Sri Rama Padigam

History, religion and culture
Post Reply
satyabalu
Posts: 915
Joined: 28 Mar 2010, 11:07

Sri Rama Padigam

Post by satyabalu »

வடலூர் இராமலிங்க அடிகளார் நிகழ்த்திய அற்புதங்களுள் இந்த நிகழ்ச்சியும் ஒன்று .

ஒரு முறை குருஞ்சிபாடி போலீஸ் head constable விஜயராகவன் மீது விரோதம் கொண்ட சிலர் அவர் மீது தீய சக்திகளை ஏவி விட்டனர் . அதனால் அவரது உடம்பு மெலிந்து நொந்து போயிருந்தார் . அவர் வடலூர் வந்து அடிகளாரைத் தரிசித்தார் . அடிகளார் அவரிடம் 'ஸ்ரீ ராம நாம பதிகத்தை ' கொடுத்துத் தினமும் பாராயணம் செய்து வர சொன்னார்கள் . அதன்படியே செய்து வந்த head constable ம் தீய சக்திகளின் துன்பம் நீங்க பெற்றார்.

ஸ்ரீ ராமநாமப் பதிகம்

திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்
செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்
தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்
தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே
இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்
தென்அரசே என்அமுதே என்தா யேநின்
மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ
மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே


கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங்
கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான
மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர்
மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர்
தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத்
தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள
நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன்
நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே


மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்
மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்
விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்
வித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்
புண்ணாளா நின்றமன முடையேன் செய்த
பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்
கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்
கைவிடில்என் செய்வேனே கடைய னேனே


தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச்
சிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ
வெவ்வினைதீர்த் தருள்கின்ற ராம நாம
வியன்சுடரே இவ்வுலக விடயக் காட்டில்
இவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்
கிலக்கானேன் துணைஒன்றும் இல்லேன் அந்தோ
செய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய்
திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வ தென்னே


வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல
மணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத்
தேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத்
தெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா
ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங்
குழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ
கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக்
காட்டினையே என்னேநின் கருணை ஈதோ


பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்
போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி
என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ
என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்
பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்
பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்
ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே


அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன்
ஆருயிருக் கொருதுணையே அரசே பூவை
நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே
நெடுங்கடலுக் கணையளித்த நிலையே வெய்ய
மறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர்
வாளினாற் பணிகொண்ட மணியே வாய்மைத்
திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின்
திருவருளே அன்றிமற்றோர் செயலி லேனே


கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே
கண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை
எல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்
இரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே
பொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்
புண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ
அல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்
ஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே


மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே
மனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
ஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்
அறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே
பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்
புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
மெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்
வெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே


கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக்
குருட்டறிவோர் இடைப்படும்என் குறைகள் எல்லாம்
ஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ
அவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன்
ஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய்
ஏற்றுகின்றோர் நின்னைஅன்றி இல்லேன் என்னைச்
சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன்
திருவுளத்தைத் தெரியேனே
ஸ்ரீ ராம நாமத்தின் மகிமை உலகிலேயே உயர்ந்த நாமம் ராமநாமம். "ஸ்ரீராமஜெயம்' என ஒருமுறை சொன்னால் செய்த பாவங்கள் தீர்ந்துவிடும். ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தன. எல்லா வானரங்களும் கற்களை தூக்கி கடலுக்குள் போட்டன. ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின்மீது சரியாக அமர்ந்தது. ஆஞ்சநேயர் அந்தபணியை மேற் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது. நாமும் இந்தவானரங்களுடன் இணைந்து கல்லை தூக்கிப்போட்டால் என்ன என கருதியபடியே, ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார். அந்தக்கல் சரியாக மற்ற கற்களின்மீது அமரவில்லை. அலை அடித்து சென்றுவிட்டது. ராமபிரானுக்கு வருத்தம். "இந்த குரங்குகள் போடும் கற்கள்கூட சரியாக மற்றொரு கல்லின்மீது அமர்ந்துவிட்டதே. நமது கல்லை அலைஅடித்து சென்றுவிட்டதே. இதற்கு என்ன காரணமாக இருக்கும்'' என வருத்தப்பட்டார். ஆஞ்சநேயர் ராமனின் அருகில் வந்தார். அவர் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். "ஆஞ்சநேயா! நான் செய்ததை நீ பார்த்துவிட்டாயா? எனக்கு ஒரு கல்லை போடக்கூட தெரியவில்லை. என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது'' என்றார். அதற்கு ஆஞ்சநேயர், "ஸ்ரீராமா! மற்ற குரங்குகள் எல்லாம் "ஸ்ரீராமஜெயம்' என்ற உன் நாமத்தை சொல்லிக்கொண்டே கற்களை தூக்கிப்போட்டன. அவை சரியாக அமர்ந்தது. நீ ராமனாகவே இருந்தாலும் ராமஜெயம் சொல்லிக்கொண்டே போட்டிருந்தால் அது சரியாக அமர்ந்திருக்கும்'' என்றாராம். ராம நாமத்தின் மகிமை அத்தகையது.
ஸ்ரீ ராம நாமத்தின் மகிமை

