Kanchi Maha Periyava
-
- Posts: 3033
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Kanchi Maha Periyava
A share
ஆற்காடு நவாபுக்கு ஜோசியர் ஆனவர் - ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி
படித்தேன் பகிர்கின்றேன் உங்களுடன்
நான் சொல்லும் நிகழ்ச்சி நடந்து பல வருடங்கள் ஆகிறது. அப்போது என் அப்பா பி.எம். நடராஜ சர்மா, திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் சம்ஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றினார்.
காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் மரியாதையும் பக்தியும் கொண்டவர் அவர். திருச்சி மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது நத்தம் கிராமம். ஒரு முறை மஹா ஸ்வாமிகள் அங்கு முகாமிட்டிருந்தார். அவர் நடத்தும் ஸ்ரீதிரிபுர சுந்தரி ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் பூஜையை தரிசிக்க விரும்பினார் என் அப்பா.
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை இரவில் நத்தம் கிராமத்தை அடைந்தார். பூஜை முடிந்தது அப்பாவை அங்குள்ள எவருக்கும் தெரியாது. எனவே எவரும் உபசரிக்கவில்லை. மஹா ஸ்வாமிகள் தந்த விபூதிப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு பந்தலில் ஒரு மூலையில் படுத்து விட்டார் அப்பா.
அடுத்து வந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் அப்படியே தான் கழிந்தன! பூஜைகளையும் ஆராதனையையும் கண்ணாரக் கண்டு தரிசித்தார். மூன்றாம் நாள் விநாயகர் சதுர்த்தி. சிறப்பு பூஜைகள் முடிந்ததும் ஸ்வாமிகளிடம் பிரசாதம் பெறச் சென்ற என் அப்பா நான் ஊருக்குப் போய் வருகிறேன்! என்றார். நிமிர்ந்து பார்த்த ஸ்வாமிகள் முதலில் பிள்ளையாருக்கு முன் உள்ள கொழுக்கட்டையை எடுத்துச் சென்று நிதானமா சாப்பிட்டப்புறம் வாங்கோ. ஊருக்குப் போறதைப் பத்தி பேசிக்கலாம்! என்றார்.
ஊருக்குப் போய் வருகிறேன் என்று ஒரு மரியாதை நிமித்தம் சொன்னதற்கு முதல்ல சாப்பிட்டு வா என்கிறாரே ஸ்வாமிகள்?! அப்பாவுக்கு பிரமிப்பு. ‘சரி’ என்று சாப்பிடப் போனார். சாப்பிட்டு முடித்ததும் அப்பாவை அழைத்து விசாரித்தார் ஸ்வாமிகள்.
என் அப்பா லால்குடி தாலூகாவில் உள்ள புதுக்குடி சீனிவாச ஜோதிடரின் பிள்ளை வழிப் பேரன் என்பதை அறிந்ததும் பெரியவா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என் அப்பாவின் தாத்தாவைப் பற்றியும் அவரது காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்து சொன்னார் ஸ்வாமிகள்.
அப்பாவுக்கோ ஆச்சரியம்!
ஸ்வாமிகள் தொடர்ந்தார் ‘உன்னோட தாத்தா மலையாள தேசம் போய் ஜோதிஷத்தை முறையா கத்துண்டு வந்தவர். தேவதைகளின் உபாசனையும் உண்டு. அவர் ஆற்காடு நவாபுக்கு ஜோசியர் ஆனது ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி. அப்போது திருச்சிராப்பள்ளி ஆற்காடு நவாப் ஆட்சியில் இருந்தது.
நவாப் பிடம் பல ஜோசியர்கள் உண்டு. ஒரு நாள் நவாப் தன் கச்சேரியில் (அரசவையில்) இருந்த ஜோசியர்களுடன் தனது ஆட்சிப் பிரதேசத்தில் இருந்த அனைத்து ஜோசியர்களையும் அவைக்கு வரும் படி அறிவித்தார்.
புது ஜோசியர்கள் பலரும் கூடினர். அதுல உன்னோட புதுக்குடி தாத்தாவும் ஒருத்தர்.
கச்சேரிக்கு நவாப் வந்ததும் திவான் எழுந்து நின்று அங்கு கூடி இருந்த ஜோதிடர்களைப் பார்த்து உங்களுக்கெல்லாம் இன்று ஒரு போட்டி வைக்கப் போகிறார் நவாப். இன்று நம் நவாப் கோட்டையில் இருந்து எந்த வழியாக வெளியேறி வேட்டைக்குப் போகப் போகிறார் என்று நீங்கள் எல்லோரும் ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுத்தரவேண்டும். எல்லாக் கூடுகளும் முத்திரையிடப்பட்டு எனது பாதுகாப்பில் இருக்கும். நவாப் திரும்பியதும் கூடுகளின் முத்திரைகள் உடைக்கப்பட்டு ஓலைகள் படிக்கப்படும். யார் எழுதியது சரியாக இருக்கிறதோ அவருக்கு நவாப் தக்க மரியாதை செய்வார்!’ என்று அறிவித்தார்.
உடனே எல்லா ஜோசியர்களும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்று அவரவர் கணக்குப்படி ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுக் கொடுத்தார்கள். கடைசியில் அன்று நவாப் கோட்டையின் பிரதான வாசல்கள் வழியாகப் போகவே இல்லை.
மேற்கு வாசலின் வடக்குப் புறம் (தற்போது மெயின்கார்டு கேட் எனப்படும் வாயிலுக்கு வடக்கே பெட்ரோல் பங்க் இருக்கும் வழி) கோட்டை மதிலை இடித்து வெளியேறி மேற்குத் திசையில் உறையூர் நோக்கிக் கொஞ்ச தூரம் சென்றார். பிறகு வடக்குத் திசையில் திரும்பி காவிரிக் கரை வரை போனார். அதன் பிறகு தெற்கு நோக்கித் திரும்பி வடக்கு ஆண்டார் வீதியில் இடிக்கப்பட்ட வாசப்படி (புதுப்படி சந்து என்று தற்சமயம் பெயர்) வழியாக மலைக்கோட்டை வடக்கு வீதியில் நுழைந்தார். பிறகு கிழக்குத் திசையில் திரும்பி சறுக்குப் பாறைத் தெரு வழியாகக் கிழக்கு ஆண்டார் வீதிக்கு வந்தார். மலையை வலமாக வந்து தற்சமயம் உள்ள சின்னக் கடைத் தெரு வழியாக இப்போ டவுன்ஹால் என்று சொல்லப்படுகிற கச்சேரிக்கு வந்து விட்டார். வேட்டையாடவே இல்லை.
நவாப் கச்சேரிக்குத் திரும்பிய பின் ஜோசியர்கள் கொடுத்த கூடுகள் ஒவ்வொன்றும் முத்திரை உடைக்கப்பட்டு பிரிக்கப்பட்டன. ஓலைகள் எடுத்துப் படிக்கப்பட்டன.
உன்னோட தாத்தா எழுதிக் கொடுத்த ஓலை ஒன்று மட்டுமே துல்லியமாக நவாப்பின் நடவடிக்கையைக் குறிப்பிட்டிருந்தது.
நவாப் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். கச்சேரில இருந்தவர்களும் பிரமிச்சுப் போயிட்டா.
அப்புறம் நவாப் உன்னோட தாத்தாவுக்குப் புதுக்குடியில் 80 ஏக்கர் நிலம் பட்டயம் செய்து கொடுத்தார். மலைக்கோட்டை தெற்கு வீதில மேற்கே ஒரு கருப்புக் கோயில் இருக்கு. அதுக்குப் பக்கம் இரும்புக் கிராதி போட்ட ஒசரமான ஒரு பெரிய வீடு இருக்கு. அதன் எதிரே திண்ணை உள்ள ஒரு சின்ன வீடு உண்டு. இந்த ரெண்டு வீட்டையும் தாத்தாவுக்குக் கொடுத்தார்.
அந்த 80 ஏக்கர் நிலம் மலைக்கோட்டைப் பகுதியில் தந்த அந்த ரெண்டு வீடுகள் எல்லாத்தையும் சிறுகச் சிறுக தர்ம காரியங்களுக்கே செலவு பண்ணினார் என்று கூறி முடித்தார் மஹா ஸ்வாமிகள்.
இதன் பின் அப்பாவுக்கு ஆசியளித்து வழியனுப்பி வைத்தார் மஹா ஸ்வாமிகள். மஹா ஸ்வாமிகளின் தரிசனத்துக்குப் போய் அவரிடம் இருந்து பூரண அனுக்ரஹமும் பெற்று வந்த என் அப்பா இந்த சம்பவத்தை அடிக்கடி என்னிடம் சொல்லிப் பெருமைப்படுவார்.
பெரியவா கடாக்ஷம் பரிபூரணம்
ஆற்காடு நவாபுக்கு ஜோசியர் ஆனவர் - ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி
படித்தேன் பகிர்கின்றேன் உங்களுடன்
நான் சொல்லும் நிகழ்ச்சி நடந்து பல வருடங்கள் ஆகிறது. அப்போது என் அப்பா பி.எம். நடராஜ சர்மா, திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் சம்ஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றினார்.
காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் மரியாதையும் பக்தியும் கொண்டவர் அவர். திருச்சி மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது நத்தம் கிராமம். ஒரு முறை மஹா ஸ்வாமிகள் அங்கு முகாமிட்டிருந்தார். அவர் நடத்தும் ஸ்ரீதிரிபுர சுந்தரி ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் பூஜையை தரிசிக்க விரும்பினார் என் அப்பா.
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை இரவில் நத்தம் கிராமத்தை அடைந்தார். பூஜை முடிந்தது அப்பாவை அங்குள்ள எவருக்கும் தெரியாது. எனவே எவரும் உபசரிக்கவில்லை. மஹா ஸ்வாமிகள் தந்த விபூதிப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு பந்தலில் ஒரு மூலையில் படுத்து விட்டார் அப்பா.
அடுத்து வந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் அப்படியே தான் கழிந்தன! பூஜைகளையும் ஆராதனையையும் கண்ணாரக் கண்டு தரிசித்தார். மூன்றாம் நாள் விநாயகர் சதுர்த்தி. சிறப்பு பூஜைகள் முடிந்ததும் ஸ்வாமிகளிடம் பிரசாதம் பெறச் சென்ற என் அப்பா நான் ஊருக்குப் போய் வருகிறேன்! என்றார். நிமிர்ந்து பார்த்த ஸ்வாமிகள் முதலில் பிள்ளையாருக்கு முன் உள்ள கொழுக்கட்டையை எடுத்துச் சென்று நிதானமா சாப்பிட்டப்புறம் வாங்கோ. ஊருக்குப் போறதைப் பத்தி பேசிக்கலாம்! என்றார்.
ஊருக்குப் போய் வருகிறேன் என்று ஒரு மரியாதை நிமித்தம் சொன்னதற்கு முதல்ல சாப்பிட்டு வா என்கிறாரே ஸ்வாமிகள்?! அப்பாவுக்கு பிரமிப்பு. ‘சரி’ என்று சாப்பிடப் போனார். சாப்பிட்டு முடித்ததும் அப்பாவை அழைத்து விசாரித்தார் ஸ்வாமிகள்.
என் அப்பா லால்குடி தாலூகாவில் உள்ள புதுக்குடி சீனிவாச ஜோதிடரின் பிள்ளை வழிப் பேரன் என்பதை அறிந்ததும் பெரியவா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என் அப்பாவின் தாத்தாவைப் பற்றியும் அவரது காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்து சொன்னார் ஸ்வாமிகள்.
அப்பாவுக்கோ ஆச்சரியம்!
ஸ்வாமிகள் தொடர்ந்தார் ‘உன்னோட தாத்தா மலையாள தேசம் போய் ஜோதிஷத்தை முறையா கத்துண்டு வந்தவர். தேவதைகளின் உபாசனையும் உண்டு. அவர் ஆற்காடு நவாபுக்கு ஜோசியர் ஆனது ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி. அப்போது திருச்சிராப்பள்ளி ஆற்காடு நவாப் ஆட்சியில் இருந்தது.
நவாப் பிடம் பல ஜோசியர்கள் உண்டு. ஒரு நாள் நவாப் தன் கச்சேரியில் (அரசவையில்) இருந்த ஜோசியர்களுடன் தனது ஆட்சிப் பிரதேசத்தில் இருந்த அனைத்து ஜோசியர்களையும் அவைக்கு வரும் படி அறிவித்தார்.
புது ஜோசியர்கள் பலரும் கூடினர். அதுல உன்னோட புதுக்குடி தாத்தாவும் ஒருத்தர்.
கச்சேரிக்கு நவாப் வந்ததும் திவான் எழுந்து நின்று அங்கு கூடி இருந்த ஜோதிடர்களைப் பார்த்து உங்களுக்கெல்லாம் இன்று ஒரு போட்டி வைக்கப் போகிறார் நவாப். இன்று நம் நவாப் கோட்டையில் இருந்து எந்த வழியாக வெளியேறி வேட்டைக்குப் போகப் போகிறார் என்று நீங்கள் எல்லோரும் ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுத்தரவேண்டும். எல்லாக் கூடுகளும் முத்திரையிடப்பட்டு எனது பாதுகாப்பில் இருக்கும். நவாப் திரும்பியதும் கூடுகளின் முத்திரைகள் உடைக்கப்பட்டு ஓலைகள் படிக்கப்படும். யார் எழுதியது சரியாக இருக்கிறதோ அவருக்கு நவாப் தக்க மரியாதை செய்வார்!’ என்று அறிவித்தார்.
உடனே எல்லா ஜோசியர்களும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்று அவரவர் கணக்குப்படி ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுக் கொடுத்தார்கள். கடைசியில் அன்று நவாப் கோட்டையின் பிரதான வாசல்கள் வழியாகப் போகவே இல்லை.
