தனிச் செய்யுட்கள்
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
தனிச் செய்யுட்கள்
உனையே நினைந்துரு குமவள் நிலைநீ உணராயோ
துணையாய் வருவே னெனவொரு மொழிநீ பகராயோ
மருகா நிலையளித் தவள்மனம் பதறா தருள்வாயே
திருவே பெருமரு ளேயுனை அடைந்தாள் மகிழ்வாளே (1)
தருவாள் வரமருள் வாள்தனை தினம்நாடிடு மனமே
கருவாய் ஒருமகசிசு வாய்ப்பின் வருநாளிலும் துணையே
சருகா கிறகடை நாளிலும் மறவாதிரு பெயரே
ஒருபாதி யில்பரமன் தனையு டையாள்தாள் சரணே (2)
சினமேத விர்ந்துளமே குளிர்ந்தினி தானமொழி
தினமும னுதினமும் நாம்பயின் றாலதுவே
உலகெங் கிலும்மனிதர் குலமிசை வாய்வாழ
நலம்நல்கும் வளமூட்டும் வழியாய்க் கண்டேன் (3)
ஏதேனும் பா வகையுள் பொருந்துமா எனத் தெரியவில்லை!
துணையாய் வருவே னெனவொரு மொழிநீ பகராயோ
மருகா நிலையளித் தவள்மனம் பதறா தருள்வாயே
திருவே பெருமரு ளேயுனை அடைந்தாள் மகிழ்வாளே (1)
தருவாள் வரமருள் வாள்தனை தினம்நாடிடு மனமே
கருவாய் ஒருமகசிசு வாய்ப்பின் வருநாளிலும் துணையே
சருகா கிறகடை நாளிலும் மறவாதிரு பெயரே
ஒருபாதி யில்பரமன் தனையு டையாள்தாள் சரணே (2)
சினமேத விர்ந்துளமே குளிர்ந்தினி தானமொழி
தினமும னுதினமும் நாம்பயின் றாலதுவே
உலகெங் கிலும்மனிதர் குலமிசை வாய்வாழ
நலம்நல்கும் வளமூட்டும் வழியாய்க் கண்டேன் (3)
ஏதேனும் பா வகையுள் பொருந்துமா எனத் தெரியவில்லை!
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
பகையை மறநகை யைப்புரி மனிதா மனிதா
இகத்தில் பரசுகத் தைப்பெறும் வழியே வழியே
இகழ்ச்சி ஒருபுகழ்ச் சியிவை சமமே சமமே
மகிழ்ச்சி குறைபட் டாலதுவாழ் வோசீர் வாழ்வோ (4)
இகத்தில் பரசுகத் தைப்பெறும் வழியே வழியே
இகழ்ச்சி ஒருபுகழ்ச் சியிவை சமமே சமமே
மகிழ்ச்சி குறைபட் டாலதுவாழ் வோசீர் வாழ்வோ (4)
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: தனிச் செய்யுட்கள்
edEnum pA vagaiyuL porundAviDil enna?
