Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post Reply
thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share

திருத்தலங்கள் மகிமை

CHOTTANIKARA TEMPLE

The Chottanikkara Temple is a famous temple of Mother Goddess Bhagwati. It is near Ernakulam in Kerala and is a very popular temple.Architecturally this temple is a testmonial for the ancient vishwakarma sthapathis in sculpting, Chottanikkara Devi is worshipped at the temple, in three different forms: as Saraswati in the morning, draped in white; as Lakshmi at noon, draped in crimson; and as Durga in the evening, decked in blue. Lord Shiva is also worshiped at the temple. People suffering from mental illnesses commonly visit the temple, as Bhagawati is believed to cure her devotees. An important item is the 'Guruthi Pooja' in the 'Keezhkkaavu' temple at Chottanikkara. This is a ritual done at late evening to invoke the goddess. Earlier 'Guruthi Pooja' was done only on Fridays. But nowadays, it is performed daily .

Makam Thozhal

This is the ritualistic bath of "Devi" in ceremonial pond in the morning at the sacred pond at Onakkoor on the northern side of the Temple. After this "Devi" accompanied by Lord Sastha on the back of the eleven caparisoned elephants march towards the "Pooraparambhu".
After the mid-day the door of Sanctum Sanctorum closes. It is re-opened at 2 p.m for the "Makam Darsanam" when Devi appears in her sacred full-fledged splendour and glory decked in sacred gold ornaments, precious jewellery and innumerable garlands. This is exactly the form of vision which Vilvamangalam Swami was believed to have had when he faced westward after the "Prathishta" (installation) of Kizhukkavu Bhagavathy, Chottanikkara Devi appears at this moment with her four arms bearing Varam, Abhayam, Shank and Chakram to her ardent devotees. It is fervently believed that Darsanam at this moment will result in the fulfillment of all prayers and cherished desires

The presiding deity is known by various names like Rajarajeswari, Bhadrakali, Saraswathi, Durga and Amman. The temple is known for curing mental illness and diseases caused by evil spirits. The patients are brought to the priest, who engages with them in some conversation. He nails a part of the hair of the patient in the temple tree, indicating that evil spirit is captured in the tree and the patients are cured off their illness. Neem leaves, lime and chillies are taken home from the temple, which are believed to ward off evil spirits.

Rajarajeswari is worshipped as Goddess Saraswathi in the morning, as Bhadra Kali at noon and Durga in the night. The temple opens its doors every day at 4 AM. People believe that Goddess Mookambika of Kollur attends the first worship here before going to her temple. Another peculiarity of this temple is that the Goddess is not fixed to the ground but rests on a bed of sand. Nearby her, is the idol of Lord Vishnu. Hence the devotees always pray to her along with her brother Lord Narayana and chant 'Amme Narayana'.

The 'Sthala Purana' of this temple tells that once the place this temple is located was a dense forest. There lived a tribal called Kannappan, whose wife had died. Kannappan was a great devotee of Goddess Parvathy. Since he was a hunter, he used to daily sacrifice an animal to his favourite Goddess. He had a cute little daughter who was very fond of her pet, which was a cow. Since her father used to sacrifice cows also, she kept her pet cow very near to her and looked after her well. One day Kannappan could not get any other animal to sacrifice to her Goddess, and hence he ordered his daughter to give her pet cow for that day's sacrifice. His daughter requested Kannappan that she be sacrificed instead of her cow. Kannappan's heart melted and he was a changed man. He realized that he was doing a wrong thing by practicing animal sacrifice. He and the pet cow stayed near the temple's Bali stone the entire night. In the morning, the cow herself had turned in to a stone. That place is called 'Pavizha malli thara' (Place of the coral jasmine flower). People believe that the pet cow of Kannappan's daughter was indeed Goddess Mahalakshmi. That day Lord Vishnu appeared before Kannappan and pardoned his sins and decided to be present in the temple along with the Goddess. That is how the concept of Lakshmi Narayana came to this temple. The place where Kannappan used to sacrifice his cows is the location of the Keezhe kavil Bhagawathi.

It seems that the location of this temple was rediscovered accidentally by a low caste grass cutter, who found that blood was oozing out of a stone which she had accidentally cut. That day, the elder Brahmin of the Yedattu house came along with some puffed rice in a coconut shell and this was offered to the Goddess for the first time. Even today this system of offering puffed rice in a coconut shell continues. The Brahmins of Yedattu house became the hereditary priests at this temple since those days. It was Adi Sankara who visited the temple, and brought in to the idol the presence and power of Mookambika. The legend goes that after doing tapas in the Himalayas, Sankara was blessed with the 'darshan' of Goddess Saraswathy whom he requested to accompany back to Kerala. The Goddess agreed to do so on the condition that Sankara was not to look back while she accompanied him. After a long travel when Sankara felt he was not able to hear the tinkle of the Goddess's anklets, with doubt, he looked back but alas the Goddess had by then turned into a golden statue since he had broken his promise. This place where this incident took place was in Kollur, near Mangalore, Karnataka. There the famous Mookambika temple was built and Sankara consecrated the idol. Sankara was saddened by the turn of events and begged the forgiveness of Saraswathy whose heart melted for her devotee and promised that she would present herself at Chottanikkara in the mornings and he could meet her there. It seems when Vilwamangalam Swami visited this temple he saw a powerful halo of light over the temple pond. He instituted a search and the present statue of Keezhe kavu was found in the tank.

There is also a story of a certain Gupthan Namboodiri who was pursued by a Yakshi while on a visit to meet his friend Kosapilli Namboodiri who practiced occult sciences. It seems, the Yakshi took the form of a pretty maiden and tried to entice Gupthan. Since he was carrying a palm leaf copy of Devi Mahatmyam , she was not able to do him any harm. However Gupthan was attracted to her. Later when he reached his friend Kosapilli Namboodiri's house, Gupthan narrated the incident and Kosapilli deduced that the lady was a Yakshi. He then gave Gupthan Namboodiri an enchanted towel to carry along on his return journey to protect himself from the Yakshi. When Gupthan saw the Yakshi following him he ran towards the Chottanikkara temple where he threw the towel outside and jumped into the compound of the temple. The Yakshi who was pursuing him could only catch hold of his feet. When Gupthan cried out for help from the mother Goddess, she came out and cut the Yakshi to pieces and threw her in to the temple tank. That tank is known today as Yakshikkulam or Rakthakulam. It is to Keezhe Kavu Bhagawathi that the mentally disturbed persons turn to for cure. They are brought and are tied to special posts inside the temple. As soon as they feel the presence of the goddess, especially during the 'Guruthi' time, (anointing with a liquid made of lime and turmeric which turns into a deep blood red color), they go into trance. At night, after 8.30 PM, there is a 'valiya Guruthi' or a big guruthy during which Guruthi from 12 huge vessels are poured over the Goddess. It is felt that if a mentally disturbed person participates and witnesses this Guruthi daily, the evil spirit which has affected them would leave them and run away. There is also a huge 'pala' tree, in which these people as part of a traditional ritual drive huge nails by knocking them with their foreheads.

The weak hearted are advised to keep away from the Keezhe Kavu Bhagawathi temple lest they are scared for life.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

ஸ்ரீரங்கம் 7இன் சிறப்பு.

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபறி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ர உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.



பூலோக வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க வாரீர்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share

சமயபுரம் மாரியம்மன்

1. Introduction

Samayapuram Mariamman Temple is in Samayapuram near Tiruchirappalli. It is located 15 km from Tiruchirappalli on the National Highway (NH-45) which is now a 4 Lane Road from Chennai to Tiruchirappalli.

The main deity, Samayapurathal or Mariamman is made of sand and clay like many of the traditional Mariamman deities, and hence unlike many other Hindu deities there are no abhishekams (sacred washing) conducted to the main deity, but instead the "abishekam" is done to the small stone statue in front of it.

It is believed by the devotees that the Goddess has enormous powers over curing illnesses and hence, it is a ritual to buy small metallic replicas, made with silver or steel, of various body parts that need to be cured, and these are deposited in the donation box. Depend on the metal the price is told by vendor women.

Devotees also offer mavilakku, (Tamil - மாவிளக்கு) a sweet dish made of jaggery, rice flour and ghee. Offerings of raw salt is also made to the Goddess by the rural devotees.

The temple attracts thousands of devotees on Sundays, Tuesdays and Fridays, the holy days for Mariamman. Samayapuram is the second most wealthy (in terms of cash flows) temple in Tamil Nadu after Palani.

2 History

History of the temple is unclear. In the early 18th century, King Vijayaraya Chakkaravarthi built the present day form of the temple. There is scant history of the period before that though it is believed that the locals worship the Goddess for many centuries before building the current temple.

One legend says that the present deity was at the RANGANATHASWAMY TEMPLE AT SRIRANGAM, and one of chief priests of the temple believed that the idol caused him illness and hence asked it to be removed from the temple. It is a common belief in that part of the region that such local Gods have immense powers and they must always be satisfied by proper offerings and sacrifices. The idol was moved outside Srirangam, and later found by some of the passerby who built a temple named, the Kannanur Mariamman temple.

During that period (around the 17th century CE), Trichi was ruled by the Vijayanagar kings and the area was used as an army base. It is believed that they made a commitment to build the temple if they win the war and after attaining success they built a shrine for the Goddess.

Originally the temple was under the management of the THIRUVANAIKAVAL TEMPLE, a popular one in the region. Later, the control was split and currently Samayapuram is under an independent trust monitored by the Government of Tamil Nadu, which also monitors the annadanam distribution (an act of offering food to the devotees).

3 Festivals

Thai Poosam, usually occurring in the Tamil month of Thai.

Like most Tamil temples the main festival is during the start of the summer, generally in April. During this time, the temple chariot processions and teppams (lake processions) happen.

All the Fridays in the Tamil months of Aadi (July 15 - Aug17) and Thai (Jan 15 - Feb 15) are celebrated in a grand manner.

Here, at Samayapuram, the Chithirai Chariot Festival is celebrated for a period of 13 days. The Festival Starts on the 1st Tuesday of the month “Chithirai”. The Chariot Festival will be on the 10th day of the Festival. The Chariot (Car) with Goddess Samayapuram Mariamman will be pulled by devotees around the Temple. It is a Maha Festival --- Grand Festival, which attracts Lakhs of Devotees.

During the Chariot Festival, no vehicle is allowed to go inside SamayaPuram Town and all the vehicles are stopped one Kilometer away from the Town and everybody have to go to the temple by walk.

The Crowd is so much, though the Government made so many arrangements, still it is un-manageable. Luckily for Devotees, nowadays, they are following the traffic rule of left side walking in the road. This helps a lot for the smooth movement, which avoids any complications associated with big crowds. Still you will find that so many children missing, which is being announced during the festival time in the loud speakers.

During the Chariot Festival time, the Local Government arranges a ‘’’Special Bus Stand’’’, which is one Kilometer away from the SamayaPuram Town. All the Buses and any other 2 / 3 / 4 wheelers are stopped there only. The vehicles which are going beyond Samayapuram in NH-45 will only be allowed with a little bit delay.

The 4 laning of the National Highway 45 has helped to ease traffic congestion to a considerable extent. Onward traffic can take the flyover, while those going to Samayapuram for Darshan can take the Service Lane which leads to the Temple.

For festival days, during the Chithirai Chariot Festivals, there are 24 hours bus services to nearby places like, Salem, Namakkal, Karur, Thuraiyur, Thanjavur and other nearby Small Towns. Further, there are continuous Town Bus Services provided which mainly connect to Tollgate (Salem-Trichy main road junction), Chatram Bus Stand and Central Bus Stand.

During the Festival days we can see that, the Tamil Nadu Police, NCC, Scout (School and College Students) Controlling the Crowd every where including the Temple premises.

4 Significance of the temple

Samayapuram is a significant symbol of the native culture in rural Tamil Nadu and there a number of unique practices concerning the Mariamman temples. Samayapuram has been used a model to describe rural folklore in a number of research works on sociology and religion.
During festivals, it is not unusual to find people doing extreme things to make their bodies suffer as an act of sacrifice including, walking over a red-hot bed of charcoal and holding hot mud-vessel in bare hands.

Mariamman temples also typically involve Samiyattam wherein one of the deveotees (usually a female), gets hyper-excited during prayer and starts talking in an hysteric way interpreted by the devotees as an act of communication by God.

5 Heritage of Samayapuram outside India

The legacy of Samayapuram is well spread beyond Tamil Nadu and even after centuries of emigrating from India, many people in Sri Lanka, Singapore, South Africa and Fiji still maintain their loyalties to the temple and try to create similar temples and environment in their new country, raising both a cause of concern and an appreciation of diversity.

There is also a Samayapuram Mariamman Temple in Tanjong Rambutan at Malaysia. There is also a shrine for Goddess Sri Samayapuram Mariamman at the Sri Veeramuthu Muneeswarar Temple which is located at Yishun Industrial Park, Singapore.

During the month of Aadi,the annual Kozh Valarpu festival is conducted with much granduer by the Sri Samayapuram Mariamman Pillaigal at Jurong West, Singapore.

6. Specialty with deity

Mother of all Mothers --- The Goddess Shiva Sakti ---Samayapurathal is so Powerful to fulfill the Prarthanas of Devotees. In very few temples, you can see the presiding deity from the entrance of the temple. Yes, Samayapurathu Mariyamman is visible from the Main Entrance of the Temple and it will look like that the mother is waiting for your arrival. rulmigu Mariamman Temple, Samyapuram

The State of Tamil Nadu has several divine abodes of Goddess Shakthi. Shakthi cults prevalent in different ages are manifested in the temples. One of such divine abodes is Arulmighu Mariamman, Samayapuram in Trichy District. This Temple is known to occupy a prominent position among the temples dedicated to Goddess Shakthi. This temple is situated in beautiful land scape enriched by the Holy River Cauvery. The Temple is Situated in the Chennai - Trichy National Highway 15 K.M. from Trichy.

The Goddess Mariamman is very powerful, devotees. wishes are fulfilled by the Goddess. Persons affected by Chickenpox come to this place, stay here and pray the Goddess for speedy recovery. Abisheka Theertham (Divine Water) is sprinkled on them after Pooja and they get recovered very quickly. There is a separate rest hall for their stay in the temple.

7 Fast by the Goddess

Miracle Based : Mother Mariamman undergoes a fast for the welfare of mankind for 28 days from the last Sunday of Masi month-February-March. During these days no cooked preparation is offered as nivedhana but only some flour, orange, grapes and green coconut. For completing this fasting, abishek is offered to Amman only with flowers – Poo in Tamil and this event is known as Poo Choridal.

In ancient time This region was ruled by Chola Kings. Samayapuram is also known by the names Kannanur, Kannanpuram, Vikramapuram and Mahalipuram in ancient times. Flower sprinkling (Poochoridal) festival is conducted during the month of March and Chithirai Car festival is conducted during the month of April. Devotees offer prayer by rolling themselves around the temple prakaram (corridor) known as Angapradatchinam.

In recent times, the temple has gained a vast popularity. Devotees throng here from various parts of the country. The saying goes, “Samayapurthal will protect her devotees in times of need” (Samayapuram Mariamman Samayathil Kaappal - in Tamil). It is the faith of the people that Mariamman will protect them though they are far away from her in other places of the world.

8. Revenue

This is one of the largest temples of the state earning high revenues for the Hindu Religious and Charitable Endowment with huge inflow of devotees.

Thali the Mangal Sutra offered by women are the majority of the offerings in the Hundi of the temple. Diseases are cured without surgery in many cases. Many devotees visit this temple from Karnataka, as Mariamman resembles the Chamundeeswari of Mysore.

There is also a story that Emperor Dasaratha visited Samayapuram to worship Mariamman.

9 worship

1 Shaad Kaalam 06.00 A.M
2 Kaala Santhi 08:00 A.M
3 Uchi Kaalam 12:00 A.M
4 Saaya Ratchai 06.00 P.M
5 Saaya Ratchai IInd 08.00 P.M
6 Jaamam 09.00 P.M
7 Thanga Thear 07.00 P.M

10 Arulmigu Mariamman Temple - Festivals
10a Thai Poosam Festival - Thai Month

Thai Poosam Festival is being celebrated in grand full manner for 11days. The deity is being taken in procession daily both in morning and evening in different Vahanams. The deity is being taken in procession on Silvar Horse Vahanam, on eighth day night and in Theppam (Floating Festival) on Ninth day night. On 10 th day ie., on Thai Poosam the deity in taken in procession from Samayapuram to North Cauvery (coleroon-kollidam) near Srirangam in glass palanquine for Theerthavari (taking bath) where goddess Mariamman is being honoured by Lord Sriranganathar by Presenting Seer Varisai (Gifts) to his sister Mariamman. On the 11 th day, the deity returns from coleroom to Samayapuram and the festival ends.

10b Poochoriyal (Flower Sprinkling Festival) : - Masi Month

The Poochoriyal Festival takes place on the last Sunday of month Masi. During Poochoriyal lot of beautiful flowers of various kinds are being Sprinkled on the Moolavar deity. More than a lakh of devotees visit to this temple for sprinkling flowers and to have Holy dharsan of the Goddess. The festival is spread over to 4 weeks ie., four Sundays during the moth of masi and pankuni and sprinkling of flowers are being offered every Sunday.

The special feature of this festival is that the Goddess herself adopts fast for 28 days for the welfare of her devotees. During these 28 days cooked food will not be offered as nivediyam, to the deity. Only simple rice flour, tender Coconut, Sugar Candy, Jaggery water, Butter Milk, alone are being offered as Nivediyam and Prasadam.

