Kanchi Maha Periyava

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

Another one from same source...

My father, after he was a Chief Engineer in PudukkOTTai for a long time and retired, started living in ThanjAvur. He was for sometime the trustee of the Thanjai BangAru KamakShi Amman temple. My mother's name is LakShmI.

When my mother and mother-in-law together went to have a darshan of Sri PeriyavAL, my mother told ParamAChAryAL about how he wrote the number '3' on her head in her dream. To that, Sri MahA SvAmigaL said, "That is TrikUtam. Fifteen akSaras. Sri VidyA Mantra. You take the upadesham of that mantra from PudukkOTTai Sri GopAlakRShNa BhAgavatar."

When Sri GopAlakRShNa BhAgavatar once had darshan of Sri MahA PeriyavAL, Sri PeriyavA asked him, "What are you doing?"

"I am doing bhajana, staying at home."

"Don't just be there doing bhajana. Wander doing bhajana! (bhajanai seithukoNDu irukkAthE. Bhajanai seithukoNDu thiri!)"

After this advise, Sri GopAlakRShNa BhAgavatar went to several places, spreading the bhajana sampradAya and became famous all over India.

Some months later, my mother met Sri GopAlakRShNa BhAgavatar at PudukkOTTai and told him what Sri MahA PeriyavA had told her. Hearing that Sri BhAgavatar was very much moved and said, "He asked me to do the upadesham?!" Sometime later, he himself came to my father's house at ThanjAvur and did the mantropadesham to both my mother and father.

*** *** ***

At PudukkOTTai VAlAmbaL's house, Sri LalitA Bhajan was held every Friday. She was very skilled in the Sanskrit language and pujas. My mother and mother-in-law got a Sri Chhakra made through her and took it Sri MahA PeriyavAL. He kept it in puja for 11 days and gave it back in the brahma muhUrta of an early morning with his anugraha.

After this event, my mother composed a song in the 'RaghuvaMsha Suta' tune, considering the three PeriyavAs as TripurasundarI.

----------------------------------------
Tamil script of the song
----------------------------------------
ராகம்: கதனகுதூஹலம்
தாளம்: ஆதி ஒன்றரை, இடம்

பல்லவி
சந்திரசேகர இந்திர சரஸ்வதி
சரணம் பஜாமி சரணம் நமாமி.

அனுபல்லவி
காஞ்சி மா நகரம் காமகோடி பீடம்
தன்னிலே விளங்கும் ஸத்குருநாதா (சந்திர)

சரணம்
குருவர்ய ஸ்ரீ சந்திரசேகர
இந்த்ர சரஸ்வதி வாக்பவ கூடம்
ஜய இந்திர சரஸ்வதி மத்ய கூடம்
விஜயேந்திர சரஸ்வதி சக்தி கூடம்
த்ரிபுரசுந்தரி ஸ்வரூபம் ஸ்மராமி. (சந்திர)
----------------------------------------
Transliteration in Baraha 7.0
----------------------------------------
rAgam: kadanakutUhalam
tALam: Athi onRarai, iDam

pallavi
cha~ndirasEkara i~ndira saraSvati
charaNam bajAmi charaNam ~namAmi.

anupallavi
kA~jci mA ~nakaram kAmakOTi pITam
tannilE viLa~gkum Satguru~nAtA (cha~ndira)

charaNam
guruvarya SrI cha~ndirasEkara
i~ndra saraSvati vAkpava kUTam
jaya i~ndira saraSvati madhya kUTam
vijayE~ndira saraSvati sakti kUTam
tripurasu~ndari SvarUpam SmarAmi. (cha~ndira)
----------------------------------------
English translation
----------------------------------------
Chandrasekhara Indra Sarasvati
I adore his feet and seek his protection.

In KAnchi the great city and at KAmakOTi PITham
You reside my Satgurunatha (Chandra)

The chief guru Sri Chandrasekhara
Indra Sarasvati is Vakpava KUtam.*
Jaya Indra Sarasvati is Madhya KUtam.
Vijayendra Sarasvati is Shakti KUtam.
Let us remember them as the very form of Tripurasundari. (Chandra)

*** *** ***

Note: *Vakpava KUtam:

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2BoWSpT24

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periva

Post by cmlover »

Any audio available?
Especially PB ??

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

ADI SANKARA...

A SIMPLE TRUTH _ WHO IS THE MASTER?

Adi Sankara was walking through the market place with his disciples.
They saw a man dragging a cow by a rope.

Sankara told the man to wait and asked his disciples to surround them.
“I am going to teach you something” and continued...
“Tell me who is bound to whom?
Is the cow bound to this man or
the man is bound to the cow?

The disciples said without hesitation,
“Of course the cow is bound to the man!
The man is the master. He is holding the rope.
The cow has to follow him wherever he goes.
The man is the master and the cow is the slave.”

“Now watch this”, said Sankara and took scissors from his bag and cut the rope.
The cow ran away from the master and the man ran after his cow.

“Look, what is happening”, said Sankara
“Do you see who the Master is?
The cow is not at all interested in this man.
The cow in fact, is trying to escape from this man.”

This is the case with our MIND.

All the non-sense that we carry inside is not interested in us.
WE ARE INTERESTED IN IT !

We are keeping it together somehow or the other.
We are going crazy trying to keep it all together under our control.

courtey...Pks Parivaarposted toParuthiyur Sri Krishna Sastri..FB friend

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »


venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

“கங்கா ஸ்னானம் ஆச்சா கிருஷ்ணசாமி.”

“ஆச்சு. . . ஆச்சு. . . ராமசாமி. . .” ரொம்ப குதூகலத்தில் இருந்தார் கிருஷ்ணசாமி.

“ராமசாமி. ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மனசிலே இருந்துண்டே இருக்கு. தீபாவளி அன்னிக்கு அது என்ன கங்கா ஸ்னானம் ஆச்சான்னு கேட்கறது வழக்கமா இருக்கு. குளிக்கறதோ வீட்டிலே பாத்ரூமிலே, போர்வெல் வாட்டரில் . . . இன்று மட்டும் தண்ணீர் கங்கையா மாறிடறதா என்ன.”

“ஆமாம் கிருஷ்ணசாமி. நீ சொன்னது சரிதான். . . தீபாவளி அன்று மட்டும் எல்லோராத்திலும் கங்கை வருகிறாள் என்பது ஐதீகம்தான். வா. நம்ம ஜோஸ்யராத்துக்குப் போய் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிண்டு இதைப் பற்றியும் கேட்போம்.”

“வாங்கோ. . . வாங்கோ. . . கங்கா ஸ்னானம் ஆச்சா.” வரவேற்றார் ஜோஸ்யர்.

“ஆச்சு. . உங்க ஆசிர்வாதம் வேண்டி வந்தோம். அப்படியே. . .” இழுத்தார் ராமசாமி.

“வழக்கம் போல் சந்தேகமா”

“ஆமாம். ஆனா இந்தத் தடவை ஜோதிஷ ரீதியா இல்லை. ஆன்மிக ரீதியாக.”

“அப்படியா. சொல்லுங்கோ. எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். . .”

“கங்கா ஸ்னானம் தாத்பர்யம் பற்றி தான் சந்தேகம்.”

அட, இவ்வளவுதானா. ஆரம்பித்தார் ஜோஸ்யர். “உங்களுக்கு இதைச் சொல்றதுக்கு முன்னாடி ஒரு கேள்வி கேட்கிறேன். அதுபற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கான்னு பார்ப்போம். இந்த உலகத்திலே பகவான் எல்லாத்தையும் இரண்டு இரண்டாகப் படைத்து இருக்காறே. அதன் தாத்பர்யம் உங்களுக்குத் தெரியுமா.”

“இரண்டு இரண்டு என்றால், ஆண் பெண், உண்மை பொய், வெயில் நிழல், வானவெளியில் நக்ஷத்ரம் கிரகங்கள் இது போன்று பகவான் இரண்டு இரண்டாகப் பாகுபடுத்தி உள்ளதைச் சொல்றேளா.”

“ஆமாம். அதேதான். உங்கள் உடம்பில்கூடப் பாருங்கள். இரண்டு கைகள், இரண்டு கால்கள், கண்கள். காதுகள் இப்படி எல்லாமே இரண்டு இரண்டாக. ஆனால் தெய்வம் மட்டும் ஒன்று என்றே சொல்றோமே நம் உடம்பில் உள்ள மூளையைப் போல்.”

“இதற்கும் கங்கா ஸ்னானத்துக்கும் என்ன சம்பந்தம். புரியலையே...” இழுத்தார் கிருஷ்ணசாமி.

“இருக்கு கிருஷ்ணசாமி. இப்போ உங்களுக்கு கங்கையை மட்டும்தானே தெரியும். அந்த கங்கை யமுனையோடு அலகாபாத்தில் சங்கமிக்கும் இடத்திலே இன்னுமொரு நதி திரிவேணி சங்கமா சங்கமிக்கிறதே கண்ணுக்குத் தெரியாமல் தெரியுமா.”

“தெரியும். சரஸ்வதி நதிதானே. ஆனால் கண்ணால் பார்த்ததே இல்லை எவரும்.”

“சரியாச் சொன்னேள் கிருஷ்ணசாமி. இரண்டு தெரிகின்றது. மூன்றாவது ஒன்று இந்த இரண்டுக்குள் புலப்படாமலே இருக்கிறதல்லவா. இரண்டின் தத்துவமே தெரியாத அந்தப் பரம்பிரம்மத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளத்தான். இரண்டு இரண்டாகப் படைத்ததே அந்தப் பரம்பொருளை நீங்கள் உணர்ந்து கொள்ளத்தான். இரண்டு என்பதே ஒன்றை ஒன்று வேறுபடுத்திக்காட்டவும் (Differentiate) ஒன்றுடன் ஒன்றைப் பாகுபடுத்திக் காட்டவும் (Compare) ஒன்றுடன் ஒன்று சேரும்போது மற்றொன்று உருவாகும் என்பதைக் காட்டவும் உணரவும் ஆண்டவன் செய்த திருவிளையாடல்.”

“காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ஒன்றை திரு. ரா. கணபதி அவர்கள் அற்புதமாக விவரித்துள்ளார்கள். இதைப் புரிந்துகொண்டால் பகவான் தன்னை உணர இரண்டை எப்படிப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்பது உங்களுக்குப் புரியும்.”


read more at...

http://www.brahmintoday.org/magazine/20 ... a-bath.php

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periva

Post by cmlover »

ऒं नमॊ नरकासुराय नमः
:D

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

Divine thoughts of Maha Periva # 98..About eight gunas...

http://periva.proboards.com/index.cgi?b ... hread=2909



Author: Shri K.K. Govinda Rao

[image]

I had occasions to learn about many inspiring experiences of devotees narrating unbelievable incidents that happened by the grace of Sri Paramacharya.

My first rare experience with Sri Paramacharya was about 16 years back.

During 1970's on 25th August, which happened to be the birthday of my son Sri K.V.S. Sarath Babu, I along with my son and Sri Krishna Sarma, city reporter of "The Mail" visited Kalavai village to have the darshan of Sri Paramacharya. We were told that no darshan was possible on that particular day. We however waited for a few minutes. To our great surprise we were called in to have the darshan of Sri Paramacharya. I had presented a few copies of the magazine "WISDOM" which was in its infancy. Sri Paramacharya was kind enough to go through the copy of "WISDOM" and the quality control of the contents. Sri Paramacharya then blessed us and the magazine, to serve the community and to grow to great heights. He graciously presented prasad as a token of His benign benedictions.

From that day onwards, "WISDOM" never looked back and the circulation crossed 1,20,00 copies with a leadership of over 25,00,000 at home and abroad. This phenomenal growth is due to the grace and blessing of Sri Paramacharya.

Later I had several occasions to visit Sri Paramacharya and receive His blessing and prasad from his worshipful hands.

I did not celebrate my 60th Birthday except by poor feeding and rendering help to deserving institutions but on the early morning of that particular day, I, along with my family, visited Sri Paramacharya. I was not only fortunate to be called in very close to Him, but was lucky to receive His blessings and prasad. Surprisingly a silk shawl and a garland were also presented to me as a token of His grace. I consider this as my unique fortune.

I earnestly believe that my several visits to Sri Paramacharya gave me inner peace and faith to meet the various challenges of life to lead a life of self surrender and unstinted faith.

May the grace and divine light of Sri Paramacharya be available to the world at large providing peace, harmony and unity of all citizens of our globe transcending the limitation of caste, creed, religion and nationality.

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2CIXJ8f2w

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

காலத்தைக் கடந்தவர் !

Maha Periyavaa, Spiritual August 27, 2010 Baalhanuman Blog.
வைகாசி மாதம் உச்சிப் போது கத்ரி முடிந்தும் வெயில் உக்ரம் தணியவில்லை.

அப்போது லால்குடிக்கு அருகில், நீண்ட நாட்களுக்கு முன்பு ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த நேரம்.

தெருவில் நடமாட்டமே இல்லை. பறவைகள் கூட ஒடுங்கி இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப் பறந்தன. தலைச் சுமை விற்பனையாளர்கள் வெயிலுக்குப் பயந்து ஒதுங்கி விட்டனர். கானல் நீர் தரைக்கு மேல் அழகாக அசைவது தெரிந்தது.

அத்தகைய வெயிலில், ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆசாரிய ஸ்வாமிகள் தெருவில் விறுவிறுவென்று நடந்து சென்ற அரிய காட்சியை வெகு சிலர் தான் பார்த்திருக்க முடியும் ! நிலவொளியில் நடப்பது போல் ஸ்வாமிகள் மட்டும் அந்தக் கடும் கோடையில், தன்னந் தனியாக பாதரட்சை அணிந்து, கையில் தண்டமுடன் வேகமாக நடந்து சென்றார். அவருடன் வேறு யாரும் வரவில்லை. ஸ்வாமிகள் மட்டும் அப்படிப் போவது வழக்கமில்லை; மிக அபூர்வம்!

பின்னால் பத்தடி தள்ளி நாதசுரக்காரர் கையில் நாதசுரத்துடன் ஓடோடியும் வந்தார். அவருக்குப் பின்னால் தவுல்காரர்; ஸ்வாமிகளுக்குக் குடை பிடிப்பதற்காக ஒருவர் பட்டுக் குடையுடன் ஓடோடி வந்தார். மடத்து சிப்பந்திகள் கையில் வெள்ளிப் பாத்திரங்களுடன் அரக்க பறக்க ஓடி வந்தனர். இவர்கள் எல்லோரும் வெகு வேகமாக ஓடி வந்து, ஸ்வாமிகளுக்கு முன்னால் சென்றனர். தீ மிதிப்பது போல் பதை பதைக்கிற அந்த வெயிலில் ஸ்வாமிகள் வேகமாக நடந்து போனதும், பின்னால் பரிவாரங்கள் ஓடிவந்து கலந்து கொண்டதுமான அந்த நிகழ்ச்சியை யாரோ ஓரிருவர் தான் கண்டிருக்க முடியும்.



அந்தக் காட்சியானது முதலையிடம் சிக்கிக்கொண்ட யானையரசன், �ஆதிமூலமே� என்று கதறியவுடன், மறுகணமே ஸ்ரீமந்நாராயணன் வைகுண்டத்திலிருந்& #2980;ு தன் பரிவாரங்களெல்லாம் தொடர ஓடி வந்த மட்டற்ற காருண்யத்தை பார்த்தவர்களுக்கு நினைவூட்டியது.

ஸ்வாமிகளைத் தொடர்ந்து கடைசியாகச் சென்றவர்களிடம் விசாரித்த போது அவர் கூறிய விவரம்:

ஒரு பக்தர் வீட்டுக்கு 12 மணிக்கு ஸ்வாமிகள் பிக்ஷைக்கு வருவதாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். மடத்திலே பூஜைகள் எல்லாம் முடிவதற்கு 11 :30 மணி ஆகி விட்டது. தர்சனத்திற்கு வந்த மக்கள் கூட்டம் கலையவில்லை. அவர்களை சமாளிப்பதே பணியாளர்களுக்கு சரியாக இருந்தது. மணி 11 : 50 ஆகியும் மடத்தின் பணியாளர்கள் புறப்படுவதாகக் காணவில்லை. ஸ்வாமிகளுக்கோ பக்தனை காத்திருக்க வைக்க மனம் இல்லை. யாரையும் எதிர் பாராமல் அந்த அன்பர் வீட்டுக்கு தாமே புறப்பட்டு விட்டார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்கு எதையும் செய்யத் தெரியாத அல்லது செய்யும் பழக்கமில்லாதவர்கள& #3021; நாம்! நேரத்தையும் காலத்தையும் கடந்த ஸ்வாமிகளோ, குறிப்பிட்ட தருணத்தில் தாம் ஏற்றுக் கொண்ட கடமையை ஆற்றுவதில் தீவிர கவனமுடையவர்கள் என்பது மட்டுமல்ல�.

ஸ்வாமிகளைப் போன்ற யதீஸ்வரர்களுக்கு உரிய நேரத்தில் பிக்ஷாவந்தனம் செய்வது மிகப் பெரும் புண்ணியம். அதே சமயத்தில் காலந் தாழ்த்தி அவர்களுக்கு பிக்ஷாவந்தனம் செய்விப்பது பலமடங்கு பாவமாகும்.

தமது பக்தர், அந்த அபசாரத்துக்கு ஆளாக ஸ்வாமிகள் தாமே காரணமாக இருந்துவிடக் கூடாது என்று கருணையுடன் கருதி இருக்கலாம் அல்லவா ?

பரமாச்சாரியார் காலத்தைக் கடந்தவர்; ஆனால் காருண்யத்தைக் கடந்தவர் அல்லவே !

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2CIXuPwGA

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

http://mahaperiyavaa.wordpress.com/2012 ... were-born/
by mahesh
After reading hundreds of incidents about Periyava that happened several decades back, our mind starts to think “well, those are lucky ones…we are so unfortunate that we never had His darshan etc”…..Read this..this happened last week!!…and there are so many incidents similar to this..He is always here – with you, with me with all of us…Also pay attention to what HH Sivan Sir tells about dreams about Periyva – it is Sathyam. This is an amazing must-read incident….

Thanks to those who shared this amazing incident to me...

“1387 ரூபாய் அனுப்பு “

ஆரூரன்

அன்று காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஸ்ரீமஹா பெரியவாள் தரிசனம் தந்து கொண்டிருந்தார்கள். உடன் அணுக்கத்தொண்டர் சிலர் மட்டும் இருக்க பயத்துடன் தயங்கியபடியே சற்று ஓரமாகச் சென்று நமஸ்கரித்தேன்.

திரும்பிப்பார்த்த ஸ்ரீபெரியவாள் ” பூனா க்ருஷ்ணமூர்த்திக்கு பேப்பர் சிலவு, ஸ்டாம்ப், தபால்சிலவு நிறைய ஆறதாம். அதுக்காக ஒரு வருஷத்துக்கு மாசாமாசம் 1387ரூபாய் இவனை அனுப்பச் சொல்லு ” என்று கணீர்க் குரலில் உத்தரவிட்டார்கள்.

உடம்பும் மனசும் பதறிக்கொண்டிருந்ததால் உத்தரவானது சட்டென்று பிடிபடவில்லை.

“பூனா கிருஷ்ணமூர்த்தி… பூனா கிருஷ்ணமூர்த்தி…” என்று இரண்டு முறை அழுத்திச்சொன்னவர்களிடமிருந்து மறுபடியும் “1387 ரூபாய் அனுப்பு!” என்று ஆக்ஞை வந்தது.

“அப்படியே செய்கிறேன் ” என்று சொல்வதற்குக்கூடத் தைரியம் இல்லை. நாக்குக் குழறிக்கொண்டு தலையைத் தாழ்த்தி பலமுறை நமஸ்கரித்தேன். கையைத் தூக்கி ஆசீர்வாதம் செய்தார்கள்…

…பக்கத்தில் ஏதோ சப்தம்… கண்ணைத்திறக்கிறேன்..

“இத்தனையும் ஸ்வப்னத்திலேன்னா நடந்திருக்கு! …” வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து மணியைப் பார்த்தபோது விடியற்காலம் நாலரை ஆகியிருந்தது.

அன்றைக்குத் தேதி 15/10/2012. விடிந்தால் திங்கட்கிழமை…

“யாரை வேண்டுமானாலும் ஸ்வப்னத்தில் பார்க்கலாம். ஆனால் எங்க அண்ணாவைப் பார்க்கணும்னா அவாளே நெனைச்சு தரிசனம் தந்தால்தான் உண்டு. அதனால் பெரீவா ஸ்வப்னத்தில் வந்தால் நேரா வந்தா மாதிரின்னு எடுத்துண்டு அவா சொன்னதைசெய்யணும் ” என்று ஸ்ரீசிவன் சார் சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வருகிறது.

சட்டென்று விபூதியை அள்ளிப் பூசிக்கொண்டு மேற்கொண்டு செய்வதறியாது அமர்ந்திருந்தேன். மணி ஆறு அடித்தது…

“இத்தனை பெரிய ஜன ஸமூஹத்தில் பூனா க்ருஷ்ணமூர்த்தி என்பவரை எப்படித் தேடிக்கண்டு பிடிப்பது? பெரீவா உத்தரவாச்சே.. கட்டாயம் செய்துடணுமே “ என்று மனது சஞ்சலித்தது.

உள்ளுக்குள் ஒரு யோசனை. “சிவராமனிடம் கேட்கலாமே” …

விஷயத்தைக் கேட்டுகொண்டசிவராமன் ”இதோ அஞ்சு நிமிஷத்தில் சொல்றேன்” என்றார். அவரே மறுபடியும் லைனுக்கு வந்தார்.

“ஆரூரான்!பெரீவா வாக்கு ஸத்யம்! நீ கேட்ட மாதிரி பூனா க்ருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள்னு ஒர்த்தர் காஞ்சீபுரத்திலேயே இருக்கார். அவரும் அவாத்து மாமியும் லிங்கப்பையர் தெருவில் வேதபவனம் என்கிற மடத்து கட்டிடத்தில் இருக்கா. அவருக்கு வயசு தொண்ணூறு இருக்கும். பெரீவாளின் சதாரா யாத்ரையின்போதெல்லாம் நிறைய கைங்கர்யம் பண்ணியிருக்கார். பெரீவா உத்தரவுப்படி ரொம்ப நாளா வேதபாராயணம் மடத்தில் நடத்திண்டு இருக்காராம். அதுக்காக எல்லோருக்கும் நிறைய தபால் போட்டுக்கொண்டே இருப்பாராம்… அவரின் அட்ரஸ் எழுதிக்கோ… போன் நம்பரும் தரேன்.. நோட் பண்ணிக்கோ.. அவரிடமும் பேசிட்டேன்.. மறக்காமல் இன்னிக்கே பணத்தை மணி ஆர்டர் பண்ணிடு ” என்று மூச்சு விடாமல் சொல்லிமுடித்தார்.

பத்து நிமிஷத்துக்குள் எல்லாம் கிடைத்துவிட்டது.

“சீக்ரம் குளிச்சுட்டு, பெரீவா பாதுகை கிட்ட பணத்தை வைத்து நமஸ்காரம் பண்ணிட்டு அடுத்த வேலையைப் பாருங்கோ” என்றாள் என் அகத்துக்காரி.

ஸ்ரீமஹாபெரியவாள் படத்தைப் பார்த்தேன்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி… பெரீவா உத்தரவாயிடுத்தே… இத்தனை பெரிய ஜன ஸமூஹத்துக்குள் பூனா கிருஷ்ணமூர்த்தியை எப்டித் தேடப்போறோம்னு ரொம்பவும் பயந்துட்டியோ?” என்று கருணையுடன் கேட்பதுபோலிருந்தது.

