Kanchi Maha Periyava

Post Reply
thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Varagooran Narayanan

"குருமூர்த்தியே காமாக்ஷி
பெரியவாள்தான் காமாக்ஷி ஸ்வரூபம்"

(கட்டுரையின் நீளம் கருதி மூன்றாக பிரித்துள்ளேன்.)

சொன்னவர்; நாராயணன்,பாண்ட்ஸ் கம்பெனி.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கலவையில் நவராத்திரி மகோத்ஸவம்.
புதுப்பெரியவாள் பூஜை செய்து கொண்டிருந்தார்கள்.
காலை பதினோரு மணி, ஏராளமான கூட்டம்.

சென்னை, பாண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக்
கொண்டிருந்த நாராயணனுக்கு மகாப் பெரியவாளிடம்
எல்லையில்லாத பக்தி. நவராத்திரி புண்ணிய காலத்தில்
குருமூர்த்தியைத் தரிசிக்க வேண்டாமா?

பூஜை நடக்குமிடத்தில் நெருக்கடி.எதிரே இருந்த
கட்டிடத்தில் அமைதியாக உட்கார்ந்து விட்டார்.

"ஸார்...நமஸ்தே..."

எதிரே, ஓர் இந்தியப் பெண்மணி;ஓர் ஐரோப்பியப் பெண்மணி.

"எங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியுமா?" என்று
இந்தியப் பெண்மணி கேட்டார்.

"சொல்லுங்கள்...முடிந்தால் செய்கிறேன்."

"இவருடைய விஸா நாளையோடு முடிவடைகிறது.
இந்த அம்மையார் ஆஸ்திரியக்காரர்.மகாப்பெரியவாளை
தரிசனம் செய்ய வந்திருக்கிறார். சுவாமிகளை இப்போதே
தரிசனம் செய்தால்தான்,உடனே சென்னை சென்று,விஸா கெடு
முடிவதற்குள் புறப்பட்டுச் செல்லமுடியும். ப்ளீஸ்..எங்களுக்கு
உதவ முடியுமா?..." இந்திய வழிகாட்டிப் பெண்மணி
பவ்யமாகக் கேட்டுக்கொண்டாள்.

நாராயணன் உடனே உள்ளே சென்று அனுமதி
பெற்றுக்கொண்டு வந்தார்.

கிணற்றின் ஒருபுறத்தில் பெரியவாள் நின்று கொண்டார்கள்.
எதிர்ப்புறத்தில், நாராயணனும் இரண்டு பெண்மணிகளும்.

"...என்ன சொல்லணுமோ,சொல்லச் சொல்லு.
இல்லே...ஏதாவது வேணும்னா கேட்கச் சொல்லு..."

ஆஸ்திரியப் பெண்மணி, வைத்த விழி இமையாமல்,
ஒரு தெய்வத்தைப் பார்ப்பது போன்ற அந்தரங்கப்
பரவசத்துடன், பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
வாயைத் திறக்கவில்லை.மௌனமாகப் பேசிக்கொண்டிருந்தாள்
போலும்! அல்லது, சொற்கள் தேவைப்படாத ஒர் ஒட்டுறவில்
உரையாடிக் கொண்டிருந்தாளோ?.

பெரியவாள் ஒர் ஆப்பிள் பழத்தைப் பிரசாதமாகக்
கொடுத்துவிட்டு, உள்ளே சென்று விட்டார்கள்.

இவர்கள் மூவரும் வெளியே வந்தார்கள். சில நிமிஷங்கள்
சம்பாஷணை.வந்த காரியம் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சி.
...................................................................................................
பகுதி-2

அந்த ஆஸ்திரியப் பெண்மணிக்கு, சிறு பருவத்திலிருந்தே,
'நான்,இந்திய நாட்டுப் பெண்' என்ற உணர்வு இருந்துகொண்டே
இருந்ததாம்.அவளுடைய சகோதரி ஒருத்தி,சிறிது காலம்
பாரதத்தில் இருந்திருக்கிறார்.அவளிடமிருந்து பாரதப்
பண்பாடு,கலாசாரம்,தத்துவம் பற்றி அறிந்துகொண்டாள்.

"நான் இந்தியாவுக்குப் போகணும்..ஆமாம்..
எப்போதாவது எப்படியாவது போயாகவேண்டும்."

மாத வருமானத்தின் ஒரு பகுதியைப் பாரதப்
பயணத்துக்காக ஒதுக்கி வைத்தாள்.போதுமான
தொகை சேர்ந்ததும், ஒரு மாத சுற்றுப்பயணமாக,
தன்னுடைய முப்பதாம் வயதில் பாரதம் வந்துவிட்டாள்.

நூற்றுக்கணக்கான துறவிகளை-ஆசிரமம் என்று
சொல்லப்பட்ட மாட மாளிகைகளில் - சந்தித்தாள்.

மனம் அடங்கவில்லை. வேறு எதையோ; பெரியதாக
எதையோ, மகத்தான எதையோ, மகத்துக்கும்
மகத்தான மகத்தையே கண்ணால் காணத் தவித்தது,

'கலவைக்குப் போங்கோ...' என்று யாரோ சொன்னார்கள்.

கலவை என்ன - கல்கத்தாவா,காட்மாண்டுவா-
தேசப்படத்தைப்பார்த்துத் தெரிந்துகொள்வதற்கு!

விஸா என்ற புலி, பின்னால் உறுமிக் கொண்டிருக்கும்
அவசரத்தில் கலவையைக் கண்டு பிடித்து விட்டார்கள்.

மாளிகைகள் இல்லை; சிம்மாசனங்கள் இல்லை;
ரத்தினக்கம்பளங்கள் இல்லை!

ஓ! இதுதான் இறைவியின் இருப்பிடமாக இருக்கமுடியும்.

அந்த ஆஸ்திரிய பெண்மணிக்கு சிறப்பான ஓர் ஆன்மீக
அனுபவம். வெகு காலமாக, ஒரு தேவமங்கை-
-சொற்கடந்த சோதிப்பிழம்பினாள்-கனவில் காட்சி கொடுத்து
வந்தாராம். அவளைத் தேடிக்கொண்டுதான் பாரதப்
பயணம்! ' 'அவளைக் காணவில்லையே?
கனவில் மட்டும் தான் காட்சி கொடுப்பாளோ?..

அதோ!..இதோ!.. கிணற்றுக்கு அந்தப் பக்கத்தில்.
(நாம் எல்லோரும் மகாப்பெரியவா என்று சொல்கிற
அந்தத் தெய்வ மடந்தை..)

மயக்கும் அருட்பார்வை; மணக்கும் சுற்றுச்சூழல்;
மாலைக் கதிரவனின் செம்மை;முழு நிலவின் அமுதப் பொழிவு..

எந்த ஓர் இந்தியனுக்கும் கிடைக்காத புதையலை நெஞ்சத்தில்
தாங்கிக்கொண்டு,ஆஸ்திரிய மங்கை விமானம்
ஏறிப்போய்விட்டார்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..>>>>>..
பகுதி-3

அன்றைய தினம் பிற்பகல் மூன்று மணி.

"நாராயணா, அந்தப் பொண்ணு உன்னண்டை
என்ன சொல்லித்து?" பெரியவா கேட்டார்கள்.

நாராயணன்,நடந்தவற்றை,அப்படியே ஒப்புவித்தார்.

மறுநாள் விடியற்காலம் நான்கு மணி, விசுவரூப தரிசனம்.
அடியார் கூட்டத்தில் நாராயணனும் நின்றுகொண்டிருந்தார்.

பெரியவாள் அருகில் ஒரு துறவி. அவரிடம் சுவாமிகள்
ஆத்மார்த்தமாக எதையோ விளக்கிக் கொண்டிருந்தார்கள்.

'மூக பஞ்ச சதி - ஆர்யா சதகத்தில் ஒரு பாட்டு.'

குண்டலி குமாரி குடிலே சராசரஸவித்ர சாமுண்டே
குணினி குஹாரிணி குஹ்யே குருமூர்த்தே
த்வாம் நமாமி காமாக்ஷி.

(பாலா பரமேஸ்வரி,குண்டலினி,சண்டிகை,மாயை
- இவளே,அக்ஞானத்தைப் போக்குகிற குருமூர்த்தி.
இப்படிப்பட்ட காமாக்ஷியை வணங்குகிறேன்)

நாராயணன் நெற்றியில் பனித்துளியாய் ஓர் அலை.

அந்த அயல்நாட்டுப் பெண்மணி கூறினாளே?
"நான், பெரியவாளைக் காணவில்லை;அம்பிகையைத்
தான் பார்த்தேன்!" - என்று.

விஸா என்ற புலியின் உறுமல் இல்லாமல், இத்தனை
ஆண்டுக் காலமும், ஆஸ்திரியாவில் இரவு வேளைகளில்
விழித்திருந்து தரிசனம் கொடுத்தது இவர் தானா?

பெரியவாள், "நாராயணா, உன் சந்தேகத்தை நான்
தீர்த்து வைக்கிறேன்" என்று சொல்லவில்லை.

ஆனால் நைஸாகத் தீர்த்தே விட்டார்கள்

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

From etouch 142 dt 1-6-2015:
Prof S.Kalyanaraman, Neurosurgeon , Chennai
Once we went for darshanam to Kancheepuram. There was need for a new elephant at Sri Ekambareswarar Temple. One of the senior officials of the Mutt asked me whether I could buy and donate an elephant to the temple. I replied that I was not in a position to do so because of my financial position and commitment at that time. That person then probably thought that if Maha Periyaval had asked me to buy an elephant and donate it I would certainly oblige. As I was having darsanam, he told Maha Periyaval, “Dr.Kalyanaraman wants to donate an elephant to Sri Ekambareswarar temple, Periyaval should bless him. Maha Periyaval did not reply to him and continued to talk to devotees and give them darsanam. Again the official repeated his statement to Maha Periyaval in a louder voice. There was no response. Then he stopped repeating the request. I had a feeling that Maha Periyaval knew my mind and financial position and did not reply to the official as He did not want me to place in an embarrassing position.
Once one of my patient’s mother came to Maha Periyaval to seek His blessings for her daughter’s operation. This was recounted by her to me later; I give below the summary of the conversation.
Mother: My daughter is to have an operation in two days. Please bless her so that the operation will be successful.
63
His Holiness: Do not worry. She will be all right.
Mother: She has to undergo a brain operation. They tell me it is very risky…
His Holiness: Do not worry. She will get better.
Mother: Dr. Kalyanaraman is going to operate on her. Will the Operation be successful?
His Holiness: Do not worry. Your daughter will get cured.
Mother: Can Periyaval please send a message to Dr. Kalyanaraman about my daughter?
His Holiness: Do not worry. Always just before each operation that he performs, Dr. Kalyanaraman prays to me. My blessing is there for your daughter.
The mother came to my clinic straight from Kancheepuram without even going to her house. She said “Maha Periyaval told me that you pray to him before every operation. Is that true?
I replied yes. "It is quite true. Whenever I wash my hands to perform an operation, I take off my operation theatre chappals. As I wash my hands I pray to Maha Periyaval that the patient should get cured. Sometimes my assistants ask me why I remove my chappals while washing my hands for surgery. I have never told them why. They imagine it is to prevent the chappals getting stained with soap and water. I have never even once told my wife or parents or children about this.
May be Maha Periyaval wanted to convey to me that my prayers are reaching Him and He chose you as His messenger."

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Varagooran Narayanan

"ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை
நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ.."

கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
'ஜீ தமிழ் டிவி புகழ்'
தட்டச்சு வரகூரான் நாராயணன்

(சுருக்கப்பட்டது சுவாமிநாதன் மன்னிப்பீராக)

சென்னையிலிருந்து ஒரு முக்யஸ்தர் அன்றைக்கு
ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார். பெரியவாளின்
திருச்சந்நிதிக்கு சமர்பிக்க வேண்டும் என்பதற்காகத்
தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு தார்
வாழைப்பழ்ங்களைத் தன்னுடன் கொண்டு
வந்திருந்தார்.பெரியவாளுக்கு வாழைத்தார்களை
சமர்ப்பித்து விட்டு,அவருக்கு நமஸ்காரம் செய்து
பிரசாதம் பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

மடத்திலேயே கைங்கர்யம் செய்யும்
கிருஷ்ணமூர்த்தியை அழைத்து 'இந்த ஒவ்வொரு
தார்லயும் எத்தனை பழம் இருக்குன்னு எண்ணிச்
சொல்லு' என்றார் மகா பெரியவா.

கைகளை உதறிக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி
எழுந்தார். பெரியவாளிடம், "எண்ணிட்டேன் பெரியவா
ஒரு தார்ல 275 பழம்,இன்னொரு தார்ல 375 பழம்
இருக்கு" என்றார்.

"சபாஷ்..சரி.." என்று இழுத்த பெரியவா,"ஒரு தார்ல
1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும்
பார்த்திருக்கியோ.."என்று கிருஷ்ணமூர்த்தியைப்
பார்த்துக் கேட்டார்.

ஒரு சில விநாடிகள் கழித்து கிருஷ்ணமூர்த்தி.
"இல்லே பெரியவா...இதுவரை நான் கேள்விப்
பட்டதில்லே..பெரியவா உத்தரவு கொடுத்தா அப்படி
ஒரு தார் எங்கிருந்தாலும் பிடிச்சுண்டு வந்துடறேன்"
என்றார்.

"ஓ...இந்தக் கேள்விக்கெல்லாம் நானே பதில்
சொல்லுவேன்னு ரொம்ப ஆவலா எம் மூஞ்சியை
பாத்துண்டிருக்கியா?" என்று புன்னகையுடன் கேட்ட
பெரியவா, "இதுக்கு நா பதில் சொல்ல வேணாம்.
இளையாத்தங்குடில மாரியம்மன் கோயில் இருக்கு.
அங்கே போ. அந்த அம்மனை தரிசனம் பண்ணு.
உனக்கு எல்லா விவரமும் தானா கிடைக்கும்"
என்று பொசுக்கென்று முடித்தார் மகா பெரியவா.

'1008 பழங்கள் அடங்கிய வாழைத்தாரைப்
பார்ப்பதற்கு இளையாற்றங்குடிக்குப் போ'
என்று பெரியவா கட்டளை இட்டதில் வியப்பு ஒன்றும்
இல்லை.இளையாற்றங்குடிக்கும் காஞ்சி ஸ்ரீசங்கர
மடத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு.

மகா பெரியவா சொன்னபடி அடுத்த நாளே தன் குடும்பத்தோடு
இளையாற்றங்குடி புறப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி.
பெரியவா திருவாக்கின்படி மாரியம்மனைத் தரிசித்தார்.
அப்போது கோயிலில் இருந்த யாரோ இருவர்
வாழைத்தார்களைப் பற்றி திடீரென பேசிக் கொண்டிருந்தனர்.
சட்டென்று இவர்கள் பேச்சு காதுகளில் விழ..ஆச்சர்யப்பட்டு
சம்பாஷணை நிகழ்ந்த திசை நோக்கித் திரும்பினார்.

அவர்களிடம், "ஐயா..1008 வாழைப்பழம் இருக்கிற மாதிரி
நல்ல வாழைத்தார் வேணும்.இந்த ஊரில் எங்கே கிடைக்கும்?"
என்று கேட்டார்.

ஏற இறங்கப் பார்த்த ஒரு ஆசாமி தன் வலக்கையை, நீட்டி,
"தோ...தெக்கால போங்க. ஒரு பெரிய கிணத்தைத்
தாண்டியதும் நிறைய வாழைமரம் இருக்கிற தோட்டம்
ஒண்ணு வரும்.அங்கே இருக்கிறவர்கிட்ட கேட்டுப் பாருங்க"
என்று சொன்னார்.

தலையில் முண்டாசு கட்டிய ஒருவர் இவரை எதிர்கொண்டு
விசாரிக்க 1008 வாழைப்பழங்கள் அடங்கிய தார் ஒன்று
வேண்டும் என்று சொன்னார்.சற்று முன் வாழைமரத்தில்
இருந்து அறுத்துத் தரையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த
தார்களில் இருந்து ஒன்றைத் தூக்க முடியாமல் சுமந்து
வந்தார்.அவர். "இதான் சாமீ நீங்க கேட்ட 1008 பழத்தாரு.."
என்று இவர் முன்பாக வைத்தார்.

உடலெங்கும் புல்லரிப்பு. மகா பெரியவாளின் தீர்க்க
தரிசனத்தை நினைத்துப் பரவசப்பட்டார்.

தோட்டத்துக்காரன் சொன்ன விலையான ரூபாய் முப்பதைக்
கொடுத்து விட்டு,ஒரு ஆசாமியை கூலிக்கு அமர்த்தி
பெரியவா திருச்சந்நிதியின் முன்னால் அந்த வாழைத்தாரைக்
கொண்டு போய் வைத்தார்.

அதைப் பார்த்து பெரியவா புன்னகைத்தார்.

"1008 பழம் இருக்கிற தாரைப் புடிச்சுண்டு வந்துட்டே
போலிருக்கு?" என்று பெரியவா இடி இடியெனச் சிரித்தார்.

"நேத்து ஊர்ல பாக்கறதுக்குக் காயா இருந்தது. பெரியவா
சந்நிதிக்கு வந்தவுடனே மஞ்ச மசேல்னு பழுக்க ஆரம்பிச்சுடுத்து"
என்றார் கிருஷ்ணமூர்த்தி நெகிழ்ச்சியுடன்.

"விஷு (மலையாள புத்தாண்டு) வரப் போகிறது. இந்த தாரை
ரொம்ப கவனமா குருவாயூருக்கு அனுப்பிவிடு" என்றார்
பெரியவா தடாலென்று.

அப்போது பெரியவா கைங்கர்யத்தில் இருந்த சீடர்கள்
"விஷுவுக்கு இன்னும் பதினாலு நாள் இருக்கே..அதுக்குள்ள
இந்த தாரை இங்கே வெச்சிருந்தா அழுகி வீணாப் போயிடுமே"
என்று இவர் காதருகே வந்து குசுகுசுத்தனர்.

அப்போது கிருஷ்ணமூர்த்தி சொன்னார்;

"இது குருவாயூருக்குப் போகணும்னு பெரியவா உத்தரவு
போட்டிட்டாருன்னா, அது பதினாலு நாள் இல்லே...
பதினாலு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது.
அன்னிக்கிப் பழுத்த பழம் போல பொலிவோட பிரகாசமா
இருக்கும். பெரியவா வாக்கு என்னிக்குமே தப்பாது"
என்று சொல்லி தாரைப் பத்திரப்படுத்துமாறு ஒரு
சிஷ்யரிடம் சொன்னார்.

குருவாயூரில் சமர்ப்பிக்கப்படும் வரை அந்த 1008 பழத்தில்
ஒரு பழம்கூட தாரில் இருந்து கீழே விழவில்லை.
முனையில் கருக்கவில்லை. கொஞ்சமும் வீணாகாமல்
புத்தம் புதிதாக அப்படியே இருந்தது அதிசயம்தான்!.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

.
1000+ காய்களைக் கொண்ட வாழைத் தார் !

Image
சற்று முன் வாழைமரத்தில் இருந்து அறுத்துத் தரையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த தார்களில் இருந்து ஒன்றைத் தூக்க முடியாமல் சுமந்து வந்தார்.அவர். "இதான் சாமீ நீங்க கேட்ட 1008 பழத்தாரு.." என்று இவர் முன்பாக வைத்தார்.
1008 பழத் தாரை ஒருவரால் தூக்க இயலுமோ ?
"விஷுவுக்கு இன்னும் பதினாலு நாள் இருக்கே..அதுக்குள்ள
இந்த தாரை இங்கே வெச்சிருந்தா அழுகி வீணாப் போயிடுமே"
என்று இவர் காதருகே வந்து குசுகுசுத்தனர்.
ஒரு வாழைத் தார் சாதாரணமாக இரண்டு வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். எத்திலீன் இல்லாத இடத்திலே மூன்று வாரங்கள் கெடாமல் இருக்கும். கட்டுப்பாட்டு அறைகளில் ஆறு வாரங்கள் வரையில் கெடாமல் வைத்திருக்கலாம்!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Varagooran Narayanan
"பாம்பு கடி என்றால் அரப்பும் தித்திக்கும்"

(நடக்காத இரண்டு (பயந்த) சம்பவங்களுக்கு
பெரியவாளின் அதிசய தீர்வு)

புதிய தகவல்-இதுவரை வெளியாகாதது.

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா

தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

சம்பவம்-ஒன்று

ஒரு பெண் குழந்தை.ஐந்து வயது இருக்கும்.
அந்த குழந்தை 25 பைசா காசு வைத்திருந்தது.
சிறிது நேரத்தில் பைசா காணவில்லை.
எல்லா இடமும் தேடியும் கிடைக்கவில்லை.
அந்த குழந்தை வாயில் முழுங்கி விட்டது
என்று எல்லோரும் அழுதார்கள்.என்ன செய்வது
என்று தெரியவில்லை.

ஸ்ரீ மகா பெரியவா சிரித்துக் கொண்டார். பின்
அவர்களிடம் இந்த பெண் குழந்தையை வேறு
இடத்திற்கு கூட்டிச் சென்று எல்லா உடைகளையும்
உதறி பாருங்கள் என்று அந்த குழந்தையின்
அம்மாவிடம் சொன்னார்.

அதன்படியே செய்ததில் குழந்தையின் பாவாடை
வழியாக குழந்தையின் இடுப்பில் அந்தக் காசு
ஒட்டிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.

சம்பவம்-இரண்டு.

ஒரு லம்பாடி கூட்டம். அதில் ஒரு மாது மிகவும்
குண்டாக இருந்தார். ஒரு நான்கு பேர் அவளைத்
தூக்கிக் கொண்டு வந்து ஸ்ரீ மகா பெரியவாளிடம்
இவளை பாம்பு கடித்து விட்டது என்றனர்.

ஸ்ரீ மகா பெரியவா,"நீ பாம்பை பார்த்தாயா?" என்றார்.
இல்லை. பாம்புதான் கடித்தது என்றனர்.

'சரி கொஞ்சம் சர்க்கரை,அரப்பு,தேன் கொண்டு வா" என்றார்.
சர்க்கரையை அவள் வாயில் போடு" என்றார்.
'எப்படி இருக்கு' என்றார். 'தித்திப்பாக இருக்கு என்றாள்.
'அரப்பை (சீயக்காய் பொடி) போடு என்றார்.
'இப்ப எப்படி இருக்கு' என்றார்.அந்த மாது கசக்கிறது என்றாள்.

"சரி போ பாம்பு கடியில்லை" என்றார்.

"பாம்பு கடி என்றால் அரப்பும் தித்திக்கும்" என்றார்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Varagooran Narayanan
"கிளி மாதிரி இருக்கிற பெண் கிடைச்சிருக்கா. அவளை உதாசீனப்படுத்தாதே..”

(விவாக ரத்து என்ற கட்டத்தைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்ட
நிலையில் சேர்த்து வைத்த பெரியவா)

எழுத்தாளர் சாவி சொன்னது:

கொஞ்ச நாளைக்கு முன்பு நான் பெரியவாளைப் பார்க்கப் போயிருந்தேன். அவ்வப்போது போய் என் மன அமைதிக்காக அவரை நமஸ்கரித்து விட்டு வருவது என் வழக்கம். என்னுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் மானேஜரும் வந்திருந்தார்.

நான் எப்போது போனாலும் தனிப்பட்ட முறையில் என் நலத்தை விசாரித்து விட்டு, ஆசீர்வதித்துக் குங்குமம் கொடுப்பார்.

இந்த தடவை போனபோது வழக்கம்போல் நமஸ்கரித்தேன். ஆசீர்வதித்தார். குங்குமம் கொடுக்கவில்லை. ஏற்கனவே வந்திருந்த பக்தர்கள் அவர் முன்னே அமர்ந்திருந்தார்கள். அதனால் என்னை விசாரிக்கவில்லையோ அல்லது ஏதாவது பக்தி விஷயமாக சிறிய உரை நிகழ்த்தப் போகிறாரோ அல்லது அவர்கள் சென்ற பிறகு ஏதாவது என்னிடம் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகவோ என்று எண்ணி ஒரு பக்கமாகத் தரையில் உட்காந்தேன்.

சில நிமிஷங்கள் கழிந்திருக்கும். அப்போது ஒரு .குடும்பம் வந்தது. அப்பா, அம்மா சுமார் 25 வயதுப் பெண், கூட இரண்டு ஆண்கள் என்று ஐந்து பேர்
.
நம்ப மாட்டீர்கள். அந்தப் பெண்ணின் அழகு கண்ணை பறித்தது. சிவப்பு என்றால் அத்தனை சிவப்பு. நிறமும், மூக்கும் முழியும், களையான முகமும், அடக்க ஒடுக்கமான பதவிசும் அந்த மண்டபத்தையே பிரகாசமாக்கியதைப் போல் உணர்ந்தேன்.

அவர்கள் பழத்தட்டைப் பெரியவாளுக்கு முன்னே பவ்வியமாக வைத்துவிட்டு நஸ்கரித்தார்கள். பம்பாய், கல்கத்தா போன்ற வெகு தூர இடத்திலிருந்து வந்தவர்கள் போல் எனக்குத் தோன்றியது, பெரியவா அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களுக்கும் குங்குமம் தரவில்லை.

அவர்களும் பெரியவா முன்னே அப்படியே தரையில் அமர்ந்தார்கள். தொடர்ந்து மேலும் பக்தர்கள் வந்து நஸ்கரித்துவிட்டு குங்குமம் வாங்கிக்கொண்டு போனபடி இருந்தனர்
.
பெரியவா எதுவும் பேசவில்லை. நான் அந்த குடும்பத்தினரையும், பெண்ணையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த பெண்ணின் அழகு முகத்தில் லேசான சோகம் இருப்பதுபோல் எனக்குப் பட்டது.

சில நிமிடங்கள் கழித்து இன்னொரு குடும்பம் வந்தது. வெளிமாநிலக் களை. தொழிலதிபர்கள் மாதிரி இரண்டு, மூன்று ஆண்கள். நாலைந்து பெண்கள், அவர்கள் வருவதைப் பார்த்த அந்த அழகுப் பெண்ணின் குடும்பத்தினர் லேசான பரபரப்புடன் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். அப்படி, இப்படித் திரும்பி பார்த்தனர். ஏற்கனவே அறிமுகமான குடும்பமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

வந்தவர்கள் பெரியவாளை நமஸ்கரித்தார்கள். அவர்களை உட்காரும்படி பெரியவா சைகையால் சொன்னார்
.
புதிதாக வந்த குடும்பத்தினரையும் பெரியவாளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். குங்குமம் தந்ததும் கிளம்பலாம் என்று உட்கார்ந்து இருந்தோம். ஏற்கனவே குங்குமம் பெற்றவர்கள் எல்லாரும் எழுந்து கைகூப்பியபடியே போனார்கள்
.
அந்த அழகுப் பெண் குடும்பம், புதிதாக வந்த குடும்பம். நாங்கள் இருவர் மட்டும் அமர்ந்திருந்தோம்.

திடீரென்று பெரியவா ‘தொழிலதிபர்’ குடும்பத்தினரைச் சைகையால் அழைத்தார். அந்த இளைஞனையும் அழைத்தார். அவனும் வந்து குடும்பத்தினருடன் சேர்ந்து நின்றான்

. அவனைப் பார்த்து “நான் சொல்றதைச் செய். உனக்குக் குறையில்லாத வாழ்க்கை அமையும்... கிளி மாதிரி இருக்கிற பெண் கிடைச்சிருக்கா. அவளை உதாசீனப்படுத்தாதே..” என்று சொல்லியபடியே அந்த அழகுப் பெண்ணைத் தன்னிடம் வரும்படிக் கூப்பிட்டார். அவள் பொல பொலவென்று கண்ணீர் விட ஆரம்பித்தாள். அவளுடைய. அம்மா “ போம்மா .. போ.. பெரியவா கூப்பிடறா பார்” என்று சொல்லியபடியே பாசத்துடன் அவளை அணைத்து, லேசாகத் தூக்கி விட்டாள். அந்தப் பெண் துக்கம் நெஞ்சை அடைக்க , கேவலை அடக்கி கொண்டு, கண்ணீரை துடைத்தபடியே எழுந்து வந்து நின்றாள்.

பெரியவா மறுபடியும் அந்தப் பையனைப் பார்த்து “ இப்படி வா.. இவளை அழைச்சிண்டு போ.. சந்தோஷமா இருங்கோ” என்று சொல்லி அவர்களுக்குக் குங்குமம் கொடுத்தார். அந்தப் பையன் அடக்கமாகத் தலையை ஆட்டினான். யாரும் எதுவும் பேசவில்லை.

திடீரென்று இரண்டு குடும்பத்தினரின் முகங்களில் பிரகாசம். பரவசம்!

விவாக ரத்து என்ற கட்டத்தைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்ட ஒரு தம்பதியை தனது அற்புத சக்தியால் பெரியவா சேர்த்து வைத்து விட்டார். இத்தனைக்கும் பெண்ணின் குடும்பத்தினர் அவருக்குத் தெரிந்தவர்கள் இல்லை (என்பது எனக்குப் பின்னால் தெரிந்தது.). அவர்கள் தங்கள் பிரச்னையைக் கூட அவரிடம் சொல்லவில்லை. அந்தப் பையனும் சிறிது நேரத்தில் அங்கு வரப்போகிறான் என்பதை பெரியாவாள் தனது தெய்வீக சக்தியால் உணர்ந்திருக்க வேண்டும் அதனால்தானோ என்னவோ குங்குமம் கொடுக்காமல் பெண்ணின் குடும்பத்தினரைக் காக்க வைத்திருந்தார்.

அவர்கள் எல்லாரும் போன பிறகு எனக்குக் குங்குமம் கொடுத்தார்!”

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friendசூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !

சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !

Thanks to Mannargudi Sri Sitaraman Srinivasan Mama for the article.

பெரியவர்எம்.எஸ்.ஸிடம் என்ன சொன்னார் தெரியுமோ…?
“சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !” என்றார்
மஹாபெரியவர் வழிகாட்டி, தேர்வு செய்த பல சுலோகங்களையும், கீதங்களையும் எம்.எஸ்.அம்மா பாடி ஒலிப்பதிவு செய்து அளித்துள்ளார். மேளராக மாலிகை இவர்உத்தரவின் பேரில்தான் பாடப்பட்டது. பாலாஜி பஞ்சரத்ன தொகுப்பில்சுலோகங்களும் அவர் தேர்வு பண்ணிக் கொடுத்தவைதான். உச்சரிப்பு திருத்தமாக உள்ளதா என்று சரி பார்ப்பதும் உதவுவதும் எனக்குத் தரப்பட்ட பணி. இதை ஒரு மிகப் பெரிய கௌரவமாக நான் கருதிச் செய்து வந்தேன்.
எத்தனை முறை திருத்தம் சொன்னாலும் மனதிலே சோர்வு இல்லாமல் திருத்திக் கொள்வார் அம்மா. ஸ்ரீரங்க கத்யம் மிகக் கடினமான உச்சரிப்பு கொண்டது. அதைத் துல்லியமாக பதம் பிரித்துப் பாட அம்மாவால் தான் முடிந்தது. அதிலே தோஷம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தேடினாலும் முடியாது! அப்படி ஒரு அப்பழுக்கில்லாத சுத்தம். மேளராக மாலிகையின்வார்த்தைகள் அர்த்தங்களைப் பொதித்துப் பொதித்து அடக்கிய அமைப்பில் இருக்கும்.
‘கெளரிமனோஹர தம்பர சத்தம்‘ என்று வந்தால் ‘கௌரிமனோஹரி‘ என்பது ராகத்தைக் குறிக்கும். ’ஹரிதம்பர சத்தம்‘ என்பது பரமேசுவரனைக் குறிக்கும். (திக்கெல்லாம் தன் ஆடையாகக் கொண்டவன் என்று பொருள்).
இந்த இடத்தில் ஒரு கணத்துக்கும் குறைவாக இடைவெளி கொடுத்து இரண்டு அர்த்தங்களும் விளங்கும்படிப் பாட வேண்டும் என ஆணையிட்ட மஹா பெரியவர்களிடம்‘இது எப்படி சாத்தியம்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்:
“நீயா பாடப் போறே…? அவா பாடிடுவா… நீ ஏன் கவலைப்படறே!”
அதேமாதிரி, பெரியவர்களின் ஆசி அனுக்கிரஹத்தால் உரிய முறையில் துல்லியமாக அந்த இடத்தில் எம்.எஸ்.அம்மா பாடியிருப்பது, கவனித்துக் கேட்டால் புலனாகும்.
இந்த ஒலிப்பதிவு முடிந்து காஸெட் வெளியாகிற தருணத்தில் மஹா பெரியவர்எம்.எஸ்.ஸிடம் என்ன சொன்னார் தெரியுமோ…?
“சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !” என்றார்.
இதை விட பெரிய அனுக்கிரஹம் என்ன வேண்டும்?
நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர்எம்.எஸ். அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி, இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும்.
எம்.எஸ். அம்மாவின் அன்பு, கனிவு, கருணை அனைத்தும் அவரது இசையைப் போன்றே கம்பீரம் நிறைந்தது. மூத்த கலைஞர்களிடம் அவர் காட்டிய பணிவு அலாதியானது; புதியதைக் கற்றுக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி அபூர்வமானது; சக கலைஞர்களை அவர் ஊக்கப்படுத்திய முறை, வழிநடத்திய முறை தாய்மை நிறைந்தது.
அவரோடு பழகிய ஒவ்வொருவரும் அந்த இனிய நினைவுகளை தம் மனத்தில் அசைபோட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவரது எளிமையும் பக்குவமும் பாந்தமும் ஒவ்வொருவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும்எம்.எஸ். அம்மாவின் ஒவ்வொரு பரிமாணம் பிடிபட்டு இருக்கிறது.
’எங்கள் எம்.எஸ்.’ என்ற இந்தப் புத்தகத்தில், ஒவ்வொருவரும் தாம் புரிந்துகொண்ட விதத்திலேயே எம்.எஸ். அம்மாவைச் சித்திரிக்க முயன்று இருக்கின்றனர்.
நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர்எம்.எஸ்.அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி,இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும்.
எம்.எஸ்.அம்மாவின் இசையையும் ஆளுமையையும் ஒருசேர உணர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இந்த நூல் உதவும் என்பது உறுதி.