10c Chitrai Festival : Panguni - Chithirai Months

This Maha Festival is being celebrated for 13 days. On the first Tuesday in the Month of Chitrai, ie., on 10 th day of festival, Goddess Mariamman is being taken in a decorated wooden car and pulled around the temple. This is called as chitrai ther festival. On Friday. ie., on 13 th day of festival the Goddess is being seated in a decorated float (Theppam) and pulled around the central Mandapam of Theppakulam. This is called floating Festival. During these festivals devotees gather in large numbers offering their Prarthanas such as taking Agni Chatti, Milk Pot and Kavadi and Tonsuring their heads etc.,

10d Panchaprakaram : Chitrai - Vaikasi Months

This festival spread over for 15 days. On the first day of the month vaikasi. (ie.,) on the first day of month vaikasi (ie.,) on 10 th day of Festival special Maha Abishekam will take place.

10e Navarathiri Festival - Purattasi Month

This festival starts from New Moon of the Month Purattasi ie., from Mahalaya Ammavasai and spread over for 9 days. The deity will be seated in Navarathiri Mandapam for Golu.

Arulmigu Mariamman Temple - Transport

11 Transport Facilities :

Samayapuram is 15 kms from Trichy.The temple lies on the Trichy-Chennai highways, adequate bus facilities are available for the devotees. Frequent town bus facilities are also available from Trichy Main Guard Gate to the temple.

Railway Station :Near By Railway Station Trichy Railway Station.

Airport :Near By Airport Trichy. rulmigu

12 Mariamman Temple - Pooja Fees

S.No Pooja Fees
1 Ushaad Kaalam Rs 400.00
2 Kaala Santhi Rs 400.00
3 Uchi Kaalam Rs 400.00
4 Saaya Ratchai Rs 400.00
5 Saaya Ratchai IInd Rs 400.00
6 Arthajaamam Rs 400.00
7 Six Kala Pooja (Per Day) Rs.2,400.00
8 Thanga Thear Rs.1,500.00

Regarding pooja katalai for Six Kalams an amount of Rs.30,000/- has to be deposited by the donor and interest amount will be taken for pooja kattali one's in a year as per donor's wish. The Donor will be honoured and the prasadams will be also given.

Abishega Kattalai - Rs. 5,000. 00

For the scheme an amount of Rs.5,000/- will have to be deposited by the Donor and interest amount will be taken for Abishegam kattalai once in a year as per donor's wish. The Donor will be honoured and the prasadams will be also given.

Golden Charriot Kattalai - Rs. 25,000. 00

For the scheme an amount of Rs.25,000/- will have to be deposited by the Donor and interest amount will be taken for Golden charriot Purappadu once in a year as per donor's wish. The Donor will be honoured and the prasadams will be also given.

Uchikala Poojai Free Prasadha Scheme. - Rs.10,000 .00

As announced by the Government of Tamil Nadu after completion of the Uchikala Pooja for every day AFTER NOON SESSION CURD BATH WILL BE GIVEN TO THE POOR PEOPLE,

Donors are invited to participate in the above scheme and denote liberally, and also get Amman's blessing for their valuable services. The amount deposited in the above scheme will be exempted from Income Tax Act 80 G.

Archanai Kattalai - Rs. 150. 00

If the Donor deposit Rs.150/- per year necessary prasadams will be sent by post after performing Archana to the lotus feet of Arulmighu Mariamman as per Donor's wish.

The Correct Address and Details may be given for the scheme.

Annathanam Kattalai - Rs. 50,000. 00

From 1997, onwards after the Uchikala Pooja in this temple, Anna dAna is given daily for 200 devotees at an expenditure of Rs. 3000/-.

The amount will be collected as donation from the devotees, The devotees & Donors may invest Rs.50,000/-. and above said amount will be deposited in a bank and from the interest the Anna Dana will be performed life-long. Those who are interested to join in this scheme may deposit Rs.50,000/-. by Cheque / D.D addressed to Deputy Commissioner / Executive Officer, Arulmigu Mariamman Temple, Samayapuram, Trichy - 621 112. The devotees can give Annathanam on Memorial Day / Wedding Day and Birth Day, Parents Death Anniversary, The devotees can join in this scheme and get benefited.

13 Arulmigu Mariamman Temple - Annadhanam

*"The Best Donation is Food Donation one Who Gives food,gives Life."

The temple implements the Honourable Tamilnadu Cheif Minister's "Food Donation " 100 persons are provided Food Daily... *Person Willing to provide "Food donation" in their name can give it by pay Rs.2000/- per day and can get the receipt for the same. Or can pay Rs.25.000/- as fixed deposit and with its interest can provide 'food donation' during ther birthday, marriage day, etc.. *Donors can also avail 80G tax relate for all their donations tax towards the 'Food Donation Scheme'....

14 Arulmigu Mariamman Temple - Administration

Joint Commissioner / Executive Officer,
Arulmigu Maariamman Temple,
Samayapuram - 621 112,
Trichy District,
Tamilnadu,
India.
Phone No : 0431 - 2670460, 2670907, 2670557
Fax : 0431 - 2670557
E-Mail ID : samayapurammariamman@tnhrce.orgrulmigu

A posting on Samayapuram mariamman has no conclusion.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share

இது ஒரு கேரளா கோவில் கதை

அந்த காலத்தில் எந்த நோய்க்கும் நாட்டு வைத்தியம் தானே ஔஷதம். மந்திரத்தில் வியாதி குணம் ஆனவர்களும் உண்டு. மணி மந்திர ஔஷதம் என்பார்கள். பத்தியத்தில் வியாதி குணமாகும். கோவில்களில் மண்டல
விரதமிருந்து பெற்ற ஈஸ்வர பிரசாதமும் மருந்தாக வியாதி நிவாரணம் செய்திருக்கிறதே.

மலையாள தேசத்தில் ஒரு ஆச்சார நம்பூதிரி பிராமண குடும்பம். அதில் ஒருவருக்கு உடலில் பெரும் வாத நோய் கண்டது. அந்த நம்பூத்ரி கல்விமான். உயர்ந்த கௌரவமான மதிப்பான குடும்பம். பிராரப்த கர்மா அவருக்கு இப்படியொரு வியாதி. எங்கெங்கோ மருத்துவர்களிடம் அலைந்தும் பயனில்லை. கொஞ்சம் பூஸ்திதி உண்டு.

ஒரு நாள் அவர் வேலைக்காரனை கூப்பிட்டு ''ஏ குட்டா, உடனே போ. யாரோ ஜோசியர் ஊருக்கு வந்திருக்கிறாராம். பல வியாதிகளுக்கு அவரிடம் மருந்து இருக்கிறதாம். உங்கள் உடம்பை பற்றி கேட்கக்கூடாதா என்று தெரிந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். என்னால் நடக்க முடியவில்லை. நீ அவரைப் பார்த்து என் நிலைமையைச் சொல். அவரிடம் ஏதாவது மருந்து வாங்கி வா'' என்று கோபாலனை அனுப்பினார்.

அவர் வேலைக்காரன் கோபால குட்டன் ஜோஸ்யரிடம் சென்றான். வேலைக்காரன் விவரங்களை சொல்லி ஜோசியர் என்ன சேதி சொன்னார் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் பட்டத்திரி என்கிற வியாதிக்கார பிராமணர் காத்திருந்தார். ஏன் அவன் இன்னும் வரவில்லை?

சற்றைக்கெல்லாம் அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி

''என்னப்பா ஆயிற்று? எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று ஜோசியர் சொன்னாரா? ''

'' ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது'' என்று கூறினார்.அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது''

''அப்படி என்ன ஜோசியர் சொல்லி விட்டார்?''

கோபாலன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி ''புனிதமான க்ஷேத்ரமான குருவாயூரில் நீங்கள் மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடினால் வியாதி குணமாகுமாம்'' என்றான்.

''குருவாயூர் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம் என்ற சுத்தி செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள். அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார்.

அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன்.
நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ?'' கோபால குட்டன் அழாத குறையாக சொன்னான்.

பட்டத்திரி யோசித்தார். அவருக்கு சிரிப்புவந்தது. ஜோசியர் கூறியதன் உட்பொருள் புரிந்தது.

மனம் சந்தோஷம் அடைந்தது. ''கோபாலா, வாடா, நாம் இன்றே குருவாயூர் போகணும். பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கோ''

''ஏய், இதென்ன அக்கிரமம். நான் வரமாட்டேனாக்கும்'' என்றான் கோபாலன். உங்களையும் போக விட மாட்டேன். அதெப்படி நீங்கள் குருவாயூர் க்ஷேத்ரத்தில் கோவிலுக்குள்ளே போய் அனாசாரம் பண்றது. நான் ஒப்புத்துக்க மாட்டேன். உங்களுக்கு வேணா எப்படியாவது வியாதி குனமாகாதா என்று இப்படி செய்ய பிடிக்கலாம். அந்த பாபத்துக்கு நான் துணை போக விரும்பலே.'' ரொம்ப கோபத்துடன் கோபாலன் கத்தினான்.

பட்டத்திரி என்ன சமாதானம் பண்ணியும் கோபாலன் கோபம் அடங்கவில்லை. '' ஜோசியன் சொன்னதுக்கு வேறே அர்த்தம்டா கோபாலா'' என்று திருப்பித் திருப்பி சொல்லி கடைசியில் கோபாலன் ஒரு வழியாக அமைதியானான்.

''ஜோசியன் சொன்னது நீ புரிஞ்சிண்ட மாதிரி இல்லே. அதற்கு அர்த்தம் வேறே. ''மத்ஸ்யம் தொட்டுப் பாடணும்'' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே? பகவான் குருவாயூரப்பனின் தசாவதாரத்திலே முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான்.

''மத்ஸ்யம் தொட்டு'' என்றால் மத்ஸ்ய அவதாரத்திலிருந்து தொடங்கி தசாவதாரம் பத்தையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரங்களைப் பற்றி குருவாயூரில் பாடப் போறேன். நீ என்ன பண்றே. என்னை இப்பொழுதே குருவாயூருக்கு அழைத்துச் செல்.'' அப்பாடா, கடைசியில் சுலபமாக வாத நோய் குணமாக ஒரு பரிகாரம் கிடைத்ததே என்ற சந்தோஷம் அவருக்கு.

''ஒ, நான் ஒரு முட்டாளாக்கும் . இப்படி ஒரு அர்த்தமோ இதுக்கு. ஒரு பிராமணன், அதுவும் நம்பூதிரி, அதுவும் குருவாயுரப்பன் கோவில்லே உள்ளே மீனை வாயில் வைத்துக்கொண்டு............'' என்று அந்த ஜோசியன் சொன்னதை வேறே மாதிரி புரிஞ்ஜிண்டுட்டேன். நம்பிவிட்டேன் . அதாக்கும் கோபம் வந்துது. ''

பட்டத்திரிக்கு இன்னுமொரு சந்தோஷம் என்ன வென்றால் அவருடைய குரு கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று. அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது.. அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட , நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததுமே மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது.

''நாராயண பட்டத்திரிக்கு எந்த மருந்திலும் குணமாகாத வாத நோய், வெறுமே பாட்டுப்பாடுவதால் மட்டும் குனமாகப்போகிறதா என்ன ? '' என்று ஏற்கெனவே நொந்து போயிருந்த அவர் குடும்பம் ,உறவினர்கள் அவநம்பிக்கையுடன், வெறுப்புடன், வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.

நடக்க முடியாதே பட்டதிரிக்கு. ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் தூக்கி வைத்துத் கொண்டு குருவாயூர் சென்றனர். ''எப்போ குருவாயூர் வரும், எப்போ நாராயணனைப் பார்ப்போம்'' --- பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக மனம் ஏங்கியது. மனத்தில் இருந்த பயம் விலகியது. இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். நாளைக் காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம்'' என்று எண்ணிக் கொண்டார்.

அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். '' ஆஹா என் பகவானே ஸ்நானம் செய்த குளமாச்சே இது ? இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' -- அவர் மனம் துடித்தது. புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.

தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள், பாகவதோத்தமர்களான வியாஸர், பிரகலாதன், நாரதர், குரு, வாயு, துருவன், அம்பரீஷன், அஷ்டதிக் பக்தர்கள் அனைவரும் அவனைத் தொழ வருவார்களே. அவர்களில் ஒருவராக பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று பின்னால் உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர்.

பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார். அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார். அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது. சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்? இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே? எத்தனை அழகு? எவ்வளவு தேஜஸ்? இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா? அதற்கு நான் தகுதி உடையவனா? அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா? அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா? இப்படி பட்டத்ரி மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார் பட்டத்திரி.

அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, குருவாயூரப்பனுடைய தேஜோமய திவ்ய ஸ்வரூபத்தை தியானித்து, '' என் கண்ணா'' என பக்தியுடன் கதறினார். நாபியிலிருந்து அந்த சப்தம் பக்தியோடு வெளிவந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?

பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் . தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை.

அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு, ''ஏ உன்னிக் கண்ணா! கிருஷ்ணா! பரந்தாமா!'' என்று கதறுகிறார்.

'' இதோ பார் குட்டி கிருஷ்ணா உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும் னு நீ நினைக்கிறாய்? அதனால் நீ முதல்லே எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா'' என்று அழுது கண்ணீர் மல்குகிறார்.

அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம்

'' சரி கிருஷ்ணா, நீ எனக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். கழுத்தையாவது திருப்பி உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். நான் இப்போ தான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன். இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே இதுவரை உன் புகழைக் கேட்டிருக்கிறேன். உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், நீ சூடி இருக்கும் ஆடை, ஆபரணங்களைக் காணாமல், உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல், கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி அப்பா உன் பெருமையைப் பாட முடியும்? உன் புராணமாகிய நாராயணியத்தை, நான் எதை நினைச்சு எழுத முடியும்? நீயே சொல்லு, அதனால் தான் கேட்கிறேன் நீ உன் தரிசனத்தை முதலில் எனக்கு கொடு'' என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்டார் .

குருவாயூரப்பன் சும்மாவா இருப்பான் ? அவனுக்கு நாரயணீயம் வேண்டாமா. அதற்காக தானே இத்தனை வேலை செய்து, அவருக்கு வாத ரோகத்தை வேறு கொடுத்து இழுத்து வந்திருக்கிறான். முதன் முதலில் பட்டத்ரியிடம் பேசுகிறான் .

''நாராயண பட்டத்திரி, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்றைக்கு நீ இங்கே வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்றுதான் உன் வியாதி நீங்கும் சரியா ?''

'' அடே, குட்டி கிருஷ்ணா, எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்? ''

'' பட்டத்ரி, நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு உன்னுடைய கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? என் கழுத்தின் ரெண்டு பக்கமும் நன்றாகத்தானே இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும்அல்லவா ?. பட்டத்திரி. நானே என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் பாட ஆரம்பி'' என்று கூறி கிருஷ்ணன் அனுக் ரஹம் செய்கிறார்.

(இப்பொழுதும் குருவாயூர் ஆலயத்தில் 'நாராயண பட்டத்ரி மண்டபத்தில்' உட்கார்ந்து கொண்டு பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும்.)

அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, 'நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம்'' என்று எழுதி வைத்திருக்கின்றனர். சாட்சாத் அந்த குருவாயூரப்பனே, பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன், ''மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி , இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் உனக்கு மட்டுமே சொந்தம். இதற்கு இனிமேல் ''பட்டத்ரி மண்டபம்'' என்று பேர்'' குருவாயுரப்பனே கூறினார்.)

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு. என்ன வென்றால், இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை போல் அமைந்திருக்கிறது.

'' நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா? என்று பட்டத்ரி கேட்க,
'' உம். எழுது. நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்'' என்று குருவாயூரப்பன் கூறுகிறான்.
'' நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன்''

(இங்கே குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், இதுபோல் பகவானும் பக்தனும் சம்பாஷணை செய்த வேறு சில சம்பவங்களும் இருக்கிறது. திருப்பதியில் குலசேகர ஆழ்வாரும் ஸ்ரீநிவாசப் பெருமாளும் பேசியது.. ஸ்ரீரங்கத்தில் இரவில் நடக்கும் அரையர் சேவையில் நாட்டியம் ஆடிக் கொண்டே ரங்கநாதருடன் பேசுவது. சிதம்பரத்தில் அப்பய்ய தீக்ஷிதரும் நடராஜரும் பேசியது. மதுரையில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் மீனாக்ஷி தேவியோடு பேசியது.,காஞ்சியில் வரதராஜ பெருமாளும்- திருக்கச்சி நம்பிகளும், கந்தவேள் முருகனும்- கச்சியப்ப சிவாச்சார்யாரும், திருக்கடையூரில் அம்பாளும்,அபிராமி பட்டரும், பிள்ளையாரும்- முருகனும்- அவ்வையாரும், காளியும்- கவி காளிதாசனும், திருத்தணி முருகனும்- முத்துசுவாமி தீட்சிதரும், காளியும்- ஸ்ரீஇராம கிருஷ்ண பரமஹம்சரும், மூல ராமரும்- ஸ்ரீஇராகவேந்திரரும்
...இன்னும்... இன்னும்... இது ஒரு நீள ஹனுமார் வால் பட்டியல். பக்தர்களும், பரமனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட புண்ய பூமி இந்த பாரதம். இந்த அற்புதத்திற்கெல்லாம் சிகரமாக நிகழ்ந்ததுதான் மேலே சொன்ன நம் நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசிக் கொண்டது.

