KavithaigaL by Rasikas

Post Reply
rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: KavithaigaL by Rasikas

Post by rshankar »

Ponbhairavi wrote: 15 Sep 2017, 11:15 தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெயிது
ஓங்கு பெரும் சென் நெல் ஊடு கயல் உகள
ஓங்கு பெரும்சென்நெல் குத்தி அரிசி யாக்கி வெண்
பொங்கல் உண்ணும்போது மூட நெய் முழங்கை வழி வார
நங்காய் உணவை நீ நன்றாய் தான் பாடி வைத்தாய்
ஆயிரம் ஏக்கர் நிலம் உனக்கு அடியார் எழுதி வைத்தார்
ஆயிரம் வாரணம் சூழ வந்தாலும் இவ்விளை நெல் போதுமே
ஆயினும் உன்னைப் பட்டினி போடுகின்ற பாவிகளை
கோயிலில் இருக்கும் நீ தண்டிக்க தாமத மேன்?
Very samayOcitam!!

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

527
கதைப்பு

செத்துச் சுவர்க்கம் தேட
சத்தம் களேபரம் தாண்டி
வெத்துக் கதைகள் வேண்டி
நித்தம் செல்லப் போமோ ?

ப்ரத்யக்ஷம் பாலா,
20.09.2017
Last edited by Pratyaksham Bala on 20 Sep 2017, 09:39, edited 1 time in total.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

rshankar,
Thanks

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
கதைப்பு = கதா காலட்சேபம்

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

deleted.
Last edited by Pratyaksham Bala on 24 Sep 2017, 05:59, edited 1 time in total.

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: KavithaigaL by Rasikas

Post by rshankar »

Pratyaksham Bala wrote: 23 Sep 2017, 18:12 .
கவிதைக்கு ஒரு கரு
http://indianexpress.com/article/india/ ... t-4857374/
Was this the link you meant to post?

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

528
அடுத்தது

பழம் தின்னும் ராசா பாழ் இடம் போவரோ ?
தொழும் இனிய தலத்திலே தொலைந்ததோ புனிதம் ?
அழும் குரல்கள் நித்தமும் அனலாய் தகிக்குமோ ?
விழும் மந்தைக் கூட்டமும் வேறு இடம் ஓடுமோ ?

ப்ரத்யக்ஷம் பாலா,
26.09.2017.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

529
பணமா பெரிது ?

ஆஸ்தி கரைந்த பின்னே அலறி என்ன பயன் ?
நாஸ்தி நாஸ்தி என்றே நாளெல்லாம் குமுறிக் கிட.
உண்டியலில் கொட்டியது உலகுக்குத் தெரியாது.
விண்டாலும் ஏற்காது ; வீணே புலம்பாதே.

ப்ரத்யக்ஷம் பாலா,
09.10.2017.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

214
தலைவன்

ஆறு படை வீடுடையோன் இங்கிருக்க
வேறு விடை தேடவும் வேண்டுமோ ?
கூறு குகன் வேடவன் கோமகன் - மயில்
ஏறி வரும் வேலவனே தலைவனென !

ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2012.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

பதினோரு தபால் தலைக்கு
பதினோரு வரியில் தலை வணக்கம்
வண் ண தபால் தலையில் தம் தலை
கண் ட தலைவர்கள் எண்ணிலார் ,எனினும்
மண் டோதரி கணவன் தலைகள் பத்தினையும்-கோ
தண் டத்தால் துண்டித்த கோசலை தலை மகன்
விண் ண்ணோர் தலைவன் பத்து ரதன் புத்திரனின்
பண் பு மிகு வரலாற்றை தலையான கலை நயத்தில்
பணம் பத்தின் பாதி விலையில் தலைகள் பத்தும்
பணம் பத்துடன் பாதி கூட்டிய விலையில் தலை நடுவில்
கண் கவர் சித்திரமாய் திகழும் தபால் தலைகள் !!
மண் வந்த அவதாரம் பத்தில் தலை சிறந்த திது - கார்
வண் ண தலைவனை நாம் தலை தாழ்த்தி வணங்கிடுவோம்.
Picture of stamps in
https://drive.google.com/file/d/0B85HwZ ... sp=sharing

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

Ponbhairavi,
Excellent! I like the way the letter 'Na' garam is handled.
With wishes,
Thanjavooran
14 11 2017

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

thanjavooran,
thanks. very kind of you
ponbhairavi

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

மாயன், கானக் கண்ணன் செய்யும் சாலம்!