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

From Amritavarshini:
Mannargudi Sitaraman Srinivasan August 2 at 5:38pm
கச்சேரியின்போது மகா பெரியவாள் தனக்கு முன்பு தட்டில் வைத்திருந்த ஆரஞ்ச்
பழத்தின் சுளைகளை எடுத்துவிட்டு அதன் மூடியால் தரையில் மணி அய்யரின்
பாட்டுக்கு தாளம் போட்டு ரசிக்கிறார். கச்சேரி முடிந்ததும் மணி அய்யர் ” நான்
பாடும்போது லயம் தப்பாமல் தாளம் போட்டு வந்தாரே, அவர் யார்?” என்று கேட்க,
உடன் பாடியவர் மகாபெரியவாள் தான் என்று சொல்ல மணி அய்யர் தன்னை அறியாமல்
“கைலாசநாதா! கபாலீஸ்வரா! என் தெய்வத்தை பார்க்க முடியவில்லையே” என்றாராம். இதை
கேட்ட அத்தனை ரசிகர்களின் கண்களில் தாரையாக கண்ணீர் வந்தது என்று தனது
அனுபவத்தை எழுதியிருக்கிறார். ஒரு சமயம் நாட்டில், பஞ்சம் பட்டினி ஆகியவற்றால்
மக்கள் அவதிப்பட்டபோது பெரியவாள் மதுரை மணி அய்யரிடம் ” நீ கச்சேரியில் கோளறு
பதிகம் பாடு, நவகிரக கீர்த்தனைகளை பாடு” என்றார். அவரது வேண்டுகோளை ஏற்று
கடைசிவரை தன் கச்சேரியின்போது அவைகளைப் பாடாமல் இருக்கமாட்டார்.

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

From a forward:

வரகூர் முகாம். என்னை,கிட்ட வரும்படி
கூப்பிட்டா. "நான் பாட்டுப் பாடட்டுமா?
நீ கேட்கிறியா?"ன்னா, சரீன்னேன், உடனே,
எனக்கு மட்டும் கேட்கிற குரலில்,

' கண்ணா, சந்த்ரமௌளீஸ்வரர் கிட்ட
...வேதபுரி.....வேதபுரி,,,
...இந்தக் கட்டைவிளக்கில்
...நாலு திரிபோட்டு, எண்ணெய் விட்டு,
...ஏத்தி வை, வேதபுரி...

-அப்டீன்னு, சரளமா பாடினா.

விளக்கு ஏற்றி வை-ன்னு உத்தரவு போட்டிருக்கலாம்.
அப்படிச் செய்யல்லே.ரொம்ப நயமா,சொல்லிக்காட்டிட்டா!,

தினம் எல்லோரும் பஞ்சாங்கம் படிக்கணும்.
திதி,வார,நக்ஷத்ர, யோக,கரணம் தெரிஞ்சுக்கிறதினாலே,
நெறைய பலன் உண்டு-ன்னு சொல்லுவா.
தினம் பஞ்சாங்கம் படிக்கச் சொல்லி கேட்பா.

கொட்டகைக்குப் போனா, தையல் இலை மேலே
கங்காஜலம் வைக்கணும், ஆசமனத்துக்காக.

எனக்கு சமையல் சொல்லிக் கொடுத்திருக்கா,
பெரியவா ! (என்ன, அப்படிக் கண்ணை முழிச்சுப்
பார்க்கிறேள்? பெரியவா, எப்போ சமையல் கட்டுக்குப்
போயிருக்கான்னு தானே? பொஸ்தகம் படிக்காமலே
பெரியவாளுக்கு எல்லாம் ஸ்புரிக்கும்)

"கூட்டு செய்யத் தெரியுமோ"ன்னு ஒரு நாள் கேட்டா.

தெரியாதுன்னேன்.

"நான் சொல்றபடி செய்யி.கூட்டு மிச்சமே இருக்காது.."

"ஜலம் வெச்சு பயத்தம் பருப்புப் போடு.

கொஞ்சம் வெந்தவுடனே, காயைப் போடு.

நன்னா வெந்தப்புறம் கடலைப் பருப்பு,

கொத்தமல்லி விதை, தேங்கா அறைச்சு விடு.

மொளகு சீரகம் போடு.

இப்படிப் பண்ணினா,கூட்டு மிச்சமே இருக்காது.."

பெரியவா சொன்னபடியே பண்ணுவேன்.
அப்போ, கூட இருந்த யதிதிகளும் சாப்பிடுவா.
கூட்டு முழுக்க ஆயிடும்.

-எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான்
பேசமுடியும்.உபநிஷத் பேசினா,எனக்கு என்ன புரியும்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

பெரியவா சரணம்

மகா பெரியவா சேலத்துக்கு ஒரு தடவை வந்த போது நடந்த சம்பவம் இது.

பெரியவா சேலத்திற்கு வந்தால் சேலம் சுகவனேஸ்வரர் கோயில் நந்தவனத்தைச் சேர்ந்தாற் போல் இருக்கும் குளத்தில் தான் மகான் குளிப்பது வழக்கம்.

குளித்து விட்டு வெளியே வந்ததும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். சிவன் கோயில் பாதை வழியே நுழைந்தவுடன் வலப்புறம் முதலில் உள்ள வீட்டில் இருந்தது விசாலாட்சி அம்மாள். மகானின் பரம பக்தை.

கும்பலோடு கும்பலாக நின்று அதுவும் சற்று தூரத்தில் இருந்து மகானைத் தரிசிக்க முடியுமே தவிர அருகில் போக முடியாத அளவுக்கு பக்தர்களின் கூட்டம்.

பெரியவா சேலத்தில் தங்கி இருக்கப் போவதோ சில தினங்கள் தான். அதற்குள் அவர் அருகில் முண்டி அடித்துக் கொண்டு போய்ப் பார்க்க இந்த அம்மாவினால் நிச்சயம் முடியாது. தனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று திருப்திபட்டுக் கொண்ட அந்த அம்மாள் எட்ட இருந்தே தரிசனம் செய்து வந்தாள்.

பெரியாவா ஊருக்குக் கிளம்பும் தினம். அன்று காலையில் குளியல் முடிந்ததும்… வேகமாக வெளியே வந்த பெரியவா விசாலாட்சியம்மாள் வீட்டு வாயிற்படியில் ஏறி நின்று கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்க ஆரம்பித்தார்.

உள்ளே இருந்து வெளியே வந்த விசாலாட்சி அம்மாளுக்குத் தான் காண்பது கனவா அல்லது நனவா என்கிற சந்தேகம். தனது வீட்டில் மகாபெரியவா.. தனக்கு அருகில் மகான்.. கண்குளிர தரிசித்தார். எப்பேர்பட்ட பேறு அந்த அம்மையாருக்கு!

பக்தர்களுக்கு ஆசி வழங்கி விட்டு படியை விட்டு இறங்கும் போது, புன்னகையுடன், விசாலாட்சி அம்மாளைத் திரும்பிப் பார்த்தார் பெரியவா. அதற்கு ஆயிரம் அர்த்தங்கள்…

தன்னை நாடி வரும் பக்தர்களின் உள்ளத்தில் என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அறிந்து அருள்பாலித்த மகான், இவரைத் தவிர கலியுகத்தில் வேறு யார் இருக்க முடியும்?

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

A.S. Raman was the first Indian editor of The Illustrated Weekly of India. He shares his memorable moments with Divinity…

The 107th Jayanthi of the Paramacharya of Kanchi falls on May 19. A.S. Raman looks back nostalgically at the moments he shared with the Swami in 1963.

I had looked forward to the day when I could have the privilege of a brief glimpse of the Paramacharya of Kanchi at least from a distance. At last that day came in 1963. I was at Madurai on holiday.

It so happened that the Paramacharya had been camping at Narayanapuram outside the city. One July morning I decided to take a chance at the Matam. I wrote my local address on the visiting card and gave it to one of the aides who immediately sent it for the Mahaswami’s attention. No reaction. I sat in a corner resignedly prepared for a long wait.

After a couple of hours Paramacharya came out to perform “Gho Puja”. Through I was within his sight he did not take notice of me. Since it was time for his other rituals, he disappeared into solitude office of his private retreat.

Hours passed. No response from him till 7 p.m. I was told not to wait any longer, because it was time for Mahaswami’s evening puja after which he would retire for the day.

This went on for five long frustrating days. But I would not give up. The longer I had to wait, the stronger my resolve to have an audience with him. At last on the sixth day, at about 1 pm I received word from the Matam that “Periaval” would like to see me.

I rushed to the Matam without a minute’s delay. But no, it was not that easy. I was told to wait. After four hours, Paramacharya agreed to see me.

The moment of ecstasy had arrived. I was face to face with divinity in flesh and blood. I was immediately reminded of what Arthur Koestler, a tough, intellectually arrogant atheist and iconoclast said about Paramacharya.

After an audience with him, the controversial author of the irreverent book on India and Japan “The Lotus and the Robot”, said in effect that if God exists, here He is!

Receiving me with the sort of smile one saw only on the bronze icons of deities, the sort of smile about which Koestler said: “If ever Jesus smiled, he must have smiled like this great Hindu saint”, the Paramacharya began comfortingly: “Did you have to wait too long? I was only testing the strength of your faith. Now relax. Before you ask about me, I must ask about you.

His questions reflecting his transparent, fatherly concern focused on my family background, early life, my main interests, details of my professional career, my health problems, if any, my life in Bombay, and the like. He was now in a communicative mode, which prompted me to share my ten-page questionnaire with him.

After a casual glance at the questionnaire, he returned it to me saying, “Read out the questions first, before I react to them. After you have finished, I’ll try to answer one by one. No hurry, we can go through the exercise at leisure.

The real reason for my making you wait for nearly six days was my selfish desire to spend a sufficiently long time with you for a meaningful, mutually beneficial discussion. Now you ask and I answer. Let us settle for a long, unhurried tete-a-tete as the French might say.”

Our two-day long discussions that covered a wide range of areas as divergent as Aristotle and Adi Sankara at one extreme and astrophysics and Atharvaveda at the other, were spread over nearly ten hours, five hours each day. The venue was a most unlikely one; The store room with rats, spiders, cockroaches and lizards all over the place.

Paramacharya sitting on the bare floor rested against a rice sack. As we were talking, the stream of bhaktas from different parts of the world and India continued and every one of them received his attention.

They spoke to him in their respective languages in which he also seemed to feel thoroughly comfortable, handling each of these with the ease and grace of his own mother tongue, Kannada.

To my astonishment, his aides told me that he had a mastery of 17 languages.

Three weeks later. The first installment of my two part article had just appeared in my paper. I went to the matam with the issue. The Paramacharya’s aides has already shown him a copy.

Greeting me with an embarrassed smile, he said gently: “After reading your article I feel taller by a few inches. I wish you had not praised me so much.” I said: “It’s nothing, Your Holiness, compared with what the Western intellectuals keep saying about you.”

To which he replied: “I wish you had praised other Sankara peethams also. You see, we have no protocol problems. We are all engaged in the same task of continuing Bhagavatpada’s mission. You could have avoided that unfavourable reference to another matam an equally great institution set up by one of Aid Sankara’s senior disciples. I hope you will not run into rough weather because of your over enthusiasm for the Kanchi matam.

Placing my copy of the weekly before him, I requested him to autograph it. Politely refusing, he said: “Sanyasis don’t sign. Narayana!”

Paramacharya made every devotee feel specially favoured. What endeared him to his devotees was, not his stunning scholarship, which sat lightly on his frail shoulders, but his intensely humane concern and compassion beyond words and his charmingly disarming humility and transparency. He shared his erudition and wisdom with everyone around.

He could explain J.M. Keynes’ General Theory of Employment or Einstein’s Theory of Relativity as lucidly and gracefully as he would narrate a fairy tale to a tiny toddler.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Mayavaram Sri Sivaramakrishna Sastrigal (Mayavaram Periyava) has come with tears & seem highly disturbed.
‘Bhagavata Saptagam’ by him is highly appreciated by Periyava. Mayavaram Sastrigal always know that Sri Krishna himself is hearing the ‘Bhagavatam’ & hence he’ll never mind anyone around & never deviate from ‘Bhagavatam’.
Such a Mahan, came with tears & was speaking to the Manager Sri Viswanatha Iyer of the mutt…
Manager has called Sri Kannan Mama & told, “Sastrigal has come here with lot of stress and anxiety…Let Periyava know this and arrange for His darshan soon”
Sri Kannan Mama approached Periyava who was in ‘visraanthi’
“Yennappa?”, Periyava
Sri Mama informed about Sastrigal.
Periyava asked, “He came in car, right?”
“Yes”
“Ask him to wash his feet and bring him through the backdoor”.
Periyava went & sat under a ‘Nelli’ tree in the mutt. Sastrigal came…
Sri Sastrigal did namaskaram & said with tears, “Periyava! My son-in-law is not feeling well. We took X-rays and it seems half the lungs are gone and doctors say only one lung is functional. They say that he might survive for 27 days or so”
Sri Sastrigal continued & told his prayer, “Even if my worst nighmare comes true, I want Periyava to bless me so that this dhukham does not affect me!” (how many of us know to pray like this…only true mahan/vedantist can think in this line!!!!)
He reiterated, “Even if the sareera goes away, this dhukkam should not affect me”.
Later, Sri Kannan Mama recollected, “although he says it should not affect him…he says it while weeping”
Periyava asked a peculiar question back, “Why can’t the machine lie?”
Sastrigal, “we have taken 27 x-rays…all say the same thing…they have given only 20-27 days for him”.
Periyava, “you have read lots of vedanta…it says “baghavan bhaya nasanaha”..pray to Him”.
Sri Sastrigal took the prasad & left with a (relatively!) lighter heart but rushed back to the mutt within 15 days…
Sri Kannan Mama again recollected, “he was crying uncontrollably”.
Manager, “He cries so much…looks like his son-in-law is gone…take care of him quickly”.
Sri Kannan Mama rushed to Periyava.
Periyava was in ‘Vishraanthi’ this time too. On hearing, “why? Has the son-in-law gone? I am sure all rituals must have been over? Hope he has come here after all that?? He is a learned person – he knows these”
Sri Mama nodded in agreement.
Later, Sri Kannan Mama recollected, “Periyava talked like a common person at that time”.
Same ‘Nelli’ tree, same Periyava, same Sastrigal but totally a different situation.
“Prabho! The words that came from your mouth is true – all machines lied….doctors say that everything is fine…My son-in-law is doing fine!”
Periyava smiled, “Oh! even the machines started lying? I thought only humans lie!”
Periyava heard all the details. Gave prasad & ‘utharavu’ to Mayavaram Sri Sivaramakrishna Sastrigal. Later, Mayavaram Periyava has written a book & mentioned about this incident and mentioned the highlighted, “When words come out of mahans’ mouth, anything can happen!”.
Sri Kannan Mama opines that Mayavaram Sastrigal’s Saptaagam is like ‘express mail & you’ll miss the story if you miss the attention for few minutes. And also says Sastrigal knows every slokam in ‘Bhagavatham’ & will almost say every sloka unlike the ‘Puraanikas’ today.
Sri Mayavaram Sivaramakrishna Sastrigal himself is a ‘Mahaan’ who always knows Sri Krishna is sitting there & hearing his ‘Bhagavatha Sapthaagam’. Even, Triplicane Sri Govinda Damodara Swamigal used to say, “I have a hero worship for him!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
ஸந்நிதிக்கு வரும் குழந்தைகளுக்கு வாழைப்பழமோ கற்கண்டோ பெரியவாள் தவறாமல் வழங்குவார். தாமே நேராகக் கொடுப்பதுண்டு; அணுக்கத் தொண்டர்களைக் கொண்டு கொடுப்பதுமுண்டு.

விடுமுறை நாள்களில் பள்ளி ஆசிரியர்கள் பஸ் அமர்த்திக்கொண்டு பசங்களுடன் வருவது வழக்கம். அதனால் அந்நாள்களில் பணியாளர்கள் முன்னதாகவே வாழைப்பழமும் கற்கண்டும் நிறைய எடுத்து வைத்து விடுவார்கள்.

ஒரு விடுமுறை தினத்தன்று பெரியவாள் “இன்னிக்குக் கொழந்தைகளுக்கு வாழைப்பழம், கல்கண்டு குடுக்க வேண்டாம்” என்றார். ஏன் அப்படிச் சொன்னாரென்று புரியவில்லை.

தப தப என்று ஒரு பஸ்-லோட் பள்ளிச் சிறுவர்கள் ஆசிரியர்களுடன் வந்து விட்டனர். தம்மைக் காண வந்த சிட்டுக்களுக்கு ஒன்றும் தராமலா இந்த மா மதுர மஹா தாத்தா திருப்பி அனுப்பி வைப்பார் என்று பணியாளர் எண்ணினார்.

சரியாக அதே சமயம் திருமாளம் பஞ்சாபகேச ஐயர் என்ற பக்தர் ஒரு மூட்டை ஸஹிதம் வந்தார். மூட்டையைப் பெரியவாளுக்கு ஸமர்ப்பித்து, “பெரிவா ப்ரயோஜனப் படுத்திக்கணும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

மூட்டையிலிருந்து குண்டு மல்லிகைகள் போன்ற நெற்பொரி. பெரியவாள் திருவமுது செய்து வந்தது அதைத்தான். இதை நினைத்தே அவர் ‘ப்ரயோஜனப் படுத்தி’க் கொள்ளச் சொன்னது. ஆனால் பெரியவாளோ தம்முடைய பிக்ஷைக் காலம் வரை தள்ளிப்போடாமல் அப்போதே அதைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டு விட்டார்.

பணியாளரைப் பார்த்து, “தேவாளுக்குப் பொரி ரொம்ப இஷ்டம். தெரியுமோ? கல்யாணத்துலகூட லாஜ ஹோமம்னு பொரி ஹோமம் பண்றாளோன்னோ? இந்தக் கொழந்தைகள்ளாம் தேவாள்தான். இவாளுக்கு வெல்லச் சக்கரையும் கொஞ்சம் சேர்த்து பொரி நெறய்ய விநியோகம் பண்ணுங்கோ. ஒடம்புக்கும் ஹிதம். மனஸுக்கும் ஸத்வம். பொரி சாப்பிட்டா பாபம் போறதுன்னு சாஸ்த்ரம்” என்றார்.

அவ்வாறே சிறாருக்கு வெல்லச் சர்க்கரை சேர்த்த பொரி வழங்கப்பட்டது. ஆவலாக வாங்கிக் கொண்டனர்.

தலைமையாசிரியர் வியப்பில் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் சொன்னார் : “பசங்களில் பல பேருக்கு மஞ்சட்காமாலையும், வயிற்றுப்போக்கும். வாழைப்பழம் கூடாதென்று டாக்டர் சொல்லியிருக்கிறார். ‘பெரியவர்களோ வாழைப்பழம் கொடுப்பதுதானே வழக்கம்? அப்படிக் கொடுத்தால் பிரஸாதத்தை என்ன செய்வது?’ என்று கவலைப்பட்டுக் கொண்டேதான் வந்தேன். பெரியவர்களுக்குத் தெரியாததா? அதுதான் நெற்பொரி கொடுத்து அநுக்கிரஹித்திருக்கிறார்”.

அந்த தீர்க்க திருஷ்டி இருக்கட்டும். அது எல்லா மஹான்களுக்குமே உண்டுதான். ஆனால் அந்தப் பள்ளிப் பாலர்களை தேவர்கள் என்றாரே! அந்த எளிமை அவரொருவருக்கே உரித்தானதல்லவா?

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

பெரியவா சரணம்

வித்வான் பெரியசாமித் தூரன் சிறந்த தேசியவாதி. தமிழ் அறிஞர். பல சிறந்த பாடல்களை எழுதியுள்ளார்.

அவர் ஒரு சமயம் யோகி ராம்சுரத்குமாரிடம் சென்று தனக்கு முருக தரிசனம் கிடைக்க யோகியார் அருள வேண்டும் என்று யாசித்து நின்றார். யோகி அவர்கள், “காஞ்சிபுரம் செல், மகா பெரியவரைப் பார். அவர் தான் முருகன்” என்றார்.

வியப்பில் ஆழ்ந்த தூரன் உடனே தேனம்பாக்கத்தில் இருந்த மாமுனிவரை தரிசிக்க வந்தார். கிணற்றுக்கு அருகில் இருந்த மகா பெரியவரை தரிசித்தவுடனேயே தூரன் மெய்மறந்தார்; புளகாங்கிதம் அடைந்தார்.

அதுவரை மௌனமாக இருந்த மாமுனிவர் தூரனின் அருகில் வந்தார். “எனக்கு தரிசனம் கிடைத்து விட்டது. பெரும் பேறு பெற்றேன்” என்றார் தூரன்.

மகானோ, பேச்சை திசை திருப்பும் விதமாக, “உங்கள் கால் எப்படி இருக்கிறது?” என்று குசலம் விசாரித்தார். “தரிசனம் கிடைத்துவிட்டது; தரிசனம் கிடைத்துவிட்டது” என்றே தூரன் சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர பெரியவா கேட்டதற்கு பதில் தரவில்லை.

தூரனுடைய மகள் ‘கொஞ்சி கொஞ்சி வா! குகனே! என்ற கமாஸ் ராகப் பாடலைப் பாட இடமே தேவலோகமானது.

பிறகு தூரன் ‘புண்ணியம் பல கோடி செய்தேனோ’ என்ற கீரவாணி ராகப் பாடலையும், ‘என்ன பெருந் தவம்’ என்ற சகானா ராகப் பாடலையும் இயற்றினார்.

கலியக தெய்வம் நம் பெரியவா!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
பணத்துக்காக விடாதே- மஹாபெரியவா

கும்பகோணம் ரங்கராஜ ஐயங்கார் (இன்றைய அஹோபில மட ஜீயங்கார் ஸ்வாமிகள்) 1971ம் வருடம் ரிக்வேதம் பயின்றதும் அதன் பின் வைதீகத் தொழிலில் தன் ஜீவனத்தை மேற்கொள்ளலாமென்று நினைத்ததும் சரிதான் என்றாலும் மஹாபெரியவா அதற்கான உத்தரவைத் தரவில்லை.

அந்த வைணவ அன்பர் 1968ம் ஆண்டிலிருந்தே மஹாபெரியவாளின் பக்தர்களில் ஒருவர். வைதீகத் தொழில் வேண்டாம் என்ற அவரிடம் மஹான் என்ன சொன்னார் தெரியுமா?
“நீ மேற்கொண்டு எல்லா வேதங்களையும் படிக்கணும். அதற்கு உபகாரம் செய்ய நான் ஏற்பாடு பண்றேன். நீ மேலே படி” என்று அன்புக் கட்டளை இட்ட மஹான், அவர் குடும்பம் நடத்த மாதம் ரூ.200/- கொடுக்க ஏற்பாடு செய்ததோடு நில்லாமல், சுயமாக அவரே தனது ஆகாரத்தை சமைத்து சாப்பிடும் உயர்ந்த வழக்கத்திற்கும் வழி செய்து அருளினார்.
ரங்கராஜ ஐயங்காரின் குடும்பமோ பெரியது. இவருடைய சகோதரிகளின் திருமணத்தையும் தமது கருணை உள்ளத்தால் பெரியவா நடத்தி வைத்தார்.மஹான் பண்டரிபுரத்தில் இருந்தபோது ஐயங்கார் ஸ்வாமிகள் அங்கே சென்று அவரை நமஸ்கரித்தார். அப்போது மஹான் அவரிடம் கேட்டார்:
“நீ எனக்கு நமஸ்காரம் செய்யலாமா?”
அதற்கு ஐயங்கார் ஸ்வாமிகள் சொன்ன பதில்:“எங்கள் சம்பிரதாயம் பிரகாரம் யக்ஞோபவீதம், சிகை இல்லாத சன்னியாசிகளை தரிசித்தாலே ஸ்நானம் செய்யணும்னு இருக்கு” என்றார்.
“அப்போ நீ ஏன் எனக்கு நமஸ்காரம் செய்யறே?”
“சாட்சாத் விஷ்ணு அம்சம்தான் இந்த ஜோதி ஸ்வரூபம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று தன் வைணவப் பார்வைக்கு ஈஸ்வரரான மஹா பெரியவா அருளிய தரிசனத்தை மெய்சிலிர்ப்போடு கூறி மகிழ்ந்தார்.
இந்த பரம பக்தரான வைணவப் பெரியவருக்கு மஹானின் அருள், ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.
இவரது குடும்பம் பெரியதென்றாலும் அதை நன்றாக நடத்திச் செல்லக்கூடிய அளவுக்கு வருமானமே இல்லை. சகோதரிகளின் திருமணம், தினசரி நடைமுறைகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, இதர காரியங்கள் எல்லாவற்றிற்கும் பணம் தேவை. தொடர்ந்து வேதங்களைக் கற்றுக் கொள்ள இவர் முயற்சி செய்து கொண்டு இருந்தபோதுதான் 1978ம் வருடம் இவரை ஜெர்மனிக்கு வரச்சொல்லி ஒரு அன்பர் கேட்டுக் கொண்டார்.
“ஜெர்மனிக்குச் சென்றால் கை நிறையப் பணம். அதனால் குடும்பத்தின் வறுமை நீங்கும்” என்றெல்லாம் ஐயங்கார் ஸ்வாமிகளின் உள்ளத்தில் ஆசை தோன்ற ஆரம்பித்தது. மாத சம்பளம் மூவாயிரம். அத்துடன் திரும்பி வரும்போது கையில் மூன்று இலட்சம் பணம் தரப்படும் என வாக்குறுதி. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தால் தன் குடும்பம் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்” என்று நினைத்த ஐயங்கார் ஸ்வாமிகள் அழைப்பு விடுத்தவரிடம் வருவதாக ஒப்புக் கொண்டு ‘மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து, அக்டோபர் 31ம் தேதி புறப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வளவு நடந்திருந்தும், இதுபற்றி இவரது கிராமத்தில் இருந்த தந்தையிடம் கூட சொல்லாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தார். அவரிடம் சொல்லாமல் அயல் நாட்டிற்குப் போக முடியுமா? அக்டோபர் 27ம் தேதி கிராமத்திற்குப் போனார்.
தகவலைக் கேட்டவுடன், தந்தை ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டார்.
“மஹாபெரியவா கிட்டே உத்தரவு வாங்கிட்டியோ?”
“இல்லேப்பா, மஹானிடம் சொன்னா அவர் உத்தரவு தருவாரோ மாட்டாரோங்கிற சந்தேகம் எனக்கிருக்கு. அப்படி அவர் உத்தரவு தரலைன்னா, இவ்வளவு வருமானத்தை விட்டுட மனசு கேட்காதே. அதனாலே தான் நானே முடிவு எடுத்துண்டு கிளம்பறேன். நமக்கோ பணத்தேவை அதிகம். எனக்கும் இதைத் தவிர வேறு வழி தெரியல்லேப்பா” என்றார்.

அன்றிரவு அவர் கிராமத்தில் தங்கி விட்டார். மன உளைச்சலில் அவர் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது, திடீரென அவர் முன் மஹான் தோன்றினார்.

மஹான், ஐயங்கார் ஸ்வாமிகளின் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்துவிட்டு,“நீ போகத்தான் போறாயா?” என்று ஏக்கத்தோடு கேட்பதாக ஐயங்கார் ஸ்வாமிகளுக்குத் தோன்றியது.

அது முழுமையான கனவுமல்லாமல், முழுமையான நினைவுமல்லாமல் தெரிந்ததில் இவருக்கு மஹா பெரியவா ஏதோ உத்தரவிடுவது போலத் தெரிந்தது. அதனால் மறுதினம் தாமதிக்காமல் மஹானைத் தரிசித்து அவரது அனுமதியைப் பெறக் கிளம்பிவிட்டார்.

அப்போது மஹான், கர்நாடகாவில் பதாமி என்னும் நகருக்கு அருகில் இருந்த வனசங்கரி என்னும் சிறுகிராமத்தில் முகாமிட்டிருந்தார்.

மஹானின் தரிசனத்திற்கு முன், ஐயங்கார் ஸ்நானம் செய்து கொண்டு இருந்தபோது, மடத்து சிப்பந்தி ஒருவர் வந்து இவரிடம், “உன்னை பெரியவா வரச்சொல்லி உத்தரவாகியிருக்கிறது” என்றார்.

தான் வந்திருப்பதையோ, வந்திருக்கும் நோக்கமோ யாருக்குமே தெரியாத நிலையில், மஹான் வரச் சொல்லியிருப்பது இவருக்கு அளவுகடந்த வியப்பைத் தர நேராக மஹானின் முன் நின்று தரிசித்தார்.

“எப்போ கிளம்பப் போறே?” என்று பெரியவா கேட்டதும், தரிசனம் முடிந்ததும் தன் ஊருக்கு எப்போது போகிறோம் என்பதைத்தான் மஹான் கேட்கிறார் என்று ஐயங்கார் ஸ்வாமிகள் நினைத்துத் “தரிசனம் முடிந்ததும் கிளம்புவதாக உத்தேசம்” என்றார்.

மஹான் லேசாகப் புன்முறுவலித்தவாறே,

“நீ ஊருக்குப் போறதே பத்தி நான் கேட்கலே, அசல் தேசம் போகணும்னு ஏற்பாடு செஞ்சுண்டிருக்கியே, அதைத் தான் கேட்டேன்” என்று மஹான் சொல்ல, ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள், மஹான் தொடர்ந்து அதிர்ச்சிகளை அளித்தவாறு பேசலானார்:

“நீ இங்கு வந்த காரணத்தை நான் சொல்லவா? முந்தா நாள் நான் உன்னைத் தடவிக்கொடுத்து, ‘என்னை விட்டுப் போறயா?’ன்னு கேட்டேன்…. இல்லையா? அதனாலேதான் போகும்போது பார்த்துட்டுப் போகலாமுன்னு இங்கே வந்திருக்கே” என்றார். எப்பேற்பட்ட அதிசயத்தை மஹான் சர்வ சாதாரணமாகச் சொல்கிறார் என்று திகைத்துப் போய் நின்றார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

தன்னை கிராமத்துக்கு வந்து ஆட்கொண்டது பிரமை அல்ல என்பதை அறிந்த அவர் கண்களில் நீர் மல்க, மஹானின் பொற்பாதங்களில் வீழ்ந்தார். மஹான் அவரை ஆசீர்வதித்தவாறே சொன்னார்.

“உன் ஆசாரத்தை விடாமல் இரு. பணத்துக்காக எதையும் விடாதே. ஆசாரம் தான் முக்கியம். எங்கே போனாலும் அவரவர் ஆசாரத்தை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்” என்பது மஹானின் அருள்வாக்கு. ஐயங்கார் ஸ்வாமிகள் என்ன செய்திருப்பார் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்…….

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து விட்டு நின்றாள். அவள் கண்களில் ஏதோ ஏக்கம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை.
மெல்ல பெரியவாளிடம் விண்ணப்பித்தாள் ” குடும்பத்துல பலவித கஷ்டங்கள். வியாதி வெக்கை. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஏழெட்டு வருஷம் ஆகியும், குழந்தை இல்லை. இன்னொரு பொண்ணுக்கு வயசு எகிறிண்டே போறதே ஒழிய வரன் அமைய மாட்டேங்கறது. பையனுக்கோ படிப்பே வரலை. பண கஷ்டம்………கேரளா போய் நம்பூதிரி கிட்டே பிரச்னம் பாத்தோம். பித்ரு தோஷமாம். பித்ரு கர்மாக்களை ஒழுங்கா பண்ணாம விட்டதுக்கு ராமேஸ்வரம் போய் பரிகாரம் பண்ணணும்…ங்கறார். வைஷ்ணவ சம்பிரதாயப்படி, ராமேஸ்வர யாத்ரை, பரிகார சடங்கு எதுவுமே பண்ணக் கூடாது. என்ன பண்ணறதுன்னே தெரியலை. பெரியவாதான் வழி காட்டணும்” என்றாள்.
“நீங்க தென்கலையா?”
“ஆமா”
“உப்புச்சாறு, சாணிச்சாறு, சடைச்சாறு….ங்கற மூணும் தென்கலைக்கு கெடையாது…….”
” ஆமாமா, எங்க அம்மா கூட உப்புச்சார், சாணிசார், சடைசார்…..ன்னு சொல்லுவா”
“அதேதான். ராமேஸ்வர சமுத்ர ஸ்நானம், உப்புச்சாறு. பஞ்சகவ்ய பிராசனம் சாணிச்சாறு. கங்காஸ்நானம் சடைச்சாறு. ஏன்னா, பரமேஸ்வரனோட சடையில் இருந்துதானே கங்கை வரது! அதுனால, சம்பிரதாய விரோதமா போகவேணாம். அதுக்கு பதிலா, நித்யம் சாளக்ராமம் [பெருமாள்] திருவாராதனம் பண்ணி, திருமஞ்சன தீர்த்தம் சாப்பிடணும். அப்புறம், எகாதசியன்னிக்கு உபவாசம் இருங்கோ. பால், பழம், கிழங்கு சாப்பிடலாம். அன்னிக்கு ஓங்காத்துக்காரர் பன்னெண்டு திருமண் இட்டுண்டு திருவாராதனம் பண்ணணும். சரியா? மறுநா, த்வாதசியன்னிக்கி சீக்கிரமாவே திருவாராதனம் பண்ணிட்டு, துளசி தீர்த்தம் சாப்டுட்டு பாரணை பண்ணணும். தெனமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி புல் தரணும். இப்பிடி பண்ணினா, சர்வ பிராயச்சித்தம் பண்ணினாப்ல ஆகும். பண்ணுவியா?”
பெரியவாளோட உபதேசம் ஆக ஆக, அந்த அம்மா அழுகையை அடக்க முடியாமல் மாலை மாலையாக கண்ணீர் விட்டாள்.
“பெருமாளே வந்து சொன்னா மாதிரி இருக்கு பெரியவா. என்னென்னமோ நெனச்சு குழம்பிண்டு இருந்தேன். ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேள்னு நெனச்சேன். பெரியவா சுத்த ஸ்படிகம். சம்பிரதாய விரோதமில்லாம வழி காட்டிட்டேள்! ”
காமத்தை வென்ற காமேஸ்வரனே நம்மை மாதிரி அல்பங்களுக்காக இறங்கி வந்து நாவினிக்க “நாராயண நாராயண” என்று சொல்லி ஆசிர்வதிக்கும்போது, எல்லா சம்பிரதாயங்களும் அவனுள்ளே அடக்கம்தானே!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
My encounters with His Holiness Paramacharya – 1

I was first introduced to the Paramacharya way back in 1981 at the age of 11. My maternal grandparents are big devotees of his. They had the habit of getting his blessings before every marriage at home. It was before my youngest aunt’s marriage that year we made our way to Pandharpur in Maharashtra. At around 3:00 pm, the doors to his room were open to public and I saw him for the first time. The man who opened the door was none other than Balu Mama who is now Swaminadendra Saraswathi Swamigal. After about 2 hours of Darshan in the presence of 20 people, we returned to see him the next morning and once again in the evening. These three Darshans were my first encounters with him. I wondered why people keep asking him for things! Some people asked for his blessings so that their children could get married. One lady asked for Putra Bhagyam. Another man prayed for a promotion at work. The answer for all these queries was a silent blessings. My grandparents kept the wedding invitation and sought blessings. The two day trip to Pandharpur ended and we continued to Mantralayam and onwards to Madras later. Until then, my father did not get to meet him. In fact I don’t remember seeing him with a spiritual guru. But little did I know this was a start of something more profound.