ஒரு முக்ய விஷயம். மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள். ஆனால் குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.! பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் அவரோடு பேசுகிறார்.

குருவாயூரப்பன் ப்ரத்யக்ஷ தெய்வம் என்பதால் தானே லட்சோப லக்ஷம் குழுமுகிறார்கள். நமக்கு தெரியாததா இது ? நேரம் கிடைத்தால் பாக்கியம் இருந்தால் நாம் குருவாயூர் ஓட மாட்டோமா?

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share
நம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம்
வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.

திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு
செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.
நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாதகாலம்
கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.
வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.
திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும்
உறிஞ்சப்படுகிறது.

ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில்
நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை
உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும்
போது கருடன் தரிசனம் தருகிறது.

கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருடசேவையின்போது கல்
கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து
வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம்
இன்றும் நடைபெறுகிறது.

முருகனுக்கு விரதமிருந்து சர்ப்பக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள்
பாம்பும், மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் மீனும் தானாக
வருகின்றன.

திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு
தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம்
நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள
தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின்
நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில்
கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும்
அற்புதம் நடக்கிறது.

காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால்
நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார்
கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில்
சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை
கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு
வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

திருப்பத்தூர் - தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த
நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7
புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல்
விட்டு விட்டு சாலை அமைத்தனர்.

வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை
பங்குனியில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது பட்டு தங்கநிறமாக
ஜொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்
கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை
அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

சோமநாதபுரம் சிவன்கோவிலில் சிவலிங்கம் அந்தரத்தில் இருந்தது. கஜினி
முகமது உடைத்து அழித்தான்.
அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல் போன்ற நோ்த்திக்
கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதுபோல் நாம் அறியாத அற்புதங்கள் ஏராளம். இதுபோன்ற அற்புதமான கோவில்களை,
மகான்களின் ஜீவசமாதிகளை தரிசிக்கும் பாக்கியத்தை புண்ணியம் செய்தவர்கள்
பெறுகிறார்கள்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share
இசைத் தூண்கள்...!

ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர். இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்களான "ச,ரி,க,ம,ப,த,நி" என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது!

சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்திமூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது. இதில் பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும், அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில்... மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையையும் தருகின்றது!

அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி வெவ்வேறு ஒலிகளில் இசைக்கும்!

இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை! உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது!

அந்தக் காலத்தில் இருந்த இசைக்கலைஞர்கள், கோயில் விழாக்களின் போது... இசைக்கருவிகளை பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர்!

ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வொரு விதமான 'அலைக்கற்றை'யை உருவாக்குகின்றது. எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது?

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி விஞ்ஞானி (கல்பாக்கம்) திரு.அனிஷ் குமார் என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள 'இயற்பியல்' அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர்.

தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிட்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது 'தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் சப்தம் உருவாக்கும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள்' என தெரிய வந்தது!

இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை. ஆனால், இந்தத் தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை. இதில் எப்படி வெறும் ஒரே ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது?

இதைப் பற்றின ஆராய்ச்சிக்கு இந்த "இசைத்தூண்கள்" ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது!

இந்த இசைத்தூண்களை 'மிடறு' என்று அழைத்தார்கள். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது .

"நாம் வெறும் மூட நம்பிக்கைகளால் மூழ்கியவர்கள் அல்ல. இயற்பியலிலும், கட்டிடவியலிலும் காலத்தை வென்றவர்கள்" என்பதற்கு இந்த இசைத்தூண்களே சாட்சி.

இது போன்ற அதிசயங்களை புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும்.... அவர்கள் தந்த பெருமைகளையும், மொழியையும், கலாச்சாரத்தையுமாவது கட்டிக்காப்போம்.

இசைத் தூண்கள் உள்ள கோவில்கள்......

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில்
களக்காடு, குற்றாலம், சுசீந்திரம்
செண்பக நல்லூர் (துளை இசை)
தட்புத்திரி தாடிக் கொம்பு (வேத ஒளி) சுந்தரராஜப் பெருமாள் கோவில், கருவரைக்கு செல்லும் வழியில் உள்ள மண்டபம்
திருப்பதி, திருவனந்தபுரம், திருநெல்வேலி, தென்காசி
பெங்களூர் ராமராசன் பேட்டை, மதுரை வெப்பாச்சி, ஹம்பி (இசைத்தூண்கள்-துளை இசைத் தூண்கள்)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share
NARAYANA DIKSHITHAR

Narayana dikshitar was a great mahan.he lived in kasi for many years

One day some sanyasi's came to his house without giving information.he wanted to feed them.His wife was very sick on that day.he did not know what to do.At that time one madisar mami was passing by his house.When she saw narayana Dikshitar she asked, "Why are you sad?" He said my wife is sick ,I want to feed the Adithis,but now I am helpless.The madisar mami said,I am a very good cook I shall come and help you,she cooked food and served to Adithi's and went away.

After sending the adithi's Narayanji felt sorry for not paying the madisar mami for cooking food.he also felt sad for not feeding her.That night Annapoorani devi appeared in his dream in the form of madisar mami.narayanji expressed his sadness for not feeding her and fpr not paying her.The maidsar mami said "Don't worry I am goddesss Annapoorani my bullacku (eared ornament) is lying near the front of your house please build a annapoorani temple there.After saying this she disappeared.

The present annapoorani temple in kasi was built by Narayana dikshathar the great mahan

"ANNAPOORNAE SADAPURNAE..................................PARVATHY"

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share
உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!

260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.

தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.

மீனின் பெயர் செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

தங்கமலை ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.

கிரிவலம் செய்யும் முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.

நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.

அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share
35 ஆண்டுகள் கேரளத்தில் வாசம் செய்த நடராஜர்!!!
சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமான் முகலாயர் படையெடுப்பின்போது சிதம்பரத்திலிருந்து கேரளத்துக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிதம்பரம் கொண்டு வரப்பட்டார் என தல வரலாறு கூறுகிறது.
முகலாயர் படையெடுப்பின் போது தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் கி.பி. 1648-ல் தில்லை ஸ்ரீநடராஜரையும் ஸ்ரீசிவகாமி அம்மையையும் தென்னாட்டுக்கு எடுத்துச் சென்று பாதுகாக்க எண்ணினராம்.
இரண்டு மரப் பேழைகளில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் அமரச் செய்து இரவு நேரங்களில் மட்டுமே பயணம் மேற்கொண்டு, தில்லைக்கு தென்பகுதியாக விளங்கும் மதுரையை நோக்கிச் சென்று குடுமியான்மலையை அடைந்தனர்.
பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் புளியங்குடி என்ற இடத்தை அடைந்தனர். அங்கு ஒரிடத்தில் பூமியிலே குழி தோண்டி பேழைகளை மறைத்து வைத்து அந்த இடத்தில் ஒரு புளிய மரத்தையும் நட்டனர். பின்னர் தில்லை திரும்பினர்.
தில்லையில் அமைதி திரும்பிய சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லை வாழ் அந்தணர்களின் இளம் தலைமுறையினர் குழுக்களாகப் பிரிந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அவ்வாறு பிரிந்து சென்றவர்களில் ஒரு குழுவினர் புளியங்குடியை அடைந்தனர். அங்கே பல பேர்களிடமும் விசாரித்தனர். யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், ஒரு வயதான குடியானவன் தன்னுடைய வேலையாளிடம், இந்த மாட்டைக் கொண்டு போய் அம்பலப் புளியில் கட்டு என்றாராம். இதைக் கேட்டதும் இவர்களுக்கு அது குறித்த விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியுள்ளது. அந்த வேலையாளிடம் கேட்ட போது அவன், எனக்கு எதுவும் தெரியாது, எங்கள் முதலாளியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறான்.
முதலாளியிடம் சென்று கேட்ட போது அவரோ, இங்கே ஆசான் ஒருவர் இருந்தார். அவர் பல காலங்களாக இந்த பகுதியில் வாழ்ந்து வந்தார். தினமும் இந்த அம்பலப் புளி அடியில் வழிபட்டு வந்தார். அவர் தான் அந்த சிறிய பொந்தில் திருவுருவங்களைக் கண்டாராம்.
இந்த இடத்தில் விலைமதிப்பில்லாத ஒரு சுவாமி இருக்கிறார் என்றும், அதனை அறிந்தவர்கள் ஒரு நாள் இங்கே வருவார்கள். அதுவரை இதைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் உண்மையானவர்களா என்று சோதித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொன்னார் என்றார்.
இவர்களோ, நாங்கள் தான் அந்த மூலமூர்த்தியின் உரிமைதாரர்கள் என்று விளக்கி அவரிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு தில்லையை அடைந்தார்கள்.
பின்னர் பல நூறு தில்லைவாழ் அந்தணர்கள் அந்த இடத்தை அடைந்து, தக்க ஆதாரங்களை விளக்கிச் சொல்லி, அவர் சம்மதத்துடன் அந்த இடத்தைத் தோண்டி தில்லை நடராஜரையும், சிவகாமி அம்மையையும் வெளியே எடுத்தனர்.
பின்னர் தக்க பாதுகாப்புடன் அதே போன்ற பேழைகளில் வைத்து தில்லை நோக்கி எடுத்து வந்தனர்.
வரும் வழியில் திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலின் சபாபதி மண்டபத்தில் சிலகாலம் வைத்திருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோயில் வழியாக தில்லைக்கு வந்தார்கள்.
1686-ல் மறுபடியும் தில்லையில் பொன்னம்பலத்தில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் பிரதிஷ்டை செய்து, பல திருப்பணிகள் செய்து, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்று தல வரலாறு கூறுகிறது.
-தினமணி
------------
இது முற்றிலும் உண்மை. முகலாயர் படையெடுப்பின்போது சிதம்பரம் கோயிலை தகர்க்க முற்பட்டனர். தீட்சிதர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் தன் இன்னுயிரை ஈந்து கோயிலை காப்பாற்றினர். கோயிலில் உள்ள சிலைகள் வேறு இடத்திருக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வைத்தீஸ்வரன் கோயிலில் மிகவும் பிரசித்திபெற்ற முத்துகுமார(முருகன்) சுவாமி சிலை தில்லை நடராஜர் கோயிலுக்கு சொந்தமானது.

Meenalochani
Posts: 111
Joined: 21 Apr 2013, 02:40

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by Meenalochani »

A Share

Ayyappa Temple - Sabarimalai
Harivarasanam : The lullaby to Lord Ayyappa.

The divine song “Harivarasanam” or Hari Haratmaka Ashtakam is sung when the sanctum sanctorum of the Sabarimala Ayyappa temple close for the day at night. The emotions of Ayyappa devotees in Sabarimala are beyond explanation when they hear Harivarsanam rendered in Sanctorium. The whole area will be filled with Sarana Manthra and every devotee feel the presence of Lord Ayyappa in their minds.

The Harivarasanam lyrics were composed in 1950 and written by Kumbakudi Kulathur Iyer. After serving the last meal or Athaza puja or panakam when the temple doors are about to close Kulathur Iyer used to sing Harivarasanam daily to Lord Ayyappa. The Panakam (prepared of the jaggery sirup, dry ginger, cardamom, pepper powder, and cumin-seed mixed) offered to the lord Ayyappa are distributed to the devotees. It is believed that this divine drink is an ideal medicine and health drink that overcome the severe winter cold and resist diseases.

In those days the Melshanti or the main priest used to play the flute while closing the doors of the temple. It is said that in 50s sacred sanctum used to open once in a month. During those times Sri.V R Gopala Menon a devotee from Alapuzha used to stay at Sabarimala. Sri.V R Gopala Menon known by nick name as 'Sabrimalayile Kudikidappukaran' used to sing the sweet song Harivarasanam daily. He became a great friend of Sri. Vadakatham Easwaran Namboodiri who was the then melsanthi(chief priest). Gopala Menon used to roam about in forest and one day he died.Hearing the death of this great Ayyappa devotee Sri Easwaran Namboodiri broke his heart and he sang Harivarasanam just before closing the sanctum of lord Ayyappa to pay his tribute to this departed soul.

In 1955 Swami Vimochanananda sang in his beautiful voice and popularized Harivarasanam by travelling throughout the South India.

Today, the Melshanti and the other priests stand on both the sides of Ayyappa idol and recite the Harivarasanam. While it’s been rendered one by one the priests exits the Sanctum Sanctorum without making noise. When the song is sung about halfway, the chief priest or Melshanti puts off each of the lamp in the sanctum sanctorum. As the song ends only the Melshanti will be inside the Sreekovil or Sacred Sanctorium. When the final line is sung, the chief priest closes the door of the Sanctum Sanctorum and locks it.

At present the temple plays the Harivarasanam recital by noted singer and a strong Ayyappa devotee “Ganagandharvan” K.J. Yesudas'. The Music is composed in Madhyamavathi raga by renowned music director G. Devarajan. The composition has 352 letters,108 words in 32 lines (8 stanzas).
The lyrics and meaning of Harivarasanam are as follows:

Harivarasanam Viswamohanam, Haridadhiswaram Aaradhyapadhukam, Arivimardhanam Nithyanarthanam, Hariharathmajam Devamashraye, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa.

One who is seated on the supreme Simhasana. One who enchants the Universe. One whose holy feet is worshipped by Surya. One who kills the enemies of good thought and who enacts cosmic dance every day. Oh Son of Hari And Hara,I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.

Saranakirtanam Bakhtamanasam, Bharanalolupam Narthanalasam, Arunabhasuram Bhoothanayakam, Hariharathmajam Devamashraye, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa.

One whose mind gladdens on hearing Sharana Gosham,One who is a great ruler of the Universe, One who loves to dance, One who shines in the rising Sun, One who is the master of all beings, Oh Hariharaputra Deva, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.

Pranayasathyakam Praananayakam, Pranathakalpakam Suprabhanjitham, Pranavamanidram Keerthanapriyam, Hariharathmajam Devamashraye, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa.

One whose soul is truth,One who is the darling of all souls,One who created universe, Onewho shines with a glittering Halo,One who is the abode of “OM”, One who loves songs, Oh Hariharaputra Deva, I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.

Thuragavahanam Sundarananam, Varagadhayudham Vedavavarnitham, Gurukrupakaram Keerthanapriyam, Hariharathmajam Devamashraye, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa.

One who has a pretty face One who rides a horse,One who has a pretty face,One who has the blessed mace as weapon,One who bestows grace like a teacher,One who loves songs,Son of Hari and Hara,I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.

Tribuvanarchitam Devathathmakam, Trinayanam Prabhum Divyadeshikam, Tridashapoojitham Chinthithapradam, Hariharathmajam Devamashraye, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa.

One who is worshiped by the three worlds,One who is the soul of all gods,One who is the lord of Shiva,One who is worshipped by devas,One who is who is worshipped three times a day,One whose thought is fulfilling,Son of Hari and Hara I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.

Bhavabhayapaham Bhavukavaham, Bhuvanamohanam Bhoothibhooshanam, Dhavalavahanam Divyavaranam, Hariharathmajam Devamashraye, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa.

One who destroys fear,One who brings prosperity,One who is enchanter of universe,One who wears holy ash as ornament,One who rides a white elephant,Son of Hari and Hara,I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.

Kalamrudusmitham Sundarananam, Kalabhakomalam Gathramohanam, Kalabhakesari Vajivahanam, Hariharathmajam Devamashraye, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa.

One who blesses with enchanting smile,One who has is very pretty,One who is adorned by sandal paste,One who has a pretty mien,One who is a like a lion to the elephants,One who rides on a tiger,Son of Hari and Hara,I take refuge in you Ayyappa,I take refuge in you Ayyappa.

Srithajanapriyam Chinthithapradam, Sruthivibhushanam Sadhujeevanam, Sruthimanoharam Geethalalasam, Hariharathmajam Devamashraye, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa, Saranam Ayyappa Swamy Saranam Ayyappa.

One who is dear to his devotees,One who fulfills wishes,One who is praised by Vedas,One who blesses life of ascetics,One who is the essence of Vedas,One who enjoys divine music,Son of Hari and Hara,I take refuge in you Ayyappa, I take refuge in you Ayyappa.
“Swamiye Saranam Ayyappa”.


A link to Harivarshanam sung by K.J. Jesudas is atatched belpw.

https://www.youtube.com/watch?v=SaNZ7lS4eZQ

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by vgovindan »

The irony is that Jesudas has so far, ASAIK, not been permitted entry to Sabarimala.

I also wonder as to what could have transpired for accepting tulukka nAciAr at SrI Rangam. There are many such examples.

Let us search ourselves for answers.