தெரிஞ்சதைச் சொல்லி ரெண்டு பத்ரபுஷ்பத்தைச் சார்த்தி விட்டு பணத்தை எடுத்துக்கொண்டு தபால் ஆபீசுக்குப் .போய் பூனா க்ருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகளுக்கு 1387 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பினேன்.

“அப்பாடா… பெரீவா உத்தரவிட்டபடி செஞ்சாச்சு” … என்றாலும் “அது என்ன 1387 ரூபாய் கணக்கு? ” மனசு கேள்வியைப் போட்டது!…

“அது என்ன 1387 ரூபாய்?..” மனசின் கேள்விக்கு புத்தியால் பதில் சொல்லக் கூடவில்லை.

“கொஞ்ச நேரம் ஆராய்ச்சி பண்ணாமல் இருக்கியா.. நானே ஒண்ணும் புரியாமல் முழிச்சிண்டு இருக்கேன்” புத்தி தனியாகக் கழற்றிக்கொண்டது.

“சரி.. எல்லாம் பெரீவா விட்ட வழி!” என்று ஒரு மாதிரியாக மனசு மடங்கிக்கொண்டது.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது…

1990ம் வருஷம். ஸ்ரீமஹாபெரியவாள் ஸ்ரீமடத்தில் இருந்த சமயம். ஸ்ரீசந்த்ரமௌளீ ச்வரர் சன்னதிக்கெதிரில் ஸ்ரீகார்யம் நீலகண்ட ஐயர் மாமா தன் அன்றைய அலுவல்களில் மும்முரமாயிருந்தார். அருகில் அமர்ந்தபடி அவருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தேன். ஸ்வாமி சந்நதிப் பக்கமிருந்து ஸ்ரீசந்த்ரமௌளி மாமா (ஸாமவேதி ) வேகமாக வந்தார்.

” ஏய்.. உன்னை பெரீவா உத்தரவாறது” என்றார்.

என்னால் இதை நம்ப முடியவில்லை.

“மாமா, பெரியவாளுக்கு என்னைத் தெரியாதே.. எங்க தாத்தா அப்பாவையெல்லாம்தானே தெரியும்.. சரியாகக் கேட்டுண்டுட்டேளா ?.. ஒரு சமயம் அவாளுக்கு ஏதானும் உத்தரவு பண்ணியிருக்கப் போறா?” என்று குறுக்குக் கேள்வியைப் போட்டேன்.

” ஏம்ப்பா.. எத்தனை வருஷமா பெரீவாட்ட இருக்கேன். அவா சொல்றத கரெக்டா நான் புரிஞ்சுக்க மாட்டேனா?.. உன்னைச் சொல்லிதாம்ப்பா உத்தரவாச்சு!” என்று அழுத்திச் சொன்னவர் கையோடு என்னைக் கொண்டுபோய் ஸ்ரீமஹாபெரியவாளின் சன்னதியில் ஆஜர்படுத்தினார்.

இதிலிருந்துதான் ஸ்வாரஸ்யமான கதை ஆரம்பம்…

அணுக்கத்தொண்டர் : ” திருவாலூர் ஆடிட்டர் வெங்கட்ராமையர் பேரன் இதோ நிக்கறான் “

ஸ்ரீமஹாபெரியவாள்: ” இவனா..? எனக்காக பத்தாயிரம் ரூபாய் இவன் தர்மம் பண்ணுவானான்னு கேளு !”

அணுக்கத்தொண்டர் : ” ஏம்ப்பா, நீ பெரீவாளுக்காக பத்தாயிரம் ரூபாய் தர்மம் பண்ணுவியா?”

ஆரூரன் : ” எங்கிட்டப் பணம் இல்லை. எங்க அப்பாக்கிட்ட கேட்டு வாங்கித்தரேன். “

அணுக்கத்தொண்டர் : ” இவன் படிச்சிண்டிருக்கான். அதனால தன் அப்பாட்டக் கேட்டு வாங்கித்தரேங்கறான்.”

ஸ்ரீமஹாபெரியவாள் : ” என்ன படிக்கறான் கேளு! “

அணுக்கத்தொண்டர் : (அவராகவே) “சி. ஏ படிக்கறான்”.

ஸ்ரீமஹாபெரியவாள் : ” இவன் ஏன் சி.ஏ படிக்கறான் கேளு! ” (அணுக்கத் தொண்டருக்கு இந்தக் கேள்வி புரியவில்லை )

ஸ்ரீமஹாபெரியவாள்: ” அந்தக்காலத்ல இவன் தாத்தா பெரீய்ய ஆடிட்டர்… அவர் சி.ஏ படிக்கலே… ப்ராக்டீஷனர்தான். இவன் அப்பாவும் ஆடிட்டர்தான். ஆனா tax advocate. அவா ரெண்டு பேருமே சி. ஏ படிக்காமலேயே ஆடிட்டராக முடிஞ்சுதுன்னா இவன் மட்டும் சி.ஏ படிச்சு என்ன பண்ணப் போறானாம்..?” (சிறிது நேரம் மௌனம்.. பிறகு தொடர்கிறார்கள். ) “சரி.. எப்போ படிச்சு முடிப்பான்னு கேளு !”

அணுக்கத்தொண்டர் : ” எப்போப்பா படிச்சு முடிப்பே?”

(அந்த சமயத்தில் C A Intermediate ஒரு பாதி முடிந்து அடுத்ததை முடிக்க முடியாமல் நான் தடுமாறிக் கொண்டிருந்தேன்.)

ஸ்ரீமஹாபெரியவாள் இப்படி கேள்வி கேட்டதும் அழுகை மேலிட்டது.

ஆரூரன் : “எப்போ முடிப்பேன்னு தெரீலை பெரீவா .. ரொம்ப கஷ்டமாயிருக்கு .. பெரீவா அனுக்ரஹம் பண்ணினா படிச்சு பாஸ் பண்ணிடுவேன்.”

ஸ்ரீமஹாபெரியவாள் : ” அப்டின்னா, இன்னும் நாலு வருஷத்ல பாஸ் பண்ணிடுவானா கேளு !”

ஆரூரன் : (அழுதுகொண்டு நமஸ்கரித்தபடியே) ” பெரீவா அனுக்ரஹத்ல பாஸ் பண்ணிடறேன் பெரீவா…”

ஸ்ரீமஹாபெரியவாள் : “அப்போ சரி… நாலு வருஷத்ல சி.ஏ படிச்சு பாஸ் பண்ணிட்டு அப்றமா எனக்கு பத்தாயிரம் ரூபாய் கொண்டுவந்து கொடு!”

இதற்குப் பிறகு நான் ஸத்குரு ஸ்ரீசிவன்சார் அவர்களிடம் அடைக்கலமானேன். ஒரு தாயார் தன் குழந்தையைப் பார்த்து கொள்வது போல ஸ்ரீசிவன்சார் என்னைப் பார்த்துக்கொண்டார். என்னைத் துரிசடக்கிப் படிக்க வைத்தார்.

சரியாக நான்கு வருஷம் கழித்து 1994 மே மாதம் சி.ஏ முடித்தேன்…. ஆனால், ஸ்ரீமஹாபெரியவாள் உத்தரவிட்டபடி பத்தாயிரம் ரூபாயை அவர்களிடம் என்னால் தர முடியவில்லை.

ஆமாம்.. ஸ்ரீமஹாபெரியவாள் 1994 January மாசம் சித்தியடைந்து விட்டார்கள்……

கடந்த காலச் சம்பவங்களை மனத்தால் அளைந்தபடியே அருகிலிருந்த ஸ்ரீமஹாபெரியவாள் படத்தைப் பார்த்தேன்.

“பெரீவாளுக்குச் சேரவேண்டிய பத்தாயிரம் ரூபாய்க்கு இருபத்திரெண்டு சொச்சம் வருஷத்துக்கு 3% simple interest ரூபாய் 6650/- . அதனுடன் ரூபாய் 10,000/- அசலையும் கூட்டினால் மொத்தம் ரூபாய் 16650/- அதை பன்னிரெண்டு மாசத்துக்கும் பிரிச்சால் 1387 ரூபாய் வரும் பார்..” என்று உள்மனசு சொன்னது !



“ தொழுது தூமலர் தூவித்துதித்து நின்று

அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்

பொழுதுபோக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே”

– அப்பர் ஸ்வாமிகள்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periva

Post by cmlover »

I am sure this is a true event!
Is there a rational scientific explanation for such episodes?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

The bhakta parAdhIna and the pATTiyammA
devotee:...... A very old woman (pATTi)
author:....... Raa. Ganapathi
source:....... KaruNaikkadalil sila alaigaL, pages 77-80
publisher:.... Divya Vidya Padhippaham (Jun. 2005 Edition)
type:......... book, Tamil
Translator....saidevo

It is not clear to my mind if this incident happened at the SriMaTham camp in Trichy National College High School campus, or Madurai Sethupathi High School campus.

The darshan queue was stopped from moving because of some important deliberation that was going on inside the SriMaTham camp. An old woman was standing in the queue. She can be described as the old woman of old women! She could have been over a hundred years old, standing bent at a right-angle, a staff in her hand that she was holding shakily. She was crying with all the tiredness of her soul: "Sankara, my Sankara! I was agitated if I would see you, or leave this world without seeing you. You came seeking this place! Since you have come, I came to have your darshan, but you have stopped me (nirutthi vecchu-tiyedaa) Sankara!"

Sri Sambha Murthi SastrigaL was going inside the camp, passing the old woman on his way. He was the pUrvAshrama younger brother of Maha PeriyavaL. He was of a kind heart, true to the family blood that coursed his veins. No sooner he heard the old woman's wail of yearning than he hastened his steps towards the interior. As he entered, he told Sri CaraNar who was immersed in an important delibration, "Outside--a pATTi--of a hundred or hundred and twenty or whatever age. Stands yearning and wailing for Periyavaa's darshan."

Before the last words were out of his mouth, PeriyavaaL stormed outside!

"Why have you stopped me, Sankara?" The pATTi was wailing repeatedly. He went to her, stood very near to her and said, "pATTi, here your Sankaran has come. Look! Without knowing that you have come, I was busy with something inside. And as I came to know it, here I have come running." The Ruler of Grace spoke the words of nectar, which came up as the essence of his love.

"Vanduttiya, Sankara (so you have come, Sankara)!", said pATTi and held his hands tightly! The hands that were held by his mother Mahalakshmi AmmaL, were held today by another person, after a span of about 55 years!

As she raised her face and looked at the holy visage of Sri CaraNar, the vRiddhAmbikA (the good old mother) said, "Though you have come running for my sake and stand before me, I cannot look at you properly with my dim eyesight! ennappA (my son), only you should give me some good sight for a good darshan."

It was the time of a hot sun. There was a narrow, thatched roof over the heads of the people in the queue. At pATTi's words, the bhakta parAdhIna jumped aside the shelter of the roof and stood in the hot son, barefooted!

"Is the vision better now, pATTi?" he said.

"It shows up very well ennappA, it shows very well!" pATTi patted her cheeks loudly.

PeriyavaaL gave her a complete darshan of his person, letting sunlight fall well on his face, tilting it, lifting it, and turning it in many angles, even turning his whole body giving her a darshan of his back.

In a torrent of emotion, without knowing what she spoke, the old woman stuttered and lisped, cried profusely and was very happy!

Sri CaraNar came near her again and said, "Have you seen me well pATTi! Can I go?"

"Yes, I have seen you very well (PAtthuNtempa), my son! Even for this anAmadeyam (nonentity), KaruNAmurti, you have given your darshan. I was holding my soul just to see you. I have seen you know. Take me now my son, take me!" The parama bhakta prayed to him.

"pATTi! When the time comes, let us take it. I shall ask you now to be dropped in your place. Go there and remain in Swami smaraNa (remembrance of God). Don't come running again to see me! I shall always be with you without leaving you aside for a moment!" The kRupA varSA (shower of compassion) gave her his words.

Is there anything that matches the bhAgyam of the pATTi who received such words of assurance from Sri CaraNar who out of his modesty uses words only sparingly when he gives his abhayam to the bhaktas?

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2Cf2hRvXD

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

ஒரு முறை பேரனுக்கு வைசூரி போட்டு கண் பார்வை போய்
விட்டெதென்று கவலையுடன் ஒரு அம்மா வந்தார்.அவரை
கவனிக்காமல் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டே இருந்தார்.
பேச்சின் இடையில் "பெற்றம்" என்றால் என்ன? என்று பெரியவா
கேட்டார். பேசிக்கொண்டிருந்தவர் அதற்குக் "கால் நடைகள்"
என்று பொருள் கூறி: திருப்பாவையில் கூட" பெற்றம்
மேய்த்துண்ணும் குலம்" என்று வந்திருக்கிறதே என்று
தான் சொன்னதை நிறுவினார்.
இன்னும் எங்கேயாவது வந்திருக்கிறதா என்று கேட்டார்.
பெரியவா. ஆமாம் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் இந்தச் சொல்லைப்
பயன்படுத்தியிருக்கிறார் என்றார் அவர். அவர் அது சரி எந்த இடத்தில்
எதற்காகப் பாடினார் தெரியுமா? சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ப்ரவை
நாச்சியார் என்பவரைக் கல்யாணம் செய்துகொண்டு, மீண்டும்
சங்கிலி நாச்சியார் என்பவரைத் தேடி போனார். அவள் மிக
எச்சரிக்கையாக,தன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம்-
அதிலும் அந்த ஊர்க்கோயிலில் உள்ள இறைவனைத் தொட்டுச்
செய்ய வேண்டும், அப்போதுதான் திருமணம் என்று சொல்லி
விடுகிறாள்.சிவபெருமான்தான் தம்பிரான் தோழராயிற்றே!
பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவில் சங்கிலி சொன்னதற்கு
சுந்தரரும் ஒப்புக்கொண்டார். நேரே ஆதிபுரீஸ்வரரிடம் போனார்.
நடந்ததைச் சொன்னார். நாளைக்கு நான் சத்தியம் செய்து
கொடுக்கும்போது நீ இந்த சந்நதியில் இல்லாமல் வெளியே
மகிழம்பூ மரத்தடியில் அமர்ந்துவிடு.ஏனெனில் என் சத்தியத்தைக்
காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதனால் உன்மேல்
ஆணையிட முடியாது என்கிறார்.சுவாமி ஒப்புக்கொண்டார்.
அதோடு நிற்காமல் சுவாமி, சங்கிலி நாச்சியார் கனவில் வந்து
"சுந்தரரை மகிழ மரத்தடியிலே சத்தியம் பண்ணித் தரச் சொல்லு"
என்று சொல்லிவிட்டு வேடிக்கைப் பார்த்தார். அவளும் கோயிலுக்கு
சுந்தரருடன் வந்ததும்,சுவாமி மேல் ஆணையிட வேண்டாம்.இந்த
மரத்தடியில் சத்தியம் செய்யுங்கள் போதும் என்று சொல்லி,
இக்கட்டில் அவரை மாட்டிவிட்டாள். சுந்தரர் பரமன் திருவிளையாடலைத்
தெரிந்து கொண்டார். வேறு வழியில்லாமல் சத்தியம் செய்தார்.
சிறிது நாட்கள் கூட அதைக் காப்பாற்ற முடியவில்லை.திருவாருர்
தியாகேசனைப் பிரிந்து இருக்க இயலாமல் கிளம்பிவிட்டார்.
திருவொற்றியூர் எல்லயைத் தாண்டியதும் இரண்டு கண்களும்
பார்வை இழந்தன.
சத்தியம் தவறினவர் தோழனானாலும் இறைவன் நீதி எல்லோருக்கும்
சமம்தான்!" தண்டித்தாலும் நீயே கதி!" என்று சிவனைப் போற்றி
சுந்தரர் ஒரு பதிகம் பாட ஒரு கண் சரியாகிவிட்டது.
இப்படிக் கதையை வந்த அம்மாவுக்காகவே சொன்ன பெரியவா,
"இந்தப் பதிகம் பாடினா போன கண் திரும்பி வந்து விடும்" என்று
முடித்தார். இப்படியும் அருள் செய்வதில் ஒரு நாடகமே நடத்தக்
கூடியவர் பெரியவா. "ஆலந்தான் உகந்துண்டானை" என்ற அந்த
தேவாரப் பதிகத்தை தேடி எடுத்து, அந்த அம்மாவை தினமும்
பாராயணம் பண்ணச் சொல்லி பேரனுக்குப் பார்வை கிடைக்கச்
செய்தார்.
ஏதோ, "பெற்றம்" என்ற சொல்லைப் பற்றி ஆராய்ச்சி செய்வதுபோல்
பேசி, வருத்தத்துடன் வந்த ஒருவருக்கு அவர் விரும்பியபடி
பேரனுக்குப் பார்வை வர ஒரு நீண்ட கதையையும் சொல்லி
வழிகாட்டிய அனுக்கிரகம் இது.
சுந்தரர் திருவாரூருக்குப் போய் வேறொரு பதிகம் பாடி
மற்றொரு கண் பார்வையும் பெற்றுவிட்டதாக வரலாறு.
இரண்டு பதிகங்களின் மகிமையை உணர்ந்து, பயன் பெற்ற
ஒருவர் இன்னும் சாட்சியாக நம்மிடையே இருக்கிறார்.
[எஸ்.கணேச சர்மா..http://mahaperiavaamyguru.blogspot.in

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

Image



The 'Shastri' family was, of course, devotees of Maha Periyava. The eldest, Harihara Shastri was famous in Mylapore, while the youngest, Chandru Shastri was doing pooja in Rathnagereswarar temple in Besant Nagar. The middle one, Mani Shastri was associated with the mutt and he was the one who had become suddenly sick. The Doctor who examined him gave a letter to V.H.S Hospital and he was immediately admitted. In a few days time, the Doctors gave up hope, and said 'take him home'. Harihara Shastri who came to visit his brother was shocked to see him in a state of near coma. His immediate wish was to take him to Kanchi. but, he knew he could not do that. So, he decided to go, on his brother's behalf. Some of the members of the management committee of the temple also joined him. They took a car by about 11pm.

Now, lets go to Kanchi. The watchman was about to lock the gate of the mutt when Peiryava said, ''don't lock the gate. Harihara Shashtri is coming'. The watchman was surprised but knowing Periyava, he did not lock the gate. The car arrived at the mutt after midnight and someone came to them and said 'Periyava would like to see you now'.

When they met Him, He asked them ' have you taken food? shall I ask the mutt people to make Upuma for you? They said they had food and thanked Him.Then Harihara Shastri told Him about his brother. Periyava then gave him a large plate full of various fruits, vibhuti, kungumam as prasad. Harihara Shashtri and the others paid their obeisance and asked permission to leave. Periyava said 'go in the morning. don't worry about Mani'. So, they waited restlessly till dawn and left immediately. When they reached the V.H.S hospital, everyone in the hospital touched the plate and its contents as they considered it (Prasad from Periyava) a blessing.

When they finally reached Mani's room they were surprised to see him sitting upright in the bed. Harihara Shashtri asked him if he is fit to be sitting like that. Mani said, I could not have even thought of it till yesterday night. But, Periyava came here and said, 'Mani, you are fine. Sit up'. I woke up and thinking it must be my imagination, I tried to sleep again. This time the voice was clear 'Mani there is nothing wrong with you, you are in perfect health. Get up'. That moment all my sickness and ill health evaporated and I have been fine since then'.

Harihara Shastri and the others were dumbfounded. Harihara Shastri put the holy ash and kungumam on Mani's forehead and gave him some of the fruits to eat. All the Doctors were surprised with the magical recovery of Mani. Well, we all know that Periyava is the 'MAGIC'.

source: yahoo groups

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2CrBn6ggZ

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: Kanchi Maha Periva

Post by PUNARVASU »

Avar nadamaadum daivam

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

What Life has taught Me

His Holiness Jagadguru
Sri Chandrasekharendra Sarasvathi Mahaswamigal
Sri Sankaracharya of Kanchi Kamakoti Peetham
[Bhavan's Journal was privileged to publish the Paramacharya's article entitled 'What Life Has Taught Me' some years ago. Rarely do saints like our Paramacharya talk about themselves. But he did so and what he said was marked by 'vinaya', humility of which he is never tried of speaking. Said the Acharya: "God has created some souls to live for others only.

When this article appeared in the 'Bhavan's journal', Rajaji was the first to congratulate us on securing an article of this kind from His Holiness.

More read at...

http://www.kamakoti.org/souv/4-13.html

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

THE ‘SIVAM’ WHICH SAVED THE HUMAN SIVAN!

This story was narrated by Pattabi Sir, who had served Mahaperiava for over 25 years. Sri Pattabi narrates it to Mr. Charukesi. I have translated it from his Tamil book ‘Kamakoti Periava’, published by ‘Vikatan Pirasuram’.

This incident concerns one great devotee of Mahaperiava by name ‘Sivan’. He hails from a village near Thirunelveli; from there he used to visit SriMatam very frequently to have His Dharsan.

He belonged to the ‘Veera Saiva’ sect. his forehead will be smeared with the sacred ash and he will look like a ‘Sivap pazham’; very hygienic, and follows ‘Aachaaram’ strictly. He doesn’t eat onion; he has so much control over his life style.