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
caught vadasi yathi and so inspired by tvamasi mama jIvanam tvamasi mama bhushanam
தாழ்சடையான் இடப்பாகம் தானுகந்த அம்மையால்
ஊழ்வினையை ஊடறுத்து வீடேகும் இப்பிறப்பில்
தாழ்விலாத பெண்ணாளே தானுவந்தெ னைக்கொண்டாய்
வாழ்வெனக்கு நீயன்றோ என்சீரும் நீயன்றோ
தாழ்சடையான் இடப்பாகம் தானுகந்த அம்மையால்
ஊழ்வினையை ஊடறுத்து வீடேகும் இப்பிறப்பில்
தாழ்விலாத பெண்ணாளே தானுவந்தெ னைக்கொண்டாய்
வாழ்வெனக்கு நீயன்றோ என்சீரும் நீயன்றோ
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
தேமதுரத் தாய்த்தமிழில் யாமவளைப் பாடுகிறோம்
மாமதுரைச் சொக்கநாதர் கைப்பிடித்த மும்முலையை
காதுகுளிர் தீந்தமிழில் பண்ணிசைத்துப் போற்றுகிறோம்
யாதுமவள் செய்கையாம் யாமவள்கைப் பாவையாம்
மாமதுரைச் சொக்கநாதர் கைப்பிடித்த மும்முலையை
காதுகுளிர் தீந்தமிழில் பண்ணிசைத்துப் போற்றுகிறோம்
யாதுமவள் செய்கையாம் யாமவள்கைப் பாவையாம்
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
மூவுலகும் மூவடியால் முன்னளந்த முதலவனைத்
தீவளர்த்து ஓத்திசைக்கும் வேதியரும் மற்றவரும்
காவளர்ந்த தேன்சொரியும் மாமலராற் றாந்தொழுது
நீர்வளரும் காவிரியின் தீவினிலே கண்டனரே
தீவளர்த்து ஓத்திசைக்கும் வேதியரும் மற்றவரும்
காவளர்ந்த தேன்சொரியும் மாமலராற் றாந்தொழுது
நீர்வளரும் காவிரியின் தீவினிலே கண்டனரே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
தனதாவி தானுகுத்தாள் போனாள்வெந் தீயில்
எனதாவி போகாதோ தான்
விடையேறி ஊர்வானைச் சேர்ந்தாளே பெண்ணாள்
விடையாரிங் கேபகர்வ ரோ
குன்றிட்ட சோதியாய் என்வாழ்வில் நின்றாளைச்
சென்றங்கு என்றுகாண் பேன்
மஞ்சாடு விண்ணேகிச் சென்றாளை என்சொல்வேன்
நெஞ்சோடு தான்கலந் தாள்
கையறு நிலை குறட்பா
எனதாவி போகாதோ தான்
விடையேறி ஊர்வானைச் சேர்ந்தாளே பெண்ணாள்
விடையாரிங் கேபகர்வ ரோ
குன்றிட்ட சோதியாய் என்வாழ்வில் நின்றாளைச்
சென்றங்கு என்றுகாண் பேன்
மஞ்சாடு விண்ணேகிச் சென்றாளை என்சொல்வேன்
நெஞ்சோடு தான்கலந் தாள்
கையறு நிலை குறட்பா
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
கடைநாளினில் துணையாகிட மணமாகிய எவரேனும்
இடைநாளினில் உயிர்நீங்கிப் பிரிவாகிடும் விதிக்கேதும்
தடையுளதோ அருளாளா உலகெல்லாம் உடையானே
விடைகூறாய் விடையேறிப் புள்ளூரும் ஓரிறையே
இடைநாளினில் உயிர்நீங்கிப் பிரிவாகிடும் விதிக்கேதும்
தடையுளதோ அருளாளா உலகெல்லாம் உடையானே
விடைகூறாய் விடையேறிப் புள்ளூரும் ஓரிறையே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
பைந்நாகப் பாய்சுருட்டிப் பின்விரித்து சொன்னவன்னம் செய்தானை
அந்நாகம் காத்தானை ஆழிநிற நின்மலனைக் காண்மின்
மாமலராள் மண்மடந்தை தங்கோவை இன்னமுதை நன்றேநீர்
சேமமுறப் பாதையி தேசேவிப் பீர்நாரண னைநிதம்
அந்நாகம் காத்தானை ஆழிநிற நின்மலனைக் காண்மின்
மாமலராள் மண்மடந்தை தங்கோவை இன்னமுதை நன்றேநீர்
சேமமுறப் பாதையி தேசேவிப் பீர்நாரண னைநிதம்
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
மஞ்சுலாவு வரைமுகட்டில் மதியடர்ந்த ஆம்பொழுதில்
நெஞ்சமிகக் குழைவுறவே தந்தலைவி நெருங்கமித
மிஞ்சியதோர் காதலெனும் வெள்ளமதில் மூழ்கியவன்
கஞ்சமல ரடியிணைக் கீடுளதோ வென்றயர்ந்தான்
நெஞ்சமிகக் குழைவுறவே தந்தலைவி நெருங்கமித
மிஞ்சியதோர் காதலெனும் வெள்ளமதில் மூழ்கியவன்
கஞ்சமல ரடியிணைக் கீடுளதோ வென்றயர்ந்தான்
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: தனிச் செய்யுட்கள்
All such lovely verses, sankark!
#8 and #9 bring tears to one's eyes...
#8 and #9 bring tears to one's eyes...