My encounters with His Holiness Paramacharya – 2

My second meeting with him occurred when we visited Kanchipuram in 1984. Bala Periyavaa came into the Kanchi Mutt just 1 year before and we went to see the 3 of them. It was a routine visit for my grandparents. My mother could not come and my father was not so much into Mutt related activities then. He always believed work is worship. Paramacharya was seeing so many visitors come in. He enquired about my grandfather’s relatives and also asked about my parents and aunts/uncles. It was the first time I saw Bala Periyavaa and Nadu Periyavaa. I didn’t think much about the whole visit. Upon returning to Madras we continued with our work. It was around this time that my father who was a psychiatrist (Yes, he is the famous Lord Labak Das in Pennin Manathai Thottu) got a call from one of the Mutt folks regarding a patient. Since this involves confidential information I do not know much about the patient himself. But I do know that he was connected with the people in the Mutt. My father treated him as another patient and moved on as usual. However, one day he got a call from the mutt. The caller said that the paramacharya wanted to meet him at the mutt. As was always the case he was extremely busy and could not give any time for that. Then on a Sunday morning he just asked the driver to come home and asked him to drive to Kanchi. Two hours later he landed at the mutt. Then this happened.

Gentleman: Saar, are you Dr Mathrubootham.

Dad: Yes.

Gentleman: Are you the one who gives TV programs?

Dad: Yes.

Gentleman: Vanakkam saar, I am with the Kanchi Mutt. Swamiji said you will come today. So we were expecting you.

It was this moment that transformed our lives. It was a beginning of something that we will carry with us for lifetimes.



My encounters with His Holiness Paramacharya – 3

My parents had just been stunned by what they heard from the man at the entrance. Upon entering the mutt, my dad quickly changed over to the standard attire and walked towards him. This is what followed:

பெரியவா: உன் பேர் என்ன?

அப்பா: மாத்ருபூதம்

பெரியவா: சொந்த ஊர்?

அப்பா: கூத்தனூர். பேரளம் பக்கத்துல. தாத்தா குட்டக்கரை ராமசாமி ஐயர்.

பெரியவா: ஓ அன்னதானம் ராமசாமி ஐயரா!அவனுக்கு நான் தான் தீக்ஷை கொடுத்தேன். ராமனந்தா சாமி.

My great grandfather passed away in 1952 and this conversation was in 1985. How could someone remember an event so far back. My father could not believe it at all. At that point he sensed he was dealing with an extraordinary man. The conversation later meandered around the patients and my father’s work. Periyavaa was impressed with the progress made by the patient and blessed my parents. My dad was a totally transformed man after this event. Many in the mutt became his friends. Dad then decided not to get any fees from the patient he was treating. He then went for an interview with All India Radio. He said.
“We all get name, fame, health and wealth. But nothing can come close to the blessings we get from holy saints. That way, I am blessed.”



My encounters with His Holiness Paramacharya – 4

At the outset, thanks to one and all who have encouraged me with your likes and comments. Truly overwhelming :-) .

Upon completing his first visit to the mutt, my parents started going back there pretty often. For someone who didn’t believe in the concept of swamijis this was a total transformation. For many years we made frequent trips to Tirumala and other shrines. But not once did I see my father visiting saints. Yes, things do happen. Often, my brother and I would accompany them to Kanchi. Some other times, my maternal grandparents would also join in.

During such visits, the mutt officials would just inform that my dad has come. Swamiji would simply say “நீ இங்கேயே கொஞ்சம் நேரம் உட்காரு”. My dad would then talk about lots of things. Out of nowhere Swamiji would ask about small things in the temples near Koothanur. My grandfather (maternal) was also from Tanjore district and is a cousin to former President RV. He would also enquire about the Prez. It often amused me to hear him say “Avan, Ivan” when it came to the President of India (not yet then). Invariably the conversation would meander and come back to the specific patient. Upon hearing about developments he would say “நீ மடத்துக்கு இவ்வளவு செய்யறியே! நன்னா இரு! இந்த கோயிலுக்கு போய் அம்பாளை தரிசனம் பண்ணிட்டு வா.” We would go to those temples and return there. Then he would specifically ask about people in that temple once we returned. I always used to think that he just knows them so well and so he asked about them.

Few months later the patient returned to the mutt. I remember it was around 1986 when it happened. Upon return of the patient, he said “இவன் நன்னா ஆயிட்டானா! க்ஷேமமா இரு! எல்லாம் உன் தயவு தான்”. He gave a சால்வை to my dad and blessed him. I remember seeing him smile big then! “அத்தருணத்தில் நடமாடிய தெய்வம் தான் எங்களைப் பார்த்து நகைத்தது என்று நான் உணரவேயில்லை”!


My encounters with His Holiness Paramacharya – 5

It was 1986 and we continued our regular visits to the mutt. My dad’s conversation with him continued. The wonders never stopped. My dad had to help out a Madras US consulate officer and meet his holiness with her. She had a strange question in her mind. She wondered if she should marry again for the 4th time! She was divorced thrice already. She smoked while traveling by car. Thankfully when she entered the mutt she stopped all of that. Upon meeting the swamiji she sat in front of him and neither of them spake. 15 minutes later she just stood up, did her pranams, walked out and thanked my dad later. She later told that his holiness told her not to marry for the 4th time now. My dad had written about this episode in a Tamil magazine after Swamiji’s Siddhi in 1994. In a tailpiece he had specifically mentioned. இவரின் தேவை பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? அது ஒரு புரியாத புதிர். அது புதிராகவே இருக்கட்டும். தெய்வீகமே ஒரு புதிர் தானே!



My encounters with His Holiness Paramacharya – 6

After about 5 or 6 visits in 85-86, my dad was called by the Mutt office. The message was “Sri
Jayendra Saraswathi wants to meet you.” I was there with him. In fact our entire family including
cousins, aunts, uncles were there in full force. We rented two additional cars as well. At the
mutt we met His Holiness. After blessing all of us he called my dad into his room and
discussed for over 1 hour. This was a one on one meet. We were curiously watching the
proceedings. After that my dad came out.

His Holiness said thus in a nutshell.

Jayendra Saraswathi: உன்னை இந்த மடத்துல எல்லாருக்கும் தெரியறதே! நீ
என்ன டாக்டர்?

Dad: I am a psychiatrist working in Madras.

His Holiness: உனக்கு ஒரு வேலை இருக்கு. கலவைன்னு ஒரு இடம்
காஞ்சியிலிருந்து 40 கிமீ தூரம். அங்கே ஒரு விருத்தாஸ்ரமமும், குழந்தைகள்
நல இடமும் இருக்கு. குடும்பத்தோடு நீ போய் அங்கே இருக்கிறவாளுக்கு
மருத்துவ சேவை செய்யணும்.

Dad: OK. I will do it.

His Holiness: மாசத்துக்கு ஒரு தடவை இல்லைன்னா ரெண்டு மாசத்துக்கு ஒரு
தடவை அவாளை போய் கவனிச்சுக்கோ.

Until then none of us knew that it was in the same kalavai swamiji had attained Sanyasam and
is considered the holiest of places for his devotees. The children’s home was for special
needs kids. Upon completion of the conversation we took leave and met with Paramacharya.
When told about this new mission, He was full of smiles and blessed us all. We returned home
after visiting a few temples in kanchi. Thus began the mission that has till date given us all the
bountiful blessings that we enjoy.

*****

Narrated by the blessed devotee Shri Basker Mathrubootham.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

"சிருங்கேரி மடம், காஞ்சி மடத்துக்கிடையே ஏதோ கசமுசா என்று சிலர் பேசுவார்களே?"

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு


சிவராஜன் வீட்டில் பலவகையான கஷ்டங்கள், எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தோல்வி. இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத சிறு சிறு நோய்கள். வீட்டில் அன்யோன்யம் குறைந்தது. ஜோஸ்யர் சொன்னார், "உங்கள் ஜாதகப்படி பெரிய குற்றம் (தோஷம்) ஏதுமில்லை.அம்பாள் க்ஷேத்திரங்கள் ஐந்து இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள்.அதுவே போதும்" காஞ்சி காமாக்ஷி,மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று பிரபலமாகக் கூறப்படுகின்ற அம்பிகைகளைத் தரிசனம் செய்துவிட்டார், சிவராஜன். இன்னும் இரண்டு சக்திபீடங்கள் போக வேண்டும். பெரியவாளிடம் வந்து விண்ணப்பித்துக்கொண்டார்.

"பெரியவா உத்திரவு செய்கிற க்ஷேத்திரம் போய் தரிசனம் செய்கிறேன்." தொண்டு செய்யும் சிஷ்யரைப் பார்த்தார்கள், பெரியவாள், " நீதான் ரெண்டு அம்மன் க்ஷேத்திரம் சொல்லேன்..." அவர் உடனே, "திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் (திரிபுரசுந்தரி)" என்றார்.

"ரொம்ப சரி...இந்த ரெண்டு கோயில்லேயும் ஆதிசங்கரர் தரிசனம் பண்ணியிருக்கார். நான் ரெண்டு க்ஷேத்ரம் சொல்றேன். அங்கே முதல்லே போயிட்டு வா, வந்து திருவானைக்கா திருவொற்றியூர் போகலாம் என்ன?"

"உத்திரவுப்படி..."

"சிருங்கேரி சாரதாம்பாள், கொல்லூர் மூகாம்பிகை தரிசனம் பண்ணு முதல்லே..."

சிவராஜன் திருப்தியுடன் சென்றார்.

அருகிலிருந்தவர்களுக்குத்தான் ஆச்சரியமாக இருந்தது.எவ்விதத் தயக்கம் இல்லாமல்,சிருங்கேரி சாரதாம்பாள் தரிசனம் செய்யச் சொல்கிறார்களே?.

சிருங்கேரி மடம், காஞ்சி மடத்துக்கிடையே ஏதோ கசமுசா என்று சிலர் பேசுவார்களே? அது பொருளற்ற வார்த்தை என்பதைப் பெரியவாள் சுட்டிக் காட்டி விட்டார்கள். "அந்த ரெண்டு க்ஷேத்திரத்திலும் ஆதிசங்கரர் தபஸ் பண்ணியிருக்கார். க்ஷேத்திரவாசமே ரொம்பப் புண்ணியம்" என்றார்கள்,பெரியவாள்.

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

Re: Kanchi Maha Periyava

Post by grsastrigal »

சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்."

முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது

(கிழக்கு தாம்பரத்தில் 30-09-2015 அன்று திரு சுந்தர் குமார் தன் உபன்யாஸத்தில் (சுப்ரமண்ய புஜங்கம்) அற்புதமாக விளக்கிக் கூறினார்).

(Thanks to Annadhanam mama of varagur)

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.
விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.


“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.


ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய்
.
இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம்
ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.


வாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருத்தருக்கு சத்தியத்திலேயே பிரதிஷ்டையாகிவிட்டால், அப்படிப்பட்டவர் உத்தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி வந்துவிடும். அதாவது, அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியமாகிவிடும். தவறுதலாகவோ, தெரியாததாலோ அவர் உண்மைக்கு விரோதமாக ஒன்றைச் சொன்னால்கூடத் வாஸ்தவத்தில் அப்படியே நடந்துவிடும். பரம சத்தியத்திலேயே ஸ்திரமாக நின்ற ஸனத்குமாரர் எதை நினைத்தாலும் – ஸ்வப்னத்தில் நினைத்தால்கூட – அதுவே சத்தியமாகிவிடும்.


இந்த சமாசாரம் தெரிந்து கொண்ட பின் ஸனத்குமாரர் ஆத்மாராமராக, பரப்பிரம்மத்தைத் தன்னில் தானாக அநுபவித்துக்கொண்டு, பழையபடியே உட்கார்ந்து விட்டார். லோகமெல்லாமே அவருக்கு ஸ்வப்னமாகி விட்டதால் தம் ஸ்வப்பனத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.


ஆனால் இவர் ஸ்வப்பனத்தில் நினைத்த நினைப்பு அசத்தியமாக போய்விடக்கூடாதே என்று பரமேசுவரனுகக்கு விசாரம் வந்துவிட்டது. அதனால், இவர் தரிசனத்துக்காகத் தபஸ் பண்ணாதபோதே, அவராகப் பார்வதீ ஸமேதராக இவருடைய ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.


ஸனத்குமாரருக்கோ மரம், மட்டையிலிருந்து சகலமும் ஒரே பிரம்மமாகத்தான் தெரிந்தது. பிரம்மத்தில் உசந்த பிரம்மம் தாழ்ந்த பிரம்மம் என்று உண்டா என்ன? எல்லாம் பிரம்மம் என்ற மாதிரியே பரமேசுவரனும் பிரம்மமாகத் தெரிந்தார். அவரை உபசரிக்க வேண்டும், பூஜை பண்ண வேண்டும் என்ற எண்ணமே ஸனத்குமாரருக்குக் கொஞ்சம் கூட உண்டாகவில்லை. அவர் தம்பாட்டுக்கு உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தார்.


பார்வதீ – பரமேசுவராள் ரொம் நேரம் நின்று பார்த்தார்கள். ஒரு பலனும் இல்லை. இப்படி மகா ஞானியாக ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அவர்களுக்குப் பரமப் பிரீதிதான். இருந்தாலும் ஈசுவரன் பொய்க் கோபத்துடன் ‘ஞானி என்ற அகங்காரம்தானே உனக்கு? நாங்கள் லோகத்தின் மாதா பிதாக்கள் வந்திருக்கும்போது அவமதித்துவிட்டாயே. நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார்
ஸனத்குமாரர் பயந்துவிடவில்லை. அலட்சியமாக, “நீர் சாக்ஷாத் மகா கோபிஷ்டரான ருத்திரராக இருந்து சாபம்தான் கொடும். அது ஆத்மாவைப் பாதிக்காது” என்று சொல்லிவிட்டு நிச்சிந்தையாக இருந்தார்.


‘அடடா, எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்ம ஞானி!’ என்று ஈசுவரனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.
இன்னும் கொஞ்சம் பரீட்சை பார்த்து, பூராவும் ஞானி தானா என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்து, “அப்பா; உன்னுடைய ஞானத்தை நான் ரொம்பவும் மெச்சுகிறேன். என்ன வேண்டுமானாலும் வரம் கேள். தருகிறேன்” என்றார்.
ஸனத்குமாரர் சிரித்தார். ‘உம் வரத்தை நீரே வைத்துக் கொள்ளும். எதை அடைந்தபின் இன்னொன்று வேண்டும் என்ற ஆசை லவலேசமும் இருப்பதில்லையோ, அப்படிப்பட்ட நிறைந்த நிறைவாக இருக்கிற எனக்கு வரத்தினால் ஆக வேண்டியது கடுகத்தனைக்கூட இல்லை’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.


அதற்கும் ஒரு படி மேலே போனார். “பரமேசுவரா! நீ பேசுவதிலிருந்து பார்த்தால் நீதான் வரம், சாபம் இதுகளிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் சரி, உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள். தருகிறேன்” என்றார்.


ஸனத்குமாரர் சொன்னதைக் கேட்டு ஈசுவரனுக்குப் பெருமையாக இருந்தது. நம் குழந்தை நம்மிடம் ‘தாட்பூட்’ செய்தால், நமக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும்? சர்வ லோக மகேசுவரனான அவர் ரொம்பவும் தழைத்து தம்மைச் சிறியவராக்கிக் கொண்டு ஸனத்குமாரரிடம் வரம் கேட்டார். இவருடைய ஸ்வப்பனத்தை நிஜமாக்க இதுவே வழி என்று நினைத்துக் கேட்டார்.


“அப்பா! இப்பேர்ப்பட்ட மகா ஞானியான நீ பிரம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறாய். பிரம்மா செய்த பாக்கியம் எனக்கும் கிடைக்கும்படியாக வரம் கொடுப்பாய்! இன்னொரு ஜன்மாவில் நீ எனக்குப் புத்திரனாகப் பிறக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.


“ஆஹா, உனக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார் ஸனத்குமாரர். ஞானம் வருகிறவரையில்தான் இனிப் பிறவி வேண்டாம் என்று அழுவோம்.
ஞானம் வந்துவிட்டால் எப்போதும் ஆனந்த ஸாகரம்தான். ஜன்மா கின்மா எல்லாம் அதில் ஒரு சின்னக் குமிழி மாதிரிதான். அது வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது.


ஸனத்ககுமாரர் சொல்வதெல்லாம் சத்தியமாகிவிடும் அல்லவா? இப்போது ஈசுவரனை மட்டும் பார்த்ததுதான் ‘உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்றார். அம்பாளையும் சேர்த்து, ‘உங்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்று சொல்லவில்லை.


இதையும் ஸனத்குமாரர் யோசித்துப் பார்த்தார். ஸனத்குமாரருக்கும் தாம் பார்வதியை நீக்கி பரமேசுவரனுக்கு மட்டும் பிள்ளையாகப் பிறப்பதாகச் சொன்னதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. அவருக்கு எவரிடமும் நிர்ப்பயம் தான். அதனால் அந்த நியாயத்தை வெளிப்படையாகவே சொன்னார்.


‘கேட்காதவருக்கு ஒன்றைத் தரக்கூடாது என்று சாஸ்திரம். அந்த நியாயப்படி நீதான் என்னிடம் வரம் கேட்டாயே தவிர, பார்வதி கேட்கவில்லை. ஆகவே, உனக்கு மட்டுமே பிள்ளையாகப் பிறப்பேன். நீ மட்டுமாக என்னை எப்படி உற்பவிக்கச் செய்வாயோ, அப்படிச் செய்துகொள்” என்று ஸ்வாமியிடம் சொன்னார்.


இதைக் கேட்டதும் அம்பாளுக்கு ரொம்ப ஏமாற்றமாக, பரம துக்கமாக ஆகிவிட்டது. லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் அவள் குழந்தைகள்தாம் என்றாலும், இது அந்த ஞானாம்பாளுக்கே தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட ஒரு பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிறபோது, அவன் நேராகத் தனக்குப் பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்று அவளுக்கும் ஆசையிருந்தது.


இவர் சாஸ்திரத்திலிருந்து நியாயம் காட்டினமாதிரி, அவளும் காட்டித் தர்க்கம் பண்ணினாள். “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லியிருக்கிறது. பதி பிரார்த்திப்பதெல்லாம் பத்தினியையும் உத்தேசித்துத்தான். ஆனதால் நான் தனியாக வரம் கேட்க வேண்டும் என்றில்லை. அவர் கேட்டதாலேயே நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்று ரைட் கேட்டாள்.


ஸனத்குமாரர் யோசித்தார். “அம்மா, நீ சொல்வது நியாயம்தான். இருந்தாலும் நான் ஈசுவரனிடமிருந்து மட்டும் உற்பவிப்பது இன்னொரு தினுசில் எனக்குத் திருப்தி தருவதாகத் இருக்கிறது. எல்லாம் பிரம்மம் என்று எனக்குத் தெரிந்தாலும், அதற்கே நீங்கள் இரண்டு பேரும் எனக்கு இத்தனை ‘டைட்டில்’ கொடுத்தாலும், ஒரு விஷயத்தில் எனக்குப் பக்குவம் வரவில்லை. அதாவது, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தில் நாம் பிறப்பதாவது, கர்ப்பவாசம் செய்து கீழ்முகமாக ஜனிப்பதாவது என்று இன்னமும் எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. பிரம்ம ஞானிக்கு இப்படி இருக்கக் கூடாததுதான். ஆனால் ஏனோ இருக்கிறதே. அதனால் இதைச் சொல்கிறேன். ஆகையால் நீ பெரிய மனசு பண்ணி, உன் பதி மட்டுமே என்னைச் ஜனிக்கச் செய்வதற்கு அநுமதி தர வேண்டும்” என்றார்.


ஆனால் அம்பாளுக்கு மனசு வரவில்லை.
யோசித்துப் பார்த்துக் கடைசியில் ஒரு ‘ராஜி’ க்கு – ‘காம்ப்ரமைஸு’க்கு – வந்தார்கள்.


ஆதியில் பரமேசுவரன் பஸ்மாசுரனுக்கு வரம் தந்திருந்தார். இந்த வர பலத்தால், அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகிவிடுவார்.


வரம் பலிக்கிறதா என்று பரமேசுவரனிடமே பரீட்சை பார்க்க வந்தான் அசுரன். உடனே அவர் அந்தர்த்தானமாகி விட்டார்.
அந்தச் சமயத்தில் அம்பாள் ஏதோ லீலா நிமித்தம் தன்னுடைய ஸர்வக்ஞத்வத்தை மறைத்துக்கொண்டு சாதாரண ஸ்திரீ மாதிரி இருந்தாள். எனவே, திடீரென்று பரமேசுவரனின் சரீரம் மறைந்ததைப் பார்த்ததும் அவளுக்குப் ‘பகீர்’ என்றது. பதிவிரதா ரத்தினமான அவளால் ஈசுவரனின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அப்போதே அப்படியே உருகிவிட்டாள்.


யதார்த்தத்திலேயே அவளுடைய சரீரம் உருகி ஒரு ஜலாசயமாக (நீர் நிலையாக) ஆகி விட்டது. அதுதான் சரவணப் பொய்கை.


பிறகு பஸ்மாசுரன் மறைந்து ஸ்வாமி சரீரத்துடன் வந்ததும், அம்பாளும் தன் திவ்விய தேகத்தை எடுத்துக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய பதிவிரதா தர்மத்துக்கும் பிரேமைக்கும் அடையாளமாக சரவணப் பொய்கையையும் அழியாமலிருக்கும்படியாக அநுக்கிரகத்தாள். சரவணம் சாட்க்ஷாத் இவள் சரீரம்தான். அது இப்போது நினைவுக்கு வந்தது.


அதனால், ஸனத்குமாரர் அடுத்த ஜெனமாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.


இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை.


அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார்.


“ஆனானப்பட்ட என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்?” என்று கங்கை அவரைக் கேட்டாள்.


அவர், “சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்” என்றார்.


இதன்படியே கங்கை செய்ய, சரவணபவனாக முருகன் அவதரித்தான். பிறகு ஸனத்குமாரர் கண்ட ஸ்வப்னப்படி தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகி, அசுரர்களை ஸமூலம் இருந்த இடம் தெரியாமல் சம்ஹாரம் செய்து சர்வ லோகங்களையும் ரக்ஷித்தான் இந்த சரவணபவன். அவருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் இதுவே ஷடக்ஷரி, ஆறெழுத்து என்று மகாமந்திரமாக இருக்கிறது. சரவணமாக இருக்கும் அம்பாளின் மகிமை!


ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ‘சகல வேதங்களையும், இதிஹாச புராணங்கள், சகல சாஸ்திரங்கள், தேவ வித்யை, பிரம்மவித்யை, பூத வித்யை, நக்ஷத்திர வித்யை என்று ஒன்று பாக்கியில்லாமல் எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன். ஆனால், இதனாலெல்லாம் வெளி சமாசாரங்கள், மந்திரங்களைத்தான் தெரிந்து கொண்டேனே யொழியத் தன்னைத்தெரிந்து கொள்ளவேயில்லை. ஆத்மாவை அறியாததால் துக்கத்தில்தான் இருக்கிறேன்.நீங்கள்தான் என்னைத் தூக்கி அக்கரை சேர்க்க வேண்டும்’ என்றார் நாரதர்.


ஸனத்குமாரர், “ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்று தேடிப்போக வேண்டியதில்லை. கீழும் மேலும், முன்னும் பின்னும், வலது பக்கமும் இடது பக்கமும் எல்லாம் ஒரே ஆத்மாதான். அதைப் பற்றியே ஒருத்தன் தியானித்து தியானித்து, அதுவாகவே ஆகிவிட்டால், அப்புறம் அதிலேயே அவன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான். உண்மையான ஸ்வராஜ்யம் தன்னைத்தானே ஆண்டு கொள்கிற இந்த நிலைதான். இவன்தான் ‘ஸ்வராட்’ – உண்மையான சக்கரவர்த்தி. இந்த உத்தம நிலையை அடைய முதலில் ஆகார சுத்தியில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு படிப்படியாக சித்தசுத்தி உண்டாகி, மனசு நன்றாக தியானத்தில் நிலைத்து நின்று, எல்லாக் கட்டுக்குள் தெரித்து விழுந்து, ஆத்ம ஸ்வரூபமாகவே இருப்பான்” என்று வழிகாட்டினார்.


‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்;


அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.


இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது

--

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

அருமையான தொகுப்பு. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
தஞ்சாவூரான்
03 10 2015

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

From FB:
கும்பகோணத்திலிருந்து கல்லூரி மாணவன்
ஒருவன் வந்து நமஸ்கரித்து நின்றான்.
'எந்த ஊர்""
''கும்பகோணம்''...என்ன படிக்கிறாய்?''

''தாவர இயல் முதலாம் ஆண்டு.''

அந்த சமயம் பக்தர் ஒருவர் தட்டு நிறைய
பழம், வெற்றிலை இத்யாதி களை
சமர்ப்பித்தார்.
தட்டில் இருந்த வெற்றிலையை சுட்டிக் காட்டி,
''இது என்ன?''
''வெற்றிலை''
''வெற்றிலை என்று பெயர் வந்த காரணம்
தெரியுமா'' என சம்பாஷணையைத்
தொடர்ந்தார்.
மாணவன் ஒன்றும் பதில் சொல்லாமல்
திகைத்து நின்றான்.
ஸ்ரீ ஸ்வாமிகளே தொடர்ந்தார்.

''நீ வெற்றிலைக் கொடிக்காலைப்
பார்த்திருக்கியோ''
அனேகமாக எல்லாக் கொடிகளிலும்
வளர்ந்தபின் பூ பூக்கும், காய் காய்க்கும்.
இதில் மட்டுந்தான் பூவும் கிடையாது ;
காயும் கிடையாது. வெறும் இலை மட்டும்
கொண்ட தாவரம் இது...அதனால்தான்
வெற்றிலை!''

தாவரையல் மாணவனுக்கு வியப்பு
அடங்கவில்லை. எப்படி?

அவர் ஸர்வேச்வரன்..அவருக்குத்
தெரியாதது பூவுலகில் என்ன இருக்கிறது!
ஜய ஜய சங்கரா....

கும்பகோணம் வேணுகோபாலன் தகவல்.


thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

Varagooran Narayanan

"லோசனா கமல லோசனா-தர்பார்
( முக்காலமும் உணர்ந்த ஞானி)

(நவராத்திரியில் நடந்த ஒரு சம்பவம்)

காஞ்சிப்பெரியவர் பக்தர்களுக்கு ஆசியளிக்கும் போது, நகைச்சுவையாக பேசுவதும் உண்டு. ஒரு சமயம், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடந்து கொண்டிருந்தது. அதில் தினமும் வித்வான்கள் பாடுவர்.விழாவின் ஒருநாள் மாலையில், பெரியவரை தரிசிக்க பக்தர் ஒருவர் வந்தார். எழுத்தாளரான அவர், தன் புத்தகங்களை பெரியவரிடம் காட்டி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். பக்தர்கள் பலர் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களைக் கண்டதும் பெரியவர் எழுத்தாளரிடம்,

""இப்போது நீ காமாட்சியம்மனைத் தரிசித்து விட்டு வா. அங்கு தர்பார் நடக்கிறது. சீக்கிரம் முடிந்து விடும், வேகமாகச் செல்,'' என்றார்.

எழுத்தாளர் சென்றபோது, அம்மன் தர்பார் அலங்காரத்தில் இல்லாமல் வேறு அலங்காரத்தில் காட்சியளித்தாள்.

""பெரியவர் "தர்பார் அலங்காரம்' என்று சொன்னாரே!. இங்கு வேறு அலங்காரத்தில் அம்பாள் இருக்கிறாளே!'' என்று குழப்பமடைந்தார்

. அப்போது, இனிய கானம் காற்றில் மிதந்து வந்தது. தர்பார் ராகத்தில், ""லோசனா.. கமல லோசனா'' என்று பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிக்கொண்டிருந்தார்.

""அடடா..நாமோ தர்பார் அலங்காரம் என்று நினைத்து வந்தோம். இங்கே தர்பார் ராக பாடல் அல்லவா பாடப்படுகிறது! பெரியவர் சொன்னதை இப்படி புரிந்து கொண்டோமே! அவருடைய நகைச்சுவை உணர்வு தான் என்னே!'' என்று சிரித்தபடியே, மற்றவர்களிடமும் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

மற்றவர்களும் இதுகேட்டு சிரிக்க, ""அது சரி...தர்பார் ராகத்தில் எம்.எஸ்., பாடுவார் என்பது முன்கூட்டியே எப்படி பெரியவருக்குத் தெரிந்தது! முக்காலமும் உணர்ந்த ஞானி என்று சொல்வது இதனால் தானோ என்று பரவசமும் அடைந்தனர்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
சாப்பாட்டுராமரான ஸ்ரீ ராமர்
சாப்பாட்டில் அதிகம் விருப்பம் உள்ளவர்களை "சாப்பாட்டுராமா!" என கேலி செய்வதுண்டு.
ஸ்ரீ ராமருக்கு இந்த சாப்பாட்டுராமன் என்ற பெயர் எப்படி வந்தது? --ஸ்ரீமஹாபெரியவா....
இலங்கையில் போர் முடிந்து ராவணனை வதம் செய்தபின் ஸ்ரீ ராமர் சீதை லஷ்மணர் சுக்ரீவர் விபீஷணர் மற்றும்
வானரப்படைகளுடன் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில், அயோத்திக்கு செல்லு முன்பாக பரதவாஜ முனிவரை
தரிசிக்க விரும்பினார்.
ஆனால் அயோத்திக்குச் செல்ல நேரம் தாமதமானால் பரதன் தீமூட்டி அதில் தான் விழுந்துவிடுவதாய் சொன்னதை
நினைத்துப் பார்த்தார். 14 ஆண்டுகள் முடிந்த உடனேயே அண்ணன் வராவிடில் தான் தீயில் விழுந்து மாண்டுவிடுவதாக
முன்னமே பரதன் சொல்லி இருந்தான். பரதன் சொன்னதை செய்யக்கூடியவன் என ராமர் அறிவார். ஆனாலும் பரத்வாஜ
முனிவரை தரிசிக்காமல் செல்ல மனமுமில்லை. முனிவரை விரைந்து சென்று தரிசித்து பின் அயோத்தி செல்ல
முடிவுசெய்தார். பரத்வாஜமுனிவர் ஸ்ரீ ராமர் சீதா பிராட்டியயும் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.
”இரவாணனை வெற்றிகொண்ட ஸ்ரீராமா! என் ஆஸ்ரமத்திற்கு நீ வந்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்று இரவு இங்கே தங்கிவிட்டு
நாளை இங்கு நடக்கும் ததீயாராதனையில் கலந்துகொண்டு (திருமாலடியார்க்கிடும் விருந்துணவு) உணவு உண்டு செல்ல
வேண்டும்”என்று கேட்டுக்கொண்டார். ராமரால் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. ஆனால் அதே
நேரம் தன் வருகை தாமதமானால் தம்பி உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார்.ஆகவே அனுமனை அழைத்தார்.
”அஞ்சனைகுமாரனே !என் அருமை பக்தனே! எனக்காக நீ பரதனிடம் சென்று நான் எல்லோருடனும் வந்துகொண்டிருப்பதை
சொல்லி விட்டுவா.வாயு புத்திரனான நீ இதை காற்றாய் ஓடிச்சென்று முடித்து உடன் இங்குவரவேண்டும்”. அனுமன்
அண்ணல் சொன்ன சொல்லை நிறைவேற்ற இறைப்பொழுதில் அங்கிருந்து அகன்றான்.

மறுநாள்...