மேற்கு வாசலின் வடக்குப் புறம் (தற்போது மெயின்கார்டு கேட் எனப்படும் வாயிலுக்கு வடக்கே பெட்ரோல் பங்க் இருக்கும் வழி) கோட்டை மதிலை இடித்து வெளியேறி மேற்குத் திசையில் உறையூர் நோக்கிக் கொஞ்ச தூரம் சென்றார். பிறகு வடக்குத் திசையில் திரும்பி காவிரிக் கரை வரை போனார். அதன் பிறகு தெற்கு நோக்கித் திரும்பி வடக்கு ஆண்டார் வீதியில் இடிக்கப்பட்ட வாசப்படி (புதுப்படி சந்து என்று தற்சமயம் பெயர்) வழியாக மலைக்கோட்டை வடக்கு வீதியில் நுழைந்தார். பிறகு கிழக்குத் திசையில் திரும்பி சறுக்குப் பாறைத் தெரு வழியாகக் கிழக்கு ஆண்டார் வீதிக்கு வந்தார். மலையை வலமாக வந்து தற்சமயம் உள்ள சின்னக் கடைத் தெரு வழியாக இப்போ டவுன்ஹால் என்று சொல்லப்படுகிற கச்சேரிக்கு வந்து விட்டார். வேட்டையாடவே இல்லை.
நவாப் கச்சேரிக்குத் திரும்பிய பின் ஜோசியர்கள் கொடுத்த கூடுகள் ஒவ்வொன்றும் முத்திரை உடைக்கப்பட்டு பிரிக்கப்பட்டன. ஓலைகள் எடுத்துப் படிக்கப்பட்டன.
உன்னோட தாத்தா எழுதிக் கொடுத்த ஓலை ஒன்று மட்டுமே துல்லியமாக நவாப்பின் நடவடிக்கையைக் குறிப்பிட்டிருந்தது.
நவாப் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். கச்சேரில இருந்தவர்களும் பிரமிச்சுப் போயிட்டா.
அப்புறம் நவாப் உன்னோட தாத்தாவுக்குப் புதுக்குடியில் 80 ஏக்கர் நிலம் பட்டயம் செய்து கொடுத்தார். மலைக்கோட்டை தெற்கு வீதில மேற்கே ஒரு கருப்புக் கோயில் இருக்கு. அதுக்குப் பக்கம் இரும்புக் கிராதி போட்ட ஒசரமான ஒரு பெரிய வீடு இருக்கு. அதன் எதிரே திண்ணை உள்ள ஒரு சின்ன வீடு உண்டு. இந்த ரெண்டு வீட்டையும் தாத்தாவுக்குக் கொடுத்தார்.
அந்த 80 ஏக்கர் நிலம் மலைக்கோட்டைப் பகுதியில் தந்த அந்த ரெண்டு வீடுகள் எல்லாத்தையும் சிறுகச் சிறுக தர்ம காரியங்களுக்கே செலவு பண்ணினார் என்று கூறி முடித்தார் மஹா ஸ்வாமிகள்.
இதன் பின் அப்பாவுக்கு ஆசியளித்து வழியனுப்பி வைத்தார் மஹா ஸ்வாமிகள். மஹா ஸ்வாமிகளின் தரிசனத்துக்குப் போய் அவரிடம் இருந்து பூரண அனுக்ரஹமும் பெற்று வந்த என் அப்பா இந்த சம்பவத்தை அடிக்கடி என்னிடம் சொல்லிப் பெருமைப்படுவார்.
பெரியவா கடாக்ஷம் பரிபூரணம்
-
- Posts: 3033
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Kanchi Maha Periyava
A share
பெரியவாளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை... முக்குறுணிக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு...''
தேனம்பாக்க நிகழ்வுகள்
நன்றி: ஸ்ரீமடம் பாலு சார்.
''பெரியவாளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை... முக்குறுணிக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு...'' என்றவர், அது பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
''மதுரை, திருச்சி, ராமேஸ்வரம்னு சில தலங்களில் முக்குறுணிப் பிள்ளையார் உண்டு. முக்குறுணின்னா... ஆறு படி அளவு.
பெரியவா அரிசி அரைச்சுட்டு வரச் சொன்னார். பிரம்மசாரி ராமகிருஷ்ணன்கிட்ட ஐம்பது தேங்காயை உடைச்சு துருவிக் கொண்டுவரும்படி சொன்னார். பூரணம் பண்ணி ஒரே கொழுக் கட்டையா செய்யணும். பெரியவா ஆலோசனைப்படி எட்டு முழ வேட்டியில் கட்டி, வரதராஜ பெருமாள் கோயில்ல இருந்து பெரிய அண்டா கொண்டு வந்தோம். அன்னிக்கு காலைலேர்ந்து சாயங்கால வரைக்கும் கொழுக்கட்டை வெந்தது.
சரி... பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணுமே. கொழுக்கட்டையை பெரியவா முன்னாடி வைத்ததும்... 'தேனம்பாக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அங்க வாசல்படியில் வெச்சுட்டு வந்துடுங்கோ’ன்னார் பெரியவா. பக்தர்களும் அப்படியே செஞ்சாங்க. அங்க என்னடான்னா... கோயில் வாசல்ல பெரிய மூட்டை கணக்கா இருந்த அண்டாவைப் பார்த்ததும், ஊர் ஜனங்க என்னவோ ஏதோன்னு பதறிட்டாங்க. அப்புறமா, அது பிள்ளையாருக்கான நைவேத்தியம்னு தெரிஞ்சதும், கட்டைப் பிரிச்சிருக்காங்க. உள்ளே பிரமாண்ட கொழுக்கட்டை!
எல்லாருமா பிரிச்சு சாப்பிட்டதுக்குப் பிறகு, 'சாமி, கொழுக்கட்டை நல்லா இருந்தது’ன்னு பெரியவாளை நமஸ்காரம் பண்ணினாங்க. பெரியவாளுக்கோ, பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணும்கற ஆசை நிறைவேறியதோட, ஜனங்களுக்கு அந்தக் கொழுக்கட்டையைத் தின்னக் கொடுத்த திருப்தி!'' என்ற பாலு, அடுத்து ஒரு கிரகணத்தன்று நடந்த சம்பவத்தை விவரித்தார்.
''அந்த முறை பெரியவாளோட அனுஷ நட்சத்திரத்துலேயே கிரகணம் பிடிச்சது. கிரகணம் விட்டு ஸ்நானம் எல்லாம் முடிஞ்சதும், தானம் செய்ய உட்கார்ந்தார் பெரியவா. நிறைவா பசு மாடு கொடுக்கணும். திருவட்டீசுவரன்பேட்டை வெங்கட்ராமன், பசு மாட்டுக்குப் பதிலா மட்டைத் தேங்காயை எடுத்து வைத்தார்.
அதாவது, பசு தானம் செய்ய முடியலைன்னா அதுக்கு ப்ரீத்தியாக மட்டைத் தேங்காய் கொடுப்பார்கள். ஆனா, மகா பெரியவா கோவிச்சுக்கிட்டார். 'என்னை ஏமாத்தப் பார்க்கறியா? மாட்டைக் கொண்டு வான்னா, நல்லதா ஒரு மாட்டைத்தான் கொண்டு வரணும்’னுட்டார். அப்புறம், எப்படியோ நல்லதொரு கறவை மாடாகக் கொண்டு வந்து நிறுத்தினாங்க. அதைத் தானம் கொடுத்த பிறகுதான் பெரியவாளுக்குத் திருப்தி! அதேபோன்று பூதானத்துக்கு ப்ரீத்தியா சந்தனக் கட்டை கொடுக்கலாம். ஆனால், அப்போதும் பெரியவா, கூடலூர் கல்யாண சுந்தரமய்யர் கொடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டார்!
விளாப்பாக்கம் என்ற ஊரில் குமரேசன்னு ஒரு பக்தர். அவர் குடும்பத்துல யாரோ பில்லி-சூன்யம் வெச்சுட்டாங்க. குளிச்சு உலர்த்தும் ஈரத்துணியும் தீப்பிடிக்குமாம். அவர் பெண்ணுக்குக் கண்ணைத் திறக்கவே முடியாது. ஜோசியம்லாம் பார்த்தும் பலனில்லை. அவர், தன் பெண்ணை பெரியவாகிட்ட அழைச்சுட்டு வந்தார். 'யாரோ என் பெண்ணோட கண்ணைக் கட்டிட்டா! பெரியவாதான் அனுக்கிரகம் பண்ணணும்’னு கதறினார். பெரியவா, அந்தப் பெண்ணோட கண்ணையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். அப்புறம், அவளை துர்கை சந்நிதிக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். அம்பாளுக்கு முன்னாடி நிறுத்தி, கண்ணைத் திறக்கும்படி சொன்னார். என்ன ஆச்சரியம்..! அவளால் கண்ணைத் திறக்க முடிஞ்சுது. கண்ணைத் திறந்ததும், எதிரே துர்கை தரிசனம்... சிலிர்த்துப் போயிட்டா. அவளுக்குப் பார்வை சரியானதோடு, அன்னியிலேர்ந்து வீட்டில் துணிமணிகள் தீப்பற்றி எரிவதும் நின்னு போச்சு!''
- பாலு சொல்லி முடிக்க, அந்தக் கருணைக் கடாட்சங்களை எண்ணி, நம்மையும் அறியாமல் காஞ்சி தெய்வத்தை தொழுது பணிகிறது நம் உள்ளம்.
பெரியவாளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை... முக்குறுணிக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு...''
தேனம்பாக்க நிகழ்வுகள்
நன்றி: ஸ்ரீமடம் பாலு சார்.
''பெரியவாளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை... முக்குறுணிக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு...'' என்றவர், அது பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
''மதுரை, திருச்சி, ராமேஸ்வரம்னு சில தலங்களில் முக்குறுணிப் பிள்ளையார் உண்டு. முக்குறுணின்னா... ஆறு படி அளவு.
பெரியவா அரிசி அரைச்சுட்டு வரச் சொன்னார். பிரம்மசாரி ராமகிருஷ்ணன்கிட்ட ஐம்பது தேங்காயை உடைச்சு துருவிக் கொண்டுவரும்படி சொன்னார். பூரணம் பண்ணி ஒரே கொழுக் கட்டையா செய்யணும். பெரியவா ஆலோசனைப்படி எட்டு முழ வேட்டியில் கட்டி, வரதராஜ பெருமாள் கோயில்ல இருந்து பெரிய அண்டா கொண்டு வந்தோம். அன்னிக்கு காலைலேர்ந்து சாயங்கால வரைக்கும் கொழுக்கட்டை வெந்தது.
சரி... பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணுமே. கொழுக்கட்டையை பெரியவா முன்னாடி வைத்ததும்... 'தேனம்பாக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அங்க வாசல்படியில் வெச்சுட்டு வந்துடுங்கோ’ன்னார் பெரியவா. பக்தர்களும் அப்படியே செஞ்சாங்க. அங்க என்னடான்னா... கோயில் வாசல்ல பெரிய மூட்டை கணக்கா இருந்த அண்டாவைப் பார்த்ததும், ஊர் ஜனங்க என்னவோ ஏதோன்னு பதறிட்டாங்க. அப்புறமா, அது பிள்ளையாருக்கான நைவேத்தியம்னு தெரிஞ்சதும், கட்டைப் பிரிச்சிருக்காங்க. உள்ளே பிரமாண்ட கொழுக்கட்டை!
எல்லாருமா பிரிச்சு சாப்பிட்டதுக்குப் பிறகு, 'சாமி, கொழுக்கட்டை நல்லா இருந்தது’ன்னு பெரியவாளை நமஸ்காரம் பண்ணினாங்க. பெரியவாளுக்கோ, பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணும்கற ஆசை நிறைவேறியதோட, ஜனங்களுக்கு அந்தக் கொழுக்கட்டையைத் தின்னக் கொடுத்த திருப்தி!'' என்ற பாலு, அடுத்து ஒரு கிரகணத்தன்று நடந்த சம்பவத்தை விவரித்தார்.
''அந்த முறை பெரியவாளோட அனுஷ நட்சத்திரத்துலேயே கிரகணம் பிடிச்சது. கிரகணம் விட்டு ஸ்நானம் எல்லாம் முடிஞ்சதும், தானம் செய்ய உட்கார்ந்தார் பெரியவா. நிறைவா பசு மாடு கொடுக்கணும். திருவட்டீசுவரன்பேட்டை வெங்கட்ராமன், பசு மாட்டுக்குப் பதிலா மட்டைத் தேங்காயை எடுத்து வைத்தார்.
அதாவது, பசு தானம் செய்ய முடியலைன்னா அதுக்கு ப்ரீத்தியாக மட்டைத் தேங்காய் கொடுப்பார்கள். ஆனா, மகா பெரியவா கோவிச்சுக்கிட்டார். 'என்னை ஏமாத்தப் பார்க்கறியா? மாட்டைக் கொண்டு வான்னா, நல்லதா ஒரு மாட்டைத்தான் கொண்டு வரணும்’னுட்டார். அப்புறம், எப்படியோ நல்லதொரு கறவை மாடாகக் கொண்டு வந்து நிறுத்தினாங்க. அதைத் தானம் கொடுத்த பிறகுதான் பெரியவாளுக்குத் திருப்தி! அதேபோன்று பூதானத்துக்கு ப்ரீத்தியா சந்தனக் கட்டை கொடுக்கலாம். ஆனால், அப்போதும் பெரியவா, கூடலூர் கல்யாண சுந்தரமய்யர் கொடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டார்!
விளாப்பாக்கம் என்ற ஊரில் குமரேசன்னு ஒரு பக்தர். அவர் குடும்பத்துல யாரோ பில்லி-சூன்யம் வெச்சுட்டாங்க. குளிச்சு உலர்த்தும் ஈரத்துணியும் தீப்பிடிக்குமாம். அவர் பெண்ணுக்குக் கண்ணைத் திறக்கவே முடியாது. ஜோசியம்லாம் பார்த்தும் பலனில்லை. அவர், தன் பெண்ணை பெரியவாகிட்ட அழைச்சுட்டு வந்தார். 'யாரோ என் பெண்ணோட கண்ணைக் கட்டிட்டா! பெரியவாதான் அனுக்கிரகம் பண்ணணும்’னு கதறினார். பெரியவா, அந்தப் பெண்ணோட கண்ணையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். அப்புறம், அவளை துர்கை சந்நிதிக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். அம்பாளுக்கு முன்னாடி நிறுத்தி, கண்ணைத் திறக்கும்படி சொன்னார். என்ன ஆச்சரியம்..! அவளால் கண்ணைத் திறக்க முடிஞ்சுது. கண்ணைத் திறந்ததும், எதிரே துர்கை தரிசனம்... சிலிர்த்துப் போயிட்டா. அவளுக்குப் பார்வை சரியானதோடு, அன்னியிலேர்ந்து வீட்டில் துணிமணிகள் தீப்பற்றி எரிவதும் நின்னு போச்சு!''
