தனிச் செய்யுட்கள்

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

sankark wrote: 29 Sep 2024, 08:30
sankark wrote: 28 Sep 2024, 21:12 முடித்த குழலுடன் அழைக்கும் விழியுடன் சிரிக்கும் இளையவள் உறவாட
பிடித்த மகளிரும் கொடுக்க பணமது இருக்கும் வரைநமை அணைவாரே
தடித்த உடலுரம் சிதைக்கும் பொழுதது பிடிக்கும் நமையுமே ஒருநாளே
இடித்து உரைப்பவர் கடித்து மொழிவதை விடுத்து மகிழுறத் தகுமாமோ
படித்த பெரியவர் உரைத்த கடியவேல் பிடித்த உனதடி அடையேனோ
தொடுத்த மலரொடு செழித்த தமிழிலே துதிக்க அருளுவாய் முருகோனே
கருப்புச் சிலைமதன் தொடுத்த மலர்க்கணை கொடுக்கும் வேதனை அமிழாதே
விருப்பு பிறவென கொதிக்கும் மனத்தினை அழிக்கும் சாதனை அருளாயோ
பொருப்பு மகலவள் அளித்த மிடிப்பயம் இடிக்கும் வேலுடை சமர்வீரா
தருக்கர் அவர்தனை கெடுத்து கடற்கரை எடுத்த கோயிலிற் பெருமாளே
கருத்த கரியதல் உடுத்த இறையவன் கொடுத்த தீப்பொறி உருவானாய்
சிறுத்த இடையுடை குறத்தி தனைமணம் அடர்த்த காட்டினில் புரிவாயே
ஒருத்தி கரிமகள் படைத்த எழில்மகள் பிடித்த கைத்தல அழகோனே
வருத்தி எடுத்திடும் தொடர்ந்த வினைவலி எரித்துப் போக்கிடு பெருமானே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

கொடுத்த தொழிலது படைக்கும் தொழிலினை புரிந்த நான்முகன் அவரோடுத்
தொடுத்த கணைதனக் கெடுத்த பதிலினை உரைக்க மாட்டிலா வகையாலே
எடுத்து அழகுற படைப்பு தனைபுரி கருத்த மால்தனின் மருகோனே
மிடுக்கு சிவகுரு சிறப்பு பெயருறு கடப்ப வேரகப் பெருமாளே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

பழித்த மனிதரும் வருத்தம் பெறுவகை இசைந்து வாழ்ந்திடப் புரிவாயே
செழித்த தமிழினில் அடுக்கி தினமுனை புகழ்ந்து போற்றிட அருள்வாயே
இழித்து முனையொரு கருத்து புகலுவர் தடித்த நாக்கினைக் கடியேனோ
கொழித்த திருவளர் திருத்த ணிவளரும் மணக்குஞ் சாந்தணிக் குமரேசா
Last edited by sankark on 30 Sep 2024, 07:38, edited 1 time in total.

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தனக்கு பெரியவன் சிறந்த பழமதை அடைந்த வருத்தமே மிகவாகி
பிணக்கு பெருகியே தனித்து ஒருமலை யிருக்க விருப்பமே அடைவோனே
எனக்கு னிருபதங் கொடுத்து தமியனும் மகிழ்ந்து நினைத்திட வரமீவாய்
வனப்பு பழனியி லிருக்கு மலையடி வசிக்கு நிருத்தனின் புதல்வோனே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

சிறந்த தமிழினில் நிரம்ப வறிவுரை யளித்த முதுமகட் கருளாளா
குரங்கு மிகவுள சிலம்பு நதியுடன் வளத்த பொழிலிடை யுறைவோனே
பிறந்த மனிதரின் கரந்த நினைவுகள் உயர்ந்த நிலையுறப் புரிவாயே
கறந்த மதுவொடு நிறைந்த திணையதை சுவைக்கு மறுமுகப் பெருமானே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

கெடுக்க வசூரரை நடுக்கும் சமர்புரி கருத்த அரியவன் மருகோனே
அடுத்த வமரரின் தலைக்கு கரிமகள் பிறக்க அவளுடன் இணையானாய்
எடுத்த பிறவியில் உயர்ந்த புகழுற கொடுத்து வரமருள் அழகோனே
கடப்ப மணிபெருந் திரண்ட புயமுடை சிறந்த பரங்கிரி மணவாளா

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

sankark wrote: 29 Sep 2024, 08:30 கருப்புச் சிலைமதன் தொடுத்த மலர்க்கணை கொடுக்கும் வேதனை அமிழாதே
விருப்பு பிறவென கொதிக்கும் மனத்தினை அழிக்கும் சாதனை அருளாயோ
பொருப்பு மகலவள் அளித்த மிடிப்பயம் இடிக்கும் வேலுடை சமர்வீரா
தருக்கர் அவர்தனை கெடுத்து கடற்கரை எடுத்த கோயிலிற் பெருமாளே
lesson learnt: use thamizh keyboard rather than transliterating keyboard. spelling mistakes creep in.. also need to pay attention to oRRumigudhal