விருந்திற்காக இலையினைப் போட்டார் முனிவர் பெருமான். அனைவரும் அமர்ந்துவிட்டனர். அனுமன் பரதனை
சந்தித்துவிட்டு வந்துவிட்டான் அனுமன் விருந்துக்குவருவாரென முனிவர் நினைக்கவில்லை.அனுமனுக்கு இலை எதுவும்
காலி இல்லை. ராமன் அன்புடன்.அனுமனை தன் இலைக்கு எதிர்ப்புறம் அமரச்சொல்கிறார். அனுமன் காய் பழங்களைத்தான்
உண்பார் என ராமருக்குத்தெரியும் ஆகவே பரிமாறுபவர்களிடம் இலையின் மேல்பக்கத்தில்(அனுமன் அமர்ந்த திசையில்
அல்லது அவருக்கு அருகிலிருந்த இடத்தில்) காய் பழங்களைபரிமாரச்சொல்கிறார். அரிசி சாதம் மற்ற உணவு
வகைகளைத் தன் பக்கம் போட சொல்கிறார். இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டுமுடிக்கின்றனர்
சாப்பாட்டிற்காக முனிவர் கேட்டுக்கொண்டார் என்று தன் பயணத்தின் இடையே தங்கி சாப்பாட்டினை முடித்துக்
கொண்டதால் ராமர் சாப்பாட்டு ராமன் ஆகிறார் ..அப்படியே காலபோக்கில் சாப்பாட்டில் விருப்பம் உடையவர்களை
இப்படிப் பெயரிட்டு அழைப்பது வழக்கமாகிவிட்டது

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

... அனுமன் பரதனை சந்தித்துவிட்டு வந்துவிட்டான். அனுமன் விருந்துக்கு வருவாரென முனிவர் நினைக்கவில்லை ...
இது எந்த ராமாயணத்தில் இருக்கிறது ?
வால்மீகி ராமாயணத்தில் இல்லை !

பரதனிடம் செய்தியைக் கூறிய பின், ராமன் அயோத்திக்கு வரும் வரையில், ஹனுமான் அயோத்தியிலேயே இருந்தார் என்றே வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

ராமர் கதை சொல்லும் இடத்திலெல்லாம் கைகூப்பி இருக்கும் ஹனுமான் ராமர் இருக்கும் இடத்தில் இல்லாமல் இருப்பாரா என்று நினைத்துக்கொள்ளலாமே.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

பெரியவா கொடுத்த PRESCRIPTION

பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்

அந்தப் பையனுக்கு மிஞ்சி மிஞ்சி போனால் பதினஞ்சு, பதினாறு வயஸுதான் இருக்கும். பாவம், தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டான்! டாக்டர்கள், வைத்யம் இதெல்லாம் ஒரு பக்கம் அதுபாட்டுக்கு போய்க் கொண்டிருந்தாலும், அவனுக்கு பேரிடியாக ஞாபகசக்தியும் குறைந்து கொண்டே வந்தது!

சோதனை காலத்திலும் ஒரு நல்ல காலம், ஞாபகம் நன்றாக இருக்கும் போதே ["அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்"என்று ஆழ்வார் பாடியது போல்] பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டான்.

"எனக்கு தலைவலி தாங்க முடியலே பெரியவா.... அதோட மறதி ரொம்ப இருக்கு. பாடத்தை ஞாபகம் வெச்சுக்கவே முடியலே... பெரியவாதான் காப்பாத்தணும்"அழுதான்.

"கொழந்தே! நா..... வைத்யசாஸ்த்ரம் படிச்சதில்லேடா..... வேதாந்த சாஸ்த்ரந்தான் படிச்சிருக்கேன்....."

பையன் நகருவதாக இல்லை. பெரியவாளிடம் prescription வாங்காமல் போவதாக இல்லை. அதற்கு மேல் அவனை சோதிக்க பெரியவா விரும்பவில்லை.

எனவே அவனிடம்,"சரி, நான் சொல்ற வைத்யம் ரொம்ப கடுமையா இருக்குமேப்பா! ஒன்னால follow பண்ண முடியாதேடா கொழந்தே!..."

"அப்டீல்லாம் இல்லே பெரியவா...... ஒங்க வார்த்தைப்படி கட்டாயம் நடக்கறேன்!"

வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையால் பையன் முகம் ப்ரகாஸமானது.

"ரொம்ப சந்தோஷம். அந்தக் காலத்துல, முகத்தளவைன்னு ஒரு கணக்கு உண்டு. அதுப்படி, நாலு பெரிய்....ய்ய படில அரிசி, கோதுமை மாதிரி எதாவுது ஒரு தான்யத்தை அளந்து ஒரு பையில கட்டி ..... சபரி மலைக்கு இருமுடி கட்டிண்டு போறவாளை பாத்திருக்கியோ? அதுமாதிரி, அந்த தான்யத்தை ஒன்னோட தலையில வெச்சுண்டு, தெனோமும் ஒரு மைல் தொலைவு நடக்கணும்! செய்வியா?.... முடியுமா?..."

"கட்டாயம் நடக்கறேன்....."

"இரு .... இரு.... இன்னும் நான் முழுக்க சொல்லி முடிக்கலே! ஒரு மைல் தொலைவு நடக்கறச்சே.... யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசப்....டாது! சிவ நாமாவோ, ராம நாமாவோ சொல்லிண்டிருக்கணும்! அந்த தான்யத்தை அன்னன்னிக்கி எதாவுது சிவன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ,..க்ராம தேவதை கோவிலுக்கோ எதுவானாலும் சரி, குடுத்துடணும்! இல்லாட்டா.... யாராவுது ஒரு ஏழைக்கு அதைக் குடுத்துடணும்! இதுமாதிரி பதினோரு நாள் பண்ணினியானா..... ஒன்னோட தலைவலி போய்டும்; ஞாபகசக்தியும் நன்னா வ்ருத்தியாகும்..."

பையனுக்கு ஒரே சந்தோஷம் !"நிச்சயம் நீங்க சொன்னபடி பண்றேன் பெரியவா"விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு போனான்.

பெரியவாளின் அநுக்ரஹம் வேலை செய்ய ஆரம்பித்ததால், அவர் சொன்ன எதையும் மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு பண்ணினான். ஒரே வாரத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தான்... அழுது கொண்டு இல்லை! சிரித்த முகத்துடன் வந்தான்!

"பெரியவா...... என் தலைவலி போய்டுத்து! டாக்டர்ல்லாம் ரொம்ப ஆச்சர்யப்பட்டா! "என்ன மருந்து சாப்ட்டே?"ன்னு கேட்டா..... பெரியவா பண்ணச் சொன்னதை சொன்னேன்.... தலைல ஏதோ நரம்பு பிசகி இருந்திருக்கும், தான்யத்தோட வெயிட் ஏறினதும், அது சரியாகி இருக்கும்ன்னு சொன்னா! இன்னும் பாக்கி இருக்கறதையும் பண்ணிடறேன் பெரியவா"

அவன் சொன்னதை சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு, ப்ரஸாதம் குடுத்தனுப்பினார்.

உண்மைதான்! பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம் தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

மோக்ஷம் என்பது செத்துப் போன பிறகு வேறு எந்த லோகத்திற்கோ போய் அனுபவிப்பது அல்ல. கை கண்ட பலனாக இந்த உலகில் இருக்கும் போதே நமக்குக் கிடைக்க வேண்டும். நல்லது செய்தால் நல்லது விளையும். இப்போதெல்லாம் கஷ்டம், சுகம் என்று அழுது கொண்டு இருந்து விட்டு செத்துப் போன பின் மோக்ஷம் கிடைக்கிறது என்பதில் பிரயோஜனம் இல்லை. பிரதி பலன் கருதாது நீ செய்யும் கர்மங்களுக்கு கிடைக்கும் ஆனந்தமே மோக்ஷம். இது இப்பிறவியிலேயே கிடைக்கும்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Moksha is not an experience to realize after we die and go to some other place. It needs to be experienced right here while we live in this world. If we do good things we reap good benefits. There is no point in getting Moksha if all through our life we complain about good and bad experiences. Moksha is nothing but a blissful state for all the Karmas we do without any expectations. That can be attained in this Janma itself. – Sri Kanchi Maha Periyava

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
பெரியவாளின் அம்மா வீட்டில் எதிரொலிக்குது வேத கோஷம் ..!!!
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்ப கோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை ஒன்று உண்டு. நடமாடும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் பிறந்த புண்ணிய பூமி இது!ஈச்சங்குடி நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் மகாலக்ஷ்மி. வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத்துக்கும், 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. இவர்களின் இரண்டாவது புதல்வனுக்கு, சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை மனதுள் நினைத்து, சுவாமிநாதன் என நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுவாமிநாத ஸ்வாமியைப் போல், தன் மகன் இந்த உலகுக்கே ஞான உபதேசம் செய்யப் போகிறான் என அவர்கள் அறியவில்லை!
ஒருநாள்… காஞ்சி சங்கர மடத்தின் ஆச்சார்யராகப் பொறுப்பேற்கிற பாக்கியம் கிடைத்தபோது, பெற்ற வயிறு குளிர்ந்துபோனது மகாலக்ஷ்மி அம்மாளுக்கு!
காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார்; தேசமெங்கும் யாத்திரை மேற் கொண்டார்; அனைவருக்கும் ஆசி வழங்கி, அருளினார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா எனப் பெருமையுடன் சொல்லிப் பூரித்தனர்.
ஒருமுறை (14.6.1932), ஆந்திர மாநிலத்தின் நகரியில் முகாமிட்டிருந்தார், காஞ்சி மகான். அப்போது, கும்பகோணத்தில் உள்ள அவருடைய தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆச்சார்யக் கடமையை நிறைவேற்றும் வகையில், நீராடிய சுவாமிகள், அந்தணர்களுக்குத் தானம் அளித்து, தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார்.
பெரியவாளின் மனதுள் மெல்லியதான அந்த எண்ணம் ஒருநாள் உதித்தது. ‘ஈச்சங்குடியில் உள்ள, அவருடைய தாயார் பிறந்த இல்லத்தை வேத பாடசாலையாக்க வேண்டும்; அந்த இடத்தில், எப்போதும் வேத கோஷம் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்’ என விரும்பினார் பெரியவாள்.
காலங்கள் ஓடின. 93-ஆம் வருடம். காஞ்சி மகாபெரியவாளின் பக்தரான ஹரி, பெங்களூருவில் இருந்து, அவரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார்.
அவரிடம் பெரியவா, ”ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு விரும்பறே! நல்லது, பண்ணு!” எனச் சொன்னதும், நெகிழ்ந்துவிட்டார் அவர்.
அந்தக் கோயில் குறித்தும், ஸ்ரீகச்சபுரீஸ்வரர் குறித்தும், ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை குறித்தும் விரிவாக எடுத்துரைத்த பெரியவா, சிறு வயதில் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும், அங்கே அமர்ந்து வேதங்கள் கற்றதையும் விவரித்தார்.
என்ன நினைத்தாரோ… சட்டென்று அன்பரிடம்”ஒரு உபகாரம் பண்ண முடியுமோ?” என்றவர், ஈச்சங்குடியில் உள்ள தாயாரின் இல்லம் குறித்தும், அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி, ”இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்” என்றார் காஞ்சி மகான். உடனே ஹரி, ”இது என் பாக்கியம்! என் பாக்கியம்!’ என்று சொல்லி, ஆனந்தத்தில் அழுதேவிட்டார்.
‘எத்தனையோ கோயில்களைப் புனரமைத்தவர் மகாபெரியவா! பூமிக்குள் மறைந்து கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டி, அந்தக் கோயிலை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான். தான் சம்பந்தப்பட்ட எண்ணம், தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால் இத்தனை வருடங்களாக எவரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாரே!’ என, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும் வியந்துபோய்ப் பெரியவாளைப் பார்த்தனர்.
பிறகென்ன… அந்த வீடு, விலைக்கு வாங்கப்பட்டது. அன்பர்களின் கூட்டு முயற்சியில், வேத பாடசாலைப் பணிகள் துவங்கின. புதிதாகத் துவங்கும் வேத பாடசாலையில், குரு பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி. அன்றைய தினம், 8.1.94. அதாவது, தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம், அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யாருக்குத்தான் தெரியும்?!
பெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல், ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்’ என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டார். அன்பரை ஆசீர்வதித்தார்.
வேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப் பெரியவாளிடம் காட்டினர். அதை வாங்கிப் படித்தவர், அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை அன்பரிடம் தந்தார். ”இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.
ஈச்சங்குடி வேத பாடசாலை, அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால், வேத பாடசாலையில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழ்த் தளத்தில் வேத பாடசாலை, மேல் தளத்தில் பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரியவாளின் தாயாரால் வணங்கப் பட்டு, பெரியவாளின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஸ்ரீகச்சபுரீஸ்வரர் கோயில், அழகுறத் திகழ்கிறது. இவரை வணங்கினால், நிலம் மற்றும் வாஸ்து பிரச்னைகள் யாவும் நீங்கி, வீடு- மனையுடன் குறையின்றி வாழ்வர் என்பது ஐதீகம்!
அருகில் உள்ள வேத பாடசாலைக்குச் சென்று, அங்கேயுள்ள பெரியவாளின் பாதுகைகளை நமஸ்கரித்தால், ஞானகுருவின் பேரருளும் கிடைக்கும் என்பது உறுதி!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

திருமணவரம் அருளும் மகான் சித்தமல்லி பூஜ்யஸ்ரீ சுப்ரமண்ய யதீந்திராள்

பூஜ்யஸ்ரீ சுப்ரமண்ய யதீந்திராள் சித்தமல்லி கிராமத்தில் 1866ம் ஆண்டு பெரிய தனவந்தரான கோதண்டராம ஐயர் என்பபவருக்கும் செங்கம்மாள் என்பவருக்கும் மகனாகப்பிறந்தார். இவர் இளம் வயதிலேயே சாஸ்த்திரம் மற்றும் வேதங்களைக் கற்று மிக பண்டிதராக விளங்கினார். மஹாமகோபாத் யாய மன்னார்குடி ராஜு சாஸ்திரிகளிடம் கல்விகற்றார்.
ஒருநாள் ராஜீ சாஸ்திரிகள் பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது சரியாக கவனிக்காதால் குருவின் கோபத்திற்கு ஆளானார். ஆனால், அந்தபாடத்தை யும், வேதாந்தத்தையும் அதேநாளில் ஆற்றிய உரையின் மூலம் குருவின் அன்புக்கு பாத்திரமானார்.
மகாபெரியவாள் 1908 பட்டத்திற்கு வந்தவுடன் இவரும் ஒரு குருவாக இருந்து வேதங்கள் முதலியவற்றை அவருக்கு கற்றுத் தந்தார். மடத்தில் சிலகாலங்கள் தங்கி வரவு செலவு கணக்குகளை பார்த்தார். மடமானது மிக்க பணக் கஷ்டத்தில் இருந்தபோது தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.

ஒரு சமயம் பெரியவாள் உபன்யாசம் செய்து கொண்டிருந்த பொழுது அவசர வேலையாள் இவரை தொடர சொல்ல இவரும் உபன்யாசத்தை தொடர்ந்து எல்லாருடைய பாராட்டுதல்களைப் பெற்றார். பெரியவா இவரை நடமாடும் நுõலகம் என்று ஒரு பட்டம் கொடுத்தார்.

அவருக்கு ஓலைச்சுவடிகள் படிக்கத்தெரியும். அவருக்கு இருந்த ஞாபகசக்தியால் அவர் ஏக "சங்ஹாக்ரஹி ' என்று அழைக்கப்பட்டார். அதாவது ஒரே நேரத்தில் படிக்கவும். எழுதவும் அதே வேகத்தில் வெளிப்படுத்தவும் உள்ள திறமை உள்ளவர் என்று அர்த்தம்.
ஒரு முறை மயிலாடுதுறை யில் யாத்திரை மேற்கொண்டிருந்த மகாபெரியவாள் அருகே உள்ள கிராமமான கோழிகுத்தியில் சரஸ்வதி அம்மாள் என்பவரது இல்லத்தில் தங்கி இருந்தபடி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். ஒரு நாள் திரண்டு இருந்த பக்தர் கூட்டத்தில் நடுவே உரை நிகழ்த்தினார் மகாபெரியவாள். தனது பேச்சில் ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்த்திரிகளை வெகுவாகப் புகழ்ந்தார். பொதுவாக ஒன்று இருந்தால் இன்னொன்று இருக்காது. பணம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது. பணம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது.கல்வி பணம் இரண்டும் இருந்தால் அங்கே குழந்தை செல்வம் இருக்காது. இவை மூன்றும் ஒருசேர உள்ள வீட்டில் யாருக்கேனும் உடல்நலக்கோளாறு இருக்கும். ஒருவேளை இவை நான்கும் சுபமாக <உள்ள வீட்டில் நிம்மதி இருக்காது. இது பரவலாக நாம் பார்க்கக்கூடிய நிஜம். ஆனால், இதற்கு விதிவிலக்கானவர் சித்தமல்லி சுப்ரமண்ய சாஸ்த்திரிகள் பக்தி,பிடிப்பு,செல்வம், ஆரோக்கியம், குழந்தைப்பேறு என ஒருங்கே பெற்றவர். இவர். இது இறைவனின் அருள் இப்போது அவருடைய மகளின் கிரஹத்தில் தங்கிய படிதான் உரைநிகழ்த்திக் கொண்டிருக்கிறேன் என்றாராம்.
சுப்ரமண்ய சாஸ்திரிகள் மகாபெரியவாளைச்சந்தித்து எனக்கு ஆபத்சந்நியாசம் வழங்குங்கள் என்றாராம். இதையடுத்து சில நாட்களில் சுப்ரமண்ய சாஸ்திரிகளின் உடல்நிலை மோசமானது அப்போது காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் இருந்து சாஸ்திரிகளுக்கு ஆபத்சந்நியாசம் வழங்குவதற்காக இரண்டு பண்டிதர்கள் சித்தமல்லி வந்தனர். ஆபத்சந்நியாசம் எடுத்துக் கொண்டால் மூன்று நாட்கள் மட்டுமே வீட்டில் தங்கலாம். அவர் உடல் நிலைமோசமானது . அவருக்கு சந்நியாசம் கொடுக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாள் சாஸ்திரிகள் உடல்நிலையில் நல்ல மாற்றம் தெரிந்தது. மறுநாள் தர்மப்படி சாஸ்திரிகள் வேறு இடத்தில் தங்கவேண்டும். அதற்காக மடம் ஒன்றும் தயார் செய்யப்பட்டது. அங்கிருந்து அனைவருக்கும் ஆசி அளித்தவர் கிலோகணக்கில் கற்பூரத்தைக் கொண்டு வந்து ஏற்றச்சொன்னார். கற்பூரம் கொழுந்து விட்டு எரியும் போது சாஸ்திரிகள் சிரசில் இருந்து ஆத்மஜோதி புறப்பட்டு கற்பூரஜோதியுடன் இரண்டற கலந்து வானவெளியில் செல்வதைக்கண்டதாக சொல்வர்.
அதேநேரத்தில் காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மகாபெரியவாள் அதோ சுப்ரமண்ய சாஸ்திரிகள் மோட்சத்துக்கு போய்கொண்டிருக்கிறார் பாருங்கோ என்று உடன் இருந்த சிஸ்யர்கள் மற்றும் பக்தர்களிடம் வானத்தைக்காட்டிச் சொன்னாராம். இது நடந்தது 1933ம் ஆண்டில்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

கொஞ்சம் பழைய சம்பவம் இது..காஞ்சி மடத்தில் அந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தர்க்க சாஸ்திரக் கூட்டங்கள் நடக்கும்.
‘சதஸ்’ என்பார்கள்.இது போன்ற நாட்களில் மடமே களை கட்டி இருக்கும். விழாக் கோலம் பூண்டிருக்கும். வேத முழக்கங்கள் காதில் தேனாகப் பாயும்.
மகா பெரியவாள் நடு நாயகமாக கம்பீரமான ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்க, பெரிய பெரிய பண்டிதர்கள்,வித்வான்கள் போட்டி போட்டுக் கொண்டு
இந்த சதஸில் கலந்து கொள்வார்கள்.அவர்களின் முகத்தில் தென்படும் தேஜஸைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் கற்ற வித்தையைக் கண் கொண்டு
உணர முடியும். ஆன்மிகம்,ஆகமம்,சாஸ்திரம்,சம்பிரதாயம் என்று பல தலைப்புகளுடன் விவாதங்கள் ஆதாரபூர்வமாக அனல்
பறக்கும் வாதங்கள்
பூதாகரமாகக் கிளம்புகின்ற சந்தர்ப்பங்களில் பெரியவா இன்முகத்துடன் தலையிட்டு அதற்கு ஒரு தீர்ப்பைச் சொல்லி முடித்து வைப்பார்.
பண்டிதர்கள் சமாதானம் ஆவார்கள்.
இந்த விவாதங்களில் கலந்து கொள்ளும் பண்டிதர்களுக்கு கலைமகளின் ஆசி நிரம்பவே உண்டு. ஆனால் அலைமகளின் ஆதரவு கொஞ்சமும் இருக்காது.
அதாவது படிப்பு விஷயத்தில் ஜாம்பவான்கள்; ஆனால் லௌகீக விஷயத்தில் பெரும்பாலும் கஷ்டப்படுபவர்கள். எனவே, இதில் கலந்து கொள்ள வருகிற
அனைவருக்கும்-வயது வித்தியாசம் பாராமல் தலா நூறு ரூபாய் சன்மானமாகக் கொடுக்கும் வழக்கத்தை ஒரு முறை பெரியவாளே

ஆரம்பித்து வைத்திருந்தார்.
அது ஒரு வெள்ளிக்கிழமை….வழக்கம் போல பண்டிதர்கள் பலரும் காஞ்சி மடத்தில் உற்சாகமாகக் கூடி இருந்தனர். இதில் கலந்து
கொள்கிற பண்டிதர்கள் விஷயத்தில் சைவம்,வைணவம் என்கிற பேதம் எப்போதும் இருக்காது. மகா பெரியவர் உட்கார்ந்திருக்கும்
சதஸ் மண்டபத்தில் தாங்களெல்லாம் கலந்து கொண்டு பேசுவதையே பெரும் பேறாக எண்ணினார்கள் அவர்கள்.
சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு வைணவ பண்டிதரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்திருந்தார். அன்றைய விவாதங்கள்
வெகு விறுவிறுப்பாகப் போய் முடிந்தது. கூட்டம் முடிந்த பிறகு பெரியவா முன்னிலையில் மடத்து உயர் அதிகாரிகள்,பண்டிதர்கள்
ஒவ்வொருவருக்கும் சம்பாவனை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அனைவரும் சம்பாவனையை வாங்கிக் கொண்டு,பாதார விந்தங்களுக்கு
நமஸ்காரம் செய்து விட்டுப் புறப்பட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.
சின்ன காஞ்சிபுரத்து வைணவ பண்டிதரின் முறை வந்தது. மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு சம்பாவனையைப் பெற்றுக் ண்டார்.முழு நூறு
ரூபாய் நோட்டை சம்பாவனையாகப் பெற்றவரின் முகத்தில் ஏனோ மலர்ச்சி இல்லை. மாறாக வாட்டம் தெரிந்தது. காரணம்-அவருக்கு முன்னால் சம்பாவனை
வாங்கியவன்- சிறு வயது பாலகன் ஒருவன். “அவனுக்கும் நூறு ரூபாய்….எனக்கும் நூறு ரூபாய்தானா?” என்கிற வாட்டம்தான் அது.

பரப்பிரம்மம் இதை எல்லாம் அறியாமல் இருக்குமா? “என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே…திருப்திதானே என்று கேட்டு வைத்தார்.
தன்னுடைய இயலாமையைப் பெரியவாளுக்கு முன் காட்டக் கூடாது என்கிற சபை நாகரிகம் கருதி,உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல்
“சந்தோஷம் பெரியவா..நான் புறப்படுகிறேன்” என்று தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு
வெளியேறினார்.
உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டது அந்த பரப்பிரம்மம். வேதம் கற்ற ஒரு பிராமணன்,மனம் வருந்திச் செல்வதை அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுமா
அந்தப் பரப்பிரம்மம்.
“சதஸில் கலந்து கொண்ட அனைத்து பண்டிதர்களுக்கும் சம்பாவனை கொடுத்து முடித்தாயிற்று” என்று ஓர் உயர் அதிகாரி மகானின் காதில் சென்று
பவ்யமாகச் சொன்னார். “சரி…தரிசனத்துக்கு வர்றவாளை வரச் சொல்லுங்கோ, பாவம், ரொம்ப நேரம் வெயிட் பண்றா” என்று உத்தரவிட்டார் மகா பெரியவா.
முதலில், சென்னையில் இருந்து வந்திருந்த வக்கீல் ஒருவர் குடும்பத்தினருடன் முன்னால் நின்றார். இரண்டு மூன்று பெரிய மூங்கில் தட்டுகளில் பல வகையான
கனிகள்,புஷ்பங்கள்,கல்கண்டு முந்திரி,திராட்சை என்று ஏகத்துக்கும் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார். பெரியவாளின் திருவடி முன் அந்த மூங்கில் தட்டுகளை
வைத்து விட்டு குடும்பத்தினருடன் விழுந்து நமஸ்கரித்தார். கையோடு தான் கொண்டு வந்திருந்த ஒரு ருத்திராட்ச மாலையைப் பெரியவாளின் திருக்கரங்களில்
கொடுத்து விட்டு,ஆசிர்வாதத்துடன் திரும்பத் தருமாறு வேண்டினார். பரப்பிரம்மமும் அதைத் தன் கையால் தொட்டு ஆசிர்வதித்து,ஒரு சின்ன பூக்கிள்ளலுடன்
திரும்பக் கொடுத்தார்.

உடல் வளைந்து,முகம் மலர- சாட்சாத் அந்த மகேஸ்வரனிடம் இருந்தே ருத்திராட்ச மாலையை வாங்கிக் கொள்ளும் பாவனையில் பெற்றுக்
கொண்ட வக்கீலின் முகம் ஏகத்துக்கும் பிரகாசமாகியது.பிறகு, “பெரியவா……..ஒரு விண்ணப்பம்…” என்று இழுத்தார் வக்கீல்
“சித்த இருங்கோ…” என்று அவரிடம் சொன்ன பெரியவா, பார்வையை வேறு பக்கம் திருப்பி.கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு சிஷ்யனை சைகை காட்டி அழைத்தார்.
அந்த சிஷ்யன் வேகவேகமாக வந்து பெரியவாளின் முன் வாய் பொத்தி பவ்யமாக நின்றான். அவர் சொல்லப் போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தான். “சின்னக்
காஞ்சிபுரத்துலேர்ந்து இப்ப வந்துட்டுப் போனாரே, ஒரு அய்யங்கார் ஸ்வாமிகள்…..நீதான் பார்த்திருப்பியே..அவர் வெளியேதான் இருப்பார்..இல்லேன்னா மண்டபம்
பஸ் ஸ்டாண்டுல பாரு..பஸ்ஸுல உக்காந்துண்டிருப்பார். போய் நான் கூப்பிட்டேன்னு சட்டுன்னு அழைச்சிண்டு வா” என்றார்.
உத்தரவு வந்த அடுத்த நிமிடம் றெக்கை கட்டிப் பறந்தான் அந்த சிஷ்யன்.மடத்து வாசலில் பரபரவென்று தேடினான். ஐயங்கார் ஸ்வாமிகள் சிக்கவில்லை. அடுத்து,
பெரியவா சொன்னபடி கங்கைகொண்டான் மண்டபத்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான். அங்கே சின்ன காஞ்சிபுரம் செல்வதற்கு தயாராக பஸ் நின்றிருந்தது. நடத்துனர்
டிக்கெட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார். விறுவிறுவென்று அதில் ஏறிப் பயணிகளைப் பார்வையால் துழாவினான்.ஜன்னலோரத்து இருக்கை ஒன்றில் அந்த
ஐயங்கார் ஸ்வாமிகள் சிஷ்யனது பார்வை வளையத்துக்குள் சிக்கி விட்டார்.
அவர் அருகே போய், “பெரியவா உங்களை உடனே கூட்டிண்டு வரச் சொன்னார்” என்றான். இதைச் சற்றும் எதிர்பாராத ஐயங்கார்
ஸ்வாமிகள்,விஷயம் என்ன ஏதென்று உணராமல், “அம்பீ…..முப்பது காசு கொடுத்து சின்ன காஞ்சிபுரத்துக்கு டிக்கெட் வாங்கிட்டேன். நான் இப்ப இறங்கி வந்தா முப்பது
காசு வீணாகிப் பொயிடுமேடா” என்றார்.
சிஷ்யனுக்கு சுரீரென்று கோபம் வந்தது, “அது என்னமோ தெரியல.. உங்களை உடனே கூட்டிண்டு வரணும்னு பெரியவா எனக்கு உத்தரவு போட்டிருக்கா.அவா உத்தரவை
என்னால மீற முடியாது. அந்த முப்பது காசு டிக்கெட்டைக் கிழிச்சுப் போடுங்கோ..கையோட உங்களுக்கு முப்பது காசு நான் தர்றேன்” என்று அடமாகிப் பேசிக்
கொண்டிருப்பதைப் பார்த்தார் ஐயங்கார் ஸ்வாமிகள்.
நடந்து கொண்டிருக்கும் சம்பாஷணையைக் கவனித்த நடத்துனரே “ஐயரே [ஐயங்காரே]… அந்த டிக்கெட்டை என்கிட்ட கொடு.முப்பது
காசு நான் தர்றேன். மடத்து சாமீ கூப்பிடுதுன்னு தம்பி எவ்ளோ அடம் பண்றான். ஏதாச்சும் முக்கிய விஷயமாத்தான் இருக்கும்.
போய்ப் பாரேன்.
அவனவன் தவம் இருந்து அவரைப் பாக்கறதுக்காக எங்கிருந்தோ வர்றான். கூப்பிட்டா போவியா?” என்று சிடுசிடுவென்று சொல்ல….வேஷ்டியில் சுருட்டு வைத்திருந்த
கசங்கலான டிக்கெட்டை நடத்துநரிடம் கொடுத்து விட்டு, முப்பது காசு வாங்கிக் கொண்டுதான் கீழே இறங்கினார்
ஐயங்கார் ஸ்வாமிகள்.

மகா பெரியவாளின் உத்தரவைப் பூர்த்தி செய்து விட்ட தோரணையில் மடத்துக்குள் கம்பீரமாக ஐயங்கார் ஸ்வாமிகளுடன் நுழைந்தான்
சுறுசுறுப்பான அந்த சிஷ்யன்.அதற்குள் பெரியவாளைச் சுற்றி ஏகத்துக்கும் கூட்டம் சேர்ந்திருந்தது. உள்ளே நிழையும் இந்த இருவரையும் தன் இடத்தில் இருந்தே பார்த்து
விட்டார், ஸ்வாமிகள். அங்கே நெருங்கியதும் பவ்யமாக வாய் பொத்தி நின்றார் சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்.
“என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே…கண்டக்டர் கிட்டேர்ந்து முப்பது காசு வாங்காம பஸ்ஸை விட்டு நீர் இறங்க மாட்டீராக்கும்?” என்று கேட்டு பவ்யமாக சிரித்தபோது ஐய்யங்கார்
ஸ்வாமிகள் அதிர்ந்து விட்டார்.சிஷ்யன் சாதுவாக இருந்தான். அவன் இது மாதிரி அனுபவங்களை
ச்சந்தித்திருக்கிறான் போலிருக்கிறது. இவர்களைச் சுற்றி இந்த சம்பாஷணையின் விவரம் புரியவில்லை.
சென்னை வக்கீல் ஆசாமி இன்னமும் மகா பெரியவா முன்னாலேயே வாய் பொத்தி அமர்ந்திருந்தார். திடீரென “பெரியவா…ஒரு விண்ணப்பம்..” என்று முன்பு ஆரம்பித்த
மாதிரியே மீண்டும் தொடர்ந்தார்.
“சித்த இருங்கோ…உங்க விஷயத்துக்குத்தான் வர்றேன்..” என்ற ஸ்வாமிகள் ஐயங்காரை வக்கீலுக்கு அருகே உட்காரச் சொன்னார். அமர்ந்தார். ; பிறகு “வக்கீல் சார் இவரோட
அட்ரஸைக் கேட்டுக் கொஞ்சம் தெளிவா குறிச்சுக்கோங்கோ” என்றார் காஞ்சி மகான்.
இவருடைய அட்ரஸை நான் ஏன் குரித்துக் கொள்ள வேண்டும்? என்று விவரம் ஏதும் கேட்காமல்,கைவசம் இருந்த குறிப்பேட்டில், ஐயங்கார் ஸ்வாமிகள் அவரது விலாசத்தைச்
சொல்ல சொல்ல ..தன்வசம் இருந்த குறிப்பேட்டில் தெளிவாகக் குறித்துக் கோன்டார் வக்கீல்.
“நீர் புறப்படும் ஐயங்கார் ஸ்வாமிகளே…அடுத்த பஸ் மண்டபம் ஸ்டாண்டுக்கு வந்துடுத்து.அந்த கண்டக்டர் ரிடர்ன் பண்ண அதே முப்பது காசுலயே இப்ப வேற டிக்கெட்
வாங்கிடுங்கோ” என்று சொல்லி, அந்த மண்டபமே அதிரும் வண்ணம் பலமாகச் சிரித்தார் ஸ்வாமிகள்.
ஐயங்கார் ஸ்வாமிகள் குழம்பி விட்டார். “முப்பது காசுக்கு இந்த சிஷ்யன்கிட்ட நான் தகராறு பண்ணது இவருக்கு எப்படித் தெரியும்?” என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும்,
எதற்காக அந்தப் புது மனிதரிடம் [வக்கீல்] என் விலாசத்தைச் சொல்லச் சொன்னார்? யார் அவர்?
அவர் வீட்டில் நடக்கப் போகிற கல்யாணம் எதுக்காவது எனக்குப் பத்திரிகை அனுப்பப் போகிறாரா? எதுவும் புரிய மாட்டேங்குதே?” என்று குழம்பி தவித்தபடி மடத்தை விட்டு
வெளியே வந்து மண்டபம் பஸ் ஸ்டாண்டை அடந்தார்.
பெரியவா சொன்ன மாதிரியே அடுத்து ஒரு பஸ் இவருக்காகக் காத்திருந்தது மாதிரி புறப்படும் நிலையில் காணப்பட்டது. விறுவிறுவென்று ஏறி, காலியாக இருந்த ஜன்னல்
ஓரத்து இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.
ஐயங்கார் ஸ்வாமிகள் பத்திரமாக சின்ன காஞ்சிபுரம் போகட்டும். நாம் மடத்துக்குள் மீண்டும் போவோம்.
சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள் விலாசத்தைக் குறித்துக் கொள்ளுமாறு வக்கீலிடம் ஏன் சொன்னார் காஞ்சி ஸ்வாமிகள்.