- பாலு சொல்லி முடிக்க, அந்தக் கருணைக் கடாட்சங்களை எண்ணி, நம்மையும் அறியாமல் காஞ்சி தெய்வத்தை தொழுது பணிகிறது நம் உள்ளம்.
-
- Posts: 3033
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Kanchi Maha Periyava
A share
கிருஷ்ண பக்தை அம்மாளு அம்மாள்
கன்னட தேசத்துப்பெண் ஒருவள் அங்கே வாழும் பெரும்பாலானவர்கள் போல மாத்வ வகுப்பை சேர்ந்தவள். கும்பகோணத்தில் இத்தகைய ஒரு
குடும்பத்தில் 1906ல் அவள் பிறந்தாள் .
அந்த கால வழக்கப்படி குழந்தையாக இருந்த போதே அவளுக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில், புருஷன் என்கிற பையன் பொறுப்பான கணவனாக மாறுவதற்கு முன்பே மரணம் அடைந்ததால் அவள் குழந்தை விதவை ஆகிவிட்டாள் . அப்பப்பா, அந்தக்கால விதவைகளுக்கு நிகழ்ந்த கொடுமைகளை எழுத்தால் விவரிக்க முடியாது. சமூகத்தில் ஒதுக்கப்பட்ட ஜென்மங்கள். அந்த பெண் உருவத்தில் சிதைக்கப்பட்டு, உள்ளத்தில் நொறுக்கப்பட்டு, சமூகத்தில் அபசகுனமாக வெறுக்கப்பட்டு
உலகத்தால் சபிக்கப்பட்ட ஒரு ஜீவனாக பசியிலும் அவமானத்திலும் வளர்ந்து வாழ்ந்தாள். நரசிம்மனிடம், நாராயணனிடம், கிருஷ்ணனிடம் அவள் கொண்ட பக்தி ஒன்றே அவளை உயிர்வாழ்வதில் கொஞ்சமாவது அக்கறை கொள்ள செய்தது.
இந்த சமூகம் எனும் கொடிய உலகத்திலிருந்து, நரகத்திலிருந்து விடுதலைபெற தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாள் . பக்கத்தில் ஒரு ஆழமான குளம். கண்களை மூடி ஒருநாள் ''பகவானே, என்னை ஏற்றுக்கொள் '' என்று குதிக்கும்போது ''நில் '' என்று ஒரு குரல் தடுத்தது. கண் விழித்தாள். உக்கிரமான நரசிம்மன் அவள் எதிரே சாந்தஸ்வரூபியாக நின்றான்.
''எதற்காக இந்த தற்கொலை முயற்சி உனக்கு. உனக்கு கடைசி நிமிஷம் வரை உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க நிழலும் தான் கிடைக்கபோகிறதே'' என்ற நரசிம்மனை வாழ்த்தி வணங்கினாள் .
''பகவானே, எனக்கு ஒரு வரம் தா''
''என்ன கேள் அம்மாளு ''. அவள் எல்லோராலும் அம்மாளு என்று தான் அழைக்கப்பட்டவள்.
''எனக்கு பசியே இருக்கக்கூடாது''.
''அம்மாளு , இனி உனக்கு பசி என்றால் என்ன என்றே தெரியாது. போதுமா'' என்று தெய்வம் வரமளித்தது.
அன்று முதல், ஒரு நாளைக்கு ஒருமுறை ஒரு டம்பளர் மோர், பால், ஏதாவது ஒரு பழம் என்று கடைசி வரை வாழ்ந்த அம்மாளு அம்மாள் உணவை தொடவில்லை. ஏகாதசி அன்று அதுவும் கிடையாது. உற்சாகத்தோடு இருந்தாள். கிருஷ்ண பஜனையில் நாள் தோறும் அற்புதமாக தனைமறந்த நிலையில் கடைசி மூச்சு பிரியும் வரை ஈடுபட்டாள்.
இளம் விதைவையாக வாழ்ந்த அம்மாளு அம்மாளுக்கு ஒரு நாள் பாண்டுரங்கன் கனவில் உத்தரவிட்டான்.
''நீ பண்டரிபுரம் வாயேன்'' என்றான் பண்டரிநாதன்.
இந்த குரல் அவளை மறுநாள் பொழுது விடிந்ததும் பண்டரிபுரம் போக வைத்தது. எப்படி தனியாக போவது என்று அவளது அம்மாவை ''நீயும் என் கூட வா '' என்று கூப்பிட வைத்தது. அம்மா வரவில்லை. தனியாக கட்டிய துணியோடும் , தம்புராவோடும் பண்டரிபுரம் சென்றவள் பல வருஷங்கள் அங்கேயே தங்கிவிட்டாள் . கோவிலை அலம்பினாள் , பெருக்கினாள் , கோலமிட்டாள், மலர்கள் பறித்து மாலை தொடுத்தாள் , சூட்டினாள், பாடினாள் நிறைய பக்ஷணங்கள், உணவு வகைகள் சமைத்தாள். எல்லாம் அவளது அடுப்பில் குமுட்டியிலும் தான். பாண்டுரங்கனுக்கு திருப்தியோடு அர்பணித்தாள் . எல்லோருக்கும் அவற்றை பிரசாதமாக விநியோகித்தாள். ஆனால் அவைகளில் ஒரு துளியும் அவள் உட்கொள்ளவில்லை.
அந்த ஊர் ராணி, அம்மாளுவின் பூஜைக்காக வெள்ளி தங்க பாத்திரங்கள் நிறைய கொடுத்தாள். கண்ணில் கண்டவர்களுக்கு எல்லாம் அவற்றை அப்படியே விநியோகம் செய்து விட்டாள் அம்மாளு அம்மாள். பணத்தை தொட்டதே இல்லை. கீர்த்தனங்கள் சர மாரியாக அவள் வாயிலிருந்து பிறந்தன. எந்த க்ஷேத்ரம் சென்றாலும் அந்த ஸ்தல மஹிமை அப்படியே அவள் பாடலில் த்வனிக்கும்,. அவள் அந்த க்ஷேத்ரங்களுக்கு அதற்கு முன் சென்றதில்லை, ஒன்றுமே தெரியாது, என்றாலும் இந்த அதிசயம் பல க்ஷேத்ரங்களில் நடந்திருக்கிறது! இன்னொரு அதிசயம் சொல்கிறேன்.
ஒரு பெரியவர் மரணத்தருவாயில் இருக்கும்போது உறவினர்கள் அம்மாளுவை அவரிடம் அழைத்து போனார்கள். அவரைப் பார்த்ததும் அவர் உயிர் பிரிந்து போவது தெரிந்தது. உடனே அம்மாளு தனைமறந்த நிலையில் கண்களை மூடி பாடினாள். அவரது உயிரை ராம நாமம் தூக்கி செல்வது அவளுக்கு தெரிந்தது. அதை பாடினாள். அருகே இருந்த உறவினர்களுக்கு அந்த மனிதர் ராமநாமம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தவர் என்பதே தெரியாது. பிறகு தான் தெரிந்தது!
அம்மாளு அம்மாள் நரசிம்மனை மறப்பாளா? தன் உயிரைக் காத்து புதிய பாதை அமைத்துக் கொடுத்த நரசிம்மனுக்கு ஜெயந்தியை விமரிசையாக கொண்டாடினாள். அன்று 108 வகை பிரசாதங்கள், பக்ஷணங்களை ஆசையோடு தயாரித்தாள். வழக்கமான உணவும் இதைத்தவிர சமைத்தாள். '' இந்தா நரசிம்மா வா, வந்து இதை ஏற்றுக்கொள்'' என்று அர்பணித்தாள். அன்று வெகு அருமையான கீர்த்தனங்களை பொழிவாள். தானாகவே தைல தாரையாக ஆயிரக்கணக்கான ஸ்லோகங்கள், கீர்த்தனைகள் அவள் வாயிலிருந்து புறப்பட்டிருக்கிறது.
ஒரு ஆச்சர்யமான சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். மஹா பெரியவா கும்பகோணத்தில் தங்கி இருந்த போது ஒருநாள் ஒரு மாத்வர் ''என் பெண்ணுக்கு கல்யாணம். பெரியவா ஆசீர்வாதம் அனுக்கிரஹம் பெற வந்திருக்கிறேன்'' என்கிறார்.
''என்கிட்டே எதுக்கு வந்திருக்கே. மரத்தடியில் ஒரு நித்யஉபவாசி இருக்காளே அவா கிட்டே போய் ஆசிர்வாதம் வாங்கிக்கோ. உனக்கு சர்வ மங்களமும் சித்திக்கும். வேண்டிக்கொண்ட எண்ணங்களும் நிறைவேறும் ''.பெரியவா இவ்வாறு அம்மாளு அம்மாளின் மஹத்வத்தை எல்லோருக்கும் அறிவித்ததற்கு பிறகு நிறைய பக்தர்கள் அம்மாளுவை சூழ்ந்து கொண்டார்கள். மஹா பெரியவா ஒரு தடவை ''அம்மாளு அம்மாள் புரந்தர தாசர் அம்சம்'' என்று கூறியிருக்கிறார்.
பாகவத தர்மத்தின் உதாரணமாக நித்ய பஜனை, ஆடல் பாடல் என்று அவள் வாழ்க்கை பூரணமாக கடந்தது. கிருஷ்ணனை நேரில் கண்டாள் என்பார்கள்.
ஒரு சமயம் சென்னை ஜார்ஜ் டவுனில் நாராயண முதலி தெருவில் நாராயண செட்டி சத்திரத்தில் அம்மாளு அம்மாள் தங்கியிருந்தார். அப்போது சென்னையில் பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே பங்கேற்ற நாட்டியக் கலைஞர்கள் கோபிநாத் மற்றும் தங்கமணி, தம் குழுவினருடன் இரவு நேரக் கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு அம்மாளு அம்மாள் தங்கியிருந்த சத்திரத்தின் மேல் தளத்திற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய நிலையில் சற்றே கண்ணயரும் நிலையில், கீழே தாள சப்தமும், நர்த்தனம் ஆடும் சப்தமும் கேட்டதும் இந்நேரத் தில் யார் ஆடுவார்? ப்ரமையோ என்றிருந்தனர். மீண்டும் மீண்டும் இன்னமும் சப்தம் அதிகரிக்க, நாட்டியக் கலைஞர்கள் கீழே வந்து பார்த்தபோது அம்மாளு அம்மாள் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தார்.
உடனே தாளத்தை வாங்கி நாட்டியத்தில் அனுபவம் மிக்க கலைஞர்கள் தாளம் போட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை மறந்து நாட்டியத்தில் லயித்தனர். கேதார ராகத்தில் ‘பாலக் கடல சய்யா’ எனும் கீர்த்தனம் பிறந்தது. எல்லாம் முடிந்ததும் நாட்டியக் கலைஞர்கள் அம்மாளு அம்மாவை வணங்கி, ‘‘சில ஜதிகள், நாட்டிய சாஸ்திரம் நன்கு கற்றவர்களாலேயே ஆட முடியாது. அதைப்போன்ற, எவராலும் சாதாரணமாக ஆட முடி யாத தெய்வீக நர்த்தனத்தை இன்று கண்டோம். இது யாரிடமும் பயின்று வருவதல்ல, யாராலும் பயிற்றுவிக்க முடியாததும்கூட’’ என்று கூறி பிரமித்து நின்றனர். ‘‘இன்று இதைக் கண்டது நாங்கள் செய்த பேறு’’ என உணர்ச்சிவசப்பட்டனர். இவள் புரந்தர தாஸரின் அவதாரம் என்று ஒருமனதாக புகழ்ந்தார்கள்.
2002ல் மதுராபுரி ஆஸ்ரமத்தில் 94வயதில் நேரிலேயே கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் தரிசனம் கிடைத்தது. அந்த கணமே ''நாக்கு கால மூர்தியு நீனே '‘nAkku kAla murtiyu neenE’ நீ தானே நாலு கால மூர்த்தி என பாடினாள் . அந்த நாலு கால மூர்த்திகள் யார்? விடியற்காலையில் ஸ்ரீமந் நாராயணன், காலை முடியும் நேரம் ஸ்ரீ ராமன், அந்தி நேரத்தில் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மன், இரவில் ஸ்ரீ வேணுகோபாலன், கோபிநாதன்.
பங்குனி உத்தரம் சிறந்த நாள். கௌரி சிவனை அடைந்தாள். சீதை ராமனை அடைந்தாள். ஆண்டாள் பரமனை அடைந்தாள். கடைசி காலங்களை கும்பகோணத்தில் கழித்தாள். வயதானாலும் கிருஷ்ணனை தூங்கப்பண்ணி, எழுப்பி, குளிப்பாட்டி, சிங்காரித்து, ஆடைகள் அணிவித்து, பாடி, உணவு சமைத்து நிவேதித்து, தாயாக பாண்டுரங்கனுக்கு சேவை செய்தவள் அம்மாளு அம்மாள்.கிருஷ்ண பக்தை அம்மாளு அம்மாள் 104 வயது வாழ்ந்து 2010 பங்குனி உத்திரம் அன்று சித்தி அடைந்தாள். அதற்கு சில நாட்கள் முன்பே அவளது நாவில் ஒரு பாடல் வைகுண்டம் எப்படி இருக்கும் என விவரித்தது .
அவளது குரு ராமச்சந்திர தீர்த்தர் சமாதி கும்பகோணம் காவிரிக்கரையில் அமரேந்திர புரத்தில் உள்ளது.
A few days before her departure from the world a kirtan describing the Vaikuntam fell out of her lips in divine trance!