-
- Posts: 3035
- Joined: 03 Feb 2010, 04:44
Re: தனிச் செய்யுட்கள்
மூவுலகும் மூவடியால் முன்னளந்த முதலவனைத்
தீவளர்த்து ஓத்திசைக்கும் வேதியரும் மற்றவரும்
காவளர்ந்த தேன்சொரியும் மாமலராற் றாந்தொழுது
நீர்வளரும் காவிரியின் தீவினிலே கண்டனரே
அரங்கநாதரை அருமையாக கண் முன் நிறுத்திவிட்டீர்கள். வாழ்க வளமுடன்!
தீவளர்த்து ஓத்திசைக்கும் வேதியரும் மற்றவரும்
காவளர்ந்த தேன்சொரியும் மாமலராற் றாந்தொழுது
நீர்வளரும் காவிரியின் தீவினிலே கண்டனரே
அரங்கநாதரை அருமையாக கண் முன் நிறுத்திவிட்டீர்கள். வாழ்க வளமுடன்!
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
panchaprEtAsanA
ஐந்துபெரிது எட்டுபெரிது என்றுமாயும் மாந்தரேநீர்
ஐந்துமெட்டும் மேலோர்மூன் றுமாயதொழில் செய்வோரை
மஞ்சமாக்கி மேலிருந் தாட்டுவிக்கும் ஒன்றேயாம்
வஞ்சியவள் தாள்பணிந்து மாயைநீங் கிஉய்வீரே
ஐந்துபெரிது எட்டுபெரிது என்றுமாயும் மாந்தரேநீர்
ஐந்துமெட்டும் மேலோர்மூன் றுமாயதொழில் செய்வோரை
மஞ்சமாக்கி மேலிருந் தாட்டுவிக்கும் ஒன்றேயாம்
வஞ்சியவள் தாள்பணிந்து மாயைநீங் கிஉய்வீரே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
ஒன்றிரண்டும் மேலிரண்டு மாயவற்றை மஞ்சமாக்கி
ஒன்றிரண்டும் மூவிரண்டு மாயகோள்கள் மேனிறுத்தி
ஒன்றிரண்டும் மேலுமொன்றை ஓத்துவாக்கி ஓதுவார்க்கு
ஒன்றுயானே ஒன்றுயானே என்றுநின்றாள் தாள்சரண்
திருச்சந்த விருத்தத்தின் ஓசையொழுங்கை ஒட்டியது
ஒன்றிரண்டும் மூவிரண்டு மாயகோள்கள் மேனிறுத்தி
ஒன்றிரண்டும் மேலுமொன்றை ஓத்துவாக்கி ஓதுவார்க்கு
ஒன்றுயானே ஒன்றுயானே என்றுநின்றாள் தாள்சரண்
திருச்சந்த விருத்தத்தின் ஓசையொழுங்கை ஒட்டியது
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
sankark wrote: ↑21 May 2022, 18:08 உனையே நினைந்துரு குமவள் நிலைநீ உணராயோ
துணையாய் வருவே னெனவொரு மொழிநீ பகராயோ
மருகா நிலையளித் தவள்மனம் பதறா தருள்வாயே
திருவே பெருமரு ளேயுனை அடைந்தாள் மகிழ்வாளே (1)
தருவாள் வரமருள் வாள்தனை தினம்நாடிடு மனமே
கருவாய் ஒருமகசிசு வாய்ப்பின் வருநாளிலும் துணையே
சருகா கிறகடை நாளிலும் மறவாதிரு பெயரே
ஒருபாதி யில்பரமன் தனையு டையாள்தாள் சரணே (2)
சினமேத விர்ந்துளமே குளிர்ந்தினி தானமொழி
தினமும னுதினமும் நாம்பயின் றாலதுவே
உலகெங் கிலும்மனிதர் குலமிசை வாய்வாழ
நலம்நல்கும் வளமூட்டும் வழியாய்க் கண்டேன் (3)
ஏதேனும் பா வகையுள் பொருந்துமா எனத் தெரியவில்லை!
