Suddhananda Bharathi

Carnatic composers (other than performing vidwans)
Post Reply
satyabalu
Posts: 915
Joined: 28 Mar 2010, 11:07

Suddhananda Bharathi

Post by satyabalu »

* Has this forum dwelt on his compositions?

* I have read through lakshman about his compositions on rare ragas.

Lakshman
Posts: 14029
Joined: 10 Feb 2010, 18:52

Re: Suddhananda Bharathi

Post by Lakshman »

He has composed over 1000 songs.

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: Suddhananda Bharathi

Post by RSR »

https://sites.google.com/site/homage2ms ... uikkadalae

Smt.M.S.Subbulakshmi

Hamsadwani raagam


அருள் புரிவாய் கருணைக் கடலே!

ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே !

பரிபூர்ண சதானந்த வாரியே !
பக்த ரக்ஷகனே! ,பரமாத்மனே !

அருள் புரிவாய் கருணைக் கடலே!
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே !

அருணோதயம் போல் ஆத்ம சாந்தியும்
அறிவும், உண்மை இன்பமும் தருவாய் !
தர்மப் பயிர் காக்கும் ,தருண மாமழையே !
தங்குயிர் எங்கணும் மங்களம் பொங்கவே !

அருள் புரிவாய் கருணைக் கடலே!
Last edited by RSR on 08 Dec 2023, 11:58, edited 3 times in total.

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: Suddhananda Bharathi

Post by RSR »

https://sites.google.com/site/dkpattamm ... -thiruvadi

.https://youtu.be/O2Trm7q-fdE?si=bDKah_EAI7x9Pf0b

.


D.K.PATTAMMAL
தூக்கிய திருவடி* -
THOOKKIYA THIRUVADI

SankaraabharaNam raagam

https://youtu.be/O2Trm7q-fdE

தூக்கிய திருவடி துணை என நம்பினேன் துரிய நடராஜனே !
ஆக்கி அளித்துலகை நீக்கி மறைத்தருளி ஐந்தொழில் புரிந்திடும் அம்பல வாணனே !
- எத்தனையோ பிறவி எடுத்தெடுத்தே இளைத்தேன் இருவினைப் பயன்களை எய்தி எய்திக் களைத்தேன்
சித்தம் இனி உன்மேல் வைத்திருக்க நினைத்தேன் திக்கு வேறில்லை ஐயா ! தீனரை காக்கும் கையா !
தூக்கிய திருவடி துணை என நம்பினேன் துரிய நடராஜனே ! தூக்கிய திருவடி துணையென நம்பினேன்

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: Suddhananda Bharathi

Post by RSR »

NCVASANTHAKOKILAM -
ஆனந்த நடனம் ஆடினாள் (காம்போதி)
...

https://sites.google.com/site/ncvasanth ... A%E0%AE%A4
ஆனந்த நடனம் ஆடினாள்
அன்பர் களிக்கவே

பராசக்தி
ஆனந்தநடனம் ஆடினாள்

வானும் புவியும் மகிழ்ந்து வணங்கிட
ஞான வெளியினில்
வினை, ஓம் ஓம் என
ஆனந்த நடனம் ஆடினாள்

பராசக்தி
ஆனந்தநடனம் ஆடினாள்

பஞ்ச்ச பூதங்கள் முழங்க
கணங்கள் பாய்ந்து தாளம் வழங்க

அஞ்சு தொழிலும் துலங்க
காலம் அதிர ,புவியும் குலுங்க

தஞ்சம் ,தஞ்சம் என அன்பர் முறையிட
தஞ்சம் ,தஞ்சம் என அன்பர் முறையிட

'தந்தோம் தந்தோம் தாகிட தாகிட தந்தோம்'
தந்தோம் தந்தோம் தாகிட தாகிட தந்தோம்
என

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: Suddhananda Bharathi

Post by RSR »

Smt.M.S.Subbulakshmi
..passed away on 11th December 2004

Vintage 78 rpm record

Simmendra madhyamam
...
https://sites.google.com/site/homage2ms ... authuser=0


கண்ணெடுத்தாகிலும் காணீரோ என்
காவிய மாலையைப் பூணீ ரோ ஐயா

----
பண்ணும் பனுவலும் பரதமும் விரதமும்
பக்தியும் கொண்டிங்கே நித்தியம் தொழும் என்னைக்

....கண்ணெடுத்தாகிலும் பாரீரோ

பட்டம் பதவி பெறப் பாடவில்லை
தங்கப் பதக்கங்களை என்றும்
நாடவில்லை ஐயா
எட்டெட்டு திக்கிலும் ஓடவில்லை

உம்மை
இதய மோனத்தில் அன்றி தேடவில்லை ஐயா

பேருக்கும் புகழுக்கும் பேராசைப்படவில்லை
பெரிய பர்வாளையும் கும்பிடவில்லை ?
ஆருயிர்க்குயிராக அறிந்தும்மை
நேசித்தேன்
ஆர்வ மலர்களை அள்ளி அள்ளி பூசித்தேன்
...

