Aanmeekam...

Post Reply
thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

நன்றி. அருமையான நோய் நிவாரணி. கலப்பிடமில்லாமல் உபயோகிக்கும் வகையில் கிடைக்குமா என்பதே ஐயம். மீண்டும் நன்றி

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Aanmeekam...

Post by cmlover »

Pictures of Narendra Modi as a Sadhu in his younger years
http://www.indiadivine.org/news/hinduis ... -modi-r724

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

.
காய், பழம், பூ + முறுக்கு !
.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

நம்மாழ்வாரின் அற்புதமான பாடல்......
====================================
உயர்வு அற உயர்நலம் உடையவன் எவன், அவன்!
மயர்வு அற மதிநலம் அருளினன் எவன், அவன்!
அயர்வு உறும் அமரர்கள் அதிபதி எவன், அவன்!
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

“பக்தி என்னதான் செய்யாது? எதைத்தான் சாதிக்காது? படிப்பறிவில்லாததொரு காட்டுமிராண்டி பரம பக்தர்களுள் தன் களங்கமற்ற பக்தியினால், முதன்மையானவனாக ஆகிவிட்டானே! இத்தனைக்கும் அந்த திண்ணன் செய்ததெல்லாம் உலகியலில் செய்யத் தகாத மஹாபாபங்களல்லவா? காட்டிலும் மேட்டிலும் நடந்து தேய்ந்த செருப்பினால் சிவலிங்கத்தின் மீதிருந்த நிர்மால்யங்களை அவன் களைந்தால், அதை வேதோக்தமாக செய்யப்பட்ட கூர்ச்சத்தினால் களையப்பட்டதாக இறைவன் ஏற்றுக் கொண்டார். பாத்திரம் இல்லாததால் தன் வாய் நிறைய தண்ணீரை உறிஞ்சிவந்து லிங்கத்தின் மீது அவன் எச்சில் நீரை உமிழ்ந்தால், அதை அவர் கங்காதி நதிகளிலிருந்து கொணர்ந்து ருத்ராபிஷேகம் செய்ததாக ஏற்றுக்கொண்டார். ருசியாக இருக்கிறதா? என தான் உண்டு பார்த்த மிச்சமான பன்றி மாமிசத்தை அவன் தந்தால், அதை சாஸ்த்ரோக்தமாக ஆசாரம் தவறாது செய்யப்பட்ட நிவேதனமாக அவர் ஏற்றுக் கொண்டார். அவ்வாறு ஏற்றுக் கொண்டு அவனை பக்தர்களுள் முதலாவதாக செய்துவிட்டாரே! என்ன அதிசயம்!” என வியக்கிறார் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள். கண்ணப்ப நாயனாரைப் பற்றி தன் ‘சிவானந்தலஹரி’யில். மேலும் அதே நூலில் பக்தியின் இலக்கணத்தையும் கூறுகிறார் அவர். “ஏறு அழிஞ்சில் மரத்தின் விதை தெறித்து எங்கே விழுந்தாலும் மேல்ல நகர்ந்து தாய் மரத்தில் ஏறி ஒன்றுவது போலவும், காந்தத்தை நோக்கி இரும்பு ஊசியானது நகர்ந்து ஒட்டிக்கொள்வது போலவும், தன் நாதனிடம் விரைந்து வந்து ஒரு பத்தினிப்பெண் ஒன்றுவது போலவும், மரத்தின் மேல் அருகிலிருக்கும் ஒரு கொடியானது வந்து படர்வது போலவும் கடலில் விரைந்து வந்து ஒரு நதியானது கலப்பது போலவும், இறைவனின் பாதங்களில் மனத்தாலும் செயலாலும் சென்று இயற்கையாக கலப்பதுதான் பக்தி எனப்படும்” என்கிறார்.

இறைவனிடம் நாம் கொள்வது மட்டும்தானா பக்தி? இல்லை, பக்தியில் மாத்ரு பக்தி, பித்ரு பக்தி, குரு பக்தி, பித்ருக்களிடம் கொள்ளும் பக்தி, பதிபக்தி, தெய்வ பக்தி எனப் பலவகை உண்டு. ஒவ்வொன்றாலும் மகத்தானவற்றை சாதித்தவர்கள் பலரைப் பற்றி நம் இதிகாச, புராண, சரித்திரங்கள் கூறுகின்றன.....Shared from FB

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

அனுமனின் தலையில் அமர்ந்தசனி !!!

ராவணனை அழிக்க வானரப் படைகளுடன் இலங்கை செல்வதற்காகக் கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன். இந்தப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானரப் படைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும், பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக் கொண்டிருந்தன.

ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்’என்ற அட்சரங்களைச் செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றினார்.

ராம லட்சுமணர்களை வணங்கி, "பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்" என்று வேண்டினார்.

“எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்” என்றார் ஸ்ரீராமன்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, “ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப் படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு” என்றார்.

“சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்தப் பாலம் அமைக்கும் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்” என்றான் அனுமன்.

“ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்தகால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கி விட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்தப் பாகத்தில் நான் பீடிக்கலாம்?” என்று கேட்டார் சனீஸ்வரன்.

“என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் குற்றமாகும். ‘எண் சாண் உடம்புக்கு தலையே முதன்மையாகும். எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்று கூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன். அதுவரை சாதாரணப் பாறைகளைத் தூக்கி வந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலை மீது வைத்துக் கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளைக் கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் எடையை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று. அதனால், சனீஸ்வரனுக்கே பயம் வந்துவிட்டது. 'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்று கூடச் சிந்தித்தார்.

அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.

“சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்க வேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?” என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன், “ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து இந்தப் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட பெருமை பெற்றேன். பரமேசிவனின் அம்சமான தாங்கள் முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்து விட்டேன்” என்றார்.

“இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்து விட்டீர்கள் அல்லவா?” என்றார் அனுமான்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், “அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்” என்றார்.

“ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்” என வரம் கேட்டார் அனுமன்.

சனியும் வரம் தந்து அருளினார் !!!!

JAI SHREE RAMA Shared from FB

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

ஏற்றங்கள் தரும் யமாஷ்டகம் :

சனி பகவான் வழிபாட்டில், யமதர்மன் வழிபாடும் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஒருவரது வாழ்நாளில் சனி தசை நடக்கும்போதும், ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி பிடித்து வாட்டும்போதும், யம தீபம் ஏற்றி வைத்து யமாஷ்டகம் படித்து வழிபட, கெடுதல்கள் குறைந்து நன்மைகள் பெருகும். சனி பகவானின் அதிதேவதையான யமதர்மன், தடைகளையும் எதிரிகளையும் விலக்கி, நலம் விளைவிப்பார்.

தன் கணவன் சத்தியவானைக் கவர்ந்து சென்ற யமதர்மராஜனிடம் வாதம் செய்த சாவித்திரிதேவி அருளியதே இந்த யமாஷ்டகம்.

தபஸா தர்ம மாராத்ய புஷ்கரே பாஸ்கர; புரா;
தர்மம் சூர்யா சுதம் ப்ராப தர்மராஜம் நமாம்யஹம்
ஸமதா ஸர்வ பூதேஷூ யஸ்ய சர்வஸ்ய சாக்ஷிண:
அதோயந்நாம சமகம் இதிதம் ப்ரணமாம்யஹம்
யேநாங்தங்ச க்ருதோ விஸ்வே சர்வேஷாம் ஜுலினாம்
கர்மாதி ரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம்
பிபர்த்தி தண்டாய பாபினாம் சுத்தி ஹேதவே
நமாமி தம் தண்டதரம் யச்சாஸ்தா சர்வஜுவினாம்
விச்வம் ஸகலயத்யேவ யஸ்சர்வேஷீச சந்ததம்
அதீவ துர்ணீ வார்யம்ச தம் காலம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாத மாராம்ச சர்வக்கோ மித்ரம்
புண்ய க்ருதோம் பவேத்
பாபிணாம் க்லேசதோ யஸ்தம்
புண்ய மித்ரம் நமாம்யஹம்
யஜ்ஜன்ம ப்ரஹ்மணம் சேந ஜ்வலந்தம் ப்ரஹ்ம தேஜஸா
யோத்யாய தீபரம் ப்ரும்ம தமீசம் ப்ரணமாம்யஹம்
யமாஷ்டக மிதம் நித்யம் ப்ராத: உத்தாய ய:படேத்
யமாத் தஸ்ய பயம் நாஸ்தி சர்வபாபாத் விமுச்யதே
யமாஷ்டகம் சம்பூர்ணம்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

நீர்மை கெட வைதாரும் நின்னொடு எதிர்த்தாரும்
சீர்மைபெற நின் அடிக்கீழ்ச் சேர்க்கையினால் -
நேர்மை இலா
வெவ்வுளத்தினேன் செய்மிகையைப் பொறுத்து
அருளி எவ்வுள் அத்தனே! நீ இரங்கு.
பிள்ளைப்பெருமாள்

பொதுப்பொருள்:

திரு எவ்வுள்ளூர் (திருவள்ளூர்) என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் என் தலைவனே! உந்தன் முன் அவதாரங்களில் உன்னை முறையில்லாமல் அறியாமையால் வசை பாடியவர்களும், உன்னை எதிர்த்துப் போரிட்டவர்களும்கூட சிறந்த முக்தியை அடையுமாறு உன் திருவடியில் சேர்ந்து அருள் பெற்றிருக்கிறார்கள். ஆகவே, நேர்மையற்ற, கொடிய மனம் கொண்ட அடியேன் செய்த பிழைகளையும் பொறுத்தருளி, என்பால் இரங்குவாயாக.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image


ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்!

ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.

ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் துõக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை துõளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த <உபாதைகள் நிவாரணம் ஆகும். ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும். பிறர், வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம். ருத்ராட்சத்தைக் கழுத்தில் மாலையாக 32ம், கை மணிக்கட்டில் 12ம், மேல் கையில் 16ம், மார்பில் 108ம் ஆக தரிக்கலாம்.

ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.

மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.

ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.

ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும்.

எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.

ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.

பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும்.

பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.

ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=32925

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

ருத்ராக்ஷம் பற்றிய பல விஷயங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன . மிக்க நன்றி. இந்த ருட்ராக்ஷத்தில் தான் இயற்கையிலேயே துளை உள்ளது என்பது ஒரு கூடுதலான தகவல். தொகுப்பை அளித்தமைக்கு மீண்டும் நன்றி.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும்
கர்ணனை கொடை வள்ளல்
என்று சொல்வது பிடிக்கவில்லை.
அவருடன் வாதிட்டான்.
கண்ணன்
உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார்.
அர்ஜுனனை அழைத்து,
''இன்று மாலைக்குள் இந்தக்
குன்று முழுவதையும் நீ தானம்
செய்து முடித்து விட்டால், நான்
உன்னை கர்ணனை விட சிறந்த
கொடை வள்ளல் என்று ஒத்துக்
கொள்கிறேன்,''என்றார்.
அர்ஜுனனும் ஊர் முழுக்க
செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள்
வரவர,
தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க
ஆரம்பித்தான்.
எவ்வளவோ பிரயாசைப்பட்டும்
அவனால் அன்று மாலைக்குள்
பாதி அளவு கூட தானம்
செய்து கொடுக்க முடியவில்லை.
அப்போது அந்தப் பக்கம் கர்ணன்
வரவே, கண்ணன் அவனை அழைத்து,
''கர்ணா, இந்தத் தங்கக்
குன்றை நாளை காலைக்குள் தானம்
செய்து கொடுத்து விட வேண்டும்,
உன்னால் முடியுமா?''என்று கேட்டார்.
கர்ணனும், ''இது என்ன பெரிய
வேலையா?'' என்று கூறிக்
கொண்டே அந்தப் பக்கம் வந்த
வறியவர் இருவரை அழைத்தான்.
அவர்களிடம், ''உங்கள் இருவருக்கும்
இந்த தங்க மலையை தானம்
அளிக்கிறேன்.
வெட்டி உபயோகித்துக்
கொள்ளங்கள்,''என
்று கூறியபடியே,சென்று விட்டான்.
அப்போது கண்ணன் அர்ஜுனனிடம்
சொன்னார்,
''இப்போது உனக்கு வித்தியாசம்
தெரிகிறதா? உனக்கு முழுமையாகக்
கொடுக்கலாம் என்ற எண்ணம்
கடைசி வரை வரவில்லை..