உலகிலேயே உயர்ந்த நாமம் ராமநாமம். "ஸ்ரீராமஜெயம்' என ஒருமுறை சொன்னால் செய்த பாவங்கள்
ஸ்ரீ ராம நவமி விரதம்.... ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி எனக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர். அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனு பவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமர், பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இந்நாளில் ஸ்ரீராமருக்கு கோவில்களில் பட்டாபிஷேகம் நடைபெறும். அன்று, கோவிலுக்கு செல்ல முடியாதபோது, பட்டாபிஷேக இராமர் படத்தை நன்றாகச் சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவைகளால் பொட்டிட்டு, துளசியால் ஆன மாலையை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்யமாக, சாதாரணமாகத் தினம் தயார் செய்யும் உணவோடு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் ஆகியவைகளைப் படைக்கலாம். அர்ச்சனை முடிந்தபின், நைவேத்யப் பொருட்களைக் குழந்தைகளுக்குத் தர வேண்டும். ஸ்ரீராமபிரான் விசுவாமித்திரர் பின்னால் இருந்த போதும், காட்டில் வாழ்ந்த போதும், தாகத்திற்கு நீர்மோரும், பானகமும் தேவைப்பட்டதாம். அதன் நினைவாகத்தான் அவையிரண்டும் நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றது. சிலர், பத்து நாட்களுக்கு முன்னரே இராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்து, ஸ்ரீராம நவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடித்து, சர்க்கரைப் பொங்கலை நைவேத்யமாகப் படைப்பார்கள். அவ்வாறு முடியாவிட்டாலும், ஸ்ரீராம நவமியன்று, இராமாயண கதாகாலட்சேபம் கேட்பதோ, சிறிது நேரமாவது இராமாயணம் படிப்பதோ நல்லது. காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும் நாடியப் பொருட்கள் கைகூடும். இராமாயணத்தை முழுமையாகப் படிக்க முடியாத பட்சத்தில் ``ராம்'' என்ற இரண்டெழுத்தைஉச்சரித்தால் கூடப் போதும், மேற்கூறிய பலன்களோடு ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும்.
ஸ்ரீ ராம நவமி விரதம்....