He is a wealthy person, but, for him, everything is ‘Periava’ and only ‘Periava’; Is eighty years old. He considers Periava as his ‘Dheyvam’ and respects Periava’s words as ‘Vedha vaakku’


Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2DfjE5vRL

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Esayanur Paati
காஞ்சிமடத்தில் பெரியவரின் மீது பக்தியும் பாசமும் கொண்ட அம்மையார் ஒருவர் இருந்தார். அவர் தான் எசையனூர் பாட்டி. இவ்வூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அவரது பெயர் கோகிலாம்பாள். இளமையிலேயே கணவர் மற்றும் குழந்தைகளை இழந்துவிட்டதால், காஞ்சிமடத்தில் தொண்டு செய்வதை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக்கொண்டு அங்கேயே ஐக்கியமாகி விட்டார்.
எசையனூர் பாட்டிக்கு மடத்தில் தனி மதிப்பு உண்டு. மடத்து சிப்பந்திகளையும் அரட்டி உருட்டி வேலை வாங்குவார். அதேநேரம், அன்பாகவும் நடந்து கொள்வார். அவருடைய அணுகுமுறையில் வேலை செய்யாதவனும் செய்யத் தொடங்கிவிடுவான்.
“ஏண்டா ராமமூர்த்தி! இன்னிக்கு பெரியவா பிøக்ஷயை சரியா பண்ணினாரா? ஏன் தான் ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் எல்லாம் சேர்ந்தாப்பில வரதோ? தெரியலையே! தசமி வந்தாலே இப்படி நாலு நாள் பட்டினியா காயிறாரே! உடம்பு என்னாகும்?” என்று கவலை கொள்வார் பாட்டி.
“”வேலூர் மாமா! நான் சொல்றதைக் கேளுங்கோ! நீங்க சொன்னாத் தான் பெரியவா கேட்பா! உடம்புக்கு முடியாத நேரத்தில வெந்நீர் ஸ்நானம் செய்யச் சொல்லுங்கோ!” என்பார்.
“”ஏண்டா! விஸ்வநாதா! பெரியவாளைத் தூங்கவிடாம பேச்சுக் கொடுத்துண்டே இருக்கே!” என்று அதட்டுவார். இப்படி நாள் முழுவதும் எசையனூர் பாட்டியின் அக்கறையுணர்வு அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். திடீரென்று பெரியவரைத் தூக்கிச் செல்லும் சவாரிக்காரர்களிடம் போய், “”நீங்கள் எல்லாரும் புண்ணிய ஆத்மாக்கள். நன்னா இருங்கோ! இதில் இருக்கும் பட்சணங்களை எடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கோ!” என்று அன்போடு உபசரிப்பார்.
காலப்போக்கில், பாட்டி தள்ளாமையில் தவித்துவந்தார். அடிக்கடி பெரியவரிடம் பிரார்த்தனை செய்து கொள்வார். “”பொன்னோ பொருளோ தேவையில்லை. வாழ்க்கையில் என்னால் முடிந்த சேவைகளைச் செய்தேன். இப்போ நிம்மதியான முடிவை மட்டும் உங்களிடம் வேண்டறேன்,” என்று பாட்டி வருந்தினார்.
பெரியவரும் பாட்டியின் உடல்நலனை அவ்வப்போது சிஷ்யர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
ஒருநாள் பெரியவர் திடீரென்று தன் மடத்து தொண்டர் ஒருவரை அழைத்தார்.
“”எசையனூர் பாட்டிக்கு இந்த துளசி தீர்த்த பிரசாதத்தைக் கொடு, ” என்று கட்டளையிட்டார். அதுவே பாட்டியின் கடைசி உணவாக இருந்தது.
சிறிது நேரத்தில் எசையனூர் பாட்டி இறைவனடி சேர்ந்துவிட்டார். எந்தவித மரண அவஸ்தையோ, நோயோ இல்லாமல் பாட்டி மறைந்தது ஆச்சரியமாக இருந்தது. மறைவுச் செய்தி கேட்ட பெரியவர் மூன்று தினங்கள் மவுனவிரதம் இருந்தார். பாட்டி கேட்டபடியே, நிம்மதியான இறுதி முடிவைத் தந்தது பெரியவரின் ஆசி என்பதை மடத்து தொண்டர்கள் அனைவரும் உணர்ந்தனர்.

original posting is at

http://mahaperiyavaa.wordpress.com/2012 ... %E0%AE%A4/

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

புண்ணிய ஆத்மா!
God bless her soul!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

அரியக்குடிக்கு ஆலோசனை சொன்ன மஹா ஸ்வாமிகள்…..

ஸ்வாமிகள் அரியக்குடியவர்களிடம் கூறினார்:

நல்ல குரு சிஷ்ய பரம்பரையில் வந்திருக்கிற ஒன்னோட சங்கீதத்தை நீ நல்லபடியா காப்பாத்திண்டு வரதுல ரொம்ப ஸந்தோஷம். இதே மாதிரி நீயும் நல்ல சிஷ்யாளைத் தயாரிச்சு இந்தப் பாரம்பர்யம் தொடர்ந்து போகும்படியாய்ப் பண்ணணும். வேதம் கத்துண்ட ப்ராமணன் இன்னம் ஒருத்தனுக்காவது அதைச் சொல்லிக் கொடுத்தே தீரணும்னு, ‘அத்யாபனம்’னே அவனுக்குக் கம்பல்ஸரியா ஒரு கடமை கொடுத்திருக்கு. அது எல்லாக் கலைக்கும், சாஸ்த்ரத்துக்கும் பொருந்தும். தான் கற்ற வித்தை தன்னோட போகாம இன்னம் பல பேர்கிட்டப் போகும்படியாய்ப் பண்ணணும்.

More at...

http://balhanuman.wordpress.com/2012/12 ... %E0%AF%8A/

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

சங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் இருவரும் பிரபலமானவர்கள். டைகர் வரதாச்சாரியாரிடம் பாடம் பயின்றவர்கள். மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவை காஞ்சிப்பெரியவரின் உத்தரவின் பேரில் தொடங்கியவர்கள். இந்தச் சகோதரர்களை அடிக்கடி காஞ்சி மடத்திற்கு அழைத்து பாடச் சொல்வது வழக்கம். ஒருமுறை, நவராத்திரி பூஜை மூன்றாம்நாள் விழாவுக்கு காஞ்சிமடத்தில் பாடுவதாக அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தார்கள். அதே நாளில், திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலிலும் நவராத்திரி நிகழ்ச்சியில் சகோதரர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. ஆனால், காஞ்சி மடத்தில் பாடவேண்டியிருப்பதை குறிப்பிட்டு பதில் கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால், நவராத்திரி விழா துவங்குவதற்கு இருபது நாளைக்கு முன் திருவனந்தபுரம் அரண்மனையில் இருந்து சகோதரர்களுக்கு மீண்டும் அழைப்புக் கடிதம் வந்தது. அதில் நவராத்திரி கலைவிழாவில் முதல்நாள் பாடவேண்டிய பாலக்காடு கே.வி. நாராயண சுவாமிக்கு வரமுடியவில்லை. அவர் மூன்றாம் நாள் பாட வருவதாக ஒத்துக்கொண்டார். அதனால் முதல்நாள் நிகழ்ச்சியில் அவசியம் பாடும்படி கேட்டுக்கொண்டிருந்தார்கள். சகோதரர்கள் இருவரும் ரயிலில் முன்பதிவு செய்ய முடியாததால், பஸ்சில் திருவனந்தபுரம் கிளம்பினர். முதல்நாள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மூன்றாம் நாள் காஞ்சிபுரம் புறப்பட்டனர். அப்போது கனமழை பிடித்துக்கொண்டது. காஞ்சிபுரம் செல்லமுடியுமோ முடியாதோ என்ற வருத்தம் உண்டானது. பெரியவரை வேண்டிக் கொண்டு மழையோடு மழையாக பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தனர். சென்னைக்குக் கிளம்பும் விரைவு பஸ் கிளம்பிக்கொண்டிருந்த சமயம். இவர்கள் பஸ்சில் இடம் இருக்கிறதா என பார்த்தனர். சொல்லி வைத்தது போல் இரண்டு இருக்கைகள் மட்டும் காலியாக இருந்தன. மூன்றாம் நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தனர். காலை பத்து மணிக்கு பூஜை ஆரம்பம். பூஜையில் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பாகப் பாடினார்கள். பிரசாதம் வழங்கும் நேரம்... சங்கீத சகோதரர்கள் பெரியவர் முன் நின்றார்கள். பெரியவர் அவர்களிடம், ""என்ன! நவராத்திரி விழாவில் முதல் நாள் பாடியாச்சா? நல்ல மழையாச்சே! எப்படி டிக்கெட் கிடைச்சு வந்தீர்கள்?'' திருவனந்தபுரம் சென்று வந்த விஷயம் பெரியவருக்கு எப்படி தெரிந்தது என்று சகோதரர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். சாஷ்டாங்கமாக அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, ""பெரியவா அனுகிரஹத்தாலே திருவனந்தபுரத்திலேயும், காஞ்சியிலேயும் பாடும் வாய்ப்பு கிடைச்சுது!'' என்று பணிவுடன் சொன்னார்கள். ""அப்படி ஒன்றும் இல்லை! அம்பிகை தான் ஒரே கல்லடிச்சு உங்களுக்கு இரண்டு மாம்பழம் கொடுத்துட்டான்னு சொல்லு!'' என்று வாழ்த்தினார். பெரியவரின் வாழ்த்தைக் கேட்டு சகோதரர்கள் இருவரும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

http://www.dinamalar.com/aanmeegamNews_ ... ews_id=998

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

பெரியவா தேடி சென்ற பாட்டி !!!
========================
ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”

“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.

“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!

பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.

“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”

“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”

என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!

“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.

“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”

“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?

பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.

பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….

“என்னது இது?”

“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”

“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”

“குடுத்துட்டோம். பெரியவா”

“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.

“குடுத்தாச்சு. பெரியவா……”

“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”

ருத்ர முகம்!

“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.

“………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.

ஆம். தவறுதானே?

“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.

“நீ எங்கே குடியிருக்கே?”

“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”

“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”

“அங்க சுப்புராமன் இருக்கார்……”

பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!

“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”

“இல்லை……….”

“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”

“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”

“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”

பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!

இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.

பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.

இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.

தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

"நம்பினார் கெடுவதில்லை
நான்மறை வாக்கு! "

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.

சமுத்திரமாக இருக்கிற அவரேதான் ஆற்று ஜலம், குளத்து ஜலம், கிணற்று ஜலம், அண்டா ஜலம், செம்பு ஜலம், உத்தரணி ஜலம்போல் தம் சக்தியைச் சிறுசிறு ரூபங்களாகச் செய்துகொண்டு பலவித ஜீவ ஜந்துக்களாகியிருக்கிறார். இதில் மனிதனாகும்போது பாப புண்ணியத்தை அனுபவிக்கவும், பாப புண்ணியம் கடந்த நிலையில் தாமே ஆகிவிடவும் வழி செய்திருக்கிறார். மனிதனாகும்போது மனசு என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாபபுண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்கச் செய்கிறார்.
மனசு ஆடிக் கொண்டேயிருக்கிற நிலையில் உள்ள நாம் எடுத்த எடுப்பில் பாப
புண்ணியமற்ற நிலையை அடைந்து அவரே நாம் என்று உணர முடியாது. ஆகவே, அவரே நாமாக இருந்தாலும், அதை நாம் அனுபவத்தில் உணருவதற்கு அவரது அருளைப் பிரார்த்திக்க வேண்டியர்களாகவே இருக்கிறோம். அவர் மகா பெரிய ஸ்வாமி, நாம் அல்ப ஜீவன்-அவர் மகா சமுத்திரம், நாம் உத்தரணி ஜலம் என்கிற எண்ணத்தோடு ஆரம்பத்தில் பக்தியே செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். ஸ்வாமி கொடுத்துள்ள மனசுதான் இப்போது நம்மை அவரிடமிருந்த பேதப்படுத்துகிறது. இந்த மனசை எடுத்த எடுப்பில் போ என்றால் போகாது. ஆகவே, இந்த நிலையில் இதே மனசால் அவர் ஒருத்தரை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். மனசை அவர் குரங்காகப் படைத்திருக்கிறார். அந்தக் குரங்கு இப்போது தேகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்வாமி இந்தத் தேகத்தை நசிப்பதாக அல்லவா வைத்திருக்கிறார்?
இந்த அழுகல் பழத்தை மனக்குரங்கு விட்டுவிட வேண்டும். அழுகாத பழம் கிடைத்தால் அழுகல் பழத்தைக் குரங்கு போட்டுவிடும். அழுகாத மதுரமான
பழம் பரமாத்மாதான். அதை மனத்தால் பிடித்துக்கொண்டு சரீரப் பிரக்ஞையை விட்டுவிட அப்பியசிக்க வேண்டும். இதற்குத்தான் பக்தி, பூஜை, க்ஷேத்திராடனம் எல்லாம் வைத்திருக்கிறது. இவற்றில் மேலும் மேலும் பக்குவமடைந்து சரீரப் பிரக்ஞை, அகங்காரம் அடியோடு போய்விட்டால், அவர் பரமாத்மா, நாம் ஜீவாத்மா என்கிற பேதமே போய், அவரே நாமாக,அத்வைதமாக ஆகிவிடுவோம். 'நீ வேறெனாதிருக்க' என்று அருணகிரிநாதர பாடிய அனுபவத்தை அடைவோம்.
Like · · 4 hours ago ·

Venkata Kailasam Arunagiri made easy by Maha periva..
The song, "Naveru Pamanatha" says that by adhering to the 28 tenets (agamas) contained in the four Vedas, one attains a stage where his identity as an individual merges with God.......

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
நாலாறு நாலு பற்று ...... வகையான

நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த ...... நெறியாக

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர

நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வேயு ரைத்த ...... குருநாதா

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீராகு காகு றத்தி ...... மணவாளா

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே

lISTEN HERE..

050-Dev-Muru-naaveru pamanathu-tstp0223.mp3

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Yogi ram surat kumar Sathsang - Salem

திருப்பதி க்ஷேத்ரம் யுகயுகமாக பற்பல கோடி ஜீவன்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட பகவான்! எண்ணற்ற மஹான்கள் ஊனும், உயிரும் உருக பாடி, பக்தி பண்ணி ரசித்த பெருமாள்! அந்த திருப்பதி க்ஷேத்ரத்தையே காப்பாற்றியவர் நம்ம பெரியவா! கலியுகம் இல்லையா? க்ஷேத்ரத்துக்கே ஹானி வந்துவிடுமோ என்ற சூழ்நிலை!

சுமார் 50 வர்ஷங்களுக்கு முன் திருப்பதி அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எப்போதும் கோவிலில் ஏதாவது புதுசு புதுசாக மாற்றங்கள் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும். காரணம்? லக்ஷக்கணக்கான பக்தர்கள் தினமும் வரும் க்ஷேத்ரம். அவர்களுக்கு சௌகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற நல்லெண்ணமே! நாஸ்திக வாதம் அங்கங்கே ஒப்புக்கு முழக்கம் செய்தாலும், "இதோ பார்த்தாயா! என்னைத் தேடி வரும் என் குழந்தைகளை?" என்று பகவான் கோடிக் கணக்கில் காட்டும் பல க்ஷேத்ரங்களில், திருப்பதியும் ஒன்று.

ஒருமுறை அங்கிருந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளும், அறநிலையத் துறை மந்திரியும் சேர்ந்து ஒரு முக்கியமான முடிவை செயலாக்கத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அது என்னவென்றால்....பக்தர்கள் உள்ளே மூலஸ்தானத்துக்கு வந்து, பிறகு அதே வழியாகத்தான் திரும்பிப் போகிறார்கள். அப்போது அங்கே ஒரே நெருக்கடியாகி விடுகிறது. எனவே மூலஸ்தானத்தை அடுத்த அர்த்த மண்டபத்தின் இருபுறமும் இருக்கும் சுவற்றை இடித்து வழி பண்ணிவிட்டால், மக்கள் வலது, இடது பக்கம் போகலாம், வரலாம். நெருக்கடி, ஸ்ரமம் இல்லை; இன்னும் நிறைய கூட்டம் வந்தாலும் சமாளிக்கலாம். கீழ்மட்டத்தில் அதிகாரிகள் இதை விவரமாகப் பேசி, சுவரை கச்சிதமாக உடைக்க அமெரிக்காவில் இருந்து 40 லக்ஷத்துக்கு ஒரு cutting machine வாங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவைக் கேட்டுக் கொண்டு, நிம்மதி இழந்தவராக அமர்ந்திருந்தவர், கணபதி ஸ்தபதி.

"என்ன ஸ்தபதி ! நீங்க என்ன சொல்லறீங்க? இதுல உங்களுக்கு சம்மதந்தானே?.." அமைச்சர் கேட்டார்.

"என்னோட மனசுக்குப் பட்டதை நான் இங்க சொல்லலாமா?.." ஸ்தபதி கேட்டார்.

"தாராளமா....."

"எத்தனையோ ஆயிரம் வர்ஷங்களுக்கு முன்னால, ஆகம சாஸ்த்ரங்களை கரைச்சு குடிச்ச வல்லுனர்கள்தான் இந்தக் கோவிலை கட்டியிருக்கா....மூலஸ்தானத்துக்கு அடுத்தபடியா இருக்கற அர்த்த மண்டபம் ரொம்ப பவித்ரமானது. அதோட ரெண்டுபக்க சுவரையும் இடிச்சு வழி பண்ணறது நல்லதில்லை. அப்பிடி ஏதாவது பண்ணினா, மூலவரோட சக்தியும், sanctity யும் போய்டும்... அதுனால இதையெல்லாம் மனசுல வெச்சுண்டு தயவு செய்து இந்த இடிக்கற வேலையை நிறுத்திடுங்கோ!..."

எந்த ஒரு குழுவிலும், ஒரு முடிவு எடுக்கும்போது, உண்மையில் எது நல்லது என்பதை உளமார உணர்ந்து செய்பவர்கள் குறைவாகத்தானே இருப்பார்கள்? அதேபோல், ஸ்தபதியின் சொல் அங்கே எடுபடவில்லை. இடித்தே தீருவது! என்று தீர்மானம் பண்ணி, ஸ்தபதியிடமும் கட்டாயமாக கையெழுத்து வாங்கப் பட்டது. எப்போது கையெழுத்துப் போட்டாரோ, அந்தக்ஷணத்திலிருந்து அவருடைய நிம்மதி போய்விட்டது. தன் கண் முன்னால், கோவிலின் அர்த்த மண்டபம் இடிக்கப்படுவதை எப்படி சஹிக்க முடியும்? இந்த அசம்பாவிதம் நடக்காமல் இருக்க என்ன செய்வது என்று தெரியவில்லை. பயங்கரமாக குழம்பித் தவித்த அவர் உள்ளம் அப்போது ஒன்றே ஒன்றை பற்றிக் கொண்டது ! ஆம். பெரியவாளின் சரணத்தை!

அப்போது பெரியவா ஆந்த்ராவில்தான் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். பெரியவாளை எங்கிருந்தாலும் பார்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கால் போன போக்கில் ஸ்தபதி கிளம்பிவிட்டார். அன்ன ஆகாரமில்லை; மனஸ் முழுக்க பாரம்; விடியற்காலை பெரியவா தங்கியிருந்த கார்வேட் நகருக்கு வந்து, பெரியவா முன் நின்றார். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது!

பெரியவா அவரைப் பார்த்ததும், நெற்றியில் நாமம் போட்டுக் காட்டி, "அங்கேர்ந்து வரயா?" என்றார்.

"ஆமா....பெரியவாகிட்ட முக்யமான விஷயம்....." அவர் பேச ஆரம்பிக்கும்முன் அவரை கையமர்த்தி,

"இப்போ நீ ஒண்ணும் சொல்ல வேணாம்...மொதல்ல போய் வயத்துக்கு ஏதாவது சாப்ட்டுட்டு வா! ..." ரெண்டு நாளாக எதுவும் சாப்பிடாமல் தன்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கும் தன் குழந்தைக்கு முதலில் வயிற்றை நிரப்ப எண்ணினாள் அந்த மஹா மாதா! பாரிஷதரிடம், "இவரை எந்த ஹோட்டல் தொறந்திருந்தாலும் அழைச்சிண்டு போய், வயறு நெறைய ஆஹாரம் குடுக்கச் சொல்லு! பணத்தை நான் தரேன்...ன்னு சொல்லு.."

அன்னபூரணி சொன்னால் அப்பீல் உண்டா...ஒரு ஹோட்டல் திறந்திருந்தது. பெரியவாளுடைய உத்தரவைக் கேட்டதும் அந்த முதலாளி, "பெரியவா அனுப்பினவாகிட்ட நான் எப்பிடி பணம் கேப்பேன்? நன்னா வயிறார சாப்பிடட்டும்...என்னோட பாக்யம் " என்று சொல்லி, சுடச்சுட தயாராக இருந்த உணவைப் பரிமாறினார். இப்போது மறுபடியும் பெரியவா முன்னால் வந்து நின்றார் ஸ்தபதி.

"இப்போ சொல்லு...."

எல்லாவற்றையும் சொன்னார். பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

"அப்பிடி அர்த்த மண்டபத்தை ஒடைச்சா, என்ன ஆகும்?.." தெரியாதவர் மாதிரி கேட்டார்

"அர்த்த மண்டபத்ல கைவெச்சா...பெருமாளோட சக்தி பூரா போய்டும்...பெரியவா!.. திருப்பதில எந்த மாறுதல் பண்ணணும்...ன்னாலும் பெரியவாகிட்ட கேட்டுண்டுதான் பண்ணுவா...ஆனா, இந்த விஷயத்தை உங்ககிட்ட கேக்காம, வெறும் தகவல் மட்டுந்தான் சொல்லுவா...அதுனால பெரியவா அனுக்ரஹம் பண்ணி, இதை நிறுத்த ஏதாவது வழி சொல்லணும்.."

பெரியவாளின் திருவாக்கிலிருந்து மணிமணியாக அபயச்சொற்கள் வந்தன!

"ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!.." ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார். வீட்டுக்கு வந்து அசந்து படுத்த ஸ்தபதி நன்றாகத் தூங்கினார்! நிம்மதியாக! ஆனால், பின்னிரவு ரெண்டு மணிக்கு திடீரென்று யாரோ எழுப்பிவிட்ட மாதிரி, படக்கென்று எழுந்தார். மனஸில் ஏதோ தோன்ற, விடுவிடுவென்று முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டியின் வீட்டை நோக்கி நடந்தார்! அப்போது சரியாக மணி மூன்று! வாசலில் இருந்த செக்யுரிட்டி ஆபீசர் இவரை அடையாளம் கண்டுகொண்டு, "என்ன ஸ்தபதி ஐயா !...இவ்வளவு அதிகாலை முதலமைச்சரைப் பாக்க வந்திருக்கீங்க!.." என்றார்.

"ரொம்ப அவசரம்...நான் அவரைப் பாக்கணும்..."

"appointment இருக்கா?"

"இல்லையே.."

"அப்போ அவரைப் பாக்க முடியாதே ஐயா!.."

"ரொம்ப அவசரம்...நான் பாத்தே ஆகணுமே!.."

ஆபீசர் யோசித்தார்..ஸ்தபதி ரொம்ப மரியாதைக்குரியவர். நிச்சயம் ஏதோ அவசரமான காரியமாகத்தான் இருக்கும்...

"ஐயா...ஒண்ணு செய்யலாம்...சரியா 4.30 மணிக்கு முதலமைச்சர் காபி சாப்பிட மாடியிலேர்ந்து இறங்கி வருவார். அப்டி வந்து உள்ள நுழையும் போது ஒங்களைப் பாத்துட்டார்ன்னா, ப்ரச்சினை தீர்ந்தது! இல்லாட்டா.....காலேலதான்!.."

ஸ்தபதி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். சரியாக 4.30 மணிக்கு ரெட்டிகாரு மாடியிலிருந்து இறங்கியவர், வாசலில் நிற்கும் ஸ்தபதியைப் பார்த்துவிட்டார்! முகமெல்லாம் வியப்பாக....."என்ன கணபதி? இத்தனை காலைல?"

"உங்ககிட்ட முக்யமான விஷயம் பேசணும்...."

"என்னது? வாங்க..." என்று வாசலுக்கு வந்து, அவர் தோள் மேல் கையைப் போட்டு அணைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றார் முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டி!

"திருப்பதி கோவிலுக்கு ஆபத்து!" என்று எடுத்த எடுப்பில் "கண்டேன் சீதையை!" மாதிரி போட்டு உடைத்தார்.

"என்ன உளறறீங்க? திருப்பதிக்கு என்ன ஆபத்து! எப்படி வரும்?..." அதிர்ச்சியோடு கேட்டார் ரெட்டிகாரு. எல்லா விஷயத்தையும் சொல்லி, " பெருமாளோட சக்தி பூரா போய்டும்" என்று நிறுத்தினார்.

முதலமைச்சர் முகத்தில் கோபம் கொப்பளித்தது! கார்யஸ்தரை கூப்பிட்டு "ஒடனே அறநிலையத்துறை அமைச்சரை போனில் கூப்பிடு!.." அதிரடி உத்தரவு பறந்தது. அறநிலையம் லைனில் வந்தார்......

"முந்தாநேத்திக்கு திருப்பதில என்ன நடந்தது?..."

"அந்த விஷயமா பேசத்தான் file லோட உங்களைப் பாக்க இன்னிக்கி பொறப்பட்டு வந்திட்டு இருக்கேன்..." இழுத்தார்.