நீதி: தானமோ அன்போ நம் மனதின்
ஆழத்திலிருந்து முழுமையாக
கொடுக்காதவரை அதன்
சிறப்பு தெரிவதில்லை

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

அம்பு லிக்கொரு நட்டம் புரிந்தவர்,
அம்பு லிக்கொரு நட்டம் புரிந்திலார்,
ஆழி யும்சங்கும் மாலுக் களித்தவர்,
ஆழி யும்சங்கும் மாலுக் களித்திளார் ,
வம்பு லாவும் இதழியை வேட்டவர்,
வந்து செய்ய இதழியை வேட்டிலார்,
மானை யும்கைப் பிடித்தே நடத்தினார்,
மானை யும்கைப் பிடித்தே நடத்திலார்,
பம்பு வேலை விடமிட (று) ஆக்கினார்,
பாவை யாசை விடமிட (று) ஆக்கிலார்,
பரவை கோபமும் சோபமும் தீர்த்தவர்,
பரவை கோபமும் சோபமும் தீர்த்திலார்,
செம்பொன் மாளிகை அம்பலக் கூத்தனார்,
தினமும் எங்களை அம்பலத்(து) ஏற்றினார்,
தில்லை யம்பதி வாழ் நடராசனார்,
திருவு ளச்செயல் நன்றா இருந்ததே.

- இளஞ்சூரியர், முதுசூரியர், என்றபுகழ் பெற்ற இரட்டைப் புலவர்கள்


தமிழ்ப் புலவர்களில் அதிகம் பேசப்படாதவர்களுள் "இரட்டை புலவர்"களும் அடங்குவர். இதில் ஒருவருக்கு கண்பார்வை கிடையாது. மற்றொருவருக்கு கால்கள் கிடையாது. இவர்களின் வெண்பாக்களில் முதல் இரு அடிகளை முதலாமவர் சொல்ல, ஈர்ரடிகளிரண்டையும் பின்னவர் முடிப்பார்.

கால்களற்றவர் வழி சொல்ல, பார்வையற்றவர் அவரை தோள்களில் தூக்கிகொண்டு செல்வார். ஏழ்மையில் வாடிய அவ்விருவருக்கும் உடுத்த துணி ஒன்று.மாற்று துணி ஒன்று தான். அவ்விரண்டுமே கந்தல் வேறு. ஒருமுறை அவ்விருவரும் மதுரையம்பதிக்கு விஜயம் செய்தனர்.

வைகையில் துணிகளை அலசி, நீராடி விட்டு, சொக்கரையும், மீனாட்சியையும் சந்திக்க உத்தேசப்பட்டு, ஆற்றில் இறங்கினர். பார்வையற்றவர் துணிகளைத் துவைக்க, கால்களற்றவர் கரைமேல் அமர்ந்து கொண்டிருந்தார்.

வைகையின் வெள்ள மிகுதியால், துவைக்கப்பட்டு கல்லின் மேல் வைக்கப்பட்டிருந்த வேட்டியானது நீரினால் அடித்துச்செல்லப்பட்டது. நடப்பதேதும் அறியாத பார்வையற்றவர் மற்றொரு துணியை துவைத்துக்கொண்டிருக்க, நீரினால் அடித்துச்செல்லப்பட்ட வேட்டியை தண்ணீரில் இறங்கி பிடிக்க முடியாத கால்களற்றவர் :

அப்பிலே தோய்த்திட் டடுத்தடுத்து நாமதைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ?

(அப்பு - தண்ணீர்; தப்புதல் - தோய்த்தல்;
நீ தப்பின(தோய்த்த), அது உன்னைவிட்டுத்
தப்பி போச்சு

இதைக் கேட்ட அந்தகர் பாடுகிறார்
- செப்பக் கேள்
‘ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ’

“கந்தல் துணி - ஆயிரம் ஓட்டை - போனால்
போகட்டும் நம்மை பிடிச்ச துன்பம்
போச்சு போ” என்று.
முடவர் விடவில்லை

‘கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?’
(அது எத்தனை கந்தையானாலும்
இரவிலே குளிருக்கு ஆகுமே)

இப்பொழுது முடிவாக,
பார்வையில்லாதவர் சொல்லுகிறார்

எண்ணாதீர்,
இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை!’
(கலிங்கம் - ஆடை சொக்கலிங்கமுண்டு -
முண்டு என்றால் துண்டு;
இன்னொன்று மதுரை ஆண்டவன்
துணை உண்டு என்று).

அப்பொழுது துணி அலையில் தவிழ்ந்து
அவர் கைக்கு வர, இருவரும்
கரையேறுகின்றனர்.
There are many sites dedicated to the "இரட்டைப் புலவர்கள்"

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

இன்னும் 14 நாட்களே உள்ளன- திருவையாற்றில் அப்பர் திருக்கயிலை காட்சி விழா-2014 (26/07/2014)
ஆடி அமாவாசை அற்புதக்காட்சி: அறம் வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோயிலைப் பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார்குளம் என்றும் சமுத்திரதீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷபவாகனத்தில் காட்சியளித்தார். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின் போது நாவுக்கரசர் பாடிய மாதர்பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலை நாதனை தரிசிக்கும் பேறு பெறுவர் என்பது ஐதீகம். ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில் இங்குகோயில் பிரகாரத்தில் ஐயாறப்பா என்று ஒரு முறை அழைத்தால் ஏழு முறை எதிரொலிப்பதைக் காணலாம்.
மாதர்ப்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவாரவர் பின்புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது
காதன் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர் திருப்பாதங்கண்டறியாதன கண்டேன்.
""யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது'' என்ற அப்பரின் திருவாக்கின்படி நாமும் இந்நாளில் திருவையாறு சென்று திருக்கயிலைக் காட்சியைக் காண்போம்
பங்கேற்று பிறவிப் பயனைப் பெறுவோம்.
தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
ஆரூர் அமர்ந்த அரசேபோற்றி சீரார் திருவையார போற்றி போற்றி!!!

Shared from : Krishnamurthy Natarajan

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

இரட்டைப் புலவரின் பாடல் ரசித்தேன்.
ஐயாரப்பன் ஆலயத்தில் ஏழு முறை ஒரு சுற்று தனில் ஒலிப்பதையும் சிறுவயதில் கேட்டுள்ளேன். தொகுப்புகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
தஞ்சாவூரான்
12 07 2012

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Aanmeekam...

Post by arasi »

மிக்க நன்றி...

இரட்டைப் புலவர்களைக் கொணர்ந்ததற்குமே...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை:

பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி
கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சி
பூர்வமானது. ஒருசமயம் அவர் கடும் வயிற்று
வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ
சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று
வலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப்
போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து
கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா
ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய
சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த
திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம்
மாறினார்.

திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை
எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர்,
முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம்
இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர்
கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு,
கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில்
அமர்ந்தார்.

அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள்
புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும்
திறனையும் அவருக்கு அளித்தார்.

அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள்
மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து
ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்…

என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான
சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்.
அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின்
பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி,
சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்
தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார்.

6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள்
இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த
வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.

கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை
முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல்
புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த
பரவசம் ஆனார்.

அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி
தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள்
யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு
தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும்
கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள்
கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த
சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார்.
அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும்
இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட
வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம்.
இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம்
போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது
குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி.
இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது.
அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில்
தொடங்கி,

ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை
நிறைவு செய்ய வேண்டும். இதேபோல், முருகப்
பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை
வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப்
பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்
பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின்

ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம்,

சத்ரு போன்றவற்றை குறிக்கும்.

இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும்
வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான்.
அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர்
திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5
அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய
சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும்
பாராயணம் செய்வது நல்லது.

சஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி
கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால்
நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப்
பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்,
நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள்,
குழந்தை பாக்கியம் கிட்டும்…. இப்படி பல பலன்கள்
கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்
பட்டுள்ளது.
-
————————————
நன்றி: தினகரன்




Listen to the six kavacham here:

http://www.mediafire.com/?uupq134kvcbkv

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

மகா பெரியவாள் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி( ஒரு சிறுமி வடிவத்தில்)
ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலுக்கும் போகும் வாய்ப்பு கிடைத்தது. பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் இந்தக்கோயில் அமைந்திருக்கிறது.

அங்கு எல்லோருக்கும் இந்தக்கோயில் தெரிந்திருப்பதால் மிக எளிதாக போகமுடிகிறது நேரு காலனி என்ற இடம் வர இந்தக்கோயிலைக் காணலாம் இந்தக்கோயிலில் அமர்ந்து அருள் பாலிக்கும் அன்னை ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி .......இவள் இங்கு அமர்ந்து அருள் புரிகிறாள். இந்த அம்பாள் இங்கு வந்து கோயில் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தவர் நம் மகா பெரியவாள் அவர்கள் தான். அவர்தான் ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகர சரஸ்வதி சுவாமிகள் பலவருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்........சுவாமிகள் பரங்கிமலைக்கு பாத யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் குழுவுடன் வந்துக்கொண்டிருந்தார். ஸ்ரீ. நந்தீஸ்வரர் கோயில் பரங்கிமலையில் இருக்கிறது.

வரும் வழியில் திரிசூலம் என்ற இடத்தில் திரிசூலநாதர், அம்பாள் திரிபுரசுந்தரியைத் தரிசித்து வரும் போது பவழந்தாங்கல் என்ற இடம் வந்தது. அங்கு பெரிய அரசமரம் நிழல் கொடுத்துக் கொண்டிருக்க சுவாமிகள் அந்த இடத்தில் களைப்பாறினார். அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று பக்தர்கள் குழு சற்று நகர்ந்து நின்றுவிட்டனர். மகாபெரியவாள் தனித்துவிடப்பட்டார். திடீரென்று அந்த மகானுக்கு நாக்கு காய்ந்து போக நாவரண்டு விட்டது அவர் தன் சன்னமான குரலில் ஒரு சிஷ்யரை அழைத்தார். ஆனால் அவருக்குக்காதில் விழவில்லை.