மகளவள்*

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தொடுத்த மலரொடு புகைக்க வகிலுடன் துதிக்க விருபதம் தருவாயே
அடுத்த வடியவர் தகிக்கும் மனநிலை விலக்கி ஒருநிலை அருளாயே
படுத்தும் துயரற தொடர்ந்த வினையற எனக்குள் அறிவுறப் புரியாயோ
எடுத்த கவிகளை இனிக்கும் தமிழினில் சொரிந்து புகழது மொழிவேனின்
இடுக்கண் களைவது நினக்கு கடனதே யறிந்து செயல்படு உமையாளே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

பொறுப்பு மிகவுள துணர்ந்து மனமிசைந் திருக்க வதுவையி லிணைவோமே
திறந்த வுளமொடு பகிர்ந்து துணையென வளர்ந்து பெருநலம் பெறுவோமே
பரந்த குலமென தொடர்ந்த வுறவுடன் குளிர்ந்து பரவச மடைவோமே
பிறந்த மழலையு மணைத்து புளகிதம் பெருக்க வளமிக நமையேக
சிறக்க வளருவர் பனித்த விழியுடன் செழித்த மனநிறை நமையாள

Pratyaksham Bala
Posts: 4203
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 02 Oct 2024, 11:27 பொறுப்பு மிகவுள துணர்ந்து மனமிசைந் திருக்க வதுவையி லிணைவோமே
திறந்த வுளமொடு பகிர்ந்து துணையென வளர்ந்து பெருநலம் பெறுவோமே
பரந்த குலமென தொடர்ந்த வுறவுடன் குளிர்ந்து பரவச மடைவோமே
பிறந்த மழலையு மணைத்து புளகிதம் பெருக்க வளமிக நமையேக
சிறக்க வளருவர் பனித்த விழியுடன் செழித்த மனநிறை நமையாள
மிக்க அழகாக உள்ளது.

இறுதியில் 'வே' என்று தனித்த சீராக சேர்த்தால், இதை 'கலித்தாழிசை' எனலாம். ('நமையாள வே')

ஒரே எதுகை அமைந்தால் மேலும் சிறக்கும்.

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 02 Oct 2024, 18:53
sankark wrote: 02 Oct 2024, 11:27 பொறுப்பு மிகவுள துணர்ந்து மனமிசைந் திருக்க வதுவையி லிணைவோமே
திறந்த வுளமொடு பகிர்ந்து துணையென வளர்ந்து பெருநலம் பெறுவோமே
பரந்த குலமென தொடர்ந்த வுறவுடன் குளிர்ந்து பரவச மடைவோமே
பிறந்த மழலையு மணைத்து புளகிதம் பெருக்க வளமிக நமையேக
சிறக்க வளருவர் பனித்த விழியுடன் செழித்த மனநிறை நமையாள
மிக்க அழகாக உள்ளது.

இறுதியில் 'வே' என்று தனித்த சீராக சேர்த்தால், இதை 'கலித்தாழிசை' எனலாம். ('நமையாள வே')

ஒரே எதுகை அமைந்தால் மேலும் சிறக்கும்.
நன்றி!

துறந்து தனிமையை யினிக்க மனமிசைந் திருக்க வதுவையி லிணைவோமே
திறந்த வுளமொடு பகிர்ந்து துணையென வளர்ந்து பெருநலம் பெறுவோமே
பரந்த குலமென தொடர்ந்த வுறவுடன் குளிர்ந்து பரவசந் தனிலூறிப்
பிறந்த மழலையு மணைத்து புளகிதம் பெருக்க வளமிக நமையேக
சிறக்க வளருவர் பனித்த விழியுடன் செழித்த மனநிறை வடைவோமே

அவ்வாறே!

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தனத்த தனனன தனத்த தனனன தனத்த தனனன தனனானா
தனத்த தனனன தனத்த தனனன தனத்த தனனன வெனவாடும்
நிருத்த சிவனவர் அரிந்து விடவொரு துதிக்கை கரிமுக னெனவானாய்
பருத்த வயிறனே சிரித்த வதனனே வெளுத்த நிறமுடை பெரியோனே
பெருத்த கதையதை பகுத்து மொழிபவை புரிந்தே யெழுதிய பெருமானே
பொருத்தி யழகுட னிருந்த பொழுதிலும் உடைத்தே எழுதினாய் ஒருகோடால்
வனக்கு றமகளை தினைப்பு னமதனில் மணக்க விளையவன் துணைகோர
அணைக்கும் வகையுற கணப்பொ ழுததனில் நடத்தி யருளிய தமையோனே
பெருத்த வயிறுனை யிகழ்ந்து நகைபுரி வெளுத்த நிலவினை யிருளாகி
இருக்க உரைதர வருத்த மடைபவன் தனக்கு ஒருவழி தருவோனே
எருக்க மலரினைத் தொடுத்துத் தொழவளர் யிரண்டு யிருபிறை யதுவாக
வருத்த மகலுமே மகிழ்ச்சி பெருகுமே துதிக்கு மடியவர்க் கருளாயே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

இல்லையெ னச்சொல்லா தேநெஞ்சே யீவதே
இல்லார்க்கு வுள்ளோர் வழி

இல்லார்க்கு நம்மூலஞ் சென்றேதான் சேருமே
வல்லார்க்கே யீதல் கடன்

சொல்லாதே யீந்ததை மிக்கீன மாகுமே
சொல்லாமற் செய்வாய் நலம்

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

sankark wrote: 02 Oct 2024, 21:18 நன்றி!

