:32, edited 3 times in total.
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
thanjavooran,
THANKS !
Ponbhairavi,
மிக்க அருமை !
ஆனால், ஜாக்கிரதை ! சாமியாரின் சீடர்களில் யாரேனும் ஓரிருவர் குரங்கு கோட்டான் என்றெல்லாம் சாடக்கூடும் !
THANKS !
Ponbhairavi,
மிக்க அருமை !
ஆனால், ஜாக்கிரதை ! சாமியாரின் சீடர்களில் யாரேனும் ஓரிருவர் குரங்கு கோட்டான் என்றெல்லாம் சாடக்கூடும் !
-
- Posts: 2984
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
பேஷ் பேஷ் சரியான போட்டி.
ப்ரத்யக்ஷம் பாலா
நடிப்பிது நாம் அறிவோம் நன்றாகவே ஆனாலும்
அருமையான வரிகள்
.
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
01 09 2017
ப்ரத்யக்ஷம் பாலா
நடிப்பிது நாம் அறிவோம் நன்றாகவே ஆனாலும்
அருமையான வரிகள்
.
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
01 09 2017
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
தஞ்சாவூரான் ,
போட்டி இதில் ஏதுமில்லை . பாலா நீட்டிய baton ஐ வாங்கி கொண்டு (அந்தாதி ) நான் relay ரேஸ் ஓடினேன் அவ்வளவு தான்.பாராட்டைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி .
போட்டி இதில் ஏதுமில்லை . பாலா நீட்டிய baton ஐ வாங்கி கொண்டு (அந்தாதி ) நான் relay ரேஸ் ஓடினேன் அவ்வளவு தான்.பாராட்டைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி .
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
ஆசிரியர் தினம்
(ஸம்ஸ்க்ருத ஆசான் நினைவு)
ஊசி உடல், கொடும் உள்ளம், கடுமுகம் கொண்ட
ஆசிரியர் தினம் அடித்து உதைத்தது மறக்குமோ ?
ஏசி சுடும் மனம் எமன் குணத்துக்கும் நீசம்.
பேசி முடியாது ! பெரும் பேய்க்கதை போம் அது !
ப்ரத்யக்ஷம் பாலா,
05.09.2017.
ஆசிரியர் தினம்
(ஸம்ஸ்க்ருத ஆசான் நினைவு)
ஊசி உடல், கொடும் உள்ளம், கடுமுகம் கொண்ட
ஆசிரியர் தினம் அடித்து உதைத்தது மறக்குமோ ?
ஏசி சுடும் மனம் எமன் குணத்துக்கும் நீசம்.
பேசி முடியாது ! பெரும் பேய்க்கதை போம் அது !
ப்ரத்யக்ஷம் பாலா,
05.09.2017.
-
- Posts: 16789
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
ஆசான் ஒரு சாத்தான், அ ந்தோ!
ஈசனவன் செயலால், ஏனையோர்
நேசமிகு நல்லோராய் ஆசிரியராய்
வசை விடுத்து உம் மதி வளர்த்தனர்!
அவருக்கெல்லாம் வணக்கங்கள்...
Made me go back to my terror of teachers line up! And then to the great ones. Salutations to them!
ஈசனவன் செயலால், ஏனையோர்
நேசமிகு நல்லோராய் ஆசிரியராய்
வசை விடுத்து உம் மதி வளர்த்தனர்!
அவருக்கெல்லாம் வணக்கங்கள்...
Made me go back to my terror of teachers line up! And then to the great ones. Salutations to them!
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
524
சாமியார் விட்ட பெருமூச்சு
நல்ல வேளை முடிந்தது நம்ம கேஸ் சென்ற ஆண்டே !
இல்லையெனில் நமக்கும் இருபதாண்டு கிடைத்திருக்கும்.
சொல்ல ஒரு பக்தரில்லை; சொர்ணமழை பொழிவாரில்லை.
மெல்லச் சில ஆண்டு தள்ளி மேலுலகம் ஓடிவிடலாம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
06.09.2017.
சாமியார் விட்ட பெருமூச்சு
நல்ல வேளை முடிந்தது நம்ம கேஸ் சென்ற ஆண்டே !
இல்லையெனில் நமக்கும் இருபதாண்டு கிடைத்திருக்கும்.
சொல்ல ஒரு பக்தரில்லை; சொர்ணமழை பொழிவாரில்லை.
மெல்லச் சில ஆண்டு தள்ளி மேலுலகம் ஓடிவிடலாம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
06.09.2017.