“kalau khalu bhavishyanti nArayana parAyanAh
kvachit kvachin mahArAja dravideshu cha bhUrishaha
tAmraparNI nadI yatra krutamAlA payasvini
kAverI cha mahApuNyA pratichI cha mahAnadI”
கலியுகத்தில், த்ராவிட தேசம் எனும் தென்னிந்தியாவில், தாமிரபரணி, க்ருதமாலா, பயஸ்வினி, காவேரி, மகாநதி போன்ற புண்ய நதிக்கரை பிரதேசங்களில் எண்ணற்ற நாராயண பக்தர்கள் தோன்று வார்கள் என்று மேலே கண்ட ஸ்லோகம் சொல்கிறது. ஆகவே தான் அற்புத ஆழ்வார்கள் போல் அம்மாளு அம்மாளும் நம்மிடையே தோன்றி இருக்கிறாள்.
கிருஷ்ண பக்தை அம்மாளு அம்மாள்
கன்னட தேசத்துப்பெண் ஒருவள் அங்கே வாழும் பெரும்பாலானவர்கள் போல மாத்வ வகுப்பை சேர்ந்தவள். கும்பகோணத்தில் இத்தகைய ஒரு
குடும்பத்தில் 1906ல் அவள் பிறந்தாள் .
அந்த கால வழக்கப்படி குழந்தையாக இருந்த போதே அவளுக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில், புருஷன் என்கிற பையன் பொறுப்பான கணவனாக மாறுவதற்கு முன்பே மரணம் அடைந்ததால் அவள் குழந்தை விதவை ஆகிவிட்டாள் . அப்பப்பா, அந்தக்கால விதவைகளுக்கு நிகழ்ந்த கொடுமைகளை எழுத்தால் விவரிக்க முடியாது. சமூகத்தில் ஒதுக்கப்பட்ட ஜென்மங்கள். அந்த பெண் உருவத்தில் சிதைக்கப்பட்டு, உள்ளத்தில் நொறுக்கப்பட்டு, சமூகத்தில் அபசகுனமாக வெறுக்கப்பட்டு
உலகத்தால் சபிக்கப்பட்ட ஒரு ஜீவனாக பசியிலும் அவமானத்திலும் வளர்ந்து வாழ்ந்தாள். நரசிம்மனிடம், நாராயணனிடம், கிருஷ்ணனிடம் அவள் கொண்ட பக்தி ஒன்றே அவளை உயிர்வாழ்வதில் கொஞ்சமாவது அக்கறை கொள்ள செய்தது.
இந்த சமூகம் எனும் கொடிய உலகத்திலிருந்து, நரகத்திலிருந்து விடுதலைபெற தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாள் . பக்கத்தில் ஒரு ஆழமான குளம். கண்களை மூடி ஒருநாள் ''பகவானே, என்னை ஏற்றுக்கொள் '' என்று குதிக்கும்போது ''நில் '' என்று ஒரு குரல் தடுத்தது. கண் விழித்தாள். உக்கிரமான நரசிம்மன் அவள் எதிரே சாந்தஸ்வரூபியாக நின்றான்.
''எதற்காக இந்த தற்கொலை முயற்சி உனக்கு. உனக்கு கடைசி நிமிஷம் வரை உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க நிழலும் தான் கிடைக்கபோகிறதே'' என்ற நரசிம்மனை வாழ்த்தி வணங்கினாள் .
''பகவானே, எனக்கு ஒரு வரம் தா''
''என்ன கேள் அம்மாளு ''. அவள் எல்லோராலும் அம்மாளு என்று தான் அழைக்கப்பட்டவள்.
''எனக்கு பசியே இருக்கக்கூடாது''.
''அம்மாளு , இனி உனக்கு பசி என்றால் என்ன என்றே தெரியாது. போதுமா'' என்று தெய்வம் வரமளித்தது.
அன்று முதல், ஒரு நாளைக்கு ஒருமுறை ஒரு டம்பளர் மோர், பால், ஏதாவது ஒரு பழம் என்று கடைசி வரை வாழ்ந்த அம்மாளு அம்மாள் உணவை தொடவில்லை. ஏகாதசி அன்று அதுவும் கிடையாது. உற்சாகத்தோடு இருந்தாள். கிருஷ்ண பஜனையில் நாள் தோறும் அற்புதமாக தனைமறந்த நிலையில் கடைசி மூச்சு பிரியும் வரை ஈடுபட்டாள்.
இளம் விதைவையாக வாழ்ந்த அம்மாளு அம்மாளுக்கு ஒரு நாள் பாண்டுரங்கன் கனவில் உத்தரவிட்டான்.
''நீ பண்டரிபுரம் வாயேன்'' என்றான் பண்டரிநாதன்.
இந்த குரல் அவளை மறுநாள் பொழுது விடிந்ததும் பண்டரிபுரம் போக வைத்தது. எப்படி தனியாக போவது என்று அவளது அம்மாவை ''நீயும் என் கூட வா '' என்று கூப்பிட வைத்தது. அம்மா வரவில்லை. தனியாக கட்டிய துணியோடும் , தம்புராவோடும் பண்டரிபுரம் சென்றவள் பல வருஷங்கள் அங்கேயே தங்கிவிட்டாள் . கோவிலை அலம்பினாள் , பெருக்கினாள் , கோலமிட்டாள், மலர்கள் பறித்து மாலை தொடுத்தாள் , சூட்டினாள், பாடினாள் நிறைய பக்ஷணங்கள், உணவு வகைகள் சமைத்தாள். எல்லாம் அவளது அடுப்பில் குமுட்டியிலும் தான். பாண்டுரங்கனுக்கு திருப்தியோடு அர்பணித்தாள் . எல்லோருக்கும் அவற்றை பிரசாதமாக விநியோகித்தாள். ஆனால் அவைகளில் ஒரு துளியும் அவள் உட்கொள்ளவில்லை.
அந்த ஊர் ராணி, அம்மாளுவின் பூஜைக்காக வெள்ளி தங்க பாத்திரங்கள் நிறைய கொடுத்தாள். கண்ணில் கண்டவர்களுக்கு எல்லாம் அவற்றை அப்படியே விநியோகம் செய்து விட்டாள் அம்மாளு அம்மாள். பணத்தை தொட்டதே இல்லை. கீர்த்தனங்கள் சர மாரியாக அவள் வாயிலிருந்து பிறந்தன. எந்த க்ஷேத்ரம் சென்றாலும் அந்த ஸ்தல மஹிமை அப்படியே அவள் பாடலில் த்வனிக்கும்,. அவள் அந்த க்ஷேத்ரங்களுக்கு அதற்கு முன் சென்றதில்லை, ஒன்றுமே தெரியாது, என்றாலும் இந்த அதிசயம் பல க்ஷேத்ரங்களில் நடந்திருக்கிறது! இன்னொரு அதிசயம் சொல்கிறேன்.
ஒரு பெரியவர் மரணத்தருவாயில் இருக்கும்போது உறவினர்கள் அம்மாளுவை அவரிடம் அழைத்து போனார்கள். அவரைப் பார்த்ததும் அவர் உயிர் பிரிந்து போவது தெரிந்தது. உடனே அம்மாளு தனைமறந்த நிலையில் கண்களை மூடி பாடினாள். அவரது உயிரை ராம நாமம் தூக்கி செல்வது அவளுக்கு தெரிந்தது. அதை பாடினாள். அருகே இருந்த உறவினர்களுக்கு அந்த மனிதர் ராமநாமம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தவர் என்பதே தெரியாது. பிறகு தான் தெரிந்தது!
அம்மாளு அம்மாள் நரசிம்மனை மறப்பாளா? தன் உயிரைக் காத்து புதிய பாதை அமைத்துக் கொடுத்த நரசிம்மனுக்கு ஜெயந்தியை விமரிசையாக கொண்டாடினாள். அன்று 108 வகை பிரசாதங்கள், பக்ஷணங்களை ஆசையோடு தயாரித்தாள். வழக்கமான உணவும் இதைத்தவிர சமைத்தாள். '' இந்தா நரசிம்மா வா, வந்து இதை ஏற்றுக்கொள்'' என்று அர்பணித்தாள். அன்று வெகு அருமையான கீர்த்தனங்களை பொழிவாள். தானாகவே தைல தாரையாக ஆயிரக்கணக்கான ஸ்லோகங்கள், கீர்த்தனைகள் அவள் வாயிலிருந்து புறப்பட்டிருக்கிறது.
ஒரு ஆச்சர்யமான சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். மஹா பெரியவா கும்பகோணத்தில் தங்கி இருந்த போது ஒருநாள் ஒரு மாத்வர் ''என் பெண்ணுக்கு கல்யாணம். பெரியவா ஆசீர்வாதம் அனுக்கிரஹம் பெற வந்திருக்கிறேன்'' என்கிறார்.
''என்கிட்டே எதுக்கு வந்திருக்கே. மரத்தடியில் ஒரு நித்யஉபவாசி இருக்காளே அவா கிட்டே போய் ஆசிர்வாதம் வாங்கிக்கோ. உனக்கு சர்வ மங்களமும் சித்திக்கும். வேண்டிக்கொண்ட எண்ணங்களும் நிறைவேறும் ''.பெரியவா இவ்வாறு அம்மாளு அம்மாளின் மஹத்வத்தை எல்லோருக்கும் அறிவித்ததற்கு பிறகு நிறைய பக்தர்கள் அம்மாளுவை சூழ்ந்து கொண்டார்கள். மஹா பெரியவா ஒரு தடவை ''அம்மாளு அம்மாள் புரந்தர தாசர் அம்சம்'' என்று கூறியிருக்கிறார்.
பாகவத தர்மத்தின் உதாரணமாக நித்ய பஜனை, ஆடல் பாடல் என்று அவள் வாழ்க்கை பூரணமாக கடந்தது. கிருஷ்ணனை நேரில் கண்டாள் என்பார்கள்.
ஒரு சமயம் சென்னை ஜார்ஜ் டவுனில் நாராயண முதலி தெருவில் நாராயண செட்டி சத்திரத்தில் அம்மாளு அம்மாள் தங்கியிருந்தார். அப்போது சென்னையில் பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே பங்கேற்ற நாட்டியக் கலைஞர்கள் கோபிநாத் மற்றும் தங்கமணி, தம் குழுவினருடன் இரவு நேரக் கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு அம்மாளு அம்மாள் தங்கியிருந்த சத்திரத்தின் மேல் தளத்திற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய நிலையில் சற்றே கண்ணயரும் நிலையில், கீழே தாள சப்தமும், நர்த்தனம் ஆடும் சப்தமும் கேட்டதும் இந்நேரத் தில் யார் ஆடுவார்? ப்ரமையோ என்றிருந்தனர். மீண்டும் மீண்டும் இன்னமும் சப்தம் அதிகரிக்க, நாட்டியக் கலைஞர்கள் கீழே வந்து பார்த்தபோது அம்மாளு அம்மாள் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தார்.
உடனே தாளத்தை வாங்கி நாட்டியத்தில் அனுபவம் மிக்க கலைஞர்கள் தாளம் போட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை மறந்து நாட்டியத்தில் லயித்தனர். கேதார ராகத்தில் ‘பாலக் கடல சய்யா’ எனும் கீர்த்தனம் பிறந்தது. எல்லாம் முடிந்ததும் நாட்டியக் கலைஞர்கள் அம்மாளு அம்மாவை வணங்கி, ‘‘சில ஜதிகள், நாட்டிய சாஸ்திரம் நன்கு கற்றவர்களாலேயே ஆட முடியாது. அதைப்போன்ற, எவராலும் சாதாரணமாக ஆட முடி யாத தெய்வீக நர்த்தனத்தை இன்று கண்டோம். இது யாரிடமும் பயின்று வருவதல்ல, யாராலும் பயிற்றுவிக்க முடியாததும்கூட’’ என்று கூறி பிரமித்து நின்றனர். ‘‘இன்று இதைக் கண்டது நாங்கள் செய்த பேறு’’ என உணர்ச்சிவசப்பட்டனர். இவள் புரந்தர தாஸரின் அவதாரம் என்று ஒருமனதாக புகழ்ந்தார்கள்.
2002ல் மதுராபுரி ஆஸ்ரமத்தில் 94வயதில் நேரிலேயே கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் தரிசனம் கிடைத்தது. அந்த கணமே ''நாக்கு கால மூர்தியு நீனே '‘nAkku kAla murtiyu neenE’ நீ தானே நாலு கால மூர்த்தி என பாடினாள் . அந்த நாலு கால மூர்த்திகள் யார்? விடியற்காலையில் ஸ்ரீமந் நாராயணன், காலை முடியும் நேரம் ஸ்ரீ ராமன், அந்தி நேரத்தில் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மன், இரவில் ஸ்ரீ வேணுகோபாலன், கோபிநாதன்.
பங்குனி உத்தரம் சிறந்த நாள். கௌரி சிவனை அடைந்தாள். சீதை ராமனை அடைந்தாள். ஆண்டாள் பரமனை அடைந்தாள். கடைசி காலங்களை கும்பகோணத்தில் கழித்தாள். வயதானாலும் கிருஷ்ணனை தூங்கப்பண்ணி, எழுப்பி, குளிப்பாட்டி, சிங்காரித்து, ஆடைகள் அணிவித்து, பாடி, உணவு சமைத்து நிவேதித்து, தாயாக பாண்டுரங்கனுக்கு சேவை செய்தவள் அம்மாளு அம்மாள்.கிருஷ்ண பக்தை அம்மாளு அம்மாள் 104 வயது வாழ்ந்து 2010 பங்குனி உத்திரம் அன்று சித்தி அடைந்தாள். அதற்கு சில நாட்கள் முன்பே அவளது நாவில் ஒரு பாடல் வைகுண்டம் எப்படி இருக்கும் என விவரித்தது .
அவளது குரு ராமச்சந்திர தீர்த்தர் சமாதி கும்பகோணம் காவிரிக்கரையில் அமரேந்திர புரத்தில் உள்ளது.
A few days before her departure from the world a kirtan describing the Vaikuntam fell out of her lips in divine trance!
“kalau khalu bhavishyanti nArayana parAyanAh
kvachit kvachin mahArAja dravideshu cha bhUrishaha
tAmraparNI nadI yatra krutamAlA payasvini
kAverI cha mahApuNyA pratichI cha mahAnadI”
கலியுகத்தில், த்ராவிட தேசம் எனும் தென்னிந்தியாவில், தாமிரபரணி, க்ருதமாலா, பயஸ்வினி, காவேரி, மகாநதி போன்ற புண்ய நதிக்கரை பிரதேசங்களில் எண்ணற்ற நாராயண பக்தர்கள் தோன்று வார்கள் என்று மேலே கண்ட ஸ்லோகம் சொல்கிறது. ஆகவே தான் அற்புத ஆழ்வார்கள் போல் அம்மாளு அம்மாளும் நம்மிடையே தோன்றி இருக்கிறாள்.