சாதி மண் விளையும் பயிர்களுக்குண்டோ?
விதி! மண் மறை மனிதர்க்குத்தானோ?
வாதிடவும், பகைக்கவுமே சாதியோ?
சாதி, சாதியென்று சாதித்ததென்னவோ? சுய
வாதியோ? பாதியும் பாலிடிக்ஸோ? மன‌
வியாதி கொண்டவர் போல் நடந்திடும்
மாதிரி ஏனோ? எம் முறைகளெல்லாம்
காதில் விழாது நடப்பதும் ஏனோ?
மீதிக் கதை என்னவோ? நீதி விளங்குமோ?
Last edited by arasi on 04 Dec 2017, 14:52, edited 1 time in total.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

deleted...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

மிக்க அருமை !

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

விஷமக்கார கண்ணன் பொல்லாத
விஷமக்கார கண்ணன்
விளம்ப கால ராகம் பாடி விஸ்தாரமாய் ஸ்வரமும் பாடி
நாளுக்கொரு புரட்சி செய்யும் நந்த கோபாலன்---அவன்

பக்கத்து தெரு பெண்ணை அழைப்பான்
தலை கீழாக பாட்டு ஒன்று பாட ச்சொல்லுவான்
எனக்கது தெரியாதென்றால் தன்
கைகள் ரெண்டை கீழே ஊன்றி காலை மேலே தூக்கி நின்று
சிரசாசன வித்தை காட்டி மூச்சும் பாட்டும் இழுத்து பாடும் ---(-வி )

பாடும் போது பேசக்கூடாது -பேசிவிட்டால்
அட்டகாசம் தாங்க வொண்ணாது
இது முறையோ என்று யாரும் கேட்கக்கூடாது
சும்மா ஒரு பேச்சுக்காக சம்பிரதாயம் இல்லை என்றால்
அரியக்குடி செம்மங்குடி அத்தனை பேரும் பார்ப்பான் என்பான் -


குயிலின் பாட்டை புகழக்கூடாது ---புகழ்ந்துவிட்டால்
பொங்கும் சீற்றம் தாங்க வொண்ணாது
அதன் பிறப்பை சுட்டிக்காட்டி பேசி
ஜாதி சேற்றை வாரி தூற்றி
சிவப்புகொடி பஜனைக்கு ஜால்ரா போட செல்லும் அந்த --


பேத்தல் காடு சங்கட கவி .

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

Ponbhairavi Avl,
Excellent ! Nicely hit the present scenario with your cleaver words.
With wishes,
Thanjavooran
04 12 2017

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Indeed,Thanjavooran!
And your typo adds more to it--clever, cleaver-like :) veTTonRu, thuNDiraNDu!
May be, it wasn't a typo, after all :)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

Araseeee...Avl,
Really the needle not only pierced but also cut the banana into two.
With wishes,
Thanjavooran,
05 12 2017

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

deleted
Last edited by Ponbhairavi on 05 Dec 2017, 11:36, edited 1 time in total.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

மிக்க நன்றி தஞ்சாவூரான். cleaver எனக்கு நினைவு படுத்தியது "ஆப்பு வைப்பது " என்பதை
நன்றி Arasi. இந்த விஷமக்கார கண்ணனை எழுதியது சங்கட கவி.. or may be vishamakkaara kannan is an Inspiring "title "

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

விளம்ப காலக் கண்ணனானாலும்
விளம்பரக் கால துரிதனவன், எங்கும்
களேபரம் செய்யும் கலை வாணன்--
களமிறங்கி, சொற்போர் புரிந்திட‌--கலை
வளம் விட்டு, எங்கோ ஒதுங்கியவன்

தேர்ந்த கலை விடுத்து, ஏதேதோ நினைந்து,
தாழ்ந்தவர் தம் தூதனெனத் தன்னை நினைந்து
பாய்ந்து கிளை தாவுகிறார், பலதும் பேசுகிறார்
மாய்ந்து போகிறாரோயென நினைந்தால்
பாய்ந்து வருகிறார் மீண்டும்! புதிய புதிருடன்!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