தருவாள் வரமருள் வாள்தனை தினம்நாடிடு மனமே
கருவாய் ஒருமகசிசு வாய்ப்பின் வருநாளிலும் துணையே
சருகா கிறகடை நாளிலும் மறவாதிரு பெயரே
ஒருபாதி யில்பரமன் தனையு டையாள்தாள் சரணே (2)
-- கலித் துறை.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
நன்றிPratyaksham Bala wrote: ↑05 May 2023, 12:25sankark wrote: ↑21 May 2022, 18:08 உனையே நினைந்துரு குமவள் நிலைநீ உணராயோ
துணையாய் வருவே னெனவொரு மொழிநீ பகராயோ
மருகா நிலையளித் தவள்மனம் பதறா தருள்வாயே
திருவே பெருமரு ளேயுனை அடைந்தாள் மகிழ்வாளே (1)
தருவாள் வரமருள் வாள்தனை தினம்நாடிடு மனமே
கருவாய் ஒருமகசிசு வாய்ப்பின் வருநாளிலும் துணையே
சருகா கிறகடை நாளிலும் மறவாதிரு பெயரே
ஒருபாதி யில்பரமன் தனையு டையாள்தாள் சரணே (2)
சினமேத விர்ந்துளமே குளிர்ந்தினி தானமொழி
தினமும னுதினமும் நாம்பயின் றாலதுவே
உலகெங் கிலும்மனிதர் குலமிசை வாய்வாழ
நலம்நல்கும் வளமூட்டும் வழியாய்க் கண்டேன் (3)
ஏதேனும் பா வகையுள் பொருந்துமா எனத் தெரியவில்லை!
தருவாள் வரமருள் வாள்தனை தினம்நாடிடு மனமே
கருவாய் ஒருமகசிசு வாய்ப்பின் வருநாளிலும் துணையே
சருகா கிறகடை நாளிலும் மறவாதிரு பெயரே
ஒருபாதி யில்பரமன் தனையு டையாள்தாள் சரணே (2)
-- கலித் துறை.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
காதலில் வீழ்ந்தவர் கோடியில் ஆகுவார்
மோதலும் காதலில் அங்கமே அங்கமே
நீங்கினில் வெந்திடும் பக்கலில் தண்ணென சேர்கையில் தன்மையாய்
யாங்கனே இந்நெருப் பு
changed a bit to bring it all into கூவிளம் சீர்
மோதலும் காதலில் அங்கமே அங்கமே
நீங்கினில் வெந்திடும் பக்கலில் தண்ணென சேர்கையில் தன்மையாய்
யாங்கனே இந்நெருப் பு
changed a bit to bring it all into கூவிளம் சீர்
Last edited by sankark on 16 Jun 2023, 14:54, edited 1 time in total.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
கண்ணாரக் கண்டேனே கல்லாலின் கீழிருந்து
வண்ணமாய் வாசிக்கும் நால்வர்க்கும் எல்லாமும்
சொல்லாமற் சொல்லிடுந் தான்தோன்றி தன்னையேத்
தில்லையில் கால்தூக்கி யே
வண்ணமாய் வாசிக்கும் நால்வர்க்கும் எல்லாமும்
சொல்லாமற் சொல்லிடுந் தான்தோன்றி தன்னையேத்
தில்லையில் கால்தூக்கி யே
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
இரண்டும் இன்னிசை வெண்பா.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
ஒரு நேரிசை வெண்பா
நேற்றாகி இன்றாகி நாளையு மேயாவாய்க்
கூற்றுவனைக் கூத்துவிக்கும் கோதாய்நீ - மாற்றாதே
தேற்றமாய் நின்கடைக் கண்பாராய் பூவினுறு
நாற்றமேத் தீயினுட்தெ றலே
பரிபாடல் சொல்லாளுமையைத் தழுவியது
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
கடைசியில் கலித்தளை அமைந்துள்ளது. அதை சரிசெய்தால் நேரிசை வெண்பா ஆகிவிடும்.
இப்போது உள்ள அமைப்பை வெண்டுறை எனலாமா?
இப்போது உள்ள அமைப்பை வெண்டுறை எனலாமா?