-
- Posts: 3033
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Kanchi Maha Periyava
A share
ஒரு முறை நேபாள மன்னரது வேண்டுகோளை ஏற்று நேபாளத்துக்கு யாத்திரையாகப் புறப்பட்டார் பெரியவா.
போகும் இடங்களில் எல்லாம் அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களை ஆசீர்வதித்தபடியே தனது யாத்திரையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் பெரியவா.
மகா ஸ்வாமிவேக வேகமான நடை அவருக்கே உரிய தனிச் சிறப்பு. அவருடன் சென்ற மடத்துப் பணியாளர் களால் ஸ்வாமிகளது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்களின் பாதங்கள் சிவந்தும், காயம் பட்டும் ரத்தம் கசியும் நிலையில் இருந்தன.
கர்நாடக எல்லையில் இருந்த ஒரு கிராமத்துக்குள் பிரவேசித்தார் ஸ்வாமிகள். ஸ்ரீபரமாச்சார்யாரது விஜயம் அறிந்த கிராம மக்கள் ஓடோடி வந்து அவரை நமஸ்கரித்தனர். பிறகு, சகல மரியாதைகளுடன் அவரை வரவேற்று ஆரவாரமாக அழைத்துச் சென்றனர். சற்று நேரத்தில் பெரியவாளிடம் வந்த பணியாளர்கள் சாஷ்டாங்கமாக அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து விட்டு, ‘‘மன்னிக்கணும் பெரியவா! கால்களில் ரத்தம் கசியுமளவு வேதனை. ஆகவே, இரவில் இங்கேயே தங்கிட்டு, நாளைக்குக் காத்தால புறப்பட அனுக்கிரகிக்கணும்!’’ என்றனர் கண்ணீர் மல்க.
அவர்களைக் கருணையுடன் நோக்கிய பெரியவா, எதுவும் பேசவில்லை. சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.
எப்போதோ காஞ்சி மடத்துக்கு வந்து தன்னிடம் ஆசிபெற்றுச் சென்ற கர்நாடகத்தைச் சார்ந்த டாக்டர் ஒருவரைப் பற்றிய நினைவு வர… அந்த டாக்டரது ஊரைச் சொல்லி, ‘அது எங்கிருக்கிறது?’ என்று கிராமத்து வைதீகர்களிடம் விசாரித்தார் பெரியவா. மகா பெரியவா குறிப்பிட்ட ஊர், அதிர்ஷ்டவசமாக அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு அருகில்தான் இருந்தது.
பெரியவா உடனே மடத்தின் பணியாட்களை அழைத்த பெரியவா, ‘‘உங்களில் நடக்க முடிஞ்ச ரெண்டு பேர் மட்டும் அந்த ஊருக்குப் போங்கோ. அங்கே டாக்டர் நஞ்சப்பாவை பார்த்து, ‘பெரியவா உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்’ங்கற விஷயத்தைச் சொல்லி… அழைச் சுண்டு வாங்கோ!’’ என்றார். அதன்படி மடத்து சிஷ்யகோடிகளில் இருவர் டாக்டர் நஞ்சப்பாவின் ஊருக்கு விரைந்தனர்.
அதன் பின் பெரியவா அருகில் இருந்த அம்மன் கோயில் மண்டபத்தில் தங்கிக் கொள்ள, மற்றவர்களை அந்தக் கிராமத்தின் வைதீக பிராமணர்கள் சிலர் தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றனர். டாக்டரது ஊருக்குச் சென்ற சிஷ்யர்கள், அவரைச் சந்தித்து மகா பெரியவா பக்கத்துக் கிராமத்தில் தங்கியுள்ளதைத் தெரிவித்ததுடன், சக சிஷ்யர் களின் உபாதை குறித்தும் பெரியவாளின் விருப்பம் குறித்தும் விளக்கினர்.
அந்த டாக்டருக்கு ஆச்சரியம்! ‘காஞ்சி மடம் சென்று பெரியவாளை நான் தரிசித்தது ஒரே ஒரு முறைதான். அதுவும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னதாக, எனினும் பெரியவா என்னை மறக்காமல் இருக்கிறாரே’ என்று அந்த மகானது நினைவாற்றலை எண்ணி வியந்தார். சற்றும் தாமதிக்காமல் மடத்து சீடர்களுடன் காரில் ஏறிப் புறப்பட்டார்.
கிராமத்தில், அம்மன் கோயில் முன்பாக காரை நிறுத்தி விட்டு மண்டபத்துக்குள் சென்ற டாக்டர், மகா ஸ்வாமிகள் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவரிடம் தொழில், குடும்ப நலன்களைப் பற்றி விசாரித்த பெரியவா, தம்முடன் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
டாக்டரும் மடத்துப் பணியாட்களின் பாதங்களைப் பரிசோதித்து, காயங்களுக்கு உரிய மருந்திட்டு, தேவைக்கேற்ப கட்டும் போட்டு விட்டார்.
அப்போது அவரிடம், ‘‘ஐயா, நீங்க ஒரு உபகாரம் பண்ணணும்’’ என்றனர் மடத்தின் பணியாட்கள்.
‘‘என்ன செய்யணும், சொல்லுங்க ளேன்.’’
‘‘ஒண்ணுமில்லே… கால்கள் குணமாக ரெண்டு நாளாகலாம். அதுவரை இங்கேயே தங்கிச் செல்லுமாறு நீங்கதான் பெரியவாகிட்டே சொல்லணும்.’’
அவர்களின் நிலைமை டாக்டருக்கு புரிந்தது. ‘சரி’ என்று சொல்லி, பெரியவாளிடம் சென்றவர் தரையில் அமர்ந்தார். பிறகு, ஏதோ சொல்ல முற்பட்டவரைக் கையமர்த்திய பெரியவா, ‘‘என்ன… ரெண்டு நாட்கள் இந்தக் கிராமத்துலேயே தங்கிட்டுப் போங்கோனு என்கிட்டே உங்களைச் சொல்லச் சொன்னாளா?’’ என்றார் பெரியவா.
டாக்டருக்கு வியப்பு. ‘பெரியவா தங்கியிருப்பது கோயில் மண்டபத்தில். அப்படியிருக்க அடுத்த வீதியில் தங்கி இருக்கும் பணியாளர்கள் சொன்னதை அட்சரம் பிசகாமல் நம்மிடம் சொல்கிறாரே!’ என்று அதிசயப்பட்டார் டாக்டர் நஞ்சப்பா.
‘‘கவலைப்படாதீங்கோ… ரெண்டு நாள் என்ன… அவாளோட கால்கள் குணமாகற வரைக்கும் இங்கே தங்கி, அப்புறம்தான் பொறப்படுவேன்’’ என்று அந்த நடமாடும் தெய்வம் புன்னகைக்க… கண்ணீர் மல்க கைகூப்பி நமஸ்கரித்தார் டாக்டர் நஞ்சப்பா.
ஒரு முறை நேபாள மன்னரது வேண்டுகோளை ஏற்று நேபாளத்துக்கு யாத்திரையாகப் புறப்பட்டார் பெரியவா.
போகும் இடங்களில் எல்லாம் அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களை ஆசீர்வதித்தபடியே தனது யாத்திரையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் பெரியவா.
மகா ஸ்வாமிவேக வேகமான நடை அவருக்கே உரிய தனிச் சிறப்பு. அவருடன் சென்ற மடத்துப் பணியாளர் களால் ஸ்வாமிகளது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்களின் பாதங்கள் சிவந்தும், காயம் பட்டும் ரத்தம் கசியும் நிலையில் இருந்தன.
கர்நாடக எல்லையில் இருந்த ஒரு கிராமத்துக்குள் பிரவேசித்தார் ஸ்வாமிகள். ஸ்ரீபரமாச்சார்யாரது விஜயம் அறிந்த கிராம மக்கள் ஓடோடி வந்து அவரை நமஸ்கரித்தனர். பிறகு, சகல மரியாதைகளுடன் அவரை வரவேற்று ஆரவாரமாக அழைத்துச் சென்றனர். சற்று நேரத்தில் பெரியவாளிடம் வந்த பணியாளர்கள் சாஷ்டாங்கமாக அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து விட்டு, ‘‘மன்னிக்கணும் பெரியவா! கால்களில் ரத்தம் கசியுமளவு வேதனை. ஆகவே, இரவில் இங்கேயே தங்கிட்டு, நாளைக்குக் காத்தால புறப்பட அனுக்கிரகிக்கணும்!’’ என்றனர் கண்ணீர் மல்க.
அவர்களைக் கருணையுடன் நோக்கிய பெரியவா, எதுவும் பேசவில்லை. சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.
எப்போதோ காஞ்சி மடத்துக்கு வந்து தன்னிடம் ஆசிபெற்றுச் சென்ற கர்நாடகத்தைச் சார்ந்த டாக்டர் ஒருவரைப் பற்றிய நினைவு வர… அந்த டாக்டரது ஊரைச் சொல்லி, ‘அது எங்கிருக்கிறது?’ என்று கிராமத்து வைதீகர்களிடம் விசாரித்தார் பெரியவா. மகா பெரியவா குறிப்பிட்ட ஊர், அதிர்ஷ்டவசமாக அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு அருகில்தான் இருந்தது.
பெரியவா உடனே மடத்தின் பணியாட்களை அழைத்த பெரியவா, ‘‘உங்களில் நடக்க முடிஞ்ச ரெண்டு பேர் மட்டும் அந்த ஊருக்குப் போங்கோ. அங்கே டாக்டர் நஞ்சப்பாவை பார்த்து, ‘பெரியவா உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்’ங்கற விஷயத்தைச் சொல்லி… அழைச் சுண்டு வாங்கோ!’’ என்றார். அதன்படி மடத்து சிஷ்யகோடிகளில் இருவர் டாக்டர் நஞ்சப்பாவின் ஊருக்கு விரைந்தனர்.
அதன் பின் பெரியவா அருகில் இருந்த அம்மன் கோயில் மண்டபத்தில் தங்கிக் கொள்ள, மற்றவர்களை அந்தக் கிராமத்தின் வைதீக பிராமணர்கள் சிலர் தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றனர். டாக்டரது ஊருக்குச் சென்ற சிஷ்யர்கள், அவரைச் சந்தித்து மகா பெரியவா பக்கத்துக் கிராமத்தில் தங்கியுள்ளதைத் தெரிவித்ததுடன், சக சிஷ்யர் களின் உபாதை குறித்தும் பெரியவாளின் விருப்பம் குறித்தும் விளக்கினர்.
அந்த டாக்டருக்கு ஆச்சரியம்! ‘காஞ்சி மடம் சென்று பெரியவாளை நான் தரிசித்தது ஒரே ஒரு முறைதான். அதுவும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னதாக, எனினும் பெரியவா என்னை மறக்காமல் இருக்கிறாரே’ என்று அந்த மகானது நினைவாற்றலை எண்ணி வியந்தார். சற்றும் தாமதிக்காமல் மடத்து சீடர்களுடன் காரில் ஏறிப் புறப்பட்டார்.
கிராமத்தில், அம்மன் கோயில் முன்பாக காரை நிறுத்தி விட்டு மண்டபத்துக்குள் சென்ற டாக்டர், மகா ஸ்வாமிகள் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவரிடம் தொழில், குடும்ப நலன்களைப் பற்றி விசாரித்த பெரியவா, தம்முடன் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
டாக்டரும் மடத்துப் பணியாட்களின் பாதங்களைப் பரிசோதித்து, காயங்களுக்கு உரிய மருந்திட்டு, தேவைக்கேற்ப கட்டும் போட்டு விட்டார்.
அப்போது அவரிடம், ‘‘ஐயா, நீங்க ஒரு உபகாரம் பண்ணணும்’’ என்றனர் மடத்தின் பணியாட்கள்.
‘‘என்ன செய்யணும், சொல்லுங்க ளேன்.’’
‘‘ஒண்ணுமில்லே… கால்கள் குணமாக ரெண்டு நாளாகலாம். அதுவரை இங்கேயே தங்கிச் செல்லுமாறு நீங்கதான் பெரியவாகிட்டே சொல்லணும்.’’
அவர்களின் நிலைமை டாக்டருக்கு புரிந்தது. ‘சரி’ என்று சொல்லி, பெரியவாளிடம் சென்றவர் தரையில் அமர்ந்தார். பிறகு, ஏதோ சொல்ல முற்பட்டவரைக் கையமர்த்திய பெரியவா, ‘‘என்ன… ரெண்டு நாட்கள் இந்தக் கிராமத்துலேயே தங்கிட்டுப் போங்கோனு என்கிட்டே உங்களைச் சொல்லச் சொன்னாளா?’’ என்றார் பெரியவா.
டாக்டருக்கு வியப்பு. ‘பெரியவா தங்கியிருப்பது கோயில் மண்டபத்தில். அப்படியிருக்க அடுத்த வீதியில் தங்கி இருக்கும் பணியாளர்கள் சொன்னதை அட்சரம் பிசகாமல் நம்மிடம் சொல்கிறாரே!’ என்று அதிசயப்பட்டார் டாக்டர் நஞ்சப்பா.
‘‘கவலைப்படாதீங்கோ… ரெண்டு நாள் என்ன… அவாளோட கால்கள் குணமாகற வரைக்கும் இங்கே தங்கி, அப்புறம்தான் பொறப்படுவேன்’’ என்று அந்த நடமாடும் தெய்வம் புன்னகைக்க… கண்ணீர் மல்க கைகூப்பி நமஸ்கரித்தார் டாக்டர் நஞ்சப்பா.
-
- Posts: 3033
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Kanchi Maha Periyava
A share
இந்த வெல்வெட் பாதபீடத்தை பார்த்ததும் புரிஞ்சுபோச்சு!
----------------------------------------------------------------
COURTESY: SAGE OF KANCHI.
மஹா பெரியவா அப்போது மேனாவில் பிரயாணம் செய்வது வழக்கமாயிருந்தது.