துறந்து தனிமையை யினிக்க மனமிசைந் திருக்க வதுவையி லிணைவோமே
திறந்த வுளமொடு பகிர்ந்து துணையென வளர்ந்து பெருநலம் பெறுவோமே
பரந்த குலமென தொடர்ந்த வுறவுடன் குளிர்ந்து பரவசந் தனிலூறிப்
பிறந்த மழலையு மணைத்து புளகிதம் பெருக்க வளமிக நமையேக
சிறக்க வளருவர் பனித்த விழியுடன் செழித்த மனநிறை வடைவோமே

அவ்வாறே!
a prequel - lightning struck stage

கருத்த குழலுடன் மயக்கும் விழிகளும் நகைப்பு சிதறிடு மழகேயுன்
கருத்து மொழிகளை மடுத்து செவிதனில் மகிழ்ச்சி பெருகிய வுளமாகி
திருக்கை கொடுகொள மிகுத்த நசையொடு தவிக்கு மிளையனை யறிவாயே
நெருக்க மடைவமே சிறக்க வுலகினில் மணக்க மனமிசைந் திடுவாயே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

திருவடி இணையிலே யிறுகிடு மனமெனக்
கருளுவ துனதொரு கடனென அறிகுவை
குருவுரு கொடுயெனக் கறிதிறந் தரவிது
அருகிய பருவமே யறுபடை யழகனே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

வாராகி சாமளை சாமுண்டி பைரவி
பாராயோ பாமர னென்றனை நீயுமேத்
தாராயோ நின்னடி தன்னிலே யானிற்க
மாறாத வண்ணமே தான்

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தொடுத்த கணையது துளைத்து பலமர மிரிக்கும் மாலவன் இளையாளே
எடுத்த மழுபடை பனித்த முடிமொழி கொடுக்கு மாடலன் சரிபாதீ
அடுத்து வருமெனை கனிந்து கடைவிழி படுத்தி பாதகம் களைவாயே
மடுத்து செவிகுறை பொருந்து மருள்புரி அடர்த்த கார்குழல் பிறைசூடீ

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

ஒருத்தன் அறுமுகன் தனக்கு கொடுத்தனை சிறந்த படையொரு பெருவேலே
பெருத்த வயிறனை படைத்த பெருமையு முனக்கு னிருபதம் பணிவேனே
தருக்க ரவரையு மரக்க ரவரையுந் தொலைக்க தரணியில் வருவாயே
வருத்தம் விலகிட நெருக்கி மலரினா லலங்கல் கொடுநிதந் தொழுவேனே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

நாளை கலைமகள் நாள்

நற்றவள நாயகி நித்தமும் நின்னையேக்
குற்றமே யற்றதாய்ச் செய்யுளுஞ் செய்யவே
வற்றா வரந்தரு வாய்

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

வெள்ளைக் கமலத்தாள் தன்தாள் பணிந்திடக்
கொள்ளைப் புலமை யருளுவாள் - தள்ளாது
வைப்பா யவளை மனத்திலே யெஞ்ஞான்றும்
வைப்பா மறிவே யுணர்

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

பூரணன் தன்னடி தன்னைப் பணிந்தேத்து
நாரணன் நன்மைசெய் யும்

காரணி யன்னையே காணும் பொருளெல்லாம்
வாரணன் தாயா னவள்

செஞ்சொற் றமிழாலே பாடு முருகனை
யஞ்சே லெனவரு வான்

ஆடு மழகனைத் தில்லைத் தலத்தனை
நாடு வுளமுரு க

கோடுடைத் தெய்வம் தொழுதவர்க் காகுமே
மாடும் புகழ்கல் வியும்

Pratyaksham Bala
Posts: 4203
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 16 Oct 2024, 00:17 செஞ்சொற் றமிழாலே பாடு முருகனை
யஞ்சே லெனவரு வான்

ஆடு மழகனைத் தில்லைத் தலத்தனை
நாடு வுளமுரு க
SUPER !!
குறள் வெண்பா.

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 16 Oct 2024, 07:15
sankark wrote: 16 Oct 2024, 00:17 செஞ்சொற் றமிழாலே பாடு முருகனை
யஞ்சே லெனவரு வான்

ஆடு மழகனைத் தில்லைத் தலத்தனை
நாடு வுளமுரு க
SUPER !!
குறள் வெண்பா.
thanks!