அந்த நேரத்தில் சின்னப்பெண் கையில் சொம்புடன் வந்து நின்றாள்

"மஹாபெரியவரே இந்தாருங்கள் தண்ணீர் கேட்டீர்களே நான் கொண்டுவந்திருக்கிறேன். நீர் அருந்துங்கள்" என்றபடி சொம்பை நீட்டினாள். அவரும் நீரைப்பருகியபிறகு சொம்பைக்கொடுக்க அவளைப்பார்த்தபோது அந்தச்சிறுமி அங்கில்லை.

உடனே தன் சிஷ்யரை அழைத்து "நீங்கள் தண்ணீர் சொம்புடன் அனுப்பிய பெண் எங்கே?" என்று கேட்டார்

சிஷ்யர்களுக்கு ஒரே வியப்பு..!

"எங்களுக்கு ஒன்றுமே தெரியாது நாங்கள் ஒரு சிறுமியையும் அனுப்பவில்லையே "என்றனர் .

உடனே தியானத்தில் ஆழ்ந்த சுவாமிகள் வந்தது ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி என்பதை உணர்ந்தார்.

பின் அங்கிருந்த பக்தர்களை அழைத்தார்.

"இங்கு எங்கேயோ அம்பாள் புதைந்திருக்கிறாள் அவளை எப்படியேனும் வெளியே கொண்டு வந்து கோயில் கட்டுங்கள்" என்றபடியே தன் பாத யாத்திரையைத் தொடர்ந்தார்.

பழழந்தாங்கல் மக்களும் ஒருமனதாக அந்த இடத்தைத்தோண்ட கிடைத்தது ஒரு அம்பாள் விக்கிரஹம். குழந்தை வடிவில் இருந்தது. மேலும் தோண்ட இன்னொரு அம்மனும் கையில் தட்டுப்பட அவள் சண்டிகேஸ்வரி யாக இருந்தாள்.

எல்லோருக்கும் பரம சந்தோஷம். மஹாபெரியவாளிடம் அவர்கள் விஷயத்தைச்சொல்ல அவர் விக்ரபிரதிஷ்டை செய்ய வந்து அம்பிகைக்கு "ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி" என்ற நாமம் சூட்டினார்.

பின் என்ன கொஞ்சம் கொஞ்சமாக கோயில் கட்டும் பணி தொடர்ந்து கருவறை முன் மண்டபம் பரிவார தேவதைகள் எல்லாமே மகாபெரியவாள் சொற்படி அமைக்கப்பட்டு இன்று எல்லோருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.

அவளைப்பார்க்க வேண்டுமானால் குறுகிய இடத்தில் படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும் ஐயப்பன் கோயில் படிகள் போல் ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு தேவதை இருக்கிறாள். மேலே அம்பாளின் அழகே அழகு. வர்ணிக்க வார்த்தைள் இல்லை.

அந்தக் கண்களை சொல்லவா புன்னகிக்கும் உதடுகளைச்சொல்லவா நீண்ட நேர்த்தியான நாசியைச்சொல்லவா .......எல்லாமே அத்தனை அழகு. நிச்சியமாக ஒரு தனி சக்தி நம்மேல் பாய்வதை உணர முடிகிறது, மாசி மாதம் அந்த ஆதவனும் ஆறு நாட்கள் காலை ஆறுமணிக்கு அம்பாள் மேல் தன் கிரணங்களைப்பாய்ச்சி வணங்குகின்றான்.

அம்பாள் அப்போது ஜ்வலிக்கும் அழகே அழகு!

இந்த நேரத்தில் சூரிய வழிபாடு என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது

சிவன் கோயிலில் சண்டிகேஸ்வரர் இருப்பது போல் இங்கு சண்டிகேஸ்வரி அமர்ந்திருக்கிறாள். குழந்தை பாக்கியம், கல்வி செல்வம் என்று பல வழங்கி பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கும் ராஜராஜேஸ்வரியை நாமும் தரிசித்து வணங்கி அவள் அருளைப்பெறலாமே

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

AAdi Pooram: Prayers to Amman:
Sri Kalikambal Temple
The temple is located at Thambu Chetty Street. Chennai city was once called Chennamman Kuppam in the name of Goddess Chennaman and later Chenna pattinam. The Kali of the erstwhile Chennamman Kuppam is today’s Kalikambal. The temple was once located inside the St George fort and later shifted here during the British regime. The temple has the sanctity of the two Pancha bootha Sthalams – Kanchipuram and Thiruvannamalai.
At the foot of the Goddess is present the Arthameru installed by Aadhi Shankarar….
Sri Kalikambal and Kamakshi are one and the same..

வங்க கடல் அலை இசையில்
மயங்கும் அன்னை அவள்
சென்னை நகரை காத்து நிற்பவள்
அருளை பொழியும் காளியவள்
காமதேஸ்வரரினன் சகியவள்
கந்த கோட்டம் வளர் கந்தனின் தாயானவள்
' யாதுமாய் நின்றவள்' அவள்..
ஐயன் தொழும் அன்னை அவள்!
காமாஷி என்றும் பெயருடையவள்
சாந்த ஸ்வரூபியானவள்
பெரியநாயகியாக நின்றவள்
நவராத்திரி நாயகியவள்
அபிராமியும் சிவகாமியும் அவளே
சங்கரியும் கல்பகமும் அவளே
நிம்பு மாலை சூடியவள்
வேங்கடவனின் கருத்தினில் நின்றவள்!
ஆதி சங்கரரும் பாரதியும்
சத்ரபதியும் போற்றி வணங்கியவள்
venkat k

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

15 Amazing predictions for kalimyuga from bhagavatha purana

In the last canto of the Bhagavata Purana there is a list of predictions and prophecies,
about the dark times for the present age of Kali Yuga.
The following 15 predictions, written 5,000 years ago by Sage VedavyAsA,
are amazing because they appear so accurate.
Despite the negative tone of these prophecies,
there is still one bright spot for all of us, which is mentioned at the end


15 Most Amazing Predictions for Kali Yuga from the Bhagavata Purana


Prediction 1:
Religion, truthfulness, cleanliness, tolerance, mercy, duration of life, physical strength and memory will all diminish day by day because of the powerful influence of the age of Kali.
Source: Srimad Bhagavatam 12.2.1
sri-suka uvaca
tatas canu-dinam dharmah
satyam saucam ksama daya
kalena balina rajan
nanksyaty ayur balam smrtih

Prediction 2:
In Kali Yuga, wealth alone will be considered the sign of a man's good birth, proper behaviour and fine qualities. And law and justice will be applied only on the basis of one's power.

Source: Srimad Bhagavatam 12.2.2
vittam eva kalau nṝṇāḿ
janmācāra-guṇodayaḥ
dharma-nyāya-vyavasthāyāḿ
kāraṇaḿ balam eva hi


Prediction 3:
Men and women will live together merely because of superficial attraction, and success in business will depend on deceit. Womanliness and manliness will be judged according to one's expertise in sex, and a man will be known as a brahmana just by his wearing a thread.

Source: Srimad Bhagavatam 12.2.3

dāmpatye 'bhirucir hetur
māyaiva vyāvahārike
strītve puḿstve ca hi ratir
vipratve sūtram eva hi


Prediction 4:
A person's spiritual position will be ascertained merely according to external symbols, and on that same basis people will change from one spiritual order to the next. A person's propriety will be seriously questioned if he dos not earn a good living. And one who is very clever at juggling words will be considered a learned scholar.
Source: Srimad Bhagavatam 12.2.4
lińgaḿ evāśrama-khyātāv
anyonyāpatti-kāraṇam
avṛttyā nyāya-daurbalyaḿ
pāṇḍitye cāpalaḿ vacaḥ


Prediction 5:
A person will be judged unholy if he does not have money, and hypocrisy will be accepted as virtue. Marriage will be arranged simply by verbal agreement, and a person will think he is fit to appear in public if he has merely taken a bath.

Source: Srimad Bhagavatam 12.2.5

anāḍhyataivāsādhutve
sādhutve dambha eva tu
svīkāra eva codvāhe
snānam eva prasādhanam


Prediction 6:
A sacred place will be taken to consist of no more than a reservoir of water located at a distance, and beauty will be thought to depend on one's hairstyle. Filling the belly will become the goal of life, and one who is audacious will be accepted as truthful. He who can maintain a family will be regarded as an expert man, and the principles of religion will be observed only for the sake of reputation.

Source: Srimad Bhagavatam 12.2.6
dūre vāry-ayanaḿ tīrthaḿ
lāvaṇyaḿ keśa-dhāraṇam
udaraḿ-bharatā svārthaḥ
satyatve dhārṣṭyam eva hi
dākṣyaḿ
kuṭumba-bharaṇaḿ
yaśo 'rthe dharma-sevanam


Prediction 7:
As the earth thus becomes crowded with a corrupt population, whoever among any of ther social classes shows himself to be the strongest will gain political power.

Source: Srimad Bhagavatam 12.2.7

evaḿ prajābhir duṣṭābhir
ākīrṇe kṣiti-maṇḍale
brahma-viṭ-kṣatra-śūdrāṇāḿ
yo balī bhavitā nṛpaḥ

Prediction 8:
Harassed by famine and excessive taxes, people will resort to eating leaves, roots, flesh, wild honey, fruits, flowers and seeds. Struck by drought, they will become completely ruined.

Source: Srimad Bhagavatam 12.2.9

śāka-mūlāmiṣa-kṣaudra-
phala-puṣpāṣṭi-bhojanāḥ
anāvṛṣṭyā vinańkṣyanti
durbhikṣa-kara-pīḍitāḥ


Prediction 9:
The citizens will suffer greatly from cold, wind, heat, rain and snow. They will be further tormented by quarrels, hunger, thirst, disease and severe anxiety.

Source: Srimad Bhagavatam 12.2.10

śīta-vātātapa-prāvṛḍ-

himair anyonyataḥ prajāḥ
kṣut-tṛḍbhyāḿ vyādhibhiś caiva
santapsyante ca cintayā

Prediction 10:
The maximum duration of life for human beings in Kali Yuga will become 50 years.


Source: Srimad Bhagavatam 12.2.11

triḿśad viḿśati varṣāṇi
paramāyuḥ kalau nṛṇām

Prediction 11:
Men will no longer protect their elderly parents.

Source: Srimad Bhagavatam 12.3.42

na rakshishyanti manujah
sthavirau pitarav api

Prediction 12:
In Kali-yuga men will develop hatred for each other even over a few coins. Giving up all friendly relations, they will be ready to lose their own lives and kill even their own relatives.

Source: Srimad Bhagavatam 12.3.41

kalau kakinike 'py arthe
vigrihya tyakta-sauhridah
tyakshyanti ca priyan pranan
hanishyanti svakan api

Prediction 13:
Uncultured men will accept charity on behalf of the Lord and will earn their livelihood by making a show of austerity and wearing a mendicant's dress. Those who know nothing about religion will mount a high seat and presume to speak on religious principles.

Source: Srimad Bhagavatam 12.3.38

sudrah pratigrahishyanti
tapo-veshopajivinah
dharmam vakshyanty adharma-jna
adhiruhyottamasanam


Prediction 14:
Servants will abandon a master who has lost his wealth, even if that master is a
saintly person of exemplary character.
Masters will abandon an incapacitated servant, even if that servant has been in the family for generations.
Cows will be abandoned or killed when they stop giving milk.