பலகையில் சாய்ந்துகொண்டு, தாமரைத் திருவடிகளை நீட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்து கொண்டிருப்பார் . ஹரஹர சங்கர, ஜயஜய சங்கர என்று பக்தர்கள் முழங்க ஆடிக்கொண்டே மேனா செல்லும். உள்ளே புஷ்பம் உட்கார்ந்திருக்கும்.
எல்லோரும் காணக்கூடிய காட்சி இது. அதுவும் மேனாவுக்குள் இருந்தபடி தரிசனம் கொடுக்கும்போது, பாதங்கள் நீண்ட நிலையிலேயே இருக்கும்.
ஒரு பக்தர் சொல்கிறார்:
“பெரியவா பாதங்களை வைத்து கொள்வதற்கு மெத்து மெத்தென்று ஒரு இலவம்பஞ்சு மெத்தை திண்டு செய்து கொடுத்தால் என்ன?.
இப்படி தோன்றியவுடன், ஸ்பாஞ்ஜ் (காற்று_நிறைந்த, இலேசான மிருதுவான ரப்பராலான சொகுசு தயாரிப்பு) வாங்கி, அகலமாக , வட்டமாக வெட்டினேன்; மேலே, வெல்வெட் துணி வைத்து தைத்தேன்; நடுவில் வேறு ஒரு கலர் வெல்வெட்டில் , எட்டு இதழ் தாமரை; ஓரங்களில் லேஸ் வைத்து அழகுபடுத்தினேன்.
பெரியவாள் தரிசனத்துக்கு போன சமயத்தில், அவர்கள் மேனவில் உட்கார்ந்து இருந்தார்கள்.
நானும் என் அம்மாவும் ஸ்பாஞ்ஜ் தயாரிப்பை பெரியவாளிடம் சமர்பித்தோம் (மேனாவை ஒட்டினாற்போல், தரையில் வைத்தோம்) . பெரியவாள், “அஷ்டதளமா?” என்ற கேட்டுகொண்டே, மேனாவுக்குள் நீட்டிகொண்டிருந்த பாதங்களை எடுத்து, வெல்வெட் பாதபீடத்தில் வைத்தார்கள். எங்கள் நெஞ்சுக்குள் சிலிர்ப்பு ஏற்பட்டது.
“சரி, வெச்சிட்டு போ” என்று சொல்லாமல், தன் புனித திருவடிகளை, நாங்கள் பக்தியோடு சமர்ப்பித்த பொருளை உடனே ஏற்று கொள்ளும் விதமாக தன் பாதங்களை வைத்து கொண்டார்களே! இதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும்?
பெரியவாள் பக்கத்தில் ஓர் அணுக்க தொண்டர் நின்றுகொண்டிருந்தார்.
“உனக்கு லலிதா சஹஸ்ரநாம தியான சுலோகம் தெரியுமா?”
“ஒரு நிமிடம் யோசனைக்கு பின், “அருணா கருணா தரிங்கிதாச்ஹீம்…” என்று தொடங்கினார் அவர்.
“இன்னொன்று …”
“ஸிந்தூராருண விக்ரஹாம்… ”
“அதுதான்! அங்கே ஒரு வித்வான் நிற்கிறார், பார். அவரிடம் போய், இந்த ஸ்லோகத்தில் வருகிற, ரத்னா கடஸ்த்த ரக்த சரணாம் – என்பதற்கு என்ன அர்த்தம்னு கேட்டுண்டு வா…”
அவர் உடனே போய் கேட்டுகொண்டு வந்தார். “அம்பாள் ரத்னமயமான கடத்தின் மீது தன் சிவந்த பாதங்களை வைத்து…” என்று அர்த்தம் சொன்னார்.
மேனாவின் அருகிலேயே ஒரு வித்வான் நின்றுகொண்டிருந்தார். அவர் மீது பெரியவா பார்வை விழுந்தது. அவர் அருகில் வந்தார்.
“சாஸ்திரிகளே! எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துண்டே இருந்தது. என்னன்னா, அம்பாள் ஒரு கடத்தின் மேலே ஏன் பாதங்களை வெச்சிண்டிருக்கணும், கொஞ்சம் நெருடலா இல்லை?”
“ஆமாம்” என்று பவ்யமாகத் தலையாட்டினார் பண்டிதர். ”நீ இதுக்கு என்ன அர்த்தம் சொல்றே? ” டக்கென்று என்று பெரியவா கேட்டுவிட்டால் தர்ம சங்கடம் ஆயிற்றே என்ன பதில் சொல்வது?
“அது பொருத்தமாயில்லையோனோ?…”
“ஆமாம்..”
“இப்போ, இந்த பாத பீடத்தை பார்த்ததும் என் சந்தேகம் ஓடியே போயிடுத்து!”
பெரியவா விளக்கினார்கள்:
“அம்பாள் தன் செவந்த பாதங்களை இது மாதிரியான பாதபீடத்தில் வைத்துகொண்டிருகிறாள். – என்பது சரியாக இருக்கும். ஸ்லோகத்தில் வருகிற, “கடஸ்த்த” வை எடுத்திட்டு, “படஸ்த்த” வை போட்டால், சரியாக இருக்குமோன்னு தோன்றது. படம்னா துணி; மெத்தென்ற பாதபீடம். முதல்லே “படஸ்த்த” என்றிருந்த பதம், நாளடைவில் பேச்சு பழக்கத்தில், “கடஸ்த்த” என்று வந்திருக்கலாமோன்னு படறது. படஸ்த்த = துணியில் என்பதை “கம்பளியில்” (மிருதுவாக காலை குத்தாமல் இருக்கணுமே! ) என்று சமவாசகமாக வெச்சுக்கனும்.”.
நாங்கள் யாரும் (பண்டிதர் உள்பட) திகைப்பிலிருந்து மீளவில்லை!
“ரொம்ப நாளா யோசிச்சிண்டிருந்தேன். இப்போ இதை, இந்த வெல்வெட் பாதபீடத்தை பார்த்ததும் புரிஞ்சுபோச்சு”.
எந்த தகுதியும் இல்லாத, கடைசி வரிசையில் நிற்கிற என் போன்ற ஒரு பேதையின் எளிய சமர்ப்பணத்தால் மஹா பெரியவாளின் வெகுநாளைய ஒரு சந்தேகம் தீர்ந்ததாம்!. நடிப்பில் வல்லவரோ!! இருக்கலாம் அலகிலா விளையாட்டுடையார் அல்லவா !
இந்த வெல்வெட் பாதபீடத்தை பார்த்ததும் புரிஞ்சுபோச்சு!
----------------------------------------------------------------
COURTESY: SAGE OF KANCHI.
மஹா பெரியவா அப்போது மேனாவில் பிரயாணம் செய்வது வழக்கமாயிருந்தது.
பலகையில் சாய்ந்துகொண்டு, தாமரைத் திருவடிகளை நீட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்து கொண்டிருப்பார் . ஹரஹர சங்கர, ஜயஜய சங்கர என்று பக்தர்கள் முழங்க ஆடிக்கொண்டே மேனா செல்லும். உள்ளே புஷ்பம் உட்கார்ந்திருக்கும்.
எல்லோரும் காணக்கூடிய காட்சி இது. அதுவும் மேனாவுக்குள் இருந்தபடி தரிசனம் கொடுக்கும்போது, பாதங்கள் நீண்ட நிலையிலேயே இருக்கும்.
ஒரு பக்தர் சொல்கிறார்:
“பெரியவா பாதங்களை வைத்து கொள்வதற்கு மெத்து மெத்தென்று ஒரு இலவம்பஞ்சு மெத்தை திண்டு செய்து கொடுத்தால் என்ன?.
இப்படி தோன்றியவுடன், ஸ்பாஞ்ஜ் (காற்று_நிறைந்த, இலேசான மிருதுவான ரப்பராலான சொகுசு தயாரிப்பு) வாங்கி, அகலமாக , வட்டமாக வெட்டினேன்; மேலே, வெல்வெட் துணி வைத்து தைத்தேன்; நடுவில் வேறு ஒரு கலர் வெல்வெட்டில் , எட்டு இதழ் தாமரை; ஓரங்களில் லேஸ் வைத்து அழகுபடுத்தினேன்.
பெரியவாள் தரிசனத்துக்கு போன சமயத்தில், அவர்கள் மேனவில் உட்கார்ந்து இருந்தார்கள்.
நானும் என் அம்மாவும் ஸ்பாஞ்ஜ் தயாரிப்பை பெரியவாளிடம் சமர்பித்தோம் (மேனாவை ஒட்டினாற்போல், தரையில் வைத்தோம்) . பெரியவாள், “அஷ்டதளமா?” என்ற கேட்டுகொண்டே, மேனாவுக்குள் நீட்டிகொண்டிருந்த பாதங்களை எடுத்து, வெல்வெட் பாதபீடத்தில் வைத்தார்கள். எங்கள் நெஞ்சுக்குள் சிலிர்ப்பு ஏற்பட்டது.
“சரி, வெச்சிட்டு போ” என்று சொல்லாமல், தன் புனித திருவடிகளை, நாங்கள் பக்தியோடு சமர்ப்பித்த பொருளை உடனே ஏற்று கொள்ளும் விதமாக தன் பாதங்களை வைத்து கொண்டார்களே! இதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும்?
பெரியவாள் பக்கத்தில் ஓர் அணுக்க தொண்டர் நின்றுகொண்டிருந்தார்.
“உனக்கு லலிதா சஹஸ்ரநாம தியான சுலோகம் தெரியுமா?”
“ஒரு நிமிடம் யோசனைக்கு பின், “அருணா கருணா தரிங்கிதாச்ஹீம்…” என்று தொடங்கினார் அவர்.
“இன்னொன்று …”
“ஸிந்தூராருண விக்ரஹாம்… ”
“அதுதான்! அங்கே ஒரு வித்வான் நிற்கிறார், பார். அவரிடம் போய், இந்த ஸ்லோகத்தில் வருகிற, ரத்னா கடஸ்த்த ரக்த சரணாம் – என்பதற்கு என்ன அர்த்தம்னு கேட்டுண்டு வா…”
அவர் உடனே போய் கேட்டுகொண்டு வந்தார். “அம்பாள் ரத்னமயமான கடத்தின் மீது தன் சிவந்த பாதங்களை வைத்து…” என்று அர்த்தம் சொன்னார்.
மேனாவின் அருகிலேயே ஒரு வித்வான் நின்றுகொண்டிருந்தார். அவர் மீது பெரியவா பார்வை விழுந்தது. அவர் அருகில் வந்தார்.
“சாஸ்திரிகளே! எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துண்டே இருந்தது. என்னன்னா, அம்பாள் ஒரு கடத்தின் மேலே ஏன் பாதங்களை வெச்சிண்டிருக்கணும், கொஞ்சம் நெருடலா இல்லை?”
“ஆமாம்” என்று பவ்யமாகத் தலையாட்டினார் பண்டிதர். ”நீ இதுக்கு என்ன அர்த்தம் சொல்றே? ” டக்கென்று என்று பெரியவா கேட்டுவிட்டால் தர்ம சங்கடம் ஆயிற்றே என்ன பதில் சொல்வது?
“அது பொருத்தமாயில்லையோனோ?…”
“ஆமாம்..”
“இப்போ, இந்த பாத பீடத்தை பார்த்ததும் என் சந்தேகம் ஓடியே போயிடுத்து!”
பெரியவா விளக்கினார்கள்:
“அம்பாள் தன் செவந்த பாதங்களை இது மாதிரியான பாதபீடத்தில் வைத்துகொண்டிருகிறாள். – என்பது சரியாக இருக்கும். ஸ்லோகத்தில் வருகிற, “கடஸ்த்த” வை எடுத்திட்டு, “படஸ்த்த” வை போட்டால், சரியாக இருக்குமோன்னு தோன்றது. படம்னா துணி; மெத்தென்ற பாதபீடம். முதல்லே “படஸ்த்த” என்றிருந்த பதம், நாளடைவில் பேச்சு பழக்கத்தில், “கடஸ்த்த” என்று வந்திருக்கலாமோன்னு படறது. படஸ்த்த = துணியில் என்பதை “கம்பளியில்” (மிருதுவாக காலை குத்தாமல் இருக்கணுமே! ) என்று சமவாசகமாக வெச்சுக்கனும்.”.
நாங்கள் யாரும் (பண்டிதர் உள்பட) திகைப்பிலிருந்து மீளவில்லை!
“ரொம்ப நாளா யோசிச்சிண்டிருந்தேன். இப்போ இதை, இந்த வெல்வெட் பாதபீடத்தை பார்த்ததும் புரிஞ்சுபோச்சு”.
எந்த தகுதியும் இல்லாத, கடைசி வரிசையில் நிற்கிற என் போன்ற ஒரு பேதையின் எளிய சமர்ப்பணத்தால் மஹா பெரியவாளின் வெகுநாளைய ஒரு சந்தேகம் தீர்ந்ததாம்!. நடிப்பில் வல்லவரோ!! இருக்கலாம் அலகிலா விளையாட்டுடையார் அல்லவா !
-
- Posts: 2182
- Joined: 31 Jan 2017, 20:20
-
- Posts: 3033
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Kanchi Maha Periyava
Shri sachi Avl,
Many thanks.
Thanjavooran
02 02 2018
Many thanks.
Thanjavooran
02 02 2018
-
- Posts: 3033
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Kanchi Maha Periyava
A share
( "ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு! )
(ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
"பெண்ணுக்குக் கல்யாணம். மடத்திலேர்ந்து
ஏதாவது உதவி செய்யணும்...."
ஏழைத் தம்பதிகள், அம்மாள் கழுத்தில் மஞ்சள் சரடு, மெல்லியதாக ஒரு வடம் செயின்.
இவர்களுக்கு உதவி செய்யவேன்டியதுதான்.
"நான் ஒரு சந்நியாசி, ஒரு பைசாவைக்கூட கையால் தொட்டதில்லை.என்னிடம்
போய் பண உதவி கேட்கிறாயே!" என்று வெளிப்படையாகப் பேசிக்
கொண்டிருக்கும்போதே அந்தரங்கத்தில் திட்டம்.