இரவும் பகலென்றுஞ் செய்யுங் கதிரைப்
பரவித் தொழுநா ளுமே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

கந்த சஷ்டி வெண்பா

வானவர் தன்படையை ஒண்படையாய்த் தானாக்கித்
தானவர் தன்னைக் குலைத்திட்ட மால்மருக
ஆணவம் போக்கியென்னை நின்னிரு சேவடியில்
மோனமா யொன்றிடச் செய்

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

கருவுறுவாகி அதுவளர்ந்தாகி ஒருமகவாகி வருவேனை/வளர்ந்தேனை
மலைமகள்பாதி உடலதுவாகி திகழ்பரமேசன் குருவேநீ
கடைவிழியாலே கனிவுடன்நோக்கி விதிவலிபோக அருளாயே
அறுபடையாடு குறமகளோடு கரிமகள்காதற் பெருமாளே

https://kaumaram.com/thiru/nnt1307_u.html கொடுத்த உந்துதல்

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

மேலும் ஒன்று

பலவிதமான மனிசருமாடு மனையெனவாசை மிகவாகிக்
குலமதுநாச மடைவுறுநேரம் நினதடிநாடி வருவாரே
கரிமுகனாலே வனமகளோடு மருவியவாறு முகவேலா
பரிதிகள்கோடி யொளிதருஞான சபையவனீசன் புதல்வோனே
கருதியபோது மனஞ்சுணங்காது உனதருள்மாரி பொழிவாயே
அறுவிதமான குறையொழிந்தாகத் திருவடிதாரும் பெருமாளே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

மராமரம் துளைச்சரம் கடாவிய இராகவ இராமனுக் கிளையவள் தருவேலை
ஒரேயொரு முறைவிடு பராபரன் குமாரநின் சராசரத் திறையடிப் பணிவேனே
முராரிம ருகோனென வலாரியின் படைப்பதி வராபயம் தனையருட் பெருமாளே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

அறுபடையாடு அறுமுகநாத சுரமிகுவேலை விடுவோனே
இருபதமீவாய் கரிமகளோடு* மனமகிழ்காத லழகோனே
பலபிறப்பாக வளர்வினைபோக யிதுபொழுதாகு மறியாயோ
உளங்கனிவாகி வலிசெலவாகி திருப்பெயர்பாட வருளாயே
தனதனதான திமிதிமிதீமி தனதனதான தனதீமீ
எனநடமாடு மயிலினிலேறி சடுதியில்வாருங் குமரேசா

*வனக்குறமாது

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

sankark wrote: 17 Nov 2024, 12:49 மராமரம் துளைச்சரம் கடாவிய இராகவ இராமனுக் கிளையவள் தருவேலை
ஒரேயொரு முறைவிடு பராபரன் குமாரநின் சராசரத் திறையடிப் பணிவேனே
முராரிம ருகோனென வலாரியின் படைப்பதி வராபயம் தனையருட் பெருமாளே

மராமரம் துளைச்சரம் கடாவிய இராகவ இராமனுக் கிளையவள் தருவேலை
ஒரேயொரு முறைவிடு பராபரன் குமாரநின் சராசரத் திறையடிப் பணிவேனே
புராரியுங் கராரவிந் தமேகுவித் துநீயுரைத் தஞானமொ ழிகேட்குநற் குருவான
முராரிம ருகோனென வலாரியின் படைப்பதி வராபயந் தனையருட் பெருமாளே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

போயின வெல்லாம் வருமாகில் வந்தீண்டி
ஆயின நன்மை புரியும்மே - சேயிழையே
வாராத தென்றாகில் வாராதே யாகுலம்
பாராட்டி என்னே பயன்

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தீராத வல்வினை தீர்க்கும் பெருமானைப்
பேரானை தன்முகத் தானை யொருகோட்டுக்
காரானைத் தூமலர் தூவித் தொழுதேத்தச்
சீரான வாழ்வா மறி

Pratyaksham Bala
Posts: 4203
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 09 Dec 2024, 11:32 தீராத வல்வினை தீர்க்கும் பெருமானைப்
பேரானை தன்முகத் தானை யொருகோட்டுக்
காரானைத் தூமலர் தூவித் தொழுதேத்தச்
சீரான வாழ்வா மறி
Excellent.
"innishai veNpA"

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

அகத்துறை பிரிவாற்றாமை

வாராமே போமோமென் காதலன் வந்தாற்றான்
சீரான வாழ்வாகு மென்தோழி - சேராமற்
சென்றானே உள்ளங் கவர்ந்தான் படுதடீ
என்னாவி சொல்லரிய பாடு

விட்டே புறப்பட்டேன் என்னாவி தான்பிரிந்து
சுட்டும் விழிச்சுடரை கேள்மனமே - கட்டழகுப்
பெட்டகமும் கண்ணுள்ளே நிற்பளே வந்திறுகக்
கட்டிக் கவிபாடு வேன்

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

அகம் தொடர்கிறது

அறுசீர் விருத்தம்?