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
525
ஒரே ஒரு ஊரிலே
எப்போதோ ஒரு ராசா
தப்பெல்லாம் செய்தவர்
அப்போதே மறைந்தவர்
அவரை
இப்போதும் துதிபாடி
ஒப்பிலாத் தலைவரென
எம்பிக் குதித்தாடுவர் !
ப்ரத்யக்ஷம் பாலா,
10.09.2017.
ஒரே ஒரு ஊரிலே
எப்போதோ ஒரு ராசா
தப்பெல்லாம் செய்தவர்
அப்போதே மறைந்தவர்
அவரை
இப்போதும் துதிபாடி
ஒப்பிலாத் தலைவரென
எம்பிக் குதித்தாடுவர் !
ப்ரத்யக்ஷம் பாலா,
10.09.2017.
-
- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re: KavithaigaL by Rasikas
Priceless - The sad thing is that this could apply to so many rAgAngams...Pratyaksham Bala wrote: ↑10 Sep 2017, 06:15 525
ஒரே ஒரு ஊரிலே
எப்போதோ ஒரு ராசா
தப்பெல்லாம் செய்தவர்
அப்போதே மறைந்தவர்
அவரை
இப்போதும் துதிபாடி
ஒப்பிலாத் தலைவரென
எம்பிக் குதித்தாடுவர் !
ப்ரத்யக்ஷம் பாலா,
10.09.2017.
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
rshankar:
THANKS !
THANKS !
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
526
ஆசிரமவாசியின் அங்கலாய்ப்பு
கோடு கிழித்து என்னைக் குடிமை ஆக்கினரே !
ஆடு போல பட்டியில் அடைந்து கிடந்தேனே !
கேடுகெட்டு உழைத்துக் குலைந்து போனேனே !
காடு செல்லும் நேரம் விழித்தென் பயன் தேவே ?
ப்ரத்யக்ஷம் பாலா,
28.05.2017.
ஆசிரமவாசியின் அங்கலாய்ப்பு
கோடு கிழித்து என்னைக் குடிமை ஆக்கினரே !
ஆடு போல பட்டியில் அடைந்து கிடந்தேனே !
கேடுகெட்டு உழைத்துக் குலைந்து போனேனே !
காடு செல்லும் நேரம் விழித்தென் பயன் தேவே ?
ப்ரத்யக்ஷம் பாலா,
28.05.2017.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெயிது
ஓங்கு பெரும் சென் நெல் ஊடு கயல் உகள
ஓங்கு பெரும்சென்நெல் குத்தி அரிசி யாக்கி வெண்
பொங்கல் உண்ணும்போது மூட நெய் முழங்கை வழி வார
நங்காய் உணவை நீ நன்றாய் தான் பாடி வைத்தாய்
ஆயிரம் ஏக்கர் நிலம் உனக்கு அடியார் எழுதி வைத்தார்
ஆயிரம் வாரணம் சூழ வந்தாலும் இவ்விளை நெல் போதுமே
ஆயினும் உன்னைப் பட்டினி போடுகின்ற பாவிகளை
கோயிலில் இருக்கும் நீ தண்டிக்க தாமத மேன்?
ஓங்கு பெரும் சென் நெல் ஊடு கயல் உகள
ஓங்கு பெரும்சென்நெல் குத்தி அரிசி யாக்கி வெண்
பொங்கல் உண்ணும்போது மூட நெய் முழங்கை வழி வார
நங்காய் உணவை நீ நன்றாய் தான் பாடி வைத்தாய்
ஆயிரம் ஏக்கர் நிலம் உனக்கு அடியார் எழுதி வைத்தார்
ஆயிரம் வாரணம் சூழ வந்தாலும் இவ்விளை நெல் போதுமே
ஆயினும் உன்னைப் பட்டினி போடுகின்ற பாவிகளை
கோயிலில் இருக்கும் நீ தண்டிக்க தாமத மேன்?
-
- Posts: 4165
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
527
என் சொல
தேடிப் பலகாத தூரம் சென்று
வாடிப் பொருள் மிகச் செலவு செய்து
கூடிப் பழம் பெருமை பேசி ஆட
நாடி வரும் கூட்டம் குறைந்து போனதே !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.09.2017
என் சொல
தேடிப் பலகாத தூரம் சென்று
வாடிப் பொருள் மிகச் செலவு செய்து
கூடிப் பழம் பெருமை பேசி ஆட
நாடி வரும் கூட்டம் குறைந்து போனதே !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.09.2017