அதேசமயம், காமாட்சி கோயில் தலைமை
ஸ்தானீகர் பிரசாதம் கொண்டு வந்தார். முதலில், பெரியவாளுக்குப் பரிவட்டம் கட்டினார். பின்னர், குங்குமப் பிரசாதம் சமர்ப்பித்தார்.
பெரியவாள் பரிவட்டத்தைக் கழற்றி, பெண்
கல்யாணத்துக்கு உதவி கேட்டு வந்தவரை
சுட்டிக்காட்டி "அவருக்குக் கட்டு" என்று
உத்தரவிட்டார்கள்.
யாசகம் கேட்டு வந்தவருக்கு அடித்தது யோகம்!
பெரியவாள் குங்குமப் பிரசாதத்தையும் அவரிடமே கொடுத்து,"எல்லோருக்கும் நீயே கொடு"என்றார்கள்.
திமுதிமுவென்று மார்வாடிக் கூட்டம் உள்ளே
நுழைந்தது. திருத்தலப் பயணம்.வாடகை வாகனத்தில் வந்திருந்தார்கள்.
பரிவட்டத்துடன், எதிரே குங்குமப் பிரசாதத்துடன், உட்கார்ந்திருந்தவர்தான், ஸ்ரீ காமகோடி பீடாதிபதி என்று நினைத்து, காலில் விழுந்து, இருநூறும், முன்னூறுமாகக் காணிக்கை செலுத்தினார்கள்.
யாசகர் (பெரியவா முன்னரே சொல்லியிருந்தபடி)
எல்லோருக்கும் குங்குமம் இட்டுவிட்டார்.
இந்த லீலா நாடகம் நடந்து முடிந்ததும்,பெரியவாள்
எழுந்து வந்து, மார்வாடிகளிடம் பேசி,ஆசீர்வதித்து பிரசாதமாகப் பழங்களைக் கொடுத்தார்கள்.
"ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு!
பெரியவா சரணம் !!
( "ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு! )
(ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
"பெண்ணுக்குக் கல்யாணம். மடத்திலேர்ந்து
ஏதாவது உதவி செய்யணும்...."
ஏழைத் தம்பதிகள், அம்மாள் கழுத்தில் மஞ்சள் சரடு, மெல்லியதாக ஒரு வடம் செயின்.
இவர்களுக்கு உதவி செய்யவேன்டியதுதான்.
"நான் ஒரு சந்நியாசி, ஒரு பைசாவைக்கூட கையால் தொட்டதில்லை.என்னிடம்
போய் பண உதவி கேட்கிறாயே!" என்று வெளிப்படையாகப் பேசிக்
கொண்டிருக்கும்போதே அந்தரங்கத்தில் திட்டம்.
அதேசமயம், காமாட்சி கோயில் தலைமை
ஸ்தானீகர் பிரசாதம் கொண்டு வந்தார். முதலில், பெரியவாளுக்குப் பரிவட்டம் கட்டினார். பின்னர், குங்குமப் பிரசாதம் சமர்ப்பித்தார்.
பெரியவாள் பரிவட்டத்தைக் கழற்றி, பெண்
கல்யாணத்துக்கு உதவி கேட்டு வந்தவரை
சுட்டிக்காட்டி "அவருக்குக் கட்டு" என்று
உத்தரவிட்டார்கள்.
யாசகம் கேட்டு வந்தவருக்கு அடித்தது யோகம்!
பெரியவாள் குங்குமப் பிரசாதத்தையும் அவரிடமே கொடுத்து,"எல்லோருக்கும் நீயே கொடு"என்றார்கள்.
திமுதிமுவென்று மார்வாடிக் கூட்டம் உள்ளே
நுழைந்தது. திருத்தலப் பயணம்.வாடகை வாகனத்தில் வந்திருந்தார்கள்.
பரிவட்டத்துடன், எதிரே குங்குமப் பிரசாதத்துடன், உட்கார்ந்திருந்தவர்தான், ஸ்ரீ காமகோடி பீடாதிபதி என்று நினைத்து, காலில் விழுந்து, இருநூறும், முன்னூறுமாகக் காணிக்கை செலுத்தினார்கள்.
யாசகர் (பெரியவா முன்னரே சொல்லியிருந்தபடி)
எல்லோருக்கும் குங்குமம் இட்டுவிட்டார்.
இந்த லீலா நாடகம் நடந்து முடிந்ததும்,பெரியவாள்
எழுந்து வந்து, மார்வாடிகளிடம் பேசி,ஆசீர்வதித்து பிரசாதமாகப் பழங்களைக் கொடுத்தார்கள்.
"ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு!
பெரியவா சரணம் !!
-
- Posts: 3033
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Kanchi Maha Periyava
A share
சித்தூர் G வெங்கடேசன் அவர்கள்
இன்று நீ ஏழு மணிக்குத் திரும்ப கச்சேரி பண்ணு. மஹாபெரியவா மீரஜ்ஜில் முகாமிட்டிருந்தபோது நடந்தது.
பெரியவா ஜயந்திக்கு எங்கள் குழுவுடன் சென்னையிலிருந்து கச்சேரி செய்யச் சென்றோம்.
மறு நாள் பௌர்ணமி பூஜையில் பெரியவா பரிவட்டம் தரித்துக்கொண்டு நிஷ்டையில் இருந்த சமயம்”வெங்கடேசனை தீக்ஷிதர் க்ருதிகளைத் தனியாக வாசிக்கச் சொல்லு” என்று உத்தரவாயிற்று. ஒரு மணி நேரம் ராகங்கள், கீர்த்தனைகள் வாசித்த பிறகு, நிஷ்டை கலைந்து,தலையிலுள்ள பரிவட்டத்தை எனக்கு போர்த்தக் கூறினார். அதை இன்னும் பத்திரமாகப் பூஜையில் வைத்திருக்கிறேன்.
மறு நாள் காலையில் எட்டு மணி முதல்பன்னிரண்டு மணி வரை கச்சேரி செய்து விட்டு , மாலை ஏழு மணிக்கு மஹாலக்ஷ்மி Express ல சென்னை திரும்ப உத்தரவு கேட்டோம். பெரியவா ஏழு பத்துக்கு மறுபடியும் வாசிக்கக் கூறினார்.ரிடர்ன் டிக்கெட் ரிசர்வ் செய்த டிக்கெட்ஐ எப்படி கேன்சல் செய்வது என சங்கடப் பட்டுக்கொண்டிருந்த போது ,பெரியவா தரிசனத்துக்காக சகாக்களுடநும் குடும்பத்தாருடனும் அவூர் HTC வந்தார். அவரிடம் ஸ்ரீமான் ஸ்ரீகண்டன், ராமமூர்த்தி இவர்கள் விஷயத்தை விவரிக்க, நான் வேண்டியதைச் செய்கிறேன்; நாளை காளை Express dutyயில் என்னுடன் மூவரையும் எல்லா வசதிகளையும் செய்து மயிலையில் சென்று விட்டு வருகிறேன் என்று சொன்னார்.
மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கச்சேரி. கண்ணுக்கு எட்டிய தூரம் ஜனங்கள் ரசித்துக் கொண்டிருக்கும் சமயம், சாங்களி மஹாராஜா குடும்பத்துடன் பெரியவாளை தரிசிக்க புஷ்பம் பழத்தட்டுகளுடன் சிவப்பு, வெள்ளை, நீலம் காஷ்மீர்
சால்வைகளை சமர்ப்பித்தார். ஸ்ரீ பெரியவா வலது புறத்தில் நீலமும், இடது புறத்தில் வெள்ளையும், சிரஸில் சிகப்பு அணிந்து ஜகஜ்ஜோதியாகக் காட்சி அளித்தார்.
அரை மணி நேரம் கழித்து மஹாராஜாவையே புஷ்ப, பழத் தட்டில் சிவப்பு சால்வையை வைத்து என் தகப்பனாருக்கும், நீல சால்வையை எனக்கும், வெள்ளை சால்வையை மிருதங்கம் .ரமேஷுக்கும் போர்த்தச் சொன்னார். இதைப் பெரும் பாக்யமாகவும் ரக்ஷையாகவும் நாங்கள் கருதுகிறோம்.
மறு நாள் காலை ஏழு மணிக்கு எங்களை அழைத்துச் செல்ல, தலைமை டிக்கெட் பரிசோதகர் வர, பெரியவா எங்களுக்கு எல்லாம் விபூதி, குங்கும ப்ரஸாதம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
ப்ரயாணத்தில் பேப்பரைப் பார்த்தபோது, நாங்கள் ப்ரயாணம் செய்ய இருந்த மஹாலக்ஷ்மி எக்ஸ்ப்ரெஸ் பெல்காம் அருகில் ஆறு பெட்டி தடம் புரண்டு விழுந்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். நடமாடும் தெய்வம் மஹாபெரியவா அனுக்ரஹத்தால்தானே ரயில்
ப்ரயாணத்தை ரத்து செய்து அங்கு தங்கினோம். எப்படிப்பட்ட தீர்க்கதரிசி
மஹாபெரியவா!!
இதனை தரிசன அனுபவங்கள் நான்காம் தொகுதியில் புல்லங்குழல் வித்வான் G.வெங்கடேசன் பகிர்ந்து கொள்கிறார். அவர் தந்தை ப்ரம்மஸ்ரீ சித்தூர் கோபால க்ருஷ்ணைய்யர்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர…..
சுமார் ஐம்பந்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த ஓர் சுவையான சம்பவம்…
ஸ்ரீ சரணாள் சேலம் பகுதியில் யாத்திரையாகப் போய்க் கொண்டிருந்தபோது, அவருடன் சிலரும் நதிவழியாகவும், பரிவாரங்கள் சாலை வழியாகவும் போய்க் கொண்டிருந்தனர். அப்போது குதிரையின்
மேல் நகரா அடித்துச் செல்வது வழக்கம். இது ஒரு மசூதி வழியாகச் சென்றபோது மசூதி வழியாக
இதெல்லாம் போகக் கூடாது என்று குதிரையின் முன்கயிற்றைப் பிடித்துத் தடுத்தார்கள். இதனால்
சிறு சலசலப்பு ஏற்பட்டு ,சிலர் மத்யஸ்தம் செய்தார்கள்.
மறுதினம் மேற்படி மசூதியைச் சேர்ந்த ஒருவர் மடத்து அதிகாரிகளிடம் ஸ்ரீசரணாளை தனியாக சந்தித்துப்
பேச அனுமதி கேட்டார்கள். மடத்து அதிகாரி, முதல் நாள் சம்பவத்தை மனதில் கொண்டு, அதற்கு மறுப்பு சொல்லிவிட்டார். வேண்டுமானால் எல்லாரும் இருக்கும்போது சந்திக்கலாம் என்றும் சொல்லிவிட்டார். இந்த விஷயம் ஸ்ரீ சரணாள் காதிர்கு எட்டியது. ஆனால் அவர் தனியாகச் சந்திப்பதில் தனக்கு
ஆக்ஷபணை எதுவும் இல்லை என்றும் அவரை வரும்படியும் கூறிவிட்டார். இதில் மடத்தில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லாவிடினும், வேறு வழியில்லாமல் எதிரே இருந்த ஒரு வீட்டில் சந்திக்க ஏற்பாடாயிற்று. மறு தினம் பெரியவா அந்த வீட்டு வாசல் கதவை உள்தாழ்ப்பாள் போட்டுக்
கொண்டு தான் அவரிடம் பேசச் சென்றார்.
மடத்து அதிகாரிகள் கலக்கத்துடன் வெளியே காத்திருந்தனர். பெரியவாளிடம் சென்றவர் பெரிய காகித உறை ஒன்றை எடுத்துக் கொடுத்தாராம். அதில் என்ன என்று பெரியவா கேட்டதற்கு பெரியவாளைப் பற்றி தான் எழுதிய சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் என்று சொல்லி அதை அவரே வாசித்துக் காண்பித்தாராம். நாக பந்தம், கருட பந்தம், சக்ர பந்தம் போன்ற சாகித்ய மரபுகளுடன் அழகாக வாசித்தாராம்.
” இதை யார் எழுதியது யார் சொல்லிக் கொடுத்தார்கள்’ என்று கேட்டதற்கு தன் பரம்பரையினர் சம்ஸ்க்ருதத்தில் விசேஷ பயிற்சி பெற்றவர்கள் என்றும், பரம்பரையாக வருவதாகவும் பதில் சொன்னார். அவர்கள் கசாப்புக் கடை நடத்தி வருவதாகவும் கூறினாராம். இதை ஸ்ரீ சரணாள் ஹாஸ்யத்துடநும், த்ரில்லிங்காகவும்,ஸஸ்பென்ஸாகவும் சொல்லி எல்லா ஜாதியிலும் மதத்திலும் நல்லொழுக்கம்,
பண்பு உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் குறிப்பிட்டார்.
இவர்தான் பின் நாளில் வேத பாஷ்ய கல்லூரி ஆரம்பிக்க மிக முயற்சி எடுத்துக் கொண்ட ஸப் ஜட்ஜ் திரு கமாலுதீன்!
இந்த சமயத்தில் நான் ஒன்று கூர நினைக்கிறேன். என் சித்தப்பா ஸ்ரீ லக்ஷ்மிகாந்த சர்மாவை அழைத்து
பெரியவா ராஜா வேத பாடசாலை கும்பகோணம் , ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதர் அவர்களால் சுமார் நானூற்றைம்பது வருடங்களுக்குமுன் ஸ்தாபிக்கப்பட்டது அதன் நிர்வாகத்தைச் சிறப்பாகச் செயல் படுத்த திரு கமாலுதீன் அவர்களை சந்திக்குமாறு சொல்ல சித்தப்பா குடும்ப ஆசாரம் கருதி அதனை தள்ளிப் போட்டு வந்தார். ஆனால் ஒரு நாள் பெரியவாள் கொடுத்த நெருக்கடியில் ஜட்ஜ் அவர்களை சந்தித்து ஆசார்யாள் ஆஜ்ஞைப்படி அவருடன் அராபிக் வகுப்புகள் எப்படி நடைபெறுகிறது என்று போய் பார்த்து அதன் பிறகு ராஜா வேத பாடசாலை நிர்வாகத்தை மேற்கொண்டதுமன்றி, வேத சம்ரக்ஷண பரிபாலன சபை ஒன்று நிறுவி அது இன்றளவில் நல்லவிதமாக நடை பெறுகிறது. ராஜா வேத பாடசாலையில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசாங்க உதவித்தொகையும், ஆசிரியர்களுக்கு மத்திய அரசாங்க ஊதியமும் பெற்றுத்தந்தார்.