Code: Select all

கண்ணெனும் காந்தத் தாலே
   தந்ததோ காதல் தானே 
பெண்ணெனச் சொன்னா ருன்னைப் 
   பேய்பிடிக் கொண்டா யென்னை 
விண்ணிலே ஊருந்  திங்கள் 
   தண்ணென வீசும் போலே 
மண்ணுளே போகும் நாளில் 
   பக்கமாய் நிற்பாய் நீயே 
வண்ணமாய் நின்றன் கண்ணைக் 
   கண்டுயான் போதல் வேண்டும்
the bb software doesn't allow to indent text without code tag?

Pratyaksham Bala
Posts: 4203
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

.
அறுசீர் கழிநெடிலடிகள் ஐந்தைக் கொண்டுள்ள இது ஆசிரிய விருத்தத்தில் அடங்கவில்லை.

கடைசி அடியை மட்டும் குறைந்த சீருடன் அமைத்தால் 'வெண்டுறை' ஆகிவிடும்.

அல்லது, கடைசி அடியை மட்டும் அதிகமான சீருடன் அமைத்தால் 'கலித்தாழிசை' ஆகிவிடும்.

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 29 Dec 2024, 07:18 .
அறுசீர் கழிநெடிலடிகள் ஐந்தைக் கொண்டுள்ள இது ஆசிரிய விருத்தத்தில் அடங்கவில்லை.

கடைசி அடியை மட்டும் குறைந்த சீருடன் அமைத்தால் 'வெண்டுறை' ஆகிவிடும்.

அல்லது, கடைசி அடியை மட்டும் அதிகமான சீருடன் அமைத்தால் 'கலித்தாழிசை' ஆகிவிடும்.
thanks!

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

நற்றவ நாயகன் நாதனை நாடுவாம்
கற்றவ ருள்ளமே யோங்குவான் - பற்றற
யுற்றது கட்டிலா தாகிலுந் துன்பமே
சொற்றுணை வாசியே தான்

ஓமென வோங்கியே சொல்லுகப் பேரதை
வாமமே வவ்வினாள் தூயவன் நான்மறை
யோதுவான் சேவடித் தூக்கினான் தன்னுடை
காதிலே தேனென வாம்

வார்கழல் தூக்கினான் சேவடி ஈரிணை
கார்முகி லொத்ததே மாரியாய்ப் பெய்திடும்
தார்பொலி வானவர் மானவர் யாவரின்
சீர்மிகச் செய்திடு மின்னருள் காணடா
----
நசையறுத் தென்னாவி நின்பாலே நன்றா
யிசைவிப் பதுமுன் கடன்

விசையினைக் கட்டிநல் லாற்றிலேப் போக்கு
திசையெலாம் பூத்த துவே

தசையினை வெந்தழல் வந்தணை போதில்
அசைவற வெண்ணவே வை

பிசைவதோ வல்வினை பின்தொடர்ந் தேகும்
பசையதை நீக்கிடு வாய்

வசையினை வீசுவன் ஏசுவன் கேட்டுச்
சுவைத்துநீ செய்வதோவ ருள்

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

உனதடி மலர்மிசை அடியவன் புகலுற
கனகமு மணிகளு மணிமலர் வதனனே
வனமகள் தனைமண மருளிய முருகனே
உனதருள் விழிகளால் வினைகளு மகலவே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

பழவினை யறுபட யறுபடை யிறையவன்
தழலதி லவதரி யுமையவள் மனமகிழ்
அழகனின் திருவடி தனைத்தொழு தலேயறி
பழகுதற் குறியது புவிமிசை மனிதரே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

கருவறை முதலெமைத் தழலெரி வரையிலு
மிருபத மருளியேத் துணையென வருவது
முருகநின் செயலென உணருவை யிருமகள்
மருவிய மயில்நடக் குளிர்மதி வதனனே

புரமெரி பரமனின் குருவென வுயர்புகழ்
திருமிகு சரவண பவனவன் பெயரெலாம்
தரணியி லுழலுப வருடைய வினைவலித்
தரங்கெட வுதவுமே பகலிராப் புகலுவாம்

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

உமையவள் மனமகி ழிளையவ யறுபடைக்
குமரனே கரிமுகன் துணையொடு மணம்பெறு
வமரர்கள் படைப்பதி வலிமிகு படைதனைச்
சமரதில் விடுபவத் தொடர்வினைக் கடிகுவாய்

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

வாய்ச்சொல்லால் நன்றாகத் தானெருக்கம் காட்டுவார்
ஏய்ப்பாரேக் கொள்வாய் மதி

உட்கரந்த யெண்ணங்கள் தான்புரியா மானிடர்க்குப்
பட்டாலே தான்தெளியு மே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தேமலரின் தாரணியுந் தோளழகப் பன்னிருகண்
மாமலரா லெங்களையும் பார்த்தருளே மால்மருக
வாமமதை வவ்வியவள் தான்கொடுத்த வேற்படையால்
நீமமதைக் கொண்டவரைத் செற்றனையேச் செற்றனையே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