Source: Srimad Bhagavatam 12.3.36

patim tyakshyanti nirdravyam
bhritya apy akhilottamam
bhrityam vipannam patayah
kaulam gas capayasvinih

Prediction 15:
Cities will be dominated by thieves;
the Vedas will be contaminated by speculative interpretations of atheists;
political leaders will virtually consume the citizens;
and the so-called priests and "intellectuals" will be
devotees of their bellies and genitals.

Source: Srimad Bhagavatam 12.3.32

dasyutkrishta janapada
vedah pashanda-dushitah
rajanas ca praja-bhakshah
sisnodara-para dvijah


Despite all of these dark prophecies,
there is one good quality in this age of Kali yuga:


kaler dosha-nidhe rajann
asti hy eko maha gunah
kirtanad eva krishnasya
mukta-sangah param vrajet

"Although Kali-yuga is an ocean of faults,
there is still one good quality about this age:
simply by chanting the names of Krishna,
one can become free from material bondage
and be promoted to the transcendental kingdom." (Source: Srimad Bhagavatam 12.3.51)

So let us take advantage of this special spiritual gift given during the dark times of Kali yuga to quickly raise ourselves spiritually through chanting of God's holy names.---

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

DO NOT FAIL TO READ THIS...

வேதம் விட்ட கண்ணீர்..

Read at:

http://mahaperiyavaa.wordpress.com/2011 ... a-kanneer/

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

திரு வேங்கட கைலாசம் அவர்களே,
சுட்டியயை அளித்ததற்கு மிக்க நன்றி. வேதம் கண்ணீர் விட்டதுபோல் படிக்கும் பொழுது என்னுடைய கண்களும் ஈரமாகி விட்டன. என்னே மகானின் தீர்க்க தரிசனம்.
தஞ்சாவூரான்
07 08 2014

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா
ஸரோஷா கங்காயாம் கிரிசசரிதே விஸ்மயவதீ |
ஹரா ஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸௌபாக்ய ஜனனீம்
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்ருஷ்டி: ஸ கருணா ||


தாயே சிவனிடத்தில் உன் பார்வை காதலின் கசிவு உள்ளதாகவும்
அவரைத்தவிர மற்றவர்களிடத்தில் அருவருப்பு உள்ளதாகவும்
கங்கா தேவியிடம் கோபத்துடன் உடையதாகவும் ,
சிவனின் லீலைகளில் வியப்புடையதாகவும்
சிவனின் அணியாகிய பாம்பினிடம் பயம் உடையதாகவும் ,
தாமரையின் அழகுக்குஅழகு சேர்ப்பதுபோல் சற்றுச் சிவந்திருப்பதால் வீரரஸம்
உடையதாகவும்

தோழிகளிடம் ஹாஸ்ய ரஸம் உடையதாகவும்
என்னிடத்தில் கருணை உடையதாகவும் விளங்குகிறது.

இங்கே ச்ருங்காரம்,பீபத்ஸம் ,ரௌத்ரம்,அத்புதம், பயானகம்,
வீரம், ஹாஸ்யம், கருணை என்ற எட்டு விதமான ரஸங்கள்
தேவியின் பார்வையில் இருப்பதாக வர்ணிக்கப் படுகிறது.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

ஜய ஜய சங்கர

ஹர ஹர சங்கர

இந்தியா சுதந்தரம் அடையும் தருணத்துக்கு முந்தைய டெல்லி. டெல்லியில் குடிபுகுந்திருந்த தமிழர்கள்,ரமணமகரிஷி அளித்திருந்த சுவாமிநாத சுவாமியின் ஒரு சிறு மரச்சிலையை வைத்து பூஜித்து வந்தார்கள். 1944-ஆம் ஆண்டு முதல் கந்த ஷஷ்டி விழாவைப் பெரிய அளவில் சிறப்பாகவும் நட்த்தினார்கள். இருப்பினும் தென்னிந்தியக் கலையுடன் கூடிய முருகன் கோயில் ஒன்றில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவர்களுக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்த்து. எல்லாவற்றுக்கும் ஒரு தருணம் வரவேண்டும் அல்லவா! பிற்காலத்தில் ஒரு குட்டித்தமிழ் நாடாக விளங்கிய ராமகிருஷ்ணாபுரம் அச்சமயம் பெருங்காடாக விளங்கியது. அதன் நடுவே ஒரு சிறு குன்றும் காணப்பட்டது. குன்று தோறாடும் குமரனுக்கு இது ஏற்ற இடமாக இருக்குமே என்று பக்தர்கள் எண்ணினர்.

1961-ஆம் வருடம். டெல்லி சரோஜினி நகரிலிருந்த விநாயகர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த கும்பாபிஷேக தினத்தன்று பக்தர் ஒருவருக்குக் கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர்,கனவு காணும் நபரின் கையைப் பிடித்துக் கொண்டு அவரை அவரின் இருப்பிடத்துக்குக் கொண்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறார். இவரும் அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் இதுதான் தன் இருப்பிடம் என்று சற்றுத் தொலைவில் தெரியும் குன்றைக் காட்டி நன்றி கூறிவிட்டு, விறுவிறுவென நடந்து மாயமாய் மறைந்து விடுகிறார். அந்த பக்தர் கனவில் கண்ட இடம்,பக்தர்கள் இங்கு குமரனுக்குக் கோயில் கட்டலாமே என்று தீர்மானித்த குன்று இருக்கும் இடம்!

இதன்பின் டெல்லியில் தனி முருகன் கோயில் கட்டுவதற்கான விண்ணப்பத்தை காஞ்சி மகா பெரியவர் முன் வைத்தனர். அவரும் தன் பரிபூரண ஆசிகளை அருளினார். அடுத்து, அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும். எனவே, அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர் பக்தர்கள். இதற்கு முன் சூரஜ்மல் எனும் அரசன் இந்தக் குன்றின்மீது ஓய்வு விடுதி அமைக்க எண்ணியபோது அவன் தந்தையின் கனவில் முன்பொரு சமயம் அந்த இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகத் தெரிந்ததால், மகனை ஓய்வு விடுதி கட்டாமல் தடுத்து விட்டார் என்றொரு செய்திக் குறிப்பு அந்தக் குன்று இருக்கும் இடத்தைப் பற்றி இருந்தது. இதனால் அரசாங்கத்தின் ஒப்புதலை வாங்குவது எளிதாக இருந்தது. இந்நிகழ்வு பற்றி திருப்பனந்தாள் மடத்தலைவர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான். ‘ஆளுபவர்கள் யாராக இருந்தாலும்,தன்னுடைய இடத்தை மாற்ற முடியாதபடியாகவே முருகப்பெருமான் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான் என்றில்லாமல் வேறென்னவென்று குறிப்பிடமுடியும்?’ என்று குறிப்பிட்டார்.

http://delhi2000.8m.com/Gw9mala.jpg

1961-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பக்தர்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து கோயில் கட்டும் நிலத்தை அரசாங்க அனுமதியுடன் விலைக்கு வாங்கினார்கள். கோயில் கட்டுமானப் பணி தொடங்கியபோது, வாலாஜாபாத் அருகிலிருந்த பட்டுமலைக் குப்பத்திலிருந்து கல் எடுக்கப்பட்டு வந்து மகாபலிபுரத்தில் விக்கிரகங்கள் வடிக்கப்பட்டன. இச்சமயம் “உத்தர சுவாமிநாதனின் மூலவிக்கிரகத்துக்கான கல்லை, சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பு செந்திலாண்டவன் சிலை வடிப்பதற்காக, தாமிரவருணி நதிப் படுகையிலிருந்து குறுக்குத்துறை எனுமிடத்தில் எடுக்கப்பட்ட கல்லின் எஞ்சிய பாகம் புதையுண்டு உள்ளது. அதனை எடுத்துப் பயன்படுத்துங்கள். ” என மகா பெரியவா ஆசியருளினார். அன்பர்களும் மகிழ்ச்சியுற்றார்கள்.

பெரியவா குறிப்பிட்ட அந்த குறுக்குத்துறை அகலத்திலும் நீளத்திலும் ஒரு மைலுக்கும் மேலாகப் பரந்து கிடந்தது. இந்த அறுபதாண்டு காலத்தில் அந்த இடத்தின் பல பகுதிகள் மணல்மேடுகளாக மாறியிருந்தன. அவ்வளவு பெரிய இடத்தையும் தோண்டிப் பார்த்து குறிப்பிட்ட கல்லைக் கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்லவே! நெல்லையப்பர் கோயில் சிவாச்சாரியார், “ஒரு வேளை தெற்கு ரத வீதியிலிருக்கும் 85 வயது முதியவரான சுந்தர தீக்ஷிதர் இந்தக் காரியத்துக்கு உதவலாம். அவர், செந்திலாண்டவன் சிலைக்காகக் கல் எடுத்த காலத்தில், அத்தலத்தில் தொண்டு புரிந்தவர்”என்று வழி காட்டினார்.

சுந்தர தீக்ஷிதரைச் சந்தித்து விவரம் கூற, “பாதி வேலையை முடித்திருந்தேன். எஞ்சிய வேலையை முடிப்பதற்காகத்தானோ என்னவோ,” என்னை இறைவன் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறான் என்று கூறி நெகிழ்ந்தவர், சரியான இடத்தையும் காட்டிக் கொடுத்தார். முப்பது தொழிலாளிகள் நாள் முழுதும் மணலைத் தோண்டியபின், 10 அடி ஆழத்தில் மகா பெரியவா குறிப்பிட்ட முக்கோண வடிவக் கல் கிடைத்தது. ஜூன் 2, 1965-ஆம் ஆண்டு, குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் நதிப்படுகையிலிருந்து கல் எடுத்து, மகாபலிபுரத்துக்கு அனுப்பினர். பரமாச்சார்யரின் உருவில் வந்து அனுக்கிரகித்த கந்தனின் கருணையே கருணை!

கல் கிடைத்து விட்டது. விக்கிரகம் தயாராகிவிட்டதா என்றால், அங்கும் உடனே தயாராகவில்லை. ஆண் விக்கிரகம் வடிப்பதற்கான சரியான ஒலி கல்லில் இருந்து கேட்காததால், பணியில் ஈடுபட்டிருந்த கணபதி ஸ்தபதி செய்வதறியாது திகைத்தார். எனவே மகா பெரியவாளைச் சந்திக்கச் சென்றார். பக்தர்கள் வரிசையில் மகா பெரியவாளைச் சந்திக்க நின்றபோது பெரியவரே அவரை அழைத்து,” ‘சிலையைச் செதுக்க ஆரம்பி! போகப் போகத் தானே சரியாகி விடும்’ என்றார். ‘ அவர் கூறியவாறே நடந்தது. மூலவர் சிலை உருவானதும், அச்சிலையை மகா பெரியவாளின் பார்வைக்கு அனுப்பினார்கள்.