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
சரியாகச் சொன்னீர். காய்முன்நேர் வேண்டும், மலர் ஆகிவிட்டது
நேற்றாகி இன்றாகி நாளையு மேயாவாய்க்
கூற்றுவனைக் கூத்துவிக்கும் கோதாய்நீ - மாற்றாதே
தேற்றமாய் நின்கடைக் கண்பாராய் பூவினுறு
நாற்றமேநீ தீக்குட் தெறல்
வெண்டுறை - பயில வேண்டும்
நேற்றாகி இன்றாகி நாளையு மேயாவாய்க்
கூற்றுவனைக் கூத்துவிக்கும் கோதாய்நீ - மாற்றாதே
தேற்றமாய் நின்கடைக் கண்பாராய் பூவினுறு
நாற்றமேநீ தீக்குட் தெறல்
வெண்டுறை - பயில வேண்டும்
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
.
வெண்டுறை :-
இது வெண்பாவினம்
எளிய பா அமைப்பு; கடுமையான விதிகள் கிடையாது.
குறைந்தது 3 அடிகள்; அதிகபட்சம் 7 அடிகள் கொண்டிருக்கும்.
எப்படிப்பட்ட சீரும் இருக்கலாம்.
தொடக்கத்தில் உள்ள சில அடிகள் ஏதேனும் ஒரு சீர் எண்ணிக்கை கொண்டும்; பிறகு வருகின்ற அடிகள் ஒரே அளவிலான குறைந்த சீர் எண்ணிக்கை கொண்டும் இருக்கும்.
அல்லது, கடைசி அடி மட்டும் சீர் எண்ணிக்கை குறைந்து வரலாம்.
சந்தஒழுங்கு (வாய்ப்பாடு) கிடையாது.
எதுகை கட்டாயம் இல்லை; இருந்தால் அழகு.
தளை காண வேண்டாம்.
வெண்டுறை :-
இது வெண்பாவினம்
எளிய பா அமைப்பு; கடுமையான விதிகள் கிடையாது.
குறைந்தது 3 அடிகள்; அதிகபட்சம் 7 அடிகள் கொண்டிருக்கும்.
எப்படிப்பட்ட சீரும் இருக்கலாம்.
தொடக்கத்தில் உள்ள சில அடிகள் ஏதேனும் ஒரு சீர் எண்ணிக்கை கொண்டும்; பிறகு வருகின்ற அடிகள் ஒரே அளவிலான குறைந்த சீர் எண்ணிக்கை கொண்டும் இருக்கும்.
அல்லது, கடைசி அடி மட்டும் சீர் எண்ணிக்கை குறைந்து வரலாம்.
சந்தஒழுங்கு (வாய்ப்பாடு) கிடையாது.
எதுகை கட்டாயம் இல்லை; இருந்தால் அழகு.
தளை காண வேண்டாம்.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
ஒரு குறள்
செத்தாரோ செப்பாதார் செப்புவோர்க் கண்டதில்லை
தத்தையே விந்தை யிதே
செத்தாரோ செப்பாதார் செப்புவோர்க் கண்டதில்லை
தத்தையே விந்தை யிதே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
செத்தாரோ செப்பாதார் செப்புவோர்ச் செத்தாரோ
தத்தையே விந்தை யிதே
a bit of a tweak. this makes one wonder how many great poems have gone through changes while maintaining the idea unchanged at the core.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
இன்று கந்தர் அநுபூதி தொடர்பு ஏற்பட அதன் சந்த அமைப்பில் ஈர்க்கப்பட இரண்டு
அகமும் குளிர்ந்திடக் கண்பஞ் சடையச்
சகமும் பிறபொருள் யாவும் மறைய
உனைநா னுணரும் படியே அருள்வாய்
தினையாள் தனையழ காய்மரு வியவா
சகியே சகியே இனியென்ன குறை
முகில்போ லக்கருங் கூந்தலு டையாய்
மகிழ்வாய் மனத்தேகு டிகொண்டா னவனே
புகழுக் குரியபர தேவிதன் மகனே
அகமும் குளிர்ந்திடக் கண்பஞ் சடையச்
சகமும் பிறபொருள் யாவும் மறைய
உனைநா னுணரும் படியே அருள்வாய்
தினையாள் தனையழ காய்மரு வியவா
சகியே சகியே இனியென்ன குறை
முகில்போ லக்கருங் கூந்தலு டையாய்
மகிழ்வாய் மனத்தேகு டிகொண்டா னவனே
புகழுக் குரியபர தேவிதன் மகனே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
time to go brush up on pAvinam and all that stuff..