நானிலாது நீயுமில்லை நீயலாது நானுமில்லை
கோனிலாத ஆதிநீயே நாணிலாத நாயனென்னை
நித்தமும்மே நின்னடிக்கே நின்மலனே நிற்கவைப்பாய்
கத்துமலை நீர்க்கரையின் செந்திலோனே மால்மருகா

நானிலாது நீயுமில்லை நீயலாது நானுமில்லை
கோனிலாத ஆதியவன் நற்புதல்வ நாயகனே
நித்தமும்மே நின்னடிக்கே நின்மலனே நிற்கவைப்பாய்
கத்துமலை நீர்க்கரையின் செந்திலோனே மால்மருகா

வானிலாது மாரியில்லை மாரியின்றி மண்ணுயிரும்
தேனிலாத மாமலரை வண்டுகளும் மொய்ப்பதில்லை
வேய்ங்குழலின் வேந்தனுக்கு கன்றுபின்னே போவதுபோல்
தேய்மனிதர் போவதுமே தன்னியல்பே தன்னியல்பே

தேவருக்கும் மூவருக்கும் யாவருக்கும் மூத்தவளைப்
பாவெடுத்துப் பாடவன்மை பாங்குடனே யோங்கிடவே
தேனிகர்த்த தீந்தமிழில் தேவியவள் தேசெலாமே
ஊனிருக்கு மட்டிலுமே நாடொறுமே நாநவில

நாரணனே பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொண்ட
பூரணனே நாமகளின் நாயகனைத் தோற்றுவித்தக்
காரணனே மும்மடந்தைக் காதலனே அன்றொருநாள்
வாரணத்தைக் காக்கவந்தக் காவலனே காயெமையே

நாரணனை பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொண்ட
பூரணனை நாமகளின் நாயகனைத் தோற்றுவித்தக்
காரணனை மும்மடந்தைக் காதலனை அன்றொருநாள்
வாரணத்தைக் காக்கவந்தக் காவலனைத் தாந்தொழுவாம்

நாரணனை பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொண்ட
பூரணனை நாமகளின் நாயகனைத் தோற்றுவித்தக்
காரணனை மும்மடந்தைக் காதலனை யோலமிட்ட
வாரணத்தைக் காக்கவந்தக் காவலனைத் தாந்தொழுவாம்

வாரிதியி லோரணையைத் தானெடுத்துப் போரினிலே
மாரியெனப் பல்கணையைத் தான்தொடுத்த தோள்வலிய
பாரினிலே யோர்மனையைத் தானறமாய் நீநிறுத்தி
மாறிலாத சானகியை மீட்டெடுத்தாய் நீபுகலே

குன்றதனைக் கையெடுத்து மாமழையிற் காத்தவனை
அன்றொருநாள் பூதனையை தென்டிசையிற் சேர்த்தவனை
மன்றினிலே தூதுசென்ற பார்த்தனவன் சாரதியை
இன்றுமென்றும் போற்றிடுவாம் பாடியாடி யுள்ளுருக

கண்ணுதலான் தான்பொருத்த வாரணத்தின் நல்வதன
வெண்ணிலவு முன்முடியிற் றானிலங்கு மூத்தவனே
பின்னவனை வள்ளியுடன் சேர்த்தவனேப் பெய்திடுவாய்
நின்னருளைப் பேய்மழையாய் தங்குதடை யேதுமின்றி

vgovindan
Posts: 1935
Joined: 07 Nov 2010, 20:01

Re: தனிச் செய்யுட்கள்

Post by vgovindan »

Sankarak,
"நானிலாது நீயுமில்லை நீயலாது நானுமில்லை"
தயவுசெய்து, இதனின் முதற்பகுதி சரியாயென சிந்திக்கவும்.

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தாருகாவ னத்தினிலே மாதவத்து மாமுனிவர்
தேறுமாறு செய்தனையே பேரகந்தை தான்விடுத்து
நேருகின்ற பாரெலாமு மாக்கிவைத்து நீக்குவாயே
மாறுகின்ற நெஞ்சினிலே* நின்றிடுவாய் நீநிலைத்து

வார்கழலைத் தூக்கியாடு நாயகனே நீறுபூசி
பார்முதலாய் பூதமைந்தும் நின்விருப்ப மொன்றினாலே
ஏர்சிறக்க சீர்சிறக்கு மானிடரை யுய்க்கவேதான்#
தேர்சிறந்த ஊரிலேயும் வந்தனையோ நல்விடங்கா

* நெஞ்சமதில்
# யுய்த்திடவே

Pratyaksham Bala
Posts: 4203
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

.
அருமை !


கலி விருத்தம்

கூவிளங்காய் !

வார்கழலைத் தூக்கியாடு நாயகனே நீறுபூசி
பார்முதலாய் பூதமைந்தும் நின்விருப்ப மொன்றினாலே
ஏர்சிறக்க சீர்சிறக்கு மானிடரை யுய்த்திடவே
தேர்சிறந்த ஊரிலேயும் வந்தனையோ நல்விடங்கா !