விஷயத்துக்கு வருவோம். சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகளின் முகவரியை மகா பெரியவர் சொன்னபடி தன்னிடம் இருந்த குறிப்பேட்டில் குறித்துக் கொண்ட
சென்னை வக்கீல், “பெரியவா…ஒரு விண்ணப்பம்……நானும் இதோட மூணு முறை இந்தப் பேச்சை ஆரம்பிச்சுட்டேன் …” என்று தொய்வான குரலில் இழுத்தார்.
“உன்னோட விண்ணப்பம்தாம்ப்பா இப்ப பூர்த்தி ஆயிண்டிருக்கு.அதான் முடிஞ்சுடுத்தே.”
“இல்லே பெரியவா…என்னோட விண்ணப்பத்தை நான் இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலியே…”.என்று தயங்கினார் வக்கீல்.
“உன்னோட விண்ணப்பம் என்ன…. கஷ்டப்படற- வேதம் படிச்ச ஒரு பிராமணனுக்கு மாசா மாசம் ஏதேனும் பணம் அனுப்பணும்னு ஆசைப்படறே…அதானே?” என்று
புருவத்தைச் சுருக்கிக் கேட்டது அந்தப் பரப்பிரம்மம்.
வக்கீலுக்குப் பேச்சு எழவில்லை.”ஆமாமாம் பெரியவா….அதேதான்…அதேதான்!”
இப்ப குறிச்சிண்டியே ஒரு அட்ரஸ், அதாம்ப்பா சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்….நீ தேடற ஆள் அவர்தான். அதான் பஸ்லேர்ந்து அவரை எறக்கிக் கூட்டிண்டு
வந்துட்டானே அந்தப் பொடியன்? இப்ப என்ன பண்றே…”-பெரியவா இடைவெளி விட்டார்.
“பெரியவா சொல்லணும்…நான் கேட்டுக்கணும்….”- வக்கீல் வாய் பொத்தி பவ்யமாக, அந்த மகானின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“இந்த மாசத்துலேர்ந்து ஒரு இருநூத்தம்பது ரூபாயை அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் அட்ரஸுக்கு மணி ஆர்டர் பண்ணிடு.ஒரு மாசம் கூட தவறப்படாது. ஏன்னா நாலு மாசம்
வந்துட்டு,அஞ்சாவது மாசம் பணம் வரலேன்னா, ஐயங்கார் ஸ்வாமிகள் என்னண்ட வந்துட்டு, “சும்மா
மடத்துப் பக்கம் வந்தேன் பெரியவா”னு சொல்லித் தலையை சொறிஞ்சிண்டிருப்பார். பாவம்,நல்ல மனுஷன் காசுக்குக் கொஞ்சம் கஷ்டப்படுகிறார். அவ்ளோதான்.”
“பெர்யவா உத்தரவுப்படி தொடர்ந்து அவருக்குப் பணம் அனுப்பிடறேன்” என்று சொன்ன சென்னை வக்கீல் குடும்ப சமேதராக மீண்டும் பெரியவாளின் திருப்பாதங்களில்
விழுந்து வணங்கினார். உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
இதை அடுத்து வந்த சில மாதங்களுக்கு ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மணி ஆர்டர் சரியாக வந்து சேர்கிறதா என்று மடத்து ஊழியர்களை விட்டுப் பார்க்கச் சொல்லி திருப்தி
அடைந்தார் அந்த மகான்


ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
பெரியவாளின் அற்புத விளக்கம்"‘ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?’

கவிராயரின் ஸ்ரீரங்கநாதப் பாடல்

அதுதான் நான் சொன்ன நிந்தா ஸ்துதிப் பாட்டு. என் நினைவிலே இப்ப கொஞ்ச நாளாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் பாட்டு. உங்களுக்கும் தெரிவிக்க ஆசைப்படும் பாட்டு.

முன்னெல்லாம் இங்கே வருகிற ரொம்பப் பேர் பாடிக் காட்டின பாட்டுதான் அது. ஆனால் அப்படி ‘ஃபேமஸா’க இருந்தது கொஞ்ச வருஷமாகக் காதில் படவேயில்லை.

எனக்குப் பாட வராது. இருந்த தொண்டையும் போய்விட்டது. பரவாயில்லை. இப்போது ஸாஹித்யந்தான் முக்யம்; ஸங்கீதம் இல்லை. அதனால் ‘டெக்ஸ்’டை மட்டும் சொல்கிறேன்.

(இப்படிச் சொன்னாலும் நல்ல இசைப் புலமையும் குரலும் கொண்ட ஸ்ரீசரணர் இப்பாடலையும் பின்னர் வர இருக்கும் இன்னொரு பாடலையும் வசனமாகச் சொல்லிப் போகும்போது ஆங்காங்கே மனத்துக்குள்ளேயோ, மெல்லிசாக வாய்விட்டுமே கூடவோ அழகாகப் பாடவுந்தான் செய்தார்.)

அரங்கம் என்று ஸபை கூட்டிவிட்டு அங்கே ஸ்வாமி படுத்துக் கொண்டிருப்பது விசித்ரமாயிருக்கிறது என்று முன்னே பார்த்தோமில்லியா? அதையேதான் கவிராயர் ‘டாபிக்’காக எடுத்துக் கொண்டு, ‘படுத்துக் கொண்டதற்குக் காரணம் இதுவா, இல்லாவிட்டால் இதுவா?’ என்று நிறையக் கேள்வி அடுக்கிக்கொண்டே போகிறார். அதிலே ஹாஸ்யம், பரிஹாஸம் எல்லாம் இருக்கும். ஆனாலும் வெடித்துக் கொண்டு வராமல், ‘ஹாஸ்ய வெடி’ என்கிற மாதிரி இல்லாமல், கொஞ்சம் ஸுக்ஷ்ம நயத்தோடே மறைமுகமாகவே இருக்கும்.

‘ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?’

என்று முதல் கேள்வி.

‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? ஸ்ரீரங்கநாதரே! நீர் –

ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?’

அதுதான் பல்லவி.

அப்புறம் அநுபல்லவி. அதிலே நிந்தா ஸ்துதி எதுவுமில்லாமல் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பேர் சொல்லாமல் அழகான கவிதை பாஷையில் காவேரி வர்ணனையுடன், காவேரியின் பெயரையும் சொல்லாமல், பாடியிருக்கிறார். காவேரி இரண்டாகப் பிரிந்து ஓடுகிற இடமாகத்தானே ஸ்ரீரங்கம் இருக்கிறது? அதைச் சொல்கிறார்:

ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே – அவதரித்த

இரண்(டு) ஆற்றுநடுவிலே (ஏன் பள்ளி கொண்டீரையா ?)

‘ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே’ என்றால், ‘ஆம்பல் என்கிற அல்லி ஜாதிப் புஷ்பம் பூத்து அசைந்து ஆடுகிற மலைச் சுனையில்’ என்று அர்த்தமில்லை. ‘பூத்தசைய’ என்பது ‘பூத்து அசைய’ என்று இரண்டு வார்த்தையாகப் பிரியாது. ‘பூத்த’ ஒரு வார்த்தை; ‘சைய’ ஒரு வார்த்தை என்றே பிரியும். ‘சையம்’ என்பது ‘ஸஹ்யம்’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையின் திரிபு – ‘மத்யம்’ என்பது ‘மையம்’ என்று தமிழில் ஆனமாதிரி ‘ஸஹ்யம்’ என்பது ‘சைய’மாயிருக்கிறது. ஸஹ்ய பர்வதம், ஸஹ்யாத்ரி என்று மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. அதிலுள்ள ஒரு சுனைதான் தலைக்காவேரி என்று காவேரியின் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது. கொடகுதேசத்திலுள்ள அங்கே பிறந்து முன்னே மைஸுர் ராஜ்யமாயிருந்த கன்னட தேசம் வழியாகப் பாய்ந்து, சேலம் ஜில்லாவிலே தமிழ் தேசத்துக்குள் ப்ரவேசித்து, அப்புறம் திருச்சிராப்பள்ளிக்கு வருகிற காவேரி, அங்கே காவேரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிகிற இடத்திலேயே ஸ்ரீரங்கம் இருக்கிறது. அதை இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டு காவேரி பாய்கிறாள்.

கல்யாணப் பெண் வரனுக்கு மாலை போடுகிறது வழக்கமென்றால் இங்கேயோ அப்படிக் காவேரி கல்யாணப் பெண்ணானபோது தானே மாலையாகி திருமாலை இரண்டு பக்கமுமாக அணைத்துக் கொண்டிருக்கிறாள்! அதனால் அந்த ஸ்ரீரங்கநாதனை லக்ஷ்மீநாராயணன், ஸீதாராமன் என்கிற மாதிரி அவள் பேர் சேர்த்து – அதுவும் முன்னாடியே சேர்த்து: ‘மிஸ்ஸிஸ்’ஸில் பத்னி பேருக்குப் பின்னாடி புருஷன் பேர் சேர்க்கிற மாதிரியில்லாமல் இங்கே மிஸ்டர் பேருக்கு முந்தி மிஸ்ஸிஸ் பேர் சேர்த்து – காவேரி ரங்கன் என்று சொல்வதாயிருக்கிறது.

உபய காவேரி என்று இரண்டாகப் பிரிந்து ஏற்பட்ட இட மத்தியிலே ஸ்வாமி பள்ளி கொண்டிருப்பதைத்தான் ‘இரண்டாற்றின் நடுவிலே’ என்று பாடியிருக்கிறார்.

காவேரி ஸஹ்யாத்ரியில் உற்பத்தியாவதை, அவள் புனிதமான திவ்ய தீர்த்தமானதால் உற்பத்தி என்று சொன்னால் போதாது என்று, அவதாரம் பண்ணினதாகவே ‘அவதரித்து’ என்று உசத்திச் சொல்லியிருக்கிறார்.

அவதாரம் என்ற வார்த்தையைப் போட்டாரோ இல்லையோ, அவருக்கு ரங்கநாதனின் அவதாரமான ராமசந்த்ரமூர்த்தியிடமே மனஸ் போய்விட்டது! ஸந்தர்பவசாத் அவர் ரங்கநாதனைப் பாடும்படி ஏற்பட்டாலும் அவருக்குப் பிடிமானம் என்னவோ ராமனிடம், ராம கதையிடம்தான்! அதனால், ‘பல்லவி – அநுபல்லவிகளில் க்ஷேத்ர மூர்த்தியைப் பிரஸ்தாவித்தாயிற்று; அது போதும்’ என்று சரணத்தில் இஷ்ட மூர்த்தியான ராமனுக்கே, பாலகாண்டம் தொடங்கி அவன் கதைக்கே, போய்ப் பாட ஆரம்பித்து விட்டார்!

வியங்கியமான (மறைமுகமான) நிந்தா ஸ்துதியும் இங்கேயிருந்துதான் ஆரம்பம். இஷ்டமானவர்களிடந்தானே ஸ்வாதீனம்?

கோசிகன் சொல் குறித்ததற்கோ?

கோசிகன் என்பது குசிக வம்சத்தில் பிறந்ததால் விச்வாமித்ரருக்கு ஏற்பட்ட பெயர். ராமர் அவதார காரியமாக முதல் முதலில் பண்ணினது விச்வாமித்ரர் சொல்படி தாடகை மேலே பாணம் போட்டதுதான். ‘அப்படிப் பண்ணும்படி பெரிய மஹர்ஷி சொல்லி விட்டார். ஆனாலும் ஸ்த்ரீ ஹத்தி கூடவே கூடாது என்று சாஸ்த்ரமாச்சே!’ என்று ராமர் தயங்கத்தான் தயங்கினார். தர்ம விக்ரஹம் என்றே பெயர் வாங்கப் போகிறவரில்லையா, அதனால்! அந்தக் கோசிகரோ, “லோகத்துக்குப் பெரிய உத்பாதத்தை உண்டாக்குபவர் விஷயத்தில் ஸ்த்ரீ-புருஷ பேதமெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. போடு இவள் மேல் பாணம்!” என்றார். விநய விக்ரஹமுமான ஸ்வாமி மறுக்க முடியாமல் அப்படிப் பண்ணி விட்டார்.

அப்போது பண்ணினாரே தவிர அப்புறம் மனசு ஸமாதானமாகவில்லை. ‘தர்மத்தில் ‘இப்படியா, அப்படியா?’ – சொல்லமுடியாத ஒரு இரண்டும் கெட்டான் விஷயத்தில், தர்மஸங்கடம் என்பதில், எதுவோ ஒன்றைப் பண்ணிவிட்டோம். அதுதான் ஸரி என்று அடித்துச் சொல்ல முடியாது போலிருக்கே!’ என்று ரொம்பவும் வியாகுலப்பட்டார்.

தீராத வியாகுலம் என்றால் அதைத் தீர்க்கமுடியாவிட்டாலும் ஏதாவது தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்கிப் போய் மறக்கவாவது செய்வோம் என்று தோன்றும் – இல்லியா?

“அப்படி ஏதோ சாப்பிட்டுவிட்டுத்தான் பள்ளி கொண்டு விட்டாயோ?” என்று கேட்கிறார். அதுதான் ‘கோசிகன் சொல் குறித்ததற்கோ?’

அந்தச் சொல்லை இவர் ‘குறித்தது’, அதாவது consider பண்ணியது, பண்ணி வியாகுலப்பட்டது பின்னாடி. அப்போது உடனே பாணம்தான் போட்டார். அது குறி தப்பாமல் ராக்ஷஸியின் குலையிலே தைத்து அவள் ப்ராணனை விட்டு விழுந்தாள். “அந்த மாதிரி வேகமாக பாண ப்ரயோகம் பண்ணின ஆயாஸத்தில் அசந்து (அயர்ந்து) போய்த்தான் படுத்துக் கொண்டாயோ?” என்று அடுத்த கேள்வி:

அரக்கி குலையில் அம்பு தெறித்தற்கோ?

வில் நாணைத் தட்டிப் பார்த்து அதன் பிகு தெரிந்து கொண்டு பாணம் போடுவதுதான் ‘தெறிப்பது’.

ராமர் அநாயஸமாக, மலர்ந்த புஷ்பமாக இருந்து கொண்டேதான் மஹாஸ்திரங்களையும் போட்டது. பக்தியின் ஸ்வதந்திரத்திலும், கவிக்கு உள்ள ஸ்வதந்திரத்திலும் அவரை வேறே மாதிரியாகச் சொல்லிக் கவிராயர் சீண்டுகிறார்! அதையும் அவர் ரஸிக்கத்தான் ரஸிப்பார் என்று தெரிந்தவராகையால்!

பள்ளி கொண்டதற்கு இது காரணமில்லையென்றால்,

ஈசன் வில்லை முறித்ததற்கோ?

என்று இன்னொரு ‘பாஸிபிள்’ காரணத்தை அடுத்த கேள்வியாகக் கேட்கிறார். ஸீதையை விவாஹம் செய்து கொள்ளப் பிரியப்படுபவன் தம்மிடமிருந்த ருத்ர தநுஸை நாண் பூட்டிக் காட்ட வேண்டும் என்று ஜனகர் நிபந்தனை போட்டிருந்தார். ராமருக்கு ஒன்றும் கல்யாண ஆசையில்லை; என்றாலும் விச்வாமித்ரர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அந்தப் பந்தயத்திற்குப் போனார். போனவர் ஒரு வேகம் பிறந்து, வெறுமனே நாண் பூட்டிக் காட்டாமல் அந்த தநுஸையே உடைத்து விட்டார்! ‘அத்தனை வேகம் காட்டினது தான் பிற்பாடு உன்னை tired ஆக்கித் தூக்கம் போட வைத்து விட்டதா?’ என்று கேட்கிறார்.

அதுவும் இல்லையென்றால்,

பரசுராமன் உரம் பறித்ததற்கோ?

அப்புறம் பரசுராமர் – க்ஷத்ரிய வம்சத்தைப் பூண்டோடு அறுப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டவர் – வந்தார். ராமரிடம், “நீ உடைத்த ருத்ர தநுஸ் ஏற்கெனவே மூளியானதுதான். அந்த ஓட்டை வில்லை முறித்தது ஒன்றும் பெரிசில்லை. இதோ என்னிடம் மூளி, கீளி ஆகாத விஷ்ணு தநுஸ் இருக்கிறது. இதை நாண் பூட்ட முடியுமா, பார்! பூட்டாவிட்டால் உன்னை விடமாட்டேன்!” என்று ‘சாலஞ்ஜ்’ பண்ணினார். ராமருக்கு அதுவும் ஒரு பெரிய கார்யமாக இல்லை. பரசுராமர் கொடுத்த விஷ்ணு தநுஸையும் சிரமப்படாமலே நாண் பூட்டினார். அதோடு, பரசுராமரால் நடக்கிற க்ஷத்ரிய வம்ச நாசத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென்று நினைத்து அவருடைய சக்தி முழுதையும் கவர்வதையே குறியாகக் கொண்டு பாணப் பிரயோகமும் பண்ணி விட்டார்! அந்த முன்னவதாரக்காரர் தம்முடைய பின்னவதாரக்காரரிடம் தம்முடைய சக்தி முழுதையும் இழந்துவிட்டுத் தம்முடைய ஸம்ஹார கார்யத்தை ஸமாப்தி பண்ணினார்.

அவருடைய சக்தியை ராமர் கவர்ந்ததுதான் ‘பரசுராமர் உரம் பறித்தது’ என்று பாட்டில் வருவது.

‘சக்தி போனால் ஓய்ந்து போய்ப் படுக்கலாம். ராமருக்கோ சக்தி கூடியல்லவா இருக்கிறது? பின்னே ஏன் படுத்துக்கணும்?’ என்றால்:

அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விட்டால் அதை ஜீர்ணிப்பதிலேயே சோர்வு ஏற்பட்டுத் தூக்கம் தூக்கமாகத் தானே வருகிறது? ராமருக்கு ஏற்கனவே மஹாசக்தி. இப்போது இன்னொரு அவதாரத்தின் பெரிய சக்தியையும் சாப்பிட்டிருக்கிறார். ‘இப்படிச் சக்திச் சாப்பாட்டில் அமிதமாகப் போனதில்தான், சோர்வு உண்டாகித் தூங்கிவிடலாம் என்று பள்ளி கொண்டீரா?’ என்றே கவிராயர் கேட்கிறார்.

இன்னும் ஒரு காரணம் – கேள்வி:

மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன்

வழிநடந்த இளைப்போ?

’குற்றம் குறையே இல்லாத சுத்தையான ஸீதையுடன் காட்டுக்கு நடந்து போனாயே! அதிலே ஏற்பட்ட களைப்பினால் இளைப்பாறுவதற்கே பள்ளிகொண்டாயா?’

‘இளைப்பு’ என்றால் ஒல்லியாய்ப் போவது மட்டுமில்லை. சோர்ந்து, ஓய்ந்து போவதும் இளைப்புத் தான். அதைப் போக்கிக் கொள்வதையே ‘இளைப்பாறுவது’ என்கிறோம்.

இதற்கு மேலே, வனவாஸ காலத்திலே நடந்தவை ஸம்பந்தமாகக் கேட்கிறார்.

தூசிலாத குஹன் ஓடத்திலே கங்கைத்

துறை கடந்த இளைப்போ?

‘வேடனாயிருந்தாலும் உடம்பிலேதான் தூசி, மனஸு தூசி படாத பரம நிர்மலம் என்று இருந்த குஹனின் ஓடத்தில் கங்கையைத் தாண்டிப் போனாயே! அப்போது ஜிலுஜிலு என்றுதான் இருந்ததென்றாலும் ரொம்ப நாழிப் பிரயாணம், ஒரே மாதிரியான துடுப்போசையை மட்டும் கேட்பது ஆகியவற்றில் ஏற்பட்ட ’bore’-ல்தான், monotony-ல்தான் தூங்கினாயா?

மீசரம் ஆம் சித்ரகூட சிகரத்தின்

மிசை கிடந்த இளைப்போ?

’மீசரம்’ என்றால் உயர்ந்தது. ‘ரொம்ப உயரமான சித்ரகூட சிகரத்துக்கு ஏறிப் போய், அந்த சிரமத்தில் அங்கே அப்படியே கிடந்தாயே, அப்போது பிடித்த தூக்கம்தான் இன்னும் விடவில்லையா?’

காசினி மேல் மாரீசன் ஓடிய

கதி தொடர்ந்த இளைப்போ?

’காசினி’ என்றால் பூமிதான். இங்கே கரடும் முரடுமான காட்டு நிலம் என்று அர்த்தம் பண்ணிக்கணும். அப்படிப்பட்ட ‘காட்டு வழியிலே மாரீச மான், மானுக்கே உரிய வேகத்தோடு ஓடினபோது அதற்கு ஈடுகொடுத்துத் தொடர்ந்து போனாயே! அந்தச் சோர்வுதான் படுக்கையில் தள்ளிற்றா?’

அதற்கப்புறம் சின்னச் சின்னதாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகிறார்! பாட்டு வேக வேகமாக ஓடுகிறது!

‘மாரீச மானைத் தொடர்ந்து போனது, முதலில் ஓட்டமும் நடையுமாக, அப்புறம் அந்த ‘நடை’ கூடக் கூடாதென்று ஒரே ஓட்டமாக ஓடினாய்! அதிலே ஏற்பட்ட களைப்பில்தான் தூக்கமா?’ என்று இத்தனை ஸமாசாரத்தை,

ஓடிக் களைத்தோ?

என்று சின்ன வாசகமாக்கிக் கேட்கிறார்.

தேவியைத் தேடி இளைத்தோ?

’அப்படி இங்கே நீ மாரீசன் பின்னே ஓட, அங்கே உன் பர்ணசாலைக்கு ராவணன் வந்து ஸீதா தேவியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டானே! நீ அவளைத் தேடு தேடு என்று தேடி அலைந்தாயே! அந்த அசர்வா (அயர்வா)?’

மரங்கள் ஏழும் தொளைத்தோ?

’அதற்கப்புறம் ஸுக்ரீவனுடன் ஸக்யம் பண்ணிக் கொண்டு (நட்புப் பூண்டு) அவனுக்கு சத்ருவான அண்ணன் வாலியை வதம் செய்வதாக வாக்குக் கொடுத்தாய். அந்த மஹா பலிஷ்டனை ஜயிப்பதற்கான பலம் உனக்கு இருக்குமா என்று ஸுக்ரீவன் ஸந்தேஹப் பட்ட போது அதை (நி)ரூபித்துக் காட்டுவதற்காக, பர்மா teak (தேக்குமரம்) மாதிரி பெரிய சுற்றளவுடன் வரிசையாக நின்ற ஏழு மராமரங்களையும் துளைத்துக் கொண்டு போகும்படி பாணத்தைப் போட்டுக் காட்டினாய்! அத்தனை விசையோடு நாணை வலித்தது, உனக்கே ரொம்பவும் வலித்துத்தான் படுக்கை போட்டு விட்டாயா?’

கடலைக் கட்டி வளைத்தோ?

”லங்கைக்குப் போவதற்காக ஸமுத்ரத்துக்கே அணை கட்டுகிற பெரிய கார்யம் பண்ணினாயே! யஜமானனாக உட்கார்ந்து கொண்டு உத்தரவு போடாமல் உன்னுடைய உத்தம் குணத்தினால் நீயும் வானரப் படையோடு சேர்ந்து கல்லு, மண்ணு தூக்கி அந்தக் கார்யத்தில் ஈடுபட்டாயே! அதில் ஏற்பட்ட சோர்வுதான் காரணமா?”

அப்புறம் பெரிய வாசகமாகவே இரண்டு கேள்வி கேட்டு – ஏகப்பட்ட கேள்விதான் கேட்டாச்சே! – அதோடு முடித்து விடுகிறார்.

இலங்கை எனும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?

ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?

லங்கைக்குப் போனபின் ஊருக்கு வெளியிலே வானர ஸேனை ராக்ஷஸ ஸேனையோடு போர்க்களத்தில் யுத்தம் செய்ததோடு நிற்காமல், ஊரெல்லைக்குள்ளே போய் அதன் கோட்டை கொத்தளம் முதலானவற்றை இடித்துத் தூள் பண்ணின. அப்போது பதிநாலு வருஷ வனவாஸத்திற்கு ஒப்பி வாக்குக் கொடுத்திருந்த ஸ்வாமி தர்ம விக்ரஹமானபடியால் தாம் நகரப் பிரவேசம் பண்ணப்படாது என்று ரணகளத்தில் பாசறையிலேயே இருந்தார். அப்போது மட்டுமில்லை. இதற்கு முந்தி அவரே வாலிவதம் பண்ணி, ஸுக்ரீவன் கிஷ்கிந்தா ராஜ்யத்திற்கு ராஜாவாகும்படிப் பண்ணியிருந்த போதிலும், தாம் அந்த ஊருக்குள் போய் அவனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணி வைக்காமல் காட்டிலேயே தான் இருந்தார்; லக்ஷ்மணரைத்தான் பட்டாபிஷேகம் பண்ண அனுப்பி வைத்தார். பிற்பாடு அவர் ராவண ஸம்ஹாரம் பண்ணியதாலேயே விபீஷணன் லங்கா ஸாம்ராஜ்யாதிபதியாகப் பட்டாபிஷேகம் பெற்றுக் கொண்ட போதும் அதையேதான் செய்தார். அப்படித் தம்மைத் தாமே, தர்மத்தை அலசிப் பார்த்து அவர் கட்டுப் படுத்திக் கொண்ட உசத்தியால்தான் இன்றைக்கும் அவரை லோகம் தர்மமூர்த்தி என்று கொண்டாடுகிறது….

லங்கையை வானரங்கள் இடித்தபோது அவருக்கு இரண்டு தினுஸில் வருத்தம். தாமும் அவர்களோடு உடலை வருத்தி ஸஹாயம் பண்ண முடியாமல் தர்மம் கட்டுப் படுத்துகிறதே என்பதில் அவருடைய மனசு வருத்தப் பட்டது ஒன்று. ரொம்ப அழகாகவும், பெரிசாகவும் மயன் நிர்மாணம் பண்ணிக் கொடுத்திருந்த லங்காநகரத்தையும், அந்த நகரவாஸிகள் பண்ணின தப்புக்களுக்காக யுத்தத்தின் அவசியத் தேவையை முன்னிட்டு, இடிக்கும்படி இருக்கிறதே என்ற வருத்தம் இன்னொன்று. “அதை மறக்க ‘ஸ்லீப்பிங் டோஸ்’ போட்டுக் கொண்டாயா?” என்று பழைய கேள்வியை மறுபடியும் அதே மாதிரி மறைமுகமாகப் போடுகிறார்.

அதோடு, ராமர் சரமாரியாக பாணம் போட்ட மாதிரியே தாமும் அவர் மேல் கேள்விக் கணை மாரி போட்டாயிற்று என்று கவிராயர் ‘ஃபீல்’ பண்ணினார். கடைசியாக ஒரே ஒரு கேள்வி ராம குண மேன்மையைத் தெரிவிப்பதாகக் கேட்டு முடித்து விட்டார்:

ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?

முதலில் ராவணாதிகள் பண்ணின அக்ரமத்திற்காக அழகான லங்கா பட்டணத்தை த்வம்ஸம் செய்வானேன் என்று ராமர் வருத்தப்பட்டார். அப்புறம் அவர்களையெல்லாம் ஹதாஹதம் செய்து, வீரராகவன் என்றே எல்லாரும் புகழும்படி நின்றபோதோ அவருக்கு உள்ளூர, “இந்த அக்ரமக்காரர்களைக் கூட ஏன் வதம் பண்ணியிருக்க வேண்டும்? அவர்களிலும், ராவணன் உள்பட, மஹா பலம், வீரம், யுத்த சதுரம், அஞ்சா நெஞ்சம், விட்டே கொடுக்காத உறுதி, நல்ல வேத பாண்டித்யம், ஸங்கீதத்திலே அபாரத் தேர்ச்சி – என்றிப்படி சிறப்புக்களைப் பெற்றிருந்தவர்கள் இருந்தார்களே! அவர்களுடைய மனசு திருந்தும்படிச் செய்ய முடியாமல் வதம் அல்லவா பண்ணும்படியாயிற்று?” என்று வருத்தம் ஏற்பட்டது.

பரம சத்ருவிடம் இப்படிப்பட்ட கருணையுள்ளம் படைத்த உச்சாணியில் ராமரைக் காட்டியதே அவருடைய பட்டாபிஷேகத்தைப் பாடின மாதிரி என்று அதோடு கவிராயர் முடித்து விட்டார்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

Periyava Radio

Periyava Radio launched, playing Maha Periyavaa doctrined topics 24 X 7, including HIS own Periyava Kural
1. Desktop users can visit below website and start tuning in..
http://periyavaradio.net
2. Android App -- search for "Kanchi Sankara", install and go to Periyava Radio Section
https://play.google.com/store/apps/details
3. iOS App to be published shortly
4. Alternately you can install TuneIn (http://www.tunein.com) and search “Periyava” and you can listen.
More details can be found at http://periyavaradio.net/
Thanks in advance!
Schedule of Playlists
Time (IST) Category
6:00 AM to 6:30 AM Suprabhatham (by day of week)
6:30 AM to 6:45 AM Aditya Hrudayam
6:45 AM to 7:30 AM Ganapathi Atharvasheeresham and other Vedic Chanting
7:30 AM to 8:00 AM Morning Stotra Seva
8:00 AM to 9:00 AM Periyavaa Kural (Our Master's Voice)
9:00 AM to 10:00 AM Ganesa Sarma Upanyasam
10:00 AM to 11:00 AM Devotee Experience
11:00 AM to 12:00 PM Thevaram/Thiruvasagam
12:00 PM to 1:00 PM Indra Soundararajan speeches
1:00 PM to 3:00 PM Guru Bhajans
3:00 PM to 4:00 PM Periyavaa Mahimai
4:00 PM to 5:00 PM Devotee Experience
5:00 PM to 6:00 PM Pradosha Kaala Seva
6:00 PM to 6:30 PM Sahasranama Seva (by day of week)
6:30 PM to 7:00 PM Evening Stotra Seva
7:00 PM to 8:30 PM Veda Dharma Sastra Paripalana Sabha Lectures

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Today, January 8th, is the Mukthi day of Sri Maha Periva as per the English Roman Calendar.Here is a Daily sheet calendar of Periva Siddhi day, carefully preserved by a devotee. And, as we are aware, this clock stopped when Jagathguru Sri Maha Periva left His mortal frame. The time is 2.57pm on Jan 8th 1994.

Read at: http://periva.proboards.com/…/mukthi-ma ... glish-roma

புழுதியில் எட்ட கிடந்த வேங்கடவன் என்னை
கிட்ட வந்து கை தூக்கி விட்டவன்!
இவன் யாரோ என்று எண்ணாமலே!
அண்டாதவர்க்கும் அருளும்
மனமுடையான்! கருணையே வடிவானவன்!
சாந்தி அளிக்கும் எழிலுடை சிவகுரு!
காற்றும்,கனலும்,புனலும்,மண்ணும்,வெளியும்
அகிலம் நேசிக்கும் அவனேயன்றோ!
கருணை பொங்கும் அவன் விழிகளை
காணாத கண்களும் கண்களோ!
கொஞ்சும் அவன் மொழியை
கேளா செவிகளும் செவிகளோ
உதடுகளில் தவிழும் புன்னகையில்
மயங்காத மனமும் உண்டோ!
நடமாடிதிரிந்த செங்கமல பாதங்களை
துதிக்காத வாழ்க்கையும் வீணே!
venkat k

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

Namaste
With Sri Periyava’s anugraham here are our latest updates to Sri Adi Shankara Stutis- YOUTUBE channel
Maha Periyava Upanyasam- Iswaryam Indu Maule- Audio with English subtitles
and
Maha Periyava Upanyasam- Iswaryam Indu Maule- Audio with English Transliteration

We hope to reach a wider audience of Maha Periyava devotees who don’t read/understand Tamil, but will enjoy and benefit from His upanyasams. Feedback and suggestions for this project is very valuable and we seek your help in spreading the word around. Please share the link

https://www.youtube.com/channel/UCPiV-Z ... SYnnYWICkg with family, friends, local Anusham groups and all other Periyava devotees. Comments & suggestions can be sent to mahaperiyava101@gmail.com.

