தனிச் செய்யுட்கள்

Post Reply
sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 30 Apr 2025, 21:41
... if the last feet can be just made into கூவிளங்காய் x 2 as long as its aslo sensible in meaning, it is a great template for venpA
Yes, with the addition of நாள் or காசு in the end to ensure the mandatory வெண்டளை.
(மலர் or பிறப்பு may not be suitable, as it would result in கலித்தளை.)
that's true. my point though was about the last கூவிளங்காய் itself can be just split to கூவிளம் நாள்(காய்), not even காசு, and so no 3rd அசை either. ofcourse iff it makes sense!

Pratyaksham Bala
Posts: 4205
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

.
Yes. Got it.
You will get இன்னிசை வெண்பா.
Great !

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

வானொடு மண்ணும் யாவும் விரித்தவ னொன்றே யுள்ளான்
மானொடுத் தீயுந் தூக்கி மழுவுமா யாடல் வல்லான்
வானுதல் நல்லாள் ஊக்கி யணங்கினைப் பாதி யாகத்
தானொரு பாகங் கொண்டா னடியவர்க் கென்றுங் காப்பே

அங்கயற் கண்ணி யாளைச் சொக்கனா யேற்றா னன்றே
அங்கையிற் தீயுங் காலுந் தூக்கிய வள்ளல் தானே
கங்கையைத் திங்கள் தன்னைச் செஞ்சடைத் தாங்கி நிற்கு
மங்கையோர் பாதி யாதீ மாமறை யோதுஞ் செம்மல்

பித்தனே என்றா னுக்குத் தூதுதான் சென்றா னன்றே
மத்தயா னையுந் தந்தான் கைலையே யேகு தற்கும்
ஒத்ததும் மிக்கு மில்லான் கண்ணுதற் கால காலன்
முத்தனைப் புந்தி வைத்து வாழ்வெனு மாழி நீந்து

அத்தனே வையா மெய்யா நின்னையே நம்பி நின்றோம்
இத்தர னிக்கே வந்த மன்னுயிர் லெல்லா மென்றும்
பித்தனாய்க் காட்டி லாடும் நஞ்சினைக் கண்டங் கொண்டாய்
முத்தனே மூலா வைந்து பூதமும் ஆக்கிப் போக்கீ

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

எதிலிருந் திதுவரு மெதனுட னிணையுமோ
கதிரென நிலவெனக் ககனமாய் விரிவது
புதிரிது புதிரிதில் உளைபவர் மனிதரே
மதியதன் வலிதனை மிகுமொரு பொருளிதே

விரிந்திடும் சுருங்கிடு மெனமறை மொழியுதே
மரிவதும் வருவதும் பெருமொரு சூழற்சியே
எரிவது மெரிப்பது முயங்குவ தொருபொருள்
பிரிவெனத் தெரிவதை யறிவது மியலுமோ

பிரிவெனத் தெரிவதை யறிபவ ரெவரரோ
பிரிவெனத் தெரிவதை யறிந்தவ ருரைப்பரோ
பிரிவெனத் தெரிவதை யுரைப்பது புரியுமோ
பிரிவெனத் தெரிவது மயக்கமே மயக்கமே
---
குருபர வுனதடி யடைபவர் வினைவலி
தருநிழ லடியினில் வெயிலெனக் குறையுமே
பருவமு மிதுவரோ அரவணை துயிலுவான்
மருகனே கடைவிழி யருளினைப் பொழிகுவாய்

கருவறை முதலொடுத் தழலினில் சுடுவரை
இருபத யிணையிலேப் பிணையுறு வரமதை
கருமுகில் நிறமுடை மதுமுர ரெதிரியின்
மருகனே யருளுவாய் குறமகற் கணவனே
---
பொட்டுவைத்துப் பூமுடித்து நெற்றியிலேச் சுட்டியிட்டு
கொட்டியதோர் நல்மணிகள் கச்சையிலேத் தான்மிளிர
பட்டணிந்து காதணியும் கைவளையுந் தோள்வளையும்
எட்டுதிசை தான்வியக்க கட்டுமடி சாரினிலே

வெட்டுவிழி மையெழுதி தோழியருஞ் சூழ்ந்திடவே
மட்டிலாத நாணமுடன் புன்னகையுந் தான்கலந்து
வட்டமிடும் கண்மலர மெய்மலர வந்தனளே
கொட்டுமழ குக்கழகாய் பெண்மகளும் பந்தரிலே

நான்மலர லங்கலோடவ் வாண்மகனின் கைப்பிடித்த
வான்தவழும் மீன்நிகர்த்தப் பெண்ணவளின் ஒண்கழுத்தில்
நான்மறைமு ழங்குநேரம் நல்லவரு மாசிகூறத்
தான்திருத்தா லிச்சரட்டைப் பூட்டினனே நீடுவாழ

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

விண்ணுளோர்க் கோமா னாலே கல்லென யாகி னாளைத்
தன்னிரு பாத தூளி கொண்டவன் பெண்ணா யாக்கி
மண்ணுளோர் மற்றோர் போற்ற அப்பெரும் யாகம் காக்கப்
பெண்ணுரு வானாற் பாவித் தாடகைத் தன்னை மாய்த்தான்