MaheshS
Posts: 1186
Joined: 02 Feb 2010, 22:36

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by MaheshS »

vgovindan wrote:The irony is that Jesudas has so far, ASAIK, not been permitted entry to Sabarimala.
Yesudas is allowed in Sabari Malai and has been there many a time, he is not allowed into Guruvayoor temple. Infact, anyone regardless of caste, creed etc can goto Sabari Malai, only restriction is women who are still mensturating.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by vgovindan »

Mahesh,
I stand corrected. I mixed up these two.

minisantu
Posts: 15
Joined: 21 Oct 2010, 08:28

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by minisantu »

Quite lately, whenever Dasettan sings Harivarasanam, he shares the anecdote about how a respected rasika politely corrected his diction in the term 'arivimardanam'.
The correct usage, he explains, is 'ari vimardanam' meaning destroy enemies (to be enunciated as 2 separate words).
PraNams to his divine singing and respects to his humility.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

விநாயகர் பெருமைகளும் அவதாரங்களும்.
************************************
1.ஆதி விநாயகர்
விநாயகர் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது யானைத்தலை. ஆனால் யானை முகம் வருவதற்கு முன் இருந்த மனித முகத்துடன் காட்சிதருவது நன்னிலத்துக்கு அருகில் உள்ள திலதர்ப்பணப்பதி எனும் தேவாரப் பாடல் பெற்ற
தலத்திலாகும்.
2. கற்பக விநாயகர்
சிவகங்கைச் சீமை, பிள்ளையார் பட்டி எனும் தலத்தில் மலையடியில், குடவறையில் வடக்கு நோக்கி அருளும் கற்பக விநாயகர் கற்பக மரத்தைப் போல, கேட்டதை வழங்குபவர். இரு கரங்களுடன் காட்சி தருவது வித்தியாசமான தோற்றமாகும்.
3. வெள்ளை விநாயகர்
திருவலஞ்சுழி எனும் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயத்திற்குள் நுழைந்தவுடன் வெள்ளை நிறத்தில் இந்திரனால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் ‘வேத விநாயகர்’ என்று அருளுகிறார்.
4. நேத்திர விநாயகர்
சுவாமிமலை சுவாமிநாதப்பெருமான் சன்னதி நுழையும் முன் தென்திசை நோக்கி அமர்ந்த நிலையில், வேண்டுபவர்களின் கண் நோய் தீர்ப்பதால் இப்பெயர் வந்தது.
5. கள்ளவாரணப் பிள்ளையார்
திருக்கடவூர் அபிராமி சமேத அமிர்தகடேசுவரர் ஆலயத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தரும் பிள்ளையார். அமிர்த கலசத்தை மறைத்து வைத்ததனால் இப்பெயர் வந்தது.
6.கைகாட்டி விநாயகர்
திருநாட்டியத்தான்குடி எனும் தேவாரத் தலத்தில் இறைவனை தரிசிக்க சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளே நுழைய முற்பட்ட போது அங்கே சிவபிரான் இல்லாமையை உணர்ந்து கொண்டு விநாயகரை நோக்க... சிவன், சுந்தரரோடு திருவிளையாடல் செய்வதற்காக நாற்று நடும் உழவனாக வயற்பக்கம் நிற்பதனைக் காட்டியதால் ‘கைகாட்டி விநாயகர்’ ஆனார்.
7. துணையிருந்த விநாயகர்
திரு ஆரூருக்கு அருகில் உள்ள திருப்பனையூர் எனும் சிவத்தலத்தில், பங்காளிகளுக்குப் பயந்து தன் தாயோடு இளவயதில் இவ்வூரில் தலைமறைவாகத் தங்கி வளர்ந்து வந்த கரிகால் சோழனுக்குத் துணையாய் இருந்து அருளி அவனைப் பேரரசனாக்கினார்.
8. பிரளயங்காத்த விநாயகர்
மூவரின் பாடல் பெற்ற திருப்புறம்பயம் சிவபிரானுக்கு வலப்புறம் உள்ள விநாயகர், பிரளயமாக வெள்ளம் வந்த போது காப்பாற்றினார். மேலும் சதுர்த்தி அன்று இரவு நடைபெறும் தேனாபிஷேகத்தை முழுவதும் உள்ளிழுத்துக் கொள்வது பெருஞ்
சிறப்பு.
9. படிக்காசு விநாயகர்
திருவீழிமிழலை எனும் பதிக்கு அப்பரும் சம்பந்தரும் வந்த போது பஞ்சம் நிலவியது. இறைவனைப் பாடிப் பரவியதால் இருவருக்கும் தினம் ஒரு பொற்காசு பீடத்தில் கிடைக்கும் படி செய்தார். எனவே அங்கே உள்ள தல விநாயகர் ‘படிக்காசு விநாயகர்’ எனப்படுகிறார்.
10. வாதாபி கணபதி
பல்லவ மன்னனின் தளபதியாக இருந்த பரஞ்சோதிவாதாபியில் அங்குள்ள கணபதியை வழிபட்டு, போர் செய்து வெற்றி பெற்றார். வெற்றிப் பரிசாக அங்கிருந்து கணபதியைக் கொண்டு வந்து தன் ஊரான திருச்செங்காட்டாங்குடி எனும் கணபதிசுரத்தில் வைத்து வழிபட்டார். பின் பரஞ்சோதி சிறுத்தொண்டரானார்.
11. மாற்றுரைத்த விநாயகர்
திரு ஆரூர் தியாகராசசுவாமி மேலைக் கோபுரத்தின் எதிர் குளக்கரையில் உள்ள விநாயகர். சுந்தரருக்கு, சிவன் கொடுத்த பொன் தரமுள்ளதா என்று உரைத்துப் பார்த்து சோதித்து அறிந்தார்.
12. பொய்யாப்பிள்ளையார்
‘அருணகிரிநாதரை ‘குமார வயலூருக்கு வா’ என்று முருகன் அசரீரியாகச் சொல்ல அவர் வயலூருக்கு வந்தார். ஆனால் முருகப்பெருமான் அங்கே காட்சிதரவில்லை. உடனே அருணகிரி நாதர் ‘அசரீரி பொய்யோ’ என்று உரக்கக் கூறினார். ‘அசரீரி பொய்யில்லை’ என்று சொன்ன பிள்ளையார் சுப்பிரமணியரைச் சுட்டிக்காட்டினார்.
13. பொள்ளாப்பிள்ளையார்
உளிபடாமல் உருவான பிள்ளையார் திருநாரையூரில் நம்பிக்கு கருணை செய்து அவர் தந்த பிரசாதத்தை உண்டவர்.
14. செவி சாய்த்த விநாயகர்.
திருவேதிக்குடி எனும் தேவாரத் தலத்தில் சிவனை நான்கு வேதங்களும் வழிபடும் போது தலை சாய்த்து வேதங்களைச் செவி மடுத்ததால் ‘செவி சாய்த்த விநாயகர்’ வேத விநாயகர் எனப்படுகிறார்.
15. கற்கடக விநாயகர்.
குடந்தைக்கு அருகே உள்ள திருந்து தேவன்குடி எனும் தலத்தில் நண்டு வழிபட்டதால் (கற்கடகம்) இறைவன் கற்கடகேசுவரர் என்றும் பிள்ளையார் ‘கற்கடகப்பிள்ளையார்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.
16. ஆண்ட விநாயகர்
திருஇடைமருதூரில் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை வழிபட்டு வருவதால்
[/bஆகிறார். திருநறையூர்
சித்தீசுரத்திலும் இதே பெயர் பெறுகிறார்...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share

திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் சங்கு பிறக்கும் போது என்ன நிகழும்?.

திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும் போது குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.

சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்து வைப்பார்கள். அது சமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்து விட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்று விடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அரிய நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள்.

சாதாரணமாக உப்பு நீரில் -கடலில்தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இது தோன்றும். இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.

இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஊரில்தான் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இலட்ச தீப திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02/08/16 குரு பெயர்ச்சி அன்று நடைபெற உள்ளது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று லட்ச தீபத் திருவிழா கொண்டாடப் படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்கு தீர்த்த குளக்கரையிலும் லட்சக் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும்.
இந்த திருவிழாவானது வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கரமேளா, கும்பமேளாவிற்கு இணையானது.

அம்மையும் இங்கு சுயம்புவானவள்.

ஓம் நமசிவாய. திருசிற்றம்பலம்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

சில கோவில் விதி முறைகள்.

1 ஒரு சுவாமிக்குச் செலுத்தப்பட்ட மாலையை அடுத்த சுவாமிகளுக்கு செலுத்துவது ஸ்ரீ வில்லிபுத்தூர் பெரிய கோவிலில் மட்டுமே

2 திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்துக்கு வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்

3 மூலவரே வீதி வளம் வருவது சிதம்பரம் நடராஜர்.

4 கர்பகிரகத்தின் மேல் மிக பெரிய கோபுரம் இருப்பது தஞ்சை பெரிய கோவிலில் மட்டுமே.

5 இராமேஸ்வரம் அருள் மிகு இராமநாதர் கோவிலில் மட்டுமே [ அது சிவன் கோவிலாக இருந்தும் ] தீர்த்தம் கொடுக்கப்படுகிறது

6 காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் அம்மன் சந்நிதி இல்லை.

7 மதுரை அருள் மிகு மீனாக்ஷி கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் மீன்கள் வளராது.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share

கங்கைக் கரை ரகசியங்கள்! பகுதி - 15
'கேதார்நாத் கோயில்'
'கேதார்நாத் கோயில்' இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோயில்களுள் ஒன்றாகும். இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் 'மந்தாகினி' ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் இமயமலைத் தொடரின் அடியில் அமைந்துள்ளது.
இக்கோயில் பனிபடர்ந்த மலைகளும் பனியாறுகளும் சூழ்ந்த பீடபூமி மீது அமைந்துள்ளது.
இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.
குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் உகிமத் என்னும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.
இக்கோயிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும்.
இந்தியாவிலுள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் கேதார்நாத்தில் 3584மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த ஜோதிர்லிங்கம் முக்கியமான ஒன்றாகும்.
இது திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். கேதார்நாத் பதிகம் கேதார கௌரியம்மை உடனுறை கேதார நாதர் என்றே தமிழ் ஆன்மீகம் கேதார்நாத் சிவனை வழிபடுகிறது.
திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே கேதார்நாத்தை வழிபாடு செய்ததாக அவர்தம் பாடல்கள் கூறுகின்றன.
இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது. இக்கோயில் எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரரின் வருகைக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது.
வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
கேதார்நாத், 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிகவும் பாதிப்படைந்தது. கோயிலைச் சுற்றி இருக்கும் நகர்ப்புரங்கள் பெரும் சேதமடைந்தாலும், கோயில் வளாகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
கோயிலைச் சுற்றி ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் சரி செய்யப்படும்வரை கோயில் மூடப்படும் என்று உத்தராகண்ட் முதல்வர் அறிவித்தார்.
கோயில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு, 2014 மே மாதத்தில் திறக்கப்பட்டது.
இக்கோயில் ஒரு கல் கோயில் ஆகும். கோயிலுக்குள் நுழைந்ததும் பாண்டவர்கள், கிருஷ்ணர், கருவறைக்கு எதிரே சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், சிவபெருமானின் காவலாளியான வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளைக் காணலாம்.
கோயில் கருவறையினுள் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இக்கோயிலின் முகப்பு மேற்சுவரில் ஒரு மனிதனின் தலை செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதே போன்ற அமைப்பு, கேதார்நாத்திற்கு அருகில் உள்ள, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த கோயிலிலும் உள்ளது.
ஆதி சங்கரர் இக்கோயிலோடு சேர்த்து உத்தராகண்டிலுள்ள பல கோயில்களை புனரமைத்தார்.
கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் வீரசைவ ஜங்கம் என்ற சமூகத்தை சேர்ந்தவர்தான் கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஆனால் பூசைகளை தலைமை அர்ச்சகர் செய்வதில்லை. அவரின் வழிகாட்டலின்படி அவரது உதவியாளர்களே பூசைகளை செய்கின்றனர்.
குளிர்காலத்தில் கோயில் விக்கிரகத்தோடு தலைமை அர்ச்சகரும் உகிமத்திற்கு செல்வார். கேதார்நாத் கோயிலில் ஐந்து முக்கிய அர்ச்சகர்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஓராண்டுக்கு தலைமை அர்ச்சகராக இருப்பார்கள்.
பூசைகளின் போது கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வழக்கம் பல நூறாண்டுகளாகத் தொடர்கிறது.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share

செங்கல்பட்டில் திருப்பதி. ஆம், ஆச்சரியம்... ஆனால் உண்மை.

இனிமேல் யாரும் திருப்பதி பெருமாளை 5நிமிடம், 10 நிமிடம் என தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம்
அடையாமல் இருங்கள்.
நேராக செங்கல்பட்டிற்கு
செல்லுங்கள், 50ம் எண்
கொண்ட திருப்போரூர் செல்லும்
அரசு பேருந்தில் ஏறி திருவடிசூலம் என்னும் மிக அழகிய குக்கிராமத்தில் இறங்குங்கள். 2 கிலோமீட்டர் நடக்க வேண்டும். வழியில்
மிகப் பழமையான திருஞானசம்பந்தரால்
பாடல் பெற்ற தொண்டை
நாட்டு திருத்தலமான இடைச்சுரநாதர்
(சிவன்) ஆலயம் வரும். இவரையும்
அம்பாளையும் தரிசித்து விட்டு இடது புறமாக மறுபடியும் நடங்கள். மலை ஒன்று ஆரம்பமாகும். அப்படியே வலது புறம் திரும்பி நடங்கள். நீங்கள் 7 அழகிய மலைகளைக்
காண்பீர்கள். உங்கள் கண்களுக்கு இரு
சிறிய கோயில்கள் தென்படும். இடது
புறமாக ஒரு சாலை பிரியும், அதைப் பின்பற்றி சென்றீர்கள் என்றால்...
உலகிலேயே மிக உயரமான 51 அடி
அற்புதமான தரிசனம் தரும் கருமாரி
அம்மனை சேவிக்கலாம். அப்படி ஒரு அழகு, தெய்வாம்சம், காண கண்கள் கோடி
வேண்டும். மிகவும் விஸ்தாரமான இடத்தில்,
கோழியும், கெளதாரியும், வான்கோழியும்
சுற்றி திரியும் இயற்கை எழில் கொஞ்சும்
அழகுள்ள இடத்தில் இந்த கருமாரி
வீற்றிருக்கிறாள். நீங்கள் உங்களையே
மறந்துவிடுவீர்கள்.
கருமாரி அன்னையின் பின்புறமே அவர்
அண்ணன் பெருமாள் ஸ்ரீ
நிவாசனாக மிகப் பெரிய அளவில்
வீற்றிருக்கிறார். திருப்பதி சென்று
சரியாக கடவுளை காண முடியாத
ஏக்கத்தில் இருப்பவர்கள் இங்கே நம்மூரிலேயே, சென்னைக்கு அருகிலேயே, செங்கல்பட்டிலிருந்து ஒரு 10 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த அதி அற்புத தரிசனம் செய்யலாம். அண்ணனையும், தங்கையையும் ஒரு சேர காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இவர்கள் இருவரையும் தரிசித்து விட்டு, இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் அஷ்டபைரவர் கோயிலைப் பார்க்காலாம். இங்கே உலகத்தில் வேறெங்கும் காணமுடியாத மிகப்பெரும் கோயிலினுள் அஷ்டபைரவர்களை தரிசிக்கலாம். கோயில் நுழைவு
வாயிலில் பௌர்ணமி குகை கோயில் உள்ளது. ஆனால் இந்த குகை கோயிலில் இருக்கும் சிவனைக்
காண நீங்கள் பௌர்ணமிக்கு 3 நாட்கள்
அல்லது பூரட்டாதிக்கு 3 நாட்கள் முன்பே பதிவு செய்துவிட்டுத் தான் செல்ல முடியும். சிவனை இங்கு பாதாளத்தில் காணலாம். முக்கிய குறிப்பு - சிவனைப் பார்க்க வேண்டுமெனில் நீல நிற ஆடைஅணிந்து தான் செல்ல வேண்டும்.

சிவனடியார்களே, சிவபக்தர்களே, தயவு
செய்து இந்தக் கோயிலைப் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடத்தில் சொல்லவும். இந்தப் பதிவை அதிகம் பகிரவும்.

வசதியுள்ளவர்கள் கார், பைக், வேன் போன்ற வாகனங்களில் வருகிறார்கள்.
வசதியில்லாதவர்கள் நடந்துதான்
வரவேண்டும். இது ஒரு குக்கிராமம்
என்பதால் ஆட்டோவோ, ஷேர் ஆட்டோவோ இல்லை.

ஆள் அரவவமற்ற பகுதி என்பதால்
காலையில் சென்று மதியமோ அல்லது
மாலை இருட்டுவதற்குள் திரும்பி
வந்து விடுவது போல் உங்கள் பிரயாணம்
இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

சைவமும், வைணவமும் ஒன்றாக கலந்து ஒரு சுற்றுலா சென்ற மகிழ்ச்சியும் கிடைக்கும்...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

நான் அறிந்த வரையில் சாயா சுவர்ச்சிலம்பா சமேத சூரியநாராயண சுவாமி என்று தான் குறிப்பிடுவது வழக்கம். இங்கே சுவத்சலாம்பா வை மகளாக சி த் தரித்து உள்ளது விளங்க வில்லை.
வி ள க் க ம் தேவை

A share

🏿அனுமனின் திருமணக்கோலம்!!!!!!

கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் அனுமனுக்குக் கற்றுத்தந்தார் சூரியன்.

அனைத்தையும் கற்றுணர்ந்த அனுமன் “நவவியாகரண பண்டிதன்’ என்ற பட்டமும் பெற விரும்பினான். ஆனால், ஒரு குறிப்பிட்ட வியாகரணத்தைக் கற்கவேண்டுமானால் குடும்பஸ்தனாக இருக்கவேண்டும் என்பது நியதி. ஆகவே, அனுமன் மணம் புரியவேண்டும்.