ஸ்ரீ மஹா பெரியவா ஶரணம்
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

MahaPeriyava
A share

Experience of Villu Paattu Vidwan Sri Subbu Arumugam

வில்லுப்பாட்டில் ஆதிசங்கரர் கதையைச் சொல்ல உத்தரவானபோது, காலடியில் ஆதிசங்கரர் அவதரித்ததைக் குறிப்பிடும்போது, பெரியவாள் திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானம், சேர நாடு என்றெல்லாம் ஆரம்பிக்காமல், ‘பரசுராம க்ஷேத்திரம்’னு ஆரம்பிக்கச் சொன்னதைப் பற்றி ஏற்கெனவே சொன்னேன்.
ஆனால் எனக்கு காலடியில் பிறந்த ஆதிசங்கரர்தான் காஞ்சியின் பீடாதிபதியான மஹா பெரியவாள்; அவருக்குரிய அனைத்து சீலமும், சிறப்பும் இவருக்கும் உண்டு. இருவருக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசமும் என் கண்களுக்கோ, மனசுக்கோ புலப்படவில்லை. ஆகையினாலே, பெரியவாளிடமிருந்து உத்தரவு வந்ததும், ‘காலடி முதல் காஞ்சி வரை’ என்பது தான் அந்த வில்லுப்பாட்டுக் கதையின் தலைப்பு என்று என் மனத்துக்குள் தோன்றியது.
காஞ்சிபுரத்தையடுத்த பங்காருப்பேட்டையில்தான், ‘காலடி முதல் காஞ்சி வரை’ கதையை வில்லுப்பாட்டில் அரங்கேற்றம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பங்காருப்பேட்டைக்குப் போய் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பாக, மடத்துக்குப் போய், பெரியவாளை தரிசனம் செய்து, ஆசீர்வாதம் பெறுவதே திட்டம். மடத்துக்குச் சென்று பெரியவாள் தரிசனத்தின்போது, சுப்பு ஆறுமுகம் வந்திருக்கார். பங்காருப்பேட்டையில இன்னிக்கு அவரோட காலடி முதல் காஞ்சி வரை வில்லுப்பாட்டு முதல் புரோகிராம்” என்று பெரியவாளிடம் தெரிவிக்கப்பட்டதும், இங்கேயே சொல்லேன்; நானும் கேட்கிறேன்” என்றார். சற்றும் எதிர்பாராத இந்த வார்த்தைகளால் நான் திகைத்துப் போனேன். கதை சொல்லும் வில்லும், இதர வாத்தியங்களும் கூட காரில்தான் இருந்தன. அவசரம் அவசரமாக ஓடி, அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து, பெரியவாள் முன்னிலையில் அமர்ந்து கதை சொல்வதற்குத் தயாரானோம்.
மனத்தின் ஒரு மூலையில், ‘பங்காருப்பேட்டையில் எல்லோரும் கதை கேட்கக் காத்துக் கொண்டிருப்பார்களே!’ என்ற நினைப்பும் ஓடிக்கொண்டிருந்தது. ஆரம்பிக்கச் சொல்லி, பெரியவாள் கையசைத்தார். பரசுராம க்ஷேத்திரத்திலிருந்து கதையை ஆரம்பித்தேன். எனக்குத்தான் அவர் (ஆதிசங்கரர்) தான் இவர்; இவர் (மஹா பெரியவாள்) தான் அவர் ஆயிற்றே! காலடிக்கும், காஞ்சிக்குமாக மாறி, மாறி இருவரது திவ்ய சரிதத்தையும் கலந்து சொல்லத் தொடங்கினேன்.
ஓங்காரம் குழந்தை என்றே உன்னுருவில்
வந்ததுவோ!ஆங்கார சக்தியதே ஆசிமொழி தந்தனளோ!
காமதேனு பாலூட்ட கலைமகளே தாலாட்ட
ஆகமங்கள் சீராட்ட அன்னையின் கை தொட்டில் ஆட்ட
காமாட்சி காதில் வந்து கதைகள் ரசிக்கச் சொல்லினளோ!
கலகல சிரிப்பினில் அன்னை கானமழை பொழிந்தனளோ!
உதைக்கும் பாதங்களை உலகமே வணங்குமல்லோ!
காத்திருக்கும் நாளை அல்லோ காமகோடி பீடமல்லோ!
அனுஷம் நட்சத்திரமோ! அவதாரம் சரித்திரமோ!
ஆடல் அரசன் – திரு ஆடல்களில் நீயும் ஒன்றோ!
ஆதி சங்கரர் அருளின் சேதியென்ன கொணர்ந்தாயோ!
ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ! ஆராரோ!
தட்சிணா மூர்த்தியோ! சனாதனக் கீர்த்தியோ!
தருமத்தின் குறைகள் கண்டு தான் எடுத்த அவதாரமோ!
ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ! ஆராரோ!”
இப்படியாக குழந்தை சுவாமி நாதன் (மஹா பெரியவாளின் பூர்வாசிரமப் பெயர்) தொட்டிலில் துயில் கொள்ளும் அழகுக்கு ஒரு தாலாட்டுப் பாட்டுப் போட்டிருந்தேன். இதைக் கேட்டதும், மஹா பெரியவாள், என்னைத் தொட்டிலில் போட்டு, தாலாட் டுப் பாடி தூங்கப் பண்ணிட்டியே! ” என்று சொல்லிச் சிரித்தார்.
பெரியவாளின் பால பருவத்தைப் பற்றிச் சொல்லும்போது,
நடித்தாரே!
நாடகம் தனில் அவர்
நடித்தாரே!
உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!
என்று பல்லவியும், சரணமாக
கடவுள் கொடுத்தது மானிட வேடம்!
கல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்!
இன்றிவர் படித்தது இங்கிலீஷ் பாடம்!
எதிர்பார்த்திருக்குது காமகோடி பீடம்!
(நடித்தார்)
என்று சொன்னேன். உடனே மஹா பெரியவா, “இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?” என்று கேட்டார். பெரியவா பத்தின புஸ்தகத்தை படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்” என்று சொன்னேன்.
மேற்கண்ட வரிகளில் சொல்லப்பட்ட விஷயம் எல்லா பக்தர்களுக்கும் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, மாணவன் சுவாமிநாதன் மஹா புத்திசாலி. ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளிக் கூடத்துக்குப் பள்ளிக்கூட உதவி ஆய்வாளர் வருகை புரிந்தபோது, உயர் வகுப்பு மாணவர்களுக்குரிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தைக் கொடுத்து, படிக்கச் சொன்னபோது, அபாரமாகப் படித்துக் காட்டிய சுவாமிநாதனது திறமையைப் பார்த்து, வியந்த அதிகாரியின் உத்தரவின் பேரில் சுவாமிநாதனுக்கு டபுள் புரமோஷன் வழங்கப்பட்டது.
பத்து வயதில், திண்டிவனத்தில், கான்வென்ட் பள்ளியில் ஃபோர்த் ஃபாரம் படித்துக் கொண்டிருந்தபோது, ஷேக்ஸ்பியர் எழுதிய ‘கிங் ஜான்’ நாடகத்தை பள்ளிக்கூடத்தில் நடத்த ஏற்பாடு செய்தார்கள். அந்த நாடகத்தின் முக்கியமான ஆர்தர் இளவரசர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பொருத்தமான மாணவன் என்று பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார்.
இரண்டே நாள் ஒத்திகையில், தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு, ஆர்தர் இளவரசராக அற்புதமாக ஷேக்ஸ்பியரின் ஆங்கில வசனங்களைப் பேசி அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற பெருமைக்குரியவர் மஹா பெரியவா.
இதைத்தான் நான் வில்லுப்பாட்டில் சொல்லும் போது நடித்தார்.. நாடகம்தனில் அவர் நடித்தார்!… உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தார்! கடவுள் கொடுத்தது மானிட வேடம்! கல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்” என்று சொன்னேன்.
இதில் விசேஷம் என்னவென்றால், மானிட வேடம், கிங் ஜான் வேடம் போன்ற வார்த்தைப் பிரயோகங்களை மிகவும் ரசித்து, எங்க! அதை இன்னொருதரம் சொல்லு” என்று கேட்டார். சந்தோஷமாக அந்த வரிகளைப் பாடிக் காட்டினேன்.
இந்த வரிகள் எந்த அளவுக்குப் பரவலாக ரசிக்கப் பட்டது என்பதற்கு இன்னொரு பெருமைமிகு உதாரணம், ஒருமுறை எம்.எஸ். அம்மாவை சந்தித்த சமயத்தில், அவர் ஒரு குழந்தையைப் போல, நீங்க பெரியவா கதைய வில்லுப்பாட்டுல சொன்னபோது, ஒரு பாட்டை ரெண்டு தடவை சொல்லச்சொல்லி கேட்டாளாமே? அதைச் சொல்லுங்க” என்று கேட்க, ‘இதுவும் அந்த மஹா பெரியவாளோட அனுக்கிரஹம்’ என்று சந்தோஷப்பட்டு, அந்தப் பாட்டை நான் சொன்னேன். அவர் கண் களை மூடி, கரகோஷம் செய்து, இந்தப் பாட்டைக் கேட்கிறவா நிச்சயம் உருகித்தான் போயிடுவா!” என்று சொன்னதோடு, பெரியவா பாதத்த கெட்டியா பிடிச்சுண்டிருக்கேள்! அவரோட அனுக்கிரஹத்துல அமோகமா இருக்கணும்!” என்று வாழ்த்தினார்.
இதற்குள், பங்காருப்பேட்டையில் கதை கேட்பதற்குத் திரளான கூட்டம். நான், மடத்தில் பெரியவா முன்னால் கதை சொல்லிக் கொண்டிருக்கும் தகவல் கிடைத்ததும், அங்கே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள், அறிவித்தபடி வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை, ஏழு மணிக்கு ஆரம்பிப்பதற்கில்லை. சுப்பு ஆறுமுகத்துக்கு மடத்தில் கதை சொல்லச் சொல்லி உத்தரவாகி இருக்கு. அதை முடித்துவிட்டு, அவர் இங்கே வருவார். அவர் வந்த பிறகு வில்லுப் பாட்டு புரோகிராம் ஆரம்பமாகும்” என்று அறிவித்து விட்டார்கள்.
மடத்தில் கதை சொல்லி முடித்துவிட்டு, நான் பக்திப் பிரவாகத்தில் பெரியவாளைப் பற்றி திருப்புகழ் சந்தத்தில் ஒரு ஆசுகவி பாட, ஆறுமுகம், என்னை ஆறுமுகம்னு பாடறானே!” என்று சொல்லி ஆசீர்வதித்ததை இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்.
(அருள் பொழியும்)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார். மெட்ராஸ்ல அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டினவர். ஸ்ரீவைஷ்ணவர். பெரியவா மேலே அஸாத்ய பக்தி. அவர் டைரில எழுதி வெச்சு இருக்கார். அவர் இருக்கறச்சே நடந்த விஷயம். அவர் காலத்துக்கு அப்புறம், அவர் க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர், அவரோட டைரி ஜெராக்ஸ் பண்ணிண்டு வந்து கொடுத்தார். அதுல ஒரு நிகழ்ச்சி. ஆச்சிரியமா இருந்தது.
வித்வத் ஸதஸ் நடந்தது. பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் வந்திருக்கா. பண்டிதாள் எல்லாம் வந்திருக்கா. அதிலே ஆந்திரால இருந்தும் நிறைய பேர். அதிலே ராஜமுந்திரி ல இருந்து ஒரு வித்வான் வந்திருக்கார்.
அந்த வித்வான்க்கு கால் கிடையாது. அவர் சம்சாரம் அழைச்சிண்டு வந்திருக்கா. அவரை கூடைல தூக்கி தலைல வெச்சி, கூட்டிண்டு வந்திருக்கா.
இது எக்ஷிபிஷன் மாதிரி எல்லோருக்கும். நளாயினி ன்னு கதை எல்லாம் வேணா கேக்கலாம். இந்த காலத்திலேயும் இருக்கும் போல இருக்கே. வித்வத் சதஸ் இவா தான் அட்ராக்ஷன் .
பெரியவாளுக்கும் ஆச்சிரியமா இருந்தது. கார்த்தால சதஸ் க்கு இவர் வரும்போது அந்த அம்மா கூடைல வெச்சு தூக்கிண்டு வர வேண்டியது. அப்புறம் முடிஞ்சாப்புறம் கூடைல வெச்சு தூக்கிண்டு போக வேண்டியது. இப்படியே பண்ணிண்டு இருக்கா.
சதஸ் முடிஞ்சது. அவாளை கூப்டு அப்டின்னா.
அந்த அம்மா வந்தா. பெரியவா அவ கிட்டே சொன்னா. “நளாயினி ன்னு கதை எல்லாம் தான் சொல்லுவா. இந்த காலத்திலேயும், இந்த இருபதாம் நூற்றாண்டிலேயும் கால் இல்லாத புருஷனை கல்யாணம் பண்ணிண்டு, குடித்தனம் பண்ணினது மட்டும் இல்லே. அவர் இங்கே போகணும், அங்கே போகணும் ன்னா, தூக்கி தலைல வெச்சுண்டு வர்றா. எப்பேர்ப்பட்ட பதிவ்ரதை. இந்த காலத்திலேயே இருக்கேன்னா, அந்த காலத்திலே ஏன் இருந்திருக்க முடியாது? நீ வந்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ரொம்ப சந்தோஷம்.”
நிறைய சந்தோஷங்களை தெரிவித்த பின் மேலும் தொடர்ந்தார் பிரபு.
“ஒன் வாயால ரெண்டு வார்த்தை என்னைப் பத்தி ஏதான சொல்லு. ஒன் வாயால கேக்கணும் போல இருக்கு.” நான் எப்பேர்ப்பட்டவன்?
இவர் இப்படி கேட்டவுடன் அந்த அம்மா சொன்னாள்.
“ஒன்னை பத்தி நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? நீ தான் ஈஸ்வரன். பெரிய அவதாரம். ஒன்னால தான் வேதமும் தர்மமும் இருக்கு.”
ஹாங் ஹாங் என்று கேட்டுக்கொண்டிருந்தார் பெரியவா.
“இதெல்லாம் என்ன? எல்லாரும் தான் இதை சொல்லிண்டு இருக்காளே, தெரிஞ்ச கதை, வேறே எதுவும் புதுசா சொல்லு” என்றார்.
அந்த அம்மா சொன்னார்.
“நீ நூறு வயசு இருப்பே, போ என்றாள்” அவள், ஆசிர்வாதம் செய்வது போல
தொடர்ந்தாள் அவள்,
“நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.”
இதை சொன்ன ஒடனே பெரியவா முழிச்சிண்டுட்டா. இதுக்கு மேலே விட்டா இன்னும் எல்லா அவதார ரகசியம் எல்லாம் வெளிலே வரும். பிரசாதம் கொடுத்தா. அனுப்பிச்சு வெச்சா.
இதை முக்கூர் டைரில எழுதி இருக்கார்.
ஆச்சிரியம். நடந்தது என்ன?
1994 ஜனவரி 8 சித்தி ஆனா, பெரியவா. மே 1994 ல நூறு வயசு பூர்த்தி ஆகி, நூற்றி ஒன்று பிறக்க போறது.
அந்த பதிவிரதை சொன்னது என்ன?
நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே – நாலு அனுஷம் நக்ஷத்ரம் கொறஞ்சுது.
ஜனவரி 8, அனுஷம், அன்னியோட அவதார பூர்த்தி.
அப்புறம் தான் தோணித்து.
இன்னும் ஒரு நாலு மாசம் இருந்திருக்கக் கூடாதா, நூறு வயசு பூர்த்தி. செஞ்சுரி போட்டிருக்கலாமே?
பதிவிரதை வாக்கியம். அது தப்பா ஆச்சுன்னா?
பதிவிரதை வாக்கியம் தப்பு ஆகக் கூடாதே!
ஆச்சிரியம். பெரியவா சரித்ரம் தோண்டத் தோண்ட இப்படி பல விஷயங்கள்..

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
"அருகம்புல் மாலை"

(நாங்கள் எடுத்துப் போனது மிகவும் சாதாரணமான பொருள் தான் ! ஆனால், எங்களுக்கு ஏற்பட்ட மனநிறைவு இருக்கிறதே, அதற்கு அளவே இல்லை ! காரணம், தனக்கும் கணபதிக்கும் உள்ள அபேதத்தை எப்படியோ உணர்த்திவிட்டார்கள், பெரியவா.)

ஒரு பக்தையின் அனுபவம்…

நன்றி-பால ஹனுமான்.
-
நானும் என் மைத்துனர் பெண் ஜானாவும் அடிக்கடி காஞ்சி சென்று பெரியவளை தரிசனம் செய்வோம். ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி வெவ்வேறு காணிக்கைகளை சமர்பிப்போம்.

ஒரு சமயம் நாங்கள் காஞ்சிபுரம் போக நினைத்தபோது ” இந்த முறை பெரியவாளுக்கு அழகாக அருகம்புல் மாலை கொண்டு போகலாம்” என்ற எண்ணம் இருவருக்கும் தோன்றியது. ஓரத்தில் அரளிப்பூவை பார்டர் மாதிரி அமைத்து பெரியதாக அருகம்புல் மாலை மிக அழகாகத் தயாரித்துக் கொண்டு போனோம்.

அடுத்த நாள் காலை ஸ்ரீ மடத்திற்குப் போகும்போது எட்டு மணி ஆகிவிட்டது. பெரியவா எல்லோருடனும் பேசிக்கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். நாங்கள் கொண்டு போன மாலைப் பொட்டலத்தையும் கல்கண்டுப் பொட்டலத்தையும் எதிரில் வைத்து விட்டோம். பெரியவா அதை எடுத்து ஓரமாகக் தள்ளி வைத்து விட்டார். அதில் என்ன இருக்கிறது என்று கூடப் பார்க்கவில்லை. நாங்களும் நின்றபடியே தரிசனம் செய்து கொண்டிருந்தோம்.

சுமார் பத்து மணிக்கு ஒரு பெண்மணி வந்தார். அவர் கையில் ஒரு பிள்ளையார் வெள்ளிக் கவசம் நல்ல வேலைப்பாடுடன் மிக அழகாக இருந்தது. பெரியவா உத்தரவுப்படி அவர்கள் ஊர் கோவிலில் பிள்ளையாருக்கு வெள்ளிக் கவசம் செய்து அதை பெரியவா அனுக்ரஹத்திற்காக எடுத்து வந்திருக்கிறார், அந்த பெண்மணி. பெரியவா அந்தக் கவசத்தை வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த சிஷ்யரிடம் ” அதை எடு ” – என்று கையைக் காட்டினார்.

ஓரமாக இருந்த அருகம்புல் மாலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்துக் கொடுத்தார், அவர். ‘பொட்டலத்தில் என்ன இருக்கிறது ?‘ என்று, பெரியவா கேட்கவுமில்லை, பார்க்கவுமில்லை. ஆனால், அது பிள்ளையாருக்கு உரிய பொருள் என்று எப்படித் தெரிந்து கொண்டார் ?

மாலையை அந்த வெள்ளிக் கவசத்திற்குச் சாற்றினார். அளவெடுத்தது போல் மாலை அமைந்திருந்தது. மாலையுடன் அந்த வெள்ளிக் கவசத்தை தன் மார்பில் பொருத்தி வைத்துக் கொண்டு நாலு பக்கமும் திரும்பி திரும்பி தரிசனம் கொடுத்தார்கள், பெரியவாள். நாங்கள் மெய் சிலிர்த்துப் போனோம்.

கவசம் கொண்டு வந்த பரம பக்தையான அந்தப் பெண்மணி கண்களில் நீர் மல்க கையை கூப்பிக் கொண்டு நின்றார். அப்படியே அதை அப்பெண்மணி கையில் கொடுக்கச் சொன்னார் பெரியவர்கள்.

நாங்கள் எடுத்துப் போனது மிகவும் சாதாரணமான பொருள் தான் ! ஆனால், எங்களுக்கு ஏற்பட்ட மனநிறைவு இருக்கிறதே, அதற்கு அளவே இல்லை ! காரணம், தனக்கும் கணபதிக்கும் உள்ள அபேதத்தை எப்படியோ உணர்த்திவிட்டார்கள், பெரியவா.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

சித்திரை பிறந்தது..!!
வசந்தத்தை நினைவூட்டும்
பூத்து குலுங்கும் செடி கொடிகளும்
மலர்ந்த தாமரையும்
கரையும் புள்ளினங்களின் இறைச்சலும்
பட்டாம் பூச்சிகளின் சிறகசைப்பும்
வேங்கடவன் என் நெஞ்சத்தை நிறைத்தது!
பேரானந்தம் பெற்றானை
சீரளிக்க வல்லானை
தீவினைகள் தீர்பானை
தத்வமறியாமல் நிம்மதியை
அங்கும் இங்கும் ஓடி தேடி திரியாமல்
உன்னுள் தேடினால்
தன்னுள் உன்னை காட்டி அருள்வான்!
இதயம் கசிந்துருகி துர்முகி வருட நன்நாளில்
சேவிக்க வேண்டும் என் ஐயனை! venkat k

collage courtesy: balhanuman.wordpress.com
Venkata Kailasam's photo.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஸங்கீதமும் ஸ்த்ரீகளும்

மாதுர்யம் என்றதும் ஸங்கீதம் நினைவுக்கு வருகிறது. ஸங்கீதம் உத்தமமான கலை. பகவத் ஸந்நிதியிலேயே ‘ஈஸி’ யாகக் கொண்டு நிறுத்துகிற கலை. நன்றாக் இசையமைத்துப் பாடும்படி மஹான்கள் நிறைய நிறைய நம் தேசத்தில் வாரி வழங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஏராளமான ஸாஹித்யகர்த்தாக்களும் சிக்ஷை சொல்லிக் கொள்ள வசதியாக முறைப்படி ராகம், தாளம், அமைத்துக் கீர்த்தனங்கள் பாடியிருக்கிறார்கள். ஸ்த்ரீகளுக்குத்தான் இயற்கையாகவே இனிமையான குரல் இருக்கும்படியாக அம்பாள் ப்ரஸாதித்திருக்கிறாள். அதனால் அவர்கள் ஒழிந்த பொழுதில் ஸங்கீதம் அப்பஸிக்கலாம். ஸபா, ஸம்மானம், புகழ் -ஆகியவற்றுக்காக இல்லை. அதெல்லாம் போட்டியிலும், அஹம்பாவத்திலும், ஸ்த்ரீகளுக்கு வேண்டாத வெளி வியாபகத்திலும் இழுத்து விடலாம். ஆகையால் அதற்காக இல்லாமல் ஆத்ம ஸந்துஷ்டிக்காகவும் பகவத் ப்ரீதிக்காகவும் பெண்களை ஸங்கீத அப்யாஸம் பண்ணச் சொல்கிறேன். நம் அகத்திலே ஒரு சுபகார்யம், நவராத்ரி, மற்ற பண்டிகை என்றால் கூடியிருக்கிறவர்களுக்கு ஸந்தோஷம், பகவான் நினைவு இரண்டையும் அளிப்பதாகப் பெண்கள் பாடலாம். ஒரு கல்யாணம், கார்த்திகை என்றால், அதிலே வேடிக்கையும் இருக்க வேண்டுமாகையால், கேலிப் பாட்டுகள் கூடப் பாடலாம். வாழ்க்கையில் இதெல்லாமும் அதனதன் அளவுக்கு உட்பட்டு வேண்டியதுதான். இல்லாவிட்டால் உப்புச் சப்பே இருக்காது; ஒரே உம்மணாமூஞ்சியாகிவிடும். வீணா வாத்யம் அம்பாளுக்கு ரொம்பவும் ப்ரீதி, அவளுடைய ஸ்வரூபமாகவே மதிக்கப்டும் ஸ்த்ரீ பிரஜைகள் வீணை கற்றுக் கொள்ளலாம். ப்ரதி சுக்ர வாரமும் ஸாயரக்ஷையில் அம்பாளுக்கு வீணாகானம் ஸமர்ப்பணம் செய்யலாம். கோவிலுக்குப் போய் அப்படிப் பண்ணலாம். ஆனால் அங்கே இதேமாதிரி இன்னும் பல பேரும் வந்தால் போட்டி ஏற்படும். அகத்திலேயே, அம்பாள் பிம்பமோ யந்த்ரமோ படமோ இருக்குமே, அதற்கெதிரில் ஒரு கால்மணி-அரைமணி வீணை வாசிக்கலாம். வாயால் பாடிக்கொண்டே வாசிக்கலாம். ஒரளவுக்கு மனஸ் குவிந்து கானம் பண்ணினாலும் போதும், அதில் கிடைக்கிற விச்ராந்தி தெரியும்.

அகத்தோடு இருந்துகொண்டு பெண்கள் இப்படிக் கலைகளை வ்ருத்தி செய்வது ரொம்பவும் நல்லது. அவர்களுடைய ‘நேச்ச’ருக்கு ஏற்றது. பகல் பொழுதை உழைப்புக்கும் கலைகளுக்குமே அவர்கள் பிரித்துக் கொடுக்க வேண்டும். உழைக்கிற ‘ஸ்பிரி’ட்டோடு உழைத்தால் அதுவே ஒரு கலைதான்! ‘நம் அகத்துக்காக, நம் மநுஷ்யர்களுக்காகவாக்கும் செய்கிறோம்?’ என்கிற உணர்ச்சியே உழைப்பில் ஒரு உத்ஸாஹத்தை ஊட்டி, அதையும் ஒரு கலையாக்கிவிடும்.

இதுவரை நான் சொன்ன மாதிரியெல்லாம் ஸ்த்ரீகள் இருந்தால், வீட்டோடு இருப்பதில் பொழுது போகவில்லை என்றில்லாமல் பொழுது போதவில்லை என்றே ஆகிவிடும்!

ஸ்த்ரீகள், உத்யோகத்துக்குப் போகாமல் நாள் முழுதும் நல்ல பொழுதாகக் கழிப்பதற்கு எனக்குத் தெரிந்த (this is the trademark of Periyava!!) யோஜனையைச் சொன்னேன். நல்ல பொழுது என்பது அவர்களுடைய உடம்பை உறுதி பண்ண உதவி பண்ணுவதோடு மனஸைப் பெண்மை என்பதன் மாதுர்யத்தில் குழைக்கவும் உபகாரம் பண்ணவேண்டும் என்ற அபிப்ராயத்தில் சொன்னேன்.

எல்லா தர்மங்களுக்கும் ஆணிவேர் பெண்கள்தான்

எப்படியாவது ஸ்த்ரீத்வம் – பெண்மை – என்பதற்கு லக்ஷணமாக இத்தனை ஆயிரம் வருஷங்கள் இருந்து வந்திருக்கிற உத்தம குணங்களையும், உசந்த வாழ்க்கை முறையையும் செத்தே போய் விடாமல் முடிந்த மட்டும் ஆக்ஸிஜனைப் ‘பம்ப்’ பண்ணி ரக்ஷித்துத் தந்தாக வேண்டும். அதுதான் இன்றைக்குத் தலையான கார்யம். ஏனென்றால் ஸ்த்ரீ மூலம் ஸர்வ தர்மா: – ‘எல்லா தர்மங்களுக்கும் பெண்டுகளே ஆணிவேர்’ – என்று சாஸ்த்ரம் சொல்கிறது. அவர்கள் வீணாகப் போனால் லோகமே போனது போனதுதான். புருஷ ஜாதி வீணாய்ப் போனால் அவ்வளவு ஹானியில்லை. ஸ்த்ரீ ஜாதியின் தார்மிக பலம் அவனைக் காப்பாற்றி எழுப்பிவிடும். அவள் விழுந்தால்தான் ஸமுதாயத்துக்கே வீழ்ச்சி. “ஸ்த்ரீகள் கெட்டுப் போனால் எல்லாமே போய்விடுமே?” என்றுதான் அர்ஜுனனும் கீதாரம்பத்தில் (கீதை ஆரம்பத்தில்) அழுகிறான்.

ஸ்த்ரீக்கு ஸ்த்ரீத்வம் இருக்கவேண்டும், பெண் பெண்ணாக இருக்கவேண்டும் என்பதற்கு இத்தனை சொல்லி முட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறதை என்ன சொல்கிறது? ‘காலத்தின் கோலம்’ என்கிறார்களே, அப்படிக் கலி புருஷன் எல்லார் மனஸிலும் புயலாகப் புகுந்து பண்ணுகிற வெறிக் கூத்தால்தான் இப்படி ஏற்பட்டிருக்கிறது.

போகப் போக விளைவு விபரீதமாகும்

போட்டிக்கு இடமே இல்லாத இடத்தில் போட்டி ஏற்பட்டு ஆணுக்குப் பெண் சளைப்பதா என்று ஏற்பட்டு, அதில் ஒரு பெரிய vicious circle -ஆக (விஷக் கூட்டமாக) ஒன்றைத் தொட்டுக்கொண்டு ஒன்றாகத் தப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

ஸ்த்ரீத்வத்தை விட்டுப் பெளருஷத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமில்லாமலே, பொருளாதார உயர்வுக்காக என்று தப்பாக நினைத்துக்கொண்டு ஒரு பெண் வேலைக்குப் போனாலுங்கூட அதன் தொடர்ச்சியாக அந்த ‘அட்மாஸ்ஃபிய’ரில் அவளுக்குத் தன்னையறியாமல் பெளருஷ அம்சங்கள் வந்து சேர ஆரம்பித்துவிடும். இப்படியே கொஞ்சங் கொஞ்சமாக அவளுடைய ஸ்த்ரீத்வம் மேலும் மேலும் மரத்துக் கொண்டே போய், அந்த அளவுக்குப் பெளருஷமும் கூடிக் கொண்டே போகும். அதனால் ப்ரக்ருதி தர்மத்தின் ப்ரதம விதியாகப் பெளருஷ வன்மைக்கு மாற்றாக ஸ்த்ரீத்வ மென்மை லோகவாழ்க்கையை ஸமன் செய்து அழகு படுத்தவேண்டும் என்று இருப்பது சிதிலப்பட ஆரம்பிக்கும். இன்றைய அடங்காப்பிடாரி லோகத்துக்கு அத்யாவச்ய மருந்தான அடக்கம் என்பது ஸ்த்ரீகளை விட்டுப் போக ஆரம்பித்துவிடும். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் அவர்களுக்கும் தாட்பூட் வந்துவிடும்.

இதன் விபரீதம் ஆரம்ப காலத்தில் தெரியாமல் எல்லாம் நல்லதாகவே ஓரு ஸமதர்மப் புரட்சி நடந்ததாகத் தோன்றலாமானாலும் போகப் போக இப்படி ஸ்த்ரீ-புருஷாள் அடங்கிய முழு ஸமூஹமுமே அடங்காமைக் கோலம் கொண்டால் லோகமே க்ரூர ம்ருகங்களோ அல்லது அஸுர ஜாதிகளோ ஒருத்தருக்கொருத்தர் சண்டை பிடித்துக் கொள்வது போன்ற நித்ய நரகமாகிவிடும்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Periyava

My experience with an Uber driver today

எப்போதும் போல இன்றைக்கும் uber taxi யில் வரும்போது பேச்சு கொடுத்துகொண்டே வந்தேன். அரசியலில் நடக்கும் அநியாயங்கள், பள்ளிக்கூடம் என்ற பெயரில் நடக்கும் மத மாற்றங்கள் , அதனால் ஏற்படும் திசை மாறல்கள் இதை பற்றியெல்லாம் பேசிக்கொண்டே வரும்போது நான் கூறினேன் "இன்றைய கால கட்டத்தில் சாய்பாபா, மஹா பெரியவர் போன்ற மகான்கள் திரும்பவும் பிறந்தால் தான் நமக்கு விடிவு காலம் "என்ற ரீதியில் பேச்சு திரும்பிகொண்டிருந்தது . பாபாவை பற்றி தெரிந்து இருக்கலாமே தவிர மஹா பெரியவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு எண்ணம் தோன்றியது. இனிமேல் நமது டிரைவர்

"மகா பெரியவாளா அவரை போன்ற தெய்வம் இனியும் பிறக்கவே முடியாது. நீங்கள் என்ன வேண்டுமானால் நினைத்துகொள்ளுங்கள். ஆனால் அவரை பற்றி நினைத்தாலோ பேசினாலோ எனக்கு மயிர் கூச்செரிகின்றது. நான் சென்னையில் சூளைமேடில் வசிக்கிறேன். எனக்கு ஒரு 10/12 வயது இருக்கும் . (அப்போது பெரியவாளுக்கு 93 வயதிருக்கும்) இதே ஏப்ரல் மாதம் ஒரு பகல் வேளை . மகா பெரியவர் ஒரு கூண்டு வண்டியை பிடித்துகொண்டு நடந்து காலில் பாதுகை கூட இல்லாமல் நடந்து வந்து கொண்டிருக்கிறார். யார் யாரோ என்னென்னவோ அவரிடம் கொடுக்கிறார்கள். ஒருவர் ஒரு மூட்டை காசுகளை சமர்பிக்கின்றார். அதை அப்படியே எல்லாருக்கும் பிரித்து கொடுக்கிறார். பட்சணங்கள் சமர்பிக்கபடுகின்றன. அவைகளும் உடனேயே distribute செய்யபடுகிறது. நாங்களும் ஓடி ஓடி அவைகளை வாங்கி சாப்பிடுகிறோம். அப்போது சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த பட்ட பகலில் திடீரெண்டு ஒரு மேகம் மேலே கடக்கிறது. உடனே ஒரு மணி நேரம் விடாது மழை கொட்டி தீர்த்தது. இது எப்படி சார் , நம்பவே முடியவில்லை."

அடுத்து ஒரு நிகழ்ச்சி, அண்மையில் நடந்தது.
"சார், நான் ஒரு businessman . கிட்டத்தட்ட 60/70 லட்சங்கள் நஷ்டம் அடைந்து இருக்கிறேன், ஊர் முழுக்க கடன்கள், cheque bounce கேஸ் என்று மிகவும் தொல்லையில் இருந்தேன். அப்போது கால் டிரைவராக வேலை பார்த்து கொண்டிருந்தேன் (என்னுடைய 6/7 வண்டிகளை விற்றுவிட்டு திரும்பவும் வாழ்கை நடத்துவதற்காக இந்த வேலையை செய்ய ஆரம்பித்தேன்). அப்போது என்னுடன் ஒரு குடும்பம் காஞ்சிபுரம் வந்தது. வேறு வேலையாக வந்தவர்களை நான் மகா பெரியவா அதிஷ்டானத்துக்கு அழைத்து சென்றேன். நானும் மனமார வேண்டிக்கொண்டேன். "பெரியவா , நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன், எனக்கு தாங்க முடிகிற அளவுக்கு என் கஷ்டங்களை குறையுங்கள் ". நீங்கள் நம்ப மாட்டீர்கள். அங்கிருந்து திரும்பிவந்தவுடன், என் நிலைமை மாறியது, என்னை தொந்திரவு செய்தவர்கள் எல்லாம் காணாமல் போயினர். நானும் மெல்ல மெல்ல கஷ்டப்பட்டு முக்கால் வாசி கடன்களை அடித்துவிட்டேன். இன்னும் ஒரு 6/7 மாதங்கள் கஷ்டப்பட்டால் எல்லா கடனையும் அடைத்துவிட்டு நிம்மதியாக என் குடும்பத்தை பார்த்துகொள்வேன். "

அதற்குள் நான் சேர வேண்டிய இடத்தை அடைந்து விட்டேன். எப்போதும் போல என்னுடைய பாட்டை பாடினேன் " பெரியவாளை எப்போதும் வணங்குங்கள். உங்களால் முடிந்து உதவியை எல்லா ஜீவராசிகளுக்கும் செய்யுங்கள் "என்று நன்றி கூறி விடை பெற்றேன்.