One more
திருநாள் இதுபெரு கியதவ னருளே
வருமோ இதுபோ லினியொரு நாளும்
திருமால் மருகன ழகன்த னையே
திருவின் எழிலுடை பிணையடைந் தனளே
இதுவும் கலி விருத்தமோ ?
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
Yes!
Meets the two conditions -- four alavadi + yedugai.
Meets the two conditions -- four alavadi + yedugai.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
thanks!Pratyaksham Bala wrote: ↑04 Jul 2023, 09:49 Yes!
Meets the two conditions -- four alavadi + yedugai.
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
.
அளவடிகள் நான்கும், அடி எதுகையும் கொண்டிருப்பது கலிவிருத்தம்.
-----
மோனை கட்டாயமில்லை. இருந்தால் சிறப்பு.
எந்தவகைச் சீரும் வரலாம்.
எனவே சந்தஒழுங்கு / வாய்ப்பாடு கிடையாது.
தளை காண வேண்டாம்.
-----
ஆனால் இப்போது பலரும் சந்த ஒழுங்கும் மோனையும் இருப்பதை எதிர்பார்க்கிறார்கள். இது விதிகளைக் கடினமாக்கி புதியவர்களைச் சற்று மிரட்டுவது போலத் தோன்றும்.
எனினும், மோனையும் சந்தஒழுங்கும் கவிதைக்கு அழகூட்டி மிளிரச்செய்கிறது என்பதை உணரலாம்.
அளவடிகள் நான்கும், அடி எதுகையும் கொண்டிருப்பது கலிவிருத்தம்.
-----
மோனை கட்டாயமில்லை. இருந்தால் சிறப்பு.
எந்தவகைச் சீரும் வரலாம்.
எனவே சந்தஒழுங்கு / வாய்ப்பாடு கிடையாது.
தளை காண வேண்டாம்.
-----
ஆனால் இப்போது பலரும் சந்த ஒழுங்கும் மோனையும் இருப்பதை எதிர்பார்க்கிறார்கள். இது விதிகளைக் கடினமாக்கி புதியவர்களைச் சற்று மிரட்டுவது போலத் தோன்றும்.
எனினும், மோனையும் சந்தஒழுங்கும் கவிதைக்கு அழகூட்டி மிளிரச்செய்கிறது என்பதை உணரலாம்.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
https://www.dinamani.com/weekly-supplem ... 13930.html
kandhar anubhuthi seems to be made of kaliviruththams!
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95 ... E%E0%AF%8D
sandha ozhungu - must?
kandhar anubhuthi seems to be made of kaliviruththams!
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95 ... E%E0%AF%8D
sandha ozhungu - must?
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
ஆழ்ந்து அனைத்தையும் உள்வாங்க வேண்டும்!
பாவினங்கள் பாவிற்குறிய இலக்கணத்துக்கு சில விலக்குகள் அளிக்கின்ற போலும்
பாவினங்கள் பாவிற்குறிய இலக்கணத்துக்கு சில விலக்குகள் அளிக்கின்ற போலும்
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
தானானா x 4 அல்லது (தேமாங்காய்)
தானனானா/தானனனா x 4 (கூவிளங்காய்)
இறுதி அடி (x 2) + கடைச்சீர் நாள்/காசு
அல்லது
தானனா x 4 (கூவிளம்)
இறுதி அடி (x 2) + கடைச்சீர் நாள்/காசு
இது வெண்பா அளிக்க ஒரே சீரில் அமைந்த ஓசை ஒழுங்கு உடையது
தானனானா/தானனனா x 4 (கூவிளங்காய்)
இறுதி அடி (x 2) + கடைச்சீர் நாள்/காசு
அல்லது
தானனா x 4 (கூவிளம்)
இறுதி அடி (x 2) + கடைச்சீர் நாள்/காசு
இது வெண்பா அளிக்க ஒரே சீரில் அமைந்த ஓசை ஒழுங்கு உடையது
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
உலகத் துறைமறை யவர்பிறர் புகழும்
சுலபத் தருள்புரி சங்கரன் மகனே
தகுமோ தாமத மறுபடைத் தலத்தோய்
நகுமோ உலகமு மருள்புரிந் திடினே*
*நகுவா ருளரென அருள்புரிந் திலையோ
சுலபத் தருள்புரி சங்கரன் மகனே
தகுமோ தாமத மறுபடைத் தலத்தோய்
நகுமோ உலகமு மருள்புரிந் திடினே*
*நகுவா ருளரென அருள்புரிந் திலையோ
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
கருவேல் விழியாள வளைப்பெரி யோனாம்
பெருவ யிறவன ருளைக்கொடுப் புணர்ந்த
திருவும் மருகுறும் அழகுறு மருகா
பெருவே லுடையறு முகத்தென தரசே
பெருவ யிறவன ருளைக்கொடுப் புணர்ந்த
திருவும் மருகுறும் அழகுறு மருகா
பெருவே லுடையறு முகத்தென தரசே
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
கருவேல் விழிமுழு மதிபழி யழகைப்Pratyaksham Bala wrote: ↑05 Jul 2023, 14:49
"விழியாள" எனும் சீரை மாற்றி அமைத்தால் "மா, விளம், விளம், மா" என்ற சந்தஒழுங்கு கிட்டும்.