"திருப்பதியில் என்ன நடந்தது...ன்னுதான் கேட்டேன்!.." கத்தினார் முதமைச்சர்.

அறநிலையம் தாங்கள் எடுத்த முடிவை விவரித்தார்.

"மொதல்ல நான் சொல்றதை கேளுங்க! வெங்கண்ணா ஜோலிக்கு போகாண்டி!" என்று ஒரே போடாகப் போட்டார்!

"திருப்பதி வெங்கடாசலபதி விஷயத்தில் தலையிட வேண்டாம்...இது என் உத்தரவு!.." பட்டென்று போனை வைத்தார்.

"கணபதி! திருப்பதில எதுவும் நடக்காது! நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க.." வழியனுப்பி வைத்தார் முதலமைச்சர்.

வெளியே வந்தபின்தான், எந்த சக்தியால் தான் உந்தப்பட்டு இன்று இவ்வளவு அதிகாலையில் முதலமைச்சரைக் கண்டு விஷயத்தை சொல்ல முடிந்தது ! என்று ஸ்தபதி வியந்தபோது, உள்ளிருந்து பெரியவாளுடைய தெய்வீகமான வார்த்தைகள் ஒலித்தன.....

"ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!".....

பெருமாள் கோவிலின் அர்த்த மண்டபம் இடிபடாமல் காப்பாற்றியது யாரால்? ஸாக்ஷாத் ப்ரஹ்ம ஸ்வரூபமான பெரியவாளால்தான் ! திருப்பதி மட்டுமில்லை இன்னும் இந்தியாவில் உள்ள எண்ணற்ற கோவில்களை பழுது பார்த்து, ஒரு தீபத்துக்கூட வழியில்லாமல் இருந்த கோவில்களுக்கு தன்னுடைய ப்ரபாவத்தால் பூஜைகள் நடப்பது பெரியவா என்ற நடமாடும் தெய்வத்தால்தான் !

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Experience with Maha Periva...Shri B Sundar Kumar.....

http://www.youtube.com/watch?v=ufUBFIP3leI

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

மஹா பெரியவா பக்தர்களுக்கு ஆசியளிக்கும் போது, நகைச்சுவையாக பேசுவதும் உண்டு.

ஒரு சமயம், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடந்து கொண்டிருந்தது. அதில் தினமும் வித்வான்கள் பாடுவர். விழாவின் ஒருநாள் மாலையில், பெரியவரை தரிசிக்க பக்தர் ஒருவர் வந்தார். எழுத்தாளரான அவர், தன் புத்தகங்களை பெரியவரிடம் காட்டி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். பக்தர்கள் பலர் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களைக் கண்டதும் பெரியவர் எழுத்தாளரிடம், "இப்போது நீ காமாட்சியம்மனைத் தரிசித்து விட்டு வா. அங்கு தர்பார் நடக்கிறது. சீக்கிரம் முடிந்து விடும், வேகமாகச் செல்,'' என்றார்.

எழுத்தாளர் சென்றபோது, அம்மன் தர்பார் அலங்காரத்தில் இல்லாமல் வேறு அலங்காரத்தில் காட்சியளித்தாள்.

""பெரியவர் "தர்பார் அலங்காரம்' என்று சொன்னாரே!. இங்கு வேறு அலங்காரத்தில் அம்பாள் இருக்கிறாளே!'' என்று குழப்பமடைந்தார்.

அப்போது, இனிய கானம் காற்றில் மிதந்து வந்தது. தர்பார் ராகத்தில், ""லோசனா.. கமல லோசனா'' என்று பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிக்கொண்டிருந்தார்.

""அடடா..நாமோ தர்பார் அலங்காரம் என்று நினைத்து வந்தோம். இங்கே தர்பார் ராக பாடல் அல்லவா பாடப்படுகிறது! பெரியவர் சொன்னதை இப்படி புரிந்து கொண்டோமே! அவருடைய நகைச்சுவை உணர்வு தான் என்னே!'' என்று சிரித்தபடியே, மற்றவர்களிடமும் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

மற்றவர்களும் இதுகேட்டு சிரிக்க, ""அது சரி...தர்பார் ராகத்தில் எம்.எஸ்., பாடுவார் என்பது முன்கூட்டியே எப்படி பெரியவருக்குத் தெரிந்தது! முக்காலமும் உணர்ந்த ஞானி என்று சொல்வது இதனால் தானோ என்று பரவசமும் அடைந்தனர்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

கவிராயரின் ஸ்ரீரங்கநாதப் பாடல்..( From Ra Ganpathi.A Share from FB group Carnatic & Bajans )

அதுதான் நான் சொன்ன நிந்தா ஸ்துதிப் பாட்டு. என் நினைவிலே இப்ப கொஞ்ச நாளாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் பாட்டு. உங்களுக்கும் தெரிவிக்க ஆசைப்படும் பாட்டு.

முன்னெல்லாம் இங்கே வருகிற ரொம்பப் பேர் பாடிக் காட்டின பாட்டுதான் அது. ஆனால் அப்படி ‘ஃபேமஸா’க இருந்தது கொஞ்ச வருஷமாகக் காதில் படவேயில்லை.

எனக்குப் பாட வராது. இருந்த தொண்டையும் போய்விட்டது. பரவாயில்லை. இப்போது ஸாஹித்யந்தான் முக்யம்; ஸங்கீதம் இல்லை. அதனால் ‘டெக்ஸ்’டை மட்டும் சொல்கிறேன்.

(இப்படிச் சொன்னாலும் நல்ல இசைப் புலமையும் குரலும் கொண்ட ஸ்ரீசரணர் இப்பாடலையும் பின்னர் வர இருக்கும் இன்னொரு பாடலையும் வசனமாகச் சொல்லிப் போகும்போது ஆங்காங்கே மனத்துக்குள்ளேயோ, மெல்லிசாக வாய்விட்டுமே கூடவோ அழகாகப் பாடவுந்தான் செய்தார்.)

அரங்கம் என்று ஸபை கூட்டிவிட்டு அங்கே ஸ்வாமி படுத்துக் கொண்டிருப்பது விசித்ரமாயிருக்கிறது என்று முன்னே பார்த்தோமில்லியா? அதையேதான் கவிராயர் ‘டாபிக்’காக எடுத்துக் கொண்டு, ‘படுத்துக் கொண்டதற்குக் காரணம் இதுவா, இல்லாவிட்டால் இதுவா?’ என்று நிறையக் கேள்வி அடுக்கிக்கொண்டே போகிறார். அதிலே ஹாஸ்யம், பரிஹாஸம் எல்லாம் இருக்கும். ஆனாலும் வெடித்துக் கொண்டு வராமல், ‘ஹாஸ்ய வெடி’ என்கிற மாதிரி இல்லாமல், கொஞ்சம் ஸுக்ஷ்ம நயத்தோடே மறைமுகமாகவே இருக்கும்.

‘ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?’

என்று முதல் கேள்வி.

‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? ஸ்ரீரங்கநாதரே! நீர் –

ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?’

அதுதான் பல்லவி.

அப்புறம் அநுபல்லவி. அதிலே நிந்தா ஸ்துதி எதுவுமில்லாமல் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பேர் சொல்லாமல் அழகான கவிதை பாஷையில் காவேரி வர்ணனையுடன், காவேரியின் பெயரையும் சொல்லாமல், பாடியிருக்கிறார். காவேரி இரண்டாகப் பிரிந்து ஓடுகிற இடமாகத்தானே ஸ்ரீரங்கம் இருக்கிறது? அதைச் சொல்கிறார்:

ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே – அவதரித்த

இரண்(டு) ஆற்றுநடுவிலே (ஏன் பள்ளி கொண்டீரையா ?)

‘ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே’ என்றால், ‘ஆம்பல் என்கிற அல்லி ஜாதிப் புஷ்பம் பூத்து அசைந்து ஆடுகிற மலைச் சுனையில்’ என்று அர்த்தமில்லை. ‘பூத்தசைய’ என்பது ‘பூத்து அசைய’ என்று இரண்டு வார்த்தையாகப் பிரியாது. ‘பூத்த’ ஒரு வார்த்தை; ‘சைய’ ஒரு வார்த்தை என்றே பிரியும். ‘சையம்’ என்பது ‘ஸஹ்யம்’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையின் திரிபு – ‘மத்யம்’ என்பது ‘மையம்’ என்று தமிழில் ஆனமாதிரி ‘ஸஹ்யம்’ என்பது ‘சைய’மாயிருக்கிறது. ஸஹ்ய பர்வதம், ஸஹ்யாத்ரி என்று மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. அதிலுள்ள ஒரு சுனைதான் தலைக்காவேரி என்று காவேரியின் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது. கொடகுதேசத்திலுள்ள அங்கே பிறந்து முன்னே மைஸுர் ராஜ்யமாயிருந்த கன்னட தேசம் வழியாகப் பாய்ந்து, சேலம் ஜில்லாவிலே தமிழ் தேசத்துக்குள் ப்ரவேசித்து, அப்புறம் திருச்சிராப்பள்ளிக்கு வருகிற காவேரி, அங்கே காவேரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிகிற இடத்திலேயே ஸ்ரீரங்கம் இருக்கிறது. அதை இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டு காவேரி பாய்கிறாள்.

கல்யாணப் பெண் வரனுக்கு மாலை போடுகிறது வழக்கமென்றால் இங்கேயோ அப்படிக் காவேரி கல்யாணப் பெண்ணானபோது தானே மாலையாகி திருமாலை இரண்டு பக்கமுமாக அணைத்துக் கொண்டிருக்கிறாள்! அதனால் அந்த ஸ்ரீரங்கநாதனை லக்ஷ்மீநாராயணன், ஸீதாராமன் என்கிற மாதிரி அவள் பேர் சேர்த்து – அதுவும் முன்னாடியே சேர்த்து: ‘மிஸ்ஸிஸ்’ஸில் பத்னி பேருக்குப் பின்னாடி புருஷன் பேர் சேர்க்கிற மாதிரியில்லாமல் இங்கே மிஸ்டர் பேருக்கு முந்தி மிஸ்ஸிஸ் பேர் சேர்த்து – காவேரி ரங்கன் என்று சொல்வதாயிருக்கிறது.

உபய காவேரி என்று இரண்டாகப் பிரிந்து ஏற்பட்ட இட மத்தியிலே ஸ்வாமி பள்ளி கொண்டிருப்பதைத்தான் ‘இரண்டாற்றின் நடுவிலே’ என்று பாடியிருக்கிறார்.

காவேரி ஸஹ்யாத்ரியில் உற்பத்தியாவதை, அவள் புனிதமான திவ்ய தீர்த்தமானதால் உற்பத்தி என்று சொன்னால் போதாது என்று, அவதாரம் பண்ணினதாகவே ‘அவதரித்து’ என்று உசத்திச் சொல்லியிருக்கிறார்.

அவதாரம் என்ற வார்த்தையைப் போட்டாரோ இல்லையோ, அவருக்கு ரங்கநாதனின் அவதாரமான ராமசந்த்ரமூர்த்தியிடமே மனஸ் போய்விட்டது! ஸந்தர்பவசாத் அவர் ரங்கநாதனைப் பாடும்படி ஏற்பட்டாலும் அவருக்குப் பிடிமானம் என்னவோ ராமனிடம், ராம கதையிடம்தான்! அதனால், ‘பல்லவி – அநுபல்லவிகளில் க்ஷேத்ர மூர்த்தியைப் பிரஸ்தாவித்தாயிற்று; அது போதும்’ என்று சரணத்தில் இஷ்ட மூர்த்தியான ராமனுக்கே, பாலகாண்டம் தொடங்கி அவன் கதைக்கே, போய்ப் பாட ஆரம்பித்து விட்டார்!

வியங்கியமான (மறைமுகமான) நிந்தா ஸ்துதியும் இங்கேயிருந்துதான் ஆரம்பம். இஷ்டமானவர்களிடந்தானே ஸ்வாதீனம்?

கோசிகன் சொல் குறித்ததற்கோ?

கோசிகன் என்பது குசிக வம்சத்தில் பிறந்ததால் விச்வாமித்ரருக்கு ஏற்பட்ட பெயர். ராமர் அவதார காரியமாக முதல் முதலில் பண்ணினது விச்வாமித்ரர் சொல்படி தாடகை மேலே பாணம் போட்டதுதான். ‘அப்படிப் பண்ணும்படி பெரிய மஹர்ஷி சொல்லி விட்டார். ஆனாலும் ஸ்த்ரீ ஹத்தி கூடவே கூடாது என்று சாஸ்த்ரமாச்சே!’ என்று ராமர் தயங்கத்தான் தயங்கினார். தர்ம விக்ரஹம் என்றே பெயர் வாங்கப் போகிறவரில்லையா, அதனால்! அந்தக் கோசிகரோ, “லோகத்துக்குப் பெரிய உத்பாதத்தை உண்டாக்குபவர் விஷயத்தில் ஸ்த்ரீ-புருஷ பேதமெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. போடு இவள் மேல் பாணம்!” என்றார். விநய விக்ரஹமுமான ஸ்வாமி மறுக்க முடியாமல் அப்படிப் பண்ணி விட்டார்.

அப்போது பண்ணினாரே தவிர அப்புறம் மனசு ஸமாதானமாகவில்லை. ‘தர்மத்தில் ‘இப்படியா, அப்படியா?’ – சொல்லமுடியாத ஒரு இரண்டும் கெட்டான் விஷயத்தில், தர்மஸங்கடம் என்பதில், எதுவோ ஒன்றைப் பண்ணிவிட்டோம். அதுதான் ஸரி என்று அடித்துச் சொல்ல முடியாது போலிருக்கே!’ என்று ரொம்பவும் வியாகுலப்பட்டார்.

தீராத வியாகுலம் என்றால் அதைத் தீர்க்கமுடியாவிட்டாலும் ஏதாவது தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்கிப் போய் மறக்கவாவது செய்வோம் என்று தோன்றும் – இல்லியா?

“அப்படி ஏதோ சாப்பிட்டுவிட்டுத்தான் பள்ளி கொண்டு விட்டாயோ?” என்று கேட்கிறார். அதுதான் ‘கோசிகன் சொல் குறித்ததற்கோ?’

அந்தச் சொல்லை இவர் ‘குறித்தது’, அதாவது consider பண்ணியது, பண்ணி வியாகுலப்பட்டது பின்னாடி. அப்போது உடனே பாணம்தான் போட்டார். அது குறி தப்பாமல் ராக்ஷஸியின் குலையிலே தைத்து அவள் ப்ராணனை விட்டு விழுந்தாள். “அந்த மாதிரி வேகமாக பாண ப்ரயோகம் பண்ணின ஆயாஸத்தில் அசந்து (அயர்ந்து) போய்த்தான் படுத்துக் கொண்டாயோ?” என்று அடுத்த கேள்வி:

அரக்கி குலையில் அம்பு தெறித்தற்கோ?

வில் நாணைத் தட்டிப் பார்த்து அதன் பிகு தெரிந்து கொண்டு பாணம் போடுவதுதான் ‘தெறிப்பது’.

ராமர் அநாயஸமாக, மலர்ந்த புஷ்பமாக இருந்து கொண்டேதான் மஹாஸ்திரங்களையும் போட்டது. பக்தியின் ஸ்வதந்திரத்திலும், கவிக்கு உள்ள ஸ்வதந்திரத்திலும் அவரை வேறே மாதிரியாகச் சொல்லிக் கவிராயர் சீண்டுகிறார்! அதையும் அவர் ரஸிக்கத்தான் ரஸிப்பார் என்று தெரிந்தவராகையால்!

பள்ளி கொண்டதற்கு இது காரணமில்லையென்றால்,

ஈசன் வில்லை முறித்ததற்கோ?

என்று இன்னொரு ‘பாஸிபிள்’ காரணத்தை அடுத்த கேள்வியாகக் கேட்கிறார். ஸீதையை விவாஹம் செய்து கொள்ளப் பிரியப்படுபவன் தம்மிடமிருந்த ருத்ர தநுஸை நாண் பூட்டிக் காட்ட வேண்டும் என்று ஜனகர் நிபந்தனை போட்டிருந்தார். ராமருக்கு ஒன்றும் கல்யாண ஆசையில்லை; என்றாலும் விச்வாமித்ரர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அந்தப் பந்தயத்திற்குப் போனார். போனவர் ஒரு வேகம் பிறந்து, வெறுமனே நாண் பூட்டிக் காட்டாமல் அந்த தநுஸையே உடைத்து விட்டார்! ‘அத்தனை வேகம் காட்டினது தான் பிற்பாடு உன்னை tired ஆக்கித் தூக்கம் போட வைத்து விட்டதா?’ என்று கேட்கிறார்.

அதுவும் இல்லையென்றால்,

பரசுராமன் உரம் பறித்ததற்கோ?

அப்புறம் பரசுராமர் – க்ஷத்ரிய வம்சத்தைப் பூண்டோடு அறுப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டவர் – வந்தார். ராமரிடம், “நீ உடைத்த ருத்ர தநுஸ் ஏற்கெனவே மூளியானதுதான். அந்த ஓட்டை வில்லை முறித்தது ஒன்றும் பெரிசில்லை. இதோ என்னிடம் மூளி, கீளி ஆகாத விஷ்ணு தநுஸ் இருக்கிறது. இதை நாண் பூட்ட முடியுமா, பார்! பூட்டாவிட்டால் உன்னை விடமாட்டேன்!” என்று ‘சாலஞ்ஜ்’ பண்ணினார். ராமருக்கு அதுவும் ஒரு பெரிய கார்யமாக இல்லை. பரசுராமர் கொடுத்த விஷ்ணு தநுஸையும் சிரமப்படாமலே நாண் பூட்டினார். அதோடு, பரசுராமரால் நடக்கிற க்ஷத்ரிய வம்ச நாசத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென்று நினைத்து அவருடைய சக்தி முழுதையும் கவர்வதையே குறியாகக் கொண்டு பாணப் பிரயோகமும் பண்ணி விட்டார்! அந்த முன்னவதாரக்காரர் தம்முடைய பின்னவதாரக்காரரிடம் தம்முடைய சக்தி முழுதையும் இழந்துவிட்டுத் தம்முடைய ஸம்ஹார கார்யத்தை ஸமாப்தி பண்ணினார்.

அவருடைய சக்தியை ராமர் கவர்ந்ததுதான் ‘பரசுராமர் உரம் பறித்தது’ என்று பாட்டில் வருவது.

‘சக்தி போனால் ஓய்ந்து போய்ப் படுக்கலாம். ராமருக்கோ சக்தி கூடியல்லவா இருக்கிறது? பின்னே ஏன் படுத்துக்கணும்?’ என்றால்:

அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விட்டால் அதை ஜீர்ணிப்பதிலேயே சோர்வு ஏற்பட்டுத் தூக்கம் தூக்கமாகத் தானே வருகிறது? ராமருக்கு ஏற்கனவே மஹாசக்தி. இப்போது இன்னொரு அவதாரத்தின் பெரிய சக்தியையும் சாப்பிட்டிருக்கிறார். ‘இப்படிச் சக்திச் சாப்பாட்டில் அமிதமாகப் போனதில்தான், சோர்வு உண்டாகித் தூங்கிவிடலாம் என்று பள்ளி கொண்டீரா?’ என்றே கவிராயர் கேட்கிறார்.

இன்னும் ஒரு காரணம் – கேள்வி:

மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன்

வழிநடந்த இளைப்போ?

’குற்றம் குறையே இல்லாத சுத்தையான ஸீதையுடன் காட்டுக்கு நடந்து போனாயே! அதிலே ஏற்பட்ட களைப்பினால் இளைப்பாறுவதற்கே பள்ளிகொண்டாயா?’

‘இளைப்பு’ என்றால் ஒல்லியாய்ப் போவது மட்டுமில்லை. சோர்ந்து, ஓய்ந்து போவதும் இளைப்புத் தான். அதைப் போக்கிக் கொள்வதையே ‘இளைப்பாறுவது’ என்கிறோம்.

இதற்கு மேலே, வனவாஸ காலத்திலே நடந்தவை ஸம்பந்தமாகக் கேட்கிறார்.

தூசிலாத குஹன் ஓடத்திலே கங்கைத்

துறை கடந்த இளைப்போ?

‘வேடனாயிருந்தாலும் உடம்பிலேதான் தூசி, மனஸு தூசி படாத பரம நிர்மலம் என்று இருந்த குஹனின் ஓடத்தில் கங்கையைத் தாண்டிப் போனாயே! அப்போது ஜிலுஜிலு என்றுதான் இருந்ததென்றாலும் ரொம்ப நாழிப் பிரயாணம், ஒரே மாதிரியான துடுப்போசையை மட்டும் கேட்பது ஆகியவற்றில் ஏற்பட்ட ’bore’-ல்தான், monotony-ல்தான் தூங்கினாயா?

மீசரம் ஆம் சித்ரகூட சிகரத்தின்

மிசை கிடந்த இளைப்போ?

’மீசரம்’ என்றால் உயர்ந்தது. ‘ரொம்ப உயரமான சித்ரகூட சிகரத்துக்கு ஏறிப் போய், அந்த சிரமத்தில் அங்கே அப்படியே கிடந்தாயே, அப்போது பிடித்த தூக்கம்தான் இன்னும் விடவில்லையா?’

காசினி மேல் மாரீசன் ஓடிய

கதி தொடர்ந்த இளைப்போ?

’காசினி’ என்றால் பூமிதான். இங்கே கரடும் முரடுமான காட்டு நிலம் என்று அர்த்தம் பண்ணிக்கணும். அப்படிப்பட்ட ‘காட்டு வழியிலே மாரீச மான், மானுக்கே உரிய வேகத்தோடு ஓடினபோது அதற்கு ஈடுகொடுத்துத் தொடர்ந்து போனாயே! அந்தச் சோர்வுதான் படுக்கையில் தள்ளிற்றா?’

அதற்கப்புறம் சின்னச் சின்னதாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகிறார்! பாட்டு வேக வேகமாக ஓடுகிறது!

‘மாரீச மானைத் தொடர்ந்து போனது, முதலில் ஓட்டமும் நடையுமாக, அப்புறம் அந்த ‘நடை’ கூடக் கூடாதென்று ஒரே ஓட்டமாக ஓடினாய்! அதிலே ஏற்பட்ட களைப்பில்தான் தூக்கமா?’ என்று இத்தனை ஸமாசாரத்தை,

ஓடிக் களைத்தோ?

என்று சின்ன வாசகமாக்கிக் கேட்கிறார்.

தேவியைத் தேடி இளைத்தோ?

’அப்படி இங்கே நீ மாரீசன் பின்னே ஓட, அங்கே உன் பர்ணசாலைக்கு ராவணன் வந்து ஸீதா தேவியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டானே! நீ அவளைத் தேடு தேடு என்று தேடி அலைந்தாயே! அந்த அசர்வா (அயர்வா)?’

மரங்கள் ஏழும் தொளைத்தோ?

’அதற்கப்புறம் ஸுக்ரீவனுடன் ஸக்யம் பண்ணிக் கொண்டு (நட்புப் பூண்டு) அவனுக்கு சத்ருவான அண்ணன் வாலியை வதம் செய்வதாக வாக்குக் கொடுத்தாய். அந்த மஹா பலிஷ்டனை ஜயிப்பதற்கான பலம் உனக்கு இருக்குமா என்று ஸுக்ரீவன் ஸந்தேஹப் பட்ட போது அதை (நி)ரூபித்துக் காட்டுவதற்காக, பர்மா teak (தேக்குமரம்) மாதிரி பெரிய சுற்றளவுடன் வரிசையாக நின்ற ஏழு மராமரங்களையும் துளைத்துக் கொண்டு போகும்படி பாணத்தைப் போட்டுக் காட்டினாய்! அத்தனை விசையோடு நாணை வலித்தது, உனக்கே ரொம்பவும் வலித்துத்தான் படுக்கை போட்டு விட்டாயா?’