நொடியில் சிலையை ஆராய்ந்த பெரியவர், " தக்ஷிண சுவாமிநாதனிடமிருந்து சற்று வேறுபடுத்திக் காட்டத்தானோ, இவரது கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் கல்லிலேயே செதுக்கிவிட்டாய்? " என்று கேட்க, கணபதி ஸ்தபதி ஆச்சரியத்தில் பிரமித்து நின்றார். தெற்கிலுள்ள சுவாமிநாதனுக்குத் தனியாக வெள்ளி மாலயில் கோர்த்த ருத்ராக்ஷத்தை அணிவிப்பதுதான் வழக்கம். இந்த நுணுக்கத்தை உன்னிப்பாகக் கவனித்துத் தான் பெரியவா அப்படிக் கேட்டார். பெரியவாளின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது. இதன் பின் விக்கிரகத்தை ஒரு இரவும் பகலும் தன் அருகிலேயே வைத்து, தடவிப் பார்த்து மகிழ்ந்தார். சிலைக்கு, தன் கையாலேயே விபூதி அபிஷேகமும் செய்து மகிழ்ந்தார். (GS:முதன் முதல் நடந்த) கும்பாபிஷேகத்தின்போது கூடியிருந்த பக்தர்களிடம் கணபதி ஸ்தபதி மேற்படி விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மூல விக்கிரகம் தயாரானதோடு இறைவனின் சோதனை நின்று விடவில்லை கோயிலுக்கான மற்ற விக்கிரகங்களும் உருவாகிவிட்ட நிலையில், கோயில் கட்டும் அடிக்கல் நாட்டு விழாவை 8.9.1965 அன்று காலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் நல்ல நேரம் என்று குறித்திருந்தார் மஹா பெரியவா. நாள் குறிப்பிட்டாகிவிட்டது. ஆனால் அதற்கு முந்தைய இரவில் வந்த வானொலி அறிவிப்பு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் விமானப்படை இந்தியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகியுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி. எனவே பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, விழாவில் பங்கேற்பதற்கில்லை என விடியற்காலை 3 மணிக்குத் தெரிவித்து விட்டார். ஆனால் காலை 4.30-க்கு தில்லியிலுள்ள ஷாதரா எனுமிடத்தில் தென்பட்ட பாகிஸ்தானிய விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக வீழ்த்திவிட்டது என்று வெளியான வானொலிச் செய்தியைத் தொடர்ந்து ஒலித்த சங்கு, அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக உறுதிப்படுத்தியது. எனவே ஏற்கெனவே குறிபிட்டிருந்த முகூர்த்த நேரத்துக்குள் தமிழக முதலமைச்சர் எம். பக்தவத்சலம், அருட்கவி சாதுராம் சுவாமிகள் இருவராலும் அடிக்கல் நாட்டுவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்குச் சில நிமிடங்கள் முன்பு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனுப்பியிருந்த செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்.
“ஸ்வாமிநாத தேவசேனாபதியான முருகப்பெருமான், முப்படைக்கும் தலைமை ஏற்று, பாகிஸ்தானுடனான போர் துவங்கியதுமே அதை முடித்து விட்டார்.
அடிக்கல்நாட்டுவிழாவின் வெற்றிக்கான எனது வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மூலவர் விக்கிரகம் வைக்கப்படும் பீடத்தினுள் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 25 பொருட்களுடன் யந்த்ரம் ஒன்றும் வைப்பது வழக்கம். ‘சுப்ரமண்ய சர்வ வசீகரண யந்த்ரம்’ உத்தர சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது. இந்த யந்த்ர விஷயத்திலும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு உண்டு. பரமாச்சார்யாளின் ஆக்ஞைப்படி தருமபுரம் ஆகம பாடசாலையின் தலைவரானசிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சார்யார் வெள்ளித்தகட்டில் யந்த்ரத்தை அமைத்து வைத்திருந்தார். இதற்கு முன்பாக கணபதி ஸ்தபதியும் காகிதத்தில் யந்த்ரத்தின் அமைப்பை வரைந்து மகா பெரியவாளிடம் ஆசி வாங்கியிருந்தார். இரண்டில் எதை வைப்பது என்ற குழப்பம்! கூர்மையாக ஆராய்ந்து பார்த்தபோது –ஒன்று சிவத்தொடர்புடையதாகவும் மற்றொன்று கந்தப்பெருமானின் ஷண்முக யந்த்ரமாகவும் இருந்தது. பின்னர் இரவோடிரவாக வெள்ளித்தகட்டின் பினபுறம் இந்த ஷண்முக யந்திரத்தையும் பொறித்து இரண்டுமே பீடத்தினுள் வைக்கப்பட்டன. இவ்வாறாக சிவனும், சிவகுமாரனுமாக, ஒரு வடிவாகி சிவ்ஸ்கந்தமூர்த்தியாக டெல்லியில் அருள்பாலிக்கிறார்கள்.

இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் உண்டு. வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் சூரியனின் கிரணங்கள் மூலவர்மீது விழும் வண்ணமாக ஆலய விமானத்தில் இடைவெளி விட்டுக் கட்டுவார்கள். அக்காலங்களில் சூரிய பூஜை நடத்துவார்கள். இதற்கென டெல்லி வானிலை ஆராய்ச்சி மையத்தை அணுகியபோது, இதற்கு ஒரு வருடம் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்குமே எனக் கூறிவிட்டனர். கும்பாபிஷேகத்துக்கான நாள் நெருங்கிவிட்டிருந்ததால், இடைவெளி வைக்காமலே விமானமும் கட்டி முடிக்கப்பட்டது. 7.6.1973 அன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது.

கும்பாபிஷேகத்தை அடுத்துவந்த மார்ச் மாதத்தில் ஒருநாள், வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்த குருக்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சூரியனின் காலை கிரணங்கள் முருகனின் இடப்பாகத்தில் பட்டு ஜொலித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மேலும் சில நாட்கள் தொடர்ந்து கவனிக்க, மார்ச் 20 முதல் 24 வரை முருகனது திருவுருவத்தின் மீது முழுவதுமாகக் காலைக் கிரணங்கள் பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். அன்றுமுதல் வருடந்தோறும் இந்நாட்களில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடக்கிறது. இந்நிகழ்விலும் மகா பெரியவாளின் தீர்க்க தரிசனம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறியும்போது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.

http://murugan.org/pix/dsc00886.jpg

மூலவர் கிழக்குத் திசையை நோக்கி இருப்பதால், அத்திசையில் வைக்கப்படும் வாசல் கதவுகளை சிற்பிகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து மேலும் சில அடிகள் தள்ளி வைக்குமாறு மகா பெரியவா கூறி இருக்கிறார். அவ்வாறே அமைத்தார்கள். பெரியவா குறிப்பிட்ட அதே வாசல் வழியாகத்தான் சூரியக்கிரணங்கள் குறிப்பிட்ட நாட்களில் முருகன் மீது படுகின்றன. தமிழகத்தில் காவிரிக்கருகில் குடிகொண்டிருக்கும் சுவாமிநாதன், தில்லியில் தன் மாமன் விளையாடிய யமுனை நதியை நோக்கியவண்ணம் குன்றின் மீது நின்று புரியும் அதிசயத்துக்கு அளவே இல்லை.

சிற்ப கலா மண்டபம்

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில்

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில்

தொடர்ந்த வருடங்களில் மீனாக்ஷி, சுந்தரேசர், விநாயகர், நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைத்ததுடன், சிற்ப கலா மண்டபம், ஆதிசங்கரர் பிரார்த்தனைக் கூடம் போன்ற பலவும் அமைத்தார்கள் குன்றின் மேலுள்ள விஷ்ணு துர்கை சந்நிதியில் செவ்வாய்-வெள்ளி தினங்களில் நடக்கும் ராகு கால பூஜையில், வட இந்தியர்களும் திரளாக வந்து கலந்துகொள்கிறார்கள். அமிர்தசரஸ் போன்ற தொலைதூர நகரங்களிலிருந்து சீக்கியர்களும் வந்து வழிபாடு நடத்திப் பயன்பெறுகிறார்கள்.

சிற்ப கலா மண்டபம்

2001-ஆம் ஆண்டு முதல், சிறப்பு தினங்களில் சுவாமியை மலை மேல் ஊர்வலமாகத் தூக்கிச் செல்வது முதல் பிரசாத விநியோகம் வரை எல்லாக் காரியங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் ஒரு சீக்கியர் என்று அறியும்போது வியப்பின் எல்லைக்கே செல்கிறோம்.

மூலவரைத் தரிசிக்க படியேறிச் செல்லும் வழியில் நாகர் சந்நிதி அமைந்துள்ளது. கோயில் கட்டுவதற்கு முன்பாக ஒரு நாள் குன்றின்மேல்தோன்றி பக்தர்கள் காண விளையாடிவிட்டு, குன்றினுள் சென்று மறைந்துவிட்ட நாகத்தின் நினைவாக இந்த நாகராஜா சந்நிதி அமைக்கப்பட்டதாம். குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சிறியதாக இருந்த அரசமரம், கிளைபரப்பி இன்றளவும் கம்பீரமாக நிற்பதை இடும்பன் சந்நிதிக்கருகில் காணலாம்.

மூலவரின் சாந்நித்யம் கோயிலில் நிறைந்துள்ளது எனபதற்குச் சான்றாக, கோயில் வளாகத்தில் இரு மயில்களும் ஒரு சேவலும் உல்லாசமாக உலவுவதைக் காணலாம். விநாயகர் சந்நிதிக்குப் பின்புறம் ஒன்பதரை அடி உயரத்தில் அமைந்துள்ள மீனாக்ஷி-சுந்தரேசர், வள்ளி-முருகன் ஆகியோரின் திருமணக் கோலங்கள் மிக அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டு பக்தர்களைக் கவர்கிறது.

குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை உத்தர சுவாமிநாதனின் சேவையிலேயே காலம் கழித்து வரும் மிக மூத்த அன்பர் எஸ். பட்டாபிராமன் (தொண்ணூறை நெருங்கிவிட்டவர்) கோயில் அமைப்பு, நிர்வாக விஷயங்களுக்காக காஞ்சி பரமாச்சார்யாருடன் பழகிய நாட்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். “பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட ஒருநேரத்தில் பெரியவாளைத் தஞ்சமடைந்தோம். பணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, ‘ஆறு வற்றிக் கிடக்கிறது. விரைவில் ஒரு பிரவாகம் வரப்போகிறது. அப்போது யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது.” என்று ஆசி அருளினார். அவரின் அருள்வாக்கு அப்படியே பலித்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோயிலில் பணப் பற்றாக்குறை ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்று கூறி உணர்ச்சிவசப் படுகிறார்.