வேதப்பொருள் சொன்ன விழுமிய தெய்வம்

யஜுர்வேதத்தின் மத்ய மணி போல விளங்குவது ஸ்ரீருத்ரம். இதனுள் ஒரு மந்த்ரம்

शिवा रुद्रस्य भेषजी तया नो मृड जीवसे ॥
ஸி²வா ருத்³ரஸ்ய பே⁴ஷஜீ தயா நோ ம்ருʼட³ ஜீவஸே ||

என்று.

இதற்குப் பொருள் சொன்ன ஸாயணர் முதலியவர்கள் வேதத்திற்குப் பொருள் சொல்லும் வழியில் ஜீவஸே என்றால் வாழ்வதற்கு என்று நான்காம் வேற்றுமை. ம்ருட என்று ம்ருடய என்பதன் மருஉ. என்று பொருள் கூறி அனைவரும் பரமேச்வரனின் மங்களவடிவமான மருந்து நாங்கள் வாழ்வதற்காக எங்களை மகிழ்வடைய செய்யட்டும் என்று பொருள் கூறினர். ஆனால் நடமாடும் தெய்வம் சொன்ன பொருளைப் பாருங்கள்.

ம்ருட - ஹே சிவனே சிவா - அன்னை பராசக்தி ஜீவஸே - ஜீவஸி

என்று பதங்களின் பொருளை மாற்றி அன்னை பராசக்தி ருத்ரனுக்கு மருந்தாக இருக்கிறாள். தயா - அவளால் ஹே சிவனே நீ எங்களுக்காக வாழ்கிறாய்..

இந்தப் பொருளைக் கூறிவிட்டு, இதை மனத்தில் இறுத்தித்தான் பகவத்பாதர்களும் தவ ஜனனி தாடங்க மஹிமா என்றெல்லாம் ஸௌந்தர்ய லஹரியில் பாடியதாக வேறொரு பொருளைக் கூறியது நடமாடும் தெய்வம்.

வேதத்தை மூச்சுக்காற்றாகக் கொண்ட பரமேச்வரனைப் பற்றியது ருத்ரம், அவர் அவதாரமான பகவத்பாதர்கள் ஸௌந்தர்யலஹரியில் இப்படிப் பொருள் செய்தார். அதை மறுபடியும் அவதாரமெடுத்த தெய்வம் எல்லோருக்கும் கூறியது.

என்ன பாக்யம்...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Periyava

My experience with an Uber driver today

எப்போதும் போல இன்றைக்கும் uber taxi யில் வரும்போது பேச்சு கொடுத்துகொண்டே வந்தேன். அரசியலில் நடக்கும் அநியாயங்கள், பள்ளிக்கூடம் என்ற பெயரில் நடக்கும் மத மாற்றங்கள் , அதனால் ஏற்படும் திசை மாறல்கள் இதை பற்றியெல்லாம் பேசிக்கொண்டே வரும்போது நான் கூறினேன் "இன்றைய கால கட்டத்தில் சாய்பாபா, மஹா பெரியவர் போன்ற மகான்கள் திரும்பவும் பிறந்தால் தான் நமக்கு விடிவு காலம் "என்ற ரீதியில் பேச்சு திரும்பிகொண்டிருந்தது . பாபாவை பற்றி தெரிந்து இருக்கலாமே தவிர மஹா பெரியவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு எண்ணம் தோன்றியது. இனிமேல் நமது டிரைவர்

"மகா பெரியவாளா அவரை போன்ற தெய்வம் இனியும் பிறக்கவே முடியாது. நீங்கள் என்ன வேண்டுமானால் நினைத்துகொள்ளுங்கள். ஆனால் அவரை பற்றி நினைத்தாலோ பேசினாலோ எனக்கு மயிர் கூச்செரிகின்றது. நான் சென்னையில் சூளைமேடில் வசிக்கிறேன். எனக்கு ஒரு 10/12 வயது இருக்கும் . (அப்போது பெரியவாளுக்கு 93 வயதிருக்கும்) இதே ஏப்ரல் மாதம் ஒரு பகல் வேளை . மகா பெரியவர் ஒரு கூண்டு வண்டியை பிடித்துகொண்டு நடந்து காலில் பாதுகை கூட இல்லாமல் நடந்து வந்து கொண்டிருக்கிறார். யார் யாரோ என்னென்னவோ அவரிடம் கொடுக்கிறார்கள். ஒருவர் ஒரு மூட்டை காசுகளை சமர்பிக்கின்றார். அதை அப்படியே எல்லாருக்கும் பிரித்து கொடுக்கிறார். பட்சணங்கள் சமர்பிக்கபடுகின்றன. அவைகளும் உடனேயே distribute செய்யபடுகிறது. நாங்களும் ஓடி ஓடி அவைகளை வாங்கி சாப்பிடுகிறோம். அப்போது சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த பட்ட பகலில் திடீரெண்டு ஒரு மேகம் மேலே கடக்கிறது. உடனே ஒரு மணி நேரம் விடாது மழை கொட்டி தீர்த்தது. இது எப்படி சார் , நம்பவே முடியவில்லை."

அடுத்து ஒரு நிகழ்ச்சி, அண்மையில் நடந்தது.
"சார், நான் ஒரு businessman . கிட்டத்தட்ட 60/70 லட்சங்கள் நஷ்டம் அடைந்து இருக்கிறேன், ஊர் முழுக்க கடன்கள், cheque bounce கேஸ் என்று மிகவும் தொல்லையில் இருந்தேன். அப்போது கால் டிரைவராக வேலை பார்த்து கொண்டிருந்தேன் (என்னுடைய 6/7 வண்டிகளை விற்றுவிட்டு திரும்பவும் வாழ்கை நடத்துவதற்காக இந்த வேலையை செய்ய ஆரம்பித்தேன்). அப்போது என்னுடன் ஒரு குடும்பம் காஞ்சிபுரம் வந்தது. வேறு வேலையாக வந்தவர்களை நான் மகா பெரியவா அதிஷ்டானத்துக்கு அழைத்து சென்றேன். நானும் மனமார வேண்டிக்கொண்டேன். "பெரியவா , நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன், எனக்கு தாங்க முடிகிற அளவுக்கு என் கஷ்டங்களை குறையுங்கள் ". நீங்கள் நம்ப மாட்டீர்கள். அங்கிருந்து திரும்பிவந்தவுடன், என் நிலைமை மாறியது, என்னை தொந்திரவு செய்தவர்கள் எல்லாம் காணாமல் போயினர். நானும் மெல்ல மெல்ல கஷ்டப்பட்டு முக்கால் வாசி கடன்களை அடித்துவிட்டேன். இன்னும் ஒரு 6/7 மாதங்கள் கஷ்டப்பட்டால் எல்லா கடனையும் அடைத்துவிட்டு நிம்மதியாக என் குடும்பத்தை பார்த்துகொள்வேன். "

அதற்குள் நான் சேர வேண்டிய இடத்தை அடைந்து விட்டேன். எப்போதும் போல என்னுடைய பாட்டை பாடினேன் " பெரியவாளை எப்போதும் வணங்குங்கள். உங்களால் முடிந்து உதவியை எல்லா ஜீவராசிகளுக்கும் செய்யுங்கள் "என்று நன்றி கூறி விடை பெற்றேன்.


வேதப்பொருள் சொன்ன விழுமிய தெய்வம்

யஜுர்வேதத்தின் மத்ய மணி போல விளங்குவது ஸ்ரீருத்ரம். இதனுள் ஒரு மந்த்ரம்

शिवा रुद्रस्य भेषजी तया नो मृड जीवसे ॥
ஸி²வா ருத்³ரஸ்ய பே⁴ஷஜீ தயா நோ ம்ருʼட³ ஜீவஸே ||

என்று.

இதற்குப் பொருள் சொன்ன ஸாயணர் முதலியவர்கள் வேதத்திற்குப் பொருள் சொல்லும் வழியில் ஜீவஸே என்றால் வாழ்வதற்கு என்று நான்காம் வேற்றுமை. ம்ருட என்று ம்ருடய என்பதன் மருஉ. என்று பொருள் கூறி அனைவரும் பரமேச்வரனின் மங்களவடிவமான மருந்து நாங்கள் வாழ்வதற்காக எங்களை மகிழ்வடைய செய்யட்டும் என்று பொருள் கூறினர். ஆனால் நடமாடும் தெய்வம் சொன்ன பொருளைப் பாருங்கள்.

ம்ருட - ஹே சிவனே சிவா - அன்னை பராசக்தி ஜீவஸே - ஜீவஸி

என்று பதங்களின் பொருளை மாற்றி அன்னை பராசக்தி ருத்ரனுக்கு மருந்தாக இருக்கிறாள். தயா - அவளால் ஹே சிவனே நீ எங்களுக்காக வாழ்கிறாய்..

இந்தப் பொருளைக் கூறிவிட்டு, இதை மனத்தில் இறுத்தித்தான் பகவத்பாதர்களும் தவ ஜனனி தாடங்க மஹிமா என்றெல்லாம் ஸௌந்தர்ய லஹரியில் பாடியதாக வேறொரு பொருளைக் கூறியது நடமாடும் தெய்வம்.

வேதத்தை மூச்சுக்காற்றாகக் கொண்ட பரமேச்வரனைப் பற்றியது ருத்ரம், அவர் அவதாரமான பகவத்பாதர்கள் ஸௌந்தர்யலஹரியில் இப்படிப் பொருள் செய்தார். அதை மறுபடியும் அவதாரமெடுத்த தெய்வம் எல்லோருக்கும் கூறியது.

என்ன பாக்யம்...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ! மஹா பெரியவர் – எஸ். ரமணி அண்ணா
“மஹா பெரியவரின் மந்திர கடிகாரம் !”

ஒரு முறை பரிவாரங்களுடன் திருநெல்வேலி செல்லும் வழியில் புதுக்கோட்டையில் முகாமிட்டுருந்தார் காஞ்சி ஆச்சார்யாள். மெயின் ரோட்டில் இருந்த ஒரு பெரிய சத்திரத்தில் தங்கி இருந்தார். அங்கு வந்து சேர்ந்த அன்று இரவு, ஸ்ரீ சந்திரமௌலீச்வர பூஜையை முடித்து விட்டு அமர்ந்திருந்தார் ஸ்வாமிகள்.

தனக்குப் பணிவிடை பண்ணும் நாகராஜன் என்ற இளைஞனை அருகில் அழைத்து, “அப்பா நாகு…நாளைக்கு விடியகாலம்பற மூணரை மணிக்கெல்லாம் நான் எழுந்து ஸ்நானம் பண்ணி ஆகணும். நீ ஞாபகம் வெச்சுக்கோ” என்று கட்டளை இட்டார் ஆச்சார்யாள்.

உடனே அந்த இளைஞன் நாகு மிக அடக்கத்துடன், “உத்தரவு பெரியவா. நீங்க ஆக்ஞாபித்தபடியே சரியா மூணரைக்கு, ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர’ னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா” என பவ்யத்துடன் தெரிவித்துக் கொண்டான்.

பெரியவா புரிந்து கொண்டு, லேசாகப் புன்னகைத்தபடியே, “மூணரை மணிக்கு ஒங்களை எழுப்பி விட்டுடறேன்னு சொன்னா அவ்வளவா நன்னா இருக்காதுங்கறதாலே, “ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர’ னு சொல்லி எழுப்பறேங்கறியாக்கும்” என்று நாகுவைப் பார்த்து பளிச்சென்று கேட்டார். நாகு அசட்டுச் சிரிப்பு சிரித்தான். என்ன பதில் சொல்வது என்று அவனுக்குப் புரியவில்லை.

“சரி..சரி. அப்டியே பண்ணு !” என்று கூறி விட்டு, உள்ளே சென்று விட்டார் ஆச்சார்யாள். இரவு மணி பதினொன்று. சத்திரம் உறக்கத்தில் ஆழ்ந்தது. பெரியவாளும் சயனத்துக்குச் சென்று விட்டார். நாகுவுக்குத் தூக்கமே வரவில்லை. கவலை அவனைத் தொற்றிக் கொண்டது. அந்தச் சத்திரத்தில் சுவர்க் கடிகாரமோ, அலாரம் டைம்பீசோ இருக்கவில்லை. மடத்திலும் இல்லை. நாகுவிடம் இருப்பதோ அவனுடைய மாமா, ‘பூணூல்’ கல்யாணத்தில் பரிசளித்த ரொம்பப் பழைய வாட்ச் ஒன்று தான். பெரியவாள் உடனேயே எப்போதும் இருக்க வேண்டி உள்ளதால், அதையும் கையில் கட்டிக் கொள்வதில்லை. அது நாகுவின் பழைய டிரங்க் பெட்டிக்குள்ளேயே அடைக்கலமாகி இருக்கும். ஒவ்வொரு நாளும் நாகு அதற்கு ‘கீ’ கொடுக்க எடுத்துப் பார்ப்பதோடு சரி…அப்புறம் தொடுவதில்லை.

‘தானும் படுத்துத் தூங்கி விட்டால் விடியக் காலம் மூணரைக்குப் பெரியவாளை எப்படி எழுப்ப முடியும் ?’ என்ற விசாரம் நாகுவைத் தொற்றிக் கொண்டது. இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தவன், நேராகப் ஸ்டார் ரூமுக்குப் போனான். டிரங்க் பெட்டியைத் திறந்து கைக்கடிகாரத்தை எடுத்துக் கொண்டான். நேராக ஸ்வாமிகள் சயனித்திருக்கும் அறைக்கு வெளியே சந்தடி இன்றி வந்து அமர்ந்தான். சத்தம் துளிக் கூட வெளியில் கேட்காமல் விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் பண்ண ஆரம்பித்து விட்டான். திரும்பத் திரும்பப் பாராயணம் செய்து கொண்டிருந்தான். தனது கடிகாரத்தைப் பார்த்தான். மணி சரியாக 3.30 . நாகு எழுந்தான். கண்களைத் துடைத்துக் கொண்டான். கைகளைக் கட்டிக் கொண்டு, ஸ்வாமிகள் சயனிக்கும் அறையைப் பார்த்தபடியே, சன்னமான குரலில், ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர..’ என நாமாவளி கோஷம் எழுப்பினான். சற்று நேரத்திலேயே அறைக் கதவு திறந்தது. சாட்சாத் ஸ்ரீ பரமேஸ்வரனே நடந்து வருவது போல சிரித்தபடியே மந்தகாசத்துடன் வெளிப்பட்டு, ‘சுப்ரபாத’ தரிசனம் அளித்தார் ஆச்சார்யாள். அந்த தரிசன பாக்கியம் அன்று நாகுவுக்கு மட்டுமே கிடைத்தது.

ஆச்சார்யாள், அந்த சத்திரத்து வாசற்படி வரை மெதுவாக நடந்து போய் விட்டு வந்தார். ஸ்நானத்துக்கு ஏற்பாடு செய்ய விரைந்தான் நாகு. சத்திரம் விழித்துக் கொண்டது.

அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் அதே மாதிரியே நாகுவின் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…நாம கோஷம் எனத் தொடர்ந்தது.

நான்காவது நாள் இரவு, ‘தன் இடுப்பில் கைக் கடிகாரத்தைச் செருகிக் கொண்டு ஸ்வாமிகளின் அறைக்கு வெளியே விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணம் செய்தபடியே விழித்துக் கொண்டிருந்த நாகு, தன்னையும் அறியாமல் கண் அயர்ந்து விட்டான். திடீர் என்று, ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…’ என்று ஒரு தெய்வீகக் குரல் நாகுவைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டது. தூக்கி வாரிப் போட்டபடி எழுந்தான். எதிரே, கருணை ததும்பச் சிரித்த முகத்துடன் ஆச்சார்யாள்.

ஸ்வாமிகள் வாத்ஸல்யத்துடன், “கொழந்தே, மணி சரியா மூணரை ஆறதுடாப்பா. அசதிலே நீ தூங்கிப் போயிட்டே போலிருக்கு. பாவம்..நோக்கும் நாள் பூரா கைங்கர்யம். சரீர சிரமம் இருக்குமோனோ ?” என்று சிரித்தபடியே கூறிவிட்டு, வாசற்புறம் நோக்கி மெதுவாக நடந்தார். இடுப்பில் செருகி இருந்த கைக் கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான் நாகு. மணி சரியாக 3.30.

மிகவும் ஆச்சர்யப்பட்டான் நாகு. ‘நாம குரல் கொடுக்காமலே எழுந்து வந்து ‘மணி மூணரை’ னு சரியாச் சொல்லறாளே பெரியவா !

இது எப்படி சாத்தியம் என்று மிகவும் குழம்பினான். அவன் காதுகளில் ‘ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…’ என்ற அந்த நடமாடும் தெய்வத்தின் தெய்வீகக் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. இது வரை அவன் அப்படிக் கேட்டதே இல்லை.

அன்றிரவு பதினோரு மணி. பெரியவா, சயனத்துக்குச் சென்று விட்டார். ‘எப்படியும் இன்று இரவு கண்ணயரவே கூடாது’ என்று திட வைராக்கியத்துடன் ஸ்வாமிகளின் அரை வாசலில் வந்தமர்ந்தான் நாகு. கையோடு ஒரு சிறிய பித்தளை செம்பில் ஜலம். ஒரு வேளைஅசதியின் மிகுதியால் தூக்கம் வந்து விட்டால் கண்களைத் துடைத்துக் கொள்ளவே ஜலம்.

இரவு மணி 2 .30 . அது வரை தூங்காமல் தாக்குப்பிடித்து விட்டான் நாகு. ஆனால் தொடர் விஷ்ணு சஹஸ்ரநாம பாரயணத்தையும் மீறி அவனுக்குத் தூக்கம் வந்து விட்டது. தன்னையும் அறியாமல் கிழே சுருண்டு படுத்தான். உறங்கி விட்டான்.

கதவு திறந்தது. ஆச்சார்யாள் மெதுவாக வெளியே வந்தார். உறங்கிக் கொண்டிருந்த நாகுவைப் பார்த்தார்; அவனுக்குப் பக்கத்தில் இருந்த செம்பையும் பார்த்தார். புரிந்து கொண்டார். சிரித்தார்.

“ஹர ஹர சங்கர…ஜெய ஜெய சங்கர…நாகு…எழுந்துறாப்பா” என மிருதுவாகக் குரல் கொடுத்தார் ஆச்சார்யாள். தூக்கி வாரிப் போட்டபடி எழுந்தான் நாகு. எதிரே புன் முறுவலுடன் பெரியவா.

“நாகு, மணி சரியா மூணரை. பாவம்…இன்னிக்கும் முடியாம தூங்கிட்டே போலிருக்கு. சரி…சரி…ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணு” என்று சொல்லி விட்டு, வழக்கப்படி வாசற்புறம் நோக்கி மெதுவாக நடந்தார் ஸ்வாமிகள். தனது கடிகாரத்தைப் பார்த்தான் நாகு. சரியாக மூணரை. வியந்து நின்றான். அன்று மதியம் பூஜையை முடித்து விட்டு, ஏகாந்தமாக அமர்ந்திருந்தார் ஆச்சார்யாள். மெதுவாக அவரருகே வந்து நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றான் நாகு. வாய் திறந்து அவன் ஒன்றும் பேசவில்லை.

ஸ்வாமிகளே பேசினார், “ஏண்டாப்பா நாகு…நீ நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பாத்தா, ஏதோ எங்கிட்டே கேட்டு தெருஞ்சுக்க வந்துருக்காப்லே படறதே. என்ன தெரியணும் ? கேளு…சங்கோஜப்படாதே.”

நாகு மிகவும் தயங்கினான். “அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியவா…” என்று இழுத்தான். உடனே ஸ்வாமிகள் புன்முறுவல் பூத்தபடியே, “ஒம் மனுசுலே என்ன கேக்க நெனச்சுண்டு நீ தயங்கறேங்கறது நேக்குப் புரியறது. ‘ரெண்டு நாளா நாம தூங்கிப் போயிடறோமே…பெரியவா எப்டி அவ்வளவு கரெக்டா மூணரைக்கு எழுந்துண்டு வர்றார் ? அவர் கிட்டே தான் ஒரு கடிகாரமும் இல்லியே…எப்படி முழுச்சுக்கரார்னு’ னு கொழம்பிண்டிருக்கே…இல்லியா ?” என்று கேட்டார்.

நாகுவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாம் கேட்க நினைத்ததைப் பெரியவா சொல்கிறாரே என்று மலைத்தான்.

நாகுவுக்கு இப்போது தைரியம் வந்து விட்டது. “ஆமா பெரியவா…என்னன்னே தெரியலே. ரெண்டு நாளா என்னையும் அறியாம தூங்கிப் போயிடறேன். பெரியவா தான் சரியா மூணரை மணிக்கு எழுந்து வந்து என்னையும் எழுப்பி விடறேள். நேக்கே ரொம்ப வெக்கமா இருக்கு. சரியா மூணரை மணிக்கு எப்படிப் பெரியவாளுக்கு…” என்று நாகு முடிப்பதற்குள்…

ஸ்வாமிகள், “ஏதாவது கர்ண யக்ஷிணி (காதில் வந்து சொல்லும் தேவதை) காதுலே மணிய சொல்றதானு சந்தேகம் வந்துடுத்தோ நோக்கு ?” என்று கேட்டு விட்டு இடி இடி என்று சிரித்தார்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா. தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்…பெரியவா” என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் நாகு.

பெரியவா சொல்ல ஆரம்பித்தார், “எங் காதுலே ஒரு யஷிணியும் வந்து சொல்லலே. எங் காதுலே மணி மூணரைங்கறதைச் சொன்னது ஒரு பஸ். அதுவும் மதுரை டி.வி.சுந்தரம் ஐயங்காரோட டி.வி.எஸ். பஸ். ஆச்சரியப்படாதே. மொத நாள் சரியா மூணரைக்கு நீ, ‘ஹர ஹர சங்கர…” சொல்லி எழுப்பி விட்டே. வெளியிலே வந்தே நான், வாசப் பக்கம் வந்தேனா…அப்போ ஒரு பஸ் சத்திர வாசலைக் கடந்து டவுன்குள்ளே போச்சு.

அடுத்தடுத்து ரெண்டு நாளும் பார்த்தேன். அதே மூணரைக்கு அந்த பஸ் சத்திர வாசலைக் தாண்டித்து. அப்புறமா விசாரிச்சேன். அது டி.வி.எஸ். கம்பெனியோட பஸ். மதுரைலேர்ந்து புதுக் கோட்டைக்கு விடியக் காலம் வர மொத பஸ்ஸுனும் சொன்னா…சத்திர வாசலுக்கு அந்த பஸ் விடியக் காலம் சரியா மூணரைக்கு வந்து தாண்டிப் போறது. ஒரு செகண்ட்…இப்படி அப்படி மாறல்லே. டி.வி.எஸ். பஸ் ஒரு எடத்துக்கு வர குறிப்பிட்ட டயத்த வெச்சுண்டே, நம்ம கடிகாரத்த கரெக்ட் பண்ணி டயம் வெச்சுக்கலாம்னு சொல்லுவா. அது வாஸ்தவம் தான். மூணு நாள் சரியா பார்த்து வெச்சுண்டேன். நாலாம் நாள்லேந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தான எழுந்துட்டுண்டேன்…வேற ஒரு ரகசியமும் இதுலே இல்லேடாப்பா நாகு…!” பெரியவா தன்னை மறந்து சிரித்தார்.

பதில் சொன்ன ஆச்சார்யாளின் முகத்தையே மெய் மறந்து பார்த்துக்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

படித்ததில் பிடித்தது கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை.

பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் திரு.சுப்பு ஆறுமுகம் கூறுகிறார் : “மஹா பெரியவாள் சொல்கிற கதைகளை வில்லுப்பாட்டில் பொருத்தமான இடத்தில் நான் சொல்வது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம், அவர் “ஏண்டா! இன்னிக்கு உன்னோட புரோகிராம்ல பால்கதை சொல்லுவியோ?” என்று கேட்ட சந்தர்ப்பங்களுமுண்டு. அது என்ன பால் கதை?”

பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.
அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித் தேன். ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் ஆறு ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் பதினாறு ரூபா விலை சொல்றான்” என்றாள்.

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் ஆறு ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு பதினாறு ரூபாயாகக் கூடிவிட்டதே! இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.

இதுதான், மஹாபெரியவாள் ரசித்துக் கேட்கிற பால் கதை. இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்.

நன்றி : ‘கல்கி’ – அருளே அறிவே

Shared from a friend

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஜே.டபிள்யூ எல்டர் என்ற ஐரோப்பியர்,
பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். அவர், ஹிந்து
சமயம்,பாரதப் பண்பாடு பற்றி நிறைய அறிந்திருந்தார்.
பாரதத்தில் பல துறவிகளையும்,மகான்களையும்
சந்தித்து வெகுநேரம் உரையாடியிருக்கிறார்.எல்லோரும்
அறிவுபூர்வமான பதில்களைச் சொன்னார்களே தவிர.
இதயபூர்வமான பதில்களைக் கூறவில்லை - என்று,
அவருக்குத் தோன்றியது. "என் சந்தேகத்துக்குத் தெளிவு
கிடைக்காமலே நான் திரும்பிப்போக வேண்டியதுதானா?"
என்று நொந்து கொண்டிருக்கும் வேளையில்,
பெரியவாள் தரிசனம் கிடைத்தது.
'பெரியவா சிரிக்கும்போது, குழந்தை கிறிஸ்து
சிரிப்பது போலிருக்கிறது!... மானுடத்தை விஞ்சிய
ஒரு தெய்வீக ஈர்ப்பு இருக்கிறது...'
இந்தக் 'குழந்தை' என் கேள்விகளுக்குப் பதில்
சொல்லுமோ?.. கேட்டுப் பார்க்கலாமே?
"சுவாமிஜி! ஹிந்து சமயக் கோட்பாடுகளில்,
எந்த இரண்டு தத்துவங்களை, இன்றைய
காலகட்டத்தில், அழுத்தமாக விளக்கிக் கூறி,
மக்கட் சமுதாயம் பயன் பெறச் செய்ய வேண்டும்
என்று தாங்கள் விரும்புகிறீர்கள்?"
பெரியவாள் நீண்ட நேரம் மௌனமாக இருந்தார்கள்.
ஐதரேயத்தின், 'ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம' என்ற மகா வாக்யம்,
இந்த ஐரோப்பியனுக்குப் புரியவே புரியாது;
திடீரென்று பதில் வெளிப்பட்டது.
"பாரதம் சுதந்திரமடைவதற்கு முன், சுமாராகப்
பத்து சதவிகித மக்கள் தான் நேர்மை குறைந்தவர்களாக
இருந்தார்கள். எல்லாத் தொழிலாளர்களின் பேச்சிலும்
சத்தியமும் நேர்மையும் இருந்தன. கடன் கொடுத்தல்,
பண்டமாற்று முதலியன கூட, சொற்களின்
அடிப்படையிலேயே நடந்தன. பேச்சுத் தவறினால்,
பாவம் வந்து சேரும்; நமது சந்ததியினர்
துன்பப்படுவார்கள் - என்ற பயம் இருந்தது."
"இப்போது அதெல்லாம் போச்சு;..வயது வந்தவர்களுக்கு
வாக்குரிமை என்று சட்டம் போட்டார்கள். அந்த உரிமையைக்
கொடுக்குமுன், அதை அவன் எவ்வாறு உபயோகிப்பான்
என்று எண்ணிப் பார்க்கவில்லை. கல்வி அறிவில்லாத,
ஏழையான ஒருவனுக்கு, இவ்வளவு முக்கியமான உரிமை
கிடைத்தால் என்ன செய்வான்?..என்ன செய்வானோ,அதுவே
நடந்தது! வாக்குரிமை விலைபேசப்பட்டது."
"இது, முதலாவது வீழ்ச்சி."
'அடுத்து; புதிய கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட
பொது நல விரோதச் செயல்கள்.
"போர்வெல் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டால்...
அப்புறம், தண்ணீர் ஆதிசேஷன் தலை வரை போய் விடுகிறது.
வருமானம் அதிகரித்து விட்டதால், ஆடம்பரமான
வாழ்க்கையில் மனம் ஈடுபடுகிறது."
"எது வாழ்க்கைக்குத் தேவை? எது, சுகபோகம்?"
என்ற உணர்வு மரத்துப் போய் எதைக் கண்டாலும்
அனுபவிக்க வேண்டும் என்ற அசுரத்தன்மை வந்து விடுகிறது.
"எளிமையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால்,
அந்த வாழ்க்கை எல்லோருக்கும் நிச்சயமாகக் கிடைக்கும்.
ஆனால்,சுகபோகங்களை எல்லா ஜனங்களுக்கும் கிடைக்கச்
செய்ய முடியுமா? அவ்விதம் கிடைக்கப் பெறாதவர்கள்,
நேர்மையைக் கைவிடுகிறார்கள்.!"
"வாக்குத் தவறாத நேர்மையும்,எளிமையுமே
.இரண்டு முக்கிய தேவைகள்.."
அரைமணி நேரம், வெள்ளம் போல் கொட்டித்
தீர்த்து விட்டார்கள்,பெரியவாள்.
ஐரோப்பியர், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித்
திக்குமுக்காடினார்.
சமுதாய நலனைப் பற்றி, இவ்வளவு ஆழமாகப்
பெரியவாள் சிந்தித்திருப்பது, மடத்துத்
தொண்டர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"வாக்குத் தவறாத நேர்மையும்,எளிமையுமே
.இரண்டு முக்கிய தேவைகள்.."
பாரிர் சிறந்த தயாபரா!
நீ ஒரு ராகமாலிகா!
கமகம் மாறா ராகம்!
மாசினை நீக்கும் மாயாமாளவம்
மங்களம் தரும் கல்யாணி!
சாந்தம் அளிக்கும் சங்கரன்!
வலிமை ஈந்தும் சண்முக பிரியன்!
நலிந்தவர்கும் அன்பும் பரிவும் ஈயும் மோகனன்!
கருணை மழையில் நனைக்கும் பிலஹரி!
ஆறுதல் சொல்லி அமைதியும்
நிம்மதியும் தரும் ஆனந்த பைரவன்!
கருணை வற்றாத சாகரம்
காருண்யம் பொங்கும் முகாரி
வறுமையை அகற்றும் ரதிபதி பிரியன்
அமைதி அளிக்கும் ஆபேரியின்
சிங்கார வேலன்.....
நீ என்றே உணர்ந்தேன்
வேங்கடவன் நானே! Penned by Sri. Venkata Kailasam

Shared with Shri. Mannargudi Sitaraman Srinivasan

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

மஹா பெரியவா அற்புதங்கள்

ஏகதண்டி ஸன்யாஸியை பாக்கறதே
தோஷம்

“கற்றாரை கற்றாரே காமுறுவர்” என்ற வசனப்படி, அபாரமான ஶசாஸ்த்ர புலமை, பாண்டித்யம் பெற்ற ஒரு மஹா வித்வானைப் பற்றி நம் பெரியவா கேள்விப்பட்டார். ஆனால் அந்த வித்வானோ, பெரியவாளின் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட ப்ரியப்படவில்லை!

காரணம்?

அவர் ஒரு வீர வைஷ்ணவர்!

வெறும், வீர வைஷ்ணவர் இல்லை…கடும் வீர வைஷ்ணவர்!

அவரைப் பொறுத்தமட்டில், “ஸித்தாந்தத்தில் அத்வைதத்தையும், தோற்றத்தில் ஶைவக் கோலத்தையும் மேற்கொண்டு, கையில் ஏக தண்டத்தை கொண்டுள்ள ஒரு ஸன்யாஸியை பார்ப்பதே பெரிய தோஷம்!”

பெரியவா.. பரிபூர்ண ஶசிவ மோ, பராசக்தியோ, ப்ரஹ்ம்மமோ எதுவாக வேண்டுமானாலும் இருந்தாலும், அவரிடம் அந்த யாதவ ஶசி ரோ ன்மணியின் குஸும்பு கலந்த ப்ரேமை அவ்வப்போது, எட்டிப்பார்த்துவிடும்! ஆனால், அதிலும் ஆட்கொள்ளும் அன்பே பரிமளிக்கும்.

“நீ வராட்டா போ!…. நா…..வரேன்” என்பது போல், அந்தப் பண்டிதர் இருந்த ஊருக்கு யாத்ரையாகச் சென்று, பெரியவா தங்கினார்.

அன்பு என்னும் வலையை வாகாக விரித்து வைத்துக் கொண்டார், இந்த பண்டிதர் மாதிரி நல்ல [பக்ஷிகளுக்காக] பக்தர்களுக்காக!

ஊரே தினமும் திரண்டு வந்து பெரியவாளை தர்ஶனம் செய்தபோதும், அவர் மட்டும் வரவேயில்லை!

‘எப்டியோ போ!’ என்று அவரை விடுவதற்காகவா வந்திருக்கிறார்?

வருவோர் போவோரிடமெல்லாம் இந்தப் பண்டிதரைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார். அந்த பண்டிதரின் காதுகளிலும், பெரியவாளின் தேஜஸ்ஸையும், வித்வத் பெருமையையும் பற்றி பலபேர் புகழ்ந்து பேசுவது எல்லாமே விழுந்தது. ஆனாலும் கமுக்கமாக இருந்து விட்டார்.