கடலைக் கட்டி வளைத்தோ?

”லங்கைக்குப் போவதற்காக ஸமுத்ரத்துக்கே அணை கட்டுகிற பெரிய கார்யம் பண்ணினாயே! யஜமானனாக உட்கார்ந்து கொண்டு உத்தரவு போடாமல் உன்னுடைய உத்தம் குணத்தினால் நீயும் வானரப் படையோடு சேர்ந்து கல்லு, மண்ணு தூக்கி அந்தக் கார்யத்தில் ஈடுபட்டாயே! அதில் ஏற்பட்ட சோர்வுதான் காரணமா?”

அப்புறம் பெரிய வாசகமாகவே இரண்டு கேள்வி கேட்டு – ஏகப்பட்ட கேள்விதான் கேட்டாச்சே! – அதோடு முடித்து விடுகிறார்.

இலங்கை எனும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?

ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?

லங்கைக்குப் போனபின் ஊருக்கு வெளியிலே வானர ஸேனை ராக்ஷஸ ஸேனையோடு போர்க்களத்தில் யுத்தம் செய்ததோடு நிற்காமல், ஊரெல்லைக்குள்ளே போய் அதன் கோட்டை கொத்தளம் முதலானவற்றை இடித்துத் தூள் பண்ணின. அப்போது பதிநாலு வருஷ வனவாஸத்திற்கு ஒப்பி வாக்குக் கொடுத்திருந்த ஸ்வாமி தர்ம விக்ரஹமானபடியால் தாம் நகரப் பிரவேசம் பண்ணப்படாது என்று ரணகளத்தில் பாசறையிலேயே இருந்தார். அப்போது மட்டுமில்லை. இதற்கு முந்தி அவரே வாலிவதம் பண்ணி, ஸுக்ரீவன் கிஷ்கிந்தா ராஜ்யத்திற்கு ராஜாவாகும்படிப் பண்ணியிருந்த போதிலும், தாம் அந்த ஊருக்குள் போய் அவனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணி வைக்காமல் காட்டிலேயே தான் இருந்தார்; லக்ஷ்மணரைத்தான் பட்டாபிஷேகம் பண்ண அனுப்பி வைத்தார். பிற்பாடு அவர் ராவண ஸம்ஹாரம் பண்ணியதாலேயே விபீஷணன் லங்கா ஸாம்ராஜ்யாதிபதியாகப் பட்டாபிஷேகம் பெற்றுக் கொண்ட போதும் அதையேதான் செய்தார். அப்படித் தம்மைத் தாமே, தர்மத்தை அலசிப் பார்த்து அவர் கட்டுப் படுத்திக் கொண்ட உசத்தியால்தான் இன்றைக்கும் அவரை லோகம் தர்மமூர்த்தி என்று கொண்டாடுகிறது….

லங்கையை வானரங்கள் இடித்தபோது அவருக்கு இரண்டு தினுஸில் வருத்தம். தாமும் அவர்களோடு உடலை வருத்தி ஸஹாயம் பண்ண முடியாமல் தர்மம் கட்டுப் படுத்துகிறதே என்பதில் அவருடைய மனசு வருத்தப் பட்டது ஒன்று. ரொம்ப அழகாகவும், பெரிசாகவும் மயன் நிர்மாணம் பண்ணிக் கொடுத்திருந்த லங்காநகரத்தையும், அந்த நகரவாஸிகள் பண்ணின தப்புக்களுக்காக யுத்தத்தின் அவசியத் தேவையை முன்னிட்டு, இடிக்கும்படி இருக்கிறதே என்ற வருத்தம் இன்னொன்று. “அதை மறக்க ‘ஸ்லீப்பிங் டோஸ்’ போட்டுக் கொண்டாயா?” என்று பழைய கேள்வியை மறுபடியும் அதே மாதிரி மறைமுகமாகப் போடுகிறார்.

அதோடு, ராமர் சரமாரியாக பாணம் போட்ட மாதிரியே தாமும் அவர் மேல் கேள்விக் கணை மாரி போட்டாயிற்று என்று கவிராயர் ‘ஃபீல்’ பண்ணினார். கடைசியாக ஒரே ஒரு கேள்வி ராம குண மேன்மையைத் தெரிவிப்பதாகக் கேட்டு முடித்து விட்டார்:

ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?

முதலில் ராவணாதிகள் பண்ணின அக்ரமத்திற்காக அழகான லங்கா பட்டணத்தை த்வம்ஸம் செய்வானேன் என்று ராமர் வருத்தப்பட்டார். அப்புறம் அவர்களையெல்லாம் ஹதாஹதம் செய்து, வீரராகவன் என்றே எல்லாரும் புகழும்படி நின்றபோதோ அவருக்கு உள்ளூர, “இந்த அக்ரமக்காரர்களைக் கூட ஏன் வதம் பண்ணியிருக்க வேண்டும்? அவர்களிலும், ராவணன் உள்பட, மஹா பலம், வீரம், யுத்த சதுரம், அஞ்சா நெஞ்சம், விட்டே கொடுக்காத உறுதி, நல்ல வேத பாண்டித்யம், ஸங்கீதத்திலே அபாரத் தேர்ச்சி – என்றிப்படி சிறப்புக்களைப் பெற்றிருந்தவர்கள் இருந்தார்களே! அவர்களுடைய மனசு திருந்தும்படிச் செய்ய முடியாமல் வதம் அல்லவா பண்ணும்படியாயிற்று?” என்று வருத்தம் ஏற்பட்டது.

பரம சத்ருவிடம் இப்படிப்பட்ட கருணையுள்ளம் படைத்த உச்சாணியில் ராமரைக் காட்டியதே அவருடைய பட்டாபிஷேகத்தைப் பாடின மாதிரி என்று அதோடு கவிராயர் முடித்து விட்டார்.


Listen now...

Kavi 041-En_palli_kondir-Mohanam_Adi_MLV-ArunachalaKavi A Kavi 041-En_palli_kondir-Mohanam_Adi_MLV-ArunachalaKavi.mp3

Part II..

A Kavi-042-En palli kondir-Mohanam-MLV-Adi ArunachalaKavi.mp3

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

Re: Kanchi Maha Periyava

Post by grsastrigal »

This One of many amazing segments of this website. No words to express my sincere pranAms to the contributors of this segment.

Today being Sri.Ramanavami, another article by Sri.MahaPeriava

14 வருஷம் கேட்டுப் போகாத பட்சணம் – மகா பெரியவா சொன்ன கதை

அனைவருக்கும் தெரிந்த ராமாயணத்தை உதாரணக் கதையோடு சொல்லி, ஸ்ரீராமரை நம் நெஞ்சில் அமர்த்தி, ஒரு தர்மபட்டாபிஷேகமே நடத்துகிறார் ஸ்ரீமஹா ஸ்வாமிகள். எங்கே… மகா பெரியவா சொல்வதைக் கேட்போமா?

‘ராமன்‘ என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக- துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி, வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ஸ்ரீராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், ‘இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ஸ்ரீராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்ந்தான்.

‘ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ஸ்ரீராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?’ என்று கேலி செய்து கேட்டவர் களும், எழுதியவர்களும் இருக்கிறார்கள். இவர்கள், ஸ்ரீராமன் இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மனுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்…
ஒரு நாடகம் நடக்கிறது. அதில் லவ- குசர்களை வால்மீகி, ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ஸ்ரீராமராக வேஷம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ- குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து, ‘இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, ‘இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள்தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்?
வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்கவேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித்தான் மனுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு, தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா, தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி, கௌசல்யாதேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைத்தான் கட்டிக்கொடுத்தாள். ‘ராகவா… நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள். தனது என்ற விருப்பு- வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதேபோல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ஸ்ரீராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான்.

‘அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமனோ, யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும், அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.
சாக்ஷாத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ‘ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.’
ஆஹா… எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவா?
–நன்றி சக்தி விகடன்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

"வீட்டுவைத்தியமா?" அல்லது "சீட்டு வைத்தியமா?"

[நெட்டில் படித்தது]

ஸ்ரீமடத்தில் பக்தியுள்ள குடும்பம். அக்குடும்பத்தின் ஒரு வயோதிகருக்கு பாரிச வாயு வந்து, வலது பக்கம் முழுதும் செயலற்றுப் போனது. மருந்து சுமாரான பலன் குடுத்தது. பேச்சு வரவில்லை. ஞாபக சக்தியும் சரியாக இல்லை. அவருடைய மனைவி பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டு பிரார்த்தித்தாள்...."பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும். அவருக்கு பூரணமா குணமாகணும்".

பெரியவா ஒரு நிமிஷம் மெளனமாக இருந்தார். அப்புறம் அந்த அம்மாவிடம் " சரி. அவருக்கு ஒடம்பு சரியாகணும்னா.......என்ன வேணா செய்வியா?"

"என்ன செலவானாலும் பரவாயில்லே பெரியவா"

"அதில்லே...........நான் சொல்லறதா வெளையாட்டா எடுத்துக்க மாட்டியே?"..........

"மாட்டேன்......என்ன சொன்னாலும் செய்யறேன்"

"சீட்டுக்கட்டு ரெண்டு வாங்கி, எப்பவும் அவர் கண்ணுல படறமாதிரி வெச்சிடு. .......கொஞ்சம் கொஞ்சமா நெனவு திரும்பிடும்"

பக்கத்திலிருந்த எல்லாருக்குமே ஆச்சரியம். ஒண்ணும் புரியவில்லை. விநோதமாக இருந்தது! அந்த அம்மாவுக்கோ......தன் கணவர் எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? சீட்டுக்கட்டு கண்ணுல பட்டுண்டு இருந்தா ஒடம்பு சரியாயிடுமா? ஆச்சர்யமாக இருந்தது. பெரியவா சொன்னபடி செய்தாள்.

சில நாட்களில் சீட்டாட்டக்காரருக்கு நினைவு திரும்பியது! பேரன் பேத்திகளோடு சீட்டு விளையாட ஆரம்பித்து, ஒருநாள் "இஸ்பேட்டுக்கு பதிலா ஆட்டின் போடறியேடா!!!!" என்று பேரனை அதட்டினார்! ஆம். பேச்சும் வந்துவிட்டது!

இந்த சீட்டுப் பைத்தியத்துக்கு பெரியவா கொடுத்தது "வீட்டுவைத்தியமா?" அல்லது "சீட்டு வைத்தியமா?"

எப்படியிருந்தாலும் "துருப்பு" அவர் கையில்தான்


http://sskrishnan.blogspot.in/2012/01/1.html

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

காஞ்சிப் பெரியவருடன்…. — பம்பாய் சகோதரிகள் சி.சரோஜா – .லலிதா
===============================================

கேரளாவின் திருச்சூரில் பிறந்து, பம்பாயில் வளர்ந்து இசை பயிலச் சென்னைக்கு வந்து, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இசைப் பணி ஆற்றி வருபவர்கள் பாம்பே சிஸ்டர்ஸ் எனப்படும் சி.சரோஜாவும், சி.லலிதாவும். தமிழிசைச் சங்கம் வழங்கும் உயரிய விருதான ‘இசைப் பேரறிஞர்‘, தமிழக அரசின் ‘கலைமாமணி‘, ‘மதுரகான மனோரஞ்சனி‘, ‘கந்தர்வ கான ஜோதி‘, ‘சங்கீத கலா சாகரம்‘, நியூயார்க் தமிழ்ச் சங்கம் வழங்கிய ‘தமிழ்க் கலைவாணி‘ உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கும் இவர்களுக்கு, ஸமீபத்தில் மகுடமாக ‘சங்கீத கலாநிதி‘ விருதும் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் சீசன் கச்சேரிகளில் பிஸியாக இருந்த போதிலும், தென்றலுக்காக ஒரு மாலை நேரத்தை ஒதுக்கி உரையாடினர். (சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்) அதிலிருந்து….

கே: காஞ்சிப் பெரியவர் உட்பட, பல மகான்களைச் சந்தித்திருக்கிறீர்கள் அல்லவா ?
ப: ஆம். பல தடவை. நாங்கள் சின்னவர்களாக இருந்த போது, ஒரு முறை பெரியவர் மைலாப்பூர் சம்ஸ்க்ருதக் கல்லூரியில் தங்கியிருந்தார். அப்போது எம்.எஸ். அம்மா வந்து பாடினார். எல்லோரும் பாராட்டினார்கள். எப்போது பெரியவர் முன்னால் நாம் பாடுவோம் என்று அந்தச் சிறு வயதில் அடிக்கடி நினைத்து ஏங்கித் தவித்திருக்கிறோம். பின்னால் பெரியவர் ஜெயந்தியின் போதும், மற்ற பல நிகழ்ச்சிகளிலும் பாடியிருக்கிறோம். ஆனால் அதில் ஒரு ஒரு நிகழ்ச்சியை மட்டும் எங்களால் மறக்கவே முடியாது.

கே: என்ன அது ?
ப: ஒரு முறை தரிசனத்திற்காக நாங்கள் காஞ்சிபுரம் சென்றிருந்தோம். ஜெயேந்திரர் பூஜை செய்து கொண்டிருந்தார். பெரியவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது நாங்கள் அவர் முன்னால் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதைச் சொன்னோம். ஆனால், அங்குள்ளவர்களில் ஒருவர் பூஜை நடந்து கொண்டிருப்பதால் பாடக் கூடாது என்று சொன்னார். உடனே அதைக் கேட்ட பெரியவர் தலையை அசைத்து, எங்களைப் பாடுமாறு பணித்தார். நாங்களும், சந்தோஷத்துடன் ஒரு பாடலைப் பாடினோம். நாங்கள் பாடி முடித்ததும், பெரியவர் அவர் கழுத்தில் போட்டிருந்த ஏலக்காய் மாலைகளைக் கழற்றி ஆளுக்கு ஒன்றாக எங்களுக்குத் தந்தார். அதை ஒரு மிகப் பெரிய பாக்கியமாக நாங்கள் கருதுகிறோம். இப்போதும் அதை பூஜை அறையில் வைத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல. பின்னால் காஞ்சி காம கோடி பீடத்தின் ஆஸ்தான விதூஷிகளாகவும் நாங்கள் நியமிக்கப்பட்டோம்.



–நன்றி தென்றல் மாத இதழ் (Feb, 2011)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

கடல் கடந்து போவது…

Maha Periyavaa May 27, 2013 Balhanuman




பிராம்மணர்கள் கடல் கடந்து போவது ஆசாரகாவலரான ஆசார்யனுக்கு உகந்ததல்ல என்று அறிந்த ஒரு அந்தண அடியார், சீமை சென்று திரும்பிய பின், அங்கும் தமது ஆசாரங்களை வழுவாது பின்பற்றியதை பெரியவாளிடம் தெரிவித்தால் அதை அவர்
ஏற்று கொள்வார் என்று எண்ணினார்.

“இங்கிலாந்தில் கூட விடாமல் அமாவாசை தர்ப்பணம் பண்ணினேன்”

“அதாவது…..நீ போனது போறாதுன்னு, ஒன்னோட பித்ருக்களையும் சீமைக்கு வரவழைச்சுட்டியாக்கும்?” என்று சிரித்துகொண்டே ஒரு வெட்டு வெட்டினார் பெரியவா!

**

ஒருமுறை திருமதி M S ம் திரு சதாஸிவமும் கச்சேரிக்காக வெளிநாடு
சென்றுவிட்டு திரும்பியதும் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்கள். பூஜை
முடிந்து எல்லாருக்கும் தன் கையாலேயே தீர்த்தம் குடுத்துக்
கொண்டிருந்தார் பெரியவா. அந்த வரிசையில் சதாஸிவத்துக்கு பின்னால் திரு
ரா.கணபதி நின்று கொண்டிருந்தார்.

சாதாரணமாக கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணனுக்கு பெரியவா தன்
கையால் சந்திரமௌலீஸ்வரர் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்ர விரோதமாகையால்
சதாசிவத்துக்கு பெரியவா கையால் தீர்த்தம் கிடைக்காது என்பது ரா.கணபதிக்கு
நிதர்சனமாக தெரிந்திருந்தது. ஆனால், சதாசிவத்துக்கு இந்த விஷயம்
தெரியாதாகையால் ரொம்ப சந்தோஷமாக இவரோடு பேசிக்கொண்டே கியூவில் முன்னேறிக்கொண்டிருந்தார்.

ரா.கணபதிக்கு ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. “பெரியவாளே கதி” என்று நகர்ந்து
கொண்டிருந்தார். இதோ! சதாஸிவம் பெரியவா முன்னால் தீர்த்தத்துக்காக கையை
நீட்டிவிட்டார்…….

பெரியவா உத்ரணியை பாத்திரத்துக்குள் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த
தேங்காயை எடுத்து தரையில் தட்டி உடைத்தார்……

“இன்னிக்கி ஒனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” இளநீரை சதாசிவத்தின் கைகளில்
விட்டார்! சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம்! ரா.கணபதிக்கோ
நிம்மதி பெருமூச்சு!

“பாத்தியா? இன்னிக்கி பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷல்..லா தீர்த்தம்
குடுத்துட்டார்!…”

சாஸ்த்ரத்தையும் மீறாமல், பிறர் மனஸ் நோகாமல் தீர்வு காண தெய்வத்தால்
மட்டுமே முடியும்!

Read more: http://periva.proboards.com/thread/4427 ... z2V6tkoP3l

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image


ஜகம் புகழும் ஐயனின் புன்னகை!
கருணை பொழியும் புன்னகை!
மனம் நிறைவுரும் புன்னகை!
பொருள் நிறைந்த புன்னகை!
பாமரரையும் ஈர்க்கும் புன்னகை!
வேதஸ்வரூப புன்னகை!
ஞான புன்னகை!
தெய்வத்தின் குரலுக்கு உகந்த புன்னகை!
நிற்குண ஈசனின் மோகன புன்னகை!
ஜகத் குருவின் நமுட்டு புன்னகை
வேங்கடவன் நான் போற்றும் புன்னகை!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

கண்ணும் தெரியல
காதும் கேட்கல
நாவும் பிழரி போச்சு
நடையும் தளர்ந்து போச்சு
மனத்தில் தெம்பும் விலகி போச்சு
கூறி கொள்ள மனமும் இல்ல
கேட்டு கொள்ள நேரமும் இல்ல
புரிந்து கொள்ள யாருமில்ல...
உறவும் நசிஞ்சு போச்சு
உணர்வும் மங்கி போச்சு
உன் துணையன்றி வேறேதும் இல்லை
வேங்கடவன் எனக்கு!

venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

கண் எடுத்து காண வேண்டாமா
கண்டெடுத்த மாணிக்கத்தை
காஞ்சி நகர் போக வேண்டாமா
ஐயனின் பாத கமல தரிசனம் காண
தெய்வத்தின் குரலை கேட்க வேண்டாமா
கருணாகரனின் லீலைகளை அறிய
விழித்திருக்க வேண்டாமா முக கமல தரிசனம் காண
பார்த்து களிக்க வேண்டாமா நினைவிலும்
கனவிலும் வேங்கடவனின் இதய கமல வாசனை!
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

அதோ அதோ என்று ஒரு ஓசை
இதோ இதோ என்று ஒரு ஓசை
துயரம் நீக்கி அருள் பொழிய
ஓடி உலா வரும் ஐயனின் ஓசை
அடியவர்களை ஈரக்கும் ஓசை
சங்கரா சங்கரா என்றொறு ஓசை
ஹர ஹரா என கூவி அழைக்கும் ஓசை
ஜய ஜயா என்று எழும்பும் ஓசை
ஐயனை மகிழ்விக்கும் மங்கல ஓசை
வேங்கடவன் என்னை சிலிர்க்கவைக்கும் ஓசை

venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

கனவு ஒன்று கண்டேன்
காஞ்சி நகர் வர கண்டேன்
சந்திர முகியுடன் மௌலியும் கண்டேன்
காவி யுடுத்த ஐயனும் இருக்க கண்டேன்
அருள் பொழியும் முகத்தை கண்டேன்
அதில் மயக்கும் புன்னகையும் இருக்க கண்டேன்...
அடியவர் சூழ்ந்து வர கண்டேன்
கையசைத்து கூறி அருள் புரியும் அழகை கண்டேன்
கனவும் கலைந்தது வேங்கடவன்
என் மனமும் நிறைந்தது...
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

A share from a FB friend well bred kannan

The man was a miser of all misers!

He was of course a wealthy man - but would not spend a penny. He had come for Periva's darshan. With his right hand over his mouth, he started to speak emotionally. I have blood pressure & diabetes for a long time. Now, I have been diagonised with cancer too. I am suffering a lot. Periva must please suggest a parikaram (remedy).

"Will you do as I say", asked Periva.

"Certainly", said the man.

"It might be difficult...".

"Never mind. I want to just get rid of these diseases. I will do whatever Periva instructs. All I want is to be cured of this BP, diabetes and cancer......", saying this, he wiped his eyes.

Generally, Periva had compassion towards everyone for no reason at all, and now, this man was in tears. Can Periva let him down?

Periva said, "In the well, there is water. But the well never drinks up the water claiming ownership over it".

Trees bear fruits, but it never says 'this fruit belongs to me. I will only eat it".

"The cow gives milk, but never drinks up its own milk. Several trees and plants yield vegetables, but they keep nothing for themselves".

"As you can see, plants and animals themselves are doing so much paropakaaram (service to others). They say Man has got six senses. So, how much more paropakaaram must he do?

"You have lot of money - but you are neither spending it for yourself, nor are you doing any dharma (good deeds) from it. The sins from your last birth have befallen on you in the form of diseases. If you have to get rid of the sins, you must do a lot of good deeds".

"Have you heard about the dharmam called 'Ishta Purtham?'. Money must be spent in good deeds like digging a well, temple renovation, helping the poor, helping relatives, etc. Also, buy medicines for poor orphans who are sick. When someone asks for something, he must not go empty handed. Is this all clear?"

"You are only a Trustee for the wealth you possess. Never think that you are its owner".

The man started weeping uncontrollably..."

He lived for many years thereafter doing a lot of dharma.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

1961ல் பெரியவா தேவகோட்டையில் முகாம். காஷ்ட மௌனம்! சின்ன அசைவு கூட இல்லாமல் பட்டகட்டை மாதிரி இருந்தார். இது ஒருவாரம், பத்து நாள் என்று நீடித்துக் கொண்டே போனது. பெரியவாளைப் பேச வைக்க, பாரிஷதர்களும், பக்தர்களும் பண்ணின பாச்சா எதுவுமே பலிக்கவில்லை. ஒருநாள் காலை, காரைக்குடியிலிருந்து நகரத்தார் சிலர் பெரியவாளை தர்சித்து, தங்கள் விஞ்ஞாபனங்களை ஸமர்ப்பித்தனர். பெரியவா கேட்டுக் கொள்கிறாரா என்பது கூட தெரியவில்லை. அப்படி சொல்லும்போது, ப்ரபல இசை மேதை அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார் காரைக்குடியில்தான் இருக்கிறார் என்று சொன்னார்களோ இல்லையோ, அத்தனை பேரும் ஆச்சர்யப்படும் வகையில், "அவரை இங்கே அழைச்சிண்டு வர முடியுமா?.." என்று ஜாடையில் கேட்டார் பெரியவா! அன்று மத்யானமே அரியக்குடி பெரியவா முன் ஆஜராகிவிட்டார்! பெரியவாளின் பரம பக்தர் அவர். தனக்காகவே ஜகதாச்சார்யார் தன்னுடைய காஷ்ட மௌனத்தைக் கூட விட்டுவிட்டு, கூப்பிட்டனுப்பி இருக்கிறார் என்று நெஞ்சம் தழுதழுக்க பெரியவாளை நமஸ்கரித்தார்.