ஜய ஜய சங்கர

ஹர ஹர சங்கர

https://mail.google.com/mail/?ui=2&ik=1 ... 9232e07f3d

Image

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend
அம்பாள் பற்றி ருசிகர தகவல்

நாம் யாருமே அம்பாளை பார்த்ததில்லை. அம்பாளின் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி இருக்கிறதே? எல்லாமே அழகாகத்தான் இருக்கிறது. வைரத்தை எந்த பக்கம் பார்த்தாலும் ''டால்''அடிக்கிறமாதிரி. மஹா பெரியவா சில அற்புதமான சேதிகளை சொல்லியிருக்கிறதிலே கொஞ்சம் சுருக்கி, சுலபமா விண்டு தருகிறேன். ''அம்பாளுடைய ரூபம் எப்படி இருக்கும்னு உருவகப்படுத்த ஒரு ஐடியா. ஒரு நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பார்க்காதவா யோசனை பண்ணிப்பாருங்கோ அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது. சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது. நூறு பேர் வேண்டாம். முடியாது நம்மால். ஒரு பத்துபேருக்காவது போடறமா? ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவன் கிட்டே யே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கிறதே. மகா பாபங்களைச் செய்து, காரியத்தில் செய்யாவிட்டாலும் மனஸினால் மகாபாபங்களை , விடாமல் நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான். அவள் முகம் எப்படி ஜீவனோட சந்தோஷத்தில் கொப்புளிக்கும்? அவளுடைய அன்பையும், அதில் உருவாகும் ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை பண்ணக்கூட முடியாது எங்கே நான் எழுதறது? அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் ஆச்சே. அதால் தானே ஸெளந்தரிய லஹரி என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் பாடியிருக்கிறார்.. இத்தனை ஸெளந்தரியம், லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது? அன்புதான் அழகாகிறது. காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு தங்குமா?, தாங்குமா? அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். எந்த பக்தருக்கு எந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் புரிய பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். ராஜராஜேசுவரி, புவனேசுவரி, துர்க்கை, காளி என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசு. வேறு வேறு ரூபம்.
ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை. அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள். காளிதாஸர் அவளை ''ஸர்வ வாணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே'' என்று 'சியாமளா தண்டகத்தில்'ஸ்துதி செய்கிறார். வர்ணம் = நிறம் மட்டும் அல்ல.''அக்ஷரம்'' என்றும் அர்த்தம். ஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை. ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.

ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை வீசிதரங்கம் என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை முகுளம் என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் மாத்ருகா என்பது .மாத்ரு என்றால் தாயார் என்பது தெரியுமே. சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான். அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள். இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலம் பிரணவம்.(''ஓம்'') அதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்ஜம் முழுக்க வந்தது. நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஒங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். அ,உ,ம மூன்றும் சேர்ந்து ஒம் என்று ஆகிறது. அ - சிருஷ்டி; உ - பரிபாலனம்; ம - சம்ஹாரம் என்பார்கள். அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால், உ - ம - அ - என்றாகும். அதுதான் உமா என்பது. உபநிஷதமும் அவளை உமாஹைமவதி என்றே சொல்கிறது. -__._,_.___

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

சிரிக்க - சிந்திக்க -
https://www.facebook.com/photo.php?v=10201633492983471

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Sorry..It is neither thought provoking nor has any humor in it..

It shows how low is our film making..always targeting Hindu deities..

Will any one even suggest of such a film either on Jesus or Nabigal?

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

vk,
I am sorry if you did not like it - it was not meant to hurt anyone's feelings. But since you have brought in other religions, I am constrained to respond.

We seem to think of God as some 'commission agent' who obliges us for the 'devotion' we show to Him. If He does not respond to our prayers, we blame him. We think that God is partial to some and the reasons for inequality in the Earth is God's making. Such sentiments are true of followers of every other religion also. However, it is very sad that, in spite of wonderful thoughts found in Gita, Upanishads and Vedanta, we - Hindus - still happen to understand the God in the routine human manner. The God-head I believe in does not exclude Allah and Father (of Christians); therefore, Nabigal and Jesus are as dear to me as kRshNa.

The statements made in the short video are not irrelevant to me. I subscribe to those statements. However, if the moderators feel the video is offensive, I will delete the post.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image


தசவதாரமும் நவக்கிரஹமும்

அம்பாளின் பத்துவிரல்களும், விஷ்ணுவின் பத்து அவதாரம் என்றும் ,தசமகாவித்ய என்று சொல்லக்கூடிய,பத்து ஸ்வரூபமும் பத்து அவதாரம் என்றும்கூறப்படும்
அவதாரம் - அதிபதி
1) ஸ்ரீமத்ஸ்ய அவதாரம் - கேது
2) ஸ்ரீகூர்ம அவதாரம் - சனி
3) ஸ்ரீவராஹ அவதாரம் - ராகு
4) ஸ்ரீநாரசிம்ம அவதாரம் - செவ்வாய்
5) ஸ்ரீவாமன அவதாரம் - குரு
6) ஸ்ரீபரசுராம அவதாரம் - சுக்கிரன்
7) ஸ்ரீராம அவதாரம் - சூரியன்
8) ஸ்ரீபலராம அவதாரம் - குளிகன்
9) ஸ்ரீகிருஷ்ண அவதாரம் - சந்திரன்
10 ஸ்ரீகல்கி அவதாரம் - புதன்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend
Subject: Fwd: ARJITHA SEVA AT TIRUMALA

ARJITHA SEVA AT TIRUMALA

Surprise Donation From A Muslim Devotee That Led To The Birth Of A Popular Arjitha Seva In The Holy Tirumala Temple
Some time during 1982..
As though instructed by the Holy Lord Sri Venkateswara Himself, a Muslim devote by name Sheikh Mastan - a resident of the Guntur district of the undivided state of Andhra Pradesh - walked up the seven hills of Tirumala hill shrine and reached the Maha Dwaram (main entrance) of the holy Tirumala Temple..
He then placed a request before the priests on duty there at the Temple premises.. The noble Temple priests, who were shocked with his unusual request, hurriedly guided him to the top officials of the Tirumala Tirupati Devasthanams board.
The drama then shifted to the Executive Officer (E O) of the TTD board..
Around the same time and period, the Tirumala Tirupati Devasthanams (TTD) board, an independent trust that manages all the operations related to the holy TirumalaTemple, was planning to commemorate the Golden Jubilee year of it's formation in a befitting manner..Despite several rounds of discussions earlier, the TTD board was still unable to decide about what is that they need to do to make their Golden Jubilee year a memorable one..And it was exactly during one such crucial meeting, that was taking place inside the board room, an office attender walked into the room and informed the then Executive Officer about the Muslim devotee’s request seeking his urgent appointment..
The E O asked the attender to send the Muslim devotee straight inside the board room so that he can quickly talk to him and send him off in a couple of minutes without wasting much of the TTD board’s valuable meeting time. But unfortunately neither the E O nor his subordinates, at that moment, knew that the Muslim devotee whom they are all going to meet in a few minutes, was actually sent by the holy Lord Sri Venkateswara Himself and because of his request the TTD board is later going to take a crucial decision that would not only please the holy Lord Sri Venkateswara with a new Seva but will also make their golden jubilee year a most memorable one .. PERIOD.
The attender came out and asked the Muslim devotee, Sheikh Mastan to go inside the board room and meet the E O... Sheikh Mastan got up from the chair he was thus far sitting in the waiting hall,and slowly walked into the board room..With folded hands he greeted everyone there in the room... Acknowledging his regards, the Executive Officer told Sheikh Mastan,
“..We are all in an emergency meeting now.. Where are you from and why did you insist on meeting me in person.. Is it so important..??.. If so please let me know what it is, without wasting much of our time..”
“..Sir my name is Sheikh Mastan.. Am a small merchant from Guntur district.. For over many generations now my family members are great devotees of Lord Sri Venkateswara Swamy.."
"..As a rule,every morning, my entire family stands in front of the holy Sri Varu, and recites Sri Venkateswara Suprabhatam.. Without any mistakes we also recite Venkateswara Sthotram, Srinivasa Prapatti and Mangala Sasanam.. I can even recite Srinivasa Gadyam fully..”
..Sir for many generations it has also been a sacred tradition in our family to perform ashtottara sata nama puja (a prayer during which time 108 holy names of Lord Venkateswara are recited) to Sri Varu in our house every Tuesday.. We perform this pooja with different varieties of flowers we personally grow in our back yard.. We place one flower each at the holy feet of Sri Varu every time we recite one of His 108 names during this sacred pooja..”
“.. But sir, several decades ago my paternal grand father had made a vow to himself that he would place 108 Golden Lotus Flowers at the holy Lotus feet of our Sri Varu for using them during a similar seva at the Tirumala Temple.. Since our financial resources were not substantial enough, my grand father could only procure a few Golden Lotuses.. Later my father procured a few more and finally I could finish the count and procure all the 108 Golden Lotus flowers.. Sir,it was with a great difficulty that we could procure all these Golden flowers.. Each one of these flowers weighs about 23 grams..”
I now request you all, with folded hands, to please accept these Golden Lotuses as a gift from our poor family to Sri Varu and make good use of them during the ashtottara sata nama pooja or during any other seva in the Temple.. Sir,our entire family will be very thankful to you if you can please consider our request without rejection.. Even my grand father’s soul shall now rest in peace at His holy feet.. That’s all I had to convey you sir.. I now leave the decision entirely to you all..”
Sheikh Mastan concluded..
SILENCE.. Holistic Silence. Silence and Silence and Silence..
For a few moments in the board room there was no other sound except the oscillating sound of the pedestal fans that were placed in all the corners of the room..The Chairman, the Executive Officer, the Joint Executive Officer, the deputy Executive Officer and all the members of the board who were there in that room at that time were stunned into deep silence..
They didn't know what to say and how to react to the claims of the great Muslim devotee who was standing in front of them, with folded arms, at that moment..
Suspecting something mysterious and smelling the divine presence of the holy Lord Sri Venkateswara right in the midst of them it was the Executive Officer who moved first..With unstoppable tears rushing out of his eyes he quickly got up from his chair and rushed to the place where Sheikh Mastan was standing..Offering his sincere apologies to him for making him stand for such a longer period of time, the E O then made Sheikh Mastan sit comfortably in a chair beside him and assured him in a humble voice..
“.Mastan garu.. we are extremely delighted to have such a great devotee like you in the midst of us today.. We have seen many great devotees in our career for sure but we haven’t, seen one like you before.. We shall unconditionally accept these invaluable Golden flowers from you..I, however,cannot at this moment assure you that we shall certainly use them during a seva.. It’s a policy related matter Mastan garu and we are also just His servants.. Any decision of using them during a seva doesn't entirely lie in our hands.. I can promise you on behalf of the board that we shall all strive to do our best in fulfilling your family’s desire in making good use of these Golden Lotus flowers at the Temple... But Please give us some time and I shall get back to you at the earliest..”
Later things followed in quick succession and after a couple of more meetings the TTD board had decided to introduce a new Arjita Seva during which time the 108 sacred names of the Holy Lord shall be recited and during that recitation one Golden Lotus Flower each, gifted by the Sheikh Mastan family, shall be placed at the holy Lotus feet of Lord Sri Venkateswara.
TTD introduced this new Seva called Ashtadala Pada Padmaradhana in 1984 and ever since this popular seva is being performed at the holy Tirumala Temple every Tuesday..This new arjita Seva not only made the Golden Jubilee year of TTD board a memorable one but also helped the great devotional family of Sheikh Mastan fulfill their generations old desire..But what was that invisible hand behind all this drama that played the entire game to perfection.. None has an answer, but Can only guess..??

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

Here is a link about 17th century Sufi Saint of Tamil Nadu (Tirunelveli Dist) by name Pir Mohammad Aulia. His composition 'Jnana Ratna Kuravanji' (Tamil) is a Saiva Siddhanta literature in a very simple dialogue form between a gypsy husband and wife.
http://sivasiva.files.wordpress.com/201 ... i_e-bk.pdf

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான்.
அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.
அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச் சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப் போக, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ஏன்...அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான். கண்ணா! மாயம் செய்கிறாயா? என அனைவரும் ஒரே நேரத்தில் கேட்டனர். இல்லை.. இல்லை... என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி. என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கண நேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்றான் கருணையுள்ள கண்ணன். தன்னை இல்லை என்று சொல்பவர்க்கும் இறைவன் அருள் செய்கிறான் என்பது தான் இந்தக்கதை சொல்லும் நீதி.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

This is Nice... Just a forward came to me, I liked the way the two stories are related....