மதி நிறையும் நன்னாள் ? திருப் பள்ளியெழுச்சி

மாதங்களில் நான் மார்கழி என்றார் கிருஷ்ணர்
பேதம் இன்றி சென்னை சந்து பொந்தெல்லாம் நல்
கீதம் ஒலிக்குதடா நந்தலாலா .உன் திறனில்
பாதி கூட இல்லாதவர்களுக்கும் பத்துக்கும் மேல் கச்சேரி
காதில் பஞ்சை கெட்டியாய் அடைத்துக்கொண்டு
கதவையும் சாத்திக்கொண்டு பொய் தூக்கம் (துக்கம் ) ஏன் ?

இசை வீசை என்ன விலை என கேட்கும் கட்சிகள்
நாசத்துக்கே வழி சொல்லும் நம்பிவிடாதே அவர்கள்
நேசம் உன் மூளையை சலவை செயதுவிடும் உஷார்
மோசடி விருதுகள் கடத்தப்படும் குழந்தைக்கு தரும் சாக்லேட்
தேச அடுத்த ஜனாதிபதி நம்ம ஆள் தான் அப்போ இப்போ
லேசாக கை நழுவிய பாரத ரத்னா உனக்குத்தான் - எம் எஸ் க்கு இணை- என்று
ஆசை காட்டி பேசி மயக்குவார்கள் வேசிகள் போல்
சாசுவதத்தை உனக்கு தரக்கூடியது உன் வசம் உள்ள
இசை செல்வம் மட்டும் தான் ;இதையே நம்பு .

குளியல் அறைமேல் கோபித்துக்கொண்டு பொறம்போக்கு குப்பம் வயல்
வெளி என்று போவதால் குளியல் அறைக்கு நஷ்டமில்லை

எல் ஜி பெருங்காய டப்பா வெகு நாள் திறந்து கிடந்தால் வாசம் பறந்துவிடும்
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் ஏறி வதுண்டோ ?

பிள்ளாய் எழுந்திராய் இன்னும் என்ன பேர் உறக்கம் ?
உள்ளம் மகிழ கூடி இசை பாடேலோ ரெம்பாவாய் .

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

திசை தேடி...

இசை ஓர் இசைவான வெள்ளமெனில்,
வசை பாட வைக்கும் அரசியல், சாக்கடை!
நசியுமோ திறனும், உன் குரல் வளமும்
திசை தெரியாதலைக்கும் அவலங்களில்?

'முத்துக தம்பூர பட்டி' மூத்தோர் இசையோ,
முத்தென ஒலிக்கும் புதிய கவியோ-- நீ
பித்துக் கொள்ள‌ப் பாடுவது விடுத்தே
'பெத்த' பேச்சுப் பேசிப் பேதலிப்பாயோ?

வித்தகன் நீ! எத்தனை திறனுனக்குண்டோ,
அத்தனையும் 'அம்போ'வென்றழித்திடுவாயோ?

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

அதுவும் இதுவும்

அதுவே இதுவென்றறிந்து
இதுவும் அதனில் கரைந்து
அது அதுவாகவே நிற்பது
மெதுவாய்த் தெளிவுற்றதுவே!

(Inspired by the poem of Sri A Srinivasa Raghavan - posted by Pasupati - #3381 (Nostalgia)

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

530
கங்கை வரும் !

நம்ம வீட்டு வாவியிலும் கங்கை பொங்கி வரும் !
நாம் எல்லோரும் ஐயாவாள் ! தைய தக்க தையா !

கங்கா ஸ்நானம் ஆச்சாவென களிப்போமே மறந்ததா ?
எங்குமுள கிணற்றிலெல்லாம் கங்கை நீர் பெருகிடுமே !

கற்பனையே உண்மையென கதைத்துக் குதிக்கலாம்.
விற்பனையும் செய்யலாம்; வீணருக்கா பஞ்சம் ?

ப்ரத்யக்ஷம் பாலா,
21.06.2018.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

531
சுவாமி !