தேவகோட்டையில் பெரியவா தங்கியிருந்த இடம் ஒரு யாத்ரிக விடுதியின் பின்பக்கம் உள்ள தோட்டத்தில்தான்! அங்கிருந்த ஒரு சின்ன ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டு இருந்தபடி எல்லாருக்கும் ஜன்னல் வழியாக தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார்

செடியும் கொடியும் புல்லும் மண்டிய பகுதியில் நின்று கொண்டுதான் பெரியவாளை தர்சனம் பண்ணவேண்டும். மொஸைக் தரை சொகுஸுக்காரார்களுக்கு இங்கே கொஞ்ச நேரம் நிற்பது கூட கஷ்டந்தான்! அப்படியிருக்கும்போது அரியக்குடி அங்கே வந்து அந்தக் காட்டுத் தோட்டத்தில், அப்படியே ஜன்னலுக்கு கீழே தண்டனிட்டு எழுந்தார். அத்தனை நாள் காஷ்ட மௌனத்திலிருந்தவர் அரியக்குடியைப் பார்த்ததும், மடை திறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்தார்.

"நீ ராஷ்ட்ரபதி அவார்டெல்லாம் வாங்கினதாக் கேள்விப்பட்டேன். அப்போ ஒனக்கு ரெட் கார்பெட் போட்டு, அதான்....நடை பாவாடையா ரத்னக் கம்பளம் போட்டு பெரிய்...ய்ய சதஸ்ல கௌரவப்படுத்தியிருப்பா! நா....என்னடான்னா....இங்க ஒரே கல்லும் முள்ளுமா ஒரு கீக்கெடத்துல ஒன்னை ஒக்காத்தி வெச்சுட்டேன்! எதுக்கு ஒன்னை கூப்டேன்...ன்னா, 'ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே' இருக்கே.... அதை யாராவுது ஸுத்தமாப் பாடி கேக்கணும்.ன்னு ஒரு ஆசை! ஒம்பேரு காதுல பட்டவொடனே அந்த நெனைப்பு வந்துடுத்து. ஸுத்தமாப் பாடறதுன்னா, ஸங்கீதமும் ஸுத்தமாயிருக்கணும்; ஸாஹித்ய உச்சரிப்பும் ஸுத்தமாயிருக்கணும்; ரொம்பப் பேர் தெலுங்கு, ஸம்ஸ்க்ருத கீர்த்தனங்கள்...ள வார்த்தைகளை விரூபமாக்கிடறா!

பாடறப்போ, ஸங்கீதம் தாளம் இதுகளோட, கூட அர்த்தத்துக்கும் ஹானி இல்லாம எப்டி ஸந்தி பிரிக்கணுமோ, சேக்கணுமோ, அப்டிப் பாடணும்! நல்ல வாக்யேகாராள் க்ருதிகள்..ளாம் இதுமாதிரி ஸுத்தமாப் பதம் பிரிச்சுப் பாடறதுக்கு நிச்சியமா எடம் குடுக்கும். ஆனா, பாடறவாள்ள ரொம்பப் பேர் அர்த்தத்தை கவனிக்காம, ஸங்கீதத்தை மட்டும் கவனிக்கறதால, எழுத்துல இருக்கற பாட்டை காதுல கேக்கறப்போ, விபரீதமா அர்த்தம் குடுக்கும்படியாப் பண்ணிடறா!.....எப்டி...ன்னா? ஒரு உதாரணம் சொல்றேன்..

இந்த ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே..ல ஒரு எடத்ல, "குருகுஹாயாஜ்ஞான த்வாந்த ஸவித்ரே"ன்னு வரது. அதை, "குருகுஹாய, அஜ்ஞான த்வாந்த ஸவித்ரே"ன்னு பிரிஞ்சாத்தான் செரியான அர்த்தம் குடுக்கும். குருகுஹனுக்கு, அஞ்ஞான இருட்டுக்கு ஸூர்யனா இருக்கறவனுக்கு நமஸ்காரம்..ன்னு அர்த்தம். செல பேர் என்ன பண்றான்னா... "குருகுஹாயா.."ன்னு நீட்டீண்டே....போயி, அதை ஒரு தனி வார்த்தை மாதிரி காட்டிட்டு, "ஞான த்வாந்த ஸவித்ரே"ன்னு [சிரித்துக் கொண்டே] ஞான இருட்டுக்கு ஸூர்யன்னு விபரீதமாப் பாடறா!.....

"சங்கராச்சார்யம்" க்ருதி இருக்கே, நீ பாடறியோ என்னவோ, [வீணை] தனம்மா குடும்பத்ல வந்து, செம்மங்குடி சீனு, எம்.எஸ்.கூட பாடறா.....அதுல, "பரமாத்வைத ஸ்தாபன லீலம்"ன்னு வரது. அப்டீன்னா...வெளையாட்டாவே பரம தத்வமான அத்வைதத்த ஸ்தாபிச்சவர்.ன்னு அர்த்தம். பாடறச்சே "பரம அத்வைத ஸ்தாபன லீலம்"ன்னு [பெரியவா தன்னுடைய மதுரமான குரலில் இதை பாடியே காட்டினார்] அந்த "அ" ல அழுத்தங் குடுத்துப் பதம் பிரிச்சுப் பாடினாத்தான் செரியா அர்த்தம் குடுக்கும். நா.....ஏதோ, காமாசோமான்னு பாடறச்சேயே இந்த மாதிரி சங்கீதத்துக்கு ஹானியில்லாம, தாளத்துக்கும் ஹானியில்லாம, அதோட கூட அர்த்தத்துக்கும் ஹானியில்லாம பாட முடியறதுன்னு தெரியறதோல்லியோ? நான் சொன்னவாள்ளாமும் இப்டித்தான் பாடறா. ஆனா, புரிஞ்சுக்காதவா, புரிஞ்சுண்டு பாடணும்ங்கற கவலை இல்லாதவாள்ளாம் "பரமா....."ன்னு அப்டியே.....நீட்டிண்டே போய் "த்வைத ஸ்தாபன லீலம்"ன்னு பாடி, அத்வைத ஆச்சார்யாளை "த்வைத" ஆச்சார்யாளா கன்வெர்ட் பண்ணிடறா....! [வெகு நேரம் சிரித்தார்]

ஸங்கீதத்ல, த்வைத-அத்வைதம்..ன்னு எந்த பேதமும் இல்லே. ஸங்கீதத்ல ஸங்கீதந்தான் முக்யம். ஸாஹித்யம் எதைப் பத்தினதோ, யாரைப் பத்தினதோ...அதைப் பாடறவா மனஸை அந்த ஸங்கீதமே ஐக்யப்படுத்திடறது. அதுனாலதான், நீ... வைஷ்ணவன், இருந்தாலும் ஒங்கிட்ட "ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய" ஒட்டிண்டிருக்கு; இல்லாட்டா, நீ அதுகிட்ட ஒட்டிண்டிருக்கே! ஏதோ ஒண்ணு. அந்த க்ருதி நீ பாடிக் கேட்ருக்கேன்! ஸங்கீத அம்ஸத்ல நீ ஸுத்தம்...ங்கறதுக்கு நான் சொல்ல வேணாம். ஸாஹித்யமும் நீ ஸுத்தமா பாடறே..ன்னு கவனிச்சேன். அதான் ஒனக்கு சொல்லி அனுப்பிச்சேன்!

என் தர்பார்ல கல்லும் முள்ளுந்தான்! பக்கவாத்யம் இல்லாம, தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எத்தனை ஸ்ரமமானாலும் ஸஹிச்சிண்டு, எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு!.." கடல்மடையாகப் பெரியவா பேசி முடித்ததும், அரியக்குடி கடல்மடையாகக் கண்ணீரை பெருக்கி விட்டார். விம்மிக் கொண்டே நெடுஞ்சாண்கிடையாக பெரியவாளை மீண்டும் நமஸ்கரித்தார். அழுகையும், ஆனந்தமும் ஒரு சேர.... "பெரியவா பாடச் சொல்லி, "பெரியவாளுக்கு"ன்னு பாடறதை விட, தாஸனுக்கு எந்தப் பெரிய கௌரவமும் இல்லே. தாஸனையும் ஒரு பொருட்டா நெனைச்சு, வலிஞ்சு வந்து ஒரு ஸந்தர்ப்பம் குடுத்து, பெரியவா அனுக்ரஹிச்சிருக்கற கருணையை என்ன சொல்றதுன்னு தெரியலே! ஸ்ருதி, பக்கவாத்யம் எல்லாத்தையுமே பெரியவாளோட இந்த அனுக்ரஹமே இட்டு நிரப்பணும். "அவ்விடத்ல" எதிர்பாக்கற அளவுக்கு, செரியாப் பாடறதுக்கும், அந்த அனுக்ரஹந்தான் ஸஹாயம் பண்ணணும்" என்று அவர் பாடுவதைப் போலவே அழகாக சொல்லிவிட்டு மீண்டும் நமஸ்காரம் பண்ணிவிட்டு அந்தக் கட்டாந்தரையிலேயே உட்கார்ந்து கொண்டு, பாட ஆரம்பித்தார்.

சுற்றி இருந்தவர்கள் கண்கள் குளமாயின. மஹா மஹா பெரியவா ஒரு சின்னக் குழந்தை மாதிரி "எனக்காகப் பாடறியா?" என்று கேட்ட எளிமையை நினைத்து உருகுவதா? ஸ்ரீ அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஹ்ருதயம் விம்ம பெரியவாளுடைய அனுக்ரஹத்தை வேண்டியதை நினைத்து உருகுவதா? மஹா பக்தரான ஸூர்தாஸ் பாடுவதைக் கேட்க ஆசையோடு அவர் முன் உட்கார்ந்திருக்கும் க்ருஷ்ணனைப் போல், அரியக்குடியின் ஸங்கீதத்தை ரஸித்துக் கொண்டிருந்தார் பெரியவா.

Check out this video on YouTube:

http://youtu.be/Ry_MzAcPyh8

Shared from FB friend Shobha Shankar ..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஒருநாள் விடியக்காலம் ஞான பானுவை தன்னுள் கொண்ட காஞ்சி மடம் மெல்ல விழித்துக்கொண்டிருந்தது. ரம்யமான அதி தெய்வீகமான சூழல். பெரியவாளுடைய விஸ்வரூப தர்சனம் முடிந்து அவரவர் அனுஷ்டானங்களில் மூழ்கி இருந்தனர். தன்னுடைய அணுக்கத் தொண்டர்களிடம் அந்த நேரம் பெரியவா விஸ்ராந்தியாக பேசிக்கொள்ளுவது உண்டு. அன்றும் அப்படியே பொழுது விடிந்தது……

“ஏண்டா……நம்மூர்ல எத்தனையோ ஆயிரக்கணக்கான கோவில் இருக்கு. ஆனா, அந்தக் கோவில்ல இருக்கற அர்ச்சகா எல்லாரும் மூணு வேளை நிம்மதியா சாப்டறாளோ? ….மதுரைவீரனுக்கு ஏதோ கெடச்சதை வெச்சு நைவேத்யம் பண்ற கிராமத்துப் பூஜாரில்லாம் சந்தோஷமா இருக்காளோ? பெருமாளுக்கு பொங்கலையும் புளியோதரையையும் நைவேத்யம் பண்ற பட்டாச்சார்யார் குடும்பமெல்லாம் வயத்துக்கு மூணுவேளை சாப்ட்டுண்டு இருக்காளோ?…..இதையெல்லாம் யாராவுது அப்பப்போ விஜாரிக்கறேளோ?..”

பெரியவா இதுபோல் ஏதாவது விஷயத்தை பீடிகையுடன் ஆரம்பித்தால், அதில் ஆயிரம் விஷயங்கள், அர்த்தங்கள் இருக்கும். எனவே எல்லாரும் “நிச்சயமாக தங்களுக்கு இதெல்லாம் தோன்றியதே இல்லை” என்ற உண்மையை ஒத்துக்கொள்வது போல், பேசாமல் முழித்தார்கள்.

“……ஏன் கேக்கறேன்னா….ஏதோ மூணு நாலு கோவில்ல இருக்கற அர்ச்சகா மட்டும் நன்னா இருந்தா போறாது. பகவானுக்கு சேவை பண்ற எல்லாரும் நன்னா இருக்கணும்னு யோசிங்கோ!..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராமலிங்க பட் என்ற குஜராத்தி ப்ராம்மணர் வந்து நமஸ்கரித்தார். பெரியவாளிடம் மிக மிக ஆழ்ந்த பக்தி கொண்டவர், ஆசாரம் அனுஷ்டானம் கடைப்பிடிப்பவர்கள் லிஸ்டில் இவருடைய பெயர் இருக்கும். சென்னை IIT யில் ப்ரொபஸராக இருப்பவர். நமஸ்காரம் பண்ணியபின் மெதுவாக ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்கலாம் என்று திரும்பி நடந்தவரை, வலக்கையின் நடுவிரலையும்,கட்டைவிரலையும் சேர்த்து போடும் “டொக்” கென்ற பெரியவாளுக்கே உரித்தான சொடக்கு சத்தம் திரும்பிப் பார்க்கவைத்தது. ஆள் காட்டி விரலால் “இங்கே வா” என்று சைகை பண்ணினார். விடியக்காலை தர்சனத்திலேயே ஒருமாதிரி ஆனந்த மயக்கத்தில் இருந்த ராமலிங்க பட், பெரியவா தன்னை அழைத்ததும் திக்குமுக்காடிப் போனார். பவ்யமாக அருகில் வந்து நின்றார்.

“ஒன்னோட ஒருமாச சம்பளத்த எனக்கு குடுப்பியா?…..” குழந்தை மாதிரி கேட்டதும், நெக்குருகிப் போனார் பட். மோக்ஷத்தையே அனாயாஸமாக பிக்ஷையாகப் போடும் தெய்வம், ஒரு மாச சம்பளத்தை கேட்கிறதே! என்று அதிர்ந்து பேச நா எழாமல் நின்றார்.

“என்ன….. யோசிக்கறே போலருக்கு?……ஏதோ, இன்னிக்கு காலங்கார்த்தால ஒன்னை பாத்தேன்னோல்லியோ…..கேக்கணும்னு தோணித்து. கேட்டுட்டேன். குடுப்பியா?…..” மறுபடியும் குழந்தை ஸ்வாமி கேட்டது. வேரறுந்த மரம் மாதிரி பாதத்தில் விழுந்தார் பட்.
“பெரியவா ஆக்ஞை! எங்கிட்டேர்ந்து என்ன வேணுன்னாலும் எடுத்துக்கலாம். இந்த ஜன்மால எனக்கு இதைத் தவிர வேறென்ன ஸந்தோஷம் நிலைக்கப் போறது?…” உடனேயே நாலாயிரம் ரூபாயை பெரியவாளின் திருவடியில் சமர்ப்பித்தார். அவரிடமிருந்த வந்த பணத்தை கொண்டுதான் “கச்சிமூதூர் அர்ச்சகா டிரஸ்ட்” துவங்கப்பட்டு, வருமானம் குறைந்த அர்ச்சகர்கள்,பூஜாரிகளுக்கு இன்றுவரை உதவி செய்துகொண்டு வருகிறது.

டிரஸ்ட் துவங்கியதும் வேதமூர்த்தி என்பவர் ” ஹிந்து” பேப்பரில் விரிவான செய்தியாக எழுதியிருந்தார். பெரியவா அதைப் படித்துப்பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். அப்போது அங்கே வந்த ராகவன் என்ற ஆடிட்டரிடம் “இந்த ஹிந்து பேப்பர்ல வந்திருக்கே….இதை எனக்கு ஆயிரம் காப்பி ஜெராக்ஸ் மெட்ராஸ்ல எடுத்துத் தருவியா?…” குழந்தை ஸ்வாமி கேட்டார். ராகவனுக்கோ சந்தோஷம் தலைகால் புரியவில்லை.உடனே ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு வந்து குடுத்தார்.
“ஜெராக்ஸ் எடுத்ததுக்கு பில் எடுத்துண்டு வந்தியோ?….”
“இல்லே பெரியவா…..ஆத்துல இருக்கும்”

“மெட்ராஸ்ல IIT ல ராமலிங்க பட்…ன்னு ஒர்த்தன் இருப்பான்…அவன்ட்ட அந்த பில்லைக் குடுத்துட்டு காசு வாங்கிக்கோ! ஜெராக்ஸ் போட்டுக் குடுத்ததே நீ பண்ணின பெரிய கைங்கர்யம்…” சிரித்துக்கொண்டே ஆசிர்வதித்தார்...Courtesy...Wellbred kannan

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

பாத கமலம் சரணம்
திருவடி சரணம்
தொண்டர்கள் தொழும் திருவடி
பூஜிக்கும் கமல திருவடி
பஜிக்கும் திருவடி
ஞானாநந்தனின் திருவடி
அறியாமையை அகற்றும் ஐயன் திருவடி
மன களிற்றின் மதத்தை நீக்கும் திருவடி
நற்குண ஈசனின் தாமரை திருவடி
அரவிந்தம் அரும்பும் திருவடி
வேதனை விலக்கும் திருவடி
தீவினை நீக்கும் திருவடி
ஈனர்களை இனியவர்களாக்கும் திருவடி
அருளைப் பெற ஆதர்ச திருவடி
ஒளிரும் மணியாகி அருளுக்கு உருவாகி நின்ற திருவடி
தாளைப் பணியும் வேங்கடவன் போற்றும் திருவடி
venkat k

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

"Did you use the positive or the negative approach?"
===============================

I once went to a place called Vaasangere in Karnataka to have His darshan. He was camping in the mines area which belonged to Sandur Maharaja. Swamigal was a sitting on a tarpaulin along with the other devotees. Annathurai Iyengar was also there with a few students from his Veda Patashala. It was around 10.30 in the night.

The Sandur Maharaja, Maharani and their son were also there. His son was a Reader in the Department of Mathematics at Yale University. He had a PhD degree in Maths. His parents were standing there respectfully before Him but he appeared to be quite casual. Swamigal conversed with the Maharaja and Maharani in Kannada for a while.

After a while He turned towards their son and asked,

"Where do you live? What are you doing?"

"I am a Reader in Maths Dept at Yale University", he replied.

"What have you studied, you have done your PhD in which branch of Maths", He asked.

Their son did not answer for a minute, hesitating to reply as he was unsure if Swamigal could make sense of what he had studied. His father goaded him to reply.

"Quantum Theory.", he said, matter-of-factly.

Swamigal drew a +ve sign on the mud and circled it; He also drew a -ve sign and circled it. Pointing to the two signs Swamigal asked him,

" Did you use the positive or the negative approach in your Quantum Theory PhD thesis study?"

Their son who was a bit indifferent until then, was startled to hear this from Him. He was trembling for words and suddenly became more respectful and replied,

"Positive Approach."

"Why did you not take the Negative Approach, will you do you it later", He asked.

"It is difficult to use the Negative Approach", he said.

Swamigal looked at Annathurai Iyengar and said, "He is saying it is difficult; can you ask the Veda students to recite this particular verse from Rig Veda?", and prompts them with first two words.

The students recited that particular verse for 5 minutes. After this He turned to their son and said, "you must have obtained your PhD in your 24th or 25th year correct?"

"In my 25th year", said he.

"Rig Veda, the verse which you heard now, talks both about the Positive and the Negative approaches", He said.

The son was astonished and requested the students to recite the verse again.

"Are you now thinking that you need not have spent lakhs and lakhs of rupees for your 25 years of education and if only you had studied the Vedas you would have learnt this Truth in just 7 years?!", replied Lord Parameshwara.

*****

I had translated this in March 2012 from Shri Thiruvannamalai Gowrishankar's tamil video interview here at http://www.youtube.com/watch?feature=pl ... Pf_Hcq2HkU

posted by Shri. Panchanathan Suresh in FB

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Share from Giri M Prasanna
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த மகா பெரியவாளின் தீட்சண்யத்தை- தீர்க்கதரிசனத்தை விளக்கும் அந்த நிகழ்வை நம்மோடு பகிர்ந்துகொண்டவர் வைத்தியநாதன். சங்கர பக்த ஜன சபாவின் செயலாளரான இவர், தமது இளவயது முதற்கொண்டே மகா பெரியவாளின் அணுக்கத்தில் இருந்த அடியவர்.

இவரின் சிலிர்ப்பான அனுபவத்தை ஒரு விறுவிறுப்பான கதையாகவே இங்கே காண்போம்…

அது, மாசி மாதத்தின் வைகறைப் பொழுது. மார்கழியில் துவங்கிய குளிர் இன்னும் விட்டபாடில்லை. முகம் தெரியாத இருட்டை, தீவட்டி வெளிச்சத்துடன் ஊடறுத்தபடி, வெண்ணியாற்றின் வடகரை வழியே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பல்லக்கு ஊர்வலம்.

முதலில் பல்லக்கு, அதைப் பின்தொடர்ந்து அடியார் கூட்டம், அவர்களுக்கும் பின்னால் யானை, குதிரை, ஒட்டகப் பரிவாரங்கள் என நகர்ந்த அந்த ஊர்வலம்… மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி தாண்டி நத்தம் என்ற இடத்தை அடைந்தபோது, பல்லக்கின் உள்ளே இருந்து, தண்டத்தால் ஒலியெழுப்பும் சத்தம்! சட்டென்று நின்றது ஊர்வலம்.

அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில். அங்கிருந்து இடமும் வலமுமாக இரண்டு பாதைகள் பிரிந்தன.

மெயின் ரோட்டில் இருந்து இடதுபுறமாகத் திரும்பி பயணிப்பதுதான் திட்டம். ஆனால், பல்லக்கின் உள்ளே இருந்து மீண்டும் தண்டத்தால் தட்டும் சத்தம் கேட்டது. அந்த சமிக்ஞை மூலம், ஊர்வலம் வலப்புறமாகத் திரும்ப உத்தரவாகி விட்டதைப் புரிந்துகொண்டார் மாலி என்ற அன்பர். ஊர்வலம் வலதுபுறமாகத் திருப்பப்பட்டது.

”இது, மண்மங்கலம் போற பாதை ஆச்சே…” – அடியார்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பினார்.

”இப்படிப் போகணும்னு உத்தரவாயிடுச் சுன்னா அதன்படி போயிடணும். நிச்சயமா இதுக்கு ஏதாச்சும் காரண- காரியம் இருக்கும்” – அடியவர் மாலி சொல்ல, அதன் பிறகு எவரிடம் இருந்தும் வேறு கேள்வி எழவில்லை.