பெண்ணென வந்தச் செய்யா ளங்கொரு மாடம் நின்றாள்
கண்ணொடு நோக்கி னானே கோசலை யாவி யாங்கே
உண்கணின் காந்தத் தாலே தன்மனம் விட்டா னையன்
கண்ணது மூட வில்லை யானதே மிக்கத் தொல்லை

ஆர்கொலோ என்னுள் வந்தா ளென்றவன் தூக்கம் கெட்டான்
கார்முகில் கூட்டத் துள்ளே வந்ததோர் மின்னற் போலே
வார்சிலை புருவத் தாளை மிக்கவும் வொக்க யாரும்
பார்தனி லுண்டோ யென்று மிஃதறந் தானோ யென்றும்

அங்கவள் மிக்கத் தானே சிந்தையே சிதறிப் போனாள்
பொங்கிடும் எண்ணம் எல்லாம் கண்டவன் யாரோ வென்று
மங்கையின் ஆசை யன்னான் வில்லினை வென்று தன்றன்
மங்கல மோங்க வேண்டு மென்றரோ வேகங் கொள்ளும்

கண்ணுத லையன் வில்லைக் கொண்டனன் கையிற் றானே
விண்டதேக் கண்டார் தோளின் வன்மையே கண்டா ரன்றே
வண்ணமாய்க் கொண்டான் கையைக் காரிகை நெஞ்சங் கனிய
யண்ணலு மொன்றேக் கொண்டான் தன்மனை யாய்த்தான் மாதோ

ஊர்மிளை தன்னைக் கொண்டா னிளையவ னிலக்கு வனேயாங்
கோர்மகள் மாண்ட வியைத்தான் பரதனும் மணமேக் கொண்டான்
நேர்படத் துணையா கத்தான் சுருதகீர்த் தியையொ ருதம்பி
பேர்பட யேற்றா னோங்கு மங்கலந் ததும்பிப் பொங்க

தாதையி னாணைக் கொண்டான் காட்டினி லேகி னானே
மாதையுங் கூட்டிப் போனான் தம்பியோ டண்ணற் கேளீர்
வாதையேக் கொண்டான் மற்றோர் தம்பியும் வெம்பி னானே
பாதையே நீயே என்றுத் தேடியே கானில் வந்தான்

added 2 more in between; and added 1 more - the penultimate in the list

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தன்நரை கண்ட யோத்தி மன்னனு மெண்ணங் கொண்டான்
இன்னுயிர் மூத்தான் தன்னை மன்னனா யாக்க லாமே
தன்னலம் வேண்டு வாரொ டாலசித் துச்செய் புக்கான்
பொன்னகர் மக்கட் கெல்லாம் சொல்லவே யாணை யிட்டான்

அன்னதோர் செய்தி கேட்டு மந்தரை கோப மோங்கிச்
சென்றனள் மாற்றத் தானே வஞ்சமே நெஞ்சிற் பொங்க
மன்னனின் காதற் கிழவி கேகயர் பெண்ணை யுந்தன்
பொன்னினை வார்த்தற் போலே சொல்லினால் மாற்றி னாளே

பாழ்மகள் கூனிப் பேசக் கேகயர் கோதை கெட்டுத்
தாழ்விலாக் கோவி டத்தில் அன்பையு மப்பால் வைத்து
வாழ்கிலே னிராமன் காடு புக்கியே பரத னாளும்
வீழ்வையோச் சொல்லில் நிற்கா தென்வர மிரண்டு மென்றாள்

பெற்றதோர் செல்வம் யாவும் விட்டத கன்ற தாகி
நிற்பவன் போலே கேட்டுத் தசரதன் துன்பப் பட்டான்
உற்றவ ளன்றுப் போரில் வெற்றியில் பக்கம் நின்றாள்
மற்றவர் செய்ய மாட்டா மாபழி சேரச் செய்தாள்

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

சொல்லதா லில்லை நன்மை யென்றவ னுணர்ந்து சொன்னான்
அல்லைநீ என்றன் தாரம் கூற்றமே யானா யேநீ
கல்லெனும் நெஞ்சத் தாள்நீ பெற்றவன் பிள்ளை யில்லை
செல்கிறேன் விட்டுத் தானே சாபமும் பெற்றே னன்றே

கானகம் நீயு மேக யென்மகன் நாட்டை யாளக்
வானகம் புக்கி னாரே நல்வர மீந்தென் னையன்
ஆனதால் சீதை கேள்வ செல்லுவா யாணை யேற்று
போனது போன தன்றே பின்னரே மீள்வா யென்றாள்

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

உற்றவர் நல்லார் நட்பு தன்னுடை சுற்ற மென்றே
கற்றவர் எண்ணா ரென்று மஃதெலாம் விட்டுப் போகும்
பற்றறுத் தேக வேண்டும் நாடொறு மன்பாய் வாழ்ந்து
முற்றுமிம் மெய்மை கண்டார் வற்றிய சொல்லா யானார்

Post Reply