சாவதற்கு சற்று முன்பு சன்யாசி ஆகிவிட்டால்
கூவக் கூட்டம் வரும் குதித்துக் குதித்தாடும்.
சொட்டு நிலம் வளைத்து சமாதி கட்டிவிடும்.
கொட்டு தாரையொடு கூச்சலிடும் ஆண்டாண்டு !

ப்ரத்யக்ஷம் பாலா,
22.06.2018.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

532
பயன் என் கொல் ?

போதுமென்ற மனம் கொண்டால் பொருட்களின் பயன்தான் ஏது ?.
ஏதும் வேண்டாம் எனிலோ ஏனோ இருக்கவேண்டும் ?

ப்ரத்யக்ஷம் பாலா,
22.06.2018

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: KavithaigaL by Rasikas

Post by kvchellappa »

Iruppthum iRappathum IRaivan arulanro?
iruppin viruppu veRuppaRRU irutthal Iraivan urai anro?
(I cannot write poems - Being is bliss).

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

533
சூர்ய காயத்ரி

அவ்வொளிமய ஆதவனின் சுடர்மிகுக் கதிர்கள்
எமதுள்ளம் புகுந்து மிளிரச் செய்யட்டும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
10.09.2017




तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्यधीमहि ।
धियो यो नः प्रचोदयात् ॥

தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந ப்ரசோதயாத்

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

534
கடவுள் வாழ்த்து

வெள்ளாடை தரித்தானை, வீர்யமுடையானை,
வெண்ணிறத்தானை, நாற்கையானை,
இன்முகத்தானை மனத்தில் இருத்துவோம் !
இடரனைத்தும் விலகிவிடும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
23.06.2018




शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।
प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் சர்வவிக்னோபசாந்தயே.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

535
ஆர்ப்பாட்டம்

கேடுகள் தீர்ந்திட கூச்சல் தேவையா ?
தேடினால் நிம்மதி நாடி வந்திடும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
24.06.2018.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

அன்றைய உணவினை அன்றே ஈட்டாது,
ஆறு தலைமுறைக்குச் சேர்த்து வைத்து,
அதுவும் போதாதென அடுத்தவன் சொத்துக்கும்
ஆசைப்படும் ஆறறிவு படைத்த மாக்கள்,

இயற்கையன்னையைச் சூறாடாதிருக்க,
இயம்பியதுதான் போதுமென்ற வசனம்;
ஏதும் வேண்டாமென்றிருப்பவன்,
எடுப்பவனுக்கு ஈடுகட்டவென்றறிவோம்.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

536
உபாயம்

வெட்டிப் பேச்சு ஓங்கி ஒலிக்கும்.
வெட்டிப் பேசு; ஓடி ஒளியும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
25.06.2018.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

537
அதௌ கீர்த்தனாரம்பத்திலே

இதோ ஒரு சப்பளாக்கட்டை. இதோ ஒரு ஏகதந்தி.
ஏதோ ஒரு பாட்டெடுத்து இட்டத்துக்கு மெட்டமைத்து
தத்தோம் தித்தோம் என்று தாறுமாறா கூச்சலிட்டு

ஏடாகூடமாக எதையெதையோ சொல்லிவைத்து
ஆடாத ஆட்களையும் ஆட்டம் போடவைத்தால்
ஓடான சில வயிறை ஒருவாறு நிரப்பிடலாம்.

ஈஸ்வரோ ரக்ஷது.

ப்ரத்யக்ஷம் பாலா,
26.06.2018.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

538
மாற்றம்

மெத்தப் படிப்பதெல்லாம் சித்தம் தெளிவதற்கே.
எத்தனை பார்வையுண்டோ அத்தனையும் அறியவேண்டும்.
முன்னோர் சொன்னதெல்லாம் முடிவெனக் கொள்ளலாமோ ?
இன்னமும் மாற்றம் வரும். இயல்பெனக் கொள்ள வேண்டும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
27.06.2018

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

539
சின்னா பின்னம்

சதி செய்து பின்னே விதி என்றுரைத்தனர்.
மதி மங்கிப் போனதே. கதி ஏதும் உண்டோ ?
துதி செய்து பாடினும் பதில் ஏதும் கிட்டுமோ?
எதில் போய் முடியுமோ ? நதி மடிதான் விடிவோ ?