மண்மங்கலம் கிராமம் இன்னும் முழுமையாக விழித்துக்கொள்ளவில்லை. அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அம்மாள், திண்ணை மாடத்தில் அகல் விளக்கேற்றி வைத்தார். அப்படியே இன்னொரு விளக்கை பெருமாள் கோயில் வாசற்படியில் ஏற்றிவைத்துவிட்டு வந்து, தனது வீட்டுவாசலில் நீர் தெளித்துப் பெருக்க ஆரம்பித்தார். அதே நேரம்… தூரத்தில் ஏதோ பெரிய ஊர்வலம் வருகிற மாதிரி சத்தம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தவர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். குதிரையும் யானையுமாக பல்லக்கு ஊர்வலம் ஊருக்குள் வந்துகொண்டிருப்பதைக் கண்டு அவர் கண்கள் வியப்பால் விரிந்தன.

மிகச் சரியாக அவரது வீட்டுவாசலை பல்லக்கு நெருங்கியதும், மீண்டும் உள்ளே தண்டத்தின் சத்தம். பல்லக்கு அங்கேயே நிறுத்தப்பட்டது. எத்தனையோ காப்பியங்களிலும் கதைகளிலும் சொல்லி இருக்கிறார்களே, ஆதவனைக் கண்டு தாமரை மலர்ந்ததாக… அப்படியரு அற்புதத்தை அன்று நிஜமாகவே மண்மங்கலம் கிராமம் சந்தித்தது.

உடம்பாலும் வாக்காலும், மனத்தாலும் செயலாலும் தன்னை முழுவதுமாகப் பரம்பொருளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட அந்தத் தெய்வத் தாமரை, மெள்ள பல்லக்கின் திரையை விலக்கித் தன் திருமுகம் காட்ட… அதன்பின்னரே, இன்னும் தாமதிக்கக்கூடாது என்பதுபோல் சட்டென்று மேகத் திரையை விலக்கி, ஆதவனும் தன் ஒளிக்கிரணங்களை அந்தக் கிராமத்தின் மீது வீசி, தெய்வத் தாமரையின் திருவடிகளைத் தொட்டு வணங்கினான்.

ஆமாம்… அந்தக் கிராமம் செய்த புண்ணியம்… மகா பெரியவா என்ற தெய்வக் கமலம், தமது திருவடிகளை அந்த மண்ணில் பதித்துத் திருவருள் புரிந்தது.

வாசல் தெளித்துகொண்டிருந்த பெண்மணி, இப்படியரு தெய்வீக தரிசனத்தைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கண நேரம் ஸ்தம்பித்து நின்றவள், பிறகு சுதாரித்து உள்ளே ஓடி, கணவரிடம் விஷயத்தைச் சொன்னாள். அவரும் எழுந்து ஓடிச் சென்று, நான்கு சொம்பு தண்ணீரைத் தலைக்கு ஊற்றி அவசர அவசரமாகக் குளித்து முடித்து, விபூதி பூசிக்கொண்டு வருவதற்குள், நிறைகுடமும் பூரண ஆரத்தியும் தயார் செய்துவிட்டிருந்தாள் அந்த மாதரசி.

மகாபெரியவாளுக்கு ஆரத்தி எடுத்து, பாத பூஜை செய்து, அவரை வணங்கி வரவேற்றனர் அந்தத் தம்பதி. சில நிமிடங்களில்… வீட்டின் திண்ணையை அலம்பிச் சுத்தம் பண்ணி, கோலம் இட்டு வைக்க, அங்கே பெரியவா அமர்ந்துகொண்டார்.

இதற்குள் குதிரை, யானை பரிவாரங் களின் சத்தம் கேட்டு ஒட்டுமொத்த ஊரும் விழித்துக்கொண்டு அந்த வீட்டின் முன் திரண்டுவிட்டது. பழத்தட்டுக்களுடனும் மலர் மாலைகளுடனும் சாரை சாரையாக வந்து, மகாபெரியவாளை வணங்கினார்கள். யானை, ஒட்டகங்கள் எல்லாம் ஆற்றங்கரைப் பக்கம் ஓட்டிச் செல்லப்பட, மகாபெரியவாளுடன் வந்த அன்பர்கள் ஊருக்குள் தங்க வசதி செய்து தரப்பட்டது.

‘பெரியவா எப்படி இந்தப் பக்கம் வர நேர்ந்தது?’ என்று எல்லோரும் விசாரிக்கத் தொடங்கினார்கள். தகவல் எதுவும் சொல்லாமல் ஸ்ரீமடத்தில் இருந்து இப்படி திடுதிப்பென்று வரமாட்டார்களே என்று அவர்களுக்கு ஓர் ஐயம்!

”நெடுங்கரைப் பக்கம் திரும்பறதாகத்தான் திட்டம். ஆனா, பெரியவா இந்தப் பக்கம் வரச்சொல்லி உத்தரவு பண்ணினார். வந்துட்டோம். ஏதோ முக்கியமான காரணம் இருக்கும்!” என்று அவர்களுக்குப் பதில் சொன்னார் வைத்தியநாதன்.

மகா பெரியவா இரண்டு நாட்களாக மௌனம் அனுஷ்டிக்கிறார்; அவர் எப்போ வேணும்னாலும் மௌனத்தைக் கலைக்கலாம். ஊர்க்காரர்களுக்கு ஆதங்கம் என்னவென்றால்… மகாபெரியவா வருவது முன்னரே தெரிந்திருந்தால், ஊர் எல்லைக்கே சென்று அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றிருக்கலாமே என்பதுதான். ஆனால், தெய்வ சித்தம் என்ன என்று அவருக்குத்தானே தெரியும்!

ஸ்நானம், பூஜை எல்லாம் முடிந்து எல்லோருக்கும் ஆகாரம் ஆயிற்று. மகாபெரியவா பசும்பாலும் உலர் திராட்சையும் மட்டும் எடுத்துக்கொண்டார். மற்றவர்களுக்கு ஒவ்வொருத்தர் வீட்டிலும் இலை போட்டுப் பாயசம், அப்பளம் என்று உணவு பரிமாறினார்கள். அதற்குள் செய்தியை அறிந்து அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஜனங்கள் வந்து சேர்ந்தார்கள். மாசிமாதம் அறுவடை முடிந்த நேரம் என்பதால் மிராசுதாரர்கள், குடியானவர்கள், தொழிலாளர்கள் என்று எல்லோரும் வந்துவிட்டார்கள். தாமரைப் பூ, இளநீர், வாழைத்தார் என்று ஜனங்கள் தாங்கள் கொண்டுவந்ததை பெரியவா முன் சமர்ப்பித்து வணங்கினார்கள். வயதான ஓர் அம்மாள் தினக்கூலி நெல்லை மடியில் கட்டி எடுத்து வந்திருந்தாள். அதை அப்படியே பெரியவா முன்னே கொட்டி, அவரை நமஸ்காரம் பண்ணினாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கணுமே… அப்படியரு சந்தோஷம்! காணிக்கைகளால் அந்தத் திண்ணையே நிரம்பிவழிந்தது.

மகா பெரியவாளிடம் முறையிடு வதற்கு அந்த ஜனங்களுக்கெல்லாம் நிறைய விஷயங்கள் இருந்தன. கல்யாணம் ஆகலை, வீடு கட்ட முடியலை, பாகப்பிரிவினைல சிக்கல்… இப்படி ஒவ்வொருத்தரும் தங்களின் குறையை அவர் முன் சமர்ப்பித்தார்கள். ‘வடக்கே சமயச் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை. ரத்தம் ஆறா ஓடுறது. பெரியவாதான் அமைதி உண்டாக்கி வைக்கணும்.’ – இப்படியும் நிறையக் கோரிக்கைகள்.

மகா பெரியவா எதுவும் பேசவில்லை. எல்லாவற் றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். கை தூக்கி, வந்தவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். சிலருக்கு எலுமிச்சை, துளசி எனப் பிரசாதமும் கிடைத்தது. நேரம் நகர்ந்துகொண்டு இருந்தது. மகா பெரியவாளின் மௌனம் கலையவில்லை. திடீரென மாலியை அருகில் அழைத்து, சைகையால் பேசினார். கைகளால் லிங்கம் போன்றும், கோயில் கோபுரம் போன்றும் அபிநயித்துக் காட்டி, ‘எங்கே இருக்கிறது?’ என்பதுபோல் சைகையால் கேட்டார்.

அதை மாலி புரிந்துகொண்டார். கூட்டத்தைப் பார்த்து, ”இந்த ஊரில் சிவன் கோயில் எங்கே இருக்கு?” என்று கேட்டார்.

அன்பர் மாலியின் இந்தக் கேள்விக்கு, கூட்டத்தில் எவரிடம் இருந்தும் பதில் இல்லை.‘இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?”

அவர்களில் பழுத்த பழமான ஒரு முதியவர் மட்டும், ‘இங்கே ஒரு பெருமாள் கோயில் இருக்கு. அதுபோக, மாரியம்மன் கோயிலும் அய்யனார் கோயிலும் உண்டு. ஊர் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி இங்கே சிவன் கோயில் எதுவும் இருக்கிறதா தெரியலையே?” என்றார். 90 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவருக்கே சிவாலயம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றால், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வழி இல்லையே!

மகா பெரியவா மறுபடியும் ஏதோ சைகையால் கேட்டார்… ‘மேல் கோடியில பெருமாள் கோயில் இருந்தா, கீழ்க் கோடியில சிவன் கோயில் இருந்திருக்கணுமே?”

நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், தற்போது அங்கே சிவாலயம் இல்லை. முன்னொரு காலத்தில் இருந்ததா என்றால், அதுகுறித்தும் அந்த ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அனைவரும் மௌனமாக இருந்தார்கள்.

அந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய தம்பதி அங்கே வந்தனர். தன்னை லத்தீஃப் பாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இஸ்லாமிய அன்பர், தன் மனைவியின் பெயர் மெகருன்னிசா என்றும் தெரிவித்தார். தாம் கொண்டு வந்திருந்த இரண்டு சீப்பு பேயன் பழங்களையும், ரோஜாப்பூக்களையும் மகாபெரியவா முன் சமர்ப்பித்தார்.

அவர்களை தலை முதல் பாதம் வரை ஏற இறங்கப் பார்த்தது நடமாடும் தெய்வம். கருணை மிகுந்த அந்தப் பார்வையில் மெய்ம்மறந்து போனார்கள் அந்த இஸ்லாமிய தம்பதியர். ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, சிலிர்ப்பான அந்தத் தருணத்தில் இருந்து மீண்டு, லத்தீஃப் பாய் பேசத் தொடங்கினார். அற்புதமான ஒரு தகவலை விவரித்தது அவரது பேச்சு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், அங்கே சிவன் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. காலமாற்றத்தில் கோயில் சிதிலமாகி, மண்ணுக்குள் புதையுண்டு போனது. கோயில் இருந்த இடமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலப் பல கைகள் மாறி, இப்போது லத்தீஃப் பாயின் வசம் இருக்கிறது.

‘எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களைக் கவனிச்சுக்கும்போது, கூடவே கோயில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக. ஒரு மரக்கால்கூட குறையாம அளந்து கொடுப்பாக. ‘சிவன் சொத்து குலம் நாசம்’னு அவுகளுக்கு இருந்த அதே நேர்மையையும், நல்ல எண்ணத்தையும், புத்தியையும் எனக்கும் கொடுத்திருக்கான் இறைவன். ஆனாலும் என்ன… எனக்குப் பொறந்த ஒரு பெண் பிள்ளையும் மன வளர்ச்சி இல்லாம இருந்து, பத்து வருஷத்துக்கு முன்னாடி இறந்தும் போச்சு.

சரி… நாம அறிந்தோ அறியாமலோ பாவம் செஞ்சிருக்கோம்போல; அதனால்தான் அல்லா நமக்கு இப்படியொரு தண்டனையைக் கொடுத்திருக்காருன்னு சமாதானம் பண்ணிக்கிட்டோம். காலமும் அப்படியும் இப்படியுமா ஓடிப் போயிடுச்சு. நேத்திக்கு கொல்லைப்பக்கம் மண்ல வேலை செஞ்சுட்டிருந்தேன். அப்ப… மண்வெட்டி ஏதோ கல்லுல பட்ட மாதிரி ‘ணங்’குனு ஓசை கேட்டுச்சு. கவனமா மண்ணை விலக்கிப் பார்த்தால்… பெரிய சிவலிங்கம்! ராத்திரி முழுக்க உறக்கம் வரல்லே சாமி! ‘அல்லா… இப்ப என்ன பண்றது!’ன்னு புரியாம, விசனத்தோட உட்கார்ந்திட்டிருந்தோம். விடிஞ்சதும் தான், சாமி இங்கே வந்திருக்கிறதா பக்கத்துல இருந்த ஜனங்க பேசிக்கிட்டாங்க. உடனே இங்கே ஓடி வந்துட்டோம். இதுக்குமேல நான் என்ன செய்யணும்னு சாமி தான் வழி காட்டணும்.

மனசார என் நிலத்தை எழுதித் தர்றேன். இதுக்காக எனக்கு பணம், காசு எதுவும் வேணாம். முன்னே இருந்த மாதிரியே அங்கே சிவன் கோயில் கட்டிக்கலாம். ஊர் ஜனங்களுக்கு அது பயன்பட்டுதுன்னா, அதனால ஊர் ஜனங்க சந்தோஷப்படுவாங்கன்னா, அதுவே அல்லாவையும் சந்தோஷப்படுத்தும்!” என்று நெகிழ்ச்சியோடு, கண்ணீர் மல்கப் பேசி முடித்தவர், அப்படியே இன்னொரு காரியத்தையும் செய்தார்.

”இந்தாங்க, கோயில் கட்ட எங்களோட காணிக்கையா நூத்தியொரு ரூபாய். முதல் வரவா இதை வாங்கிக்குங்க!’ என்று வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அங்கிருந்த அனைவருக்கும் உடம்பு சிலிர்த்துப் போட்டது.

அதுவரை மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த மகா பெரியவா, புன்னகையோடு சைகையால் அந்த இஸ்லாமிய அன்பரை ஏதோ கேட்டார். அது அவருக்குப் புரியாமல் போகவே, ஒரு சிலேட்டும் பலப்பமும் கொண்டு வந்து மகாபெரியவாளிடம் தந்தார்கள். அவர் சிலேட்டில் எழுதிக் காண்பித்தார்… ‘மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா?’ என்று.

படித்துப் பார்த்த இஸ்லாமிய அன்பர், ”இன்னும் இல்லே சாமி! அதுக்கான பண வசதியை அல்லா இன்னும் எங்களுக்குக் கொடுக்கலை. எத்தனையோ வருஷம் முயற்சி பண்ணியும் மக்கா- மதீனா போகும் பாக்கியம் இன்னும் வாய்க்கலை” என்றார் கண்ணீர் மல்க.

உடனே பெரியவா, வைத்தியநாதன் நின்றிருந்த பக்கமாகத் திரும்பினார். ”இத்தனை உசத்தியான மனுஷர் நிலத்தைத் தரேன்கிறார். அவாளுக்கு நாம எந்த ஒத்தாசையும் செய்ய வேண்டாமா?” என சைகையால் கேட்டார். தொடர்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் சைகையாலேயே உத்தரவு பிறப்பித்தார். பெரியவாளின் விருப்பத்தை அப்படியே கூட்டத்தாரிடம் எடுத்துச் சொன்னார் வைத்தியநாதன்.

அவ்வளவுதான்… ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து ஒரே குரலில் ஒப்புக்கொண்டது… ”அவங்க புனித யாத்திரை போய்வர ஆகற செலவு மொத்தமும் நம்மளோடது!”

அதைக் கேட்டு இஸ்லாமிய தம்பதிக்கு மனம்கொள்ளா மகிழ்ச்சி! அவர்களுக்கு மட்டுமில்லாமல், அங்கிருந்த எல்லோருக்குமாக, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தது மானுட தெய்வம்.

பிறகு, மெள்ள எழுந்த மகாபெரியவா, தூணில் சாத்தியிருந்த தண்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். அப்படியே நடந்து வந்து பல்லக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டார். மீண்டும் ஊர்க்காரர்களைப் பார்த்து ஒரு புன்னகை; கரம் உயர்த்தி ஆசீர்வாதம்!

பரிவாரங்கள் பின்தொடர, பல்லக்குப் புறப்பட்டது.

ஊர்வலத்துடன் வந்த அன்பர் மகாலிங்கம் சொன்னார்… ‘எனக்கு இப்பத்தான் தெரியுது… மகாபெரியவா ஏன் திடீர்னு இந்த ஊருக்கு வர முடிவு பண்ணினார்னு!”

காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஸ்வாமிகள் அரியக்குடியவர்களிடம் கூறினார்: நல்ல குரு சிஷ்ய பரம்பரையில் வந்திருக்கிற ஒன்னோட சங்கீதத்தை நீ நல்லபடியா காப்பாத்திண்டு வரதுல ரொம்ப ஸந்தோஷம். இதே மாதிரி நீயும் நல்ல சிஷ்யாளைத் தயாரிச்சு இந்தப் பாரம்பர்யம் தொடர்ந்து போகும்படியாய்ப் பண்ணணும். வேதம் கத்துண்ட ப்ராமணன் இன்னம் ஒருத்தனுக்காவது அதைச் சொல்லிக் கொடுத்தே தீரணும்னு, ‘அத்யாபனம்’னே அவனுக்குக் கம்பல்ஸரியா ஒரு கடமை கொடுத்திருக்கு. அது எல்லாக் கலைக்கும், சாஸ்த்ரத்துக்கும் பொருந்தும். தான் கற்ற வித்தை தன்னோட போகாம இன்னம் பல பேர்கிட்டப் போகும்படியாய்ப் பண்ணணும்.

ஸங்கீத வித்வான்கள் முக்யமா ஒண்ணு பண்ணணும். தாங்க(ள்) பாடற ஸம்ஸ்க்ருதப் பாட்டு, தெலுங்குப் பாட்டுகளுக்கு அர்த்தம் தெரிஞ்சுண்டு, அர்த்த பாவத்தோட பாடணும். தமிழே போறும்னு சொன்னா ஸரியில்லே. ஸங்கீத நுட்பம், அர்த்த விசேஷம் ரெண்டிலேயும் உசத்தியா மஹா பெரியவா பலபேர் இந்தத் தமிழ் தேசத்துல தெலுங்கிலேயும் ஸம்ஸ்க்ருதத்திலேயும் நூத்துக்கணக்காகப் பாட்டுக்களைக் கொட்டிட்டுப் போயிருக்கா. அதெல்லாம் வேண்டாம்னு தள்றது நமக்குத்தான் நஷ்டம். தமிழிலேயும் நிறையப் பாடட்டும். மத்த பாஷையிலேயும் பாடட்டும். ‘அர்த்தம் தெரியலையே’ன்னா தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சுக்கறது கஷ்டமேயில்லை. நமக்கா இஷ்டம் இருந்தா ஆகாத போகாத ஸமாசாரங்களுக்கெல்லாம் எத்தனை ஒழைச்சுத் தெரிஞ்சுக்கறோம்? சுத்தமான ஸங்கீதம், ஒசந்த அர்த்த விசேஷம் – இதுகளுக்கே வித்வான்கள் ‘டெடிகேட்’ பண்ணிண்டா பாஷை குறுக்கே நிக்காது. இதுக்கெல்லாம், ஸங்கீத உலகத்துல இப்ப முதலா இருக்கிற நீ ஒன்னாலானதைப் பண்ணு. அநுக்ரஹ பலம் உனக்கு சக்தி கொடுக்கட்டும்.”

அரியக்குடி நாத்தழுதழுத்து, என் ஆயுஸில் இன்றைவிட நான் பெரிய பாக்கியம் அடைந்ததில்லை” என்று கூறி விடைபெற்றார்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

–நன்றி கல்கி

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

உன் கண்ணில் நீர் வழிந்தால்........

மனஸை நெகிழவைக்கும் பெரியவா பேரருள்---- brimming with tears !!!

பெரியவா சாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட, இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ ஆறுதலோ சொல்லுவது வழக்கம். ஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார். எனவே சிப்பந்திகள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது…….

“நான் பெரியவாளை தர்சனம் பண்ணனும்” குரல் கேட்டு யாரென்று பார்த்தால், ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில் நின்று கொண்டிருந்தான்.

“இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது……..சாப்டுட்டு ஒரு பக்கமா இங்கியே படுத்துக்கோ….காலேல தர்சனம் பண்ணு” பாரிஷதர் சொன்னார். இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன் வந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாது. சிறுவன் விடுவதாயில்லை.

“எனக்கு இப்போ பசிக்கலை…பெரியவாளை மட்டும் எப்பிடியாவது தர்சனம் பண்ணனும் அண்ணா…” என்று சொல்லிவிட்டு, மிகவும் களைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். மறுநாள் காலை பெரியவா சிறுவனை தன்னிடம் அழைத்தார்.

“ஏம்பா….எங்கேர்ந்து வரே? ஓம்பேரென்ன? ஒங்கப்பா அம்மா யாரு? எங்கேயிருக்கா?……..” ஸ்ரீ மாதாவின் குரலை அந்த கன்று இனம் கண்டுகொண்டது. கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன் சொன்னான்……….

“பெரியவா…..நான் மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல படிச்சிண்டிருக்கேன்..எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும் வெளியூர்ல இருந்தா. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார். அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா…பாவம்! அப்புறம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல சமையல் வேலை பண்ணிண்டு இருந்தா…..[சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்]
…….திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா……..” இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.

“……அப்பா அம்மா ரெண்டுபேரையுமே என்னால கடைசி வரைக்கும் பாக்க முடியலை பெரியவா. அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது. நேக்கு இன்னும் பூணூல் போடலை..ங்கறதால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா…எனக்கு ரொம்ப அழுகையா வருது பெரியவா…..இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, “ஒன்னோட தங்கையை வந்து அழைச்சிண்டு போ!” ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்……பெரியவா. நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என் அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணனும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு நேக்கும் ரொம்ப ஆசையாத்தான் இருக்கும் பெரியவா. ஆனா, நானே சோத்துக்கு வழி இல்லாம இருக்கேனே! அதான்…..ஒங்களை தர்சனம் பண்ணினா எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்தேன்…..” அழுகையோடு தட்டுத் தடுமாறி சொன்னான். அவனையே சிலவினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும்? அவனைக் காப்பாற்றத்தானே இங்கே வரவழைத்திருக்கிறார்!

“சரி. கொழந்தே! நீ கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன?”

“சரி” என்று சந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை. நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள் பெரியவா தர்சனத்துக்கு வந்தார்கள். அவர்கள் கிளம்பும்போது, எதேச்சையாக அந்த பையன் அந்தப் பக்கம் வர, பெரியவா அவனிடம் ” சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவா போய்ட்டாளான்னு பாரு! போகலைனா, நான் கூப்டேன்னு சொல்லு”……….அவருடைய திருவிளையாடலை யாரறிவார்?

அவர்கள் கிளம்பவில்லை. ஒவ்வொருவராக பெரியவா முன்னால் வர வர, “நீ இல்லை, நீ இல்லை” என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். கடைசியாக வந்தவரைப் பார்த்ததும் பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு. “ம்ம்ம்ம்..இவரைத்தான் கூப்ட்டேன். இந்தாடா! கொழந்தே! ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு” என்று சொன்னார். பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாசம்!

“பெரியவா……..என்னோட அக்கா பம்பாய்ல இருக்கா.அவாத்துலதான் இந்த பையனோட அம்மா சமையல் வேலை பாத்துண்டு இருந்தா. அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு! இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னு என் மூலமாத்தான் அவா சொல்லிண்டு இருந்தா…….” என்று மனஸார ஒப்புக்கொண்டார்.
i
“ரொம்ப நல்லதாப் போச்சு! இங்க பாரு. இந்த கொழந்தை பெத்தவாளை பறிகுடுத்துட்டு தவிக்கறான்…..இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போய், அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு! மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை. அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவன் கையால பண்ண வை. ஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கு நீதான் எல்லாம் பண்ணனும். என்ன செய்வியா?”