A Construction Supervisor from 16th Floor of a Building was calling a Worker on Ground Floor.

Because of noise
the Worker
did not hear his Call.

To draw Attention,
the Supervisor threw a 10 Rupee Note
in Front of Worker.

He picked up the Note, put it in His Pocket &
Continued to Work.

Again to Draw Attention the Supervisor threw 500 Rupee Note & the Worker did the same,

Now the Supervisor picked a small Stone & threw on the Worker.

The Stone hit the Worker.

This time the Worker looked Up &
the Supervisor Communicated with Him.
.
.
This Story is same as to our 'LIFE'...

God wants to Communicate with Us,
but We are Busy doing our Worldly Jobs.

Then, he give Us Small Gifts & Big Gifts......
We just keep them without looking from Where We Got it.
We are the Same.
Just keeping the gifts
without Thanking him,
We just say
We are LUCKY.

And when we are Hit with a Small Stone, which We call PROBLEMS,
then only We look Up & Communicate with him.
Thats why it is said. .....
He gives, gives and forgives
And
We get, get and forget.....

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

தாயின் ஐந்து பெயர்கள்.

ஜனனீ .... தகப்பனால் தன் சரீரத்தில் சேர்க்கப்பட்டதை கருவாக உயிர் கொடுப்பவள்.

மாதா .... கருவைத் தன்னுள் அடக்கி வைத்து அடைகாப்பவள்.

ஸவித்ரி ... கருவாகத் தாங்கியதை வெளியில் வளர்க்க தருணம் வந்ததும் வெளியிடுபவள்.

தாத்ரீ ... சிசுவைப் போஷித்து வளர்ப்பவள்.

அம்மா .. ஆபத்து வேளையில் தானே வந்து காப்பவள்..

Shared...

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

The first one is jarring.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Aanmeekam...

Post by vgovindan »

pb,
Yes, I did not want to comment. How can 'mind' and 'intellect' be brought into the same category as other 16?

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

Ref: Post #259

It seems, the 18 Steps at Sabarimala Temple represent 18 different deities, to whom Padi Pooja is offered. This site lists the 18 deities !
http://shanmatha.blogspot.in/2010/09/de ... -padi.html

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Aanmeekam...

Post by Pratyaksham Bala »

Ref: Post #260

This line is jarring :-
"ஜனனீ .... தகப்பனால் தன் சரீரத்தில் சேர்க்கப்பட்டதை கருவாக உயிர் கொடுப்பவள்."


To provide the proper meaning, 'தகப்பனால்' should be corrected as 'துணைவனால்' .

----

அம்மா - மற்ற நான்கும் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதால், இதையும் சம்ஸ்க்ருதத்தில் 'அம்பா' என்று குறிக்கலாமே!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Four vedas in Tamil:
Read/ Download from here..

http://www.vedicgranth.org/home/the-gre ... athan/veda

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend

Predictions for Kali Yugham from Srimadh Bhaaghavatham

In the last canto of Srimadh Bhaaghavatham there is a list of predictions and prophecies about the dark times for the present age of Kali Yuga. The following 15 predictions, written 5,000 years ago by sage Vedavyasa, are amazing because they appear so accurate. Despite the negative tone of these prophecies, there is still one bright spot for all of us, which is mentioned at the end.
Prediction 1:
Religion, truthfulness, cleanliness, tolerance, mercy, duration of life, physical strength and memory will all diminish day by day because of the powerful influence of the age of Kali.
Source: Srimad Bhagavatam 12.2.1
sri-suka uvaca
tatas canu-dinam dharmah
satyam saucam ksama daya
kalena balina rajan
nanksyaty ayur balam smrtih
Prediction 2:
In Kali Yuga, wealth alone will be considered the sign of a man's good birth, proper behaviour and fine qualities. And law and justice will be applied only on the basis of one's power.
Source: Srimad Bhagavatam 12.2.2
vittam eva kalau nṝṇāḿ
janmācāra-guṇodayaḥ
dharma-nyāya-vyavasthāyāḿ
kāraṇaḿ balam eva hi
Prediction 3:
Men and women will live together merely because of superficial attraction, and success in business will depend on deceit. Womanliness and manliness will be judged according to one's expertise in sex, and a man will be known as a brahmana just by his wearing a thread.
Source: Srimad Bhagavatam 12.2.3
dāmpatye 'bhirucir hetur
māyaiva vyāvahārike
strītve puḿstve ca hi ratir
vipratve sūtram eva hi
Prediction 4:
A person's spiritual position will be ascertained merely according to external symbols, and on that same basis people will change from one spiritual order to the next. A person's propriety will be seriously questioned if he dos not earn a good living. And one who is very clever at juggling words will be considered a learned scholar.
Source: Srimad Bhagavatam 12.2.4
lińgaḿ evāśrama-khyātāv
anyonyāpatti-kāraṇam
avṛttyā nyāya-daurbalyaḿ
pāṇḍitye cāpalaḿ vacaḥ
Prediction 5:
A person will be judged unholy if he does not have money, and hypocrisy will be accepted as virtue. Marriage will be arranged simply by verbal agreement, and a person will think he is fit to appear in public if he has merely taken a bath.
Source: Srimad Bhagavatam 12.2.5
anāḍhyataivāsādhutve
sādhutve dambha eva tu
svīkāra eva codvāhe
snānam eva prasādhanam
Prediction 6:
A sacred place will be taken to consist of no more than a reservoir of water located at a distance, and beauty will be thought to depend on one's hairstyle. Filling the belly will become the goal of life, and one who is audacious will be accepted as truthful. He who can maintain a family will be regarded as an expert man, and the principles of religion will be observed only for the sake of reputation.
Source: Srimad Bhagavatam 12.2.6
dūre vāry-ayanaḿ tīrthaḿ
lāvaṇyaḿ keśa-dhāraṇam
udaraḿ-bharatā svārthaḥ
satyatve dhārṣṭyam eva hi
dākṣyaḿ kuṭumba-bharaṇaḿ
yaśo 'rthe dharma-sevanam
Prediction 7:
As the earth thus becomes crowded with a corrupt population, whoever among any of ther social classes shows himself to be the strongest will gain political power.
Source: Srimad Bhagavatam 12.2.7
evaḿ prajābhir duṣṭābhir
ākīrṇe kṣiti-maṇḍale
brahma-viṭ-kṣatra-śūdrāṇāḿ
yo balī bhavitā nṛpaḥ
Prediction 8:
Harassed by famine and excessive taxes, people will resort to eating leaves, roots, flesh, wild honey, fruits, flowers and seeds. Struck by drought, they will become completely ruined.
Source: Srimad Bhagavatam 12.2.9
śāka-mūlāmiṣa-kṣaudra-
phala-puṣpāṣṭi-bhojanāḥ
anāvṛṣṭyā vinańkṣyanti
durbhikṣa-kara-pīḍitāḥ
Prediction 9:
The citizens will suffer greatly from cold, wind, heat, rain and snow. They will be further tormented by quarrels, hunger, thirst, disease and severe anxiety.
Source: Srimad Bhagavatam 12.2.10
śīta-vātātapa-prāvṛḍ-
himair anyonyataḥ prajāḥ
kṣut-tṛḍbhyāḿ vyādhibhiś caiva
santapsyante ca cintayā
Prediction 10
Men will no longer protect their elderly parents.
Source: Srimad Bhagavatam 12.3.42
na rakshishyanti manujah
sthavirau pitarav api
Prediction 11:
In Kali-yuga men will develop hatred for each other even over a few coins. Giving up all friendly relations, they will be ready to lose their own lives and kill even their own relatives.
Source: Srimad Bhagavatam 12.3.41
kalau kakinike 'py arthe
vigrihya tyakta-sauhridah
tyakshyanti ca priyan pranan
hanishyanti svakan api
Prediction 12:
Uncultured men will accept charity on behalf of the Lord and will earn their livelihood by making a show of austerity and wearing a mendicant's dress. Those who know nothing about religion will mount a high seat and presume to speak on religious principles.
Source: Srimad Bhagavatam 12.3.38
sudrah pratigrahishyanti
tapo-veshopajivinah
dharmam vakshyanty adharma-jna
adhiruhyottamasanam
Prediction 13:
Servants will abandon a master who has lost his wealth, even if that master is a saintly person of exemplary character. Masters will abandon an incapacitated servant, even if that servant has been in the family for generations. Cows will be abandoned or killed when they stop giving milk.
Source: Srimad Bhagavatam 12.3.36
patim tyakshyanti nirdravyam
bhritya apy akhilottamam
bhrityam vipannam patayah
kaulam gas capayasvinih
Prediction 14:
Cities will be dominated by thieves, the Vedas will be contaminated by speculative interpretations of atheists, political leaders will virtually consume the citizens, and the so-called priests and intellectuals will be devotees of their bellies and genitals.
Source: Srimad Bhagavatam 12.3.32
dasyutkrishta janapada
vedah pashanda-dushitah
rajanas ca praja-bhakshah
sisnodara-para dvijah
Despite all of these dark prophecies, there is one good quality in this age of Kali yuga:
kaler dosha-nidhe rajann
asti hy eko maha gunah
kirtanad eva krishnasya
mukta-sangah param vrajet
"Although Kali-yuga is an ocean of faults, there is still one good quality about this age: simply by chanting the names of Krishna, one can become free from material bondage and be promoted to the transcendental kingdom." (Source: Srimad Bhagavatam 12.3.51)
So let us take advantage of this special spiritual gift given during the dark times of Kali yuga to quickly raise ourselves spiritually through chanting of God's holy names.

arasi
Posts: 16774
Joined: 22 Jun 2006, 09:30

Re: Aanmeekam...

Post by arasi »

An apt one, the last one (such a relief:) ) on the eve of dIpAvaLi.