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 28 Apr 2025, 07:46 .
அருமை !


கலி விருத்தம்

கூவிளங்காய் !

வார்கழலைத் தூக்கியாடு நாயகனே நீறுபூசி
பார்முதலாய் பூதமைந்தும் நின்விருப்ப மொன்றினாலே
ஏர்சிறக்க சீர்சிறக்கு மானிடரை யுய்த்திடவே
தேர்சிறந்த ஊரிலேயும் வந்தனையோ நல்விடங்கா !
நன்றி!

some more

காலகால னாகியன்று காலனைநீ எத்தினாய்
ஆலகால முண்டதாலே நீலகண்ட னாகினாய்
ஆலமரங் கீழதாகி நால்வருக்குக் கூறினாய்
ஞாலமிதை நீள்விரித்து பின்சுருக்கு மாதியே

பாலருந்தி நின்புகழைப் பாடிசென்ற காழியன்
வாளறுத்து தன்மகவை ஊட்டுசிறுத் தொண்டரும்
நீலகண்டர் நாவரையன் சுந்தரனும் போலவே
ஆலவாயிற் சொக்கனேநீ ஆக்கிடுவாய் எங்களை


காதலாகி உள்கசிந்த காழியூரன் தீந்தமிழை
ஓதலாகும் ஓதலாகும் எப்பொழுதும் நாவினிக்க
வாதவூரன் வாசகத்தை கேட்டவர்க்கு நெஞ்சுருகும்
போதமேகுந் தோணியாகு மே

ஊனெனாகி யாட்டுவிக்கு முயிரெனாகி யாவுமாகி
தேனுடைத்த பூத்தொடுத்து நான்துதிக்கு தேவுமாகி
நானெனும்பொய் போக்குவிக்கு மாதியாகி யந்தமாகும்
வாணெடுங்கண் மாதுபாதி கொண்டவனின் தாள்புகலே

உந்திமலர் தானுதித்த நான்மறையின் வித்தகனும்
குந்திமகற் காகதூது சென்றவனும் தேடினரேச்
செந்தழலைக் கையெடுத்த தேவனவன் தாள்முடியும்
அந்திவண்ண னீசனவன் சித்தமின்றி யாகுவதோ

----------------

திங்களணித் தூயவனும் மாலவனும் மூவருமே
சங்கமொத்த நற்கழுத்து நாயகிக்கு ஓரிருக்கை
இங்கிதையுந் தானுணரார் செய்வதுவுஞ் சொல்வதென்னே
தங்களுக்குள் ஏசிபேசி வாழ்விதையுந் தான்தொலைப்பார்

-----------------------

secular themes

தூக்கலாக நற்புளியும் வத்தலுடன் தாளிதமும்
சேர்க்கவாகும் காயமோடு சுண்டவைத்த அக்குழம்பு
ஏக்கமின்றி அன்னமோடு சேர்த்துநன்றா யுண்டிடவே
நாக்குமிகத் தான்மகிழும் பொய்யிலையே மெய்யுரைத்தேன்

சிக்கெடுத்துப் பின்னலிட்டுப் பூமுடித்த கார்குழலாள்
தக்கதொரு நேரமதில் கண்ணசைவால் தானுணர்த்த
அக்கணமே ஆண்மகனின் நெஞ்சுவிம்மிப் போகுமென்றும்
மிக்கவாகும் கட்டுமீறி ஒத்தபேருங் காதலாமே

தண்ணிலவும் வெள்ளலையின் கீதமுமே நற்றுணையாய்க்
கொண்டுசெல்லு நேரமதில் வட்டமிடும் நெஞ்சலைகள்
எண்ணமெலாம் தான்விலக ஓரமைதித் திண்ணமாக
வண்ணமாக வந்துகவ்வும் அச்சுவையும் நற்சுவையே

கொண்டவனைக் கொண்டவளும் கொண்டவளைக் கொண்டவனும்
எண்டிசையும் ஈடிலாத செல்வமென்று நம்பிவிட்டால்
வண்டுமொய்க்கும் வாசமலர் வாழ்வதாகும் செப்பினாற்பின்
விண்டுரைக்க யேதுமில்லை யே

sankark
Posts: 2445
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

this kaliviruththam/(கூவிளங்காய் x 4)x4 has been an earworm. and if the last feet can be just made into கூவிளங்காய் x 2 as long as its aslo sensible in meaning, it is a great template for venpA

so here I go with few more

#jatabharathan
ஞானமுறக் காடுகந்த மன்னனவன் நீர்விழுந்த
மானதனின் குட்டிதனைப் பாசமிகப் பார்த்திருந்தான்
ஆனதனால் தான்விடுத்தான் தன்தவமும் தேடலுமே
போனபின்னே மீள்பிறந்தா னப்பரதன் மானுருவாய்

வெள்வரையான் வெள்விடையான் ஒண்டவள நீறணிவான்
கள்மலரும் வேண்டியதில் வில்வதளம் தானுகப்பான்
உள்ளுபவர் உள்ளமதில் வீற்றிருக்கு வேதியனைத்
தெள்ளுதமிழ்ப் பாத்தொடுக்கு வல்லமையும் வேண்டுவதே