ஸ்ரீ ராமர் திருப்பள்ளி யெழுச்சி, ஆஞ்சநேயர் அருளியது. அருள்மிகு ராமபிரான் திருப்பள்ளியெழுச்சி பாடல்.:- தேவானு குலவா, தேவி கௌசலை பாலா தசரத ராமனே எழுந்திரும். ஆவலோடு அழைத்திட்ட கௌசிகன் வேள்வியை அன்புடன் காத்தவனே எழுந்திரும். கல்லைக் பெண்ணாக்கிய கமல பொற்பாதனே கல்யாண ராகவா எழுந்திரும். வில்லொடித்து மிதிலை வேந்தன் பெண் சீதையை விவாஹம் செய்தோனே எழிந்திரும். அட்டகாசமாய் வந்த பரசுராமனை ஜெயித்து அயோத்தி வந்த துரையே எழுந்திரும். தட்டாமல் தந்தை மொழி பிசகாமல் தம்பி, சீதையுடன் தண்டகாரண்யம் வந்தவரே எழுந்திரும். சித்தம் மகிழ்வுடன் குகனார் தோழமை கொண்டு சித்ரகூடம் வந்தவரே எழிந்திரும். பக்தியுடன் அழைத்த பரதர்க்கு மகிழ்வுடன் பாதுகை அளித்தோனே எழுந்திரும். மூர்க்கன் விராதனைக் கொன்றவனே! சூர்ப்பனகை மூக்கை அறுத்தவரே எழுந்திரும். ஜடாயுவுக்கும், சபரிக்கும் மோட்சமளித்துவிட்டு அடியேனை எதிர்கொண்டவரே எழுந்திரும். சுக்ரீவனிடம் நட்புகொண்டு மாமரங்களைத் துளைத்த கோதண்ட ராமரே எழுந்திரும். வாலியை வதம் செய்து தாசனைத் தூதுவிட்ட காருண்ய ராகவா எழுந்திரும். அரக்கர் விபீஷணருக்கு அபயம் கொடுத்து கடல் துணையால் அக்கரை சென்றவனே எழுந்திரும். வம்சத்துடனே இலங்கை எதிர்த்து இராவணனை அவன் வம்சத்தோடு அழித்தவரே எழுந்திரும். தசமுகனை வதைத்து தேவி ஜானகியுடன் திருவுளம் மகிழ்ந்தோனே எழுந்திரும். திசை எங்கும் புகழவே புஷ்பரத மேறிய திருவை அயோத்தி வந்தவரே எழுந்திரும். உலகம் புகழ் பரதன் மனம்மிக மகிழ்ந்திட மகுடாபிஷேகம் ஏற்றுக் கொள்பவரே எழுந்திரும். உன் அருள் பெற அடியேனும் சீதாபிராட்டி உதவி அருளவேணும் எழுந்திரும். சங்கீத ராமனே, ஜானகி நேசனே, ஸ்ரீ பரந்தாமனே ஜனகரின் மருகரே எழுந்திரும். ஆத்ம ராமனே, கல்யாண ராமனே பட்டாபிஷேகம் காண அருள வேண்டும் எழுந்திரும். ------------------ வனவாசம் முடிந்து அயோத்தி வந்த மறுநாள் காலை ஸ்ரீராமபிரான் விழித்தெழ ஹனுமார் பாடிய திருப்பள்ளி யெழுச்சி. இதைத் தினமும் அதிகாலையில் பாராயணம் செய்து வந்தால் ஸ்ரீ சீதாராமரின் அருளோடு ஆஞ்சநேயரின் அருளும் கிட்டும். இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் இராமாயணம் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம். DHE(Y)VAANU KULAVAA DEVI KOUSALAI BAALAA, SRI RAMAR THIRUPPALLI YEZHUCHCHI BY LORD HANUMAN, ANJANEYAR. DIVINE SONG BY LORD HANUMAN ARULMIGU RAMABIRAN THIRUPPALLIYEZHUCHCHI SONG. DHE(Y)VAANU KULAVAA DEVI KOUSALAI BAALAA DHASARADHA RAAMANE(Y) EZHUNDHIRUM. AAVALHODU AZHAITHTHITTA KOUSIGAN VE(Y)LVIYAI ANBUDAN KAATHTHAVANE(Y) EZHUNDHIRUM. KALLAIP PENNAAKKIYA KAMALA PORPAADHANE(Y) KALYAANA RAAGAVAA EZHUNDHIRUM. VILLODITHTHU MIDHILAI VE(Y)NDHAN PEN SEEDHAIYAI VIVAAHAM SEIDHONE(Y) EZHUNDHIRUM. ATTAGAASAMAAI VANDHA PARASURAAMANAI JEYITHTHU AYODHDHI VANDHA DHURAIYEH EZHUNDHIRUM. THATTAAMAL THANDHAI MOZHI PISAGAAMAL THAMBI, SEETHAIYUDAN THADAKAARANYAM VANDHAVARE(Y) EZHUNDHIRUM. SITHTHAM MAGIZHVUDAN GUHANAAR THOZHAMAI KONDU SITHRAKOODAM VANDHAVARE(Y) EZHUNDHIRUM. BAKTHIYUDAN AZHAITHTHA BARATHARKKU MAGIZHVUDAN PAADHUGAI ALITHTHONE(Y) EZHUNDHIRUM. MOORKKAN VIRAADHANAIK KONDRAVANE(Y)! SOORPPANAGAI MOOKKAI ARUTHTHAVAREH EZHUNDHIRUM. JADAAYUVUKKUM, SABARIKKUM MOHTCHAMALITHTHUVITTU ADIYEHNAI EDHIRKONDAVARE(Y) EZHUNDHIRUM. SUGREEVANIDAM NATPUKONDU MAAMARANGALAITH THULAITHTHA KODHANDA RAAMAREH EZHUNDHIRUM. VAALIYAI VADHAM SEIDHU DHAASANAITH THOODHUVITTA KAARUNYA RAAGAVAA EZHUNDHIRUM. ARAKKAR VIBHEESHANARUKKU ABAYAM KODUTHTHU KADAL THUNAIYAAL AKKARAI SENDRAVANE(Y) EZHUNDHIRUM. VAMSATHTHUDANE(Y) ILANGAI EDHIRTHTHU IRAAVANANAI AVAN VAMSATHTHODU AZHITHTHAVAREH EZHUNDHIRUM. DHASAMUGANAI VADHAITHTHU DEVI JAANAKIYUDAN THIRUVULAM MAGIZHNDHDHONE(Y) EZHUNDHIRUM. DHISAI ENGUM PUGAZHAVEH PUSHPARADHA MEYRIYA THIRUVAI AYODHDHI VANDHAVARE(Y) EZHUNDHIRUM. ULAGAM PUGAZH BARADHAN MANAMMIGA MAGIZHNDHDHIDA MAGUDAABISHEKAM YEHTRUK KOLBAVAREH EZHUNDHIRUM. UN ARUL PERA ADIYEHNUM SEETHAAPIRAATTI UDHAVI ARULAVE(Y)NUM EZHUNDHIRUM. SANGEEDHA RAAMANE(Y), JAANAKI NE(Y)SANE(Y), SREE PARANDHAAMANE(Y) JAGAGARIN MARUGARE(Y) EZHUNDHIRUM. AATHMA RAAMANE(Y), KALYAANA RAAMANE(Y) PATTAABISHEKAM KAANA ARULA VE(Y)NDUM EZHUNDHIRUM. Reciting the above prayer will give the benefit of reciting Ramayanam. OM SRIRAM JAI RAM JAI JAI RAM.
ஸ்ரீ ராமர் திருப்பள்ளி யெழுச்சி,
ஆஞ்சநேயர் அருளியது.
அருள்மிகு ராமபிரான்
திருப்பள்ளியெழுச்சி பாடல்.:-
*This is a forward from a message hosted in my Facebook.

..

Post Reply