PapanAsam Sivan's dIpAvali song kaNNA, kAtharuL in madhyamAvathi comes to mind. Mangala dIpAvali to all!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image


Sanjai-048-kaNNA_kAttaruL-madhyamAvati-Sanjay Subramanyam-P Sivan

http://mfi.re/listen/c2ev0c82p0f3caf/Sa ... Sanjay.mp3

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

குடில குண்டலம் குவலய தள நீலம்
மதுர முரளீர் அவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்

வளைந்த காதணி, குவளையின் நீலம்
இனிய குழலோ மயக்கும் நாதம்
கோடி மன்மத அழகு மோகம்
கோபியர் வரமே, பஜனை செய்வோம் கோபாலம்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

கையோடு நீடு கனி உண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து

தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்

வாய் ஓது வேதம் மலிகின்ற தோல் சீர் மரியாளர் நாளும் முறையால் வளர்த்த

தீயோங்க ஓங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே

மகாலட்சுமியை நெஞ்சில் வைத்து கொண்டிருக்கும் பெருமாளை நெஞ்சில் வைத்து கொள்ள விரும்பும் பக்தர்களே! காய்களையும், உலர்ந்த பழங்களையும்,காற்றையும் உண்டு நெடுங்காலம் தீயின் நடுவில் நின்று தவம் செய்ய வேண்டாம்

தொன்மையான நல்ல குணங்களை கொண்டு வேதியர்கள் நாள்தோறும் வேதங்கள் ஓதி கொண்டிருக்கும் ஓங்கிய புகழையுடைய கோவிந்தராஜ பெருமாளை சென்று சேருங்கள்

--திருமங்கை ஆழ்வார்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

ஒரு சில பழங்களின் ஸ்ம்ஸ்க்ருத பெயர்கள்

முழுத் தேங்காய் ...... நாரிகேலம்

உடைத்த தேங்காய் ....நாரிகேல கண்டத்வயம்

வாழைப்பழம் ...... கதலீ பலம்

மாம்பழம் ....... ஆம்ர பலம்

விளாம்பழம் ....... கபித்த பலம்

நாகப்பழம் .......ஜம்பு பலம்

பலாப்பழம் .....பனஸ பலம்

சாத்துக்குடி ( ஆரஞ் ) ..... நாரங்க பலம்

ஆப்பிள் ...... காஷ்மீர பலம்

பேரிக்காய் ......பேரி பலம்

கொய்யாப்பழம் .........பீஜா பலம்

திராட்சைப்பழம் .....திராக்‌ஷினா பலம்

பேரிச்சம்பழம் .....கர்ஜுர பலம்

பிரப்பம்பழம் ......வேத்ர பலம்

மாதுளம்பழம் ...... தாடிமீ பலம்

வெற்றிலை பாக்கு .... தாம்பூலம்

corrections welcome..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

Image

எட்டின் மகிமை
மனிதப் பிறப்பில் எட்டாவது மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்சியைப் பெறுகிறதாம். கருப்பையில் இடம்போதாமல் நெருக்கத்தில் சிக்கி, இருக்கும் இடத்துக்கு ஏற்ப தன்னுடைய கை-கால்களை மடக்கிக்கொண்டு, உடல் உறுப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முதல் அறிவை அப்போதுதான் அந்தக் குழந்தை பெறுகிறது. முற்பிறவியில் செய்த தீவினையால்தானே, ஒரு தாயின் கருப்பைக்கு வந்தோம். இந்தப் பிறவியில் தவறு ஏதும் செய்யக் கூடாது எனும் சிந்தனை ஞானம் ஏற்பவதும் 8-வது மாதத்தில்தான் என்கிறது கீதை. ஆனால் பிறந்ததும் அந்த ஞானத்தை மனிதன் மறந்து போகிறான். மீண்டும் அந்த ஞானம் அவனுக்கு 80 வயதில் நிச்சயம் தோன்றுமாம். இதனாலேயே 8 எனும் எண்ணை ஞான எண்ணாகக் கூறுவார்கள். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்... என்று கருப்பையில் உள்ள 8 மாத சிசுவின் வடிவை, மிக அற்புதமாக விவரிக்கிறது. அதுசரி.. மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, அந்த நடராஜ பெருமானே தன் கைப்பட எழுதிய பெருமை மிக்க நூலான திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் எந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? 8 - வது திருமுறையாகத்தான் !

அஷ்ட கணபதிகள்: முழுமுதற் கடவுளாம் கணபதியை அஷ்டகணபதிகளாகவும் கொண்டாடுவர். ஆதி கணபதி, மகாகணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, வாலை கணபதி, உச்சிஷ்ட கணபதி, உக்ர கணபதி, மூல கணபதி ஆகிய அஷ்ட பிள்ளையார்களை வழிபட வினைகள் யாவும் நீங்கும் !

அஷ்ட புஷ்பங்கள்: புன்னை, செண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம், தாமரை ஆகிய மலர்களை தெய்வ பூஜைக்கு சிறந்த அஷ்ட புஷ்பங்களாகப் போற்றுகின்றன ஞானநூல்கள் !

திசை யானைகள் எட்டு: ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் ஆகியவையே திசை யானைகள் 8 எனப் போற்றுகின்றன புராணங்கள் !

அஷ்ட ஐஸ்வரியங்கள்: தனம், தானியம், நிதி, பசு, புத்திரர், வாகனம், சத்தம், தைரியம் ஆகியன அஷ்ட ஐஸ்வரியங்களாகும். இறைசிந்தையும், அறவாழ்வும் இந்தச் செல்வங்களைப் பெற்றுத் தரும்.

அருள் தரும் அஷ்ட பிரபந்தங்கள்: மாலவனின் பெருமைகளை விவரிக்கும் நூல்களில் எட்டு குறிப்பிடத்தக்கவை. அவை: திருவரங்கக் கலம்பகம். திருவரங்கத்துமாலை. திருவாங்கத்து அந்தாதி, ஸ்ரீரங்கநாயகர்ஊசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத்து அந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி !

அஷ்ட பந்தனம்: சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன் மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி.... ஆகிய எட்டு பொருட்களுமே, ஆலயங்களில் விக்கிரக பிரதிஷ்டையில் பயன்படும் அஷ்ட பந்தனமாகும்.

அட்டமா ஸித்திகள்: தவமுனிகள் செய்யும் யோக முறையால் எட்டுவிதமான ஸித்திகளை அடையலாம். அற்புதமான அந்த ஸித்திகள்: அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் !

அஷ்ட வசுக்கள்: அனலன், அணிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியூஷன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ! இவர்களில் பிரபாசன் என்பவனே, வசிஷ்ட முனிவரின் சாபத்தால் பூமியில் பிறந்து, பீஷ்மராகத் திகழ்ந்தான் !

அஷ்ட வித்யேச்வரர்: அநந்தர், சூக்ஷ்மர், சிவோத்தமர், ஏகநேத்ரர், ஏகருத்ரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி ஆகியோரை அஷ்ட வித்யேச்வரர் எனப் போற்றுவர். இவர்கள் மாயைக்கு மேல் சுத்த வித்யைக்குக் கீழிருக்கும் புவனவாசிகள் என்கின்றன ஞானநூல்கள்.

எட்டெட்டந்தாதி: காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மனின் மீதான ஒரு பாடல் இது. எட்டெட்டு பாடலாக 64 செய்யுள்கள் அடங்கிய அந்தாதியாக திகழ்கிறது என்பார்கள். ஆனாலும், விநாயகர் வழிபாடாக முதலில் ஒரு பாடலும், செய்யுள் பலனாக கடைசியில் ஒரு பாடலும் அதிகம் உண்டு.


Shared from a friend..

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Aanmeekam...

Post by thanjavooran »

A share from my friend
Here is a brief explanation of the use and importance of this number: 108
The diameter of the Sun is
108 times the diameter of the Earth.
The distance from the Sun to the Earth is
108 times the diameter of the Sun. The average distance of the Moon from the Earth is
108 times the diameter of the Moon. In Ayurveda,
there are 108 “Marma” points that are vital for giving life to living beings. The powerful Sri Chakra Yantra intersects in 54 points each
with a masculine and feminine quality, totalling to 108. In Indian astrology,
we have 12 houses and 9 planets. 12 times 9 equals to 108. In Tantra, it is estimated that every day we breathe 21,600 times
out of which 10,800 are solar energy and 10,800 are lunar energy.
Multiplying 108 X 100 is 10,800. The famous saint Bharata wrote “The Natya Shastra”
which has 108 Karanas (Movement of hand and feet) There are 54 letters in Sanskrit each can be mentioned
as masculine (Shiva) and feminine (Shakti) aspect, totalling to 108. There are 108 Puranas and 108 Upanishads. Powers of 1, 2, and 3 in math:
1 to 1st power=1;
2 to 2nd power=4 (2×2);
3 to 3rd power=27 (3x3x3).
1x4x27=108
Harshad number:
108 is a Harshad number, which is an integer divisible by the sum of its digits
(Harshad is from Sanskrit, and means “great joy”). Desires:
There are said to be 108 earthly desires in mortals. Lies:
There are said to be 108 lies that humans tell.

Delusions:
There are said to be 108 human delusions or forms of ignorance. Heart Chakra:
The chakras are the intersections of energy lines,
and there are said to be a total of 108 energy lines
converging to form the heart chakra.
One of them, sushumna leads to the crown chakra,
and is said to be the path to Self-realization. Pranayama:If one is able to be so calm in meditation as to have only 108 breaths in a day,
enlightenment will come. Sri Yantra:On the Sri Yantra there are marmas
where three lines intersect, and there are 54 such intersections.
Each intersection has masculine and feminine, shiva and shakti qualities.
54 times 2 equal 108.
Thus, there are 108 points that define the Sri Yantra as well as the human body. Pentagon:
The angle formed by two adjacent lines in a pentagon equals 108 degrees. Time:
Some say there are 108 feelings,
with 36 related to the past, 36 related to the present,
and 36 related to the future. River Ganga:
The sacred River Ganga spans a longitude of 12 degrees (79 to 91),
and latitude of 9 degrees (22 to 31). 12 times 9 equal 108. Gopis of Krishna:
There were said to be 108 gopis of Krishna. 1, 0, and 8:
Some say that 1 stands for God or higher Truth,
0 stands for emptiness or completeness in spiritual practice,
and 8 stands for infinity or eternity. Silver and the moon:
In astrology, the metal silver is said to represent the moon.
The atomic weight of silver is 108. Numerical scale:
The 1 of 108, and the 8 of 108, when added together equals 9,
which is the number of the numerical scale, i.e. 1, 2, 3 … 10, etc.,
where 0 is not a number. Meditations: Some say there are 108 styles of meditation.

Paths to God: Some suggest that there are 108 paths to God. Jain:
In the Jain religion, 108 are the combined virtues of five categories of holy ones,
including 12, 8, 36, 25, and 27 virtues respectively. Sikh:
The Sikh tradition has a mala of 108 knots tied in a string of wool, rather than beads. Buddhism:
Some Buddhists carve 108 small Buddhas on a walnut for good luck.
Some ring a bell 108 times to celebrate a new year.
There are said to be 108 virtues to cultivate and 108 defilements to avoid. Chinese:
The Chinese Buddhists and Taoists use a 108 bead mala,
which is called su-chu, and has three dividing beads,
so the mala is divided into three parts of 36 each.
Chinese astrology says that there are 108 sacred stars. Stages of the soul:
Said that Atman, the human soul or center goes through 108 stages on the journey. Praiseworthy souls:
There are 108 qualities of praiseworthy souls. Japan:
In Japan, at the end of the year,
a bell is chimed 108 times to finish the old year and welcome the new one.
Each ring represents one of 108 earthly temptations
that a person must overcome to achieve nirvana. 108 signifies the wholeness of the divinity, perfect totality.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

ஓர் அற்புதமான சிற்பி,

ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.

ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.
'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.
அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.
முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.

அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன்.

என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்.

கடைக்காரர் வியந்தார்.

ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது.

வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார்.

தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவொருவரும் நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்!!!

Shared..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Aanmeekam...

Post by venkatakailasam »

நந்தி-
50 தகவல்கள்
1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.
5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.
6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.
7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.
8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.
9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.
11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.
13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.
14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.
15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.
18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.
20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.
21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.
22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.
23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.
24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.
26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.
27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்
28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.
29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.
30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.
31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.
32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.
33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.
34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.
35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.
36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.
37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.
38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.
39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.
40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.
41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.
42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.
43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.
44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.
47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.
48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.
50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.*
- ஆன்மீக செயல்-
from Muthu Suresh

Post Reply