திரு கமாலுதீன் அவர் ஜீவன் இருக்கும் வரை எங்கள் அகத்தில் வந்து சாப்பிட்டுச் செல்லும் பழக்கம் இருந்தது. இன்றளவும் அவர்கள் சந்ததியினரும் என் சித்தியைப் பார்த்துச் செல்கின்றனர்.
பெரியவாளிடம் திரு கமாலுதீன் கொண்டிருந்த பக்தி அளவிட முடியாதது. அதுபோல் ஜஸ்டிஸ் கம்பராமாயண விளக்கவுரை எழுதிய இஸ்மாயிலும் பெரியவாளிடம் அளவு கடந்த பக்தியும் மரியாதையும் கொண்டிருந்தார். பெரியவாளும் இவர்களிடத்தில் மத இன பேதமின்றி அவர்கள் அறிவு, ஆற்றலுக்கு
மிக்க மதிப்பளித்து வந்தார் . பக்தி என்பது ஜாதி, மத இனம் கடந்தது என்பதற்கு இதுவும் ஓர் சான்று!
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா
சித்தூர் G வெங்கடேசன் அவர்கள்
இன்று நீ ஏழு மணிக்குத் திரும்ப கச்சேரி பண்ணு. மஹாபெரியவா மீரஜ்ஜில் முகாமிட்டிருந்தபோது நடந்தது.
பெரியவா ஜயந்திக்கு எங்கள் குழுவுடன் சென்னையிலிருந்து கச்சேரி செய்யச் சென்றோம்.
மறு நாள் பௌர்ணமி பூஜையில் பெரியவா பரிவட்டம் தரித்துக்கொண்டு நிஷ்டையில் இருந்த சமயம்”வெங்கடேசனை தீக்ஷிதர் க்ருதிகளைத் தனியாக வாசிக்கச் சொல்லு” என்று உத்தரவாயிற்று. ஒரு மணி நேரம் ராகங்கள், கீர்த்தனைகள் வாசித்த பிறகு, நிஷ்டை கலைந்து,தலையிலுள்ள பரிவட்டத்தை எனக்கு போர்த்தக் கூறினார். அதை இன்னும் பத்திரமாகப் பூஜையில் வைத்திருக்கிறேன்.
மறு நாள் காலையில் எட்டு மணி முதல்பன்னிரண்டு மணி வரை கச்சேரி செய்து விட்டு , மாலை ஏழு மணிக்கு மஹாலக்ஷ்மி Express ல சென்னை திரும்ப உத்தரவு கேட்டோம். பெரியவா ஏழு பத்துக்கு மறுபடியும் வாசிக்கக் கூறினார்.ரிடர்ன் டிக்கெட் ரிசர்வ் செய்த டிக்கெட்ஐ எப்படி கேன்சல் செய்வது என சங்கடப் பட்டுக்கொண்டிருந்த போது ,பெரியவா தரிசனத்துக்காக சகாக்களுடநும் குடும்பத்தாருடனும் அவூர் HTC வந்தார். அவரிடம் ஸ்ரீமான் ஸ்ரீகண்டன், ராமமூர்த்தி இவர்கள் விஷயத்தை விவரிக்க, நான் வேண்டியதைச் செய்கிறேன்; நாளை காளை Express dutyயில் என்னுடன் மூவரையும் எல்லா வசதிகளையும் செய்து மயிலையில் சென்று விட்டு வருகிறேன் என்று சொன்னார்.
மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கச்சேரி. கண்ணுக்கு எட்டிய தூரம் ஜனங்கள் ரசித்துக் கொண்டிருக்கும் சமயம், சாங்களி மஹாராஜா குடும்பத்துடன் பெரியவாளை தரிசிக்க புஷ்பம் பழத்தட்டுகளுடன் சிவப்பு, வெள்ளை, நீலம் காஷ்மீர்
சால்வைகளை சமர்ப்பித்தார். ஸ்ரீ பெரியவா வலது புறத்தில் நீலமும், இடது புறத்தில் வெள்ளையும், சிரஸில் சிகப்பு அணிந்து ஜகஜ்ஜோதியாகக் காட்சி அளித்தார்.
அரை மணி நேரம் கழித்து மஹாராஜாவையே புஷ்ப, பழத் தட்டில் சிவப்பு சால்வையை வைத்து என் தகப்பனாருக்கும், நீல சால்வையை எனக்கும், வெள்ளை சால்வையை மிருதங்கம் .ரமேஷுக்கும் போர்த்தச் சொன்னார். இதைப் பெரும் பாக்யமாகவும் ரக்ஷையாகவும் நாங்கள் கருதுகிறோம்.
மறு நாள் காலை ஏழு மணிக்கு எங்களை அழைத்துச் செல்ல, தலைமை டிக்கெட் பரிசோதகர் வர, பெரியவா எங்களுக்கு எல்லாம் விபூதி, குங்கும ப்ரஸாதம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
ப்ரயாணத்தில் பேப்பரைப் பார்த்தபோது, நாங்கள் ப்ரயாணம் செய்ய இருந்த மஹாலக்ஷ்மி எக்ஸ்ப்ரெஸ் பெல்காம் அருகில் ஆறு பெட்டி தடம் புரண்டு விழுந்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். நடமாடும் தெய்வம் மஹாபெரியவா அனுக்ரஹத்தால்தானே ரயில்
ப்ரயாணத்தை ரத்து செய்து அங்கு தங்கினோம். எப்படிப்பட்ட தீர்க்கதரிசி
மஹாபெரியவா!!
இதனை தரிசன அனுபவங்கள் நான்காம் தொகுதியில் புல்லங்குழல் வித்வான் G.வெங்கடேசன் பகிர்ந்து கொள்கிறார். அவர் தந்தை ப்ரம்மஸ்ரீ சித்தூர் கோபால க்ருஷ்ணைய்யர்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர…..
சுமார் ஐம்பந்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த ஓர் சுவையான சம்பவம்…
ஸ்ரீ சரணாள் சேலம் பகுதியில் யாத்திரையாகப் போய்க் கொண்டிருந்தபோது, அவருடன் சிலரும் நதிவழியாகவும், பரிவாரங்கள் சாலை வழியாகவும் போய்க் கொண்டிருந்தனர். அப்போது குதிரையின்
மேல் நகரா அடித்துச் செல்வது வழக்கம். இது ஒரு மசூதி வழியாகச் சென்றபோது மசூதி வழியாக
இதெல்லாம் போகக் கூடாது என்று குதிரையின் முன்கயிற்றைப் பிடித்துத் தடுத்தார்கள். இதனால்
சிறு சலசலப்பு ஏற்பட்டு ,சிலர் மத்யஸ்தம் செய்தார்கள்.
மறுதினம் மேற்படி மசூதியைச் சேர்ந்த ஒருவர் மடத்து அதிகாரிகளிடம் ஸ்ரீசரணாளை தனியாக சந்தித்துப்
பேச அனுமதி கேட்டார்கள். மடத்து அதிகாரி, முதல் நாள் சம்பவத்தை மனதில் கொண்டு, அதற்கு மறுப்பு சொல்லிவிட்டார். வேண்டுமானால் எல்லாரும் இருக்கும்போது சந்திக்கலாம் என்றும் சொல்லிவிட்டார். இந்த விஷயம் ஸ்ரீ சரணாள் காதிர்கு எட்டியது. ஆனால் அவர் தனியாகச் சந்திப்பதில் தனக்கு
ஆக்ஷபணை எதுவும் இல்லை என்றும் அவரை வரும்படியும் கூறிவிட்டார். இதில் மடத்தில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லாவிடினும், வேறு வழியில்லாமல் எதிரே இருந்த ஒரு வீட்டில் சந்திக்க ஏற்பாடாயிற்று. மறு தினம் பெரியவா அந்த வீட்டு வாசல் கதவை உள்தாழ்ப்பாள் போட்டுக்
கொண்டு தான் அவரிடம் பேசச் சென்றார்.
மடத்து அதிகாரிகள் கலக்கத்துடன் வெளியே காத்திருந்தனர். பெரியவாளிடம் சென்றவர் பெரிய காகித உறை ஒன்றை எடுத்துக் கொடுத்தாராம். அதில் என்ன என்று பெரியவா கேட்டதற்கு பெரியவாளைப் பற்றி தான் எழுதிய சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் என்று சொல்லி அதை அவரே வாசித்துக் காண்பித்தாராம். நாக பந்தம், கருட பந்தம், சக்ர பந்தம் போன்ற சாகித்ய மரபுகளுடன் அழகாக வாசித்தாராம்.
” இதை யார் எழுதியது யார் சொல்லிக் கொடுத்தார்கள்’ என்று கேட்டதற்கு தன் பரம்பரையினர் சம்ஸ்க்ருதத்தில் விசேஷ பயிற்சி பெற்றவர்கள் என்றும், பரம்பரையாக வருவதாகவும் பதில் சொன்னார். அவர்கள் கசாப்புக் கடை நடத்தி வருவதாகவும் கூறினாராம். இதை ஸ்ரீ சரணாள் ஹாஸ்யத்துடநும், த்ரில்லிங்காகவும்,ஸஸ்பென்ஸாகவும் சொல்லி எல்லா ஜாதியிலும் மதத்திலும் நல்லொழுக்கம்,
பண்பு உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் குறிப்பிட்டார்.
இவர்தான் பின் நாளில் வேத பாஷ்ய கல்லூரி ஆரம்பிக்க மிக முயற்சி எடுத்துக் கொண்ட ஸப் ஜட்ஜ் திரு கமாலுதீன்!
இந்த சமயத்தில் நான் ஒன்று கூர நினைக்கிறேன். என் சித்தப்பா ஸ்ரீ லக்ஷ்மிகாந்த சர்மாவை அழைத்து
பெரியவா ராஜா வேத பாடசாலை கும்பகோணம் , ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதர் அவர்களால் சுமார் நானூற்றைம்பது வருடங்களுக்குமுன் ஸ்தாபிக்கப்பட்டது அதன் நிர்வாகத்தைச் சிறப்பாகச் செயல் படுத்த திரு கமாலுதீன் அவர்களை சந்திக்குமாறு சொல்ல சித்தப்பா குடும்ப ஆசாரம் கருதி அதனை தள்ளிப் போட்டு வந்தார். ஆனால் ஒரு நாள் பெரியவாள் கொடுத்த நெருக்கடியில் ஜட்ஜ் அவர்களை சந்தித்து ஆசார்யாள் ஆஜ்ஞைப்படி அவருடன் அராபிக் வகுப்புகள் எப்படி நடைபெறுகிறது என்று போய் பார்த்து அதன் பிறகு ராஜா வேத பாடசாலை நிர்வாகத்தை மேற்கொண்டதுமன்றி, வேத சம்ரக்ஷண பரிபாலன சபை ஒன்று நிறுவி அது இன்றளவில் நல்லவிதமாக நடை பெறுகிறது. ராஜா வேத பாடசாலையில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசாங்க உதவித்தொகையும், ஆசிரியர்களுக்கு மத்திய அரசாங்க ஊதியமும் பெற்றுத்தந்தார்.
திரு கமாலுதீன் அவர் ஜீவன் இருக்கும் வரை எங்கள் அகத்தில் வந்து சாப்பிட்டுச் செல்லும் பழக்கம் இருந்தது. இன்றளவும் அவர்கள் சந்ததியினரும் என் சித்தியைப் பார்த்துச் செல்கின்றனர்.
பெரியவாளிடம் திரு கமாலுதீன் கொண்டிருந்த பக்தி அளவிட முடியாதது. அதுபோல் ஜஸ்டிஸ் கம்பராமாயண விளக்கவுரை எழுதிய இஸ்மாயிலும் பெரியவாளிடம் அளவு கடந்த பக்தியும் மரியாதையும் கொண்டிருந்தார். பெரியவாளும் இவர்களிடத்தில் மத இன பேதமின்றி அவர்கள் அறிவு, ஆற்றலுக்கு
மிக்க மதிப்பளித்து வந்தார் . பக்தி என்பது ஜாதி, மத இனம் கடந்தது என்பதற்கு இதுவும் ஓர் சான்று!
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா
-
- Posts: 19
- Joined: 07 Apr 2018, 15:34
Re: Kanchi Maha Periyava
Hi,
Does any one have lyrics for the song Chandrasekara Kripanidhe? Who is the composer and I think raagam is Sanakarabaranam.
Thank you,
Vidhya
Does any one have lyrics for the song Chandrasekara Kripanidhe? Who is the composer and I think raagam is Sanakarabaranam.
Thank you,
Vidhya
venkatakailasam wrote: ↑17 Mar 2014, 07:22 Listen to a concert a day..any time
Concert 136-songs on Mahaperiva
Listen at
http://myblogkumara.blogspot.in/2014/02 ... t-iii.html
Concert details:
001-Brahma nadam-Udayalur Shri Kalyanaraman-Mahapriva
002-Vizhi Kidaikkuma..Alangudi Radhakalyanam- Melarcode Ravi
003-Bhajre gurunadham-Shri TMK
004-Chandrashekhara Saraswathiye charanam - Hindolam-M Santhanam-Own composition
005-A song on Paramacharia-MSS
006-Karunai Pozium Kangal-Dr Ganesh
007-Karunai ennum varithiye-MSS-thooran
010-Kaladiyail-udayalur kalyanaraman
011-Thamarai malar ondru kandenThilong-DKP
012-Sri chandrasekara-Shri TMK
013-Chandrasekaram-Shri TMK
014-Sada sada-Shri TMK
015-Chandrasekara kripanidhe-Shri TMK
016-Vandeham guruvaram-TMK
017-Anandavahena-TMK
018-Kanchi Maanagar Pogavendum.. Sattananda Bahavathar-Alangudi Radhakalyanam
For information:
Some of the songs by Shri TM Krishna are included in the concert with permission from
Sri Kanchi MahaswamiPeetarohana Shatapthi Mahotsav Trust who have released the songs..
As suggested by Shri TM Krishna, the above permission was obtained..from them.