சூரியதேவன், நவவியா கரணத்தை முழுவதும் கற்றுக் கொடுக்க விரும்பினார். அதற்காக தன் மகள் சுவர்ச்சலாதேவியை தன் மாணவனுக்குத் திருமணம் முடித்துவைத்தார் என்கிறது சூரியபுராணம்.

பிரம்மச்சாரி என்று பெரும்பாலோர் போற்றும் அனுமனின் திருமணக்கோலத்தை, சென்னை- செங்கல்பட்டு சாலையில், தைலாவரம் என்னும் திருத்தலத்திலுள்ள ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர் கோவிலில் தரிசிக்கலாம். இங்கு மூலவராக சுமார் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீஜெயவீர ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். இதே கோவிலில் தனிச்சந்நிதியில் உற்சவராக சுவர்ச்சலாதேவி யுடன் பத்மபீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்திய திருக்கோலத்தில், சுவர்ச்சலா சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சனேயர் என்ற திருநாமத்தில் பக்தர்கள் வேண்டுவதை அளித்து மகிழ்விக்கிறார். காணக்கிடைக்காத அரிய ஸரீகல்யாண அஞ்சனேயர்-

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share

ஒரே கோயிலில் ஒன்பது அதிசயங்கள்! – மெய்சிலிர்க்கும் ஆன்மீகத் தகவல்கள்

அதிசயம் ஒன்று:

அது ஒரு மகாப்பிரளய காலம். பிரளயத்தின் முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும். பூமியெங்கும்

மழை வெள்ளமெனகொட்டியது. உயிரினங்கள் அழிந் தன. ஆனால், அவ்வளவு வெள்ளப்பெருக்கிலும், பூ லோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது. காரணம் அங்கு இறையருள் இருந் தது. அந்தத் தலமே தென்குடித்திட்டை எனும் திட்டை. பேரூழிக்காலத்திலும், பெரு வெள்ளத்திலும் மூழ்காத திட்டை தலம் ஒரு அதிசயமே.

அதிசயம் இரண்டு:

பரம்பொருள் ஒன்றே. பலவல்ல! சத்தியம் ஒன்றே இரண்டல்ல!! என்பது வேதவாக்கு அப்பரம்பொருள் தன்னிலிருந்து ஒரு பகுதியை சக்தியைப் பிரித்து உமாதேவியைப் படைத்தார். திட்டை திருத் தலத்தில் இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்த ருளி அருள்பாலிக்கி றார்.

அம்மன் சந்நிதிக்கு மேலே மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கட்டங்கள் விதானத்தி ல் செதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த ராசிக்காரர் கள் தங்கள் ராசியின்கீழ் நின்று அம்மனைப் பிரார்த்திக்கும்போது அம்மன் அவர்கள்தோ ஷம் நீங்க அருளுகின்றார். பெண்களுக்கு ஏற்படும் திருமணத்தடை, மாங்கல்யதோஷ ம் நீங்க இந்த அம்மன் அருளுவதால் மங்களா ம்பிகை எனப்புகழப்படும் உலகநாயகி இரண்டாவது அதிசயம்.

அதிசயம் மூன்று:

பிரளயத்தின் முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்க உமையுடன்
சேர்ந்து உமையொருபாகன் அண்டத்தைப் படைத்து, அதனைப்பரிபாலன ம் செய்ய மும்மூர்த்திகளையும் படைத்தனர். ஆனால் மாயைவயப்பட்டிருந்த மும் மூர்த்திகளும் பெருவெள்ளத்தால் மூடி பேரிருள் சூழ் ந்திருந்த இந்தப் பிரபஞ்சத்தைக் கண்டு பயந்தனர்.

அலைந்து திரிந்து பெருவெள்ளத்தின் நடுவில் பெரு ந்திரளாக இருந்த திட்டையை அடைந்தனர். மாயை நீங்க வேண்டி இறைவனைத்தொழுதனர். இறைவன் அவர்கள் அச்சத்தை ப்போக்க உடுக்கையை முழக்கினார். அதிலிருந்துதோன்றிய மந்திர ஒலி கள் மும்மூர்த்திக
ளையும் அமைதியடைச் செய்தது.

பேரொளியாக ஒரு ஓடத்தில் ஏறி வந்த இறை வன் அவர்களுக்கு காட்சி தந்தார். மும்மூர்த்தி களின் மாயையை நீக்கி அவர்களுக்கு வேத வேதாந்த சாஸ்திர அறிவையும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய 3 தொழில்களையு ம் செய்ய உரிய சக்தியையும், ஞானத்தையும் அருளினார். மும்மூர்த்திக ளும் வழிபட்டு வரம்பெற்றது மூன்றா வது அதிசயம்.

அதிசயம் நான்கு:

மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில்சந்திரக்காந்தக்கல், சூரியக்காந்
த க்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழி யும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்துகொண்டேவந்த சந்திரபகவான், திங்க ளூர் வந்து கைலாச நாதரை, வணங்கி தவம் இருந்தார்.

கைலாசநாதரும், சந்திரனின் சாபம்நீக்கி மூன்றாம்பிறையாக தன் சிரசில் சந்திரனை அணிந்து கொண்டார். திங்களூரில் தன் சாபம் தீர்த்த சிவபெரு மானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடனை செலுத்துகிறார். எப்படி என்
றால் இறைவனுக்கு மேலே சந்திர காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிரு ந்து ஈரப்பத்தை ஈர்த்து ஒரு நாழி கைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேக ம் செய்கிறார்.

24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒருமுறை இறை வன்மீது ஒருசொட்டுநீர் விழுவதைஇன்றும் காணலா ம். உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது. இந்த ஆலயத்தில் அமைந்து ள்ள நான்காவது அதிசயம் இது.

அதிசயம் ஐந்து:

நம சிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலய த்தின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஐந்தாவது லிங்கமாக மூலவராக ராமனின் குலகுரு வான வசிஷ்டர் பூஜித்த வசிஷ்டேஸ்வரர் உள்ளார்.

எனவே, இது பஞ்சலிங்க ஸ்தலமாக உள்ளது. பஞ்சபூதங்களுக்கும் தனித் தனியே பாரதத்தில் தலங்கள் உண்டு. ஆனால் ஒரே ஆலயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் ஐந்து லிங்கங்கள் அமைந் திருப்பது ஐந்தாவது அதிசயம்.

அதிசயம் ஆறு:

எல்லா ஆலயங்களிலும் மூலவராக உள்ள மூர் த்தியே பெரிதும் வழிப்பட ப்பட்டு வரம்தந்து தல நாயகராக விளங்குவது வழக்கம். ஆனால் திட் டைத்தலத்தில் சிவன், உமை, விநாயகர், முருக ன், குரு, பைரவர் ஆகிய ஆறுபேரும் தனித்தனி யே அற்புதங்கள் நிகழ்த்தி தனித்தனியாக வழி படப்பட்டு தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். எனவே, பரி வார தேவதைகளைப்போல அல்லாமல் மூலவர்களைப்போலவே, அருள் பாலிப்பது ஆறாவது அதிசயம்.

அதிசயம் ஏழு:

பெரும்பாலான ஆலயங்கள் கருங்கல்லினா ல் உருவாக்கப்பட்டிருக்கும். பழமையான ஆலயங்கள் சில செங்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.
ஆனால் கொடிமரம், விமானங்கள், கலசங்கள் ஆகிய அனைத்தும் கருங்கற்களினால் உருவாக்கப் பட்டுள்ளது இங்கு மட்டுமே. உலகில் வேறு எங்கும் இத்தகைய ஆலய அமைப்பு இருப்பதாக தெரிய வில்லை. எனவே இது ஏழாவது அதிசயம் என்றால் மிகையாகாது.

அதிசயம் எட்டு:

பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கு சென்றும் தோஷம் நீங்கப் பெறவில்லை. இதனால் திட்டைக்கு வந்து வசி
ஷ்டேஸ்வரரை ஒரு மாதம் வரை வழிபட்டுவந்தார். வசிஷ்டேஸ்வரர் அவர் முன்தோன்றி என் அம்சமான உன் தோஷம் இன்றுடன் முடிந்துவிட் டது.

நீ திட்டைத்திருத்தலத்தின் காலபைரவனாக எழுந்தருளி அருள் புரியலாம் என்றார். அன்று முதல் இத்தலம் கால பைரவரின் ஷேத்திரமாக விளங்கி வருகிறது. ஏழரை ச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனியால் பாதிக்கப்பட்டவர் கள் தேய்பிறை அஷ்டமியில் இந்த பைரவரை அபிஷேக ம் அர்ச்சனை செய்து வழிபட்டால், சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலகு ம். இங்கு எழுந்தருளி உள்ள பைரவர் எட்டாவது அதிசயம்.

அதிசயம் ஒன்பது:

நவக்கிரகங்களில் மகத்தான சுபபலம் கொண்டவர். குருபகவான் ஒருவரே. உலகம் முழுவதும் உள்ள தன தான்ய, பணபொன் விஷயங்களுக்கு குருவேஅதிபதி. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இட ங்களை தன்பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர்.

மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களி னால் வரும் தோஷங்களை தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர் குருபகவான். எனவே, குருபார்க்க கோடி நன்மை என்ற பழ மொழி ஏற்பட்டது.

இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் எங்கும் இல்லாச் சிறப்போடு நின்ற நிலையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

இவருக்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழாவு ம், அதனையொட்டி லட்ச்சார்ச்சனையும் குருபரி கார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வரு கின்றன. இங்கு எழுந்தருளி உள்ள ராஜ குரு பகவான் ஒன்பதாவது அதிசயம்.

தஞ்சாவூரிலிருந்து 12கிமீதஞ்சையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள திட்டை கிராமத்தில் உள்ளது வசிஷ்டேஸ்வரர் கோயில். தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து இங்கு அடிக்கடி டவுன் பஸ் செல்கிறது. திட்டை யில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு வருடம் தோறும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் நாடெங்கும் இருந்து ஏராள மான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share
வாழ்வில் ஒருமுறையாவது
சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம்..!

உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் என போற்றி புகழப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்றான உத்திரகோசமங்கை.

ஆண்டவனின் அடி முடி எப்படி அறிய முடியாததோ அப்படித்தான் இந்தக் கோவிலின் பெருமையும், சிறப்பும்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி,
காசியில் இறந்தால் முக்தி.
அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள். இங்கே உத்தர கோச மங்கை மண்ணை மிதித்தாலே முக்தி.

ஆர் அறிவார்
எங்கள் அண்ணல் பெருமையை
ஆர் அறிவார் இவர் அகலமும் நீளமும்
பேர் அறியாத பெருஞ் சுடர் ஒன்று அதன்
வேர் அறியாமல் விளம்பு கின்றேனே…

இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.

ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.
உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.

இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

இங்கு மூன்று மூர்த்தங்கள்
மங்களேச்சுவரர், மங்களேசுவரி, ஆடல்வல்லான், மூர்த்தியும் இங்கே ( நடராசர்) மரகதப் பச்சை , தீர்த்தமும் இங்கே பச்சை,
விருட்சமும் இங்கே பச்சை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.

கோவிலின் தொன்மை நம்மை வியக்க வைக்கிறது….

மகா பாரதப் போர் 5100 ஆண்டுகளுக்கு
முன்பு நிகழ்ந்தது. (கிமு 3100) அப்போதுதான் பரீஷீத்து மகராசன் காலத்தில் கலிகாலம் பிறந்தது. அந்தக் காலத்தில் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

அதற்கும் முந்தியது இராமாயணக் காலம்
இலங்கேசுவரன் இராவணன் இங்கே வந்து வணங்கிச் சென்றிருக்கிறான்.. இங்குள்ள மங்களேச்சுவரர் மண்டோதரிக்கு அருளியவர்.

உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத் தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.

பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்

மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

இங்குள்ள அர்ச்சகர் கூற்றுப் படி
இராவணனுக்கும், மண்டோதரிக்கும் நடந்த திருமணமே மங்களேச்சுவரர் சன்னதியில் தான் நடந்ததாம். மங்களேச்சுவரரே அதை முன்னின்று நடத்தியதாகவும் நம்பப் படுகிறது.

இராவணனைப் போல சிவ பக்தனைப் பார்க்கவே முடியாது. இந்த ஊர் மங்களேசுவர ராகிய சிவ பெருமான் இராவணன் கையில் பால சிவனாகத் தவழ்ந்த கதையும் ஒன்று உண்டு. ஆக அவன் காலத்திலும் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

வலை வீசி விளையாண்ட படலம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று கேட்பதை விட
ஏ.பி.நாகராசனின் திருவிளையாடல் சினிமாப் படம் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் உங்களுக்கு நன்றாக விளங்கும். அதில் வரும் கடைசிக் கதைதான் இந்த வலைவீசி விளையாண்ட படலம்.

அது நிகழ்ந்த இடம் வேறெங்கும் இல்லை…
இங்கே தான்...

இங்கே இப்போது கோவில் வாசல் உள்ள இடத்தில்தான கடல் இருந்தது. இப்போது அதே கடல் பின் வாங்கிப் பின்வாங்கி ஏர்வாடிப் பக்க்கம் போய்விட்டது
இங்குதான் சிவபெருமான் வலைவாணனாக உருவெடுத்து வந்து சுறாவை அடக்கினார்.
அவர் மணந்த கொண்ட மீனவப் பெண்தான் மங்களேசுவரி…

இப்போது நமக்கு அருள் பாலிக்கும் அம்மன். அவளுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை அறையில் ஆடிக் காட்டினார். பிரணவ மந்திரத்தின் பெருளை உபதேசமும் செய்தார். உத்திரம் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்ததால் இந்த இடம் உத்தர கோசமங்கை ஆனது.

இதுதான் கோவில் உருவான வரலாறு.

கோவில் அமைப்பு

முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது. மேலும் பொதுவாக எந்தச் சிவாலயங்களிலும் பூக்களைச் சார்த்தி வழிபடும் போது சாபம் பெற்ற ஒரு பூவை மட்டும் ஒதுக்கி விடுவார்கள்…

அதுதான் தாழம் பூ.

நான் முகன் முடி கண்டதாய் பொய் சொன்ன அதே பூ, நான் முகனுக்கு வழிபாடு அற்றுப் போனது போல் சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும் உரிமையை இழந்த அதே பூ இங்கு மட்டும் தாழம் பூ சாத்தும் வழக்கம் அற்றுப் போகமல் இன்றும் தொடர்கிறது,
பொய் உரைத்தோர்களையும் மங்களேச்சுவரர் மன்னிப்பார் என்பதைக் காட்ட மட்டும் அல்ல,
பிரமனும் பெருமாளும் அடி முடி தேடியது எந்த யுகம் அதற்கும் முன்னே இந்தக் கோவில் இருந்திருக்கிறது என அதன் தொன்மையை காட்டவும்தான். இடதுபுறம் உள்ள கோபுரம். மொட்டையாக காணப்படுகிறது.

நடராசருக்கு வருடம் ஒரு முறை மட்டுமே இங்கு அபிஷேகம் செய்யப்படும்.அன்று மட்டும் அவரைக்களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம். அதுதான் மார்கழித் திங்கள் அன்று வரும் திருவாதிரை மீதி நாட்களில் பூரா அவர் சந்தனக் காப்பிட்ட கோலத்தில் தான் இருப்பார். மார்கழி மாத திருவாதிரை க்கு முதல் நாள் பழைய சந்தனம் களையப் படும். 32 வகை அபிஷேகங்கள் அதி அமர்க்களமாக நடக்கும். அன்று இரவே புதிய சந்தனம் சாத்தப் படும்.

ஆண்டு முழுக்க ஆடல் வல்லான் திரு மேனியில் அப்பி இருந்த சந்தனம். களையப் பட்ட பின் அதைப் பெற பக்தர்களிடம் ஆவலும் போட்டாப் போட்டியும் அதிகம். எங்கும் போலவே இங்கும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்…! இந்தச் சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது. அனைத்து நோய்களையும் தீர்க்க்க வல்லது என பக்தர்கள் நம்புகின்றார்கள்.

பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.

ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

இத்தலத்திற்கு எப்படி செல்வது....
மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை இருப்புப்பாதை சந்திக் கடவைத் (Railway level crossing) தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

ஓம் நமச்சிவாய

🙏🕉🙏🕉🙏🕉

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share

நம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்தான் நம் நாட்டிலுள்ள கோயில்களில் மிகப் பெரிய கோயிலாகும்!

திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.

இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.

அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.

திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு. கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்). இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டு மானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.

தல வரலாறு :

ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.

முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன. இவை “சப்தவிடங்கத்தலங்கள்’ எனப்படுகின்றன. “சப்தம்‘ என்றால் ஏழு. திருவாரூரில் “வீதி விடங்கர்’, திருநள்ளாறில் “நகர விடங்கர்’, நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்’, திருக்குவளையில் “அவனி விடங்கர்’, திருவாய்மூரில் “நீலவிடங்கர்’, வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்’, திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்’ என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன. இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை “தியாகராஜர்’ என்பர்.

வழிபாடு நேரம் :
காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி ,பால் நிவேதனம்
காலை 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
காலை 8 மணி - முதற் கால பூஜை
மதியம் 11.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
பகல் 12 மணி - உச்சிக்கால பூஜை
பகல் 12.30 மணி - அன்னதானம்
மாலை 4 மணி - நடை திறப்பு
மாலை 6 மணி - சாயரட்சை பூஜை
இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை
பிரதான மூர்த்திகள் :
திருவாரூர் ஆலயத்தின் மூலவர் வன்மீகர். அவர் அருகே அன்னை சோமகுலாம்பிகை இருக்கிறாள். இறைவன் சூரிய குலம்; அம்பிகை சந்திர குலம். வன்மீகரின் வலப்பக்கத்தில் - தனிச் சந்நிதியில் ஸ்ரீதியாகராஜர்

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில் திருவாரூர் தியாகராஜர் கோயில்!!!!

ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள்.i
பூரி ஜெகன்னாதர் கோயிலின்
எட்டு அற்புதங்கள்.i
1. கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
2. கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சனசக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.
3. பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவுமுழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும், ஆனால் பூரியில் இதற்க்கு நேர் எதிராக நடக்கும்.
4. இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில்
எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.
5. இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை.
6. இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும்
ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை மீந்து போய் வீணானதும் இல்லை.
7. இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும் போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.
8. சிங்கத்துவாராவின் முதல்படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும்
எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும்.
இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.....

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by Pratyaksham Bala »

.
ஏன் இந்த மிகை?
அலப்பல் பல இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
வீண் ஆரவாரம் என்றே ஒதுக்க வேண்டும்.

(ஆபத்து : இருவர் சாடக் கூடும் !)

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by Pratyaksham Bala »

.
Myth: The shadow of the main dome of Jagannath temple is not visible, whatever be the time of day.

MYTH BUSTED !

When there is light, there should be shadow. Shadows of small objects are easily seen, whereas shadows are huge structures are hardly noticed. This is the case with the Puri Temple; people just don’t see the shadow !

Please check this DroneVideo taken by Artem Aminov :-
http://travelbydrone.com/play/2880
The shadow of the main tower is clearly visible from 45 sec. onwards.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by Pratyaksham Bala »

.
Myth: Irrespective of where you stand in Puri, Sudarshana Chakra on top of the temple will always be facing you.

The Chakra is basically a disc. Whereas from front and back one can see the chakra in a circular or oval shape, from the sides one can see only the edge of the Chakra. In the DroneVideo link given below, please check from 5.28 to 7.25; and from 6.33 to 6.39, where only the edge of the chakra is visible.

DroneVideo taken by Artem Aminov :-
http://travelbydrone.com/play/2880
.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by Pratyaksham Bala »

.
Myth: No birds or aircrafts fly above the Jagannath temple in Puri.

The height of puri temple is 214 ft. Though many birds can fly up to this height, most of them prefer to fly low to avoid exposure to higher winds or to escape from predatory birds. A few birds do fly around the top, but these are not noticed. Check the following sites for birds flying around the top:

https://www.youtube.com/watch?v=n7mX43iPYRE
Check at 4.20 to 4.26; also at 3.58, 4.14, and 4.29.

https://www.youtube.com/watch?v=fefyYXxhkQ0
Check at 0.41-0.44, 1.41-42,

And there are several migratory birds flying far above 10000 ft. When a good number of such birds fly above Puri temple how can anyone notice them?

Similarly, Aircrafts flying at, say, 30000 ft. cannot be seen from ground level. A few planes may be flying above Puri temple daily !
.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share



         விண்ணில் தாரகனை எதிர்த்தவர்!

சென்னைக்கருகே  காஞ்சிபுர வட்டத்தில்,  மிக முக்கியமான ஒரு சுப்ரமணியசுவாமி கோவில்  திருப்போரூரில் இருக்கிறது.   சோழர்  பல்லவ ராஜாக்கள்  காலத்தை சேர்ந்த கோவில்.  2ம்  நரசிம்ம பல்லவன் (கி.பி.691) கால கல்வெட்டு மண்டபத்தூண்கள் இரண்டில் உள்ளது.  முதலாம் குலோத்துங்கன் சோழன் கல்வெட்டு  (கிபி 1076) இவ்வூரை  ''ஜெயங்கொண்ட சோழ மண்டல ஆமூர் கோட்டம் குமிழி நாட்டு திருப்போரியூர் சுப்பிரமணிய தேவர்''  ஆலயம் என்கிறது.

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவிலில்  சந்நிதிகள் தந்தைக்கு உபதேசம் செய்த ப்ரணவமந்த்ரத்தை  ''ஓம்'' எனும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது ஆச்சர்யம்.

தேவசேனாபதியாகி  சூரனை எதிர்த்து அவன் சக்திவாய்ந்த சகோதரன் தாரகாசுரனை வதம் செய்த கோலத்தில் கந்தசுவாமி இங்கே காட்சி அளிக்கிறார்.  ஆகவே தாரகாபுரி என்ற பெயர் நாளடைவில் திருப்போரூராகியது என்பார்கள். இன்னொரு பெயர் சமராபுரி.  கந்தசஷ்டி கவசத்தில்  ''சமராபுரிவாழ் சண்முகத்தரசே'' என  பாலதேவராய சுவாமி வர்ணிக்கிறார்.

இக்கோவில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார்.

சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோவில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது.

இத்தலத்தில் முருகன் சிலை கண்டறியப்பட்டபோது, அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை தருவதாக ஐதீகம்.

ஷண்முகனுடன்  அசுரர்கள் யுத்தம் செய்யும்போது மாயையில் மறைந்து  தாக்கினார்கள்.  ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும்  அவர்களை  முருகன் கண்டு சம்ஹாரம் செய்ததால் இந்த இடம் ''கண்ணகப்பட்டு (கண்ணில்  அகப்பட்டு)   என்று  திருப்போரூர் அருகில் உள்ளது.

சிதம்பர சுவாமிகள்   மதுரை மீனாட்சி சொக்கநாதரை அனவ்ரதம் த்யானிப்பவர்.   மீனாட்சி கலிவெண்பா பாடியவர்.  அவரது த்யானத்தில்  ஒரு அழகிய மயில்  தோகை விரித்தாடியது . கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி கட்டளை இட்டாள்:

‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் உள்ளது. அங்கே குமரக்கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்து. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுப
வர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருள, திருப்போரூர் வந்து  கந்தசுவாமி திருக்கோவிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் மகான் சிதம்பர சுவாமிகள்  நிர்மாணித்தார்.   அவருடைய  திருமடம் அருகே  உள்ளது.

சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் வெளிப்பட்டு,  சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை   திருடர்கள் திருப்பணிக்கான பொருள்களை திருட முயன்று உடனே கண்  பார்வை இழந்தனர்.  அவர்கள் பார்வை இழந்து கதறி சிதம்பர சுவாமிகளை வணங்கி மீண்டும் கண் பார்வை பெற்றனர்.  நன்றியோடு  தாங்கள் களவாடிய தங்கம், வெள்ளி, காசு,  பொருட்களை திருப்போரூர் ஆலய திருப்பணிக்கு கொடுத்து விட்டு சென்றனர்.

இந்தப்பகுதியை அப்போது  ஒரு நவாப் ஆண்டு வந்தான். அவன்  மனைவிக்கு  தீராத வயிற்று வலி.  நவாப்  சிதம்பர ஸ்வாமிகளை வேண்டி   அவர் முருகன் அருளினால்  அவன் மனைவிக்கு திருநீறு பூச,  அவளுக்கு உடனே வலி நீங்கி,  நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் கட்டிக்கொண்டிருக்கும்  முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நில தானம் வழங்கினான்.  அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில்..ஆற்காடு நவாப் திருவுருவ படம் இங்கே   உள்ளது

ஆலயத்தின் தெற்கே ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கை.  திருக்குளத்தில்  நீராழிமண்டபம். குளத்தில்  8 கிணறுகள். ஆகவே,  வற்றாத நிலை. தைப்பூசவிழாவில் பிரமாதமாக தெப்போற்சவம் நடக்கும்.

கிழக்குப் பார்த்த ராஜகோபுரம்  கருவறையில் முருகப்பெருமான் வள்ளி– தெய்வானையுடன் கிழக்கு நோக்கி  காட்சி தருகிறார்.  கீழே ஒரு சிறு பீடத்தில் கந்தசுவாமி   இங்கே   சுயம்புமூர்த்தி. பிரதான பூஜைகள் செய்ய  சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். அபிஷேகம் கிடையாது.  விசித்திரமாக  இங்கே  முருகன்   பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக  விளங்குகிறார்.

கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக்கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜா, வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் உள்ளன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், 'உபதேச மூர்த்தி'' சன்னிதிகள்.

சிவபெருமானது மடியில், தந்தையின் திருமுகத்தைப் பார்த்தபடி முருகன் அமைந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புத திருஉருவம் தான் ''உபதேச மூர்த்தி''.
உபதேச மூர்த்தி விக்கிரஹத்திற்கு மரிக்கொழுந்து சாத்தி, நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமி வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளார். தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபடுவோர்க்கு  எதிரிகள், பகைவர்கள் கிடையாது..

வெளி  பிராஹாரத்தில் விநாயகர்,சனீஸ்வரர் சந்நிதிகள்.  சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகலும்.

ஸ்தல விருக்ஷம்  வன்னி மரம்.  அருகே வன்மீகநாதர், புண்ணியகாரணி அம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வன்னிமர விநாயகர், இடும்பன், சூரியன் சன்னிதிகளும் உள்ளன. இங்கே  பைரவருக்கு  நாய் வாகனம் இல்லாமல் தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் காண்கிறார்..

திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் எல்லாம் இங்கிருந்து சுமார் 14 கி. மீ.தான்.

'' திருப்போரூர் சந்நிதி முறை'' என்று  சிதம்பர சுவாமி 762 பாடல்களை முருகன் மீது பாடியுள்ளார்.வள்ளலார் பாம்பன் சுவாமிகள், சந்தானலிங்க சுவாமிகள், அருணகிரிநாதர்  பாடல்கள்  பெற்ற ஸ்தலம். .

விநாயகர் இங்கு கணநாதனாக முன்புற பகுதியிலேயே கிழக்கு நோக்கி  அமர்ந்திருப்பதால் அவரை வணங்கிய பின்  தம்பி கந்தசாமியை  ராஜகோபுரம் வழியாக கருவறைக்கு சென்று வணங்கவேண்டும் . அருகே  சிதம்பர சுவாமி சந்நிதி. பெரிய வட்ட வடிவிலான மண்டபம்.   கொடிமரம் மயில் வாகனம் பலிபீடம் உள்ளது.    24 கால் மண்டபம் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறத்தில் தெய்வயானை சந்நிதி . இடது புறத்தில் கருவறை மூலவரான முருகன் வள்ளி தெய்வயானை விக்கிரஹங்களுக்கு  வில்வமாலை இங்கேயே தொடுக்கிறார்கள். கடைகளில் விற்கும் மற்ற மாலைகள் சாற்று வதில்லை.

உள்   பிராகாரத்தில் வடகிழக்கில் சிதம்பர சுவாமிகள் அமைத்துள்ள ஸ்ரீசக்கர யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதில் விநாயகர், வள்ளி– தெய்வானையுடன் கூடிய முருகர், சிவன், உமையவள், சண்டேசர், அஷ்டதிக் பாலகர், பைரவர்களுக்கு உரிய மந்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.. கூர்மம், அஷ்டநாகம், அஷ்டகஜங்கள், கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இச்சக்கரம் அமைந்துள்ளது. தினமும் இதற்கு பூஜைகள். விசேஷகாலங்களில் சிறப்பு  பூஜை.

கோயில் நேரம்:  காலை 7 மணிக்கு - நண்பகல் 12.30 மணி-   மாலை 4.30 மணி-இரவு 8.30 மணி வரை.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share

‘பஞ்ச குரோச தலங்கள்’
ஸ்ரீ பெட்டி காளியம்மன்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
கும்பகோணம்_கருப்பூர்_பெட்டிகாளி
#குறை_தீர்க்கும்_கோயில்கள்

‘கஷ்டமெல்லாம் தீரும்
பெட்டிக்காளியின் அருளால்’

கும்பகோணம் - சென்னை மார்க்கத்தில், கும்பகோணத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது கொரநாட்டு கருப்பூர்.

இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்தான், ஒரு பெட்டிக்குள் அருள்பாலிக்கிறாள் பெட்டிக் காளி அம்மன். மறக்கருணையோடு தீவினைகளையும், தீய சக்திகளையெல்லாம் சுட்டெரிக்கும், இந்த அம்பிகை, அறக் கருணையோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கிறாள்.

இந்த அம்பிகை இந்தத் தலத்தில் குடியேறிய கதை சிலிர்ப்பானது.

‘‘சுந்தரரால் பாடப் பெற்ற வைப்புத் தலம் இது; புராணப் பெயர் ‘திருப்பாடலவனம்’. முற்காலத்தில் பாதிரி மரங்கள் அடர்ந்திருந்ததால் இந்தப் பெயர் வந்தது. இப்போதும் கோயிலின் தல விருட்சம் பாதிரி மரம்தான். மிகப் பழைமையான கோயில். குபேரன், சூரியன், சுரதன் போன்றோர் வந்து வழிபட்ட தலம் இது.

ராஜகோபுர வாயிலில் இடம்பெற்றிருக்கும் சங்கநிதி, பதும நிதி சிலைகள், கோயிலுக்கே எதிரேயுள்ள பிரம்மதீர்த்தத்தில் குபேரன் தன் படைகளுடன் வந்து, தீர்த்தமாடியதைச் சித்திரிக்கும் சிற்பம் ஆகியன குபேரன் இங்கே வழிபட்டதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. இந்தக் கோயிலை, மூன்றாம் குலோத்துங்கச் சோழன் புனரமைத்துக் கட்டியதாகச் சொல்கிறார்கள். ஐந்துநிலை ராஜகோபுரம் மற்றும் இரண்டு திருச்சுற்றுகளுடன் திகழும் ஆலயத்தில் அனைத்து பரிவார தெய்வங்களையும் அதிகார நந்தியையும் தரிசிக்கலாம். மூலவர் ஸ்ரீசுந்தரேஸ்வரர், அம்பிகை ஸ்ரீஅபிராமி ஆகியோரது சந்நிதிகளுக்கு இடையே ஈசான பாகத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீபெட்டிக் காளியம்மன் சந்நிதி. காளிதேவியின் சிரம் வடக்கு நோக்கி இருக்குமாறு பெட்டி வைக்கப்பட்டுள்ளது!’’ என்றார் சிவகுமார் குருக்கள்.

அடுத்து, ஸ்ரீபெட்டிக் காளி அம்மன், இங்கு குடியேறிய திருக்கதையைச் சிலிர்ப்போடு பகிர்ந்துகொண்டார் காளிதாஸ் குருக்கள்:

‘‘பெட்டிக்குள் இருப்பதால், பெட்டிக் காளியம்மன் என்று அழைக்கப் பட்டாலும், ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயிலில் இருப்பதால், ‘சுந்தர மகா காளியம்மன்’ என்பதே இந்த அம்மனின் திருப்பெயர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், ஊரின் தென்புறம் உள்ள காவிரி ஆற்றில் மிதந்து வந்த மரப்பெட்டி, இங்கே கருப்பூரில் கரை ஒதுங்கியது. திறந்து பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்பட்டன. பெட்டிக்குள்ளே எட்டுக் கரங்கள் கொண்ட அஷ்ட புஜ காளியின் திருவடிவம்... அதுவும் தலை முதல் இடுப்பு வரை உள்ள உருவம் படுத்த நிலையில் இருந்தது. எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்றெல்லாம் எண்ணி மக்கள் குழம்பிய வேளையில், அங்கிருந்த சிறு பெண்ணின் மேல் சாமி வந்தது. காளிதேவியின் மகிமைகளைக் கூறியதுடன், அவளை எவ்வாறு பூஜிக்க வேண்டும் என்றும் அருள்வாக்கு சொன்னாள் அந்தச் சிறுமி.

மலையாளமும் தமிழும் கலந்து, அந்தச் சிறுமி கூறிய அருள்வாக்குப் படி, பெட்டியை ஓர் ஓலைக் குடிசைக்குள் வைத்து, தயிர்சாதம் பள்ளயம் (படையல்) போட்டு வணங்கி வந்தனர் மக்கள். இந்த நிலையில், திடீரென ஒருநாள் அந்தக் குடிசை தீப்பற்றி எரிந்தது. அம்மன் இருந்த பெட்டியைக் காப்பாற்றிய மக்கள், மேற்கொண்டு அந்தப் பெட்டியை எங்கே வைப்பது என்று குழம்பியபோது, ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனையின்படி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இப்போதிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டது.

அன்றுமுதல், இந்தக் காளிதேவிக்கு பள்ளயம் போட்டு, பூஜைகள் செய்து வருகிறோம். சர்க்கரைப் பொங்கல், உப்பு இல்லாத தயிர் சாதம் ஆகியவற்றை மட்டுமே அம்மனுக்குப் படைப்போம். உப்பு சேர்த்த எந்தப் பொருளையும் நைவேத்தியம் செய்வது இல்லை. பெட்டியைத் திறப்பதற்கு முன்னர், உக்கிரக் காளியைக் குளிர்விக்கும் பொருட்டு, குளிர்ச்சி தரும் தயிர் பள்ளயம் போடப்படுகிறது. பசுந்தயிர் கலந்த சாதத்தில் வெங்காயம் நறுக்கிச் சேர்த்து பள்ளயம் போடப்படும்.

பெட்டியைத் திறந்தபிறகு, வண்ணமிகு மலர்கள், புனுகு, ஜவ்வாது, சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் பழங்கள் வைத்து அர்ச்சனை செய்து ஆராதிப்பது வழக்கம். சந்நிதியில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் மட்டுமே வழங்கப்படும். வழக்கமாக அம்மன் சந்நிதிகளில் தரப்படுவது போன்று குங்குமம், புஷ்பம், எலுமிச்சம்பழம் ஆகியன இங்கே வழங்கப்படுவது இல்லை.’’