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: Suddhananda Bharathi

Post by RSR »


RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: Suddhananda Bharathi

Post by RSR »

https://sites.google.com/site/dkpattamm ... 4%E0%AE%B0

-----------------------------------------------------

Smt.D.K.PattammaaL

எப்படிப் பாடினரோ-

கர்நாடக தேவகாந்தாரி


https://youtu.be/54yIqReUGl4


எப்படி பாடினரோ அடியார்
அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே !
.
அப்பரும் சுந்தரரும்
ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும்
பொருளுணர்ந்து உன்னையே (எப்படி பாடினரோ)
.
குருமணி சங்கரரும்
அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும்
அருட்ஜோதி வள்ளலும்
.
கருணைக்கடல் பெருகி
காதலினால் உருகி
.
கனித்தமிழ் சொல்லினால்
இனிதுனை அனுதினம் (எப்படி பாடினரோ

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: Suddhananda Bharathi

Post by RSR »

https://sites.google.com/site/ncvasanth ... ha-barathy

NCVASANTHAKOKILAM
அந்த நாள் இனி வருமோ- SUDDHANANDHA BARATHY

அந்தநாள் இனி வருமோ

https://www.youtube.com/watch?v=a_X_2fc_MFM

DONATED BY SAREGAMA

COMPOSER OF THE SONG

SUDDHANANDHA BARATHY



RAGAM:

HAMSAANANDHI

ஹம்சானந்தி

அந்த நாள் இனி வருமோ -
சொல்லடி
அம்பலப் பசுங்கிளியே
கிளியே

(அந்தநாள் இனி வருமோ

---------------------------------
எந்தெந்த வேளையும்
இதயத்தில் பதம் வைத்தே

இருக்கிறேன் இருக்கிறேன்
என்றவன் கூத்தாடும்

(அந்தநாள் இனி வருமோ



தஞ்சம் புகுந்தவரை
தாங்குவதென் பாரம்

தளராமல் உன் அன்பை
வழங்குவதே தீரம்

அந்தநாள் இனி வருமோ
அஞ்சல் அஞ்சல் என்றே
அபயம் அளித்தென் அய்யன்
ஆனந்த ஜோதியில்
தானாக்கிக் கொண்டானோ

அந்த நாள் இனி வருமோ -

சொல்லடி
அம்பலப் பசுங்கிளியே
கிளியே
(அந்தநாள் இனி வருமோ

RSR
Posts: 3427
Joined: 11 Oct 2015, 23:31

Re: Suddhananda Bharathi

Post by RSR »

homage2mssubbulakshmi
https://sites.google.com/site/homage2ms ... ?authuser=
[/b]0
Smt.M.S.Subbulakshm1

ஜங்கார ஸ்ருதி செய்குவாய்

பூர்வி கல்யாணி ராகம்

ஜங்கார ஸ்ருதி-*
ஜங்கார ஸ்ருதி செய்குவாய்

பூர்வி கல்யாணி ராகம்
Smt.M.S.Subbulakshmi
Vintage classuc-78 rpm

JANKARASRUTHI.wmv
பூர்வி கல்யாணி ராகம்

ஜங்க்கார ஸ்ருதி செய்குவாய் -ஜீவ வீணையில்

சஙகீதாம்ருதம் பெய்குவாய் -ஜெகதீஸ்வரனே

ஸங்கர ஸாம்ப சதாசிவ ஓம் ஹர
சம்பு எனச் சொல்லி என்
ஜென்மம் கடைத்தேறவே

கலகல என்று காலை பாடும்
புள்ளோசை போலும்

பாற்கடல் என்றும் ஆர்க்கும்
கர்ஜனை போலும்

மலர்களைக் கொஞ்சி வரும்
மந்தமாருதம் போலும்

மது உண்ட வண்டினம்
தளர்க்கும் ரீங்காரம் போலும்

ஜங்க்கார ஸ்ருதி செய்குவாய் -ஜீவ வீணையில்

சஙகீதாம்ருதம் பெய்குவாய் -ஜெகதீஸ்வரனே

Post Reply