வாசிவாசி என்றுசொல்லிக் கோவிலையேச் சுற்றிவரப்
பாசியாகப் பற்றியதோர் ஊழ்வினையுந் தூசியாகும்
நேசியாமற் போகலாமோத் தாண்டவனை நெற்றிநீறு
பூசியுள்ளேப் பேரதையே நிற்கவைத்த லுங்கடனே

பூசுவதும் வெண்ணீறேப் பூண்பதுவும் பொங்கரவம்
தேசுடையான் தேவனையே வாசகமாய்ப் பாடினாரே
நேசமாகச் சொல்லுவீரே நெற்றியிலேக் கண்ணுடையான்
ஆசுபோக்கிக் காசினியில் ஓங்குவிக்கு மப்பெயரை

ஓதுவதும் நான்மறையே யாடுவதுங் காட்டினிலே
பாதிமதிப் பாங்குடனே கொண்டதுவுஞ் செஞ்சடையில்
மேதினியி லாருளரே மாட்டிமையி லோர்நிகரே
காதிற்குழை பூண்டவனுக் காருளரே கூறடியே

பத்தியெனும் வித்திடவே நெஞ்சமொரு நற்பழனம்
கத்தியிலே இத்தெடுக்க வாவதுவும் தாள்நிழலே
இத்தருணம் நற்றருணம் பத்திவிதைத் தூவிவிட
செத்தபின்னே யாகுவதோ இப்பிறப்பின் ஊழறுக்க

வானிழிந்த மாரியாகக் கொட்டுவையே நின்னருளைக்
கானிருந்த காவலாநீ பெண்துணையைத் தான்தொலைத்தாய்
நானிலத்தில் பத்துதலை மன்னவனைச் செற்றவனே
ஊனிருக்கு நாள்வரையும் ஈரெழுத்துப் பேர்நவில

வானிழிந்த மாரியாகக் கொட்டுவையே நின்னருளைக்
கானிருந்தக் காவலனின் பெண்துணையே சானகியே
மானிடர்க்கு மன்னவர்கள் மாண்பதனைக் காட்டிடவே
கோனிராம னன்றுனையேக் காடதிலே யேகவைத்தான்

ஏதிலார்க்கு யாவுமாகி நின்றதேவ தேவனேநின்
கோதிலாத மாப்புகழுஞ் சொல்லயாரும் வல்லரேநின்
பாதியாகி நின்றபெண்ணும் நீயுமாதி அந்தமேநின்
தீதுபோக்கு மைந்தெழுத்தைச் சொல்லிவுய்யச் செய்யரோ

காலகால னாகியன்று காலனைநீ எத்தினாய்
ஆலகால முண்டதாலே நீலகண்ட னாகினாய்
ஆலமரங் கீழதாகி நால்வருக்குக் கூறினாய்
ஞாலமிதை நீள்விரித்து பின்சுருக்கு மாதியே

வாய்ச்சுவையும் நாற்றமுமே கேட்டவளின் நல்மொழியை
மாய்ந்துமாய்ந் துப்பருக நித்தமுமே தேன்சுவையே
தேய்விலாத தெள்ளுதமிழ் காலமெலா மின்பமீயும்
வாய்நிறையச் சொல்லுதற்கே வில்லிபுத்தூ ராள்படைப்பு

அன்றலர்ந்த பூத்தொடுத்துத் தோள்தரித்துத் தானுகந்து
குன்றெடுத்த காதலற்குப் பின்கொடுத்த காரிகையாள்
அன்றுசொன்ன முப்பதும்மே இன்றுநய மீந்திடுதே
என்றுமென்றும் தீஞ்சுவையே தீந்தமிழிற் தெள்ளமுதே

அன்றலர்ந்த பூத்தொடுத்த ஒண்ணலங்கல் தான்தரித்துக்
கன்றுசூழும் வேய்ங்குழலன் காதலற்குப் பின்னளித்தாள்
மன்றமொருத் தீவிடையான் தன்னுடனேக் தான்கலந்தாள்
அன்றுசொன்ன முப்பதும்மே இன்றுவரை வாழ்ந்திடுதே

--------
நீர்சுமந்த மேகமொன்று போகுதடி அங்குகண்டேன்
கார்கருத்த வான்நடுவே வெண்ணிலவின் தண்ணொளியில்
பார்படுத்த நேரமிது கண்களுமே மூடவில்லை
யார்புகல வல்லவரேக் கண்களிக்கப் பேரழகே

Pratyaksham Bala
Posts: 4203
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

... if the last feet can be just made into கூவிளங்காய் x 2 as long as its aslo sensible in meaning, it is a great template for venpA
Yes, with the addition of நாள் or காசு in the end to ensure the mandatory வெண்டளை.
(மலர் or பிறப்பு may not be suitable, as it would result in கலித்தளை.)

Post Reply