பெருவ யிறவன ருளைக்கொடுப் புணர்ந்த
திருவும் மருகுறும் அழகுறு மருகா
பெருவே லுடையறு முகத்தென தரசே
செய்தாயிற்று
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
வானகத்து தேவருக்கும் வையகத்து மாந்தருக்கும்
தானவர்க்கும் தாண்டவாநின் தாள்கதி - தானுமாலுந்
தோற்றமாய தானலாது வேறிலானே வேட்டுவாநீ
தோற்றமிலி மாற்றமி லியேமாற்றமிலி யே
தானவர்க்கும் தாண்டவாநின் தாள்கதி - தானுமாலுந்
தோற்றமாய தானலாது வேறிலானே வேட்டுவாநீ
தோற்றமிலி மாற்றமி லியேமாற்றமிலி யே
Last edited by sankark on 07 Jul 2023, 08:31, edited 2 times in total.
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
.
கடைசி தளை ஆசிரியத்தளையாக உள்ளது.
கடைசி தளை ஆசிரியத்தளையாக உள்ளது.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
typing mistake - corrected.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
காவலன் றன்குண மாங்கயவர்க் கொப்ப
மாவளங் கொண்டாலும் நாடு கெடுமன்றோ
மீவள நாட்டினாய் நன்குணர்வாய்த் (நன்கிதைத்) தேர்ந்துநீ
சீர்வளர் ஆட்சியைச் செய்
மாவளங் கொண்டாலும் நாடு கெடுமன்றோ
மீவள நாட்டினாய் நன்குணர்வாய்த் (நன்கிதைத்) தேர்ந்துநீ
சீர்வளர் ஆட்சியைச் செய்
Last edited by sankark on 21 Jul 2023, 12:30, edited 1 time in total.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
அகம்
காமனோக் காமனோ யாரிவன் கூறடி
எம்மிளந் தாமரை மொட்டுகள் நோகுதே
நாணமோ விட்டது காமமோச் சுட்டது
வானுதல் வேர்த்ததென் னுள்ளமும் வெம்பவே
காமனோக் காமனோ யாரிவன் கூறடி
எம்மிளந் தாமரை மொட்டுகள் நோகுதே
நாணமோ விட்டது காமமோச் சுட்டது
வானுதல் வேர்த்ததென் னுள்ளமும் வெம்பவே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
அழுவத்தே ஆழமுங்கி ஆயிரஞ் செய்தாற்
பழவினைப் போகுமோப் பார்தனில் - வாழாதே
ஈயாம லாங்கிரப் போருக்கில் லையென
ஓயாதே ஓயாது தா
பழவினைப் போகுமோப் பார்தனில் - வாழாதே
ஈயாம லாங்கிரப் போருக்கில் லையென
ஓயாதே ஓயாது தா
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
காவலன் றன்குண மாங்கயவர்க் கொப்பினால்Pratyaksham Bala wrote: ↑21 Jul 2023, 17:07கொப்ப மாவளங் = ஆசிரியத் தளை.
இதை சரிசெய்தால் இன்னிசை வெண்பா எனலாம்.
மாவளங் கொண்டாலும் நாடு கெடுமன்றோ
மீவள நாட்டினாய் நன்குணர்வாய்த் தேர்ந்துநீ
சீர்வளர் ஆட்சியைச் செய்
ஆம். தளை சரி செய்தாயிற்று.