பெரியவா அவரை ஆட்கொள்ளும் தருணம் வந்தது !

ஸ்ரீமடத்தின் மஹா வித்வான் ஒருவரை அந்த வீர வைஷ்ணவரிடம் தகுந்த மர்யாதைகளுடன் அனுப்பி, முறைப்படி பெரியவா அவருக்கு அழைப்பு விடுத்தார்.

அவர் வீர வைஷ்ணவர் என்றாலும், உண்மையான வைஷ்ணவ லக்ஷணம் கொண்டவர். ஒரு பெரிய பீடாதிபதி, இத்தனை தூரம் நம்மை அழைத்திருக்கும்போது, நாம் அதை மதிக்காமல் இருப்பது அழகல்ல என்று தோன்றியது. எனவே மடத்து வித்வானிடம் வெளிப்படையாக பேசினார்.

“பெரியவா… இவ்ளோ தூரம் கூப்டு அனுப்பியிருக்கா…! மாட்டேன்னு சொல்லப்டா…துதான்! ஆனாலும், எனக்குன்னு செல ப்ரதிக்ஞைகள் இருக்கு. அதை மீறரதுக்கில்ல! அது ஒங்களுக்கும், ஒங்க பெரியவாளுக்கும் ஸம்மதப்படாம இருக்கலாம்… அதான் யோஜனையா இருக்கு…”

“ஒங்களோட ப்ரதிக்ஞைகள் என்னன்னு, சொன்னேள்-ன்னா… பெரியவாகிட்ட சொல்றேன்…”

பணிவோடு கேட்டார் ஸ்ரீமடத்து வித்வான்.

“மொத்தம் மூணு ! ஒண்ணு…அத்வைத மடத்து ஏகதண்டியான ஒங்க பெரியவாளை, நா…. நமஸ்காரம் பண்றதுக்கில்ல;

ரெண்டாவுது… அவர் ப்ரஸாதம் எதுவும் குடுத்தா…. அத… ஸ்வீகரிச்சுக்கறதுக்கில்ல;

மூணாவுது… வித்வத் ஸம்பாவனை-னு ஸால்வை போத்தறது, அது இதுன்னு எதாவுது ஒங்க பெரியவா செஞ்சா, அதையுங்கூட ஏத்துக்கறதுக்கில்ல!…”

“கெட்டுது போ! நம்ம பெரியவாளோட ஐஶ்வர்யம் தெரியாம, அவரை அவமர்யாதை பண்ற மாதிரி, இப்டி கடுமையா கண்டிஷன் போட்ற இவரப்போயி, பெரியவா…எதுக்கு வரிஞ்சு வரிஞ்சு அழைக்கணும்?…”

அந்த மஹா ஸாத்வீகமான ஸ்ரீமடம் வித்வானுக்கே இப்படித் தோன்றியது.

“ரொம்ப ஸந்தோஷம். தேவரீர் சொன்னதை, எங்க பெரியவா கிட்ட தெரியப்படுத்தறேன்”

மர்யாதையோடு அங்கிருந்து கிளம்பி, நேராக பெரியவாளிடம் வந்தார்.

முகத்தில் ஸுரத்தில்லாமல் வந்தவரிடம்…..புன்னகையோடு குடைந்தார்…. கோவர்த்தனத்தை குடையாக பிடித்த நம் கோவிந்தன்……

“என்ன சொன்னார்?…”

“ஒண்ணும் ஸெரியா படல….பெரியவா”

பண்டிதரின் ஸுரத்தில்லாத முகத்தைப் பார்த்தார்……

“என்ன? ஸ்ருதி கொறஞ்சு போச்சு?…”

“ஒண்ணும் ஸ்வாரஸ்யப்படல பெரியவா…..! அவர் ரொம்ப நிர்தாக்ஷிண்யமா கண்டிஷன் போடறார்!…”

“ஓஹோ! அப்டியா? ஸ்வாரஸ்யமாத்தானே இருக்கு! நீ நல்ல சேதின்னா கொணூந்திருக்கே!…”

“நல்ல சேதியா? அவர் ரொம்ப கறாரா கண்டிஷன் போடறார் பெரியவா…..”

“கண்டிஷன் போடறார்-ன்னா, அவர் முடிஞ்ச முடிவா…..வரவே மாட்டேன்னு சொல்லல… அவரோட ஏதோ கண்டிஷனுக்கு நாம ஒத்துண்டா…..வரேன்னு சொல்றார்-ன்னுதானே ஆறது? அந்த மட்டுல, நல்ல ந்யூஸ்தானே?….. ஸெரி…..என்ன கண்டிஷன் போட்டார்?…”

“சொல்றதுக்கே மனஸ் எடம் குடுக்கல…..”

“பரவாயில்ல…. சொல்லு! ...”

“மொத ப்ரதிக்ஞை, அவர் பெரியவாளை நமஸ்காரம் பண்ண மாட்டாராம்…..”

“பேஷா..!..அப்டியே இருக்கட்டும்….ம்ம்…மேல”

“ரெண்டாவுது…பெரியவா, எதாவுது ப்ரஸாதம் குடுத்தா, அவர் ஸ்வீகரிச்சுக்க மாட்டாராம்!….”

” அவ்ளோதானே!…ம்….”

“மூணாவுது…பெரியவா அவருக்கு வித்வத் ஸம்பாவனை-ன்னு ஸால்வை போத்தறது… அதெல்லாம் பண்ணினா, அதையும் ஸ்வீகரிச்சுக்க மாட்டாராம்”

பெரியவாளோ…. ஸஹஜமாக சிரித்துக் கொண்டே…

” இவ்ளோதானே? பேஷா அவரோட இஷ்டப்படியே இருந்துட்டுப் போகட்டுமே!…”

“எப்டி பெரியவா….? பெரியவாளை மதிக்கற மாதிரி தெரியல….அவர் இப்டீல்லாம் கண்டிஷன் போடறது…”

“பாரு! எனக்குத்தான அவரைப் பாக்கணும்-ன்னு இருக்கு? அவருக்கு இல்லியே? அப்டி இருக்கச்சே, அவர் கண்டிஷன் போடறதுல என்ன தப்பு? எனக்கு, அவர் நெஜமாவே ஒரு பெரிய வித்வத் ஸ்ரேஷ்டர், அவர்ட்ட புதூஸா ஏதோ கொஞ்சமாவுது க்ரஹிச்சுக்கலாம்-ன்னு இருந்தா, அவர் போடற கண்டிஷனை பொருட்படுத்தாம ஏத்துக்கத்தானே வேணும்?...”

அனைத்தும் அறியும் அறிவிற்கு அறிவாய் இருக்கும் ஆச்சார்ய ஶ சிரோ-ரத்னத்துக்கு, வேறொருவரிடம் க்ரஹித்துக் கொள்ள என்ன இருக்கிறது?

வினயம், வினயம் என்ற ஒன்றை நமக்கெல்லாம் கற்றுத் தரவே, இந்த ப்ராக்டிகல் க்ளாஸ்!

உண்மையில் பெரியவாளே அந்த ஸ்ரீ வைஷ்ணவரின் க்ருஹத்துக்கு ஸ்வாதீனமாக, தானே விறுவிறுவென்று சென்றிருப்பார். ஆனால், விபூதி-ருத்ராக்ஷம் அணிந்த, ஏகதண்டியான ஒரு ஸன்யாஸியை, அவர் தன்னுடைய க்ருஹத்துக்குள், மனஸார வரவேற்காமல் போயிருக்கலாம்! என்பதாலேயே, அவரை அப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் வைக்கக் கூடாதென்பதற்காகவே, பெரியவா அங்கே செல்லாமல், அவரைத் தன்னிடம் அழைத்திருக்கலாம்.

” போ! போயி அவரோட ப்ரதிக்ஞைக்கு எந்த பங்கமும் இல்லாத, இங்க வரலாம்-ன்னு சொல்லி, அழைச்சிண்டு வா…”

பண்டிதர் என்னவோ அரை மனஸோடு போய், அந்த வைஷ்ணவரை அழைத்து வந்தார், பெரியவாளுடைய ஸந்தேஷத்தை கூறி!

வைஷ்ணவருக்கு ஏக பெருமை!

ஸம்ஸ்க்ருத பாஷை…. கேட்கவும், பேசவும் மிகவும் அழகாக இருக்கும், அந்த அழகு இன்னும் கோடி மடங்கு அழகாக ஒலித்தது, நம் பெரியவா பேசியபோது!

அவர் உள்ளே நுழைந்ததும், பெரியவா அவரிடம், அழகான ஸம்ஸ்க்ருதத்தில், வைஷ்ணவர்களுக்கே உரிய பரிபாஷைகள் கலந்து, அவரை மிகவும் கௌரவமான முறையில் வரவேற்று, அவருக்கென போடப்பட்டிருந்த ஆஸனத்தில் அமரச் சொன்னார்.

வாக்தேவதையின் முன்னால் போடப்பட்டிருந்த மணையில், அவளுடைய அழகான வரவேற்பால் உண்டான ஒருவித நெகிழ்வும் ஒருசேர, அமர்ந்தார்…….!

அழகான வரவேற்பிலேயே லவலேஸம்….வைஷ்ணவரின் மனஸ் உருகியது.

வேதங்களும், “நமஹ நமஹ” என்று ருத்ரமும், சமகமும் போட்டி போட்டுக்கொண்டு நமஸ்கரிக்கும் நம் பெரியவாளை, நமஸ்காரம் பண்ணாமலேயேதான் அமர்ந்தார்!

ஸ்ரீ ராமானுஜருடைய [ப்ரஹ்மஸூத்ர] ஸ்ரீபாஷ்யம் பற்றியே அந்த வைஷ்ணவரிடம், நம் பெரியவா நிறைய “கேட்டுக் கொள்ள!!” ஆரம்பித்தார்!

ஆம்! முதலில், பெரியவா அவரிடம் கேட்டுக் கொள்வது போல் இருந்தது, போகப் போக…..அந்த வைஷ்ணவர் கேட்கக் கேட்க, ப்ரஹ்ம ஸூத்ரத்தை எழுதிய அந்த வேத வ்யாஸரே, பதில் சொல்வதாக மாறியிருந்தது!

வைஷ்ணவரின் முகம் பெரியவாளிடம் பேசப் பேச ப்ரகாசமாக ஆனது! ஏனென்றால், வாஸ்தவத்தில் அவரிடம் வித்யா கர்வம் இல்லை; நல்ல உயர்ந்த வித்யை இருந்தது. அதனால், பெரியவாளிடமிருந்து கல்பூரம் போல், நிறைய க்ரஹித்துக் கொண்டார்.

பண்பின் ஶசிகரமான பெரியவாளும், அவரை நிறைய ஊக்குவித்து, அவருடைய அறிவு ஸுரங்கத்திலிருந்து பாளம் பாளமாக பாண்டித்யத்தை வெளிக் கொண்டு வந்தார்.

வைஷ்ணவரும் கூட, இப்போது, “தான்…. ஒரு விபூதி-ருத்ராக்ஷம் அணிந்த, ஏகதண்டியான ஒரு ஸன்யாஸியிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை; ஒரு ஞான ஹிமாத்ரியிடமிருந்து பொங்கியோடும், ஞான கங்கையில் மூழ்கி, குளித்து, குடித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறோம்“, என்று அனுபவபூர்வமாக உணர்ந்தார்!

அவருடைய வைஷ்ணவ ஸித்தாந்தத்திலிருந்து, அத்வைதம் எப்படி மாறுபடுகிறது என்பதை, உயர்வு, தாழ்வு வித்யாஸம் காட்டாமல், ஸ்ரீ ஆச்சார்யாள் பாஷ்யத்தில் சொல்லியிருப்பதை அங்கங்கே லேஸாக கோடிட்டு காட்டியதும், அந்த வைஷ்ணவரும் பரந்த மனஸோடு அதை ஸ்லாகித்துக் கொண்டார்.

இப்படியாக ரொம்ப நேரம், இந்த அழகான வித்வத் ஸம்பாஷணை நடந்து, மிக மிக இனிதாக, நன்றாக முடிந்தது.

“ஒங்களோட ஸ்ரமத்தை பாராட்டாம, நா….அழைச்சதை ஏத்துண்டு, இத்தன நேரம்……என்னை வித்வத் கடல்ல மூழ்கடிச்சுட்டேள் ! ரொம்ப ஸந்தோஷம்!…..”

மஹா ஸரஸ்வதி வீணையை மறைத்துவிட்டு, தண்டத்தை சுமந்து கொண்டு, தன் முன் “வினயத்தின்” ரூபமாக நிற்பதை, இப்போது அந்த வைஷ்ணவர் நன்றாக உணர்ந்திருந்தார்.

“பெரியவாளுக்கு தெரியாத ஶசாஸ்த்ர ஞானம்….. தாஸனுக்கு இல்ல! ஆனா… தாஸனுக்கு தெரியாத கருணை, பெரியவாளுக்கு இருந்தததுனாலதான், கூப்டு அனுப்பி, அனுக்ரஹம் பண்ணியிருக்கா!…….”

இதைச் சொல்லி முடிக்கும் போதே, அந்த வைஷ்ணவரின் ஹ்ருதயமும், கண்களும், குரலும் தழுதழுத்து….! அப்படியே “தண்டம்” போல் கீழே விழுந்து பெரியவாளை நமஸ்காரம் செய்ய முற்பட்டவரை……

“வேணாம்! ஒங்களுக்கு ப்ரதிக்ஞா பங்கமாய்டும்!……”

வினய ஸம்பன்னர் தடுத்தார்! அதில், நாமெல்லாம் பண்ணுவது போல், குத்திக் காட்டும் எகத்தாளம் கிஞ்சித்தும் இல்லை!

“ப்ரதிக்ஞை-ல்லாம் மனுஷ்யாளை முன்னிட்டு பண்ணினதுதானே? ஸன்னிதானத்ல…அதுக்கு ப்ரஶக்தியில்ல [தெய்வத்துக்கு அது பொருந்தாது!]…..”

கண்ணீர் துளிர்க்க, பெரியவாளை விழுந்து விழுந்து ஸேவித்துத் தீர்த்தார்!

ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயண ஸ்வரூபமாகவே நின்று, தன் பக்தனின் நமஸ்காரத்தை ஏற்றுக் கொண்டார்….. “நாராயண! நாராயண!” என்ற நாமத்துடன்!

“பெரியவாளை நமஸ்காரம் செய்ய மாட்டேன்!” என்றவர், தானே… தன் நிபந்தனையை தகர்த்து எறிந்தார்!

அன்று, அங்கு சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் பரமபதமான ஸ்ரீவைகுந்தத்திற்கு மானஸீகமாக நிஸ்சயம் போயிருப்பார்கள்! ஏனென்றால், பகவானும் அப்படி! பக்தனும் அப்படி!

“பெரியவா…..தாஸனுக்கு மந்த்ராக்ஷதை அனுக்ரஹிக்கணும்…”

தன்னையே ப்ரஸாதமாக தந்துவிட்ட நம் பெரியவா….அவருக்கு மந்த்ராக்ஷதையையும் அனுக்ரஹித்தார்!

“பெரியவா கையால… மந்த்ராக்ஷதை எதுவும் வாங்கிக்க மாட்டேன்..”

வைஷ்ணவரின் ரெண்டாவது நிபந்தனையும் “ஃபணால்!!”

குழைந்து போய் நின்று கொண்டிருந்த அந்த வைஷ்ணவ பக்தரிடம் இப்போது பகவானே குழைந்து போனான்!

“என்னோட ஆசைக்காக, ஒங்களோட மூணாவுது ப்ரதிக்ஞையையும் விடலாம்-ன்னு தோணித்துன்னா.. ஒரு மஹா வித்வான் வந்தும் கூட, நம்ம மடத்ல அவருக்கு ஸம்பாவனை பண்ணல-ங்கற கொறை… எனக்கு இல்லாம இருக்கும்….”

அம்மாடீ! வருமா இந்த பரந்த ஹ்ருதயம்!

ஸ்ரீ வைஷ்ணவர் ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டார்!……. கண்ணீர் பொங்க, தழுதழுக்கும் குரலில்……

“பெரியவா எது பண்ணினாலும்…என்னோட பரம பாக்யமா ஏத்துக்கறேன்”

உடனே மிகவும் உயர்ந்த ஸால்வை ஒன்றை கொண்டு வரச்சொல்லி, ஸ்ரீமடத்திலிருந்து அளிக்கும் இந்த உயர்ந்த ஸம்பாவனையை, யாரை விட்டுக் குடுக்கச் செய்தார் தெரியுமா?…….

“கண்டிஷன் போடறார்.. பெரியவா!…” என்று பெரியவாளுடைய தூதராக ஸ்ரீ வைஷ்ணவரிடம் தூதாக நடந்த, அந்த மஹா வித்வானைக் கொண்டே, ஸம்பாவனை செய்யச் சொன்னார்…

நம்முடைய மனஸிலும், “மங்களம் சுஶப மங்களம்” என்று ஒரு கண்ணீர் கலந்த ஸந்தோஷம் பரவி நிறைவதை அனுபவிக்கலாம் !!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: Kanchi Maha Periyava

Post by PUNARVASU »

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் ப்ராம்மணர்கள் என்று பெயரளவாது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ப்ராம்மணன்; கெட்டுப்போன ப்ராம்மணன். கெட்டாலும் 'ப்ராம்மணன்'என்ற பேராவது இருக்கிறது!மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்றுதலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்மபந்துதான்;அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான்!அப்படியே க்ஷத்ரியன் காயத்ரீயை விட்டுவிட்டால் க்ஷத்ரிய பந்துவாகிறனான்;வைசியன் வைசிய பந்துவாகிறான்.

ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப் படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.

ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இனியாவது கண்ட ஆஹாரத்தை உண்ணாமல், மந்திரசக்தி இருப்பதற்கு தேஹத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

'ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா' என்றை (தைத்திரீய அரண்யக வாக்குப்) படி ஆயிரம் ஆவிருத்தி ஜபிப்பது உத்தமம்;நூறு ஜபிப்பது மத்யமும்;அதம பக்ஷம் பத்து.

காலை ஸந்தி, மத்தியான வேளை, மாலை ஸந்தி என்ற ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரீயாவது எத்தனை ஆபத்து காலத்திலும் ஜபம் பண்ணவேண்டும். இந்த மூன்று காலங்களும் சாந்தம் உண்டாகிற காலம். காலையில் பக்ஷி முதலிய பிராணிகளும் மனிதர்களும் எழுந்திருக்கும் காலம். அப்பொழுது மனது ஸாந்தியாக இருக்கும். ஸாயங்காலம் எல்லோரும் வேலையை முடிந்து ஒய்ந்திருக்கும் காலம். அதுவும் சாந்தமான காலம். மத்தியான காலத்தில் ஸ¨ரியன் உச்சியில் இருக்கிறான். அப்பொழுது எல்லோரும் அயர்ந்திருக்கும் காலம். அப்பொழுது எல்லோரும் அயர்ந்திருக்கும் காலம். அப்பொழுதும் மனதுக்கு சாந்தமான காலம். இந்த மூன்று காலங்களிலும் காயத்ரீ, ஸாவித்ரீ, ஸரஸ்தீ என்று மூன்று பிரகாரமாக தியானம் செய்ய வேண்டும். காலையில் பிரம்மா ரூபிணியாகவும், மத்தியான்னம் சிவ ரூபிணியாகவும், ஸாயங்காலம் விஷ்ணு ரூபிணியாகவும் தியானம் செய்யவேண்டும்.

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. ஹிப்நாடிஸம் என்பதனால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்நாடிஸம் என்பதனால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்நாடிஸம் காயத்ரீ மந்திரம்!ஆசையை அடக்கி ஜன்மம் எடுத்ததன் பலனை அடையச் செய்கிற ஹிப்நாடிஸம் காயத்ரீ!லோக காரியங்களைக் குறைத்துக் கொண்டு இந்தப் பொறியை ஊதுவதை அதிகமாகச் செய்யவேண்டும். இதை ஒரு விரதமாக வைத்துக் கொள்ளவேண்டும். அநாசாரத்தில் போகாமல் தேகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் இந்த ஒரு பொறியாவது அணையாமலிருக்கும்.

ஸந்தியாவந்தனத்தில் அர்க்கியமும் காயத்ரீயும் முக்கியமானவை. மற்றவைகளெல்லாம் அதற்கு அங்கமானவை. அசக்தர்களாயிருப்பவர்கள் அர்க்கியத்தைக் கொடுத்துவிட்டுப் பத்து காயத்ரீயாவது ஜபிக்க வேண்டும். 'அந்த இரண்டு தானே முக்கியம்?அவைகளை மட்டும் செய்துவிடலாம்' என்றால் வரவர அவைகளுக்கும் லோபம் வந்துவிடும். ஆபத்திலும் அசக்தியிலும் பத்து காயத்ரீ போதும் என்பதால் எப்போதும் இப்படிப் பத்தே பண்ணினால், அப்படிப் பண்ணுகிறவர்களுக்கு எப்போதும் ஆபத்தும் அசக்தியுமாகத் தான் இருக்கும் என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார். ஆகையால் அங்கபுஷ்களத்தோடு எதுவும் குறைவின்றி செய்து வந்தால்தான் முக்கியமானது நன்றாக நிற்கும். ஆபத்துக் காலத்திலுங்கூட அவைகளைச் செய்து வரவேண்டும். காலம் தப்பாமல் செய்யவேண்டும். பாரத யுத்தத்தின் போது ஜலம் அகப்படாதபோதுகூட தூளியை (புழுதியை) வைத்துக்கொண்டு காலம் தவறாமல் ஸேனாவீரர்கள் அர்க்கியம் கொடுத்தார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது.

அஸ்தமன காலத்திலும், உதயகாலத்துக்கு முன்பும், உச்சிக்காலத்திலும் அர்க்கியம் கொடுக்க வேண்டும். இடைக்காட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார். ஸித்தர்கள் விநோதமான காரியங்கள் பண்ணுவார்கள்;புதிராகப் பேசுவார்கள். இடைக்காட்டுச் சித்தர் ஆடு மேய்த்தார்!அவர், 'காணாமல் கோணாமற் கண்டு கொடு!ஆடுகாண் போகுது பார் போகுது பார்!என்று சொல்லி இருக்கிறார். "காணாமல்"என்றால் ஸ¨ரியனைக் காண்பதற்கு முன்பு என்பது அர்த்தம். அதாவது ஸ¨ரியோதையத்திற்கு முன் காலை அர்க்கியம்கொடுக்க வேண்டும். "கோணாமல்"என்பதற்கு ஸ¨ரியன் தலைக்கு நேரே இருக்கும் பொழுது என்பது அர்த்தம். அதாவது ஸ¨ரியன் மேற்காக சாய்வதற்கு முன் உச்சிக்காலத்தில் மாத்யான்னிக அர்க்கியம் கொடுக்க வேண்டும். "கண்டு"என்பதற்கு ஸ¨ரியன் இருக்கும் போது என்று அர்த்தம். ஸ¨ரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு மலை வாயிலில் இருக்கும்பொழுதே ஸாயங்கால அர்க்கியம் கொடுக்க வேண்டும். இந்த விஷயங்களைத்தான் அந்த ஸித்தர் லேசாகச் சொல்லியிருக்கிறார். "ஆடு" என்றால் "நீராடு!" அதாவது "கங்கையில் ஸ்நானம் பண்ணு" என்பது அர்த்தம். "காண்" என்றால் "ஸேது தரிசனம் பண்ணு" என்பது அர்த்தம். "போகுது பார்" என்றால் த்ரிகால ஸந்தியாவந்தனத்தாலும் கங்கா ஸ்நானத்தாலும் ஸேது தரிசனத்தாலும் நம் பாபம் தொலைந்து போகிறதைப் பார்!" என்று அர்த்தம். காசிக்குப் போய் கங்கையை எடுத்துக் கொண்டு, ஸேதுவான ராமேச்வரத்துக்குப் போய் ராமநாத ஸ்வாமிக்கு கங்காபிஷேகம் பண்ணும் ஸம்பிரதாயத்தைத்தான் சொல்லியிருக்கிறார்.

காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும். அர்க்கயத்தையும் காயத்ரீயையும் தவறாமல் செய்து கொண்டு வரவேண்டும். ஜன்மத்தில் ஒரு தரமாவது கங்காஸ்நானமும் ஸேது தரிசனமும் பண்ணவேண்டும்.

ஒருவனுக்கு ரொம்பவும் ஜ்வரம் வந்தால், கூட இருக்கிறவர்கள் அவனுக்காக ஸந்தியா வந்தனம் பண்ணித் தீர்த்தத்தை ஜ்வரம் வந்தவன் வாயில் விடவேண்டும். இப்பொழுது நமக்கு நித்தியப்படி ஜ்வரம் வந்தது போலத்தான் இருக்கிறது !

ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்; அதுபோல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போக காயத்ரீ மருந்து அவசியமானது. அதை எந்த காலத்திலும் விடக் கூடாது. மருந்தைவிட இதுதான் முக்கியமானது. ஒரு நாளாவது ஸந்தியாவந்தனத்தை விட்டு விட்டோமென்று இருக்கக் கூடாது.

காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகிற காரியந்தான். இதிலே ஜலத்தைத் தவிர வேறு திரவியம் வேண்டாம். சரீர பிரயாசையும் இல்லை. லகுவாகப் பரம சிரேயஸைத் தரும் ஸாதனம். ஆயுள் இருக்கிறவரைக்கும்

ஸந்தியாவந்தனத்துக்கு லோபம் வராமல் பண்ணவேண்டும்.

காயத்ரீயை மாத்ரு ரூபமாக (தாய்வடிவமாக) உபாஸிக்க வேண்டும்.

பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. காயத்ரீயை அப்படிப்பட்ட மாதாவென்று வேதம் சொல்லுகிறது.

புருஷனுக்குத்தான் காயத்ரீ இருக்கிறது. ஸ்திரீக்கு எந்த காயத்ரீ இருக்கிறதென்றால் புருஷன் காயத்ரீயை அநுஷ்டித்தாலே ஸ்திரீக்கு க்ஷேமம் உண்டாகும். இதேபால் காயத்ரீ ஜபத்துக்கு அதிகாரம் பெற்ற மூன்று வர்ணத்தாரும் அதை விடாமல் செய்வதாலேயே காயத்ரீயில் உரிமையில்லாத மற்ற ஜாதிகளுக்கும் க்ஷேமமுண்டாகும். தான் ஒன்றைச் செய்யாமலிருப்பதால் தனக்கு மட்டுமே நஷ்டம் என்றால் விட்டுவிடலாம்.

அதனால் பிறத்தியானுக்கு நஷ்டம் என்றால் அப்படி விட்டுவிட முடியாது. காயத்ரீக்கு அதிகாரமில்லாத சூத்ரர்களுக்கும் trustee (தர்மகர்த்தா) மாதிரி இந்த மந்திர சக்தியைப் பெற்றுத்தர வேண்டியவர்கள் இந்தக் கடமையைப் பண்ணாவிட்டால் அது பரிஹாரமே இல்லாத தோஷமாகும்.

பலவித மந்திரங்கள் இருக்கின்றன. அவைகளை ஜபம் பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்து பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்திதான்; மன மாசு அகலுவது தான். மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாக்கத்தான் இருக்கின்றன. அதுவே காயத்ரிக்கு நேரான பலன்; ஒரே பலன்.

இந்தக் காலத்தில் காலையிலும் ஸாயங்காலத்திலும் எல்லாரும் காலந்தவறாமல் ஸந்தியாவந்தனம் செய்யலாம். சீக்கிரம் ஆபீஸுக்குப் போகவேண்டியவர்கள் மத்யான்ன வேளையில் வீட்டிலிருக்க முடியாததால், பிராஃதக் காலம் ஆனபின், அதாவது ஸ¨ர்ய உதயத்திலிருந்து ஆறு நாழிகை (2மணி 24 நிமுஷம்) கழித்து வரும் ஸாங்க்ய காலத்தில், அதாவது 8.30 மணி சுமாருக்கு மாத்தியான்ஹிக அர்க்கியத்தை கொடுத்து ஜபிக்க வேண்டும்.

அதாவது நம்மால் அடியோடு முடியாமற் போனாலன்றி திரிகால ஸந்தியோபாஸனை இல்லாமல் இருக்கவே கூடாது.அடியோடு முடியாமல் ஜ்வரம் வந்தால் மற்றவர்களிடம் "கஞ்சி கொடு, தீர்த்தம் கொடு" என்று சொல்லுவதைப் போல், "எனக்காக ஸந்தியாவந்தனம் பண்ணு" என்று சொல்ல வேண்டும்.

மந்திர சக்தியானது அணையாமல் விருத்தியாகக் கிருபை செய்ய வேண்டுமென்று பகவைனை எல்லாரும் பிரார்திப்போமாக!
*****

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: Kanchi Maha Periyava

Post by PUNARVASU »

ஓதுமவனைக் காத்திடும், அவன் மனை காத்திடும்.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.
காணாமல் கோணாமல் கண்டு கொடு, ஆடு,
காண். போகுது பார், போகுது பார்!
நூறு உயர்வு,்அதில்பாதி மத்திமம், அந்த
நூற்றில் ஒரு பத்தாவது குறையற ஓதுமவனைத்
தாயவள் காப்பாள். இது திண்ணம். இது திண்ணம்!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

90 வயதில் அங்கப்பிரதட்சணம் - மஹாபெரியவா
These are some small incidents that tells that Periyava is not any human. He is parameswaran Himself who pretended to be an ordinary sanyasi in front of all of us!

காஞ்சீபுரத்தில் காமாக்ஷி அம்மனுக்கு கும்பாபிஷேகம்.
கோவிலிருந்து பெரியவாளை அழைத்தார்கள். ஸ்ரீ ஜயேந்திர பெரியவாளும் வந்து கூப்பிட்டார்.
ஆனால் பெரியவா வரவில்லை என்று சொல்லி விட்டார். நான் பெரியவாளிடம் நம் காமாக்ஷி அம்மனுக்குஅபிஷேகம் பெரியவா போகாமல் இருக்கலாமா? என்று கேட்டேன்.
அதற்கு பெரியவா இல்லை ஸ்ரீ ஜயேந்திர பெரியவா என் குழந்தை…மடத்தை நிர்வாகம் செய்கிறார் பூஜை செய்கிறார். அவர் தான் செய்ய வேண்டும் அது தான்முறை என்று சொல்லி விட்டார்.
கும்பாபிஷேகம் ஆன மறு நாள் கோவிலிலிருந்து தீர்த்தம்,சால்வை, புடவை எல்லாம் வந்தன. பெரியவா விபூதி ப்ரசாதத்தை இட்டுக் கொண்டார். சால்வையைப் போர்த்திக் கொண்டார்.
புடவையையும் மேலே போட்டுக் கொண்டார்.
என்னைப் பார்த்து என்ன கோவிலுக்குப் போகலாமா? நேற்றைக்கு கும்பாபிஷேகம் ஆகிவிட்டது நான் போக வில்லை எனக்குக் காமாட்சியைப் பார்க்க வேண்டும் போகலாமா? என்று கேட்டார்.
ஒரு குழந்தை தன் தாயைப் பார்க்க எப்படி ஆவலாக இருக்குமோ அப்படி ஓர் ஆவல் ! என்னை ஏன் கேட்கிறீர்கள் நீங்கள் விரும்பினால் போகலாம் என்றேன். நீதானே என்னை எங்கும் போகக் கூடாது என்று இங்கு கலவையில் உட்கார வைத்தாய் என்று நான் மூன்று வருஷங்களுக்கு முன் அவர் கால் சக்கரங்கள் அழியாமல் இருப்பதற்காகச் சொன்ன வார்த்தைகளை மீற முடியாமல் என்னிடம் கேட்டார்.
அன்று மாலை நான்கு மணிக்கு நடக்க ஆரம்பித்து மறு நாள் மாலை நான்கு மணியளவில் காஞ்சி போய்ச் சேர்ந்தோம். கோவிலில் சென்று அம்பாளை தரிசித்துப் புஷ்பம் போட்டு மாலை சார்த்தி புடவை சாத்தி அழகு பார்த்தார். பின் எங்களுக்குப் ப்ரசாதம் கொடுத்து ஆச்சார்யாள் சன்னிதிக்கு வந்து தரிசித்து அங்கேயே வாய் திறந்தவாறு படுத்து விட்டார். அவ்வளவு அசதி.
அப்போதுஅவருக்கு தொண்ணூறு வயசு.பின் பழமும் பாலும் கொடுத்து சாப்பிடச் சொன்னேன். மூன்று பழத்துண்டுகளும் பாலும் சாப்பிட்டு துயில் கொண்டார். மறு நாள் கொட்டகைக்குச் சென்று ஸ்னானம் செய்து ஈரத்துணியுடன் காமாக்ஷிக்கு அங்கப்ரதக்ஷிணம் செய்தார். உடம்பெல்லாம் ரத்தப் புள்ளியாக தோற்றம். முதல் முதலாக காமாக்ஷியை அங்கப்ரதக்ஷிணம் செய்தவர் பெரியவா தான்!
அதே வேகத்தில் கிளம்பி 25 கிலோ மீட்டர் நடந்து கலவை சென்றுவிட்டார்!
சொன்னவர் பாலு ஸ்வாமிகள்.
இந்தத் தென்பும் மனோ திடமும் நம்மில் யாருக்காவது வருமா? சாக்ஷாத் ப்ரத்யக்ஷ பரமேச்வரன்!
ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர ….

Rsachi
Posts: 5039
Joined: 31 Aug 2009, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by Rsachi »

yAntha pAntha - in which Thyagaraja kriti does it occur?

I read this story:
Image

I wish they had mentioned which kriti. I couldn't find these words in the kriti collection that I have.

Also, if yAntha means ra, shouldn't pAntha be pha? Why ma?

Could someone please enlighten me.
Thanks

Post Reply