அதேபோல வேறுசில கட்டுப்பாடுகளும் உண்டு இந்தக் காளியைத் தரிசிப்பதற்கு. கர்ப்பிணிகள், எண்ணெய் ஸ்நானம் செய்தவர்கள், முகச்சவரம் செய்தவர்கள் ஆகியோர் காளியைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், படையல் பூஜை செய்யப்பட்ட பிறகு பெட்டி திறக்கப் படுகிறது. மற்ற நாள்களில் நித்தியப்படி நடக்கும் நான்கு கால பூஜைகளின் போதும்கூட பெட்டி திறக்கப்படுவதில்லை.

ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் நடக்கும் திருவிழா நேரங்களில் மட்டும் காளியை வெளியே எடுக்கிறார்கள். அலங்கரித்த காளி அம்மனை பல்லக்கில் வைத்து, சுவாமி புறப்பாடு நடைபெறும். அப்போதும் காளியின் உத்தரவு கிடைத்தபிறகே பல்லக்கு ஊர்வலம் நடக்கும். மாவிலை மற்றும் வேப்பிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளின் வழியே அம்ம னின் பல்லக்கு முன்னும் பின்னுமாக ஆடியபடி உலா வருவது, காணக் கண்கொள்ளாத காட்சி! ‘பெட்டிக் காளியம்மன் பல்லக்குத் திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, சுற்றுப்பட்டு ஊர்க் காரர்களும் திரளாக வந்திருந்து காளியைக் கண்ணாரக் கண்டு நெஞ்சார வணங்கிச் செல்கின்றனர்.

திருமணத் தடை, குழந்தைப்பேறின்மை, தீராக் கடன், சொத்துப் பிரச்னை போன்ற கஷ்டங்களைத் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ் கிறாள் பெட்டிக்காளியம்மன். பிரச்னையால் தவிக்கும் பக்தர்கள் நம்பிக்கையோடு இங்கு வந்து பெட்டிக்காளியம்மனைத் தரிசித்துச் சென்றால், விரைவில் கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். ராகு கால வேளையில் இந்த அம்மனைத் தரிசித்து வழிபட்டால் ராகு - கேது தோஷம் உட்பட சகல தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

வலப்புறத்து திருக்கரங்களில் சூலம், அரிவாள், உடுக்கை மற்றும் கிளி திகழ, இடப்புறத்தின் கரங்களில் பாசம், கேடயம், கபாலம் மற்றும் மணி ஏந்தியபடி, ஆக்ரோஷத்துடன் திகழ்கிறாள் இந்த அஷ்டபுஜ காளி அன்னை. என்றாலும், அபயம் என்று வந்தவர் களை ஆதரித்து அரவணைக்கும் அன்னையாகவும் திகழ்கிறாள். நாமும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று சிவ-சக்தியின் அருளோடு காளியம்மையின் திருவருளையும் பெற்றுவருவோம்.

மாசிமகத்தன்று தரிசிக்க வேண்டிய ஐந்து தலங்களில் ஒன்று!

மகாமகக் குளம் அமைந்துள்ள கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, கொரநாட்டு கருப்பூர் ஆகிய ஐந்தும் ‘பஞ்ச குரோச தலங்கள்’ என்று அழைக்கப்படு கின்றன. ‘குரோசம்’ என்றால் மிக அருகில் அதாவது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரம் என்று பொருள். ஸ்ரீஆதிகும்பேசுவரர் அமுதக் குடத்தினைச் சிதைத்தபோது, அதிலிருந்த அமுதத் துளிகள் சிதறி விழுந்த இடங்கள்தான் இந்த பஞ்ச குரோசத் தலங்கள். மகாமகம் மற்றும் வருடம்தோறும் வரும் மாசிமகத்தன்று, இந்த ஐந்து தலங்களின் தீர்த்தங்களிலும் நீராடி விட்டு, பிறகு மகா மகக் குளத்தில் நீராடுதல் மிகச் சிறப்பானது. அந்த வகையில், கொர நாட்டு கருப்பூரும் சிறப்பானதொரு தலமாக விளங்குகிறது.

எப்படிச் செல்வது?:

கும்பகோணத்தி லிருந்து சென்னை செல்லும் சாலையில், கும்பகோணத்தி லிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கொரநாட்டு கருப்பூர்.

நடை திறக்கும் நேரம்: காலை 6 முதல் மதியம் 12 மணி வரை; மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை. திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர்

Post by thanjavooran »

திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் ஆலயம்


*சுமங்கலி பாக்கியம்*....

திலிபச்சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார்.காட்டுக்கு வேட்டைக்கு வந்த அவர், பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால், அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி (ரிஷியின் மனைவி) வடிவெடுத்தது. அந்தப்பெண், அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா, அவளருகே ஓடிவந்தார். ""அம்மா! மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே! '' என்று கண்ணீர் வடித்தார்.

அதுகேட்ட ரிஷிபத்தினி, ""மன்னா! இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள்,'' என்று அழுதாள்.

மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை...அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா! ஐயையோ! என்ன செய்வேன்! என் குலகுருவே! வசிஷ்ட மகரிஷியே! தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,'' என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள்.

என்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர்,""தீர்க்க சுமங்கலி பவ'' என அவளை வாழ்த்தினார்.

""மாமுனிவரே! இதோ! இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு, அபாக்கியவாதியாக நிற்கிறேன்! தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே! இதெப்படி சாத்தியம்!'' என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. "தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும், இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம்?' அவர் யோசித்தார். ""பெண்ணே! காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி, இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன், உனக்கு

நிச்சயம் உதவுவான், கிளம்பு,'' என்றார். அந்தப் பெண் மகிழ்ந்தாள். ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும், சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, ""அன்னையே! என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல்நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும்,' ' என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும், முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் அவ்வாறே செய்தான். அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.

திருவாரூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. இந்தக் கதையைப் படித்தவர்களின் குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம். தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

கந்தஸ்வாமி கோவில்
ஒரு பகிர்வு
17ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த வரலாறு இது. ஒரு கோயிலில் உற்ஸவர் சிலை செய்ய வேண்டும் என்று நிர்வாகத்தினர் விரும்பினர். சிற்ப வல்லுனர்கள் மூலம், பஞ்சலோகத் திருமேனி வார்க்கப்பட்டது. வார்ப்படச் சூடு அடங்கும் முன், சிலையை வெளியே எடுக்கப்பட்டது.
தகதகவெனப் பிரகாசித்தது சிலை, இருந்தாலும் அங்கும், இங்குமாக பிசிறுகள் நீட்டிக் கொண்டிருந்தன. அவற்றை நீக்கி துாய்மை செய்யலாம் என்ற எண்ணத்தில், தலைமை சிற்பி வந்த போது, உடம்பெங்கும் தீப்பற்றியது போல எரிச்சல் பரவியது.
வலியால் துடித்த அவர், மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பார்த்தவர்கள் பதறினர். முகத்தில் தண்ணீர் தெளிக்க சிற்பி கண் விழித்தார்.
அவர் எழுந்தாரே தவிர, கண்களில் இருந்த பயம் அப்படியே தெரிந்தது. கைகளைக் கூப்பி, ''பெரியோர்களே! இந்த சிலை சாதாரணமானது அல்ல! தெய்வ சான்னித்தியம் நிறைந்த இதை தொட பயமாக இருக்கிறது. மன்னியுங்கள்! பிசிறுகளைப் போக்கி, துாய்மைப்படுத்தும் சக்தி எனக்கு இல்லை'' என்றார்.
''தலைமைச் சிற்பியே இப்படிச் சொல்கிறாரே'' என நிர்வாகிகள் திகைத்தனர். அதன் பின், பிசிறுகளுடன் உள்ள சிலையை வைத்து திருவிழா நடத்தக் கூடாது எனக் கருதி, அதை அறையில் பூட்டி வைத்தனர்.
இரண்டு ஆண்டுக்குப் பின், வேதத்தில் கரை கண்ட பண்டிதர் ஸ்ரீசாம்பையர் காசியில் இருந்து வந்தார். மூலவரைத் தரிசித்த பின், உற்ஸவரையும் தரிசிக்க விரும்பினார். அவரிடம் கோயில் பணியாளர்கள், உற்ஸவர் சிலை குறித்த ரகசியங்களை விவரித்தனர்.
ஆனால், சாம்பையரின் வற்புறுத்தலால் அறைக்கதவு திறக்கப்பட்டது. சிலையைக் கண்டு மெய்சிலிர்த்த பண்டிதர் நிர்வாகிகளிடம், ''நீங்கள் அனைவரும் புண்ணியசாலிகள். இங்குள்ள மூலவர் அருள் பொழிவதில் முதல்வராக விளங்குகிறார். அதே சான்னித்தியம், உற்ஸவர் சிலையிலும் இருக்கிறது. அருளை அள்ளித் தரும் இந்த சிலையை, தியானிக்கலாமே தவிர, உளியால் செதுக்கக் கூடாது. ஆத்ம சக்தியால் நான் துாய்மை செய்கிறேன்'' என்றார்.
சிலையை சுற்றிலும் திரையிட்டு, உள்புறம் அமர்ந்த பண்டிதர், மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்லச் சொல்ல, சிலையில் இருந்த பிசிறுகள் உதிர்ந்தன. சிலை முன்பை விடப் பளபளப்புடன் காட்சியளித்தது.
இதுவரையில் சென்னை கந்தகோட்டம் உற்ஸவர் முருகனை தரிசித்த நாம், இனி மூலவரையும் தரிசிக்கலாம் வாருங்கள்!
16ம் நுாற்றாண்டுக்கு முந்திய வரலாறு இது. அந்நியர் படையெடுப்பால், திருப்போரூர் முருகன் கோயிலில் இருந்த மூலவர் சிலையை கல் திரையிட்டு மறைத்தனர். அச்சிலை நாளடைவில் மலையடிவாரத்தில் உள்ள வேப்ப மரத்தடி புற்றில் புதைந்நது.
நாளடைவில், அமளி அடங்கிய பிறகு, வேறொரு சிலையை பிரதிஷ்டை செய்தனர். அங்கு மாரிச்செட்டியார், கந்தப்ப ஆசாரி என்னும் முருகபக்தர் இருவர், ஒவ்வொரு கார்த்திகையன்றும், சென்னையில் இருந்து நடந்து சென்று திருப்போரூர் முருகனைத் தரிசிப்பது வழக்கம்.
1595 - மார்கழி 13 ம் நாள், வெள்ளிக்கிழமை, கார்த்திகையன்று வழக்கம் போல், முருகனை தரிசிக்க சென்றனர். சிலுசிலுப்பான காற்றில், ஒரு வேப்பமரத்தடியில் இருவரும் உறங்கினர். அங்கு தான் புற்றில் சிலை வடிவில் முருகன் மறைந்திருந்தார்.
இருவரும் உறங்கியபின், புற்றில் இருந்த சுவாமி, நாகப்பாம்பு வடிவில் தோன்றி மாரிச்செட்டியாரின் மார்பில் ஏறி, உடலெங்கும் விளையாடினார். அதன்பின், ''பக்தா! அருகில் இருக்கும் புற்றில் நான் சிலை வடிவாக இருக்கிறேன். என்னைச் சென்னைக்குக் கொண்டு செல்'' என்று கனவில் உத்தரவிட்டார். அதே சமயத்தில் அதே கனவு கந்தப்பருக்கும் தோன்றியது. இருவருமாக எழுந்து, புற்றை விலக்க, சிலை இருக்க கண்டனர். '' ஐயா! குமரய்யா! உன்னைச் சுமக்க எங்களால் முடியுமா? பத்து நாள் குழந்தை போல வந்தால் மட்டுமே, எங்களால் சுமந்து செல்ல முடியும்'' என்று வேண்டினர். அப்படியே சுவாமியும் மாறிக் கொள்ள, மாரிச்செட்டியார் முதுகில் மூலவரைக் கட்டிக் கொண்டார். இருவரும் சென்னை நோக்கி நடக்கத் தொடங்கினர். வரும் வழியில் பக்கிங்ஹாம் கால்வாய் குறுக்கிட்டது. இடி, மின்னலுடன் மழை பெய்ய வெள்ளம் பெருக்கெடுத்தது.
வேறு வழியின்றி, இருவரும் கால்வாய் வெள்ளத்தில் கால் வைத்ததும், பெரிய அலை தோன்றியது. இருவரும் அதில் அடித்துச் செல்லப்பட்டு கரை சேர்ந்தனர். மாரிச்செட்டியார் முதுகிலிருந்த மூலவரைக் கையால் தொட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.
பயணம் தொடர, மயிலாப்பூர் வந்தனர். அங்கு கபாலீஸ்வரர் கோயில் குளக்கரையில் இருந்த தென்னந்தோப்பில் இளைப்பாறினர். மேலாடையால் மூலவரை மூடி வைத்து விட்டு, இருவரும் துாங்கினர். சற்று நேரத்தில் சடைமுடி, காதில் குண்டலம், நெற்றியில் விபூதி, கழுத்தில் ருத்ராட்சம் கொண்ட திருமேனியுடன் கையில் பொற்பிரம்பு ஏந்திய வேதியர் ஒருவர், அவர்களை எழுப்பி, ''என்ன இது? மெய் மறந்து இப்படி துாங்கலாமா? பொழுது புலரும் முன் கிளம்புங்கள்'' என்று எச்சரித்தார்.
திடுக்கிட்டு விழித்த இருவரும் கண்டது கனவு என உணர்ந்தனர். உடனே மயிலாப்பூர் குளத்தில் நீராடி, இருப்பிடம் வந்தனர். தாங்கள் சுமந்து வந்த முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி, வள்ளலார் ராமலிங்கர், பாம்பன் சுவாமி போன்ற அருளாளர்களும் இந்த முருகனை வழிபட்டுள்ளனர். பிறந்து பத்துநாள் ஆன குழந்தை போல, அடியவருக்காக மாறிய இந்த அற்புதமுருகன் சென்னை கந்தகோட்டத்தில் அருள்புரிகிறார். வேத மந்திரத்தால் துாய்மை செய்யப்பட்ட உற்ஸவரையும் இங்கு தரிசித்து மகிழலாம்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share
அதிசய அற்புத ஸ்தலங்கள்

#நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணையாக மாற்றி தரும் லிங்கம்!

பெங்களூரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம் சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார். ஐந்து அடி உயர, நல்ல பருமனான லிங்கம்.சுவாமியின் மிக அருகிலிருந்து தரிசனம் செய்யலாம். கவிகங்காதீஸ்வரர் என்று இறைவன் பெயர்.
ஆச்சரியம் என்னவென்றால், அந்த கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள். அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார். அந்த நெய் வெண்ணையாக மாறி இருக்கும். இன்றைய அறிவு ஜீவிகளால் இதற்கு சரியான விளக்கம் தர முடியுமா?

ஒருமுறை போய் அனுபவித்து பாருங்கள்.


#பெருமாளே சிவனாக மாறும் விந்தை!
திருப்பதி என்று கேட்டவுடன் பெருமாளும், வைஷ்ணவத்தின் உச்ச ஸ்தலம் என்பதும் எல்லோர் எண்ணத்திலும் உதிக்கும். அங்கு பெருமாள் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆம்! வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து, அவருக்கு எளிய வஸ்திரத்தை சார்த்தி, மந்திர ரூபத்தில் அவரை "சங்கர நாராயணர்" ஆகா மாற்றுகிறார்கள். அவருக்கு வில்வ மாலை அணிவிக்கபடுகிறது. பின்னர் அவருக்கு ஒரு தட்டில் விபூதி மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது. பெருமாள் அந்த இடத்தை விட்டு இறங்கி அலமேலுமங்காபுரத்தில் தாயாரை பார்க்க செல்வதாக ஐதீகம். வெள்ளி கிழமை அன்று பெருமாளின் தரிசனத்துக்கு, அலமேலுமங்காபுரத்தில் கூட்டம் அலை மோதும். மறுபடியும் வெள்ளிக்கிழமை இரவு திருப்பதியில் சுவாமியை மந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து, நாராயணனாக மாற்றுகிறார்கள். தாயாரை பார்த்து வந்து சந்தோஷத்தில் இருக்கும் பெருமாளிடம் ஆசிர்வாதம் வாங்க சனிக்கிழமை அத்தனை கூட்டம் சேர காரணம், அன்று என்ன வேண்டுதல் வைத்தாலும் உடனே பாஸ் மார்க் தான்.

வியாழன் அன்று போய் பாருங்களேன் .

#கொடி மர நமஸ்கார பூசை ஒரு திருப்புமுனை!
திருசெந்தூரில் தினமும் காலை நடை திறப்பதற்கு முன் முதலில் கொடிமரத்துக்கு தான் பூசை. பின்னர் தான் மூலவர் நடை திறந்து நிர்மால்யம், அபிஷேகம் எல்லாம்.தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமர பூஜையின் பொது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் , நமஸ்காரம் செய்வார்கள். அனுமதி இலவசம். வாழ்க்கையில் நிச்சயமாக திருப்பம் உண்டாகும்.

போய் பாருங்களேன்!