ப்ரத்யக்ஷம் பாலா,
28.06.2018.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

540
கடல்கடந்த கிச்சாமி

மடைதிறந்து கதறினார் மலையொத்த கிச்சாமி.
நடையிடையில் அன்னையுடல் நாதியின்றிக் கிடந்தது.

கடல்கடந்து சென்றதனால் கதியில்லை என்றனர்.
உடலெடுக்க மறுத்தனர் உறவினர் அனைவரும்.
சங்குச்சாமி சொன்னாரென சாதியில் விலக்கினர்.

“எங்குமுண்டோ இக்கொடுமை ? ஏனிந்த மடத்தனம் ?”
பொங்கினார்; சாடினார். “பொல்லா மடையர்காள் !
இங்கேயே எரிப்பேன் ! இவ்வீடே மயானம் !” என்றார்.

ஊர்கூட்டித் தவித்தனர்; ஊளையிட்டுக் கூவினர்.
‘பார்கூடிப் பழிக்குமே’ பதறினர் பாவிகள்.

“யாரென்ன சொல்வது ? யாமெல்லாம் சோதரர் !”
சேர்ந்தனர்; சுமந்தனர். சுடுகாடு அழைத்தது !

கிச்சாமி அன்னையுடன் கீழ்மையும் எரிந்தது !
அச்சாமி அறிந்ததும் அவர் அடிவயிறும் எரிந்தது !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.06.2018.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

திருவடியிணை

இறைவா நின் திருவடியிணை விட
இயலாது இயலாது

ஈன்றெடுத்துப் பாலூட்டி
இரவு பகல் விழித்திருந்து
தாலாட்டி வளர்த்த அன்னை,

தன்பசியும் நோக்கிடாது
தனயனென்று சோறளித்துக்
காத்திட்ட தந்தையோடு,

கைப்பிடித்துக் காதலித்தென்
மெய்யுறவாய் பலகாலம்
துணை நின்ற மனைவியுமே,

ஈரைந்து திங்கள் தவமிருந்து
இல்லாளும் ஈன்றெடுத்த
இனிய மழலை மக்களுடனே

உற்றாரும் உறவினரும்
உழைத்தீட்டிய செல்வங்களும்
ஏனிந்த உயிர்தானுமே

ஆணை நீ இடுவாயாகில்
ஆண்டவா தயக்கம் சிறிதின்றி
பேரவாவுடன் இக்கணமே

விடத்துணிவேன் - ஆயின்
இறைவா நின் திருவடியிணைதன்னை
இயலாது நான் விட்டிடவே.


(Inspired by Kanaka Dasa's 'Toredu jivisabahude')

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

மனிதப் பிறவி

வேண்டுவனே பிறவிகள் தொடர்ந்து,
வேண்டுவனே மற்றெந்தப் பிறவியும்;
வேண்டேனே மனிதப் பிறவி மட்டும்.

பாறை, மண், கல், செடி கொடி, ஊர்வன,
பறவையினம், விலங்கினமாயினும் கூட,
பல நூறு கோடிப் பிறவிகள் நீ தருவாய்;

உள்ளதனை நீ சுருட்டினாலும், அடுத்து,
உலகங்களைத் திரும்ப நீ நீட்டினாலும்,
உனதடியிணை நான் மறந்தே போயினும்,

உன்னையுள்ளபடி கண்டுகொண்டேன்;
உனதருள் என்றும் எனக்குண்டு - ஆயின்,
உன்மத்தம் பிடித்தலையும் மனித இனம்,

தனக்கே நீயென்று தறிகெட்டலையுதைய்யா;
தவமும், நெறிகளும், வழிபாட்டு முறைகளும்,
தவறி இன்று வெறும் பேராசை மிகுந்ததந்தோ!

மற்ற இனங்கனைத்தும் மனிதனுக்கு இன்று,
மாத்திரம் உணவானது கண்டிலையோ, சொல்;
மனிதப் பிறவி வேண்டேன், வேண்டேனே.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

delete

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

post deleted andwithdrawn by the author

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

541
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 1

அரியைப் பாடிடு, அரியைப் பாடிடு,
        அரியைப் பாடிடு அறிவிலியே !
அரியைக் காணவுள அரியவொரு நாளில் - நீ
        உருப்போடுவது உதவிடாதென்றறி !