அதிகாரிக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! பிரமிப்போ அதை விட பன்மடங்கு ! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.

அக்ஷணமே பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் சொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார். பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட தெரிந்திருக்கிறது.

Posted in FB by Sugavanam Krishnan

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

Re: Kanchi Maha Periyava

Post by grsastrigal »

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.

ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர். திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.

கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ :

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து மணம் வீசியது.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

காஞ்சி மஹானை சந்தித்த ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் ( Shared from Shri. Bhaskaran Shivaraman )
---------------------------------------------------------------------------------

மஹான் களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது. ஆனால் அவர்களை வழிபடுபவர்களின் மனப்பக்குவத்தில் தான் வித்தியாசம் ஏற்படுகிறது. ஒரு குருநாதரை ஏற்று கொண்டு மற்றவரை வெறுக்காமல், மஹானுக்கு மஹான் வித்தியாசம் என்ற நிலை மேற்கொள்ளாமல் அனைவரும் சமம் என்று வணங்கவேண்டும் .

ஒரு சமயம் தபோவனத்தில் பகல் வேளையில் குருநாதர் (ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்) முன்னிலையில் அமர்ந்து பாடி கொண்டிருந்தோம். திடீரென்று எழுந்த ஸ்வாமிகள் உள்ளே சென்று பின் வெகு நேரமாகியும் வெளி வரவில்லை. நாங்கள் தொடர்ந்து பாடிகொண்டிருந்தோம். சுமார் 2 மணி நேரம் கழித்து அப்போது தான் குளித்துவிட்டு வந்தது போன்ற தோற்றத்துடன் வெளியே வந்தார். வந்தவுடன் சொன்னார் "அங்கே இளையாத்தங்குடியில் ஆச்சார்யாள் பெரிய பூஜை பண்றாங்க. அதுக்கு ஸ்வாமி யை கூப்பிட்டு இருந்தாங்க. போய் வர நேரம் ஆகிவிட்டது".

பலருக்கு அது ஸ்வாமியின் பல ஆச்சரிய லீலைகளில் ஒன்று என தோன்றினாலும் ஒரு சிலருக்கு மட்டும் சுவாமியின் வார்த்தைகளில் சந்தேகம் வந்தது. சிறிது நேரத்திற்கேல்லாம் பஜனை முடிந்தது. சந்தேகப்பட்ட நபர்கள் ஊர் திரும்பி செல்ல உத்தரவு வேண்டி நின்றனர். ஸ்வாமி அவர்களை "இருந்து விட்டு நாளை போகலாம்" என்று கூற அவர்களும் ஸ்வாமியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தங்கிவிட்டனர்.

மறுநாள் காலையில் தினசரி வழிபாட்டுக்கு ஒரு புதிய தம்பதியர் வந்தனர். ஸ்வாமி அவர்களை பார்த்து "நாம் எங்கிருந்து வருகிறது" என்று கேட்க அவர்கள் " இளையாத்தங்குடியிலிருந்து வருகிறோம்" என்றனர். அதற்க்கு ஸ்வாமி "அப்படியா! அங்கு என்ன விசேஷம் " என்று கேட்க அவர்கள் சொன்னார்கள் " நேற்று மஹா பெரியவர்கள் விசேஷ பூஜை பண்ணினார்கள். நைவேத்யம் செய்யும் சமயம் ஒரு ஆடு வந்தது. பெரியவாள் அந்த நைவேத்தியத்தை அதனிடம் காண்பிக்க அந்த ஆடு சிலவற்றை சாப்பிட்டவுடன் பெரியவாள் தீபாரதனை பண்ணினார்கள். பிறகு அந்த ஆடு அங்கிருந்து போய் விட்டது. அப்போது பெரியவாள் "இன்றைய பூஜைக்கு தபோவனம் பெரியவாளை கூப்பிட்டுருந்தேன். அவர்கள் தான் இப்போது வந்து சென்றார்க்ள்" என்று சொன்னவுடன் நாங்கள் ஊருக்கு கிளம்பும் சமயம் அவரிடம் தபோவனம் பெரியவாள் யார் ஸ்வாமி என்று கேட்க அவர் தங்களை பற்றி சொல்லி அவசியம் தரிசித்து வரவும் என்று ஆசிர்வதித்து அனுப்பினார் என்றனர்.

உடன் இருந்த அந்த சந்தேகப்பட்ட நபர்கள் நால்வரும் வெட்கி தலை குனிந்தனர்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

சுமார் 60 வருஷங்களுக்கு முன்பு பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த நேரம். மாயவரத்தில் பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் என்று சொன்னால் யானை, குதிரை எல்லாம் முன்னால் ஊர்வலமாக வரும். பரமாச்சாரியார் பல்லக்கில் வருவார்.

தருமபுரம் மடம் வழியாக பரமாச்சாரியாரின் பல்லக்கு வந்தது. அங்கே பூர்ணகும்ப மரியாதையுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார் அவர். பண்டார சந்நிதி அவரை கெüரவம் செய்து மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு மயிலாடுதுறைக்குள் நுழைந்தது பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேச ஊர்வலம்.

நாகஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். அவருடைய லெட்டர்பேடில் "அகில உலக நாகஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்' என்றுதான் அச்சிடப்பட்டிருக்கும். கப்பல் போன்ற ஸ்டுடிபேக்கர் காரில்தான் பயணிப்பார். இந்த சந்தர்ப்பத்தில் வெளியூரில் கச்சேரி செய்துவிட்டு திருவாவடுதுறை திரும்பிக் கொண்டிருந்தார் டி.என்.ஆர்.

அந்த நாளில் மாயவரத்தில் பிரபலமான காளியாக்குடி ஹோட்டல் அருகில் உள்ள மணிக்கூண்டு வழியாக சென்று கொண்டிருந்த டி.என்.ஆர். கூட்டத்தைப் பார்த்துவிட்டு "என்ன விசேஷம்?' என்று வினவினார். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் வந்து கொண்டிருக்கிறது என்றும் அடுத்த தெருவில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டவுடன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தச் சொன்னார். சட்டையைக் கழற்றினார். அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். மணிக்கூண்டு அருகில் நின்று கொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

இவரது நாயன சங்கீதம் காதில் விழுந்தவுடன், "ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே, அங்கே போங்கோ' என்று பரமாச்சாரியார் உத்தரவிட்டு, பட்டணப் பிரவேச ஊர்வலத்துடன் பல்லக்கு மணிக்கூண்டை நோக்கி நகர்ந்தது. இதைத்தானே ராஜரத்தினம் பிள்ளை எதிர்பார்த்தார்! அவருக்கு பரம சந்தோஷம். உற்சாகம் தாங்கவில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரம் மணிக்கூண்டு அருகில் நின்றபடியே வாசித்துக் கொண்டிருந்தார் டி.என்.ஆர். மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது.
பரமாச்சாரியார் ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பை மெய்மறந்து கேட்டு ரசித்தார். அவருக்கு ஒரு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு நாகஸ்வர சக்ரவர்த்தி சொன்னார்- "இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது!"

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kanchi Maha Periyava

Post by arasi »

pATTum bhakthiyum kalandu piravahitha paravasa nilai, ellOrukkumE AyiTRu!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

from my friend ;--
அவதார புருஷர்- பெரியவா

காஞ்சியில் ஒரு கோவிலில் பெரியவா எல்லாருக்கும் தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். அப்போது உணர்ச்சிப் பெருக்கை உடலால் சமாளிக்க முடியாமல் ஒரு தம்பதி தங்கள் பெண் குழந்தையுடன் வந்து பெரியவாளை நமஸ்கரித்தனர்.

அவதார புருஷர்- பெரியவா
அவதார புருஷர்- பெரியவா

”ஆந்த்ரப்ரபா” பத்திரிகையின் ஆசிரியரும், காந்திஜியின் நெருக்கமான தோழருமான நீலம் ராஜு வேங்கடஸேஷைய்யாவின; புதல்விதான் அந்த அம்மா. பெரியவா அவர்களுடைய க்ஷேம லாபங்களை விஜாரித்தார். அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோட கூறியதை கேட்டு, சுற்றி நின்று கொண்டிருந்த அத்தனை பேருக்கும் மயிர்க்கூச்சல் எடுத்தது..
“இன்னிக்கு பெரியவாளோட க்ருபையாலதான் இங்க வந்திருக்கோம்…நாஙக லண்டன்ல இருக்கோம். கொஞ்ச நாளைக்கு முன்னால [ஏதோ ஒரு தேசத்தின் பெயரைக் கூறி] அந்த country க்கு flight ல போய்ண்டிருந்தோம். திடீர்னு இஞ்சின்ல ஏதோ பெரிய கோளாறு. அதுனால safe landing கூட முடியாது..ங்கற மாதிரி பைலட் எல்லாருக்கும் ரெட் சிக்னல் குடுத்தார். விமானத்துக்குள்ள இருந்த அத்தனை பேரோட மனநிலையும் சொல்லக் கூட முடியாது!

ஆனா, உயிரே போகப்போறது..ங்கற நிலைமைல எங்களால பெரியவாளைத் தவிர வேற எதையுமே நினைக்கத் தோணலை! பெரியவாளோட சரணங்களை மானசீகமா கெட்டியா பிடிச்சிண்டோம்! எங்களோட பயம் பயமாத் தெரியலை! எங்களோட டிராவல் பண்ணிக் கொண்டிருந்த அத்தனை வெளிநாட்டுக்காராளயும் தைரியமா இருக்கச் சொல்லி, “Sage of Kanchi ” ன்னு பெரியவாளை நாங்க தெய்வமாவே வர்ணிச்சு, ஆபத்பாந்தவர் அவரை வேண்டிண்டா, எந்த பெரிய விபத்தும் ஓடிப் போய்டும்ன்னு சொன்னதும், ப்ராணாபத்து வந்தா, பொழைக்கறதுக்கு எதைத்தான் பிடிச்சுக்க மாட்டா? அன்னிக்கி அந்த முழு விமானமும் பெரியவாளை த்யானிக்கற, பெரியவாளோட திருவடில தஞ்சமடையற த்யானகூடமாயிடுத்த

கொஞ்ச நேரத்துல பைலட்டுகளுக்கு cooperate பண்ணாத முக்யமான இஞ்சின்கள், கருவிகள் எல்லாமே ஏதோ அதிசயமா “miracle “ன்னு அத்தனை பேரும் [பைலட்டுகள் உட்பட] ஆச்சர்யப்படும்படி ரொம்ப லகுவா வேலை செய்ய ஆரம்பிச்சுடுத்து! சாவோட விளிம்புலேர்ந்து எங்க எல்லாரையும் பெரியவா காப்பாத்திட்டா! விமானம் கீழ இறங்கினதும், பைலட்டுலேர்ந்து அத்தனை பேரும் எங்களை சூழ்ந்துண்டு, Kanchi Sage க்கு லெட்டர் எழுதினாலோ, அவரை பார்த்தாலோ, எங்க எல்லாரோட இதயபூர்வமான நன்றியையும், நமஸ்காரத்தையும் கட்டாயம் அவருக்கு தெரிவிக்கணும்ன்னு ரொம்ப கேட்டுண்டா….எங்களு கோ ஒடனே இந்தியாவுக்கு வந்து பெரியவாளை தர்சனம் பண்ணி, அவருக்கு பாதபூஜை பண்ணனும்னு ரொம்ப தவியா தவிச்சு, நேரே இங்க வந்துட்டோம்…” என்று விம்மல்களுக்கிடைய சொல்லி முடித்தனர்.

ஆனால் பெரியவாளோ எப்போதும்போல் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி, தனக்கு அவர்கள் சொல்லித்தான் எதுவுமே தெரிந்தா மாதிரி மலர்ந்து சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். பாரிஷதரிடம் பாதுகைகளை கொண்டு வரச் சொல்லிவிட்டு, அவர்களுடைய சின்னப் பெண் குழந்தையை அருகில் அழைத்து, பெற்றோர் கொண்டுவந்திருந்த ஸ்வர்ணபுஷ்பங்கள், வாஸனை புஷ்பங்கள் எல்லாவற்றையும் அதன் குட்டி பூ போன்ற கைகளால் அள்ளி அள்ளி போடச் சொன்னார். அதுவும் அழகாக அர்ச்சனையாகவே பாதுகைக்கு புஷ்பங்களைப் போட்டது.

பெரியவா அந்த தம்பதியிடம் “நீங்க ரெண்டு பேரும் சேந்துதான் இந்தக் கொழந்தை. இது பண்ற பூஜை, நீங்களே பண்ணறதுதான்! அதோட ஒங்க கையால பண்றதை விட, இது குட்டிக் கையால பண்ணறச்சே நெறைய அர்ச்சனை, நெறைய நாழி நடக்கும்!” என்று தெலுங்கில் கூறினார். அன்று அங்கு எல்லோருமே அந்த ஆனந்தத்தை அனுபவித்தனர்.

அவதார புருஷர்களிடம் உண்மையான பக்தி கொண்டவர்கள், எங்கிருந்தாலும் எந்த ஆபத்திலிருந்தும் நிச்சயம் காப்பாற்றப் படுவார்கள்.

மோரின் தத்துவம் – மகா பெரியவர்

“எல்லோரும் ’ஈகோ‘வுடன் பிறக்கிறார்கள்.அதுதான் ஆரம்பம். அதையே முதலில் சாப்பிடும் ‘தானோடு‘சேர்ந்த குழம்பு காட்டுகிறது.பலவிதமாகக் குழம்புவதால் பிடிக்காமல் போகும் வாழ்க்கையே மனசு தெளிந்து விட்டால்,பிடித்துப் போகிறது. ரசமாகி இருக்கிறது. அதனால் பிறக்கும் ஆனந்தம்-இனிமை. இவைதான் பாயசம்,பட்சணம். இனிமையையே அனுபவித்துக் கொண்டிருந்தால் திகட்டிவிடுமே! அதற்கு மேல் போய் பிரும்மானந்தத்துடன் லயிக்க வேண்டாமா? அதுதான் ‘மோர்‘. அந்த நிலை சாஸ்வதமானது.

மஹா பெரியவா
மஹா பெரியவா

பாலை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து தயிர்,வெண்ணெய், நெய் என்று ஏதாவது மாறுதல் வந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.வெள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக் கலந்த பிறகு மேலே தொடர எதுவுமில்லை. மோர் சாதம் முடிந்தபின் இலையை எடுத்துவிட்டு எழுந்திருக்க வேண்டியதுதான்!”

இப்படியாக மிகப் பெரிய விஷயத்தை ஒரு சாப்பாட்டு ராமனுக்கு மிக எளிமையாக உபதேசித்துவிடுகிறார் மகா பெரியவர்.

பெரியவா என்றால் யார் ?


– சதாசிவ சர்மா

ஒரு நாள் ஏகாந்தமாகவும் விஸ்ராந்தியாகவும் இருக்கும் பொழுது என்னுடன் பேசியது:

ஸ்ரீ பெரியவா:ஏண்டா, பெரியவான்னா என்ன?

நான்:(பதில் சொல்ல முடியாமல் முழித்தேன்)

ஸ்ரீ பெரியவா: தெரியலயா……… பெ ரி ய வா …..ன்னா என்ன? நான்: (உண்மையாகவே ஒன்றும் புரியாமல் இருந்தேன்)

பெரியவா :ரி ………..ரி-ன்னா ரிக் வேதம் ய …………ய -ன்னா யஜுர் வேதம் இப்ப வார்த்த முடியப் போறது ங்கற மாதிரி கடைசி வேதத்தின்……அதாவது அதர்வ வேதத்தின் கடைசி எழுத்தான ‘வ’.

இதை சேக்கறதுக்கு முன்னாடி சாம வேதத்துக்கு உயிர் நாடி கானம். அ…..அ…..அ… ன்னு நிறைய வரும். அது சேந்துண்டு இருக்கு. அதாவது ரி …….ய…….அ………வ. இப்ப அ+வ = வா……. இப்ப ரி ……ய…… வா சரியாய்டுத்தா..?

ஏதோ என்னால முடிஞ்சது பெரியவாளோட வேத சம்பந்தப்படுத்திட்டேன்னு பாக்கிறயா..?ஒரே ஒரு எழுத்து மிச்சமிருக்கே! ‘பெ’ அத என்ன பண்றது?.

(ஸ்ரீ பெரியவா என்னை நிமிர்ந்து பார்த்து என் பதிலை எதிர் பார்ப்பது போல் இருந்தது. நான் ஒன்றும் புரியாமலும், தெரியாததாலும் பதில் சொல்லாமல் இருந்தேன்) ஸ்ரீ பெரியவா: என்ன முழிக்கறே? ஒண்ணும் புரியாம, தெரியாம இருக்கறதுக்கு என்ன பெயர் தெரியுமா? அஞ்ஞானம்னு சொல்லுவா. அந்த அஞ்ஞானமா இருக்கறவாள பாத்து பேந்த்த பேந்த்த முழிக்கறத ‘பெ’ ன்னு முழிக்கறதா சொல்லலாம் இல்லையா? அப்போ ‘பெ’ ங்கறது அஞ்ஞான வார்த்தையாயிடறது.

இப்ப எல்லாதையும் சேத்தாக்க, அஞ்ஞானத்தோட இருக்கறவாளை வேதத்தோட சம்பந்தப்படுத்தறது தான் இந்த வார்த்தைன்னு தெரியறதா?.

அஞ்ஞானிகளை யார் ரிக், யஜுர், சாம அதர்வ வேத மார்க்கத்திலே மாத்தறாளோ அவாதான் “பெரியவா“

(எனக்கு இப்போதுதான் புரிந்தது அஞ்ஞானியான என்னை வேத மார்க்கத்தைக் காட்டியவராக இவர் இருப்பதினால்தான் நாம், ஏன், எல்லோருமே “பெரியவா” என்று கூப்பிடுகிறோம்னு.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு, தங்கள் மத வழக்கப்படி தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். அவர் நிறைய படித்தவர்; அபரிமிதமான பேச்சாற்றலால், மதக் கொள்கைகளை அடுக்கிக் கொண்டே போனார். தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள் இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது......யாரிடம்?

"அன்புதான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும் வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர் எங்கள் பிதா.." மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாக்ஷியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார். காரணம், எங்கள் பிதா...என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேஸாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது.

"ஹிந்து மதத்லேயும் அன்புக்கு ரொம்ப முக்யத்வம் உண்டு! "அன்பே சிவம்"...ங்கறது பெரியவால்லாம் சொன்ன வாக்கு! திருமூலர்ன்னு ஒரு பெரியவர் திருமந்திரம்ன்னு ரொம்ப ஒசத்தியான புஸ்தகம் எழுதியிருக்கார். அதுல அன்பைப்பத்தி, மனித நேயத்தைப் பத்தி ரொம்ப அழுத்தமா சொல்லியிருக்கார்.

விஷ்ணு சஹஸ்ரநாமம்...ன்னு மஹாபாரதத்ல வருது. அதுல, "கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா"ன்னு பகவானுக்கு பேர் சொல்லப்பட்டிருக்கு. நீங்களும் ஜீஸஸ்ஸை கர்த்தர்..ன்னு சொல்லறேள். உங்க மதத்துக்கு எத்தனையோ காலத்துக்கு முன்னாடியிலிருந்தே....நாங்க பகவானை "கர்த்தர்"ன்னு சொல்லிண்டிருக்கோம்!

ஒங்களோட மதப்ரசாரங்கள் எல்லாத்துலயும், எங்களோட மதம், இதிஹாஸ புராணங்கள்,கடவுள்கள் எல்லாத்தையும் நிந்தை பண்றேள்! ஆனா, நாங்க எந்த மதத்தையோ, மதத் தலைவர்களையோ, தெய்வத்தையோ நிந்தனையாவோ, கொறையாவோ பேசறதில்லை! ஏன்னா ஹிந்து மதம்தான் மிச்ச எல்லா மதங்களுக்கும் தாயார் மாதிரி ! ஒரு தாயார், தன்னோட கொழந்தை துஷ்டனா இருந்தாக் கூட திட்ட மாட்டா!.....

நீங்கள்ளாம் ஹிந்து சமயப் பண்டிதாளை மீட் பண்ணறதுக்கு விரும்பாம, எதுவுமே தெரியாத பாமர ஜனங்கள் கிட்டப் போய் வாசாலகமா [வாய் ஜாலமாக] பேசறேள் ! எங்களுக்கு அனுஷ்டானம் முக்யம் ; ஒங்களுக்கு ப்ரசாரம் முக்யம்; அதோட பாமர ஜனங்கள்..ட்ட போனதுமே ஒங்களோட மதத் தத்துவத்தை சொல்றதில்லை; பால் பவுடர், ரொட்டி, துணிமணி...ன்னு குடுத்து ஆசை காட்டி இழுத்துக்கறேள்! மொதல்ல அவாளுக்கு காப்பு மாதிரி பணம் குடுக்கறேள்... அப்றமா மதத்தைப் பத்தி பேசறேள்...."

பாதிரியார் சங்கடமாக நெளிந்தார்! உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் பெரியவாளுடைய ஒவ்வொரு சொல்லும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டது!

"எங்கள் கர்த்தர்....தன் ரத்தத்தாலே பாவிகளின் பாவங்களைக் கழுவுகிறார்" கட்டக்கடைசியாக எதையோ சொல்ல வேண்டும் என்று சொன்னார்.

பெரியவா மறுபடியும் புன்னகைத்தார்.... "கர்த்தர்... ரொம்ப கருணையானவர்...ங்கற ஸ்துதி ஞாயந்தான்! ஆனா மத்தவாளை நிந்திக்கக் கூடாதுங்கறதும் ஞாயந்தானே ?...."

பாதிரியார், "நிந்தனை பத்தி என்னை சிந்தனை செய்ய வெச்சிட்டீங்க!.." என்று முக மலர்ச்சியோடு கூறவும், ஒரு பழத்தை ப்ரசாதமாக குடுத்தார் பெரியவா. அவருக்கும் திருக்கரத்தை உயர்த்தி ஆசி வழங்கினார்.

நம்முடைய மதத்தைப் பற்றி நாம் யாரிடமும் ப்ரசாரம் பண்ணி எதையும் ஸ்தாபிக்க அவச்யமேயில்லை! ப்ரசாரம் பண்ணுவதற்கு "இவ்வளவுதான் இதில் இருக்கிறது" என்ற full stop ப்பை நம்முடைய மத நூல்களுக்கு [இதிஹாஸ,புராணங்கள், சாஸ்த்ரங்கள் என்று நீண்டு கொண்டே போகும்] நம்மால் வைக்க முடியாது. சங்கரர், மத்வர், ராமானுஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் இன்னும் ஏகப்பட்ட பக்த சிரோன்மணிகள் கூட ப்ரசாரம் பண்ணாமல், சாஸ்த்ர சம்மதமான தங்கள் அனுஷ்டானத்தில் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

எனவே அவரவர் எந்தக் கடமையை செய்ய வேண்டுமோ, அதை ஒழுங்காக பண்ணிக் கொண்டிருந்தாலே, நம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது என்பதே மஹான்களின் வாக்கு!

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.

A share from Chandrasekar Venkatakrishnan

Post Reply