#நெய் உறைந்து மறைந்த லிங்கம்!
எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது. உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும். எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்த சூட்டிலும், வெயில் காலத்தின் சூட்டிலும் அந்த உறைந்த நெய்யானது உருகுவதில்லை. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. வடக்கும்நாதர் சிவன் கோவில், திருச்சூர், கேரளா மாநிலம். உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அரு மருந்தாக திகழ்கிறது.

நம்பிக்கையுடன் போய் பாருங்களேன்!

#உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் !
சித்தநாத் ஆஸ்ரமத்தில் உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் நிறுவப்பட்டுள்ளது. பாதரசத்தை சுத்தப்படுத்தி கேட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம். உண்மையில் இது சித்தர்களுக்கு கை வந்த கலை. சித்த மார்கத்தில் செல்பவர்களுக்கு, இந்த லிங்க தரிசனம், அதன் அருகாமை மிக நல்ல பலன்களை தருகிறது. இந்த ஆஸ்ரமம் புனே, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.யோக நிலையில் உயர்பவர்களே, போய் உணர்ந்து பாருங்கள்.

#குளத்தில் மண் கலயத்தில் விபூதி தோன்றுகிறது!
ஈரோடு ஜில்லாவில், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது. இது இந்த காலத்திலும் நடக்கும் ஒரு அதிசயம். அந்த குளத்தை சிவபெருமான் தன் விரல் நகத்தால் மண்ணில் கிழித்து உருவாக்கினாராம். மிக உயரமான கல் விளக்கு இந்த கோவிலில் காணப்படுகிறது.சென்று அருள் பெருங்களேன்.

#40ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்தி வரதர்!
காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள அத்தியூர். அத்தி மரத்தில் செய்யப்பட்ட வரதர் கோவில் குளத்து நீரில் பாதுகாக்கப்பட்டு வருகிறார். கல்விக்ரகம் ஏற்பாடு செய்த பின்னர் அத்திவரதர் குளத்துள் இருக்கிறார். நாற்பதாண்டுகட்கு ஒருமுறை அத்தி வரதரை வெளிக்கொணர்ந்து அலங்காரங்கள் செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரு மண்டலம் வைத்து வழிபாடுகள் செய்து பின் குளத்தில் மத்தியில் உள்ள நீராழி மண்டபம் இருப்பதால் அங்கு தெப்போற்சவம் சிறப்புறச் செய்து தாயாரும் பெருமாளும் தெப்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். கோவிலுக்கு வெளியே தாயார் வருவதில்லை.

#கக்கிய பால் அரு மருந்தாகிறது!
க்ரவுஞ்சகிரி, செந்தூருக்கு அருகே இருபது கிலோமீட்டர் தூரத்தில் சுப்பிரமணியர் கோவில் கொண்ட மலை வாச ஸ்தலம். பெங்களூரிலிருந்து பெல்லாரி செல்லும் பாதையில் ஹோஸ்பெட் என்கிற ரயில் தடத்தில் இறங்கி செல்ல வேண்டும். முருகர் வள்ளி தேவயானை இன்றி தனித்து நிற்கும் இடம். அம்பாளுக்கு தனி சந்நிதி. மிக தனிமையான இடம். கனத்த அமைதியும், குளிர்ச்சியும் சூழ்ந்த இயற்கை பச்சை சூழ்ந்த மலை.

அதிசயம் - முருகர் காலடியில் ராமரும் லக்ஷ்மணரும் அமர்ந்திருக்கிறார்கள். சீதையை மீட்டவுடன் அவர்கள் இருவரும் இங்கு வந்து முருகருக்கு பூசை செய்ததாக சொல்கிறார்கள். ஒருகாலம் வரை பெண்களுக்கு இங்கு அனுமதி கிடையாதாம். அதனால், ராமர் வந்த காலத்தில் சீதையை கோயிலுக்கு வெளியே இருக்க சொல்லிவிட்டு அனுமனை காவலுக்கு வைத்துவிட்டு உள்ளே வந்தார்களாம். இன்றும் முருகருக்கு நடக்கிற பூசைகள், ராமர் லக்ஷ்மணருக்கு தான் சென்று செருகிரதாம்.

முருகருக்கும் பார்வதி அம்மைக்கும் வாக்கு வாதம் வரவே, பார்வதி தேவி முருகனிடம், தான் கொடுத்த தாய் பால் தானே முருகனை வளர்த்தது என்று கேட்க, அதுவும் எனக்கு வேண்டாம் என்று அத்தனையையும் கக்கி விடுவதாக ஐதீகம். அது மலையில் உறையவே, வெள்ளை கல்லாக மாறுகிறது. இந்த வெள்ளை கல், பால் நிறத்தில், தொட்டால் நல்ல நறுமண விபூதி போல் உள்ளது. முருகர் சன்னதி முன் ஒரு தட்டில் வைத்திருக்கிறார்கள். கேட்டால், எடுத்துக்கொள்ள சொல்கிறார்கள். அரு மருந்தாக பயன் படுகிறது. மிக அபூர்வமாக இருக்கிறது.

ஒரு முறை சென்று தரிசனம் பெற்று, அதையும் பெற்றுக்கொள்ளுங்களேன்!

#நரசிம்மர் உலாவரும் தலம்!
"அஹோபிலம்", பகவன் நாராயணன் ஹிரண்ய கசிபுவை முக்தியடயச்செய்ய அவதாரம் எடுத்த தலம். தேவர்கள் பெருமாளை காணும்பொழுது "ஹிரண்ய கசிபுவின்" வதம் எப்படி நடந்தது என்று கேட்க்க, பெருமாளும் நாடகத்தை நடத்திக்காட்டி அருளும் தலம். இன்றும் நரசிம்மர் அரூபமாகவும், ரூபமாகவும் வலம் வரும் தலம். மிகவே அமானுஷ்யமான புண்ய ஸ்தலம். நரசிம்மருக்கு ஒன்பது கோயில்கள் உள்ளது. மலைமேல் தனியாக செல்லக்கூடாது. கொடிய மிருகங்கள் வாழும் இடம். உண்மையான பக்தி இன்றி ஒரு போதும் இந்த தலத்தில் கால் பதிக்காதீர்கள்! தொலைத்துவிடுவார்.

சென்று அவர் அருள் பெறுங்களேன்.

#வில்வ பூசை உணர்த்தும் தத்துவம்!
"விஸ்வநாதர் கோயில்"காசி!

இந்தக் கோயிலில் சாயங்கால பூசையின் போது நூற்றி எட்டு "வில்வ" இலைகளால். தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள். இதில் விசேஷம் என்ன வென்றால், அந்த நூற்றி எட்டு "வில்வ" இலைகளிலும் சந்தனத்தால் "ராமா" என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள். அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தும் செயல்.

போய் பார்த்து அவர் அருள் பெற்று வாருங்களேன்!

#பகவான் கிருஷ்ணரின் சமாதி!
பூரி ஜகன்னாதர் ஆலயம்! ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு. அந்த கோவிலின் கருவறை தான் "கிருஷ்ணரின்" சமாதி. ஆம்! அவதார முடிவில், உடலை விட்டு நாராயணர் சென்ற பின்னர், மீதி இருந்த யாதவ குலத்தினர், அவர் உடலுக்கு மரியாதை செய்து, கங்கையில் விட்டனர். கிருஷ்ணரோ இயற்கையான "வாசி யோகி". ஒரு வாசி யோகியின் உடலுக்கு அழிவு கிடையாது. அது எப்போதும் நல்ல அதம சக்தியை பரப்பிக்கொண்டிருக்கும். நடப்பவைகளை ஒருவர் கண்டு நின்றார். அனைவரும் சென்ற பின், கங்கை நதியிலிருந்து உடலை மீட்டு அவருக்கு ஒரு சமாதி கட்டி கோவிலாக்கினார். கருவறையை "சங்கு" ரூபத்தில் அமைத்தார். ஆம்! அவர் போகர் சித்தர்.

போய் தரிசனம் செய்யுங்கள்! அப்போது புரியும்!

#நான்கு கரங்களுடன் ராமர்!
பொன்பதர் கூடம் ராமர் கோயில். செங்கல்பட்டிலிருந்து கிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமம். உறையும் ராமபிரான் நான்கு கரங்களுடன் மற்ற கோவில்களிலிருந்து வித்யாசமாக உள்ளார். தந்தை தசரதன் ராமபிரானை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென உத்தரவிட்டவுடன் அதை புன்னகையுடன் சிரம் மேற்கொண்டார். இதை கண்ட சீதைக்கு, இப்படிப்பட்ட கட்டளையை ராமனால் எப்படி புன் முறுவலுடன் ஏற்றுகொள்ள முடிகிறது என்று எண்ணினாள். நேரம் வந்தபோது ராமர் தான் என்பதை நான்கு கரங்களுடன் இரு கரத்தில் சங்கு சகரத்துடன் சீதைக்கு காட்சி அளித்து தானே நாராயணன் என்பதை உணர்த்தினார். அது போல் கண்டேன் சீதையை என்று அனுமன் கூறிய போது, அவருக்கும் நான்கு கரத்துடன் காட்ச்சியளித்தாராம்.

சென்று பார்த்து அருள் பெற்று வாருங்களேன்!

#சிக்கலாருக்கே வியர்க்கிறதாம்!
சிக்கல்! முருகர் தன் தாயிடம் வேல் வாங்கின இடம். இங்கு உற்சவரும் மூலவரும் ஒருவரே. மற்ற கோயில்களில் உற்சவர் சிலை கால்லால் உருவாக்கப்பட்டிருக்கும். உற்சவரை உலோகத்தில் செய்து வைத்திருப்பார்கள். இங்கு மூலவரே உலாவருகிறார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மகா கந்த சஷ்டி அன்று உலாவரும் முருகனுக்கு உடல் எல்லாம் வியர்க்கும். பூசாரி அவர் முகத்தை துடைத்து துடைத்தே தளர்ந்து விடுவார்.

சென்று பார்த்து அவர் அருள் பெறுங்களேன்!

#பாதாள அஞ்சனக்கல்லில் செய்யப்பட்ட கிருஷ்ணர்!
குருவாயூர் திருக்கோயிலில் தரிசனம் தரும் மூலவர் ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு கொண்டதாகும். மிகவும் புனிதமானது எனக் கருதப்படும் பாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது.

இந்த விக்கிரகத்தை ஒரு காலத்தில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் வைத்து வழிபட்டு வந்தார். அதன் பிறகு அந்த விக்கிரகத்தை பிரம்மதேவனிடம் அளித்தார். பிறகு பிரம்மனிடம் இருந்து கைமாறி காசியாபா பிரஜாபதி, வசுதேவர் ஆகியோரிடம் போனது. கடைசியில் வசுதேவரிடம் இருந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே இந்த விக்கிரகம் வந்து சேர்ந்தது. துவாரகையில் தன் மாளிகையில் இதை வைத்து வணங்கி வந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாக வேண்டிய வேளை வந்தது. அதற்கு முன்னதாகத் தன் பக்தரான உத்தவரிடம், ‘இன்னும் ஏழு நாட்களில் துவாரகையைக் கடல் கொள்ள இருக்கிறது. அந்த வெள்ளத்தில் இந்தக் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை குரு பகவான் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என்றார் கிருஷ்ண பகவான்.

அடுத்த ஒரு சில தினங்களில், பகவானின் வாக்குப்படி பெரிய பிரளயம் ஒன்று துவாரகையைத் தாக்கியது. அந்த வெள்ளத்தில் மிதந்து வந்த விக்கிரகம் ஸ்ரீகிருஷ்ணரின் வாக்குப்படி குரு பகவானிடம் போய்ச் சேர்ந்தது. இதை பிரதிஷ்டை செய்வதற்காக குருவும் அவரது முதன்மை சிஷ்யனான வாயுவும் சேர்ந்து ஒரு நல்ல இடத்தைத் தேடி அலைந்தார்கள்.

இறுதியில் அவர்கள் கேரள தேசத்தை அடைந்தார்கள். அங்கே பரசுராமரை சந்தித்தனர். இந்த விக்கிரகம் பிரதிஷ்டை ஆக வேண்டிய இடம் இதுதான் என்று பரசுராமரே இருவரையும் கூட்டிக் கொண்டு போய் ஓரிடத்தைக் காண்பித்தார். பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி தரும் அந்த இடத்தின் அருகே சிவபெருமான் பன்னெடுங் காலமாக தவம் இருந்து வந்தார்.

அந்த இடத்தில் விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது. குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் இந்த க்ஷேத்திரம் பின்னாளில் ‘குருவாயூர்' ஆயிற்று. தென் துவாரகை எனவும் போற்றப்படுகிறது.

சென்று பார்த்து அவர் அருள் பெற்று வாருங்களேன்!

#நவக்ரகங்களை உள்ளடக்கிய பிள்ளையார்!
கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் நவக்கிரகங்களைச் சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

#பழனி நவபாஷாண சிலைக்கு ஒரு முன்னோட்டம்!
கொல்லிமலையில் அமைந்துள்ள பேளுக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள கூவ மலையில் தண்டயுதபாணியாக முருகன் குடி கொண்டுள்ளார். இந்த கோவில் சிலையை போகர் சித்தர் பழனியில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கும் முன் ஒரு முன்னோட்டமாக தயாரித்து இங்கே பிரதிஷ்டை செய்தார் என்று செவி வழி செய்திகள் கூறுகிறது. கூவ மலையை கூர்ந்து கவனித்தால் ஒரு பாறையை கூட பார்க்க முடியாது. ஏதோ புற்களால் கம்பளம் நெய்து மலை மேல் விரித்தார் போல் ஒரு பசுமை சூழ்ந்து நிற்கும். இந்த மலையின் பின் புறம் கொல்லிமலை கைலாசத்தை நினைவு படுத்தி எல்லாமே இங்கு அடக்கம் என்று சொல்லாமல் சொல்லி உயர்ந்து நிற்கும். இங்கு முருகர் வேட்டுவ கோலத்தில் காட்சி தருகிறார். நிறையவே ரகசியங்களை உள்ளடக்கிய கோவில். அகத்தியர் சித்தர் முதல் அனைவரும் காலை வேலையில் உலக நன்மைக்காக தவமிருக்கும் கோவில் என கூறப்படுகிறது. அத்தனை அமைதி பொருந்திய கோவில்.

சென்று தரிசனம் செய்து அவன் அருள் பெற்று வாருங்களேன்!

#வராஹ முகத்துடன் ஆஞ்சநேயர்!
அனுமன் ஆலயங்களில் வானர முகத்துடன் ஆஞ்சநேயராக அருள் பாலிப்பதுதான் வழக்கம். ஆனால், சேலம் மாவட்டம் ஆத்தூரில், 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் குபேர திசையான வடக்கு திசை நோக்கி வராக முகத்துடன் அவர் எழுந்தருளியிருக்கிறார். வைணவ ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக விளங்கும் அனுமன் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகத் திகழ்வதும் கூடுதல் சிறப்பு.

#சிவனுக்கு துளசி பூசை!
சிவகங்கை, திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது. தனது குறைகளை போக்க வேண்டி இறைவி இத்தலத்தில் துளசி தளங்களால் ஈசனை வழிபட்டாளாம். அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது. மணப்பேறு கிட்டவும் பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பயனடைகின்றனர். இங்கு பிரதோஷ காலங்களில் மட்டும் இரு மரகத லிங்கங்கள் வெளியே எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.

#ஆப்பனூர் போய் தரிசித்தால் வாத நோய் விலகும்!
மதுரை நகருக்குள் செல்லூரில் இருக்கிறது, திரு ஆப்பனூர் கோயில். இறைவன் பெயர், திருஆப்புடையார். இறைவி, குரவங்கமழ் குழலி. சம்பந்தர் பாடிய இத்தலத்திற்கு வந்தால், வாத நோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது.
பில்லி சூன்யம் விலக்கும் ஏடகநாதர்!

மதுரையிலிருந்து துவரிமான், தேனூர் வழியே சோழவந்தான் பேருந்து பாதையில் 18 கி.மீ. தொலைவில், திருவேடகம் இருக்கிறது. இறைவன் ஏடகநாதர், மந்திர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். அனைத்து பில்லி, சூன்யங்களும் இவ்வாலய மூர்த்தியைத் தரிசித்ததும் நீங்கி விடுகின்றன. இங்கே எழுந்த ருளி அருள்பாலிக்கும் அம்பாள் ஏலவார் குழலி, பெண்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நீக்கித் தருகிறாள். இங்குள்ள ஸ்தல விருட்சமான வி ல்வ மரம் சக்தி படைத்தது. இத்தலத்தில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்து நீரையே இறைவனுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்துகிறார்கள்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Thiruthalangal magimai திருத்தலங்கள் மகிமை

Post by thanjavooran »

A share
நாச்சியார் கோவில் கல் கருடன் அமைந்த விதம். 

>> தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன் <<

செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழன்.

தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன் மயூரசன்மன். முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன். 

அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன். நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்" என்றவர், சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா" என்றார் தேவசேனாபதி.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பியையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது. கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.

இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா" என்ற சிற்பி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறா?" என்றும் வினவினார்.

மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது, திருநறையூருக்கு" என்று.

‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு. 

மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.
மயூரா... ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறா?" என்றான் மன்னன்.
மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?" மயூரனின் பதில் கேள்வி யாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்திவைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன்.

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும். 

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்."

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம்வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன்.

சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன்.

மயூரசன்மனின் விழிகள் மின்னின. மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும். 

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன்.

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன்.

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே #நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் #திருநறையூரில் நிற்கிறது. 

மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!..

Post Reply