ப்ரத்யக்ஷம் பாலா
07.11.2006.



भज गोविन्दं भज गोविन्दं
गोविन्दं भज मूढमते ।
सम्प्राप्ते सन्निहिते काले
नहि नहि रक्षति डुकृङ्करणे ॥

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே ;
ஸம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ் கரணே .

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

43
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் - 5

அலைந்து செல்வம் ஈட்டும் வரையில்
        அருகே நிற்கும் நட்பும் உறவும்.
குலைந்த நிலையில், முதிர்ந்த வயதில்
        கூடிக் குலாவ யாரே வருவர் ?

ப்ரத்யக்ஷம் பாலா,
12.05.2007.



यावद्वित्तोपार्जन सक्तः
स्तावन्निज परिवारो रक्तः ।
पश्चाज्जीवति जर्जर देहे
वार्तां कोऽपि न पृच्छति गेहे ॥ ५॥

யாவத் வித்தோ பார்ஜன ஸக்த :
ஸ்தாவன் நிஜ பரிவாரோ ரக்த :
பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே .

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

542
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 9

நல்லோர் நட்பில் பற்றுகள் அகலும் ;
        பற்றிலா நிலையில் ஆசைகள் அழியும் .
ஆசைகள் அழியின் பரம்பொருள் தெரியும் !
        வாழ்வின் பேரின்ப நிலையும் அதுவே !

ப்ரத்யக்ஷம் பாலா
07.11.2006.



सत्सङ्गत्वे निस्सङ्गत्वं
निस्सङ्गत्वे निर्मोहत्वम् ।
निर्मोहत्वे निश्चलतत्त्वं
निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥

ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஶ்சலதத்வம்
நிஶ்சலதத்வே ஜீவன்முக்தி:

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

543
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 10

வயது முதிர்ந்தால் காமம் மறையும்.
        நீரது வரண்டால் தடாகம் மறையும்.
வசதி குறைந்தால் சுற்றம் மறையும்.
        உண்மை அறிந்தால் பிறவிகள் மறையும் !

ப்ரத்யக்ஷம் பாலா
29.04.2007.



वयसि गते कः कामविकारः
शुष्के नीरे कः कासारः ।
क्षीणे वित्ते कः परिवारः
ज्ञाते तत्त्वे कः संसारः ॥

வயஸி கதே க: காமவிகார:
ஶுஷ்கே நீரே க: காஸார:
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்த்வே க: ஸம்ஸார:

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
vgovindan, rshankar :
Thanks ! Thanks !

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

241
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 11

பணம், உறவு, இளமை எனப் பெருமை கொளல் வேண்டா;
        கணப்பொழுதில் அனைத்தையுமே அழித்துவிடும் காலம்.
சகம் அனைத்தும் மாயம் என உணர்ந்திருத்தல் வேண்டும்;
        பரம நிலை அடையும் முறை தெரிந்துகொள வேண்டும்.

ப்ரத்யக்ஷம் பாலா
19.05.2007.



मा कुरु धनजनयौवनगर्वं
हरति निमेषात्कालः सर्वम् ।
मायामयमिदमखिलं हित्वा
ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा ॥

மா குறு தனஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்;
மாயா மயமிதமகிலம் ஹித்வா
ப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிஶ விதித்வா.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

38
மொழியாக்கம்
பஜ கோவிந்தம் – 12

காலையும்-மாலையும், இரவும்-பகலும்,
        கோடையும்-குளிரும்,   சென்றிடும்; வந்திடும்.
காலமும் கரையும்; ஆயுளும் குறையும்.
        ஆசை மட்டும் நிலைத்து நிற்பதேன் ?

ப்ரத்யக்ஷம் பாலா
12.05.2007.



दिनयामिन्यौ सायं प्रातः
शिशिरवसन्तौ पुनरायातः ।
कालः क्रीडति गच्छत्यायु:
तदपि न मुञ्चत्याशावायुः ॥ १

தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:
ஶஶிர வசந்தௌ புனராயாத:
கால: க்ரீடதி கச்சத்யாயு:
ததபி ந முஞ்சத்யாஶாவாயு:

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
thanjavooran:
Thanks !

Post Reply